Showing posts with label அழகுக் குறிப்புகள். Show all posts
Showing posts with label அழகுக் குறிப்புகள். Show all posts

Tuesday, May 24, 2011

பருத்த உடல் இளைக்க...

சேர்க்க வேண்டிய உணவுகள்: 

6.00 AM 
  GREEN TEA - யை பால், சர்க்கரை இல்லாமல் காய்ச்சிய சுடு நீரில் போட்டு 10  நிமிடம் கழித்து பருக வேண்டும்.

8.00 AM
  வேக வைத்த பாசிப்பயிறு (அ) கொண்டைகடலை, சுண்டல் (அ) காணப்பயிறு + ஒரு கப் பச்சை காய்கறிகள்.

11.00 AM
  முட்டைகோஸ் சூப் (அ) காய்கறி சூப்.


1.00 PM
  ஒரு கப் சாதம் + ஒரு கப் காய்கறிகள் + ஒரு கப் கீரை.

4.00 PM
   GREEN TEA + ஒரு ஆப்பிள் (அ) ஒரு ஆரஞ்சு (அ) ஒரு கொய்யா (அ) ஒரு கீத்து பப்பாளி.
7.30 PM
  கம்பு (அ) கேப்பை (அ) கேழ்வரகு தோசை (2 NOS) + தக்காளி சட்டினி மட்டும்.

தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:


கோதுமை, ஓட்ஸ், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகள், மற்றும் கிழங்குகள், இனிப்பு வகைகள், பேக்கரி வகைகள், பொறித்த உணவுகள், தேங்காய், மட்டன், முட்டை, சிக்கன், மீன், பால் பொருட்கள், இனிப்பு வகையான பழங்கள் ( வாழை, சப்போட்டா, திராட்சை, மாம்பழம், பலாப்பழம்), பேரிட்சை, பருப்பு ( முந்திரி, பாதாம், பிஸ்தா), கூல்ட்ரிங்க்ஸ், சாக்கலேட்ஸ், பிஸ்கட்ஸ், ஐஸ்கிரீம், பார்லி, எண்ணெய் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள்.

எளிமையான உடற்பயிற்சிகள்:




ரொம்ப கடினமான உடற்பயிற்சிகள் தேவையில்லை. வெறும் கயிற்றை வைத்தே உடற்பயிற்சி செய்யலாம். அதுதான் POCKET ROPE GYM. வெறும் 250 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கிறது. அதோடு, உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கொடுத்துள்ள உடற்பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது.

கண்டிப்பாக இரண்டே வாரத்தில் சுமார் மூன்று கிலோ எடையை குறைத்து விடலாம்.


மேற்கண்ட உணவு கட்டுப்பாடும், உடற்பயிசியும் கடைபிடிப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இருந்தாலும் மிக மிக அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக OBESITY DOCTOR மூலம் ஆலோசனை செய்த பின்னர் இம்முறைகளை கடைபிடிக்கவும். ஏனெனில் அவர்களுக்கு அதிகப்படியான எடையை குறைக்க மாத்திரைகளும், மருந்துகளும் கொடுப்பார்கள்.


உடல் எடையை குறைத்த பின்னர் சரிவிகித உணவும், சீரான உடற்பயிசியும் அவசியம் தேவை. அப்பொழுது தான் குறைத்த எடையை கூடாமல் சீராக வைத்துக் கொள்ள முடியும்.

Wednesday, May 18, 2011

உள்ளங்காலில் ஒரு கண்ணாடி


உங்கள் பாதங்களில் வெடிப்புகள் இருக்கின்றதா எனப்பாருங்கள். உங்கள் உள்ளங்காலினை ஒரு கண்ணாடியைப் பாவித்து வழமைக்கு மாறாக ஏதாவது கருப்பு புள்ளிகள் அல்லது வீக்கங்கள் தென்படுகிறாதா என்று கவனியுங்கள். கிருமிகள் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கவும் உங்கள் கால் நகங்களை பாதுகாப்பான சுத்தமான மற்றும் கூர்மையான நகம் வெட்டியைக் கொண்டு வெட்டுங்கள்.
பாதங்களைப் பராமரிப்பது அழகுக்காக மட்டுமல்ல, அது உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். அன்றாடப் பாதப் பராமரிப்பு பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக உங்கள் பாதங்களுக்கு பெடிகியூர் மற்றும் சரியான காலணி போன்றவை தேவைப்படுகிறது.

