Showing posts with label விபரீதம். Show all posts
Showing posts with label விபரீதம். Show all posts

Saturday, July 9, 2011

இவருக்கு இரும்பாணியே உணவு, நாணயமே தண்ணீர்.

பஞ்சாப்பை சேர்ந்த சுரிந்தர்குமார் என்பவர் ஆணி, நாணயம் மற்றும் கொண்டை ஊசி போன்றவற்றை சாப்பிட்டு வருகிறது.

 
 
இவரின் உணவுப்பழக்கம் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. எப்படித்தான் இப்படிப்பொருட்களை உண்டு வாழ்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

வாகன ஓட்டிகளே உஷார் !!!

உலகிலேயே அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வந்தது. ஆனால், அந்த இடத்தை தற்போது தமிழகம் பிடித்துள்ளது.

அந்த அளவுக்கு சாலைகளில் விபத்துகள் ஏற்பட, பற்பல காரணங்கள் உள்ளன.நம் நாட்டில், நீண்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. உதாரணமாக, 30 வயது நிரம்பிய ஒருவருக்கு, 20 வருட காலத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகள், அவரது உடல்நிலை மற்றும் கண் பார்வை நல்ல நிலையில் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அயல் நாடுகளில், இரண்டு வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்கும்படி சட்டம் உள்ளது.அடுத்தபடியாக, நான்கு வழி மற்றும் ஆறு வழிச் சாலைகளில், வலப்புறம் வந்து இணையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள குறுக்குச் சாலைகள் மிக ஆபத்தானவை.

அயல் நாடுகளில், இதுபோல் இடையில் வந்து சேரும் குறுக்குச் சாலைகள், மேம்பாலம் அமைத்து, மறுபுறம் கொண்டுவரப்பட்டு, இடதுபுர ஓரத்தில் வந்து, பெரிய சாலையோடு சேரும்படி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அயல் நாடுகளைப் பார்த்து, ஆறுவழிச் சாலை அமைத்த நம் பொறியாளர்கள், இதைக் கவனிக்கத் தவறிவிட்டனர்.அதற்கடுத்து, நெடுஞ்சாலைகளில் விதி மீறல் செய்வோரைத் துரத்திப் பிடிக்க, ரோந்து ஹெலிகாப்டர்கள் தேவை.

ரோந்து வாகனங்களால் துரத்திப் பிடிக்க முடியாது. சமீபத்தில், அமைச்சர் ஒருவர் உயிரிழக்க காரணமான லாரியை பிடிக்க முடியாமல், பல நாட்கள் ஆனது. லாரியையே பிடிக்க முடியவில்லையெனில், காரை எப்படி துரத்திப்பிடிக்க இயலும்?

அதற்கடுத்து, வாகன நடமாட்ட தேவைக்கேற்ப, சாலைகளை அகலமாக விரிவுபடுத்தல் அவசியம். வளைவுகளை நேர் செய்வதோடு, நல்ல தரமான, மேடு, பள்ளமில்லாத சாலைகளாக, அனைத்து சாலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.இவை அனைத்தும் விரைந்து செய்ய முடியுமானால், சாலை விபத்தற்ற மாநிலமாக தமிழகத்தை நாம் நிச்சயமாக மாற்ற முடியும்.

அழிவிற்குட்படும் நாடுகள்

விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.


சீனா, இந்தோனேசியா, இந்தியா ,ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன், இத்தாலி ,பிரேசில், நையிரியா. பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பாரிய அழிவுகளைச் சந்திக்கலாமெனவும் அதன் மூலம் அந்நாடுகள் மீளமுடியாமல் போகுமெனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகள் இத்தகைய சிறு கோள்களின் தாக்குதலுக்குள்ளானால் அங்கு பாரிய உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இத்தாக்குதலின் போது நாடுகளின் பொதுக்கீழ் கட்டுமான வசதிகளும் பாரிய அழிவிற்கு உள்ளாகுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதுண்டால் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றாக அழிவடையுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றுமாக அழிந்தாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, June 26, 2011

நாவில் துளையிட்டு விரல் விட்டு ஆட்டிய பெண்!!(படஇணைப்பு)


