Monday, November 7, 2011

அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாது


நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.

கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.
‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.

‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.

‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.

‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.

‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.

‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.

‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.

‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’

‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’

‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’

‘இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’

‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’

‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’

‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

‘அதெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’

‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’

‘அது பெரிய விஷயமாப்பா?’

‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

‘அப்புறம்?’

‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’

‘சாப்பாடு மட்டும்தானா?’

‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு...’

இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.

செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.

Saturday, November 5, 2011

முருகதாஸ் போதிதர்மரின் பரம்பரையா?


7 ஆம் ஆறிவு சினிமா பற்றி வரும் கடுமையான விமர்சனங்கள், அந்த படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 7 ம் அறிவு, ஒரு அபத்தமான கதையை வைத்து எடுக்கப் பட்டுள்ளமை அவர்களுக்கே தெரிகின்றது. அதனால் இப்போது, படத்திலே வரும் ஈழ ஆதரவு வசனங்களை மேற்கோள் காட்டி ஆதரவு தேடுகின்றனர். "தமிழீழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக" ஜெயலலிதாவை ஆதரிக்குமாறு கோரியவர்கள் தான், இந்த நியாயத்தையும் முன் வைக்கிறார்கள். ஜெயலலிதா முதல் முருகதாஸ் வரை, சில வசனங்களை மட்டுமே பேசி தமிழனை ஏய்க்கலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு பெரும்பான்மை ஓட்டுகளையும், முருகதாசுக்கு பெட்டி நிறைய பணத்தையும் அள்ளிக் கொடுப்பதற்கு, குறிப்பிட்ட சில வசனங்களே போதும். இதெல்லாம் ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து நடந்து வரும் கூத்துகள் தான். ஈழத்தில் தமிழன் செத்துக் கொண்டிருப்பான். தமிழகத்தில் அதைக் காட்டியே பிழைப்பு அரசியல் நடத்துவார்கள். 7 ஆம் அறிவு சினிமாவும், ஈழத் தமிழரின் பிணங்களைக் காட்டி காசு வசூல் பண்ணுகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் பகத் சிங் பற்றிய திரைப்படம் வெளியானது. அன்றிலிருந்து சீக்கிய தேசியவாதிகள், பகத்சிங்கை தமது நாயகனாக தூக்கிப் பிடிக்கின்றனர். பல வரலாற்று நாயகர்களின் பாத்திரம், அவர்களின் கொள்கைகளுக்கு முரணாக திரிபுபடுத்துவது உலகெங்கும் நடப்பது தான். இந்து மத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ராஜராஜ சோழன், தமிழ் தேசியவாதிகளால் மாபெரும் தமிழனாக புகழப் படுகிறான். போதி தர்மர், பௌத்த மதத்தை பரப்பிய மதகுரு என்ற உண்மை மறைக்கப் பட்டு வருகின்றது. 7 ஆம் அறிவு என்ற ஜனரஞ்சக சினிமாவின் புண்ணியத்தால், "ஒரு வீரத் தமிழனாக" மறு அவதாரம் எடுத்துள்ளார். தமிழர்கள் மறந்து விட்ட போதி தர்மனை அறிமுகப் படுத்தக் கிளம்பிய சினிமா, அந்த மகானின் வரலாற்றை திரிபு படுத்த வேண்டிய அவசியம் என்ன? வரலாற்றையும், நிகழ்கால கற்பனைக் கதையையும் கலந்து தயாரிப்பது சினிமாவில் வழமையானது தான். Davinci code என்ற ஆங்கிலத் திரைப்படம் கூட, அவ்வாறான கதை தான். அதிலே, வரலாற்றுக்கு இசைவாக நிகழ்கால கற்பனையை அமைத்திருப்பார்கள். ஆனால், 7 ம் அறிவு கூறும் 6 ம் நூற்றாண்டு வரலாற்றுக்கும், நிகழ்கால சம்பவங்களுக்கும் இடையில் எந்த வித தொடர்புமில்லை.

இயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக "இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்" என்று அழைக்க முடியுமா? ஏழாம் அறிவு எனும் திரைப்படம், "போதி தர்மர் ஒரு தமிழன்" என்பதால், தமிழர்கள் எல்லோரும் பெருமைப் பட வேண்டுமென்கிறது. போதி தர்மன் என்ற புத்த பிக்குவின் பௌத்த மதப் பின்னணியை மறைத்து, அவனை ஒரு தமிழனாக மட்டும் பார்க்க வேண்டும் என்று கோருகின்றது. மதத்தை விட, மொழியே முக்கியம் என்று கருதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கு, போதி தர்மன் ஒரு தமிழ்- பௌத்தன் என்பதை ஏற்றுக் கொள்ள தயக்கம் ஏன்? தமிழ் இன உணர்வு என்ற போர்வையின் கீழ் மறைந்திருக்கும், இந்து மத உணர்வு இங்கே வெளிப்படுகின்றது.

போதி தர்மரை தமது காவிய நாயகனாக கொண்டாடத் தொடங்கியிருக்கும் தமிழ் உணர்வாளர்கள்,அவர் ஒரு "தமிழ் பௌத்த பிக்கு" என்ற உண்மையை கூறுவதில்லை. ஏழாம் அறிவு திரைப்படமும் இந்த தகவலை வேண்டுமென்றே மறைத்துள்ளது. போதி தர்மர் பௌத்த மதத்தை சேர்ந்த மாமேதை என்பதாலும், சீனாவில் பௌத்த மத பிரசங்கம் செய்ததாலும் தான் உலகப் புகழ் பெற்றார். பௌத்த மதத்தின் ஒரு கிளையான, ஜென் (Zen) பிரிவை தோற்றுவித்தவரும் அவரே. இன்றைக்கும் சீனா, ஜப்பான் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் ஜென் பௌத்தர்கள் போதி தர்மரின் தத்துவ போதனைகளை கற்கின்றனர். 7 ஆம் அறிவு திரைப்படம், தமிழர்களுக்கு போதி தர்மரை அறிமுகப் படுத்துவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே, மேற்கத்திய நாடுகளில் நன்கு அறிமுகமானவர்.

போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும், அவரின் போதனைகள் அடங்கிய நூல்கள், ஆங்கிலத்திலும், பிற ஐரோப்பிய மொழிகளிலும் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இந்த நூல்கள் யாவும், மேலைத்தேய நகரங்களில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. சீனாவில் மட்டுமல்ல, மேலைத்தேய நாடுகளில் கூட, தலைசிறந்த தத்துவ அறிஞராக போற்றப்படும் போதி தர்மரை, ஏழாம் அறிவு திரைப்படம் அவமானப் படுத்தியுள்ளது. போதி தர்மரை குங்பூ ஆசிரியராகவும், சித்த வைத்தியராகவும் மட்டும் காட்டுகின்றது. போதி தர்மரின் போதனைகளை தேடிப் படிக்கும் தமிழன் அறிவாளியாகி விடுவான். அதன் பிறகு, ஒரு மாமேதையை தமிழகம் மறந்த காரணம் என்ன என்று ஆராயத் தொடங்கி விடுவான். அதற்கு இடம் கொடுக்கலாமா? தமிழனின் ஆறாவது அறிவை மழுங்கடிப்பது தானே, ஏழாவது அறிவு தயாரித்தவர்களின் நோக்கம்? புத்திசாலித் தமிழன் ஆபத்தானவன். அதனால், சிந்திக்கும் திறனன்ற "வீரத் தமிழன்" தான் அவர்களுக்கு தேவை.

"போதி தர்மரை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்?" இந்தக் கேள்வியை ஒரு ஆவணப் படத்தில் வருவது போன்று, திரைப் படத்தில் கேட்கின்றார்கள். தமிழர்கள் எல்லோரும் தெரியாது என்று கையை விரிக்கிறார்கள். அதே நேரம், சீனர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது. அதிலும் "ஒ யா.. குங்பூ மாஸ்டர்" போன்ற பதில்களை மட்டும் பதிவு செய்கிறார்கள். மேற்கொண்டு பேசுவதற்கு சீனர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. அதற்கு இடம் கொடுத்தால், சீனர்களை தமிழர்களை அழிக்க தேடி வரும் வில்லன்களாக காட்ட முடியுமா? விசாரணையை அத்துடன் நிறுத்திக் கொண்டு, சூர்யாவின் சர்க்கஸ் வித்தை, ஸ்ருதிஹாசனின் மரபியல் ஆராய்ச்சி என்று கதை நகருகின்றது.

சரி, அவர்கள் தான் விசாரிக்கவில்லை, ஒரு சராசரித் தமிழனுக்கு தேடல் இருக்காதா? அந்த அளவுக்கு தமிழன் புத்திசாலி இல்லை என்று தெரியாமலா, முருகதாஸ் ஏழாம் அறிவு படம் எடுத்திருப்பார்? முதலில், போதி தர்மர் காஞ்சிபுரத்தில் பிறந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்தே, அவரை தமிழன் என்று டைரக்டரால் நம்ப வைக்க முடிந்திருக்கிறது. போதி தர்மர், பௌத்தராக மதம் மாறிய பிராமணர் என்று, அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "பார்ப்பனர்கள் என்போர் வடக்கே இருந்து வந்த ஆரியர்கள்," என்ற திராவிட கற்பிதங்களினால் உருவான தமிழ் தேசியம், பிராமண போதி தர்மரை தமிழர் என்று நம்புவது எங்கேயோ இடிக்கிறது. ஏழாம் அறிவு திரைப்படம் கூறுவது போல, "போதி தர்மர் ஒரு பல்லவ இளவரசர்" என்ற கூற்று எங்கேயும் நிரூபிக்கப் படவில்லை. இதனை வெறுமனே சினிமாக்காரர்களின் வரலாற்றுத் திரிபாக மட்டும் கருத முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் திணிக்கும் ஆதிக்க அரசியலும் அதனுள் அடங்கியுள்ளது.

ஏழாம் அறிவு திரைப்படத்தில், போதி தர்மரின் மரபணு கொடுத்து உயிர்ப்பிக்கப் பட்ட கதாநாயகன் பேசும் வசனம் ஒன்று : "மதமாற்றம், இனமாற்றம் காரணமாக தமிழர்கள் தமது அறிவியல் செல்வத்தை இழந்து விட்டார்கள்." போதி தர்மர் காலத்து அறிவியல் பிறகு எப்படி காணாமல் போனது? அதனை யார் அழித்தார்கள்? தமிழர்களை யார் மதமாற்றம், இனமாற்றம் செய்தார்கள்? மரபணுவால் உயிர்ப்பிக்கப் பட்ட போதி தர்மரின் மறு அவதாரத்திற்கு இந்த உண்மைகள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் புத்த மதம் பரவியிருந்தது.

தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் பெரும்பான்மை தமிழ் மக்களின் மதங்களாக இருந்தன. தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் தவிர்த்து மற்ற நான்கும் பௌத்த மதப் பின்னணியில் எழுதப் பட்டுள்ளன. ஐரோப்பியர்கள் வானாந்தரங்களில் வாழ்ந்த காலத்தில், பீகாரில், நாலந்தா பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டிருந்தது. (கி.மு. 5 - கி.பி. 1193) அதில் கல்வி கற்பதற்கு சீனாவில் இருந்தும் மாணவர்கள் வந்தனர். ஏழாம் அறிவு திரைப்படத்தில் காட்டப்படும் காஞ்சிபுரம் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, நாலந்தா பல்கலைக்கழகமும் பௌத்த மத மேற்படிப்புக்காக உருவாக்கப் பட்டவை. அங்கே அறிவியல் பாடங்களும் போதிக்கப் பட்டன.

வடக்கே இஸ்லாமியரான துருக்கிய இனத்தவர்களின் படையெடுப்பினால், நாலந்தா பல்கலைக்கழகமும் அதன் அறிவியல் செல்வங்களும் அழிக்கப் பட்டன. தெற்கில், இந்துக்களான பல்லவர்களின் படையெடுப்பினால் காஞ்சிபுரத்தின் அறிவுச் செல்வங்கள் அழிக்கப் பட்டன. பல்லவர்கள் பௌத்த, சமண மடாலயங்களை தீ வைத்துக் கொளுத்தினார்கள். சமணக் கோயில்களும், பௌத்த விகாரைகளும் இந்துக் கோயில்களாக மாற்றப் பட்டன. பௌத்த, சமண மதங்களை சேர்ந்த தமிழர்கள், பலவந்தமாக இந்துக்களாக மதமாற்றம் செய்யப் பட்டனர். மதம் மாற மறுத்தவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

சைவ மத நாயன்மார்களான சம்பந்தரும், சுந்தரரும், திருநாவுக்கரசரும் கட்டாய மதமாற்றத்திலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்கள். தமிழ் பேசும் பௌத்தர்களையும், சமணர்களையும் கழுவேற்றிக் கொன்ற கதைகளை தேவாரங்களிலும் பாடி வைத்துள்ளனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் பல்லவர் காலத்தில் நடந்தேறின. தமிழர்கள் தமது தொன்மையான அறிவியலை இழந்த வரலாறு இது தான். காஞ்சிபுரத்தில் பௌத்த மத தமிழர்கள் வளர்த்த அறிவுச் செல்வத்தை அழித்த பல்லவ அரச வம்சம்சத்தில், போதி தர்மர் எப்படிப் பிறந்திருக்க முடியும்? இது ஒரு மாபெரும் வரலாற்று மோசடி அல்லவா? தமிழர்களின் எதிரிகளை நல்லவர்களாக காட்டுவதற்காக வரலாற்றை திரிக்கும் ஏழாம் அறிவு, ஈழத் தமிழர்களுக்காக உருகுகிறது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை தான் ஞாபகம் வருகின்றது.

