Tuesday, December 20, 2011

Youtube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை மட்டும் தேட

இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது ஆன்லைனில் வீடியோக்கள் பகிரும் தளமாகும். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும்.
நாம் ஏதேனும் வீடியோவை ஆவலுடன் தேடினால் இதில் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். ஒரு சில வீடியோக்கள் ஆரம்பத்தில் சரியாக போகும் நடுவில் பிரச்சினையை ஏற்ப்படுத்தும். ஆகையால் நாம் தேடும் போதே தரம் மிகுந்த வீடியோக்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என்று இங்கே பார்ப்போம். 

இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்க தேவையில்லை.

முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள்.

உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும்.
இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். 
இதில் தரம் மிகுந்த(High Quality) வீடிக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் '&fmt=18' (Stereo, 480 x 270 resolution) இந்த வரியை கொடுக்கவும். 
அல்லது '&fmt=22' (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.



(OR)



உங்கள் வார்த்தைக்கும் இந்த வரிகளுக்கும் இடைவெளி விடவேண்டாம். தொடர்ந்து டைப் செய்யவும். 
நீங்கள் தேடும் வீடியோக்களில் இந்த தரங்களில் வீடியோ இருந்தால் மட்டுமே உங்களுக்கு வரும் இல்லையேல் NO VIDEOS FOUND என்ற செய்தி தான் வரும். அதற்க்கு கீழே தரம் குறைந்த வீடியோக்கள் வரும் அதில் பார்த்து கொள்ளவும்.

    அவன், இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டான்.

    என் வயது 22. என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினர்; நில புரோக்கர் வேலையும் செய்கிறார். என் அம்மாவுக்கு ரத்தகுழாய் அடைப்பு உள்ளது. மாத்திரை சாப்பிட்டு வருகிறார். நான், பத்தாம் வகுப்பு படித்து முடித்து, தையல் வேலை செய்கிறேன். அக்காவுக்கு திருமணமாகி, ஏழு வருடம் ஆகிறது; ஆனால், குழந்தையில்லை.

    எங்களுடைய பிரச்னை, என் அண்ணன். அவன் ஒரு குடிகாரன்; ஒரு வேலைக்கும் செல்ல மாட்டான். இவனுக்கு திருமணமாகி, இரண்டு வருடமாகிறது. இப்போது அவன் மனைவி, இரண்டு மாத கர்ப்பமாக இருக்காங்க. என் அப்பா வீட்டை விட்டு வெளியே போனவுடன் இவன் வந்து, என் அம்மாகிட்டேயும், என்கிட்டேயும் சண்டை போடுவான். நாங்களும், இவன் இப்படித்தான் என்று விட்டு விட்டோம். ஆனால், இப்ப இரண்டு மாதமாக ஞாயிற்றுக்கிழமை வந்தால் விடமாட்டேங்கிறான். "உன் மகள் மலடி. வாரிசு இல்லாம சாகப் போறீங்க. உன் மகளுக்கு நீ திருமணம் முடிப்பியா பார்ப்போம்...' என்று பேசுவான். பதிலுக்கு நாங்க அழுதுகிட்டே, "ஏண்டா... அடுத்தவங்க பேசுனா, கூட பிறந்தவங்க கிட்ட சொல்லலாம்... நீயே இப்படி சொல்றே...' என்று கேட்டால், அசிங்க அசிங்கமாக பேசுவான். நாங்க வாடகைக்கு குடியிருக்கோம். 

    நாங்க அழறதை அவன் ரசிக்கிறான். அவன் குடியிருக்கும் வீட்டுக்கு நாங்க ஒரு வருடம், வீட்டு வாடகை கொடுத்தோம். அவனுக்கு பெண் எடுத்த வீடு வசதியில்லாதவங்க என்று வாடகை கொடுத்தோம். ஆனா, தன் மருமகளுக்கு மூன்று பவுன் நகை போட்டாங்க என் அம்மா. அவங்க அதை வாங்கி வித்து, அவங்க கடனை அடைச்சுட்டாங்க. நாங்க இவன் சரியில்லை என்று அதை கேட்காம, "அப்ப நீங்க வாடகை கொடுங்க...' என்று சொல்லி விட்டோம். 

