|
Saturday, March 5, 2011
திரைப்படங்களில் நாம் பார்ப்பது நிஜமாக வாய்ப்பு உண்டு
வேற்றுக் கிரகவாசிகள் (ஏலியன்) பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல் ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்ப்பது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு, என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது' என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அறிவியல் முதல் மதம் வரையில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக் கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும்; உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க விஞ்ஞானிகளின் கருத்து, அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.
அறிவியல் முதல் மதம் வரையில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக் கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும்; உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க விஞ்ஞானிகளின் கருத்து, அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.
|
அந்த இரவை சந்திக்கும் தம்பதியருக்கு
!
திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன. இதனாலே யே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்…. முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை.
கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும்.
அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம். முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள்.
அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
உறவை பலப்படுத்தும். எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.
கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும்.
அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம். முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள்.
அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
உறவை பலப்படுத்தும். எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.
|
Friday, March 4, 2011
நிதர்சன கதைகள்-25-கருணை
வண்டிகளை மடக்குவதற்கு சரியான இடம் பார்த்து நிற்க வேண்டும். எங்கு ஃபிரீ லெப்ட் இல்லையோ அங்கு கண்களுக்கு தெரிகிறாற்போல நிற்கக்கூடாது. கொஞ்சம் உள்ளடங்கி ஓரமாய் நிற்க வேண்டும். அப்போது தான் யாருமில்லை என்ற நினைப்பில் வண்டியோட்டுபவன் “சல்”லென வண்டியை ஸ்லோ செய்து திரும்புவான். திரும்பியவுடன் வேகமெடுக்க ஆரம்பிக்கும் நேரத்தில் சட்டென இரண்டு கைகளை விரித்தபடியே குறுக்கே புகுந்து ஓரங்கட்டச் சொல்ல வேண்டும். வண்டியின் திருப்பத்திற்கும் குறுக்கே போய் நிற்பதற்கும் சரியான தூரம் வேண்டும். அது குறைவாக இருக்கும் பட்சத்தில் ப்ரச்சனைதான்.
அப்படி மடக்கியவுடன், சட்டென வண்டியின் சாவியை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாய் இளைஞர்களிடம். இல்லாவிட்டால் மயிராப் போச்சென போய்க் கொண்டேயிருப்பார்கள். அப்படி மடக்கப்படும் முகங்களில் தெரியும் கோபத்தையும், “அய்யோ மாட்டினமா” என்கிற பாவ முகமும், “த்தா.. மாட்னேண்டா” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு ஓரங்கட்டும் ஆட்களின் முகங்கள் தூக்கத்தில் கூட வரும்.
”கையில காசேயில்லை சார்.. வேணுமின்னா வண்டிய வச்சிக்க.. காசு கொண்டாந்து கொடுத்துட்டு எடுத்துட்டுப் போறேன்” என்று வண்டியை விட்டு கிளம்புபவன், “சார்.. ஒரு இருபது இருக்கு. அவ்ளதான் இருக்கு.. அசீஸ் பண்ணுங்க..” “எவ்வளோ ஃபைன்.. பில் தருவீங்களா?’ என்று அலட்சியமாய் கேட்கும் முதுகில் மார்பழுத்திய பெண்களோடு வரும் இளைஞர்கள். என பல முகங்கள். எல்லோர் முகத்திலும் ஒரு விரோதம் இருக்கும். “தேவடியாப் பய’ என மனதில் திட்டும் குரல் கேட்கும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப் பட்டால் முடியாது. சம்பளத்தைவிட இது முக்கியம்.. ஒவ்வொரு நாளும் அதுவும் இந்த வண்டிகளின் புகையின் நடுவே நின்று, வெயில் மழை என்று உழைக்கும் உழைப்புக்கு ஏற்ற கூலி இதுதான். சம்பளம் அல்ல.. என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டாலும் மாதவனுக்கு உள்ளுக்குள் தன்னைப் பற்றிய கழிவிரக்கம் சுரந்து கொண்டேதானிருக்கும்.
