Thursday, June 23, 2011

காந்தமாய் மாறிய சிறுவனின் உடல்; இது நிஜமா??


காந்தத்துக்கு உலோகங்களை தன்பக்கம் ஈர்க்கும் திறன் உள்ளதை அறிவோம். அதுபோல் ஒரு சிறுவனுக்கு காந்த சக்தி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. எனினும், இது உண்மைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது? செர்பியாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பொக்டன். கரண்டி, ஸ்பூன், கத்தி உள்ளிட்ட உலோகங்கள் இந்த சிறுவனுடைய தோலுடன் ஒட்டிக் கொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது. இதுதவிர, உலோகம் அல்லாத, பிளாஸ்டிக் தட்டு, தட்டையான கண்ணாடி பொருட்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவையும் ஒட்டிக் கொள்வதுதான் விசித்திரமாக உள்ளது.

இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் காந்த சக்தி இருப்பதாக பலர் கூறியுள்ளனர். அந்த பட்டியலில் இந்த சிறுவனும் சேர்ந்துள்ளான். ஆனால், இத்தகைய பொருட்கள் தோலில் ஒட்டிக் கொள்வதற்கு காந்த சக்தி காரணமல்ல. மேலும், தோல் என்பது இழுவை திறன் கொண்டது. இயல்பாகவே சிறிதளவு ஒட்டிக் கொள்ளும் திறன் உள்ளது. பிளாஸ்டிக் மற்றும் தோல் பொருட்கள் சில சமயங்களில் நமது உடலில் ஒட்டிக் கொள்வது வழக்கமானதுதான் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.உண்மையிலேயே காந்த சக்தி இருந்தால் ஒரு பொருள் ஒட்டிக் கொள்ள வரும்போது சிறுவன் சற்று பின்னால் சாய்வது தெரியும். ஆனால், இந்த வீடியோ காட்சியைப் பார்த்தபோது அப்படித் தோன்றவில்லை. காந்தத்துக்கு கண்ணாடி, ரிமோட் கன்ட்ரோல் ஆகியவற்றை ஈர்க்கும் சக்தி இல்லை. எனவே சிறுவனுக்கு காந்த சக்தி இருப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லைÕÕ என பெஞ்சமின் ரட்போர்டு என்ற நிபுணர் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் 400 பேர்சேர்ந்து நிர்வாண குளியல்: படங்கள் இணைப்பு!


பிரிட்டனின் வேல்ஸ் மாநில தென் பகுதியில் ஒரு புதிய உலக சாதனை இன்று நிலைநாட்டப்பட்டுள்ளது. இதுவொன்றும் பெரிய கஷ்டமான விடயமல்ல. ஒரே நேரத்தில் 400 பேர் முழு நிர்வாணத்துடன் கடலுக்குள் இறங்கியதுதான் இந்தப் புதிய உலக சாதனை. வேல்ஸ் மாநில விண்டி வெல்ஷ் கடற்கரையில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த நிர்வாண கடல் குளியலில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து மக்கள் வந்திருந்தனர்.காலை எட்டு மணிக்கு முன்பே கடற்கரைக்கு வந்து சேர்ந்த அவர்கள் மளமளவென்று ஆடைகளைக் களைந்துவிட்டு கடலில் இறங்கினர். காலநிலை குளிராக இருந்தது.காற்றும் வீசிக்கொண்டு இருந்தது. கடல் நீரும் கடும் குளிர் நீராகவே இருந்தது. இருப்பினும் அவை எவற்றையும் இந்த சாதனையாளர்கள் பொருட்படுத்தவில்லை. குளிர்ந் கடல் நீருக்குள் இறங்கியதும் அவர்கள் எழுப்பிய ஓசை தாங்க முடியவில்லை.வயது வித்தியாசம் பால் வித்தியாசம் எதுவுமின்றி ஒரு வேடிக்கைக்காகவே இந்த சாதனையை இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.








அடுத்த நித்யானந்தா !!!