டாவின்சி கோட் திரைப்படம் எடுத்தவர்கள், கிறிஸ்தவ நாட்டை சேர்ந்தவர்கள். அதன் பெரும்பான்மையான பார்வையாளர்களும் கிறிஸ்தவர்கள் தான். இயேசுவின் புதல்வி பற்றி கற்பனை கலந்து படம் தயாரிக்கும் தைரியம் அவர்களுக்கு இருந்தது. டாவின்சி கோட் தயாரித்தவர்கள் நினைத்திருந்தால், நிகழ்கால அரசியளுக்கேற்றவாறு முஸ்லிம்களை வில்லன்களாக காட்டியிருக்கலாம். ஆனால், அந்த திரைப்படத்தின் வில்லன்கள் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ கடும்போக்காளர்களின் எதிர்ப்பை மீறி, திரைப்படத்தை வெளியிட்டார்கள். ஏழாம் அறிவு தயாரித்தவர்களுக்கு, அந்த தைரியம் கிடையாது. மரபணு கொடுத்து உயிர்ப்பித்த நவீன போதி தர்மன் யாரை பழிவாங்கத் துடித்திருப்பார்? தமிழ்நாட்டில் பல்லவர்களின் வாரிசுகளை தேடிச் சென்று வேட்டையாடியிருப்பார். போதி தர்மன் எதற்காக, தனக்கு இன்றைக்கும் தெய்வ ஸ்தானம் வழங்கி கௌரவிக்கும் சீனர்களுடன் முரண்பட வேண்டும்?

திரைப்படத்தில் சீன வில்லனின் ஹிப்னோடிச வித்தைகளை கண்டு வியந்த சூர்யாவுக்கு, சுருதிஹாசன் கூறுவார்: "இதுவும் தமிழர்களின் நோக்குவர்மம் கலை. போதிதர்மரால் கொண்டு செல்லப்பட்டது." இதைக் கேட்ட சூர்யா: "எப்பேர்ப்பட்ட துரோகம்" என்று கொதிப்பார். யார் யாருக்கு துரோகம் செய்தார்கள், என்பது மரபணுவால் உயிர்ப்பிக்கப்பட்டவருக்கு தெரியாதா? களரி (குங்பூ), நோக்குவர்மம் (ஹிப்னோடிசம்) போன்ற தமிழரின் தொன்மையான கலைகள், இந்து மன்னர்களான பல்லவர்களின் காலத்தில் தானே புறக்கணிக்கப் பட்டன? அதனால் தானே, இன்றுள்ள தமிழர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை? அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், போதி தர்மர் சொல்லிக் கொடுத்த கலைகளை சீனர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையில்லையா? போதி தர்மர் தென்னிந்தியாவில் இருந்து வந்த பௌத்த துறவி என்பதை, சீனர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை.

போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சீனத் திரைப்படத்தை இணையத்திலேயே பார்வையிடலாம்.(Bodhidharma - The Master of Zen) சீனத் திரைப்படத்தில், தென்னிந்தியாவில் இருந்து வந்த போதி தர்மர், தியானத்தையும், குங்க்பூ தற்காப்புக் கலையையும் போதிப்பது விபரமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஏழாம் அறிவு என்ற தமிழ்த் திரைப்படம், போதி தர்மரின் வரலாற்றைத் திரித்து அவரை அவமதிக்கிறது. சுருக்கமாக சொன்னால், "தமிழனுக்கு துரோகமிழைக்கும் தமிழனை வீரனாகக் காட்டுவது" தான் ஏழாம் அறிவின் திரைக்கதை.

ஏழாம் அறிவு திரைப்படத்தின் இறுதியில், சூர்யா தமிழனின் உணர்வைத் தூண்டும் வசனங்களை அடுக்குவார். யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததால், தமிழர்களின் அறிவுடைமை இழக்கப் பட்டது. உண்மை தான். ஆனால், போதி தர்மனுக்கு, 6 ம் நூற்றாண்டில் தான் படித்த காஞ்சிபுரம் நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு தெரியவில்லை. யாழ்ப்பாண நூலகத்தை எரித்த சிங்கள இனவெறியர்களினதும், காஞ்சிபுரம் நூலகத்தை எரித்த இந்து மதவெறியர்களினதும் நோக்கம் ஒன்றாகவே இருந்துள்ளது. ஏழாம் அறிவு எடுப்பதற்கு முன்னர், போதி தர்மனை பற்றி ஆராய்ச்சி செய்த டைரக்டர் முருகதாசுக்கு இது தெரியாமல் இருக்க முடியாது. அதையெல்லாம் சொன்னால், தணிக்கைக் குழுவினர் கத்திரிக்கோல் போட்டு விடுவார்களா? "பக்கத்து நாட்டில் தமிழனை அழித்த ஒன்பது நாடுகளின் துரோகம்" பற்றி சொல்லத் தெரிந்தவர்களுக்கு, தைரியமாக அந்த நாடுகளை பெயரிடத் தெரியவில்லை. வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் களத்தில் நின்றுள்ளனர். செய்மதிப் படங்களை வழங்கியுள்ளனர். ஈழத் தமிழர்கள் இந்தியாவை தமது தாய்நாடு போன்று நம்பினார்கள். ஒருவர் எமது நம்பிக்கைக்கு எதிராக நடப்பது தான் துரோகம்.

