Showing posts with label குழந்தைகள் நலம். Show all posts
Showing posts with label குழந்தைகள் நலம். Show all posts

Saturday, July 9, 2011

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

”பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.


எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் ‘கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!

பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.

காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் ‘மோஸ்ட் வான்ட்டட்’ ஆக உள்ளன.

அவை என்னென்ன என்று பார்க்கலாம்..
 
இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.

கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.

இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான ‘நெஸ்ட்’, ‘ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்’-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ முறையில் அமைந்திருக்கும்.

விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.

இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.

பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள ‘சிக்ரி’ (சி.இ.சி.ஆர்.ஐ – சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படுகிறது.

புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.

வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.

இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.

இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.

அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன.

இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் ‘பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி’. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.

அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Tuesday, June 28, 2011

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது

பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.
டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால். தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.

4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம்.

எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.

Tuesday, June 21, 2011

பதின்வயது பிள்ளைகளுக்கு பெற்றோரா நீங்கள்? இது உங்களுக்கு

''பள்ளியறை'' என்ற சொல்லே தமிழில் கொஞ்சம் விவகாரமான சொல்தான்! அது பள்ளி வகுப்பறையையும் குறிக்கும். தம்பதிகள் துயில் கொள்ளும் கட்டிலறையையும் குறிக்கும். இப்படி இரண்டு பொருள் தரும் ''பள்ளியறை'' என்ற வார்த்தையை எவர் எந்த நேரத்தில் உருவாக்கினாரோ தெரியவில்லை? 

அந்த இரண்டு அர்த்தங்களுமே ஒன்றுதான் என்ற நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது.

ஐ.டி. எனப்படும் ஹைடெக் மையங்கள்தான் இதுநாள் வரை முறை தவறிய பாலுறவுகளுக்கு மொத்தக் குத்தகைக்கான இடம் என்று நினைக்கிற ஆளா நீங்கள்? இதோ அந்த எண்ணத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏன் போக வேண்டும்? நம்மூர்ப் பள்ளிகளில் கூட பாலியல் உறவுகள், அதிலும் பிஞ்சில் பழுத்த பாலுறவுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. 

''ஒரே ஓர் அரசுப்பள்ளியில் மட்டும் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் 32 மாணவர்கள் ''அந்த கலை''யில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஆளுக்கு இரண்டு பெண்கள் வீதம் அவர்கள் உறவு வைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்களில் மாணவிகளும் அடக்கம்'' என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார் கோவையைச் சேர்ந்த மனோதத்துவ மருத்துவர் முஹ்யித்தீன். 

கோவையில் `ஞானவாணி' என்ற எஃப்.எம். வானொலியில் `மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், அதைத் தீர்க்கும் முறைகள்' பற்றி கடந்த இரண்டாண்டுகளாகப் பேசி வருகிறார் மருத்துவர் முஹ்யித்தீன். உளவியல் தொடர்பான நேயர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் அதில் அவர் பதிலளிப்பார். அதுமட்டுமல்ல, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, ஊட்டி, கூடலூர், ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற பல பகுதிகளுக்குச் சென்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவச மனோதத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார். 
மருத்துவர் முஹ்யித்தீனை நாம் சந்தித்துப் பேசும்போது. பள்ளிகள் தற்போது பாலியல் கூடங்களாக மாறிவரும் பிரச்னை, மாணவர்கள் மதன், ரதியாக மாறும் பிரச்னைக்குள் போகும் முன்னால் அதற்கு முத்தாய்ப்பாக சில விவரங்களைச் சொன்னார் அவர். 

''இந்தியா முன்னேற வேண்டுமானால் வருங்கால இளைஞர்களான மாணவ மணிகளின் மன சலனங்கள் அகற்றப்பட வேண்டும்'' என்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி கூறுவார். இது என்னை மிகவும் ஈர்த்த கருத்து. தற்போது பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் மனரீதியாக பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. 

சில மாணவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் எதையோ பறிகொடுத்ததைப் போல இருப்பார்கள். நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்களால் படிக்க முடியாது. அந்த வேளையில் அவர்களுக்குத் தகுந்த மனப்பயிற்சி அவசியம். இல்லாவிட்டால் அதுவே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடும். 

