Tuesday, January 4, 2011

ஆற்றலரசிக்குப் பத்துக் கேள்விகள்

வழக்கம் போல் சங்கத்துக்கு வந்த தபால் பையை நம்ம பாண்டியும் நானும் பாத்துகிட்டு இருந்தோம். துபாய் பக்கமா இருந்து நம்ம துபாய் ராசா ஒரு மூணு கிலோ பேரீச்சம் பழமும் கூடவே கிலோ கணக்குல்ல பாசமும் அனுப்பியிருந்தார். பிரிச்சுச் சாப்பிட்டோம் நல்லாயிருந்துச்சு... பேரீச்சம் பழத்தைத் தான்ய்யா சாப்பிட்டோம்

ச்சே விஷயத்துக்கு வர்ரோம்...

நமது கைப்புள்ள இதழ் மாதிரி புதரகத்துல்ல நமது புதர் ன்னு ஒரு பேப்பர் வருதாம் அந்தப் பத்திரிக்கையிலிருந்து பொன்ஸ் அக்காவுக்கு ஒரு லெட்டர் வந்து இருந்துச்சு.

வரு,வா.சங்கம் பெரும் புள்ளிங்க அம்புட்டுப் பேர்க்கும் வர்ற லெட்டரைப் பிரிச்சுப் படிச்சு அவங்கிளுக்குப் பதில் போடுறது அம்புட்டும் இந்தத் தொண்டர்கள் வேலைத் தானே... லெட்டரைப் பிரிச்சா.. அக்காவோட அரசியல் எதிரி யாரோ எழுதியிப்பான்(ள்) போல இருந்துச்சு..

அக்காவுக்குப் போன் போட்டா அக்கா சோறு வடிக்காம பர்கர் தின்ன கதையை வெட்டியாப் பேசி போன் பில்லை ஏத்தி விட்டிருச்சு...

அப்புறமா நாங்கப் பதட்டமா லெட்டர் மேட்டரை எடுத்து விட்டு இதுக்கு என்னப் பதில் சொல்லுரதுன்னு கேட்டோம்...

அக்கா விவரத்தை அசால்ட்டாக் கேட்டுட்டு இந்தப் பிஸ்கொத்து கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்.. என் பேன்ஸ் பதில் சொல்லுவாயங்கன்னு நச்ன்னு போனைக் கீழே வச்சுட்டாயங்க...


அக்கா பேன்ஸ்ன்னு சொன்னது தலயிலே இருக்குமே அந்த மேட்டரா இல்ல தலக்கு எல்லாமே அந்த மேட்டரான்னு நானும் பாண்டியும் பாயைப் பிராண்டி ஒரு முடிவுக்கு வர முடியாமல் அந்தக் கேள்விகளை அப்படியே சங்கப் பலகையிலே ஒட்டுறோம்ய்யா.. அக்காவோட பேன்ஸ்க்குச் சமர்ப்பணம்.

நமது புதர் கேட்கும் பத்து கேள்விகள்

1. உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்?
சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா?

2. பலப் பதிவுகளிலும் உங்களை சின்னப் பெண் எனக் கூறும் நீங்கள்.. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சகப் பதிவாளர்களை மிரட்டி உங்களை அக்கா எனக் கூறுமாறு தொடர்ந்து பயமுறுத்துகிறீர்களாமே? இது சரியா?

3. தேர்தல் நேரத்தில் சங்கத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக எங்குமே பிரச்சாரம் போக மறுத்து விட்டு... இப்போது மட்டும் அயல் நாட்டு சங்க வளர்ச்சி திட்டம் என்று புதிய திட்டம் வகுத்து அயல் நாடு சென்று டாலர் தேத்துவது நியாயமா?

4.புதரகத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் அரிசி சோறு வடிப்பான் கருவி ஊழல் உண்மையா? தேவையின்றி சோறு வடிக்கும் சிறுப் பிரச்சனையைப் பெரிதாக்கி சங்கத்தாரின் பொன்னான நேரத்தை வீணானச் சோற்றுப் புராணப் பதிவுகளில் ஈடுபட வைப்பது மாபெரும் துரோகம் ஆகாதா?

5. சங்கத்தில் உங்களுக்கு பிகுலு பட்டத்துடன் வழங்கியப் பிகுலைத் தலக்கு எதிராகவே பயன்படுத்துவது.. அதாவது தல உதை பந்து விளையாடும் இடங்களில் ஒருவனைக் கூடவே தலப் பின்னால் ஓட விட்டு தலக் கைப்புப் பந்து எடுக்கும் போதெல்லாம் அவன் பிகுல் அடிப்பதைப் பார்த்து மகிழ்வது.. இது குற்றமல்லவா?

