Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Tuesday, July 12, 2011

பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு

அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்பட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கிறது அந்த ஆய்வு முடிவு.


தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத
ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி.

குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும். அதேபோன்ற நிலைதான் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இருக்குமாம். இப்படிப்பட்டவர்களுக்கு சூடான குளியல் சுகானுபவமாக இருக்குமாம். மேலும் அவர்களை விட்டு வேதனைகள் அகல இது நல்ல உபாயமாகும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரையிலானவர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினர். அதில், சூடான குளியலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமையின் வேதனை பெரிதாக தெரியவில்லையாம். மாறாக புத்துணர்ச்சியுடன் அவர்கள் காணப்பட்டனராம். அதேசமயம், சூடான குளியலைப் போடாதவர்கள் எதையோ பறி கொடுத்தவர்களாக காணப்பட்டனராம்.

சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட்டுப்படுவதாக ஆய்வை மேற்கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக்கத்திற்கு நேர் மாறனதாக இருப்பது குறிப்பிடத்தக்கு. நமது ஊர்களிலெல்லாம் செக்ஸ் உணர்வுகளால் தூண்டப்படும், தனிமையில் தவிக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் அதைத் தணிக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கையும், பழக்கமும் இருந்து வருகிறது.

ஆனால் அமெரிக்காவில் நடந்த இந்த ஆய்விலோ சுடு நீரில் குளித்தால் சுகமாகும் என்ற புதிய முடிவைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஃபீலிங்ஸ் போல!.

Tuesday, July 5, 2011

பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

· நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
· தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
· ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
· ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
· அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
· அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்
8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
· ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
· நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
· குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

12. பாவங்கள் குறைய வழி என்ன ?
· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
· பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
· விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்

17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
· (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
· அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
· கண்ணீர், பலஹீனம், நோய்

20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
· மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
· கெட்ட குணம் – கஞ்சத்தனம்

23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
· நற்குணம் – பொறுமை – பணிவு
24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )

Monday, July 4, 2011

உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!!!

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.

...யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.

யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.

கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.

ஆனால்......!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?.

தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.

ஆனால்......!
தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.

அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.

ஆனால்......!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.

உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.

கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.

கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.

ஆனால்......!
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.

40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.

ஆனால்......!
முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.

அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

ஆனால்......!
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.

ஆனால்......!
இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால்.....!
1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.

மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.

யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:
Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor - Leo Sziland (Jewish)
Optical Fiber Cable - Peter Schultz (Jewish)
Traffic Lights - Charles Adler (Jewish)
Stainless Steel - Benno Strauss (Jewish)
Sound Movies - Isador Kisee (Jewish)
Telephone Microphone - Emile Berliner (Jewish)
Video Tape Recorder - Charles Ginsburg (Jewish)

யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.
Polo - Ralph Lauren (Jewish)
Coca Cola - Jewish
Levi's Jeans - Levi Strauss (Jewish)
Sawbuck's Howard Schultz (Jewish)
Google - Sergey Brin (Jewish)
Dell Computers - Michael Dell (Jewish)
Oracle - Larry Ellison (Jewish)
DKNY - Donna Karan (Jewish)
Baskin & Robbins - Irv Robbins (Jewish)
Dunkin Donuts - Bill Rosenberg (Jewish)
உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.
Wolf Blitzer - CNN (Jewish)
Barbara Walters - ABC News (Jewish)
Eugene Meyer - Washington Post (Jewish)
Henry Grunwald - Time Magazine (Jewish)
Katherine Graham - Washington Post (Jewish)
Joseph Lelyeld - New York Times (Jewish)

எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.

எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.

Thursday, May 19, 2011

70 மணி நேரத்தில் தயாராக்கப்பட்ட வீடு

அதிவேக வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டில், மார்ச், 11ம் தேதி மற்றும் ஏப்ரல், 7ம் தேதி என சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, அணு உலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு, 140 ஆண்டுகளுக்குப் பின், இதுபோன்ற சோக நிகழ்வு மீண்டும் நிகழ்ந்துள்ளது. இன்னமும் அங்கு நிலைமை முழுமையாக சீராகவில்லை. இருப்பினும், அந்நாட்டு மக்கள் வீடிழந்து தவிப்பதை, அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. வீடுகளை இழந்தும், வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றவர்களுக்கும் என, தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசு தயாராகி விட்டது.

