Monday, March 28, 2011

கடவுளுக்கு அருகில்


கடற்கரைக்குச் சென்று பார்த்திருப்பீர்கள், கடல் அலைகள் விம்மித் தவழ்வதும் – நண்டுகளும் – சங்குகளும் கண்டு வியந்திருப்பீர்கள். அலைகள் வரும்; மணல் வரிகள் அமையும்; நண்டுகளின் குழிகள் தெரியும்; அலைகள் திரும்பும்; மணல் சித்திரங்கள் அழியும். நண்டுகளின் குழிகளும் உங்கள் காலடியுடன் அழிந்து போகும்.
அலை உயிரற்றது; நண்டு உயிருள்ளது. உயிருக்கும் , உயிரற்றதற்கும் முக்கியமான வேறுபாடு என்ன ? ஒழுங்கு…
எப்படி ?

இந்த இடத்தில் சிறு அறிவியல் செய்தி தெரிந்து கொண்டு படித்தால்தான் மேற்கொண்டு புரியும். தெர்மோ டைனமிக்ஸ்ஸின் இரண்டாவது விதி பற்றி நீங்கள் அறிய வேண்டும். எளிதாக சொன்னால் ‘ஆதர்ச இயந்திரம்’ என்று எதுவும் கிடையாது. நூறு விழுக்காடு ஆற்றல் கொண்ட இயந்திரம் எதுவும் இருக்க முடியாது. உதாரணம் ஒரு நீராவி இஞ்ஜின் எரிக்கும் நிலக்கரியின் அத்தனை உஷ்ணத்தையும் ஆற்றலாக மாற்றுவதில்லை. கொஞ்சம் உஷ்ணம் விரயமாகவும் , தேய்மானத்திலும் தப்பிவிடும். ஒரு நீராவி இஞ்ஜின் தண்டவாளத்தில் ஓடுவது ஒழுங்கின் அடையாளம். அது சக்தியை விரயம் செய்வது ஒழுங்கின்மையின் அடையாளம்.
உஷ்ணம் என்பது மாலிக்யுல் மூலக்கூறுகள் கன்னா பின்னா என்று அலைவதனால் ஏற்படுகிறது. தெர்மோடைனமிக்ஸின் இரண்டாம் விதி பிரபஞ்சத்தில் ஒழுங்கிலிருந்து ஒழுங்கின்மை ஏற்படுவதை திருப்பி அமைக்க முடியாது என்கிறது.
சுருங்கச் சொன்னால் ஒழுங்கின்மை பிரபஞ்சத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதை நிறுத்த முடியாது. பனி உருகுவது, முட்டை உடைவது , கடலலைகளால் காலடிச் சுவடுகள் அழிவது எல்லாம் திரும்பப்பெறமுடியாத இழப்புகள். அலைகளால் காலடி சுவட்டை அழிக்கத்தான் முடியும், உண்டாக்க முடியாது. சூரியனால் பனிக்கட்டியை உருக்கத்தான் முடியும். ஆக்கமுடியாது. அதற்கு மற்றொரு இடத்திலிருக்கும் ஒழுங்கைக் கலைக்கவேண்டும்.
விஞ்ஞானிகள் ஓர் அமைப்பின் ஒழுங்கின்மையை அளக்க என்ட்ரபி ( ENTROPY ) என்ற அளவுகோல் வைத்திருக்கிறார்கள்.

நானோ டெக்னாலஜி


நானோ டெக்னாலஜியின் நுட்ப அளவை அறிந்து கொள்ள முதலில் மைக்ரோ டெக்னாலஜியை நீங்கள் கவனிக்கவேண்டும். இன்றைய தினங்களில் எல்லா கம்ப்யூட்டர்களிலும் செல்ஃபோன்களிலும் ஏன் வாஷிங் மெஷின், டி.வி , ஃப்ரிஜ், விலை உயர்ந்த விளையாட்டு பொம்மைகள் போன்ற எல்லா சாதனங்களிலும் சிலிக்கான் மைக்ரோ கண்ட்ரோலர் சிப் இருந்தே தீரும். இந்த சிப்-கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன ?