    அவங்க நான்கு மாதம், 400 ரூபாய் வாடகை தந்து, அப்ப அப்ப அவங்க மகளுக்கு, 100 - 200 ரூபாய் கொடுத்து, இப்போது, உனக்கு சீர் செய்ய வேண்டும். எங்களால வாடகை தர முடியாது. உன் மாமனாரிடம் கேட்டு வாங்கிக்கொள்...' என்று கூறினர். நானும், என் அப்பாவும் தான் வேலை செய்கிறோம். ரியல் எஸ்டேட் பிசினசில் என் அப்பாவுக்கு எப்போதாவதுதான் பணம் கிடைக்கும். என் சம்பள பணம் ஓரளவு கைக்கொடுக்கும். மற்ற செலவு எல்லாத்தையும் என் அப்பா கடன் வாங்கி செலவு செய்வார். 

    என் அண்ணனின் நடவடிக்கை, என் அம்மாவின் மனதை ரொம்ப காயப்படுத்துகிறது. 

    உங்கள் மூலம் என் குடும்பத்துக்கு ஒரு நல்வழி பிறக்க வேண்டும். என் அம்மா, என் அப்பா என்று சொல்லும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. என் அப்பா நிலைமையில் வேற யாராவது இருந்தா, எங்களை விட்டு போயிருப்பாங்க. என் அப்பா எனக்காகவும், என் அக்கா, என் அம்மாவுக்காகவும் இருக்காங்க. என் அண்ணனுக்கு நீங்கதான் புத்தி சொல்லணும். ஆனால், போலீசுக்கு போக சொல்லாதீங்க. அவன், இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டான். எனக்கு வேற வழி தெரியவில்லை. எனக்கும், என் குடும்பத்திற்கும் நல்வழி காட்டுங்க.

    அன்புள்ள மகளுக்கு—

    உன் அண்ணனுக்கு வயது, 25 - 27 இருக்கும் என அனுமானிக்கிறேன். ஏறக்குறைய உன் அண்ணன், 10 வருடங்களாகவே குடித்து வருகிறான் என நம்புகிறேன்.

    நீண்ட நாள் குடிநோயாளிகளுக்கு கைகால் நடுக்கம், பதட்டம், இல்லாதது போன்ற மாயத் தோற்றம், பிரமை, உருவெளித் தோற்றம் ஏற்படும். இவர்கள் செய்யும் காரியங்களில் புத்திசாலித்தனமும், விவேகமும் இராது. உடல்பலம் இழந்திருப்பர். அன்றாட பிரச்னை களுக்கு தீர்வு காண முடியாமல் திண்டாடுவர். சமுதாயத்தோடு ஒட்டி ஒழுக மாட்டார்கள். பசி இருக்காது. ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். வயிற்றில் புண்ணும், ஈரலில் வீக்கமும் ஏற்படும். ஆண்மைக் குறைபாடு ஏற்படும். பல் பராமரிப்பு இல்லாது பல் நோய் பீடித்திருக்கும். திருமணமானவர்களுக்கு மனைவி மேல் சந்தேகம் கூடும். இவர்கள் குடிபோதையில் வெறியாட்டம் ஆடும் போது, மற்றவர்கள் அருவருப்புடன் விலகுவர். அதை பயம் கலந்த மரியாதை என சந்தோஷப்பட்டுக் கொள்வர். இவர்களுக்கு இதயநோய், நரம்பு தொடர்பான வியாதி, சிறுகுடல் அழற்சி நோய் பாதிப்பு வரும். மிதமிஞ்சி குடிக்கும் போது, ரத்தத்தில் ஆல்கஹால் அளவு கூடி, கோமா நிலை வரும். கோமாவைத் தொடர்ந்து மரணம். இவை அனைத்தும் உன் அண்ணனுக்கு இருக்கும் என நம்புகிறேன்.

    உன் அண்ணன் போன்ற இளம் குடிகாரர்கள், தெருவுக்கு நாலு பேர் உள்ளனர். இவர்கள், டாஸ்மாக் பாரில் சக குடிகாரர்களோடு சண்டை போட மாட்டார்கள். வீட்டிலிருக்கும் அபலைப் பெண்களான அம்மா, அக்கா, தங்கையோடுதான் சண்டை போடுவர். ஏனெனில், இந்த மூன்று பெண்களும் எதிர்த்து பேச மாட்டார்கள், தாக்க மாட்டார்கள்.

