Saturday, June 4, 2011

மின்னஞ்சல் முகவரிகளை சோதிக்க


வீட்டு முகவரி இருக்கோ இல்லையோ ஆனால் மின்னஞ்சல் முகவரி இல்லாத இணைய பயணார்களே இல்லை என்று கூறும் அளவிற்கு மின்னஞ்சல் சேவையானது இன்று அனைவரிடமும் சென்றுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு இலவசமாக ஈமெயில் சேவையினை வழங்குவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் மின்னஞ்சல் முகவரி இல்லையெனில் கணினி பயன்பாட்டாளர் என்பதற்கு அடையாளமே இல்லையென்ற நிலை உள்ளது. ஏன் நம்மில் பலர் பல்வேறு நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருவோம் இதற்கு காரணம் இலவசம் என்ற ஒன்றே ஆகும். 

ஒரு சில இணைய பயனார்கள் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துவார்கள் அவற்றில் ஒன்றை தன்னுடைய நண்பர்க்கு கொடுத்திருப்பார் ஆனால் அந்த முகவரியை பயன்படுத்தாமல் இருப்பார், இதனால் அந்த மின்னஞ்சல் முகவரி செயல் இழந்துவிடும். அந்த செயலிழந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால், சரியான முகவரி அல்ல என்ற செய்தியே வரும். இதுபோன்ற கோளாருச்செய்திகள் வருமேயானால், அந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியானது உபயோகத்தில் உள்ளதா என்பதை ஆராய வேண்டும். இதற்கு ஒரே வழி குறிப்பிட்ட மின்னஞ்சலுடைய உரிமையாளரிடம் கேட்டால் மட்டுமே மின்னஞ்சல் முகவரி நடப்பில் இருக்கிறதா என்பது சாத்தியம் ஆகும். இதற்கு மற்றுமொரு வழி உள்ளது. சரியான மின்னஞ்சல் முகவரிதான என்று சோதிக்க ஒரு மென்பொருள் உள்ளது அந்த மென்பொருளின் வாயிலாக அறிய முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி







இணையத்தில் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Import என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து மின்னஞ்சல் முகவரிகளை உள்ளினைத்துக்கொள்ளவும். நாம் txt, CSV, Excel, Access அல்லது Database பைல்களை உள்ளினைத்து கொள்ள முடியும். பைல்களை இணைத்தப்பிறகு Check emails என்னும் பொத்தானை அழுத்தவும், பின் சில நொடிகளில் உங்களுக்கான முடிவு தெரிந்துவிடும். சரியான முகவரி எவைஎவை என்று, பின் தவறான முகவரியை நம்மால் எளிமையா முறையில் அறிந்து கொள்ள முடியும்.





இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இணைய வசதியுடன் எந்ததெந்த மின்னஞ்சல் முகவரிகள் போலியானவை என்று எளிமையான முறையில் கண்டறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருள் வசதியில் மூலமாக டொமைன் மின்னஞ்சல் முகவரிகள் சரியானவைதான என்றும் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகும்.


Thursday, May 26, 2011

த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?


திருமண உதவி கேட்கும் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌ம், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு‌ள் இரு‌க்க வே‌ண்டு‌‌ம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு பு‌திய ‌நிப‌ந்தனையை ‌வி‌தி‌த்து‌ள்‌ளது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌ல் வா‌க்குறு‌திபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவ‌ர் அ‌றி‌‌வி‌த்த கையோடு த‌மிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அரசாணை‌யி‌ல் இ‌ந்த பு‌திய ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இ‌ந்த கால‌த்‌தி‌ல் பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் ச‌ெ‌ய்து வை‌க்க பெ‌ற்றோ‌ர்க‌ள் படு‌ம்பாடு சொ‌ல்‌லிமாளாது. அ‌ந்த அளவு‌க்கு த‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலை ஏழைக‌ள் வா‌ங்க முடியாத அளவு‌க்கு எ‌ட்டா நிலை‌க்குச் செ‌ன்று ‌வி‌ட்டது. அ‌ப்படி இ‌ப்படி எ‌ன்று ‌சிறுக ‌சிறுக நகைகளை சே‌ர்‌த்து வை‌க்‌கி‌ன்றன‌ர் பெ‌ண் ‌பி‌ள்ளைகளை பெ‌ற்றவ‌ர்க‌ள். ஒ‌ரு‌வ‌ழியாக நகைகளை சே‌ர்‌த்து த‌ங்க‌ள் ‌பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் செ‌ய்து வை‌க்க‌ி‌ன்றன‌ர். அ‌த்துட‌ன் த‌மிழக அரசு கொடு‌த்த 20,000 ரூபாயு‌ம் அவ‌ர்களு‌க்கு ஒரு கட‌ன் சுமையை குறை‌ப்பதாக இரு‌ந்தது.

