Saturday, March 19, 2011

ஒவ்வொரு நாட்டு விமானங்களிலும் தரப்படும் உணவு வகைகள்.


Airlines Meals

Saudi Arabian Airlines
  

Iran Air
 


Air India


China Air


Japan Air


Air Canada



Air India Express

Due to  BUDGET, 
we are unable to provide any meals...Thanks

49.1 per cent of Indians in high heart attack risk zone


Its a good time to reconsider one's lifestyle ahead of the World Heart Day.
It is that time of the year when you listen to your heart, quite literally. World Heart Day, falling on the last Sunday of September every year, is only a reminder to do the above. World Heart Day, the World Heart Federation tells us, was created to inform people around the globe that heart disease and stroke are the world’s leading cause of death, claiming 17.2 million lives each year.

This year’s theme “Work with Heart” is specifically built around the workplace. The WHF, the World Health Organization and the World Economic Forum have joined forces to call on governments, employers and workers around the world to make workplaces healthier. Workplace wellness programmes that encourage healthy diets, physical activity and restrictions on tobacco use have been shown to be a cost-effective way to save lives and improve productivity.

A study conducted among over 8,000 people across the country, conducted by SaffolaLife in 2008, has shown that Indians’ lipid profiles puts us at higher risk of heart ailments compared to other age groups. Lipids are important dietary constituents, because of their high energy value and the vitamins and essential fatty acids associated with them. The study details the LDL, HDL and TGL of these people.

Initial results showed that 49.1 per cent of Indians have poor lipid profile, thereby increasing the chances for heart attacks. What is worrying still is the study’s contention that the majority of young men in the age group 30-39 years show abnormalities in their lipid profiles. Maharashtra, Gujarat and Tamil Nadu top the risk list by having all three indicators (LDL, TGL and HDL) above acceptable levels.


It also held that 20 per cent of women are at risk after they cross 40 years, linking it with menopause and the consequent decrease in estrogen. “Most women know that they are naturally protected by estrogen. However, very few are aware that with high levels of stress, or diabetes, even estrogen is no protection,” V. Chockalingam, senior cardiologist, says.

He adds that the ideal total cholesterol level must be less than 200 mg, LDL at less than 100 mg, HDL at over 50 mg and TGL under 150 mg. However, if you do not yet have the perfect levels, there is hope. Dr. Chockalingam says the situation can be remedied by altering food habits, taking up exercise, and having a healthy mind set.


Clearly coronary disease is on the rise, says S. Visvakumar, cardio thoracic surgeon, Government General Hospital. “When I joined the government service several years ago, we were seeing more of rheumatic heart disease. Now it is Ischemic Heart Disease, thanks to alterations in lifestyles cutting across economic groups,” he says.

Also the disease is occurring much earlier than it used to, he adds. He talks of how he had to operate on girls as young as 22 years and of how a first year medical student died recently of a heart attack. “If youngsters come with abnormal lipid levels and they have a family history of heart problems, then we prefer to treat them aggressively early on,” he explains. Diet modifications and a rigorous exercise schedule are also prescribed.

Become A Better Person In Just 7 Days


There are many things that you can do to become a better person. You can work hard, exercise, and eat well for example. All of these things are great, no question about it. However, in my opinion, becoming a better person starts with being selfless. Doing good deeds for other people without expecting to gain from it is one of the most rewarding experiences that one can feel in a lifetime. Becoming a truly better person begins with giving outwardly. I’ve come up with this challenge:
7 days to becoming a better person.
Each day you do something selfless, that will not even take more than a few moments of your time, and experience first hand what it feels like to transform into a genuinely great person. Here’s the challenge:
Day 1 : Tell someone you love them
So many people out there never take the precious time to express how they feel to the ones that are truly important in their life. Expressing your love shouldn’t be seen as taboo or a sign of weakness. It’s a sign of confidence, and an expression of what you really feel. There is nothing more amazing than to know that someone loves you. On this first day of the challenge, choose someone in your life to make them feel that special feeling. It’s very simple, just sit them down and say something along those lines: You know I don’t say this often enough but I do appreciate our bond and everything that you do for me. So I just wanted to tell you that I love you. I wanted you to know that. In two minutes, you have made someone’s day. forget day, you’ve made their month! So pick a spouse, a parent, a sibling, a friend. anyone that you truly care about and say the magic word. You may get a little nervous just before, but once you say it, I guarantee you that you will feel amazing. Yes, becoming a better person is not a chore. It actually feels great!
Day 2 : Open your ears and listen

Everyone has their share of issues that they deal with on a daily basis. We all at some point need to be heard. We need to get things out and just blow some steam. Unfortunately, the art of listening is fading away. It’s becoming more and more of a struggle for people to find a good pair of ears to vent off to. So on day 2 of your quest to becoming a better person, you simply have to be there for someone close to you. That’s all you have to do. Listen to them. Let me tell you, I do this all the time with my friends. I make myself available for them and I just listen. You wouldn’t believe how it makes them happy to have someone listen to them. No opinions, no judgment. Listen unconditionally. You may not have realized the power of listening yet, but this exercise will prove it to you. It can make a tremendous difference in someone’s life, and it’s one of the best gifts you can give anyone.


Day 3 : Apologize


We all have made certain mistakes. We’ve all done things we regret. Unfortunately, the majority of the time, we never take the opportunity to make things better, perhaps out of pride or ego. So we carry this along with us. Sure, with time, its impact may fade a little, but there is a much more powerful method to deal with such situations. On day 3, it’s time for you to swallow your pride and apologize. Look into your past. Is there a particular person that you have lost touch with or haven’t spoken to in a while? Regardless of what happened, this is not the time to decide who was right and who was wrong. This is about healing a wound. Apologizing is not an admission that you were wrong. On the other hand, it is proof that you are confident enough to say it. This act will not only make the other party feel much better, it will inspire them. So by being the bigger person and apologizing, you create nothing but positive energy all around. This is as rewarding for you as it is for that other person.