    பொதுவாக, ஒரு ஆணோ, பெண்ணோ மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி விட மாட்டார்கள்; வார்த்தைகளை தணிக்கை செய்வர். எந்த உறவுக்கு, என்ன மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்ற அறிவு இருக்கும். குடிபோதையில் தடைக்கட்டு போய் விடும். மிருகத்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக இதயத்தில் குருதி வழியும் அளவுக்கு, சாக்கடை வார்த்தைகளை அள்ளி வீசுவர். இவர்களை திருத்துவது மிகக் கடினம்.

    உன் தந்தை லோக்கல் அரசியலில் ஈடுபட்டு, மகனை ஒழுக்கமாக வளர்க்காமல் போய் விட்டாரோ! தந்தையின் மிதமான குடிப்பழக்கம், மகனுக்கு கடுமையான குடிப்பழக்கமானதோ?

    உன் அக்கா கணவன் துணிச்சல் இல்லாதவர் அல்லது மச்சினனின் துர்நடத்தையை கண்டு வெறுத்து ஒதுங்கியவர் என நினைக்கிறேன்.

    காவல்துறைக்கு போகச் சொல்லாதீர்கள் என எழுதியிருக்கிறாய். நீயோ, அக்காவோ காவல் நிலையம் போக வேண்டாம். உன் அம்மாவை விட்டு, மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொல். உங்களுக்கு சொத்து என்று ஏதாவது இருந்தால், அவனது பங்கை கொடுத்து, தனிக்குடித்தனம் போகச் சொல்லுங்கள். தனிக்குடித்தனம் போவதை எழுத்துபூர்வமாய் எழுதி வாங்குங்கள். அதை மீறி நடந்தான் என்றால், அம்மா, அக்கா, தங்கையை கொல்ல முயற்சிக்கிறான் என புகார் கொடுங்கள். அடியாத மாடு படியாது. தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால், தாங்காமல் ஓடி விடுவான் உன் அண்ணன்.

    உன் அக்காவையும், மாமாவையும் மருத்துவரிடம் அனுப்பி, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள சொல். குணப்படுத்தக் கூடிய குறைபாடு இருவரில் யாரிடம் இருந்தாலும், குணப்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

    நீ தபாலில் பவுண்டேஷன் கோர்ஸ் படி; அதன்பின் பட்டப்படிப்பு படி. அப்பாவை விட்டு நல்ல வரன் பார்க்கச் சொல்லி, நான்கு ஆண்டுகளுக்குப் பின் கல்யாணம் செய்து கொள்.

    உன் தந்தையை அரசியலை உதறிவிட்டு முழு நேர ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகச் சொல்; வருமானம் பெருகும். குடும்பத்தில் சந்தோஷம் பரவும்.

    ஜெயா டிவியை சசி குடும்பத்திடமிருந்து மீட்க ஜெயலலிதா திட்டம்

    அதிமுகவின் எந்த ஒரு மூலையிலும் சசி குடும்பத்தாரின் நிழல் கூட இருக்கக் கூடாது என்ற முடிவில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு அவர்களை துரத்தி விட்டு விட்ட ஜெயலலிதா, அடுத்த இந்தக் கும்பலிடமிருந்து ஜெயா டிவியை மீட்டு அதை சுத்தப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் பல அதிரடி நடவடிக்கைகளில் அடுத்தடுத்து இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

    ஜெயலலிதா லைம்லைட்டுக்கு வந்து முதல் முறையாக முதல்வரான போது அப்போது திமுகவுக்கு பெரும் பக்கபலமாக இருந்தது சன் டிவிதான். இதை உணர்ந்த ஜெயலலிதா அதிமுகவுக்கும் ஒரு டிவி வேண்டும் என்பதற்காக சசி குடும்பத்தார் மூலம் தொடங்கிய டிவிதான் ஜெஜெ டிவி. பின்னர் இது ஜெயா டிவியாக உருமாறியது. 

