Friday, December 9, 2011

பள்ளியறை கணனியிலேயே நீலப்படம் பார்த்த ஆசிரியர்கள்…!!!

அண்மையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நான்கு ஆண் ஆசிரியர்கள் பாடசாலை கணினியில் நீலப்படம் (sex film) பார்த்துள்ளமை பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 


இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. மாணவர்களை ஒழுக்கமுள்ள நல்ல சமூகமாக வளர்த்தெடுக்கவேண்டிய சில ஆசிரியர்களே இவ்வாறு நடந்துகொண்டால் தமது பிள்ளைகளை எந்த நம்பிகையில் பாடசாலைக்கு அனுப்புவது எனவும் கேள்வி எழுப்புகின்றனர். 
இந்தச்செயலில் ஈடுபட்ட நான்கு ஆசிரியர்களும் பிரபலமான ஆசிரியர்கள் என்பதோடு ஒருவர் கிளிநொச்சியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் கணக்கியல் கற்பிக்கும் பிரபல ஆசிரியர் ஆவார். இச்செயற்பாடு சக ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரின் மத்தியிலும் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 

அம்பலமாகும் பெட்ரூம் டாக்! -எச்சரிக்கை ரிப்போர்ட்!


"நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நக்கீரன்தான் காப்பாத்த ணும்'’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.

"முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது...?'’ என நாம் முடிக்கும் முன்பே...

""இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..''’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்.. ‘

"சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்கு றதுதானே... இதில் என்ன பிரச்சினை?'’ என்றோம்..

அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.

""அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்... இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி... எங்களுக்கே தெரியாமல்... எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி... இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு... அதிர்ந்துபோய்... எனக்குத் தகவல் சொன்னார். கூடவே "நக்கீரன்ட்ட உதவி கேள்'னும் சொன்னார். அதான் வந்தேன்''’என்று நம்மை அதிரவைத்த வர்... அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்... அவர் சொன்ன விவகாரமான இணையதளத் தை கவனித் தோம். 

கணவன்- மனைவிகள், காதல் ஜோடி கள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்... அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு... பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்... அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.

உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா? என திகைத்துப்போன நாம்...

நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.

பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ... ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு... ""இந்த மாதிரி யான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. முதல் வகை... நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை. 

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா... யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க... நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு. 

மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், "உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்'னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்''’என்றார் விரிவாக. 

பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங் கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். ""பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந்தப்ப... "எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்'னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டி ருந்த ஒருத்தியைப்... படத்தைப் பார்த்தே... கிளுகிளு உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே "என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு' என்றவள்.... தன் உடல் பாகங்களை வர்ணித்து... அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத் தரப்பும் தொலை பேசித் தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக் கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி... பணத்தை அந்த ஆபாசக் கும்ப லிடம் பறிகொடுத்துக் கிட்டு இருக்காங் களோ''’ என்றார் எரிச்சலாக. 

வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் ""சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித் தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ... அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா... அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்... இன்னொரு விஷேச ஆண்ட னாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்... அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்'' என்றார் கவலையாக. 

சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது...’""மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிட றது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமா யிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப் பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக் கிறோம்''’ என்றார் உறுதியான குரலில். 

மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்.... உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.

மாணவி முன் நிர்வாணக் காட்சி! கல்லடி வாங்கிய அதிகாரி !!

பாடசாலை விடுமுறைதினமான நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவி முன் நிர்வாணமாக இன்று அவரை அழைத்த இராணுவச் சிப்பாய்க்கு பொதுமக்கள் கல்லடி வழங்கியுள்ளனர்.

அளவெட்டிப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மேற்படி மாணவியை முகாமிலிருந்த இராணுவச் சிப்பாய் இவ்வாறு நிர்வாணமாக நின்று கூப்பிட்டு்ள்ளார்.

இச் சம்பவத்தையடுத்து அப் பகுதியில் திரண்ட பொதுமக்களை ஏனைய இராணுவத்தினர் தலையிட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் இராணுவப் பொறுப்பதிகாரியிடம் அம் மாணவினிய் பெற்றோர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வழமையாக அப் பகுதியில் பாடசாலை விட்டு வெளியேறும் மாணவிகளுடன் தகாத வார்த்தைப் பிரயோகம் மற்றும் அரைகுறை ஆடைகளுடன் நின்று பாலியல் சேட்டையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ok

Bra அளவை வைத்து பெண்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள்!


ஆண் முதலாளிமார் புதிதாக வேளையில் சேரும் பெண் தொழிலாளர்களின் Bra அளவை வைத்து தான் அவர்களை வேலையில் நியமிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. மார்பகத்தின் அடிப்படையிலேயே புதிய ஆட்சேர்ப்புக்கள் சில வேலைத்தளங்களில் நிலவுவதாக தெரிய வந்துள்ளது.



 மார்பகம் பெரிதாக இருக்கும் பெண்களுக்கு உடனடி வேலையும், மார்பகம் சிறிதாக இருக்கும் பெண்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை.



சம்பள விகிதமும் இவர்களுக்கு இடையில் பெருமளவு வேறுபாடு காணப்படுகின்றது. பெரிதாக மார்பகம் உள்ள பெண்கள் வாடிக்கையாளர்க்ளையும் இலகுவில் கவர்வதாக முதலாளிமார் தெரிவித்துள்ளனர்.







யேசு கிறிஸ்து உருவம்-முதலில் நாயின் பின்புறத்தில், இப்போது எக்ஸ்ரேயில்

அமெரிக்க பெண் ஒருவரின் எக்ஸ்ரேயில் யேசு கிறிஸ்துவின் உரு வப் படம் தென்படுகின்றது. புற்று நோயாளிகளில் ஒருவரான Karen Sigler என்கிற பெண் வைத்தியசாலையில் கடந்த 2010 டிசம்பர் 12ஆம் திகதி எக்ஸ்ரே படம் எடுத்து இருந்தார்.இவர் இப்படத்தை பார்வை யிட்டார். அப்பொழுதே யேசு நாதரின் உருவத்தை படத்தி ல் கண்டு கொண்டார். ஆனாலும் சிலரால் இவ்வுருவத்தை அவதா னிக்க முடியவில்லை.இவ்வுருவம் தெளிவாக தென்படும் பட்ச த்தில் எப்படி இருக்கும்? என்பதையும் வாசகர்களுக்காக ஓர் இணையம் வெளியிட்டுள்ளது






பெற்ற பிள்ளைகளின் கழுத்தை அறுத்து போன் மூலம் மனைவிக்கு தகவல்! லண்டனில் பயங்கரம்


நபரொருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 'அவர்களது உடலை வந்து எடுத்து செல்' என்று தொலைபேசி மூலம் தனது முன்னாள் மனைவிக்கு தகவல் வழங்கிய கொடூர சம்பவமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

ஜேன் பிரான்ஸில் சே (வயது 62) என்பவரே இவ்வாறு தனது முன்னாள் மனைவியான அட்ஜோவின் (வயது 44) எட்டு வயது மகளான ரெஜினாவையும் 10 வயது மகன் ரோல்ஸையும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.


இவர் மேற்படி மூவரையும் தனது தொடர்மாடி வீட்டின் 3 படுக்கையறையில் இருந்து விரட்ட வேண்டுமென்று ஆரம்பத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நபர் தனது பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ஒவ்வொருவரது கழுத்தையும் கத்தியினால் மிகவும் கொடூராமாக அறுத்து கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதன்பின் மேற்படி நபர் அட்ஜோவை தொடர்பு கொண்டுள்ளதுடன் பேஸ்புக்கில் 'நான் உனது இரு பிளைகளையும் கொன்று விட்டேன், கொன்று விட்டேன். எனவும் நான் பொலிஸாருக்கு தகவலை வழங்கிவிட்டேன், அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறேன்' என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்நபர் 999 என்ற அவசரபிரிவு இலக்கத்தை தொடர்புக்கொண்ட பின் அட்ஜோவின் தொலைப்பேசி இலக்கித்திற்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி 'வந்து உனது பிள்ளைகளின் உடலை எடுத்துச் செல்' என்று தெரிவித்துள்ளார்.

மேற்படி சிறுவர்களின் உடல்களை பொலிஸார் கடற்கரையோரத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர். அவர்கள் பல மணித்தியாலங்களுக்கு முன்பே இறந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸார் மேற்படி நபரின் வீட்டை சோதனை செய்த போது சே எழுதிய குறிப்பொன்றை கண்டெடுத்துள்ளனர். அந்த குறிப்பில், 'நான் இவர்களை ஏன் கொலை செய்தேன் என்பதற்கு இந்த குறிப்பு ஓர் ஆதாரம்' என குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வழக்குரைஞர் எட் புரோவ்ன், நீதிமன்றில் தெரிவிக்கையில், 'ஒரு நாள் காலை இவர் தனது சொந்த பிள்ளைகளின் உயிரை அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த நிலையிலே பறித்துள்ளார்' இச்சம்பவமானது வீட்டு வன்முறைக்கு ஓர் உதாரணமாக வரலாற்றில் பதியப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்'.

ஆபிரிக்காவை சேர்ந்த மேற்படி இருவரும் கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த பின் அட்ஜோ தனது பிள்ளைகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே வட லண்டனிற்கு மாற்றியுள்ளார்.

ஒஸ்தி இலவசமாக டவுன்லோட் செய்ய

கீழ்காணும் லிங்க் களில் ஏதோ ஒன்றிற்குள் ஒளிந்திருக்கிறது. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதல் க்ளிக்கிலேயே கண்டுபிடிப்பவருக்கு ஒஸ்தி படம் முதலிலேயே டவுன்லோட் செய்யும் பாக்கியம் இருக்கிறது.



அது நிச்சயமாக இந்த 8  லிங்கிற்குள் ஒன்றில் தான் இருக்கிறது. இது இந்த படம் கண்டிப்பாக தியேட்டரில் போய் பார்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு மட்டும்.


0 .வேண்டாம் இந்த வீண் விபரீதம்.
1 .குப்பைகளுக்குள்ளிருக்கும் ரகசியங்கள்
2 .மதுரையில் வரப்போகிறது இன்டெர் நேஷனல் ஏர்போர்ட்
3 .இந்த வீடியோவை பார்க்காதீர்கள். ப்ளீஸ்
4 .வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 12
5 .தர்ம அடி வாங்கும் தமிழனுக்கு!
6 .பைத்தியம் பிடிக்க வைக்கும் வீடியோ
7 .காதலைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?




பிரபல நடிகையிடம் இயக்குனர்...மீண்டும் ஒரு நடிகை இயக்குனர் பிரச்சினை.

வாகை சூட வா படத்தில் என்னை அவமரியாதையாக நடத்தியதால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டேன்’ என்றார் நடிகை சாந்தினி. ‘நாடோடிகள்’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் சாந்தினி. இவர் கூறியதாவது: சினிமா தொழிலை வெறுக்கிறேன். எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே இதற்கு காரணம். நாடோடிகள் படத்தில்தான் முதலில் 


நடித்தேன். அப்போது நடிப்பை ரசித்தேன். அதன்பிறகு கசப்பான அனுபவங்களே மிஞ்சியது. ‘மதில்மேல் பூனை’ என்ற மலையாள படத்தில் நடித்தேன். 5 நாள் ஷூட்டிங்குக்கு ஒரு லட்சம் தருவதாக தயாரிப்பாளர் பிரபா கண்ணன் கூறி இருந்தார். ஆனால் பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை. பாதிதான் கொடுத்தார்.
சற்குணம் இயக்கிய ‘வாகை சூட வா’ பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது அவமரியாதையாக நடத்தப்பட்டேன். 4 நாட்கள் நடித்தால் மட்டும் போதும் என்று கூறி கால்ஷீட் பெற்றனர். ஆனால் ஒரு வாரம் இழுத்தடித்தார்கள். தங்குவதற்கு அறைகூட தரவில்லை. என்னிடம் கடுமையான வார்த்தைகளில் இயக்குனர் பேசினார்.


இதெல்லாம் என் மனதை பாதித்துவிட்டது. இத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு மலேசியாவுக்கு திரும்பி செல்கிறேன். புதிய படம் ஒன்றில் நடிக்க கேட்கிறார்கள். இனி நடிப்பதாக இல்லை. இவ்வாறு சாந்தினி கூறினார்.

