Showing posts with label இல்லறம். Show all posts
Showing posts with label இல்லறம். Show all posts

Monday, July 11, 2011

அவன் தொடர்ந்து என்னை காதலிக்க ஆரம்பித்தான்.

நான் சென்னையைச் சேர்ந்தவள்; வயது 41. எனக்கு திருமணமாகி, 15 வருடங்கள் ஆகின்றன. என் கடிதத்தை படித்து, ஒரு ஆண் திருந்தினாலும், மகிழ்ச்சி அடைவேன்.

எங்களது குடும்பம் நடுத்தரமானது. நான் கடைக்குட்டி என்பதால், பெற்றோருக்கு செல்லப் பிள்ளை. எனக்கு, இரு அண்ணன்கள், ஒரு அக்கா. நான் அதிகம் பேசாத புத்திசாலி குழந்தையாக இருந்திருக்கிறேன். அதனாலேயே பின்னாளில் பணியில் சேர்ந்த போதும், பணியிடத்தில் நற்பெயர் பெற்று, உயர் பதவியில் இருக்கிறேன்.
எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் நேரம் வந்தது. பெரும்பாலான மாப்பிள்ளை களின் பெற்றோரால், கறுப்பு என உதாசீனப்படுத்தப்பட்டேன். பெண் பார்க்கும் படலத்துக்கு முன், நான் கறுப்பு, அழகானவள் இல்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்தது இல்லை. "அக்காவை போஷாக்காய் கவனித்த நீங்கள், என்னை கறுப்பியாய் திகழ விட்டு விட்டீர்களே...' என்று, பெற்றோருடன் சண்டை போட்டேன். தொடர்ந்து நல்ல வரன் அமைய திண்டாடினோம்.

நான் பணிபுரியும் நிறுவனத்தில், உடன் பணி புரியும் ஓர் இளைஞன் முன் வந்தான். நானும், என் தந்தையும் ஒரே நிறுவனத்தில்தான் பணிபுரிகிறோம் என்பதை முதலில் சொல்ல மறந்து விட்டேன். நானும், என் தந்தையும் கம்பீரமாக, மிடுக்காக தோற்றமளிப்போம். என் தந்தையோ, "அந்த இளைஞன் ஏழை குடும்பத்தில் பிறந்தவன்; தவிர, நல்லவன் இல்லை...' எனக் கூறி, அவனை மறுத்து விட்டார்.
தொடர்ந்தது பெண் பார்க்கும் மேளா. மணப்பெண் கறுப்பு என்ற விமர்சனத்துடன், தொடர்ந்து ஒதுக்கப் பட்டேன். 15 மாப்பிள்ளை வீட்டார் என்னை பார்த்து போயிருந்தாலும் அவர்களில், மூன்று வீட்டார்தான், மாப்பிள்ளை களை அழைத்து வந்திருந் தனர். அக அழகை விட, புற அழகைதான் உலகம் கால காலமாக மதித்து வருகிறது. தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார் என்னை ஒதுக்குகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட பணியிட இளைஞன், மீண்டும் என்னை அணுக ஆரம்பித்தான். அவனது பெற்றோர் என்னை வேண்டாம் என்று சொன்னாலும், அவன் ஒதுங்கப் போவதில்லை என உறுதி கூறினான். தொடர்ந்து என்னை காதலிக்க ஆரம்பித்தான். இந்த தடவை தந்தையின் அபிப்ராயத்துக்கு எதிராக நானும் அவனை காதலிக்க ஆரம்பித்தேன். ஒரு வருட காதலுக்கு பின், இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணமான இரண்டாவது நாளிலிருந்தே என் கணவர் பிரச்னை செய்ய ஆரம்பித்தார்; என் தந்தையின் கூற்று உண்மையானது. பல தடவை தற்கொலைக்கு முயற்சித்தேன். தற்கொலை முயற்சிகளுக்குப் பின், நான் ஏன் சாக வேண்டும்... நாம் இறந்தால் இவன் இன்னொருத்தியை மணந்து, அவளை படாத பாடு படுத்துவான் என உணர்ந்தேன் 

அவன் மூலம் எனக்கு, இரு மகன்கள் பிறந்தனர். மூத்தவனுக்கு வயது 15. பத்தாம் வகுப்பு படிக்கிறான்; இளையவனுக்கு வயது11. ஆறாம் வகுப்பு படிக்கிறான். மூத்தவனுக்கு தந்தையின் அட்டூழியங்கள் அனைத்தும் புரிகிறது. ஆனாலும், இரு மகன்களும் தந்தைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, என் கணவனுக்கு 
கொடுக்கின்றனர்.

என் கணவன் என்னென்ன அட்டூழியங்கள் செய்கிறான் என கேட்கிறீர்களா?

எங்களது திருமணத்தின் போது பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டார். இலக்கு சாதித்தால் சம்பளம்; இல்லை யென்றால் சம்பளம் கிடையாது என்ற நிபந்தனை விதித்த நிறுவனத்தில் போய் வேலைக்கு சேர்ந்தார். என்றைக்குமே என் கணவர் இலக்கு சாதித்ததில்லை. ஒரு பைசா கூட சம்பளம் என்று வீட்டுக்கு எடுத்து வந்ததில்லை. இதையே காரணம் காட்டி, வேலையை விட்டு நின்று, வீட்டு கணவன் ஆனார். தந்தை ஸ்தானத்துக்கும் லாயக்கில்லாத அவர் குடிக்கும், சிகரட்டுக்கும் அடிமையானார். தொண்டை வரை குடிப்பது, தொண்டை கிழிய கத்துவது அவரின் தினப்படி வேலையாயிற்று. தவிர, சொந்த அத்தை மகளுடன் தகாத உறவு வைத்திருந்தார். அந்த பெண் வேறொருவரை மணந்து கொண்ட போது, "சண்டாளி... துரோகம் செய்து விட்டாள்...' என புலம்பி தீர்த்தார்.

"ஏன் அட்டூழிங்கள் செய்கிறீர்கள்?' என்றால், சதா வேலை, வேலை என்று அலையும் கறுப்பி நீ... நான் விரும்பிய வகையில் எல்லாம் உனக்கு தாம்பத்யம் பண்ணத் தெரியவில்லை...' என, குறை கூறினார்.

நானும், என் இரு மகன்களும் அவருக்கு உண்மையாக நடக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்; ஆனால், அவர் எங்கள் மூவருக்கும் உண்மையாக நடப்பதில்லை. என் பிரச்னைகளால் வெகுவாய் பாதிக்கப்பட்ட தந்தை இறந்து போனார். என் கணவரின் துர் நடத்தைக்கு பயந்து, என் சகோதரி, சகோதர குடும்பங்கள் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவதில்லை. என் கணவரின் குடும்பத்தாருக்கும், என் கணவரை பிடிக்காது; அவர்களும் வருவதில்லை. அவர் மட்டும் மகாராஜா, மற்ற எல்லாரும் அவரது அடிமைகள் என்ற நினைப்பு என் கணவருக்கு.

என் கணவர், வாரம் தவறாமல் அன்புடன் அந்தரங்கம் வாசிப்பார். அவரிடம் நேரடியாக சொல்ல முடியாத விஷயத்தை, இப்பகுதி மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவே எனக்கு இன்னொரு பதவி உயர்வு கிடைத்துள்ளது. கணவரின் ஊதாரித் தனத்துக்கும், மகன்கள் படிப்புகளுக்கும் சம்பளத்தில் கழியும் வண்ணம் நிறைய கடன்கள் வாங்கி இருக்கிறேன். காரில் போகும் பணித் தகுதி பெற்றிருந்தாலும், பணிக்கு, டூ-வீலரில் தான் செல்கிறேன். என் கவலையில் என் தாயாரும் அடிக்கடி சுகவீனப்பட்டு போகிறார்.
என் கணவர் விஷயத்தில் நான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கூறுங் கள் அம்மா.

— இப்படிக்கு,

அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

உன்னுடைய தாழ்வு மனப்பான்மைதான் உன் கணவனின் பலம். என் தோழி, யானைக் கறுப்பாய், நூறு கிலோ குண்டாய் இருப்பார். அவர் கணவர் அல்வாவும், பூவும் வாங்கிச் செல்லாத நாளில்லை. மனைவி மீது, அவ்வளவு காதல். என் தோழியும், மிடுக்கு காட்டுவார்.

உன்னுடன் பணிபுரிந்த காலத்திலும், இருவரும் பெற்றோரின் சம்மதத்திற்காக ஒரு வருடம் காத்திருந்த காலத்திலும், உன் பலவீனப் புள்ளிகளை கணக்கெடுத்து விட்டான் உன் கணவன்.