ஏழாம் அறிவு, இந்திய அரசு மீதான விமர்சனங்களை கவனமாகத் தவிர்க்கின்றது. அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததும், முப்பது வருடங்களின் பின்னர் அதனை முடித்து வைத்ததும் இந்தியா தான். "இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்பதாலும், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தொப்புள்கொடி உறவுகளாலும்," இந்தியா தமது பக்கம் நிற்கும் என்று ஈழத்தமிழர்கள் நம்பினார்கள். உண்மையில், இந்திய மேலாதிக்க நலன்களுக்காக, ஈழத்தமிழர்கள் பொம்மைகளாக ஆட்டி வைக்கப் பட்டனர். சீனாவுடனான வர்த்தகப் போட்டியில், ஈழத்தமிழர்களை இந்தியா சார்பானவர்களாக தொடர்ந்து வைத்திருக்கவே விரும்புகின்றது. தமிழகத்தில் சில அதிரடி அரசியல்வாதிகளும், திரையுலக பிரமுகர்களும் பொம்மலாட்டக் காரர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

ஹாலிவூட்டில் அரசியல் கலந்த ஜனரஞ்சக திரைப் படங்கள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையுடன் எடுக்கப் படுவது இரகசியமல்ல. ஏழாம் அறிவு புகட்டும் தமிழ் இனவுணர்வு சாயம் படத்திலேயே வெளுத்து விடுகின்றது. புத்தரை விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாக திணிக்கத் தெரிந்த இந்து மதமல்லவா? போதி தர்மரை காட்டி, தமிழனின் மூளைக்குள் இந்துத்துவா சிந்தனை திணிக்கப் படுகின்றது. ஏழாம் அறிவு வெறும் பொழுதுபோக்குப் படமல்ல. திரைப்படத்தைப் பார்க்கும் கோடிக்கணக்கான தமிழர்களை வசியப்படுத்தி, இந்திய மேலாதிக்க திட்டங்களுக்கு ஆதரவாக வென்றெடுக்கும் உள்நோக்கம் கொண்டது. அது தான் "நோக்கு வர்மம்". ஒரு திரைப்படம் மூலம், தமிழர்களின் கண்களைக் கட்டும் கண்கட்டி வித்தை.

Friday, November 4, 2011

200 வயது வரை வாழ ஒரே மாத்திரையால் முடியும்


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில், மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 200 ஆண்டுகளைத் தாண்டி வாழமுடியும். அதாவது வயதாவதைத் தடுக்கும். இதுமட்டுமல்லாமல் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாகமுடன் இருக்க வகை செய்யும் என்றார்.


மருத்துவத்துறை வளர்ச்சியின் காரணமாக, மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2009ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்தியர்களின் சராசரி வயது 69 ஆக உள்ளது. இந்நிலையில், ஆரோக்கியமான உடல்நலத்துடன் 200 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஹார்வர்டு யுனிவர்சிட்டி பேராசிரியரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேவிட் சின்க்ளெய்ர் கூறுகையில், மனிதன் வயதாவதற்கு உடலில் உள்ள ஜீன்கள் குழுவே முக்கிய காரணமாக உள்ளது. அவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நமது உடல் பெற்றிருக்கிறது. ரெட் ஒயினில் உள்ள ஒரு பொருள் ரெஸ்வரேட்டல் என்ற தாவரத்திலும் உள்ளது. இதை ஈஸ்ட், புழு, ஈ மற்றும் எலி ஆகியவற்றில் செலுத்தியபோது அதன் வாழ்நாள் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்நாளை அதிகரிப்பதற்கான மாத்திரையை தயாரிக்க முயற்சி நடைபெற்று வருகிறதுÕÕ என்றார்.

வணக்கம் முதல்வர் ஜெயலலிதா அவர்களே...

கன்னியாகுமரியில் இருக்கும் வள்ளுவர் சிலையை அப்புறப்படுத்தி விடுங்கள்..காரணம் கலைஞரின் சித்தப்பாதானே திருவள்ளுவர்...சமச்சீர் கல்வி புத்தகத்தில் அய்யன் வள்ளுவரின் புகைபடத்தை சலப்பன் டேப்பு போட்டு ஓட்டச்சொன்னவர்தானே நீங்கள்..இதை தமிழ்நாட்டில் மட்டுமே மிக தைரியமாக செய்ய முடியும்...நீங்கள் பிறந்து வளர்ந்த கர்நாடகாவில் திருவள்ளுவருக்கு இணையான கவிஞர் சர்வஞர் மீது இப்படி எல்லாம் லேபிள் ஒட்டமுடியாது....கர்நாடகம் ஸ்தம்பித்து போகும்...


1200 கோடி செலவில் கட்டப்பட்ட புது தலைமைசெயலகத்தை மருத்தவமைனையாக மாற்ற போகின்றேன் என்று ஆணை பிரப்பித்தீர்கள்..அந்த கட்டிடத்தின் மேல் உங்களுக்கு காழ்புணர்ச்சி வரக்காரணம் ..சிம்பிள் கலைஞர் கட்டியது என்பது மட்டுமே காரணம்.. இதில் ஒரு விஷயம் நீங்க கவனிக்க வேண்டும்.. அவர் கட்டிய பாலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை..
கலைஞர் திறந்து வைத்த பாலங்கள் சென்னை முழுவதும் நிறையவே இருக்கின்றன..ஏன் இப்போது ஆட்சிக்கு வந்ததும் நிறைய பாலங்கள் நீங்கள் திறந்து வைத்தீர்கள்.கோயம் பேடு பேருந்து நிலையத்தை திறந்து விட்டு நான் திறந்தேன் என்ற பெரிய போர்டு வைத்துக்கொண்டீர்களே அது போலத்தான்...ஆனால் கோயம் பேடு பேருந்து நிலையம் யாரால் உருவாக்கப்ட்டது என்று எல்லோருக்கும் தெரியும்...அது உங்களுக்கு தெரியும்... முடிந்தால் அதையும் மாற்றுங்கள்..

இப்போது 180 கோடி செலவில் கட்டப்பட்ட ஆசியாவின் பெரிய நூலகம் மருத்துமனையாக மாற்றப்போவதாக அறிவித்து இருக்கின்றீர்கள்..

உங்கள் வீட்டை நீங்கள் வாழ யோசித்து யோசித்து கட்டி இருப்பீர்கள்..திடிர் என்று அதில் சர்வதேச தரத்தில் ஓட்டல் அமைக்க முடியுமா?? கிச்சனில் எப்படி பெட்ரூம் அமைக்க முடியாதோ அது போலத்தான் தலைமைசெயலகம், மற்றும் அண்ணா நூற்றாண்டு நுலகத்தை மருத்துவமணையாக மாற்ற முடியாது...

