Monday, May 23, 2011

இது பேஸ்புக் செய்த சதி


சமூக இணையத்தளமான பேஸ்புக் உரிமையாளர்கள் பேர்ஸன் மாஸ்டெல்லர் என்ற நிறுவனத்தின் சேவையை இதற்கெனப் பெற்றுள்ளனர்.

மோசமான தந்திரங்களைப் பிரயோகிக்கும் வெகுசனத் தொடர்பு நிறுவனமொன்றை வாடகைக்கு அமர்த்தி கூகுள் நிறுவனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது.

கூகுள் நிறுவனம் பற்றி எதிரிடையான செய்திகளை பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்வதே இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டப் பணி.

இந்த நிறுவனம் போக்லாந்து யுத்தத்தின் போது ஆர்ஜன்டீன ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவம் செய்த நிறுவனமாகும்.

வாசிப்போர் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையில் கூகுளின் சமூக வட்ட சேவை தொடர்பான கதைகளை இந்த நிறுவனம் வெளியிட்டது.

கூகுளின் சமூக இணையத்தளம் (சோஷியல் சேர்கள்) வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மீறிவிட்டது என்ற அடிப்படையில் தான் இந்தப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பேஸ்புக்கிற்கு நேரடி சவால் விடுக்கக் கூடிய ஒரு சமூக இணையத்தளமாக இருப்பது கூகுளின் சோஷியல் சேர்கள் மட்டுமே.

வாடிக்கையாளர்கள் படங்கள், வீடியோக்கள் உட்பட பல்வேறு தகவல்களை இதில் தரவேற்றம் செய்ய முடியும். பேஸ்புக்கில் இருந்து அங்கீகாரமற்ற முறையில் தரவுகளையும், ஏனைய சேவைகளையும் இது பெற்றுக் கொள்வதாக பேஸ்புக் குற்றம்சாட்டியிருந்தது.

பேஸ்புக்கால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பாக ஒரு குறிப்பை எழுதுவதற்கு அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணி ஒருவரை நாடியுள்ளது.

வாஷிங்டன்போஸ்ட் உட்பட பிரபல பத்திரிகைகளில் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க எழுதுமாறு கேட்டு அவரை நாடியுள்ளது. அவர் இந்த முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியபோது மேற்படி நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

அதனையடுத்து அந்த சட்டத்தரணி இது தொடர்பான ஈ மெயில் தொடர்புகளை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

அதனையடுத்தே பேஸ்புக்கின் குட்டு அம்பலமாகியுள்ளது.

உங்களுக்கு ரூபாய் 40 கோடிக்கு எ டி எம் கார்டு வேண்டுமா?

 பெனின் குடியரசு நாட்டில் பணம் படைத்த பெண் ஒருவர், தம்மிடம் தேங்கி உள்ள பணத்தை ஏழைகளுக்கு (மட்டும்) வழங்க முடிவு செய்துள்ளதாகவும், "நீங்கள் ஏழையாக இருக்கும் பட்சத்தில், முழுமையான தகவல் அனுப்பி பயன் பெறலாம்' எனவும், நமக்கு முதல், "இ-மெயில்' வருகிறது.

அவர்கள் கேட்ட விவரங்களை அனுப்பியதும், நமது பெயரில் அந்நாட்டின் காப்பீடு திட்டத்தில், 40 கோடி ரூபாய்க்கு கணக்கு துவங்கியிருப்பதாக, அடுத்த மெயில் வருகிறது. உடன், அரசு அனுமதியுடன் கூடிய, காப்பீடு நிறுவன சான்றிதழும், "ஸ்கேன்' செய்து அனுப்பப்படுகிறது. நாம் புத்திசாலியாக இருந்து, தடையில்லா சான்றிதழ் கேட்கும் பட்சத்தில், அதையும் அனுப்புகின்றனர்.
இந்த நூதன மோசடி மீது நம்பிக்கை ஏற்பட, இதுவே முதல் அஸ்திரமாகிறது. அதன் பின், மும்பையில் இருப்பதாக கூறப்படும், "கூரியர்' நிறுவனத்தின் பெயரிலிருந்து நமக்கு மெயில் வரும். அதில், நம் பெயரில் ஏ.டி.எம்., கார்டு அடங்கிய பார்சல் வந்திருப்பதாகவும், உரிய ஆவணங்களுடன் வந்து பெறுமாறும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மோசடியாளரை நாம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கும் போது, "இதுவரை நடந்த பரிமாற்றத்திற்கான கட்டணமாக, 17 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஏ.டி.எம்., கார்டை பெறுமாறு, கூறுகின்றனர். இதற்காக மும்பை நபர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பின், என்ன நடக்கும் என்பதை, புத்திசாலிகள் யூகித்து விடுவர். இதுவரை புகாருக்கு ஆட்படாத இந்த நூதன மோசடி, தற்போது தமிழகத்தில் பரவலாக ஆக்கிரமித்துள்ளது. "குரூப் மெயில்' மூலம் நம் இ-மெயில் முகவரியை தெரிந்து கொண்டு, இந்த நூதன மோசடி துவங்குகிறது. ஆசையில், இது போன்ற மோசடிகளுக்கு நாம் செவி சாய்க்காமல் சென்றால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.

