Wednesday, June 8, 2011

கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து; சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் ஆய்வு - ஆளுனர் உரை

தமிழகத்தில் கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

14-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

ஆளுனர் உரையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:

* கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. புது பொது மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்.

* மெட்ரோ ரயில் பணிகள் காலதாமதமாவதால், சென்னையில் 111 கிலோமீட்டர் தூரத்துக்கு மோனோ ரயில் இயக்கப்படும்.

* சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும். நான்கு இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும்.

* சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அதன் பாடத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

கனிமொழியும் நவீன சட்டாம்பிள்ளைகளும்

கனிமொழியின் ஜெயில் வாசத்தின் போது வரும் எதிர்வினைகளும் நக்கல்களும் வக்கிரமாக உள்ளன. அவர் பாலியல் ரீதியாய் ஒழுக்கங் கெட்டவர் என்பதில் இருந்து அவரது குளியலறை ஜெயிலுக்குள் எங்கிருக்கும் என்று வினவுவதை வரை இவை கனிமொழியை ஒரு விபச்சாரி போல் சித்தரிக்கின்றன. 200 கோடி திருடின கனிமொழி மட்டும் பாலியல் விமர்சனத்துக்கு உள்ளாவது நமக்குள் இருக்கும் பெண்களை ஒழுக்க குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பார்க்கும் விருப்பத்தை காட்டுகிறது.

ஒரு பெண் தவறு செய்தால் அவளது பாலியல் ஒழுக்கத்தை விசாரணை செய்து தொடர்ந்து அதே மர்மத்தில் தொடர்ந்து தாக்குவது ஒரு பொதுப்புத்தி. இலக்கியம் படிப்பவர்கள், எழுதுபவர்கள், இணையத்தில் புழங்கும் பண்பட்ட பன்னாட்டு குமாஸ்தாக்கள் அனைவரிடமும் வேறுபாடின்றி நாம் காண்பது தன்னை மேலாக நினைக்கும் ஒரு சட்டாம்பிள்ளையைத் தான்.
 பண்பாடும், வாசிப்பும், அது சார்ந்த உரையாடல்களும் வெறும் பொழுதுபோக்கோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. முன்பு கற்காலத்தில் இருந்து இரும்புகாலத்திற்கு மனிதன் பரிணமித்தான் என்றால் அது வெறும் இரும்பை பயன்படுத்தினதால் மட்டுமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அஸ்தமித்த சூரியன் உதிக்காது

தி.மு.க., இனி ஆட்சிக்கு வந்து, சட்ட மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன் அஸ்தமனமானது தான்; இனி உதிக்கவே உதிக்காது,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

சட்டசபையில், மேலவை வேண்டாம் என்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடந்ததும், முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது:கடந்த, 1986ல், எம்.ஜி.ஆர்., ஆட்சியில், சட்ட மேலவையை நீக்கும் தீர்மானம், இந்த சட்டசபையில் நிறைவேறியது. பின், இத்தீர்மானம், பார்லிமென்டின் இரு சபைகளிலும் ஏற்கப்பட்டு, தமிழக சட்ட மேலவையை நீக்கும் சட்டம், 1986, ஆகஸ்ட் 30ம் தேதி அங்கீகரிக்கப்பட்டு, அந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.எம்.ஜி.ஆர்., நிறைவேற்றிய அந்த சட்டத்திற்கு எதிராக, 1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., மீண்டும் மேலவையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. 1991ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மேலவையை தோற்றுவிக்க வேண்டாம் என முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றினோம். 1996ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., மீண்டும், மேலவையை கொண்டு வர முயற்சித்தது. 2001ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.கடந்த, 2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., நான்கு ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, சட்ட மேலவையை கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, அதற்கான சட்டத்தையும் இயற்றியது. எனினும், சட்ட மேலவைக்கான தொகுதி வரையறைகள், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் தடையாணை பிறப்பித்துள்ளதால், மேலவை தேர்தல் நடைபெறாத சூழல் தற்போது உள்ளது.


