Monday, December 20, 2010

சைக்கிள் ஓட்டும் ஆண்களின் விந்து சக்தி குறையும்!

அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லாரன் வைஸ் ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டார். 2200 பேரிடம் இது நடத்தப்பட்டது. அப்போது அதிக நேரம் உடலை வருத்தி வாரத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர்கள் பிறப்பு உறுப்பு, மற்றும் சிறு நீர் கழித்தல், மற்றும் தர மற்ற விந்து போன்ற பிரச்சினைகளில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
அதிக நேரம் சைக்கிள் ஓட்டுவதால் அவர்களின் விந்து சக்தி குறைகிறது. எனவே வாரத்துக்கு 5 மணி நேரத்துக்குள் மட்டுமே ஆண்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.   அதே போன்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இது போன்று சிறிய பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளை வளர்ச்சி நடுத்தர வயதுவரை நீடிக்கும் : ஆய்வில் தகவல்

human brain, health, science, puthiyaulakam.com, wonder news, tamilnews, மனிதனின் மூளை வளர்ச்சி குழந்தைபருவம் வரை மட்டுமே இருக்கும் என்பது தற்போதை கண்டுபிடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. தற்போதைய கண்டுபிடிப்பில் மூளை வளர்ச்சி நடுத்தர வயதான 30 முதல்40 வரை அதன் வளர்ச்சி இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மூளையில் உள்ள கார்டெக்ஸ் என்னும் பகுதி வளர்ச்சி அடைந்து கொண்டே இருப்பதால் தான் முடிவெடுக்கும்திறன், சமுதாய பழக்கவழக்கங்கள், திட்டமிடுதல் உட்பட பல்வேறு செயல்களை திறம்பட செயல்படுத்த முடிகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் குழந்தை பருவம் முடியும் தருவாயில் மூளையின் வளர்ச்சி நின்றுவிடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.மேற்கண்ட தீர்வின் மூலம் 40வயது வரை மூளை வளர்ச்சி அடையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது என லண்டன் யுனிவர்சிட்டி காலேஜை சேர்ந்த சாராஜெய்னிபிளாக்மோர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தூங்கினால் கனவு காணாமல் இருக்கவேண்டுமா? குறட்டை விட பழகிக்கொள்ளுங்கள்

 

குறட்டை விட்டுத்தூங்கினால் கனவு வராது: புதிய ஆய்வு!சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது. அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.
ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம். பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம். குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நித்திரைக்கு முன் சீஸ் cheeseசாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.
கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.
ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.
மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

முத்தம் கொடுத்த கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி!

முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடாகும். அதுவும் கணவன் மனைவிக்கு வழங்குவது காதல் மற்றும் காமத்தின் கலவை. இதனை பெறுவதோ அல்லது மறுப்பதோ மனைவியின் சுயவிருப்பமாகும். பொதுவாக முத்தத்திற்கு பதிலாக முத்தம் வழங்குவதே ஆங்கிலேயரின் நடைமுறை ஆனால் அன்பாக கணவன் வழங்கிய முத்தத்திற்கு பதிலாக அவரது நாக்கை துண்டாக்கிய மனைவி பற்றிய சம்பவமே இது.
அமெரிக்க விஸ்கொன் மாநிலத்தைச் சேர்ந்த வில்லார்ட் (79) வழமை போல கடந்த திங்கட்கிழமை இரவு தனது பாசமிக்க மனைவியான கரேன் (57) இற்கு முத்தமிட்டபோது எதிர்பாராத அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது. ஆம், பாசத்தில் அவர் முத்தமிட்டபோது பதிலுக்கு அவரது மனைவி நாக்கினை கடித்து துண்டாக்கியுள்ளார்.  இதனைச் சற்றும் எதிர்பாராத அவர் வலியில் அலறியுள்ளார். துண்டாக்கப்பட்ட நாக்கினால் சத்தமிட்டு கதறக்கூட முடியாத அவர் உடனே அவசர அழப்புச் சேவைக்கு தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.
பெரும் சிரமத்திற்கு மத்தியில் தனது நிலமையை அவர்களுக்கு புரிய வைத்தள்ளார் வில்லார்ட்.  இதனைத்தொடர்ந்து அவரது வீட்டுக்கு பொலிஸாரும், அம்புலன்ஸ் வண்டியும் விரைந்துள்ளது.  பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்த போது அவரின் மனைவி இரத்தம் தோய்ந்த ஆடையுடன் காணப்பட்டதுடன் தேநீர் கோப்பையொன்றையும் அவர்கள் மீது எறிந்துள்ளார்.
எனினும் பொலிஸார் அப்பெண்னை கைது செய்ததுடன் வில்லார்ட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  துண்டாக்கப்பட்ட நாக்கினை பனிக்கட்டிகளுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  நாக்கினை ஒட்டவைப்பதற்கு வைத்தியர்கள் தற்போது போராடி வருகின்றமையே எமக்கு கிடைத்த கடைசித் தகவலாகும்

‘பேஸ் புக்’கில் இணைந்த 103 வயது பாட்டி

உலகம் முழுவதும் உள்ளவர்களை நண்பர்களாக இணைப்பதில் இணையதளம் முக்கியமாக செயல்படுகிறது. டுவிட்டர், ஆர்குட், பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள் மூலமாக பழைய நண்பர்கள் மற்றும் புதிய நண்பர்கள் தகவல்களையும் புகைப்படங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த லில்லியன் லோவே என்ற 103 வயது பாட்டி `பேஸ்புக்’ இணைய தளத்தில் உறுப்பினராக இருப்பது தெரிய வந்துள்ளது. உலகிலேயே மிகவும் வயதான `பேஸ்புக்’ உறுப்பினர், இவர் தான். பல்வேறு இடங்களில் இருக்கும் தனது பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள் ஆகியோருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க முடிகிறது என லில்லியன் மகிழ்ச்சி அடைகிறார். இந்த 103 வயது பாட்டிக்கு `பேஸ்புக்’கில் 34 நண்பர்கள் இருக்கின்றனர்.

உங்களுடைய தேவையற்ற EMAIL ACCOUNT-களை நீக்குவது எப்படி?

              நாம் இணையத்தில் இருக்கும் போது சில தேவையில்லாத கணக்குகளை (account) உருவாக்கி,பிறகு அதனை நீக்க முயல்வோம். ஆனால் கடைசிவரை அதனை சுலபமாக நீக்க இயலாது. அந்த சிக்கலை போக்கவே ஒரு இணையதளம் இருக்கிறது. அங்கு செல்ல கீழே உள்ளதை சொடுக்கவும்:-
http://www.deleteyouraccount.com/
             இந்த தளத்தின் மூலம் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தளபட்டியலில் உள்ள உங்களது தேவையற்ற அனைத்து கணக்குகளையும் நீக்கலாம்:-
http://deleteyouraccount.com/sites/list/all
இதில் என்ன சிறப்பு என்றால் கணக்குளை அழிப்பது மட்டும் இல்லாமல் அழிந்த கணக்குகளை எவ்வாறு மீட்பது எனவும் இந்த தளம் எடுத்துரைக்கிறது!(ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்குது:)

Rapidshare,Megaupload போன்ற தளங்களில் time limit-ஐ தவிர்ப்பது எப்படி?

Rapidshare,Megaupload போன்ற தளங்களில் time limit-ஐ தவிர்ப்பது எப்படி?


நாம் இப்பொழுதெல்லாம் அதிகம் தரவிறக்கம் செய்வது Rapidshare,Ziddu,Mediafire.....
போன்ற தளங்களில் இருந்து தான்.அவ்வாறு தரவிறக்கம் செய்யும் போது முப்பதோ அல்லது அறுவதோ சில நேரங்களில் நூறு நொடிகள் வரை காத்திருந்து தரவிறக்கம் செய்வோம்.அதுவும் ஒரு முறை மட்டும் தான் மேலும் சில கோப்புகளை தரவிறக்கம் செய்ய முப்பது நிமிடங்கள் கழித்தே தரவிறக்கம் செய்ய முடியம்.ஒரே நேரத்தில் இரு கோப்புகளையும் தரவிறக்கம் செய்ய முடியாது.இது போன்ற நிலையில் நாம் என்ன செய்வது என்று நமக்கே தெரியாது.சரி இதிலிருந்து தப்பித்து எப்படி தரவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்!

இதெற்கு எல்லாம் ஒரே வழி இதோ கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்தால் போதுமானது.
http://www.brothersoft.com/jdownloader-171166.html

இந்த மென்பொருள் உங்களது தரவிறக்கத்தை மிக எளிமையாக ஆக்கிவிடும்.ஒரே நேரத்தில் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம்.rapidshare,megaupload,Ziddu.. என அனைத்து தளங்களிலும் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இதனின் சிறப்பு அம்சம் நாம் ஒரே நேரத்தில் Rapidshare,Megaupload இணைப்பை(link) எல்லாம் சேகரித்து அதில் போட்டால் அந்த மென்பொருள் ஒவ்வொன்றாக நமக்கு தரவிறக்கம் செய்து தரும்.மேலும் இந்த மென்பொருளுக்கு firefox-ல் ஒரு கூட்டுறுபு (addon) இருக்கின்றது.அந்த கூட்டுறுபை இணைத்தால் நாம் நேரடியாகவே firefox-ல் இருந்துக்கொண்டே jdownloader மூலம் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம்.அந்த கூட்டுறுபை தரவிறக்கம் செய்ய இங்குச் செல்லவும்.

Zero rupee note that Indians can slip to corrupt officials who demand bribes




An Indian U of Maryland physics prof came up with these zero rupee notes that Indians can slip to officials who demand bribes. They've been wildly successful, with a total run over over 1,000,000 notes, and the reports from the field suggest that they shock grafters into honesty. Fifth Pillar is the NGO that produces the notes, and they're available for download in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam.
One such story was our earlier case about the old lady and her troubles with the Revenue Department official over a land title. Fed up with requests for bribes and equipped with a zero rupee note, the old lady handed the note to the official. He was stunned. Remarkably, the official stood up from his seat, offered her a chair, offered her tea and gave her the title she had been seeking for the last year and a half to obtain without success. Had the zero rupee note reached the old lady sooner, her granddaughter could have started college on schedule and avoided the consequence of delaying her education for two years. In another experience, a corrupt official in a district in Tamil Nadu was so frightened on seeing the zero rupee note that he returned all the bribe money he had collected for establishing a new electricity connection back to the no longer compliant citizen. Anand explained that a number of factors contribute to the success of the zero rupee notes in fighting corruption in India. First, bribery is a crime in India punishable with jail time. Corrupt officials seldom encounter resistance by ordinary people that they become scared when people have the courage to show their zero rupee notes, effectively making a strong statement condemning bribery. In addition, officials want to keep their jobs and are fearful about setting off disciplinary proceedings, not to mention risking going to jail. More importantly, Anand believes that the success of the notes lies in the willingness of the people to use them. People are willing to stand up against the practice that has become so commonplace because they are no longer afraid: first, they have nothing to lose, and secondly, they know that this initiative is being backed up by an organization--that is, they are not alone in this fight.