இப்படியான மாணவ, மாணவிகளை `சைக்காலஜிஸ்ட்' எனப்படும் மனோதத்துவ மருத்துவர்களிடம் கூட்டிப்போக வேண்டுமே தவிர, `சைக்கியாட்ரிஸ்ட்' எனப்படும் மனநோய் மருத்துவர்களிடம் கூட்டிப்போய் சிகிச்சை தரக் கூடாது. அவர்கள் மயக்க மருந்து தந்து தூங்க வைத்து, ஒருகட்டத்தில் அந்த மாணவர்களை மன நோயாளிகளாகவே மாற்றி விடுவார்கள். ஆனால் நாங்களோ, அவர்களுக்கு ஒரு சில பயிற்சிகளைக் கொடுத்து எங்கள் வசமாக்கி, அவர்களின் ஆழ்மன எண்ணங்களை வெளிப்பட வைத்து, `இந்த சமூக முறையில் இதுதான் சாத்தியம், வேலி தாண்டினால் வாழ்க்கை சிக்கலாகவும், கேலிக்குரியதாகவும் ஆகி விடும்' என்று பேசி அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டு வருகிறோம். 

ஒருமுறை ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனை என்னிடம் கூட்டி வந்தார்கள். நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் வாங்கும் அவன் அண்மைக்காலமாக ஐந்து, பத்து மார்க் வாங்குகிறான் என்பதுதான் அவனிடம் இருந்த பிரச்னை. இங்கே வருவதற்கு முன் அவனை மனநோய் மருத்துவர் ஒருவரிடம் கூட்டிப்போய் இருக்கிறார்கள். அவர் தூக்க மாத்திரை தந்ததில் அந்த மாணவன் வகுப்பறையில் கூட அசந்து தூங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அவனை என்னிடத்தில் கூட்டி வந்தபோது அவனுக்கு மனரீதியாக என்ன பிரச்னை என்று நான் ஆராய்ந்தேன். அது டீன்ஏஜ் பருவத்தில் பலருக்கும் வரும் பிரச்னைதான். 

அந்த மாணவனுக்கு அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி மீது ஒரு தலையாய்க் காதல். அதை அவளிடம் சொல்ல முடியாமல் ஒருவித குற்ற உணர்ச்சியுடன் அவன் இருந்திருக்கிறான். அதனாலேயே படிப்பில் கோட்டை விடவும் ஆரம்பித்திருக்கிறான். அவனிடம் நான், `இதற்கான வயது இதுவல்ல, அந்தப் பெண் உன்னைவிட படிப்பில் சூரப்புலியாக இருக்கிறாள். நீ படிப்பில் கவனம் செலுத்தி தொடர்ந்து அதிக மதிப்பெண் வாங்கியிருந்தால் அவள் அல்லவா உன்னைக் கவனித்திருப்பாள்? தவிர, அவளைவிட சிறப்பான, அழகான பெண் உனக்கு அமைவாள். அதை நீ ஏன் யோசிக்கவில்லை?' என்று பேசி மனரீதியான சிகிச்சை கொடுத்தேன். அவன் இப்போது படிப்பில் முன்பு போலவே அதிக மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்து விட்டான். 

ஆக, மூளை என்பது ஒரு கம்ப்யூட்டரில் வெளிப்படையாகத் தெரியும் ஹார்டுவேரைப் போன்றது. அதற்குள் மெமரி செய்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை நாம் சாஃப்ட்வேர் என்கிறோம். அந்த சாஃப்ட்வேருக்கு சிகிச்சை தருவதற்குப் பதில் ஹார்டுவேருக்கு சிகிச்சை தருவது சரியில்லை அல்லவா? அதைப்போலத்தான் சிலர் மனோதத்துவ மருத்துவர்களான எங்களிடம் வந்து பெற வேண்டிய சிகிச்சைக்குப் பதில், மனநோய் மருத்துவர்களிடம் தெரியாமல் போய் விடுகிறார்கள். மனநோய் மருத்துவர்களும் மனநல மருத்துவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்வதால் சைக்காலஜிஸ்ட் என அழைக்கப்படும் எங்களிடம் செல்ல வேண்டிய சிலர் திசைமாறி அவர்களிடம் போய் விடுகிறார்கள். 

