Friday, October 21, 2011

பெற்றோர்கள் நிச்சயம் மாற வேண்டும்..

சொந்தங்களை விடவும் காதலை விடவும் நட்புதான் சிறந்தது என்பது உண்மையாக இருந்தால்...........
சொந்தத்தை நட்பாக்கி காதலித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா........

உங்களுக்கு சொந்தமான உங்கள் உங்கள் வாழ்க்கை துணையை நல்ல நன்பனாக (அல்லது) நன்பியாக நினைத்து......
உங்களின் அனைத்து செயல்களையும் ஒளிவு மறைவின்றி அவர்களுடன் பகிர்ந்து கொண்டு
அது போல் நல்ல காதலன் (அல்லது)காதலியாக நினைத்து அன்புசெலுத்தி வாழ்ந்து பாருங்கள்.....
நிச்சயம் இதை விடவும் பெரிதாக ஒரு மனிதன் இந்த உலகில் பெறும் மகிழ்ச்சி இருக்கவே முடியாது.............
அனைத்து செயல்களையும் ஒளிவு மறைவின்றி வாழ்க்கை துணைவியுடன் பகிர்ந்து கொண்டால், அடுத்த விநாடியிலிருந்து பெரும் எதிரியாக மாறிவிடுவார்கள்

பகிர்ந்து கொள்ளும் அளவிர்க்கு நாம் வாழ்ந்தால்!!!!!! ஏன் பகிர்ந்து கொள்ள முடியாது.........
அப்படி முடியாவிட்டால் அதர்க்கு பெயர் காதலோ...... பாசமோ.....நட்போ கிடையாது நிச்சயம் நடிப்புதான்.......
95% நபர்களும் இந்த முகமூடி வாழ்க்கையைதான் விட்டுக்கொடுத்தல் என்ற பெயரில் வாழ்கிறாற்கள்..

நாம் ஒரு வரைமுறையை அமைத்து கொண்டு பிள்ளைகளை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றால் அவற்களின் வெறுப்பையும் கோபத்தையும்தான் சம்பாதிக்க முடியும்
மாறாக அவர்களின் இடத்திற்க்கு இறங்கி சென்று அவர்களுடன் நன்பர்கள் போல் பழகி பாருங்கள் நாம் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்பாற்கள் நமது கட்டுப்பாட்டிற்க்குள் இருப்பாற்கள் முயன்றுதான் பாருங்களேன்.

பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு நாட்டை பற்றி, அரசியலை பற்றி,உலகை பற்றி, எதுவும் தெரியாததற்க்கு ஆசிர்யர்களை மட்டும் குறை கூறத் தேவை இல்லை.......
மாறவேன்டியது நமது கல்வி திட்டமும் பெற்றோற்களின் மனோ இச்சைகளும்தான் தன் பிள்ளை எல்லாவற்றிலும் முதலாவதாக வர வேண்டும் என்று 3வது வயது முதலே இவர்கள் செய்யும் கெடுபிடியும் புத்தக பூச்சிகளாகவெ குளந்தைகளை மாற்றி விடுவதும்தான் இதற்க்கு முக்கிய மிக முக்கிய காரணம் என்பதுதான் உண்மை