ஒருநேரம் இல்லை ஒருநேரம் மாதவனுக்கு என்ன பொழைப்பு இது என்று எரிச்சலாய்க்கூட வந்ததுண்டு. மாசம் வரும் பத்து சொச்ச சம்பளத்துடன் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் இருக்கிற விலைவாசியில் அது எங்கே போகிறதென்றே தெரியவில்லை. தினசரி குறைந்தது முன்னூறு ரூபாயாவது கல்லா கட்டவில்லையென்றால் தெனப்படிக்கு பிரச்சனைதான். கலெக்ஷன் டைமில் கூட ஆள் இருந்துவிட்டால் அதிலும் பங்கு போய்விடும். அது மட்டுமில்லாமல் சார்ஜெண்டும் இருந்துவிட்டால் அவருக்கு ஒரு பங்கு என்று எல்லாம் போக நூறு மிஞ்சினால் பெரிய விஷயம். சரவணபவன் காபி இருபது ரூபாய் விற்கும் காலத்தில் நூறு ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு இருக்கும்?. அண்ணாச்சி பரவாயில்லை.. தெனம் காபியும், டிபனும் இலவசமாய் கொடுத்துவிடுகிறார். மாதவன் வேலை பார்க்கும் ஸ்டேஷனில் பரவாயில்லை. ஒரு சில ஸ்டேஷனில் எல்லோர் கலெக்ஷனையும் சேர்த்து போஸ்டுக்கு ஏற்றவாறு பிரித்துக் கொள்கிறார்களாம். அநியாயம். அலைந்து திரிந்து மடக்கிப் பிடிப்பது நாம்.. அதில பங்கு அவர்களுக்கு.. சே.. என்னா பகல் கொள்ளை.. என நினைத்துக் கொள்வார் மாதவன்.
ஆனால் இன்னைக்கு அது கூட கிடைக்காது. மாச டார்கெட் முடித்தே ஆகவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஐயா ரொம்ப ப்ரெஷர். மாசக் கடைசியில் கேஸ் பிடிக்கவிலலையென்றால் அவருக்கு மேலிடத்தில் மண்டகப்படியுண்டு. குறைந்தது ஐம்பதாவது பிடிக்க வேண்டும். இன்றைக்கென்று பார்த்து பெரிதாய் எதுவும் மாட்டவில்லை. எல்லோரும் சரியாகவே நின்று, சிக்னல் பார்த்து வருவதாய் மாதவனுக்கு பட்டது. ஞாயிற்றுக்கிழமை வேறு... பக்கத்து தியேட்டர் காம்ப்ளக்ஸில் மேட்னி வரும் ஆட்களை விட்டால் அஞ்சு மணி வரை காத்தாடத்தான் இருக்கும். டார்கெட் முடிக்காமல் போனால் ”இதே உன் காசுன்னா பிடிக்காம வ்ருவியா.?” என்று சடுதியில் நீதிமானாய் மாறிக் கேள்வி கேட்பார் இன்ஸ்பெக்டர்.
