Sunday, June 26, 2011

திருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது


திருமண வாழ்வில், செக்ஸ் வாழ்க்கையை திருப்தியாக அனுபவிக்க முடியவில்லை என இங்கிலாந்துவாசிகள் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு செக்ஸ் மீது ஆர்வம் குறைந்து விடுவதாகவும், அதேசமயம் வெளி உறவால் உற்சாகம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.



டேட்டிங் சேவையில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்தின் லவ்விங் லிங்க்ஸ் இணையதளம், திருமணமான 3000 ஆண், பெண்களிடம் திருமண வாழ்வு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்:

திருமணமான புதுசில் செக்சில் அதிக ஆர்வம் இருந்ததாகவும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆர்வம் படிப்படியாக குறைந்து விட்டதாகவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். ஆரம்ப காலத்தில் வாரத்தில் 4 நாட்களாக இருந்த செக்ஸ் ஆர்வம் 1 நாளாக குறைந்து விட்டது தெரியவந்தது. திருமண வாழ்க்கை செக்ஸ் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக 10ல் 6 பேர் தெரிவித்தனர்.
தங்களது வாழ்க்கை துணையை காதலராக நினைக்க முடியவில்லை என்றும் நண்பராகவே நினைக்கத் தோன்றுகிறது என்றும் ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் தெரிவித்தனர். கணவனோ மனைவியோ எல்லா விஷயத்திலும் துணையாகவும், புத்திசாலியாகவும், இரக்க குணத்துடனும், ஜாலியாக பழகுபவராகவும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். அதேசமயம், எல்லா விஷயத்திலும் சமத்தாக இருந்துவிட்டு பெட்ரூம் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால் அதோகதிதான். செக்ஸ் தேவை நிறைவேறாத பட்சத்தில் வெளித் தொடர்புகளைத் தேடி அலைய வேண்டியதுதான் என்கின்றனர்.

அதே இடம், அதே பெட், அதே நேரம் என செக்ஸ் வாழ்க்கை போரடிப்பதாகவும் வெளித் தொடர்பில் மகிழ்ச்சி கிடைப்பதாகவும் 10ல் 8 பேர் தெரிவித்துள்ளனர். பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாக தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாக 3ல் 2 பேர் கூறியுள்ளனர்.

பெண்ணுக்கு உதவிய வயாகரா

உடலுறவுக்கு ஆண்களுக்கு உதவி வரும் வயாகரா மாத்திரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள உதவக்கூடும் என பிரிட்டனில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.


பிரிட்டனில் ஹட்டர்ஸ்ஃபீல்டு நகரில் வசிப்பவர் டேவிட். அவருக்கு 2002ல் திருமணம் நடந்தது. அவரது மனைவியின் பெயர் கெர்ரி ஹோரன். எட்டு ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் கெர்ரி ஹோரன் தவித்து வந்தார், ஹோரன் கருத்தரிப்பார். ஒரு சில மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். அதனால் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை.

நாட்டிங்காம் நகரில் உள்ள தனியார் கருத்தரிப்பு சிகிச்சை நிலையத்துக்கு கெர்ரி ஹோரன் சென்றார். அவர்கள் சோதனைக்குழாயில் கருமுட்டையையும் விந்தணுவையும் இணைத்த பிறகு கரு முட்டையை கருப்பைக்குள் வைக்க தீர்மானித்தனர்.

அதன்படி சோதனைக்குழாயில் கரு முட்டை உருவாக்கப்பட்டது. அந்தக் கருமுட்டையை கருப்பைக்குள் வைத்தனர். ஆனால் கருமுட்டை கருப்பையில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு மீண்டும் ஏற்பட்டது. இம்முயற்சிகளை மூன்று முறை தொடர்ந்தனர். ஆனால் மூன்று முறையும் கருச்ச¤தைவுதான் ஏற்பட்டது. அதனால் கெர்ரி ஹோரன்& டேவிட் தம்பதியர் மனமுடைந்தனர்.
அடுத்தடுத்து கருச்சிதைவு ஏற்படுவது ஏன் என மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது கெர்ரி ஹோரனின் கருப்பை சுவர் மிக மெல்லியதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிக மெல்லியதாக கருப்பைச் சுவர் இருப்பதால் கருமுட்டை கருப்பை சுவரில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது என உறுதி செய்தனர்.