இதன் மூலம் பாதங்களில் ஏற்படும் சுளுக்குகள், பங்கல் இன்பெக்ஷன், கீழ்வாதம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக நீங்கள் கீழ்வாதம் மற்றும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் உங்கள் பாதங்கள் ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவரிடம் அடிக்கடி காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பழைய செல்களை அகற்றி புது வளர்ச்சியை ஊக்குவிக்க ஸ்க்ரப் கொண்டு பாதங்களை மெருகூட்டுங்கள். புதுத் தோல் ஆரோக்கியமானது மட்டுமல்ல கையாள்வதற்கும் எளிதானது. உள்ளங்காலின் கடினத் தோல் பகுதியை ஸ்க்ரப் செய்து 10 நிமிடங்கள் வரையில் நீரில் வைத்திருந்து மிருதுவாக தேய்த்து இறந்த தோலை அகற்றுங்கள்.

குளித்த பின்னர் பாதங்களுக்கு லோஷன் தடவுங்கள். அது உங்கள் பாதத்தின் ஈரலிப்புத் தன்மையைப் பாதுகாக்கும். ளுPகு 30 கலந்த மொய்சரைசரினை கோடைகாலங்களில் பாவியுங்கள். இது அதிக வெப்பத்தினால் தோல் எரிவு ஏற்படுவதைத் தடுக்க உதவும். அமரும்போது பாதங்களை மேல்நோக்கி வைத்திருப்பதால் இரத்த சுழற்சி சீராகும். நடக்கும் போது ஷூக்களைப் பாவியுங்கள். இதன் மூலம் உங்கள் பாதத்திற்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

Thursday, April 21, 2011

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க


பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்கலின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். ஒரு வெள்ளரித்துண்டு அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.
பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும்.இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.

Tuesday, April 19, 2011

முகத்தில் தோன்றும் கருமை நிறம் நீங்க:


Tips to brighten dull complexion - Beauty Care and Tips in Tamil
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் படி உடலின் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனுடைய வெளிப்பாடு முகத்தில்தான் தெரியவரும்.
ஒரு சில கைதேர்ந்த மருத்துவர்களும், ஆன்மீக சான்றோர்களும் ஒரு மனிதனின் முகத்தை வைத்தே அவன் உடலுக்கு என்ன பாதிப்பு, மனதிற்கு என்ன பாதிப்பு என்பதை அறிந்துகொள்வார்கள்.

இன்றைய சூழ்நிலையில் அவசரம் என்ற ஒரு நோய் நம்மை ஆட்டிப்படைக்கிறது. மனதிற்கு ஏற்றவாறு உடலும் ஒத்துழைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். இதனால் இவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. 40 வயதிலேயே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என பல நோய்களால் அவதியுறுகின்றனர்.
முகம் பிரகாசமாகத் தோன்றினால்தான் அவன் ஆரோக்கியமுள்ள மனிதனாக இருக்க முடியும். முகத்தையும், சருமத்தையும் பாதுகாக்க இதோ உங்களுக்கு சில எளிய இயற்கை மருத்துவ ஆலோசனைகள்.
முகம் பளபளக்க:
குளிர்ந்த நீர் - 1/2 டம்ளர்
பசும் பால் - 50 மி.லி.

இரண்டையும் ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் சென்றதும் முகத்தை நன்றாக மென்மையாக கழுவவும். சோப், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. பருத்தியினால் ஆன துண்டை வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளக்கும்.
முகத்தில் தோன்றும் கருமை நிறம் நீங்க:
முகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க,
பசும்பால் - 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்.
முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க:
பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும்.
கண்கள் குளிர்ச்சியடைய:
உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.
தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.
தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும்.
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
இளநரை மாற:
சிலருக்கு இளம் வயதிலேயே ஆங்காங்கே வெள்ளை முடி தோன்றுவது இயல்பாகிவிட்டது. இதற்கு நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும்.
உடல் பருமன் குறைய:
உணவில் புளிப்பான பதார்த்தங்களான புளித்த தயிர், புளிக்குழம்பு, தக்காளி, எலுமிச்சம் பழம், புளித்த திராட்சை போன்றவற்றை தவிர்த்து வந்தால் நாளடைவில் உடலில் இருக்கும் தேவையற்ற சதை நீங்கிவிடும். உடல் பருமன் குறையும்.

கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.