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லும் முதல்வர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்...ஆனால் இதனை கண்டிப்பாக வலுக்கட்டாயமாக மாற்றலாம்.. ஆனால் அந்த நிறைவு வராது என்பதே உண்மை...பல கோடி மக்கள் வரிப்பணம் விரயம் செய்து நீங்கள் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும்...வாழ்த்துகள்.. இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றது...

மூன்றாவவது முறையாக பதவி ஏற்றதில் இருந்து நீங்கள் பொது மக்களின் வருத்தங்களை அதிகம் சம்பாதித்து கொள்ளுகின்றீர்கள்..

ஹரி ஓம் என்று சம்ச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாதகாலம் பிள்ளைகளை முடக்கினீர்கள்...திரும்ப திரும்ப உச்சநீதிமன்றம் விடாமல் சென்றீர்கள்..உச்சநீதி மன்றத்தின் கதவை அதிகம் முறை தட்டியது உங்கள் ஆட்சியில்தான் என்று நினைக்கின்றேன்...ஆனால் உச்சநீதிமன்றம் உங்களுக்கு குட்டு வைத்தபின்தான் நீதிக்கு தலைவணங்குவதாக சொன்னீர்கள்...ஆனால் இன்னும் சரியான படி சமச்சீர்கல்வி பிள்ளைகளுக்கு புத்தகம் கிடைக்கவில்லை என்பதே உண்மை..

அடுத்ததாக வரி உயர்வு 12 பர்சென்ட் வாட் வரி விதிப்பை 14 சதவீதமாக மாற்றி உத்தரவிட்டீர்கள்.. இதில் கொடுமை 4 பர்சென்ட் வரி விதிப்பில் இருந்த பொருட்களை எல்லாம் 14 பர்சென்ட்க்கு உயர்த்தினீர்கள்..

புது தலைமைசெயலகம் வேண்டும் இடம் போறவில்லை என்று முதல் முதலாக கோரிக்கை எழுப்பியது நீங்கள்தான்.. ஆனால் என்னவென்றே தெரியவில்லை இருக்கும் கட்டிடத்தை இடித்து நாஸ்த்தி பண்ணுவதில் அப்படி உங்களுக்கு என்ன சந்தோஷமோ? ..அல்லது உங்களுக்கு ஐடியா கொடுக்கும் அல்லக்கைகளை நினைத்தால் வெறுப்பாக இருக்கின்றது..

நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் போய்ஸ் தோட்டத்து வீட்டில் வேறு ஒருவர் குடி புக அனுமதிப்பீர்களா? அது போலத்தான் ராணிமேரி கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். நீங்கள் பின் வாங்கினீர்கள்.. அதுக்கு யார் என்ன செய்ய முடியும்...???

உங்களை பற்றித்தான் எத்தனை சர்ச்சைகள்... நீங்கள் முதலைமைச்சராக இருந்த போது இதே சென்னையில் உங்களால் ஏற்படுத்தப்பட்ட டிராபிக்கில் மூச்சு திணறிய லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்..

இப்போதைக்கு சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனை காரணமாக ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்.. 1982ல் எங்கள் ஊர் கடலூரில் எம்ஜிஆர் தலைமையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுக கொள்கை பரப்பு செயலராக உங்களை நியமித்து, உங்கள் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்தார்...

அன்றைய தினம் நீங்கள் ஊர்வலமாக சென்று மாநாடு நடந்த மஞ்சை நகர் மைதானத்தை அடைந்தீர்கள்... எங்கள் ஊர் கூத்தப்பாக்கத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில் இருந்துதான் உங்கள் ஊர்வலம் தொடங்கியது...

அப்போதும் சசிக்கலாவுடன்தான் நீங்கள் அந்த பயணத்தை தொடங்கினீர்கள்..நான் சிறுவன் என்பதாலும் அந்த தொண்டர்படை கூட்டம் போன்றவற்றாலும்.எங்கள் ஊருக்கு திடிர் என்று ஒரு ஸ்டார் அஸ்தஸ்த்து கிடைத்து விட்ட காரணத்தாலும், எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி உற்சாகம்... உங்கள் அரசியல் பயணம் அந்த புள்ளியில் இருந்துதான் தொடங்கியது...அந்த இடத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்..அப்போது உற்சாகமாக கையசைத்து நான் உட்பட எங்கள் ஊரே உங்களை வழி அனுப்பி வைத்தது...

அதே மாநாட்டுக்கு என் ஆயா அழைத்து கொண்டு போனதால் நான் அதில் கலந்து கொண்டேன்..கலை நிகழ்ச்சியில் பரதநாட்டியம் எல்லாம் ஆடினார்கள்..நீங்களும் முதல்நாள் நிகழ்ச்சியில் ஆடினீர்கள் என்று நினைக்கின்றேன்..

அதன் பிறகு நீங்கள் பல எற்ற இறக்கங்களையும் நம்பிக்கை துரோகங்களையும் சந்தித்து முதல்வராக வெற்றிவாகை சூடினீர்கள்..

இதோ மூன்றாவது முறையாக தமிழகத்தில் முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கின்றீர்கள்..

பதவி ஏற்றதும் பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு வாரத்துக்கு ஒரு நாள் உங்களிடம் உரையயாடுகின்றேன் என்று சொன்ன போது.. நெகிழ்ந்து போய் நீங்கள் மாறிவிட்டதாக சொன்னார்கள்..ஆனால் நீங்கள் மாற வாய்ப்பே இல்லை என்பதை நிரூபித்து விருகின்றீர்கள்.

நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும், தைரியமான முடிவுகள் என்று பலர் சொல்லக்கேட்டு இருக்கின்றேன்.. ஆனால் அதில் எனக்கு நம்பிக்கையில்லை..

அப்படி உண்மையில் உங்களுக்கு பெரிய கட்ஸ் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம் கடைசி வரை சமச்சீர் கல்வியை அமுல்படுத்தாமல் இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளலாம்...

ஆட்சியும் ,அதிகாரமும் ஆமாம் சாமி அமைச்சர்களும் இருக்கும் போது எந்த முடிவையும் நீங்கள் தடலடியாகவே எடுக்கலாம்..ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியவர் நீங்கள்.. இதை தைரியமான முடிவு என்று சொன்னால் நகைப்பாக இருக்கின்றது..அதிகாரம் என் கையில் இருந்தாலோ அல்லது சுப்பன் குப்பன் யார் கையில் அதிகாரம் இருந்து இருந்தாலோ..மனசாட்சியை கொஞ்சம் இழந்து இருந்தால் போதும், அப்படி ஒரு முடிவுகளை திடும் என்று யார் வேண்டுமானலும் எடுக்கலாம்..