இந்நிலையில் கருத்தரிப்புத்துறை நிபுணர் ஜார்ஜ் நெடுக்வே ஒரு ஆலோசனை கூறினார். வயாகரா உட்கொண்டால் பெண்களுக்கு கருப்பைப் பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். அதிக ரத்தம் செல்வதால் கருப்பை சுவர் தடிமனாகும். கருப்பை சுவர் தடிமன் அதிகமானால் கரு முட்டை கருப்பையில் பதிந்து வளரும் வாய்ப்பு ஏற்படும் என ஜார்ஜ் தெரிவித்தார்.

இது மிகவும் அபாயகரமானது. எனவே மருத்துவ நிபுணர் மேற்பார்வையில் வயாகரா சாப்பிடலாம¢ என ஜார்ஜ் குறிப்பிட்டார். முதலில் இந்த உத்தி பலன் தருமா என ஹோரன் சந்கேகப்பட்டார். ஆனால் எப்படியும் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் வயாகரா சாப்பிட சம்மதித்தார். ஆனால் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வை அவசியமில்லை என்று கணவனும் மனைவியும் தீர்மான¤த்தனர்.

முதல் வயாகரா மாத்திரையை சாப்பிட்டதும் உடலே சிவந்து போய்விட்டது. முகம் ரத்த சிவப்பாகி விட்டது. ஆனால் இதற்கு ஹோரன் பயப்படவில்லை. நாளொன்றுக்கு ஒரு வயாகரா வீதம் ஒன்பது நாள்களுக்கு சாப்பிட்டார். அவரது கருப்பைக்கு ரத்தம் செல்வது படிப்படியாக அதிகரித்தது. பின்னர்அவரது கருப்பையை மருத்துவ நிபுணர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்பொழுது கருப்பை சுவர் தடிமனாகி இருப்பது உறுதியானது. இந்த அளவு கருப்பைச் சுவர் தடிமனாக இருந்தால் கருமுட்டை பதிந்து கொள்ளும். கரு வளரும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சோதனைக் குழாயில் தயாரிக்கப்பட்ட கருமுட்டையை ஹோரனின் கருப்பையின் உள்ளே நான்காவது முறை எடுத்துச் சென்றனர். இந்த முறை கருமுட்டை கருப்பையின் உள்சுவரில் பதிந்து வளரத் தொடங்கியது. பின்னர் பத்து மாதங்கள் கழித்து ஹோரனுக்கு சிக்கல் எதுவும் இன்றி குழந்தை பிறந்தது. வயாகராவுக்கு புது உபயோகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு...

திருமணமான தம்பதிகள் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் எப்படி பாலுறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.


அதில் பெரும்பாலான தம்பதிகள் சுவாரஸ்யம் இன்றி பதிலளித்த போதிலும், பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் கூட தீவிர செக்ஸ் உறவு வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது எப்படி சாத்தியம்? கணவருடன் வாரம் ஒரு முறையாவது வெளியே ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்ல வேண்டும். முடிந்தால் சினிமா, சுற்றுலா அல்லது பார்ட்டி என ஏதாவது நிகழ்ச்சிக்கு சேர்ந்து செல்லலாம்.

அப்படிச் செல்வதால் அன்யோன்யம் அதிகரிப்பதுடன் பாலுறவில் ஈடுபாடு குறையாமல் நீடிக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இடைவெளியில் இருவரின் உடல்நிலைக்கு ஏற்ப பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்ளலாம்.

பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொள்ளாத நிலையிலும் சிறு, சிறு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதால் பரஸ்பர அன்பு விலகாமல் நீடிக்கும் என்பதும் பல தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 24 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதியாக வாழும் மார்க்-ஜெல்டா கூறுகையில், தாங்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகக் கூறினர்.

அதற்குக் காரணம் குழந்தைகள் இருந்த போதிலும், தங்கள் மகிழ்ச்சி பாதிக்காதவாறு வாழ்க்கையை பின்பற்றி வருவதாகவும், குழந்தைகளுக்கும் தேவையான சுதந்திரத்தை அளித்துள்ளதால் அவர்களும் தங்களைப் புரிந்து நடந்து கொள்வதாகவும் கூறினர்.