மிக மிக சுத்தப்படுத்தப்பட்ட சிலிக்கான் என்னும் தனிமத்தின் மேல் அதிநுட்பமான கோடுகள் வரைந்து – ஜன்னல்கள் பிரித்து கட்டுபடுத்தப்பட்ட  அளவு ஆர்ஸ்னிக் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களை படியவைக்கிறார்கள். இதை மாஸ் தொழில் நுட்பம் என்கிறார்கள். மெட்டல், ஆக்ஸைடு, செமி கண்டக்டர் என்று மூன்று தளங்களில் மிக சிக்கலாக வடிவமைக்கப்பட்ட சர்க்யூட் இணைக்கப்புகளைப் பதித்து உற்பத்தி செய்கிறார்கள். இந்த தொழில் நுட்பத்தில் ஒரு மைக்ரான் வரை வந்திருக்கிறார்கள். அதற்கு குறைவான சப் – மைக்ரான் அளவையும் எட்டியிருக்கிறார்கள். மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் பத்து லட்சம் பாகம், நம் தலையில் நூறு மைக்ரான் தூசு துகள், நாற்பது மைக்ரான் – கண்ணால் பார்க்ககூடிய நுட்பம், முப்பது மைக்ரான் …இதெல்லாம் மைக்ரோ டெக்னாலஜி . நாம் பார்க்கபோவது நானோநானோ என்பது மைக்ரோவில் ஆயிரம் பாகம். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் நூறு கோடி பாகம். இந்த அளவு நுட்பத்தை இன்னும் அவர்கள் எட்டவில்லை. ஒரு நானோ மீட்டர் வரை உள்ளே போகவில்லை. எனவே சுமார் நூறு நானோ மீட்டரிலிருந்து நானோ டெக்னாலஜி ஆரம்பிக்கிறது. படிப்படியாக அளவு குறைந்துகொண்டே போய் ஒரு தனிப்பட்ட எலக்ட்ரானை நம் இஷ்டப்படி நடத்துவதுதான் இந்த இயலின் இறுதிக் குறிக்கோள். அந்த அளவுக்கு இன்னும் அவர்கள் வெற்றியடையவில்லை. எனினும் ஆராய்ச்சி முயற்சிகள் சில, ‘இது சாத்தியம்’ என்கிற நம்பிக்கை தருகின்றன. நாம் வெற்றி பெறாவிட்டாலும் இயற்கை வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு பாக்டீரியா வின் இயக்கம்தான் சிறந்த நானோ டெக்னாலஜி இயந்திரம். இந்த இயலின் மைல் கல்களைப் பார்க்கலாம்.

தாழ் நிலை விமானங்கள்


பொதுவாக நம் பொழுதுபோக்கு நேர பயன்பாட்டிற்குள் வருவது செய்தித்தாள்களும் – தொலைக்காட்சி ஊடகங்கள்தான். அவைகள் நம் மூளையை சுவாரஸ்ய செய்திகளின் சேகரிப்பு பெட்டகமாகவும் – நுகர்வு கலாச்சார வணிக புலமாகவும்தான் பெரும்பாலும் பயன்படுத்துவது நமக்கு புரிகிறதா ? நம் சிந்திக்கும் முறையையே மாற்றம் செய்யும் வலிமை கதை சொல்லிகளுக்கு உண்டு
.
கதை சொல்லி நாடக உருவாக்கம் செய்பவர்களுக்கு வியாபார நோக்கம்தான் பிரதானம் என்பதால், பிறழ் நிலை உறவு பிம்பங்களையே கதைகளில் உலவ செய்து, நம்மை சுவாரஸ்ய கதை விரும்பிகளாக மாற்றியதுதான் அவர்கள் வணிக சாமர்த்தியம். இவைகளின் தாக்கங்கள் நம் தனி மனித உறவு தொடர்புகளில் வெளிப்படுகிறது.
சமீபத்திய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘ இளம் வழுக்கை தலை உடையவர்களை ‘ மையப்படுத்திய பேச்சு உரையாடல் ஒளிபரப்பானது.
அதில் பங்கேற்ற இளம் பெண்கள் பலர் இளம் வழுக்கையாளர்களை வாழ்க்கை துணயாக ஏற்பதில்லை என கூறுவதை கேட்டேன். வாழ்க்கை துணை தேர்ந்தெடுப்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்றாலும் கூட , இந்த வாழ்க்கை துணை தேர்ந்தெடுப்பில் இந்த தாக்கத்தை உண்டு செய்தது தொலைக்காட்சிகள்தான் என்பது மறுப்பதற்கில்லை. நுகர்வு கலாச்சாரத்தால் ஏற்பட்ட மிதமிஞ்சிய ரசனை உணர்வுகளின் உளவியல் வெளிப்பாடுகள்தான் இந்த சிந்தனைகள்.
தலை முடிகளின் எண்ணிக்கையை வைத்து வாழ்க்கை தரத்தை எப்படி நிர்ணயிக்க முடியும் ? இது எந்த வகை புத்திசாலித்தனம் எனவும் புரியவில்லை.
நம் இணையத்தில் எண்ணங்களை காயப்படுத்தாத – ரசனையான தொடர்களை இந்த சவால்களுக்காகவே ஆரம்பித்துள்ளோம்.
நம் தலைக்கு மேலே தாழ பறந்து நம் மூளைக்குள் செய்தி வியாபாரம் செய்பவர்கள் பற்றி நமக்கு எச்சரிக்கை தேவை.

பிளாக்கரில் வரப்போகும் புதிய மாற்றங்கள்


தங்கள் கருத்துகளையும், செய்திகளையும் உலகத்திற்கு அறிய செய்யும் பணிக்கு பாலமாக இருப்பது இந்த பிளாக்கர் தளம் தான். (இதை பற்றி மேலும் முன்னுரை தேவையில்லை). இந்த தளம் விரைவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்க போகிறது. சென்ற ஆண்டில் மட்டும் இந்த தளத்தில் ஏராளமான வசதிகள் அறிமுக படுத்தியது. Template DesignerReal time StatsComment Spam Filtering, Mobile Templates, Web Fonts இப்படி ஏராளமான வசதிகளை நமக்கு கொடுத்து அசத்தியது.