த‌ற்போது அத‌ற்கு‌ம் இடி ‌விழு‌ந்த மா‌தி‌ரி வெ‌ட்டு வை‌த்து‌ள்ளது த‌மிழக அரசு. ‌திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூப‌ா‌‌ய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேல‌ை‌க்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வரு‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?

Tuesday, May 24, 2011

பருத்த உடல் இளைக்க...

சேர்க்க வேண்டிய உணவுகள்: 

6.00 AM 
  GREEN TEA - யை பால், சர்க்கரை இல்லாமல் காய்ச்சிய சுடு நீரில் போட்டு 10  நிமிடம் கழித்து பருக வேண்டும்.

8.00 AM
  வேக வைத்த பாசிப்பயிறு (அ) கொண்டைகடலை, சுண்டல் (அ) காணப்பயிறு + ஒரு கப் பச்சை காய்கறிகள்.

11.00 AM
  முட்டைகோஸ் சூப் (அ) காய்கறி சூப்.


1.00 PM
  ஒரு கப் சாதம் + ஒரு கப் காய்கறிகள் + ஒரு கப் கீரை.

4.00 PM
   GREEN TEA + ஒரு ஆப்பிள் (அ) ஒரு ஆரஞ்சு (அ) ஒரு கொய்யா (அ) ஒரு கீத்து பப்பாளி.
7.30 PM
  கம்பு (அ) கேப்பை (அ) கேழ்வரகு தோசை (2 NOS) + தக்காளி சட்டினி மட்டும்.

தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:


கோதுமை, ஓட்ஸ், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகள், மற்றும் கிழங்குகள், இனிப்பு வகைகள், பேக்கரி வகைகள், பொறித்த உணவுகள், தேங்காய், மட்டன், முட்டை, சிக்கன், மீன், பால் பொருட்கள், இனிப்பு வகையான பழங்கள் ( வாழை, சப்போட்டா, திராட்சை, மாம்பழம், பலாப்பழம்), பேரிட்சை, பருப்பு ( முந்திரி, பாதாம், பிஸ்தா), கூல்ட்ரிங்க்ஸ், சாக்கலேட்ஸ், பிஸ்கட்ஸ், ஐஸ்கிரீம், பார்லி, எண்ணெய் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள்.

எளிமையான உடற்பயிற்சிகள்:




ரொம்ப கடினமான உடற்பயிற்சிகள் தேவையில்லை. வெறும் கயிற்றை வைத்தே உடற்பயிற்சி செய்யலாம். அதுதான் POCKET ROPE GYM. வெறும் 250 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கிறது. அதோடு, உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கொடுத்துள்ள உடற்பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது.

கண்டிப்பாக இரண்டே வாரத்தில் சுமார் மூன்று கிலோ எடையை குறைத்து விடலாம்.


மேற்கண்ட உணவு கட்டுப்பாடும், உடற்பயிசியும் கடைபிடிப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இருந்தாலும் மிக மிக அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக OBESITY DOCTOR மூலம் ஆலோசனை செய்த பின்னர் இம்முறைகளை கடைபிடிக்கவும். ஏனெனில் அவர்களுக்கு அதிகப்படியான எடையை குறைக்க மாத்திரைகளும், மருந்துகளும் கொடுப்பார்கள்.


உடல் எடையை குறைத்த பின்னர் சரிவிகித உணவும், சீரான உடற்பயிசியும் அவசியம் தேவை. அப்பொழுது தான் குறைத்த எடையை கூடாமல் சீராக வைத்துக் கொள்ள முடியும்.

Monday, May 23, 2011

இது பேஸ்புக் செய்த சதி


சமூக இணையத்தளமான பேஸ்புக் உரிமையாளர்கள் பேர்ஸன் மாஸ்டெல்லர் என்ற நிறுவனத்தின் சேவையை இதற்கெனப் பெற்றுள்ளனர்.

