Tuesday, June 21, 2011

எழுத்தாளர் சாருநிவேதிதாவின் காமலீலைகள்(வீடியோ இணைப்பு)



குறிப்பிட்ட இந்த செய்தியினை நாம் பிரசுரிப்பதற்கு காரணம் பெண்களின் விழிப்புணர்வுக்காக மட்மேயின்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல…. இன்று ஆன்லைன் சாட்டிங்கில் நட்பு மலர்வதை விட ஆபாசமே விளைகிறது. அந்தளவுக்கு தள்ளப்பட்டுள்ளது இன்றைய சமுதாயம். ஆண்கள் பெண்கள் பெயரிலும் பெண்கள் ஆண்கள் பெயரிலும் முகப்புத்தகம் மற்றும் இதர சாட்டிங் மற்றும் சமூகத்தளங்களில் இணைந்து கொண்டு அடுத்தவர்களை தமது வலைக்குள் வீழ்த்திக்கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலான பெண்கள் வீழ்ந்தும் இருக்கின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் தொடர்பாக அண்மையில் தமிழச்சி எனும் இணையத்தில் ஒரு செய்தி வாசித்தோம். இதில் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா ஒரு பெண்ணுடன் ஆபாச வார்த்தைகளால் பேசியதாக செய்தி வெளியிட்டுள்ளர். இதற்கு ஆதாரமாக அவர் பெண்ணிடம் பேசிய ஆபாச சாட்டிங் இணைப்புக்களையும் வீடியோவாக தந்துள்ளனர். குறித்த பெண்ணே இத்தகவலை கூறியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எது எப்படியோ சாரு நிவேதிதா தனது பெயரை கெடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட சதி வேலையே இது என கூறி குறித்த செய்தியினை முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக செய்தியினை குறித்த தளத்தில் சென்று பார்க்கவும்



உங்கள் மனைவி நல்லவரா? கெட்டவரா? சோதித்துப் பாருங்கள்.

பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். 

ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்." (முஸ்தத்ரகுல் ஹாகிம்) 

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்; 

''நிரோகரிப்போருக்கு, (நபி) நூஹீடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகச் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்குக்கீழ் (மனைவியராக) இருந்தனர், பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர், ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் (நபிகளாகிய) அவ்விருவராலும் தடுக்க முடிய வில்லை, (இவர்கள்) துரோகம் செய்ததன் காரணமாக, இவர்களிடம்), ‘ நரக நெருப்பில் நுழைவோர்களுடன் நீங்களும் நழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டது.'' (திருக்குர்ஆன் 66:10) 

மேலும் அல்லாஹ் குறிப்பிடும் போது, எகிப்து நாட்டை ஆட்சி செய்து, தன்னுடைய அதிகாரங்களால் பலருக்கு மிகவும் கொடுமைகளை புரிந்த ஃபிர்அவ்னின் மனைவியின் குணத்தையும் பற்றியும் சொல்கிறான், 

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் ‘இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.’ (திருக்குர்ஆன் 66:11) 

நல்ல மனைவியானவள் இரத்த பந்த உறவு முறைகளை முறிக்காமலும், கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடியவளாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய பெற்றோர்களிடமும், மற்றும் குழந்தைகளிடமும் எந்த மாதிரியாக நடந்துக்கொள்ள வேண்டும். வெளி இடங்களிலும், வெளி நபர்களிடமும், பொது இடங்களிலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற மனைவிகளுக்குரிய பல பங்குகளை பற்றி திருமறையானது பல இடங்களில் குறிப்பிடுகிறது. 

ஒரு மனிதன் எவ்வளவு தான் நன்னடத்தையுள்ளவனாக இருந்தாலும் சரிதான். அவனுடைய மனைவி நன்னடத்தை உடையவளாக இல்லையெனில், அவனால் ஒரு போதும் இவ்வுலகில் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் வாழ்ந்திட முடியாது. 

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 
''உலகின் அனைத்துப் பொருள்களும் அனுபவிப்பதற்காக உள்ளவைதாம்! அவற்றில் சிறந்த பொருள் நன்னடத்தை உள்ள மனைவி!'' (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், மிஷ்காத்) 

குடும்பம் என்பது புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தான் இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வின் அவசியத்தினை மனைவிமார்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் புகுந்த வீடுகளில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். ஒரு சில குடும்பங்களில் எந்த புரிந்துணர்வும் இல்லாத பட்சத்தில் தான் சிறு பிரச்சனைகள் பூதகாரமாக மாறி விடுகிறது. 

பெண்களை ஏக இறைவன் பலஹீனமாக படைத்து உள்ளான். ஆகையால் தான் அவர்கள் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியாமல் சோர்ந்து போய் கவலையும் அடைகிறார்கள். ஒவ்வொரு இல்லங்களிலும் ஏதேனும் பிரச்சனை எப்படியாவது வந்தே தீரும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்ன முடிவு என்பதினை பற்றி கணவன் மற்றும் மனைவி கலந்து ஆலாசிக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தினை பற்றியும் மனம் திறந்து பேச வேண்டும்; என்பதினை இருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் பிரச்சனை அதிகளவில் உருவாகி கணவன் மனைவி பிரிவினைக்கும் காரணமாக அது அமைந்து விடும். 

‘இன்னும் (கணவன் மனைவியாகிய) இருவருக்குள், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால், அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும், அவள் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும் நீங்கள் (ஏற்படுத்தி) அனுப்புங்கள், அவ்விருவரும் (இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டு பண்ண நாடினால், அல்லாஹ் இவ்விருவரையும் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) தெரிந்தவனாக,நன்கு உணர்கிறவனாக, இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன் 4:35) 

புகுந்த வீடு, புதிய சூழ்நிலை, மாமியார், நாத்தனார் மற்றும் புதிய முகங்கள் என்று புதுமையாக இருக்கும் திருமணம் புரிந்த புதிதில் மனைவிமார்களுக்கு. எல்லாவற்றிற்கு மனம் பொறுத்து போனால் எல்லாம் நன்மையே நடக்கும் என்பதினை எண்ணிக்கொண்டால் குடும்பம் ஒளிர வாய்ப்புண்டு. 

பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். 

குடும்பத்தில் கணவன் ஒரு சிறு துளி அன்பு செலுத்தினாலும், அவள் குடும்பத்தினை நல்ல மாதிரியாக கொண்டு செல்லுவாள். மனைவியானவள் குடும்பத்தில் உள்ள எல்லோருடைய மனங்களையும் புரிந்து அவர்களை எப்போதும் சந்தோஷமாக குளிர வைக்க தெரிந்து வைத்து இருக்க வேண்டும். 

‘(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன.’ (திருக்குர்ஆன் 30:21) 

குடும்பம் நல்ல மாதிரியாக இருக்க வேண்டுமானால், புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மனைவிக்கு இருக்குமாயின் அந்தக் குடும்பத்தில் காலை இளந்தென்றல் எந்நேரமும் வீசிக்கொண்டே இருக்கும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லேயே. ஒரு பெண் எல்லா விதத்திலும் குறையற்றவளாக இருப்பது சாத்தியமானதல்ல. அவளிடம் ஏதேனும் குறையோ பலவீனமோ இருந்தாலும் அதே நேரத்தில் அவளிடம் சில நல்ல அம்சங்களும் இருக்கலாம். ஆகையால் ஒரு நல்ல கணவன் மனைவியின் இருபுறங்களையும் பார்த்திடல் வேண்டும். 

மனைவியானவள் தன்னுடைய குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அவசியத்தினை பற்றி நாள் தோறும் சொல்லி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உலகக் கல்வியுடன் சேர்ந்து மார்க்க கல்வியினையும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் அந்த பிள்ளைகள் இரு உலகிலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. மார்க்கப்பற்றுள்ள பிள்ளைகளை உருவாக்க நம்மால் முடியும் என்பதினை ஒவ்வொரு மனைவியும் தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து கொள்ள வேண்டும். 

இன்றைய காலக்கட்டங்கள் பிள்ளைகள் வீணாக சுற்றி திரிய கூடிய சூழ்நிலைகளால் சூழப்பட்டு உள்ளது. ஆகையால் நாம் தான் சந்ததிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதினை தாயாக மாறக்கூடிய மனைவிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வுலகம் வீண் விரயமும் மற்றும் ஆடம்பரமும் கலந்தே உள்ளதாக இருக்கிறது. ஆகையால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பதினை மனைவிமார்கள் தெரிந்து கொண்டு பிள்ளைகளை நன் முறையில் வளர்க்க வேண்டும். 

ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றும் வாசனை திரவியங்கள் அதிகளவில் பூசக்கூடாது. ஏனெனில் வெளி நபர்கள் கவனம் நம் மீது திரும்புவதற்கு இது ஒரு காரணமாக நாமே அமைத்துத் தரக்கூடாது. ஒப்பனை மற்றும் அலங்காரங்கள் நம்முடைய கணவனுக்கு மட்டுமே உரியது. பிறருக்காக அல்ல என்பதினையும் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். 

மற்றும் வெளியே செல்லும் போது கணவனின் அனுமதியை பெற்று தான் செல்ல வேண்டும். கணவனின் அனுமதி இல்லாமல் செல்லும் மனைவிகளை அவர்கள் செல்லும் வழியெங்கும் மலக்குமார்கள் சபிக்கிறார்கள். வெளி நபர்கள் முன்பாக வருவதில் மனைவிகள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதனையும் இந்த குர்ஆன் வசனம் தெளிவாக நமக்கு காட்டுகிறது. 

