Saturday, May 14, 2011

GOOGLE இலவசமாக தருகிறது 100 டாலர். பலனடையுங்கள்

ஒவ்வொரு நாளும் தனக்கே உரிய பாணியில் புதிது புதிதாக களமிறங்குவதில் கூகுளுக்கு இணை கூகுளே. அந்த வரிசையில் 1௦௦ டாலர் பரிசாக தருகிறது. 
இணையதளத்துக்குள் செல்ல சுட்டி தரப்பட்டுள்ளது. 

அங்கே அதர் ப்ரொடக்ட் என்று இருக்கும். அதை கிளிக் பண்ணி உள்ளே செல்லவும். உள்ளே சென்று paart


பென் டிரைவை கச்சிதமாக கையாளும் முறை

பென் டிரைவை கணினில் செருகி திறக்கும் போது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் கொண்டு ஸ்கேன் செய்து எதாவது வைரஸ் தொற்றியுள்ளதா என பார்த்து பின் பென் டிரைவை திறக்கவும் .
மேலும் உங்கள் கணினியில் இலவச ஆண்டி வைரஸை நிறுவி இருந்தால் அது எல்லா வைரஸ்களையும் பிடித்து அழித்திருக்கும் என நம்பமுடியாது எனவே மை கம்ப்யூட்டர் சென்று அதில் உள்ள அட்ரஸ் பாரில் உங்கள் பென் டிரைவ் உள்ள கோலன் என்ன என்பதை அறிந்து கொண்டு அதை டைப் செய்து என்டர் தட்டி திறக்கவும்.

உதாரணமாக — J:/ என்று டைப் செய்து திறக்கவும் .

இதனால் நீங்கள் நிறுவியுள்ள ஆண்டி வைரஸ் பிடித்து அழிக்காத வைரஸ் உங்கள் பென் டிரைவில் இருந்தாலும் அது உங்கள் கணினியில் புகுவதற்கு வாய்ப்பில்லை . இனிமேல் இவ்வாறு செய்து உங்கள் கணினியில் வைரஸ் புகாதவாறு பாதுகாக்கலாம்.

நினைத்தால் போதும். அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்.

யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களை மனதில் நினைத்தால் போதும். அவர்களுக்கு அழைப்பு சென்று விடும். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய முறையை கண்டறிந்துள்ளனர். 

இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது: 

மனதில் நினைப்பதை புரிந்து கொண்டு செயலாற்றும் கணணிகள் ஏற்கனவே உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை செல்போனிலும் பயன்படுத்தியுள்ளோம். மூளையில் ஏற்படும் அதிர்வுகளை இ.இ.ஜி கருவி மூலமாக பதிவு செய்து அதற்கேற்ப இது செயல்படுகிறது. 
இதற்காக புளூடூத் கருவியுடன் இணைந்த பட்டை ஒன்றை தலையில் அணிந்து கொள்ள வேண்டும். "யாருக்கு போன் செய்ய வேண்டும்" என்று மூளையில் ஏற்படும் நினைப்பு, அதிர்வு இ.இ.ஜி கருவி மூலம் பதிவு செய்யப்பட்டு இத்தகவல் புளூடூத்துக்கு அனுப்பப்படுகிறது. நினைத்த எண்ணுக்கு அழைப்பு போகும். 

நோக்கியா என்73 என்ற மாடல் செல்போனை வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு 70 முதல் 85 சதவீதம் வரை வெற்றி கிடைத்திருக்கிறது. பிரத்யேக பயிற்சி எடுத்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் நினைத்தவுடன் போன் செய்ய முடியும். 

நம்பர் அழுத்த முடியாத வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை கருத்தில் கொண்டு இதை கண்டுபிடித்துள்ளோம். இவ்வாறு ஜங் கூறினார்

NET CONNECTION இல்லேன்னாலும் EMAIL பாக்கவும் அனுப்பவும் முடியும்

மடிக்கணணி வைத்திருப்பவர்கள் பயணம் செய்து கொண்டே மின்னஞ்சல் பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும். முதலில் உங்கள் ஜிமெயில் லொகின் செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள்.

நீங்கள் இணைய இணைப்பு கொடுத்தவுடன் மின்னஞ்சல்கள் Desktopக்கு வந்து விடும். இதனால் இணைப்பு இல்லாத போதும் நாம் மின்னஞ்சல்களை பார்க்கலாம். அதே போல இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல் அனுப்பலாம்.
அவ்வாறு அனுப்பும் மெயில் Outboxல் தங்கி விடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது மின்னஞ்சல் சென்று விடும். 