மணவாழ்க்கை என்பது மணம் வீச வேண்டுமே தவிர, துர்மணமாகி விடக்கூடாது.

சிறு சிறு பிரச்சினைகளுக்குக் கூட கூச்சலிட்டு, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடிய தம்பதிகளையும் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

பாலுறவுப் புணர்ச்சி தொடர்பாக பல குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை பாலுறவுப் புணர்ச்சி தொடர்பான கருத்து வேறுபாட்டால் மட்டுமே மணமுறிவு ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலுறவுப் பிரச்சினைக்காக பிரிந்த குடும்பங்கள் ஏராளம்.

எனவே மனம் விட்டுப் பேசி மகிழ்வோம். முடிந்தவரை தம்பதியரில் இருவரின் நிலைக்கேற்ப பாலுறவுப் புணர்ச்சி மேற்கொள்வோம். இன்பத்தின் எல்லையை அடைவோம்.

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி?



பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.

குழந்தைப் பிறப்பு என்பது கணவன் - மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம். 

இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும். 

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:

இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும். 

குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். 

பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.

விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும். 

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.

அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்

உங்களுக்கு தெரியுமா! பாகம் 2

பேச்சினைப் புரிந்து டெக்ஸ்ட்டாக மாற்றும் முதல் சாப்ட்வேர் பெயர் “Hearsay” ஆகும். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. 

* கலிபோர்னியா பல்கலைக் கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவின் படி, ஆண்டுக்கு 16,93,000 டெரா பைட்ஸ் அளவிற்கு டேட்டா உருவாக்கப்பட்டு சேமிக்கப் படுகிறது. 

* மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அடுத்த படியாக சாப்ட்வேர் தயாரிப்பில் இரண்டாவது நிலையில் உள்ள நிறுவனம் அடோப் ஆகும்.

* எதிர்காலத்தில் ஹார்ட் டிஸ்க்கில் ஓர் அங்குல இடத்தில் லட்சத்தில் ஒரு பகுதியில் ஒரு ட்ராக் அமைத்து எழுதப்படும். அதாவது ஓர் அங்குலம் ஒரு கோடி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ட்ராக் அமைக்கப்படும்.

* சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவர் ஜாவாவினை உருவாக்கினார். இந்த ஜாவா என்ற பெயரை ஒரு காப்பி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவருக்கு உதயமானது.

*முதல் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் காம்ப் சர்வ். இது 1969ல் தன் பணியைத் தொடங்கியது.

* 50 கிகா பைட்ஸ் என்பது எவ்வளவு? ஒருவரி இடைவெளியில் டைப் செய்யப்பட்ட காகிதங்களை பாரிஸ் நகர எய்பில் டவர் உயரத்தின் மூன்று பங்கு அளவிற்கு அடுக்கினால் வரும் ஸ்டோரேஜ் திறன் தான் 50 கிகா பைட்ஸ்.

பயர்பாக்ஸ்-சின் புதிய எக்ஸ்டென்ஷன் புரோகிராம்கள்

பயர்பாக்ஸ் ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர் என்பதால், பலரும் அதன் இயக்க வடிவமைப்பு குறியீடுகளைப் பெற்று, கூடுதல் பயன்பாட்டிற்கென ஆயிரக்கணக்கில் எக்ஸ்டென்ஷன் புரோகிராம்களைத் தந்துள்ளனர். இவை அனைத்தும் இணையத்தில் இலவசமாகவே கிடைப் பதால், பலரும் இவற்றை டவுண்லோட் செய்கின்றனர்; இன்ஸ்டால் செய்கின்றனர்.
ஆனால் முழுமையாகப் பயன்படுத்து கிறார்களா, என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் கிடைக்கும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் களில் நமக்கு அவசியமாய்த் தேவைப்படுபவை எவை என்று பலரும் அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான். இங்கு பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பற்றி விளக்கக் குறிப்புகளைப் பார்க்கலாம். இவற்றைத் தேர்ந்தெடுக்கையில், செயலாற்றத்தில் விரைவு, செயல் திறன் அதிகரித்து நேரத்தைக் குறைத்திடும் வசதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