6. கைப்பொண்ணுவை வா.வ.சவில் ( சரியாகப் பார்க்கவும் வரு.வா.ச அல்ல) வா.வ.ச... இணையச் சொல்லி மிரட்டியது.. கைப்பொண்ணுக்கு மீசை முளைக்க வைத்தது.. அதற்கு விளக்கெண்ணெய் தடவியது எனக் கொடுமைகள் இழைத்தது சரியா?

7.சங்கத்துக்கு மிகவும் நெருக்கமானப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் வாக்குறுதிகளின் வங்கி இலவசக் கொத்தனார் மீது சங்கத்திலிருந்து தட்டு முட்டுச் சாமான்களை லவட்டிச் சென்றதாய் குற்றம் சாட்டி மிரட்டியது.. இப்போது சாதம் வடிப்பது போன்ற சுமாரான சமையல் குறிப்புக்களைக் கொடுத்துவிட்டு பரோட்டாப் போடுவது எப்படி என்ற மாபெரும் சாதனைப் பதிவுப் போட்டு மீன்கொத்தி அன்பர்களின் அமோக ஆதரவு பெற்று அமைச்சரான கொத்தனாரின் உணவுத் துறை இலாகாவைக் கைப்பற்ற நீங்கள் சதி செய்கிறீர்களாமே?

8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா?

9.கீதா அக்காவின் ஆறு லட்சம் ரசிகர் மன்றங்களைக் கலைத்தது... இன்னும் அவருக்கென் இருக்கும் சில நூறு மன்றங்களையும் பின்னூட்டமிட்டு கலவரப் பூமியாக மாற்றுவது என பெரும் சதி திட்டம் தீட்டி வருகிறீர்களாமே?

10. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் மீது கூறப் படும் குற்றச்சாட்டு சங்கத்தின் உயர்வான...உயிரான... கொள்கையான வருத்தப் படாமல் இருப்பதை மீறியது.. உங்கள்த் தனி பதிவில் மட்டுமின்றி பிற பதிவுகளிலும் சென்று 'வருத்தப்படுவதாய்' பிரகடனம் செயதிருப்பது உங்கள் இயக்கத்திற்கு இழைக்கும் கொடுந்துரோகம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

ரங்கமணி குரங்கு பிடித்த கதை

 ஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.

*************************************

நான்தான் எங்கள் அபார்ட்மென்ட் செக்ரட்டரி. பாழாய்ப் போன குரங்குக் குடும்பம் ஒன்று இரண்டாவது ப்ளாக்கில் பிளாட் நெ 306 இன் பால்கனியில் சில நாட்களாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. ஹௌஸ் ஓனர் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.

அசோசியேஷன் மீட்டிங்கில் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டார் அந்த பிளாட்டின் ஓனர். ஒரு செக்ரட்டரி என்ற முறையில் நான் இதைத் தடுத்திருக்க வேண்டும் என்பது அவர் வாதம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் அந்தக் குரங்கு குடும்பத்திற்கு அந்த பிளாட்டில் வந்து குடியேற NOC கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். வந்த கோபத்தில் அவர் பாதி மீட்டிங்கில் சென்றுவிட்டார். எல்லோரும் முடிவு செய்து குரங்கைத் துரத்தும் பொறுப்பை என் தலையில் கட்டினார்கள். நான் கூகிலாண்டவரைச் சரணடைந்தேன்.

நிலைமை புரியாமல் வீட்டில் வேறு என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். குரங்கு என்னிடம் முரண்டு பண்ணாது என்று உத்திரவாதம் கொடுத்தார்கள் (உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் மேலே வலது மூலையில் இருக்கும் என் புகைப்படத்தைப் பார்க்கவும்). விஷயம் அவர்கள் அம்மா வீட்டுக்கும் போனது. பிள்ளையாரைப் பிடிக்கப் போய்க் குரங்காய் மாறிய கதைதான் அவர்களுக்குத் தெரியுமாம். மேலும் மாப்பிள்ளை குரங்கை எப்படிப் பிடிக்கிறார் என்று பார்க்கக் கிராமமே ஆவலாக உள்ளதாம். குறைந்த பட்சம் மாமனார், மாமியார், அவளின் தாத்தா, தாத்தாவின் மூத்த சகோதரர்கள் இருவர் ஆகியோர் (கிட்டத் தட்ட ஒரு மினி zoo ) பெங்களூர் வர டிக்கெட் ஏற்பாடு செய்யும்படி உத்தரவு வந்தது.


இதனிடையே குரங்கு எங்கள் பிளாட்டின் பால்கனிக்கு வந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை என்னவென்றால், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மா சொன்னதுதான். "உங்க வீடல் இப்ப எக்ஸ்ட்ரா மெம்பெர் வந்துர்க்காங்க. சம்பளம் ஜாஸ்தியா வேணும்".

