Sunday, December 11, 2011

ஈவ்டீசிங் +2 மாணவியை கார் ஏற்றிக் கொன்ற மருத்துவ கல்லூரி மாணவர் கைது

ஈவ்டீசிங் பிரச்சனையால் சைக்கிளில் சென்ற +2 மாணவி மீது காரை ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரைச் சேர்ந்த செய்யது முகமது என்பவரது மகள் மைமூன் சர்மிளா(17). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் +2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து சைக்கிளில் மைமூன் சர்மிளா வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மைமூன் சர்மிளாவின் சைக்கிள் மீது கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவர் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். 

மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் மைமூன் சர்மிளா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டியவர் ஒரு கல்லூரி மாணவன் என்பது தெரிய வந்தது.

இந்த தகவலை அறிந்த மைமூன் சர்மிளா படித்து வந்த பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தனியார் மருத்துவமனை முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவனை உடனடியாக கைது செய்யக் கோரி சாலை மறியிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அதன்பிறகு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த பள்ளி மாணவ, மாணவியர் அங்கே முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பள்ளி மாணவ, மாணவியர் சார்பாக கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

பள்ளி மாணவி மைமூன் சர்மிளா சென்ற சைக்கிளின் மீது ஒரு கல்லூரி மாணவர் காரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் மைமூன் சர்மிளா படுகாயமடைந்து இறந்துவிட்டார். தற்போது தலைமறைவாகி உள்ள அந்த கல்லூரி மாணவர் சர்மிளாவை பல நாட்களாக பின் தொடர்ந்து வந்து கிண்டல் செய்தவர்.

சம்பவத்தன்று புதிய காரில் வந்த அந்த மாணவர் வழக்கம் போல சர்மிளாவை கிண்டல் செய்தார். அதில் பயந்து போன சர்மிளா, சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது அந்த மாணவர் சர்மிளாவின் சைக்கிள் மீது காரை மோதவிட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சர்மிளா இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, அந்த மாணவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்மிளா மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற கார் மானூரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியவர் மானூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் மகன் மோனீஸ் ரேஷர்(19) என்பதும், அவர் சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து மோனீஷ் ரேஷரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் கருணாசாகர் கூறியதாவது,

பள்ளி மாணவ, மாணவியர் அளித்த புகாரின் பேரில் விபத்து வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

ஹீரோயின் ஷூட்டிங்கில் நடந்த ஆச்சரியம்.


மதூர் பண்டார்கர் தனது ஹீரோயின் படத்தின் ஷூட்டிங்கை அர்ஜுன் ராம்பால், க‌ரீனா கபூரை வைத்து தொடங்கிவிட்டார். ஐஸ்வர்யாராய் அடம்பிடித்தது போல் அவரை கதாநாயகியாக்கியிருந்தால் இந்நேரம் மதூர் தாலாட்டுதான் பாடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

சென்ற 26ஆம் தேதி ஹீரோயின் ஷூட்டிங்கில் ராம்பால் தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் காட்சியை எடுத்தனர். ஆச்ச‌ரியமாக அதேநாள்தான் ராம்பாலின் பிறந்தநாள். மதூர் இது தெ‌ரியாமலே இந்தக் காட்சியை வைத்துள்ளார்.

தர்மேந்திரா வளர்ந்து வரும் காலத்தில் அவரது பிறந்தநாளுக்கு நடிகை மீனா குமா‌ரி கேக் வெட்டினார். அதை இந்தக் காட்சி பிரதிபலிப்பதாக கிசுகிசுக்கிறார்கள். மீனா குமா‌ரியின் பாத்திரத்தில் க‌ரீனா கபூரும் குறிப்பிட்ட காட்சியில் ராம்பாலுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஸ்கூல்களில் கவர்ச்சியாக ஸ்டைல் உணவுகள்,!

The junk foods in the fancy, colorful wrappers that come to school in many kids’ lunch boxes are way too tempting for our kids to resist. Do you experience after you pack your kid a healthy lunch, and many times it would come back uneaten? When you opened up the lunch box after school, do you see it all still sitting there, completely untouched?