Beauty Secrets: Black is Beauty and Healthy - Beauty Care and Tips in Tamil
செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், 'ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?' என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். இப்படி, கறுப்பு நிற தேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித தாழ்வு மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது. சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து அவர்களது ஆழ்மனதில் பதிந்து போய்விடுகிறது. ஆனால், கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
* கறுப்பாக இருந்தாலும் 'களை'யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது. முகம் களையாக இருப்பதும் அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாக-வசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு. அந்தவகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்
.
* பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.
* கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
* வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகாகக் காட்டும். அத்துடன், புன்சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்களுக்குத்தான் இன்னும் அழகாகத் தோன்றும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை விட, கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.
* வெள்ளையானவர்களின் முகத்தில் சிறு மருவோ, கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும். ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை.
* சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கறுப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பிறக்கும்போதே கறுப்பானவர்கள் ஒரு சில முறைகளால் லேசாக சிவப்பாக ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம்.
* சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் - அதேசமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.
* கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.
நீங்களும் கறுப்பான தேகம் கொண்டவர் என்றால் - உங்களிடம் அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்தால் இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு

ஸ்லிம்மான இடைக்கு......



ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்-ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். குச்சி போல் இருப்பதற்காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப்பார்கள். நம் உடலுக்கு கலோரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசியம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வேலைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள்ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் தெரிந்துகொள்வது அவசியம்.

கலோரி:

பெண் வயதுக்கு வந்தவுடன் அதிகமான கலோரி சத்துக்கள் தேவைப்படும். 13-18 வயதுள்ள பெண்களுக்கு 2,200 கலோரிகள் தேவை. கலோரிகளை தினசரி டயட்டில் எப்படி சேர்ப்பது?
பருப்பு மற்றும் கடலை வகை உணவு வகைகளை சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள் சாப்பிடலாம். தினமும் மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்களை சாப்பிடலாம்
.
புரதம்:

பருவ வயதில் புரதச் சத்து மிகவும் அவசியம். புரதம் அளவு குறைந்தால் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் உபாதைகள் ஏற்படும். மேலும் உடலில் உள்ள ஹார்மோன், என்சைம் மற்றும் ஜீரண சக்தி குறைந்து போகும். டீன் ஏஜ் பெண்கள் தினமும் 50 கிராம் புரதச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
தினமும் ஒரு கப் கொண்டைக் கடலை அல்லது காராமணி போன்றவற்றை வேக வைத்து சாப்பிடவும்.
தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். பால் பிடிக்காதவர்கள் தயிர் அல்லது பாயசம் சாப்பிடவும்.
சோயா உணவுகள், கடலை மற்றும் பருப்பு (பாதாம், முந்திரி) வகைகளை சாப்பிடலாம்.
இரும்புச் சத்து:
தினமும் ஏதேனும் ஒரு கீரை வகையை 100 கிராம் சாப்பிடலாம்.
சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து டீ, காபி பால் குடிக்கலாம்.
உலர்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம் பழங்கள் தினமும் சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகமாகும்.
முளை கட்டிய பயறு மற்றும் வைட்டமின் 'சி' அதிகமுள்ள நெல்லிக்காய், கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.
கால்சியம்:

கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. கால்சியம் சத்துக் குறைவதால் எலும்பு மற்றும் பற்கள் வலுவிழந்து சீக்கிரமே தேய்ந்து விடும்.
தினமும் ஒரு லிட்டர் பால் குடிப்பது அவசியம்.
வாரத்தில் மூன்று நாட்கள் ஏதேனும் ஒரு வகைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
ராகி, எள் போன்றவற்றில் கால்சியம் நிறைய இருக்கிறது.
அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள கால்சியம் குறையும். அதனால் முடிந்த வரை எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளலாம்.

Saturday, April 9, 2011

பொடுகுத் தொல்லை போயே போச்சு!