மணி இரண்டு. மாதவன் சுறுசுறுப்பானார். வண்டியில் இரண்டு குழந்தைகளுடன் ஒரு மிடில் க்ளாஸ் தகப்பன். மாதவன் தன் இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டே அந்த வண்டியின் முன் ஓட, அவன் பதறியடித்து பிரேக்கைப் பிடித்து ஓரமாய் ஒதுக்கிவிட்டு, பரிதாபமாய் மாதவனையே பார்த்தான். மாதவன் பரபரவென அந்த் வண்டியின் அருகே வந்து வண்டியின் சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு,
“இறங்குங்க.. போய் அய்யா கிட்ட சலான் வாங்கிக்கங்க..” என்று சொல்லிவிட்டு கிளம்ப யத்தனிக்க,
“சார்.. சார்..” என்றபடி பையன்களை ப்ளாட்பாரம் ஓரமாய் ”பத்திரமாய் நில்லுங்க” என்று சொல்லிவிட்டு மாதவனருகில் வந்து “சார்.. பசங்க பசிக்குதுன்னாங்க.. ஓட்டலுக்கு கூட்டிட்டுப் போறேன்.. கையில நூத்தம்பது ரூபாதான் இருக்கு.. பார்த்து செய்யுங்க சார்..” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
மாதவனுக்கு இதெல்லாம் புதிதல்ல. அவர் அவனை சட்டை செய்யாமல்
”அதெல்லாம் எனக்கு தெரியாது அய்யாவ பாரு..” என்றபடி, வேகமாய் திரும்பிய இன்னொரு வண்டியை நோக்கி இரண்டு கைகளை விரித்தபடி குறுக்கே ஓட, அந்த வண்டிக்காரன்.. கோபமாய்..
“ஓரம்போங்க..சார்.. குறுக்கே நிக்காதீங்க.. நானே நிக்கிறேன்..” என்றபடி.. வண்டியை நிறுத்தி என்ன என்பது போல மாதவனை பார்த்தான். மாதவன் வண்டியின் சாவியை எடுக்க கைவைத்த போது..
“ஹலோ..சார்.. கைய எடுங்க.. வண்டி சாவில கை வைக்கிற வேல வேணாம். எதுக்கு வண்டிய ப்ளாக் பண்ணீங்க..?”
மாதவனுக்கு இதுவும் புதிதல்ல.. இம்மாதிரி தாட் பூட்டென கேள்வி கேட்பவர்கள் எல்லாம் அடுத்தடுத்து கேட்கப்படும் லைசன்ஸ், இன்சூரன்ஸ், ஹெல்மெட், இத்யாதிகளில் சரணடைந்து விடுவார்கள். அதைவும் மீறிப் போனால் வண்டியின் நடுவில் ஒட்டும் கருப்பு ஸ்டிக்கர், நேம் போர்ட் என்று எவ்வளவோ உள்ளது.
“ஃபிரீ லெப்ட் கிடையாது இங்க. நீங்க பாட்டுக்கு வர்றீங்க.. க்ராஸ் பண்ணுறவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு..?”
“அவ்வளவு பொறுப்பு இருக்கிறவர் க்ராஸிங்க்ல நிக்க வேண்டியதுதானே..? ஓரமா ஒளிஞ்சிட்டு நிக்கிறீங்க.? போலீஸோட வேலை என்ன தெரியுமா? குற்றம் நடக்காம தடுக்கிறதுதான்.. நீங்க.. நடக்கவுட்டு பிடிக்கிறீங்க.. இதுல யாரு தப்பு செஞ்சாங்கன்னு புரியலை..?”
மாதவனுக்கு அயர்ச்சியாய் இருந்தது.. இனி தாங்காது அஸ்திரங்களை விட வேண்டியதுதான் என்று யோசித்து “ரொம்ப பேசாதீங்க..” என்று ஆரம்பிக்க..
“என்ன.. ஆர்.சி;புக், இன்சூரன்ஸ். ஹெல்மெட், வண்டியோட நேம் ப்ளேட், கருப்பு ஹெட்லேம்ப் ஸ்டிக்கர் அதானே.. எல்லாம் சரியாயிருக்கு.. வேணுமின்னா பாத்துக்கங்க.. ‘ என்றான் அலட்சியமாய்.
“மிஸ்டர்.. ராங் சிக்னல்ல வந்திட்டு ரூல்ஸ் பேசாதீங்க.. ஒழுங்கு மரியாதையா அய்யாகிட்ட போய் ஃபைன் கட்டிட்டு சலான் வாங்கிக்கங்க..”
“நான் ஏன் சார் சலான் வாங்கணும் நீங்க என்னை பிடிக்கும் போது.. எனக்கு சிக்னல் இருந்திச்சு..”