காதலியை தற்கொலை செய்யவைத்தவன் ஈ மெயிலால் தப்பித்தான்


                        தற்கொலை வழக்கில் அவருடைய பழைய காதலனை போலீசார் கைது செய்தனர். ஆனால், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளம்பெண் அனுப்பிய இ-மெயிலால் அந்த காதலன், போலீஸ் பிடியில் இருந்து தப்பியுள்ளார். இச்சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்தவர் அஞ்சலி. ஐ.டி. கம்பெனி ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிபவர். சந்தீப். உத்தரபிரசேத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்தனர். முறைப்படி அஞ்சலியை திருமணம் செய்துகொள்ள சந்தீப் முடிவு செய்திருந்தார். இந்நிலையில் ரயில் பயணம் ஒன்றில் அஞ்சலிக்கு வேறு ஒரு வாலிபருடன் நட்பு ஏற்பட்டது. சந்தீப்பிடம் காதலை முறித்துக் கொண்டு புதிய நண்பருடன் காதலைத் தொடர்ந்தார் அஞ்சலி. 
              ஒரு கட்டத்தில் புது காதலன், அஞ்சலியின் காதலை தவிர்த்தார். இந்த விஷயம் சந்தீப்புக்கு தெரியவந்தது. காதலால் நொந்து போயிருந்த அஞ்சலியிடம் சந்தீப் போனில் உருக்கமாக பேசினார். ‘உண்மைக் காதல் எது என்று தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு விட்டாய். பரவாயில்லை. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இப்பவும் உன்னை என் காதலியாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். இல்லறத்தில் இருவரும் இணைவோம்’ என்று சந்தீப் கூறினார். ‘முக அழகிலும், கவர்ச்சி பேச்சிலும் மயங்கி முதல் காதலை துறந்தது எவ்வளவு பெரிய தப்பு’ என்பதை உணர்ந்த அஞ்சலி, சந்தீப்பிடம் மனதார மன்னிப்பு கேட்டார். காதலை மாற்றியதால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் இருந்து விடுபட முடியாமல் புழுங்கித் தவித்தார். சந்தீப் மனதை புண்படுத்தி விட்டதற்காக வருந்தினார். உடனே சந்தீப்புக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி அதை அவரது இ-மெயிலுக்கு அனுப்பி வைத்தார். ‘காதலை மாற்றியதால் கண்கலங்கி நிற்கிறேன். நம்பியவன் ஏமாற்றியதால் வாழ்க்கையே வெறுத்து விட்டது. தற்கொலை மட்டுமே எனது தவறுக்கு சரியான தீர்வாக இருக்கும்’ என்று அந்த இ-மெயில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக சந்தீப்பை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘உங்களுக்கு இ-மெயில் அனுப்பி இருக்கிறேன். அதை கண்டிப்பாக படித்து பாருங்கள்’ என்று கூறினார். ஆபீசில் இருந்து வீடு திரும்பியதும் அஞ்சலி அனுப்பிய இ-மெயிலை படித்தார் சந்தீப். அதிர்ச்சி ஆனார். உடனே அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்றார். முடியவில்லை. 

                        அவர் வீடு இருக்கும் பகுதிக்கு சென்றார். வீட்டுக்குச் செல்ல தயங்கி நின்ற அவர், அஞ்சலி வெளியே வந்தால் சந்திக்கலாம் என்று எண்ணினார். ஆனால், அதுவும் முடியவில்லை. மறுநாள் பத்திரிகைகளில் அஞ்சலி தற்கொலை செய்துகொண்ட செய்தி வெளியானது. அதைப் பார்த்து கதறி அழுதார் சந்தீப். இதற்கிடையில், ‘என் தங்கையின் தற்கொலைக்கு சந்தீப்தான் காரணம். அவரால் என் தங்கைக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்தம்கூட நின்றுவிட்டது. உடனே அவர் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று அஞ்சலியின் அண்ணன் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சந்தீப்பை போலீசார் கைது செய்தனர். அன்றுதான் சந்தீப்புக்கு அலுவலகத்தில் புரமோஷன் கிடைத்திருந்தது. ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவருக்கு 6 லட்சமாக சம்பள  உயர்வு அளிக்கப்பட்டிருந்தது. ‘நான் அப்பாவி. அஞ்சலி தற்கொலைக்கு நான் காரணம் இல்லை’ என்று எவ்வளவோ கெஞ்சியும் போலீசார் தங்கள் ‘கடமை’யை செவ்வனே செய்து சந்தீப்பை சிறையில் தள்ளினர். பின்னர் விசாரணை முடுக்கி விடப்பட்டது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சந்தீப்புக்கு அஞ்சலி அனுப்பிய இ-மெயில் விவரங்களை போலீசார் சேகரித்தனர். மேலும் அவரை திருமணம் செய்துகொள்ள சந்தீப் தயாராக இருந்தது பற்றிய போன் உரையாடல் விவரமும் தெரியவந்தது. இதையடுத்து சந்தீப் விடுதலை ஆகியிருக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்

                                                    
கடந்து சென்று வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேறுவோர் பட்டியலில், உலக அளவில் மெக்சிகோ முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆசிய அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளது. குடிபெயர்தல் மற்றும் சொந்த நாட்டில் உள்ள உறவினர்களுக்கு பணம் அனுப்புதல் குறித்து உலக வங்கி அமைப்பு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: உலக அளவில் 2010ல் வெளிநாடுகளில் குடியேறி நிரந்தரமாக வசித்து வருபவர்களின் எண்ணிக்கை 21.5 கோடியாக உள்ளது. இது ஒட்டு மொத்த உலக மக்கள் தொகையில் 3 சதவீதம். இவர்களில் 57 சதவீதம் பேர் உயர் வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர். இது 1900ல் 43 சதவீதமாக இருந்தது. 2010ன் கணக்குப்படி அமெரிக்காவில் அதிகபட்சமாக 4.28 கோடி வெளிநாட்டினர் வசிக்கின்றனர். இது 2000ல் 3.48 கோடியாக இருந்தது. ஆனால், 22  லட்சம் அமெரிக்கர்கள் மட்டுமே வெளிநாட்டில் வசிக்கின்றனர். இது அங்குள்ள மக்கள் தொகையில் 1 சதவீதம். கடந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 1.14 கோடி பேர் சென்றனர். இதில் 54 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று குடியேறுவதில் உலக அளவில் முதல் 10 நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஆசியா அளவில் 2ம் இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் குடியேறியவர்களில் ஆசியாவை சேர்ந்த நாட்டினர் 79 லட்சத்துடன் 2வது இடத்தில் உள்ளனர். அதிகமாக 1 கோடி மக்களுடன் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது.   சீனர்கள் 20 லட்சம், பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள் 17 லட்சம், இந்தியர்கள் 16 லட்சம் பேர் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு ரூ. 2.47 லட்சம் கோடி அனுப்பியுள்ளனர். இது கடந்த 2009ல் ரூ. 2.23 லட்சம் கோடியாக இருந்தது. உலக அளவில் வெளிநாடுகளில் இருந்து 2010ல் ரூ. 19.8 லட்சம் கோடி அனு ப்பப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை

   
ந்த பெரியவர் சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு பொருள், சிறுவர்களின் கையில் கிடைக்கும் சிறு கூழாங்கற்கள் அவர் உடலை பதம் பார்ப்பதும் உண்டு, மற்றவர்களுக்கு அவர் ஒரு அறுவருப்பு பொக்கிஷம், இடுப்பை மறைக்கும் கிழிந்த சாக்கு. முகத்தை மூடி மறைத்திருக்கும் பெரிய சாடமுடியும். தாடியும். குளித்தே பலவருடமாக அழுக்கில் உரம் ஏறிப்போன உடம்பும். குப்பைகளை வாரி வைத்து முதுகில் தொங்கவிட்டு இருக்கிற பாங்கும் தெருமுனையில் அவர் வந்தவுடன் வீசும் முடைவீச்சும். யாரையும் அவரிடம் அண்ட விடாமல்தான் செய்யும், திடீரென்று  அவர் போடுகின்ற கூச்சலும். பாடுகின்ற பாடலும் மூளை பிளந்து போன பரம்பரை பைத்தியம் என்று பறைசாற்றும். ஊரில் இருக்கின்ற குப்பைகளையெல்லாம் பொறுக்கி எடுத்து பையில் திணித்துக் கொள்ளும் அவரின் ஆவேசம் எல்லோரையும் பயமுறுத்தும்.

    இப்படிப்பட்ட அந்த பைத்தியத்தை அணுகிய மகாகவி பாரதியார். ஏன் இப்படி குப்பைகளை சுமக்கிறாய் என்று கேட்டாரம், அதற்கு அந்த பைத்தியம் முண்டம் முண்டம் நான் வெளியில் சுமக்கிறேன், நீ உள்ளுக்குள் சுமக்கிறாய் என்று கூறியதாம், அப்போதுதான் பாரதியாருக்கு புரிந்து இருக்கிறது, அவர் ஞானப்பித்தன் என்று வெளியில் தெரியும் கோலத்திற்கும் உள்ளுக்குள் இருக்கும் ஞானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அலங்கரிக்கப்பட்ட பூக்களைப் புரட்டிப் பார்த்தால் புழுக்கள் நெளிவதைப் பார்க்கலாம், கலங்கி நிற்கும் சாக்கடையை துழாவினால் தங்கமும் கிடைக்கலாம்.

     நம்மைப்போன்ற சாதாரணர்கள் அலங்காரத்தையும். அழகையும் பார்த்து ஏமாறுகிறோம், கண்முன்னே இருக்கும் அழகான ரோஜா தோட்டத்தை விட்டு விட்டு வானத்திலிருந்து ஒரு கந்தர்வ தோட்டம் குதிக்கப்போவதாக கனவுகளில் மிதந்து காலத்தை வீணாக்கி கொள்கிறோம், மிக சாதாரண நடப்பில் கூட மிகப்பெரும் விஷயம் அடங்கியிருப்பதை கவனிக்காமல் பல நேரத்தில் ஊதாசினம் செய்து நமது அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுகிறோம்,

    நான் ஒரு நாயை 2 நாட்களாக கவனித்து வந்தேன், 2 நாட்களாகவே அந்த நாய் எதுவும் சாப்பிடுவதில்லை, வழக்கமான சுறுசுறுப்பு  அதனிடம் இல்லை, வாய்விட்டு குரைக்கக் கூட. அது யோசனை செய்து கொண்டிருந்தது, மந்தமாக எதையோ சாப்பிடக் கூடாததை சாப்பிட்டு விட்டது போன்று உடலை நெளிப்பதும். வளைப்பதும் சுருண்டு படுப்பதுமாக இருந்தது, 3வது நாள் காலை என்று நினைக்கிறேன் உடைந்த செங்கல்களுக்கு இடையில் முளைத்திருந்த ஏதோ ஒரு செடியை போய் ஆசையுடன் தின்றது, எனக்கு அந்த காட்சி அதிசயமாக இருந்தது, ஆடு. மாடுகள். இலை. தழைகளை தின்பது ஒன்றும் வியப்பல்ல, நாய் தின்பது விந்தையாகவும் விசித்திரமாகவும் இருந்தது, என்ன ஆச்சரியம் சிறிது நேரத்தில் அந்த நாய் வாந்தி எடுத்தது, வாந்தியில் கந்தை சாக்கு பகுதிகளும் வந்து விழுந்தன.
  
     நமக்கு நோய் வந்தால் அந்த நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம், நாம்வளர்க்கும் விலங்குகளுக்கும் கூட நாம் வைத்தியம் பார்க்கிறோம், ஆனால் தானாக பிறந்து வாழ்ந்து முடிந்து போகும் சாதாரண ஜீவன்களான இவைகளும் நோய் வந்தால் மருந்தை தேடும் அறிவை பெற்றிருப்பது இறைவனின் பெருங்கருணையல்லவாõ இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்பதை ஐந்தறிவு ஜீவன்கள்கூட மிக தெளிவாக அறிந்து வைத்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் தானே.
    நாய் தின்ற அந்த செடியை எடுத்து வரச்சொல்லி அதை ஆராய்ந்து பார்த்தேன், அந்த செடியின் பெயர் “தேள் கொடுக்கு இலை” என்பதை புரிந்து கொண்டேன், சாதாரணமாக அந்த தழை கிராமங்களில் தற்கொலை செய்து கொள்ள விஷம் சாப்பிட்டவர்களை வாந்தி எடுக்க வைக்க இதைப் பயன்படுத்துவர், நாய்கள் வாந்தி எடுக்க இந்த தழையை மட்டும் பயன்படுத்துவதில்லை, அருகம்புல்லையும் பயன்படுத்தும். பூனை. குரங்கு முதலியவை இத்தழைகளின் சக்தியை அறிந்து வைத்திருக்கின்றன, மிக சாதாரண விலங்குகளே மூலிகைகளை பயன்படுத்தி நோய்களை நீக்கி கொள்ளும் போது இறைவனின் உயரிய சிருஷ்டியான மனிதன் எந்த அளவு அறிந்து வைத்திருப்பான் என்று எண்ணி வியந்து போனேன்,