கடந்த வருடத்தினை போலவே இந்த 2011வருடத்திலும் நமக்கு பல வசதிகளை அறிமுக படுத்த இருக்கிறது.


பழைய (தற்போது இருப்பது) போஸ்ட் எடிட்டர் பகுதி 



புதிய போஸ்ட் எடிட்டர் பகுதி 





பழைய (தற்போது இருப்பது) டாஸ்போர்ட்  பகுதி



புதிய டாஷ்போர்ட் பகுதி 




கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்


இப்பொழுது இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணையத்தில் இலவச மென்பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென்பொருட்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோகிக்கும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள்.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். 
  • பிறகு அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் உள்ள Liberkey Tools - Manage applications - Install an application Suite இந்த முறையில் க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு வேறு விண்டோ வரும். அதில் உள்ள Download the list of available suits என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 
  • வரும் விண்டோவில் இதில் உள்ள மென்பொருட்களின் List Basic Suite matrum Standard Suite என்று இரு வகையாக  பிரிக்க பட்டிருக்கும்.
  • அதில் கீழே உள்ள Install all applications on the Selected tool என்ற பட்டனை அழுத்தி மென்பொருட்களை நிருவிகொல்லுங்கள்.
  • இதில் உங்களுக்கு வேண்டாத அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள மென்பொருட்களை டிக் குறியை எடுத்துவிட்டு நீக்கி விடலாம்.


  • இப்பொழுது உங்களுக்கு தேவையான மென்பொருள் இந்த liberkey மென்பொருளில் சேர்ந்து விடும். 
  • இந்த மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவ வேண்டாம். நேரடியாக உங்களுக்கு தேவையான மென்பொருளை க்ளிக் செய்து உபயோகித்து கொள்ளலாம்.

 

பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்ய


பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இதன்மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடிப்பது என காண்போம்.
  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து இந்த லிங்கில் FACING CALL செல்லுங்கள்.
  • வரும் பக்கத்தில் உள்ள Go to App என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள Allow என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.


  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அந்த பக்கம் முழுவதும் லோட் ஆகும் வரை பொறுமை காக்கவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல பக்கம் திறக்கும் அதில் Allow என்ற பட்டனை அழுத்திவிடவும்.
  • அவ்வளவு தான் உங்கள் கணக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது. 
  • இவ்வசதியை பயன்படுத்த உங்கள் கணினியில் வெப் கேமரா அல்லது மைக்ரோபோன் வசதி இருக்க வேண்டும்.
  • இதில் உள்ள invite friends என்ற வசதி மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இணைத்து அவர்களோடு வீடியோ சேட்டிங்கில் பேசி மகிழலாம்.