கணவனுக்கு திருப்தியான தாம்பத்யம் தரத் தெரியாதவள் என்ற குற்றச்சாட்டு நரித்தனமானது. பத்தாவது படித்தவனுக்கு, எங்கு நல்ல வேலை கிடைக்கும்? எட்டு மணி நேரம் உடல் உழைப்பு செய்யும் பணிதான் கிடைக்கும்; அதற்கு, உன் கணவன் தயாரில்லை, அவனை தட்டிக் கேட்க கூடாது என்பதற்காகத்தான் இரு பக்க சொந்தங்களை கத்தரித்து விட்டுள்ளான். எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்த கணவனை, துணிச்சலாய் வெளியே விரட்டி விட்டாள். மகள்கள் படித்து நல்ல வேலைக்கு வந்து விட்டனர். சொந்த வீடும் கட்டிவிட்டாள் அந்தப் பெண்.

பொருளீட்டுதல் கணவனின் அடையாளம். பொருளாதார ரீதியாய் மனைவியை சந்தோஷமாய் வைத்திருப்பது கணவனின் கடமை என்கிறது இஸ்லாம்.

நீயும், உன் மகன்களும் அநியாயத்துக்கு பயந்து சாகிறீர்கள். "சம்பாதித்து விட்டு வீட்டுக்கு வா... அப்படி வந்தால்தான், "வீட்டுக்குள் இடம்...' எனக் கூறு. வீட்டிற்குள் குடிக்கவோ, பகலில் தூங்கவோ, நெட் மேயவோ அனுமதிக்காதே. வீட்டிற்குள் குடித்துவிட்டு வந்து கத்தினால், வம்பு செய்தால், "மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்...' எனக் கூறு. திருந்துவதற்கு, ஆறு மாதத்திலிருந்து, ஒரு வருடம் வரை அவகாசம் கொடு. திருந்தாவிட்டால் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோருவேன் என மிரட்டு.

உன் கணவனுக்கு, வீட்டுக்கு வெளியே, நூறு ரூபாய் கடன் தரக் கூட ஆளில்லை. நீ நிமிர்ந்து நிற்கும் வரைதான் உன் கணவன் வம்பு செய்வான். நீ சீறி சினந்தாய் என்றால், பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவான். 

பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரி! தாழ்வு மனப்பான்மை இரும்பு சங்கிலியை உடைத்தெறிந்து விட்டு, வசந்தசேனையின் அரசவையை துவம்சம் பண்ணு.

உன் மகன்கள் அவர்களது தந்தைக்கு கொடுத்து வந்த போலி மரியாதையை நிறுத்தச் சொல். உன் நிபந்தனைகளை மீறி, உன் கணவன் வீட்டுக்குள் வந்தால், காவல்துறை நடவடிக்கை எடு.

சகுந்தலா கோபிநாத்தின் யோசனை முதலுக்கே மோசம் செய்துவிடும் போலிருக்கிறதே என யோசிக்காதே. மோசடி செய்யப்பட்ட முதல், திரும்ப கிடைக்கும் மகளே!

உன்னுடைய, பத்து கேள்விக்கும் உருப்படியான பதில் உன் கணவனிடமிருந்து கிடைக்கும். எப்போது? நடு ரோட்டில் கொலை பட்டினியாய் உன் கணவன் நிற்கும் போது, நீ கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமல்ல, நீ கேட்காத கேள்விகளுக்கும் பதில் சொல்வான்.

உன் கணவனின் கொட்டம் அடங்கும் நாளில், உன் தந்தையின் ஆன்மா சாந்தி அடையும்.

உன்னுடைய முயற்சிகள், வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Monday, June 27, 2011

தம்பதியர் ஒற்றுமைக்கு வழி

ஒருசமயம் கலீபா உமர்(ரலி) அவர்களிடம், ஒருவர் வந்தார். அவர் தனது குடும்பச்சண்டை பற்றி கூறி விளக்கம் பெற வந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்கள் தங்கள் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து அந்த மனிதர் திரும்பிச்செல்ல முனைந்தபோது, அவரைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், வந்தவரிடம் விஷயத்தைக் கேட்டார்கள்.
அம்மனிதர் தம் குடும்பச்சண்டையை மனமின்றி சொன்னபோது, உமர்(ரலி) அவர்கள், ""என் இல்லத்தரசி, எனக்கும் நரகத்திற்கும் இடையில் தடையாக இருக்கிறாள். எனது ஆடைகளைத் துவைக்கும் வேலைக்காரியாக இருக்கிறாள். பிள்ளைகளை ஆதரிக்கும் தாயாகவும் இருக்கிறாள். எனக்குரிய பொருள்களை நான் வெளியே சென்றிருக்கும் போது பாதுகாப்பவளாகவும் இருக்கிறாள். எனவே, அவள் கோபப்படும் போது நான் அவளை மன்னித்து விடுகிறேன். 

பொறுமையும் அடைகிறேன் என்று கூறியதைக் கேட்ட அம்மனிதர், நானும் என் மனைவியை மன்னித்து விட்டேன்,'' என்று கூறிக்கொண்டே சென்றுவிட்டார்.

ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம்,ஒரு தோழர், ""அண்ணலாரே! எனது மனைவியின் நாவு நீளமாயிருக்கிறது. பக்கத்து வீட்டாருடன் அடிக்கடி சண்டை பிடிக்கிறாள்,'' என்றார்.
உடனே அவர்கள், அந்த தோழரின் உள்ளத்தைச் சோதிப்பதற்காக, ""அப்படியானால் உமது மனைவியை தலாக் சொல்லிவிடும்,'' என்றார்கள்.
உடனே அந்தத் தோழர்,""எனக்கு குழந்தைகளைப் பெற்றுத் தருகிறாள். எனது வாழ்க்கையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறாள்,'' என்று கூறியபோது, ""அப்படியானால், அவளுக்கு நல்ல புத்திமதிகளைக் கூறும். இந்த நற்செயலை விட்டுவிட்டு மனைவியை ஆடுமாடுகளை அடிப்பது போல் அடிக்காதீர்,'என்று அண்ணலார் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

Sunday, June 26, 2011

படுக்கையறையில் படிகள் பல ?

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக்கிவைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப்படுகிறது.
ஆகவே, `உறவு’ வெறும் கடமையாக ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? அதற்கு சில `படிகளை’ எடுத்துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி…

முதல் படி : வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள்
நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் வெளிச்சத்திலும், வெளிச்சத்திலேயே படுக்கையறை விளையாட்டை வைத்துக்கொள்ள விரும்புபவர் என்றால் இருட்டிலும் உறவை வைத்து பாருங்களேன். புதிய சூழல் ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். எப்போதும் துணையின் எதிர்பார்ப்புக்கு மட்டும் ஈடுகொடுப்பதற்கு பதிலாக தாமே முன்வந்து முயற்சியை மேற்கொள்வது துணையின் ஆர்வத்தைத் தூண்டும் என்கின்றனர். `செக்சியான ஒரு சிறு நடனம், கவர்ச்சியான உள்ளாடைகள் உங்களின் கணவரை ஈர்க்கக்கூடும்’ என்று பெண்களுக்குக் கூறுகிறார்கள்.
இரடாவது : படி தனித்தனியே சுற்றுலா
பிரிந்திருபது அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல, ஆசையையும் கூட்டும். எனவே முடிந்தால் தம்பதி கள் இருவரும் தனித்தனியே வெளி யிடங்களுக்குச் சில நாட்களுக்குச் சென்று வாருங்கள். இது சற்றுக் கடினம்தான். ஆனால் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால் இதற்கான ஏற் பாடுகளைச் செய்ய முடியும். ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள், இரு வரும்… பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். நாட்கணக்கில் பிரிந்தி ருக்க வாய்பில்லாதவர்கள், ஒருவரிடம் ஒருவர் விலகியிருக்கும்படி மணிக்கணக்கில் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், ஆனால் அதே நேரம் அதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் செக்சாலஜிஸ்ட்கள் ஆலோசனை கூறுகின்றனர். 

முன்றாவது படி : ஒரு புதிய இடத்தில்…
ஒரு புதிய இடத்தில் அல்லது அமைதியான உணவகத்தில் ஒருநாள் மாலையில் தன்னை வந்து சந்திக்குமாறு துணைக்குக் குறிப்பு எழுதி வைங்கள். அங்கே நீங்கள் ஈர்க்கும் விதமாக ஆடை அணிந்து சென்று, ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங் கள். உங்கள் துணைவர் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்போடு அங்கு வருவார். உங்களைக் கண்டு பிரமித்து போவார். ஒரு பொது இடத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் `த்ரில்’ அங்கே இருக்கும். நெருப்பும் பற்றிக் கொள்ளும். புதிய கோணங்கள், புதிய இடங்கள் எப்போதும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று குடும்ப நல மருத்துவர் தெரிவிக்கிறார்.

