Friday, November 11, 2011

பேஸ்புக் இணையதளத்தில் சி.பி.ஐ புகுந்துள்ளது

பிரசித்தி பெற்ற சமூக வலைப்பின்னலான பேஸ்புக் இணையதளத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) போபால் அலுவலகம் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு தொடங்கியதன் மூலம் வழக்குகள் சம்பந்தமாக பொதுமக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள அது திட்டமிட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத்துறையின் போபால் அலுவலகம் பேஸ்புக்கில் கணக்கைத் தொடங்கியுள்ளது.

போபாலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் பெறும் வரவேற்பைப் பொறுத்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். வழக்குகள் மற்றும் குற்றங்கள் சம்பந்தமான தகவல்களை மக்கள் இதன் மூலம் நேரடியாக தெரிவிக்கலாம். அண்மையில் போபாலில் ஷெஹ்லா மசூத் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மக்கள் பல பயனுள்ள தகவல்களை அளித்ததாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Thursday, November 10, 2011

பெண்ணின் அங்கங்களை வெட்டி உண்ட வங்கி ஊழியர்கள்

சில மனிதர்களின் எண்ணங்கள் ஆசைகள் வியப்பூட்டுபவையாகவோ அல்லது அதிர்ச்சி தருபவையாகவோ இருக்கும் என்பது நான் கற்ற உளவியல் எனக்கு சொல்லித்தந்த பாடம்.மற்றவர்களின் கவனத்தை தன் மீது ஈர்க்க சிறு பிள்ளைகள் சக பிள்ளையை அடிப்பது அல்லது அழுவது போன்ற செயல்களும் இதற்குள் அடங்கும்.



ஆனால் பெரியவர்கள் அதுவும் பொதுத்துறையில் உள்ள ஒருவர் மற்றவர்களை கவர்வதற்காக தன் வங்கி அலுவலகத்தில் வைத்து பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டி உண்பதென்பதை உங்களால் ஏற்கக்கூடியதாக உள்ளதா?


இந்த முகஞ்சுழிக்கும் செயல் குறித்த வங்கி ஊழியரின் பிறந்த நாளில் நடந்திருப்பது வேறு. இந்த பிறந்த நாள் விழாவில் குறித்த வங்கியின் பெண் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்ததை நாம் எவ்வாறு பார்ப்பது?

சரி இதெல்லாம் எங்கேயோ மேற்கத்தைய நாட்டில் அரங்கேறியிருக்கும் என தப்புக் கணக்கை மட்டும் போட்டு விடாதீர்கள்.எல்லாம் இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பில் அரங்கேறியுள்ளது.

குறித்த ஊழியர் பெண்'கள் தொடர்பாக கொண்டிருக்கும் வக்கிர மனநிலையை நாம் இதன் ஊடாக அறியலாமல்லவா? நமக்கு புரியும் இந்த விசயம் ஏன் சக பெண்பணியாளர்களுக்கு புரியவில்லை? இவ்வாறான வக்கிர மனநிலை உள்ள ஊழியரை குறித்த தனியார் வங்கி ஏன் இன்னும் வேலையில் வைத்துள்ளது?

இவ்வாறான பெண்களை அவமதிக்கும் செயல்களை பெண்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் ஏன் எதிர்க்கவில்லை? ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

இலங்கையில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் பேணப்பட்டு வந்த இலங்கைக்கே உரித்தான பெண்களை மதிக்கும் கலாச்சாரம் போரின் பின்னர் விற்கப்பட்டு விட்டதா? இதை இலங்கை மக்கள் எவ்வாறு ஜீரணிக்கிறார்கள்? இவ்வாறானவர்களால் வங்கிகளில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பு ஆபத்தாக உள்ளதா?

என்று பல கேள்விகளை நம்முன் எழுப்பியுள்ள இந்த சம்பவத்தில் வெட்டப்பட்டது பெண்ணின் அந்தரங்க உறுப்பு வடிவிலான் கேக். பிறந்த நாளுக்கு கேக் செய்ய வேறு டிசைன்கள் எவ்வளவோ இருந்தும் ஆபாசமான வடிவில் செய்யப்பட்ட கேக் வெட்டப்பட்டதை சாதாரண விசயமாக நாம் பார்த்து விட முடியாது.