Day 4 : Give away a valuable
Nowadays, the only time people give each other anything somewhat meaningful is on birthdays and holidays. What about the other 360-something days of the year? Simply giving contains so much power in and of itself. This is why on day 3, you will choose something meaningful that you will give to someone that you know will like it and/or benefit from it. It must be something in your home, that you already own. Perhaps a painting, or a book. Something that you hold dear and that will bring happiness and value to the person you choose to give it to. You see, sharing your wealth is one of the best ways to prove how much you care and necessary to becoming a good person. These types of gifts are so much more powerful than anything given on birthdays or holidays, because it shows that you gave it because you wanted to, not because you had it. This brings a whole new meaning to that gift and will make the person appreciate it even more!

Day 5 : Volunteer your time

The first few days, you have given back to the people close to you, but now, it is time to take this further than the comfort of your own surroundings! Giving back to your community and your society is just as important, and an integral part of making everything as a whole, a much better existence for all involved. On day 5, it is time for you to give some of your time away. It doesn’t have to be complicated. You can volunteer your time helping out at your children’s school, or at a local community center for example. It doesn’t have to be a full day or many hours. Volunteer the time that you can. What I mean is that instead of watching tv or surfing the web for example, take some of that time and do something that will help contribute to the development of your community. Ask around, could be something at work or related to a particular activity that you do. Nobody refuses a helping hand and everyone benefits out of it

Day 6 : Help out a stranger
So many people out there could use the help of some good people. After all, we are all humans and we should stick up for one another. I’ve always been amazed by stories of complete strangers risking their life to help a fellow human being. If we can just help anyone with a fraction of such a commitment, then we’ve all made a difference. On day 6, it’s time to do a kind gesture for a total stranger. Could be helping an elderly person with their bags, or helping a kid cross the street, there are so many tiny gestures that we can do in our daily life to help others it's incredible. When you see a car break down on the side of the road, most people drive by, thinking that help is on the way or that someone else will stop. How about you become the person that stops? How about you become the person whose gesture makes a total stranger's day? This is your opportunity to showcase how a good-hearted person reacts in such situations for the greater good of all involved.

Day 7 : Donate

The world is a big place, but in the end, we are a tiny community in the vastness of the Universe. All we have is each other. Although they may not live nearby, there are so many people around the world that need the assistance of good natured people. On this final day, it is time to take your good deeds global! There are tons of really good charities and organizations across the globe that make it their goal to help out those that are in need. Pick any organization about any particular cause that you may hold dear to your heart, and provide them with a donation. The internet makes it really easy now to find such organizations, so this final step is super simple and quick to complete. Donate whatever you can. The amount is not important. What is important is that even though your gesture was simple and quick, the difference it will make will resonate with far greater significance in the grand scheme of things.


So there you have it! 7 days and a better you comes out of it. As a matter of fact, if you have noticed, in becoming a better person, you have affected the lives of so many different people in such positive ways. With such small gestures each day, you have made a difference in your life as well as in other people’s, and that is what becoming a better person is all about. You may find that after these 7 days, you have now developed a habit and that you will continue each and every day to give back. If you have created a momentum of doing good deeds and that it will keep on going, then I have done my work. This can indeed become life changing! So you have the challenge and I would love to hear what you all have done and how it’s impacted your life and those around you.

முத்துக்கு முத்தாக – திரை விமர்சனம்


muthukku-muthaga
வாழும் காலத்திலேயே பெற்றோர்களை பொக்கிஷமாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை சுமந்து வந்து கொண்டிருக்கும் படம்தான் இந்த ‘முத்துக்கு முத்தாக’.
சரண்யாவும் இளவரசுவும் படம் பார்க்கும் ஒவ்வொருவரின் அப்பா, அம்மாவேதான் என்று நினைக்கத் தூண்டும் அளவிற்கு நடிக்கவில்லை. வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஐந்து பிள்ளைகளை பெற்றும், கடைசி காலத்தில் நாதியில்லாமல் சாகும் அவலம். தன் தாய், தந்தையரை நல்ல விதமாகப் பார்த்துக் கொள்ளாத ஒவ்வொருவருக்கும் நெஞ்சுக் கூட்டில் விழும் சம்மட்டி அடி இந்த படம்.