பாதுகாப்பாக 'விளையாடினால்' எல்லோருக்கும் நல்லதுதானே...!

காமன்வெல்த் போட்டிக்கான கேம்ஸ் வில்லேஜில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் வில்லேஜ் அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலமாக சாக்கடைகளில் வந்து சேர ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து காமன்வெல்த் போட்டி அமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னலிடம் கேட்டபோது நல்ல செய்தி தான் என்று கூறியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிக்காக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த அணிகள் டெல்லி யில் குவிந்துள்ளன.அனைத்து வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகள் கேம்ஸ் வில்லேஜில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலம் ஏராளமான ஆணுறைகள் வந்து குவியத் தொடங்கியுள்ளனவாம். ஆணுறைகளைப் பயன்படுத்தி விட்டு அவற்றை பயன்படுத்தியோர், அதை டாய்லெட்டுகளில் போட்டு ஃபிளஸ் அவுட் செய்து விடுகின்றனர். இதனால் கழிப்பறைகளில் அடைப்பு ஏற்படுகிறது. அடைப்பை சரி செய்யப் போனபோதுதான் டாய்லெட்டுகளில் ஆணுறைகள் போடப்பட்டதே தெரிய வந்தது.

இது லேசான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் பென்னலோ இதை நல்ல செய்திதானே என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது வாய் விட்டுச் சிரித்த அவர், இதைப் போய் கவலையுடன் கேட்கிறீர்களே. உண்மையில் இது நல்ல செய்தி. பாதுகாப்பான செக்ஸ் உறவு மேற்கொள்ளப்படுகிறது என்பது நல்ல செய்திதானே.

பாதுகாப்பான முறையில் எல்லாம் இருந்தால்தான் வீரர்கள், வீராங்கனைகளால் போட்டியில் சிறப்பாக பங்கேற்க முடியும்.அந்த வகையில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் பென்னல்.

அத்தோடு நிற்காத பென்னல் மேலும் சிரித்தபடி, அதை விட முக்கியமாக அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் டாய்லெட்களை சுத்தப்படுத்துகிறார்கள் என்பதும் இதன் மூலம் தெரிகிறது. அதுவும் நல்லதுதான் என்றார்.

பின்னர் சற்று சீரியஸாக அவர் மாறி, பல ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு சர்ச்சையான விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம்தான் என்றார்.

பாதுகாப்பாக 'விளையாடினால்' எல்லோருக்கும் நல்லதுதானே...!

அறத்துப்பால் பொருட்பால் அமலாபால்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி திரைப்பட நாயகர்களுக்கு இடையிலான செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) போட்டி நடைபெற இருக்கிறது. இம்முறை 2 புதிய அணிகள் இணையலாம் என்று எதிப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு அணியையும் விளம்பரப்படுத்துவதற்கு BRAND AMBASSADOR-ஐ ஒப்பந்தம் செய்வார்கள். இம்முறை சென்னை அணிக்கு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று பேச்சுகள் நிலவின.

இந்நிலையில் CCLல் BRAND AMBASSADORக்கு நிலவி வந்த போட்டியில் இருந்து விலகி விட்டாராம் த்ரிஷா. விஷால் உடன் இணைந்து 'சமரன்', தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து 'தம்மு' ஆகிய படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருப்பதால் தான் இந்த முடிவு என்று கூறுகிறார்கள்.
தற்போது BRAND AMBASSADOR போட்டிக்கு முன்னணியில் இருப்பவர் அமலா பால். கண்டிப்பாக அவர் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று கூறி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் BRAND AMBASSADOR ஆக ஒப்பந்தம் செய்யப்பட்டால் இன்னும் பிரபலமாகலாம் என்பதால் அமலாபால் இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறாராம்.

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 23

 ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஏறுமுகமும் இறங்குமுகமும்!

ஏறுமுகச் செய்தி ஒன்றுடன் இந்த வார அலசலைத் தொடங்கலாம். இதைத் தவிர, மற்ற அனைத்துமே இறங்குமுகங்களே.

ஏறுமுகச் செய்தியின் ஹீரோ க்ரூப்பான் (groupon). இந்தத் தொடரின் வாசகர்களுக்கு அறிமுகமான நிறுவனம்தான். நுகர்வோர் ஒன்று சேர்ந்தால், அவர்களது பேரம் பேசும் திறன் அதிகமாகும் என்ற அடிப் படையில் கட்டப்பட்ட க்ரூப்பானை ஈயடிச் சான் காப்பியடித்து, உலகம் எங்கும் அதே மாடலில் பல வலைதளச் சேவைகள் தொடங்கப்பட்டாலும், க்ரூப்பானின் வளர்ச்சி குறையவில்லை. இதற்கு முக்கியக் காரணம் வேகம்.

2008-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை வெகு விரைவில் மிகப் பெரிய அளவில் தொழில் முதலீட்டைப் பெற்றுக்கொண்டு பிரமாண்டமாக வளர்த்த ஆண்ட்ரு மேசனுக்கு 31 வயது ஆகிறது. தங்களைக் காப்பியடித்துத் தொடரும் நிறுவனங்களில் எவையெல்லாம் லாபகர மாக நடத்தப்படுகிறதோ அவற்றை வாங்கி விடும் உத்தி, க்ரூப்பானின் கிடுகிடு வளர்ச் சிக்கு ஒரு முக்கியக் காரணம்.

மூன்று வருடங்களுக்குள் 10 ஆயிரம் பேர் பணிபுரியும் நிறுவனமாக மாறி இருக்கும் க்ரூப்பான், சென்ற வாரத்தில் பங்குச்சந்தையில் நுழைந்தது. ஆண்ட்ரு மேசன் உட்பட க்ருப்பானின் முதலீட்டா ளர்கள் நான்கு பேர் ஒரே நாளில் பில்லியனர்கள் ஆனார்கள்!

இனி, இறங்குமுகச் செய்தி கள்...

முதலில் வருவது ஃபேஸ்புக்!

சமூக வலைதளப் பிரிவில் இன்னும் தொடர்ந்து மன்னனாக இருப்பது ஃபேஸ்புக்தான். 850 மில்லியன் பயனீட்டாளர்களைக்கொண்டிருக்கும் இந்தத் தளத்தின் ஊடக வலிமை தொலைக்காட்சிக்கு நிகரானது. இங்கிலாந்தில் எடுக் கப்பட்ட சர்வே, 'டி.வி. சேனல் பார்ப்பதை விட, மக்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள்’ என்கிறது. ஆனால், ஃபேஸ்புக்கின் சவால்... தொலைக்காட்சிக்கு இணையாக உலகின் பிராண்ட் நிறுவனங்கள் ஃபேஸ்புக்கை விளம்பரத்துக்குப் பயன்படுத்தவில்லை என்பது. இந்த வருடம் ஃபேஸ்புக்குக்குக் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் வருமானம் வந்திருப்பது உண்மைதான். ஆனால், இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் விளம்பரங்களில் இருந்து வந்திருக்கும் வருமானம் மட்டுமே. இதை நிவர்த்திசெய்து பெரிய நிறுவனங்களின் விளம்பர பட்ஜெட்டில் நுழையலாம் என ஃபேஸ்புக் முயற்சி செய்ய, விளைவோ தலைகீழாகச் சென்றபடி இருக்கிறது. ஃபேஸ்புக்கின் பக்கங்கள் என்ற வசதியைப் பயன்படுத்தி, எந்த நிறுவனமும் தங்களது பயனீட்டாளர்களைத் தொடர்புகொள்ள முடியும். http://www.facebook.com/pages/browser.php உரலிக்குச் சென்றால், கோகோ கோலா, டிஸ்னியில் தொடங்கி உலகின் பிரபல பிராண்ட் அனைத்தும் இலவசமாகவே தமது பக்கங்களை விளம்பரமாகப் பயன்படுத்திக்கொள்வது தெரியும். உதாரணத் துக்கு, 2012-ல் ஃபோர்டு வெளியிடப் போகும் தனது ஃபோகஸ் மாடலுக்காக உருவாக்கப்பட்ட பக்கத்தில் இந்தக் கட்டுரை எழுதும் நாளில் 3 லட்சத் துக்கும் அதிகமானோர் விரும்பி இணைந்திருக்கிறார்கள் (www.face book.com/fordfocus).

இந்த கார் மாடலைப் பற்றி கேள்விகள் கேட்கிறார்கள்; புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் கண்டு ரசிக்கிறார்கள். இதையெல்லாம் சாத்தியமாக்கும் ஃபேஸ் புக்குக்கு இதில் இருந்து எந்த லாபமும் இல்லை. இது இப்படியே தொடர்ந்தால், ஃபேஸ்புக்கின் ஊடகமாகும் கனவு கனவாக மட்டுமே தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை!


அடுத்து, இந்த வாரத்தின் அதோகதியான நெட்ஃப்ளிக்ஸ் (Netflix). வீட்டில் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்றால், கடைக்குச் சென்று வாடகைக்கு வீடியோ கேசட் அல்லது டி.வி.டி. எடுத்து வர வேண்டும் என்பதே சில வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை. அமெரிக்காவில் தெருவுக்கு தெரு 'பிளாக்பஸ்டர்’ கடைகளை ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கலாம். இந்த மாடலை மாற்றி திரைப்படங்கள் உங்கள் வீடு தேடி வரும்; அதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். பார்த்து முடித்து, அதே உரையில் வைத்து தபாலில் போட்டு விட்டால் போதும். எத்தனை திரைப்படங்கள் வேண்டுமோ, அதற்கேற்படி மாத சந்தா திட்டத்தில் மட்டும் இருக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடலுக்கு மகத்தான வரவேற்பு. சில மாதங்களிலேயே பல மில்லியன் பயனீட்டாளர்கள் சேர்ந்துவிட, அதைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட முக்கியமான அனைத்துத் திரைப்பட நிறுவனங்களையும் தங்களுக்கு உரிமை கொடுக்கும்படி வளர்ந்தது நெட்ஃப்ளிக்ஸ். கடந்த சில மாதங்கள்வரை பயனீட்டாளர்களிடமும் முதலீட்டாளர் களிடமும் ஓஹோவென வாங்கியிருந்த பெயரை அவசரக்குடுக்கை நடவடிக்கை ஒன்றால் நிவர்த்தி செய்ய முடியாத வகை யில் கெடுத்துக்கொண்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொள்ளா மல் / அறிவிக்காமல், தடாலடியாகத் தங்க ளது சேவைக் கட்டணத்தை அதிகரித்தது தான் அது.

விளம்பரங்கள் இல்லாமல், சந்தாதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படுவது மட்டுமே வருமானமாக இருக்கும் நிறுவனம், தங்களது சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமானால், பயனீட்டாளர்களிடம் அவர்களது ஒட்டுறவு (stickiness) மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டும். விலை அதிகரித்த சில வாரங்களிலேயே மில்லியன் கணக்கில் பயனீட்டாளர்கள் விலக... நெட்ஃப்ளிக்ஸின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி!

கடைசியாக 'மேகக்கணினியம்’. மிகப் பிரகாசமாகத் தொடங்கிய இந்த கணினிப் பிரிவின் ஆதிக்கம் அத்தனை பலமாக இருக்கப்போவதாகத் தெரிய வில்லை. சில வாரங்களுக்கு முன்னால் கார்ட்னர் (Gartner) நிறுவனம் வெளியிட்டு இருக்கும் ரிப்போர்ட்டில் மேகக்கணினி யத்துக்கு 10-வது இடம். இதே ரிப்போர்ட்டில் கடந்த வருடம் மேகக்கணினியம் முதலிடம் வகித்தது!

என்ன நடக்கிறது இங்கே? அடுத்த வாரத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 22

இடைவெளி சில வாரங்களே ஆனாலும், இந்தத் தொடரை எழுதாமல் இருந்த இந்த சில வாரங்களில் நடந்திருக்கும் சில நிகழ்வுகள் பிரமாண்ட மானவை என்பதால் அவற்றை முதலில் பார்க்கலாம்.