சாதிக்கத்தான் பிறந்திருக்கிறோம் என்று முழுமையாக தங்களை நம்பும் மனிதர்கள் எதையாவது செய்து உலகின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பி விடுகிறார்கள். அப்படி சாதித்த ஒரு பெண்மணியின் செய்திதான் இது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த எலைன் டேவிட்சன்


என்ற பெண்மணிதான் இந்த கொடுஞ்சாதனைக்குச் சொந்தக்காரி. 2003, நவம்பர் 11 ஆம் தேதி லண்டனில் உள்ள டேட் மாடர்ன் ஆர்ட் கேலரியில் உடல் எங்கும் 1903 இடங்களில் குத்திக் கிளறி அணிகலன்களை அணிந்து காட்டிய கொடிய சாதனையை அவர் நிகழ்த்தினார், போதாது என்று நாக்கில் ஒரு ஓட்டைப் போட்டு, தன் விரல் ஒன்றை விட்டுக்காண்பித்தார். இப்படியெல்லாம் சாதிக்கிறாங்களே என்ன கொடுமையடா சாமி!



Thursday, June 23, 2011

ஒரே நேரத்தில் 400 பேர்சேர்ந்து நிர்வாண குளியல்: படங்கள் இணைப்பு!


பிரிட்டனின் வேல்ஸ் மாநில தென் பகுதியில் ஒரு புதிய உலக சாதனை இன்று நிலைநாட்டப்பட்டுள்ளது. இதுவொன்றும் பெரிய கஷ்டமான விடயமல்ல. ஒரே நேரத்தில் 400 பேர் முழு நிர்வாணத்துடன் கடலுக்குள் இறங்கியதுதான் இந்தப் புதிய உலக சாதனை. வேல்ஸ் மாநில விண்டி வெல்ஷ் கடற்கரையில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த நிர்வாண கடல் குளியலில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து மக்கள் வந்திருந்தனர்.காலை எட்டு மணிக்கு முன்பே கடற்கரைக்கு வந்து சேர்ந்த அவர்கள் மளமளவென்று ஆடைகளைக் களைந்துவிட்டு கடலில் இறங்கினர். காலநிலை குளிராக இருந்தது.காற்றும் வீசிக்கொண்டு இருந்தது. கடல் நீரும் கடும் குளிர் நீராகவே இருந்தது. இருப்பினும் அவை எவற்றையும் இந்த சாதனையாளர்கள் பொருட்படுத்தவில்லை. குளிர்ந் கடல் நீருக்குள் இறங்கியதும் அவர்கள் எழுப்பிய ஓசை தாங்க முடியவில்லை.வயது வித்தியாசம் பால் வித்தியாசம் எதுவுமின்றி ஒரு வேடிக்கைக்காகவே இந்த சாதனையை இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.








Tuesday, June 21, 2011

சுய இன்பம் நல்லதா? கெட்டதா? ஓர் அதிர்ச்சி தகவல்

இந்த பிரசுரத்தின் நோக்கம், மருத்துவ ஆதாரங்களோடு பிரசுரிக்கப் படுகிறதே தவிர ஆர்வமூட்டுவதற்கு அல்ல. 

இந்த விஷயத்தை தடை என்று சொல்ல பலரும் கையாளும் வழி முறைதான் மருத்துவம். எனவே, மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் சொன்ன செய்திகள், செய்தி தாள்களில் வந்தவைகளை, கீழே சேர்க்கப்பட்டுள்ளது. 

அது ஆபத்தானது; தவறானது; சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண் பார்வை போய்விடும்; சுய இன்பத்தில் ஈடுபடுவோருக்குக் கேன்சர் வரும்; உடல் நலிவு ஏற்படும். எல்லாமே தவறு! உடல் நலிவு, பார்வை இழப்பு போன்றவை எல்லாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால் ஏற்படுமே தவிர, சுய இன்பத்தால் அல்ல! 

விந்து உற்பத்திக்கும் சுய இன்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண், பெண் உடல் உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தேவைப்படுவது இருவரின் ஆரோக்கியமும் உடல் உறவு பற்றிய உடல்கூறு / உளவியல் அறிவும்தான். குழந்தை பெற முடியாத மலட்டுத்தன்மை ஆணிடமோ, பெண்ணிடமோ இருப்பதற்கான மருத்துவக் காரணங்கள் வேறு. அதற்கும் சுய இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை.

டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள். 

உண்மையில் சுய இன்பத்தில் எந்த பிரச்சனையும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள். 

இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான். (- நன்றி: இந்திய தினகரன்) 

ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும். 

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை. ஏனென்றால்? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும். விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும். 

தூக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது. 

விந்து முந்துதல், அதாவது புணர்ச்சியில் ஈடுபடமுன் ஸ்கலிதம் ஆகிவிடுதல். 

இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது. 

போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடும்ப வாழ்வில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும். ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும். (நன்றி: தினக்குரல்) 

ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள். இயற்கை முறையில், எந்த பின் விளைவுகளும் இன்றி நல்ல சிகிச்சை உள்ளது. 

உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உண்மையான தேன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலும் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை சக்தி பெருகி விடும் இன்ஷா அல்லாஹ்.

Sunday, June 12, 2011

கார் ஏசி இவ்வளவு ஆபத்தானதா? ஒரு வேண்டுகோள்

A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .

A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .


இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .
வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \C ஐ ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

Friday, April 29, 2011

50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிடிக்க போலீஸ் முடிவு


50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு  பிடிக்க போலீஸ் முடிவு;  கோவை போலீசார் பெங்களூர் விரைந்தனர்
திருப்பூர் சுற்றுப்புற பகுதியில் பெண் போலீஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து கொலை செய்த எடப்பாடியை சேர்ந்த காம கொடூரன் ஜெய்சங்கர் (வயது 32) என்பவனை போலீசார் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஜெய்சங்கர் காவல் நீட்டிப்புக்காக திருச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து சென்று விட்டு வரும் போது சேலத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பினான்.
 
ஜெய்சங்கர் தப்பியதால் பாதுகாப்பிற்கு உடன் சென்ற கோவை ஆயுத படை போலீஸ்காரர் சின்னசாமி மனம் உடைந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தப்பி ஓடிய ஜெய்சங்கரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நடத்தினர்.
 
அண்டை மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.   இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 6க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் அனைவரையும் ஜெய்சங்கர் தான் தீர்த்து கட்டியிருக்கலாம் என்று பெங்களூர் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
அவர்கள் கோவை வந்து ஜெய்சங்கர் குறித்த தகவல்களை சேகரித்து சென்றுள்ளனர்.   தப்பி ஓடிய காம கொடூரன் ஜெய்சங்கர் பெண்களை வேட்டையாடியது எப்படி என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
 ஜெய்சங்கர் ஆரம்பரத்தில் டிரைவராக வாழ்க்கையை தொடங்கினான். மினி பஸ், டவுன் பஸ் மற்றும் பல்வேறு ரூட் பஸ்களிலும், சங்ககிரியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் லாரிகளிலும் டிரைவராக வேலை பார்த்துள்ளான். அதன் மூலம் வெளி மாநிலங்கள், மாவட்டங்களின் தேசிய நெடுஞ்சாலை பகுதியை நன்றாக அடையாளம் வைத்திருந்தான்.
 
பெண்கள் விஷயத்தில் படு மோசமானவன், பிஞ்சில் பழுத்தவன் அவன் 13 வயதில் பஞ்சாயத்து தலைவர் மனைவியை கற்பழிக்க முயன்று ஊர் பஞ்சாயத்தில் அபராதம் கட்டி உள்ளான். பஸ் டிரைவராக இருந்த போது போலீஸ்காரர் மனைவி இந்திரா காந்தியை தங்காயூர் காட்டு பகுதிக்கு கூட்டி சென்று கற்பழித்து கொலை செய்தான். அந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வந்த பின்னரும் ஏராளமான பெண்களை கற்பழித்துள்ளான்.
 
பலர் அவமானம் கருதி புகார் கொடுப்பதில்லை. தொப்பூர் தொப்பராயக்கன் பட்டியில் ஒரு கிழவியை கொலை செய்து நகை பறித்தான். கூட்டாளி செல்வனுடன் சேர்ந்து பெருந்துறை ஏரிப்பாளையம் பிரிவில் மூன்று குழந்தைகளுடன் வீட்டில் தோசை சுட்டு கொண்டிருந்த பெண்ணை மிரட்டி நகை பணம் பறித்தனர். பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் தனியாக நடந்துவந்த பெண்ணை கற்பழித்து நகையை பறித்தனர்.   அவன் டிரைவராக இருக்கும் போது ஏற்கனவே பழக்கக்தில் இருந்த பழனியை சேர்ந்த வசந்தா என்ற பெண்ணை தொப்பூர் வரவழைத்து 1 வாரம் உல்லாசம் அனுபவித்துள்ளான்.
 