அணு உலைகள் மூலம் மட்டுமே அங்கு மின் உற்பத்தி என்ற நிலையில், அதற்கும் பாதிப்பு வந்து விட்ட நிலையில், தற்போது பெரும்பாலோர் சூரிய மின்சக்தியை பெரிதும் பயன்படுத்த துவங்கி விட்டனர். அரசும் அதற்கு பெருமளவு உதவி வருகிறது. தற்போது, சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புதிய வீடுகளை கட்டித் தரும் முனைப்பில் இருக்கும் ஜப்பான் அரசு, அவ்வீடுகளில் முழுக்க முழுக்க அனைத்து பயன்பாட்டிற்கும் சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு, "டிமோர் வீடுகள்' என பெயரிடப் பட்டுள்ளது. நான்கு முதல், பத்து பேர் வரை வசிக்கும் அளவில், மூன்று மாடல்களில் வீடுகளை கட்டி வருகிறது. இதில், சமையல், படுக்கை, ஹால், குளியலறை ஆகிய பகுதிகளில் விளக்கெறியவும், வானொலி, "டிவி' மற்றும் மின் சாதனப் பொருட்கள் அனைத்திற்கும் சூரிய சக்தி மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. இதில், குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால், வெறும் இரண்டு நபர் இருந்தால் போதும், ஒரு வீட்டை கட்டி விட முடியும்.
அதற்கடுத்த சிறப்பம்சம் என்னவெனில், வெறும் மூன்று நாளில் ஒரு வீடு, குடியேற தயாராகி விடுகிறது. இவற்றின் மேற்கூரைகள், எளிதில் தீப்பிடிக்காத ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் வேயப்பட்டு, அதன் கீழ், மரத்தாலான பகுதி அமைக்கப்படுவதால், வீட்டுக்குள் வெப்பம் இருக்காது. சூரிய வெப்பத்தையே முழுக்க முழுக்கப் பயன்படுத்த இருப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை.
மேலும், இவ்வீடுகளை ஓரிடத்திலிருந்து பெயர்ந்து, வேறொரு இடத்தில் அமைக்க வேண்டுமானாலும், அதே வசதிகளுடன் மாற்ற முடியும் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

ஜப்பான் நாடு சுனாமி, பூகம்பம், அணு உலை விபத்து என, அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்தும் கூட, சிறிதும் அசராமல், பாதிக்கப்பட்ட தன் மக்களுக்காக அதிவேகத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது அந்நாட்டு அரசு. இவ்வீடுகள் அனைத்தும் பங்களா வீடுகளில் காணப்படும் அனைத்து நவீன வசதிகளை உள்ளடக்கி அமைக்கப்படுகிறது.

அதிலும், மிக விரைவாக, மூன்றே நாளில் அமைக்கப்படுவது தான், பல நாட்டின ரையும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வியப்படைய செய்துள்ளது.

Tuesday, March 8, 2011

ஓர் அந்நியன், மகளை தட்டிக் கொண்டு போய் விடுவானே

நான் மின்னணு பொறியியல் படித்து, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறேன். ஆறு மாதங்களுக்கு முன், எனக்கு திருமணமும் ஆகி விட்டது. நானும், என் கணவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் பொறியியல் படிக்கும் போது, எனக்கு நெருக்கமான தோழிகள் நால்வர் உண்டு; நால்வரில் ஒருத்தி, உயிர்த்தோழி.
எனக்கு, வயது 25; அவளின் வயது 26. நாங்கள் எல்லாரும் ஹாஸ்டலராக இருந்தோம்; அவளோ டேஸ்காலராக இருந்தாள். எங்களது கல்லூரி இருந்த ஊரிலேயே அவளது வீடு இருந்தது.

