Showing posts with label வைரஸ். Show all posts
Showing posts with label வைரஸ். Show all posts

Wednesday, April 27, 2011

பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸ்களைத் தடுக்க



தற்பொழுது பென்டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.

இதனை தடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. USB Firewall எனப்படும் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

அதன் பின் எந்தவொரு பென்ட்ரைவையும் கணணியுடன் இணைக்கும் பொழுது, இந்த மென்பொருளானது அதுவாகவே பென்ட்ரைவை ஸ்கேன் செய்து விடும். கணணியில் நுழைய முயற்சிக்கும் கோப்புகளை தடுத்து நிறுத்தும். (முக்கியமாக Autorun.inf).


உங்கள் கணணியில் வேறு ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவப்பட்டிருந்தாலும் அதனோடு இதையும் உபயோகப்படுத்தலாம்.

தரவிறக்க சுட்டி

Saturday, April 23, 2011

கணனியினுள் வைரஸ் எப்படி வருகிறது....?


"என் படுக்கையறைக் காட்சிகளை இலவசமாகப் பாருங்கள்!" என்று ஒரு ஈ-மெயில் வரும். அல்லது "இந்த சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்யுங்கள்! இன்டர்நெட்டில் நீங்கள் விட்டுச் சென்ற தடயங்களை நீக்குங்கள்!" அல்லது "ஹலோ, இது மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கின் லேட்டஸ்ட் அப்டேட். இதை இன்ஸ்டால் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும்" என்று உதவி செய்யப் பார்க்கும். . .

இப்படிப்பட்ட ஈ-மெயில்களை நம்பி அதில் இருக்கும் அட்டாச்மென்ட்களை க்ளிக் செய்து தொலைப்பவர்கள் பலர். இவர்கள் புண்ணியத்தில்தான் பல வைரஸ்களுக்கு உலகப் புகழ் கிடைக்கிறது. ஐலவ்யூ, மெலிஸா, அன்னா கோர்னிகோவா, சர்கேம் என்று ஆன்லைன், ஆஃப்லைன் உலகங்களை உலுக்கியெடுத்த வைரஸ்கள் எல்லாம் நம்மை ஏமாற்றித்தான் பரவின.

இந்த மாதிரி டிஜிட்டல் கிருமிகள் இப்போது ஈ-மெயில் மூலமாக மட்டுமில்லை, இன்ஸ்டன்ட் மெசேஜிங், இன்டர்நெட் ரிலே சாட் (ஐ.ஆர்.சி.) போன்ற மீடியங்கள் மூலமும் பரவத் தொடங்கியிருக்கின்றன. அதாவது ஒரு கம்ப்யூட்டர் கிரிமினல் இன்டர்நெட் சேவை நிறுவன அதிகாரி என்ற போர்வையில் ஒரு அப்பாவி கம்ப்யூட்டர் பயனாளிக்கு ஃபோன் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பயனாளி அதை நம்பி அவனிடம் தன் ஃபோன் நம்பர், க்ரெடிட் கார்டு எண் போன்ற ரகசியத் தகவல்களைக் கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு அந்த கிரிமினல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த அட்டாச்மென்ட்கள் பயனுள்ள ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் அல்லது எம்.பி.3 ஃபைல் அல்லது கிளுகிளுப்பான படம் என்று நம்ப வைக்கப் பார்க்கின்றன. ஆனால் இவை உண்மையில் ஆபத்தான வைரஸ்கள்.

இந்த வைரஸ்கள், ட்ரோஜன்கள் ஆகியவற்றை வைத்து ஃபைல்களை அழிப்பதோடும் மேலும் பல கிரிமினல் வேலைகளுக்கு அஸ்திவாரம் போடுகிறார்கள். இந்த வைரஸ்கள் மூலம் டிஸ்ட்ரிப்யூட்டட் டினையல் ஆஃப் சர்வீஸ் என்ற வகை தாக்குதல் தொடுப்பதும் அதிகரித்திருக்கிறது என்கிறது செர்ட். வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர்கள் மூலம் இன்னொரு கம்ப்யூட்டரை தாக்குவது டி.டி.ஏ.எஸ்.