நான்காவது படி :`பிளாஷ்பேக்’கில் முழ்குவது…
நீங்கள் முதன்முதலாக `அது’ வைத்துக்கொண்ட இடம், அந்த சூழலை மறக்க முடியுமா? அப்போது அவர்(ள்) நடந்துகொண்ட விதம், துணையிடம் தெரிந்த பதற்றம், சிரிப்பை வர
வழைத்த சிறு குளறுபடிகள் எல்லாவற்றைம் மறக்க முடியாதல்லவா? அவை எல்லாவற் றைம் ஒருமுறை `பிளாஷ்பேக்’ ஓட்டி பாருங்கள். தேனிலவின்போது எடுத்த புகைபடங்கள், வீடியோவை பாருங்கள். அந்த நாட்களில் நீங்கள் பின்னணியில் ஒலிக்க விட்ட இசையை மீண்டும் ஒருமுறை ஒலிக்க விடுங்கள். மறுபடியும் அந்த ஆரம்பகால வேகம், தாகம் பிறக்கும் என்கிறார்கள்.

ஐந்தாவது படி : தடாலடியான செயல்பாடுகள்
விறுவிறுப்பு, `த்ரில்’லை ஏற்படுத்தும் செயல்கள் `டோபோமைனை’ விடுவிக்கின்றன என்கிறார், ரட்சர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹெலன் பிஷர். காதல் உணர்வுடன் தொடர்புடைய ரசாயனம் `டோபோமைன்.’ உறவு விருப்பத்துக்கான ஹார்மோனாகிய `டெஸ்ட்டோஸ்டிரோனின்’ அளவை `டோபோமைன்’ கூட்டுகிறது. வேகமான ஆற்றில் படகைச் செலுத்துவது, உயரமான இடத்திலிருந்து தக்க பாதுகாபுடன் தலைகீழாகக் குதிக்கும் `பங்கி ஜம்பிங்’ போன்றவை உங்களுக்கு உதவக்கூடும். சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடுவது `எடார்பினை’ விடுவித்து உங்களை ஓர் உச்சத்தில் வைக்கி றது, அப்போது `பங்கி ஜம்பிங்’ போன்றவை கூடத் தேவையில்லை என்கிறார் குடும்ப நல ஆலோசனை நிபுணர் வர்க்கா. நீங்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடலாம் அல்லது சிறு உடற்பயிற்சியை நாடலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார்.

ஆறாவது படி : விலகி… சீண்டி…
தம்பதிகளை பொறுத்தவரை படுக்கையறையில் சற்றே விலகியிருப்பது பொதுவாக பரிந்துரைக்கபடுவது இல்லை. இருவரில் ஒருவர் மட்டும் ஆசை கொண்டு அதற்கு அடுத்தவர் இசைந்து கொடுப்பது, `அவசரமான உறவுகள்’ வைத்துக்கொள்வதற்கு இரண்டு வார கால விடுப்பு அளியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் `அதை’ வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள். அதுவரை நீங்கள் உங்கள் துணையைச் சீண்டி வாருங்கள். விலகியிருக்கும் அந்த ஒரு வார காலம் `அவருக்கு’ நீண்ட காலமாகத் தெரியும். அதன் பின் படுக்கையில் இணைம்போது அற்புதமாகவும் இருக்கும். ஆனால் இதுகுறித்து இருவரும் பேசி சம்மதம் என்றால் மட்டுமே ஈடுபடுங்கள், `விடுப்பு’ காலம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாலியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

"இச் அது நச்சு" இனம் புரியாத ஈர்ப்பு "முத்தம்"

காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.


முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது. தாய் மகனுக்கு கொடுக்கும் முத்தம் பாசம் மட்டுமே கொண்டது. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது. இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. காமசூத்ராவை தந்த வாத்சாயனாரின் `டிப்ஸ்'களையே அந்த முத்தங்கள் மிஞ்சிவிட்டன. அதற்கு சிறந்த உதாரணம் உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்'. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம். பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.

அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, அந்த முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை.

அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம். காமசூத்ராவை தந்த வாத்சாயனார் கூட, முத்தத்தை பற்றி அழகாக வர்ணிக்கிறார். "உணர்ச்சிகளின் எல்லையைத் தாண்டிய அவள், சண்டை இட்டுக்கொள்வது போல் அவனது தலை முடியை பற்றி இழுத்து, முகத்தோடு முகம் வைத்து, அவனது கீழ் உதட்டில் முத்தமிடுகிறாள். சித்தப்பிரமை கொண்டவள் போல் அவனது உடம்பெங்கும் கடித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில் அவளது கண்கள் மூடியிருக்கும்...'' என்று, காதல் பாடம் சொல்லிக்கொப்டே போகிறார் வாத்சாயனார். பொதுவாக சொல்வது என்றால்... ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகம்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.

பழகியவர்களைப் பிரிந்து செல்ல மனம் வரவில்லை.

நான் ஒரு சீனியர் சிட்டிசன். பெற்றோருக்கு ஒரே புதல்வனாகப் பிறந்து, செல்லமாக, தனிமை வாழ்க்கையே வாழ்ந்தேன். பட்டப்படிப்பு முடிந்த வுடன் திருமணம்; அழகான, அன்பான மனைவி. அவள் வந்தபின் வாழ்வே வசந்தமானது; பொருளாதார நிலையும் பெரும் ஏற்றமடைந்தது. ஒரு ஆண், மூன்று பெண் என, குழந்தைகள் பிறந்து, தனி மரம் தோப்பானது. செல்வச் செழிப்புடனே பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி, அவரவர் குழந்தைகளுடன், என் பெற்றோர் சேர்ந்து வாழ்வே மிகவும் இன்பமயமாகச் சென்றது.
யார் கண் பட்டதோ, என் மகனின் ஊதாரித்தன மான செயல்களால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இருந்தாலும், எல்லாவற்றையும் என் தந்தை பொறுமையுடன் கையாண்டார். என் மணிவிழாவிற்குப் பின், பெரும் புயல் வீசி, நான் தற்போது திக்குத் தெரியாத காட்டில் சிக்கித் தவிக்கிறேன். என் மகனின் ஊதாரித்தனத்தால் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது. மிகவும் மென்மையான குணம் படைத்த என் தந்தை, மனம் வெதும்பி மரணமடைந்தார். அவரை இழந்த, 15வது நாளில், என் தாயையும் இழந்தேன். எல்லாவற்றிற் கும் சிகரம் வைத்தது போல் என் குடும்பத் தூணாக இருந்த, என் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்தாள். இரண்டு வருடங்களில் என் மேல் அக்கறை கொண்ட மூவரையும் இழந்து, நடை பிணமானேன்.

இதன் பின்னும், என் மகன் தன்னை மாற்றிக் கொள்ளாமல் நடந்ததால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது. அதை நான் கண்டித்ததால், என்னை எதிரியாக நினைத்து, மிகவும் தரக் குறைவாகப் பேசுவதுடன், சொத்து ஒன்றையே குறிக்கோளாக நினைத்து, என்னைத் தனிமைப்படுத்தி, எல்லாத் தொல்லைகளையும் கொடுக்கிறான். பெற்ற மகன் இருந்தும், எந்தத் துணையுமின்றி, முதுமையில் தனிமைக் கொடுமையை அனுபவித்து வருகிறேன்.
பெண் பிள்ளைகள் ஆதரவு காட்டினாலும், அவர்களுடன் சேர்ந்து இருக்க மனமில்லை. ஏதாவது இல்லத்தில் சேர்ந்து விடலாமென்றால், என் சொந்த ஊரை, மற்ற உறவினர்களை, பழகியவர்களைப் பிரிந்து செல்ல மனம் வரவில்லை. உதவிக்கு ஆட்களை வைத்துக் கொள்ள நினைத்தால், யாரும் கிடைக்கவில்லை. யாராவது, ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற விதவைகளையோ, விவாகரத்துப் பெற்றவர்களையோ துணைக்கு வைத்துக் கொள்ளலாமென்றால், மற்றவர்கள் என்ன நினைப்பரோ என்ற தயக்கம் ஏற்படுகிறது. இந்தச் சகோதரன், மீதி நாட்களை அமைதியாக கழிக்க, வழிகாட்டும்படி அன்புடன் வேண்டுகிறேன்

அன்புள்ள சகோதரருக்கு —

உங்களது அனாதரவான நிலையை உங்கள் கடிதம் மூலம் அறிந்தேன். எனினும், உங்களது கடிதத்தில் கீழ்கண்ட விவரங்கள் இல்லை.

1.உங்களின், உங்களின் பெற்றோர், மனைவி, மகன், மகள்கள் வயது விவரம்.

2.நீங்கள் என்ன பணி செய்தீர்கள், ஓய்வூதியம் கிடைக்கிறதா?

3.குடும்பத் தொழில் என்ன செய்தீர்கள்?