ஐ.டி. துறையைப் பலமாக அசைத்துப்போட்டது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் அகால மரணம். 56 வயதுக்குள் அவர் செய்த சாதனைகள் குறைந்தது அடுத்த 50 ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும். ஜாப்ஸுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் என்னவாகும்? குறுகிய காலத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் வரப்போவது இல்லை. தனக்குப் பின்னால் தலைமைச் செயல் அதிகாரியாக டிம் குக்கை நியமித்த பிறகுதான் அந்தப் பதவி யில் இருந்து விலகினார் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்திடம் 81 பில்லியன் டாலர்கள் இன்றைய தேதியில் பணமாக மட்டும் இருக்கிறது. இதைக் கரைத்து, ஒடிந்துபோக பல இமாலயத்தவறுகள் நடந்தாக வேண்டும். டிம் குக், ஜாப்ஸ்போல பொருள் தயாரிப்பில் (Product Development) வல்லுநராக இல்லாவிட்டாலும், ஆப்பிளை வழிநடத்திச் செல்வதில் திறன் மிகுந்தவராகவே தெரிகிறார். 

பின்குறிப்பு: ஜாப்ஸின் உயிர் பிரிகையில் அவரது அருகிலேயே இருந்த அவரது சகோதரி மோனா சிம்சன், நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஆற்றிய உரை அற்புதமானது. 'ஸ்டீவின் கடைசி வார்த்தைகள்: 'ஓ வாவ்... ஓ வாவ்... ஓ வாவ்!’ ரொம்பவே சிம்பிளான வாழ்க்கை வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் சில வருடங்களுக்கு முன்னால், ஒரு விழாவில் உரையாற்றியபோது 'ஒவ்வொரு நாளையும் வாழ்க்கையின் கடைசி நாளாகப் பாவித்து, அதற்குள் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று நினைத்ததுதான் எனது வெற்றிக்குக் காரணம்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது!''

மோனாவின் முழுப் பேச்சு படிக்க http://www.nytimes.com/2011/10/30/opinion/mona-simpsons-eulogy-for-steve-jobs.html?pagewanted=all உரலியையும் ஜாப்ஸின் உரை யைக் கேட்க http://www.youtube.com/watch?v=D1R-jKKp3NA உரலியையும் க்ளிக்கவும்.

அடுத்தது, அமேசான்.

பங்குச் சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்களது வருமான, செலவு விவரங்களை வெளியிட வேண்டும் என்பது விதிமுறை. காலாண்டுக் கணக்கு எனப்படும் இந்த அறிக்கையின் மீது பங்குச் சந்தை நிபுணர்கள் கவனம் செலுத்துவது நடைமுறை. குறிப்பிட்ட சில நிபுணர்கள் என்ன நிறுவனங்கள் எவ்வளவு வருமானம் மற்றும் லாபம் ஈட்டும் என்பதை அனுமானித்துச் சொல்வதும் உண்டு. ஒரு நிறுவனம் லாபகரமாக காலாண்டை நடத்தியிருந்தும், மேற்கண்ட அனுமானத்தை எட்ட முடியவில்லை என்றால் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடையும். இதனால், பங்குச் சந்தையில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரிகள் காலாண்டுக் கணக்கை வெளியிடும்போது நகம் கடித்து நெர்வஸாக இருப்பது உண்டு. ஒருவேளை நிபுணர்களின் அனுமானத்தை அடைய சில புள்ளிகள் தவறியிருந்தாலே, அதற்கான காரணங்களை முதலீட்டாளர்களிடம் மீடியா மூலமாக விளக்கம் அளித்து பங்கு மதிப்பு வீழ்ந்துவிடாமல் இருக்க முயற்சிகள் எடுப்பார்கள். காலாண்டுக் கணக்குபற்றி தீர்க்கமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், இந்த உரலியைச் சொடுக்குங்கள் http://help.wsj.com/help/tools-and-formats/company-research/earnings-estimates/

அமேசானின் காலாண்டுக் கணக்கு சென்ற வாரம் வெளியானது. அதன் லாபம் 70 சதவிகிதத்துக் கும் மேலாக வீழ்ச்சி அடைந்ததாகச் சொன்னது அமேசான். வருமானம் 40 சதவிகிதத்துக்கும் மேல் இருந்தாலும், லாபம் ஏன் இப்படிக் குறைந்தது என்பதை அலசினால், அமேசான் தொலைநோக்கிலான வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்திருப்பது தெரியவரும். இந்தக் காரணத்தால், அமேசானின் பங்கு மதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை. அப்படி என்ன தொலைநோக்குத் திட்டங்கள்? ஆன்லைன் புத்தக வியாபாரியாகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்த இந்த நிறுவனம், உலகின் மிகப் பெரிய சந்தையாக மாறியதுடன், இணைய சேவைக் கூறுகள் (Amazon Web Services - http://aws.amazon.com/ ) எனப்படும் மேகக்கணினியகச் சேவைக்குள் சில வருடங்களுக்கு முன்னால் சந்தடி இல்லாமல் நுழைந்து பாரம்பரிய டெக் நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள் போன்றவை மேகக்கணினியத்தில் ஈடுபடாமல் இருக்கும்போதே அதில் நுழைந்து, தொடர்ந்து இந்த ஏரியாவில் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டில் இணையக் கூறுகள் துறையில் இருந்து மட்டுமே அமேசானுக்கு 1 பில்லியன் டாலர் வருமானம் வந்தது என்பது அமேசானின் தொலைநோக்குப் பார்வைக்கு ஓர் அத்தாட்சி எனச் சொல்லலாம். ஐ-பேடுக்குப் போட்டியாக அமேசான் வெளியிடும் கிண்டில் ஃபயர் (Kindle Fire) குளிகை இவ்வருடக் கடைசிக்குள் 2 மில்லியன் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவுக்குப் பின்னர் அமேசானின் ஜெஃப் பெசோஸ் டெக் உலகின் விற்பன்னராகப் (Talisman)பார்க்கப்படுவதில் அர்த்தம் இருக்கிறது.

கடைசியாக, ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக் தளத்தை அடிப்படையாக வைத்து மென்பொருள் தயாரிப்பவர்களுக்கான வருடாந்திர எஃப்8 மாநாட்டில் ஆச்சர்யங் களுக்குக் குறைவில்லை. பயனீட்டாளர்களின் வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் நிகழ்ந்தவற்றை அந்தந்தக் காலகட்டங்களில் வெளியிடும் டைம்லைன் (Timeline) ஃபேஸ்புக் பயனீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படும் எனத் தோன்றுகிறது.

வாஷிங்டன் போஸ்ட் தினசரியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு இருக்கும் சோஷியல் ரீடர் (Social Reader) இன்னொரு மைல்கல். ஃபேஸ்புக்குக்குள் இயங்கும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நீங்கள்

உங்களுக்கு விருப்பமான செய்திகளையும் உங்கள் நண்பர்களுக்குப் பிடிக்கும் செய்திகளையும் முதன்மையாகப் படிக்க முடியும். (உரலி-http://www.washingtonpost.com/socialreader) பல மீடியா நிறுவனங்கள் இந்த அடிப்படையைப் பயன்படுத்தி மென்பொருள் எழுதப்போவது உறுதி.

800 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்களுடன் வெற்றிநடைபோட்டாலும், ஃபேஸ்புக்கின் எதிர்காலம் இப்போது சற்றே கேள்விக்குறியுடன் பார்க்கப்படுகிறது. அது ஏன் என்பதை அடுத்த வாரத்தில் பார்க்கலாம்!

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 20

சிஸ்கோ (www.cisco.com) போன்ற பாரம்பரிய டெக் நிறுவனங்களில் ஆள் குறைப்பு செய்வதாக வெளிவந்தபடி இருக்கும் செய்திகள், இந்தத் துறையில் இருக்கும் புதிய வரவுகளைச் சற்றே கலங்கவைத்து இருப்பதைக் கவனிக்க முடிகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ என்பதைப் பற்றிய கலக்கங்களைத் தவிர்க்க முடியாதுதான் என்றாலும், அவ்வப்போது இந்தத் துறையில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையைப் புரிந்துகொள்வது அவசியம்.

சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட அனைத்து நாடுகளும், வளர்ச்சியையும் தொய்வையும் சுழற்சி முறையில் அனுபவிப்பது வெளிப்படையான ஒன்று. 80 மற்றும் 90-களின் இறுதியில் வந்த தொய்வுகளுக்கு இடையே ஏற்பட்ட வளர்ச்சியில் மிகவும் பயன் பெற்றது டெக் இண்டஸ்ட்ரி. மீண்டும் மற்றொரு மந்த நிலையைத்தான் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்னால் இழுத்து மூடிய சந்தையாக இருந்த இந்தியா, இப்போது உலகமயமாக்கலில் முக்கியப் பங்கு வகிப்பதால், மற்ற நாடுகளின் பொருளாதார நிகழ்வுகள் உடனடியாக உள்நாட்டையும் பாதிக்கவே செய்கிறது. வணிக அடிப்படைகளை மீறி வளர்ச்சி செயற்கையாக வீங்கியபடி இருக்கும்போது அதைச் சமன் செய்யத் தொய்வு அவசியம்; அது உண்மையான நிலைக்கு உலகப் பொருளாதாரத் தைக் கொண்டுவரும் என்று இதற்கு ஆதரவாகப் பேசும் பொருளாதார நிபுணர்களும் இருக்கிறார் கள்.
பொருளாதாரத் தொய்வின்போது, அத்தியாவசியச் செலவுகளைத் தவிர, மற்றவற்றைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வாடிக்கை. முன்னர் திட்டமிடப்பட்டு இருக்கும் சில புராஜெக்ட்டுகளைத் தள்ளிப்போடுவதும் நடக்கலாம். அப்படி நடக்கும்போது வேலைக் குறைப்புகள் போன்றவற்றை இந்த நிறுவனங்கள் தடுப்பது கடினம்.

'அதெல்லாம் இருக்கட்டும் அண்டன், இன்றைக்கு இருக்கும் இந்தச் சூழலில் டெக் உலகில் இருக்கும் / நுழைய விரும்பும் நான் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வி எழுகிறதா? ஆம் என்றால், உங்களுக்குத்தான் இந்த வாரக் கட்டுரை.

உங்களுக்கு மிகமிக முக்கியமான தேவை மாற்றத்தை விரும்பும் மனோநிலை. மாற்றம் மட்டும் மாற்றம் இல்லாதது என்பது, வேறு எந்தத் துறைகளுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, டெக் துறைக்கு ரொம்பவும் பொருந்தும். புகழ் பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் (www.gartner.com) உருவாக்கப்படும் எந்த மென்பொருளுக்கும் சராசரி வாழ்க்கை மூன்றில் இருந்து ஐந்து வருடங்கள் மட்டுமே என்கிறது. 10 வருடங்களுக்கு முன்னால் மெயின்ஃப்ரேம் கணினிகளில் இருந்த Y2K சிக்கலைத் தீர்க்க பில்லியன்களில் பணம் செலவழிக்கப்பட்டது. இந்தியாவின் ஐ.டி. துறை உலக அரங்கில் அடுத்த அடி எடுத்துவைக்க இந்த நிகழ்வு காரணமாக இருந்தது என்றுகூடச் சொல்லலாம். ஆனால், மெயின்ஃப்ரேம் துறையில்தான் என் காலம் முழுவதும் கழிப்பேன் என்று யாராவது திட்டமிடுவது எத்தனை ஆபத்தானது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. வந்துகொண்டு இருக்கும் மாற்றங்களை உற்றுக் கவனித்து, அவற்றைப் பற்றிய ஒருங்கிணைந்த மேலார்ந்த பார்வை மற்றும் புரிதல் ஏற்படுத்திக்கொள்வது அவசியம். அதே நேரத்தில், குறிப்பிட்ட தொழில்நுட்பக் கூறு ஒன்றில் ஆழம் ப்ளஸ் அகலத்தையும் தெரிந்துகொண்டு இருத்தல் தேவை.

பெரும் கணினிகளில் இயங்கும் வலைதளங்களும், அவற்றுக்குச் செல்ல கணினிகள் மட்டுமே வேண்டும் என்று சில வருடங்கள் முன்னிருந்த வரை இருந்த நிலை இன்று இல்லை. மொபைல் சாதனங்கள் இணையத்தின் முக்கிய அங்கமாகிவிட்டன. இந்த டிரெண்ட் இன்னும் பல வருடங் களுக்குத் தொடர்ந்தபடியேதான் இருக்கப் போகிறது. இதுபோல முக்கியமான மாற்றங்கள் வருகையில், சில தொழில்நுட்பங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு; சில சீக்கிரமாக மறைந்துபோகும். Palm தொழில்நுட்பத்தை உதாரணமாகச் சொல்லலாம். கையில் ஏந்திச் செல்லக் கூடிய PDA என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட Personal Digital Assistant சாதனங்களை இயக்கும் மென்பொருளைக் கொண்டுவந்தது இந்த நிறுவனம்தான். இன்று இந்தத் தொழில்நுட்பம் இருக்கும் இடம் தெரியவில்லை. அதே நேரத்தில் HTML5 என்பது சற்று முன் முளைத்த காளான்போல இருந்தாலும், அதற்கு மிக நீண்ட எதிர்காலம் இருக்கிறது.