    ஜெயா டிவியின் நிர்வாகத்தை ஆரம்பத்திலிருந்தே சசிகலா குடும்பத்தினர்தான் கவனித்து வருகின்றனர். ஜெயா டிவியின் அனைத்து நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் அனுராதா. இவர் டிடிவி தினகரனின் மனைவி ஆவார். 

    இந்த டிவியின் கணக்கு வழக்கு, நிர்வாகம், என்ன செய்கிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு எதுவுமே தெரியாது என்கிறார்கள். தனது பெயரில் டிவி வருகிறது, அதில் அதிமுக செய்திகளையும் காட்டுகிறார்கள் என்ற அளவுக்குத்தான் ஜெயலலிதாவுக்கும், இந்த டிவிக்குமான தொடர்பு என்றும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு சசி குடும்பத்தாரின் நாட்டாமை ஜெயா டிவியில் அதிகம் என்பது அதிமுகவினரின் கருத்தாக உள்ளது. 

    தொடங்கி 14 ஆண்டுகளாகியும் இதுவரை மக்கள் மத்தியில் ஜெயா டிவிக்கு என்றொரு நல்ல பாப்புலாரிட்டி இல்லை. மேலும் அதிமுகவினர் மத்தியிலும் கூட இந்த டிவியால் பெரிய அளவில் லாபம் இல்லை என்றும் கூறப்படுகிறது. காரணம், அந்த அளவுக்கு கோக்குமாக்கான நிர்வாகம், சரியில்லாத நிகழச்சிகள், நடுநிலையுடன் கூடிய நிகழ்ச்சிகள் அதிகம் இல்லாதது, ஒளிபரப்பில் தரமில்லாதது என ஏகப்பட்ட குறைகள் ஜெயா டிவியில் உள்ளன. 

    சன் டிவிக்கு இதுவரை ஒரு நொடி கூட கடுமையான போட்டியையோ, பீதியையோ எழுப்பியதில்லை ஜெயா டிவி என்பதிலிருந்தே அந்த டிவியின் தொழில்துறை தரத்தைப் புரிந்து கொள்ளலாம். ஜெயா டிவி இப்படி பொலிவிழந்து கிடக்க முக்கியக் காரணமே சசி கலா குடும்பத்தார் அதை தங்களுக்கு சாதகமான ஒரு பணம் கறக்கும் கருவியாக மட்டுமே பார்த்து நடத்தி வந்ததுதான் என்கிறார்கள் அதிமுகவினர். 

    மேலும் ஜெயா டிவியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் சசி குடும்பத்துடன் கை கோர்த்துக் கொண்டு பெருமளவில் விளையாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அனுராதவும், ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகி ஒருவரும் இணைந்து தனியாக விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள். 

    இதேபோல அதன் செய்திப் பிரிவிலும் கூட ஜெயலலிதா குறித்த செய்திகளை பெருமளவில் குழப்பவே ஒரு தரப்பு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாம். அதாவது ஜெயலலிதா தொடர்பான செய்திகளை குழப்பமாகவே காட்டி மக்களைக் குழப்பி, ஜெயலலிதாவுக்கு மோசமான இமேஜை உருவாக்குவது என்ற சசி குருப்பீன் அஜென்டாவை இவர்கள் நீக்கமற நிறைவேற்றி வருகிறார்களாம். 

    இப்படி ஏகப்பட்ட குழப்பங்களுடன் நடந்து வரும் ஜெயா டிவி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, தரமான டிவியாக மாற்ற ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

    யாரும் இல்லாத நேரத்தில் பள்ளியில் மாணவிகள் சில்மிஷம்!!

    பள்ளியில் மாணவ, மாணவிகள் சில்மிஷங்களில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப் பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி உள்ளது .

    இங்கு 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு ஐந்து மாணவர்கள், 2 மாணவிகள் வந்துள்ளனர். ஊர்க்காரர்கள் கேட்டபோது, ஸ்பெஷல் கிளாஸ் நடக்கிறது. இதற்காக வந்துள்ளோம் என கூறியுள்ளனர்.

    ஆனால் பள்ளியில் ஆசிரியர்கள் ஓருவர்கூட இல்லை. இதனால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மறைமுகமாக கண்காணித்துள்ளனர். அப்போது மாணவர்களும் மாணவிகளும் பள்ளியின் முதல் மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து, போட்டு பார்த்து ரசித்துள்ளனர்.