இல்லாவிட்டால் http://tools.google.com/gears/ சென்று நிறுவிக் கொள்ளவும். பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள். offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும்.

இதில் install offline access for gmailக்கு next button கிளிக் செய்யவும். அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும். ஜிமெயில் உங்கள் desktopக்கு வந்து விடும். உங்கள் மின்னஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கணணிக்கு தரவிறக்கம் ஆக தொடங்கும். இனி நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் கூட மின்னஞ்சல்களை அனுப்பலாம்

உங்கள் பென் ட்ரைவிலுள்ள தகவல்கள் அழிந்துவிட்டதா? கவலைப் பட வேண்டாம்.

          உங்கள் பென் ட்ரைவில் கோப்புறைகள் இருக்கும் ஆனால் உங்களால் பார்க்கவோ, உபயோகிக்கவோ இயலாது. பென் ட்ரைவில் Usage space ஐ சோதித்தால் கோப்புறைகள் மறைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.
          


ஒரு சில மால்வேர்களின் வேலையே பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூற்றை (attribute) மாற்றி விடுவதுதான். இதனால் உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூறு Hidden ஆக மாறி விடுகிறது. இதை சரி செய்ய Explorer -ல் Attribute பகுதிக்குச் சென்றால் அங்கு Attribute வசதி செயல் இழக்கம் (Greyed out) செய்யப்பட்டிருக்கும். ஒரு சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் மூலமாக முயற்சி செய்தாலும் சில சமயங்களில் மீட்பது சிரமம்தான்.
இந்த நிலையில் என்ன செய்யலாம்?

முதலில் உங்கள் பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக I: என வைத்துக் கொள்வோம். Command Prompt ஐ திறந்து கொண்டு i: என டைப் செய்து என்டர் கொடுங்கள்.



இனி வரும் I:> என்ற ப்ராம்ப்ட்டில் attrib -r -s -h *.* /s /d என டைப் செய்து என்டர் கொடுங்கள்.




உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் அளவைப் பொறுத்து இந்த கட்டளை செயல்படும் நேரம் மாறுபடும். மறுபடியும் I:> ப்ராம்ப்ட் வந்த பிறகு Exit என டைப் செய்து என்டர் கொடுத்து விண்டோஸ் க்கு வந்து விடலாம். இப்பொழுது My Computer சென்று பென் ட்ரைவை திறந்து பாருங்கள். உங்கள் கோப்புறைகள் மீட்டெடுக்கப் பட்டிருப்பதை காணலாம்.


இந்த பணியை செய்ய Files & Folders Reset Tool என்ற கருவி உள்ளது. ஆனால் ஒரு சில பென் ட்ரைவ்களில் இது சரியாக வேலை செய்யவில்லை. எதற்கும் முயற்சித்துப் பாருங்கள்.


வந்துவிட்டது 1TB PENDRIVE

பென் டிரைவ் தயாரிப்பில் பிரபலமான கிங்ஸ்டன் நிறுவனம் அண்மையில் கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 150 என்ற பிளாஷ் டிரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கொள்ளளவு திறன் 10024 ஜிபி. அதாவது 1 TB


மற்ற டிரைவ்களைக் காட்டிலும் சற்று கூடுதல் நீளத்தில், 77.5 மிமீ, இது அமைக்கப்பட்டுள்ளது. அகலம் 22 மிமீ மற்றும் தடிமன் 12.05 மிமீ. இதனுடைய எடை மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் வெளிப்புற ஷெல் சிகப்பாக பாலிஷ் செய்யப்பட்டது போல் உள்ளது. இது இயக்கப்படுகையில் நீல நிறத்தில் உள்ளாக லைட் எரிகிறது.

பைல்களை நொடிக்கு 28.3 எம்பி வேகத்தில் படிக்கிறது. எழுதுகையில் நொடிக்கு 7.8 எம்பி வேகத்தில் செயல்படுகிறது. இந்த வேகம் சராசரியாக நாம் பிற பிளாஷ் டிரைவ்களில் பார்க்கும் வேகம் தான்.

ஐந்தாண்டு வாரண்டியுடன் கிடைக்கும் இந்த டிரைவ் குறியீட்டு விலை ரூ. 10,700.