கோபமும், ஆவேசமும், அவமானமும், இயலாமையுமாக அப்பெண் பதிவர் எம்மை தொடர்பு கொண்டார். 21 வயதே உடைய சிறுபெண். கவிதை எழுதும் ஆர்வமும் புனைவுகளை பகிரும் தளமுமாகவும் தனக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்தாலும் இணையம் வாயிலாக உலகை வலம் வந்த சராசரி தமிழ் பெண். அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது. இப்படி 6 மாதங்களாத்தான் இணையத்தின் மூலமாக வெளி உலக தொடர்புகளோடு இயங்கிக் கொண்டிருந்தார் அவர். 
நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், நிறைய வாசிக்க வேண்டும் என்ற அறிவுத் தேடலையும் குற்றமாக எந்த மனிதனாலும் கூற முடியாது. அந்த ஆர்வமே அப்பெண்ணிடம் மிகுதியாய் இருந்திருக்கிறது என்பதை அவருடன் பேசியதில் இருந்து உணர முடிகிறது. அப்படி இருக்க அவர் சந்தித்த பிரச்சனைதான் என்ன?
மீண்டும் படபடப்பாக பேச ஆரம்பிக்கிறார் அவர்.
"பேஸ்புக் வந்த பிறகு புதிய நட்புகளை ஏற்படுதிக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் மிக கவனமாக நட்புகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தேன். கவிதைகளை தொடக்கத்தில் பேஸ்புக் பக்கத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தேன். விருப்பத் தேர்வுகளாக சிலரிடம் இருந்து கருத்துக்கள் வந்த போது மகிழ்சியாக இருந்தது. எனது கவிதை ஒன்று ஓர் வார இதழில் வெளிவந்த போது கவிதைகள் எழுதும் ஆர்வமும் தீவிரமானது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பிரபல எழுத்தாளர்கள் கூட இருக்கிறார்கள் என்று முகவரிகளை கொடுத்தார். சில எழுத்தாளர்கள் தளத்தில் வாசகியாக இணைந்து கொண்டேன். அப்படித்தான் சாரு நிவேதிதா வாசகர் குழுவில் இணைந்தேன். ஆனால் சாருநிவேதிதா படைப்புகள் எதையும் நான் வாசித்திருக்கவில்லை. இணையம் மூலமாகவே அவருடைய பெயர் பரிச்சியம் ஏற்பட்ட பின் அவரது வாசகர் வட்டத்தில் இணைந்தேன்.