ஆனால் அதே அரசு ஊழியர்கள் வாரிக்கொடுத்த கலைஞரை இந்த தேர்தலில் தூக்கி தூர எரிந்தார்கள்..காரணம் கலைஞரின் வயதை மனதில் வைத்து திமுகவின், வட்டம் மாவட்டம் என்று பலர் ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டார்கள்.. வாரிசு அரசியல், எல்லாம் பொதுமக்களின் எரிச்சலை ஏற்ப்படுத்த, அரசு ஊழியர்கள் உட்பட அதை மனதில் வைத்து, உங்களுக்கு வாக்கு அளித்து வெற்றிபெறச்செய்தார்கள்..

உங்களை வெற்றிபெறச்செய்தது நீங்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கைதான் ஆனால் நீங்கள் செய்து கொண்டு இருப்பது மக்கள் முகம்சுளிக்க வைத்துக்கொண்டு இருக்கின்றது..

மூன்றாவது முறையாக தமிழகத்தை நீங்கள் ஆளும் ஆட்சியில் உங்கள் மீதான விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல...

இந்த முறை ஆட்சிக்கு வந்தஉடன் வழக்கம் போல உங்கள் காழ்புணர்ச்சி அரசியலை கையில் எடுத்துக்கொண்டீர்கள்..

குழப்பில் உப்பு அதிகம் போய்விட்டால் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடும் கதை போல பேசுகின்றீர்கள்..

மீறி திமிரி தாரளமாக வீம்புக்கு செய்யலாம்... அதை ஆதரிக்க சில அல்லக்கைக்ள் இருக்கின்றார்கள்..

வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களின் துதி பாடிகள் வேண்டுமானால் நடுநிலை போர்வையில் புதிய தலைமைசெயலக கட்டிடத்தை எண்ணெய் சட்டி கட்டிடம் என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம்.. எங்களுக்கு அது பெரிய விஷயம்..

சென்னையில் தலைநகரில் நீங்கள் இருந்து கொண்டு பல கோடி செலவு செய்த எந்த கட்டிடத்தையும் நேரில் போய் பார்க்காமல், அதில் எந்த அளவுக்கு உள்கட்டுமானபணி நடந்து இருக்கின்றது.. என்று அறிந்துக்கொள்ளாமல் திடும் என்று மாற்றுவது சாத்தியமா? என்று நீங்கள் நேரில் ஒரு முறை பார்த்து விட்டு இதை மாற்றித்தான் ஆக வேண்டும் என்று சொன்னாலும் அதில் ஒரு நியாயம் இருக்கின்றது...

ஆனால் கலைஞர் கட்டினார் அது மட்டும்தான் உங்கள் கண்களை உறுத்துகின்றது அல்லவா??

இப்போதும் ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை.. நேரில் போய் பாருங்கள் தலைமைசெயலகத்தை, நூற்றண்டு விழா நூலகத்தையும்...கலைஞர் எந்த கட்டடி வாசலிலும் காவல் காத்துக்கொண்டு இருக்க போவதில்லை...

உங்கள் ஈகோவுக்கு மக்களின் வரிப்பணத்தை காலி செய்ய போகின்றீர்கள்..மக்களின் வரிப்பணத்தை காலி செய்ய அவ்வளவு பேராசையா?

ஸ்பெக்ட்ரமில் அரசுக்கு வருமான இழப்பு என்றுதான் ராஜாவும் கனிமொழியும் சிறையில் இருக்கின்றார்கள்..

நீங்களும் அதைத்தான் செய்கின்றீர்கள்..

200கோடிக்கு வீம்புக்கு சமச்சீர்கல்வியை எதிர்க்க பழைய புத்தகங்களை அச்சடித்தீர்கள்..

1200கோடி தலைமைசெயலகத்தை வீணாக்கி இருக்கினறீர்கள்..

180 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நுற்றாண்டு நூலகம்..

உங்கள் ஈகோவுக்காக எல்லாம் வீணாக்கபடுகின்றது..

இதை மாற்ற ஆகும் செலவு எத்தனை கோடி?? அதில் இருக்கும் பொருட்கள் விரயம் என்று கணக்கு போட்டால் தலை சுற்றுகின்றது...

நீங்கள் ஆட்சின்னு வந்து ஒரு வருடம் கூட ஆகிவில்லை...1500 கோடி ருபாய் வரிப்பணம் பாழ் செய்யது இருக்கின்றீர்கள்.

கட்டங்களை மாற்றுக்கின்றேன் இடிக்கவில்லை என்று நீங்கள் சொல்லலாம்..நீங்கள் அதையும் செய்வீர்கள்..அதனால்தான் இப்போதே சொல்லுகின்றோம்...

நம் நாடு செல்வம் கொழிக்கும் நாடு அல்ல...மக்களும் அப்படித்தான்...

முதல்வர் அவர்களே...பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் வெங்காயம் கடித்து பழைய சோற்றை நீங்கள் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

நீங்கள் சாப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை பார்ன் இன் சில்வர் ஸ்பூன் நீங்கள்..ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல இன்னும் பல குடும்பங்கள் அப்படித்தான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. அப்படி பட்ட ஊரில் 1500கோடி பணத்தை விரியமாக்குவது எந்த வகையில் நியாயம்.??

கோடி கோடியாக கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்றால் நிருப்பித்து உள்ளே தள்ளுங்கள்..ஒரு கையெழுத்தில் ஒரு கட்டிடத்தையே மாற்றும் அதிகார சக்தி இருக்கும் உங்களுக்கு கலைஞர் அவர் ஆட்சியில் தவறு செய்து இருந்தால் இந்நேரம் அவர் மீது வழக்கு பதிந்து இருக்கலாமே...??? ஒரு வேளை சட்டியில் எதுவும் இல்லையோ???

கலைஞர் கருணாநிதி மேல் வன்மம் என்றால் அவர் கடந்த ஆட்சியில் அடித்த தில்லுமுல்லுகளை வெளியே எடுத்து வாருங்கள் வழக்கு பதியுங்கள்... அதை விட்டு விட்டு பல பேர் இரவு பகல் பாராமல் அரும்பாடு பட்டு மக்கள் வரிப்பணத்தில் கட்டிய அரசு கட்டடிடங்களை அதிகாரம் இருப்பதால் ஒரு கையெழுத்தில் மாற்றலாம் என்று நினைக்கின்றீர்கள்..