காசு, பணத்தை விட பாசம்தான் பெரிசு என்று காட்டுவதற்கு தன் மகன்களுக்கு ஏழை வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார் இளவரசு. அதை நினைத்துப் பார்க்காமல் தன் வீட்டிற்கு வந்த மாமனார், மாமியாரை எடுத்தெறிந்து பேசும் மருமகள், கையாலாகத தனமாய் பஸ் ஸ்டாண்டுக் கடையில் இட்லி வாங்கிக் கொடுத்து தன் நிலையை எண்ணி விகித்து அழும் மூத்த மகன். அவர் தன் பெற்றோர்களிடம் “அடுத்த ஜென்மத்தில் நீங்க எனக்கு பிள்ளைகளாப் பொறக்கணும். நான் உங்களுக்கு சேவை செய்யணும்” என்று வசனம் பேசும் போது நம்மை உருக வைக்கிறார்.
பணக்கார வீட்டுக்கு வீட்டோடு மாப்பிளையாகப் போய் சாப்பிடக் கூட அவமானப்படும் இரண்டாவது மகன். பிள்ளை ஏதோ பிரச்சினையில் வந்திருக்கிறான் என்று தெரிந்தும் அவனா சொல்லட்டும் என்று பிள்ளையின் உணர்வினைக் காயப்படுத்திவிடக் கூடாது என பயப்படும் இளவரசு. இப்படி ஒரு அம்மா அப்பாவா என்று நினைக்கத் தூண்டுகின்றனர். அப்பா அம்மாவுக்காக காதலித்த பெண்ணை கைவிட்டு விட்டு மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் மூன்றாவது மகன். சொந்த மருமகளே சூனியக்காரியாய் மாறி, ‘உங்க கையாலயே அரளி விதையை சாப்பிட்டு சாக வேண்டியதுதானே’ என்று கேட்கும் போது இளவரசுவும் சரண்யாவும் பாதி செத்து விடுகின்றனர்.
அண்ணியை ஆபாசமாய் படம் எடுத்துத் தள்ளுபவனை கொன்று விட்டு சிறைக்கு செல்லும் நாலாவது மகன். ஐ.டி. நிறுவத்தில் வேலைக்குப் போன ஐந்தாவது மகன். இப்படி எல்லோரும் தங்களை விட்டு சென்றுவிட ஆஸ்துமாவிற்கு ஆளாகும் சரண்யா. பேரனைத் தொட்டால் கூட அவனுக்கும் ஆஸ்துமா வந்து விடும் என்று மருமகள் கூறியதைக் கேட்டதும் உடைந்து போய் நிற்கும் இடம் அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாத ஒன்று.
அரளி விதை கலக்கப்பட்ட உணவு என்று தெரிந்தும் சந்தோஷமாய் சாப்பிடும் இளவரசு, சரண்யாவைப் பார்த்து “யாருக்கும் பாரமாய் இருக்கக் கூடாதுன்னு நினைச்சுட்டியா தாயி’’ என்று கேட்கும் போது தியேட்டரில் இருக்கும் யாராலும் கண்ணீரை கட்டுப்படுத்துவது கடினம்தான்.
இந்தப்படத்தின் மூலமாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோரின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் இராசு மதுரவன்.
படத்தில் நடித்த அனைவரும் அவர்களது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சிங்கம் புலியின் காமெடி படத்தின் முன்பாதிக்கு உதவியிருக்கிறது. மருமகள்கள் எல்லோரும் மோசமானவர்கள்தான் என சித்தரித்திருப்பது நடைமுறைக்கு பொருத்தமானதாக இல்லை.
முத்துக்கு முத்தாக இக்கால இளைய தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம்.

Goolge Chromeயின் மீண்டும் ஓர் அற்புத சேவை! Google WebStore



கூகுள் குரோம் வெப் பிரவுசர் தனது ரசிகர்களுக்காக மீண்டும் ஓர் அழகிய அற்புத சேவையை வழங்கி உள்ளது. Webstore என்னும் பெயரில். இந்த சேவையின் நோக்கம் என்ன என்றால், ஓர் பிரவுசர்கான அனைத்து சிறப்பு சேவைகளையும் மொத்தமாக உள்ளடக்கிய ஓர் தொகுப்பை மக்களிடையே வழங்குவது தான்.
தாங்கள் இந்த என்பதில் நுழைந்தவுடனே இதன் அருமை தங்களுக்கு விளங்கிவிடும். இங்கு உள்ள அனைத்து சேவைகளும் இலவசமே!
இந்த வெப் ஸ்டோரில் பல வகையான அழகிய, நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பல வகையான கூகுள் குரோமிற்கான தீம்ஸ்கள் உள்ளன. 

மேலும் பல வகையான APPLICATIONSகள் உள்ளன. தங்களின் விருப்பமான APPLICATIONSகளை தாங்கள் நேரடியாக செல்லாமல் இங்கு இருந்தே பயன்படுத்தலாம்.

பல வகையான Extension Toolsகளும் உள்ளன. அதாவது இவற்றை பயன்படுத்தி பல பயனுள்ள செயல்களை மேற்கொள்ளலாம். உதரணமாக திரையில் தோன்றும் படத்தை சில வினாடிகளில் நமது கணினியில் பதிவிறக்கிகொள்ளலாம்.

இந்த சேவையை பெற தாங்கள் புதிய பதிவை பதிவிறக்க வேண்டும். அல்லது கீழே உள்ள குறிப்பை கிளிக் செய்வதன் மூலமும் சேவையை பெறலாம்.

Download>> Chrome New Or Go To Webstore

கூகுள் வெப் ஸ்டோரை பற்றி அறிய கீழே உள்ள வீடியோவை காணவும்.

நண்பர்களே! சில வாரங்கள் என்னால் தொடர்ந்து பதிவு எழுத முடியாமல் போனது. மன்னிக்கவும். எனக்கு தேர்வு நடப்பதால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை.

தாங்கள் இந்த சேவையை பயன்படுத்தி பார்த்துவிட்டு தங்களின் கருத்துகளை தெரிவிங்கள். நன்றி!

30-06-2011 க்குப் பிறகு 25 காசு நாணயம் செல்லாது!


25 காசு மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களைப் புழக்கத்தில் இருந்து அகற்றிட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

"இந்திய நாணயச் சட்டம் 1906 - ன் கீழ், வரும் ஜூன் மாதம் 30 - ஆம் தேதிக்குப் பிறகு 25 காசு நாணயம் செல்லாது. இவற்றை சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகளில் தற்போது மாற்றிக் கொண்டு அவற்றுக்கு இணையான பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

விரைவில் மொபைல்போன் மூலம் ரயில் டிக்கட் பெற வசதி

முன்பதிவு வசதியில்லாத சாதாரண டிக்கட்களைப் பெற நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை; இனிமேல் அவற்றை மொபைல் மூலமாகவே பெற இந்தியன் ரயில்வே வசதி ஏற்படுத்தியுள்ளது.