1.எவர்நோட் (Evernote): இன்டர்நெட்டில் தளங்களில் உலா வருகையில், இதன் மீது ஒரு சிறிய குறிப்பினை எழுதி வைத்து, பின்னர் நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் வரும். எப்படி தளங்களில் உள்ள இணையப் பக்கங்களில் எழுதி வைப்பது? அப்படியே எழுதி வைத்தாலும், மீண்டும் அதனைப் பார்க்கையில், அப்படியே இருக்குமா? என்ற சந்தேகமும் கேள்விக் குறியும் வரலாம். அப்படி ஒரு வசதியைத் தான் Evernote என்னும் எக்ஸ்டன்ஷன் தருகிறது. எந்த ஓர் இணைய தளத்திலும் இதனைப் பயன்படுத்தி குறிப்புகளை எழுதி வைக்கலாம். மீண்டும் அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், அக்குறிப்புகள் அங்கேயே இருக்கும். தளங்களை மொபைல் போன் வழியாகப் பார்வையிட்டாலும் அவை கிடைக்கும். தள முகவரிhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/evernotewebclipper
2. கிரீஸ் மங்க்கி (Greasemonkey): இந்த எக்ஸ்டென்ஷனைப் பயன்படுத்தி, இணையத் தேடலுக்கு வசதி தரும் குறியீடுகளை எழுதிக்கொள்ளலாம். தேடல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளை உருவாக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, டூல்பாரில் மியூசிக் கட்டுப்படுத்தும் பட்டன்களை உருவாக்கலாம். ஒருமுறை இதனை டவுண்லோட் செய்தவுடன், அதிகமான எண்ணிக்கையில் ஸ்கிரிப்ட் கள் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜிமெயில் ஸ்டார்ட்டர் ஸ்கிரிப்ட் (Gmail Starter Script) என்னும் ஸ்கிரிப்ட், ஜிமெயில் தளத்தினை, ஒரு பெட்டிக்குள் வைத்துப் பார்க்காமல், திரை முழுவதும் பார்க்க வசதி செய்து தருகிறது. தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/search/?q=Greasemonkey&cat=all&x=8&y =17

3.எக்ஸ்மார்க்ஸ் (Xmarks): டெஸ்க்டாப், ஐபோன், லேப்டாப், டேப்ளட் பி.சி. என அனைத்துவகை சாதனங்களிலும் இன்டர் நெட் உலா வருகிறீர்களா! அப்படியானால், நீங்கள் குறித்து வைத்த தளங்களின் புக்மார்க்குகளை, எப்படி அனைத்து கம்ப்யூட்டர்களிலும் எளிதாகப் பெற முடியும்? இந்த வகையில் உங்களுக்கு உதவுவதுதான் இந்த எக்ஸ்மார்க்ஸ் எக்ஸ்டென்ஷன். புக்மார்க் மட்டுமின்றி உங்கள் பாஸ்வேர்ட் களையும் அனைத்திற்குமாக ஒருங்கிணைத்துத் தரும் வேலையினை இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் மேற்கொள்கிறது. வெவ்வேறு பிரவுசர்களுக்கிடையேயும் இவற்றை இணைத்து, ஒருங்கிணைத்துத் தரும். தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ addon/xmarkssync/ 

4. ஸ்பீட் டயல் (Speed Dial): நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில தளங்களைக் கட்டாயம் தினந்தோறும் பார்த்து பயன்படுத்துபவர்களா? அப்படியானால், அந்த தளங்களை, சொடுக்குப் போட்ட நேரத்தில் உங்களுக்குத் தருவது ஸ்பீட் டயல் எக்ஸ்டன்ஷன். இந்த எக்ஸ்டன்ஷன் அந்த தளங்களை எல்லாம் ஒரு டேப்பில் அமைத்துத் தருகிறது. சிறிய படங்களாக அவற்றின் முகப்பு தோற்றத்தினையும் காட்டுகிறது. இவை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்யப்படுவதும் இதன் சிறப்பு. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q= Speed+Dial&cat=all&x=25&y=10