‘(நபியுடைய மனைவியர்) தங்களுடைய தந்தைகள் (முன்பாகவும்), தங்கள் ஆண் மக்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரிகளின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் பெண்கள் (முன்பாகவும்), தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களி(ன் முன்பாக வருவதி)லும் அவர்களின் மீது குற்றமில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:55) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப்

அவளிடம் கருவறை இவனிடம் சாவி

பெண் எப்படிப் படைக்கப்பட்டாளோ அப்படியே அவள் இருக்கிறாள். ஆண் எப்படிப் படைக்கப்பட்டானோ அப்படியே அவன் இருக்கிறான். 

80 வயதுவரைகூட காமம் தாராளம் இருப்பது ஆணின் படைப்பு. 50க்குள்ளேயே காமம் ஒடுங்கிப்போய்விடுவது பெண்ணின் படைப்பு 

ஒரு வருடத்தில் ஒரு பிள்ளை பெறுவது பெண்ணின் படைப்பு. ஒரே வருடத்தில் 365க்கு மேலும் பெற்றுக்கொள்ள முடிவது ஆணின் படைப்பு. 

அவளிடம் கருவறை இவனிடம் சாவி அதுதான் இனப்பெருக்கத்தின் வழி. அதுதான் இயற்கை. அதனால்தான் இந்தப் பிரபஞ்சம். 

ஆணிடம் பெண்தேடல் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. அப்படிப் பெண்தேடல் இல்லாத ஓரினச்சேர்க்கையாளர்களால் பிரபஞ்சமே அழிந்து போகும் 

ஆண் பெண்ணைத் தேடவேண்டும். பெண் ஆணைத் தேடவேண்டும் 

பிள்ளைகள் பிறந்தபின் பெண்ணின் நிலைப்பாடு. தேடுதலிலிருந்து சற்றே விலகிவிடும் 

ஆனால் ஆணின் தேடல் தொடரும். இது அடிப்படை, இயற்கை, வாழ்வியல் தத்துவம். 

நம் சமூகத்தில் ஏன் ஒரு பெண்ணை அடிமுட்டாளாகவே சித்தரிக்கிறார்கள். என்று தெரியவில்லை. 

ஆணின் மேதாவித்தனம் பெண்ணை இப்படி அடிமையாகவே பார்ர்கிறது. தானே சுயசிந்தனை உள்ளவன் என்ற அகம்பாவம். 

பெண் பின்புத்திக்காரி என்று காலகாலமாய்ச் சொல்லும் அவலம். 

18 வயதை எட்டிய பெண் தன் எண்ணங்களில் தன் தேவைகளில் தெளிவாகவே இருப்பாள். 

அந்த வயதில் அவளுக்குக் கிடைப்பதுதான் வாழ்க்கை. அவள் வாழ்க்கையை வாழ நம் சமூகம் அனுமதிப்பதே இல்லை. 

ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு இனிமையானது என்றாலும் ஆபத்தானது. 

பஞ்சும் நெருப்பும் எளிதாக பற்றிக்கொள்ளும். 

ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு. இருவரும் ஒன்றாகவே நட்பு பாராட்டுகிறார்கள். 

நட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள். 

ஆனால் காதல் என்று வந்துவிட்டால் நட்பு ஒருபடியாவது கீழே இறங்கிவிடுகிறது 

கல்யாணம் என்று வந்துவிட்டால் காதல் சில படிகள் கீழே இறங்கிவிடுகிறது என்பது நடைமுறை உண்மை. 

உரிமைகளும் பொறுப்புகளும் வந்ததும் காதல் வெளிக்காட்ட நேரமின்றி தடுமாறுகிறது 

உடல்கள் பழகியபின் ஈர்ப்பில் அலட்சியம் புகுந்து அதிகாரங்கள் உயர்ந்து காதல் காயப்படுகிறது 

குழந்தைகள் என்று வந்துவிட்டால் ஆண்களின் காதல் மனைவியிடம் அப்படியே இருக்கும் 

ஆனால் பெண்ணின் காதல் பிள்ளைகளுக்கு மாறிவிடும் அதுதான் பெண்ணின் படைப்பு 

பெண் அப்படிப் படைக்கப்படவில்லை என்றால் இனவிருத்தி உயிரின பெருக்கும் எல்லாம் இல்லாமல் அழிந்துபோகும்.

போங்கடா! காதலாவது... கத்தரிக்காயாவது...

“எங்க காதலைக் கத்தரிக்காதீங்க!” என்று காதலர்கள் அவர்கள் பெற்றோர்களைப் பார்த்து கெஞ்சிக் கேட்க, உடனே அப்பாமார்கள், “காதலாவது கத்தரிக்காயாவது,” என்று சொல்லியிருப்பார்கள். தமிழில் வங்கணம் என்ற சொல் இருக்கிறது அதற்கு நட்பு, காதல், கத்தரிச் செடி என்று ந.சி.கந்தையாப் பிள்ளை, (1950 edition ) தொகுத்த செந்தமிழ் அகராதியில் பொருள் கூறியிருக்கிறார்கள். இரட்டைக் கத்தரி காதல் சின்னம் போல இருப்பது கூட, ‘காதல் என்ன கத்தரிக்காயா?’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கலாம்!

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது, ஆனால் தற்போது கத்தரிக்காய் மீது மக்களுக்கு திடீர் காதல் வந்துவிட்டது. ஏன் என்று பார்க்கலாம்.



நன்றி : flickr

இந்தக் கத்தரிக்காய்க் காதலைப் பற்றிச் சொல்லும் முன், உங்களுக்கு வழுதலை, வழுதுணங்காய், வழுதுணை பற்றியும் சொல்ல வேண்டும். பயப்படாதீர்கள்; வழுதுணங்காய், வழுதுணை, வழுதலை என்பவை கத்தரிக்காயின் தமிழ்ப் பெயர்கள். நம்புங்கள், சூடாமணி நிகண்டில், ‘வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றுமாமே’ என்று வருகிறது. வழுக்கையாக இருப்பதால் அது வழுதலை என்று பெயர் பெற்றது என்று ஆராய்ச்சி செய்துள்ளார்கள். தமிழில் கத்தரிக்காய் பற்றி தெனாலி ராமன் கதை ஒன்று இருக்கிறது; ஹிந்தியில் பீர்பால். இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை. ஆனால் ஔவையார் பாட்டி கத்தரிக்காய் வதக்கல் சாப்பிட்டிருக்கிறார்.
புல்வேளூர் பூதன் என்பவர் பாட்டிக்கு, பசி வேளையில், கத்தரிக்காய் வதக்கல் செய்து போட, அதைச் சாப்பிட்ட பாட்டி, ‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும்’ என்று வெண்பாவில் தான் என்னென்ன சாப்பிட்டார் என்று லிஸ்டே கொடுத்துவிட்டார். அடுத்த முறை புளித்த மோர்சாதத்துக்கு கத்தரிக்காய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வெண்பா எழுத வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

நாலடியாரில், ‘வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே’ என்று வருகிறது. ‘வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது’ என்று கத்தரிக்காயை விதைக்க பாகன் (பாகற்காய்) முளைத்தது என்ற சுவாரஸ்யமான பாடல் ஒன்று, திருமந்திரத்தில் வருகிறது.

கத்தரிக்காயில் பல ரகங்கள் உள்ளன. சாம்பாரில் போட்டுவிடுவதால் நமக்கு வித்தியாசம் தெரிவதில்லை. தமிழ்நாட்டிலேயே அண்ணாமலை, புளியம்பூ, வரிகத்தரி, பவானி, இளையம்பாடி,பொய்யூர், பூனைத்தலை, முள்ளு, தூக்கானம்பாளையம், சுக்காம்பார், அய்யம்பாளையம், வெள்ளைக் கத்தரிக்காய் என்று பலவகை இருக்கிறது.

பெங்களூரில் இரண்டு விதக் கத்தரிக்காய்; ஒன்று மெலிதாக, பச்சையாக ‘லாரல்’ மாதிரி இருக்கும். மற்றொன்று ‘ஹார்டி’ மாதிரி குண்டாக இருக்கும். இதை வெட்டினால் வெண்ணை மாதிரி இருக்கும். கால் மீது விழுந்தால் விரல் வீங்கும். (இவை சென்னையிலும் கிடைக்கும்.)

ஏன் பெரிதாக இருப்பதற்குப் பெயர் ‘பெங்களூர் கத்தரிக்காய்’ என்று என் மகளுக்கு தமிழ் சொல்லித்தரும் பக்கத்துவீட்டு நண்பரைக் கேட்டேன். அவர் குடமிளகாயைக் கூட நாங்கள் ‘பெங்களூர் மிளகாய்’ என்று தான் சொல்லுவோம் என்றார். பெரிதாக எது இருந்தாலும் அதற்கு முன் பெங்களூர் சேர்த்துவிடுவது தமிழ் மரபு போல!

வெள்ளைக் கத்தரிக்காய் கொஞ்சம் கடுக்கும், “ஏண்டா இதை வாங்கிண்டு வந்தே?” என்று எனக்கு அம்மாவிடம் திட்டும், “தளிகை பண்றப்போ துளியூண்டு சக்கரை போடு, கடுக்காம இருக்கும்” என்று என் அம்மாவுக்கு பாட்டியிடம் டிப்ஸும் கிடைக்கும். திருச்சி புத்தூர் மார்கெட்டில் ‘நாமம்’ கத்தரிக்காய் என்று ஒரு வகை; கத்தரிக்காயில் வெள்ளை கோடுகளுடன் கிடைக்கும்.