முன்பதிவு வசதியில்லாத சாதாரண பெட்டிகளில் பிரயாணம் செய்வதற்கான டிக்கட்பெற ரயில் நிலையங்களில் நீண்டவரிசையில் நிற்கவேண்டியது உள்ளது. இக்குறையை நீக்க, மொபைல் மூலமாகவே டிக்கட்களைப் பெறும் வசதியை ஏற்படுத்த இந்தியன் ரயில்வே முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்தியன் ரயில்வேபொது மேலாளர் எஸ்.எஸ்.மாத்தூர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது,

"முன்பதிவு வசதி இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை வாங்க, இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை. மொபைல்போன் மூலமாக, டிக்கெட்டை வாங்க முடியும். இதற்கான செயல்பாடுகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அனைத்துவிதமான மொபைல்போனிலும் செயல்படத்தக்க வகையில் இவ் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

குறிப்பிட்ட இணைய தளங்களுக்கு அடிமையானதில் இருந்து மீளலாம்.


முதலில் கூகுல்.அதன் பிறகு பேஸ்புக்,யூடியூப்.நடுவே டிவிட்டர்,ஜிமெயில்.
இப்படி தினந்தோறும் விஜயம் செய்யும் இணையதளங்களின் பட்டியல் எல்லோருக்குமே உண்டு.இதில் வரிசை மாறலாம்.ஆனால் தினமும் தவறாமல் செல்லும் இணையதளங்கள் என்று சில நிச்சயமாக இருக்கும்.இவற்றில் சில இணையதளங்களில் மணிக்கணக்கில் செலவிடும் ப‌ழக்கம் சிலருக்கு இருக்கலாம்.
கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவுக்கு சிலர் குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு அடிமையாகி இருப்பதுண்டு.அதாவது அவர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்த தளங்களில் அதிக நேரத்தை வீண‌டித்து கொண்டிருப்பார்கள்.
உதாரணத்திற்கு பேஸ்புக்கே கதி என இருக்கும் பேஸ்புக் பிரியர்கள் இருக்கின்றனர்.சதா யூடியூப்பில் விடியோ காட்சிகளாக பார்த்து கொண்டிருக்கும் யூடியூப் பிரியர்களும் இருக்கின்றனர்.கூகுலின் இமெயில் சேவையான ஜிமெயில் பற்றி சொல்லவே வேண்டாம்.புதிய இமெயில் வந்துள்ளதா என்று பார்க்க கை அடிக்கடி பரபரக்கும்.
இப்படி குறிப்பிட்ட இணையதளங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கு அடிமையாகி போவதை இணைய யுகத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம்.இதற்கு மாற்று மருந்து தேவை என்று நினைத்தால் அதற்கும் ஒரு இணையதளம் இருக்கிறது.கீப்மீஅவுட் இது அந்த இணையதள‌ம்.
அதாவது,நானே விரும்பினாலும் அந்த இணையதளத்தின் பக்கம் போக அனுமதிக்க கூடாது என நீங்கள் கருதும் இணையதளங்களின் பட்டியலில் இந்த தளத்தில் சமர்பித்தீர்கள் என்றால் அந்த தளங்களின் பக்கம் செல்லாமல் இந்த தளம் பார்த்து கொள்ளும்.
இனி பேஸ்புக் பக்கமே போககூடாது என சபதம் எடுத்து கொண்டு இந்த தளத்தில் பேஸ்புக் பெயரை சமர்பித்தீர்கள் என்றால் அதன் பிறகு பேஸ்புக் பக்கம் உங்கள் அனுமதிக்காமல் இந்த தளம் உங்களை காப்பாற்றும் .அந்த அளவுக்கு எல்லாம் கட்டுப்பாடு வேண்டாம் என்று நினைத்தாலும் தேவைக்கேற்ப கட்டுப்படுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் பேஸ்புக் பக்கம் போக அனுமதிக்காமல் இருக்கும் படி வரைமுறை செய்து கொள்ளலாம்.பேஸ்புக் என்பது உதாரணம் தான்.அவரவர் பழக்கம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப எந்த தளத்தை வேண்டுமானாலும் குறிப்பிட்டு எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும்,வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் ஒரு நாள் விரதம் இருப்பது போல என எப்படி வேண்டுமானாலும் இணையவாசிகள் தங்களுக்கான கட்டுப்பட்டை நிர்ணயித்து கொள்ளலாம்.
இணையத்தில் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இந்த சேவை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு தேவையானதாகவும் இருக்கும்.
இப்படி இணையவாசிகள் தங்களுக்கு தாங்களே விலங்கு மாட்டிக்கொள்ளும் இணையதளங்களில் இருந்து முன்ன‌ணி 10 இணையதளங்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகிறது.உங்களுக்கான தளம் அந்த பட்டியலில் இருந்தால் அதனை கிளிக் செய்து கொள்ளலாம்.
அதோடு சக இணையவாசிகள் எந்த தளங்களுக்கு எல்லாம் அடிமையாக இருக்கின்றனர் என்னும் தகவலையும் இந்த‌பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ள‌லாம்.சுய கட்டுப்பாடு தேவை என்னும் அளவுக்கு எந்த தளங்கள் எல்லாம் இணைய உலகில் பிரபலமாக உள்ளன என்ற த‌கவலையும் இது தெரிவிக்கும்.
ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் இந்த தளம் செயல்படுகிறது.பிரபலமான தளங்களின் பட்டியலில் ஆங்கிலம் தவிர பிற மொழி தளங்கள் சிலவும் இடம் பெறுகின்றன.அந்த வகையில் மற்ற மொழிகளில் கோலோச்சும் தளங்களையும் இதை பார்த்தே அறிய முடியும்.
இணையவாசிகள் தங்களை தாங்களே கட்டுப்படுத்தி கொள்ளவும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.அல்லது பெரியவர்கள் தங்கள் பிள்ளைகள் பேஸ்புக் போன்ற தளங்களில் அதிக நேஅர்ம் செலவிடுவதை கட்டுப்படுத்த விரும்பினாலும் அவர்கள் சார்பில் இந்த சேவையை பயன்படுத்த‌லாம்.