5. ரீட் இட் லேட்டர் (Read It Later): விரைவாக உங்கள் விமானம் அல்லது ட்ரெயினில் ஏறிப் பயணம் செய்திடப் புறப்படுகிறீர்கள். அப்போது பார்க்கும் இணையத்தில் உள்ள கட்டுரை மற்றும் தளம் உங்களுக்கு சேவ்செய்யப்பட்டு பின்னர் படிக்கக் கிடைக்க வேண்டும் என்று எண்ணு கிறீர்களா? அங்கே உங்களுக்கு இந்த ரீட் இட் லேட்டர் என்ற எக்ஸ்டன்ஷன் உதவும். ஒரே ஒரு கிளிக்கில், பெரிய கட்டுரையாக இருந்தாலும், நீளமான தளமாக இருந்தாலும் அவற்றை, இந்த எக்ஸ்டன்ஷன் காப்பி செய்து பின்னர் படிக்கத்தருகிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/ ?q=Read+It+Later&cat=all&x=20&y=14

6. ஈஸி யு-ட்யூப் வீடியோ டவுண்லோடர் (Easy You Tube Video Downloader): வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், யு-ட்யூப் வீடியோ தொடர்ந்து ஸ்ட்ரீம் ஆகாது. எனவே யு-ட்யூப் போன்ற வீடியோ தளங்கள் நம் எதிர்பார்ப்பு களுக்கேற்ப கிடைக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு உதவிக்கு வருவது இந்த ஈஸி யுட்யூப் வீடியோ டவுண்லோடர். யுட்யூப் தளத்திலிருந்து ப்ளாஷ் படங்களை உடனடியாக டவுண்லோட் செய்து, பின்னர் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பார்க்க உதவி செய்கிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q =Easy+You+Tube+ Video+Downloader&cat= all&x=16&y=20

7. ஆசம் ஸ்கிரீன் ஷாட் (Awesome Screenshot): ஓர் இணைய தளம் முழுவதுமாக ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டுமா? ஆசம் ஸ்கிரீன் ஷாட் எக்ஸ்டன்ஷனைப் பயன்படுத்தலாம். திரையில் தெரிவது மட்டுமின்றி, அப்போது காட்டப்படாத பக்கம் முழுவதும் சேவ் செய்து இந்த எக்ஸ்டன்ஷன் தரும். இதனை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். அந்த தளங்களின் மீது குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்தலாம். தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/ search/?q=Awesome+Screenshot&cat=all&x =2 3&y=10

8. அட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus): பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் களில் இது மிகவும் பிரபலமான ஒன்று. திடீரென எழுந்தும், ஊர்ந்து வந்தும், விரிந்து வந்தும் நம் இணைய பயணத்தில் எரிச்சல் ஊட்டும் விளம்பரங்களை இந்த எக்ஸ்டன்ஷன் தடுக்கிறது. இதனை இறக்கிப் பதிந்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது மிக எளிது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ search/?q=Ad+Blok +Plus&cat=al l&x=23&y=17

மேலே சொல்லப்பட்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் மட்டுமின்றி, மேலும் சிலவும் நமக்கு பயன்தருவதாக இருக்கலாம். இருப்பினும் பொதுவாக, பெரும்பாலோர் விரும்பும் வசதிகளின் அடிப்படையில் இவை தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் தளத்தில் (https://addons.mozilla. org/enUS/firefox) இவற்றைப் பெறலாம். இந்த தளம் சென்று, அதில் காட்டப்படும் தேடல் கட்டத்தில், தேவையானதை டைப் செய்து, பின்னர் கிடைக்கும் மெனுவில் இருந்து தேர்ந்தெடுத்து, பின்னர் அந்த தளம் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

பழகியவர்களைப் பிரிந்து செல்ல மனம் வரவில்லை.

