Monday, April 4, 2011

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது



NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.





Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய


தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

alt


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி


இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.

இதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி பார்ப்போம்
REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,

RUN----->TYPE " regedit "

REGISTRY EDITOR சென்றவுடன்,

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor 

மேலே உள்ள PATH க்கு சென்று பின்,
START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும்,
அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்றவேண்டும். (படம் 2).
பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை ("3") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .
altalt



வன்தட்டில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய


அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

நெருப்புநரி உலவியில் கடவுச்சொற்களை காப்பாற்ற முதன்மை கடவுச்சொல்


நெருப்புநரி உலவியின் துணைக்கொண்டு இணைய பக்கங்கங்களை வலம் வரும்போது பல தளங்களில் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்களை உள்ளிட்டு பல்வேறு கணக்குகளில் நுழைவோம். அந்த சூழ்நிலைகளில் நம்மை அறியாமலேயே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை சேமித்துவிடுவோம். நம்முடைய சொந்த கணினியாக இருந்தாலும், மிக முக்கியமான கடவுச்சொற்களாகிய பேங்க் சம்பந்தமான கடவுச்சொற்கள் சேமிக்கப்படும் போது அது நமக்கு பெரும் ஆபத்தாகும். இதனால் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும். நம்முடைய கணக்கில் உள்ள பணத்தினை இழக்க நேரிடும். அல்லது நம்முடைய கணக்கானது முடக்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டுமெனில் இந்த உலவியில் பதியப்பட்ட கடவுச்சொல்லை முழுமையாக நீக்க வேண்டும். கடவுச்சொல்லை நீக்க சுட்டி. இல்லை இந்த கடவுச்சொல்களுக்கே கடவுச்சொல் இட்டு பாதுகாத்தால் எப்படி இருக்கும். கடவுச்சொல்களுக்கு எவ்வாறு கடவுச்சொல்லை உருவாக்கு என்று கீழே காண்போம்.

முதலில் நெருப்புநரி உலவியினை திறந்து கொள்ளவும். பின் Tools > Option என்பதை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்தவுடன், தோன்றும் விண்டோவில் Security டேப்பினை தேர்வு செய்து, அதில் “Use a master password” என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். 


டிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய முதன்மை கடவுச்சொல்லினை உள்ளிட்டு ஒகே செய்யவும்.


அவ்வளவுதான் இனி நீங்கள் உங்களுடைய சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லை காண வேண்டுமானால் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகுதான் காண முடியும். சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லோடு தொடர்புடைய வலைப்பக்கத்திற்கு சென்றால், முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட சொல்லி ஒரு பெட்டி தோன்று அதில் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்டு அந்த தளத்தில் நுழைந்து கொள்ள முடியும். மொத்தத்தில் தவறு செய்தாலும் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்பதை போல, ஏற்கனவே பல்வேறுகடவுச்சொற்கள் சேமிக்கப்பட்டுள்ளது அதை பாதுக்காக்க முதன்மை கடவுச்சொல்.

தபால் ஆஃபீஸில் மின் கட்டணம் செலுத்தும் வசதி இம்மாதம் துவக்கம்

மின் கட்டணத்தை அஞ்சல் நிலையத்திலேயே செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி இம்மாதம் முதல் துவக்கப்படும்,'' என, அஞ்சல் அலுவலக கோவை மண்டல தலைவர் ராஜராஜன் கூறினார்.
அஞ்சல் அலுவலக கோவை மண்டல தலைவர் ராஜராஜன், நிருபர்களிடம் கூறியதாவது: அஞ்சல் துறையில் "ஏடிஎம்' முறை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக கோர் பேங்கிங் முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. ராசிபுரம் அஞ்சலகத்தில் "ஏடிஎம்' மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் அஞ்சலகத்தில் சேமிப்பு செய்யும் வாடிக்கையாளர்கள், பாஸ்புத்தகத்தை தங்கள் வசம் வைத்து கொள்வதோடு, அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்கக்கூடாது.
மேலும், ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் 31ம் தேதிக்குள் வட்டார அளவில் உள்ள அஞ்சலகத்தில் தங்களின் இருப்பு தொகை மற்றும் வட்டி விகிதம் குறித்த ரசீதுகளை பெற்று கொள்ளவேண்டும். புத்தகங்களை ஏஜன்டுகளிடம் கொடுக்கும் போது, "ஏஸ்லாஸ் 5' என்ற அட்டையை பெற்று கொண்டு கொடுக்கவேண்டும்.

அதன் முலம், முறைகேடுகள் குறையும். ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராம அஞ்சலகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், 47 நபர்களுக்கு 65 ஆயிரத்து 860 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 67 பேருக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது.
ஓ.ஏ.பி., (உதவித்தொகை) வழங்குவதில் பல்வேறு இன்னல்களை களைய எலக்ட்ரானிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், 25 நாட்கள் நடைபெறவேண்டிய பணிகள் அரை மணி நேரத்தில் முடிவடைந்து, உரியவர்களுக்கு பணம் சென்றடையும். இப்பணிகளை உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், மக்களின் நலன் கருதி மின்சார கட்டணத்தை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகத்திலேயே செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும், என்றார்.

ஒரு முறை “சார்ஜ்” செய்தால் பல மாதங்கள் பேசலாம்: அதி நவீன செல்போன் தயாரிப்பு!


ஒரு முறை “சார்ஜ்” செய்தால் போதும் பல மாதங்கள் பேசக்கூடிய அதி நவீன செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.   செல்போன்களில் உள்ள பேட்டரிகளை மின்சாரம் மூலம் “சார்ஜ்” செய்து தான் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான செல்போன்களில் தினசரி “சார்ஜ்” செய்யும் நிலை உள்ளது. ஒரு சில செல்போனில் மட்டுமே கூடுதலாக மேலும் ஒரு நாளுக்கு “சார்ஜ்” நிற்கும். தற்போது ஒரு முறை “சார்ஜ்” செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய செல்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கான விசேஷமான பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது சாதாரண செல்போன் பேட்டரிகளை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை. அவை உலோக டியூப்களுக்கு பதிலாக மிகச் சிறிய அளவிலான “நானோடியூப்”கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை மனிதனின் ரோமத்தை விட 10 ஆயிரம் மடங்கு மிகச்சிறியதாகும். இல்லினோயிஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர். இது விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.