HTML5?

இந்தத் தொடரின் தொடக்கத்தில் ஓரிரு கட்டுரைகளில் HTML5 பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன். ஆழமான தகவல்களை மற்றொரு சமயத்தில் பார்க்கலாம் என்றும் சொல்லியிருந்தேன். அந்த வேளை வந்துவிட்டது. இணையத்தின் சர்வதேச மொழியான HTML - யின் இலக்கண விதிகளை நிர்வகிப்பது World Wide Web Consortium. சுருக்கமாக, W3C என்ற அமைப்பு. உலக நாடுகளுக்கு எப்படி ஐக்கிய நாடுகள் அமைப்பு இருக் கிறதோ, அதுபோலவேதான் இணைய உலகுக்கு W3C என்று தோராயமாகச் சொல்லலாம்.

W3C உருவாக்கப்பட்டபோது, தகவல்கள் எழுத்து வடிவிலும் (text) படங்கள் (image) மூலமாக மட்டுமே இருந்தன. சத்தம், வீடியோ போன்றவற்றை இணையம் மூலமாகப் பகிர்ந்துகொள்ளும் தேவையும் இல்லை; அதற்கான வலிமையும் (bandwidth) இணையத்துக்கு இல்லை. அதோடு, முக்கியமாக மொபைல் சாதனங்கள் என்பதும் இல்லை. அவர்கள் வெளியிட்ட முதல் சட்டதிட்டத்தைப் ( HTML 1.0 ) பார்த்தால் அது தெரியவரும்.

Fast forward செய்து நிகழ்காலத் துக்கு வந்து, பைனாகுலர் மூலமாக எதிர்காலத்தைப் பார்க்க முற்பட்டால், குறுந்தகவலில் இருந்து, முழு நீளத் திரைப்படம் வரை இணையத்தை ஊடகமாக வைத்துப் பகிர்ந்துகொள்ளப்படப் போவது தெரியவரும். இதை மேற்கொள்ள உதவுவது W3C - யின் லேட்டஸ்ட் வெளியீடு HTML5 சட்டதிட்டம்!

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 21

2012 குளிகைகளின் வருடமாக இருக்கும். இந்த டிரெண்ட் சில வருடங்களுக்கு நீடிக்கும். எப்படிச் சொல்கிறாய் அண்டன் என்று கேட்கிறீர்களா?

இந்த வாரத்தில் நடந்திருக்கும் பல சம்ப வங்களை அடிப்படையாக வைத்துத்தான் சொல்கிறேன்.

சர்வதேசச் சந்தை தகவல் நிறுவனமான ஐ.டி.சி. (International Data Corporation) இந்த வாரத் தில் வெளியிட்டு இருக்கும் டெக் இண்டஸ்ட்ரி பற்றிய ரிப்போர்ட், கடந்த மூன்று மாதங்களில் உலகளாவிய குளிகைக் கணினி விற்பனை 90 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது என்கிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது 400 சதவிகிதம் அதிகமாம்!


மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 'விண்டோஸ் 8’ (Windows - 8) என்ற பெயரில் தங்களது இயங்கு பொருளை (Operating System) வெளியிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. 2012 ஜனவரி வாக்கில் நுகர்வோருக்கு விற்கத் திட்டமிடப் பட்டுள்ள இந்த இயங்குபொருள் அலைபேசி மற்றும் குளிகைக் கணினிகளை மனதில்கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்கிறது மைக்ரோசாஃப்ட். மொபைல் சாதனங்களின் முக்கியத் துவத்தைப் பல வருடங்களுக்கு முன்னரே உணர்ந்துதான் இருக்கிறது மைக்ரோ சாஃப்ட். ஆப்பிளின் ஐ-போன், ஆர்.ஐ.எம்மின் பிளாக்பெர்ரி (RIM Blackberry போன்றவை வருவதற்கு முன்னரே 'விண்டோஸ் சி.இ.’ (Windows CE) என்ற இயங்குபொருளை வெளியிட்டது. இந்த மென்பொருள்தான் மைக்ரோ சாஃப்ட் தயாரிக்கும் பல்வேறு மொபைல் சாதனங்களை இயக்க இன்றும் பயன்படுகிறது. ஆனால், நுகர்வோரிடம் மைக்ரோ சாஃப்டின் மொபைல் சாதனங்கள் பிரபலம் ஆகவில்லை. கணினிகளை இயக்கும் இயங்குபொருளான விண்டோஸ் என்பதை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு தங்களது எல்லாத் திட்டங்களையும் செய்வதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

மேசை/மடிக்கணினி என்பது தொடர்ந்து மக்களிடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். அவர்களது வணிக அடிநாதம் 'விண்டோஸ்’ மென்பொருள். அதைப் பல்வேறு விதங்களில் விற்பதுதான் சாமர்த்தியமானது என்ற நினைப்பில் இதுவரை இருந்து வந்த பூனைக்கு மணி கட்டியது ஆப்பிளின் ஐ-போன். அதைத் தொடர்ந்து ஐ-பேட். அது மட்டும் அல்லாமல் கூகுளின் ஆண்ட்ராயிடால் இயங்கும் குளிகைகள் சரமாரியாக வெளியிடப்பட, இவற்றின் விளைவில் கணினிகளின் சந்தை கலகலத்துப் போய் இருப்பது கணினிகளை விற்கும் நிறுவனங் களின் பங்குச்சந்தை மதிப்பு வீழ்ச்சியில் தெரிகிறது. சுதாரித்துக்கொண்ட மைக்ரோ சாஃப்ட் மொபைல் சாதனங்களை இயக் குவதே 'விண்டோஸ் 8’ மென்பொருளின் அடிப்படை வடிவமைப்பாக இருக்கும்!

ஃபிலடெல்பியா டெய்லி நியூஸ் (Philadelphia Daily News) என்ற செய்தித்தாள் நிறுவனம் மலிவான விலையில் நீண்ட கால சந்தாதாரர்களுக்கு அவர்களது நிறுவனத்தின் பெயரில் ஆண்ட்ராயிடில் இயங்கும் குளிகைக் கணினிகளை வழங்கப்போவதாக இந்த வாரம் அறிவித்து இருக்கிறது. பாரம் பரிய அச்சு ஊடகங்கள் இணையத்துக்கு நகர்ந்துகொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனினும், ஊடக நிறுவனம் ஒன்று தங்களது செய்திகளையும் விளம்பரங்களையும் நுகர்வதற்கு வசதியாக குளிகையையே கொடுப்பது இதுதான் முதல் முறை. இந்தப் பழக்கம் பல ஊடக நிறுவனங்களால் பின்பற்றப்படும் என்பது உறுதி.

ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டி யாக இருக்கும் என்று பரபரப்பாகப் பேசப்படும் அமேசானின் கிண்டில் குளிகை, ஐ-பேடைவிடப் பாதி விலை என்று டெக் இண்டஸ்ட்ரி யில் தற்போது உலா வரும் வதந்தி உண்மையாக இருந்தது என்றால், அதிகமான பயனீட்டாளர்கள் குளிகைக்கு மாறி விடுவதைக் கணிக்க முடியும். இந்த வருடக் கடைசியில் கிண்டில் குளிகை வெளிவருகிறது.

டெக் உலகம் படு வேகமாக மாறி வருவதில் வசதிகளும் சிக்கல்களும் ஒருசேர வருவதைத் தடுப்பது எளிது அல்ல. உதாரணத்துக்கு, அலை பேசும் தொழில்நுட்பத்தையே எடுத்துக்கொள்ளலாம். 10 வருடங்களுக்கு முன்னால், மற்றவர்களுடன் தொடர்புகொள்ள தொலைபேசியை மட்டுமே பயன்படுத்தினோம். தொலைபேசி இருக்கும் இடத்துக்கு நாம் செல்ல வேண்டும் என்பது மாறி, நாம் இருக்கும் இடத்துக்கு எல்லாம் அலைபேசி வர முடியும் என்பது வசதியைக் கூட்டி இருப்பது உண்மை தான்.

அதே நேரத்தில், நாம் செல்லும் இடத் துக்கு எல்லாம் அலைபேசியின் பேட் டரியை சார்ஜ் செய்துகொள்ள வேண்டும் என்பது சிக்கல். பயணம் செய்கையில் அலைபேசியை சார்ஜ் செய்ய அவதிப்படுவது நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். அப்படி இந்தக் குளிகைகளின் குறைபாடு என்ன? எப்படி அதைக் கடந்து வருவது? பார்க்கலாம்!

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 18

வருங்காலத் தொழில்நுட்பம் 90 : கூகுள் - கதாநாயகனும் வில்லனும்!

இந்த வாரக் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அது... கூகுள்!

12.5 பில்லியன் டாலர்களை பர்ஸில் இருந்து எடுத்து மோட்டரோலா நிறுவனத்தை வாங்கியிருக்கிறது கூகுள். மென்பொருள் நிறுவனமாக மட்டுமே இதுவரை இருந்து வந்த கூகுள், இப்போது நுகர்வோர் மின்பொருள் ( Consumer Electronics ) நிறுவனமாகவும் மாறி இருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னால், கூகுளின் நிறுவனர்களில் ஒருவரான லேரி பேஜ் CEO-வாகப் பதவியேற்ற போது, புதுமையாகச் சில வற்றைச் செய்யப்போகி றார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். சமூக வலை சேவையான கூகுள் ப்ளஸ் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியானபோது, அதுதான் லேரியின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. (கலக்கிக் கொண்டு இருக்கும்கூகுள் ப்ளஸ் பற்றி அடுத்த சில வாரங்களில் பேசியாக வேண்டும்). அதை எல்லாம் ஜுஜுபி ஆக்கிவிட்டு, மோட்டரோலாவை வளைத்துப் போட்டு இருக்கிறார் லேரி. இதன் பின்னணியையும் எதிர்கால விளைவு களையும் பார்க்கலாம்.

ஆப்பிள் தன் கையில் சாதனங்களின் வன்பொருளையும் (Hardware),அவற்றை இயக்கும் மென்பொருளையும் (Operating System) ஒருசேர வைத்திருப்பதால் தான், அவர்களது சாதனங்களின் பயனீட்டு அனுபவத்தை எளிதாகவும் விரும்பும்படியாகவும் செய்ய முடிகிறது. கூகுளிடம் இதுவரை மொபைல் சாதனங்களை இயக்கும் ஆன்ட்ராயிட் மென்பொருள் மட்டுமே இருந்தது. Samsung, HTC போன்ற சாதனத் தயாரிப்பாளர்களிடம் ஆன்ட்ராயிடைக் கொடுத்து, அவர் களது சாதனங்களில் இயக்கிக் கொள்ளும்படி கொடுத்துவந்திருக்கிறது கூகுள். இந்த சாதனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, தங்கள் சாதனங்களை அதிகமாக விற்க ஆன்ட் ராயிட் உதவினாலும், பயனீட்டு அனுபவத்தை முன்னேற்றும் வகையில் தங்களது சாதனங்களில் விரைவாக மாற்றம் கொண்டுவர முடியாதது மிகப் பெரிய குறை. அதோடு, பல நிறுவனங்களின் சாதனங்களில் ஆன்ட்ராயிட் இயங்குவதால், எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற குழப்பமும் தொடர்ந்து இருந்தது. இதை நிவர்த்தி செய்கிறேன் என்று Nexus என்ற பெயரில் தானாக அலைபேசி சாதனம் ஒன்றைச் சோதனை முயற்சியாகச் செய்து பார்த்தது. அதுவும்தோல்வி யில் முடிய, சாதனத் தயாரிப்பில் முதிர்ச்சி பெற்ற நிறுவனம் ஒன்றை வாங்கி, அதன் மூலம் தனக்கே சொந்தமான வன்பொருள் மண்டலத்தை அழுத்தமாக உருவாக்க முற்பட்டு இருக்கிறது கூகுள். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஆப்பிளின் மாடலை அப்படியே காப்பி அடித்திருக்கிறது. ஒரு சின்ன வித்தியாசம்: ஆப்பிளின் இயங்கு மென்பொருளான iOS போல் அல்லாமல், ஆன்ட்ராயிட் இலவச மாக வழங்கப்படுகிறது. இதுவரை ஆன்ட்ராயி டில் இருந்து லாபம் எதையும் பார்க்கவில்லை கூகுள். இப்போது மோட்டரோலாவை வாங்கியதன் மூலம் கூகுளுக்கு உடனடியாக லாபம் எதுவும் கிடைக் கப்போவது இல்லை. பின்னர் எதற்காகஇப்படி ஒரு சூதாட்டத்தில் இறங்கியிருக்கிறது கூகுள்?