ஒரு வேளை அந்தக் குரங்குக் குடும்பத்திற்கு ஒரு மினி zoo வே தன்னைப் பார்க்க தெரிந்து விட்டதோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டது. இதை வீட்டில் சொல்லப் போக, ஒரு வேளை நான் கஷ்டப்படுவது பொறுக்காமல் அவை சென்று விட்டன என்று சொன்னார்கள். அதோடு நிறுத்தாமல், அந்தக் குரங்கு ஒரு சகோதர பாவத்தில் என்மேல் பரிதாபப்பட்டு சென்றிருக்கலாம் என்றும் நினைப்பதாகக் கூறினார்கள். ஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.

சில நாட்களுக்கு முன் பிளாட் நெ 306 இன் ஹவுஸ் ஓனரை வாக்கிங் போகும்போது பார்த்தேன். அவரைப் பார்த்து மையமாகப் புன்னகைத்து வைத்தேன். அவரே அருகில் வந்து குரங்கு போன செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். நான் என்ன செய்து விரட்டினேன் என்று கேட்டு வைத்தார். எனக்கு நாக்கில் சனி, செவ்வாய் மற்ற எல்லாக் கெட்ட கிரகங்களும் ஒரே நேரத்தில் குடியேறினர்.

"அது ஒன்னும் இல்லை சார். நான் போய் அந்தக் குரங்கு குடும்பத் தலைவனிடம் உங்களைப் பற்றி சில உண்மைகளைச் சொன்னேன். குரங்கே, உனக்கு இந்த ஓனரைப் பற்றித் தெரியாது. நீ பால்கனில இருக்க. இவர் பால்கனி லைட்டுக்கு மட்டுமில்லாம சூரியன், சந்திரன் வெளிச்சத்திற்கும் கரென்ட் காசு கேட்பார். தானாக அடிக்கும் காற்றுக்கு பேன் சார்ஜ் கேட்பார். இதற்கு மேல் குரங்குக் குட்டிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பார். உன்னுடைய சொந்தகாரர்கள் யாரும் வரக் கூடாது என்பார். வருட வருடம் 10 % வாடகை ஏற்றுவார். எல்லாவற்றுக்கும் மேலாக ரெண்ட் ரெசிப்ட் தரமாட்டார், இந்த மாதிரி எல்லாம் சொன்னவுடனே குரங்கு தன் குடும்பத்தோட ஓடிப் போய்விட்டது சார்" என்றேன். அதற்குப் பிறகு நான் அவரை எங்கும் காணவில்லை.

பெரும்பாலானவர்களின் பிரவுசர்

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், டிசம்பர் மாதத்தில் இணையத்திற்கு நம்மை வழி நடத்தும் பிரவுசர் வெளிவந்தது. அதனை வெளியிட்ட டிம் பெர்னர்ஸ் லீ, அதற்கு WorldWideWeb என்றே பெயர் சூட்டி இருந்தார். இன்று பல நிறுவனங்களின் பிரவுசர்கள் நம்மை போட்டி போட்டு அழைக்கின்றன. இந்த பிரவுசர்களுடனே வரும் ஆபத்துக்களும் நம்மை உஷார் படுத்துகின்றன. இருப்பினும் இவை இன்றி நாம் நம் வாழ்வை இயக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த இருபது ஆண்டு காலத்தில் வந்த சில பிரபலமான பிரவுசர்கள் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.


 1.WorldWideWeb (1990): உலகின் முதல் இன்டர்நெட் பிரவுசர். இன்றைய பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு கற்காலத்து மனிதன். கிராபிக்ஸ் எதுவும் இல்லாத குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டும் இயங்கிய பிரவுசர். ஆனால் இந்த பிரவுசரில் இருந்தபடியே இணைய தளப் பக்கங்களை எடிட் செய்திட முடிந்தது இதன் சிறப்பாக இருந்தது.