இணையதள முகவரி: http://keepmeout.com/en/

அடிக்கடி செல்லக்கூடிய இணையதளங்களுக்கான பட்டன்களை உருவாக்கலாம்


இண்டெர்நெட் பட்டன்களால் ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா?

அதாவது எல்லாவற்றுக்கும் ஒரு பட்டன்.இமெயிலா அதற்கு ஒரு அழகான பட்டன்.பேஸ்புக்கா அதற்கு ஒரு பட்டன்.டிவிட்டரா அதற்கும் ஒரு பட்டன்.எந்த தளத்திற்கு செல்வதாக இருந்தாலும்,பிரவுசரை அழைத்து அதில் இணையதள முகவரியை டைப் செய்ய வேண்டியதில்லை.அதற்கான பட்டனை கிளிக் செய்தால் போதும் நேராக அந்த தளத்திற்கு சென்றுவிடலாம்.
இண்டெர்நெட்டில் நாம் அணுகக்கூடிய தளங்கள் மற்றும் சேவைக்கான குறுக்கு வழியாக இந்த பட்டன்கள் அமையக்கூடும்.
எல்லாம் சரி,எதற்காக இந்த குறுக்கு வழி என்று கேட்கலாம்.இணையத்தில் உலாவர பிரவுசர் இருக்கிறது.அடிக்கடி செல்லும் தளங்களுக்கு உடனடியாக செல்ல புக்மார்க்கிங் வசதியும் உள்ளது.ஒரு சில பிரவுசர்களில் நாம் தின‌ந்தோறும் பார்வையிடும் தளங்கள் பிரவுசரை இயக்கியதுமே தோன்றிவிடும்.
அப்படியிருக்க பட்டன்கள் எதற்கு?
விஷயம் என்னவென்றால் இந்த பட்டன்கள் இன்டெர்நெட் சார்ந்த விஷயங்களை சர்வ சாதரணமாக க‌ருதும் இணைய தலைமுறைக்கானது அல்ல.இண்டெர்நெட் என்றாலே மிரண்டு போய்விடும் மூத்த தலைமுறையினருக்கானது.
அதாவது உங்கள் அப்பா,அம்மா,தாத்தா,பாட்டிகளுக்கானது.
ஆம் பெரியவ‌ர்களுக்கு இண்டெர்நெட் குழப்பமானதாகவும்,சிக்கலானதாகவும் இருக்கிறது .இதனால் தான் பல பெரியவர்கள் இண்டெர்நெட் என்றாலே மிரண்டு போய் ஒதுங்கி கொள்கின்றனர்.ஆர்வத்தோடு வரும் பலர் இந்த நவீன தொழில்நுட்பத்தின் சூட்சமம் புரியாமல் தடுமாறுகின்றனர்.சிலர் இந்த தடுமாற்றத்திலிருந்து தாங்களாகவே விடுப்பட்டு இணைய உலகிற்குள் முன்னேறி வ‌ந்து விடுகின்ற‌னர்.
இன்னும் சிலரை யாரவது கைதூக்கி விடவேண்டும்.பெரும்பாலும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்கோ அல்லது தாத்தா பாட்டிக்கோ இண்டெர்நெட்டின் அடிப்படைகளை கற்றுத்தர முற்படுகின்றனர்.
இளையவர்கள் இப்படி பெரியவர்களுக்கு இண்டெர்நெட்டில் எப்படி உலா வருவது என கற்றுத்தருவதை அவர்களின் இணைய கடமையாக கூட கருதலாம்.இண்டெர்நெட் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்து வரும் நிலையில் பெரியவர்களையும் அதில் சங்கமிக்க கைகொடுப்பது தானே சரியாக இருக்கும்.
ஆனால் எத்தனை பேருக்கு இதற்கான நேரமும் பொறுமையும் இருக்கும் என்று தெரியவில்லை.
இந்த இடத்தில் தான் இண்டெர்நெட்டுக்கான பட்டன்கள் வருகின்றன.
இண்டெர்நெட்டில் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்கள் இனையதளங்களை பயன்படுத்த முற்படும் போது தட்டுத்தடுமாறும் நிலை ஏற்படலாம்.அப்போதெல்லாம் அருகே இருப்பவரிடம் உதவி கோரலாம்.அல்லது தொலைபேசியில் அழைத்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம்.
இந்த சங்கடம் கூட இல்லாமல்,இணையதளங்களை பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளவை தான் இண்டெர்நெட் பட்டன்கள்.
உதாரண‌த்திற்கு இமெயில் சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் இமெயில் என்னும் பட்டனை கிளிக் செய்தால் போது இமெயில் பக்கத்திற்கு அழைத்து சென்றுவிடும்.அதே போல பேஸ்புக்கிற்கு போக வேண்டும் என்றால் பேஸ்புக் பட்ட‌னை கிளிக் செய்தால் போதும்.
இப்படி பல்வேறு இணையதளங்களுக்கான பட்டன்களை உருவாக்கி கொள்வதற்கான சேவையை இண்டெர்நெட் பட்டன்ஸ் டாட் ஆர்ஜி தளம் வழங்குகிற‌து.
இமெயில்,பேஸ்புக்,டிவிட்டர்,யூடியூப்,கூகுல் போன்ற இணையதளங்களுக்கான பட்டன்களை இந்த தளத்தில் உருவாக்கி கொள்ளலாம்.இந்த‌ தளங்கள் தான் என்றில்லை,எந்த த‌ளத்திற்கும் அழைத்து செல்லக்கூடிய பட்டன்களை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம்.
பட்டன்களை தேர்வு செய்து அதில் இணையதளங்களுக்கான முகவரியை டைப் செய்தால் பளபளக்கும் வண்ணங்களில் அழகிய பட்டன்கள் தயாரிகிவிடும்.அந்த பட்டன்களுக்கான இணைய முகவரியை சேமித்து கொண்டால் எந்த‌ கம்ப்யூட்டரிலும் சுலபமாக பயன்படுத்தலாம்.
அடிக்கடி செல்லக்கூடிய மற்றும் அவசியமான இணையதளங்களூக்கான பட்டன்களை உருவாக்கி கொடுத்துவிட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் உற்சாகமாக இணையத்தில் உலா வருவார்கள்.

மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்



பல ஆண்டுகளாக மூளை எப்படி சிந்தின்கின்றது என்பது பற்றி  ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.இதன் நோக்கம் மூளையைபோல் சிந்திக்கும்  இயந்திரத்தை உருவாக்குவது.அதற்காக படிகளாக முதலில் எலியின் மூளையை போல் சிந்திக்ககூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றினை உருவாக்கினர்.

இவ்வரிசையில் பூனையின் மூளையை போல் சிந்திக்க கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை தற்போது IBM நிறுவனம் உருவாக்கி உள்ளது.இக்கணினி உருவாக்க பயன்படுத்தப்பட்ட Processor மொத்தம் 1,47,456 மற்றும் அதன் நினைவகம் 144 Terabyte (1Terabyte(TB) = 1024  GB))நாம் பயன்படுத்தும் கணினியை விட இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.
இவ்வளவு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் பூனையின் மூளையை விட நூறு மடங்கு குறைவான வேகத்திலே யோசிக்கின்றது.ஆனாலும் இத்துறையில் பெரும் முன்னேற்றம் என்று கூறுகின்றனர்.இதற்கே இவ்வளவு சக்தி வாய்த்த கணினி என்றால், மனித மூளைக்கு நிகரான சிந்திக்கும் திறனை கொண்ட கணினியை உருவாக்குவது எவ்வளவு கடினம் என நினைத்து பாருங்கள்.இதுவரை 1% மட்டுமே மனித மூளையை போல சிந்திக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளது . ஆனாலும் ஒரு நாள் வரலாம்...

(மூளை  ஒரு சிக்கலான இணைப்பு அதிலுள்ள  நூறு  கோடி நியூரான்  மற்றும் அதை இணைக் கூடிய ஆயிரம் கோடி நரம்பு முனைகளையும் உள்ளடக்கியது .இதில் மூளையில் சிந்திக்கும் பகுதியை Cerebral Cortex என்று அழைகின்றனர். )

ஆன்லைனில் அன்றாட வாழ்க்கை!

உலகம் மாறிவருகிறது. மிகுந்த விலை உயர்ந்ததாக நேரம் மதிக்கப்படுகிறது. வாழ்க்கையை எளிதாக்கவும் இனிமையாக்கவும் ஆன்லைன் வர்த்தக முறை உதவுகிறது. வாழ்க்கையின் அனைத்து பிரிவுகளும் டிஜிட்டல் மயமாகி அன்றாட வாழ்க்கையினை இன்று கம்ப்யூட்டர் வழியாகவே நிறைவேற்றிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிட்டது. பரபரப்பு மிகுந்த இன்றைய வாழ்க்கை சூழ்நிலைக்கு இது பெரிய உதவியாகவே உள்ளது. 


நகரங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த இந்த டிஜிட்டல் வசதிகள் இன்று சிறிய ஊர்களிலும் பழக்கத்தில் வர ஆரம்பித்துவிட்டன. விமானப் பயணங்களில் தொடங்கி இன்று ட்ரெயின் டிக்கட், ஆம்னி பஸ் டிக்கட் என பயணங்களை எளிதாக்கும் வகையில் ஆன்லைனில் டிக்கட் எடுப்பது அவற்றை மாற்றி அமைப்பது, கேன்சல் செய்வது என அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. இருந்த இடத்திலிருந்தே ஸ்டாக் மார்க்கட்டை கலக்கும் வகையில் ஆன்லைன் வர்த்தகம் மேலோங்கி உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கிப் பதுக்கி விற்பனை செய்வதுவும் நடக்கிறது. ரூ.200க்கு மேல் பிரியாணி வேண்டுமா எங்கள் இன்டர்நெட் தளத்தில் ஆர்டர் செய்திடுங்கள் என்று விளம்பரம் செய்திடும் அளவிற்கு இந்த ஆன்லைன் வாழ்க்கை முன்னேறி விட்டது. இவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.. 


1. ஆன்லைன் பேங்கிங்: அனைத்து வங்கிகளும் கோர் பேங்கிங் மற்றும் அதன் அடிப்படையில் இன்டர்நெட் பேங்கிங் என்ற முறைக்கு வந்துவிட்டன. எந்த வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் உள்ளதோ அந்த வங்கியில் இலவசமாகக் கிடைக்கும் இன்டர்நெட் வசதியை விண்ணப்பம் அளித்துப் பெறலாம். உங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை இந்த வங்கிகள் அடுத்தடுத்த நாட்களில் உங்களுக்கு பாதுகாப்பான முறையில் பெரும்பாலும் கூரியர் மூலம் அனுப்புகின்றன. வீட்டிலோ அல்லது வெளியே இன்டர்நெட் மையங்கள் மூலமாக இந்த வங்கியின் இணையதளம் சென்று உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளலாம். 