மேலே உள்ள படத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட குழுப்படத்தில் அவர்களின் கைகள் எங்குள்ளது என்பதை அம்புக்குறியால் காட்டியுள்ளேன்.அதை வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். குறித்த கேக்கின் படங்கள் கீழே தரப்படுகிறது.







படங்கள்: தமிழ் சி.என்.என்

உப்பு போட்டா போதும்.. கம்ப்யூட்டர் டிஸ்க் சைஸ் 6 மடங்கு அதிகரிக்கும்


கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.





இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கம்ப்யூட்டரின் மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.

டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின்போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும்போது, ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது, டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கம்ப்யூட்டருக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது. இவ்வாறு ஜோயல் கூறினார்.

ஐஸ்வர்யாராய்க்கு பிரசவம்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நாளை அதாவது 11-11-11ல் பிரசவம் நடக்கிறது.


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நாளை 11-11-11 என்னும் அரிய தேதி வருவதால் அன்றே பிரசவம் நடக்கவிருக்கிறது. இதற்காக ஐஸ்வர்யா ராயை மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு துணையாக கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் மற்றும் மாமியார் ஜெயா பச்சன் ஆகியோர் தங்கியுள்ளனர்.
பச்சன் குடும்பத்தினருக்காக மருத்துவமனையின் 5வது மாடியில் ஸ்பெஷல் அறை கொடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முக்கியமான குடும்பம் தங்கியிருப்பதை அடுத்து மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மருத்துவமனை பாதுகாவர்கள் வழக்கமாக 6 மணி நேரம் பணியாற்றுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை முன்னிட்டு அவர்களை 12 மணி நேரம் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர்களும், போலீசாரும் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் தங்கியிருக்கும் அறைக்குள் பார்வையாளர்கள் யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Wednesday, November 9, 2011

தமிழன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா

தமிழ் மொழி வரலாறு – தமிழன்

மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப்பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கிபி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

மொழியியலாளர் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியை மூன்று காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை, பண்டைக்காலம் (கிமு 200 தொடக்கம் கிபி 700 வரை), மத்திய காலம் (கிபி 700 தொடக்கம் கிபி 1500 வரை), நவீன காலம் (கிபி 1500 தொடக்கம் இன்று வரை) என்பனவாகும். மத்திய காலத்தில் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமால் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மை வாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம், தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கிபி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்

தமிழ், தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kaikadi, பேட்டா குறும்பா, Sholaga மற்றும் Yerukula என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.

அங்கே பஞ்சு தான் உணவு

சோமாலியாவில் 6,40,000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்... இவர்களுக்கு நாம் நம்மாலான உதவிகளை உடனே செய்தாக வேண்டும் சகோ..!

நண்பர்கள் அனைவரும் தங்களுடைய சமூக வலை தளங்களில் பகிர வேண்டுமென மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்: 


சோமாலிய மக்களுக்கு தமிழர்கள் ஏன் உதவக்கூடாது ?

ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 640.000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது.

சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக்கொண்டிருக்கிறது.
சோமாலியாவில் மட்டும் அடுத்த சில மாதங்களில் 640.000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை.
ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது. பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் சென்று சரண்டைந்தனர். தமிழர்களைப் போல சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை (Fஆஈள் ஸ்TஆTஏ) அதாவது தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம் மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள் நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும். அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப்பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிளேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ரூய்டர்ஸ் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது. பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். ஈழத் நடந்த போரில் பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தார்கள் நாம் மறுக்கவில்லை. ஈழத்து நிலங்கள் பொன் விளையும் பூமி அங்கே நீர் இருந்தது விவசாயம் இருந்தது. கடற்கரைகள் இருந்தன. ஆனால் சோமாலியாவில் ஒன்றுமே இல்லை. இதுதான் வித்தியாசம்.

உணவு இல்லை என்றால் கடிப்பதற்கு ஒரு கொய்யாக் காய் இல்லை மாம்பழம் அதுவும் இல்லாவிட்டால் ஒரு பப்பாப்பழமாவது எமது ஊரில் கிடைக்கும். ஆனால் சோமாலியாவில் பஞ்சு மட்டும் தான் மரமாக இருக்கிறது. சிலவேளைகளில் தினை கிடைக்கும். அதிலும் கஞ்சிவைத்தே உண்ண முடியும். இப்படியான நிலையில் வாழும் அம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் குழந்தைகளுக்காவது புலம் பெயர் வாழ் தமிழர்கள் உதவவேண்டும். தம்மாலான உலர் உணவுகளை வழங்கி பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு 1 நேரச் சாப்பாடாவது கிடைக்கச் செய்யவேண்டும். சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே..