திருமண் (நாமம்) போட்ட வடகலை ஐயங்கார்கள் ‘அத்திகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி’ என்று வெள்ளைக் கத்தரியை விலக்கிவைக்க வேண்டும் என்று வேதாந்த தேசிகன் தன்னுடைய ‘ஆகார நியம’த்தில் கூறியுள்ளார்.. அவர் சொன்னது வெண் கத்தரி; ஆனால் இன்று எல்லா வகைக் கத்தரியும் உண்ணத் தக்கதல்ல என்று சிலர் நினைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதை எக்பிளாண்ட் என்று கூறுவர். நேற்று தான் இதற்கு விடை கிடைத்தது (பார்க்க படம்).

தினமும் பல வகை காய்கறிகளைப் பார்க்கிறோம். திருச்சி மாம்பழச் சாலையில் ‘ஒட்டு’ மாம்பழம் என்று ஒரு வகை உண்டு. உங்களில் பலர் இந்த ஒட்டுச் செடிகளைப் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் அடுத்த முறை ஏதாவது நர்சரியில் பாருங்கள். இரண்டு செடிகளை லேசாக வெட்டிவிட்டு பாண்டேஜ் மாதிரி கட்டுப்போட்டு ஒட்டிவிடுவார்கள். ஒட்டப்பட்ட இடத்தில் வளரும் செடி இந்த இரண்டு வகையையும் சார்ந்து இருக்கும்.

பல வண்ணங்களில் பூக்கும் போகன்வில்லா; ஒரே செடியில் இரண்டு விதமான வண்ணப் பூக்களுக்கு எல்லாம் இந்த ஒட்டுதான் காரணம். அதே போல முருங்கையில் கூட ஒட்டு உண்டு.

சரி, இப்பொழுது ஒரு புளிய மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் ஒரு கேரட் செடியை ஒட்ட முடியுமா? உடனே முடியாது என்று சொல்லிவிடுவீர்கள். ஏன் என்றால் இரண்டும் வெவ்வேறு வகை. ஒன்று மரம், மற்றொன்று செடி. ஆனால் மரத்திலிருந்து ஒரு ஜீனை எடுத்து செடியில் புகுத்தலாம். அட அப்படியா? எப்படி என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான உதாரணம் தருகிறேன்.

மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். ராத்திரி வயல்வெளியில் மினுக் மினுக் என்று அலையும். அமெரிக்க விஞ்ஞானிகள் அந்தப் பூச்சிகளின் ஒரு ஜீனை எடுத்து புகையிலை செடிக்குள் செலுத்தியுள்ளார்கள். பிறகு ஒரு விதமான தண்ணீர் ஊற்றும் போது அந்தச் செடியை ஸ்பெஷலாகப் படம் பிடித்துள்ளார்கள். ‘அவதார்’ படத்தில் தாவரங்களிலிருந்து ஒளி வருவது போல், செடியின் பல திசுக்கள் (tissue) அதில் தெரிந்திருக்கிறது. இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1986. ஆக, இப்படி மரபணுவைச் செடிகளில் செலுத்துவதால் அதன் ஆதார குணம் மாறும் சாத்தியக்கூறு இருக்கிறது.

நாளைக்கே தவளையின் டி.என்.ஏவை தக்காளியில் புகுத்தினால், ரசத்துக்குள் தக்காளி தானாகவே குதித்துக்கொள்ளும் சாத்தியக்கூறு இருக்கிறது!.

மேலும் கட்டுரையைத் தொடர, செல்கள், ஜீன், டி.என்.ஏ, குரோமோசோம் என்று நாம் கேள்விப்பட்ட சில வார்த்தைகளை திரும்பவும் பார்த்துவிடலாம்.

நீங்கள் அடுத்த முறை கண்ணாடி முன் நின்றுகொண்டு உங்களைப் பார்க்கும் பொழுது உங்கள் உடலில், 10 டிரில்லியன் (1000000000000 ) உயிரணுக்களைப் (Cells) பார்க்கிறீர்கள் என்பதை நினைவுவைக்கவும். உங்கள் தசைகள், குடல், முடி, ஈரல் என்று அதில் மொத்தம் 200 வகை. பற்களில் உள்ள எனாமல், நீங்கள் பார்க்கும் கண் லென்ஸ் கூட ஒரு வகை உயிரணு தான்.

உடைந்த எலும்பு சரியாவதும், நம் உடலில் உள்ள பாகங்கள் வளர்வதும் இந்த செல் செய்யும் மாயம் தான். நம் ஒற்றைத் தலைமயிரின் விட்டத்தில் (diameter) பத்தில் ஒரு பாகம் தான் செல்லின் அளவு!, உங்கள் விரல் நுனியில் 2-3 பில்லியன் செல்கள் இருக்கும்!

எல்லா மனிதர்களின் செல்களிலும் டி.என்.ஏ (என்கிற டி ஆக்சிரிபோநூக்லியிக் அமிலம் deoxyribonucleic acid) இருக்கிறது. இது முறுக்கிவிட்ட நூலேணி போல் இருக்கும்; பிறந்தநாள் பார்ட்டியில் இருக்கும் சுருளான ஜிகினா காகிதம் மாதிரி.

இந்த நூலேணிப் படிகளில் விதவிதமான புரோட்டீன்களை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற குறிப்பு இருக்கிறது. அவை கிட்டத்தட்ட நம்முடைய ரகசியங்கள் என்று சொல்லலாம். இந்த ரகசியத்தைத் தான் ஜீன்(Gene) என்கிறார்கள். முக அமைப்பு, நிறம் போன்ற தகவல்கள் எல்லாம் இந்த ஜீன்களில் தான் இருக்கிறது. எல்லா மனிதர்களின் ஜீன்களும் 98-99% ஒரே மாதிரி தான் இருக்கும். மிச்சம் இருக்கும் 1-2% தான் என்னையும், இதைப் படிக்கும் உங்களையும் வேறுபடுத்துகிறது.


மேலே படத்தில் இருப்பது செல், இதில் நூடுல்ஸ் மாதிரி இருப்பது தான் டி.என்.ஏ. ஒரு முறை பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.

இந்த முறுக்கிக் கொண்டு இருக்கும் நூலேணியில் கொஞ்சம் ஏறிப் பார்க்கலாம். முதலில் டி.என்.ஏ என்ற கூட்டணு தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் (டூப்ளிகேட் செய்துகொள்ளும்) குணம் பெற்றது. ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி… இப்படிப் பிரதியெடுக்கும். என்று நீங்கள் இப்போது இதை படிக்கும்போது கூட அவை பிரதியெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன..

நீங்கள் இந்த உலகத்தில் முதலில் ஒரு செல்லாக இருந்தீர்கள், பிறகு இந்த இரட்டிப்பு முறைத் தொடர் பிரதியெடுப்பினால் இன்று ஒரு மனிதனாக ஆகியுள்ளீர்கள். சரி இந்தப் பிரதியெடுப்பினால் எப்படி எனக்கு கண் காது மூக்கு எல்லாம் வந்தது என்று கேட்கிறீர்கள். டி.என்.ஏவில் விதவிதமான புரோட்டீன்கள் எப்படி உண்டாக்குவது என்ற குறிப்பு இருக்கும் என்று பார்த்தோம். கூடவே நம் செல்களில் என்னென்ன ரசாயன மாற்றங்கள் செய்ய வேண்டும், அவை எந்த அளவுக்கு வேண்டும் என்ற தகவல்கள், ஆணைகள் அதில் இருக்கிறது!

டி.என்.ஏவின் அடுத்த படிக்குச் செல்லாலாம்.


இந்தப் படத்தில் என்ன தெரிகிறது?. இரண்டு பக்கங்களிலும் நீல ரிப்பனும் இடையில் வண்ண வண்ணப் படிகளும் தெரிகிறதா? இந்தக் கூட்டமைப்புக்குப் பெயர் ந்யுக்ளியோ-டைடுகள் (nucleotides). படத்தை மற்றொரு முறை கவனியுங்கள், படிகளில் என்னென்ன வண்ணங்கள் இருக்கின்றன?. மஞ்சள், பச்சை, சிகப்பு, ஆரஞ்ச் என நான்கு வண்ணங்கள் இருப்பது தெரியும். இந்த நான்கு வண்ணங்களும் நான்கு வகையானவை. அவை என்னென்ன என்பதும் படத்தில் இருக்கிறது. வசதிக்காக, சுருக்கமாக A, T, C, G என்று வைத்துக்கொள்ளலாம். (மஞ்சள் – அடினைன், பச்சை – தயோமைன், ஆரஞ்ச் – சைடோசைன், சிகப்பு – குவானின் என்று பெயர்கள் ).

ஒவ்வொரு ந்யுக்ளியோடைடும் மூன்று பாகங்கள் கொண்டது – பாஸ்பேட் தொகுதி (phosphate group), சர்க்கரைத் தொகுதி (sugar group) மற்றும் நான்கு வித நைட்ரஜன் அடிப்படையில் ஏதாவது ஒன்றைக் கொண்டது (Nitrogen Base)

நான்கு வித நைட்ரஜன் தான் நாம் பார்க்கும் அந்த நான்கு வண்ண ஏணிப் படிகள். பக்கவாட்டில் நீல நிற ரிப்பன் மாதிரி இருப்பவை சர்க்கரை, பாஸ்பேட் ஆதாரக் கூட்டமைப்பு.