நம்பினால் நம்புங்கள் – 16 – தானாக எரியும் குடிசைகள்


பழங்கால ஓலைச்சுவடிகளில் மாந்த்ரீகம் பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகள் உள்ளன. இவையெல்லாம் சுவடிகள் ஆய்வு மையம், சுவடியியல் நிறுவனம் போன்றவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதுகாறும் பதிப்பிக்கப் பெறவில்லை. இனி இவற்றையெல்லாம் பதிப்பிக்க வேண்டிய அவசியங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. இதைப் பகிர்ந்து கொள்வதன் நோக்கம், இப்படியெல்லாம் இருந்திருக்கின்றது, நம் முன்னோர்கள் இவற்றையெல்லாம் கடந்து  வந்திருக்கின்றனர் என்பதைத் தெரிவிக்கவேயன்றி மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்கு அல்ல.
இவையெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் நம் முன்னவர்களில் ஒரு சிலரால் இவையெல்லாம் பயன்பாட்டில் இருந்துள்ளவை என்னும் போது ஆச்சர்யமே எழுகின்றது.
அடிக்கடி கிராமப்புறங்களில் நாம் கேள்விப்படும் செய்தி. திடீர் திடீரெனக் குடிசைகள் தீப்பிடித்து எரிகின்றன. கற்கள் மேலிருந்து விழுகின்றன. ஆடைகள் எல்லாம் திடீர் திடீரெனத் தீப்பிடிக்கின்றன என்பது. சமீபத்தில் விழுப்புரம் அருகே கூட இதே போன்ற ஓர் பிரச்சனை ஏற்பட்டு அது நாளிதழ்களிலும், பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதற்குக் காரணம் சாமியாரின் சாபமா? தெ
ய்வத்தின் கோபமா? ஏவலா? செய்வினையா?. இல்லை, விபரீதப் புத்தி படைத்தவர்களின் சதியா? என ஒன்றுமே புரியாமல் மக்களும் அதிகாரிகளும், காவலர்களும் குழம்பி நின்றனர்.
என்ன காரணமாக இருக்கும்? விஞ்ஞானப்படி சாத்தியமில்லாததை எப்படி நிரூபிப்பது?. யாரேனும் வெண் பாஸ்பரஸைக் கொண்டு புத்திசாலித்தனமாக சதி செய்கின்றார்களா?. இல்லை இயற்கைக்கு மாறான சக்தி ஏதேனும் இவ்வாறு ஆட்டி வைக்கின்றதா? இவற்றிற்கெல்லாம் அவ்வளவு எளிதில் விடை காண முடிவதில்லை. இதுவரை இவ்வாறு நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் சரியான காரண காரியங்கள் கண்டறியப்படவில்லை என்பதுதான் உண்மை.
கிராமத்து மக்களோ “ஒரு சாமியார் வந்தார். யாரும் அவரை மதிக்கலை. திட்டித் துரத்திட்டாங்க. அதான் அவரு சாபம் இட்டுட்டாரு” என நம்ப முடியாத பல மாறுபட்ட தகவல்களைக் கூறுகின்றனர்.
இதுபற்றி ஒரு கதை கூட உண்டு. ஒரு சாமியார் பசிக்காக ஒரு ஊருக்கு வந்திருக்கின்றார். ஊர் மக்களில் சிலர் பிச்சை போடாதது மட்டுமல்லாமல், அவரைப் பலவாறாகக் கிண்டல் செய்தும் விரட்டி அடித்து உள்ளனர். அவர் போகும் பொழுது, இன்னும் பத்து நாள்ல, என் வயிறு எரிய மாதிரி இந்த ஊர் பத்தி எரியும்டா, அப்பத் தெரியும் நான் யாருன்னு என சாபம் விட்டுச் சென்றுள்ளார். அதே போன்று பத்து நாட்கள் கழித்து, ஊரில், வீடுகளில், ஆங்காங்கே தீ. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் எங்கெங்கோ சுற்றிச் சாமியாரைக் கண்டு பிடித்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்கு அந்த ஊரில் காய்த்த இளநீர் குடிக்கக் குடித்த பிறகு தான் தீ எரிவது நின்றதாம்.
இதெல்லாம் சாத்தியமா?… எப்படி இந்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன.. எப்படி இதனை விளக்குவது?… அது ஏன் ஏழைகள் வசிக்கும் குடிசை போன்றவை மட்டுமே எரிகின்றன. மாடி, ஓட்டு வீடுகள், பணக்காரர்கள் வசிக்கும் இல்லங்கள் எரிவதில்லையே ஏன்? கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
இவையெல்லாம் சாத்தியம் தானா என்றால் மாந்த்ரீக முறைப்படி இவையெல்லாம் சாத்தியம் தான் என்கிறது ஒரு சுவடி. அதன் பெயரே குடிசை திவால். இன்னமும் பதிப்பிக்கப் படாத அந்த ஏட்டுக்கட்டில் இது போன்ற பல இரகசியங்கள் புதைந்து கிடைக்கின்றன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வது, இப்படியெல்லாம் கூட உள்ளதா என வியப்புறவோ அல்லது வெறுப்புறவோ அன்றி, வேறெதற்கும் அல்ல.
அச்சுவடியிலிருந்து ஒரு சிறு பகுதி
“ஒரு மூஞ்சூரைப் பிடித்து, அதன் வயிற்றைக் கிழித்து, மசானச் சாம்பலை அதிலே திணித்து, அதற்கு மேலே——— பெண்ணிண் சீலையைத் தூக்கிச் சுத்தி, மயானத்திலே,—– பிணம் வேகுற போது அதிலே வைத்து, வெந்து நீரான அந்தச் சாம்பலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, தனக்கு வேண்டாதவர்கள் வீட்டுப் பிரப்பிலே —— செய்தால் அந்த வீடு திவால்.”
“அந்த நீரில கொஞ்சம் போல ஊதிப் போட்டு, “சாம்பவி, உமா தேவி, —-, —-, —-, வாமா, தூமா ஓடிவா திவால் என 108 தரம் ஜெபித்து ——– செய்ய அந்த வீடு திவால்”
படிக்கும் போதே சிரிப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கிறதல்லவா! என்ன செய்ய? அந்தக் காலத்தில் எதிரிகளை அழிக்க இதுபோல பல வழிகளை வைத்திருந்திருக்கின்றனர். ஆனால் தற்காலத்தில் இவை எல்லாம் தேவையில்லை. இதைவிடப் பிரமாதமாக வைரஸ், சிக்கன் குன்யா, பேர்ட் ஃப்ளூ என்று பல நோய்க் கிருமிகளை உருவாக்கியும், இரசாயன, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியும் அப்பாவிகளை, எதிரிகளை அழிக்கும் அளவிற்கு நாம் தாம் முன்னேறி விட்டோமே!.