Now it’s time for you to come up with better ideas for a healthy school lunch that would be appealing enough so the kid would eat it.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஸ்கூலுக்குச் செல்லும்போது கொடுத்துவிடும் லஞ்ச், பாக்ஸோடு அப்படியே திரும்பி வருகிறதா? நீங்கள் கொடுத்துவிடும் உணவு நன்றாக இல்லை என்று குழந்தை சொல்கிறதா? அல்லது, குழந்தை உணவை உண்கிறது, ஆனால் உங்கள் குழந்தையை கோஷாக்கு காரணங்களுக்காக டாக்டரிட் அழைத்துச் செல்ல வேண்டிய தேவை அவ்வப்போது ஏற்படுகிறதா?

டிப்பிக்கல் அமெரிக்க ஸ்கூல் லஞ்ச் - Crackers, beans, milk, chicken and some salad.

Let’s face it. நீங்கள் கொடுத்துவிடும் லஞ்சில்தான் சிக்கல் உள்ளது.

உணவைக் கொடுத்துவிடும்போது கிரியேட்டிவ்வாக நீங்கள் செயற்பட்டால், இந்தச் சிக்கல் ஏற்படாது.

சூப்பர் மார்க்கெட்களில் விற்பனையாகும், ஜங்க் ஃபூட்களைப் பாருங்கள். அவை குழந்தைகளுக்கு பிடிக்கின்றன.

பிரான்ஸில் ஸ்கூல் உணவு (meat) - French fries, a slice of baguette, a burger patty, a slice of cake and a puff pastry.

காரணம், கவர்ச்சிகரமமாக செய்யப்பட்ட பேக்கிங், கலர்ஃபுல்லான உணவு.

ஆனால், தொடர்ச்சியாக அப்படியான உணவு குழந்தைக்கு கொடுப்பது கெடுதல் என்பது உங்களுக்கு தெரியும்.

இருந்தாலும், வேறு எந்த உணவையும் மறுக்கும் குழந்தைக்கு வேறு வழியில்லாமல், “இதையாவது உண்ணட்டும்” என்று கொடுப்பதில்தான் அவற்றின் விற்பனையில் 70 சதவீதம் உள்ளது. மிகுதி 30 சதவீதம்தான், பெற்றோர்களால் விரும்பி வாங்கிக் கொடுக்கப்படுகின்றன.

பிரான்ஸ் ஸ்கூல் உணவு (seafood) - Mussels on the top left, an artichoke, fries, baguette, cheescake and grapefruit.

அந்த உணவு மட்டும் ஏன் குழந்தைக்கு பிடித்திருக்கின்றது என்று நீங்கள் யோசித்தீர்களா? மேஜிக், அந்த உணவில் கிடையாது. அதன் பிரசன்டேஷனில் உள்ளது.

குழந்தைகளுக்கான உணவு தயாரித்து, அதை மார்க்கெட் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், உணவு தயாரிப்பைவிட அதிகம் செலவு பண்ணுவது, அவற்றின் பிரசன்டேஷனுக்கு என்பது உங்களுக்கு தெரியுமா?

Kellogg’s நிறுவனத்தின் குழந்தைகளுக்கான உணவு பாக்கட்கள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.

அவற்றின் மொத்த தயாரிப்பு விலையில் 57 சதவீதம், பிரசன்டேஷனில் செலவாகின்றது.

அமெரிக்கா, ஜங்க் ஃபூட் ஷ்டைலில் உணவு - Tater tots, chicken nuggets, cut fruits, chocolate milk and packets of sauce.

இந்த பிரசன்டேஷனில் முக்கிய செலவைப் பிடிப்பவை, ரிசர்ச் மற்றும் விளம்பரங்கள் என்பதை நிறுவனத்திக் கோஸ்ட் ஸ்ட்ராக்ஷரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

உணவு தயாரிப்பு பற்றி ரிசர்ச் செய்கிறார்களே என்று புளகாங்கிதம் அடையாதீர்கள். இவர்கள் செலவு செய்து ரிசர்ச் பண்ணுவது, குழந்தைகளுக்கு போஷாக்கான உணவைக் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக அல்ல.