மோசமான தந்திரங்களைப் பிரயோகிக்கும் வெகுசனத் தொடர்பு நிறுவனமொன்றை வாடகைக்கு அமர்த்தி கூகுள் நிறுவனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது.

கூகுள் நிறுவனம் பற்றி எதிரிடையான செய்திகளை பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்வதே இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டப் பணி.

இந்த நிறுவனம் போக்லாந்து யுத்தத்தின் போது ஆர்ஜன்டீன ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவம் செய்த நிறுவனமாகும்.

வாசிப்போர் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையில் கூகுளின் சமூக வட்ட சேவை தொடர்பான கதைகளை இந்த நிறுவனம் வெளியிட்டது.

கூகுளின் சமூக இணையத்தளம் (சோஷியல் சேர்கள்) வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மீறிவிட்டது என்ற அடிப்படையில் தான் இந்தப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பேஸ்புக்கிற்கு நேரடி சவால் விடுக்கக் கூடிய ஒரு சமூக இணையத்தளமாக இருப்பது கூகுளின் சோஷியல் சேர்கள் மட்டுமே.

வாடிக்கையாளர்கள் படங்கள், வீடியோக்கள் உட்பட பல்வேறு தகவல்களை இதில் தரவேற்றம் செய்ய முடியும். பேஸ்புக்கில் இருந்து அங்கீகாரமற்ற முறையில் தரவுகளையும், ஏனைய சேவைகளையும் இது பெற்றுக் கொள்வதாக பேஸ்புக் குற்றம்சாட்டியிருந்தது.

பேஸ்புக்கால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பாக ஒரு குறிப்பை எழுதுவதற்கு அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணி ஒருவரை நாடியுள்ளது.

வாஷிங்டன்போஸ்ட் உட்பட பிரபல பத்திரிகைகளில் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க எழுதுமாறு கேட்டு அவரை நாடியுள்ளது. அவர் இந்த முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியபோது மேற்படி நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

அதனையடுத்து அந்த சட்டத்தரணி இது தொடர்பான ஈ மெயில் தொடர்புகளை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

அதனையடுத்தே பேஸ்புக்கின் குட்டு அம்பலமாகியுள்ளது.

உங்களுக்கு ரூபாய் 40 கோடிக்கு எ டி எம் கார்டு வேண்டுமா?

 பெனின் குடியரசு நாட்டில் பணம் படைத்த பெண் ஒருவர், தம்மிடம் தேங்கி உள்ள பணத்தை ஏழைகளுக்கு (மட்டும்) வழங்க முடிவு செய்துள்ளதாகவும், "நீங்கள் ஏழையாக இருக்கும் பட்சத்தில், முழுமையான தகவல் அனுப்பி பயன் பெறலாம்' எனவும், நமக்கு முதல், "இ-மெயில்' வருகிறது.

அவர்கள் கேட்ட விவரங்களை அனுப்பியதும், நமது பெயரில் அந்நாட்டின் காப்பீடு திட்டத்தில், 40 கோடி ரூபாய்க்கு கணக்கு துவங்கியிருப்பதாக, அடுத்த மெயில் வருகிறது. உடன், அரசு அனுமதியுடன் கூடிய, காப்பீடு நிறுவன சான்றிதழும், "ஸ்கேன்' செய்து அனுப்பப்படுகிறது. நாம் புத்திசாலியாக இருந்து, தடையில்லா சான்றிதழ் கேட்கும் பட்சத்தில், அதையும் அனுப்புகின்றனர்.
இந்த நூதன மோசடி மீது நம்பிக்கை ஏற்பட, இதுவே முதல் அஸ்திரமாகிறது. அதன் பின், மும்பையில் இருப்பதாக கூறப்படும், "கூரியர்' நிறுவனத்தின் பெயரிலிருந்து நமக்கு மெயில் வரும். அதில், நம் பெயரில் ஏ.டி.எம்., கார்டு அடங்கிய பார்சல் வந்திருப்பதாகவும், உரிய ஆவணங்களுடன் வந்து பெறுமாறும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மோசடியாளரை நாம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கும் போது, "இதுவரை நடந்த பரிமாற்றத்திற்கான கட்டணமாக, 17 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஏ.டி.எம்., கார்டை பெறுமாறு, கூறுகின்றனர். இதற்காக மும்பை நபர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பின், என்ன நடக்கும் என்பதை, புத்திசாலிகள் யூகித்து விடுவர். இதுவரை புகாருக்கு ஆட்படாத இந்த நூதன மோசடி, தற்போது தமிழகத்தில் பரவலாக ஆக்கிரமித்துள்ளது. "குரூப் மெயில்' மூலம் நம் இ-மெயில் முகவரியை தெரிந்து கொண்டு, இந்த நூதன மோசடி துவங்குகிறது. ஆசையில், இது போன்ற மோசடிகளுக்கு நாம் செவி சாய்க்காமல் சென்றால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.