பெரும்பாலும் நம் அக்கவுண்ட்டில் இன்றைய பேலன்ஸ் எவ்வளவு, சம்பளம் கணக்கில் சேர்ந்துவிட்டதா என்று நிறைய பேர் உறுதி செய்து கொள்கின்றனர். கிளைக்குச் சென்று அங்கு நம் வண்டியை நிறுத்த இடமில்லாமல் அலைந்து பின் உள்ளே வரிசையில் நின்று பாஸ்புக் என்ட்ரி, செக் பரிமாற்றம் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது. அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர், டிமாண்ட் டிராப்ட் வீட்டுக்கு அனுப்பச் சொல்லி விண்ணப்பம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பில் செலுத்துதல் என அனைத்து பேங்கிங் பணிகளையும் இன்டர்நெட் வழியாக எந்த ஊரில் இருந்தும் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம். இதனால் நம் நேரம், உடல் உழைப்பு, அலைச்சல் மிச்சமாகிறது. அத்துடன் பண பரிமாற்றம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் வெளிப்படை யாகவும் நடைபெறுகிறது. 


2. ட்ரெயின் டிக்கட்: இந்தியாவில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு செயல்படும் இன்டர்நெட் தளமாக இந்திய ரயில்வேயின் இணையதளம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இதன் எளிமையும் பயன்படுத்து பவர்களுக்கு வசதியையும் அளிப்பதுதான். www.irctc.co.in மற்றும் www.srailway.com என்ற இந்த இணைய தளங்களின் மூலம் இன்று நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயனடைகின்றனர். உங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் இந்த டிக்கட்களை எளிதாகப் பெறலாம். ஐ–டிக்கட் (வீடுகளுக்கே அனுப்பப்படும்) இ–டிக்கட் (நீங்களே பிரிண்ட் செய்து எடுத்துச் சென்று பயணம் மேற்கொள்வது) சீசன் டிக்கட் மற்றும் தட்கல் வழியில் டிக்கட் என அனைத்தும் கிடைக்கின்றன. எந்த வண்டியில் எந்த நாளில் இடம் உள்ளது என முதலில் உறுதி செய்து கொண்டு பின் டிக்கட் புக் செய்யலாம். குறிப்பிட்ட ட்ரெயின் என்பது மட்டுமின்றி குறிப்பிட்ட இரு ஊர்களுக்கிடையே எந்த ட்ரெயின்களெல்லாம் செல்கின்றன; 


அவற்றில் என்று எத்தனை இடங்கள் உள்ளன என்று பார்த்து உறுதி செய்து டிக்கட் புக் செய்யலாம். வேண்டாத போது டிக்கட்டை கேன்சல் செய்திடலாம். கேன்சல் செய்திட அருகில் உள்ள புக்கிங் மையத்திற்குச் செல்ல வேண்டும். பணம் உங்கள் வங்கி அக்கவுண்ட்டில் சேர்க்கப்படும். ரயில்வே தளத்தில் தகவல்களை அறிய ஸ்டேஷன் கோட் எண், ட்ரெயின் எண் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். இல்லை யேல் தளத்திலேயே பெறலாம். இந்த வசதிகளை ரீடிப் தளம் தனிப்பட்ட முறையில் தருகிறது. தகவல்களை மட்டும் பெற நீங்கள் http://indianrailways.rediff.com/ index.php என்ற தளத்தினை அணுகலாம். 



இங்கு ஊர் பெயர் டைப் செய்திடத் தொடங்கினால் போதும். தளத்தில் அந்த எழுத்துக்களின் தொடங்கும் அனைத்து ஊர்களின் பெயர் கிடைக்கும். இதே போல பயண நாளையும் எளிதாக அமைக்கலாம். பின் இந்த தளம் இந்தியன் ரயில்வே தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று விளக்கமாக அளிக்கிறது. ரயில்வே தளத்தில் உடனடியாகப் பெற முடியாத தகவல்களை ஒரே முயற்சியில் இங்கு பெறலாம். ஆனால் டிக்கட் பதிவிற்கு ரயில்வே தளத்திற்குத் தான் செல்ல வேண்டும். இதே போல சில ஆம்னி பஸ் நிறுவனங்களும் தங்கள் இணைய தளங்கள் மூலம் பஸ்களுக்கான டிக்கட்களை வழங்குகின்றன. பஸ்களில் இடம் இருக்கிறதா என்ற தகவல்களைத் தருகின்றன. அவற்றைப் பெற்று போன், இமெயில் மூலம் டிக்கட் புக்கிங் செய்திடலாம். 


3. பாஸ்போர்ட் பெற: வெளிநாடு செல்லத் தேவையான முதல் டாகுமெண்ட் நமக்கான பாஸ் போர்ட் தான். இதற்கான அலு வலகம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஓரிரு இடங்களில் தான் உள்ளன. எனவே இங்கு சென்று விண்ணப் பிப்பது காலத்தை வீணாக்கும் செயல். இன்று ஆன்லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்வதனைக் கட்டாயமாக்கி உள்ளனர். http://passport.nic.in/ என்ற தளம் இதற்கு உதவுகிறது. இதே போல வெளிநாடு செல்ல அந்த நாட்டின் தூதர் அலுவலகங்கள் விசா வழங்கும் பணியையும் இணைய தளங்கள் வழியாக மேற்கொள் கின்றன. அல்லது இதற்கென்றே இயங்கும் ஏஜென்சிகள் தங்கள் இணைய தளங்கள் வழியாக அனைத்து நாடுகளுக்குமான விசாக்களை ஏற்பாடு செய்கின்றன. 

4.திரைப்படத்திற்கானடிக் கட்கள்: சென்னை போன்ற நகரங்களில் வளாகங்களை அமைத்து பல தியேட்டர்களை ஒரே இடத்தில் நடத்தி வரும் தியேட்டர் நிறுவனங்கள் இணைய தளங்கள் வழியாக டிக்கட் புக்கிங் மேற்கொள்கின்றன. நாள், ஷோ நேரம், வளாகத்தில் உள்ள தியேட்டர், படம் முதலானவற் றைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு வேண்டிய டிக்கட்களை பதிவு செய்திடலாம். வீட்டிற்கு டிக்கட்கள் டெலிவரி செய்யப் படும். இதற்கு தனி கட்டணம் உண்டு. 