இப்போது விவரம் தெரிந்து என்னிடம் சிகிச்சைக்கு வரும் அதிகம் பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள்தான். அவர்களை `கோஹினிட்டிவ் தெரபி' எனப்படும் விழிப்புணர்வு சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி வருகிறேன். பொதுவாக தம்பதிகளுக்கிடையேதான் பாலுறவு தொடர்பான மனப்பிரச்னைகள் வரும். அந்தப் பிரச்னை இப்போது எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் மாணவ மாணவிகளிடம் வருவதுதான் எனக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருக்கிறது. 

கடந்த இரண்டாண்டுகளாக மதுரை, பெங்களூரு, அருப்புக்கோட்டை, திருச்சி, உடுமலை, கோவை, பாலக்காடு உள்ளிட்ட நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், ஐ.டி. நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்காக நான் மனோதத்துவ சிகிச்சை முகாம்களை நடத்தியிருக்கிறேன். பள்ளி மாணவர்களுக்குத் தரும் பயிற்சியைப் பொறுத்தவரை பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இருக்கின்றன'' என்றவர், சற்று நிறுத்தி விட்டு தொடர்ந்தார். 

''இந்த மனோதத்துவ முகாம்களின் மூலம் மாணவர்களில் வெறும் ஐந்து சதவிகிதம் பேர்தான் எந்தவித பாலியல்ரீதியான மனஉளைச்சலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற தகவல் எனக்குத் தெரிய வந்தது. மற்ற மாணவர்களோ பெற்றோரின் பாசத்துக்கு ஏங்குபவர்களாகவும், சக மாணவியின் அரவணைப்புக்கு ஏங்குபவர்களாகவும், பாலியல்ரீதியாக ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு குற்ற உணர்வுடன் படிப்பில் நாட்டமில்லாமல் இருப்பவர்கள் எனவும் தெரிய வந்தது. 

நன்றாகப் படிக்கிற நிறைய மாணவர்களுக்கு ஏழாவது, எட்டாவது வகுப்பை எட்டும்போதுதான் பாலியல் பிரச்னை பாடாய்ப்படுத்துகிறது. என்னிடம் வந்த ஒரு மாணவன் `மூன்றாம் வகுப்பிலிருந்தே சுயஇன்பப் பழக்கத்திற்கு தான் அடிமையாக இருப்பதாகச் சொன்னான். `ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்டபோது, `அப்படிச் செய்தால்தான் அது பெரிசாகும் என்று நண்பன் சொன்னதாகச் சொன்னான். அவனை ஒருமாதம் வரை மனப்பயிற்சிக்கு உட்படுத்திய நான், "அப்படிச் செய்வதால் உன் சக்தி வெளியேறுகிறது. அதனால் படிப்பில் கவனம் குறைகிறது. நாளை உனக்குத் திருமணம் ஆகும்போது உன்னிடம் தேவைப்படும் சக்தி இருக்காது. அதனால் இந்தப் பழக்கத்தை நீ கைவிட வேண்டும்'' 

என்று பேசிப் புரிய வைத்தேன். இப்போது அவன் நார்மலாகி நல்ல மதிப்பெண் எடுத்து வருகிறான். 

கோவை நகரின் நடுப்பகுதியில் குடிசைகள் நிறைந்த பகுதியில் உள்ள ஓர் அரசுப்பள்ளியில் தொண்ணூறு சதவிகித மாணவர்கள் மது, பீடி, சிகரெட், கஞ்சா, ஒயிட்னர் திரவப் போதை போன்றவற்றுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களது பெற்றோர்களும் அதைக் கண்டுகொள்வதில்லை. சில நல்ல மாணவர்களும் இவர்களைப் பார்த்து இந்த மது, பீடி, சிகரெட், கஞ்சாவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அந்தப் பள்ளியில்தான் இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயமும் நடந்திருக்கிறது'' என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார். 