கை கால்களை விரித்து மல்லாந்து உறங்குவோர்


நீங்கள் உறங்கும் விதத்தை அடிப்படையில் கொண்டு உங்களைப்பற்றி சொல்ல முடியும். இங்கு ஒவ்வொரு நிலையிலும் உறநங்குபவர்கள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றன. இவற்றில் நீங்கள் எந்த வகையினர் என்பதை பரிசீலித்துப் பாருங்கள்.

தலைமுதல் கால் வரையில் முழுமையாக போர்வையால் மூடிக் கொண்டு உறங்கும் பழக்கமுடையவர்கள்



பொதுமக்கள் மத்தியில் தைரியமான நபராக உங்களைக் காட்டிக்கொண்ட போதிலும், ஆழ் மனதின் அடிப்படையில் நீங்கள் பலவீனமான, கூச்ச சுபாவமுடையவர். அதிகளவான ரகசியங்களைப் பேணிப்பாதுகாப்பீர்கள். நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் அதனை வெளிப்படுத்தி உதவி கோராது, உங்களுக்குள்ளேயே பிரச்சினை மூடி மறைத்துக்கொள்வீர்கள். உங்களது உளநிலையையே தூங்கும் விதம் விபரிக்கின்றது.
கரங்களை உதவியாகப் பயன்படுத்தி, மல்லாந்து உறங்குபவர்


நீங்கள் கூடுதலான நுண்ணறிவையும், புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் நாட்டமும் உடையவர். சில வேளைகளில் எரிச்சலூட்டக் கூடிய எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள், இதானல் மக்களால் உங்களை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். உங்களது குடும்பம் பற்றி கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். எனினும், நீங்கள் மிகவும் அரிதாகவே எவர் மீதும் அன்பு கொள்வீர்கள்.

கால்களை ஒன்றுடன் ஒன்று பின்னி மல்லாந்து உறங்குபவர்

கால்களைப் பின்னி உறங்குபவர்கள் சுயநல எண்ணத்தைக் கொண்டவர்கள், தமக்கு விருப்பான முறையில் உலகம் இயங்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு உங்களினால் முடிவதில்லை. தனிமையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கும். விட்டுக்கொடுப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை.

குறுகிய நிலையில் உறங்குபவர்




உங்களது கடந்த கால தோல்விகளினால் நீங்கள் பெரிதும் மன உலைச்சல் அடைந்திருப்பீர்கள். தனிமைப்படுத்தப்பட்ட மனோநிலையைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பை இழந்து விட்டதாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புவீர்கள். எந்த நேரத்திலும் ஐயத்துடன் காணப்படுவீர்கள்.

ஒரு பக்கமாக குறுகி உறங்குபவர்



சுயநல, பொறமைக்கார மற்றும் பழிவாங்கும் குணங்களை உடையவராக உங்களை விபரிக்க முடியும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். மற்றவர்களினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் உங்களை அதிகமாக கோபப்பட வைக்கும்.

ஒரு காலை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்


எப்போதும் எதைப் பற்றியாவது முறைப்பாடு செய்வதே உங்களது வாடிக்கையாக அமைந்திருக்கும். பதற்றக்காரர் என்பதனை உங்களது புனைப்பெயராக சூட்ட முடியும். சிறிய விடயங்களினால் கூட நீங்கள் பதற்றமடைந்து கோபப்படக்கூடும். வாழ்க்கை என்பது பாரிய விடயமல்ல, இலகுவாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு கையை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்



ஒரு காலை மடக்கி உறங்குபவருக்கு நேர் எதிரான குணங்களை நீங்கள் கொண்டிருப்பீர்கள். பண்பான, நேர்மையான, அன்பானவராக திகழ்வீர்கள். எதிலும் முழுமை இருக்காது. தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும், பிழைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பழகிக்கொண்டால் வாழ்க்கையில் எப்போதும் வசந்த வீசும்.