ப்போதெல்லாம் வெளிர் பழுப்பு, அடர் பழுப்பு போன்ற நிறங்களில் கல்லூரி மாணவிகள் தங்களின் கூந்தல் நிறத்தை மாற்றிக் கொள்கிறார்கள். அது ஃபேஷனாக இருந்தாலும், முறையான பராமரிப்பின்றி அந்தக் கூந்தல் அதே நிறத்தில் வெளிறிப் போகும்போது ‘செம்பட்டை முடி’ என்றே அழைக்கப்படுகிறது.
‘‘ஜீவனே இல்லாமல் வறண்டு போயிருக்கும் இப்படிப்பட்ட முடியை உடையவர்கள் ‘தங்கள் கூந்தலும் ஒருநாள் அலையலையாய்ப் புரளுமா?’ என்று கவலைப்படுவார்கள். அந்தக் கவலைக்குத் தீர்வு உண்டு’’ என்கிறார், ‘அவள்’ வாசகிகளுக்காக அழகு டிப்ஸ்களை வழங்கிவரும் சந்தியாசெல்வி.
இந்த இதழில் அவர் பேசப்போவது, கூந்தல் பராமரிப்பு பற்றி!
cக்கு உடனடியாக ஆரோக்கியத் தோற்றம் தரவைக்கச் சுலபமான சிகிச்சை ஒன்று உண்டு.
பீட்ரூட்-1, மருதாணி-1 கப், கத்தா (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – 2 கப், வெந்தயப் பவுடர் – 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.
முதலில் பீட்ரூட்டை மசிய அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில், பீட்ரூட், கத்தா, வெந்தயப் பவுடர் போட்டு மூடி வைத்து இறக்குங்கள். இதன் சாறு தண்ணீரில் இறங்கி விடும். வெதுவெதுப்பு நிலையை அடைந்ததும் இந்தத் தண்ணீரை வடிகட்டி, மருதாணிப் பவுடர் கலந்து ஒரு இரவு வையுங்கள்.
மறுநாள் இந்தக் கலவையை கூந்தல் முழுக்கவும் பூசி, ஒரு மணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். தொடர்ந்து இப்படி நாலைந்து தடவை செய்தாலே கூந்தலின் நிறத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.
‘இதையெல்லாம் செய்ய எங்களுக்கு நேரம் ஏதுங்க?’ என்பவர்களுக்கு கொஞ்சம் சுலபமான வைத்தியம் உண்டு. தேங்காயை நன்றாக அரைத்து, பால் எடுத்து, கூந்தலில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் பளபளக்கும்
.
குழந்தைகள் நீச்சல் குளத்தில் நீந்தும்போதும்கூட தண்ணீரில் குளோரின் கலந்திருப்பதால் முடி செம்பட்டையாகும். ஒவ்வொருமுறை நீந்தியபிறகும் முடியை நல்ல தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். தலைக்கு ‘ஷவர் கேப்’ எனப்படுகிற சிறு தொப்பி அணிந்தும் நீந்தலாம்.
முடி கருகருவென்று வளர்வதில்லை என்பது நிறையப் பேரின் கவலை. இதற்கு சுலபமான சில கை வைத்தியங்கள் உண்டு.
சோற்றுக் கற்றாழையை வெட்டி, வெந்தயத்தை அதன் வெள்ளைப் பகுதியில் தூவி, மூடி வையுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை எடுத்து, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் முடி கருகருவென்று வளரும். இது உடலுக்குக் குளிர்ச்சியும்கூட. சைனஸ், தலைவலி இருப்பவர்கள் மட்டும் இதைத் தேய்க்கக்கூடாது.
அவர்களுக்கான இன்னொரு வைத்தியம் சொல்லட்டுமா?
கறிவேப்பிலையையும் பெரிய நெல்லிக்காயையும் நன்கு அரைத்து வடை மாதிரி தட்டிக் கொள்ளுங்கள். இந்த வடைகளைச் சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு வாரம் வையுங்கள். பச்சை நிறத்தில் கிடைக்கிற அந்தத் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், கன்னங்கரேலென்ற அழகு கூந்தல் கிடைக்கும்.
பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை. ஒருநாள் தலையை அலசவில்லையென்றால்கூட அரிப்பெடுத்து, காலி பண்ணிவிடும். இந்தப் பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..
வசம்பைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைப்பகுதியில் படும்படி தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து அலசி வந்தால் பொடுகு ஓடிப்போகும்.
தேங்காய் எண்ணெயுடன் வேப்பம்பூவைக் காய்ச்சி இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வருவதும் நல்ல பலன் தரும்.
இன்னொரு வழியும் உண்டு. வேப்பிலை, வசம்பு, வால் மிளகு மூன்றையும் நன்கு அரைத்து, மயிர்க்கால் களிலும் தலையிலும் படும்படி, தடவி அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள்.
‘‘அட.. இப்போல்லாம் நீங்க தலையில கை வைக்கிறதே இல்லையே..?!’’ என்று அக்கம்பக்கத்துத் தோழிகள் ஆச்சரியப்படுவார்கள்.
———————————————————

கூந்தலின் ஜீவன்!