4.சொத்துகளை பிரித்துக் கொடுத்து விட்டீர்களா? பிரிந்து கொடுத்திருந்தால், உங்களுக்கென்று தனியாக பங்கு பிரித்திருக்கிறீர்களா? சொத்துகளை பாகப் பிரிவினை செய்தீர்களா, தானமாக எழுதிக் கொடுத்தீர் களா?

5.உங்கள் மகன் என்ன வகையான ஊதாரித்தனம் செய்தார்?

6.ஓய்வூதியம் தவிர, உங் களுக்கு வேறுவிதமான வருமானம் உள்ளனவா?

7.உங்களது ஊதாரி மகன் என்ன வகையான தொல்லைகள் கொடுக்கிறார்?

8.உங்களின் சொந்த ஊர் எது?

9.நீங்கள் இந்து மதத்தின் எந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்?

10.உங்களின் மகனின் ஊதாரித்தனமான நடத்தைக்கு, நீங்கள் ஏதாவது ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறீர்களா?

மேற்சொன்ன விவரங்களும் உங்கள் கடிதத்தில் இருந்திருந்தால், உங்களது கடிதத்திற்கு இன்னும் சிறப்பான ஆலோசனை வழங்கி இருப்பேன்.

உங்களது தந்தை காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறீர்கள். அப்போது, எல்லா பிரச்னை களையும் உங்களது தந்தையே கையாண்டிருக்கிறார். அந்த சமயத்தில், நீங்கள் குடும்ப நிர்வாக சிக்கல்களில் சிக்காமல், சுதந்திரமாக இருந்திருக்கிறீர்கள். உங் களது தந்தையின் மரணத்திற்கு பின், உங்கள் மகன் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துள்ளீர் கள். உங்களது மகனுக்கு, நாற்பது வயது இருக்கக் கூடும். இனி, பட்டு திருந்துவார் என நம்புகிறேன்.

இனி, உங்களின் பிரதான கேள்விக்கு வருவோம்...

ஆதரவற்ற விதவைகளையோ, விவாகரத்து பெற்றவர்களையோ அல்லது வேலையாள் ஒருவரையோ துணைக்கு வைத்துக் கொள்ள நினைக்கிறீர்கள். இந்த இடத்தில், துணைக்கு என்றால் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என நினைக்கிறீர்கள்.

வருடத்தை மூன்றாக பிரித்து, நான்கு மாதங்களுக்கு ஒரு மகள் வீட்டில் தங்கலாம் நீங்கள்; தங்குவதற்கு பணம் அளிக்கலாம்.

காவல் துறையின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்சி மூலம், பணிப் பெண்ணை அமர்த்திக் கொள்ளலாம்.

மறுமணம் செய்வது உங்களது திட்டமென்றால், உங்களது மகள்களிடம் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். உங்களது மறுமணம், உங்களது ஊதாரி மகனை மறை முகமாக பழிவாங்க என்றால், மறுமணம் வேண்டாம். விவாகரத்து பெற்றவர்களை விட, ஐம்பது வயது விதவைப் பெண்ணை தேர்ந் தெடுப்பது நல்லது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதவைப் பெண், உடல் ஆரோக்கியம் பெற்றவராக இருப்பது நல்லது.

உங்களது வயது, 63 என்றால், இன்னும், 25 ஆண்டுகள் உயிர் வாழ்வீர்கள் என வைத்துக் கொள்வோம். 25 து12 = 300 மாதங்கள். ஒரு மாதச் செலவு, 15,000 - 20, 000 ரூபாய் என கொள்வோம். முன்னூறு மாதங்களுக்கு, அறுபது லட்சம் ரூபாய் ஆகிறது. 

ஒன்று, நீங்கள் மறுமணம் செய்து கொள்ள உங்களிடம், அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தோ அல்லது மாதம், இருபதாயிரம் நிலையான வருமானமோ இருக்க வேண்டும். சரியாக பெண்ணை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், வரும் பெண் உங்களது மகனை விட, பத்து மடங்கு அதிகம் தொல்லைக் கொடுப்பார்; ஜாக்கிரதை. விதவைப் பெண்ணை உங்களது சொந்த ஊரில், சொந்தத்தில் தேடுங்கள். உங்களிடம் தாம்பத்யம் மேற்கொள்ளும் திடமிருந்தால், தாம்பத்யம் தேவைப்படும் பெண்ணை தேர்ந்தெடுங்கள்; தாம்பத்யம் பண்ணும் திறனை உடலாலும், மனதாலும் இழந்திருந்தீர்கள் என்றால் தாம்பத்யம் தேவைப்படாத பெண்ணை தேர்ந்தெடுங்கள். ஒரு விஷயம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்... உங்களை கருவறையில் சுமந்த தாய் போல, உங்களை கருவறைக்கு வெளியே சுமந்த மனைவி போல ஒரு பெண் கிடைக்கவே மாட்டாள்.

Wednesday, June 22, 2011

கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

கணவர் இறக்கும் போது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பெண் இத்தா இருப்பது கட்டாயமா? ஆம் என்றால் விளக்கம்தரவும். இத்தா இருப்பதன் அவசியம் என்ன? 

அக்பர் 

பதில் 

கர்ப்பிணிப் பெண்கள் அவர்கள் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். 

உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும்,மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள்பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான். 

அல்குர்ஆன் (65 : 4) 

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 

இந்தக் காலக் கெடுவிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள். இவ்வசனத்திலிருந்து (65:4)இதை அறியலாம். 

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்துவிட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது. 

கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம்செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம். 

பின்வரும் நபிமொழியிலிருந்தும் இச்சட்டத்தை அறியலாம். 
4910 حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ عِنْدَهُ فَقَالَ أَفْتِنِي فِي امْرَأَةٍ وَلَدَتْ بَعْدَ زَوْجِهَا بِأَرْبَعِينَ لَيْلَةً فَقَالَ ابْنُ عَبَّاسٍ آخِرُ الْأَجَلَيْنِ قُلْتُ أَنَا وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ قَالَ أَبُو هُرَيْرَةَ أَنَا مَعَ ابْنِ أَخِي يَعْنِي أَبَا سَلَمَةَ فَأَرْسَلَ ابْنُ عَبَّاسٍ غُلَامَهُ كُرَيْبًا إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا فَقَالَتْ قُتِلَ زَوْجُ سُبَيْعَةَ الْأَسْلَمِيَّةِ وَهِيَ حُبْلَى فَوَضَعَتْ بَعْدَ مَوْتِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً فَخُطِبَتْ فَأَنْكَحَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو السَّنَابِلِ فِيمَنْ خَطَبَهَا رواه البخاري 

அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூஹுரைரா (ரலி)அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், "தன் கணவன் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்பிரசவித்த ஒரு பெண்(ணின் "இத்தா' பிரசவத்தோடு முடிந்து விடுமா என்பது) பற்றி எனக்குத் தீர்ப்புவழங்கிடுங்கள்'' என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "(நான்கு மாதம் பத்து நாட்கள், நாற்பது நாட்கள் ஆகிய) இரு தவணைகளில் எது அதிகமோ அது தான் இத்தா (அதாவது நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா)'' என்று கூறினார்கள். 

உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தைபெற்றெடுக்கும் வரையிலாகும்'' (என்று குர்ஆன் 65:4ஆவது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன். 

அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், "நானும் என் சகோதரர் மகன் அபூசலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு)இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் பணியாளர் "குரைப்' என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதற்கு உம்மு சலமா (ரலி)அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: 

சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல் அஸ்லமிய்யா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவருடைய கணவர் (சஅத்பின் கவ்லா -ரலி) இறந்து விட்டார். அவர் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்னால், சுபைஆ குழந்தைபெற்றெடுத்தார். உடனே அவரைப் பெண் பேசப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத்திருமணம் முடித்து வைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ் ஸனாபில் (பின் பஅக்கக் -ரலி)அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு "இத்தா' பிரசவம் வரையில் தான்.) 

புகாரி (4909) கர்ப்பம் உறுதியாகி விட்டால் முதல் கணவரால் உருவான குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தான் அவள் இன்னொரு கணவனை மணக்க வேண்டும்

Tuesday, June 21, 2011

உடலைப் பெருக்க வைக்குமா செக்ஸ்?

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக்கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல்லை என்பது டாக்டர்களின் கருத்து.
உடல் குண்டாகும் என்பதைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்பளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து.

மன ரீதியான மாற்றத்திற்கும், உடல் ரீதியான மாற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும், உடல் பெருக்கத்திற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. மேலும் தினசரி அல்லது அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் மார்பகம் பெருக்கும் என்பதற்கோ, இடுப்பளவு அதிகரிக்கும் என்பதற்கோ ஆதாரம் எதுவும் இல்லை.