பள்ளியில் படித்த விஷயத்தை திரும்ப ஒரு முறை பார்க்கலாம். H2O என்றால் என்ன? – நீர். அதாவது (2)ஹைட்ரஜனுடன் (1)ஆக்ஸிஜனும் கூட்டு சேர்ந்தால் கிடைப்பது நீரின் மூலக்கூறு (Water Molecule)


படத்தை நன்றாக கவனித்தால், ஒரு மஞ்சள் (அடினைன்) பச்சையுடன் (தயோமைன்) சேரும். அதே மாதிரி சிகப்பு (குவானின்) ஆரஞ்சுடன் (சைடோசைன்) சேருகிறது. இந்த நூலேணியை நடுவில் வெட்டினால் அவை இரண்டாகப் பிரிந்துவிடும். சரியான ஜோடி கிடைக்கும் போது திரும்ப ஒட்டிக்கொள்ளும். யார் உடன் யார் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற தகவல் பத்திரமாக அதனுள்ளேயே இருக்கிறது!

மனிதனாக இருந்தாலும், வெண்டைக்காயாக இருந்தாலும் டி.என்.ஏ ஒன்று தான் – அவை தன்னைத் தானே இரட்டிப்பு செய்துகொள்கிறது. தேவையான புரேட்டீன்களை உற்பத்தி செய்கிறது. என்ன விதமான புரோட்டீன் தேவை என்ற தகவல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பல ஜீன்களின் கூட்டுச் சேர்க்கை தான் உயிர். உதாரணமாக சோளத்தில் 2,50,000 விதமான ஜீன்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். டி.என்.ஏ முறுக்கு ஏணியில் எல்லா ஜீன்களும் வரிசையாக டி.என்.ஏ மூலக்கூறுகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மூலக்கூறுகள் பல்வேறு தொகுப்பாக, குரோமோசோம்களாக இருக்கின்றன.

மனிதனின் டி.என்.ஏவை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாம். சென்னை புத்தகக் கண்காட்சியில் ஏணி போல அடுக்கி வைத்த புத்தகங்களை பார்த்திருப்பீர்கள். இதே மாதிரி 1000 டெலிபோன் டைரக்டரியை அடுக்கி வைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த அளவிற்கு இருக்கும் மனிதனின் ஜீன்கள்! என்ன ஒன்று, அந்த புத்தங்களில் பெயர்களுக்கு பதில் எல்லாம் A,C,T,G என்ற எழுத்து தான் இருக்கும். நமக்கு தலை கால் புரியாது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கூட்டணுவைக் குறிக்க்கும். இந்த எழுத்தை எல்லாம் 46 பாகங்கங்களாக பிரித்திருக்கிறார்கள். பாகங்களுக்கு பெயர் குரோமோசோம். அப்பாவிடமிருந்து 23; அம்மாவிடமிருந்து இன்னொரு 23!. ஆக மொத்தம் 46. இதில் உங்க அம்மா வழி, அப்பா வழி தாத்தா பாட்டி என்று எல்லாம் கலந்து இருக்கும். எல்லம் பிரதியெடுப்பதின் பலன்!. “அப்படியே மாமாவை உரிச்சு வெச்சிருக்கான்” என்பதன் ரகசியம் இது தான்!

ஒரு செடியில் இருக்கும் செல்லை எடுத்துப் பார்த்தால் இந்த குரோம்சோம் காப்பி அதில் பரவி இருக்கும்.அதே போல மனிதனோ, மிருகமோ, செடியோ உள்ளே சென்று பார்த்தால் எல்லா டி.என்.ஏவும் ஒன்று தான். இதனால் தான் ஒரு தவளையின் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் வெட்டி ஒட்டலாம். எந்த விதமான புரோட்டீன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தகவல் அதில் இருக்கும். இந்த மாதிரி இரு வேறு விதமான டி.என்.ஏ சேரும் போது அந்தத் தக்காளியில் என்ன விதமான ரசாயன மாற்றம் வரும் என்று யாரும் அனுமானிக்க முடியாது. (அதுசரி, இப்படிச் செய்தால் அந்தத் தக்காளி வெஜ்ஜா நான்-வெஜ்ஜா?)

தென்னை மர ஓலையை இரண்டாகப் பிரிப்பது மாதிரி டி.என்.ஏ-வைப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். மிக நுட்பமான மைக்ராஸ்கோப் மூலமும், மைக்ராஸ்கோப் சர்ஜிக்கல் உபகரணம் கொண்டும் இந்த ஜீன்களை இரண்டாக வெட்டி, இன்னொரு ஜீனுடன் சேர்க்கிறார்கள். இதைத் தான் ஜெனட்டிக் எஞ்சினியரிங் என்று சொல்லுகிறார்கள். சுருக்கமாக GE.

எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன். அதற்கு முன் பிளாஸ்மிட் (Plasmid) என்ற ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நூல் ஏணி போல் இல்லாமல் வட்ட வடிவமாக உள்ள டி.என்.ஏ. தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்த ஸ்பெஷல் டி.என்.ஏ. ஒரு டி.என்.ஏவை வெட்டி மற்றொன்றுடன் எப்படி ஒட்ட வேண்டும் என்பதை சமையல் குறிப்பு போலத் தரலாம்.

1. முதலில் பிளாஸ்மிட் டி.என்.ஏவை எடுத்துக்கொண்டு ஒரு பகுதியை வெட்டிஎடுத்துவிடுங்கள்.
2. வெட்டப்பட்ட இடத்தில் வேறு ஒரு டி.என்.ஏவின் பகுதியைப் ஒட்டவைத்துவிடுங்கள்.
3. இந்த ஒட்டப்பட்ட புதிய டி.என்.ஏவை செல்லுக்குள் புகுத்திவிடுங்கள்.
4. புகுத்தப்பட்ட டி.என்.ஏ தன்னைத் தானே பிரதியெடுக்கத் தொடங்கும்.
5. புதிய வகை டி.என்.ஏ தயார்.

பிளாஸ்மிட் டி.என்.ஏவை வெக்டர்(Vector) என்பர். புகுத்தபட்ட டி.என்.ஏவை டோனர் (Donor) என்பர். வெக்டர் என்ன வகையான செல்களோ, அங்கே தான் இந்த மாற்றப்பட்ட டி.என்.ஏவை உற்பத்தி செய்வார்கள்.

உங்கள் வீட்டில் நீங்கள் தான் மார்க்கெட் போய் காய்கறிகளை வாங்குவீர்களா? கத்தரிக்காய் வாங்கும்போது, அதில் பூச்சி இருக்கிறதா என்று பார்த்து வாங்குவீர்கள் தானே? நான் எவ்வளவுதான் பார்த்துப் வாங்கி வந்தாலும், வீட்டில் வந்து அதை வெட்டும்போது, மனைவியிடம் திட்டு நிச்சயம். பல கத்தரிக்காய்கள் உள்ளே சொத்தையாக இருப்பதைப் பார்க்கலாம். இனிமேல் இந்தப் பிரச்சனை இருக்காது. வந்துவிட்டது மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்- BT-Brinjal!

மண்ணிலுள்ள ஒரு வகை நுண்ணுயிரின்(பாக்டீரியா) பெயர் ‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ (Bacillus Thuringiensis – BT) சுருக்கமாக ‘பி.டி’ (BT). இந்த பாக்டீரியாவில் இருக்கும் நச்சுத் தன்மை கொண்ட டி.என்.ஏ, பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என்று கண்டுபிடித்துள்ளார்கள். முதலில் இதை பருத்திச் செடிகளில் சோதித்துப் பார்த்து, அதில் வெற்றி பெறவே அடுத்தது கத்தரிக்காய் பக்கம் வந்துள்ளார்கள்.

இந்த பி.டி நுண்ணுயிரின் நச்சுத் தன்மையை எடுத்து கத்தரிக்காய்ச் செடிகளிலுள்ள மரபணுக்களில் செலுத்துவதால், கத்தரிக்காய்ச் செடிகள் பூச்சிகளிடமிருந்து தன்னைத் தானே காத்துக்கொள்ளும். மின்மினி பூச்சியிலிருந்து எடுத்த டி.என்.ஏவை புகையிலைச் செடியில் புகுத்தினார்கள் அல்லவா அதே போலத் தான் இதுவும். இதிலிருந்து கிடைக்கும் விதைகளைக் கொண்டு கத்தரிச் செடிகள் சாகுபடி செய்தால் எல்லாக் கத்தரிக்காய்களும் இனி பூச்சியில்லாமல் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு கத்தரிக்காய் வாங்கலாம். நச்சுத் தன்மை உடைய மரபணுவிற்குப் பெயர் cry1Ac.

இன்னும் கொஞ்ச விஷயம் இருக்கு. ஒரு நட்டும் போல்ட்டும் எப்படி வேலை செய்கிறது? நட்டில் இருக்கும் மரையும் போல்ட்டில் இருக்கும் மரையும் வேறு வேறு மாதிரி இருந்தால் தான் இரண்டும் ஒன்றுசேரும். அதே போல் தான் டி.என்.ஏவிலும். நான்கு வண்ண ஏணியைக் கொஞ்சம் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள் – மஞ்சள் ( A-அடினைன் ) பச்சையுடன் (T-தயோமைன்) சேரும். அதே மாதிரி சிகப்பு (G-குவானின்) ஆரஞ்சுடன் (C-சைடோசைன்) சேருகிறது என்று பார்த்தோம். ஜீன் என்பது இந்த நான்கு A, T, G, C என்ற எழுத்துக்களால் ஆன பெரிய புத்தகம் மாதிரி என்று சொல்லுவார்கள். அதில் இந்த CTTAAG என்ற வரிசை முக்கியமானது. இதை EcoR1 (eco R one) என்று சொல்லுவார்கள். CTTAAG என்ற வரிசையை திருப்பி எழுதினால் GAATTC என்று வரும். இவை இரண்டையும் சேர்ந்த்து எழுதினால் கிடைப்பது ஒரு பாலிண்ட்ரோம்.