மேலவை தேவை என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முன்னாள் முதல்வர், "அரசியல் அறிஞர்கள், சான்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்று அரிய ஆலோசனைகளை கூறும் வகையில், சட்ட மேலவையை விரைவில் கொண்டு வருவோம்' என்று குறிப்பிட்டார்.இப்போதுள்ள சட்டசபையிலேயே வக்கீல்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் போன்றோர் இருக்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தவர்களும், இங்கு இடம் பெற்றிருக்கின்றனர்.சாமானியர்களையும் சட்டசபை உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க., தான். அப்படியிருக்கும்போது, சட்ட மேலவையை தோற்றுவிக்க வேண்டியதன் அவசியம் என்ன?


இந்த தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில், மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அவர் மகன் ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மற்றொரு மகன் அழகிரி மற்றும் பேரன் தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டன. மகள் கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி.குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களுக்கும், தன் துதி பாடுபவர்களுக்கும் பதவிகள் வழங்க வேண்டும் என்பதற்காகத் தான், சட்ட மேலவையை தி.மு.க., கொண்டு வந்ததே தவிர, பல தரப்பட்டவர்களின் கருத்துக்களை பெறுவதற்காக அல்ல.கடந்த ஆண்டு மேலவை தொடர்பான விவாதத்தில், செங்கோட்டையன் பேசும்போது, "இறுதிக் காலத்தில், கடைசி நேரத்தில் இதைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் என்ன?' என கேட்டதற்கு, "இது யாருக்கு கடைசி காலம் என்பதை, நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்' என, கருணாநிதி கூறியிருக்கிறார். இன்று தீர்ப்பும் வந்துவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம், சட்ட மேலவை தேவையில்லை என்று மக்களும் ஆமோதித்திருக்கின்றனர்.


நாட்டில் உள்ள, 28 மாநிலங்களில், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டும் தான், சட்ட மேலவை உள்ளன. காங்கிரஸ் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில், சட்ட மேலவை கிடையாது. இதிலிருந்தே, மேலவை வேண்டும் என்ற கருத்து, எந்தளவிற்கு வலுவிழந்து காணப்படுகிறது என்பதை அறியலாம்.முற்போக்கு சிந்தனை கொண்ட அனைவரும், ஜனநாயக அமைப்பில் இரண்டாம் அவை என கருதப்படும் மேலவை தேவையற்றது என, திட்டவட்டமாக கூறியுள்ளனர். அவர்கள் வழியை பின்பற்றி, மேலவை தேவையில்லை என்ற தீர்மானத்தை, உறுப்பினர்கள் முன் வைத்தோம். இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசும்போது, "இனிமேல் மேலவை வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுங்கள்' என்றார்.எனக்கு தெரிந்தவரை, மேலவை வேண்டும் என்று நினைக்கும் ஒரே கட்சி தி.மு.க., தான். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன், அஸ்தமனமானது தான்; இந்தச் சூரியன் திரும்பவும் உதயமாகாது; உதிக்கவே உதிக்காது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தாராளமயக் கொள்கை

சர்வதேச நிதியத்தில் (ஐ.எம்.எப்.) பொருளாதார வல்லுநராகப் பணியாற்றிய தேவ்கர் என்பவர் தலைமையிலான குழு ஒன்று சர்வதேச அளவில் நிகழும் நிதித்துறை முறைகேடுகளை ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி விடுதலை பெற்ற இந்தியா வில் 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் 21300 கோடி டாலர் அளவுக்கு பணம் (ரூபாய்க் கணக்கில் 9,58,500 கோடி ரூபாய்) இந்தியாவிலிருந்து வரி செலுத்தப்படாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் 68 சதவீதம் அதாவது சுமார் 6,20,000 கோடி 1991 ஆம் ஆண்டுக்குப் பின் வெளியேறியுள்ளது. அதாவது 1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் உலகமயக் கொள்கைகளை அதிரடியாக இந்தியாவில் புகுத்திய பிறகே இது நிகழ்ந்துள்ளது. ஆக 60 ஆண்டுகளில் கடத்தப் பட்ட பணத்தில் 3 இல் 2 பங்கு 20 ஆண்டு களில் உலக மயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட போது வெளியேற்றப்பட்டுள்ளது.

மற்றொரு புள்ளி விவரமும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதாவது 1991க்கு முன்பு வெளிநாடுகளுக்கு சராசரியாக கடத்தப்பட்ட பணம் சதவீத அடிப்படையில் 9.1 என்றால் உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய பிறகு அது 16.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2002 முதல் 2006 வரையிலான நான்கு ஆண்டுகளில் அதாவது பா.ஜ.க. மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்ற ஆண்டுகளில் ஆண்டொன் றுக்கு சராசரியாக 72000 கோடி ரூபாய் வெளி யேறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டப்பட்ட பணம் 14 வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள செய்தியும் இதை உறுதி செய்கிறது.