ஒரு நாள் அவளிடம், "லோக்கல்ல இருக்கற... ஒரு நாளாவது உங்க வீட்டுக்கு கூப்பிட்டு, உபசரிக்க மாட்டியா...' என்றேன்; பதில் பேசாமல் மருகினாள். பலதடவை நான் நச்சரித்த பின், அரைகுறை மனதுடன், என்னை அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

வீடு, பங்களா மாதிரி இருந்தது. தோழியின் அப்பாவுக்கு, 63 வயது இருக்கும். முக்கால் வழுக்கை தலை. மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். என்னை, "வா' என வரவேற்காமல், ஒரு மாதிரி முறைத்தார்.

அவருக்கு, 34, 32, 30, 26 வயதுகளில் நான்கு மகள்கள். நான்காவது மகள்தான் என் தோழி. 20 வயதில், பெருத்த உடலுடன் ஒரு மகன். மூன்று அக்காக்களுக்குமே கல்யாணமாகவில்லை; எல்லாருமே பட்டதாரிகள். பார்ப்பதற்கு, நடிகை கவுசல்யா, நான்கு வேடங்களில் நடித்தது போல் இருந்தனர். தோழியிடம் நான், "என்னடி... உங்க வீட்டில் எந்த அக்காவுக்குமே கல்யாணமாகல? இந்த லட்சணத்தை பார்த்தா, உனக்கு லைன் கிளியர் ஆகவே ஆகாது போல. அக்காக்களுக்கு ஜாதக தோஷமா?' என்று கேட்டேன்.

"தோஷம் எதுவுமில்லை; உடலிலும் எந்த கோளாறும் இல்லை. பத்து பெண்களுக்கு திருமணம் செய்யும் அளவுக்கு எங்கப்பாவிடம் பணமும், நகையும், சொத்து, பத்தும் இருக்கு. ஆனா, எங்க கல்யாணங்களுக்கு நந்தியா குறுக்கே நிற்பது எங்கப்பா குணம்தான்!' என்றாள் தோழி.

"நாங்க மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எங்கப்பாவுக்கு, தன் ஜாதியை வெளியில் சொல்ல வெட்கம்.

"அதனால், மருத்துவ சமூக மாப்பிள்ளைகள் பெண் கேட்டு வருவதில்லை. எங்கப்பா மற்ற சமுதாய மக்களிடமும் நெருங்கி பழக மாட்டார். காரணம், நெருங்கி பழகினால், நாங்க இன்ன பிரிவை சேர்ந்தவர்கள் என்பது அவர்களுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சம்.

"தவிர உலகத்திலேயே அதிகம் தெரிந்தது தனக்குதான், பிறருக்கு ஒன்றுமே தெரியாது என்ற மனோபாவம் எங்கப்பாவுக்கு உண்டு. அவருக்கு, கோட், சூட் போட்டு, தலையில் தொப்பி, கண்களில் கூலிங் கிளாஸ், இடதுகையில் சூட்கேஸ் வைத்துக் கொண்டு வரும், தங்கச் சுரங்கம் சிவாஜி மாதிரியான மாப்பிள்ளை தான் வேண்டும்.

"நடிகர் ஆர்யாவை கூப்பிட்டு வந்தால், ஆறு குறைகள் கூறி, "ரிஜக்ட்' செய்து விடுவார். எங்கம்மா ஒரு வாயில்லாப்பூச்சி. எங்கப்பா இப்படி இருந்தும், எங்க அக்காக்களோ, நானோ மனதால் கூட, தவறு செய்ய எண்ணியதில்லை. எதாவது ஒரு கட்டத்தில், அப்பா மனம் மாறி எங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார் என நம்புகிறோம். கல்யாணமாகாவிட்டால், எங்கள் ஊழ்வினையை நினைத்து, பொறுமை காப்போம். கல்யாண விஷயம் தவிர, மற்ற எல்லாவற்றிலும் அவர் அன்பான அப்பா!' என்றாள்.