சீனா, ஓரளவு காரமான ஸ்கூல் உணவு - Spicy pork/chicken, a piece of fish, broccoli and cauliflower, with a generous serving of rice and soup.

அந்த உணவை குழந்தைகளை கவரும் விதத்தில் எப்படி அட்ராக்ஷனாக தயாரிப்பது, மற்றும் புதிய கிரியேட்டிவ் ஐடியாக்களுக்காகவே அவர்களது ரிசர்ச் நடைபெறுகின்றது.

அப்படி செலவு செய்து தயாரிக்கப்பட்ட உணவு பாக்கட்டுகள் சூப்பர் மார்க்கெட் ஷெல்ஃப்க்கு வரும்போது, சைக்காலஜிக்கலாக உங்கள் குழந்தையை அட்ராக்ட் பண்ணுகின்றது. அந்த உணவு வேண்டும் என்று அடம் பிடிக்கிறது குழந்தை. இது ஒரு சிம்பிளான பிசினெஸ் டூல் மாத்திரமே!

கொரிய ஸ்கூல் நான் வெஜ் லஞ்ச் - fish, vegetables, spicy squid, seaweed soup and some rice.

Kellogg’s நிறுவனம் உங்கள் குழந்தைக்கான உணவுத் தயாரிப்புச் செலவில் 57 சதவீதத்தை பிரசன்டேஷனில் செலவு செய்யும்போது (பணம் கொடுப்பது நீங்கள் என்பது வேறு விஷயம்), நீங்கள் குழந்தைக்கு ஸ்கூலுக்கு கொடுத்துவிடும் உணவுத் தயாரிப்பின் பிரசன்டேஷனில் பைசா செலவு செய்வதில்லை என்றால், உங்கள் உணவு குழந்தையைக் கவர முடியாது.

குழந்தையின் லஞ்ச் பாக்ஸில் உணவு அப்படியே திரும்பவும் வீட்டுக்கு வந்து சேரும்.

அமெரிக்கா, மெக்ஸிகன் ஸ்டைல் லஞ்ச் - taco salad with cheese, mashed potatoes and what looks like a fruit salad.

Kellogg’s எப்படி தமது உணவை உங்கள் தலையில் கட்டுகிறதோ, அதே பாணியில் உங்கள் உணவை உங்கள் குழந்தையின் தலையில் கட்டும் டெக்னிக்தான், கிரியேட்டிவிட்டி அன்டு பிரசன்டேஷன்.

அனேக நாடுகளில் இப்போது ஸ்கூல் கேன்டீன்களில், அல்லது வென்டிங் மெஷின்களில் ஜங்க் ஃபூட் விற்பதை நிறுத்தி விட்டார்கள். போஷாக்கான பாலன்ஸ் ஃபூட் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் உணவைக் கொடுக்கும் விதத்தை திட்டமிட்டுக் கொடுப்பதற்கு நியூட்ரிஷன் அன்டு டயட்டிட்டிக்ஸ் நிபுணர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள்.

அவர்களது திட்டமிடலில் வழங்கப்படும் உணவுகள், குழந்தைகளைக் கவர்கின்றன.

செக் ரிப்பப்ளிக் (முன்னாள் செக்காஸ்லோவேக்கியா) ஸ்கூல் லஞ்ச் - Soup, rice with a meat stew, dessert (with a raw egg on top), juice and tea.

இதை வேறு விதமாகச் சொன்னால், கிராஃப்ட் தனது வியாபாரத்துக்கான செய்யும் அதே சைக்காலஜிகல் முறையை இவர்கள், குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்கிறார்கள்.

இங்கு நாம் கொடுத்துள்ள போட்டோக்களில், வெவ்வேறு நாடுகளில், குழந்தைகளுக்காக வழங்கப்படும் உணவுகள் பிரசன்ட் பண்ணப்பட்ட விதத்தைப் பாருங்கள். அந்தந்த நாடுகளின் உணவு வகைகளைத்தான் கொடுத்திருக்கிறார்கள், ஆனால், குழந்தைகளைக் கவரும் வகையில்.