   வான வெளியில் சதா சஞ்சரித்துக் கொண்டு இருக்கிற ஒலி அலைகளை மந்திரமாக கண்டறிந்து வெளியிட்ட மனிதன் தனது சரீரத்திற்குள் வியாபித்து இருக்கும் “ஓஜஸ்” சக்தியை பிரபஞ்ச சக்தியோடு இணைக்க தெரிந்த மனிதன் மன சக்தியின் மூலம் இயற்கையின் இயக்கங்களையே கட்டுப்படுத் தெரிந்த மனிதன் இறைவனின் வரமாக பூமியில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து கிடக்கும் மூலிகைகளின் சக்தியை அறிந்தும் உள்ளான், பயன்படுத்தியும் வருகிறான்,
    ஒரு காலத்தில் நான் மூலிகைகள் மனித உடலின் மருத்துவத்திற்கும் ரசவாதத்திற்கும் மட்டுமே பயன்படக்கூடியது என கருதியிருந்தேன், 1992-ஆம் வருடம் ராபர்ட் வில்சன் என்ற அன்பருக்காக சித்த வைத்தியம் பற்றி அறிந்த அவரின் உறவினர் ஆவி ஒன்றை அழைத்து பேசிக் கொண்டிருந்தோம், அந்த ஆவி பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது துண்டாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளை அனுத்துளுத்தான் தழை என்ற மூலிகையால் தொடும் ஷனத்திலேயே உறுப்புகள் ஒட்டிக் கொள்ளும் என்று கூறியது,
    மேலும் அந்த மூலிகைச் செடி கொல்லி மலை. உதக மண்டலம் போன்ற இடங்களிலும் செஞ்சிக் கோட்டையில் ராஜாக் கோட்டையில் உள்ள சுரங்க வழியில் இந்த மூலிகை உள்ளது என கூறியது, மேலும் அந்த ஆத்மா மூலிகைகளில் மந்திரப் பிரயோகம் பற்றியும் மூலிகைகளால் கிடைக்கும் மந்திர சித்திகளை பற்றியும் மிக விரிவாக கூறியது,
    மூலிகைகளில் மந்திர பிரயோகம் என்கிற விஷயம் எனக்கு புதுமையாக இருந்தது, அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வலுத்த வேளையில் ஆவி சொன்ன அனுத்துளுத்தான் தழை உண்மையா அப்படி ஒன்று உண்டா என்ற கேள்வி மண்டைக்குள் பூரான் ஊர்வதைப் போல் உறுத்திக் கொண்டேயிருந்தது,
    அந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் என நினைக்கிறேன், தினமலர் பத்திரிகையை புரட்டி கொண்டிருந்த போது உதக மண்டலத்தில் வெளிநாட்டு நபர் ஒருவரின் அனுபவம் என்ற செய்தி என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது, மலைச்சரிவுகளில் அவர் நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராமல் எருமைமாடு ஒன்று அவர் தொடையில் முட்டி பெரும்காயத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் செடிகொடிகளுக்கு இடையில் பொறுக்க முடியாத வலியில் நடக்க முயாமல் நடந்து மேலே ஏறுகின்ற போது. திடீரென்று கால்களில் இருந்த வலிமறைந்ததாகவும் வலி என்ன ஆனது என்று காலைப் பார்த்த போது காயம்பட்டதற்கான அடையாளமே இல்லாது மறைந்து விட்டதாகவும் அந்த வெளிநாட்டுக்காரர் கூறி இருந்தார்,

   செடிகளுக்கு இடையில் நடந்து வரும் போது பலவிதமான செடி கொடிகள் தமது காயத்தை தொட்டதாகவும் அதில் ஏதோ ஒரு செடியின் வேகம் தான் தனது காயத்தை குணப்படுத்தியிருக்க வேண்டும் என கருதி அந்த செடி என்னவென்று அறிய 4 நாட்கள் தேடியதாகவும். இறுதி வரையில் தனக்கு கிடைக்கவே இல்லையென்று கூறியிருந்தது, மேலே சொன்ன ஆவி கூறியது என்னை நம்ப வைத்தது, அவரை குணப்படுத்தியது அனுத்துளுத்தான் தழையாகத்தான் இருக்க வேண்டும் என்று இன்றுவரை உறுதியாக நான் நம்புகிறேன்,

    இந்த விஷயம் மந்திரத்திற்கும் மூலிகைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும், அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற என் வேட்கையை மிக அதிகமாக அதிகரித்தது, இதன் அடிப்படையில் பலவித ஆராய்ச்சிகளையும் நான் மேற்கொண்டேன், அதர்வண வேதமந்திர சம்ஹிதை என்கிற சாகையில் குறிப்பிடப்பட்டுள்ள மரமல்லி இலையை எடுத்து ஜீவபீஜம் மந்திரத்தை உருஏற்றிய போது எனக்கு கிடைத்த விசேஷமான தேவதைகளின் பிரசன்னம் புது விதமான உத்வேகத்தை தந்தது, அந்த உத்வேகம் மூலம் என் சுய அனுபவமாகவும் பல பழைய கிரகந்தங்ளின் மூலமாகவும் பல அரிய விஷயங்களை அறியப் பெற்றேன், அதை அனைத்தையும் இல்லையென்றாலும் ஒரு சிலவற்றையேனும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

    மனிதர்களாகிய அனைவருக்குமே பணத்தின் மீது எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டு, அதுவும் உழைக்காமல் திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமó கிடைக்கின்ற பணம் என்றால் யாருமே அதை வேண்டாம் என்று ஒதுக்குவதில்லை, புதையலைத் தேடி பெரும் பயணம் மேற்கொண்ட சரித்திர வீரர்கள் எத்தனைப் பேரையோ நாம் படித்து இருக்கிறோம் பார்த்தும் இருக்கிறோம், முதலில் புதையலுக்காக போட்டியிட்டு புதைந்து போன சாம்ராஜ்ஜியங்களும் உண்டு, அப்படிப்பட்ட புதையல் எங்கு இருக்கிறது, எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு, புதையல் எங்கு இருக்கிறது என்று காட்டி தரும் ஒரு மூலிகை இருக்கிறது, அதன் பெயர் நிலம் புரண்டி என்பது, புதையல் என்பது அக்கால மன்னர்கள். நிலப் பிரபுக்கள். மிகப் பெரும் கருமித்தனம் கொண்டவர்கள் மற்றும் சேமிப்பில் அக்கறை கொண்டவர்கள் தங்களது செல்வத்தை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்க பூமியில் புதைத்து வைப்பதாகும், அவர்கள் அப்படி செய்யும் போது வெறும் நிலத்தை தோண்டி மண்ணைப்போட்டு காசுகளை மூடி விடுவது இல்லை,



    அப்பொருளை பாதுகாக்க பல அமானுஷ்ய சக்திகளை மந்திர உச்சாடனம் மூலம் அவ்விடத்தில் ஸ்தாபிதம் செய்துவிடுவார்கள், பூதம் புதையலை பாதுகாக்கும் கதையெல்லாம் வெறும் கற்பனைகளஞ்சியங்கள் அல்ல அதிலும் ஓரளவு உண்மைகள் உண்டு என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்,

    அமானுஷ்ய சக்திகளின் பாதுகாப்பில் புதையல் இருப்பதால் தான் அதை எல்லோரும் எடுத்து விடுவது கடினமாக இருக்கிறது, இந்த சக்திகளின் பாதுகாப்பில் இருக்கும் புதையல்கள் ஒரே இடத்தில் இருப்பதும் இல்லை, இந்த சக்திகளால் பல இடங்களுக்கு நகர்த்தப்படுவதும் உண்டு, புதையல்களை பாதுகாக்கும் அமானுஷ்ய சக்திகளை அதற்குரிய முறையில் திருப்தி படுத்தினால் மட்டுமே நம்மால் எடுக்க முடியும்,

    நிலம் புரண்டி மூலிகைச் செடி புதையல் எங்கே இருக்கிறது என்பதை நமக்கு காட்டும் ஒரு கருவியே ஆகும், இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில் முளைத்திருக்கும், இது மனிதர்களின் வாசனை பட்ட மாத்திரத்தில் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே  போய்விடும், அதனால்தான் இதற்கு நிலம் புரண்டி என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள், இதை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான்   கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையினுடைய வீரியத்தால் நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும்,

    இத்தகைய நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு. செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சூர்ய உதயத்திற்கு முன் இடத்தை சுத்தம் செய்து அச்செடிக்கு சாப நிவர்த்தி செய்து மந்திரத்தால் உயிர் கொடுத்து காப்பு கட்டி தூப தீபங்கள் காட்டி பறித்து வந்து குழித்தைலம் இறக்க வேண்டும், அந்த தைலத்தில் பச்சை கற்பூரம் ஜவ்வாது. கோரோசனை மூன்றும் சம எடையில் சேர்த்து குழைத்து அஞ்ஜனமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும், அந்த அஞ்ஜனத்தில் ஆஞ்சநேய மூல மந்திரம் மற்றும் அஞ்ஜனா தேவி மூல மந்திரம் முறையே 1008 முறை ஜபித்து உருஏற்ற வேண்டும், தேவையான போது அந்த அஞ்ஜானத்தை சிறிது எடுத்து வெற்றிலையில் தடவி மேற்குறிப்பிடும் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வெற்றிலையில் பார்த்தால் தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவது போல் புதையல் இருக்கும் இடத்தை நமக்கு மிக துல்லியமாக காட்டும்,    மேலும். இந்த மூலிகையின் வேரை கன்று போடாத பசுஞ்சானத்தோடு எரித்து சாம்பலாக்கி நீரில் கரைத்து மேற்குறிப்பிட்ட மூல மந்திரத்தை முறைப்படி ஜபித்து புதையல் இருப்பதாக நாம் கருதும் இடத்தில் இரவில் தெளித்து விடவேண்டும், காலையில் சென்று பார்த்தால் அங்கு புதையல் இருக்கும் பட்சத்தில் பாளம் பாளமாக வெடித்து இருக்கும். புதையல் இல்லையென்றால் சாதாரணமாக இருக்கும்

    புதையல் மிக ஆழமாக பல நூற்று அடிகளுக்கு கீழே இருந்தால் அந்த இடத்தில் ஸ்ரீலேகா என்ற மூலிகையை புதைத்து விட்டால் குறைந்தது 6 மாதத்தில் நாம் தோண்டி எடுக்கும் சொற்ப ஆழத்தில் புதையல் மேலே வந்துவிடும், ஸ்ரீ லேகா என்பது 16 வகை மூலிகைகளின் கூட்டு வடிவமாகும், இது இமயமலை சாரல்களில் மட்டுமே கிடைக்கிறது, மூலிகை சாஸ்திரத்திலும். மந்திர சாஸ்திரத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வைத்து இருப்பார்கள்


     இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை மனிதர்களே வசியம் செய்யும் இடுமருந்து என்பதை மிக அதிகமாக கேள்விப்படுகிறோம், இவைகள் முன்பெல்லாம் கிராமப்புறங்களில் தான் அதிகமாய் இருந்தது, இன்றோ நகரங்களில் கூட இந்த இடுமருந்து ஊடுருவி விட்டது, இந்த மாதிரியான விஷயங்களால் பல குடும்பங்கள் தொல்லைகளை சந்தித்து அழிந்தும் போயிருக்கிறது, இந்த இடுமருந்தை எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல, புல்லாமணக்கு என்கிற மூலிகையை நிழலில் உணர்த்தி கல் உரலில் இடித்து வஸ்திர காயம் செய்து நெய்யில் குழைத்து காலை. மாலை இருவேளையும் தொடர்ந்து 3 நாட்கள் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால் போதுமானது, 3 நாட்களிலே இடுமருந்தின் வீரியம் குறைந்து சகஜ நிலைக்கு அவர்கள் திரும்பி விடுவார்கள், இந்த புல்லாமணக்கு என்பது பல்லி முட்டையைப் போன்று இருக்கும், இருப்பினும் முறைப்படி காப்பு கட்டி எடுக்கப்பட்ட மூலிகையாக இருந்தால் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்,

    ராமாயணத்தில் தசரதன் குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான் என்பதை நாம் அறிவோம், அந்த யாகத்தில் கூறப்படும் மிக முக்கியமான புத்திர வர்ஷா என்கிற மந்திரத்தை விபூதி இலை என்ற மூலிகையில் உருஏற்றி அரை மண்டலம் சாப்பிட்டால் பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் புழுக்களை நீக்கியும் ஆண்களுக்கு மலட்டு தன்மைû போக்கியும் புத்திர சந்தானத்தையும் உண்டாக்கும், இம்முறையை இன்றும்கூட பலர் பயன்படுத்தி அற்புதமான பலனை அடைந்து வருகிறார்கள், இதை எம்மிடம் பெற்ற ஒரு அன்பர் கைமேல் பிள்ளையை பெற்றுள்ளார்,