    இது பற்றி அறிந்த தலைமை ஆசிரியர், சம்பவ இடத்துக்கு வந்தார். தவறாக நடந்துகொண்ட மாணவ, மாணவிகளை பிடித்து விசாரித்தார். பின்னர் மாணவர்கள் ஐந்து பேருக்கும் உடனே டிசி கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், இன்று காலை பள்ளியில் பெற்றோர்கள் குவிந்தனர்.

    பள்ளியில் தவறாக நடந்த மாணவிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

    இளைய தளபதிக்கு ஒரு கடிதம்

    எதிர்கால தமிழக முதல்வரும் , அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மிக கடினமான சோதனைகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்து முனைவர் படம் பெற்று அதை பெருமையாக தன் பெயருக்கு பின்னால் எப்பொழுதும் போட்டு கொள்ளும் இளையதளபதி டாக்டர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, 
    உங்களை பற்றி ஏதாவது எழுதினால் உங்கள் அடி பொடிகள் ஏதோ நாங்கள் பொறாமையில் எழுதுவதாக பிதற்றுகிறார்கள். உங்கள் மேல் பொறாமை படும் அளவுக்கு நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. நீங்கள் ஒரு சினிமா நடிகனாக மட்டும் தங்களை அடையாளபடுத்தி இருந்தால் உங்களை புறக்கணித்து விட்டு நாங்கள் எங்கள் வேலையை பார்த்து கொண்டிருப்போம். ஆனால் ஒரு சமூக ஆர்வலராக , எதிர்கால அரசியல்வாதியாக மாற முயலும் உங்கள் நடவடிக்கைதான் உங்களை பற்றி இப்படியெல்லாம் எழுத தூண்டுகிறது. 

    எனக்கு உங்களின் சினிமாக்கள் பெரும்பாலும் பிடிக்காது (கில்லி ,சிவகாசி மட்டும் விதிவிலக்கு) ,ஆனால் இந்த பதிவு அதை பற்றியது இல்லை. உங்களின் மற்ற இரண்டு பரிமாணங்களான சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆகியவற்றை பற்றிதான் எழுதபோகிறேன். அஜீத் இந்த இரண்டு பரிமானங்களிலும் தன்னை வெளிபடுத்திக்கொள்வதில்லை என்பது எனக்கு சாதகமான விஷயம்தான் என்றாலும் அதற்காக மட்டும் இதை எழுதவில்லை ,சினிமாவில் நடித்து விட்டு ,தனக்கு பின்னால் ஒரு கூட்டம் கூடியவுடன் முதல்வர் கனவுடன் எந்தவிதமான தகுதியும் இல்லாமல் அரசியலில் இறங்க துடிக்கும் உங்களை போன்ற சமூகத்தை கெடுக்கும் கிருமிகளை பார்க்கும் போது சூடு சுரணையுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் எழும் ஆதங்கம் என்னுள்ளும் எழுந்ததே முக்கிய காரணம். 
    நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது மற்ற போராட்டங்களை போல இது ஒரு அரசியல்வாதியின் தலமையிலோ , இல்லை கார்ப்பரேட் முதலாளிகளின் ஸ்போன்சர்ஷிப்பிலோ , ஜாதி தலைவரின் பெயரை கொண்டோ , உங்களை போன்ற சினிமா நடிகனின் சுயநலத்துக்காகவோ இந்த போராட்டம் நடைபெறவில்லை. மக்களே முன்னின்று இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். நம்முடைய காலகட்டத்தில் இவ்வளவு மக்கள் ஒரு பிரச்சனைக்காக ஒன்று கூடி நாம் பார்திருக்க இயலாது.