பணம் தீர்ந்ததும் அவனிடம் இருந்து நகை, செல்போன் போன்றவற்றை பறித்து கொண்டு விரட்டி உள்ளான். அதே தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூர் காளிபாளையத்தில் ஒரு “தாபா” ஓட்டலுக்கு பின்புறம் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை கற்பழித்து நகையை பறித்தான். தொப்பூர் பகுதியில் போகும்போது கட்டமேடு மத்திய நாத்துப் பண்ணையில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்ணின் செயினை பிடுங்கி கற்பழித்துள்ளான். 10 நாள் கழித்து அந்த செயினை அடகு கடையில் கொடுத்தபோது அது கவரிங் செயின் என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளான். கோபத்தில் மீண்டும் அந்த பெண்ணை தேடி உள்ளான். ஆனால் அவள் கிடைக்கவில்லை.
 
அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பத்தலபள்ளி மார்க்கெட் வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றபோது 40 வயது பெண் “லிப்ட்” கேட்டு வண்டியில் ஏறினாள். அவளை அந்த பகுதி காட்டு பகுதிக்கு கூட்டி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளான். தீவட்டிபட்டியில் கை குழந்தையுடன் அதிகாலை வேளையில் பஸ்சில் இருந்து இறங்கிய பெண்ணை வாயை பொத்தி தூக்கி சென்று கெடுக்க முயன்றான்.
 
குழந்தை அழுததால் அதன் தலையில் வெட்டிவிட்டு ஓடி உள்ளான். அப்போது அவனது செல்போன் கீழே விழுந்தது. அதை பற்றி தீவட்டிபட்டி போலீசார் ஜெய்சங்கரை பிடித்தனர்.   அவன் எப்போது போலீசில் சிக்கினாலும் அந்த வழக்கை மட்டும் தான் செய்ததாக சொல்வான். மற்ற விவரங்களை எளிதில் கூற மாட்டான். போலீசாரும் அவனை சாதாரண குற்றவாளி என விட்டுவிடுவார்கள். இதையே தனக்கு சாதக மாக்கி பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அலுவலகம் திரும்பிய பெண் போலீஸ் ஒருவரை லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்று கொலை செய்து கற்பழித்துள்ளான்.
 
கடைசியாக பெண் போலீசிடம் பறித்துச் சென்ற செல்போன் மூலம் போலீசில் பிடியில் சிக்கினான். தப்பி சென்றதன் மூலம் அப்பாவி போலீஸ்காரர் ஒருவரின் உயிரையும் அவன் காவு வாங்கி உள்ளான்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
திருப்பூர், பெருமாநல்லூர், கிருஷ்ணகிரி, சேலம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை வேட்டையாடிய மனித மிருகம் ஜெய்சங்கரை கோவை போலீசார் சுட்டுப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக தனிப்படை போலீசார் பெங்களூருவில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

சாய்பாபா உடல் அடக்கத்துக்கு 20 நாட்களுக்கு முன்பே சவப்பெட்டி வாங்கிய மர்மம்; விசாரணை நடத்த கோரிக்கை


சாய்பாபா உடல் அடக்கத்துக்கு 20 நாட்களுக்கு முன்பே  சவப்பெட்டி வாங்கிய மர்மம்; விசாரணை நடத்த கோரிக்கை
 
புட்டபர்த்தி சாய்பாபா கடந்த 24-ந் தேதி காலை 7.40 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இப்போது புதிதாக சவப்பெட்டி விவகாரம் தலையெடுத்து உள்ளது. சாய்பாபா இறந்ததும் அவரது உடல் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட குளிர்சாதன (பிரீசர் பாக்ஸ்) சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.
 