முதன் முறையாக அவருடன் சாட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தொடக்க நிலையில் மரியாதையாகத் தான் பேசினார். சில நாட்களுக்கு பின் அவருடைய புத்தகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரிடம், "உங்கள் புத்தகம் எதையும் வாசித்ததில்லை" என்றேன். உடனே அவருடைய இணையதள முகவரியை கொடுத்தார். வீட்டு முகவரி கொடுத்தால் புத்தகம் அனுப்புவதாக கூறினார். சிறிது தயக்கமாய் இருந்தாலும் பிரபலமான ஒருவர் கேட்கிறாரே என்று வீட்டு விலாசத்தை கொடுத்தேன். கூடிய சீக்கிரம் புத்தகம் அனுப்புவதாக கூறினார். மேலும் சில நாட்களுக்கு பின் மிக உரிமையாக பேச ஆரம்பித்தார். 'செல்லம்', 'கண்ணு', 'புஜ்ஜி', 'வாடா', 'போடா' என ஆரம்பித்த போது மிகுந்த சங்கடமாக எனக்கு இருந்தாலும் எனது அப்பா வயதுடையவராக கருதியதால் ஏதோ அன்பாக பேசுகிறார் என்று பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சில நாட்களில் எனது கவிதைகள் குறித்து பாராட்டு தெரிவித்தார். அதனால் மேலும் நான் எழுதி இருந்த கவிதைகளை ஆர்வமாக அவருக்கு அனுப்பினேன். வாசித்துவிட்டு அருமையாக இருப்பதாக பாராட்டினார். என்னை குறித்து அவரது தளத்திலும் ஓர் கட்டுரை எழுதினார். இதன் தாக்கம் பின்னாலில் எப்படி இருக்கும் என்பதை அப்போது நான் உணரவில்லை.
அதற்கு பின் அவரோடு சாட் செய்த போது ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேச ஆரம்பித்தார். அதிர்ச்சியடைந்த நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் பயந்தேன். என்னுடைய சுபாவம் எனக்கு எடுத்தெரிந்து பேசும் தைரியத்தை கொடுக்கவில்லை. ஆனால் சில நண்பர்களிடம் இது குறித்து கூறினேன். பிறகுதான் சாருவின் படைப்புகள் குறித்தும் அவருடைய நடத்தைகள் குறித்தும் சில நண்பர்கள் எச்சரிக்கை செய்தார்கள். நான் தவறான இடத்தில் இருப்பதாக தோன்றியது. மேலும் சாரு நிவேதிதாவின் வாசகர் பேஜ் பக்கத்தில் நடக்கும் விவாதங்கள் ஆபாசமானதாகவும் இருந்ததால் இதில் இருந்து விலகி விட வேண்டும் என்று தோன்றியது. அதனால் சாட் மற்றும் வாசகர் வட்டத்தில் இருந்தும் விலகிக் கொண்டேன். இத்தோடு சாருவும் நிறுத்தி இருந்திருக்கலாம். ஆனால் பேஸ்புக் பகுதியில் என்னை குறித்து நேரடியாக எழுதிய சில கருத்துக்களால் மனவுளைச்சல் ஏற்பட்டது. அவருடைய சில வாசகர்களும் மறைமுகமாய் என்னை தாக்கி எழுதினார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இணையத் தொடர்புகளில் இருந்து விலகி விடலாமா? என்று தோன்றியது.
சாரு வாசகர்களின் மறைமுகத் தாக்குதல்களையும் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சில நண்பர்கள், 'இத்தோடு விட்டுவிடு. பிரச்சனையை வெளியே சொல்லாதே' என்கிறார்கள். என்னால் முடியவில்லை. ஏன் இப்படி?  நான் என்ன தவறு செய்தேன்? எந்த குற்றமும் செய்யாத நான் ஏன் குற்றவுணர்ச்சியோடு இருக்க வேண்டும்.  இதற்கான பதில் தான் தற்போதைய தேடலாய் எனக்குள் இருக்கிறது. இனி நான் என்ன செய்வது? நீங்களே கூறுங்கள்" என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.
அவரின் தகவல்களை உறுதிபடுத்தும் நோக்கத்தோடு ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தோம். முதலாவதாக சாருவுடன் செய்த சாட் அனைத்தையும் நிதானமாய் வாசித்தோம்.
மே மாதம் 22.05.2011- இல் சாட் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வாசகர்களில் ஒருவர் என்ற அறிமுகத்துடன் பெண் பதிவரின் அறிமுகம் செல்கிறது. சில நாட்கள் சாதாரண நலன் விசாரிப்புகளுடனே சாட் தகவல்கள் உள்ளன. மே 31-இல் சாருவின் அணுகுமுறை மாறி இருக்கிறது. 'நீங்கள்' என்கிற வார்த்தையில் இருந்து டா, செல்லம், கண்ணு போன்ற சொல்லாடல்களை உபயோகித்திருக்கிறார். உரையாடலில் பெண் பதிவரின் சங்கடப்படும் தொனிகள் தென்படுகின்றன. அதன் பின் ஜீன் 02.06.2011 அன்று நடைபெற்ற சாட்டில், "கனிமொழியிடம் (முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்) இருந்த காதலுக்கு பின் இப்போதுதான் உன்னைப் பார்க்கும் போது காதல் வருகிறது என்று குறிப்பிடுகிறார். அப்போது இப்பெண் பதிவரின் பதிலில் அதிருப்தியை பார்க்கிறோம். தன்னை வாசகியாகவே முன்னிருத்தி உரையாடலை முடிக்கிறார். அதற்கு பின் ஜீன் 12.06.2011 அன்று நடைப்பெற்ற சாட் உரையாடலில் சாரு மிக மோசமான பாலியல் கிளர்ச்சி வார்த்தைகளை உபயோகித்தது காணப்படுகிறது. அதில் சில வாசகர்களின் பார்வைக்கு.
Dim lights Embed 
இவ்உரையாடலின் போதே தனது நண்பர்கள் பட்டிலில் இருந்து சாருவை நீக்கியதோடு வாசகர் குழுவில் இருந்தும் நீங்கிக் கொள்கிறார். ஆனால் சாரு அதே தேதியில் (ஜூன் 12) தனது வாசகர் பக்கத்தில் இப்பெண்ணை கேவலப்படுத்தி ஆண்மையத் திமிரோடு எழுதுகிறார்.