ஞாபகத்தில் வையுங்கள், குழந்தைக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கும் உணவு, குழந்தையையும் அட்ராக்ட் பண்ண வேண்டும். உங்கள் குழந்தையை நீங்கள் கவர்வதைவிட அதிகமாக Kellogg’s கவர முடிந்தால், தவறு உங்களில்தான்!

இப்படியான கட்டுரைகள் விறுவிறுப்பு.காம் இணையத்தில் வெளியாவதை விரும்புகிறீர்களா? உங்கள் கருத்துக்களை தயவுசெய்து அறியத்தரவும். தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்க வசதியாக இருக்கும்

ஓடிப்போன நடிகையின் கணவர். தனிமையில் குழந்தையுடன் தவிக்கும் நடிகை.

இன்னமும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வரும் ஒரு நடிகை, ஏற்கனவே கணவனால் கைவிடப்பட்டவர்தான் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.


`டிராவல்ஸ் படத்தில் நடித்த இரண்டெழுத்து நாயகி தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அது உண்மை அல்ல. அவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் இருக்கிறதாம்.
ரகசியமாக மணமுடித்த கணவர், இப்போது `டிராவல்ஸ் நாயகியை தனியே தவிக்க விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டாராம். காணாமல் போன கணவர் மீது புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் நடிகை! ஐயோ பாவம்!!

ராஜிவ் கொலை வழக்கில், இவரது கூற்றுதான் நிஜமான திருப்பம்!

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” இவ்வாறு ராஜிவ் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை வகித்த டி.ஆர்.கார்த்திகேயன் கூறியிருக்கிறார்.


இவரது கூற்று, இந்த விவகாரம் பற்றி வெளியே உள்ள எதிரான கருத்தின் வீரியத்தை, குறைக்கும் வகையில் உள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு முதல், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல தரப்பினரும் கோரிவரும் நிலையில், இந்த விவகாரம் பற்றிய இரண்டாவது கருத்து ஒன்றும் சமீப காலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது.

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதித்தவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு கருணை காட்ட வேண்டியது அவசியமில்லை என்றும் உள்ளது இந்த இரண்டாவது கருத்து. இதே கருத்துடன் பிரபல நாளிதழ் தினமலரில் வெளியான ஒரு கட்டுரை பலத்த எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது.

அப் பத்திரிகையின் பிரதிகளை நீதிமன்றத்தின் முன் எரிக்கும் போராட்டம் ஒன்றும் கோபமடைந்த வக்கீல்களால் நடாத்தப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில்தான் இந்த வழக்குப் பற்றி மற்றைய யாரையும்விட மிக நன்றாக அறிந்த டி.ஆர்.கார்த்திகேயன், “இந்த மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூவரையும் கைது செய்ததே, டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வுக் குழுதான். ராஜிவ் கொலை மர்மத்தைக் கண்டு பிடித்ததாக மத்திய அரசினால் கூறப்படுபவர்களும், இதே குழுதான்.

அந்த வகையில், ராஜிவ் கொலை வழக்கில் நிஜமான குற்றவாளிகள் யார், இந்த மூவருக்கும் ராஜிவ் கொல்லப்பட்டதில் உள்ள சம்மந்தம் எவ்வளவு, இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எந்த ஆதாரங்களில் உறுதிப்படுத்தப்பட்டன, அந்த ஆதாரங்கள் எப்படிக் கிடைத்தன என்ற விபரங்கள் அனைத்தும் மிக நன்றாகத் தெரிந்த நபரும், டி.ஆர்.கார்த்திகேயன்தான்!

நிருபர்களுக்கு கருத்து தெரிவித்த டி.ஆர்.கார்த்திகேயன், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. நான் எனது கடமையை செய்தேன். தற்போது அரசாங்கம் தனது கடமையை செய்யட்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டது, ராஜிவ் காந்திதான் என்பது உறுதிப் படுத்தப்பட்டு 12 மணி நேரமாகியும், கொலையை புலனாய்வு செய்யப்போவது யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. யாருடைய தலைமையில் புலனாய்வுக் குழுவை அமைப்பது என்ற குழப்பமே தாமதத்துக்கான காரணம்.