மஹாபாரதத்தில் ஜராசந்தன் கதை பார்க்கலாம். ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் கடுமையான சண்டை. ஜராசந்தனை தென்னை ஓலையை கிழிப்பது போல இரண்டாக கிழித்து போடுகிறான் பீமன். ஆனால் மாயக்காரனான ஜராசந்தன் பிரித்த உடல் இரண்டும் மீண்டும் ஒட்டிக்கொண்டு உயிர் பெற்று விடுகிறான். பீமனுக்கு என்ன செய்வது என்று தெரியாது நிற்கும் போது கண்ணன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து மற்றி போடும் படி பீமனுக்கு சொல்கிறார். அதன் படி பீமன் ஜராசந்தனை கிழித்து மாற்றி போட ஜராசந்தன் அழிகிறான் இப்ப இந்த வரிசையை பாருங்கள்.

C – G
T – A
T – A
A – T
A – T
G – C

இதை இரண்டாக வெட்டி பீமன் ஜராசந்தனை போட்ட மாதிரி போட்டால் மாற்றி போட்டால் நட் போல்ட் போல ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். படத்தில், “புகுத்தப்பட வேண்டிய டி.என்.ஏ” என்ற இடத்தில் cry1Ac என்று போட்டுப் பாருங்கள், எல்லாம் புரியும்!

இன்னும் கொஞ்ச நாளில் ‘மாம்பழத்து வண்டு…’ என்ற பாடலை யாரும் பாட முடியாது. இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு என் மனைவியிடம் காண்பித்தேன். படித்துமுடித்தவுடன்,
படித்துமுடித்தவுடன் “அடுத்த தடவை கத்தரிக்கா வாங்கிண்டு வரும் போது சொத்தையா பார்த்து வாங்கிண்டு வாங்க” என்றாள்.

கன்னிப் பெண்களின் படங்கள் பார்த்து ஜொள்ளு விடுங்கோ...

ஒரு சின்ன டீ ப்ரேக்

















Indian girls are one of the best looking girls i have seen. they have a lovely face, and a hot skin tone.




Indian girls are one of the best looking girls i have seen. they have a lovely face, and a hot skin tone.




Indian girls are one of the best looking girls i have seen. they have a lovely face, and a hot skin tone.






இப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்

ஒரு சமுதாயத்தின் அழிவுக்கு ஆபாசம் மிக முக்கிய காரணமாகிறது! 

வரலாற்று ஆசிரியர் எட்வாட் கிப்பன், ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்களைப் பட்டியல் இடுகிறார். 

1. திருமண முறிவுகள் அதிகமானது 

2. அதிக வரி வசூலித்து மக்களுக்கு இலவச ரொட்டியும் கேளிக்கைகளும் அளித்தது 

3. இன்ப வெறி - அதுவும் விளையாட்டுப் போட்டிகள் காட்டுமிராண்டித்தனமாக இருந்தது. 

4. மக்களின் தரம் தழ்ந்ததை உணராமல்,படைக்கலன்களை வாங்கிக் குவித்தது. 

5. சமயம் என்பது வெறும் குறியீடாக மாறி தினசரி வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் போனது. 

இப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் கேளிக்கையில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் -நுகர்வுகளில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் அழிவுகளின் பக்கமாகத்தான் செல்ல வேண்டும். 

இதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய மேலை நாடுகள் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. 

அங்கு நிலைமை என்ன? திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். லிவிங் டுகெதர் -கொஞ்ச நாளைக்குச் சேர்ந்து வாழ்வோம்; பிரிந்து விடுவோம்; கல்யாணமெல்லாம் தேவையில்லை என்கிற நிலை அங்கு உருவாகி விட்டது. 

திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வது மிகச் சாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது. 

இதன் காரணமாக சிங்கிள் பேரண்ட் ஃபேமிலி - தாயுடனோ அல்லது தந்தையுடனோ வாழும் நிலை. மொத்தத்தில்,குடும்ப வாழ்வே அங்கு சிதைந்துப் போய் விட்டது. 

இன்று ஆபாசம் ஆக்டோபஸ் மாதிரி ஆகி விட்டது. அதனுடைய கால்கள் பதிக்காத இடமே இல்லை. ஆபாசத்திலிருந்து தப்பிக்க முடியாத நிலை இன்று உருவாகி விட்டது. 

ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்கிற போது, இந்த ஆபாசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்று சொல்கிறார்கள். ஆபாசத்தை வரையறை செய்யவே முடியாது என்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள், காலத்துக்கு காலம் இதனுடைய வரைமுறை மாறும் என்கிறார்கள். 

இங்கே ஆபாசமாகக் கருதப்படுவது மேலை நாட்டில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை; ஒரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவது இன்னொரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை. 

ஆகவே ஏன் தலையைப் போட்டு உடைத்துக் கொள்கிறீர்கள்? இது முடியவே முடியாத காரியம் என்று சொல்கிறார்கள். 

ஏன் முடியாது? ஆபாசத்தை ஏன் வரையறை செய்ய முடியாது? 

.மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காதிருந்தால் அதற்குப் பெயர் ஆபாசம். 

.மறைவில் பேச வேண்டியதை வெளியில் பேசினால் ஆபாசம். 

.நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டியதை வெளிப்படையாகச் செய்தால் அதற்குப் பெயர் ஆபாசம். 

.திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு எந்த உறவை வைத்துக் கொண்டாலும் அது ஆபாசம். 

.இச்சைகளையும் வக்கிரங்களையும் தூண்டக் கூடிய எல்லாச் செயல்களும் ஆபாசம். 

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பு. 

இன்று சினிமாவிலே பெண்களை ரசித்துப் பார்க்கிறீர்களே, உங்கள் பெண்களை இது போன்ற காட்சிகளில் நடிக்க விடுவதற்கு தயாரா? 

உங்களுக்கு பாவம் என்றால், உங்களுக்கு ஆபாசம் என்றால்,உங்களுக்கு அசிங்கம் என்றால் அந்தப் பெண்களுக்கும் அது ஆபாசம் தான். 

ஒரு தீமைக்கு உடனடியாக யாரும் பலியாகி விடுவதில்லை. அது சில கட்டங்களைக் கடந்து வருகிறது. 

முதலாவதாக அப்சர்வேஷன் -பார்த்தல்; இரண்டாவதாக இமிடேஷன் -அதைக் காப்பி அடித்தல்; மூன்றாவதாக டிசென்சிடிசெஷன் -மரத்துப் போதல். கடைசியில் ஜஸ்டிபிகேஷன் -அதை நியாயப்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறோம். 

நாமே இதற்குப் பலியாகி விட்டோமே! குடும்பத்தோடு உட்கார்ந்து சினிமா பார்க்கிறோமே! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பார்க்கிறோமே! அப்படியானால் நாம் மரத்துப் போன மனிதர்களாக மாறி விட்டோம் என்பதுதானே பொருள்? 

மக்கள் ரசிப்பதைத்தானே கொடுக்க முடியும்? மக்களுக்குப் பிடிப்பதை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள். 

நோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா? 

ஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி...! தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை. 

பெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ரசிப்பதற்குரிய ஒரு சதைப் பிண்டமாகப் பார்ப்பதுதான் ஆபாசம் உருவாகக் காரணம். 

அடுத்து ஆணாதிக்க உணர்வுகள் ஒரு காரணம். 

அடுத்தப்படியாக கட்டுபாடற்ற பாலியல் சுதந்திரம். செக்ஸ் எனபது சுதந்திரமானது. அதில் ஏன் தலையிடுகிறீர்கள்?நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம். மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் குறுக்கிடாதீர்கள் எனும் மனப்பான்மை. 

மக்களிடையே நாண உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதும் ஆபாசம் பெருக ஒரு காரணம். 

ஆபாசத்தை எதிர்ப்பது எப்படி? 

ஊரைத் திருத்துவதற்கு முதலில் உங்களைத் திருத்துங்கள். உங்கள் அளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். 

’ஆபாசத்தைப் பார்க்கதே; ஆபாசத்தைப் பேசாதே; ஆபாசத்தைச் செய்யாதே!’ 

உங்கள் கண்களை, உங்கள் காதுகளை, உங்கள் நாவை,உங்கள் கால்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

வெட்கத் தலங்களின் மூலம் நிகழ்த்தப்படுவது மட்டுமல்ல ஆபாசம்...! 

‘கண்கள் செய்யும் விபச்சாரம்;காதுகள் செய்யும் விபச்சாரம்;கால்கள் செய்யும் விபச்சாரம்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டியல் போட்டார்கள். 