அதே போல்
45 நாட்களுக்குத் தொடர்ச்சியாக,நான்ஸ்டாப் பாகப் பாடக்கூடிய வகையில் 76 ஆயிரம் பாடல்கள் அல்லது “டிவிடி” குவாலிட்டியில் 170 சினிமாப் படங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை முழுமையாகப் பதிவு செய்யும் வகையிலான 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட புதிய பென் டிரைவினை,சான்டிஸ்க் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.

விண்டோஸ் 7 ஐ பென்ட்ரைவில் நிறுவுவது எப்படி ?

இவ்வாறு நிறுவுவதற்க்கு 4 ஜி‌பி பென்ட்ரைவ் மற்றும் விண்டோஸ் 7 டி‌வி‌டி தேவை .


1. யு‌எஸ்‌பி போர்ட்டில் யு‌எஸ்‌பி பென்ட்ரைவ் யினை செருகவும்
2. USB Flash Drive யு‌எஸ்‌பி பென்ட்ரைவ் யினை NTFS ஆக Format செய்யவும்
3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்
4. பின் dvd Drive மற்றும் பென்ட்ரைவ் களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும். My Computer ல் இதனை காணலாம்
(இங்கு நான் DVD Drive க்கு ‘D’ யும் Flash Drive க்கு ‘H’ எனவும் கொடுத்துள்ளேன்
5.Command Prompt ஐ திறக்கவும்
*Type cmd in Start menu search box and hit Ctrl+ Shift+ Enter.
அல்லது
*Start menu > All programs > Accessories, right click on
Command Prompt and select Run as administrator.
6. Command Prompt ல் பின்வருவதை டைப் செய்து என்டர் தட்டவும்
D: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
இங்கு D பதிலாக உங்கள் DVD drive letter யினை தரவும்
அடுத்து CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
7. BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.
இங்கு H பதிலாக உங்கள் Pendrive letter யினை தரவும்
8. Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive க்கு கொப்பி செய்யவும்

9. இனி உங்கள் pendrive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிட்டது..
இனி நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7னை நிறுவிக் கொள்ளலாம்..
Bios ல் boot priority யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழக்கம் போலவே நிறுவிக் கொள்ளலாம்.

இங்கு கன்னித்தன்மை வாடகைக்கு விடப்படும்

படிப்பதற்குப் பணமில்லை எனவே எனது கன்னித் தன்மையை நல்ல விலைக்கு விற்கலாம் என இருக்கிறேன். ஏலத்தில் அதிக தொகைக்குக் கேட்பவர்களுடன் நான் “ஒரு நாள் முதல்வி” யாக உல்லாசமாய் இருக்க சம்மதிக்கிறேன் என சமீபத்தில் ஒரு இளம்பெண் இணையத்தில் தனது கற்பை ஏலமிட்டிருக்கிறாள்.

மேலை நாடுகளில் இப்போதெல்லாம் பரவலாக அடிபடும் பேச்சு “கன்னித் தன்மை விற்பனைக்கு” விளம்பரங்கள் தான்.

போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டு தோற்றுப் போனவர்களைத் தாண்டி சுமார் 6.4 இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு தொழிலதிபர் அவளை ஏலமெடுத்து அவளுக்கு “உதவி”யிருக்கிறார்.

பதினெட்டு வயதான எலீனா பெர்சியா எனும் இந்த ரொமானியன் பெண் தற்போது வசிப்பது ஜெர்மனியில்.

இவளை ஏலமெடுத்தவர் இவளை விமானத்தில் வெனிஸ் நகருக்கு வரவைத்து, கன்னித் தன்மை குறித்த மருத்துவ சான்றிதழ்களைச் சரிபார்த்து, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பொழுதைக் கழித்திருக்கிறார்


ஒரு முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் வெறும் ஆறு இலட்ச ரூபாய்க்கு ஏலம் போனதில் வருத்தம் தான் (!!??) என்கிறார் இந்த மாணவி. எனினும் இந்தப் பணத்தை வைத்து படிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் நல்ல பிள்ளையாட்டம்.

சினிமாவில் வரும் கதாநாயகன் போல ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் கிடைத்த நபர் 46 வயதான குள்ளமான ஒரு தொழிலதிபர். என்ன செய்வது இருந்தாலும் … என விவரிக்கிறார் தனது அனுபவங்களை.