காரணம் சிம்பிள்... நீங்களும் நானும்தான்! ஆன்ட்ராயிட் மூலம் இயங்கும் அலைபேசி யையோ, குளிகையையோ மில்லியன் கணக்கில் மக்களைப் பயன்படுத்தவைத்துவிட்டால்,அந்தப் பயன்பாட்டில் இருந்து லாபத்தைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். இதற்கு சமீபத்திய உதாரணம்: சமூக விளையாட்டுகளைத் தயாரிக்கும் Zynga. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத் தின் தொடக்க கால நோக்கம் முடிந்த வரை பயனீட்டாளர்களைத் திரட்டுவது. Farmville போன்ற விளையாட்டுகளில் முதலில் எப்பாடுபட்டாவது பயனீட்டாளர் களைக் கவர்ந்திழுத்து, அவர்களது நண்பர் களை, அவர்களைவைத்தே இழுத்து வர வைப்பதிலேயே கவனம் செலுத்தியது ஸிங்கா.




மில்லியன்களில் பயனீட்டாளர்கள் சேர்ந்ததும், அவர்கள் விர்ச்சுவல் விளையாட்டு விளையாடத் தனது மென்பொருளுக் குள் வரும் டிராஃபிக்கைப் பணமாகப் பல வழிகளில் மாற்ற முடிந்து இன்று இன்டர் நெட் உலகில் பிரமாண்டமான நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது ஸிங்கா. Monetization என அழைக்கப்படும் இந்தப் பணமாக்கல் பற்றிய உடனடிக் கவலை கூகுளுக்குஇல்லை. கணினிகளில் இணையம் செல்லும் பயனீட்டாளர்களின் டிராஃபிக்கை அடிப்படையாகக்கொண்ட அவர்களது விளம்பர சேனல்களான Adwords, Adsense போன்றவை கொண்டுவரும் வருமானத்தைவைத்து அவர்கள் தங்கள் நிறுவனத்தை லாபகரமாக இன்னும் சில ஆண்டுகள் நடத்த முடியும். ஆனால், டெக் உலகமே மொபைல் மயமாகி வரும் இன்றைய சூழலில், கணினிகளில் இருந்து மட்டுமே வரும் டிராஃபிக்கை வைத்து நிறுவனத்தை நடத்தினால், சில ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் இருக்காது என்பது நிதர்சனம். இதனால்தான், இத்தனை பெரிய சூதாட்டத்தில் இறங்கி இருக்கிறது கூகுள்.

புதிதாக வாங்கியிருக்கும் இந்த மோட்ட ரோலா பொம்மையைவைத்து அலைபேசி, குளிகை போன்ற சாதனங்களுடன் விளை யாடுவதோடு கூகுள் நிறுத்திக்கொள்ளாது என்பது எனது அனுமானம். தொலைக்காட்சியில் இருந்து, டோஸ்டர் வரை எதற்கெல்லாம் இயங்கு மென்பொருள் தேவைப்படுகிறதோ, அவற்றில் ஆன்ட் ராயிடை ஏற்றம் செய்து இயக்க கூகுள் முயற்சி செய்யும். 

டெக் வரலாற்றில் இந்த வாரத்தை ஒரு மைல்கல் நிறுவப்பட்ட வாரமாக கருதலாம். அந்த மைல்கல் கடந்த 20 ஆண்டுகளாகக் கோலோச்சி வந்த கணினிகளின் காலங்கள் முடிந்து மொபைல் யுகங்கள் ஆரம்பித்தது. மைக்ரோ சாஃப்ட்டின் விண்டோஸ், ஆப்பிளின் மேக் இயங்கு மென்பொருள்கள் கடந்த 20 ஆண்டுகளில் கணினிகளில் ஆதிக்கம் செய்ததுபோல, இரண்டே இரண்டு மொபைல் மென்பொருள்களே அடுத்த பல ஆண்டுகளில் உயிருடன் இருக்கப்போகின்றன: அவை, ஆப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android.

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 19

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் நேரத்தில், ஆப்பிளின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் விலகிய செய்தி அனைவருக்கும் தெரிந்த பழைய தகவல் ஆகியிருக்கும். பொதுவாக, இதுபோன்ற அறிவிப்புகள் பங்குச் சந்தையை பலமாகப் பாதிக்கும் என்பதால், பங்குச் சந்தை மூடிய பின்னர் செய்யப்படும். அது போலவே புதன் கிழமை மாலையில் ஜாப்ஸின் விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2004-ல் இருந்தே அரிய வகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஜாப்ஸ், கடந்த இரண்டு வருடங்களாக மருத்துவ விடுப்பில் நீண்ட காலம் இருந்து வந்தார். ஸ்டீவ்வுடன் இணைந்து பல வருடங்கள் பணியாற்றிய குக், ஆப்பிளின் புதிய தலைமைச் செயல் அதிகாரி. சந்தை முடிந்த பின்னர் நடக்கும் பங்குப் பரிவர்த்தனைகளில் ஆப்பிளின் பங்கு மதிப்பு ஐந்து சதவிகிதமே குறைந்துஇருப்பது முதலீட்டாளர்கள் இந்த மாற்றத்தைப் பெரிதாகஎடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. டெக் உலகின் பிதாமகர்களாக 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வந்த மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸும், ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸும் தாம் நிறுவிய நிறுவனங்களின் தலைமைச் செயல் பொறுப்பில் இல்லாதது டெக் உலகின் இன்னொரு மைல் ஸ்டோன்.
சென்ற வாரத்தில் கூகுளைக் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இருக்கும் நிறுவனம் என்றேன். அப்படியானால், காமெடி பீஸ் யாராவது இருந்தாக வேண்டுமே. டெக் உலகின் சமீபத்திய காமெடி பீஸ் HP நிறுவனம். கூகுள், மோட்டரோலாவை வளைத்துப் போட்டுக்கொண்ட செய்தியில் ஐ.டி. இண்டஸ்ட்ரி மூழ்கி இருந்த வேளையில், அமைதியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது HP. சென்ற வருடம் Palm நிறுவனத்தை 1.2 பில்லியனுக்கு HP வாங்கியது. குறிப்பாக, அந்த நிறுவனத்தின் WebOS எனப்படும் குளிகை இயங்கு மென்பொருளுக்காகவே. இதை அடிப்படையாகவைத்து Touchpad என்ற குளிகையைத் தயாரித்து வெளியிட்டது. சென்ற மாதம் வெளியிடப்பட்ட இந்த குளிகை ஃப்ளாப். Best Buy பயனீட்டாளர் மின்பொருட்களைச் சில்லறை வணிகம் செய்வதில் பிரபலமான நிறுவனம். இந்த வாரத் தொடக்கத்தில், இந்தக் குளிகையை சுமார் இரண்டு லட்சம் வாங்கி ஸ்டாக் செய்தோம். இரண்டு மாதங்களாகியும் 20 ஆயிரம்கூட விற்கவில்லை என்று செய்தி கசியவிட்டது. WebOS மூலம் இயங்கும் சாதனங்கள் அனைத்தையும் நிறுத்திவிடப் போவதாக அறிவித்துள்ளது HP. அது மட்டும் அல்ல, 500 டாலர்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட இதை 100 டாலர்களுக்குக் கொடுக்கிறோம் என்று சென்ற வாரக் கடைசியில் அறிவித்தது. கூடவே, கணினித் தயாரிப்பில் இருந்து விலகிக்கொள்ளப்போகிறோம்; இந்தப் பிரிவை விற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறது HP. சரியாக 10 வருடங்களுக்கு முன்னால், கணினித் தயாரிப்பு நிறுவனமான Dell-க்குப் போட்டியாக இருக்க வேண்டும் என்பதால், 25 பில்லியன் டாலர்கள் கொடுத்து Compaq-ஐ வாங்கிய HP, இப்போது கணினித் தயாரிப்பையே நிறுத்திவிடப் போவதாகச் சொல்லியிருப்பது மொபைல் யுக விளைவு அல்லாமல் வேறு என்ன?

அது இருக்கட்டும். கலக்கிக்கொண்டு இருக்கும் கூகுள் ப்ளஸ் பற்றி கொஞ்சம் பார்க்கலாம் இந்த வாரம்.


Orkut, Wave, Buzz எனப் பல தோல்விகளுக்குப் பின்னர், ப்ளஸ் என்ற வெற்றித் தயாரிப்பை வழங்கியிருக்கிறது கூகுள். தேடல் (Search ), சமூகம் ( Social ) என்ற இரண்டையும் ஒன்றாகக் கலந்து Searchial என்ற புதிய வார்த்தை இப்போதெல்லாம் டெக் உலகில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறேன். காரணம், கூகுள் போன்ற தேடல் இயந்திரங்களுக்கு தங்களது பதில்களைப் பயனீட்டாளர்களுக்குப் பொருத்தமாகக் கொடுக்க அவர்களின் சமூக நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, குற்றாலம் சென்று வந்த புகைப்படங்களை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டுவிட்டு, சில மாதங்களில் தேடல் இயந்திரம் சென்று 'விடுமுறைக்கு எங்கே போகலாம்?’ என்று கேட்டால், பதிலுக்கு நீர்வீழ்ச்சி சார்ந்தஇடங்களைப்பற்றிய தகவல்களும், அங்கே தங்க வசதிகள் பற்றிய வலைதளங்களும் பதிலுக்கு வந்தால் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்தானே? சமூக வலையும், தேடலும் ஒரே நிறுவனத்திடம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஃபேஸ்புக்குக்கு முதலீடு செய்வதன் மூலம் இந்தத் தகவல்களை அவர்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூகுள் திட்டமிட்டதும், ஃபேஸ்புக் அந்த முதலீட்டை ஏற்றுக்கொள்ளாமல், மைக்ரோசாஃப்ட்டிடம் இருந்து முதலீட்டை வாங்கிக்கொண்டு, அவர்களின் பிங் தேடல் தளத்துக்குத் தகவலைக் கொடுப்பதும் பழைய கதை. வேறு வழி இல்லாமல், கூகுள் தொடங்கிய ப்ளஸ்ஸின் செயல்பாடு களை இப்போது ஃபேஸ்புக் காப்பி அடிக்க ஆரம்பித்திருப்பது புதிய செய்தி.

உங்களது சமூகத் தொடர்புகளை Family, Friends, Acceptances என்றெல்லாம் பல வட்டங்களாகப் பிரித்துக்கொள்ளும் ப்ளஸ்ஸின் Circles அமைப்பைப் பார்த்து ஃபேஸ்புக் இந்த வாரத்தில் அது போலவே உங்கள் நட்பு வட்டங்களை பயனீட்டாளர் கள் உருவாக்கிக்கொள்ளும் வசதி செய்ய முற்பட்டு இருக்கிறது.

இப்போதைக்கு வணிக நிறுவனங்களுக்கு ப்ளஸ் மூலம் நேரடியாக எந்தப் பயனும் இல்லை. நான் தனிப்பட்ட விதத்தில் இப்போதெல்லாம் அடிக்கடி பயன்படுத்தும் ப்ளஸ் வசதி Hangout. பலருடன் ஒரே நேரத்தில் வீடியோ சாட் செய்ய முடிகிற இந்த வசதி, வணிக நிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கூகுள் ப்ளஸ் பயன்படுத்த உங்களுக்கு அழைப்பு தேவை. வெளியிட்ட சில வாரங்களில், 'உங்களிடம் அழைப்புகள் இருந்தால், எனக்கு ஒன்றைக் கொடுங்களேன்’ என்று அந்த வாரக் கட்டுரையில் கேட்க, இரண்டு நாட்களுக்குள் 20 அழைப்புகள்.