    இன்று நமது தமிழகமெங்கும் வறட்சி, அதனால் விவசாயம் பாதிப்பு கிணறுகளில் தண்ணீர் இல்லை, பயிர்கள் பட்டுப்போயின என்ற அழுகுரலும் அங்கலாய்ப்பும் எங்கும் கேட்கிறது, கிணறுகளில் தண்ணீர் ஊர பன்னீர் இலையில் சடாட்சர மந்திரத்தை 1008 முறை உருஏற்றி நீர் இல்லாத கிணற்றில் போட்டால் 9 நாட்களுக்குள் நீர் இல்லாத கிணற்றில் நீர் சுரக்கும், பயிர்களின் மீது பூச்சிகள் பரவினாலும் தென்னை மரங்களில் குருத்துப் புழுக்கள் அதிகரித்தாலும் மா. தென்னை. பலா போன்ற மரங்களில் காய்கள் குறைந்தாலும் ஆடு திண்டாப்பாலையை பஸ்பமாக்கி பிரணவ மந்திரத்தை 1008 முறை உருஏற்றி பாதிக்கப்பட்ட மரம். செடி. கொடிகளின் மேல் தெளித்தால் பூச்சிகள் அழிந்து நன்றாக காய்கள் அதிகரிக்கும்


    இத்தகைய மூலிகைகளை உயரிய நிலையில் இருக்கும் தெய்வீக ஆத்மாக்களோடு மந்திர பிரயோகம் செய்பவர்களும் இருக்கிறார்கள், ஆத்மாவை அழைத்துப் பேசும் கலைதெரியாத சாதாரண மக்கள் கூட மன சுத்தியோடும் உடல் சுத்தியோடும் இதை செய்யலாம், அப்படி செய்தாலும் நல்ல பலனை கொடுப்பதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன், ஆனாலும் பயிற்சி பெற்ற நல்ல மனிதர்களை இதைச் செய்தால் கைமேல் பலன் கொடுப்பது கண் கூடான விஷயம்

    எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவர் மிகவும் சுறுசுறுப்பானவர், சதா சர்வகாலமும் ஏதாகினும் ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பார், அவர் வேலை செய்யும் வேகம் சாட்டையால் சுழற்றப்பட்ட பம்பரம் ஒன்று அதிவேகமாக சுற்றுவது போல் இருக்கும்   அவரைப்பற்றி நான் சிலநேரம் யோசிப்பதுண்டு, இரவில் கூட இவர் ஓய்வாக தூங்குவாரா? இல்லை அப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டுதான் இருப்பாரா? என்ற இறைவன் வேலை செய்வதற்காகவே இவரை படைத்துள்ளாரோ தானும் இவரை போல்தான் சதா வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று காட்டுவதற்காக இவரை பூமியில் நடமாட விட்டிருக்கிறாரோ என்றெல்லாம் எண்ணி வியந்ததுண்டு

    இப்படி சுறுசுறுப்பின் இலக்கணமான அந்த இளைஞர் திடீரென்று ஒருநாள் மயங்கி விழுந்து விட்டார், அதன் பின்பு அவரிடம் படிப்படியான சில மாற்றங்களை நான் கவனித்தேன், சோர்ந்து உட்கார்ந்து விடுவதும் வேலையிடத்திலேயே சுருண்டு படுத்துவிடுவதும் உண்டு, நாளடைவில் அவர் கைகால்கள் நரம்புத் தளர்ச்சியால் நடுங்குவதைப் போல் நடுக்ககம் எடுக்க ஆரம்பித்தது, அவரிடம் நான் விசாரித்தேன், உனக்கு என்ன ஆயிற்று என்றுõ  அவர் அதற்கு ஒன்றுமே புரியவில்லை, உடல் நடுங்குவதும். நாவறட்சி ஏற்படுவதும் அதற்கு மேல் கண்களின் பார்வை சக்தி குறைந்து விடுவதுமாக இருக்கிறது என்றார், அவர் மீது களிவிரக்கம் ஏற்பட்ட நான் எனது வசமாக இருந்த ஒரு தேவரையை அழைத்து அவருடைய உடலுக்கு என்ன என்று கேட்டேன், அதற்கு அந்த தேவதை அவருடைய மூளை நரம்புகளில் ஒன்றில் சீதளக் கிருமிகள் தாக்கி ரத்த ஓட்டத்திற்கு சிறு தடை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது, அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை செய்ய விரும்பி அவரை ஒரு வாரமாக தேடினேன், கிடைக்கவில்லை,


  ஒரு வாரம் சென்று வந்து தான் மருத்துவமனைக்கு சென்றிருந்ததாகவும் பரிசோதனையில் தனது மூளை நரம்பில் நோய்த் தொற்று என்கிற பஆ உள்ளதாகவும் அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் சில வருடங்கள் மாத்திரைகளை சாப்பிட்டு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டதாக கவலையுடன் குறிப்பிட்டார், என் மீது தீவிர பக்தியும் அன்பும் கொண்ட அந்த நண்பரை குணமாக்கும்படி வேண்டினார்  அவருக்காக சிவ பெருமானின் பரிவாரங்களான 12 ருத்திரர்களில் தலைவரான ஸ்ரீ மாகருத்ரரின் நேரடி அம்சமான  ஸ்ரீ பிரபாசன் என்று போற்றுதலுக்குரிய தேவ கனத்தை அழைத்து பேசினோம், அவர் அந்த இளைஞரின் நோய் நீங்கிட சில மூலிகைகளை (அவர் கொடுத்த உத்தரவின்படி அந்த மூலிகைகளின் விபரம் இங்கு தரமுடியாமைக்கு வருந்துகிறோம்) அதர்வண வேத மந்திரங்களால் செறிவூட்டச் சொல்லி 2 மண்டலம் மட்டுமே அவரை சாப்பிடச் சொன்னார், அதன்படி அந்த இளைஞருக்கு செய்து கொடுத்தேன், ஒரு மாதத்தில் அந்த நண்பர் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டார், 2 மண்டலத்திற்கு பின்பு அவர் பரிபூரணமாக குணமடைந்து பழையபடி சுறுசுறுப்பு அடைந்து விட்டார், இன்று அவர் நல்ல நிலையிலே உள்ளார், இப்படி எத்தனையோ மந்திரமும் மூலிகையும் செய்த மகத்துவத்தை சொல்லிக் கொண்டே செல்லலாம்

    இறைவன் இந்த பூமியில் எந்தவொரு சிறிய வஸ்துவையும் காரணமில்லாமல் படைக்கவில்லை, ஒன்றைத்தழுவி ஒன்று இருப்பதைப் போல் தாவர ஜங்கமங்கள் அனைத்தும் ஒன்றுக்கு பயன்படும் வண்ணமே இறைவன் சிருஷ்டித்துள்ளான், ரிக் வேதத்தில் வரும் பல ஸ்லோகங்கள் தாவரங்கள் சூரியனிடமிருந்து சக்தியை ஜீவர்களுக்கும் கொடுப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது, அதாவது அண்ட சராசரங்கள் அனைத்திலும் பரவியுள்ள பரமாத்மாவின் பரமசத்தை கிரஹித்து பூமிக்கு வழங்கி கொண்டிருக்கும் அமுத சுரபிகளே விருட்சங்கள் என்று வேதம் சொல்கிறது, விவிலியமும். திரு-கூர்-ஆனும் இதைப்போன்ற கருத்துக்களை வலியுறுத்துகின்றன,

    சுக்ருத சம்ஹிதையில் ஐந்தறிவும் ஆறறிவும் உடைய ஆத்மாக்களின் உடலின் நோயையும் மரங்களிலும் செடி கொடிகளிலும் மண்ணிலும் நோய்க்கான மருந்தையும் பரமான்மா வைத்துள்ளதாக வைரத்தை உடைத்தது போல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் சுசருதர் ஒளஷதங்கள் ரசங்களாலும் மந்திரங்களாலும் நிரப்பபட வேண்டும் என்றும் கூறுகிறார்.


    அந்தக் கால மருத்துவர்கள் மந்திரங்களிலும் வல்லுநர்களாக இருந்தார்கள், நவீன விஞ்ஞான கருவிகள் எதுவுமே இல்லாது சுசருதர் செய்த பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அனைத்திலும் மந்திரங்கள் மூலிகைகளின் உதவிகளாலேயே செய்யப்பட்டதாக பழைய கிரந்தங்கள் கூறுகின்றன

    நோய் தீர்க்கும் மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆலயங்கள் கிரேக்க நாட்டில் இருந்துள்ளன, அந்த ஆலயங்களில் படுத்து உறங்குவதனாலேயே நோய்கள் குணமாகி விடுவதாக கிரேகக் நாட்டின் மந்திர நிபுணர் கேலன் கூறியுள்ளார், சீன நாட்டில் கி,மு,450 ஆண்டில் வாழ்ந்த எம்ப்படிடாக்கின்ஸ் மனிதர்களின் தோல் மீதுள்ள துளைகள் வழியாக பல தீய சக்திகள் புகுந்தே நோயை உருவாக்குகிறது என்றும் அதை மந்திரங்களால் தொட்டே குணப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளார்

    இன்று நடைமுறையில் உள்ள ரெய்கி. பிரானிக்ஹீலிங் என்ற முறைகளும் அண்டத்தில் உள்ள காஸ்மிக் மற்றும் பலவித பிரணவம் சார்ந்த பல கதிர்களை உடலுக்குள் செலுத்தவதே ஆகும், மந்திரங்களும் அண்ட நாதத்தின் மறுவடிவு ஆகும், ஆகவே அண்டசக்தியின் பிம்பங்களுடன் மூலிகைகளும் மந்திரங்களும் இணைந்தால் சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியமாக்கி விடலாம்.

    மந்திரங்களில் இரண்டு வகை உண்டு, குட்டிச்சுவரை கோபுரமாக்கும் நல்ல மந்திரங்கள் ஒருவகை சாம்பிராஜ்யங்களை சாம்பல் மேடாக்கும் தீய மந்திரங்களை ஒரு வகை, இத்தகைய இருவகை மந்திரங்கள் உலகெங்கும் நம்மிடையே உள்ளது, தீய மந்திரங்களின் கொடுமையான விளைவுகள் பல குடும்பங்களை நாசமாக்கி இருக்கின்றன, அத்தகைய தீய மந்திரங்களை ஒடுக்குவதற்குரிய மந்திர மூலிகைகள் ஏதேனும் உண்டா? என்று நான் தேடுதலில் ஈடுபட்ட போது ஆன்மீக ரீதியிலும். மற்ற வகையிலும் பல நேரங்களில் எனக்கு வழிகாட்டியிருக்கும் இன்னொரு உலக வாசிகளான தெய்வீக ஆத்மாக்கள் பலமூலிகைகளை எமக்கு காட்டின அவற்றில் தீவினைகளான பில்லிசூன்யத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சில மூலிகை வகைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.


    ஆடு தீண்டாப்பாலை. திருநாமப் பாலை. வில்வம். துளசி. வேம்பு. திரவந்தி. அழுகண்ணி. ஏர்சிங்கி. சூக்குளி. வல்லாரை. கொடுப்பை. கரிசிலாங்கண்ணி. தாழைமடல். நாபி. அஷ்வலோகா மற்றும் பல மூலிகைகள் கலந்து ஸ்ரீ ருத்மூலமந்திரம் ஹோமத்தில் ஆகுதி செய்யப்பட்ட மந்திர ஒளஷத பஸ்பத்தை மக்கள் பயன்பாட்டிற்கு இன்றும் கொடுத்து வருகிறோம், இந்த மூலிகை பஸ்பத்தை கடல் நீரில் கலந்து சில மந்திர உச்சாடனத்துடன் சூன்யம் இருக்கும். பகுதியில் தெளித்தால் 9 நாட்களிலேயே தீய சக்திகள் விலகி நல்ல சக்திகள் குடிகொண்டு பல சௌக்ய சௌபாக்கியத்தை தந்து வருவதை இன்றும் நடைமுறையில் பலர் அனுபவித்து வருகிறார்கள்.