2.ViolaWWW (1992): யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய வகையில் வெளியான முதல் பிரவுசர். முதன் முதலாக, பார்த்த இணைய தளங்களுக்கு முன்னும் பின்னும் செல்வதற்கும், ஹோம் பக்கத்தை அணுகுவதற்கும் வசதிகள் தரப்பட்டன. ஸ்டைல் ஷிட், ஸ்கிரிப்டிங் லாங்குவேஜ் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் அளிக்கப்பட்டன.
3. Cello (1993): விண்டோஸ் (பதிப்பு 3.0) இயக்கத்தில் செயல்படும் வகையில் உருவான முதல் பிரவுசர். இதனை உருவாக்கிய தாமஸ் புரூஸ், வழக்குரைஞர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இதன் மூலம் பெறுவதற்காக வடிவமைத்துத் தந்தார். பெற்ற தகவல்கள் ஹைப்பர் டெக்ஸ்ட் பார்மட்டிலேயே இருந்தன.
4. Lynx 2.0 (1993): இது உலகின் இரண்டாவது பிரவுசர். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றுமே பெற முடிந்தது. இதனால் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கிய கம்ப்யூட்டர்களில் இது இயங்கியது. 1993 வரை இது பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டது. டெக்ஸ்ட் மட்டும் தேவைப்பட்டவர்களால் அதிகம் நாடப்பட்டது. இன்றும் சிலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
5. NCSA Mosaic 1.0 (1993): மிக எளிமையான இயக்கத்திற்கு வழி வகுத்த முதல் பிரவுசர். இதனால் சாமானியர்களும் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கியது. டெக்ஸ்ட் உள்ளாக படங்களையும் காட்டியது.
6. NCSA Mosaic 1.0 (1993): ஐ.பி.எம். நிறுவனம் இணைய உலாவித் தொகுப்புகளில் இந்த தொகுப்புடன் தான் நுழைந்தது. ஏற்கனவே மொசைக் அடிப்படையில் பிரவுசர்களை உருவாக்கியது. ஆனால், அது அந்நிறுவன கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் மட்டும் இயங்கியது. இது சிறப்பாகப் பேசப்பட்டாலும் குறிப்பிட்ட சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களில் மட்டுமே இயங்கியதால், அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.
7. 7. Netscape Navigator 1.0 (1994): மொசைக் பிரவுசர் தயாரித்த வல்லுனர்கள் சிலர், அந்நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து, தனியே ஒரு பிரவுசரை உருவாக்கினார்கள். அதுவே நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பதிப்பு 1. இதன் எளிமை, வேகம் மக்களை அதிகமாகக் கவர்ந்ததனால், அதுவே பெரும்பாலானவர்களின் பிரவுசராக இடம் பெற்றது.
8.Microsoft Internet Explorer 1.0 (1995): நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பிரவுசருக்குக் கிடைத்த புகழைப் பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தானும் இந்த பிரிவில் இறங்கி, தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தந்தது. முதலில் அரைவேக்காடாக இருந்த இந்த பிரவுசர் நாளடைவில் மேம்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக இயங்குகிறது.
09.Netscape Navigator 3.0 (1996): இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மக்களிடம் பெரிய அளவில் சென்றடையும் முன்னர், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பதிப்பு 3, மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பதிப்பில் ஆடியோ,வீடியோ மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் சப்போர்ட் தரப்பட்டது, மக்களை இதனுடன் ஒட்டவைத்தது. இது அவ்வப்போது கிராஷ் ஆனாலும், மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.
10. Opera 2.0 (1996): நார்வே நாட்டைச் சேர்ந்த ஆப்பரா நிறுவனம் தன் முதல் ஆப்பரா பிரவுசரை 1996ல் கொண்டு வந்தது. நெட்ஸ்கேப் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்புகளில் பிரச்னையைச் சந்தித்த மக்கள், ஒரு மாற்றாக இதனைப் பயன்படுத்தினார்கள். இணையத்திற்கென வரையறை செய்யப்பட்ட பொதுவான கொள்கைகளுக்கிணங்க இது இயங்கியதால், இணைய தளம் தயாரிப்பவர் களுக்கு இது மிகவும் பிடித்த பிரவுசராக இருந்தது.