கூகுள் ப்ளஸ் பயனீட்டாளரான என்னிடம் இப்போது 150 அழைப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு ஒன்று வேண்டுமா னால், http://www.facebook.com/anandavikatan ஃபேஸ்புக் பக்கத் தின் சுவரில் எழுதுங்கள். அனுப்பிவைக்கிறேன்!

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 17

அமேசான் நிறுவனம் சத்தம் இல்லாமல் சாதனை ஒன்றை இந்த வாரத்தில் செய்து இருக்கிறது. எந்தவித பிரமாண்ட அறிவிப்பு களும் செய்யாமல், ஆப்பிளுக்கு பெப்பே காட்டியதுதான் அந்தச் சாதனை. விரிவாகப் பார்க்கலாம்!

ஆப்பிளின் தொழில்நுட்பங்களை மிகவும் விரும்புபவர்களும் வெறுக்கும் ஒரு விஷயம் உண்டு. அது இந்த நிறுவனத் தின் மூடிய தன்மை. குறிப்பாக, ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் மென்பொருட்களை உருவாக்குபவர்களுக்கு இது மிகப் பெரிய தலைவலி கொடுக்கும் விஷயம். தயாரித்த மென் பொருளை அவர்களது Appstore கடையில் விற்பனைக்கு வைக்க, அவர்களது விதிமுறைகள் கிட்டத்தட்ட சர்வாதிகார பாணியில் இருப்பது தெரிய வரும். சில மாதங்களுக்கு முன்னால், இந்த சர்வாதிகாரத் தோரணையில் பதிப்பு நிறுவனங்களுக்குப் புதிய விதிமுறை கொண்டுவந்தது ஆப்பிள். அதன்படி, பதிப்பாளர்களின் மென்பொருளில் இருந்து நேரடியாக சந்தா வசூலிக்கக் கூடாது. மாறாக, ஆப்பிள் சந்தா வசூலிக்கும். அதில் 30 சதவிகிதத்தை வைத்துக்கொண்டு, மீதியைப் பதிப்பாளருக்குக் கொடுக்கும். அதிர்ச்சியும் எரிச்சலுமாகப் பதிப்பாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, பிரபல Financial Times செய்தி நிறுவனம் தனது எதிர்ப்பை ஆப்பிள் புரிந்துகொள்ளும் பாணியில் தெரிவித்தது. 'ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் பிரத்யேக (Proprietary) மென்பொருள்களை நாங்கள் இனிமேல் தயாரிக்கப்போவது இல்லை. மாறாக, இணையத்தில் இணைக்கக் கூடிய மொபைல் சாதனங்களில் வலைதளமாகவே நாங்கள் எங்களது சந்தாதாரர்களுக்கு எங்களது செய்தித்தாளைக் கொடுக்கப் போகிறோம்!’ என்பதுதான் அந்த அறிவிப்பு. கலங்கிப்போன ஆப்பிள், சில வாரங்களில் மேற்கண்ட இந்த விதிமுறையை நீக்கிவிட்டாலும், இந்தச் சம்பவத்தின் கசப்புச் சுவை மின் பதிப்பாளர்களின் வாயில் தொடர்ந்து இருந்தபடியேதான் இருந்தது. இப்படி எல்லாம் விதிமுறைகளைக் கொண்டுவர முயற்சி செய்யும் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் மட்டுமே இயங்கக்கூடிய விதத்தில் மென்பொருள் தயாரிக்க, மெனக் கெடத்தான் வேண்டுமா? என்பது ஐ.டி. இண்டஸ்ட்ரியில் பெரிதாக எழுந்த கேள்வி. பலரும் பலவித கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்த வேளையில், உலகிலேயே மிகப் பெரிய மின் பதிப்பாளராக இருக்கும் அமேசான் இதைப்பற்றிய கருத்து எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், அமைதியாக, Cloud Reader என்ற தொழில்நுட்பத் தில் கடுமையான உழைப்பைச் செலுத்தி இருப்பது இப்போது தெரிய வருகிறது!


ஆப்பிளின் ஐ-போன், ஐ-பேட் உட்பட எந்த 'ஸ்மார்ட்’ மொபைல் சாதனத்தில் இருக்கும் browser-ஐப் பயன்படுத்தி https://read.amazon.com/ வலைதளத்துக்குச் சென்றால் போதும். அமேசானின் மின் பதிப்புகளைப் படிக்க முடியும். பொதுவாக, browser பயன்படுத்திச் செல்லும் வலைதளங்களின் மிகப் பெரிய குறைபாடு, இணையத்தில் இணைக் கப்பட்டு இருந்தால் மட்டுமே வலை தளத்தைப் பார்க்க முடியும். இந்தக் குறைபாட்டை நேர்த்தியாகச் சரி செய்து இருக்கிறது, அமேசான். தேவைப்படும் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்ய மட்டுமே இணைய இணைப்பு தேவை. அதன் பின்னர், அந்தப் புத்தகத்தைப் படிக்க இணையம் தேவை இல்லை. இதைச் சாத்தியமாக்க முடிந்த HTML 5 தொழில் நுட்பம் வெகு விரைவில் பல்லாயிரக் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவது நிச்சயம்.

சென்ற வாரக் கட்டுரையில், இ-மெயில் தொழில்நுட்பத்தில் இருக்கும் spam பிரச்னைக்கு கூகுளின் ஜி-மெயிலில் தீர்வு இருக்கிறது என்று சொன்னேன். அதைப் பார்க்கலாம்!

உங்களது முகவரி nallavan@gmail.com என்று வைத்துக்கொள்ளலாம். இந்த முகவரியில் இருக்கும் nallavan என்ற பெயருடன் ஐ இணைத்து வார்த்தை ஏதாவது இணைத்துக்கொண்டால் போதும்... அடுத்த முகவரி ரெடி. உதாரணத்துக்கு, வெள்ளை மாளிகை வலைதளத்தில் உங்களது முகவரியைக் கொடுக்கும்போது nallavan+ white house @gmail.com என்று கொடுக்கலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி எத்தனை புதிய இ-மெயில் முகவரிகளையும் ஆரம்பித்துக்கொள்ளலாம். ஆனால், இந்த முகவரிகளுக்கு அனுப்பப்படும் மெயில்கள் உங்களது ஜி-மெயில் முகவரியில்தான் வந்துசேரும். தேவை இல்லாத spam மெயில்கள் உங்களுக்கு வரும்போது, அவை எந்த முகவரிக்கு அனுப்பப்படுகின்றன என்பதைப் பார்க்க முடியும். இப்படி உருவாக்கப்பட்ட முகவரி எதற்கா வது spam வந்தால், அதை ஜி-மெயிலில் spam என்று குறித்துவைத்துக்கொள்ளலாம். அந்த நேரத்தில் இருந்து, குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்படும் மெயில்கள் அனைத்தும் Junk கோப்புக்கு அனுப்பப் பட்டுவிடும்.

இ-மெயில் spam பிரச்னையை வெற்றி கரமாக மேற்கொள்ள டிப்ஸ் ஏதாவது இருந்தால், விகடனின் ஃபேஸ்புக் பக்கத்தில் (http://www.facebook.com/vikatanweb) எழுதுங் களேன்.

நம் ஊரில் கல்லூரி முடித்த மாணவர் கள், பல நிறுவனங்களின் வலைதளங்களில் இ-மெயில்களை எடுத்து வேலைக்கான spam முறையில் விண்ணப்பம் அனுப்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் என்றார் கோவை டெக் நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருக்கும், சூரியா ராம்பிரசாத்.

அவர்களுக்கான நீதி போதனை: முதல் கோணல், முற்றிலும் கோணல்! நீங்கள் வேலை பார்க்க விரும்பும் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு நீங்கள் ஏன் பொருத்தமானவர் என்பதை எழுதி அனுப்புவது முக்கியம். இப்படி பொத்தாம்பொதுவாக spam பாணி மெயில் அனுப்புதல் நல்லது அல்ல. சமீபத்தில் பதிவுலகின் கவனத்தை ஈர்த்து இருக்கும் மேத்யூ எப்ஸ்டீன் செய்தது இது. அவருக்கு கூகுள் நிறுவனத் தில் சேர மிக விருப்பம். அதற்காக வலை தளம் ஒன்றையே உருவாக்கி, ஜேம்ஸ் பாண்ட் பாணியில் உடை அணிந்து, இன்ன பிற குரங்குச் சேட்டைகள் செய்து வீடியோ எடுத்து, கலக்கி இருக்கிறார்.

சொடுக்குங்கள் http://googlepleasehire.me/

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 16

சென்ற வாரம் தனிப்பட்ட முறையில் எனக்கு அதி சிறப்பானது. விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் பயிற்சி முகாமுக்கு என்னைப் பேச அழைத்தனர். சில பல வருடங்களுக்கு முன், இதே பயிற்சித் திட்டத்தில் மாணவனாக இருந்தவன் நான். பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவப் பத்திரிகையாளர் கள்போலவே, என் திட்டக் காலத்தில் சிறப்புரைகளுக்கு வந்திருந்த பிரமுகர்களிடமும் நிபுணர்களிடமும் குறுகுறு பார்வையுடன் பல கேள்விகளைக் கேட்ட நினைவு இருக்கிறது. வருடங்கள் பல கடந்த பின்னர், அதேபோன்ற கேள்விகள் நம்மிடம் கேட்கப்படும்போது, அவற்றுக்குப் பதில் சொல்வது எளிது அல்ல என்ற உண்மை புலப்பட்டது. நான் மாணவப் பத்திரிகையாளனாக இருந்தபோது, பெரும்பாலும் பயன்படுத்தியது சைக்கிள். கட்டுரையை பேப்பரில் எழுதி, கூரியரில் அனுப்ப வேண்டும். இந்த வருடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் 56 புதிய பத்திரிகையாளர்களிடம் எனது பேச்சின்போது, தொழில் நுட்பப் பயனீடுபற்றிச் சில கேள்விகள் கேட்டேன்.

அனைவரிடமும் அலைபேசி இருக்கிறது. ஓரிருவர் தவிர, எல்லோரிடமும் மின் அஞ்சல் முகவரி உண்டு. 75 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள்.
இது இணையப் பயனீட்டாளர்களின் ஒரு குறுக்குவெட்டு சாம்ப்ளிங் என்று சொல்லலாம். இவர்களில் சிலர், சில வருடங்களுக்குப் பின்னர் என்னைப்போலவே பேச அழைக்கப்படலாம். அப்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி என்னவாகும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

அது இருக்கட்டும்... டெக் உலகில் சமீபத்தில் வெளிவந்து கலக்கிக்கொண்டு இருக்கும் தளங்கள், சேவைகள், சாதனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

'கடைசி நேரத் தேவைகள்’ என்பது நல்ல லாபம் ஈட்ட முடிகிற சந்தை. ஏர்லைன் நிறுவனங்கள் கடைசி நிமிடங்களில் மலிவான விலையில் பிசினஸ் கிளாஸுக்கு upgrade செய்யத் தூண்டுவதை சர்வதேசப் பயணங்களில் சாதாரணமாகப் பார்க்கலாம். காலியாகப் போகும் இருக்கைகளை, குறைவான விலையில் விற்றால் லாபம்தானே!

