Wednesday, July 13, 2011

எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வி. யும், நக்கீரன் பத்திரிகையும்தான்.


னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில், மெரீனா டவர் ஹோட்டலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. பிரஸ்பாஸ் செய்து எடுக்கப்பட்டு வீடியோ மார்க் செய்யப்பட்டுள்ளது. காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த காட்சிகள் தான் லேப்புக்கு அனுப்பட்டதா? என கேள்வி எழுகிறது.

ஆபாச வீடியோ ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.

நான் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.

சில பத்திரிகைகள், டி.வி.கள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வி. யும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.

அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சினை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்து உள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்து இருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.

முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.

பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மததாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேற்று நடிகை ரஞ்சிதா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஆட்சி மாற்றத்திற்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்ததாகவும், தற்போது உண்மையை கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

60 வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன நடக்கிறது?

மக்கள் இண்டர்நெட்டை உபயோகிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் இன்று இன்டர்நெட் பயன் பாட்டிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது .

60 வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன சமாச்சாரமெல்லாம் அரங்கேறுகிறது என்பதை பார்ப்போம் .

1 .உலகின் முதல் நிலை தேடுதல் எந்திரமான கூகுள் 6,94,445 விசாரணைகளுக்கு பதிலளிக்கிறது .


கூடுதல் தகவல் : இனி அதிக அளவில் தகவல்களை கூகுளிடம் விசாரணை செய்பவர்களிடம் கூகுள் குறுக்கு விசாரணை செய்யவிருப்பதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன !?


2 . 16,80,000,00 E mail கள் அனுப்பப்படுகின்றன .


கூடுதல் தகவல் :தபால்துறை பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதால் இந்தியாவில் E mail அனுப்புவதை தடை செய்யக்கோரி விரைவில் தபால் துறையினர் போராட்டத்தில் இறங்க உள்ளதாக புது டில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

3 . 5,10,040 comment கள் Face book ல் வெளியாகின்றன .


கூடுதல் தகவல் :இவற்றில் 90 சதவீதம் கமெண்ட்கள் டெம்ப்ளேட் கமெண்டுகள் என்பதை விக்கிலீக்ஸ் விரைவில் அம்பலப் படுத்த உள்ளதாக சுவீடனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

4 . 25 மணி நேரம் ஓடக்கூடிய 600 வீடியோ கிளிப்புகள் youtube தளத்திற்கு தரவேற்றம் செய்யப்படுகின்றன .

கூடுதல் தகவல் :வழக்கம் போல பலான வீடியோக்கள்தான் அதிக அளவில் தரவேற்றம் செய்யப்படுவதாக பாரிசிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!


5 . 3,70,000 நிமிடங்களுக்கான குரல் அழைப்புகள் Skype தளத்தின் மூலம் பகிரப்படுகிறது .


கூடுதல் தகவல் :இனி ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓசியில் கதைப்பவர்களின் மைக் துண்டிக்கப்படும் என்று லண்டனிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன

பெற்ற மகளையே அரிவாளால் கழுத்தை அறுத்துக்கொன்ற தாய்

இவரது மனைவி ராதா (27). இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தீபக்காந்த் (10) என்ற மகனும், நிவேதா (8) என்ற மகளும் உள்ளனர். நல்லாகவுண்டம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக் 5-ம் வகுப்பும், நிவேதா 3-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

அய்யப்பனும், ராதாவும் ஒருவர் நடத்தையில் ஒருவர் சந்தேகம் கொண்டு சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மகள் நிவேதாவை ராதா கதறத் கதற அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் நிவேதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மகளைக் கொன்ற பிறகும் வெறியடங்காத ராதா மகன் தீபக்கையும் கொல்ல வந்தார். அரிவாளில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த தாயைப் பார்தத் அவன் பயத்தில் அலறினான். அவன் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

நிவேதா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதையும், ராதா தீபக்கை வெட்ட வந்ததையும் பார்த்த அவர்கள் திடுக்கிட்டனர். அப்போது அங்கு வந்க அய்யப்பன் மகனை மீ்ட்டார். பின்னர் மகளின் பிணத்தைப் பார்த்து கதறினார். ஆனால் ராதாவோ பித்துப் பிடித்தது போல் இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராதாவையும், அய்யப்பனையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரித்தபிறகு ராதாவை கைது செய்தனர்.

ராதா போலீசுக்கு கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது,

காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை ஏமாற்றியதால் தான் நான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். ஆனால் நான் தற்கொலை செய்துகொண்டால் என் பிள்ளைகள் அனாதையாகிவிடுவார்களே என்பதால் அவர்களைக் கொன்று விட்டு நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். அதனால் தான் முதலில் நிவேதாவைக் கொன்றேன், தீபக்கை கொல்வதற்குள் அவன் அலறியதால் அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவனை காப்பாற்றிவிட்டனர் என்றார்.