ஒரு பக்கமாகவே உறங்குபவர்



நீங்கள் தன்நம்பிக்கையுடைவர், என்ன காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி காண்பது உங்களது வாடிக்கை. வலது பக்கமாக, வலது கரத்தை மடக்கி தலை சாய்த்து உறங்குவோர் அதிகாரம் மற்றும் அதிஸ்டத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

கை மற்றும் கால்களை விரித்து மல்லாந்து உறங்குவோர்



நீங்கள் சுதந்திரத்தை விரும்பும் ஓர் ஆத்மா. வசதிகளை விரும்பும், அன்பை வழிபடும் நபராக நீங்கள் திகழ்வீர்கள். எனினும், நீங்கள் அடுத்தவர்களின் விடயங்கள் பற்றி குறை கூறுவதில் நாட்டமுடையவர்களாக காணப்படுவீர்கள்.

Sunday, May 22, 2011

பசியிலிருந்தும் தலைசுற்றலையும் தவிர்க்கலாம்



பரிட்சைக்கு முன்பதாக நீங்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகுவது, பாடங்களை படிப்பது போன்று இன்றிமையாததாகும். ஆகவே பரீட்சைக்கு முன்பு நீங்கள் நன்றாக உண்டால்தான், பசியிலிருந்தும் தலைசுற்றலையும் தவிர்க்கலாம். அப்போதுதான் வினாக்களுக்கும் பதிலளிக்க முடியும்.

அறிவுறுத்தல்கள்

சத்துக்கள் சமனான உணவை பரீட்சைக்கு முன் உண்ணுங்கள். பரீட்சை காலை நேரமாக இருந்தால், காலை உணவை உண்ண நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். பலத்தை வழங்குவதற்காக புரதச் சத்து நிறைந்த உணவையும் பழங்களையும் உண்ணுங்கள்.

முட்டை, கடலை, தயிர், ஷீஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை மற்றும் மதிய நேர உணவாக உட்கொள்ளுங்கள். அந்த நாள் முழுவதும் அதன் பலனை நீங்கள் பெறலாம்.

உண்ணும் உணவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில் தூக்கம் வருவது போன்று உணர்வீர்கள். சிற்றூண்டிகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். பரீட்சையின் போது தூக்கம் வரும்.

உணவிற்கு பதிலாக கோப்பி அருந்துவதை தவிருங்கள். வழமையாக நீங்கள் கோப்பி அருந்தி பழக்கப்பட்டவராயின் அதை இடைநிறுத்தும் போது தலையிடி ஏற்படலாம். அதிகளவில் கோப்பி மற்றும் உற்சாகபானம் போன்றவற்றை அருந்துவீர்களாயின் பதற்றம் ஏற்படும். கிரீன் டீ அருந்த பழகுவது சிறந்ததாகும்.

பரீட்சையின் போது பதற்றமாக இருக்கும் போது, உணவருந்த முடியாமல் இருக்கும் போது புரதச் சத்து நிறைந்த, மென்மையான, சக்தி வாய்ந்த பானங்களை அருந்துங்கள். இவை நீங்கள் உணவு உண்ணும் வரை உங்களுக்கு சக்தியை வழங்கும்.

பரீட்சை இடைவேளையின் போது உண்பதற்காக உங்கள் பைகளில் சத்துள்ள சிற்றூண்டிகளையும், பழங்களையும் வைத்திருங்கள். சக்தியை எரிக்கக் கூடிய இனிப்புப் பண்டங்களை அதிகளவில் சேர்க்காதீர்கள்.

விட்டமின்களை சேருங்கள். விட்டமின் ‘பி’ போன்றவற்றை எடுத்தீர்களானால் மூலையின் செயற்பாட்டை அதிகரிக்கும். ஆதற்கு முன் வைத்தியரின் ஆலோசனையை பெற மறவாதீர்கள். சகல சத்துக்களும் நிறைந்த உணவை உண்பதால் உங்கள் உடல் ஆரோக்கியமடைகின்றது.