இதேபோல், கடைசி நேரத் தேவைகள் பலவற்றைச் சந்திக்கும் சந்தை, இணையம் வரும் முன்னர் சிறிய அளவில்தான் இருந்தது. காரணம், கடைசி நேரத் தேவையைச் சந்திக்க முடியுமா என்பதை, நீங்கள் நேரிலோ, ஏஜென்ட் ஒருவர் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இணையம் வந்த பின்னர் இந்தச் சந்தை மிகப் பெரிதாக விரிவடைந்தது. கடைசி நேரப் பயண டிக்கெட்டுகளையும், வாடகை கார்களையும், ஹோட்டல் ரூம்களையும் வாங்கித் தரும் சேவைகள் அறிமுகமாகின. இதன் அடுத்தகட்ட வளர்ச்சி, மொபைல் சார்ந்த சேவைகள். குறிப்பாக, அடிக்கடி பயணிப்பவர்கள் தங்குவதற்கான ஹோட்டல் ரூம் வசதி. திடீரெனப் பயணம் செய்யும் அவசியம் வரும்போது, தங்க இடம் கிடைக்காமல் அவதிப்படு வது உண்டு. இதைக் கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டு இருக்கும் முதல் சேவை Hotel Tonight என்ற மொபைல் மென்பொருள். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பதிவிறக்கி இயக்க முடிகிற இந்த மென்பொருள், Location Based Services எனப்படும் இடம் சார்ந்த சேவையை மிக அழகாகப் பயன்படுத்துகிறது. நீங்கள் கோவைக்கு அவசரமாகச் செல்ல வேண்டி இருக்கிறது. ரயிலில் சென்று சேர்கிறீர்கள். ரயில் நிலையத்துக்கு வெளியே வந்து, அலைபேசியை எடுத்து, மென்பொருளை இயக்கி, ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களின் விவரங்களை யும், அதன் வாடகையையும், அதில் ஏற்கெனவே தங்கியிருந்தவர்களின் பின்னூட் டங்களையும் படித்து, அலைபேசியில் இருந்தே அறையை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்றால், எப்படி இருக்கும்? அதைத்தான் Hotel Tonight மென் பொருள் செய்கிறது. சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு மட்டுமே இருந்த Hotel Tonight இப்போது அமெரிக்காவின் பல நகரங்களிலும் இயங்குகிறது. 'கடைசி நேரத் தேவை’ ஏரியாவில் தொடர்ந்து பல புதுமையான சேவைகள் விரைவில் வரும் என நம்புகிறேன். தொழில் முனையும் ஆர்வம் உள்ளவர்கள், இந்தியாவில் இது போன்ற சேவைகளை வெளியிட முன்வரலாம். நிச்சயம், வரவேற்பு சிறப்பாக இருக்கும்!

சின்ன விஷயங்களில் புதுமையைப் புகுத்தி அதை talk of the town ஆக மாற்றிவிடலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணம்: ஐவாட்ச் ( http://www. iwatchz.com/ ). ஐ-பாட் நானோ என்பது ஆப்பிள் ஐ-பாட் குடும்பத்தின் ஓர் உறுப்பினர். சதுர வடிவில் இருக்கும் இந்த இசைப் பேழை சாதனத்தில், மிகவும் அடிப்படையான மென்பொருட்கள் சிலவும் உண்டு. உதாரணத்துக்கு, புகைப்படங்களைச் சேமித்துப் பார்க்க முடிகிற வசதி. கடிகார மென்பொருளும் உண்டு. அந்த மென்பொருளை இயக்கினால், ஐ-பாட் நானோ பார்ப்பதற்கே கைக்கடிகாரம்போல் இருக்கும் என்பதைப் பார்த்து அதற்கு strap ஒன்றைச் செய்திருக்கிறது இந்த நிறுவனம். இதை வாங்கி, ஐ-பாட் நானோவை அதில் செருகினால் போதும், கைக்கடிகாரம் தயார்!

இதில் இருக்கும் மற்றொரு மென்பொருள் Pedometer. இதை இயக்கி நடக்க ஆரம்பித்தால், எத்தனை அடிகள் நடந்து இருக்கிறீர்கள் என்பதைக் கணக்கிட்டபடியே வரும். நானோவை கணினியில் இணைத்து உங்களது நடைத் தகவலை www.nikeplus.com என்ற தளத்துக்குப் பதிவேற்றம் செய்து, உங்களது நண்பர்களுடன் 'யார் அதிகம் நடந்தது’ என்று போட்டி போடலாம்.

இன்னும் சில மாதங்களில் iCloud வந்து விடும். அதன் பின்னர், கணினியில்

இணைத்து நடை மற்றும் ஓட்டம்பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யும் அவசியம் இருக்காது. உங்களது ஒரு நண்பர் மெரினா பீச்சிலும், மற்றவர் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரிலும், நீங்கள் சிங்கப்பூரிலுமாக இருந்துகொண்டு நடை / ஓட்டப் போட்டி நடத்தலாம்!

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 16

சென்ற சில வாரங்களாக இந்தியாவுக்குள் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்துக்கொண்டு இருந்ததால், பயணத்தின்போது படிப்பதற்கு எனச் சில புத்தகங்கள் வாங்கினேன். (தமிழ்ப் புத்தகங்கள் எல்லாம் கிண்டில் போன்ற மின் படிப்பான்களில் படிக்க எப்போது கிடைக்கும்?) 90-களின் இறுதியில் 'விகடன் பேப்பர்’ தினசரியில் 'சுஜாதாட்ஸ்’ என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய பத்திகளின் தொகுப்பைப் படித்தேன். அவரது பெரும்பாலான டெக் கணிப்புகள் இப்போது நிகழ்வுக்கு வந்திருப்பது உண்மை என்றாலும், கம்பி வழி இணைப்பே இணையத்தை பிரமாண்டமாக்கப்போகிறது என்ற அவரது நம்பிக்கையை Y2K காலகட்டத்துக்குப் பின்னர் நடந்த உலகமயமாக்கல் நிகழ்வுகள் தகர்த்து இருப்பது தெரிகிறது. குறிப்பாக, அலை பேசித் தொழில்நுட்பம் இத்தனை பிரமாண்டமாகும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. அழகிய பல தமிழ் கலைச் சொற் கள் இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல்லூடகம் (Multimedia), மின்னம்பலம் (Cyberspace) போன்ற வார்த்தைகள் படிக்க இனிமை.

என்னைக் கவர்ந்த மற்றொரு வார்த்தை, 'இடையீடு’. Disruption என்பதன் தமிழாக்கமான இந்த வார்த்தை தொழில்நுட்பம் படிக்கும், தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. புதிதாக வெளியிடப்படும் ஒரு பொருள் அல்லது தொழில், இப்போது புழக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒன்றை அடியோடு வேர் அறுக்குமானால், அதை இடையீடு செய்வதாகச் சொல்லலாம்.

உதாரணத்துக்கு,

கேசட் டேப் > சி.டி. தகடு

தந்தி > தொலைபேசி

என்று பலவற்றைச் சொல்லலாம்.

இணைய தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்னர் தோன்றிவிட்ட

இ-மெயில் தொழில்நுட்பம், குறுஞ்செய்தி, ட்விட்டர் எனப் பல வந்துவிட்டாலும், இடையீடு இல்லாமல் இன்னும் பல வருடங்கள் வாழும் எனத் தோன்றுகிறது. பிரபலமான குருப்பானில் தொடங்கி, பல வலைதளங்களில் நுழையவே இ-மெயில் முகவரியைக் கொடுக்க வேண்டும். உங்க ளுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருப் பதற்கு இ-மெயில்தான் தேவை என்ற நிலைதான் இதற்குக் காரணம். ஏன், அமெரிக்க வெள்ளை மாளிகையின் வலைதளமான http://www.whitehouse.gov/ சென்றால், அதிபரிடம் இருந்து தொடர்ந்து செய்திகள் பெற்றுக்கொள்ள உங்கள் இ-மெயில் முகவரி கொடுங்கள் என்கிறது முதல் பக்கம். கொடுக்காமலும் செல்லலாம். ஆனால், அவ்வப்போது 'இ-மெயில் கொடு’ எனக் கேட்டபடி இருக்கும் இந்தத் தளம்!

இ-மெயில் முகவரிகளைக் கொடுப்பதில் பயனீட்டாளர்களுக்கு வரும் மிகப் பெரிய தலைவலி spam. நம் அனுமதி இல்லாமல் நமக்கு அனுப்பப்படும் மின் குப்பைக் கூளங்களான இந்த மெயில்களைக் கட்டுப்படுத்த, அரசாங்க ஆட்சியாளர்கள் தொடங்கி இணைய இணைப்புகள் கொடுக்கும் ISPக்கள் வரை படாதபாடு இல்லை. ஆனாலும், spam மெயில்களின் எண்ணிக்கை குறையவில்லை. spam அனுப்பும் spammer களின் நோக்கம் அதீத அளவில் இ-மெயில் முகவரிகளைச் சேகரித்து, அவை அனைத்துக்கும் இ-மெயில் அனுப்பினால், சிலராவது பார்க்க மாட்டார்களா என்பது தான். இவர்கள் இ-மெயில் முகவரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு இ-மெயில் அறுவடை ( Email Harvesting ) என்ற பெயர் உண்டு.

சில பிரபலமான அறுவடை டெக்னிக்குகள்: வலைதளங்களை மேய்ந்து அதில் இ-மெயில்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை நோட்டமிடும் bot களை எழுதுவது மிகச் சுலபம். கூகுள் போன்ற தேடல் தளங்கள் வலைதள விவரங்களைத் தெரிந்துகொண்டு, தொகுப்பதற்கு (indexing) இப்படிப்பட்ட botகளைப் பயன்படுத்துவதால், வலைதளங்கள் bot தங்களது தளத்தில் உலவ அனுமதிப்பது உண்டு. இதைத் தவறாகப் பயன்படுத்தி இ-மெயில் அறுவடை செய்வது spammerகளின் முக்கியப் பணிகளில் ஒன்று.

நீதி போதனை: யார் வேண்டுமானாலும் படிக்க முடிகிற வலைதளங்களில் இ-மெயில் முகவரிகளைக் கொடுக்காதீர்கள்.

நண்பர்கள் பலருக்குப் பொதுவான இ-மெயில் அனுப்பும்போது, அவர்களின் முகவரிகளை To பகுதியிலோ அல்லது CC பகுதியிலோ எழுதுகிறீர்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது என்றாலும், அவர்கள் முகவரிகள் அனைவரும் பார்க்கும்படியாகத் தெரிகிறது.

அதில் யாராவது ஒருவர் குறிப்பிட்ட இ-மெயிலை வேறு சிலருக்கு forward செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தெரிந்தோ, தெரியாமலோ spammer ஒருவர் கையில் அவை கிடைத்தால் போதும். அத்தனை இ- மெயில் முகவரிகளுக்கும் வயாகரா மெயில்கள் வரத் தொடங்கும்.

நீதி போதனை: பலருக் கும் பொதுவான இ-மெயில் அனுப்பும்போது அவர் களது முகவரிகளை BCC பகுதியில் எழுதுங்கள்.

தெரியாத வலைதளங்களில் பொதுவாக, உங்களது இ-மெயில்களைக் கொடுப் பது நல்ல ஐடியா இல்லை. ஆனால், பல வலைதளங் களைப் பயன்படுத்தவே இ-மெயில் தேவை என்ப தால், இது சாத்தியம் அல்ல.

முதன்மையாகப் பயன் படுத்தும் இ-மெயிலைக் கொடுக்காமல், இது போன்ற தளங்களில் பயன்படுத்துவதற்கு என்றே சில எக்ஸ்ட்ரா இ-மெயில் முகவரிகளைப் பலர் பயன் படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். இதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் பிராக்டிகலாக உதவாது. ஒரு இ-மெயிலுக்குப் பதிலாக பலவற்றைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்து தலைவலியாகவே முடியும். கூகுளின் ஜி-மெயில் இதற்கு ஸ்மார்ட்டான தீர்வு ஒன்றைக் கொடுக்கிறது.

என்ன அது? பார்க்கலாம்.

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 14

வருங்காலத் தொழில்நுட்பம் 85 : ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டி

சில வாரங்களுக்கு முன் அமேசான் iCloud Drive சேவையை வெளியிட்டபோதே, அவர்கள் குளிகைக் கணினியைத் தயாரித்துக்கொண்டு இருக்கலாம் என்பதை யூகித்தேன். குளிகை தயாரிக்கும் திட்டம் பற்றி வாய் திறக்காமல் இருந்த அமேசான், இன்னும் சில மாதங்களில் குளிகை வெளி யிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும் என்று பரவலாகப் பேசப் பட்டாலும், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம்?

முக்கியமாக, விலை! இந்தக் குளிகையை ஐ-பேடைவிடக் குறைவான விலையில் விற்றாக வேண்டும். கணிசமாகக் குறைவான விலை. (அற்புதமாக இருந்த மோட்டரோலாவின் Xoom குளிகை பயங்கரத் தோல்வியைச் சந்தித்ததற்கு மிக முக்கியக் காரணம், விலைதான்!) விலை குறைத்து விற்பது என்பது அமேசானுக்குப் பழக்க மான மாடல்தான். அவர்களது கிண்டில் சாதனத்தை நஷ்டத்துக்கு விற்பது என்பது அவர்களது பிசினஸ் பிளான். மின் புத்தகம் மற்றும் பத்திரிகைகள் போன்ற digital content சமாசாரங்களை கிண்டில் பயனீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம் சாதன விற்பனை நஷ்டத்தை ஈடு செய்து விடலாம் என்ற திட்டம் சிறப்பாகவே நிறைவேறியதைச் சென்ற இரண்டு ஆண்டு களில் பார்த்தோம். இதற்கு மாறான திட்டம், ஆப்பிளுடையது. சாதனங்களை விற்பதற்காக, digital content ஐ இலவச மாகவோ, அல்லது அடிமாட்டு விலைக்கோ கொடுப்பது அவர்களது திட்டம். இதுவும் பிரமாண்ட வெற்றியைக் கொடுப் பதை நான் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை!