இறுதியாக, ஆபாசத்தை வளர்க்கிறார்களே அவர்களிடம் ஒரு வேண்டுகோள்: 

''உங்கள் வயிற்றை வளர்ப்பதற்காக எங்கள் ஒழுக்கத்தைச் சாகடிக்காதீர்கள்''

பதின்வயது பிள்ளைகளுக்கு பெற்றோரா நீங்கள்? இது உங்களுக்கு

''பள்ளியறை'' என்ற சொல்லே தமிழில் கொஞ்சம் விவகாரமான சொல்தான்! அது பள்ளி வகுப்பறையையும் குறிக்கும். தம்பதிகள் துயில் கொள்ளும் கட்டிலறையையும் குறிக்கும். இப்படி இரண்டு பொருள் தரும் ''பள்ளியறை'' என்ற வார்த்தையை எவர் எந்த நேரத்தில் உருவாக்கினாரோ தெரியவில்லை? 

அந்த இரண்டு அர்த்தங்களுமே ஒன்றுதான் என்ற நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது.

ஐ.டி. எனப்படும் ஹைடெக் மையங்கள்தான் இதுநாள் வரை முறை தவறிய பாலுறவுகளுக்கு மொத்தக் குத்தகைக்கான இடம் என்று நினைக்கிற ஆளா நீங்கள்? இதோ அந்த எண்ணத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏன் போக வேண்டும்? நம்மூர்ப் பள்ளிகளில் கூட பாலியல் உறவுகள், அதிலும் பிஞ்சில் பழுத்த பாலுறவுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. 

''ஒரே ஓர் அரசுப்பள்ளியில் மட்டும் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் 32 மாணவர்கள் ''அந்த கலை''யில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஆளுக்கு இரண்டு பெண்கள் வீதம் அவர்கள் உறவு வைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்களில் மாணவிகளும் அடக்கம்'' என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார் கோவையைச் சேர்ந்த மனோதத்துவ மருத்துவர் முஹ்யித்தீன். 

கோவையில் `ஞானவாணி' என்ற எஃப்.எம். வானொலியில் `மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், அதைத் தீர்க்கும் முறைகள்' பற்றி கடந்த இரண்டாண்டுகளாகப் பேசி வருகிறார் மருத்துவர் முஹ்யித்தீன். உளவியல் தொடர்பான நேயர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் அதில் அவர் பதிலளிப்பார். அதுமட்டுமல்ல, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, ஊட்டி, கூடலூர், ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற பல பகுதிகளுக்குச் சென்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவச மனோதத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார். 
மருத்துவர் முஹ்யித்தீனை நாம் சந்தித்துப் பேசும்போது. பள்ளிகள் தற்போது பாலியல் கூடங்களாக மாறிவரும் பிரச்னை, மாணவர்கள் மதன், ரதியாக மாறும் பிரச்னைக்குள் போகும் முன்னால் அதற்கு முத்தாய்ப்பாக சில விவரங்களைச் சொன்னார் அவர். 

''இந்தியா முன்னேற வேண்டுமானால் வருங்கால இளைஞர்களான மாணவ மணிகளின் மன சலனங்கள் அகற்றப்பட வேண்டும்'' என்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி கூறுவார். இது என்னை மிகவும் ஈர்த்த கருத்து. தற்போது பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் மனரீதியாக பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. 

சில மாணவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் எதையோ பறிகொடுத்ததைப் போல இருப்பார்கள். நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்களால் படிக்க முடியாது. அந்த வேளையில் அவர்களுக்குத் தகுந்த மனப்பயிற்சி அவசியம். இல்லாவிட்டால் அதுவே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடும். 

இப்படியான மாணவ, மாணவிகளை `சைக்காலஜிஸ்ட்' எனப்படும் மனோதத்துவ மருத்துவர்களிடம் கூட்டிப்போக வேண்டுமே தவிர, `சைக்கியாட்ரிஸ்ட்' எனப்படும் மனநோய் மருத்துவர்களிடம் கூட்டிப்போய் சிகிச்சை தரக் கூடாது. அவர்கள் மயக்க மருந்து தந்து தூங்க வைத்து, ஒருகட்டத்தில் அந்த மாணவர்களை மன நோயாளிகளாகவே மாற்றி விடுவார்கள். ஆனால் நாங்களோ, அவர்களுக்கு ஒரு சில பயிற்சிகளைக் கொடுத்து எங்கள் வசமாக்கி, அவர்களின் ஆழ்மன எண்ணங்களை வெளிப்பட வைத்து, `இந்த சமூக முறையில் இதுதான் சாத்தியம், வேலி தாண்டினால் வாழ்க்கை சிக்கலாகவும், கேலிக்குரியதாகவும் ஆகி விடும்' என்று பேசி அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டு வருகிறோம். 

ஒருமுறை ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனை என்னிடம் கூட்டி வந்தார்கள். நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் வாங்கும் அவன் அண்மைக்காலமாக ஐந்து, பத்து மார்க் வாங்குகிறான் என்பதுதான் அவனிடம் இருந்த பிரச்னை. இங்கே வருவதற்கு முன் அவனை மனநோய் மருத்துவர் ஒருவரிடம் கூட்டிப்போய் இருக்கிறார்கள். அவர் தூக்க மாத்திரை தந்ததில் அந்த மாணவன் வகுப்பறையில் கூட அசந்து தூங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அவனை என்னிடத்தில் கூட்டி வந்தபோது அவனுக்கு மனரீதியாக என்ன பிரச்னை என்று நான் ஆராய்ந்தேன். அது டீன்ஏஜ் பருவத்தில் பலருக்கும் வரும் பிரச்னைதான். 

அந்த மாணவனுக்கு அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி மீது ஒரு தலையாய்க் காதல். அதை அவளிடம் சொல்ல முடியாமல் ஒருவித குற்ற உணர்ச்சியுடன் அவன் இருந்திருக்கிறான். அதனாலேயே படிப்பில் கோட்டை விடவும் ஆரம்பித்திருக்கிறான். அவனிடம் நான், `இதற்கான வயது இதுவல்ல, அந்தப் பெண் உன்னைவிட படிப்பில் சூரப்புலியாக இருக்கிறாள். நீ படிப்பில் கவனம் செலுத்தி தொடர்ந்து அதிக மதிப்பெண் வாங்கியிருந்தால் அவள் அல்லவா உன்னைக் கவனித்திருப்பாள்? தவிர, அவளைவிட சிறப்பான, அழகான பெண் உனக்கு அமைவாள். அதை நீ ஏன் யோசிக்கவில்லை?' என்று பேசி மனரீதியான சிகிச்சை கொடுத்தேன். அவன் இப்போது படிப்பில் முன்பு போலவே அதிக மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்து விட்டான். 

ஆக, மூளை என்பது ஒரு கம்ப்யூட்டரில் வெளிப்படையாகத் தெரியும் ஹார்டுவேரைப் போன்றது. அதற்குள் மெமரி செய்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை நாம் சாஃப்ட்வேர் என்கிறோம். அந்த சாஃப்ட்வேருக்கு சிகிச்சை தருவதற்குப் பதில் ஹார்டுவேருக்கு சிகிச்சை தருவது சரியில்லை அல்லவா? அதைப்போலத்தான் சிலர் மனோதத்துவ மருத்துவர்களான எங்களிடம் வந்து பெற வேண்டிய சிகிச்சைக்குப் பதில், மனநோய் மருத்துவர்களிடம் தெரியாமல் போய் விடுகிறார்கள். மனநோய் மருத்துவர்களும் மனநல மருத்துவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்வதால் சைக்காலஜிஸ்ட் என அழைக்கப்படும் எங்களிடம் செல்ல வேண்டிய சிலர் திசைமாறி அவர்களிடம் போய் விடுகிறார்கள். 

இப்போது விவரம் தெரிந்து என்னிடம் சிகிச்சைக்கு வரும் அதிகம் பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள்தான். அவர்களை `கோஹினிட்டிவ் தெரபி' எனப்படும் விழிப்புணர்வு சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி வருகிறேன். பொதுவாக தம்பதிகளுக்கிடையேதான் பாலுறவு தொடர்பான மனப்பிரச்னைகள் வரும். அந்தப் பிரச்னை இப்போது எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் மாணவ மாணவிகளிடம் வருவதுதான் எனக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருக்கிறது. 

கடந்த இரண்டாண்டுகளாக மதுரை, பெங்களூரு, அருப்புக்கோட்டை, திருச்சி, உடுமலை, கோவை, பாலக்காடு உள்ளிட்ட நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், ஐ.டி. நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்காக நான் மனோதத்துவ சிகிச்சை முகாம்களை நடத்தியிருக்கிறேன். பள்ளி மாணவர்களுக்குத் தரும் பயிற்சியைப் பொறுத்தவரை பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இருக்கின்றன'' என்றவர், சற்று நிறுத்தி விட்டு தொடர்ந்தார். 

''இந்த மனோதத்துவ முகாம்களின் மூலம் மாணவர்களில் வெறும் ஐந்து சதவிகிதம் பேர்தான் எந்தவித பாலியல்ரீதியான மனஉளைச்சலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற தகவல் எனக்குத் தெரிய வந்தது. மற்ற மாணவர்களோ பெற்றோரின் பாசத்துக்கு ஏங்குபவர்களாகவும், சக மாணவியின் அரவணைப்புக்கு ஏங்குபவர்களாகவும், பாலியல்ரீதியாக ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு குற்ற உணர்வுடன் படிப்பில் நாட்டமில்லாமல் இருப்பவர்கள் எனவும் தெரிய வந்தது. 