    இத்தகைய தெய்வீக ஆத்மாக்கள் பூமியின் சுத்திகரிப்புகாகவும் அதாவது “வாஸ்து” நிவர்த்திக்காகவும் பல விதமான மூலிகை பஸ்பங்களை தந்துள்ளார்கள், பல இலட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் வாஸ்து நிவர்த்திக்காக இடித்து தரைமட்óடம் ஆக்கப்படுவதை இம்மூலிகை பஸ்பங்கள் தடுத்து வாஸ்து தோஷத்தை முழுமையாக நிவர்த்தி செய்துவிடுகிறது, பல கஷ்டங்களை தாண்டி கட்டப்படும் வீடுகளில் காலம் முழுக்க குடியிருக்க முடியாமல் தேச சஞ்சாரியாக அவதிப்படுபவர்களும். கழுத்தில் தொங்கவிடப்பட்ட கல் கிணற்றுக்குள் ஆழத்தில் அமுக்கி விடுவதைப் போல் கட்டிய வீட்டை விற்க முடியாமல் மூச்சு திணறுபவர்களும் தனது வாழ்நாளில் ஒரு சொந்த விடு கட்டி விடமாட்டோமா என்று ஏங்குபவர்களும் இந்த மூலிகை ஓளதஷதங்களால் நல்ல பயன்களை பெற்று இருப்பதை பார்க்கும் போது தெய்வீக ஆத்மாக்கள் மனித குலத்திற்கு செய்து வரும் மகத்தான சாதனையை எண்ணி நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை


   வெந்ததை தின்று வேளை வந்தால் சாவோம் என்று அர்த்தம் அற்ற பாதையில் அவசரகதியாக நமது வாழ்க்கை ரதம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது, நம்மால் எது சரி? எது தவறு? என்று தீர்மானிக்க முடியவில்லை, எதை விடுவது எதை தொடுவது என்ற முடிவுக்கும் வர முடியதில்லை, நுனியில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுபவனைப் போல் பித்து குளித்தனமாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், நமது அஜாக்கிரதையினாலும். அசட்டையினாலும் இழந்த செல்வங்கள் அது எத்தனையோõ  நான் இங்கு குறிப்பிடும் மந்திரங்களும். மூலிகைகளும் நம் கையில் இருந்து நழுவி விடும் சூழலிலேயே இன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது, வெளிச்சத்திற்கு வீட்டை கொளுத்தியவன் போல் நிறைய செல்வங்களை நாம் இழந்து விட்டோம்.


    இந்த கொஞ்ச நஞ்ச செல்வங்களையாவது இழக்காமல் இருக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், இன்று நாம் விழித்துக் கொண்டால் இன்னும் ஒரு 1000 ஆண்டிற்கு சுகமாக வாழலாம், இல்லை நான் தூங்கத்தான் செய்வேன் என்று அடம்பிடித்தால் வாழ்ந்ததற்கான அடையாளங்களைகூட பார்வையிட எந்த ஜீவனும் இருக்காது, நம் முன்னோர்கள் நமக்கு தந்து விட்டு சென்ற இந்த அரிய செல்வங்களை நமது அறிவீனத்தால் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சென்று விடகூடாது, இவைகளைப் பாதுகாக்க ரகசியங்களையாவது தெரிந்து வைத்திருக்க உழைப்போமாக!

தமிழக அரசியல்வாதிகளை கொலைசெய்யும் மந்திரம்



   ந்திரங்களால் நன்மை தான் விளையும் எனும்போது அதை வைத்து தீமையும் நடக்கிறதே அது எப்படி சாத்தியம்?  ஒரே மந்திரம் நன்மை, தீமை இரண்டையும் செய்யுமா அல்லது இரண்டுக்கும் வேறுவேறு மந்திரங்கள் உண்டா? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள் கேட்காதவர்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்

சத்தம் என்பது ஒன்று தான்.  அதை இலக்கணப்படி நெறி படுத்தும் போது சங்கீதமாகிறது.  கட்டுபாட்டை மீறும் போது சந்தைகடை சத்தமாகிறது.  மந்திரங்களும் அப்படி தான்.  வரையறைக்குள் திட்டமிட்டு செயல்படுத்தினால் நன்மைகளை தரும்.  திட்டமிடாத செயலுக்கு கொண்டு வந்தால் எதிர்விளைவுகளைத் தான் தரும். 




    உதாரணமாக காயத்ரி மந்திரத்தை எடுத்து கொள்வோம்.  அதை உச்சாடனம் செய்வதற்கு சில நியமங்கள் உண்டு.  அந்த நியமனப்படி செய்யும் போது தான் அறிவு தெளிவை அது தரும்.  மனம் போன போக்கில் அதை உச்சரித்தால் அறிவும் தெளியாது.  மனமும் மகிழாது.

  காயத்ரி மந்திரம் போன்றவைகளை தவறுதலாக உச்சரித்தால் நன்மை மட்டும் தான் ஏற்படாது.  அதனால் விளைய கூடிய தீமைகள் என்று எதுவும் இல்லை.  ஆனால் வேறு சில மந்திரங்கள் இருக்கின்றன.  அவைகளை சிறிது தவறாக உச்சரித்தாலே அப்படி செய்பவனுக்கு பல விபரீதங்கள் ஏற்படும்.

 கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் என்ற வரிசையில் சண்டி ஹோமம் என்பதை கேள்விபட்டிருப்பீர்கள்.  இதற்கு உச்சரிக்க கூடிய மந்திரங்கள் மிக கடினமானவைகள், தீவிர மன ஈடுபாட்டோடு மட்டுமே செய்யக் கூடிய புனிதம் மிக்கவைகள் இந்த மந்திரங்களை கவன தடுமாற்றத்தாலோ ஞாபக மறதியாலோ தவறுதலாக உச்சரித்து விட்டோம் என்றால் குறிப்பிட்ட வேத சாஸ்திரியை பதம் பார்த்து விடும். 


     இதனாலே பல வேத பண்டிதர்கள் சண்டி ஹோமம் செய்ய ஒத்து கொள்ள மாட்டார்கள்.  அப்படியே ஒத்து கொண்டு வருகிற சிலர் வெறுமனே ஸ்ரீ சூத்தகம், துர்கா சூத்தகம், மேதா சூத்தகம் போன்ற சூத்தகங்களை சொல்லி ஹோமத்தை முடித்து கொள்வார்கள்.  பலருக்கு ஹோமங்களை பற்றிய விவரங்கள் முழுமையாக தெரியாது என்பதினால் இப்படிப்பட்ட பண்டிதர்களின் வண்டி கனஜோராக ஓடிக்கொண்டிருக்கிறது.  ஆனால் உண்மையில் சண்டி ஹோமம் முறைபடி செய்யபவர்கள் மிக குறைவு.  இதற்கு காரணம் மந்திரத்தின் வலுவே ஆகும்.  கேட்ட வரத்தை தரும் இந்த மந்திரம் தவறாக சொன்னால் கெட்ட வரத்தை கூட அல்ல சொன்னவனையே இல்லாமல் செய்துவிடும்.

  இது தவிர தீமைகளை நிகழ்த்துவதற்கென்றே பல மந்திரங்கள் உள்ளன.  இவைகள் அதர்வண வேதத்தில் நிறைய இருக்கிறது.  இருட்டும் வெளிச்சமும் கலந்தது தான் உலகம் என்பது போல் அயன வெளியில் நல்லதும் கெட்டதுமாக பல மந்திர அதிர்வுகள் சஞ்சரித்த வண்ணமே உள்ளன.  உள்ளொளி பெற்ற வேதகால ரிஷிகள் அவைகளை கிரகித்து தரவாரியாக தொகுத்து வைத்துள்ளனர்.  அத்தகைய மந்திரங்களால் ஊரை கொளுத்தலாம், நீர் நிலைகளை விஷமாக்கலாம் பயிர் பச்சகளை காய்ந்து போக செய்யலாம், மனிதர்களை கொத்து கொத்தாக சாகடிக்கலாம்.


  அமைதியான வாழ்க்கைக்கு வழி தேட வேண்டிய ரிஷிகள் அறிவு சக்தியை நாடியது ஏன் என்று கேட்கலாம்.  இந்த உலகத்தின் இயக்கமே நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டம் தான்.  தீமைகளை ஒழித்து கட்ட நன்மை ஆயுதம் ஏந்தியாக வேண்டும்.  தக்க நேரத்தில் ஆயுதம் ஏந்த மறுத்தால் மடிந்து மண்ணோடு மண்ணாக மக்கி போக வேண்டிய நிலைவரும்.  அந்த நிலையிலிருந்து தன்னை தற்காத்து கொள்வதற்கு தான் நன்மைக்கு ஆயுதம் வேண்டும்.  அத்தகைய ஆயுதம் தான் அதர்வண வேத மந்திரங்கள், அரக்கனை வெட்டி பிளக்க உருவாக்கப்பட்ட கோடாரி அரக்கன் கையிலேயே கிடைத்துவிட்டது போல பல சமயங்களில் இந்த மந்திரங்கள் தீயவர்களின் கையில் அகப்பட்டு கொண்டு திண்டாடுகிறது.

 மந்திர மாயங்களை உண்மையில்லை வெற்று மூட நம்பிக்கைகள் அவைகள் என சொல்பவர்கள் முக்கியமான ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.  சூன்யம் வைத்து ஒரு மனிதனை சாகடிக்க முடியும் என்றால் அரசியல் தலைவர்களை கொலை செய்வதற்கு சிரமப்பட்டு பல திட்டங்களை ஏன் வகுக்க வேண்டும். பேசாமல் ஒரு மந்திரவாதியிடம் பணத்தை கொடுத்து கச்சிதமாக வேலையை முடித்து விடாலாமே? என்பது அந்த கேள்வியாகும்.  இந்த கேள்வி கேட்கப்பட்ட விதம் வேண்டுமென்றால் விதண்டாவாதமாக இருக்கலாமே தவிர கேள்வியே விதண்டாவாதமல்ல.  மிகவும் சரியான தரமான கேள்வியென்றே சொல்லலாம்.  இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நிச்சயம் நமக்கு உண்டு.


  பொதுவாக நிறைய மனிதர்கள் எனக்கு சூன்யம் வைத்துவிட்டார்கள். அவனை தீய மந்திரங்களை பிரயோகம் செய்து கொன்று விட்டார்கள் என்று பேசுவதை காணலாம்.  ஆனால் அப்படி செத்தவர்களில், பலர், பாதிக்கப்பட்டவர்களில் பலர் உண்மையில் தீய மந்திரங்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பே கிடையாது.  காரணம் நாம் நினைப்பது போல யார் மேலே வேண்டுமென்றாலும் மந்திர பிரயோகம் செய்து விட முடியாது.  அப்படி யார் பாதிப்படைவார்கள் என்பதற்கு மந்திர சாஸ்திரத்தில் தனி விதியே இருக்கிறது.

  ஜாதகப்படி சூரியன் உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்து பிறந்த நபர்களையோ, சிம்ம ராசியில் பிறந்தவர்களையோ எந்த தீய மந்திரமும், தீய சக்திகளும் தொட்டு கூட பார்க்க முடியாது.  இது மட்டுமல்ல புர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்துக்கு உரிய கிரகம் நல்ல நிலையில் இருந்தாலும் மந்திரங்களால் பாதிப்படைய முடியாது.  மேலும் வலது கையில் சூரிய வளைவு ரேகை இருப்பவர்களை எத்தகைய மந்திரமும் தீண்டாது.


  தனி மனிதர்களை பாதிப்படைய செய்வதற்கு இத்தனை நெறிமுறைகளை சொல்கிறீர்களே நீங்கள் மந்திரங்களால் ஊரை கொளுத்தலாம், கொத்து கொத்தாக சாகடிக்கலாம் என்றும் சொல்லியுள்ளீர்கள்.  பல தனி மனிதர்களால் ஆனது தானே தேசம்.  பொதுப்படையான பாதிப்பு என்றாலும் அது தனிப்பட்ட மனிதர்களை சார்ந்து தானே நிகழ்கிறது.  எனவே இந்த கூற்று முன்னுக்கு பின் முரணாக தெரிகிறதே என்று சிலர் நினைக்கலாம்.  அது தவறல்ல.  ஆனால் தேசங்களை மந்திரங்களால் சீரழிக்கலாம் எனும் போது அதற்கென்று தனி விதிகள் உள்ளன.