நான் ஒரு சீனியர் சிட்டிசன். பெற்றோருக்கு ஒரே புதல்வனாகப் பிறந்து, செல்லமாக, தனிமை வாழ்க்கையே வாழ்ந்தேன். பட்டப்படிப்பு முடிந்த வுடன் திருமணம்; அழகான, அன்பான மனைவி. அவள் வந்தபின் வாழ்வே வசந்தமானது; பொருளாதார நிலையும் பெரும் ஏற்றமடைந்தது. ஒரு ஆண், மூன்று பெண் என, குழந்தைகள் பிறந்து, தனி மரம் தோப்பானது. செல்வச் செழிப்புடனே பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி, அவரவர் குழந்தைகளுடன், என் பெற்றோர் சேர்ந்து வாழ்வே மிகவும் இன்பமயமாகச் சென்றது.
யார் கண் பட்டதோ, என் மகனின் ஊதாரித்தன மான செயல்களால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இருந்தாலும், எல்லாவற்றையும் என் தந்தை பொறுமையுடன் கையாண்டார். என் மணிவிழாவிற்குப் பின், பெரும் புயல் வீசி, நான் தற்போது திக்குத் தெரியாத காட்டில் சிக்கித் தவிக்கிறேன். என் மகனின் ஊதாரித்தனத்தால் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது. மிகவும் மென்மையான குணம் படைத்த என் தந்தை, மனம் வெதும்பி மரணமடைந்தார். அவரை இழந்த, 15வது நாளில், என் தாயையும் இழந்தேன். எல்லாவற்றிற் கும் சிகரம் வைத்தது போல் என் குடும்பத் தூணாக இருந்த, என் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்தாள். இரண்டு வருடங்களில் என் மேல் அக்கறை கொண்ட மூவரையும் இழந்து, நடை பிணமானேன்.

இதன் பின்னும், என் மகன் தன்னை மாற்றிக் கொள்ளாமல் நடந்ததால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது. அதை நான் கண்டித்ததால், என்னை எதிரியாக நினைத்து, மிகவும் தரக் குறைவாகப் பேசுவதுடன், சொத்து ஒன்றையே குறிக்கோளாக நினைத்து, என்னைத் தனிமைப்படுத்தி, எல்லாத் தொல்லைகளையும் கொடுக்கிறான். பெற்ற மகன் இருந்தும், எந்தத் துணையுமின்றி, முதுமையில் தனிமைக் கொடுமையை அனுபவித்து வருகிறேன்.
பெண் பிள்ளைகள் ஆதரவு காட்டினாலும், அவர்களுடன் சேர்ந்து இருக்க மனமில்லை. ஏதாவது இல்லத்தில் சேர்ந்து விடலாமென்றால், என் சொந்த ஊரை, மற்ற உறவினர்களை, பழகியவர்களைப் பிரிந்து செல்ல மனம் வரவில்லை. உதவிக்கு ஆட்களை வைத்துக் கொள்ள நினைத்தால், யாரும் கிடைக்கவில்லை. யாராவது, ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற விதவைகளையோ, விவாகரத்துப் பெற்றவர்களையோ துணைக்கு வைத்துக் கொள்ளலாமென்றால், மற்றவர்கள் என்ன நினைப்பரோ என்ற தயக்கம் ஏற்படுகிறது. இந்தச் சகோதரன், மீதி நாட்களை அமைதியாக கழிக்க, வழிகாட்டும்படி அன்புடன் வேண்டுகிறேன்

அன்புள்ள சகோதரருக்கு —

உங்களது அனாதரவான நிலையை உங்கள் கடிதம் மூலம் அறிந்தேன். எனினும், உங்களது கடிதத்தில் கீழ்கண்ட விவரங்கள் இல்லை.

1.உங்களின், உங்களின் பெற்றோர், மனைவி, மகன், மகள்கள் வயது விவரம்.

2.நீங்கள் என்ன பணி செய்தீர்கள், ஓய்வூதியம் கிடைக்கிறதா?

3.குடும்பத் தொழில் என்ன செய்தீர்கள்?

4.சொத்துகளை பிரித்துக் கொடுத்து விட்டீர்களா? பிரிந்து கொடுத்திருந்தால், உங்களுக்கென்று தனியாக பங்கு பிரித்திருக்கிறீர்களா? சொத்துகளை பாகப் பிரிவினை செய்தீர்களா, தானமாக எழுதிக் கொடுத்தீர் களா?

5.உங்கள் மகன் என்ன வகையான ஊதாரித்தனம் செய்தார்?

6.ஓய்வூதியம் தவிர, உங் களுக்கு வேறுவிதமான வருமானம் உள்ளனவா?

7.உங்களது ஊதாரி மகன் என்ன வகையான தொல்லைகள் கொடுக்கிறார்?