11.KDE Konqueror (2000): இது வெப் பிரவுசராக மட்டுமின்றி, ஒரு பைல் மேனேஜராகவும் இருந்தது. யூனிக்ஸ் மற்றும் ஓப்பன் சோர்ஸ் இயக்கங்களுக்கு ஏற்றதாக இயங்கியது. பின்னாளில் வந்த சபாரி வெப் பிரவுசருக்கான அடிப்படையைத் தந்தது.
12. Microsoft Internet Explorer 5 for Mac (2001): மேக் ஓ.எஸ். எக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஒரு பிரவுசர் தேவைப்பட்ட போது, மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடையே அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேக் சிஸ்டத்திற்கான பிரவுசரை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
13. Microsoft Internet Explorer 6.0 (2001): பிரவுசர் யுத்தத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை உச்சத்திற்குக் கொண்டு போன பிரவுசர். இருப்பினும் பின்னாளில் ஹேக்கர்கள் இதன் பலவீனங்களைக் கண்டறிந்து செயல்பட்டபோது, மக்கள் சற்று பயத்துடனே இதனைப் பயன்படுத்தினர். மாற்று பிரவுசருக்குக் காத்திருந்தனர்.
14. Netscape 7 (2002): தன்னுடைய பிரவுசரைப் பயன்படுத்திய பலர், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குத் தாவியதனால், தன் பங்கினை நிலை நிறுத்த, நெட்ஸ்கேப் நிறுவனம் இந்த பதிப்பினை வெளியிட்டது. இதனுடைய குறியீட்டு வரிகளில் பெரும்பாலானவை ஓப்பன் சோர்ஸ் முறையில் மற்றவர்களுக்கு இலவசமாகக் கிடைத்தன. இருந்தும் இந்த பிரவுசரினால், மைக்ரோசாப்ட நிறுவனத்திற்கு முன் நிற்க இயலவில்லை. ஆனால், இந்த பிரவுசரே, ஓப்பன் சோர்ஸ் முறையில் மொஸில்லா நிறுவனத்தை, பயர்பாக்ஸ் பிரவுசரைக் கொண்டு வரத் தூண்டுதலாய் இருந்தது. பின்னாளில், மொஸில்லாவின் சில தொழில் நுட்பத்தினை, நெட்ஸ்கேப் கொண்டு வந்தாலும், மைக்ரோசாப்ட் முன்னால், நெட்ஸ்கேப் மறைந்தே போனது.
15. Mozilla Phoenix 0.1 (2002): நெட்ஸ்கேப்பின் சாம்பலில் இருந்து மொஸில்லா உருவாக்கிய பிரவுசர் இது. எளிமை, வேகம், நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு இயக்கம், உருவாக்கம் ஆகியவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு பிரவுசர்களை அமைப்பதாக மொஸில்லா அறிவித்து, இந்த பிரவுசரைக் கொண்டு வந்தது. இதுவே பின்னாளில் பயர்பேர்ட் (Firebird) மற்றும் பயர்பாக்ஸ் (Firefox) ஆக மாறியது.
16. Apple Safari Public Beta (2003): மேக் சிஸ்டத்திற்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5, மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமாகக் கருதப்பட்டதால், ஆப்பிள் நிறுவனம் தன் சொந்த முயற்சியில், தன்னுடைய மேக் கம்ப்யூட்டர்களுக்கு பிரவுசர் ஒன்றை உருவாக்கியது. பின்னாளில் இது சபாரி என்ற பெயரில் இடம் பிடித்தது.
17. Mozilla Firefox 1.0 (2004): தன் சோதனைத் தொகுப்புகள், மக்களிடையே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, மொஸில்லா நிறுவனம் பயர்பாக்ஸ் பிரவுசரை வெளியிட்டது. மிக அதிகமாக மக்களால் டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் என்ற பெயரைப் பெற்றது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டால் வேறு வழியில்லை என்று இருந்த மக்கள், பயர்பாக்ஸ் பக்கம் செல்ல, மைக்ரோசாப்ட் பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கத் தொடங்கியது.
18. Google Chrome Beta (2008): தேடல் இஞ்சினில் தன் இடத்தைப் பரவலாகவும், ஆழமாகவும் மக்கள் மனதில் பிடித்த கூகுள் நிறுவனம் தனக்கென ஒரு பிரவுசரை வடிவமைக்க விரும்பி, குரோம் பிரவுசரை வெளியிட்டது. வேகத்தை முதன்மையாகக் கொண்டு இயங்கும் இந்த பிரவுசர் இன்றும் மற்ற பிரவுசர்களின் இடத்தைக் கைப்பற்றும் முயற்சியில் சிறிது சிறிதாக வெற்றி பெற்று வருகிறது. இன்னும் பல பிரவுசர்கள் இருந்தாலும், இந்த பிரவுசர்களே, தனிப்பட்ட தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, பிரவுசர் சந்தையில் தங்களுக்கென இடம் பிடித்தவையாக உள்ளன.