  உதாரணமாக ராமநாத உடையாருக்கு ஜாதகப்படி நூறு வயது, ஆயுள் கண்டம் எதுவுமில்லை என்று வைத்து கொள்வோம்.  அவர் தமது அறுபதாவது வயதில் ஒரு விமான விபத்தில் செத்து போகிறார் என்று வைத்து கொள்ளுங்கள் அல்லது சுனாமி, நிலநடுக்கம், குண்டு வீச்சு இப்படி ஏதோ ஒரு பேரழிவில் இறந்து போகிறார் என்று வைத்து கொள்வோம் அப்போது இவருக்கு கணிக்கப்பட்ட ஜாதகம் பொய்யா? என்று நமக்கு தோன்றும்.  நிச்சயம் அப்படியிருக்க வாய்ப்பு இல்லை.  


  ஒரு பேருந்தில் நாம் பயணம் செய்கிறோம்.  நமது உயிர், உடமை எல்லாவற்றிக்கான முழு பொறுப்பு பேருந்து ஓட்டுநரை தர்மப்படி சார்ந்து விடுகிறது.  அந்த பேருந்தில் பயணம் செய்யும் அத்தனை பயணிகளின் விதியும் ஓட்டுநரின் விதியை சார்ந்தே அமைகிறது.  அப்படி தான் பல விபத்துக்களில் பல உயிர்கள் ஒரே நேரத்தில் போகிறது.  ஒரு பேருந்து ஓட்டுநரின் விதி எப்படி அனைவரின் விதியையும் கட்டுபடுத்துகிறதோ அப்படியே ஒரு நாட்டு மக்களுடைய பொதுவிதி நாட்டு தலைவன் நிலைக்கு மாறுகிறது.  தீய மந்திரங்களால் பாதிப்படைய முடியாத ஒரு தலைவன் நாட்டை ஆளும் போது மந்திர யுத்தங்கள் சாத்தியம் இல்லை.  அவன் வேறுமாதிரி அமைந்துவிட்டால் அது சாத்தியமாகிவிடும் அதன் அடிப்படையில் தான் அன்றும் இன்றும் மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 மேலும் மந்திரங்கள் தங்களது செயல்பாட்டிற்கு அக காரணிகளான நோய்களையும் புற காரணிகளான ஆயுதம்  மற்றும் மனிதனையும் பயன்படுத்தி கொள்கிறது.  ஒரு அரசியல் தலைவரை வீழ்த்துவதற்கு மந்திரங்களை பயன்படுத்தும் போது அது அவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டு இருக்கும் மற்றொரு கும்பலின் செயலை ஊக்கப்படுத்தி தன் பணியை முடித்து கொள்கிறது.  அல்லது இயற்கையாக நோய்களை உண்டாக்கி காரியங்களை சாதித்து கொள்கிறது. 

  இப்படிப்பட்ட அரசியல் கொலைகள் யுத்தங்கள் இன்றும் நடைபெறுகிறது.  இதை ஆழமாக புரிந்து கொண்டால் தீய மந்திரங்களின் பாதிப்பை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.  எல்லாவற்றையுமே இல்லை, கிடையாது, முடியாது என்று மறுத்து பழகப்பட்ட பகுத்தறிவுவாதிகள் இக்கருத்துக்களை புரிந்து கொள்வது சற்று கடினம் என்பதினால் நிச்சயம் மறுப்பார்கள் கேலி செய்வார்கள்.  ஆனால் அதைப்பற்றி நமக்கு அக்கறையில்லை.  அதே நேரம் தகவலை மக்களிடம் சொல்ல வேண்டிய கடமையை நாம் செய்தாக வேண்டும்.  நம்புகிறவன் நம்புகிறான்.  நம்பாதவன் போகிறான்.  நாம் நம் வேலையை கவனிப்போம்.

COMPUTER பற்றிய சந்தேகங்களும் அதன் தீவுகளும்

நான் கற்றுத் தெரிந்துகொண்ட சில கணிணி சார்ந்த பொது அறிவுத் தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

* இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்

* (WWW) World Wide Web - எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ

* World wide Web எனபதன் துவக்க கால பெயர் - என்க்வயர்

* கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் “புன்னகை தவழும் முகம்” எனபதைக் குறிக்க :-) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர்.

* கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்

* உலகின் முதல் மடிக்கணினி - டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது

* பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

* பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை உருவாக்கியவர் - ஃபால் பிரெயினார்ட்

* பெண்டியம் புராசஸர்களின் தந்தை எனப்படும் இந்திய விஞ்ஞானி - வினோத் தாம்

* பால் பிரெயினார்ட் என்பவை இந்தியாவின் சூப்பர் கம்யூட்டர் என அழைக்கப்படுகின்றன

* C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்


* லோட்டஸ் 1-2-3 எனும் மொழியை கண்டுபிடித்தவர் - மிச் கபோர்

* பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிம் பாட்டர்ஸன்

* தனது 20 ஆம் வயதிலேயே லினக்ஸ் உருவாக்கிய விஞ்ஞானி - லினஸ் தோர்வாட்ஸ்

* ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்

* (CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்

* Power by Intellect Driven by Values - என்ற முத்திரை வாக்கியம் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாக்கியம்

* ஹாட் மெயிலை உருவாக்கிய இந்திய ஐ.டி விஞ்ஞானி - ஸபீர் பாட்டியா

* இந்தியாவில் ஐ.டி சட்டம் நிலுவையில் வந்த வருடம் - 2000 ஆம் ஆண்டு

* இந்தியாவில் மிக அதிகம் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் - டி.சி.எஸ்

* கணினி அறிவியலின் தந்தையார் - ஆலன் டூரிங்

இந்த பதிவு எழுத காரணமாய் அமைந்த அனைத்து ஆக்கங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்!

SACHIN TENDULKAR வாழ்கை பற்றிய சில குறிப்புகள்

37 வயதாகும் சச்சின் டெண்டுல்கர், 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்தார். 


               
இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.


21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின், தனது 175-வது டெஸ்ட் போட்டியில் 50-வது சதத்தை அடித்து சாதனைப் படைத்துள்ளார்.


இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இதுவரை 1,532 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்த ஆண்டில் அவர் 7 சதங்களை விளாசியுள்ளார். அவரின் சராசாரி 85 ரன்கள் ஆகும்.


இதுவரை 175 டெஸ்ட் போட்டியில் விளையாடி 14,500 ரன்களுக்கு மேல் குவித்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையிலும் சச்சினே முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 39 சதங்களுடனும், தென்னாப்பிரிக்காவின் ஜேகஸ் காலிஸ் 37 சதங்களுடனும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளனர்.


ஒருநாள் போட்டியில் 46 சதம்


442 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 17,598 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 46 சதங்கள் அடித்துள்ள சச்சின் விரைவில் 50-வது சதத்தை அடித்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் வாழ்த்து


டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்துள்ள சச்சினுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சக வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், தென்னாப்பிரிக்க வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரங்களுடன் நன்றி : http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Sports&artid=349031&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=தொடர்கிறது சச்சின் சகாப்தம்


சச்சின் வரலாறு:

மறுமுனையில், டிசோட்சபேயின் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார் சச்சின். அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்த ஹாரிசின் ஓவரில் "சூப்பர்' சிக்சர் அடித்து அசத்திய சச்சின், ஸ்டைன் பந்தை "ஆப்சைடில்' தட்டி விட்டு, ஒரு ரன் எடுத்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்தார்.

தொடரும் சாதனை பயணம்...

கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனை பயணம் தொய்வின்றி தொடர்கிறது. நேற்று டெஸ்டில் 50வது சதம் அடித்த இவர், இன்னும் பல மைல்கல்லை கடக்க காத்திருக்கிறார்.
கடந்த 1973ல் மும்பையில் பிறந்த சச்சின், இளம் பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். 1988ல் பள்ளி அளவிலான ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் பங்கேற்ற இவர், தனது நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து முதல் சாதனை படைத்தார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இத்தொடரில் வக்கார் யூனிஸ் உள்ளிட்ட வேகங்கள் வீசிய பவுன்சரில் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்ட போதும், தனது ஆட்டத்தை தொடர்ந்தார். சோதனைகளை கடந்த இவர், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பாராட்டும் அளவுக்கு சிகரங்களை தொட்டார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்:
* டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.
* இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
* ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் (50) அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினை சேரும்.

50 சதம் வந்த பாதை

சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் அடித்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர் தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50வது சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் விபரம்:
சதம் அணி இடம் ஆண்டு
1. முதல் சதம் இங்கிலாந்து மான்செஸ்டர் 1990
2. 5வது சதம் இங்கிலாந்து சென்னை 1993
3. 10வது சதம் இங்கிலாந்து நாட்டிங்காம் 1996
4. 15வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 1998
5. 20வது சதம் நியூசிலாந்து மொகாலி 1999
6. 25வது சதம் ஆஸ்திரேலியா சென்னை 2001
7. 30வது சதம் இங்கிலாந்து லீட்ஸ் 2002
8. 35வது சதம் இலங்கை டில்லி 2005
9. 40வது சதம் ஆஸ்திரேலியா நாக்பூர் 2008
10. 45வது சதம் வங்கதேசம் மிர்பூர் 2010
11. 50வது சதம் தென் ஆப்ரிக்கா செஞ்சுரியன் 2010

ஆஸி.,க்கு எதிராக அதிகம்


தனது 50 டெஸ்ட் சதத்தில் சச்சின், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11
சதங்கள் அடித்துள்ளார். அடுத்து இலங்கைக்கு எதிராக 9, இங்கிலாந்துடன் 7
சதங்கள் அடித்துள்ளார். ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சச்சின் எடுத்த
சதங்களின் விபரம்:

அணி சதங்கள்

1. ஆஸ்திரேலியா 11

2. இலங்கை 9

3. இங்கிலாந்து 7

4. தென் ஆப்ரிக்கா 6

5. வங்கதேசம் 5

6. நியூசிலாந்து 4

7. வெஸ்ட் இண்டீஸ் 3

8. ஜிம்பாப்வே 3

9. பாகிஸ்தான் 2

தோனிக்கு பெருமை

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (200*) எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் (எதிரணி-தென் ஆப்ரிக்கா) ஏற்படுத்திய போது அவருடன் எதிர் முனையில் களத்தில் இருந்தவர் கேப்டன் தோனி. தற்போது, டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து சச்சின் மற்றொரு வரலாறு படைத்த போதும், இவருடன் களத்தில் இருந்தவர் தோனி என்ற பெருமை பெற்றுள்ளார்.

ஆதாரங்களுடன் நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=
7955&Value3=I

வலைப்பூ பற்றிய புள்ளிவிவரம்

 பிளாக்கர் தளங்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டவை.

இதுவரை தமிழில் 487590 பதிவுகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் 44 தமிழ் வலைப்பூக்கள் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான பதிவுகள் இட்டுள்ளது.
அடுத்து 90 தமிழ் வலைப்பூக்கள் ஐநூற்றிற்கும் மேல் பதிவு இட்டுள்ளது.
இதில் முதல் வரிசைப்படி,
5695 கடலூர் மாவட்ட செய்திகள் majakarthi cuddalore-news.blogspot.com
4822 தமிழ்த்தேசியம் Tamilsvoice tamilthesiyam.blogspot.com
4199 தமிழ் முஸ்லீம் தெய்வமகன் thamilislam.blogspot.com
4113 ஈழம் செய்திகள் kavishan kavishan.blogspot.com
4089 VanniOnline வன்னியன் www.vannionline.com
3988 எழில் எழில் ezhila.blogspot.com
3839 தரவு ۞உழவன்۞ www.tharavu.com
3260 தமிழ் ஓவியா தமிழ் ஓவியா thamizhoviya.blogspot.com
3127 IdlyVadai - இட்லிவடை IdlyVadai idlyvadai.blogspot.com
2985 what hot now?.fast tamil news with video::best tamil blogs for youngers::Student, mayan isoorya.blogspot.com


மறுமொழிகள் என்றுப் பார்த்தால் மொத்தம் 2791329 மறுமொழிகள் தமிழில் உரையாடப்பட்டுள்ளது.
அதில் 33 வலைப்பூக்கள் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மறுமொழிகளைப் பெற்றுள்ளது.
அடுத்ததாக 541 வலைப்பூக்கள் ஆயிரத்திற்கும் மேல் பெற்றுள்ளது.