8.உங்களின் சொந்த ஊர் எது?

9.நீங்கள் இந்து மதத்தின் எந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்?

10.உங்களின் மகனின் ஊதாரித்தனமான நடத்தைக்கு, நீங்கள் ஏதாவது ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறீர்களா?

மேற்சொன்ன விவரங்களும் உங்கள் கடிதத்தில் இருந்திருந்தால், உங்களது கடிதத்திற்கு இன்னும் சிறப்பான ஆலோசனை வழங்கி இருப்பேன்.

உங்களது தந்தை காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறீர்கள். அப்போது, எல்லா பிரச்னை களையும் உங்களது தந்தையே கையாண்டிருக்கிறார். அந்த சமயத்தில், நீங்கள் குடும்ப நிர்வாக சிக்கல்களில் சிக்காமல், சுதந்திரமாக இருந்திருக்கிறீர்கள். உங் களது தந்தையின் மரணத்திற்கு பின், உங்கள் மகன் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துள்ளீர் கள். உங்களது மகனுக்கு, நாற்பது வயது இருக்கக் கூடும். இனி, பட்டு திருந்துவார் என நம்புகிறேன்.

இனி, உங்களின் பிரதான கேள்விக்கு வருவோம்...

ஆதரவற்ற விதவைகளையோ, விவாகரத்து பெற்றவர்களையோ அல்லது வேலையாள் ஒருவரையோ துணைக்கு வைத்துக் கொள்ள நினைக்கிறீர்கள். இந்த இடத்தில், துணைக்கு என்றால் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என நினைக்கிறீர்கள்.

வருடத்தை மூன்றாக பிரித்து, நான்கு மாதங்களுக்கு ஒரு மகள் வீட்டில் தங்கலாம் நீங்கள்; தங்குவதற்கு பணம் அளிக்கலாம்.

காவல் துறையின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்சி மூலம், பணிப் பெண்ணை அமர்த்திக் கொள்ளலாம்.

மறுமணம் செய்வது உங்களது திட்டமென்றால், உங்களது மகள்களிடம் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். உங்களது மறுமணம், உங்களது ஊதாரி மகனை மறை முகமாக பழிவாங்க என்றால், மறுமணம் வேண்டாம். விவாகரத்து பெற்றவர்களை விட, ஐம்பது வயது விதவைப் பெண்ணை தேர்ந் தெடுப்பது நல்லது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதவைப் பெண், உடல் ஆரோக்கியம் பெற்றவராக இருப்பது நல்லது.

உங்களது வயது, 63 என்றால், இன்னும், 25 ஆண்டுகள் உயிர் வாழ்வீர்கள் என வைத்துக் கொள்வோம். 25 து12 = 300 மாதங்கள். ஒரு மாதச் செலவு, 15,000 - 20, 000 ரூபாய் என கொள்வோம். முன்னூறு மாதங்களுக்கு, அறுபது லட்சம் ரூபாய் ஆகிறது. 

ஒன்று, நீங்கள் மறுமணம் செய்து கொள்ள உங்களிடம், அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தோ அல்லது மாதம், இருபதாயிரம் நிலையான வருமானமோ இருக்க வேண்டும். சரியாக பெண்ணை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், வரும் பெண் உங்களது மகனை விட, பத்து மடங்கு அதிகம் தொல்லைக் கொடுப்பார்; ஜாக்கிரதை. விதவைப் பெண்ணை உங்களது சொந்த ஊரில், சொந்தத்தில் தேடுங்கள். உங்களிடம் தாம்பத்யம் மேற்கொள்ளும் திடமிருந்தால், தாம்பத்யம் தேவைப்படும் பெண்ணை தேர்ந்தெடுங்கள்; தாம்பத்யம் பண்ணும் திறனை உடலாலும், மனதாலும் இழந்திருந்தீர்கள் என்றால் தாம்பத்யம் தேவைப்படாத பெண்ணை தேர்ந்தெடுங்கள். ஒரு விஷயம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்... உங்களை கருவறையில் சுமந்த தாய் போல, உங்களை கருவறைக்கு வெளியே சுமந்த மனைவி போல ஒரு பெண் கிடைக்கவே மாட்டாள்.