''இங்கே பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் என்னிடம் உளவியல் சிகிச்சைக்காக வந்தான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு லேத் பட்டறை இருந்திருக்கிறது. அதில் ஒரு பெண் தினம்தினம் இவன் பள்ளிக்குச் சென்றுவரும்போது தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசி கேலி செய்து வந்திருக்கிறாள். ஒருமுறை அவளது வீட்டில் ஆளில்லாத சமயம் இவனை வலுக்கட்டாயமாக கூட்டிப்போய் பாலியல் உறவும் வைத்துக் கொண்டிருக்கிறாள். 

அதன்பின் அவளது தோழிக்கும் இந்தத் தகவல் தெரிந்து, அவளும் இவனை செக்ஸ் பசிக்கு உட்படுத்தி யிருக்கிறாள். `ஒரு வருடமாக நடந்து வரும் இந்தத் தொல்லையை என்னால் தவிர்க்க முடியவில்லை' என்று அவன் அழுதான். அவனிடம் நான், `உன்னிடம் எந்தத் தவறும் இல்லை. அந்தப் பெண்களிடம்தான் தவறு. இனி அந்த வழியில் போகாதே. அப்படியே அந்தப் பெண்கள் அழைத்தாலும் அம்மா, அப்பாவைக் கூட்டி வந்து விடுவேன் என்று மிரட்டு. படிப்பில் மட்டும் கவனம் செலுத்து' என்று அனுப்பி வைத்தேன். 

என்ன கொடுமை? அடுத்த நாள் பார்த்தால், அவனைப் போலவே முப்பத்திரண்டு மாணவர்கள் என்னிடம் வந்து அவர்களுக்கும் தலா இரண்டு, மூன்று பெண்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி அழ ஆரம்பித்தார்கள். நான் அதிர்ந்து போனேன். இவர்களுக்கு இப்படி ஒரு பழக்கம் ஏற்பட அந்த முதல்மாணவன் சொன்ன கதைதான் காரணமாக இருந்திருக்கிறது. இப்படி பள்ளி மாணவர்களை பாலியல் வலைக்குள் இழுத்தவர்களில் விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்களும் அடங்குவார்கள். தவிர, இந்த மாணவர்களின் பெண்கள் பட்டியலில் பல மாணவிகளும் இருந்ததுதான் கொடுமை. அந்த மாணவர்களுக்கெல்லாம் நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் எடுத்துக் கூறி நிறையப் பேச வேண்டியிருந்தது. அவர்களில் பலர் இன்னும் மனோதத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

அந்த மாணவிகள் யார் யார் என்று தெரிய வந்தபோது பெற்றோர்களும் சரி, ஆசிரியைகளும் சரி, `சொல்லுடி, யாரடி அவன்?' என்று கேட்டு மாணவர்கள் முன் அந்த மாணவிகளை அடித்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்குத் தொடையில் காயம் என்றால் அதை மருந்து போட்டுக் குணமாக்குவதுதான் மருத்துவரின் வேலை. அதை விட்டு அந்தக் காயத்தை வெளியே சொல்லி, நோயாளியின் மனதை நோய்க்கு உள்ளாக்குவது சரியல்ல. இது தொடர்பாக சில ஆசிரியைகளுக்கும் நான் மனப்பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது'' என்றார் மருத்துவர் முஹ்யித்தீன். 

இதேபோல ஒர்க்ஷாப் வைத்திருக்கும் பையன் ஒருவன் ஒரு மாணவியுடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறான். ருசிகண்ட பூனையாக மாறிய அந்த மாணவி இன்னும் இரண்டு மாணவிகளை அந்தப் பையனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறாள். இரு மாணவிகள் வாசலில் காவல் காக்க, ஒரு மாணவி உள்ளே அந்தப் பையனோடு சல்லாபிப்பது வழக்கமாகி இருக்கிறது. ஆறுமாத காலமாக நடந்த இந்த காமக்களியாட்டத்திற்குப் பின் அந்த மாணவிகளில் ஒருத்தி மருத்துவர் முஹ்யித்தீனிடம் குற்ற உணர்ச்சி காரணமாக இதைச் சொல்லியிருக்கிறாள். அதன்பிறகு மற்ற இரண்டு மாணவிகளையும் அழைத்து அவர்களுக்கும் உளரீதியான பயிற்சி தந்தாராம் இவர். 