கை கால்களை விரித்து மல்லாந்து உறங்குவோர்


நீங்கள் உறங்கும் விதத்தை அடிப்படையில் கொண்டு உங்களைப்பற்றி சொல்ல முடியும். இங்கு ஒவ்வொரு நிலையிலும் உறநங்குபவர்கள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றன. இவற்றில் நீங்கள் எந்த வகையினர் என்பதை பரிசீலித்துப் பாருங்கள்.

தலைமுதல் கால் வரையில் முழுமையாக போர்வையால் மூடிக் கொண்டு உறங்கும் பழக்கமுடையவர்கள்



பொதுமக்கள் மத்தியில் தைரியமான நபராக உங்களைக் காட்டிக்கொண்ட போதிலும், ஆழ் மனதின் அடிப்படையில் நீங்கள் பலவீனமான, கூச்ச சுபாவமுடையவர். அதிகளவான ரகசியங்களைப் பேணிப்பாதுகாப்பீர்கள். நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் அதனை வெளிப்படுத்தி உதவி கோராது, உங்களுக்குள்ளேயே பிரச்சினை மூடி மறைத்துக்கொள்வீர்கள். உங்களது உளநிலையையே தூங்கும் விதம் விபரிக்கின்றது.
கரங்களை உதவியாகப் பயன்படுத்தி, மல்லாந்து உறங்குபவர்


நீங்கள் கூடுதலான நுண்ணறிவையும், புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் நாட்டமும் உடையவர். சில வேளைகளில் எரிச்சலூட்டக் கூடிய எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள், இதானல் மக்களால் உங்களை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். உங்களது குடும்பம் பற்றி கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். எனினும், நீங்கள் மிகவும் அரிதாகவே எவர் மீதும் அன்பு கொள்வீர்கள்.

கால்களை ஒன்றுடன் ஒன்று பின்னி மல்லாந்து உறங்குபவர்

கால்களைப் பின்னி உறங்குபவர்கள் சுயநல எண்ணத்தைக் கொண்டவர்கள், தமக்கு விருப்பான முறையில் உலகம் இயங்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு உங்களினால் முடிவதில்லை. தனிமையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கும். விட்டுக்கொடுப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை.

குறுகிய நிலையில் உறங்குபவர்




உங்களது கடந்த கால தோல்விகளினால் நீங்கள் பெரிதும் மன உலைச்சல் அடைந்திருப்பீர்கள். தனிமைப்படுத்தப்பட்ட மனோநிலையைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பை இழந்து விட்டதாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புவீர்கள். எந்த நேரத்திலும் ஐயத்துடன் காணப்படுவீர்கள்.

ஒரு பக்கமாக குறுகி உறங்குபவர்



சுயநல, பொறமைக்கார மற்றும் பழிவாங்கும் குணங்களை உடையவராக உங்களை விபரிக்க முடியும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். மற்றவர்களினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் உங்களை அதிகமாக கோபப்பட வைக்கும்.

ஒரு காலை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்


எப்போதும் எதைப் பற்றியாவது முறைப்பாடு செய்வதே உங்களது வாடிக்கையாக அமைந்திருக்கும். பதற்றக்காரர் என்பதனை உங்களது புனைப்பெயராக சூட்ட முடியும். சிறிய விடயங்களினால் கூட நீங்கள் பதற்றமடைந்து கோபப்படக்கூடும். வாழ்க்கை என்பது பாரிய விடயமல்ல, இலகுவாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு கையை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்



ஒரு காலை மடக்கி உறங்குபவருக்கு நேர் எதிரான குணங்களை நீங்கள் கொண்டிருப்பீர்கள். பண்பான, நேர்மையான, அன்பானவராக திகழ்வீர்கள். எதிலும் முழுமை இருக்காது. தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும், பிழைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பழகிக்கொண்டால் வாழ்க்கையில் எப்போதும் வசந்த வீசும்.