கிண்டில்போல மின் படிப்பானாக மட்டுமே இந்தக் குளிகை இருக்காது. கூகுளின் ஆன்ட்ராய்டில் இயங்கும் இந்தக் குளிகையில் மென்பொருள்களைப் பதிவேற்றிக்கொள்ளலாம். இது மடிக்கணினிக்கு நிகரானதாக இருக்கும் என்கிறது அமேசான். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும்.

குளிகை விற்க இலவச content என்பது ஒரு புறமும் content விற்க விலை குறைந்த குளிகை என்பது மறு புறமும் இருந்தால், அமேசானின் மாடல் வெற்றியடைய வாய்ப்புகள் குறைவு என்றே எனக்குத் தோன்றுகிறது. இதைச் சமாளிக்க ஒரே வழி, விலையைக் கூட்டுவது. அப்படிச் செய்தால், Xoomன் கதி அமேசான் குளிகைக் கும் ஏற்படலாம். தான் எடுத்த முயற்சிகளில் போராடி வெற்றி பெறும் வரலாறு அமேசானுக்கு உண்டு. மேகக்கணினியத் தொழில்நுட்பத்தில், ஆப்பிள், கூகுள் போன்ற ஜாம்பவான்கள் நுழையும் முன்னரே, அழுத்தமாகத் தனது பெயரைப் பதித்து, தொடர்ந்து வளர்ந்து வருகிறது இந்தப் 'பழைய’ இணைய நிறுவனம். குளிகைத் துறையில் என்ன/எப்படி செய்யப்போகிறது என்பதை அக்டோபர் மாதவாக்கில் தெரிந்துகொள்ளலாம்.

'வருங்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பை நீங்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை அண்டன். எப்போது பார்த்தாலும் சமூக ஊடகம்பற்றித்தான் எழுதுகிறீர்கள்!’ என்று விகடன் டாட்காமில் அக்கறையுடன் கேட்ட பாலசுப்ரமணியும், அவரது பின்னூட்டத்தை 'Like’ செய்த மற்ற மூன்று வாசகர்களும், அவரது கருத்துக்கு ஆதரித் தும்/எதிர்த்தும் பின்னூட்டம் இட்ட மற்ற பலரும் சமூக ஊடகத்தின் வலிமையைப் பயன்படுத்தி இருப்பது நல்ல நகைமுரண். ஒரு கட்டுரைபற்றி அதைப் படிக்கும் பலருடன் உரையா டலில் ஈடுபடும் 'Engagement’ சமூக ஊடகத்தின் மிக முக்கிய வலிமைகளில் ஒன்று. இது இல்லை என்றால், 'Dear Editor, In an otherwise well-written article,...’ என்று போஸ்ட் கார்டில் எழுதி அடுத்த வாரம் அது பிரசுரம்ஆகிறதா என்பதைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.

அதெல்லாம் சரிதான். ஆனால், சமூக ஊடகத் தொழில்நுட்பம் எதிர்காலத்துக்கு அத்தனை முக்கியமானதா என்றால், 'நிச்சயமாக யுவர் ஹானர்!’ என்று சொல்வேன்.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் இணையத்தில் இயங்குகிறார்கள். அதில் முக்கால்வாசி ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்கள் அத்தனை முக்கியம் இல்லை. காரணம், பொருளாதாரம் பயின்றவர்களுக்கு, 'Law of diminishing returns’ என்ற விதி நன்றாகத் தெரிந்திருக்கும். முதலீட்டு எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்குத் தகுந்தபடி விளைவு அதிகரிப்பது இல்லை. அதற்கு மாறாக, குறையத் தொடங்கும் என்பதுதான் இந்த விதியின் சாராம்சம். தெளிவாகத் தெரிந்துகொள்ள, இந்த விதிபற்றிய விக்கி உரலியைச் சொடுக்குங்கள் http://en.wikipedia.org/wiki/Diminishing_returns. சமூக ஊடகத்தில் அதிக அளவில் பயனீட்டாளர்கள் இணை யும்போதும், இதே விதியின்விளைவு நிகழும் என்பது உறுதி.

அதே வேளையில், டெக் உலகின் ட்ரெண்டுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெளிவாகப் புலப்படும். எந்த ஏரியாவில் (முக்கிய மாக கவனிக்கவும்... எந்த நிறுவனத் தில் அல்ல! எந்த ஏரியாவில்) தொழில் முதலீடு அதிக அளவில் செய்யப் படுகிறதோ, அந்த ஏரியாவில் ஆராய்ச்சிகளுக்காக அதிகம் செலவழிக்கப்படும். அதிகமானவை தோல்வியில் முடிந்தாலும், புதிய முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும். 90-களில் ஈகாமர்ஸ் ஏரியாவுக்கு தண்ணீராய் அனுப்பப்பட்ட தொழில் முதலீட்டுப் பணம் தான், ஈபே, அமேசான் போன்ற பிரமாண்ட நிறுவனங்களை நிறுவவும், அவை வணிகம் என்பதன் அடிப்படை யையே மாற்றவும் பயன்பட்டது.

வீடியோ ஏரியாவில் செலுத்தப்பட்ட முதலீடு YouTube, BrightCode போன்ற நிறுவனங்களும் அவற்றின் தொழில்நுட்பங்கள் பயனீட்டாளர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தது!

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சமூக ஊடகத் தொழில்நுட்பங்களுக்காகச் செலுத்தப்பட்டு இருக்கும் தொழில் முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள்.

I rest my case, your honour!

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 15

வருங்காலத் தொழில்நுட்பம் 86 : புதுமை செய்யும் ஆற்றலுக்குரிய ஐந்து திறமைகள் என்ன?

இன்னொரு புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. தொழில்நுட்பப் படிப்புகளின் மீதுள்ள ஆர்வம் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்தியா வில் இருக்கையில், தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் சேரப்போகும் சோனேஷின் பெற்றோர்கள் இருவரும் டாக்டர்கள் என்றாலும், சோனேஷின் விருப்பம் தொழில்நுட்பம். கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கும் ரோஷனின் அப்பா பஸ் கண்டக்டர், அம்மா ஆரம்பப் பள்ளி ஆசிரியை. ஒவ்வொருவருக்கும் பலவிதக் கனவுகள். 10 வருடங்களுக்கு முன் தொழில்நுட்பம் கற்றால் ஏதோ ஒரு நிறுவனத்தில் வசதியாக வேலை கிடைக்கும் என்பது மட்டுமே உந்துகோலாக இருந்தது. இணையமும், அலைபேசித் தொழில்நுட்பங்களும், மாறி வரும் உலகச் சூழலும் தொழில்முனைதல் (entre preneurism) மற்றும் புதுமை செய்தல் (inno vation) போன்றவை அத்தனை கடினம் அல்ல என்ற நிலையைக் கொண்டுவருவது தெளிவாகப் பார்க்க முடிகிறது.
அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் (Apple) போலவோ, லேரி பேஜ் (Google) போலவோ மார்க் ஸக்கர்பெர்க் (Facebook) போலவோ வருவதற்கான வாய்ப்புகள் என்ன?

வெற்றிகரமான Innovator ஆவதற்குப் பிறப்பிலேயே திறமை இருக்க வேண்டுமா? அதெல்லாம் தேவை இல்லை என்கிறார்கள் 'The innovators DNA: Mastering the five skills of disruptive innovators’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள். பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் (Problem Solving Skills), தீவிரப் பயிற்சியோடு (Practice) இணையும்போது புதுமை செய்யும் ஆற்றல் வந்துவிடுகிறது. இதற்கு ஜீன்ஸ் தேவை இல்லை என்பதுதான் புத்தகத்தின் அடிப்படை.

அந்த ஐந்து திறமைகள் என்ன? பார்க்கலாம்.

கேள்வி கேட்டுக்கொண்டே கேளுங்கள்!

குறிப்பாக, 'What if’ வகை கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருங்கள். பயனீட்டா ளர்கள் உங்களது பொருளுக்குக் குறைந்த விலையே கொடுக்கத் தயாராக இருந்தால், அதை எப்படி வடிவமைப்பீர்கள்? அவர் களுக்குப் பணம் ஒரு பொருட்டாகஇல்லை என்றால், உங்கள் வடிவமைப்பு எப்படி மாறும்? நீங்கள் உங்கள் பொருளை/தீர்வை வெளியிடும் முன், இன்னொரு போட்டி யாளர் வெளியிட்டால் என்ன செய்வீர்கள்? என்ற ரீதியில் கேட்டுக்கொண்டே இருங்கள். மற்றவர்களிடம் அல்ல... உங்களிடம் நீங்களே!

மற்றவர்கள் பார்க்காதவற்றை உற்று நோக்குங்கள்!

இருக்கும் இடங்களில் உள்ளவற்றை வெறுமனே பார்க்காதீர்கள் அவற்றை உற்றுநோக்கி, உள்வாங்கிக்கொண்டு மனதில் அலசுங்கள். இந்தத் திறனை வளர்க்க அடிக்கடி புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது உதவும். தெரியாத புதிய இடங்களுக்குச் செல்லும்போது, அங்கு இருப்பவர்கள் அந்தச் சூழலைப் பார்ப்பதைவிட, நீங்கள் கூர்மையாக உற்றுநோக்குவீர்கள். நாளடைவில், அது உள்ளார்ந்த திறனாகவே மாறிவிடும்!

சரியான நட்பு வட்டத்தில் ஈடுபடுங்கள்!

பொதுவாக, மக்களின் மனோநிலை அவர்களைப் போன்றவர்களுடன் நட்பு வட்டத்தில் இணைவதுதான்- Birds of the same feather fly together - ஆனால், புதுமை செய்ய விரும்பும் தொழில்முனைவோர், தமது சமூக வட்டத்தைத் தாண்டி புதிய network ஐ வளர்த்துக்கொள்வது மிகமிக அவசியம். அப்போதுதான் உங்களது எண்ணங்கள் விசாலமாகும். அது புதுமைக்கு இழுத்துச் செல்லும்!

பரிசோதனை மூலம் கற்றுக்கொள்ள பயப்பட வேண்டாம்!

விர்ஜின் நிறுவனத்தின் ரிச்சர்ட் ப்ரான்சன் இதற்கு நல்ல உதாரணம். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத, கிட்டத்தட்ட 300 நிறுவனங்களை நடத்துகிறார் இவர். என்ன துறையில் பிசினஸ் தொடங்க வேண்டும் என்றாலும், இவர் தயார். லாபமாக நடந்தால் தொடர்ந்து நடத்துவார். நஷ்டம் அடைந்தால், மூடிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்.

இந்த நான்கு திறமைகளையும் பயிற்சி செய்தபடியே இருந்தால், ஐந்தாவது தானாகவே வந்துவிடும். அது...

Associational Thinking!

சம்பந்தம் இல்லாத பல பிரச்னைகளை யும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஐடியாக் களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்க முடிகிற திறன் என்று இதைச் சொல்லலாம். வெற்றிகரமாகப் புதுமைகளைச் செயல் படுத்தும் தொழில்முனைபவர்களிடம் இந்தத் திறன் இருப்பது தெரியவரும் என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

'சிங்களத் தீவினுக்கோர்
பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி
வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும்
நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்
செய்குவோம்!’

என்றெல்லாம் பிரமாண்ட கட்டுமானத் தொழில்நுட்பக் கனவுகளை மட்டுமே ஒரு காலத்தில் காண முடிந்தது. இந்தியா போன்ற வளரும் பொருளாதாரச் சமூகத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். ஒவ்வொரு பிரச்னையின் தீர்வும் புதுமை செய்வதற்கான வாய்ப்பு. இந்தக் கட்டுரையின் தாக்கத்தினால் 'யாரிடமாவது வேலைக்குப் போவதைவிட, கம்பெனி ஒன்று தொடங்கப் போகிறேன்!’ என்று ஒரு மாணவராவது முடிவு செய்தால், அதை இந்தக் கட்டுரைத் தொடரின் மிகப் பெரிய வெற்றியாகக் கருதுவேன்!