அவரது உடலை பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்வதற்கு வசதியாக கூம்பு வடிவில் பெட்டி தயாரிக்கப்பட்டு இருந்தது. இது போன்று வடிவில் சவப் பெட்டி தயாரித்தது இதுவே முதல் முறையாகும். கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் இந்த சவப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரநாத் ரெட்டி என்பவர் இதற்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.
 
அதன் விலை ரூ.1 லட்சத்து 7 ஆயிரம். இதற்கு அட்வான்சாக ரூ.57 ஆயிரம் செக்காக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4-ந் தேதி சவப்பெட்டி கோவையில் இருந்து பெங்களூர் அல்சூருக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து ஏப்ரல் 5-ந் தேதி புட்டபர்த்தி சென்றுள்ளது. ஆனால் இந்த சவப்பெட்டி யாருக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டது என்று அந்த நிறுவனத்துக்கு தெரியாது.
 
சாய்பாபா இறந்ததும் 24-ந் தேதி மாலை அவரது உடல் இந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. இதை டெலிவிஷனில் பார்த்த கோவை நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமி இந்த சவப்பெட்டி தங்களது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது போல் இருக்கிறதே என்று சந்தேகம் அடைந்தார்.
 
இது பற்றி சவப்பெட் டிக்கு ஆர்டர் கொடுத்த ராஜேந்திரநாத் ரெட்டியுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் சாய்பாபாவுக்காக பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். சவப்பெட்டிக்கு முன் கூட்டியே ஆர்டர் கொடுத்தது ஏன்? யார் இதற்கு ஆர்டர் கொடுக்க சொன்னார்கள் என்பது மர்மமாக இருக்கிறது.
 
சாய்பாபா மார்ச் 28-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்பு ஏப்ரல் 15-ந் தேதி தான் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. ஆனால் ஏப்ரல் 4-ந் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்தது ஏன் என்பது மர்மமாக இருப்பதாக சாய்பாபா பக்தர்கள் தெரிவித்தனர்.
 
இது குறித்து சவப்பெட்டி தயாரித்து கொடுத்த நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமியிடம் கேட்ட போது நாங்கள் தயாரித்த சவப்பெட்டி சாய்பாபாவுக்கு என்று எங்களுக்கு தெரியாது. டி.வி.யில் பார்த்த போது தான் அது நாங்கள் தயாரித்தது என்று தெரிய வந்ததாக கூறினார்.
 
சாய் டிரஸ்ட் உறுப்பினர்கள் யாராவது ராஜேந்திர நாத்ரெட்டி மூலம் இதற்கு ஆர்டர் கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி டிரஸ்ட் உறுப்பினர் எஸ்.எஸ்.நாகானந்திடம் கேட்ட போது, சாய்பாபா குடும்பத்தினர் சவப் பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.
 
மற்றொரு உறுப்பினரான முன்னாள் நீதிபதி பி.என். பகவதி கூறுகையில், எனக்கு சவப்பெட்டி ஆர்டர் கொடுத்தது பற்றியோ, புட்டபர்த்திக்கு கொண்டு வந்தது பற்றியோ எதுவும் தெரியாது என்றார். அனந்தப்பூர் மாவட்ட கலெக்டர் ஜனார்த்தன் ரெட்டியும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டார்.
 
96 வயது வரை உயிரோடு இருப்பேன் என்று சொன்ன பாபா உயிர் பிழைத்து வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் அவர் இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்தது மர்மமாக இருப்பதாக பக்தர்கள் கூறினார்கள்.
 
சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பெங்களூர் காயத்ரி நகர் காளிகா ஆசிரம பீடாதிபதி யோகேஸ்வர ருசி குமாரசாமி கூறியுள்ளார்.

Tuesday, April 26, 2011

மலையாளியொருவர் அலுவலகத்தில் Bittorrent டை பயன்படுத்தியமையினால் தனது பணியை இழந்தார்


டோகா கத்தாரில் உள்ள கம்பனியொன்றில் பணிபுரிந்த மலையாளியொருவர் தனது அலுவலக கணனியில் Bittorrent மென்பொருளை பயன்படுத்தி தரவிறக்கம் மேற்கொண்ட போது சுமார் 46 கணனிகளுக்கு வைரசைப் பரப்பியதன் விளைவாக அந் நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கியது. 