வலைத்தளம் அமைக்க சிறந்த சேவை எது : ப்ளாக்கரா, வோர்ட்பிரசா


வலைத்தளம் ஆரம்பித்து எழுதி சிறிது நாளில் தனித்தளம் அமைக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள்


ஆனால் தனித்தளம் அமைக்க சிறந்த வழிமுறை எதுவென்று பலருக்கும் குழப்பம் வரலாம்

அதனால் ஒரு சிறு ஆலோசனை குறிப்பு

சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் தேவையில்லை என்றால் 3 வழிமுறைகளில் உங்கள் வலைப்பதிவை அமைக்கலாம்
  • 1. இலவசமாக .blogspot ல்
  • 2. இலவசமாக .wordpress.com ல்
  • 3. அட்சென்ஸ், கருவிபட்டை சேர்க்க பணம் செலுத்தி wordpress.com
சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் தேவையென்றால் 4 வழிமுறைகளில் உங்கள் வலைப்பதிவை அமைக்கலாம்
  • 4. இலவசமாக .blogspot ல்
  • 5. திருப்பி விடுவதற்கு பணம் செலுத்தி .wordpress.com ல்
  • 6. திருப்பி விடுவதற்கும் அட்சென்ஸ், கருவிபட்டை கூடுதல் பணம் செலுத்தி .wordpress.com ல்
  • 7. சொந்த சர்வரில் வோர்ட்பிரஸ் அல்லது வேறு மென்பொருட்களை நிறுவுதல் மூலமாக
இதில் ஒவ்வொரு வழிமுறையையும் விரிவாக பார்க்கலாம்

முதல் முறை இலவச .blogspot.com
இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. முற்றிலும் இலவசம்
  2. உங்கள் பதிவு ப்ளாக்கரின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
  3. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  4. தமிழிஷ் / இண்ட்லி உட்பட எந்த கருவிப்பட்டை சேர்க்கலாம்
  5. அட்சென்ஸ் சேர்க்கலாம்
  6. லேபிள்கள் உண்டு
  7. வார்ப்புருவை மாற்றும் சுதந்திரம் உண்டு
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. உங்கள் பெயரில் தளம் இருக்காது. blogspot.com என்றே இருக்கும்
இரண்டாவது முறை : இலவச .wordpress.com
  • உதாரணம் http://nchokkan.wordpress.com/
இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. இலவசம்
  2. உங்கள் பதிவு வோர்ட்பிரசின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
  3. லேபிள்கள் உண்டு
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. உங்கள் பெயரில் தளம் இருக்காது. wordpress.com என்றே இருக்கும்
  2. அட்சென்ஸ் சேர்க்க முடியாது
  3. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்க முடியாது
  4. தமிழிஷ் / இண்ட்லி உட்பட எந்த கருவிப்பட்டை சேர்க்க முடியாது
மூன்றாவது முறை : அட்சென்ஸ், கருவிபட்டை சேர்க்க பணம் செலுத்தி .wordpress.com 
  • உங்கள் முகவரி xyx.wordpress.com என்றே இருக்கும்
இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. உங்கள் பதிவு வோர்ட்பிரசின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
  2. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  3. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  4. அட்சென்ஸ் சேர்க்கலாம்
  5. லேபிள்கள் உண்டு
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. அட்சென்ஸ், கருவிபட்டை ஆகியவற்றை சேர்க்க வோட்பிரசுக்கு வருடத்திற்கு 45 டாலர் பணம் தர வேண்டும்
  2. உங்கள் பெயரில் தளம் இருக்காது. wordpress.com என்றே இருக்கும்
சொந்த பெயரில் தளம் வேண்டுமென்றால் நான்கும் வழிகள் உள்ளன

சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் அமைக்கும் முதல் முறை : ப்ளாக்கர் redirection உதாரணங்கள்
  • http://www.makkal-sattam.org/
  • http://www.parisalkaaran.com/
  • http://www.luckylookonline.com/
  • http://www.narsim.in/
இந்த சேவை கடந்த சில வருடங்களாக்தான் வழங்கப்படுகிறது. பல பதிவர்களுக்கு இப்படி ஒரு இலவச சேவை இருப்பதே தெரியாமல், சொந்த பெயரில் தளம் அமைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே காசு கொடுத்து தனிவழங்கியில் வோர்ட்பிரசில் பதிவு வைக்கிறார்கள் என்பது சோகக்கதை


இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. ப்ளாக்கர் சேவை முற்றிலும் இலவசம்
  2. தளம் உங்கள் பெயரில் இருக்கும்
  3. உங்கள் பதிவு ப்ளாக்கரின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
  4. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  5. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  6. அட்சென்ஸ் சேர்க்கலாம்
  7. லேபிள்கள் உண்டு
  8. வார்ப்புருவை மாற்றும் சுதந்திரம் உண்டு
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. டொமைனை புதுபிக்க வருடந்தோறும் சரியாக ஞாபகம் வைத்து பணம் செலுத்து வேண்டும்
சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் அமைக்கும் இரண்டாவது வழிமுறை : வோர்ட்பிரஸ் redirection – இதற்கு காசு தர வேண்டும் இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. தளம் உங்கள் பெயரில் இருக்கும்
  2. உங்கள் பதிவு வோர்பிரசின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. டொமைனை புதுபிக்க வருடந்தோறும் சரியாக ஞாபகம் வைத்து பணம் செலுத்து வேண்டும்
  2. திருப்பிவிடுவதற்கு (redirection) வோட்பிரசுக்கு வருடத்திற்கு 10 டாலர் பணம் தர வேண்டும் (http://www.velvetblues.com/web-development-blog/wordpress-com-vs-wordpress-org/)
  3. அட்சென்ஸ் சேர்க்க முடியாது
  4. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்க முடியாது
  5. தமிழிஷ் / இண்ட்லி உட்பட எந்த கருவிப்பட்டை சேர்க்க முடியாது
  6. வார்ப்புருவை தொகுக்கும் சுதந்திரம் கிடையாது


சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் அமைக்கும் மூன்றாவது வழிமுறை : வோர்ட்பிரஸ் redirection – மற்றும் பிற சேவைகளுக்கு பணம் செலுத்துதல் இதற்கு காசு தர வேண்டும் இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. உங்கள் பதிவு வோர்பிரசின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
  2. தளம் உங்கள் பெயரில் இருக்கும்
  3. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  4. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  5. அட்சென்ஸ் சேர்க்கலாம்
  6. லேபிள்கள் உண்டு
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. டொமைனை புதுபிக்க வருடந்தோறும் சரியாக ஞாபகம் வைத்து பணம் செலுத்து வேண்டும்
  2. திருப்பிவிடுவதற்கு (redirection) வோட்பிரசுக்கு வருடத்திற்கு 10 டாலர் பணம் தர வேண்டும் (http://www.velvetblues.com/web-development-blog/wordpress-com-vs-wordpress-org/)
  3. அட்சென்ஸ், கருவிபட்டை ஆகியவற்றை சேர்க்க வோட்பிரசுக்கு வருடத்திற்கு 45 டாலர் பணம் தர வேண்டும்
தமிழ் மண கருவிபட்டை சேர்ப்பதற்கும் காசு, redirectionக்கும் காசு என்று வோர்ட்பிரசில் எதற்கு எடுத்தாலும் காசு தான். எனவே இந்த முறையை பயன்படுத்தினால் உங்கள் பாக்கெட் பழுப்பது நிச்சயம் 



சொந்த டொமைன் அதாவது சொந்த பெயரில் தளம் அமைக்கும் நான்காவது வழிமுறை : ஒரு வழங்கியை வாடகைக்கு எடுத்து அல்லது வழங்கியில் குறிப்பிட்ட இடத்தை வாடகைக்கு எடுத்து வோர்ட்பிரஸ் அல்லது வேறு மென்பொருட்களை நிறுவுதல் இம்முறையில் உள்ள சாதகங்கள்
  1. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  2. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
  3. அட்சென்ஸ் சேர்க்கலாம்
  4. கூடுதல் சேவைகளை அளிக்கலாம்
இம்முறையில் உள்ள பாதகங்கள்
  1. டொமைனை புதுபிக்க வருடந்தோறும் சரியாக ஞாபகம் வைத்து பணம் செலுத்து வேண்டும்
  2. வழங்கி வாடகை எடுக்க வேண்டும். வழங்கிக்கு காசு செலவழிக்க வேண்டும். வருடந்தோறும் சரியாக புதுப்பிக்க வேண்டும். சரியான நேரத்தில் புதுப்பிக்காவிட்டால் தளம் தெரியாது
  3. உங்கள் பதிவு ஒரு வழங்கியில் மட்டுமே இருக்கிறது. அந்த வழங்கியில் ஏதாவது சரி செய்ய முடியாத கோளாறு என்றால் உங்கள் அனைத்து பதிவுகளும், மறுமொழிகளும் போயிந்தே (எனவே சொந்த தளத்தில் வோர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள், அனைத்து பதிவுகளையும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்)
  4. அதை விட பெரிய பிரச்சனை – பாதுக்காப்பு குளறுபடி.வோர்ட்பிரஸ் மென்பொருளில் இருக்கும் பாது காப்பு குளறுபடிகளை பயன்படுத்தி யாராவது ஹேக்கர் உங்கள் தளத்தில் malware சேர்த்து விட்டால் அதன் பிறகு உங்கள் தளம் தேடுபொறிகளால் தடை செய்யப்படும் அபாயம் உள்ளது
  5. சில தமிழ் எழுத்தாளர்களின் தளங்களில் நச்சு நிரலிகள் இருந்து அவை அந்த தளம் மூலம் பலருக்கும் பரவியது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் 
இணைய வல்லுனர்களை தவிர பிறருக்கு இந்த முறை சிறப்பானது அல்ல 2006 வரை சொந்த பெயரில் தளம் வைக்க ஒரே வழி தனி வழங்கியில் வோர்ட்பிரஸ் போன்ற மென்பொருட்களை நிறுவுவது தான் எனவே வேறு வழியின்றி அனைத்து தலைவலிகளையும் பொருத்துக்கொண்டு

  • பணச்செலவு, 
  • பாதுகாப்பு அச்சம், 
  • பதிவு அழிந்து போகும் வாய்ப்பு 

மூத்த பதிவர்கள் பலரும் தனித்தளத்தில் வழங்கியில் பதிவு வைத்திருந்தனர்

ஆனால் redirection வசதியை ப்ளாக்கர் இலவசமாக தரத்துவங்கிய பின்னர் டொமைன் பெயர் வைத்திருக்கும் விபரம் தெரிந்தவர்கள்

  • http://www.makkal-sattam.org/
  • http://www.parisalkaaran.com/ 
  • http://www.luckylookonline.com/
  • http://www.narsim.in/) 

அனைவரும் தங்கள் பெயரிலேயே முற்றிலும் இலவசமாக தளம் துவங்கி விட்ட்னர்.