படிப்பு முடிந்து, நான் வேலைக்கு போன இரண்டாவது மாதமே, எனக்கு திருமணம் முடிவானது. திருமண அழைப்பிதழைக் கொண்டு போய், என் தோழியிடம் நீட்டினேன். கண்கலங்க வாங்கி, அழைப்பிதழை வருடினாள். மணமகள் பெயர் இருக்கும் இடத்தை, ஏதோ நினைத்து தடவிக் கொடுத்தாள். "எனக்கும் கல்யாணம் நடக்குமா? எனக்கும் இப்படி மேரேஜ் இன்விடேஷன் அடிப்பாங்களா?' என, என்னை கட்டிப் பிடித்து கதறியவளை, சமாதானப்படுத்தினேன்.

என் கல்யாணத்துக்கு, நான்கு சகோதரிகளும் வந்திருந்தனர். நால்வரின் கலங்கிய கண்களும், ஏக்கப் பெருமூச்சும் என்னை ஏதேதோ செய்தன. கல்யாணத்துக்கு பிறகும் தோழியிடம் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். எப்போது பார்த்தாலும், நான் அவளுடைய கல்யாணத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்க, "பேசிப் பேசி என் மனக் கவலையை தான் அதிகப்படுத்துற... உனக்கு தில் இருந்தா எனக்கொரு வழி பண்ணு பார்ப்போம். உன் வழி, நேர்வழியா இருக்கட்டும். நாங்க அரேஞ்சுடு மேரேஜ் மட்டும்தான் பண்ணிப்போம்...' என்றாள்.

தோழி விஷயத்தில் நான் என்ன பண்ணலாம் என்பதை, ஒரு கோடு போட்டு காட்டுங்கள் அம்மா; நான் ரோடு போட்டு விடுகிறேன்.

— தோழிக்கு உதவ நினைக்கும், புதுமைப்பெண்.

உன் கடிதம் கிடைத்தது. தோழிக்கு உதவ நினைக்கும் உன் மனோபாவம் பாராட்டுக்குரியது. ஓர் ஆணின் வாழ்க்கையோ, ஒரு பெண்ணின் வாழ்க்கையோ பரிபூரணம் பெறுவது திருமணத்தில்தான். ஐ.ஏ.எஸ்., பரிட்சையிலோ, டோபல் பரிட்சையிலோ ஜெயிப்பது பெரிதல்ல; நல்ல கணவனாக, நல்ல மனைவியாக ஜெயிப்பதுதான் பெரிது. இஸ்லாமில், திருமணம் கட்டாயக் கடமை. மணம் செய்து கொள்ளாதோர், சமுதாய கணக்கில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை.
உன் தோழியின் விஷயத்தில், அவளது அப்பாவுக்கு இருப்பது, படித்த அறியாமை. அதை, முற்றிலும் களைய கீழ்கண்ட உபாயங்களை கையாளலாம்.
* தந்தையிடம், "திருமணம் எங்கள் பிறப்புரிமை' எனும் உரிமைக்குரல் எழுப்ப, போதுமான தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு, முதலில் தோழியின் அம்மாவையும், நான்கு சகோதரிகளையும் அழைத்து பேசு. அம்மா மற்றும் மூன்று சகோதரிகள், நீ சேர்ந்து, அப்பாவிடம் பேசுங்கள். "பத்தில் நாலு அம்சங்கள் பழுதில்லாமல் இருந்தால் போதும். அந்த மாப்பிள்ளையை நாங்கள் கட்டிக் கொள்கிறோம். டிச., 30, 2011க்குள் நான்கு சகோதரிகளுக்கும், திருமணம் முடித்து விடுங்கள்...' எனக் கூறச் சொல்.

* ஜாதி, மதவெறிதான் தப்பு. வரன் பார்ப்பதற்காக, தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை மறைப்பது அறிவீனம். சிகை திருத்த கலைஞர்கள் என்றுதான் மருத்துவ சமுதாயத்தைக் குறிப்பிடுகிறோம். கடந்த 50 வருடங்களில், மருத்துவ சமுதாயம் பலவிதங்களில் முன்னேறி இருக்கிறது. விமானத்தில் போய், சிகை திருத்தும் கலைஞர்கள் இருக்கின்றனர். சிகை திருத்த ஒரு வார அப்பாயின்மென்ட் எல்லாம் தேவைப்படுகிறது. போன இரண்டாம் தலைமுறை சிகை கலைஞர்கள் எல்லாம், நல்ல சித்த மருத்துவர்களாய் விளங்கி இருக்கின்றனர். ஒரு சிகை கலைஞர், கைதேர்ந்த அரசியல் வல்லுநருக்கு சமமான அரசியலறிவு பெற்றிருக்கிறார்.