5. கம்ப்யூட்டர் வாங்கலாம்: டெல் நிறுவனம் உலகளாவிய அளவில் ஆன்லைனில் கம்ப்யூட்டர் விற்பனை செய்கிறது. இதன் இணைய தளம் சென்று (http://dellstoreroa02.sg.dell.com/ public /cart/configurator.jsp?prd_id=42488&sr_no=2) நமக்கு வேண்டிய வகையில் கம்ப்யூட்டர் கான் பிகரேஷன் ஏற்படுத்தி புக் செய்திடலாம். 


6.கூரியர்தபால்: வெளிநாடு களுக்கு விலை உயர்ந்த பொருட்களை, டாகுமெண்ட்களை கூரியர் ஏஜென்சி மூலம் அனுப்புகிறீர்கள். அது எங்கு உள்ளது? சென்றடைந்துவிட்டதா? என்றெல்லாம்கவலைப் படுகி றீர்களா? பெட் எக்ஸ் மற்றும் புளுடார்ட் போன்ற கூரியர் நிறுவனங்கள் உங்கள் பார்சல் அல்லது தபால் தற்போது எங்கிருக்கிறது என்பதனை தங்கள் இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியினை அளிக்கின்றன. 


7. கார்ப்பரேஷன் வரி செலுத்துதல்: சொத்து வரி, தண்ணீர் வரி, பிறப்பு மற்றும் மரணச் சான்றிதழ் எனப் பல விஷயங்களை நாம் அவ்வப்போது கையாள வேண்டியதுள்ளது. பெரும்பாலான மாநகராட்சிகள் இவை குறித்த தகவல்களை அளிக்கின்றன. இணையம் வழியாக வரி வசூலிக்கும் வசதியை விரைவில் அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளன. 


8. மொபைல் ரீசார்ஜ் கூப்பன்: ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பிரீபெய்ட் மொபைல் போன்களுக்கான ரீசார்ஜ் கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறது. உடனே உங்கள் மொபைல் போன் அக்கவுண்ட்டில் இருக்கும் டாக் டைம் வேல்யூ உயர்கிறது. உங்கள் அக்கவுண்ட் பெயர், ஐ.டி. கொடுத்து தளத்தில் நுழைந்து பின் உங்கள் மொபைல் போன் சர்வீஸ் மற்றும் எண் கொடுக்க வேண்டும். பின்னர் எவ்வளவு உயர்த்த வேண்டும் எனக் கொடுத்தால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் மொபைல் போன் பிரீ பெய்ட் அக்கவுண்ட்டின் டாக் வேல்யூ உயர்ந்திருப்பதைக் காணலாம். தனித்தனி நிறுவனங்களின் இணைய தளம் மட்டுமின்றி இத்தகைய சேவைகளை வழங்க பொதுவான தளங்கள் இருக் கின்றன. இவை கட்டணம் ஏதும் பெறாமல் உங்கள் பயண டிக்கட், சினிமா டிக்கட், பொருட்கள் சப்ளை ஆகியவற்றை பெற்றுத் தருகின்றன. இதற்கான ஒப்பந்தங்களை சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ளன. அவை இந்த வர்த்தகத்திற்கான கமிஷனை இந்த இணைய தள நிறுவனங்களுக்குத் தருகின்றன. கூகுள் சர்ச் இஞ்சினின் தேடல் தளத்திற்குச் சென்றால் இத்தகைய தளங்களின் பட்டிய லைக் காணலாம். 


இவ்வளவு வசதிகள் இருந்தும் இன்னும் பல படித்தவர்கள் இதனைப் பயன்படுத்த முன் வருவ தில்லை. காரணம் ஆங்காங்கே நடக்கும் திருட்டுகள் தான். உண்மை தான்; பல ஏ.டி.எம். மையங்களில் நடப்பது போல இணைய தளங்கள் வழியாக வர்த்தகம் நடைபெறுகையில் நம் கிரெடிட் மற்றும் ஏ.டி. எம். கார்டு குறித்த தகவல்கள் கசிய வாய்ப்புகள் இருக்கலாம். இதனைப் பயன்படுத்தி சில திருடர்கள் நம் பணத்தை இழக்கும்வழிகளை மேற் கொள்ளலாம். ஆனால் இது எப்போதும் எல்லா இடத்திலும் நடைபெறுவதில்லை. இது போன்ற இழப்புகள் உடனே சரி செய்யப்படுகின்றன. நஷ்டம் ஈடு கட்டப்படுகின்றன. பொதுவாக நாம் பொருட்களைக் கண்ணால் பார்த்த பின்னரே வாங்க முற்படுவோம். அத்தகைய எண்ணமும் நம்மை இத்தகைய ஆன்லைன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தடுக்கின்றன. உலகம் மாறி வருகி றது. மிகுந்த விலை உயர்ந்ததாக நேரம் மதிக் கப்படுகிறது. வாழ்க் கையை எளிதாக்கவும் இனிமை யாக்கவும் இந்த ஆன்லைன் வர்த்தக முறை உதவுகிறது. உங்கள் வங்கிக் கணக்குக்கான இன்டர்நெட் அக்கவுண்ட் தொடங் குங்கள் – இலவசமாக. வாழ்க் கையை ஆன்லைனில் அனுபவி யுங்கள். ஒருமுறை இத்தகைய வர்த்தகத்தினை மேற்கொண்டால் பின் அனைத்தும் இவ்வழியிலேயே மேற்கொள்ள முற்படுவீர்கள். மிச்சப்படுத்தும் நேரத்தையும் உழைப்பையும் உங்கள் குடும் பத்திற்காகச் செலவ ழியுங்கள். சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடருங்கள்.