  • பாதுகாப்பு அச்சம் இல்லை. 
  • பதிவு அழியுமோ என்ற அச்சம் இல்லை
  • கூடுதல் செலவு இல்லை
  • வார்ப்புருவை மாற்றலாம்  
  • வார்ப்புருவை திருத்தலாம்

விபரம் தெரியாதவர்கள் (அறியாமையால் செயலபடும் அவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன :) ) பணம் செலவழித்து கொண்டிருக்கிறார்கள் :) :)  இதில் அவ்வப்போது security risk வேறு


 

தொடர்ந்து வரும் இடுகையில் நாம் விவாதிக்க இருக்கும் கேள்விகள்
  1. நான் தற்சமயம் வழங்கி வாடகைக்கு எடுத்து அதற்கும் கூடுதல் பணம் செலுத்தி வோர்ட்பிரசில் உள்ளேன். நான் கூகிளுக்கு மாற முடியுமா
  2. கூகிளை விட வோர்ட்பிரசில் கூடுதல் வசதி உண்டு என்கிறார்களே. அப்படியா
  3. நான் தற்சமயம் xyz.blogspot.com என்ற தளம் வைத்துள்ளேன். இதை xyz.com என்று மாற்ற எவ்வளவு செல்வாகும், என்ன முறை
  4. ப்ளாக்கரில் யார் எதை பார்ப்பது என்று தீர்மாணிக்க முடியுமா

மரு.ரேகா ராமச்சந்திரனின் டௌன் சிண்ட்ரோம் – புத்தகத்தில் குறையொன்றுமில்லை


மருத்துவ புத்தகங்களுக்கு / மருத்துவம் சார் புத்தகங்களுக்கு ஆங்கிலத்தில் (எனது வலைத்தளத்தில் மற்றும் மருத்துவ சஞ்சிகைகளில்) விமர்சனம் எழுதுவதை கடந்த ஆறு ஆண்டுகளாக செய்து வந்தாலும், தமிழில் விமர்சனம் எழுதியதில்லை என்பதால் இதை எழுதுவதற்கு சிறிது தயங்கியது உண்மை தான்.


அதன் பின்னர் தான் ஒரு எளிய உண்மை புலப்பட்டது. இது வரை தமிழில் வரும் மருத்துவ புத்தகங்களின் / மருத்துவம் சார் புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

பொதுவாக தமிழகத்தில் படிப்பறிவு அதிகம். புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் அதிகம் தான் - சொந்தமாக வாங்கி படிக்கும் பழக்கம் குறைவு :( என்பது வேறு விஷயம் - ஆனால் உடல் நலத்தை பற்றி / வியாதியை பற்றி தமிழில் வரும் புத்தகங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்

தங்களுக்கு / தங்களின் உறவினர்களுக்கு வந்துள்ள நோயை பற்றி ஒவ்வொருவருக்கும் ஆயிரம் சந்தேகங்கள் இருக்கும். எந்த நோயை எடுத்தாலும் பிணியாளர்களுக்கு வரும் சந்தேகங்கள் பல
  • இதுல பயப்பட ஒன்னுமில்லை தானே,
  • எவ்வளவு நாளாகும் சரியாக,
  • என்ன சாப்பிடலாம்,
  • என்ன சாப்பிடக்கூடாது
  • காபி குடிக்கலாமா,
  • சர்க்கரை போட்டு காபி குடிக்கலாமா,
  • அருகம் புல் ஜூஸ் குடிக்கலாமா,
  • எவ்வளவு நாள் மாத்திரை சாப்பிடனும்,
  • கண்டிப்பாக ஊசி போடவேண்டுமா,
  • மாத்திரையிலேயே கரைக்க முடியுமா அல்ல கண்டிப்பாக ஆபரேசன் தேவையா,
  • ஆபரேசன் பண்ணினால் நோய் முற்றிலும் சரியாகிவிடுமா,
  • ஆபரேசன் பண்ணிய பின்னர் சைக்கிள் ஓட்டலாமா,
  • எவ்வளவு நாள் படுக்கையில் இருக்கவேண்டும்,
  • இந்த ஆபரேஷன் பண்ணிய பின்னர் கல்யாணம் செய்து கொள்ளலாமா,
  • இந்த ஆபரேஷன் பண்ணியதை குறித்து திருமணமான பின்னர் கணவன் / மனைவிடம் சொல்ல வேண்டுமா,
  • மொத்தம் எவ்வளவு செலவாகும்,
  • விட்டில் செய்ய வேண்டிய பயிற்சிகள் எதாவது இருக்கிறதா, என்று பல கேள்விகள், சந்தேகங்கள் வருவது இயற்கை தான்.
இதில் பல கேள்விகளுக்கு மருத்துவரே விடை அளிப்பார். ஆனால் அனைத்து கேள்விகளுக்கு விடை அளிக்க நேரம் இருப்பதில்லை. அதே போல் சில கேள்விக்களுக்கு விடை அளிக்க தேவையில்லை என்றே மருத்துவர் நினைக்கலாம் (உதாரணம் – இந்த நோய் எதனால் வருகிறது)