தோழியின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை போனிலோ, நேரிலோ தொடர்பு கொண்டு, நான்கு பெண்களின் திருமணத்தை போர்க்கால அவசரமாய் நடத்தி முடிக்க வலியுறுத்து. தோழியின் தந்தைக்கு, உறவு - நட்பு வட்டம் மூலம், பத்து, "டன்' நெருக்கடி கொடுக்க வேண்டும் நீ.

* தரகர், பத்திரிகை, சமுதாயம் சார்ந்த சானல்கள், இன்டர்நெட் மூலம் வரன் வேட்டை தொடர்.

* அபியும், நானும், அன்புள்ள அப்பா போன்ற படங்களில், பிரகாஷ்ராஜ், சிவாஜி கணேசன், நடிப்புகளை பார்த்திருப்பாய். மகள் மீது தந்தைக்கு அளவு கடந்த பாசம். திருமணம் மூலம், ஓர் அந்நியன், மகளை தட்டிக் கொண்டு போய் விடுவானே என்ற பயம் சில தந்தைகளுக்கு. அப்படிப்பட்ட ஒரு மனக் குறைபாடு உன் தோழியின் தந்தையிடம் கூட இருக்கலாம். "இந்த மாப்பிள்ளை சொள்ளை; இந்த மாப்பிள்ளை சொத்தை...' என, தோழியின் தந்தையே, வரன்களை கலைத்து விட்டுக் கொண்டிருப்பார். அப்படி இருந்தால், அவருக்கு பிரத்யேகமான கவுன்சிலிங் தேவைப்படும்.

* உன் தோழியின் மூத்த அக்கா திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லாது, ஏதாவது கிருத்துவங்கள் செய்து கொண்டிருக்கிறாளா என்று பார். இருந்தால், அந்த மனத்தடையை அகற்று.

* நான்கு சகோதரிகளும் படித்தவர்கள். அவர்களுடன் படித்த மாணவர்கள் யாராவது, இவர்களை மணந்து கொள்ள விரும்பலாம். அப்படி ஒரு சூழல் இருந்தால், ஜாதி மதம் வித்தியாசம் பாராமல், பொருத்தம் ஒன்று மட்டும் பார்த்து, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்று.

* தோழியின் பெற்றோரின் தலைமுறையில் திருமணம் தொடர்பான எதாவது ஒரு ஆறாத ரணம் இருக்கலாம். அவர்களின் குடும்ப சரித்திரத்தை அகழ்வாராய்ச்சி செய்து, ரணமிருந்தால் புதிய மருந்திடு.

* இந்த பதில், ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு மட்டும் சொந்தமானதில்லை. எல்லா தகப்பன்மார்களும், தத்தம் மகள்களுக்கு காலகாலத்தில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும். வரன் பார்ப்பது தந்தைமார்களுக்கு மேட்சிங்காக அல்ல; மகள்களுக்கு. ஈகோ, வறட்டுக் கவுரவம், சுயநலம், பழவாங்கும் வெறியை கழற்றி வீசி விட வேண்டும். பெத்த மகளுக்கு கல்வியையும், திருமண வாழ்க்கையையும், உரிய பருவத்தில் அளித்து, அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

* ஒரு குடும்பத்தின் தந்தை, மகன்-மகள் திருமணத்திற்கு குறுக்கு வழியில் சொத்து சேர்க்கக் கூடாது. அப்படி சேர்த்தால், அதன் பலாபலன் மகன் - மகள் திருமணங்களை தான் பாதிக்கும்.

* மகள்களை படிக்க வைக்கும் தந்தையர், தங்கள் விருப்பப்படி அவர்களை, 28 அல்லது 30 வயது வரை படிக்க வைக்கக் கூடாது. 