charu_comment_on_xxx
மேற்குறிப்பிட்ட சாருவின் அயோக்கியத்தனமான பதிலை பாருங்கள். 23 நாட்கள் வாசகர் வட்டத்தில் இணைந்து, 13 முறை சாட் செய்து பேசிய பெண்ணை, 'தனது நோக்கத்திற்கு இணங்கவில்லை என்றதும், அவள் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விட்டாள் என்பதை அறிந்ததும் சாட்டுக்குள் நடத்திய ரவுசுளை மறந்துவிட்டு, யோக்கியவான் பொங்கி எழுந்து வாசகர்கள் மத்தியில் 'போதனை' செய்கிறார். இந்த அயோக்கியனின் யோக்கியதை 'மைனர் குஞ்சு' ரேஞ்சுக்கு இருக்க, பாதிக்கப்பட்ட பெண் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதும், இணையத்தில் இருந்து விலகிக் கொள்வதும்தான் நியாயமான செயலா? வாசகியாக அறிமுகமாகும் பெண்களிடம் சாட்டுக்குள்ளும், போனிலும் 'காமரசம்' போதிப்பதும், பாலியல் கிளர்ச்சியில் உளறுவதும்தான் சாருவின் யோக்கியதை என்றால் சாருவின் வாசகர்கள் அந்த கருமத்தை நியாயப்படுத்த முயல்வீர்களா?
இச் சம்பவத்தை முன்வைத்து சாருவுக்காக வக்காலத்து வாங்க வருபவர்கள் தங்கள் அம்மா, மனைவி, மகள்களை சாருவின் ஆன்லைனில் விட்டுவிட்டு பஞ்சாயத்துக்கு இங்கே வாருங்கள்! காத்திருக்கிறோம்!

ஈ-மெயில் படித்து சொல்லும் புதிய கார்: எங்கே போகிறது தொழில்நுட்பம்?


நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கட்டங்கள் எங்கோ போய்க்கொண்டிருக்கின்றது. கற்பனையில் நினைப்பவற்றை இன்று நிஜத்திற்கு மாற்றித்தந்து கொண்டிருக்கிறது இன்றைய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும். அந்த வரிசையில் நாம் எதிர்பார்க்காத புதிய ஒரு விடயம்தான் நடந்தேறியுள்ளது. அதாவது எமக்கு வருகின்ற மின்னஞ்சல் மற்றும் Facebook and Twitter updates களை உடனுக்குடன் படித்து வாய்ஸ் மூலம் வாகன சாரதிக்கு சொல்லிவிடுகின்றது ஒரு கார். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா?? ஆம் இது எவ்வாறு சாத்தியப்படுகின்றது என்றால் குறித்த காரில் பயணிக்க முன்னர் அதில் தயார் செய்யப்பட்டுள்ள சார்ஜரில் தனது smart phones அல்லது iPads ஐ தொடுத்து விடவேண்டும்.

பின்னர் நாம் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போது எமது பேஸ்புக் அல்லது டிவிட்டரில் புதிதாக தகவல்கள் பரிமாறப்பட்டால் எமக்கு அந்த கார் வாய்ஸ் மூலம் பரிமாற்றப்பட்ட தகவலை படித்து சொல்கின்றது. அதைப்போலவே எமக்கு மின்னஞ்சல் வருகின்ற போதும் அவற்றை அப்படியே படித்து சொல்லிவிடுகின்றது. இக்கார் “இணையத்தளக்கார்” என அழைக்கப்படுகிறது. அண்மையில் ஜெனீபாவில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் இந்த இலத்திரனியல் இணையக்கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஏராளமானவர்கள் இத்தொழில்நுட்பத்தை பாராட்டிச் சென்றுள்ளனர். இது மாத்திரமின்றி இக்காருக்குள் Wi-Fi transmitter தொழில்நுட்பமும் காணப்படுகின்றமையால் லாப்டெப்பையும் இலகுவாக பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.

Wednesday, June 22, 2011

ஜின்களுக்குத் தனி உலகம் உண்டா ?

ஜின்களுக்கு என்று தனியொரு உலகம் இருப்பதாகச் சிலர் கூறி வருகின்றனர். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்சிந்தித்தால் இது தவறான கருத்து என்பதை அறியலாம். 

ஜின்கள் மனிதர்கள் வாழும் பூமியில் தான் வசிக்கின்றன. குறிப்பாக ஓடைகள் மற்றும் மலைக் கணவாய்களில்தங்கி இருக்கின்றன. 

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்துசெல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். 

அல்குர்ஆன் (55 : 33) 

பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்லுங்கள் என ஜின்களைப் பார்த்துக் கூறுவதாக இருந்தால் ஜின்கள் இந்தப்பூமியில் வசித்தாலே இவ்வாறு கூற முடியும். 

மேலும் பின்வரும் செய்திகளும் ஜின்கள் பூமியில் இருக்கின்றன என்று கூறுகின்றது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் "நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழுஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், "அவை எந்தஎலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்''என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.''என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 

நூல் : புகாரி (3860) 

அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : வயோதிகராக இருந்த அப்துர் ரஹ்மான் பின் கம்பஷ் (ரலி)அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தை அடைந்தவரா? என்று கேட்டேன். அதற்குஅவர்கள் ஆம் என்று கூறினார்கள். ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்கிய போதுநபியவர்கள் என்ன செய்தார்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அந்த இரவில் ஷைத்தான்கள்ஓடைகளிலிருந்தும் மலைக் கணவாய்களிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி விரைந்தன.