கல்வி என்பது ஒழுக்கத்தையும், அறிவையும் போதிப்பது. அதை அடையவே இப்படிப்பட்ட ஒழுங்கற்ற வழிகளை நாடவேண்டியிருக்கிறதே எனும் அதிர்ச்சி ஒருபுறம் எழ, மேலை நாடுகளின் வால் பிடிப்பதை பெருமையாய் கருதும் நம் நாட்டு மக்கள் இதை ஒரு முன்னுதாரணமாய் கொண்டு விடுவார்களோ எனும் பயம் இன்னொரு பக்கம் எழுகிறது !

இவளுடைய பெற்றோருக்கு விஷயம் தெரியுமா ? சட்டத்தில் இதற்கெல்லாம் இடமுண்டா ? இப்படி உலகுக்கெல்லாம் மேடை போட்டுச் சொல்கிறாளே இதனால் எதிர்காலம் பாதிக்காதா ? போன்ற உங்களுடைய கேள்விகளை எலீனா பெர்சியாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ( அதற்குரிய கட்டணம் எத்தனை என்பது உட்பட )

ஆண்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி

வரப் போகிறது வயாகரா ஆணுறை. இதுதொடர்பான திட்டம் ஒன்றை இங்கிலாந்து பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இது திருப்திகரமான, பாதுகாப்பான செக்ஸ் உறவுக்கு மட்டுமல்லாமல், ஆண்மைக் குறைவு உள்ளோருக்கும் கூட பெரிதும் உதவக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் இதை டூ இன் ஒன் ஆணுறை என்கிறது அந்த நிறுவனம்.

பெரும்பாலான ஆண்களுக்கு நீடித்த உறவு வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நடைமுறையில் அது கை கூடாததாகவே உள்ளது. நீண்ட நேரம் உறவில் ஈடுபட வேண்டும் என்பதை ஆண்களில் பெரும்பாலானோர் விரும்பினாலும் கூட அது பெரும்பாலானோருக்கு அமைவதில்லை.

அதை விட முக்கியமாக ஆணுறை அணிந்து கொள்ளும் பலருக்கும் அது சவுகரியத்தை விட அசவுகரியத்தையே அதிகம் கொடுக்கிறது. அதாவது உராய்வு என்பது அதில் இல்லை, எனவே உறவு திருப்திகரமாக இல்லை என்பதே ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துவோரின் கருத்தாக உள்ளது.
தற்போது மார்க்கெட்டில் உள்ள வயாகரா மாத்திரைகளால் முழுப் பயன் கிடைப்பதில்லை என்பது உறுப்பு எழுச்சிக் குறைவு உள்ள பலரின் குறைபாடாக உள்ளது. மேலும் ஆண்மைக் குறைவு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த மனக்குமுறல் உண்டு. ஆனால் தற்போது திட்டமிடப்பட்டுள்ள வயாகரா ஆணுறை இந்தக் குறைகளைத் தீர்க்கும் வகையில் உள்ளது.

மேலும் வழக்கமான ஆணுறைகளை பயன்படுத்தும்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகளும் இதில் இருக்காது என்கிறார்கள் அந்த இங்கிலாந்து நிறுவனத்தினர்.

இதயத்திற்கு ரத்தம் போகாமல் இருக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு மருந்தைத்தான் இந்த வயாகரா ஆணுறையில் ஜெல் வடிவில் தடவியிருக்கிறார்கள். அதாவது ரத்தம் ஆணுறுப்புக்கு அதிக அளவில் பாய்வதை இது உறுதி செய்கிறது. இதன் மூலம் உறவின்போது உறுப்பு எழுச்சி சிறப்பாக இருக்கும். நீடித்த உறவுக்கும் இது வழி செய்கிறது.

இந்த ஆணுறையை சோதனை முறையில் சில ஆண்களிடம் கொடுத்து ஆய்வு மேற்கொண்டபோது அவர்கள் வழக்கமான நாட்களை விட மிகச் சிறப்பான உறுப்பு எழுச்சியையும், உறவையும் மேற்கொண்டதாக தெரிவித்தனர். மேலும் வழக்கமான ஆணுறைகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் உராய்வுத்தன்மை குறைவுப் பிரச்சினையை தாங்கள் இந்த ஆணுறையைப் பயன்படுத்தியபோது சந்திக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஆணுறை நழுவிப் போய் விடுமோ என்ற அச்சமும் இதை அணிந்தபோது அவர்களுக்கு வரவில்லையாம். அந்த அளவுக்கு பொருத்தமானதாக, திருப்திகரமானதாக இது இருந்ததாம்.

ஆண்களுக்கு இது நிச்சயம் சந்தோஷமான செய்திதான்!