“அப்ப நான் பொய் சொல்றேனா.. த..பாரு.. இந்த சிக்னல்ல நாலு கேமரா இருக்கு அதில எல்லாம் ரெக்கார்ட் ஆவுது..”
“அப்போ பிரச்சனையே இல்லை.. அதுல பார்த்துட்டு நோட்டீஸ் கொடுங்க.. நான் கோர்டுல வந்து பைன் கட்டுறேன். ப்ரூப் பண்ணுங்க.. பண்ணாத தப்புக்கெல்லாம் நான் ஃபைன் கட்ட முடியாது.”
“அங்க என்னய்யா ப்ரச்சனை..?” என்று சார்ஜெண்ட் கேட்டார்.
“பாருங்கய்யா.. ராங் சிக்னல்ல வந்திட்டு ரொம்பத்தான் ரூல்ஸ் பேசுறாரு..” என்றதும் அந்த இளைஞன் சாவதானமாய் இறங்கி.. சார்ஜெண்டை நோக்கி நடந்து போய்.. தன் பையிலிருந்து ஒரு கார்டை எடுத்துக் கொடுத்து “இதான் என் கார்டு.. என் போன் நம்பர் எல்லாம் இருக்கு.. நான் சரியாத்தான் வந்தேன்.. அப்படி நான் ராங் சிக்னல்தான் வந்தேன்னு உங்க கேமரா மூலமா கண்டு பிடிச்சி சொல்லுங்க.. ஃபைன் கட்டுறேன். இல்லேன்னா.. நீங்க ஃபைன் கட்ட வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டு யாரையும் மதிக்காமல் வண்டியை நோக்கிப் போக, மாதவன் “என்னங்கய்யா..?” என்று அந்த கார்டை வாங்கிப் பார்த்தான். வாசுதேவன் மனித உரிமைக் கழகம் என்று போட்டிருக்க.. “சரிதான் சார்..” என்றபடி, அவன் வண்டியை எடுத்துக் கொண்டு போவதையே பார்த்துக் கொண்டிருக்க..
“சார்..சார்..” என்று தீனமான குரல் கேட்டுக் கலைந்து குரல் வந்த திசையை பார்த்தார் மாதவன். குழந்தைகளோடு வந்தவன். குழந்தைகள் வண்டியை பிடித்தபடி தன் அப்பாவையே பாவமாய் பார்த்தபடி நிற்க.. ”சார்.. கொஞ்சம் ஐயாகிட்ட சொல்லுங்க சார்.. பசங்க பசியில இருக்குதுங்க.. கையில வேற காசில்ல..” என்றவனை ஆழமாய் பார்த்தார் மாதவன். அவன் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது..
“சரி.. சரி.. ஒரு இருபது ருவா கொடுத்துட்டு கிளம்பு இனிமே இந்தமாதிரி சிக்னல் பாக்காம வரக்கூடாது என்ன..?” என்றார்.
|
The Social Network
மார்க் ஜூகர்பெர்க் 2003ல் ஹார்வேட் மாணவன் ஆறே வருடங்களில் கோடீஸ்வரன். எப்படி? இந்த கேள்விக்கான பதில் தான் இந்த திரைப்படம். கற்பனைகதையல்ல. நிஜத்தில் கண் முன்னே பார்த்து வளர்ந்து ஓங்கி நிற்கும் ஒருவனின் கதை. வழக்கமாய் நிஜ வாழ்க்கை கதைகள் அதிலும் சமகாலத்தில் வாழும் ஆட்களை பற்றிய கதைகளில் பெரிதாய் ஈர்பிருக்காது. அதிலும் வெறும் கம்ப்யூட்டர், வெப்சைட் என்று சுற்றி கொண்டிருக்கும் ஒருவனது கதையை சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா?என்று யோசிப்பவர்களும் முடியும் என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லில்யிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியரும், இயக்குனரும்.