போன ஆட்சியில் நிறைய நல்லதிட்டங்கள் செய்தார்கள்.. மக்கள் வெறுப்பினை அமோகமாக சாகுபடி செய்தார்கள்.. வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்..அதனால்தான் சென்னை திமுகவின் கோட்டையாக இத்தனைநாளா இருந்தும், இந்த முறை பல நகராட்சிகளை அதிமுக கைபற்ற காரணமாக அமைந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்..

ஆனால் நல்ல பெயரை தக்க வைத்துக்கொள்ளாமல் நீங்களும் அதே தவறைத்தான் செய்கீன்றீர்கள்..

ஒரு அரசு ஊழியன் 60 வருடம் அவன் வகித்த பதவியில் நிலைத்து இருக்கலாம்..நீங்கள் 5 வருடம்தான்..அதை ஒரு முறை திரும்பவும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..

நீங்கள் மிகபெரிய வல்லரசு நாட்டின் பிரதமரோ அல்லது அதிபரோ அல்ல.. இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வர்...அவ்வளவே..

மனிதனாக பார்த்தால் பிளாக் ஹோல்,மிகப்பெரிய அண்டவெளி,அதில் இருக்கும் துகளான சூரிய குடும்பம்,அந்த சூரிய குடும்ப துகளில் நாம் வாழும் பூமி, அந்த பூமியில் மூன்று பங்கு நீர், ஒரு பகுதி நிலப்பரப்பில்,இந்தியாவில்,தமிழ்நாட்டில், சென்னையில் இருக்கும் மிகச்சிறிய மைக்ரோ துகள்தான் நீங்களும் நானும் என்பதை மட்டும் மறந்து வீடாதீர்கள்..

ஆனால் இவ்வளவு சொன்னாலும், எனக்கு தெரிந்து ஒரே ஒரு விஷயத்தில் உங்களுக்கு காலம் எல்லாம் நன்றி சொல்ல நான் கடமைபட்டு இருக்கின்றேன்..இந்த விஷயத்தில் யார் எது சொன்னாலும் நான் உங்களை விட்டுக்கொடுக்கவே மாட்டேன்...அது சென்னையின் தாகத்தை போக்கியவர் நீங்கள்..

மழை நீர் சேகரிப்பின் மூலம் மெட்ரோ வாட்டர் லாரிகளின் இரைச்சல் சத்தத்தை சென்னையில் ஒடுக்கியவர் நீங்கள்தான்..இன்று தண்ணீர் பிரச்சனையில் சென்னை ஒரளவு தன்னிறவு அடைய உங்கள் அந்த அரசானை வாழ்நாள் முழுவதும் உங்கள் பேர் சொல்லும்...விராணம் திட்டம் சாத்தியமே இல்லை என்று உதடுபிதுக்கினார்கள். ஆனால் நீங்கள் வசப்படுதினீர்கள்..திறமை இல்லாதவர் அல்ல நீங்கள்.. உங்கள் திறமை ஈகோவினால் வீணடிக்கபடுகின்றது என்பதே மறுக்கமுடியாத உண்மை...

இது போல மக்கள் பணிகளில் உங்கள் திறமையை நிறுபித்துகாட்டுங்கள்..தமிழகசாலையில் நீர் தேங்காத உலகத்தர சாலைகள் அமைப்பேன் என்று சூளுரையுங்கள்..

ஊழல் இல்லாத அரசு நிர்வாத்தை நடத்தி காட்டுவேன் என்று சவால் விடுங்கள் .. அதைவிட்டு விட்டு பலர் வியர்வை சிந்தி இரவு பகலாய் உழைத்து உருவாக்கியதை உதாசினப்படுத்தி உருகுலைக்காதீர்கள்.. காரணம் ஒவ்வோரு கட்டிடத்திலும் உழைத்தவனின் வலிகள் இருக்கின்றது என்பதையும் உயிர்தியாகங்கள் இருப்பதையும் மறந்து வீடாதீர்கள்..

சென்னையில் அண்ணா சாலையில் அந்த பக்கம் போகும் போது எல்லாம் பொலிவிழந்து இருட்டில் 1200கோடியில் உருவாக்கப்பட்ட தலைமைசெயலகம் இருளில் மூழ்கி இருப்பதை நேரில் பார்க்கும் போது எல்லாம் நெஞ்சம் விம்முகின்றது..

கலைஞர் பெயரை இது போன்ற கட்டிடங்களை மாற்றி விடுவதால் அழித்து விட முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.

இல்லை நான் கலைஞர் பெயரை வராலாற்றில் இருந்து அழித்து விட்டுதான் மறுவேலை என்று நீங்கள் விரும்பினால்...

குமரியில் வள்ளுவர் சிலை இருக்கும் வரை கொள்ளை அடித்தரோ? குடும்ப அரசியல் செய்தாரோ?? அந்த சிலை இருக்கும் வரை கலைஞர் புகழ் காலமெல்லம் நிலைத்து நிற்கும்.. அதுக்கு என்ன செய்ய போகின்றீர்கள்..??

செய்தால் எதையும் சுத்தமாக செய்யுங்கள்.. பாரபடசம் கட்டிடங்களுக்கு மட்டும் வேண்டாம்..சென்னை பாலங்கள், வள்ளுவர் கோட்டம், என்று நிறைய கலைஞர் பெயர் சொல்ல நிறைய இருக்கின்றது...இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றது.. உங்களை அசைக்க ஆளே இல்லை...

இதுவரை உங்கள் பெயர் சொல்லுவது போல ஏதாவது கட்டிட்ங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றதா? என்றால் எதுவும் எனக்கு தெரிந்து இல்லை...நான் சொல்லுவது பிரமாண்டமான கட்டிடங்கள், பாலங்கள்....இல்லை...நேரு விளையாட்டு அரங்கம்.. அதுகூட மத்திய அரசின் நிதியால் தெற்காசிய விளையாட்டு போட்டி நடக்கும் போது கொடுக்கபட்டு கட்டப்பட்டது....இடத்தை மட்டும் ஒதுக்கி கொடுத்தீர்கள்.. மாநில அரசு பணத்தில் உதாரணத்துக்கு புதியதலைமைசெயலகம்..,கிண்டி,கோயம்பேடு,பாடி போன்ற பெரிய மேம்பாலங்கள்.. மெட்ரோ ரயில்,தலைமைசெயலகம்,வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு மேம்பாலம் என்று குறிப்பிட்டு சொல்லுங்கள்.. சரி.. நேரு விளையாட்டு மைதானத்தை இரண்டு வருடத்தில் கட்டி முடித்தீர்களாமே?200 கோடி செலவில் சென்னை அரசு பொது மருத்தவமணை கட்டினீர்கள்..அதே போல 10 வருடத்தில் வேறு எதாவது பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டி இருக்கின்றீர்களா??