BROWSER - kalin

பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பில் .....

தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாகப் பரிணமித்திருந்தாலும், மக்களிடையே தகவல் தொடர்பு தொழில் நுட்ப பரவலாக்கம் துரதிருஷ்டவசமாக இன்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வளரவில்லை. குறிப்பாக இன்டர்நெட் வசதி சமமாகப் பரவவில்லை. குறிப்பாக, தொலைபேசி வைத்திருப்போர் எண்ணிக்கை 70.6 கோடியாக (தரை வழி மற்றும் மொபைல் இணைப்பு ) இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு இன்னும் மிகக் குறைவான நிலையிலேயே உள்ளது. 1.6 கோடி பேர் வயர் வழி இன்டர்நெட் இணைப்பினைப் பெற்றுள்ளனர். இவர்களில் 97 லட்சத்து 70 ஆயிரம் பேர் மட்டுமே பிராட்பேண்ட் இணைப்பினைப் பெற்றுள்ளனர்.
இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி அதன் தகவல் தொழில் நுட்ப பிரிவில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றத்தின் அடிப்படையில் ஏற்பட்டிருந்தாலும், இன்னும் பலர், குறிப்பாக கிராமம் மற்றும் தொலைதூர மற்றும் எல்லை விளிம்புகளில் இருப்பவர்களுக்கு இன்டர்நெட் வசதி இன்னும் கிடைக்காதது பரிதாபத்திற்குரிய நிலையே. உலக வங்கியின் அறிக்கையின்படி, பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பில் 10% வளர்ச்சி ஏற்பட்டால், வளர்ந்து வரும் நாடுகளில், அது தனி மனித வருமானத்தில் 1.4% வளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே ஏழ்மையை ஒழித்து, சமுதாய வளர்ச்சியினை உருவாக்க இந்தியா முயற்சித்து வருகையில், இன்டர்நெட் பிராட்பேண்ட் இணைப்பினை மக்களுக்கு வழங்க மிகவும் அக்கறையுடன் அரசும் தனியார் நிறுவனங்களும் முயற்சி செய்திட வேண்டும்.
பிராட்பேண்ட் இணைப்பு கிடைப்பதனால், கல்வி, பொது நலம், வங்கி மற்றும் சார்ந்த துறைகளில் தகவல் பரிமாற்றம் அதிக அளவில் ஏற்படும். இதனை வழங்க, கிராமப்புறங்களில், தன் முயற்சியில் இயங்கும் வகையில் இன்டர்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட வேண்டும். 500 மக்களுக்கு மேல் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் இந்த இன்டர்நெட் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். பிராட்பேண்ட் இணைப் பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் தொடர் வசதி அளித்தல் ஆகியவைக்கான செலவு தென் கொரியாவில் மேற்கொள்ளப் படுவதனைக் காட்டிலும் 260 பங்கு இங்கு அதிகமாகிறது. இது நமக்கு ஒரு பெரும் தடையாக உள்ளது. இதனால் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்வதில் தொய்வு ஏற்படுகிறது. அப்படியே இந்த வசதி அளிக்கப்பட்டாலும், அது இமெயில் பார்ப்பதுடன் நின்று விடுகிறது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு முடிவிற்குள் 2 கோடி பேருக்கு இன்டர்நெட் வசதியினை ஏற்படுத்தும் இலக்கை அரசு அடைய முடியுமா என்பது சந்தேகமே. எனவே, வயர் இணைப்பு மூலம் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் முயற்சிகளை விடுத்து, வயர்லெஸ் இணைப்பு வழங்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அப்படி எடுக்கப்பட்டால் தான், தற்போதுள்ள 256 முதல் 512 கே.பி.பி.எஸ். வேகத்தில் இன்டர்நெட் வசதி மேம்படுத் தப்பட்டதாகக் கிடைக்கும். மேலும், அதிகமான வர்கள் இணைப்பு பெறுகையில், இணைப்பு பெறும் செலவு குறையும். இதனால் கூடுதலான பேர்களுக்கு இணைப்பு கிடைக்கும். பயனும் அதிகமாகும். இது தனி மனித பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

வாய் மூலம் எயிட்ஸ் பரவுமா?

கேள்வி: டாக்டர் அவர்களுக்கு , எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு வயசு முப்பது. மனைவி இரண்டு குழந்தைங்க என்று வாழ்க்கையில் செட்டிலாகி விட்டேன். குழந்தைகள் பொறந்ததுக்கு அப்புறம் மனைவிக்கு செக்சில் ஆர்வம் சுத்தமாகப் போயி விட்டது. அதனால் ஒரு ஒரு செக்ஸ் வொர்க்கரை கண்டு பிடித்து அவளை வாரா வாரம் என் ஆண்குறியை வாய்வழி மூலம் புணர வைப்பேன்.. இது மட்டும் தானே தவிர, அவளை புணர்ந்ததில்லை. வாய்வழி செக்ஸ்சின் போது நான் ஆணுறை அணிவதில்லை. என் கேள்வி என்னன்னா, இது போல வாய் வழி செக்ஸ்சால் எனக்கு எயிட்ஸ் வர வாய்ப்பு உள்ளதா?

மருத்துவரின் பதில்:


ஆம், உங்களுக்கு எச். ஐ. வி கிருமி வர வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள பரிசோதனைகள் படி, எச்.ஐ.வி நோயாளிகளில் 25% பேரின் எச்சிலில் எச்.ஐ.வி கிருமியை காண முடிகிறது. அதாவது, எச். ஐ. வி நோயாளிகளில் 100% பேரின் ரத்தத்தில் எச்.ஐ.வி கிருமியை காண முடிகிறது, ஆனால் அதே நோயாளிகளில் 25% பேரின் எச்சிலில்தான் எச்.ஐ.வி கிருமியை காண முடிகிறது. இவ்வாறு எச்சிலில் காணப்படும் எச்.ஐ.வி கிருமிகளும் குறைந்த அளவிலேயே (low concentration) உள்ளன. ஆணும் எச் ஐ வி கிருமிகள் எச்சிலில் இருப்பதால், வாய் வழிப் புணர்ச்சி மூலம் உங்களுக்கு இந்த கிருமி தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