    நீங்கள் நாகபட்டினத்தில் உங்கள் சுயநலத்திர்க்காக கூட்டிய கூட்டத்தை விட அதிகமான கூட்டம் ஒவ்வொரு நாளும் தேனியில் கூடுகிறது. விஷயம் அதுவள்ள,  இலங்கையில் தமிழன் மீது தாக்குதல் நடந்த போது உண்ணாவிரதமும் , மீனவன் சுடபடுவதற்க்கு கண்டன கூட்டமும் நடத்தி தமிழனின் மீது அக்கறை இருப்பதை போல காட்டி கொண்டீர்கள். அன்னா ஹசாரே மீடியாக்களின் துணையோடு ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்திய பொழுது ஒரு மணிநேரம் மட்டும் அந்த மேடையில் அவரோடு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து போட்டோவுக்கும் ,வீடியோவுக்கும் போஸ் கொடுத்துவிட்டு வந்தீர்கள் . உங்கள் பட வெளியீட்டு நாளிலும் ,உங்கள் பிறந்த நாளிலும் ஏழைகளுக்கு தையல் மெசினும் . கறவை மாடும் இலவசமாக கொடுத்து அதை பேப்பரிலும் ,டிவியிலும் விளம்பரபடுத்தி கொண்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்தீர்கள். ஒன்று உங்கள் அரசியல் பிரவேசத்திர்க்கு ஏழை பங்காளன் என்ற விளம்பரம் , இன்னொன்று இதையே காரணம் காட்டி கள்ளக்கணக்கு எழுதி வருமான வரியில் கொஞ்சம் விலக்கு… அப்பொழுதெல்லாம் மக்களின் நலனை விட மீடியாக்களில் உங்கள் பெயர் பரபரப்பாக அடிபடபட வேண்டும் , மக்கள் மத்தியில் ஒரு சமூக ஆர்வலராக
    உங்களை காட்டி கொள்ள வேண்டும் என்ற முனைப்பில்தான் நீங்கள் இதையெல்லாம் செய்தீர்கள் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டிருந்தது … அதுதான் உண்மையும் கூட. 

    பக்கத்து நாட்டில் தமிழன் அடிபட்ட பொழுது , கூட்டத்தை கூட்டி நான் அடிச்சா தாங்க மாட்ட , உலக வரைபடத்திலிருந்து உன் நாட்டையே தூக்கிடுவேன் என்று சிங்களவனை பார்த்து வீராவேசமாக வசனம் பேசினீர்களே , இன்று சொந்த நாட்டிலேயே தமிழன் உரிமை பிரச்சனைக்காக போராடி கொண்டிருக்கிறானே ,  அவனுக்காக இறங்கி போராடாமல் , அமைதி காப்பது
    ஏன்? சிங்களவனை கண்டித்து நாகபட்டினத்தில் கூட்டம் கூட்டியதை போல ,நமக்கு தண்ணீர் தர மறுக்கும் மலையாளியை கண்டித்து தேனியில் ஒரு கண்டன ஆர்பாட்டம் நடத்த வேண்டியதுதானே?அதில் மலையாளியை பார்த்து நான் அடிச்சா தாங்க மாட்ட ,இந்திய வரைபடத்திலிருந்து உங்க மாநிலத்தையே தூக்கிடுவேன் என்று வாய் சவாடல் விட வேண்டியதுதானே. 

    கண்டிப்பாக முடியாது ,காரணம் சிங்களவனை எதிர்ப்பதால் உங்களுக்கோ உங்கள் படத்துக்கோ எந்த பாதகமும் நேர்ந்துவிட போவதில்லை மாறாக இலங்கை தமிழர்களின் ஆதரவு உங்களுக்கும், உங்கள் படத்துக்கும் அதிகமாகும் . ஆனால் மலையாளியை பகைத்து கொண்டால் உங்கள் படத்தை கேரளாவில் வெளியிட தடை விதிப்பார்கள் , மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யாரும் உங்கள் படத்தை பார்க்கமாட்டார்கள். இப்படி இழப்பு உங்களுக்கு என்னும் பொழுது நீங்கள் எப்படி தமிழனுக்கு ஆதரவாக களம் இறங்குவீர்கள். கண்ணுக்கு தெரியாத ஊழல்வாதிகலையும் , உங்களை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத சிங்களவனையும் எதிர்த்த உங்களால் இப்பொழுது தமிழனுக்காக மலையாளியை எதிர்க்க முடியுமா? அது விளம்பரதுக்கு ஆசைப்பட்டு உயிரையே விட்ட கதையாகி விடும் என்று உங்களுக்கு தெரியாதா? உங்கள் படங்கள் கேரளாவில் அதிகபட்சம் மூன்று கோடி வசூலை கொடுக்குமா? தமிழனுக்காக அந்த மூன்று கோடியை புறந்தள்ளிவிட்டு இறங்கி போராட முடியுமா? அரசியலுக்கு வருவதற்க்கு முன்னரே ஒவ்வொரு விசயத்திலும் சுயநலமாக செயல்படும் நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்துவிட முடியும்? இப்படிபட்ட உங்களை பற்றி நல்லாவிதமாக மட்டுமே எழுத வேண்டும் என்று நீங்களும் உங்கள் அடிபொடிகளும் எப்படி எதிர்பார்க்கலாம்? 