மேலே இருக்கும் படங்கள் புதியதலைமைசெயலவம் எப்படி உங்களால் இரவில் உதாசனபடுத்தபட்டு இருப்பதை தெரிவிக்கவே நான் புகைபடங்கள் எடுத்தேன்..பல பேர் இரவு பகலாக உழைத்து உருவாக்கிய கட்டிடத்தையும் பெரிய வளாகத்தையும் மனசாட்சி இருப்பவர் யாரும் இப்படி செய்யவே மாட்டார்கள்.. சாரி நான் உங்களிடம் மனசாட்சி பற்றி பேசிவிட்டேன்.. மன்னிக்கவும்...

சடுதியில் மாறும் வாழ்க்கை நம்முடைய வாழ்க்கை இதில் எதுக்கு இவ்வளவு ஈகோ உங்களுக்கு என்று தெரியவில்லை...?? நான் நான் என்று நீங்கள் பேசுவதை தமிழகம் அறியும்...

கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கின்றேன்.... எல்லா வினைக்கும் எதிர் வினை உண்டு...ஆனால் நீங்கள் வணங்கும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார் என்பதை மட்டும் மறவாதீர்கள்.

உங்கள் அமைச்சரவை சகா மரியம் பிச்சை, நீங்கள் நடத்திய எம்எல்ஏ பதவி ஏற்ப்பு விழாவில் கலந்து கொள்ள, திருச்சியில் இருந்து காலையில் சென்னைக்கு கார் எறும் போது, தான் இன்னும் ஐந்து வருடத்துக்கு அமைச்சர் என்று நினைவில்தான் பயணப்பட்டு இருப்பார். ஒரு நொடியில் அவர் வாழ்க்கை மாறிப்போனதை நீங்கள் அறியாதவர் அல்ல...

கூத்தப்பாக்கத்தில் உங்கள் அரசியல் பயண ஊர்வலம் தொடங்கிய போது உங்கள் வாகனத்தை கை அசைத்துக்கொண்டு துரத்திய படி ஓடி வந்த பல சிறுவர்களில் நானும் ஒருவன்...நீங்கள் சர்ச் பார்க்கில் மெத்த படித்தவர்..நான் அப்படி அல்ல.. எனக்கு தெரிந்து இருப்பதை எழுதி இருக்கின்றேன்..

பிரியங்களுடன்
பயணன்

உங்கள் பேஸ்புக் கணக்கும் ஹாக் செய்யப்பட்டுள்ளது.


நீங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

உங்களுக்கு தெரியாமல் ஒருவர் ஐ டி இல் போய் ஒரு அசிங்கமான சைட்டுடைய பக்கத்தை லைக் செய்தால் என்னவாகும் நிலைமை?

அதனால் அடிக்கடி பேஸ்புக் சைட்டில் சென்று யாராவது எப்போதாவது உங்களுடைய அக்கௌன்டை ஹேக் செய்திருக்கிரார்களா என்று பார்ப்பது நல்லது தானே..

இதை செய்வதற்கு பேஸ்புக் லாக்இன் செய்து வலது பக்கத்திலுள்ள அக்கௌன்ட் செட்டிங்க்ஸ் சென்று செக்யூரிட்டி என்ற டேப் எடுத்து ஆக்டிவ் செஷன்ஸ் என்பதில் கிளிக் செய்து பாருங்கள். இப்போது தெரியும். யார் யார்,எங்கிருந்தெல்லாம் உங்கள் அக்கௌண்டில் நுழைந்திருக்கிறார்கள் என்று. 

இனி எல்லாம் உங்கள் கையில் ...











Thursday, November 3, 2011

இ மெயில் - புதிய 3D தோற்றத்தில்


நீங்கள் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் இ மெயிலின் தோற்றத்தை மாற்றி 3D அனிமேஷன் தோற்றத்தை ஏற்படுத்த முடியும். உங்களுடைய இ மெயில் எதுவாக இருந்தாலும் அதன் அவுட் லுக்கை மொத்தமாக மாற்ற முடியும். உங்களுடைய பழைய இ மெயில் தோற்றத்தை மாற்றி 3D தோற்றத்தை ஏற்படுத்த Incredimail என்னும் மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 

























இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக்கவும்.

Tuesday, November 1, 2011

பென் டிரைவ் மூலம் நம்முடைய கம்ப்யூட்டரை லாக் செய்யலாம்

நம்முடைய கம்ப்யூட்டரை லாக் செய்திட பல வகையான மென்பொருட்கள் இருந்தாலும், இப்படி ஓன்று இருப்பது அநேகமாக யாருக்கும் தெரியாது. 

யு எஸ் பி கணினியில் செருகியிருந்தால் மட்டுமே நம்முடைய கணினி வேலை செய்யும். அதை எடுத்து விட்டால் தானாகவே லாக் ஆகி விடும். அதுவும் எவ்வித ப்ரோக்ராம்களும் இழக்கமலேயே,

இது மிகவும் எளிதானதும், அனைத்து விண்டோஸ் களிலும் வேலை செய்யகூடியதுமாகும்.

இதற்கு தான் PREDATOR என்னும் மென்பொருள் இருக்கிறது. 

முதலில் இந்த சைட்டில் சென்று இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.  பின்னர் உங்கள் யு எஸ் பி யை கணினியில் செருகவும். இன்ஸ்டால் முடிந்த பின்னர் கீழே உள்ளது போல் ஒரு பெட்டி திறந்து கொள்ளும். அதை ஓகே கொடுக்கவும். 

இப்போது கீழே காணப்படுவது போல் மீண்டும் ஒரு பெட்டி திறக்கும்.அதில் உங்களுடைய புதிய பாஸ்வோர்ட் கொடுத்து க்ரியேட் கீ கொடுத்து ஓகே செய்யவும். 


இப்போது அந்த பெட்டி தானாகவே மூடிக்கொள்ளும். மீஎண்டும் சாப்த்வாரே ஐக்கனில் கிளிக் செய்தால், உங்கள் டாஸ்க் பாரில் கீழே காணப்படுவது போல் ஒரு சிறிய ஐக்கன் பச்சை நிறத்தில் உள்ளதை பார்க்கலாம். 


அதுக்கப்புறம்தான் எல்லாம் உங்களுக்கே தெரியுமே.