முன்னாள் திட்டக்குழு உறுப்பினரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான எஸ்.பி. சுக்லா கூறுகிறார்: நான் நேரடியாக கண்ணுற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இதில் வியப்படைய எதுவுமில்லை. தாராளமயக் கொள்கைகள் அமல் படுத்துதல் துவங்கப்பட்ட பிறகு ஊழல் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்ததற்குக் காரணம் - சந்தையே அரசாங்கத்துக்குள் நுழைந்ததனால்தான். அரசாங்கக் கொள்கைகளையும், அரசு நிர்ணயிக்க வேண்டிய விலைகளையும் தொழில் நிறுவனங்களே தீர்மானிக் கும் நிலைக்கு உயர்ந்துவிட்டன. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடுதல் மற்றும் அரசு நடவடிக்கைகளிலேயே தொழில் நிறுவனங்களே நேரடியாக ஈடுபடுகின்றன. அவை அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த ஆட்சி அமைப்பு முறைக்குள்ளேயே நுழைந்து விடுகின்றன.
அரசு அமைப்பு முறைக்குள்ளேயே அவைகள் தலையிடுவதற்கான உதாரணமாக, பா.ஜ.க. ஆட்சிக்கால அனுபவம் ஒன்றை எஸ்.பி. சுக்லா உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் அலைபேசி சேவையை நடத்துவதற்கான அனுமதியை அளிப்பதற்கு ஏலமுறைதான் முதலில் பின்பற்றப்பட்டது. பல பெரும் தொழில் நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்று அனுமதியைப் பெற்றிருந்தன. ஆனால் அந்த ஏலத் தொகைக்கு லாபம் ஈட்ட முடியாது என்பதை அவை உணர்ந்த பிறகு, மீண்டும் அராசங்கத்துடன் பேசி லைசென்ஸ் முறைக்கு மாறுவதற்கு அரசாங்கத்தை அவை இணங்க வைத்துவிட்டன. அதனால் ஏலத் தொகையைவிட குறைந்த விலைக்கு அலைபேசி சேவையைத் தொடர அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? ஏலத் தொகையைக் கட்ட முடியாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துவிட்டு, அவைகளின் உரிமங்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்ற பிற திறமையான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும் அல்லது மறு ஏலம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் ஏல நிபந்தனைகளை நிறைவேற்றாத தொழில் நிறுவனங்களே குறைந்த கட்டணத்தில் அலைபேசி சேவையை நடத்த அனுமதிக்கப்பட்டன.

பொருளாதார தாராளமயமாக்கலுக்கு ஆதரவாக லாவணி பாடி வந்த தொழில் நிறுவனங்கள், உலகமய, தாராளமயம் கொள்கைகள்தான் லஞ்ச லாவண்ய லைசென்ஸ் பர்மிட் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவித்து விட்டதாக பேசி வந்தன. ஆனால் கூர்ந்து கவனித்தால் தாராளமய யுகத்தில் ஊழலுக்கான பாதைகள் தான் மாறியுள்ளன என்றும், அதன் அதி தீவிரமும் அது எட்டும் தொலைவும் அதிகரித் துள்ளன என்கிறார் சுக்லா. பர்மிட் லைசென்ஸ் ஆட்சியின்போது லஞ்ச ஊழல்கள் திரை மறைவில் நடைபெற்றன. அவை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் இப்போது இதெல்லாம் சகஜமப்பா என்ற பார்வை அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் மத்தியில் காணப்படுகிறது. அதனை சட்டப்பூர்வ மாக்குவதைத் தவிர மற்ற அனைத்தையும் அவர்கள் செய்து விட்டார்கள்.