நன்றாகப் படிக்கிற நிறைய மாணவர்களுக்கு ஏழாவது, எட்டாவது வகுப்பை எட்டும்போதுதான் பாலியல் பிரச்னை பாடாய்ப்படுத்துகிறது. என்னிடம் வந்த ஒரு மாணவன் `மூன்றாம் வகுப்பிலிருந்தே சுயஇன்பப் பழக்கத்திற்கு தான் அடிமையாக இருப்பதாகச் சொன்னான். `ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்டபோது, `அப்படிச் செய்தால்தான் அது பெரிசாகும் என்று நண்பன் சொன்னதாகச் சொன்னான். அவனை ஒருமாதம் வரை மனப்பயிற்சிக்கு உட்படுத்திய நான், "அப்படிச் செய்வதால் உன் சக்தி வெளியேறுகிறது. அதனால் படிப்பில் கவனம் குறைகிறது. நாளை உனக்குத் திருமணம் ஆகும்போது உன்னிடம் தேவைப்படும் சக்தி இருக்காது. அதனால் இந்தப் பழக்கத்தை நீ கைவிட வேண்டும்'' 

என்று பேசிப் புரிய வைத்தேன். இப்போது அவன் நார்மலாகி நல்ல மதிப்பெண் எடுத்து வருகிறான். 

கோவை நகரின் நடுப்பகுதியில் குடிசைகள் நிறைந்த பகுதியில் உள்ள ஓர் அரசுப்பள்ளியில் தொண்ணூறு சதவிகித மாணவர்கள் மது, பீடி, சிகரெட், கஞ்சா, ஒயிட்னர் திரவப் போதை போன்றவற்றுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களது பெற்றோர்களும் அதைக் கண்டுகொள்வதில்லை. சில நல்ல மாணவர்களும் இவர்களைப் பார்த்து இந்த மது, பீடி, சிகரெட், கஞ்சாவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அந்தப் பள்ளியில்தான் இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயமும் நடந்திருக்கிறது'' என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார். 

''இங்கே பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் என்னிடம் உளவியல் சிகிச்சைக்காக வந்தான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு லேத் பட்டறை இருந்திருக்கிறது. அதில் ஒரு பெண் தினம்தினம் இவன் பள்ளிக்குச் சென்றுவரும்போது தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசி கேலி செய்து வந்திருக்கிறாள். ஒருமுறை அவளது வீட்டில் ஆளில்லாத சமயம் இவனை வலுக்கட்டாயமாக கூட்டிப்போய் பாலியல் உறவும் வைத்துக் கொண்டிருக்கிறாள். 

அதன்பின் அவளது தோழிக்கும் இந்தத் தகவல் தெரிந்து, அவளும் இவனை செக்ஸ் பசிக்கு உட்படுத்தி யிருக்கிறாள். `ஒரு வருடமாக நடந்து வரும் இந்தத் தொல்லையை என்னால் தவிர்க்க முடியவில்லை' என்று அவன் அழுதான். அவனிடம் நான், `உன்னிடம் எந்தத் தவறும் இல்லை. அந்தப் பெண்களிடம்தான் தவறு. இனி அந்த வழியில் போகாதே. அப்படியே அந்தப் பெண்கள் அழைத்தாலும் அம்மா, அப்பாவைக் கூட்டி வந்து விடுவேன் என்று மிரட்டு. படிப்பில் மட்டும் கவனம் செலுத்து' என்று அனுப்பி வைத்தேன். 

என்ன கொடுமை? அடுத்த நாள் பார்த்தால், அவனைப் போலவே முப்பத்திரண்டு மாணவர்கள் என்னிடம் வந்து அவர்களுக்கும் தலா இரண்டு, மூன்று பெண்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி அழ ஆரம்பித்தார்கள். நான் அதிர்ந்து போனேன். இவர்களுக்கு இப்படி ஒரு பழக்கம் ஏற்பட அந்த முதல்மாணவன் சொன்ன கதைதான் காரணமாக இருந்திருக்கிறது. இப்படி பள்ளி மாணவர்களை பாலியல் வலைக்குள் இழுத்தவர்களில் விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்களும் அடங்குவார்கள். தவிர, இந்த மாணவர்களின் பெண்கள் பட்டியலில் பல மாணவிகளும் இருந்ததுதான் கொடுமை. அந்த மாணவர்களுக்கெல்லாம் நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் எடுத்துக் கூறி நிறையப் பேச வேண்டியிருந்தது. அவர்களில் பலர் இன்னும் மனோதத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

அந்த மாணவிகள் யார் யார் என்று தெரிய வந்தபோது பெற்றோர்களும் சரி, ஆசிரியைகளும் சரி, `சொல்லுடி, யாரடி அவன்?' என்று கேட்டு மாணவர்கள் முன் அந்த மாணவிகளை அடித்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்குத் தொடையில் காயம் என்றால் அதை மருந்து போட்டுக் குணமாக்குவதுதான் மருத்துவரின் வேலை. அதை விட்டு அந்தக் காயத்தை வெளியே சொல்லி, நோயாளியின் மனதை நோய்க்கு உள்ளாக்குவது சரியல்ல. இது தொடர்பாக சில ஆசிரியைகளுக்கும் நான் மனப்பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது'' என்றார் மருத்துவர் முஹ்யித்தீன். 

இதேபோல ஒர்க்ஷாப் வைத்திருக்கும் பையன் ஒருவன் ஒரு மாணவியுடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறான். ருசிகண்ட பூனையாக மாறிய அந்த மாணவி இன்னும் இரண்டு மாணவிகளை அந்தப் பையனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறாள். இரு மாணவிகள் வாசலில் காவல் காக்க, ஒரு மாணவி உள்ளே அந்தப் பையனோடு சல்லாபிப்பது வழக்கமாகி இருக்கிறது. ஆறுமாத காலமாக நடந்த இந்த காமக்களியாட்டத்திற்குப் பின் அந்த மாணவிகளில் ஒருத்தி மருத்துவர் முஹ்யித்தீனிடம் குற்ற உணர்ச்சி காரணமாக இதைச் சொல்லியிருக்கிறாள். அதன்பிறகு மற்ற இரண்டு மாணவிகளையும் அழைத்து அவர்களுக்கும் உளரீதியான பயிற்சி தந்தாராம் இவர். 

ஒன்பதாவது படிக்கும் மாணவி ஒருவருக்கு மாதவிடாய் நின்றுபோய் வயிறு வீங்கியிருப்பதாக அவளது தாய் என்னிடம் அழைத்து வந்தார். அந்தப் மாணவியிடம் பேசியபோது, `மயக்க மருந்து கொடுத்து மாணவன் ஒருவன் அவளது கற்பைக் கவர்ந்து கர்ப்பமாக்கிய விஷயம்' அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. அவளுக்கு முறையான சிகிச்சை அளித்து படிப்பில்நாட்டம் வரச் செய்தாராம் இவர். 

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கம்ப்யூட்டரில் பாலியல் சி.டி.க்களைப் பதிவு செய்து தன் சக மாணவர்களுக்கு தலா இருபது ரூபாய், முப்பது ரூபாய்க்கு விற்றுவந்த சம்பவத்தையும், அந்த சி.டி.க்களை பார்த்த மாணவர்கள் பிஞ்சிலேயே பழுத்து பல மாணவிகளுடன் ஆட்டம் போட்ட கொடுமைகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் மருத்துவர் முஹ்யித்தீன். 

"இந்தச் சீரழிவுக் கலாசாரத்துக்கு வெறும் மீடியா, சினிமாவும் முக்கிய காரணமாக இருந்தாலும், சில குடும்பத் தலைவர்கள், `பிள்ளை தூங்கி விட்டான்' என்று நினைத்து செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். அதை எக்குத்தப்பாகப் பார்த்து விடும் குழந்தைகள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை வாகாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். `நம் நாட்டைப் பொறுத்தவரை திருமணத்துக்குப் பிறகுதான் செக்ஸ் என்பது உகந்ததாக இருக்கும்' என்பதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த அவலம் அகலும். இல்லாவிடில் இது அதிகமாகி சமுதாயத்தையே பாதித்து விடும். இதுதான் சைக்காலஜிஸ்ட்களான நாங்கள் சொல்லும் செய்தி" என்று ஒரு மெசேஜோடு முடித்துக் கொண்டார் மருத்துவர் முஹ்யித்தீன்.

சுய இன்பம் நல்லதா? கெட்டதா? ஓர் அதிர்ச்சி தகவல்

இந்த பிரசுரத்தின் நோக்கம், மருத்துவ ஆதாரங்களோடு பிரசுரிக்கப் படுகிறதே தவிர ஆர்வமூட்டுவதற்கு அல்ல. 

இந்த விஷயத்தை தடை என்று சொல்ல பலரும் கையாளும் வழி முறைதான் மருத்துவம். எனவே, மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் சொன்ன செய்திகள், செய்தி தாள்களில் வந்தவைகளை, கீழே சேர்க்கப்பட்டுள்ளது. 

அது ஆபத்தானது; தவறானது; சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண் பார்வை போய்விடும்; சுய இன்பத்தில் ஈடுபடுவோருக்குக் கேன்சர் வரும்; உடல் நலிவு ஏற்படும். எல்லாமே தவறு! உடல் நலிவு, பார்வை இழப்பு போன்றவை எல்லாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால் ஏற்படுமே தவிர, சுய இன்பத்தால் அல்ல! 