முன்பேர வணிகம் என்றால் என்ன? இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

எந்தப் பொருளையும் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விற்பதும் வாங்குவதும் தான் யாருக்கும் பாதிப்புஏற்படுத்தாத வியாபாரமாகும். நாளைக்கு நமக்கு வரக்கூடிய பொருளுக்கு இன்று விலை நிர்ணயித்துக் கொண்டால்அதில் விற்பவர் அல்லது வாங்குபவர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய வியாபாரம் தான் முன்பேரவணிகம் என்று கூறப்படுகிறது. 

ஒரு விவசாயி தனது வயலில் விளையும் நெல்லை ஒரு மூட்டை 500 ரூபாய்க்குத் தருவதாக வியாபாரியிடம்ஒப்பந்தம் செய்கிறார். அறுவடை நாளில் நெல் விலை 600 ஆகி விட்டால் விவசாயிக்கு அநியாயமாக 100 நூறுரூபாய்ப் நட்டம். அவரது வயிறு எரிய இது காரணமாக ஆகி விடும். நாம் இப்படி ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால்நமக்கு நூறு நூறு ரூபாய் அதிகம் கிடைத்திருக்குமே என்று என்று ஏக்கம் கொள்வார். 

அது போல் ஒரு மூட்டை நெல் 400 ஆக குறைந்து விட்டால் விவ்சாயிக்கு நூறு ரூபாய் அதிகம் கிடைத்தாலும்வியாபாரிக்கு தண்டமாக நூறு ரூபாய் வீணாகிறது. 

இது தங்கம் டாலர் இன்னும் அனைத்துப் பொருட்களிலும் நடைமுறைபடுத்தப்படுகிறது. 

இது போன்ற வியாபாரம் சிறந்ததல்ல என்றாலும் அன்றைக்கு நபித்தோழர்களுக்கு இருந்த வறுமை காரணமாகசெல்வந்தர்களிடம் முன் கூட்டியே பணம் பெற்றுக் கொண்டு இது போல் வியாபாரம் செய்ய அனுமதிஅளித்தார்கள். 

பின்வரும் புகாரி ஹதீஸ்களைப் பார்க்க 

35-ஸலம் (முன்பணம் பெறுதல்) 

(பொருளைப் பிறகு பெற்றுக் கொள்வதாகக் கூறி விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுவது.) 

பாடம் : 1 

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கூற வேண்டும். 

2239 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக்கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ஒருவர், (குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்டஎடைக்காகவும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள். 

ஒரு வருடம், இரண்டு வருடங்களில் என்றோ, இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்களில் என்றோதமக்கு அறிவிக்கப்பட்டதாக அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) (ஐயப்பாட்டுடன்) அவிக்கிறார்கள். 

பாடம் : 2 

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் கூற வேண்டும். 

2240 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்கள் இரண்டு, மூன்று வருடங்களில் பேரீச்சம் பழத்தைப்பெற்றுக்கொள்வதாக (ஒப்புக் கொண்டு, அதற்காக) முன்பணம் கொடுத்துவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஒருவர்ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால், அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக(மட்டுமே) கொடுக்கட்டும்! என்றார்கள். 

2241 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்த போது, (ஸலம் பற்றி குறிப்பிடுகையில்), அளவும் எடையும் தவணையும்குறிப்பிடப்பட்ட பொருளில் தான் அது அனுமதிக்கப்படும்! என்றார்கள். 

2242 & 2243 இப்னு அபில் முஜாலித் (ரலி) கூறியதாவது: 

அப்துல்லாஹ் பின் த்தா (ரலி) அவர்களும் அபூபுர்தா (ரலி) அவர்களும் ஸலம் வியத்தில் கருத்து வேறுபாடுகொண்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்றுநான் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர்(ரலி)ஆகியோரின் காலத்திலும் கோதுமை, வாற்கோதுமை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சம்பழம்ஆகியவற்றிற்காக முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார்கள். பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான்கேட்டேன்; அவர்களும் இவ்வாறே கூறினார்கள். 

பாடம் : 3 

தோட்டம் துரவு மற்றும் விவசாய நிலம் இல்லாதவர்களிடம் விளைபொருட்களுக்காக முன்பணம் கொடுத்தல். 