பரிட்சை நேரத்தின் போது சிறிதளவு தூய நீர் அருந்துங்கள். நீர் அருந்தாமல் இருப்பின் ஒரு வரட்சி தன்மை ஏற்பட்டு பரீட்சை மீதான கவனம் குறையும்.

Friday, May 20, 2011

உங்கள் Wi-Fi மோடத்தை இப்போது பயன்படுத்துபவர்கள் யார் ?

              நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலா வருவோம். முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலா வந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம். தை இப்போது 
ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது.அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலா வந்தால் என்ன ஆகும்.


நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணினி தவிர வேற எந்த கணினிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது. மென்பொருள் தரவிறக்க சுட்டி.

நாம் தேடும் அரட்டை மென்பொருள்


நண்பர்களின் கணினியிலேயோ இல்லை ப்ரெளசிங் சென்டரிலேயோ இணைய அரட்டையில் ஈடுபட வேண்டுமெனில் அதற்கு நாம் தேடும் இணைய அரட்டை மென்பொருள் வேண்டும். ஒரு சில கணினியில் Limit பயனர் கணக்கில் பனியாற்றுவோம் அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒருதளம் உதவி செய்கிறது.

இணையத்தில் அடி எடுத்து வைத்தவுடனே முதலில் இணைய பயனாளர்கள் கற்றுக்கொள்வது என்னவெனில் சாட்டிங் செய்ய மட்டுமே ஆகும். பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கிறனர். முக்கியமான தருணங்களில் அரட்டைகளில் ஈடுபடுவது சாதரண செயல் ஆகும். ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள். அவர்கள் சாப்பிடாமல் வேண்டுமானாலும் இருப்பார்கள் ஆனால் அரட்டையில் ஈடுபடாமல் மட்டும் இருக்க மாட்டார்கள். 

அவர்கள் இணையத்திற்கு தினமும் செல்வார்கள் ஆனால் அவர்கள் செய்யக்கூடிய ஒரே செயல் அரட்டை அடிக்கும் செயல் மட்டுமே ஆகும். இதனால் பணம் மட்டுமே செலவாகும். இதுபோன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள் உதாரணாமாக யாகூ, ஸ்கைப், எம்.எஸ்.என், ஜிடால்க் மற்றும் பல இணைய அரட்டைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள் இதுபோன்ற பயனார்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும். 

தளத்திற்கான சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய இணைய அரட்டை நிறுவனத்தை தேர்வு செய்து கொண்டு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்ளவும். பின் நீங்கள் விரும்பிய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட முடியும். வீடியோ மற்றும் ஆடியோ அரட்டையிலும் ஈடுபட முடியும். மொத்தத்தில் அரட்டை அடிக்க சிறப்பானதொரு தளம் இதுவாகும். நாம் இனி தனித்தனி மென்பொருள்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டு அனைத்து வசதிகளையும் பெற முடியும்.


ப்ளாக்கரில் Font Size-ஐ மாற்றுவது எப்படி?



நமது ப்ளாக்கில் உள்ள எழுத்துக்கள் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து சிறியதாகவோ, அல்லது பெரியதாகவோ இருக்கும். அதனை வாசகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு படிக்கும் வசதியை நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம்.
Font size-ஐ மாற்றுவதற்கான code:


<a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='.5em'"><span style="font-size: xx-small;">அ</span></a> <a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='1em'"><span style="font-size: x-small;"> அ </span></a> <a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='1.5em'"><span style="font-size: small;"> அ </span></a> <a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='2em'"><span style="font-size: large;"> அ </span></a> <a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='2.5em'"><span style="font-size: x-large;"> அ </span></a>



இதை Sidebar-ல் வைக்க:

1. Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.

2. Add a gadget என்பதை க்ளிக் செய்து, HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.

3.Title என்ற இடத்தில் தலைப்பு கொடுத்துவிட்டு, Content என்ற இடத்தில் மேலுள்ள Code-ஐ paste செய்யவும்.


4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.

அப்படி செய்த பின் உங்கள் ப்லாக்கில் பின்வருமாறு காட்சி அளிக்கும். தை க்ளிக் செய்தால் எழுத்துக்களின் அளவு மாறும்.


 அ அ அ அ