மேலும் ஆணின் விந்தனு, பெண்ணின் ரத்தத்துடன் கலக்கும் என்பதும் கூட ஒரு மாயைதான். அதிலும் உண்மை இல்லை. 
மேலும் ஒரு ஆணின் 2 முதல் 3 மில்லி அளவிலான விந்தனுவில் அதிகபட்சம் 15 கலோரி மட்டுமே இருக்கும். எனவே உடலுறவால் பெண்களுக்கு உடம்பு பெருத்து விடும் என்பது நிச்சயம் உண்மையில்லை என்கிறார்கள் டாக்டர்கள்.

அதேசமயம், திருமணத்திற்குப் பின்னர் உடல் பெருக்கம் ஏற்படுவது என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கும் நிகழ்வுதான். ஆனால் இதற்கும், செக்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை. ஒரு நிரந்தரமான உறவு அமைவது ஏற்படுத்தும் சந்தோஷத்தால் ஆணும் சரி, பெண்ணும் சரி தங்களது உடல் ரீதியான விஷயங்களில் கவனத்தை படிப்படியாக இழக்கிறார்கள். இதனால் அவர்கள் டயட், உடற்பயிற்சி போன்றவற்றில் ஆர்வம் குறைகிறது. இதனால்தான் அவர்களுக்கு எடை கூடுகிறதே தவிர செக்ஸ் உறவால் அல்ல என்பது டாக்டர்கள் தரும் விளக்கம்.

மேலும் பேச்சலர்களை விட திருமணமானவர்கள் அதிகம் சாப்பிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறதகு. இந்த அதிகரித்த உணவுப் பழக்கமும் கூட உடல் எடை கூடுவதற்கு ஒரு முக்கியக் காரணம்.

எனவே திருமணத்திற்குப் பின்னர் அதிக அளவில் செக்ஸ் வைத்தால் உடல் எடை கூடும் என்ற எண்ணத்தை கைவிடுங்ககள். மாறாக திருமணத்திற்குப் பிறகு உடல் வனப்பி்ல அதிக கவனத்தை செலுத்துங்கள். டயட்டை முறையாக கடைப்பிடிப்பது, உடற் பயிற்சிகளைத் தொடருவது என்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாறாக செக்ஸில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.

Saturday, June 11, 2011

எனக்கு மட்டும் ஏன் இப்படி???