    கடைசியாக இன்று அரசியலில் இருந்து கொண்டு ஊழல் செய்து நாட்டை குட்டி சுவாராக்கி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை விட தன்னுடைய சுயநலத்துக்காக தனக்கு பின்னால் இருக்கும் கூட்டத்தை பயன்படுத்தி எந்த தகுதியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியலில் இறங்க துடித்து கொண்டிருக்கும் உங்களை போன்றவர்கள் தான் மிகவும் அபாயகரமானவர்கள். இவர்களை போன்றவர்களை நம்மால் எல்லாம் திருத்த
    முடியாது,இவர்களுக்கு பின்னால் இருந்து கொண்டு ,இவர்களின் சுயநலதிர்க்கு பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் இவர்களின் தொண்டர்கள் தான் இவர்களை புறக்கணிக்க வேண்டும். ஆனால் சினிமா மாயையில் மூழ்கி கிடக்கும் அவர்கள் இதையெல்லாம் சிந்திக்கவா போகிறார்கள்? 

    சினிமாவும் அரசியலும் அனைவருக்கும் பொதுவானவை, அதில் நுழைய எப்படி ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளதோ , அதை போல அதில் இருப்பவர்களையே விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நான் விஜயை பற்றி விமர்சிப்பதில் ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். நான் அஜீத் ரசிகனாக இருப்பதால்தான் விஜயை விமர்சிகிறேன் என்று சொல்லுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் , விஜய் அந்த அளவுக்கு வொர்த் இல்லை பாஸ்…

    இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர் ?


    இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி ஜெர்சி (30) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பம்மலில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக ஜெர்சி வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. 

    அதே பகுதியில் வசிக்கும் ஆவடி சிறப்பு காவல்படை காவலர் அருண்குமார் (28), ஜெர்சி மீது காதல் கொண்டுள்ளார். ஜெர்சியிடம் இதுபற்றி ஜாடைமாடையாக பேசியுள்ளார். பலமுறை அவரை செல்போனில் படம் பிடித்துள்ளார்.


    கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் அருண்குமார் வீட்டில் இருந்தார். ஜெர்சி வீட்டிலும் யாரும் இல்லை. இதையறிந்த அருண்குமார், ஜெர்சி பாத்ரூமில் குளிக்கும்போது எட்டிப்பார்த்ததோடு, செல்போனில் படம் எடுக்கவும் முயன்றுள்ளார். ஜெர்சி கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அருண்குமாரை அடித்து உதைத்தனர். தடுக்கமுயன்ற அவரது மனைவிக்கும் அடி விழுந்தது.

    தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் அருண்குமாரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்வதை விட்டு விட்டு ‘‘அருண்குமாரை ஏன் அடித்தீர்கள்? அவரது மனைவியை எதற்காக தாக்கினீர்கள்? உடனடியாக எங்களுக்குதானே தகவல் கூறியிருக்க வேண்டும். அருண்குமாரின் மனைவி காயம் அடைந்துள்ளார். எனவே உங்கள் மீதுதான் வழக்கு தொடர வேண்டும்’’ என்று பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதனால் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

    7 ஆம் அறிவு திரைப்பட இயக்குனருக்கு சில கேள்விகள்


    சமூகப் பிரச்சனைகளைத் தொட மறுக்கும் தொடை நடுங்கி திரைப்பட உலகத்தினைக் கடந்து துணிவுடன் விமர்சித்த தமிழன் முருகதாசுக்கு முதலில் வீர வணக்கத்தை செலுத்தி விட்டு இயக்குநர் முருகதாசுக்கு வருவோம்.