உலகில் பரந்துவாழும் தமிழர்கள் கஷ்டம் என்றால், பட்டினி என்றால் இல்லை மரணபயம் என்றால் என்ன என நன்கு உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் மனம் வைத்தால் இதனை ஒரு சிறிய உதவியாகச் செய்யலாம். தமது பிள்ளைகளுக்கு உணவுகளை வாங்கும்போது சோமாலிய பிள்ளைகளுக்கு ஒரு உலர் உணவை வாங்கி அதனை அங்கே அனுப்பிவைக்கலாம். இதனை தாய் தந்தையர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து செய்யவேண்டும். தமிழீழ பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து சோமாலியப் பிள்ளைகளுக்கு உணவுகளை அனுப்பிவைத்தால் சர்வதேச அளவில் தமிழ் சிறுவர்களின் நடவடிக்கை பாராட்டப்படும். தமிழர்களின் இரக்க குணத்தை உலகறியச் செய்ய , நாமும் ஒரு சோமாலியக் குழந்தைக்கு உணவு கொடுப்போம். தர்மம் தலைகாக்கும்.


http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hK9hiMpCZp6GAiO8HBQAxT_O1Jmw?docId=93b79e4575dd43b2a71486e26d474a20

http://www.wtsp.com/news/national/article/204731/81/29000-children-dead-from-famine-in-Somalia

http://www.unfoundation.org/

http://www.unicefusa.org/

http://www.salem-news.com/articles/august092011/help-somalia-cf.php

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=734

உதவி செய்ய விரும்புவோர் சர்வதேச அமைப்புகளின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்

Somali refugees need your help now!
End Famine in Somalia - Somalia Famine: Millions are hungry!
Somalia Emergency - Food and shelter urgently needed!

United Nation High commission for Refugees (UNHCR)

http://www.unhcr.org/emergency/somalia/global_landing.html?gclid=CJyA7M_GrqsCFUp76wod2mDlKA

International Committee of the Red Cross (ICRC)

http://www.icrc.org/eng/donations/index.ஜ்ச்ப்

http://www.globalgiving.co.uk/pr/8500/proj8493a.html?rf=ggadgguk_goog_even_somalia_4&gclid=CO3xu8zKr6sCFQUb6wodO2hueQ

Somalia's Children Caught in the Crossfire

https://takeaction.amnestyusa.org/site/c.6oJCLQPAJiJUG/b.6662481/k.2BA2/Donate_Now/apps/ka/sd/donorcustom.asp?msource=W1108EDCRYJ&tr=y&auid=8824967

முத்தமிழ்
சென்னை

நண்பர்கள் அனைவரும் தங்களுடைய சமூக வலை தளங்களில் பகிர வேண்டுமென மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி - Google குழுமம்.Collapse this post

Tuesday, November 8, 2011

பாகிஸ்தான் இந்தியாவுக்கு வழங்கியுள்ள அந்தஸ்து

பாகிஸ்தான் ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 

அதாவது இந்தியாவுக்கு "Most Favoured Nation (மிகவும் பிரியமான நாடு)" என்ற அந்தஸ்தை அது வழங்கியுள்ளது. இது பாகிஸ்தான் பாராளுமன்றத்தால் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு பலருக்கு வியப்பையும், ஆனந்த அதிர்ச்சியையையும் கொடுத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவால் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் நல்லுறவு வலுப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகின்றது.

இந்திய வியாபார பிரிவின் செக்ரட்டரியான ராகுல் குல்லார் இது குறித்து குறிப்பிடும்போது,"இது ஒரு மிக வலிமையான நடவடிக்கை. சரியான திசையில் எடுக்கப்பட்ட வரவேற்கத்தக்க முடிவாகும்" என்று தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையில் வியாபாரம் பெருகி மக்கள் அமைதியுடன் வாழ்ந்திட பிரார்த்திப்போம்..

பார்க்க...http://www.reuters.com/article/2011/11/02/us-pakistan-india-trade-idUSTRE7A13VE20111102