மருத்துவ சமூகத்தில், இந்த வகையான பதிலுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருக்கிறது. மேல் நாடுகளில், ஒரு தரப்பினர் வாய் வழிப் புணர்ச்சியால், எச்.ஐ.வி பரவுவதற்கு ஏதேனும் முறையான ஆதாரம் உள்ளதா என்று தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். வழக்கமாக பாலியல் நோய்களில் ஆதாரங்களைத் திரட்டுவது ரொம்ப கடினமான விடயம். நான் சொல்ல வருவது எனறால், மிருகக் காட்சியகத்தில், ஒரு புலி இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். அந்த புலி யாரையுமே கொன்றதாக ஆதாரம் இல்லை என்றாலும், நீங்கள் அந்தக் கூண்டுக்குள் போகாதீர்கள் என்று அறிவுறுத்துகிறேன்.

அதனால், ஆம் அந்த விலை மகளுக்கு எச்.ஐ.வி இருந்தால், உங்களுக்கும் அது பரவி இருக்க வாய்ப்பு உள்ளது, போய் பரிசோதனை செய்து கொளுங்கள்.

இதனை தடுக்க மிக எளிதான வழி ஆணுறையை உபயோகிப்பது தான். அதனால் அதனை உபயோகித்து, உங்கள் வாழ்க்கையையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.

சபதங்களின் பின்னணியில் இருப்பது

தங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட், அல்லது இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கு, சில புத்தாண்டு சபதங்களை எடுக்கச் சொல்வோமா! வழக்கமாக நாம் சில சபதங்களை எடுப்போம். இன்று முதல் உடற்பயிற்சி, புகைப்பதை நிறுத்து, எடையை எப்படியாவது குறை, குறைவாகச் செலவழி, அதிகமாகச் சேமி என ஒவ்வொரு ஆண்டும் எதனையாவது உறுதியாகச் சொல்வோம். இந்த சபதங்களின் பின்னணியில் இருப்பது தனி மனித ஒழுக்கம் பேணுவதே.


இங்கு நாம் மற்றவர்களுக்கு இன்னல் இன்றி, அனைவரும் சந்தோஷமாக இருக்க, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
கீழ்க்கண்ட சபதங்களை எடுத்துச் செயல்படுத்து வதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்து வதிலும் இன்டர்நெட்டை அணுகிப் பயன்படுத்து வதிலும் சிக்கல்கள் குறையலாம்; குறைவான தவறுகளை செய்யலாம்; மால்வேர் தாக்குதல் களிலிருந்து தப்பிக்கலாம். இவற்றைப் பார்ப்போமா!
1.அனைத்து டயலாக் மற்றும் எச்சரிக்கை செய்திகளையும் படிப்பேன். எடுத்துக் காட்டாக, இப்படிச் செய்தால், இந்த பைல் ஒரேயடியாக நீக்கப்பட்டுவிடும் என்று ஓர் எச்சரிக்கை செய்தி வருகையில், இந்த கட்டம் என்ன சொல்லப்போகிறது என்று உதாசீனப்படுத்தினால், பைல் அவ்வளவுதான்.
2. நான் என்னுடைய பைல்களை அடிக்கடி சேவ் செய்வேன். பல புரோகிராம்களில் தானாக சேவ் செய்திடும் வசதி இருந்தாலும், அவை குறிப்பிட்ட காலக் கெடுவில் தான் அந்த வசதியை இயக்கும். எனவே அடிக்கடி சேவ் செய்வது, உங்கள் உழைப்பைக் காப்பாற்றும். அதே போல பைலை எடிட் செய்கையில், தனித்தனியே சேவ் செய்திடுவேன். ஏனென்றால், அப்போதுதான் எடிட் செய்த மாற்றங்கள் இல்லாத பழைய நிலையில் உள்ள பைல் வேண்டும் எனில், அந்த பைல் நமக்குக் கிடைக்கும்.