மொபைல் மூலம் 160 பேருக்கு அவஸ்தை ஏற்படுத்திய நபர்

ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் என, 12 நாட்களில் 160 பேருக்கு, பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர். உக்கடம் பகுதியை சேர்ந்தவர் முகமது அஜாம் (35). கடந்த 27ம் தேதி, இவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், "உங்கள் மகளை கடத்தி வைத்திருக்கிறேன்' எனக் கூறி, இணைப்பை துண்டித்துள்ளான். அதிர்ச்சியடைந்த முகமது அஜாம், மனைவியுடன் பள்ளிக்கு சென்று பார்த்தபோது, மகள் இருந்தார்.


உடனடியாக போலீசில் புகார் செய்து, மர்ம நபரின் மொபைல் எண்ணையும் கொடுத்துள்ளார். மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி உத்தரவின் படி, குற்றவாளியை பிடிக்க கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட மொபைல் போன் பயன்பாடு குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன. கடந்த மாதம் 25ம் தேதி முதல், இம்மாதம் 4ம் தேதி வரை, மொத்தம் 129 எண்களுக்கும், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை, மற்றொரு இணைப்பிலிருந்து 31 பேருக்கும் "டயல்' செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 160 பேருக்கு அவஸ்தை ஏற்படுத்திய நபர், துடியலூர், வெள்ளக்கிணர் பிரிவு 2வது வீதியை சேர்ந்த விஜய் ஆனந்த் (29) என்பதை உறுதி செய்து, நேற்று அதிகாலை, வீட்டில் இருந்த இவனை கைது செய்தனர். விசாரணையில், "ஆம்னி வேன் (டி.என்.30. ஏ.இசட்.4185) வாடகைக்கு ஓட்டி வந்தது, தேவையில்லாமல் பல்வேறு மொபைல் போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு, ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் என டார்ச்சர் செய்து இணைப்பை துண்டித்தது' தெரிந்தது. விஜய் ஆனந்த் சிறையில் அடைக்கப்பட்டான்.

விண்டோஸ் 7 சில ரகசிய குறிப்புகள்

இத்தகவல் WINDOWS 7 OPERATING SYSTEM பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமானதாக இருக்கும் .

எல்லா கணினிகளிலுமே GRAPHICS சம்மந்தமான PROGRAMகளை இயக்கம்போது கணினி சிரமப்படுவதை உணரலாம். உதாரணத்திற்கு PHOTOSHOP,AFTER EFFECTS போன்றவற்றை குறிப்பிடலாம் .

அது போன்ற சிரமமான நேரங்களில் கணினியின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க WINDOWS 7 ல் ஒரு வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது .


இந்த வசதியை பயன்படுத்த CONTROL PANEL சென்று POWER OPTIONS என்பதை கிளிக் செய்யவேண்டும் .இப்போது திறக்கும் WINDOW வில் SHOW ADDITIONAL PLANS ல் உள்ள அம்பு குறியில் கிளிக் செய்யவேண்டும் .

இப்போது HIGH PERFORMANCE என்பதை தேவு செய்து விட்டு வெளியேறவும் .இனி நீங்கள் கடினமான PROGRAM களை இயக்கும்போது முன்பை விட கணினி வேகமாக செயல்படுவதை உணரலாம் .

இதற்காக உங்கள் கணினி வழக்கத்தை விட சற்று அதிகமாக மின்சாரத்தை செலவு செய்யும் .சாதாரண PROGRAM களை இயக்குகையில் மேற்கூறிய மாற்றங்களை செய்யவேண்டிய அவசியம் இல்லை .

இன்னும் விளக்கமாக அறிய விரும்புபவர்கள் கீழுள்ள வீடியோவை பார்த்து பயனடையலாம் .

மேலும் ஒரு நடிகையின் வெளிவராத கள்ளக்காதல் கொலை

குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். திடீரெண்டு கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். 
இச்சம்பவத்தில் சுமித் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார். இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி, சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது என கூறியுள்ளார். 
அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை (நிலா) கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முழு நிர்வாணக் கோலத்தில் மணப்பெண். அதுவும் திருமண வரவேற்பில்

பிரித்தானியர்களான கெலி கிளிங்ரன், லீ விக்கெற்ஸ் ஆகிய இருவரும் பிரிமிங்கம் நகரத்தில் கடந்த 11 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றார்கள்.


இவர்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாமையால் திருமணம் முடிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டது. இதனால் உள்ளூர் வானொலி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட வெற்றி கொண்டதன் மூலம் அவர்கள் மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பலர் பங்கொண்ட போதும் ரசிகர்களின் அமோக ஆதரவினை பெற்று இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் என்பது சதாராணமல்ல முழு நிர்வாணக்கோலத்தில் இத்திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் Brook Honiley Court Hotel இல் இடம்பெற்றது. திருமணம் நிறைவு பெறும் வரை மணமகன், மணமகள் இருவரும் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாகவே காட்சி கொடுத்தனர்.

திருமண வைபவத்துக்கு குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் வந்து வாழ்த்து தெரிவித்த போதும் இவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றிய போது மிகவும் கூச்சமாக இருந்த சங்கடப்பட்டனர் இத் தம்பதியினர்.