விந்து உற்பத்திக்கும் சுய இன்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண், பெண் உடல் உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தேவைப்படுவது இருவரின் ஆரோக்கியமும் உடல் உறவு பற்றிய உடல்கூறு / உளவியல் அறிவும்தான். குழந்தை பெற முடியாத மலட்டுத்தன்மை ஆணிடமோ, பெண்ணிடமோ இருப்பதற்கான மருத்துவக் காரணங்கள் வேறு. அதற்கும் சுய இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை.

டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள். 

உண்மையில் சுய இன்பத்தில் எந்த பிரச்சனையும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள். 

இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான். (- நன்றி: இந்திய தினகரன்) 

ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும். 

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை. ஏனென்றால்? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும். விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும். 

தூக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது. 

விந்து முந்துதல், அதாவது புணர்ச்சியில் ஈடுபடமுன் ஸ்கலிதம் ஆகிவிடுதல். 

இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது. 

போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடும்ப வாழ்வில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும். ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும். (நன்றி: தினக்குரல்) 

ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள். இயற்கை முறையில், எந்த பின் விளைவுகளும் இன்றி நல்ல சிகிச்சை உள்ளது. 

உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உண்மையான தேன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலும் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை சக்தி பெருகி விடும் இன்ஷா அல்லாஹ்.

உங்கள் மொபைல் மூலமும் இது நடக்கலாம். எச்சரிக்கை ரிப்போர்ட்

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

சகோதர சகோதரிகளே! 

நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். 

இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். 

"நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நீங்கதான் காப்பாத்தணும்'’ என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. 

"முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது...?'’ என நாம் முடிக்கும் முன்பே... 

"இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..'' சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. 

"சரி விடுங்க. இது பல இடங்களில் நடக்குறதுதானே... இதில் என்ன பிரச்சினை?'’ 

அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது. 

"அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய அந்தரங்கப் பேச்சுக்கள்... இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி... எங்களுக்கே தெரியாமல்... எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி... இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு... அதிர்ந்துபோய்... எனக்குத் தகவல் சொன்னார். 
அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்... அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித்தோம். 

கணவன்- மனைவிகள், .... ஜோடிகள், என பலதரப்பட்ட ஆண்-பெண்களின் அப்பட்டமான உரையாடல்கள்... அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு... பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்... அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. 

நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம். 

பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ... ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு... "இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. 

முதல் வகை... நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை. 

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா... யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். 

பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க... நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கணவன்-மனைவி, உணர்ச்சியோட பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு மயங்குற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு. 

மூன்றாவதாக, சில குறிப்பிட்ட இணையதளங்கள், "உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்'னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற பேச்சை உங்களுக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்'' என்றார் விரிவாக. 

பெண்களுடன் மோசமான உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். "பொதுவா ...இந்த மாதிரியான வெப்ஸைட்டுகளில் நான் உலவிக்கிட்டு இருந்தபோது... "எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்'னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. 

அவங்க கொடுத்திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன்.எடுத்த எடுப்பிலே "என் பேரு லதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), மும்பையிலுள்ள காலேஜ்ல படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட பேசணும்னு ஆசையா இருக்கு' என்றவள், இனிமையாக பேசி மயக்கினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. 

அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத்தரப்பும் தொலை பேசித்தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் பறிக்கிறார்கள்'' என்றார் எரிச்சலாக. வழக்கறிஞரான ஒருவர் நம்மிடம்.

குளோனிங் செல்லை உருவாக்கித்தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ... அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா... அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க எவரிடம் பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். 

இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்... இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்... அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. 

இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்'' என்றார். 

சென்னையில் உள்ள ஒரு, சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. யிடம் இதுபற்றி நாம் கேட்டபோது..."மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமாயிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக்கிறோம்''’ என்றார் உறுதியான குரலில். 

மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்.... உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம். 

இது சம்பந்தமாக சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வ கேட் ஒருவர், "வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு. 

சிலர் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், உணர்ச்சியை தூண்டும் விதமாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா... டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல். ஆக, 

ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை "செக்' பண்ணணும். 

நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம்... ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ, 

நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே "டெலிவர்டு' ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம். 

உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும். 

சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து "லாக்' பண்ணிவிட வேண்டும்.'' என்று உஷார்படுத்துகிறார் அவர். (நன்றி:நக்கீரன்) 

சகோதர சகோதரிகளே, நம்மில் பலரும் இது போன்ற செயல்களை தினமும் செய்து கொண்டிருக்கிறோம். இது எங்கோ நடக்கிறது, நமக்கேன் கவலை என்று இருந்து விடாதீர்கள். இதை எச்சரிக்கையாக எடுத்து உங்கள் வாழ்க்கையில் முதலில் கடைபிடியுங்கள். 

தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) எல்லை மீறி நிதானம் இழந்து மனைவி தானே என்றி நினைத்து அந்தரங்க விஷயங்களை எக்காரணம் கொண்டும் பேசாதீர்கள், அப்படி பேசுமாறு உங்கள் மனைவியோ / நிச்சயமுடிக்கப்பட்ட பெண்ணோ உங்களை வற்புறுத்தினால் விஷயத்தின் விபரீதத்தை சொல்லி புரிய வையுங்கள். 

இதை உங்கள் நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் சொல்லி புரிய வையுங்கள். திருமணமான புதிதில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை தான், ஆனால் நாம் உஷாராக இல்லாது போனால் நம்முடைய அந்தரங்கமும் இணையதளத்தில் வெளிவந்து அதன் பின் வருத்தப்பட நேரிடும்.

30 மாணவிகளுடன் ஆசிரியர் காமலீலை-வீடியோ

30 மாணவிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோவில் பதிவு செய்து வைத்திருந்த கல்லூரி கம்ப்யூட்டர் பிரிவு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (28). இவர் மார்த்தாண்டத்தில் ஒரு கல்லூரியில் எம்சிஏ முடித்த பின் திருவனந்தபுரத்தில் பல கல்லூரிகளில் கம்ப்யூட்டர் பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அப்போது தன்னிடம் படித்த மாணவிகளை மயக்கி அவர்களுடன் உடலுறவு வைத்துள்ளார். இதற்காக பெண்களை பல லாட்ஜுகளுக்கும் ரிசார்ட்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த உடலுறவுக் காட்சிகள் பெண்களுக்குத் தெரியாமல் வீடியோவாகவும் பதிவு செய்து தனது லேப்-டாப்பில் சேவ் செய்து வைத்துள்ளார்.

இவற்றை சிடிகளாக்கி விற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இன்டர்நெட்டிலும் இந்த வீடியோக்களை விற்றுள்ளார்.

இந் நிலையில் சில தினங்களுக்கு முன் அவரது லேப்-டாப் பழுதாகி விடவே அதை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் பழுது பார்க்க கொடுத்துள்ளார்.

அதை பழுது பார்த்தவர் இந்த செக்ஸ் வீடியோக்களையும் பார்த்துவிட்டு அதிர்ந்துள்ளார். தன்னிடம் லேப்-டாப்பைக் கொடு்தத நபர் 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் தனித்தனியே உடலுறவு கொண்டுள்ள வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்து போன அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அவரை திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது லேப்-டாப்பில் இருந்த ஆபாச படங்கள் அடங்கிய சிடிக்கள், வீடியோ கேமராக்கள் சிக்கின.

கிருஷ்ணகுமாரிடம் கற்பிழந்த மாணவிகள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இதுவரை இவர் மீது யாரும் புகாரும் தராததால் அவரிடமே விசாரணை நடந்து வருகிறது.

உலகளவில் 'ஸ்பாம்'களை பரப்புவதில் 2வது இடத்தில் இந்தியா

ஸ்பாம்களை பெருமளவில் பரப்புவதில் உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பேன்டா லேப்ஸ் என்ற நிறுவனம் இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

இந்திய ஐபி முகவரிகள் மூலம் உலக அளவில் கிட்டத்தட்ட 10.98 சதவீத ஸ்பாம் மெயில்கள் பரவுகின்றனவாம். 

ஸ்பாம்களை அதிக அளவில் பரப்பும் நாடுகள் வரிசையி்ல் இந்தியா தவிர பிரேசில், வியட்நாம், கொரியா, அமெரிக்கா ஆகியவையும் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. 

இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களில் பரவிய ஸ்பாம்களில் பெரும்பாலானவற்றை இந்த ஐந்து நாடுகளையும் சேர்ந்த ஐபி முகவரிகள்தான் பரப்பியுள்ளனவாம்.

மொத்தம் பத்து லட்சம் ஐபி முகவரிகள் மூலம் அனுப்பப்பட்ட ஐம்பது லட்சம் இமெயில்களை இதற்காக ஆய்வு செய்தது பேன்டாலேப்ஸ். 

பெருமளவிலான ஸ்பாம் மெயில்களை அனுப்பிய நகரங்கள் வரிசையில் முதலிடத்தில் சியோலும், 2வது இடத்தில் ஹனோய், 3வது இடத்தில் டெல்லி, நான்காவது இடத்தில் பகோதா, 5வது இடத்தில் சாவோ பாலோ, 6வது இடத்தில் பாங்காக்கும் உள்ளன.

கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் ரூபத்தில்தான் பெரும்பாலான ஸ்பாம் மெயில்களில் வைரஸ்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் பேன்டா லேப்ஸின் ஆய்வு கூறுகிறது.