அதன்பின் இந்த விசாரணையில் டி.ஆர்.கார்த்திகேயன் எப்படிக் கொண்டுவரப்பட்டார் என்பதைத் தெரிந்து கொண்டால்தான், தற்போது அவரது கூற்றுக்கு வேல்யூ அதிகம் இருப்பதை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். விறுவிறுப்பு.காம், கடந்த வாரம் வெளியிட்ட ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ தொடரின் 7ம் அத்தியாயத்தின் பெயரே, ‘கார்த்திகேயன் காட்சிக்குள் வருகிறார்’ என்பதுதான்.

அதை ஒருமுறை படித்துப் பாருங்கள். டி.ஆர்.கார்த்திகேயன் யார் என்பது புரியும்!

‘செப்.11’ டெலிபோன் உரையாடல் ரிக்கார்டிங், வெளியாகி விட்டது!

வாஷிங்டன், அமெரிக்கா: செப்டெம்பர் 11 தாக்குதல்கள் நடைபெற்று சுமார் 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அன்றைய தினத்தில் நடைபெற்ற முக்கிய உரையாடல்களின் ரிக்கார்டிங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்று காலை நடைபெற்ற பதட்டம் நிறைந்த வெவ்வேறு உரையாடல்களின் தொகுப்பு, இந்த ஆடியோ ஒலிப்பதிவுகள்.

உலகையே அதிர வைத்த அன்றைய தினத்தின் காலையில், பதட்டமான பல சம்பவங்கள் ஓரிரு மணி நேரத்துக்குள் நடந்து முடிந்தன. விமானங்கள் கடத்தப்படும் தகவல்கள் அடுத்தடுத்து வருகின்றன. ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவர் திரையிலிருந்து விமானங்கள் மறைந்து போகின்றன. ராணுவத்துக்கு தகவல் போகின்றது. மறைந்துபோன விமானங்களை தேட அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் பறக்கத் தொடங்குகின்றன…
இப்படி வெவ்வேறு சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. இவை எல்லாமே மிகவும் முக்கியமான இடங்கள் என்பதால், அங்கு மேற்கொள்ளப்படும் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது வழக்கம்.

அந்த உரையாடல்களே, தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

செப்.11 தாக்குதலில் உளவுத்துறைகள் கோட்டைவிட்டது தொடர்பாக ஏற்கனவே விறுவிறுப்பு.காமில் படித்திருப்பீர்கள். இந்த ரிக்கார்டிங்குகள் அன்று நடைபெற்ற சம்பங்களின் மற்றொரு பக்கத்தைக் காட்டுகின்றன.

செப்டெம்பர் 11 தாக்குதல் முடிந்தபின், அதுபற்றிய விசாரணையில் பங்குகொண்ட புலனாய்வாளர் மைல்ஸ் காரா, “புலனாய்வில், பல அலுவலகங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆடியோ ரிக்கார்டிங்களைக் கேட்க வேண்டியிருந்தது. அவை அனைத்தையும் இணைத்தால், ஆயிரக் கணக்கான மணி நேரம் கேட்க வேண்டியிருக்கும்.

அவற்றிலிருந்து, முக்கிய உரையாடல்களை மாத்திரம் பிரித்தெடுத்து, தொகுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். செப்டெம்பர் 11ன் கதை, இதுவரை சொல்லப்பட்டதிலேயே மிக உச்சகட்ட ரியாலிட்டியுடன் இருப்பது இந்த ரிக்கார்டிங்களில்தான். மிகப் பயங்கரமான அன்றைய தினத்தில், நடந்த சம்பவங்களை, அது நடைபெற்ற கணங்களில், அதில் சம்மந்தப் பட்டவர்களின் குரல்களிலேயே கேட்கும் ரியாலிட்டி இது” என்கிறார்.

நியூயோர்க் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவர்

தொகுப்பில் மொத்தம் 114 வெவ்வேறு ஒலிப்பதிவுகள் உள்ளன. வெவ்வேறு அலுவலகங்களில், அன்று காலை நடைபெற்ற டெலிபோன் உரையாடல்களின் போது, ரிக்கார்டிங் செய்யப்பட்டவை இவை.