23 வயதுக்குள்ளாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். விருப்பமில்லாத பெண்கல்வி வீண் பொருள் செலவு; வீண் கால விரயம். நான்கு சகோதரிகளின் திருமணங்களுக்கு என்னை மறக்காமல் கூப்பிடு செல்லம்.

கருகிடும் முதல் தலைமுறை மாணவர்களின் கல்லூரி கனவுகள்


வெளிச்சம் மாணவர்களின் போஸ்டரின் வலிகள்.. 

ஊரிலேயே,வீட்டிலேயே பஸ்ட் படிச்சி வேலைக்கு போனோம்.அதோடு சரி எல்லாம் மறந்து போனார்கள் எங்கள் போன தலைமுறை…ஆனால் இப்போதிய மாணவர்களின் நிலை மிக மோசமாக போனது…

கடந்த வாரம் வெளிச்சம் மாணவர்களால் சென்னையெங்கும் ஒருவருடத்திற்கு பிறகு மீண்டும் ஒட்டப்பட்ட போஸ்ட்டரின் வலியை 29.12.2010 தினமலர் செய்திதாள் செய்தியாக்கியது…தினமலருக்கு நன்றி சொல்ல கடமை பட்டவர்களாய் முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக வெளிச்சம் மாணவர்களின் போராட்டத்தினை உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது… 

மாணவர்களின் கல்வியை காப்பாற்றுவதற்காக வெளிச்சம் மாணவர்களால் முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பைப் பாதுகாக்க “திரைப்பட நடிகர் ஜெயம் ரவி” அவர்களோடு சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது அதற்கும் பலனடையவில்லை..ஆனால் கல்லூரிகள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாததால் மாணவர்களை படிக்க விடாமல் கல்லூரியை விட்டு வெளியே அனுப்ப இருக்கிற சூழலில் வேறு வழியில்லாமல் 40 வெளிச்சம் மாணவர்கள் தமிழக காவல்துறை இயக்குநரிடம் தமிழகம் முழுக்க உண்டியல் குலுக்கி நிதி வசூலிக்க அனுமதி வாங்கினோம்..அதன்படி சென்னை முழுவதும் உண்டியல் ஏந்தினோம்..இச்செய்தி “தமிழக அரசியல்”,”டெக்கான் குரேனிக்கல்”,”என்.டி,டிவி” போன்ற ஊடங்கங்களிலும் வெளியானது.. அதன் பின் தான் தமிழக அரசால் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கான இலவச உயர்கல்விக்கான அரசாணை வெளியிடப்பட்டது.GO_First_Graduate

கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களின் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்க வேண்டும் எனவும்..நாம் மேலும் போராடினோம்.. நம் பயத்தினை தினமணி நாளிதழ் செய்தியாக்கியது.. படிக்க

இன்னும் ஓர் கோரிக்கை முதல்வரய்யா….என்கிற தலைப்பில் நாம் எழுதிய கோரிக்கை மனுவினை உங்களிடம் வைக்கிறோம்..http://velichamedu.wordpress.com/2010/04/24/110/

அதை சென்னை முழுக்க போஸ்ட்டர் ஒட்டினோம்..கடந்த பிப்ரவரி 22ம் தேதி உயர்கல்வி மானிய கோரிக்கை விவாத நாள் என்பதால் இச்செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என நாம் திட்டமிட்டோம் போஸ்டரில் உள்ள செய்திகளையே மனுவாகவும் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்திருந்தோம்..(மனுவின் நகலை இணைத்துள்ளோம்)

இதற்காக நாம் பலவகையான முயற்சிகளை நாம் மேற்கொண்டும்..அரசு மாணவர்களுக்கு ஒதுக்கிய 50 கோடி ரூபாய் மாணவர்களின் கல்விக்கு போய்சேருகிறது என்பதை கண்காணிக்கவும்,திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 65 நாட்கள் வெளிச்சம் மாணவர்கள் தமிழகம் முழுக்க பிரச்சாரப்பயணம் மேற்கொண்டார்கள்..அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவர்கள் உதவி எண் 9698151515 துவங்கி மாணவர்களுக்கு உதவிவருகிறோம்…