என் வயது 47. என் மனைவி, என்னை விட, ஐந்து மாதம் பெரியவள். எங்களுக்கு, 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். திருமணமான வேகத்தில் பிறந்தவர்கள். உறவில் நாட்டமில்லாமல், என் கட்டாயத்தின் பேரில், எப்போதாவது ஒருமுறை, மாதத்தில் இரண்டு தடவை மட்டும் சம்மதிப்பாள்; அதுவும் விருப்பம் இல்லாமல். எப்போதுமே பிள்ளைகள் கூடவே படுத்துக் கொள்வாள். இரவில் நான் எழுப்பினாலும் கூட, அவளுக்கு விருப்பம் இல்லாத காரணத்தால், இரவென்றும் கூட பார்க்காமல், சப்தமாக பேசுவாள்.
 அவள் போடும் சப்தத்தில் பிள்ளைகள் விழித்துக் கொள்வர்; அவ்வளவு தான். இப்படியே, 14 வருடங்கள் பட்டும், படாமலும் வாழ்க்கை கழிந்து விட்டது.
மே 2008ல், அவளுக்கு மார்பில் ஒரு கட்டி வந்து விட்டது. பரிசோதித்த போது, அது, மார்பக புற்றுநோய் என்று சொல்லி விட்டனர். சிகிச்சையில் அவளது ஒருபுற மார்பகம் வெட்டி எடுக்கப்பட்டு விட்டது. உயிர் பிழைத்தால் போதும், பிள்ளைகளுக்கு தாய் என்று ஒருத்தியாய் வாழ்ந்தால் போதும் என்று, நான் எவ்வளவோ பணம் செலவழித்து, காப்பாற்றி வைத்திருக்கிறேன்.
அவளும் மாத்திரை, மருந்து என சாப்பிட்டு, எப்போதும் போல வேலைக்கு செல்வதும், பிள்ளைகளை கவனிப்பதுமாக இருக்கிறாளே தவிர, கணவனின் கஷ்டம் பற்றி இதுவரை கவலைப்படவில்லை. அவளைத் தொட்டே, பல வருடங்கள் ஆகிறது.
பகலெல்லாம் பள்ளிக்கூடம், பிள்ளைகள், மாலை நேர டியூசன் இப்படியே கழிந்தாலும், இரவில் நானுறங்கி நாளாகிறது மேடம். எத்தனையோ பேருக்கு கவுன்சிலிங் செய்யும் நான் படும் அவஸ்தையை சொல்ல வார்த்தை இல்லை.
என் மனைவிக்கு கேன்சர் என்பது என்னைப் பெற்ற தாய்க்கோ, என் உடன்பிறப்புகளுக்கோ நான் இதுவரை சொல்லவில்லை; சொல்லியிருந்தால், அவர்களாவது எனக்கு ஆறுதல் கூறியிருப்பர். என் மனைவி வழி உறவினர்களுக்குத் தெரியும். ஆனால், நன்கு படித்து டாக்டர், இன்ஜினியர்களாக இருக்கும் அவர்கள், இதுவரை ஒரு பேச்சுக்குக் கூட எனக்கு ஆறுதலோ, தேறுதலோ சொன்னதில்லை.
ஐந்து வருடமாய் நான் தனிமையில்தான் படுத்துக் கொள்கிறேன். நடை பிணமாய் இருந்து வருகிறேன். பள்ளிக் கூடத்திலும் கூட, மாணவர்களைத் தவிர யாரிடமும் சரியாக பேச மாட்டேன்; சுபாவம் அப்படி. என்னைப் பிடிக்காத தலைமையாசிரியர், என்னை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து விட்டார்; அதனால், மன உளைச்சல் வேறு. இதுவரை நான் நடத்திய பாடத்தில் ஒருவரும் தோல்வி அடைந்ததில்லை. அப்படியிருக்க, எனக்கேன் இந்த தண்டனை?
கிராமத்தில், ஐந்து உடன் பிறப்புகளுடன் பிறந்து வளர்ந்தவன் நான். கல்லூரிப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி எல்லாம் சென்னையில் தான். என் துரதிருஷ்டம் வேறு ஒரு மாநிலத்தில் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். நான் படித்த படிப்புக்கு என்னைத் தேடி வந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, இந்த வேலையில் வந்து சிக்கலில் மாட்டிக் கொண்டேனோ என நினைக்கத் தோன்றுகிறது.
இப்பெண்ணை மட்டும் மணக்காமல், வேறொரு பெண்ணை பெற்றோர் விருப்பப்படி மணந்திருந்தால், என் வாழ்க்கை நான் எதிர்பார்த்தது போல அமைந்திருக்குமோ என எண்ணுகிறேன். காரணம், என் வழி உறவினர்கள் யாரும் அவ்வளவாய் படிக்காதவர்கள். அதனால், அவர்கள் என் வீட்டுக்கு வந்தால், என் மனைவி அவர்களை சரியாக கவனிப்பதோ அல்லது பேசுவதோ கூட கிடையாது. அதனால், அவர்களும் வந்த சுவடு தெரியாமல் கிளம்பி விடுவர்; பிள்ளைகளும் அவர்களிடம் பேச மாட்டார்கள்.
என் மகள் என்னிடம் மிகவும் பாசமாக இருப்பாள். அவளே என்னிடம் பேசி, இரண்டு வருடமாகிறது. பிளஸ் டூ படிக்கும் என் மகனும், என் பேச்சைக் கேட்பதில்லை. என்ன செய்வது? மாற்று வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்; நான் கொள்கைவாதி. எந்த கெட்டப் பழக்கங்களுக்கும் அடிமையாகாதவன். எனக்கென்று ஒரு நற்பெயர் உள்ளது; அதை சிதைக்க விரும்பவில்லை. இருந்தும், உலக ஆசைகள் அத்தனையையும் துய்க்க வேண்டும் என என் மனமும், உடலும் விரும்புகிறது. வாழ்க்கை என்பது ஒருமுறை தானே?
எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ஏதாவதொன்றை படிப்பது, பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை திருத்துவது, என, என்னை ஈடுபடுத்தியும், என்னால், என் வீட்டைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. யோசித்து, யோசித்து தூக்கமில்லாது போனதாலோ என்னவோ, எனக்கு வயதான தோற்றம் வந்துவிட்டதாக என் நண்பர்கள் சொல்கின்றனர்.
என் வயது, 47 தான் என்றால், யாரும் நம்புவதில்லை; அது, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. தற்கொலை முடிவுக்கு வரும் போதெல்லாம், என் வயதான அம்மாவும், என் இரண்டு பிள்ளைகளும்தான் நினைவுக்கு வருகின்றனர். என்ன செய்வது?
மாடி வீட்டு ஏழையாய் வாழ்ந்து வருகிறேன். கடவுள் மீதும் கோபம். அதனால், கோவிலுக்கு செல்வதும், வேதப் புத்தகம் வாசிப்பதும் நின்று, மூன்று வருடமாகின்றன. "என்னைப் போல உத்தமமாய் வாழ்ந்தவன் அல்லது வாழ்கிறவன் யார்? எனக்கேன் இந்த சோதனை?' என, கடவுளையே கேள்வி கேட்கிறேன். கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால், என்னை இப்படி ஏங்க வைப்பாரா? என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற லட்சியவாதியை, வேறொரு இடத்துக்கு மாற்றம் செய்த தலைமை ஆசிரியரை தண்டிக்காமல் இருப்பாரா?
இன்னும் சொல்ல மறந்த கதை ஏராளம் மேடம்... எனக்கு எத்தகைய கவுன்சிலிங் கொடுத்தால் நல்லது என உங்களுக்கு தோன்றுகிறதோ அதை தயவுடன் தாருங்கள்.
— இப்படிக்கு,
பெயர் சொல்ல விரும்பாத உங்கள் சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு —
உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் சம வயது. உங்களிருவருக்கும், 17 வயதில் மகனும், 15 வயதில் மகளும் இருக்கின்றனர். நீங்கள், பிளஸ் 2 ஆசிரியர். உங்களது மனைவியின் பணி பற்றி, கடிதத்தில் தகவல் இல்லை; இருந்தாலும், அவரும் ஒரு ஆசிரியை என யூகிக்கிறேன். உங்களின் மனைவி, "செக்ஸ்'க்கு ஒத்துழைக்க மறுக்கிறார். மகள் உங்களுடன் பேசி, இரண்டு வருடங்கள் ஆகின்றன. மகனோ உங்கள் பேச்சை கேட்பதில்லை. நேர்மையான, ஒழுக்கமான, பிளஸ் 2 ஆசிரியருக்கு, "செக்ஸ்' கிடைக்க வில்லையெனில், இந்த ஜெகத்தை அழித்து விடுவோம் என ஆர்ப்பரிக்கிறீர்கள்.
தனக்கு விருப்பமில்லா விட்டாலும், மாதத்திற்கு இரு தடவை, செக்ஸ் வைத்துக் கொள்ள உங்கள் மனைவி அனுமதிப்பது நார்மலான விஷயம். திருமணமாகி, 18 வருடங்களான தம்பதியர், 
இந்த கோட்டாவில் தான் தாம்பத்யம் மேற்கொள்கின்றனர்.
குழந்தைகள் வளர்ப்பில் முழு ஈடுபாடு உள்ள தாய்மார்கள், உங்கள் மனைவி மாதிரிதான் இருப்பர். சில கணவர்களின் தாம்பத்யம், உணர்வுகளை தூண்டிவிட்டு, முன்னதாகவே அடங்கி விடும். அது எட்டு இட்லி சாப்பிடுவோருக்கு, ஒரு விள்ளல் இட்லி மட்டும் ஊட்டி விடுவது போன்றது. விள்ளல் இட்லி சாப்பிட்டுவிட்டு, அசுர பசியுடன் அல்லல் படுவதற்கு பதில், முழு உண்ணாவிரதமே இருந்து விடலாம் என்று இருந்து விடுகின்றனர் சில பெண்கள்.
மார்பக புற்றுநோயால் ஒற்றை மார்பகத்தை இழந்து, உயிர் தப்பி வந்திருக்கிறார் உங்கள் மனைவி. அவருக்கு செலவு செய்ததை, "பணம் செலவழித்து காப்பாற்றி வைத்திருக்கிறேன்...' என்கிறீர்கள். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பெண், தன்னுடைய நோயை பற்றி வருந்தாமல், உங்களின், "செக்ஸ்' கஷ்டம் பற்றி கவலைப்பட வேண்டும் என்றிருக்கிறீர்கள்.
மனைவிக்கு புற்றுநோய் என்பதை, உங்கள் வீட்டாருக்கு தெரியப்படுத்தவில்லை. தெரியப்படுத்தி இருந்தால், உங்களுக்கு வந்து ஆறுதல் சொல்லியிருப்பர் என்று கூறுகிறீர்கள். ஆறுதல், உயிர்கொல்லி நோயிலிருந்து மீண்ட உங்கள் மனைவிக்கா, அகால நேரத்திலும் காமப் பித்து பிடித்து அலையும் உங்களுக்கா? மனதை தொட்டு சொல்லுங்கள், யாருக்கு தேவை?
மனைவியின் புற்றுநோய், மனைவி வீட்டாருக்கு தெரியும். அவர்களும் உங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்றிருக்கிறீர்கள். இந்த நினைப்பு, சுயநலத்தின் உச்சக்கட்டம்.
உங்கள் மனைவியை மட்டும் மணக்காமல், வேறொரு படிப்பறிவு குறைந்த பெண்ணை மணந்திருந்தால், வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்கிறீர்கள். யார் யாருக்கு, யார் யாரை ஜோடி சேர்க்க வேண்டும் என்பதை கணித்துதான் இறைவன் திருமண முடிச்சுகளை போடுகிறான். நமக்கு வாய்த்திருக்கும் மனைவி, நமக்கு மிக, மிக பொருத்தமானவள் என்ற மனதிருப்தி தேவை.
நீங்கள் சிறந்த ஆசிரியர், கொள்கைவாதி, கெட்ட பழக்க, வழக்கங்கள் இல்லாதவர், உத்தமர்; ஒத்துக் கொள்கிறேன். இந்த மாதிரியான குணாதிசயங்கள் கொண்டவர்கள், ஒரு நாளைக்கு நான்கு தடவை, "செக்ஸ்' வழக்கப்பட வேண்டும் என்ற விதியா உள்ளது?
உங்கள் முசுடுத் தன்மை தான், உங்களிடமிருந்து மகன், மகளையும், பள்ளி மக்களையும் பிரிக்கிறது. கெட்ட பழக்க, வழக்கங்கள் இல்லாதவர் நல்லவர்; கெட்ட பழக்க, வழக்கம் உள்ளவர் கெட்டவர் என்பது அறிவீனம்.
மொத்தத்தில் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்ன தெரியுமா சகோதரரே...
சுயநலத்தை விட்டு, மனைவியுடன் மனம் விட்டு பேசுங்கள். தொடுதல், சீண்டுதல், முத்தமிடுதல் பழைய நிகழ்வுகளை அசை போடுதல் கூட, "செக்ஸ்'தான். இருவரும் ஹோமியோபதி மருத்துவரை அணுகி, மருந்துவ ஆலோசனை பெறுங்கள்.
சதா புலம்பிக் கொண்டிருந்தால், 47 வயது முகம், 67 வயது முகமாகி விடும். எது வந்தாலும், எது போனாலும் சந்தோஷமாய் இருந்து, 27 வயது முகம் பெறுங்கள். கடவுள் ஒன்றை கொடுப்பதும், ஒன்றை தட்டி பறிப்பதும், மனித ஈசனுக்கு புரியாத திருவிளையாடல்கள்.
மகன், மகளுடன் செய்தி தொடர்பை, தந்தைக்குரிய பொறுப்புடன் வடிவமையுங்கள். செக்ஸ் தொந்தரவு செய்யாது, மனைவி, மக்களுடன் சேர்ந்து படுங்கள்.
ஆசிரியர் பணி இறுக்கங்களை, வீட்டுக்கு கொண்டு வந்து கொட்டாதீர்கள் சகோதரரே...
என் ஆலோசனை உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள். என் ஆலோசனையின் நோக்கம், அடுத்த தலைமுறைக்கு நிவாரணம் தேடுவதே!

Friday, June 10, 2011

கன்னிப்பெண் காணும் கனவு

அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.




இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

ஆறுதலாய் பேசுங்கள்

பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.

நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.
இதய சிம்மாசனம்

திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம்.

தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டாக விளையாடுங்கள்

பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது.

நேரடியாக விசயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை.

Thursday, June 9, 2011

மனைவியை காதலியுங்கள்

Couple
பொன், பொருளைவிட பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது மதிப்பும், மரியாதையையும் தான். மனைவி என்பவள் அடிமையல்ல என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் தங்களுக்கு சேவை செய்ய மட்டுமே படைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணத்தை ஆண்களின் மனதில் இருந்து அறவே நீக்க வேண்டும். அத்தகைய ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.