இந்தியாவில் ஊழலை உச்சமட்ட அளவுக்கு கெண்டு சென்றது உலகமய, தாராளமயக் கொள்கைகளே என்று குறிப்பிடும் முன்னாள் மத்திய கண்காணிப்பு ஆணையர் என். விட்டல் பின்வருமாறு கூறுகிறார்:

தாராளமயக் கொள்கைகள் வியக்கத்தக்க அளவில் ஊழலுக்கு இட்டுச் சென்றுள்ளன. முந்தைய பர்மிட் - லைசென்ஸ் ஆட்சியமைப்பில் ஊழல் என்பது சில்லரை வணிகம் போல நடத்தப்பட்டது. ஏனெனில் அப்போது தனி நபர்கள் உரிமங்களைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். தாராள மயமாக்கல் கொள்கையின் அமலாக்கத்துக்குப் பிறகு பிரம்மாண்டமான ஊழல்கள் மூலம் தான் அரசியல்வாதிகளால் பணம் சம்பாதிக்க முடிகிறது. அதற்கேற்ற வகையில் கொள்கைகளை வகுப்பதன் மூலமே அது சாத்தியமாயிற்று. தாராளமயமாக்க லுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தையே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. எனவேதான் ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக் போன்றவர்களின் ஊழலை நாடு எதிர்கொண்டது. நாடும் மக்களும் எதிர் கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமான உலகமயக் கொள்கைகளையும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் முறியடித்து மக்கள் நலன்களை உயர்த்திப் பிடிக்கும் கொள்கைகளுக்காகப் போராடுவதே நம் முன் உள்ள ஒரே வழியாகும்.

ஒரு மோடிக்குள் மூன்று கருணாநிதிகள்

சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் முன்னாள் அய்.பி.எஸ். போலீஸ் அதிகாரி தாமாகவே முனவந்து உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.

கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி. கொடூரமான குஜராத் இனப் படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் - அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்பட வில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சை யான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.

இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று - மோடி உத்தரவிட்ட தாகவும் கூறினார். பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப் பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மை களை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி. இப்போது மனுதாக்கல் செய்துள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திரபத், மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று அரசு தரப்பில் மறுக்கப்பட்டது. அப்போது உளவுத் துறையில் துணை ஆணையாளர் என்ற நிலையில் தான் அவர் இருந்தார். எனவே உயர்அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்துக்கு அவர் எப்படி வந்திருப்பார்? என்பது, அரசு தரப்பு எழுப்பும் மறுப்பு. அப்போது உளவுத் துறையின் தலைமை ஆணையர் ஜி.சி. ராஜ்கர் விடுப்பில் இருந்தார். எனவே தன் சார்பாக இராஜேந்திர பத்தை, கலந்து கொள்ளுமாறு அவர் பணித்ததால், பத், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மோடியின் கட்டுப்பாட் டில் இருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இராஜேந்திர பத் அக்கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தடாலடியாகக் கூறிவிட்ட பிறகு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, இப்போது நேரடியாகவே இராஜேந்திர பத் மோடிக்கு எதிரான வலிமையான சான்றுகளுடன் நீதிமன்றம் வந்து விட்டார்.இந்த அதிகாரியின் வாகன ஓட்டுனரும், மோடி கூட்டிய கூட்டத்தில், அவர் பங்கேற்றதை உறுதிப்படுத்தியிருக் கிறார். பாதிக்கப் பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகை யாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.

மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப் பட்டனர். இந்த சூழ்நிலையில் தனது குற்றச்சாட்டு களுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ராஜேந்திர தத்துக்கு ஏற்படுவது நியாயம் தானே! அந்த தயக்கமே, அவரை காலம் கடந்து, நீதிமன்றம் வரக் காரணமாக இருந்துள்ளது. இப்போது உச்சநீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை; சுதந்திரமான அமைப்புகள் நடத்திய விசாரணை களையும் பரிசீலிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது!

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.

• ‘என்.சி.ஏ.பி.ஆர்.’ என்ற பொருளாதார ஆய்வு மய்யம் அண்மையில் குஜராத்தில் சிறுபான்மை யினர் நிலை பற்றிய ஆய்வு ஒன்றை மேற் கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஏழ்மை, வறுமை, கல்வியின்மை, பாதுகாப்பற்ற நிலையில் - இந்தியாவிலேயே ஒரிசா, பீகார் மாநிலங்களைப்போல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குஜராத்தில் வாழும் முஸ்லீம்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

• குஜராத்தில் முஸ்லீம்களின் வறுமையின் அளவு உயர்சாதி இந்துக்களைவிட 50 சதவீதம் அதிகம். வங்கிக் கணக்கு வைத்துள்ள முஸ்லீம்கள் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே. வங்கிக் கடன் வாங்கியவர்கள் 2.6 சதவீதம்.

• தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிப்பு பெருமளவில் உள்ளது.

• 2002 கலவரத்தால் பாதிக்கப்பட்ட 23000 முஸ்லீம்கள் இப்போதும் தற்காலிக முகாம் களிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். நிரந்தர முகாம்கள்கூட அமைக்கப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு தரும் இழப்பு ஈடு ரூ.10,000 அல்லது ரூ.15,000 மட்டுமே.

• கிராம சாலைகள்; வீடுகளுக்கு மின் இணைப்பு; குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மனித சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், ஊழல்கள் பெருகி நிற்பது தான்.

• கடந்த 2 ஆண்டுகளில் மூன்று பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 17000 கோடி செலவில் குளங்களை வெட்டும் திட்டம் ஒன்று மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் பெயர் ‘சுஜாலம் சஃபாலம்’; இதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு, உள்நாட்டு சந்தையில் கோதுமைக்கான விலை நிர்ணய அடிப்படையில் கூலி வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் களுக்கான ஊதியத்தை மொத்தமாக முன் கூட்டியே ஒப்பந்தக்காரர் களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு அரிசி விலைக்கான கூலியே தரப்படுகிறது. பல குளங்கள் காகிதத்தில் மட்டுமே வெட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தொழிலாளர் களுக்காக வழங்கப்பட வேண்டிய அரிசி - பெரு மளவில் மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது.

• 2009 இல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலை நடப்பதாக கணக்கு எழுதப்பட்டு, பணம் ஒப்பந்தக்காரர்களால் சுருட்டப்பட்டு விட்டது.

• 2010 இல் உருவாக்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்ட ஊழல்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.600 கோடி. இதற்கான டெண்டர் விடப்பட்ட தில் ஊழல்கள் நடந்தன.

• பெருமளவில் அன்னிய தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தில் மோடி கதவு திறந்து விட்டுள்ளார். அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக கட்டுரைகள் எழுதும் பார்ப்பன குருமூர்த்திகள், மோடி அதே வேலையை செய்யும்போது தொழில் வளர்ச்சி என்று பாராட்டுகிறார்கள். குஜராத்தில் 2003 இல் மோடி அன்னிய முதலீடுகளை வரவேற்கும் திட்டத்தைத் தொடங்கியபோது, ரூ.69 கோடி முதலீடு வந்தது. 2005 இல் ஒரு லட்சம் கோடி; 2007 இல் 4 லட்சம் கோடி; 2009 இல் 12 லட்சம் கோடி; 2011 இல் 21 இலட்சம் கோடியாக பன்னாட்டு மூலதனம் அதிகரித்து நிற்கிறது.

• இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங் களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்களில் நிலம் தாராளமாக ஒதுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு எந்த வரி விதிப்பும் கிடையாது. தொழிலாளர் நல சட்டங்களிலிருந்தும் விதி விலக்கு. விவசாய நிலங்கள், பழங்குடியினருக்கானவனப் பகுதிகள், பெரும் தொழில் நிறுவனங்களின் வசமாகி விட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றமே தலையிட்டு, பல தொழிற்சாலை களை மூட உத்தரவிட்டுள்ளது. உடனே - மோடி ஆட்சி, அவர்களுக்கு வேறு இடங்களை ஒதுக்கித் தருகிறது. இந்த பெரும் தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கிய பிறகு, மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், கல்விச் சேவைகள் மிகவும் குறைந்துவிட்டன. பெண்கள், குழந்தைகள், மைனாரிட்டியினர் வாழ்நிலை மிகவும் பின்னுக்குப் போய்விட்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

• பெரும் தொழில் நிறுவனங்கள் வந்த பிறகும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வில்லை. படித்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக சேவையாளர் தீஸ்கா செடல்வாட் ஆய்வு வழியாக அம்பலப்படுத்தி யுள்ளார்.

• குஜராத்தில் மகுவா பகுதியில் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதியில் பாசன வசதிக்காக அணைகட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை மோடி பூமிக்கடியில் உள்ள சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுத்து சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து விட்டதால், அப்பகுதி மக்கள் உள்ளூர் பா.ஜ.க. ஆதரவுடன், மோடியை எதிர்த்து போராடி வருகின்றனர். குண்டர்களை வைத்து போராடும் மக்களை ஒடுக்குகிறது மோடி ஆட்சி. 1400 கோடி செலவில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலைக்காக, 5000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.