இப்படி பட்ட சூழலில் மருத்துவம் / நோய்கள் / வைத்திய முறைகள் குறித்த நூல்களின் தேவை இருப்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆனால் வெற்றிடத்தை நிரப்ப போதுமான அளவு புத்தகங்கள் இல்லை என்பதையும் நாம் அறிவோம்

கிழக்கு பதிப்பகத்தின் தாய் நிறுவனமான “நியூ ஹொரிசன் மீடியா நிறுவனத்தினின் நலம் “இம்பிரண்ட்” (இதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன) வெளியிட்ட புத்தகங்கள் சிலவற்றை படித்துப்பார்த்த போது அந்த வெற்றிடத்தை நிரப்ப முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பதை எளிதாக உணர முடிந்தது. (எந்தளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்களின் பேலண்ஸ் ஷீட் தான் சொல்ல வேண்டும் :) )

இனி புத்தக விமர்சணம். வழக்கமாக மருத்துவ புத்தகங்களுக்கு விமர்சணம் எழுத நான் பயன்படுத்தும் முறையை இதிலும் பயன் படுத்தியிருக்கிறேன். (உங்களுக்கு சற்று வித்தியாசமாக தெரியலாம்)

மரு.ரேகா ராமச்சந்திரனின் டௌன் சிண்ட்ரோம் – புத்தகத்தில் குறையொன்றுமில்லை

புத்தகத்தின் பெயர் : டௌன் சிண்ட்ரோம் - குறையொன்றுமில்லை
ஆசிரியர் : மரு.ரேகா ராமச்சந்திரன்
பதிப்பகம் : நலம் வெளியிடு. நியூ ஹொரிசன் மீடியா
ஐ.எஸ்.பி.எண்: 978-81-8368-871-0
விலை : ரூபாய் 70
தள்ளுபடி : விபரம் இல்லை
புத்தகத்தின் வகை : ஒரு நோயை பற்றிய புத்தகம்

கூறப்பட்டுள்ள விபரங்கள் : 
  1. நோய்க்காரணம்,
  2. பாதிப்புகள்,
  3. வைத்திய முறைகள்,
  4. சிறப்பு கல்வி
யாருக்காக எழுதப்பட்டுள்ளது : 
  • டௌன் சிண்ட்ரோமினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு
வேறு யாராவது பயன்படைவார்களா : 
  • பிற குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கும் பயன்படும்
குறிப்பிடத்தக்க அம்சங்கள் :
  1. தெளிவான எழுத்து நடை
  2. நோய்க்கான மூலக்காரணத்திலிருந்து,
    • பாதிப்புகள்,
    • அறிகுறிகள்,
    • பரிசோதனைகள்,
    • பயிற்சிகள்,
    • சிறப்பு கல்வி குறித்த தகவல்கள் என்று தேவைப்படும் அனைத்து விபரங்களும் தரப்பட்டிருப்பது
  3. சிறப்பு பள்ளிகளின் முகவரிகளை சேர்த்தது
  4. எதிர்மறைக்கருத்துகளை பின் தள்ளி நேர்மறை கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதியிருப்பது
அடுத்த பதிப்பில் முன்னேற்றக்கூடிய அம்சங்கள் :
  1. சில ஆங்கில சொற்களுக்கு சரியான தமிழ் மொழி பெயர்ப்பு (உதாரணம் பிசியோதெரபி என்பதை இயன்முறை வைத்தியம் என்று தான் கூறவேண்டும். உடலியம் சிகிச்சை என்றல்ல)


விமர்சனம் :

தங்களின் குழந்தை ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது குறித்து விரிவாகவே குறிப்பிட்டு உள்ளது இந்த நூலின் சிறப்பு

டௌன் சிண்ட்ரோம் என்றில்லை, பிற வகை மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றொரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தம் என்பது என் கருத்து

உடல் ஊனமுற்றவர்கள் - Handicapped - என்ற வார்த்தை தான் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது

பிறகு அது - Physically Challanged - என்று மாற்றப்பட்டது (இந்த பதத்தை தமிழ் படுத்திய கூத்துக்கள் தனிக்கதை)

அதன் பிறகு அந்த பதமும் அவ்வளவு பொருத்தமில்லை என்பதால், அது கூட எதிர்மறை அர்த்தத்தையே தருவதால் தற்சமயம் மாற்றுத்திறனாளி - Differently abled - என்ற நேர்மறை அர்த்தம் தரும் பதம் பயன் படுத்தப்பட்டு வருகிறது

தமிழக அரசும் இந்த பதத்தையே தற்சமயம் பயன்படுத்தி வருகிறது. 19.03.2010 முதல் ஊனமுற்றோர் நலத்துறை என்பது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது

எழுதியது : புருனோ
எழுதப்பட்டது : 01-05-2009
புத்தகம் கிடைக்குமிடங்கள் : அனைத்து கடைகளிலும்
புத்தகம் பெற தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி : 
New Horizon Media Private Limited,
33/15, Eldams Road, Alwarpet, Chennai 600018. Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601 Fax: 91 44 4300 9701 support@nhm.in
பொறுப்பு துறப்பு : மதிப்பிடுவதற்காக பெறப்பட்ட புத்தகம்