கம்ப்யூட்டர் புலியான மார்க்கின் காதல் முறிவுக்கு பின் தான் படிக்கும் ஹாவர்ட்டின் லோக்கல் நெட்வொர்கை உடைத்து facemash.com என்றொரு இணையதளத்தை உருவாக்கி தங்கள் ஹாவர்டில் படிக்கும் மாணவிகளின் போட்டோக்கள் டேட்டாபேஸை திருடி மாணவர்களிடையே ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட, அதன் காரணமாக அவனை ஆறு மாதம் படிப்புக்கு தடை பெறுகிறான். ஒரு போதையான மது இரவில் ஹாவர்ட் ரோயிங் டீமிலிருக்கும் இரட்டையர்கள் தங்கள் சைட்டுக்கு வேலை செய்ய மார்க்கை அழைக்கிறார்கள்.

சிறிது நாட்கள் கழித்து மார்க்குக்கு பேஸ்புக் பற்றிய ஐடியா தோன்ற, அவனது நண்பன் எடுராடோவிடம் சொல்கிறான். அந்த இணைய தளம் மூலமாக ஹாவர்டிலிருக்கும் அத்துனை மாணவர்களையும் ஒன்றினைத்து அவர்களுக்குள்ளான தகவல்களை பரப்ப முடியும் என்று சொல்ல, எடுராடோ அவனுக்கு ஆயிரம் டாலர் கொடுத்து உதவுகிறான். சடுதியில் ஹாவர்டில் பிரபலமான பேஸ்புக்கின் வளர்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாய் பெரிய ஆலமரம் வளர ஆரம்பிக்க பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.
இரட்டையர்கள் சகோதர்களும், முதலாய் பணம் கொடுத்து உதவிய நண்பனும் மார்க் தங்களை ஒதுக்கிவிட்டு தங்கள் ஐடியாவையும் சுட்டு விட்டதாய் கேஸ் போட, அதில் எவ்வாறு மார்க் வென்றெடுக்கிறான் என்பதுதான் கதை. முழுக்க, முழுக்க, வசனங்களாலேயே நிரப்பப்பட்ட திரைக்கதை. அதிலும் மார்க் பேசும் சப்டைட்டிலில்லா ஸ்பீடுக்கு கூடவே ஓடி சில சமயம் நுரை தள்ளுகிறது.
ஆனால் படத்தின் ஆரம்ப காட்சியில் வரும், கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஷாட்டுகள் கொண்ட நீண்ட காட்சியை என்ன தான் சுவாரஸ்யமாய் டயலாக் நடிப்பு என்றிருந்தாலும் நம் இயக்குனர்கள் வைப்பார்களா? என்று தெரியவில்லை.. ஆனால் சரி சீன். இம்மாதிரியான நிஜ வாழ்க்கை கதைகளில் இருக்கும் சமகால காதல், பணம், துரோகம், செக்ஸ் போன்ற சுவாரஸ்யங்களை வைத்து திறமையான திரைக்கதையமைத்த ஆரோன் சார்கின்னை பாராட்டத்தான் வேண்டும்.
|
Paranormal Activity 2
.
வழக்கமாய் இம்மாதிரியான படங்களில் முதல் பார்ட்டில் செட்டான ஒரு பார்மெட் இருக்கும். அது ஒரு சக்சஸ் பார்முலாவாக இருப்பதால் மீண்டும் அதையே இன்னும் பாலீஷ் செய்யப்பட்டு இன்னும் ப்ரெஷ்ஷாக கொடுக்க முயற்சிப்பார்கள். இதிலும் அதையே.. செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இக்கதை முதல் பாகத்தின் தொடர்ச்சி கிடையாது, அதன் முன் பகுதி. முதல் பகுதியின் முடிவையும் இரண்டாவது பகுதியின் முடிவையும் மிக அழகாய் முடிச்சு போட்டிருப்பது திரைக்கதையாசிரியன் திறமை.