    முதல் இருபது நிமிட திரைப்படம் … கடைசி பத்து நிமிட திரைப்படம் .. இரண்டுக்கும் சேர்த்து இயக்குநருக்கு 90/100 வழங்கி விடலாம். இடையில் ஒரு ஒண்றரை மணி நேர திரைப்படத்திற்கு நாம் மைனஸ் 30 தரலாம்.

    90/100 - 30/100 = 60/100



    ஆக மொத்தம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற திரைப்படம் என்ற போதும் இயக்குநர் முன்பு நாம் வைக்கும் கேள்விகள்...



    1. படத்தின் விறுவிறுப்பை உருவாக்கிய சீன உளவாளி நம் தேசத்திற்குள் வருவதற்கு முன் 1 மணி நேர திரைப்படம் ஓடி விடுகிறதே...?




    2. சீன உளவாளி ஒரு காவல்நிலையத்தையே சுக்கு நூறாக்கி விட்ட பின்பும் காவல்துறை அவரை துரத்தாமல் இருப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதே...?




    3. போதி தர்மன் எனும் கனமான பாத்திரத்தை உருவாக்கி விட்டு, சராசரி காதல்... சராசரி காதல் தோல்விப் பாடல்... சராசரி டூயட் ... என்று ஒரு மணி நேர விரயத்தை தவிர்த்து சீன உளவாளியை முன்பே களமிறக்கி... தோழா! தோழா! பாடல் தவிர்த்து அனைத்துப் பாடலையும் நீக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடி இருக்குமே...?




    4. ஊடகங்களும் விமர்சனங்களும் ஆஹா ஓஹோ வென சுருதிஹாசனை உயர்த்தி பிடிக்கும் போது நமக்கு ஓர் விசயம் நினைவுக்கு வருகிறது.




    “சலங்கை ஒலி” திரைப்படத்தில் நடன கலைஞர் (எஸ்.பி.சைலஜா) நடனத்திற்கு கமல் ஒரு விமர்சனத்தை தனது பத்திரிகையில் பதிவு செய்திருப்பார். அந்த விமர்சனத்தைப் பார்த்து எஸ்.பி.சைலஜா கொதித்துப் போய் கமலின் பத்திரிகை அலுவலகம் வந்து பேயாட்டம் போடுவார். பஞ்ச பூதங்களும் முகவரி காட்டும்... என்ற வரியினை சுட்டிக்காட்டி கமல் விளக்கும் காட்சி … திரையரங்கே அதிரும்….




    சுருதிஹாசனின் நிலையும் அதே நிலை... ஆரம்பம் முதல் கடுமையான முயற்சி செய்து பார்த்தும் நடிப்பு வரவில்லை இருந்தும் பார்வையாளர்கள் அறியா வண்ணம் கமல் மீதுள்ள நேசத்தில் இயக்குநர் முழுவதும் வெளியில் தெரியா வண்ணம், சுருதிஹாசன் பாத்திரத்தை சூர்யாவுக்கு நிகராக இயக்குநர் கட்டமைத்து மறைத்து விட்டாரே..?




    5. போதி தர்மனாக எழும் போது சூர்யாவின் கண்களில் உள்ள ஈர்ப்பு, இதர காட்சிகளில் இல்லையே…?




    எது எப்படி இருந்த போதும் ! ஒரு புதுமையான திரைப்படத்தை தமிழருக்கு அளித்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் திரைப்பட கலைஞர்களையும் உச்சி முகர்ந்து பாராட்டியே தீர வேண்டும். குறிப்பாக தமிழ் சார்ந்த வசனங்களில் திரையரங்கே அதிர்கிறது.




    “ஈழத்தமிழர் பிரச்சனை” தேசிய இன கண்ணோட்டம்.




    மொழிவழி தேசியம்...! என தமிழ் திரையுலகம் கண்டிராத புதிய வழியை .. இப்படம் காட்டியுள்ளது. முதுகெலும்பு இருந்தும் தொடை நடுங்கி தமிழ் இயக்குநர்கள் மத்தியில் இயக்குநர் முருகதாஸ் தமிழ் தேசியத் தலைவனின் தம்பியாய் காட்சியளிக்கிறார்