இன்டர்நெட் அரட்டை நெட்வொர்க்கான ஐ.ஆர்.சி. அரட்டை அறைகள், இன்ஸ்டன்ட் மெசஞ்சர் ஆகியவற்றின் பயனாளிகளுக்கு வைரஸ் மெசேஜ்களை அனுப்பித் தள்ளும் புரோகிராம்களை கிரிமினல்கள் பயன்படுத்துகிறார்கள் என்று செர்ட் சொன்னது.

ஐ.ஆர்.சி. அரட்டை அறைகளில் சில பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குப்பை மெசேஜ்களாக அனுப்பித் தள்ளுவது, பிறகு அப்படிப்பட்ட மெசேஜ்கள் வராமல் தடுக்கும் என்று வைரஸ் சாஃப்ட்வேர் ஒன்றை அனுப்புவதும் லேட்டஸ்ட் டெக்னிக் என்கிறார் மெக்அஃபி நிறுவன ஆராய்ச்சியாளர் ஜிம்மி குவோ.

எனவே, யாஹூ மெசஞ்சரிலும் சரி, ஐ.ஆர்.சி.யிலும் சரி, சாட் செய்யும்போது யாரிடம் என்ன ஃபைலைத் தருகிறீர்கள் என்பதில் உஷாராக இருங்கள். உங்கள் ஆர்வக் குறுகுறுப்பு சமயத்தில் ஆபத்தில் முடியலாம்.

கணணியில் வைரஸ்களை மிகத்துல்லியமாக கண்டு அழிக்க

இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. ஒரே ஒரு கணணியை வைத்து கொண்டு நமது அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதால் உலகளவில் கணணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கணணி இயங்க முக்கிய தேவைகளில் ஒன்று ஓபரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணணியின் அடித்தளம். 

இதில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் ஓபரேட்டிங் சிஸ்டம் ஆகும். இது பிரபல கணணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.

நாம் இணையத்தில் உலவும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ அல்லது வேறு எதோ டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம் கணணியில் இருக்கும் முக்கியமான தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.

நாம் கணணியில் என்ன தான் ஆண்டி வைரஸ் போட்டிருந்தாலும் புதிய வைரஸ்கள் அவைகளை ஏமாற்றி நம் கணணியில் புகுந்து விடுகிறது. இது உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும்.



இவைகளை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது Safety Scanner என்ற மென்பொருளை உருவாக்கி பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. இது 100% இலவச மென்பொருளாகும். மென்பொருளின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இதனை இலவசமாக இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 

ஏற்கனவே நம் கணணியில் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவி இருந்தாலும் இந்த மென்பொருள் வேலை செய்யும். ஆகவே பழைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நீக்க வேண்டியதில்லை. இது வைரஸ் மட்டுமல்லாது கணணியில் உள்ள மால்வேர், ஸ்பைவேர் ஆகியவைகளையும் கண்டறிந்து நீக்குகிறது. 

இந்த மென்பொருளை விண்டோஸ் XP முதல் அதற்கடுத்து வந்த விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய கணணிகளில் பயன்படுத்தலாம். முதலில் தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். 

இதில் உங்கள் கணனியின் பதிப்பை கிளிக் செய்தால் போதும் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யப்படும். தரவிறக்கம் முடிந்தவுடன் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவச் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த மென்பொருள் 10 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும்.

பின்னர் செயல் இழந்து விடும். இதை மீண்டும் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருளை திரும்பவும் நிறுவ வேண்டும். இந்த மென்பொருள் செயல்பாடு அனைவருக்கும் பிடித்துள்ளதா என கண்டறியவே இது போன்று வைத்துள்ளனர்.

இரண்டாவது முறை இந்த மென்பொருளை எவ்வளவு பேர் தரவிறக்கம் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே இந்த மென்பொருளின் தரம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. தரவிறக்கம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தரவிறக்க சுட்