சாமர்த்தியசாலியா நீங்கள்

அதிகம் சம்பாதிப்பது என்பது ஒருபக்கம் இருந்தாலும் சாமர்தியசாலியாய் நடந்து கொள்பவர்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர். பெண்ணின் உடலைமைப்பினை பற்றி குறை கூறுவதை விடுத்து, உள்ளதை உள்ளபடியே நேசிக்கும் ஆண்களைத் தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


பெருந்தன்மை தேவை:

ஆண்களைப் போல பெண்களுக்கும் உடலாலும், மனதாலும் சமபலம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு பெண்களை, பெண்களாய் நடத்தும் பெருந்தன்மை கொண்ட ஆண்களையே பெண்கள் நேசிக்கின்றனர். உரிமையை பறிக்காமல், சுதந்திர உணர்வோடு நடத்த வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு.

கை நீட்டும் ஆண்கள்:

கணவராக வருபவர் தங்களின் உணர்வுகளை மதித்து அக்கறையோடு நடத்தவேண்டும் என பல பெண்கள் விரும்புகின்றனர். பெண் மீது நம்பகத்தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, உடல் ரீதியான இன்பத்திற்காக நினைத்த நேரத்திற்கு வற்புறுத்தி அழைக்கக்கூடாது.

தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண் வர்க்கத்தினரை பெண்கள் அறவே வெறுக்கிறார்கள். அத்துடன் தேவைக்காக நெருங்கி வந்து, வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள்.

மனதை ஆளும் ராஜா:

குடும்ப வாழ்க்கையைப் பற்றி தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் உள்ள புத்திசாலி ஆண்களை பெண்கள் மனதில் வைத்து கொண்டாடுவார்கள். அவர்கள் மீது அளவில்லா நேசம் காட்டுவார்கள்.

காதலிக்கும் போது கலகலப்பாக இருக்கும் ஆண்களில் பலர் திருமணம் முடிந்த உடன் சிரிப்பை மறந்து விடுகின்றனர். இதில்தான் பெண்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. எந்த குணத்தை விரும்பி காதலித்து திருமணம் செய்தார்களோ, அது மறைந்து போன உடன் வாழ்க்கையில் பிடிமானம் விட்டுப்போகிறது. எனவே சிடு சிடு என்று இல்லாமல் கலகலப்பாக இருங்கள்.அத்தகையவர்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களைத்யும் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மனைவியை எப்போதும் காதலியாகவே நினைக்கும் ஆண்களே அதிகம் விரும்பப்படுகின்றனர். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்துகொள்வானோ அதே போன்று திருமணத்திற்குப் பின்னரும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

நீங்கள் ஒரு காதலனாய் மாறி அவளிடம் ஒரு பூவை கொடுத்தால் அவளும் கூடை கூடையாய் பாசம் என்னும் பூக்களை உங்கள் மீது கொட்டத் தயாராக இருப்பாள். ஆகவே உங்கள் மனைவியை மதித்து காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

Thursday, May 19, 2011

எனக்கு மூன்று திருமணங்கள்

என் வயது 57. எனக்கு, மூன்று திருமணங்கள். முதல் மனைவி இறந்து விட்டாள்; மறுமணம் புரிந்து கொண்டேன்; அவளும் இறந்து விட்டாள். மீண்டும், பலரின் வற்புறுத்தலால் மணம் புரிந்து கொண்டேன். மூன்றாவது மனைவி, ஏற்கனவே மணமாகி, கணவனை பிரிந்து, அதாவது, ஊர் பஞ்சாயத்து மூலம் விவாகரத்து பெற்று, வாழ்ந்து வந்தவர். அவருக்கு, 15 வயதில் மணமாகி, மூன்று மாதத்திற்கு பின், விவாகரத்து பெற்றுக் கொண்டதாக கூறினர்.

எனக்கும், அவருக்கும் கிட்டதட்ட, இருபது வருட வயது வித்தியாசம். என்னிடம் சேர்ந்த போது, "நீ ஆயிரம் பேரிடம் பழகியிருந்தாலும், இனி, என்னிடம் மட்டும் நன்றாக அனுசரித்து வாழ்...' என்று கூறி, மனைவியாக ஏற்று, அதிலிருந்து வழுவாமல், என் கடமைகளில் நியாயமாக நடந்து வந்தேன். எங்களுக்கு ஒரு பெண்ணும், ஒரு ஆணும் பிறந்து, பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்; இது, இன்றைய நிலை.

இதனிடையில், என் மூன்றாவது மனைவிக்கு என்ன நினைப்பு வந்ததோ, ஒரு காதலனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் உல்லாசமாக இருந்ததாக, 2002ல், என்னிடமே கூறினாள். ஏதோ தவறாக நடந்து கொண்டாள் என நினைத்து, "இனி, அவ்வாறு தவறான வழியில் செல்லாதே...' என எச்சரித்து, தாம்பத்யத்துக்காகத்தான் இவ்வாறு செய்தாளோ என்று நினைத்து, இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்து வந்தேன்.
பின், 2007லிருந்து, மீண்டும், பக்கத்து நிலத்துக்காரருடன் என் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக, அந்த ஆளின் மனைவியே என்னிடம் கூறினார். அந்த ஆள், எனக்கு ஊர் முறைப்படி மருமகன் ஆகிறான்; அதனால், தவறாக சொல்கின்றனர் என்று நினைத்து, அவர்கள் நடவடிக்கையை கவனிக்க ஆரம்பித்தேன்.

ஜனவரி 2010ல், ஒருநாள், அந்த ஆள் ஓட்டலிலிருந்து வாங்கி வந்த உணவு பொட்டலத்தை, வேறு ஒருவன் மூலம் என் மனைவிக்கு கொடுத்தனுப்பி, அதை, என் மனைவி வாங்கி உண்பது தெரிந்த பின், அவன் மனைவி சொன்னது உண்மை என, நம்ப வேண்டியதாகி விட்டது.

ஊருக்கே இவர்களின் நடத்தை தெரிந்துள்ளது. அதனால், பலமுறை சண்டை வந்து, சில தடவை அடித்து விட்டேன். இருமுறை, என் மனைவி அவளின் தாய் வீட்டுக்கும் சென்று விட்டாள்.

அவ்வாறு சென்ற ஒரு தடவை, என் மீது வன்முறை தடுப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து, என்னை அழைத்து எச்சரித்து, என்னிடம் நல்லபடி வைத்து வாழ்வதாக, எழுதி வாங்கிக் கொண்டனர். தற்போது, என் வீட்டில் இருந்து, என்னை சிறிதும் மதிக்காமல், அவள் இஷ்டத்திற்கே நடந்து கொள்கிறாள்.
நான் ஒரு தடவை, 12 நாள் வீட்டை விட்டு போய் விட்டேன்; பிறகு வந்து விட்டேன். தற்கொலை செய்து கொள்ளத்தான் போனேன்; என்னவோ திரும்பி விட்டேன். சில மாதங்களாகவே நாங்கள் பேசிக் கொள்வதில்லை. எங்களுக்கு பிறந்த மகள், பெரியவளான போது, என்னை அழைக்காமல், என் அபிப்பிராயத்தை கூட கேட்காமல், என் உறவினர்கள் யாருமே இல்லாமல், அவளுடைய தாய் வீட்டார், ஐந்தாறு பேரை மட்டும் வைத்து, செய்து முடித்தாள்; அன்று முதல், நான் வீட்டில் சாப்பிடுவதில்லை.

நான் ஓய்வு பெற்ற (வி.ஆர்.எஸ்.,) மின்வாரிய அலுவலர்; பென்ஷன் வாங்குகிறேன். எனக்கு, நான்கு பெண், இரண்டு ஆண் குழந்தைகள். மூன்று பெண், ஒரு ஆணுக்கு திருமணமாகி விட்டது; இவளின் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இருந்த நிலத்தை இவளின் மகனுக்கே சுத்த கிரயம் செய்து கொடுத்து விட்டேன். இந்நிலையில், நான் என்ன செய்ய வேண்டுமென ஆலோசனை கூறவும்.

உங்கள் இரு மனைவிகள் எதனால் இறந்தனர், இறக்கும் போது அவர்களின் வயதென்ன, அவர்களுடனான உங்கள் தாம்பத்யம் எப்படி இருந்தது, இறந்த இரு மனைவிகளும் அக்கா, தங்கைகளா என்ற தகவல்கள், உங்கள் கடிதத்தில் இல்லை.

உங்களுக்கு குடி, வெற்றிலை, பாக்கு, புகையிலை, சீவல் போடும் பழக்கம் உண்டா என்பது தெரியவில்லை. மின்வாரியப் பணியிலிருந்து எதற்காக விருப்ப ஓய்வு பெற்றீர்கள், பணியிடத்தில் எதுவும் பிரச்னையா என்பதும் புரியவில்லை.