இந்த ஆடியோ தொகுப்பு, 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் தேதி காலை அமெரிக்காவில் நடைபெற்ற (இந்த விபத்து தொடர்பான) முக்கியமான இரு உரையாடல்கள் தவிர்க்கப்பட்ட நிலையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று, யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமான இலக்கம் 93ன் காக்பிட் உரையாடல் ஒலிப்பதிவு. இது கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீளமானது.

அந்த விமானம் விபத்துக்குள்ளாகிய போது, அதிலிருந்த பயணிகள் சிலரது குடும்பத்தினர் இந்த ஒலிப்பதிவு வெளியாவதை விரும்பவில்லை. அதனால், குறிப்பிட்ட 30 நிமிட ஒலிப்பதிவு பகிரங்கப்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, தவிர்க்கப்பட்ட மற்றொரு ஒலிப்பதிவு, செப். 11ம் தேதி காலை 9.28க்கு தொடங்கிய தொலைபேசி உரையாடல். கான்பிரன்ஸ் கால் முறையில் நடைபெற்ற இந்த உரையாடலில், அன்றைய அமெரிக்க அரசின் முக்கிய புள்ளிகளின் (சென்னி, ரம்ஸ்பீல்ட், மயர்ஸ்) குரல்கள் பதிவாகியுள்ளன. ராஜாங்க ரகசியம் என்ற பிரிவின்கீழ் வரும் இந்த ஒலிப்பதிவும், பகிரங்கப் படுத்தப்படவில்லை.

ஆடியோ தொகுப்பிலுள்ள ஓரிரு சுவாரசியமான உரையாடல்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? இதோ, விறுவிறுப்பு.காம் சில ஒலிப்பதிவு சாம்பிள்களின் எழுத்து வடிவத்தைத் தருகிறது. படித்துப் பாருங்களேன்.

ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் அலுவலக ராடாரில் விமானங்களில் பொசிஷன்கள்.

செம்.11ம் தேதி காலை. உலக வர்த்தக மையக் கட்டடத்தின் வடக்கு கோபுரத்தில் முதலாவர் விமானம் போய் மோதி 16 நிமிடங்களின்பின் தொடங்குகிறது இந்த ஒலிப்பதிவு. நியூபோர்க் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் ராடார் சென்டரின் மேனேஜருக்கு வ6ந்த தொலைபேசி அழைப்பு இது.

“ஹேய். உங்களது ஜன்னல் வழியாக உடனே வெளியே பாருங்கள்” என்கிறது மறுமுனைக் குரல்.

“கிட்டத்தட்ட 4000 அடி உயரத்தில் பறக்கும் விமானம் ஒன்று தெரிகிறதா?”

“ஆம். நான் அதைத்தான் பார்க்கிறேன்”

“அந்த விமானம் ஒரு கட்டடத்தை நோக்கிப் போவது போல தெரிகிறதா?”

“ஆ.. மிகவேகமாக கீழ்நோக்கிச் சரிகிறது. 4000 அடி உயரத்துக்கு இறங்கிவிட்டது. ஒரே சரிவில் 800 அடி உயரம் குறைந்து விட்டது” என்றார் மேனேஜர். அவருக்கு முன்னால் இருந்த ராடார் திரையில் அந்த விமானம் பறக்கும் சரியான உயரத்தை இலக்கங்களில் அவரால் காண முடியும்.

“அது என்ன வகை விமானம் என்று உங்களால் கூறமுடியுமா?”

“இதோ.. ஒரு நிமிடத்தில் (ராடார்) திரையில் பார்த்து விடுகிறேன்”

அவர் ராடார் திரையில் அது எந்த விமானம் என்று பார்க்கும்வரை, ராடார் பிம்பம் திரையில் நிலைக்கவில்லை. மறைந்து விட்டது. அதாவது, கட்டடத்தில் போய் மோதிவிட்டது. ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் அலுவலகத்தில் இருந்த மற்றையவர்களின் குரல்கள் பதட்டமாக கூக்குரலிடுவது பதிவாகியுள்ளது. “கடவுளே.. மற்றொரு விமானம், உலக வர்த்தக மையக் கட்டடத்தில் வேகமாக மோதுகிறது”