மேலும் எனது நண்பரைத் தொடர்புகொண்டு விளக்கத்தை கேட்டறிந்தபோது அவ்வியாபார நிறுவனத்தின் கணனிகளின் நாளாந்த செயற்பாடுகள் பகிரும் கோப்புகளால் ஆனது அதாவது சேரிங் பயிலிங் சிஸ்ரம் (Data Bank Master Files Sharing System ) மூலமாக ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு கணனிகள் செயற்பட்டதாகவும் அவ்வேளையில் இவர் அட்மினிஸ்ரேசன் பாஸ்வேர்ட்டை ரகசியமாக பெற்றுக்கொண்டு Bittorrent  டை தன் கணனியில் நிறுவி தனது வழமையான தரவிறக்கத்தை மேற்கொண்டபோது வைரஸ் இவரது கணனியிலிருந்து பிற கணனிகளுக்கும் இலகுவாகப் பரவியிருக்கிறது. 

சாதரணமாக மின்னஞ்சல் USB மற்றும் CD க்கள் மூலமாக பரவும் வைரஸ்களை பாதுகாப்பதற்கு நாம் எவ்வளவு அவதானமாக இருக்கவேண்டியிருக்கின்றது ஆனால் இங்கே நெட்வொர்க் கோப்புகள் என்றால் கேட்க்கவா வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்நிறுவனம் சாதாரண கணனியிலிருந்து சர்வர் கணனி வரைக்கும் “Symentec Antivirus” பாதுகாப்பானை நிறுவி அப்டேட்டுடன் கண்காணிக்க்பட்டு வந்திருக்கின்றது. அதையும் மீறி 46 கணனிகளை செயற்பாட்டில் இருந்து முடக்கியிருக்கின்றது .

உன்மையில் நாமும் அலுவலகத்தில் பணிபுரியும் போது அதற்குரிய வரையறைகளை மீறிச்செல்லக் கூடாது இன்றைய கணனி வளர்ச்சியின் வேகத்தில் தினமும் புதுப் புது மென்பொருள்கள் வந்தவண்ணம் உள்ளன இவற்றையெல்லாம் எங்களது சொந்தக் கணனியில் பயன்படுத்தலாம் இதனால் எங்கள் கணனிக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதை திருத்துவதற்கு ஒருதொகைப்பணம் மட்டுமே செலவாகும் மாறாக அலுவலகக் கணனியில் நாம் ஏற்படுத்தும் தவறுகளால் எங்களது நன்மதிப்பு மட்டுமல்ல வேலையையும் இழக்கவேண்டிவரும் வேலையை இழந்தால் பாதிக்கப்படுவது நாங்கள் மட்டுமல்ல எங்களை நம்பியிருப்போரும்தான்.

எங்கள் நாட்டில் படித்தபடிப்புக்கு வேலைகிடைப்பது அரிது அப்படித்தான் வேலை கிடைத்தாலும் அதற்குரிய சரியான சம்பளமும்  கிடைப்பதில்லை அதனால்த்தான் வெளிநாடுகளில் வேலை தேடி வருகின்றோம் இங்குதான் நாம் அவதானமாக இருக்க வேண்டும் ஏனென்றால் எமக்கென்று உறவுகள் இங்கு யாரும் இல்லை நண்பர்களைக் கூட நாங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். திடிரென நாம் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலையை இழக்க நேரிட்டால் மீண்டும் மற்றுமொரு நிறுவனத்தில் வேலை தேடிப்போகும் போது அங்கே பார்க்கப்படுவது எங்களது திறமை மட்டுமல்ல எங்களது நன்நடத்தை எவ்வாறு இருந்தது கடந்த நிறுவனத்தில் வேலை செய்யும்போது என்பதாகும்.

இச்சம்பவம் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் ஒரு வழிகாட்டி உதாரணமாக அமையும் என நம்புகின்றேன்.

சிறுவனை விழுங்கிய முதலை: கொடூரக் காட்சிகள்

இளகிய உள்ளம் கொண்டவர்கள் யாரும்  இதைப் பார்க்கவேண்டாம் !
===========================================

துரதிஷ்டவசமாக  இப்பதிவை எடுத்திருந்தேன் மீண்டும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கினங்க பதிவிட்டுள்ளேன் .


இது ஒரு விழிப்புணர்வு பதிவு 



 24 மணிநேரமும் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக பாதுகாக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.