கிறிஸ்டி ரே பிரசவத்திற்கு பிறகு தன் குழந்தை ஹண்டருடன் வீட்டிற்கு வருகிறாள். குழந்தையின் முதல் சில மாத வீடியோக்களுடன் காட்சிகள் நகர்கிறது. அவளுடய கணவன் டான், அவனுடய பெண், வீட்டை பார்த்துக் கொள்ளுமொரு ஆயா போன்ற பிலிப்பைன்ஸ் பெண், ஏபி எனும் நாய் இதுதான் அவர்கள் குடும்பம். ஒரு நாள் இரவு வீட்டின் எல்லாக் கதவுகளும் பூட்டியிருக்க.. வீட்டையே தலைகீழாக்கி போடப்பட்டிருக்க.. கிறிஸ்டியின் ஒரு நெக்லஸை தவிர எதுவும் திருடு போகவில்லை. எனவே வீடு முழுவது செக்யூரிட்டி கேமராக்களை பொருத்துகிறார்கள். அதன் பிறகு ஒவ்வொரு இரவும் நமக்கு காட்டப்பட.. மெல்ல.. மெல்ல அமானுஷ சக்திகளின் அட்டகாசங்கள் ஆரம்பமாகிறது. ஆனால் அதை நம்பாத டான்.. எல்லாவற்றுக்கும் ஒரு விஞ்ஞான காரணம் சொல்கிறான். ஒரு கட்டத்தில் அமானுஷ சக்தி குழந்தை ஹண்டரிடம் போய் நிற்க, அவனுடய் ரூமிலிருக்கும் நாய் அதை கண்டு மிரண்டு குலைக்க ஆரம்பிக்கிறது. திடீர் திடீரென நடக்கும் சில பல அதிர்ச்சிகள் தொடர, வேறு வழியில்லாமல் முன் இந்த வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது என்று சொன்ன ஆயாவை வேலையை விட்டு விரட்டிய டான் அவளை வரவழைக்கிறான். அவள் ஒரு சிலுவையை அவனுக்கு கொடுத்து, இவ்வீட்டில் உள்ள துஷ்ட சக்தியை கிறிஸ்டியின் மீது வைத்து அவளுடய ரத்த சம்பந்தமான அவளுடய சகோதரி கேட்டியின் மீது மாற்றிவிட்டால் அவனுடய குழந்தையும், குடும்பமும் பிழைக்கும் என்கிறாள். ஆனால் அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் எல்லாம் ஏறு மாறானவை. டேன் மற்றும் கிறிஸ்டிக்கு என்ன ஆயிற்று? குழந்தை ஹண்டரை ஏன் அமானுஷ்ய சக்தி ஆகர்ஷிக்கிறது? அவனுக்கு என்னவாயிற்று என்பது போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் பதில் தெரிந்து கொள்ளுங்கள்.
தன் ஒரே தொந்தரவான நாயை ஒரு நாள் அமானுஷ சக்தி அடித்துப் போட, அந்த ஒரே நாள் இரவில் நடக்கும் பல விஷயங்கள் ஸ்பைன் சில்லிங். படம் முடிந்துவிட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது முதல் பாகத்தின் கேட்டியை வைத்து இந்த பாகத்தை முடித்திருப்பது.. அட்டகாசம். நிச்சயம் வழக்கமான ரெண்டாவது பாகம் தானே என்ற சலிப்புடன் பார்க்க ஆரம்பித்தவர்களை நிமிர்ந்து உட்காரச் செய்துவிடும் க்ளைமாக்ஸ்.