IdlyVadai - இட்லிவடை 34328
வலைச்சரம் 32124
துளசிதளம் 28854
வகுப்பறை 28412
Dondus dos and donts 27139

பதிவர்கள் என்றுப் பார்த்தால் 5143 பதிவர்கள்* பதிவிடுகிறார்கள். அதில் 1747 பதிவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை தங்கள் வாசகருக்கு வெளிப்படையாகக் கொடுத்துள்ளனர்.

பதிவிற்கு ஏற்ற மறுமொழிகள் என்கிற விகிதத்தில் கிட்டத்தட்ட பதிவொன்றிற்கு 100 மறுமொழிகள் சராசரியாகப் பெற்றுள்ளவர்கள் மூவர் உள்ளனர்.
112.4444444 அண்ணாமலையான் அண்ணாமலையான்
107.5769231 பட்டிகாட்டான் ( பட்டணத்தில்) Jey
99.89189189 ஸ்டார்ட் மியூசிக்! பன்னிக்குட்டி ராம்சாமி


ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு தளங்கள் செயல்படாமல் நின்றுபோய் விடுகின்றன. சில சமயம் மட்டும் தளங்கள் பெயர்மாற்றத்தால் இந்த தடங்கல் ஏற்படும். மற்ற சமயங்களில் பல தனிப்பட்ட காரணங்களால பதிவர்கள் வலைவுலகை தவிர்கிறார்கள் எனலாம்.
2004ல் 29
2005ல் 137
2006ல் 356
2007ல் 346
2008ல் 587
2009ல் 507
என்ற எண்ணிக்கையில் பல தளங்கள் புதிய பதிவுகளின்றி பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருக்கின்றன.



6500க்கும் மேல் சேகரிக்கப்பட்ட பிளாக்கர் தளங்கள் மற்றும் 540 க்கு மேல் சேகரிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் தளங்கள் ஆகியவற்றின் தொகுப்புகள் இங்கே உள்ளன. புதிய புதிய எழுத்துக்களைத் தேடிப்படிக்கலாம். விடுபட்ட தளங்களை தேடிக் கொடுக்கலாம்.

http://tamilpoint.blogspot.com/p/tamil-blogs.html

தமிழ்மணம், tamilblogs.blogspot.com மற்றும் http://tamilpadhivu.blogspot.com/2010/03/blog-post_11.html ஆகிய இடங்கள் தான் பிரதானமாகக் கொண்டு வலைப்பூக்கள் திரட்டப்பட்டு தானியங்கி மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டது.

ஒரேப் பக்கத்தில் எத்தனைப் தளங்கள் வேண்டுமோ அதற்கிணங்க வலதுப்புற மேல் பகுதியில் அமைத்துக் கொள்ளலாம்
தலைப்புவாரியாகவோ, எண்ணிக்கைவாரியாகவோ வரிசைப்படுத்த அதன் தலைப்பை சொடுக்கலாம்.
அடுத்த பக்கத்தில் மேலும் பல விபரங்களுடன் பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் தளங்கள் உள்ளன்.


விசித்திரமான பதிவர்களின் பெயர்கள், வலைப்பூவின் பெயர்கள், அதில் குறிப்பிடப்படும் உப தலைப்புக்கள் என சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லை. இன்று பதிவிடுபவர்கள் தவிர ஒரு காலத்தில் பதிவிட்டுக் கொண்டிருந்தவர்களின் பதிவுகளை மீண்டும் படிக்கச் சேகரித்ததில் ஒரு இதம். நீங்களும் படித்துப்பாருங்கள்.

Disclaimer:ஒவ்வொரு தளத்தின் செய்தியோடையை[feeds] தகுந்த வடிகட்டியுடன் இந்த தகவல்கள் எடுக்கப்பட்டது. கூகுளின் feeds அதிகமான அளவுப் போகும் போதும் சிற்சில எண்ணிக்கை குறைகள் ஏற்படலாம் என்றும் கொள்க.

USE & THROGH E-MAIL

 
முன்பெல்லாம் சும்மா நடந்துபோவோர் திரும்பிப் பார்ப்பவருக்கெல்லாம் நமது மின்னஞ்சல் முகவரியை இனாமாக தந்துவிட்டு குஷிப்படுவோம், அவரும் அதைப் வைத்து என்ன செய்யவென தெரியாமல் 'துரை இங்கிலீஸ்' எல்லாம் பேசுதுன்னு போவாரு. ஆனா இப்ப இருக்கிறவுங்க அப்படியில்ல நீங்க ஒரு மின்னஞ்சல் கொடுத்த அதுக்கு ஒரு லொள்ளு  மெயிலில் இருந்து கரைச்சல் மெயில் வரை அனுப்பி அவர் குஷிப்படுகிறார். அது பத்தாமல் அவர் லாக்கின் பண்ண தளத்துக்கு எல்லாம் உங்களையும் சேர்த்து இன்வைட் செய்வாரு மற்றும் புதிய புதிய ஸ்பேன் மெயிலைக்கூட விடாமல் முடிந்த அளவு பார்வேர்ட் செய்ய முயற்சியாவது செய்வார். அப்ப நம்ம தலைவரு புதுசு புதுசா முளைச்ச தளத்துக்கொல்லாம் தெரியாமல் கொடுத்திருந்த அந்த மின்னஞ்சலுக்கு புதுசு புதுசா யோசிச்சு மெயில் வரும்... நிற்க.


இப்படிப் பட்ட சூழலில் தற்காலிக மின்னஞ்சல்கள் துணைசெய்யும். யாஹூ மின்னஞ்சல் சேவையுடன் இந்த தற்காலிக மின்னனஞ்சல் வசதியை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். யூஸ் அண்ட் த்ரோ கப்பைப் போல மின்னஞ்சல் முகவரியை மாற்றிக் கொண்டே போகலாம். அடிப்படையில் உங்களைச் சார்ந்த பெயரிட்டுக் கொண்டு கடைசியில் ஏதேனும் எண்களைப் போட்டு முகவரிகளை உருவாக்கலாம் அல்லது உங்கள் விருப்பமே. 

உதாரணத்திற்கு எனது யஹூக் கணக்கில் மேலும் ஒரு ellam_summa-test@yahoo.com என்று ஒரு கணக்கை உருவாக்குகிறேன். வேண்டிய தளங்களில் பதிவு செய்கிறேன், வேண்டியவருக்கெல்லாம் கொடுக்கிறேன். கொஞ்ச காலம் கழித்து அந்த மெயிலுக்கு தேவையில்லாத ஸ்பேன் வருகிறதென்றால் அதைப் அப்படியே  லேபிள் போட்டு வரும் மின்னஞ்சல்களைப் பிரித்து தேவையான முகவரிகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அதும் சில காலங்களில் யாரும் தேவையில்லை என்றால் அந்த முகவரியை அப்படியே அழித்தும் விடுகிறேன். எப்படி வசதி! மேலும் சில பல முகவரிகளை உருவாக்கி வெவ்வேறு தொடர்புகளுக்கும் நான் கொடுக்கலாம் இப்படி ellam_summa-friends@yahoo.com ellam_summa-jobs@yahoo.com ellam_summa-bloggers@yahoo.com இதில் கவனித்தால் நமது அடிப்படை பெயர் மாற்றாமல் கடைசிப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாக புதிய முகவரியையும் உருவாக்கலாம்.அதிக பட்சமாக 500 முகவரிகள் உருவாக்கிக் கொள்ளலாம்.

எப்படி?
யாஹூவில் நுழைந்தப் பின் அதன் வலது புற optionயை தேர்வு செய்யவும்
பிறகு Disposable Email address  தொகுதியில் புதியதாக தற்காலிக முகவரியை உருவாக்க add செய்யவும்

அடுத்து வேண்டிய அடிப்படை பெயரைக் கொடுக்கவும் அடுத்த பகுதியில் குறியீடுகள் கொடுக்கவும் எல்லாம் உங்கள் வசதிக்கேற்ப

பிறகு சேமித்தப் பிறகு, அந்தப் பக்கத்தில் இந்த முகவரி சேர்ந்துக் கொள்ளும். இனி இந்த முகவரியை யாரிடமும் கொடுக்கலாம். இந்த முகவரிக்கு வரும் அஞ்சல்கள் தானாகவே ஸ்பேன் பெட்டிக்குப் போகும் அதனால் உங்கள் முக்கிய கணக்குக்கு எந்த தொந்தரவும் வராது. சரி, இந்த அஞ்சலுக்கு சிலர் வேண்டிய தகவல்களை அனுப்பினால் ஸ்பேன்னிலிருந்து அதை எப்படி பிரிப்பது?
அதற்கு பில்டர் எனப்படும் வடிப்பானை பயன்படுத்தலாம் அதற்கு முன் folderயை உருவாக்க வேண்டும். இங்கே சென்று புதிய போல்டரை சேர்த்து பெயரிட்டுக் கொள்ளவும்.
அடுத்து வடிக்கட்ட[filter] இங்கே சென்று filter -> add filter கொடுத்து போனாபோகுதுனு வடிப்பானுக்கு ஒரு பெயரைக் கொடுத்திட்டு 
  • அனுப்புனர் வாரியாப் பிரிக்க sender கட்டத்தில் அனுப்புனர் முகவரியைப் போடவும்  அல்லது
  • உங்கள் முகவரி வாரியாப் பிரிக்க recipient கட்டத்தில் உங்களின் தற்காலிக முகவரிகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யவும் அல்லது
  • தலைப்பு வாரியாகப் பிரிக்க subject கட்டத்தில் வேண்டிய சொற்களைப் போட்டுக் கொள்ளவும் 

கடைசியில் எந்த போல்டருக்கு அனுப்ப வேண்டுமோ அதை தெரிவு செய்யவும் கடைசியாக சேமிக்க மறக்காதீர்கள்.அவ்வளவே
இனி அந்த போல்டரில் நீங்கள் பிரித்த வகை அஞ்சல்கள் தானாக வந்து சேர்ந்துவிடும் 

தேவையான போது இந்த தற்காலிக முகவரிகளை இந்த Disposalble Email address தொகுப்பில் மாற்றவும் அழிக்கவும் முடியும்
பிற்சேர்க்கை:[தடங்கலுக்கு வருந்துகிறேன்.]

இப்போதுதான் கவனிக்கப் பட்டது. சில கணக்கிற்கு இந்த வசதி உடனடியாகத் தெரிவதில்லை, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக கோரிக்கைக்கு வாடிக்கையாளர் உதவியையும் அணுகலாம். 'Disposable Email Addresses' வசதியைத் தரும் மற்றும் சில தளங்கள்.
இவை இலவசமானவைதான்

கணினி சார் மக்களுக்கான ராசி பலன்




ன்பான கணினி சார்  மக்களே..!

இதோ உங்களுக்காக 2010 ஆம் ஆண்டுக்கான பிரத்யேக PC பலன்...


மேஷம்

மேன்மையான பாசக்கார மேஷ ராசி நேயர்களே!

உங்களது ஸ்கிரீன் சேவரின் நீட்டிப்புத் தன்மை குறைந்து அடிக்கடி தொந்தரவு கொடுக்கும். அதனால், ஸ்கிரீன் சேவராக வெள்ளைச் சுண்ணாம்பை பூசுங்கள். கணினி ரீஸ்டாட் ஆகையில் மக்கர் செய்யும். இடைப்பட்ட நேரத்தில் மற்றவரை கலாய்த்து மகிழலாம்.

ராசியான பிரவுசர் : நெருப்புநரி 3.5.2

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1600x1200

ரிஷபம்

ராஜயோக ரிஷப ராசி நேயர்களே!

உங்களது கணிணி 20 சதவீதம் செயல்திறன் அதிகமாகி படுவேகமாக இருக்கும். அதனால் தங்களும் வேகத்தை அனுசரித்து ஹெல்மெட் அணிவது சிறப்பு. ரீசைக்கில்பின் காணமால் போகலாம். விண்டோஸுக்கு ரெக்கொஸ்ட் அனுப்பலாம். மால்வேர்கள் 9வது லக்கனத்திலிருந்து மாறுவதால் வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டால் வேதனைகள் தீரும்.

ராசியான பிரவுசர்: ஐ.இ. 1.5

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1366x768

மிதுனம்


மிகுதியான உற்சாகமுடைய மிதுன ராசி நேயர்களே!

மானிட்டர் திரை கண்களை எரிப்பதால் கண்களை மூடியவாரே கணினியை பாருங்கள். டிவிட்டரில் துரத்துபவர்களால் மனவுளச்சல் பெறலாம். அதனால் ஓடோடிப் போகப் பழகிக்கொள்ளுங்கள். ஜங்க் மெயிலை சுத்தம் செய்ய சரியான நேரம் காலை 11:36.