நாம் என்ன பயந்து இந்த பணியை செய்தோமோ. அது நடக்க துவங்கியது.. என்னவெனில் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்ணாலா அவர்கள் கடந்த2010 ஜனவரி 6 ம் தேதி அறிவித்த அறிவிப்பில் மொத்த கட்டணத்தையும் அரசே ஏற்கும் என இருந்தது. இதை நம்பி அப்பாவியான 78883 முதல்தலைமுறை மாணவர்கள் பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கிக்கு விண்ணப்பித்தார்கள்.. ஆனால் கவுன்சிலிங் நடைபெற்று கொண்டிருந்தபோது தான் அரசு முதல்தலைமுறை மாணவர்களுக்கான அரசாணை நிர்ணயித்த தொகையை வெளியிட்டார்கள்..குறிப்பாக அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ 5000 ம்.. சுயநிதி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ 20000 என அறிவிக்க… இதனால்கவுன்சிலிங்க் விண்ணபித்த 78883 முதல்தலை முறை மாணவர்களில் நாற்பத்தியெட்டாயிரம் மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் சேர்ந்தார்கள்.அரசை நம்பி கல்லூரி கனவு கண்ட மற்ற மாணவர்கள் கனவுகள் கருகிபோனது..ஏனெனில் இந்த மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டிய அரசு குறைந்த பணத்தினை ஒதுக்கிவிட்டு தனது கையை விரித்து கொண்டது..

இது ஒருபுறமிருக்க கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் நிலமை மோசமானது… கல்லூரியில் சேர்ந்த மாணவர்களிடமிருந்து நம்மை உருகுலைய வைத்தது..கல்லூரி நிர்வாகங்கள் பணம் கவர்மெண்ட் கொடுக்கிறப்போ நாங்க திருப்பி தருகிறோம்.. நீங்க பணத்தை கட்டுங்க என கல்லூரிகள் மிரட்டுகிறார்கள் என்றும், கட்டணத்தை விட அதிகமாக பணம் கேட்பதாக நம் students Help line 9698151515 ல் தகவல் வந்துகொண்டே இருக்கிறது… விடாது பயணித்தோம்…ஏனெனில் வெளிச்சம் என்பது முதல்தலை மாணவர்களுக்கான கல்வி இயக்கமாக அறிவித்தோம்..இன்று வரை வெளிச்சம் மாணவர்கள் 515 மாணவர்கள் முதல்தலை முறை மாணவர்கள் என்பதையும் உங்களுக்கு தெளிவு படுத்துகிறோம்..

நாம் பயந்ததை போன்று பிரச்சனையை வெளியிட்ட தினமலர் கட்டுரை

தலைப்பு: கல்வி உதவித் தொகை வழங்க அரசு தாமதம்: கல்லூரி நிர்வாகம் கெடுபிடி


எதை எதையோ பேசும், அறிக்கையாக்கும்,போராட்டமாக்கும் கட்சிகளே,இயக்கங்களே,ஒத்தகருத்துடைய சிந்தனையாளர்களே..இந்த விசயத்தில் மட்டும் உங்கள் கவனம் படவே யில்லையா…

சுதந்திரமடைந்து இவ்வளவு காலங்களில் நாங்கள் தான் முதன்முதலில் கல்லூரிகளில் சேர்ந்தோம் என்பது எங்களுக்கு பெருமை..இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கான கேள்விகுறி…எப்போதுதான் எமக்காகவும் உம்குரல் எழும்ப போகிறது….பார்ப்போம்..

ஏழைகளின் உயர்கல்விக்கான பணியில்
வெளிச்சம் மாணவர்கள்

(இணைப்புகளை இடையிடையே போட்டதற்க்கு மன்னிக்கவும்…எங்கள் வலிகள் அப்படியே பதிவு செய்ய முனைந்தோம்)…

இணைப்புகள்:

பிரச்சாரப்பயணப்படங்கள்:http://velichamedu.wordpress.com/%E0%AE%

பிரச்சாரப்பயண பத்திரிக்கை செய்திகள்:


வெளிச்சம் மாணவர்கள் சட்ட மன்றத்தில் கொடுத்த மனு:http://velichamstudents.blogspot.com/2010/04/22.html