குழாயில் தண்ணீர் வராதது, டீன் ஏஜ் பையன் சொன்ன பேச்சு கேட்காதது போல முடி கொட்டுவதும் நிரந்தரக் கவலையாகி விட்டது. ‘அந்தக் காலத்துலயெல்லாம் இப்போ இருக்கிற மாதிரி ரெண்டு மடங்கு முடி ஒரு சடைக்கு மட்டும் இருக்கும்‘ என்று வருந்துகிற பலரும் ‘ஏன் இப்படியாச்சு?’ என்று யோசிக்கிறோமா?
‘‘யோசிப்பது மட்டுமல்ல.. கொட்டுவதற் குத் தடை போடுவதும் அவசியம்‘‘ என்கிறார் ரம்யா’ஸ் பியூட்டி பார்லர் வைத்திருக்கிற சந்தியா செல்வி. அவர் தருகிற கூந்தல் டிப்ஸ்களைப் பார்க்கலாமா?
‘பொடுகு, பேன், செம்பட்டை, முடி உதிர்தல், வறண்ட கூந்தல்’ என்று ஒவ்வொன்றுக்குமான ஸ்பெஷலிஸ்ட் கூந்தல் பராமரிப்புப் பொருள்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. மருத்துவர் அல்லது தகுந்த அழகுக் கலை நிபுணரின் அறிவுரையில் இவற்றை உபயோகிக்கலாம்தான். ஆனால், விளம்பரத்தில் மயங்கி மாற்றிக் கொண்டே இருந்தாலோ, உங்கள் கூந்தலுக்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்து விட்டாலோ பிரச்னைதான். எனவே, தரமான ஷாம்புவுக்கு முதலில் மாறுங்கள்.
உணவில் தொடங்குகிறது கூந்தல் ஆரோக்கிய ரகசியம். கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், புரதச் சத்துள்ள பொருட்கள் இவற்றைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதோடுகூட, வீட்டில் இருக்கிற பொருள்களை வைத்து கூந்தலைப் பராமரிப்பது பற்றிப் பார்க்கலாம்.
சாதாரணமானது, எண்ணெய்ப் பசை கொண்டது, வறண்டது, இரண்டும் கலந்தது என்று தலைமுடி நான்கு வகைப்படும்.
வேர்க்காலில் தொடங்கி அடிமுடிவரை பளபளவென்று ஆரோக்கியமாக இருப்பதுதான் சாதாரண கூந்தல். மற்றவர்கள் பொறாமைப்படும்படியான கூந்தல் கொண்ட நீங்கள் வாரம் ஒருமுறை அதற்கு எண்ணெய் மசாஜ் செய்யவேண்டும். பிறகு, முட்டையின் வெள்ளைக்கருவு டன் ஒரு எலுமிச்சை பிழிந்து வேர்க்கால் தொடங்கி அடி முடி வரை தடவி அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளித்து வந்தாலே விளம்பரக் கூந்தலாய் மின்னும்.
தலைக்குக் குளித்த அன்று புஸ்புஸ்ஸென்று அழகாக இருக்கும். மறுநாளே ஒரு லிட்டர் எண்ணெயைத் தலையில் கவிழ்த்தியதுபோல பிசுக்பிசுக்காகிவிடும். இதுதான் எண்ணெய்ப்பசை கூந்தல்.