ராசியான பிரவுசர் : ஒபேரா

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு இல்லை

கடகம்

கடினவுழைப்பாளியான கடக ராசி நேயர்களே!

தங்கள் கடவுச்சொலை மற்றவர்கள் தவறாக அடித்து, தங்கள் வங்கி கணக்குகள் முடக்கலாம். அதனால் தாங்களாகவே கணக்குகளை முடக்குவது சாலச் சிறந்தது. சர்வரும் சர்வர் உபகரணங்களாலும் கண்டம் ஏற்படலாம். தெண்டம் ஆகாமல் பார்த்துக்கொள்ள பரிகாரமாக இந்த பக்கத்தைப் பரிந்துரைத்தவரின் லிங்க்கை மூன்று முறை க்ளிக்கி கமெண்டிட்டு, அவருடைய வங்கி கணக்கில் தட்சணையாக சில டாலர்களை போட்டால் தண்டங்களில்லாமல் கொண்டாடலாம்

ராசியான பிரவுசர்: கூகில் குரோம்

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1280x1024

சிம்மம்

சிரித்த முகமுடைய சிம்ம ராசி நேயர்களே!

நீங்கள் விளையாடும் சிறிய கேம்ஸ்களில் தோற்றுவிடுவீர்கள். அதனால் பெரிய பெரிய கேம்ஸ்களை சிறிதாக விளையாடுங்கள். நீங்கள் உள்ளே அனுப்பும் குறுந்தகடு சி.பி.யு.வில் சிக்கிக் கொள்ளலாம். நீங்கள் உள்நுழையும் இயங்கு தளங்கள் 'ஹங்'காகி உஷ்னப்படுத்தும். பரிகாரங்களுக்கு முந்திய ராசிக்காரரைப் பின்பற்றவும்.

ராசியான பிரவுசர்: நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1024x768

கன்னி

கலையான கன்னி ராசி நேயர்களே!

உங்கள் கடவுச்சொல் உங்கள் நண்பர்களால் திருடப்படலாம். எனவே முன்ஜாக்கிரதையாக அவரிடம் அந்த கடவுச்சொல்லை கூறிவிடுங்கள். புதியவருடன் ஜி-டாக் செய்து சற்றுநேரம் குழப்பத்தில் விழலாம். ஓப்பென் செய்யும் அப்பிகேஷனில் ஒன்றுமிருக்காது. அதனால் ஒன்று செய்யாமலிப்பது உசித்தம்.

ராசியான பிரவுசர்: ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1680x1050

துலாம்

துணிவான துலாம் ராசி நேயர்களே!

கீபோர்டில் சில சமயம் பொத்தான்கள் தூங்கக்கூடும். அதனால் நீங்கள் கீபோர்டில் தலை வைத்து தூங்கினால் நன்றாக தூக்கம் வரும். கூகுளில் உங்கள் துளாவுதல் தெளிவு பெற்றாலும் உங்களுக்கு புரியாது.சில வைரஸ்கள் தூங்கும் போது தலையில் குட்டக்கூடிய வாய்ப்புயிருப்பதால், ஆன்டி வைரஸ் அப்டேட் செய்ய சரியான நேரம் காலை 9:15.

ராசியான பிரவுசர் : நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1280x800

விருச்சிகம்

அதிகமாக விமர்சிக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

உள்ளே சென்ற குறுந்தகடு தனது தலைவனுடன் உள்ளே வெளியே விளையாடும். அதனால் குறுந்தகடுகளை கவனமாக கையாளவும். வேர்ட் பையில்கள் கரப்ட் ஆகலாம். இதை பயன்படுத்திக்கொண்டு டாக்குமெண்டேஷன் செய்யாமல் தப்பித்துக் கொள்ளலாம். ஆன்டி வைரஸுக்கு பதிலாக அங்கிள் வைரஸ் பயன்படுத்துதல் நல்லது.

ராசியான பிரவுசர்: கூகில்க்குரோம், ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1680x1050

தனுசு

தைரியசாளியான தனுசு ராசி நேயர்களே!

இன்பாக்ஸில் அதிக மெயில் வந்து தொல்லை செய்யும். அதனால் ஒரு அவுடப் ஆபீஸ் மெயிலை தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் திறக்கும் வலைதளங்கள் மகிழ்ச்சியூட்டுவதாகவே இருக்காது. அதனால் இந்தப் பக்கத்தை மட்டும் திரும்ப திரும்ப படித்து மகிழவும். கலர் கலராக கம்ப்யூட்டர் கனவுகளாக வரும். முடிந்தால் தூக்கத்திலே கோடிங் எழுதுவீர்கள்.

ராசியான பிரவுசர்: ஐ.இ. 1.6

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1600x1200

மகரம்

மரியதைக்குரிய மகர ராசி நேயர்களே!

மெளஸ் வயர்கள் சிக்கிக்கொண்டு தங்களுக்கு உற்சாகமாக கோபமூட்டும். அதனால் அதிக வாலுடைய மெளசை பயன்படுத்துங்கள். டிவிட்டரில் துரத்துபவர்களால் மனவுளச்சல் பெறலாம். அதனால் மற்றவரை துரத்திப் பழகுங்கள். கணினி ரீஸ்டாட் ஆகையில் மக்கர் செய்யும்; கொஞ்சம் கிரீஸைவிட்டு ஸ்டார்ட் செய்யுங்கள்.

ராசியான பிரவுசர்: ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு 1280x1024

கும்பம்

நல்ல குணமுள்ள கும்ப ராசி நேயர்களே!

உங்களுக்கு இன்று கூகிள் இணைப்பு கிடைக்காமல் போகலாம். அதனால் யாகூவுக்கு போங்கள். ஓப்பென் செய்யும் அப்பிலிகேஷனில் ஒன்றுமிருக்காது. இன்று நீங்கள் ப்ளாக்போட சரியான நேரமில்லாததால் கமெண்ட் போடலாம். மொழி தொரியாத நபர்களிடமிருந்து புரியாத மொழிகளில் புதிய மெயில் வரலாம். அதனால் தெரிந்த மொழியில் புரிந்த மாதிரி பதிலெழுதப் பழகுங்கள்.

ராசியான பிரவுசர்: ஒபேரா

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1280x800

மீனம்

மகிழ்ச்சியான மீனராசி நேயர்களே!

நீங்கள் அனுப்பும் மெயில் சரியாக போய் சேராது. அதனால் ஒன்றுக்கு மூன்று முறை அதே மெயிலை ஃபார்வர்ட் செய்யவும். டிவிட்டரில் துரத்துபவர்களால் மொக்கை விழ வாய்ப்புள்ளது. இன்டர்நெட் வேகம் குறையும். அதனால் விவேகமாக செயல்படுங்கள். மூன்று முறை மானிட்டரை சுற்றுவது உடலுக்கும் மனதிற்கும் நலம் பயக்கும்.

ராசியான பிரவுசர்: நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1024x768

தமிழ் மென்பொருட்கள் (TAMIL SOFTWARES)

"சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்ற பாரதி அச்சத்திற்கு எச்சமிட்டாற்போல  தொழிற்நுட்பத்தில் தேக்கநிலைதான் மிச்சமுள்ளது. அரசு பணிவாரிய தேர்வுகளில்கூட குறிப்பிட்ட துறை பாடங்களுக்கு கலைச்சொற்கள் பஞ்சத்தால் ஆங்கிலவழி முறைதான் பின்பற்றப்படுகிறது. இவை இப்படியிருக்க இணைய வெளியில் தமிழ் வளங்கள் கணிச்சமாகத்தான் உள்ளது. புதிதாக கணினி உலகிற்கு வருபவர்கள் தமிழில் உள்ள மென்பொருட்கள் பற்றி அறிவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்க இப்பதிவு உதவலாம்.
கூகிள் தமிழ் ஒலிமாற்றிப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் பரவிறக்க பதிப்பாக Input Method Editor [IME] என்கிற மென்பொருளை வழங்குகிறது. இதில் தமிழ் மூலபதிப்பை தரவிறக்கி விளக்கம் கூறியப்படி நிருவிக்க் கொள்ளலாம். அதன் பின் வேண்டிய இடங்களில் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம் அவை நோட்பேடோ அல்லது MS வேர்டாகவோ இருக்கலாம். தட்டச்சிடும் ரோமன் எழுத்துக்களின்[English] ஒலிகளுக்குத் தகுந்த தமிழ் எழுத்தை தட்டச்சிடும். சொந்த கணினியாக வைத்திருப்பவர்கள் இதை ஒருமுறை பதிப்பதன் மூலம் வலை தளங்கள் முதல் கணினி படங்கள் வரை தமிழில் அடிக்கலாம்.

கூகிள் வெளியீடுகளுக்கு முன்பே வந்த தமிழ் எடிட்டர். பல துணை கருவிகளுடன் பல வசதிகளுடன் பத்திகள் தட்டச்சு செய்யலாம். தமிழ் மொழி விளையாட்டுக் கருவிகளும் வழங்குகிறது.

இதுவும் தமிழ் சொல்செயலிதான்[word processor] ஆனால் கூடுதலாக unicode லிருந்துமொழிக்கு மாற்றும் வசதி, மற்றும் கட்டணங்களின் கீழ் இன்னபிற வசதிகளையும் வழங்குகிறது.

இது கூகிள் IME போல நிறுவி விட்டால் எல்லா கோப்புகளிலும் தமிழில் நேரடியாக தட்டச்சுயிடலாம். ஒவ்வொரு பதிப்பாக வசதிகளை மேன்படுத்திக் கொண்டேஇருக்கும் இந்த மென்பொருள் கடைசியாக அகஸ்ட் 2010 வரை வெளிவந்துள்ளது.

நியூ ஹரிஜோன் மீடியா[கிழக்கு பதிப்பகம்] தயாரிப்பில் வெளிவந்த ஒலி பெயர்ப்புக்கருவி. virtual தட்டச்சுப் பலகையும் உண்டு. ஆனால் பழகும் வரை பிரேத்தேகமான ஆங்கில எழுத்துக்களால் சில சமயம் எழுதவேண்டிவரும்.

இ-கலப்பை என்னும் மொழிமாற்றுக் கருவி. அதிகம் மேன்படுத்தப்பட்ட வடிவில் வெளிவருகிறது. இது ஒரு திறமுல மென்பொருளாகும்[open Source] இதை நீங்கள் கூட அபிவிருத்தி செய்யலாம்  

ஒவ்வொரு தமிழ் இணைய பயனரிடம் இருக்க வேண்டிய மென்பொருட்கள். இந்திய மொழிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி[TDIL] அமைப்பின் கீழ் மத்திய அரசின் மானியத்தின் மூலம் தமிழ் மொழிக்கான ஆபிஸ் சூட்[office suit] தருகிறது. டாக்யூமென்ட், ஸ்ப்ரெட்ஷீட், பிரெசேன்டேஷன், HTML எடிட்டர் மற்றும் படிம கருவிகள் வழங்குகிறது.  
தமிழ் எழுத்துருக்கள், தமிழ் எடிட்டர், தமிழ் அகராதி, தமிழ் உலாவி[browser], தமிழ் OCR[ஸ்கேன் செய்த தமிழ் பக்கங்களிலிருந்து தமிழ் எழுத்துக்களைப் படிக்க உதவும்] போன்ற மென்பொருட்களை வழங்குகிறது. இணைய வழியாகவே தரவிறக்க வசதியுள்ளது. அது போக இணைய இணைப்பில்லாதவரும் பயன் பெறும் வகையில் இலவசமாக* குறுந்தகடையும் வழங்குகிறது. 
குறுந்தகடு[cd] வேண்டுபவர்கள் இந்தப் படிவத்தில் பதிவதன்முலம் பெறலாம்.  வெளிநாட்டினற்கும் குறுந்தகடுகள் அனுப்பப்படுமாம்

http://specials.msn.co.in/ilit/Tamil.aspx
மைக்ரோசாப்டின் தமிழ் மொழியாக்க கருவி வலை தளங்களுக்கும், டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வழங்ககப்படும் சில மென்பொருட்கள்[நான் கேரேண்டி இல்லை மக்களே]

ஆனானியாக இல்லாமல் முறையான தமிழ் மென்பொருட்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரியப்படுத்தவும்.