ஒன்பதாவது படிக்கும் மாணவி ஒருவருக்கு மாதவிடாய் நின்றுபோய் வயிறு வீங்கியிருப்பதாக அவளது தாய் என்னிடம் அழைத்து வந்தார். அந்தப் மாணவியிடம் பேசியபோது, `மயக்க மருந்து கொடுத்து மாணவன் ஒருவன் அவளது கற்பைக் கவர்ந்து கர்ப்பமாக்கிய விஷயம்' அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. அவளுக்கு முறையான சிகிச்சை அளித்து படிப்பில்நாட்டம் வரச் செய்தாராம் இவர். 

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கம்ப்யூட்டரில் பாலியல் சி.டி.க்களைப் பதிவு செய்து தன் சக மாணவர்களுக்கு தலா இருபது ரூபாய், முப்பது ரூபாய்க்கு விற்றுவந்த சம்பவத்தையும், அந்த சி.டி.க்களை பார்த்த மாணவர்கள் பிஞ்சிலேயே பழுத்து பல மாணவிகளுடன் ஆட்டம் போட்ட கொடுமைகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் மருத்துவர் முஹ்யித்தீன். 

"இந்தச் சீரழிவுக் கலாசாரத்துக்கு வெறும் மீடியா, சினிமாவும் முக்கிய காரணமாக இருந்தாலும், சில குடும்பத் தலைவர்கள், `பிள்ளை தூங்கி விட்டான்' என்று நினைத்து செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். அதை எக்குத்தப்பாகப் பார்த்து விடும் குழந்தைகள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை வாகாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். `நம் நாட்டைப் பொறுத்தவரை திருமணத்துக்குப் பிறகுதான் செக்ஸ் என்பது உகந்ததாக இருக்கும்' என்பதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த அவலம் அகலும். இல்லாவிடில் இது அதிகமாகி சமுதாயத்தையே பாதித்து விடும். இதுதான் சைக்காலஜிஸ்ட்களான நாங்கள் சொல்லும் செய்தி" என்று ஒரு மெசேஜோடு முடித்துக் கொண்டார் மருத்துவர் முஹ்யித்தீன்.

Friday, June 10, 2011

இந்த குழந்தைகளை பார்த்துவிட்டு படியுங்கள் (BABY DOWN SYNDROME)




தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற குழந்தைகள் ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தராவது இருக்கிறார்கள். நாமும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதற்க்கு காரணம் வசதிகள் இருந்தும் ஒருவகையான அறியாமைதான் என நினைக்கிறேன். நாம் நேரடியாக பாதிக்கபடாதவரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைப்பது மனித இயல்பு.

இந்த குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை வளர்ப்பவர்கள் நிறைந்த பக்குவம் அடைகிறார்கள். அனைத்துலக ரீதியில் இதுபோன்ற குழந்தைகளுக்கு பயிற்ச்சி பள்ளிகள் இருக்கிறது. அதற்க்காக உதவிகளும் செய்கிறார்கள். பணத்தை துரத்தும் வாழ்க்கையை கற்றுத்தரும் இப்போதைய கல்வி முறைகள தவிர்த்து, குழந்தைகளின் செயல்படும் தகுதிக்கு ஏற்ப சொல்லித்தரும் கல்வி முறைகளை கனடா நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்

இது போன்ற குழந்தைகளை சரியான முறையில் மருத்துவ சிகிச்சைக்கு உடன்படுத்தும் போது [ உதாரணம்: அக்கு ப்ரஸ்ஸர் / அக்கு பன்க்சர் / தை-ச்சி / யோகா / வர்மம் ] இந்த குழந்தைகள் மற்றவர்களைபோல் செயல் பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை வழி நடத்த பொறுமை அதிகம் தேவை. இந்த குழந்தைகளை மன நலம் குறைந்தவர்கள் என்று சிலர் சொல்வதுண்டு....என்னை பொருத்தவரை நாம் தான் மன நலம் குறைந்தவர்கள்
இவர்களிடம் பழகிப்பார்த்தால் தெரியும் நான் சொன்ன உண்மை, இவர்களிடம் புறம் பேசுதல் , பொய் , ஏமாற்றுதல் , ஈகோ , எதுவும் கிடையாது. இப்போது சொல்லுங்கள் யார் உண்மயில் மன நலம் குறைந்தவர்கள்?.