உங்கள் மூன்றாவது மனைவி தன்முனைப்புள்ளவர், பிடிவாதக்காரர், பிரச்னைகளுக்கு உரிய தீர்வு வர காத்திராதவர் என யூகிக்கிறேன்.
உங்கள் மூன்றாவது திருமணமே, அவசியமில்லாதது. கல்யாணம் செய்துதான் ஆக வேண்டும் என்றால், 35 - 40 வயது விதவைப் பெண்ணை நீங்கள் மணந்திருக்க வேண்டும்.

உங்கள் முதலிரவில், "நீ ஆயிரம் பேரிடம் பழகியிருந்தாலும், இனி, என்னிடம் மட்டும் பழகி, நன்கு அனுசரித்து வாழ்...' என்று கூறியிக்கிறீர்கள். இது, பத்தினிகளை சீண்டும் வார்த்தை; மறைமுகமாக உசுப்பிவிடும் வார்த்தை.

இந்த வார்த்தைகளில் இருந்து, பேச்சில் நீங்கள் கண்ணியம் காக்காதவர், தணிக்கை பண்ணாமல், வார்த்தைகளை அள்ளி கொட்டுபவர் என்பது புலனாகிறது. திருமணமான முதல் ஏழு வருடங்கள், ஒழுக்கமாக இருந்த உங்கள் மனைவி, எதனால் தடம் புரண்டார் என்பதை பார்ப்போம்...

1. உங்களிரு மனைவிகளின் மரணங்களில் ஒளிந்திருக்கும் மர்மம் பற்றி ஊரார், உங்கள் உறவினர், உங்கள் மூன்றாவது மனைவியிடம் கோள் மூட்டியிருக்கக் கூடும். அதனால், உங்களது மனைவிக்கு, உங்கள் மீதிருந்த பயமும், மரியாதையும் காணாமல் போயிருக்கும்.

2. திருமணமான ஏழு வருடங்களில், உங்கள் பலம், பலவீனத்தை உங்கள் மனைவி முழுமையாக கணித்திருப்பார். தான் தவறு செய்தால், அவரால் எதுவும் செய்ய முடியாது என்ற அசட்டுத் துணிச்சல் அவருக்கு வந்திருக்கும். திருமண பந்தம் மீறிய தன் முதல் தொடர்பை, 2002ல் உங்களிடம் சொல்லி, உங்களை ஆழம் பார்த்திருக்கிறார். நீங்களோ, நெருக்கமான தாம்பத்யத்தால் அவளை திருப்திபடுத்த பார்த்தீர்கள்; அது, தவறான அணுகுமுறை. உங்களது செயல்பாடுகள் பற்றி சரியான கணிப்பு உங்கள் மனைவியிடம்தான் இருக்கும். அறுபது வயது ஆண், இருபது வயது பெண்ணை தாம்பத்யத்தால் திருப்திபடுத்தினால் போதுமா? தோற்ற பொருத்தம், இதர, இதர தேவைப்படும். சமுதாய விமர்சனம் பாசிட்டிவ்வாக தேவை.

3. உங்கள் மனைவிக்கு, யாரோ ஒரு ஆண், விபரமாக செயல்பட சொல்லித் தருகிறார். அதனால்தான், உங்கள் மனைவி, உங்கள் மீது வன்முறை தடுப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து, கண்டிக்க வைத்திருக்கிறாள்.

4.என்ன தவறு செய்தாலும், அவள், உங்களுக்கு தேவை என்ற நிலையில் இருக்கிறீர்கள்; அதனால்தான், உங்கள் செயல்பாடுகள் ஆக்கரீதியாய் இல்லை. ஒரு தடவை தற்கொலை செய்ய, 12 நாள் வீட்டை விட்டு சென்று விட்டீர்கள். இருந்த நிலத்தை மூன்றாவது மனைவியின் மகனுக்கே சுத்த கிரயம் செய்து கொடுத்து விட்டீர்கள். மனைவி சமைத்த சமையலை சாப்பிடுவதில்லை. சில, பல மாதங்களாக நீங்கள் மனைவியுடன் பேசுவதில்லை. நீங்கள் இல்லாமல் மகளின் பூப்புனித நீராட்டு விழாவை, தன் தாய் வீட்டிலேயே நடத்தி முடித்து விட்டாள் உங்கள் மனைவி.

5. உங்களுக்கும், உங்களிரு மனைவிகள் மூலம் பெற்ற குழந்தைகளுக்கும், சரியான தகவல் தொடர்பு இருக்காது என, நம்புகிறேன்.

6. ஊர் பஞ்சாயத்து மூலம், உங்களின் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்து விடுங்கள். பென்ஷன் பணத்தை வைத்து, மீதி ஆயுளை தன்னந்தனியனாக கழியுங்கள்.

7. பொருந்தாத திருமணங்கள் நிரந்தர தலைவலியை பரிசளிக்கும் என்பது இக்கேள்வி - பதில் மூலம் அறியப்படும் நீதி.

Tuesday, April 19, 2011

செக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா?


மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப் பற்றி உலகம் முழுவதும் இடைவெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். புதிது, புதிதாய் கண்டுபிடித்து வெளியிடுவதற்கென்றே, ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்வெளியீடு வந்து கொண்டிருக்கிறது. உறவு நேரத்தில் ஜோடிகள் என்னென்ன செய்வார்கள் என கூடுதலாய் பல அந்தரங்கமேட்டர்கள் பற்றி விசாரித்து லேட்டஸ்ட் இதழில் போட்டிருக்கிறார்கள்.


விஷயம்துவக்கும் முன், சலிக்கிற (சலிக்குமா!?) வரை முத்தம் கொடுப்பவர்கள் ஆண்களாம். அப்போது வெட்கப்பட்டு ச்ச்ச்சீ.. ப்போங்க!என ஒதுங்குகிற பெண்கள்.. எல்லாம் முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில் முத்த ஆயுதத்தால் சரமாரியாக தாக்குகின்றனர். உறவு முடிந்த பிறகு, ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். சைலன்ட் பேச்சு, முத்தம், வாஞ்சையாய் தடவிக் கொடுத்தல் ஆகியவையும் இந்த நேரத்தில் நடக்கிறதாம்.
ஆண்களுக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கிறது. விஷயம்முடிந்ததும் நிறைய பேர் சிகரெட் பத்த வைக்கிறார்களாம். இன்னும் சிலர் தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது அல்லது கம்மென்று படுத்துத் தூங்குவது என்று சுருண்டு விடுகிறார்களாம்.

கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி....


கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

*
பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.

*
சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

*
குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

*
கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.


*
பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.

*
உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.

*
கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.

*
மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

*
பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

*
கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

*
பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

பெட்ரூம் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால் அதோகதிதான்.


லண்டன் :திருமண வாழ்வில், செக்ஸ் வாழ்க்கையை திருப்தியாக அனுபவிக்க முடியவில்லை என இங்கிலாந்துவாசிகள் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு செக்ஸ் மீது ஆர்வம் குறைந்து விடுவதாகவும், அதேசமயம் வெளி உறவால் உற்சாகம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

டேட்டிங் சேவையில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்தின் லவ்விங் லிங்க்ஸ் இணையதளம், திருமணமான 3000 ஆண், பெண்களிடம் திருமண வாழ்வு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்:

திருமணமான புதுசில் செக்சில் அதிக ஆர்வம் இருந்ததாகவும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆர்வம் படிப்படியாக குறைந்து விட்டதாகவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். ஆரம்ப காலத்தில் வாரத்தில் 4 நாட்களாக இருந்த செக்ஸ் ஆர்வம் 1 நாளாக குறைந்து விட்டது தெரியவந்தது. திருமண வாழ்க்கை செக்ஸ் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக 10ல் 6 பேர் தெரிவித்தனர்
.

தங்களது வாழ்க்கை துணையை காதலராக நினைக்க முடியவில்லை என்றும் நண்பராகவே நினைக்கத் தோன்றுகிறது என்றும் ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் தெரிவித்தனர். கணவனோ மனைவியோ எல்லா விஷயத்திலும் துணையாகவும், புத்திசாலியாகவும், இரக்க குணத்துடனும், ஜாலியாக பழகுபவராகவும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். அதேசமயம், எல்லா விஷயத்திலும் சமத்தாக இருந்துவிட்டு பெட்ரூம் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால் அதோகதிதான். செக்ஸ் தேவை நிறைவேறாத பட்சத்தில் வெளித் தொடர்புகளைத் தேடி அலைய வேண்டியதுதான் என்கின்றனர்.

அதே இடம், அதே பெட், அதே நேரம் என செக்ஸ் வாழ்க்கை போரடிப்பதாகவும் வெளித் தொடர்பில் மகிழ்ச்சி கிடைப்பதாகவும் 10ல் 8 பேர் தெரிவித்துள்ளனர். பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாக தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாக 3ல் 2 பேர் கூறியுள்ளனர்.