• சவுராஷ்டிரா பகுதியில் வாங்கனர் மாவட்டத்தில் ‘ஒர்பட்’ நிறுவனத்துக்கான 40 ஹெக்டர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.40 என்ற விலையில் வழங்கினார் மோடி. அந்தப் பகுதி மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதரமான இந்த ஒரே இடத்தை பெரும் தொழில் நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் போய் தடை வாங்கியுள்ளனர்.

• உதோராவில் உள்ள ‘கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆய்வு நிறுவனம்’, அரசு ஆவணங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 1947-லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை குஜராத் மக்கள் தொகையில் வளர்ச்சித் திட்டங்களினால் 5 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் 33 லட்சம் ஹெக்டர் நிலம் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.

• “சர்வாதிகாரமும் வளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டு வரும்போது மக்களுக்கு அத்தகைய ஒரு வளர்ச்சியே தேவை இல்லை. ஜனநாயகம் வாழும் ஒரு சமூகத்தில் வளர்ச்சி சற்று குறைவாக இருப்பினும் அதுவே நன்மை பயக்கும்” என்கிறார் மதச் சார்பற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான ராம் புனியானி.

• மோடிக்கு எதிராக அங்கே எவரும் பேச முடியாது. சட்டமன்றங்கள் அவர் புகழ் பாடும் மன்றங்களாகவே செயல்படுகின்றன.

• தலித் சமூகத்தின் மீதான அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. தலித் மாணவர் களையும் பிறசாதி குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து ஒற்றுமை பற்றி பேசியதற்காக ஒரு ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். ‘இந்துத்துவாவின் பரிசோதனைக் களம்’ என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் அச்சத்தின் பிடியில் மைனாரிட்டி களும் தலித் மக்களும் வாடும் நிலையில், பார்ப்பனர்களும், பட்டேல்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சுரண்டி கொழுத்து வரும்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று பேசுவது என்ன நியாயம்? கருவுற்ற தாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கே இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இவர்களிடமிருந்து பதில் இல்லை. இதுதான் மோடி ஆட்சியின் சாதனைகளா

உங்கள் செல்போனில் ஈசியாக இன்டர்நெட் எடுக்க


இந்தியாவில் மொபைல் போன் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. இந்த துறையில் ஏற்படும் மாற்றங்களும் , புதிய கண்டு பிடிப்புகளும் நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறது. இந்தியாவில் இப்போது மொபைல் மூலமாக இன்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே அதிகரித்து வருகிறது. எனவே தான் மொபைல் கம்பனிகளும் மொபைல் இன்டர்நெட் வசதிக்கு பற்பல விதமான ப்ளான்களை வைத்துள்ளனர். 

என்னதான் நல்ல பிளான்கள் இருந்தாலும் நம்முடைய மொபைல் போன் அதற்க்கு சப்போர்ட் செய்யவேண்ண்டும். நாம் வைத்திருக்கும் மாடல் க்கு ஏற்ற GPRS செட்டிங் செய்தால் தான் நம்முடைய போனில் இன்டர்நெட் Connect ஆகும். சில சமயங்களில் நாம் வைத்திருக்கும் மாடல் க்கு GPRS செட்டிங் இல்லை என்று Coustomer Care -ல் சொல்லுவார்கள்.

அந்த சமயங்களில் GPRS Manual செட்டிங்க்ஸ் செய்யவேண்டியிருக்கும், இன்னும் சொல்லப்போனால் இப்போது வரும் பல கம்பனிகளின் டபுள் சிம் செல்போன் களுக்கு GPRS செட்டிங் கிடைக்காது. எனவே அந்த போன்களிலும் GPRS Manual செட்டிங்க்ஸ் செய்யவேண்டியிருக்கும்.
எனவே நான் இந்த பதிவில் அணைத்து கம்பனிகளின் GPRS Manual செட்டிங்க்ஸ் தொகுத்து கொடுத்துள்ளேன்.

தேவைபடுபவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

Manual Settings for Vodafone GPRS


Account Name – Vodafone_GPRS

User Name – Blank

Password – Blank

Proxy – Enabled/yes

Access Point Name – portalnmms

Full Internet Access Point Name – www

Proxy and Server address – 10.10.1.100

Proxy and Server Port – 8080

Homepage – www.google.com

Authentication Type – Normal


Manual Settings for Airtel GPRS


Homepage – any page you want to set.

User Name – Blank

Password – Blank

Proxy – Enabled/yes.

Proxy and Server Adress – 202.56.231.117

Proxy and Server Port – 8080

Data bearer – GPRS or Packet Data.

Access Point Name – airtelgprs.com

Authentication Type – Normal

Use preferred access point – No




Manual Settings for Airtel Live




Account Name – Airtel_live 

Homepage – http://live.airtelworld.com

Username – Blank

Password – Blank

Proxy – Enabled/yes

Proxy and Server Adress – 100.1.200.99

Accespoint Name – airtelfun.com

Proxy and Server Port – 8080

Data bearer – GPRS/ Packet Data

Authentication Type – Normal




Manual Settings for Idea GPRS

Account Name – idea_GPRS

Username – Blank

Password – Blank

Homepage – http://wap.ideafresh.com

Proxy and Server Port – 8080

Proxy and Server adress – 10.4.42.45

Databearer – GPRS / Packetdata

Acces Point Name – imis

Proxy – Enabled/yes

Authentication Type – Normal




Manual Settings for Bsnl GPRS




Account Name – BPL WAP

Username – <Blank>

Password – <Blank>

Proxy – Enabled/yes

Homepage – http://wap.mizone.bplmobile.com

Proxy and Server address – 10.0.0.10

Proxy and Server Port – 8080

Acces Point Name – mizone

Data bearer – GPRS/ Packetdata

Authentication Type – Normal




Manual Settings for Aircel GPRS




NAME : Aircel Online

Homepage :http://google.com

User Name :Blank

Password :Blank

Use preferred Access Point :aircelgprs or aircelwap

Open Access Point Setting

Proxy:Enabled

Proxy address :192.168.035.201 

port :8081

Data Bearer : Packet Data





Manual Settings for Reliance GPRS


apn: rcomwap


proxy: 10.239.221.5


port: 8080


Homepage: wap.rworld.co.in


Manual Settings for TATA DOCOMO GPRS


Account Name – DOCOMO_GPRS


User Name – Blank


Password – Blank


Proxy – Enabled/yes


Access Point Name –TATA.DOCOMO.DIVE.IN


Full Internet Access Point Name – www


Proxy and Server address – 10.124.94.7


Proxy and Server Port – 8080


Homepage – http://divein.tatadocomo.com


Authentication Type – Normal






Manual Settings for Videocon GPRS





Connection Name : Videocon Internet

Data Bearer : Packet Data

APN : vinternet.com

Username & Password: Blank

Homepage : www.google.com

Proxy server : Blank

Proxy port : Blank





Manual Settings for Videocon WAP






Connection Name : Videocon GPRS

Data Bearer : Packet Data

APN : vgprs.com

Username & Password: Blank

Homepage : http://wap.live.in

Proxy server : 10.202.5.145

Proxy port : 8799





Manual Settings for Videocon MMS






Connection Name : Videocon MMS

Data Bearer : Packet Data

APN : vgprs.com

Username & Password: Blank

Homepage : http://10.202.4.119:10021/mmsc/

Proxy server : 10.202.5.145

Proxy port : 8799 





Manual Settings for Uninor GPRS





Profile name: uninor

Homepage: www.google.com (you can use your own home page)

Enable Proxy

Ip address: 10.58.10.58

Port: 8080

Linger time: 90

Don’t enable DNS

Bearer: choose GPRS

Advanced settings:

APN: uninor

Login: Leave blank

Password: Leave blank





Manual Settings for Virgin GSM


VBYTES

APN: m.vbytes.in

Home Page: http://m.vbytes.in

1.Proxy Server: 10.124.94.8

port:8080




VINTERNET




Service Description: vinternet

APN: vinternet.in

no proxy and port








- நண்பர்களே, இதில் இப்போது வெளிவரும் " Smart phone வகைகளான Blackberry, Android, Iphone, HTC போன்ற மாடேல்களுக்கு " APN " மட்டும் சேர்த்தால் போதும்.





மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் பின்னுட்டத்தில் கேட்கவும்,





என்னால் முடிந்தவரை தகவல்களை தருகிறேன்.