டெக்னிக்கலாய் முதல் பாகத்தைவிட சிறப்பாக இருக்கிறது. முதல் பாகத்தில் கூடவே ஓடிவரும் கேமரா காட்சிகள் தான் அதிகம் இருக்கும். இதில் அம்மாதிரியான காட்சிகள் சில சமயம் பார்வையாளர்களின் பாயிண்ட் ஆப் வியூவிலும், சில காட்சிகள் டேனின் பெண்ணின் கேமராவின் பார்வையிலும் இருக்கிறது. சிசி டிவி கோணங்களில் காட்டப்படும் காட்சிகள் மெல்ல, மெல்ல.. ஒரு கட்டத்தில் நடு முதுகில் சில்லிட வைக்கிறது. ராத்திரியில் படம் பார்த்தால் நிச்சயம் வீட்டின் ஏதாவது அறையில் சத்தம் கேட்டால் ஒரு ஜெர்க் ஏற்படுவது நிச்சயம்.
|
தற்கொலைகளும்.. பொதுபுத்தியும்.
சென்ற வாரம் இரண்டு தற்கொலைகள். ஒரு பெண் சக மாணவி வைத்திருந்த பணம் காணாமல் போனதால், சந்தேக லிஸ்டில் இருந்த நான்கு பேரில் தன்னை மட்டும் நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்பதற்காக தூக்கு போட்டுக் கொண்டார். இன்னொருவர் பள்ளியில் பரிட்சையில் காப்பி அடித்தற்காக ஆசிரியர் திட்டியதை தாங்க முடியாமல் தூக்கு போட்டுக் கொண்டார். இதற்காக முதல் சம்பவத்தில் நான்கு ஆசிரியர்களை கைது செய்து அப்போதைக்கு பிரச்சனையை முடித்திருக்கிறது போலீஸும், கல்லூரி நிர்வாகமும். கோர்ட்டில் அவர்களை அரெஸ்ட் செய்ததே தவறு என்று கூறி ஜாமீன் கொடுத்துள்ளது.
இறந்த பெண் ஏழை, பிற்படுத்தப்பட்ட பெண் என்றதும், கூட்டமாய் வந்து பிரச்சனை செய்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுத்தால் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள். காப்பி அடித்தால் மடியில் வைத்துக் கொஞ்சுவார்களா என்ன? இம்மாதிரியான விஷயங்களை பத்திரிக்கைகளும் ஏதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே பரபரப்புக்காக செய்திகளை போட்டு விடுகிறது. உடனே நம் பதிவர்களும் ஆளாளுக்கொரு பதிவு போட்டுவிடுகிறார்கள். ஜாதிப் பிரச்சனை, அது இது என்று ஆளாளுக்கு ஒர் கற்பனையில். மொத்தத்தில் இவர்களுக்கு தெரிந்த நிஜமெல்லாம் தினசரிகளில் வந்த செய்தி மட்டுமே.. பேப்பரை படித்து மட்டுமே ஆளாளுக்கு பதிவு போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்பெண் தற்கொலைக்கு முன் அரைகுறையாய்த்தான் கடிதமெழுதி வைத்திருக்கிறார். அதில் எங்கேயும் தன்னை நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்று எழுதியிருந்ததாய் இல்லை.
இதில் உச்சம் என்னவென்றால் ஒருவர் எப்படி ஒரு பெண் அவ்வளவு பணத்தை காலேஜுக்கு கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார். என்ன கொடுமைங்க இது?. அதன் பின்னணியில் இருப்பது யாருக்கும் தெரியாது. எப்படி அந்தப் பெண் திருடியிருக்க வாய்ப்பில்லை, அவள் ஏழை, பிற்படுத்தப்பட்ட பெண் என்ற காரணத்தினால் தான் அவமானப்படுத்தப்பட்டாள் என்று ஒரு வர்ஷன் இருக்கும் போது, ஏன் அந்த பெண் திருடியிருக்கக்கூடாது? தான் மாட்டியதால் அவமானப்பட வேண்டியிருக்குமே என்று தூக்கு மாட்டி செத்திருக்கலாம் என்ற வர்ஷனும் இருக்கத்தானே செய்யும். இதோ இன்று இவர்களை கைது செய்து அவமானப்பட வைதாகிவிட்டது. நாளையே இவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்பட்டுவிட்டால், இதே பத்திரிக்கைகளும், பதிவர்களும் அவர்கள் எழுதியதற்கு குறைந்தபட்சமாக வருத்தமாவது தெரிவிப்பார்களா? நிச்சயம் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அதற்கான பரபரப்பு போன பிறகு எழுதுவது வேஸ்ட். இப்படி போலியாய் குற்றம் சாட்டப்பட்டு அவமானத்திற்கு உட்பட்டவர்களின் வலி மிகக் கொடியது.