சீயக்காய் அரை கிலோ, புங்கங்காய் 100 கிராம், பச்சைப் பயறு 100 கிராம், வெந்தயம் கைப்பிடி அளவு, பச்சரிசி 2 கைப்பிடி அளவு எடுத்து, அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாக உபயோகித்து வந்தால் கூந்தல் அலை மாதிரி அசைந்தாடும்.
ஜீவனே இல்லாமல் வறண்டுபோய் வெடிப்பு வெடிப் பாக இருப்பதுதான் வறண்ட கூந்தல். இயல்பாகவே தலைப்பகுதியில் எண்ணெய்ச் சுரப்பு குறைவாக இருக்கும் உங்களுக்கு. பராமரிக் காமலும் விட்டால் அவ்வளவுதான். நீங்கள் வாரம் ஒருமுறையாவது ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். முந்தின நாள் இரவே வேர்க்கால் முதல் அடிமுடி வரை எண்ணெய் தடவி மசாஜ் செய்யுங் கள். அடிமுடியில் அதிக எண்ணெய் தடவுங்கள். மறுநாள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக் கருவைக் கலந்து மசாஜ் செய்து, பிறகு குளியுங்கள் (முட்டையின் மஞ்சள் கரு உங்கள் கூந்தலுக்கு அற்புதமான மருந்து. கூந்தலை அலசிய பிறகும் முட்டை வாசனை வருவது பற்றிக் கவலை இல்லையெனில், மஞ்சள் கரு உபயோகிக்கலாம்.).
தலைப் பகுதியில் எண்ணெய்ப் பசையுடனும் கீழே செல்லச்செல்ல வறண்டும் இருப்பது இரண்டும் கலந்த கூந்தல். கூந்தலின் அடிப்பகுதிக்கு மட்டும் நிறைய எண்ணெய் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளியுங்கள். தலையை நன்றாக அலசிய பிறகு, கடைசி மக் தண்ணீரில் ஒரு எலுமிச்சை அல்லது கொஞ்சம் வினிகர் சேர்த்து அந்தத் தண்ணீரை அப்படியே தலையில் ஊற்றி விட்டு வெளியே வாருங்கள். தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் இதை மறக்காமல் செய்வதுதான் உங்களுக்கான பராமரிப்பு.
மசாஜ் எப்படிச் செய்வது என்று பார்க்கலாமா?
பஞ்சில் எண்ணெயை நனைத்து, கூந்தலை வகிர்ந்து தடவுங்கள். இதை தலை முழுக்கச் செய்யுங்கள்
விரல் நுனிகளில் எண்ணெய் தொட்டு தலை முழுக்கவும் வட்ட வட்டமாக கடிகாரச் சுற்றிலும், எதிர்த்திசையிலும் லேசாக அழுத்தம் கொடுத்தபடி தடவுங்கள்
கோதுங்கள்.
இரு கைகளாலும், தலை முழுக்க மென்மையாகக் குத்துங்கள்.
தலை முழுக்க எண்ணெய் தேய்த்த பிறகு, முறுக்கிக் கொண்டையாகப் போடுங்கள். மசாஜ் ஓவர்.
அட.. ரொம்ப சுலபமான வேலையாச்சே என்கிறீர்களா?
————————————————————–