இதுபோன்ற 114 தொலைபேசி உரையாடல்கள் இந்த ஒலிப்பதிவுத் தொகுப்பில் வரிசையாக உள்ளன. நீங்கள் முதலில் படித்த ஒலிப்பதிவில் ஒலித்த அதே மேனேஜர் எஃப்.ஏ.ஏ. அலுவலகத்தை அவசரமாக தொலைபேசியில் அழைப்பதும் பதிவாகியுள்ளது. “அவசரம். ராணுவ விமானங்களை வானத்துக்கு அனுப்பக்கூடிய அதிகாரம் உடைய யாராவது அதிகாரியுடன் நான் பேசவேண்டும். இணைப்பு தாருங்கள்” என்கிறார் நடுங்கும் குரலில்.

இந்த தொலைபேசி அழைப்பு வரும்வரை எஃப்.ஏ.ஏ. அலுவலகத்துக்கு விஷயமே தெரிந்திருக்கவில்லை!

ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் வேலை செய்பவர்கள்

ராணுவத் தரப்புக்கும் விஷயம் உடனே தெரிவிக்கப்படவில்லை என்பதற்கு உதாரணமாக மற்றொரு ஒலிப்பதிவு உள்ளது. காலை 9.34க்கு நடைபெற்ற தொலைபேசி உரையாடல் அது.

ராணுவ ஏவியேஷன் பெண் அதிகாரி ஒருவர், வாஷிங்டன் சென்டரிலுள்ள எஃப்.ஏ.ஏ. அலுவலகத்தை தொலைபேசியில் அழைக்கிறார். அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமான இலக்கம் 77 ராடாரில் இருந்து மாயமாக மறைந்துபோய், 30 நிமிடங்கள் ஆகின்றன என்பதை அறிந்து திகைக்கிறார் அவர்.

அந்த விமானத்துடன் தொடர்புகள் அறுந்து 30 நிமிடங்கள் ஆகியும், விஷயம் ராணுவத்துக்கு தெரியப்படுத்தப்படவில்லை!

போனை அட்டென்ட் பண்ணிய எஃப்.ஏ.ஏ. அலுவலக அதிகாரி ஒருவர், “பிளைட் 77 உடன், ராடார் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. விமானம் எங்கே என்பதோ, அதற்கு என்ன நடந்தது என்பதோ எமக்கு தெரியவில்லை. அது ஒரு போயிங் 767 விமானம் என்ற தகவல் மாத்திரமே தெரியும். எஃப்.ஏ.ஏ.யின் இன்டியானாபோலிஸ் சென்டர் தந்த தகவல் இவ்வளவுதான்” என்று கூறுவது பதிவாகியுள்ளது.

தொலைபேசியில் அழைத்த ராணுவ ஏவியேஷன் பெண் அதிகாரி, “எனக்கு தெரிய வேண்டியதெல்லாம், அந்த விமானம் எந்த இடத்தில் பறந்துகொண்டு இருந்தபோது கடைசியாக உங்களுடன் தொடர்பில் இருந்தது?” என்று கேட்கிறார். இந்த விபரம் தெரிந்தால்தானே, ராணுவம் தமது போர் விமானங்களை அந்த இடத்துக்கு தேடுதல் வேட்டைக்கு அனுப்ப முடியும்?

“ம்… அது எனக்கு சரியாகத் தெரியாது. எமக்கு தகவல் கொடுத்தது பாஸ்டன். அது, இன்டியானாபோலிஸ் சென்டர். நான் கடைசியாக அவர்களுடன் பேசியபோது, விமானம் 77, யோர்க் என்ற இடத்துக்கு கிழக்கில் பறப்பதாக சொன்னார்கள். யோர்க், எந்த மாநிலத்தில் இருக்கிறது என்றுகூட எனக்கு தெரியாது”

இந்த தொலைபேசி உரையாடல் முடிவடைந்து சரியாக 3 நிமிடங்களில், விமானம் 77, பென்டகனில் போய் மோதியது!

ஆவேசம் கொண்ட 20 ஆயிரம் தமிழர்கள் கேரளாவுக்குள் நுழைய முயற்சி : பரபரப்பு வீடியோ