ஒரு பக்கமாகவே உறங்குபவர்



நீங்கள் தன்நம்பிக்கையுடைவர், என்ன காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி காண்பது உங்களது வாடிக்கை. வலது பக்கமாக, வலது கரத்தை மடக்கி தலை சாய்த்து உறங்குவோர் அதிகாரம் மற்றும் அதிஸ்டத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

கை மற்றும் கால்களை விரித்து மல்லாந்து உறங்குவோர்



நீங்கள் சுதந்திரத்தை விரும்பும் ஓர் ஆத்மா. வசதிகளை விரும்பும், அன்பை வழிபடும் நபராக நீங்கள் திகழ்வீர்கள். எனினும், நீங்கள் அடுத்தவர்களின் விடயங்கள் பற்றி குறை கூறுவதில் நாட்டமுடையவர்களாக காணப்படுவீர்கள்.

Sunday, May 22, 2011

பசியிலிருந்தும் தலைசுற்றலையும் தவிர்க்கலாம்



பரிட்சைக்கு முன்பதாக நீங்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகுவது, பாடங்களை படிப்பது போன்று இன்றிமையாததாகும். ஆகவே பரீட்சைக்கு முன்பு நீங்கள் நன்றாக உண்டால்தான், பசியிலிருந்தும் தலைசுற்றலையும் தவிர்க்கலாம். அப்போதுதான் வினாக்களுக்கும் பதிலளிக்க முடியும்.

அறிவுறுத்தல்கள்

சத்துக்கள் சமனான உணவை பரீட்சைக்கு முன் உண்ணுங்கள். பரீட்சை காலை நேரமாக இருந்தால், காலை உணவை உண்ண நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். பலத்தை வழங்குவதற்காக புரதச் சத்து நிறைந்த உணவையும் பழங்களையும் உண்ணுங்கள்.

முட்டை, கடலை, தயிர், ஷீஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை மற்றும் மதிய நேர உணவாக உட்கொள்ளுங்கள். அந்த நாள் முழுவதும் அதன் பலனை நீங்கள் பெறலாம்.

உண்ணும் உணவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில் தூக்கம் வருவது போன்று உணர்வீர்கள். சிற்றூண்டிகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். பரீட்சையின் போது தூக்கம் வரும்.

உணவிற்கு பதிலாக கோப்பி அருந்துவதை தவிருங்கள். வழமையாக நீங்கள் கோப்பி அருந்தி பழக்கப்பட்டவராயின் அதை இடைநிறுத்தும் போது தலையிடி ஏற்படலாம். அதிகளவில் கோப்பி மற்றும் உற்சாகபானம் போன்றவற்றை அருந்துவீர்களாயின் பதற்றம் ஏற்படும். கிரீன் டீ அருந்த பழகுவது சிறந்ததாகும்.

பரீட்சையின் போது பதற்றமாக இருக்கும் போது, உணவருந்த முடியாமல் இருக்கும் போது புரதச் சத்து நிறைந்த, மென்மையான, சக்தி வாய்ந்த பானங்களை அருந்துங்கள். இவை நீங்கள் உணவு உண்ணும் வரை உங்களுக்கு சக்தியை வழங்கும்.

பரீட்சை இடைவேளையின் போது உண்பதற்காக உங்கள் பைகளில் சத்துள்ள சிற்றூண்டிகளையும், பழங்களையும் வைத்திருங்கள். சக்தியை எரிக்கக் கூடிய இனிப்புப் பண்டங்களை அதிகளவில் சேர்க்காதீர்கள்.

விட்டமின்களை சேருங்கள். விட்டமின் ‘பி’ போன்றவற்றை எடுத்தீர்களானால் மூலையின் செயற்பாட்டை அதிகரிக்கும். ஆதற்கு முன் வைத்தியரின் ஆலோசனையை பெற மறவாதீர்கள். சகல சத்துக்களும் நிறைந்த உணவை உண்பதால் உங்கள் உடல் ஆரோக்கியமடைகின்றது.

பரிட்சை நேரத்தின் போது சிறிதளவு தூய நீர் அருந்துங்கள். நீர் அருந்தாமல் இருப்பின் ஒரு வரட்சி தன்மை ஏற்பட்டு பரீட்சை மீதான கவனம் குறையும்.