2244 & 2245 முஹம்மத் பின் அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

அப்துல்லாஹ் பின் த்தாத் (ரலி) அவர்களும், அபூபுர்தா(ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா(ரலி) அவர்களிடம் அனுப்பி, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித் தோழர்கள் கோதுமைக்காக முன்பணம்கொடுத்திருக்கிறார்களா? என்று கேள்! என்றனர். (அவ்வாறே நான் கேட்ட போது) அப்துல்லாஹ் பின் அபீ அஃவ்பா(ரலி) அவர்கள், கோதுமை, வாற்கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றிற்காக அளவும்தவணையும் குறிப்பிட்டு, ஷாம் வாசிகளான நபீத் எனும் குலத்தாரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்து வந்தோம்!என்றார். தோட்டம் துரவும் விவசாய நிலமும் யாரிடம் இருக்கிறதோ! அவரிடமா? என்று நான் கேட்டேன்.அதற்கவர்கள் நாங்கள் அது பற்றி விசாரிக்க மாட்டோம்! என்றார்கள். பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடம் அனுப்ப, அவர்களிடம் சென்று நான் கேட்ட போது, நபி (ஸல்)அவர்களது காலத்தில் நபித் தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம்பெறுபவர்களிடம்) அவர்களுக்குத் தோட்டம் துரவு அல்லது விவசாய நிலம் இருக்கின்றதா என்று நாங்கள் கேட்கமாட்டோம்! என்று கூறினார்கள். 

2246 அபுல் புக்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள்,பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையும் முன்பும் அதை எடை போடுவதற்கு முன்பும்அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், (மரத்திலுள்ளதை) எவ்வாறு எடைபோடுவது? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அவர்களுக்குஅருகிலிருந்த மற்றொரு மனிதர் எடை போடுவதன் கருத்து (அதன் எடை இவ்வளவு இருக்கும் என்று)மதிப்பிடுவதாகும்! என்றார்.

பகவத் கீதையில் முஹம்மது நபியைப் பற்றி முன்னறிவிப்பு உண்டா ?

இஸ்லாத்தின் வேதங்களில் ஒன்றாக பகவத் கீதையை நாம் கூற முடியாது. தவ்ராத இஞ்சீல் ஆகிய வேதங்களில்மனிதர்களின் வார்த்தைகள் கலந்து விட்ட போதும் இறைவனிடமிருந்து இறைத்தூதர்களுக்கு அவைவழங்கப்பட்டன என்ற அடிப்படையை அவ்வேதங்கள் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் பகவத் கீதை அவ்வாறுவாதிடவில்லை. கடவுளே மனித அவதாரம் எடுத்து அதைச் சொன்னதாக கூறுவதால் அது இஸ்லாம் கூறும் வேதஇலக்கணத்தின் படி அமையவில்லை. 

அதில் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பற்றி முன்னறிவிப்புக்கள் உள்ளன என்றெல்லாம் சிலர் பிரச்சாரம்செய்வதையும் கிருஷ்னர் இறைத்தூதர்களில் ஒருவர் என்று உளறி வருவதையும் நாம் ஏற்றுக் கொள்ள் முடியாது.இப்படி வாதிடுவதன் மூலம் இறைவன் இஅறக்கி அருளாத ஒன்றை இறை வேதம் என்று சொல்லி அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டிய மாபாதகச் செயலைச் செய்யும் நிலை ஏற்படும். இறைவன் தூதராக அனுப்பியதற்கு ஆதாரம்இல்லாமல் ஒருவரை இறைத்தூதர் என்று கூறினால் அதுவும் பாவச்செயலாக ஆகி விடும். 

இஸ்லாத்தை உண்மைப்படுத்த மெய்யான சான்றுகள் கணக்கின்றி இருக்கும் போது வேதமல்லாத்தற்கு வேதஅங்கீகாரம் கொடுத்து இஸ்லாத்தைப் பொய்ப்பிக்கும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
அல்லாஹ்வுன் பெயரால் இட்டுக் கட்டுவோருக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளைப் பின்வரும் வசன்ங்கள்கூறுகின்றன. இந்த எச்சரிக்கைகளுக்கு தக்க பதிலை அவர்கள் கூற முடியுமா என்று சிந்தித்துக் கொள்ளட்டும். 

திருக்குர்ஆன் 6:93 3:94 4:50 6:21 7:37 10:17 10:69 11:18 17:73 29:68