Sunday, December 19, 2010

அழகுக் குறிப்புகள்




தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.


நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.


கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.


தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.


இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.


முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.


மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.


ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.


பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.


தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.


தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

Friday, December 17, 2010

உயிரியல் கடிகாரமும் உடல் பருமனும்…..

நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு மூலையில் “வாரணம் ஆயிரம்” சூரியா மாதிரி கட்டுமஸ்தான தேகமும், பொலிவும் கிடைக்காதா அப்படியென்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அதற்கு சூரியா என்ன செய்தார்? வேறு ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை,தான் விரும்பி உண்ணும் கோழி இறைச்சி, மற்றும் அன்றாடம் நாம் உண்ணும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு வருடம் தவிர்த்தார்.முடியுமா நம்மால்? முடியும், ஆனால் மிக மிக கடினம்.அதைக்கூட விட்டுவிடுங்கள், நம்மில் பலருக்கு மிக மிக குறைந்த பட்ச ஆசையான “தொப்பை இன்றி ஒரு வாழ்க்கை” என்ற இலக்கை கூட சமீப காலங்களில் எட்ட முடியாமல் போவதை பார்க்க முடிகிறது.இதற்க்கு பல்வேறு காரணங்கள், வேலை நேரம், போதிய நேரமின்மை, உணவு விடுதிகளில் உணவு உண்பது, வேலை பளு,தவறான நேரங்களில் உணவு உண்பது, என இன்னும் பல!
இவற்றுள் பல காரணங்கள் நம்மால் தவிர்க்க முடியாமல் போனாலும் சிலவற்றை கண்டிப்பாக தவிர்க்கலாம்.மேற்கூறிய காரணங்களுள் எதை சரி செய்தால் உடல் பருமன், தொப்பை போன்ற அசவுகரியங்களை தவிர்க்கலாம்? தெரியுமா உங்களுக்கு? இதைத்தான் தெளிவுபடுத்த முயன்றிருக்கிறது சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று. வாருங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம். அதாவது அமெரிக்காவில் இன்று கிட்டத்தட்ட 10 கோடி பேருக்குமேல் உடல் பருமன்  நோய்க்கு(obesity) உட்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்.மேலும் உலகில் கிட்டத்தட்ட 30 கோடி மக்கள் உடல் பருமனால் துன்பப்படுகின்றனர். இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்து அறியவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
ஆராய்ச்சியின் தொடக்கமாக எலிகளின் மேல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவானது தெளிவுபடுத்தும் ஒரு உண்மை என்னவென்றால், தவறான நேரங்களில் உணவு உண்ணும் பழக்கமே என்பதுதான்! அதாவது நம்ம ஊரில் குறிப்பிடுவது போல நேரங்கெட்ட நேரத்தில் உணவு உண்பது.இதற்க்கு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நள்ளிரவு நேரத்தில், அதாவது உடல் உறக்கத்தை எதிர்ப்பார்க்கும்/விரும்பும் நேரத்தில் உணவு உண்பதே ஆகும்.ஏனென்றால், நம் உடல் செயல்பாடுகள் ஒரு உயிரியல் கடிகாரத்தைப்(circadian clock/rhythms) பொருத்தே அமைகிறது என்பதால்தான்.மேலும், உணவு உண்ணும் நேரத்தையும், உடல் எடையேற்றத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது!
இரவு நேர உணவும் உபாதையும்
நள்ளிரவு நேர உணவுப் பழக்கமும் உபாதைகளும்
ஒரு மனிதன் ஏன் அல்லது எப்படி தன் உடல் எடை ஏறக்காரணமாகிறான் என்பது சற்று சிக்கலான/புரியாத  ஒரு பிரச்சனைதான் என்றாலும்
அதற்க்கு கண்டிப்பாக அவன் உண்ணும் உணவு மட்டுமே காரணம்  என்பது அர்த்தமல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.அதாவது நாம் உண்ணும் உணவைப் பொருத்து மட்டுமே அமைவதல்ல உடல் பருமன் நோய்.மாறாக, நாம் உண்ணும்  உணவின் அளவு ,நேரம், நமது மனநிலை என பல காரணங்கள் இருப்பினும் அவற்றுள் மிக முக்கியமான ஒன்று இந்த உணவு உண்ணும் நேரம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!
உயிரியல் கடிகாரமும்(circadian clock) உடல் செயல்பாடுகளும்
உயிரியல் கடிகாரம் என்பது இரவு/பகல் சுழற்ச்சியை ஏற்படுத்தும் சூரிய வெளிச்சத்தை மையமாக கொண்டு இயங்கும் ஒரு உடல் கடிகாரமாகும்.இந்த கடிகாரமானது நம் உடல் செயல்பாடுகளை சரி வர செய்ய சூரிய வெளிச்சத்தைப் அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. உடல் செயல்பாடுகள் என குறிப்பிடுகையில் நாம் உணவு உட்கொள்ளுதல், உழைத்தல், பின் சக்தி குறைந்து களைப்பில் உறங்குதல் போன்றனவே!  மேற்கூறிய இவை அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் உடல் ஆரோக்கியம் காக்கப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளும், நல்ல வாழ்க்கையும் அமைகிறது.இதற்க்கு இன்றியமையாததாகிறது உயிரியல் கடிகாரத்தின் தடைபடாத இயக்கம்!
800px-Biological_clock_human-773742
உயிரியல் கடிகாரம்
எனவே இங்கு முக்கியமான ஒரு கருத்து என்னவென்றால் “நேரத்திட்டமிடுதல்” என்பதே ஆகும்.ஆதாவது, சாப்பிட வேண்டிய  நேரத்தில் சாப்பிடுதல், உழைக்க வேண்டிய நேரத்தில் உழைத்தல் மற்றும் தூங்க வேண்டிய நேரத்தில் தவறாமல் தூங்குதல் எனலாம்! இவை அனைத்தையும் சரியான நேரத்தில் மேற்கொள்ளும் ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டோமானால் நமக்கு இந்த உடல் பருமன்/தொப்பை போன்ற அசவுகரியங்கள் ஏற்ப்படாது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.
biological_clock 2
நேரத்திட்டமிடுதலும் அன்றாட செயல்களும்
எனவே சரியான நேரத்திட்டமிடுதலுடன்  நமது அன்றாட வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்வோம்.ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன் கூடிய வாழ்வை வாழ்வோம்!