3. என்னுடைய பைல்களின் பேக் அப் காப்பியை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் எடுக்காமல் அடிக்கடி எடுப்பேன். ஏனென்றால் நாம் பதிவு செய்திடும் சிடிக்கள் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. ஹார்ட் ட்ரைவ்/பிளாஷ் ட்ரைவ் படிக்க இயலா நிலைக்குத் தள்ளப்படலாம்.
4. மற்றவரிடம், கம்ப்யூட்டர் பிரச்னைக்கு உதவி கேட்கையில், என்னுடைய பிரச்னையைத் தெளிவாகக் கூறுவேன். இது மிக முக்கியம். எந்த ஒரு சிறிய பிரச்னையாக இருந்தாலும், இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு எண், பிரவுசர் மற்றும் என்ன செய்திடுகையில் கம்ப்யூட்டர் முடங்கிப் போனது, புதிதாக இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் ஆகிய தகவல்களைக் கூறிப் பின்னர் பிரச்னையைக் கூற வேண்டும்.
5. பேஸ்புக் அல்லது பிற சமுதாயத் தளங்களில் போட்டோக்களை போஸ்ட் செய்கையில் பல முறை யோசிப்பேன். அப்படியே போட்டோக்களை தளங்களுக்கு அனுப்பி என் பக்கத்தில் அமைத்தாலும், அவற்றை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை வரையறை செய்திடுவேன். இதனை எல்லாரும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், 20 வயதில் ஒருவர் தன் போட்டோவினை ஒரு சமுதாய தளத்தில் பேஸ்ட் செய்தார். ஆனால் அதனால், அவரின் 32 ஆவது வயதில் பெரிய பிரச்னை ஏற்பட்டது.
6. என்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை இன்றைய நாள் வரை மேம்படுத்தி வைத்துப் பயன்படுத்துவேன். அப்போதுதான், அண்மைக் காலத்திய வைரஸ்கள் மற்றும் மால்வேர்களை அணுக விடாமல் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைக் காத்திட முடியும்.
7. இணையத்தில் பார்ப்பதை எல்லாம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிட்டு, பின்னர் கம்ப்யூட்டர் வேகமாக வேலை செய்யவில்லையே என்று குற்றம் சொல்ல மாட்டேன். தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்வது, கம்ப்யூட்டர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரவுசர்களின் செயல்பாட்டு வேகத்தை மட்டுப்படுத்தும்.
8. இமெயில் கடிதங்களில் வரும் செய்திகள் அனைத்தையும் நம்ப மாட்டேன். பல லட்சம் டாலர் உள்ளது. உங்கள் வங்கி கணக்குக் கொடுத்தால், 10% உங்களுக்கு. உங்களுக்கு இமெயில் லாட்டரி கிடைத்துள்ளது. வங்கி தன் அக்கவுண்ட்கள் அனைத்தையும் மீண்டும் சரி செய்து அமைக்கிறது. உங்கள் கணக்கு விபரத்தைக் கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள் --- என்பன போன்ற செய்திகளை முழுமையாகப் படிக்காமல், ட்ரேஷ் பெட்டியில் கூடத் தங்கவிடாமல் அழிப்பேன்.
9.செக்யூரிட்டி கேள்விகளை அலட்சியப்படுத்தாமல், பாஸ்வேர்ட்களைப் போல அவற்றைப் பாதுகாப்பேன். ஏனென்றால், அவையும் மிக முக்கியமானவையே. ஹேக்கர்கள் இது போன்ற தகவல்களை வைத்து,உங்கள் தகவல்களைத் திருட முடியும்.
10. மற்ற இன்டர்நெட் பிரவுசர்களையும் பயன்படுத்துவேன். ஒரு பிரவுசரை மட்டுமே பயன்படுத்த மாட்டேன். அப்போதுதான், ஒரு பிரவுசர் பழுதானாலும், அடுத்த பிரவுசர் மூலம் இன்டர்நெட் உலா வர முடியும்.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன புத்தாண்டு சபதங்களுடன் ஒப்பிடுகையில், நம் கம்ப்யூட்டருக்கான சபதங்கள், பின்பற்ற மிகவும் எளிமையானவையே. பின்பற்றக் கூடியவையே. எனவே நம் கம்ப்யூட்டர் பணியில் தொய்வும், முறிவும் ஏற்படாமல் இருக்க இந்த சபதங்களை எடுத்துக் கொள்ளுமாறு தரப்பட்டுள்ளது.

இரண்டு ரூபா கவிதை

தள்ளி விட்டுப்போன
நாட்களில் விதைகொண்ட
கிழட்டு மரம் கிளை
யறுந்து நிர்மூலமாகி
ரத்தம் சுண்டி
சுவாசம் காய்ந்து



 





நரம்புகள் உடைந்து

பிணைப்புகள் வெந்து
சுடுகாட்டுக்குழியில்
கட்டை சாம்பலாகி
சித்திரச்சுவடாய் சுவரில்
கண்ணாடிக்கூண்டாய்
மூன்றாம் நாள்
காரியத்துக்கு அஸ்தி
கரைக்கப்பட்டு காத்திருக்க



முதல் நாளிலேயே
தலைவாழை விரித்து
தன் மனையாளை
பணயம் நீட்டி
பாகப்பிரிவிணைக்கு
அடிக்கல் நாட்டி
வியர்க்கவிறுவிறுக்க
படையலிட்டு சொத்துக்கு
வேண்டிக்கொள்கிற
மாப்பிள்ளையே!

வாருங்கள் டீ சாப்பிடலாம்
ரெண்டு ரூபாதான்
நானும் பிச்சைதான்