ஒரு பெண் காப்பியடிப்பதை பார்த்து ஆசிரியர் திட்டாமல் என்ன செய்ய வேண்டும்?. உடனே அவர்கள் அவளை என்ன சொல்லித் திட்டினார்கள் என்பதுதான் முக்கியம் என்று சொல்வது மீண்டும் ஜாதி, மற்றும் பொருளாதார நிலையை வைத்து பேசும் சப்பைக்கட்டுகள் தான். பத்திரிக்கையில் வந்த செய்தியின் படி, நன்றாக படிக்கும் மாணவியான அவர் உடல் நிலை சரியில்லாததால் படிக்கவில்லை. அதை சரி செய்யும் நோக்கில் காப்பி அடித்துள்ளார். ஒரு ஆசிரியை இம்மாதிரியான செயல்களை நன்றாக படிக்காத மாணவி செய்திருந்தால் கூட எக்கேடோ கெட்டு போகிறதென்று விட்டு விடுவார். நன்றாக படிக்கும் மாணவி இப்படி செய்தால் நிச்சயம் கோபப்பட்டு திட்டத்தான் செய்வார். அம்மாணவி தூக்கு போட்டு செத்துப் போனதால் அவள் செய்தது நியாயம் என்றாகிவிடுமா?
ஒருவர் தவறு செய்தால் அவர்களுக்கு ஜாதி, இன, பண வேறுபாடு இல்லாமல் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் பல விஷயங்கள் வெறும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இயக்கும் மாப் சைக்காலஜியில் கும்பல் சேரும் கூட்டத்தை சரி செய்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், அந்த ஆசிரியர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கும் தெரியுமா?
போன வாரம் இன்னொரு செய்தி ஒரு அரசு ஆஸ்பத்திரியில் தங்கள் குழந்தைக்கு உடல் நிலை சரியிலலை என்று போய் காட்டியிருக்கிறார்கள். அதற்கு டாக்டர்.. குழந்தையின் உடல் நிலை மோசமாக இருக்கிறது. விரைவில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதை மதிக்காத பெற்றோர்கள் மேலும் ஒரு மாதம் கழித்து குழந்தையின் நிலமை மோசமான போது கொண்டு வந்து ஆபரேஷன் செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். டாக்டர் இப்போது நிலை மோசமாக உள்ளது இப்போது ஆபரேஷன் செய்தால் சான்ஸ் ரொம்ப குறைவு என்று சொல்லிவிட்டுத்தான் ஆபரேஷன செய்திருக்கிறார். ஆபரேஷன் தோல்வியடைந்து குழந்தை இறந்துவிட்டது. உடனே ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு வந்து டாக்டரை கைது செய்ய வேண்டும் என்று ஒரு கும்பல் ஆஸ்பிட்டலை முற்றுகையிட்டு ப்ரச்சனை செய்திருக்கிறதது.
சைக்கிள்காரனுக்கு குறுக்கே நடந்து அடிபட்டால், தவறு நடந்து வந்தவன் செய்திருந்தாலும் சைக்கிள்காரந்தான் தப்பு செய்தான், என்று முடிவு செய்வது போல யாரோ எவரோ எங்கோ ஒருவர் செய்யும் தவறான செயல்களை பொதுபுத்திக் கொண்டு உணர்ச்சிவசப்படாமல் பார்க்க பழகினால் பல பிரச்சனைகளுக்கான காரணம் தெரியும்.
|
Subscribe to:
Comments (Atom)