Saturday, December 4, 2010

பாடல்களுக்கு நீங்களே இசையமைக்கலாம்

 இந்த பதிவை பொறுத்தவரை நான் உங்களுக்கு கற்றுத்தர முடியாது இது முழுக்க முழுக்க உங்களின் திறமையை மட்டுமே அடிப்படையாக கொண்டது இதை எல்லோராலும் செய்துவிடவும் முடியாது முதலில் இதை செய்வதற்கு உங்களிடம் நல்ல இசையார்வம் இருக்கவேண்டும் அதைப்பற்றியதான ஒரு புரிதல் இருக்க வேண்டும்

இந்த இரண்டும் இருந்தால் உங்களாலும் யாருடைய துனையும் இல்லாமல் நீங்களாகவே ஒரு பாடலை எழுதலாம் அதற்கு நீங்களே இசையும் அமைக்கலாம் அதை யூடியுப்பில் அப்லோடு செய்து சக நண்பர்களிடம் பகிந்து கொள்ளலாம் யாருக்கு தெரியும் உங்களுக்குள்ளும் ஒரு இசைஞானி இளையராஜா இருக்கலாம்.


இந்த இசையை பொறுத்தவரை மொழிகள் ஒரு தடையில்லை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தங்களுக்கு பல நாட்களுக்கு முன்பாக நான் நீங்களும் இசையோடு பாடலாம் என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நிறைய நண்பர்களுக்கு அந்த பதிவு ஒரு அனுபவமாக இருந்திருக்கும் அந்த பதிவிலோ உங்களால் இசையமைக்க முடியாது ஆனால் இந்த பதிவில் இருக்கும் மென்பொருள் வழியாக உங்களால் இசையமைக்கவும் முடியும்.


முதலாவதாக Easy Music Composer வேண்டுமானால் உங்கள் கணினியில் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் ஒரு இலவச தொகுப்பு என்பதால் நான்கு கட்டைகளுக்கு மேல் அனுமதிப்பதில்லை.





அடுத்ததாக Magix Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள். இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்





மூன்றாவதாக Encore Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள் ஆனால் எனக்கு தான் இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்னைப்பொறுத்தவரை இசையின் அளவுகோல் என்பது என் மனதிற்கு பிடித்தால் ரசிப்பேன் மற்றபடி அதில் உள்ள ஸ்வரம் , லயம் இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. இதிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்.





நண்பர்களே இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யதெரியவில்லையென்றால் அவசியம் கேளுங்கள் ஆனால் தயவுசெய்து இதை உபயோகிப்பது எப்படி என கேட்டு விடாதீர்கள் எனக்கும் இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் அத்தியாயம்_2

பாடம் : 1பாடம் : 1இறைநம்பிக்கை (ஈமான்), அடிபணிதல் (இஸ்லாம்), அழகிய முறையில்
செயலாற்றல் (இஹ்சான்) ஆகியவை பற்றிய விளக்கமும்; தூய்மை யாளனும் உயர்ந்தோனுமாகிய
அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதியை நம்புவதன் அவசியமும்; விதியை நம்பாதவனுக்கும்
இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை'
என்பதற்கான ஆதாரமும்; அவன் தொடர்பாக
வந்துள்ள கண்டனமும்.2அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல் ஹஜ்ஜாஜ் அல்குஷைரீ (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கி றோம். அவனைக்கொண்டே நாம்
நிறைவடை கிறோம். வல்லமை மிக்க (அந்த) அல்லாஹ்வின் நல்லருள் இன்றி நாம்
நல்வாய்ப்பினைப் பெற இயலாது.1 யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:3(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் முதன் முதலில் விதி தொடர்பாக (அப்படி
ஒன்று இல்லை என மாற்று)க் கருத்துத் தெரிவித்தவர் மஅபத் அல் ஜுஹனீ என்பவரேயாவார்.4
இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்களும் ஹஜ்'
அல்லது உம்ரா'ச் செய்வதற்காக (புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் யாரேனும் ஒருவரை நாம் சந்தித்தால்
அவரிடம் விதி தொடர்பாக இவர்கள் கூறிவருவதைப் பற்றிக் கேட்க வேண்டும்'' என்று
சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்துகொண்டிருந்த அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.உடனே நானும் என்
தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்துகொண்டு, எங்களில் ஒருவர்
அவர்களுக்கு வலப் பக்கத்திலும் மற்றொருவர் அவர்களுக்கு இடப் பக்கத்திலும்
இருந்துகொண்டோம். (நான் சரளமாகப் பேசக்கூடியவன் என்பதால் அன்னாருடன்) பேசுகின்ற
பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன். அபூஅப்திர்
ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை
ஓதுகின்றனர்; தேடித் திரிந்து கல்வி பயில்கின்றனர்'' என அவர்களது (நல்ல) தன்மைகளை
எடுத்துரைத்து, ஆனால், அவர்கள் விதி என்று ஏதுமில்லை எனவும், நடக்கின்ற காரியங்கள்
(இறைவன் திட்டமிடாமலேயே) தற்செயலாகத்தான் நடக்கின்றன என்றும் அவர்கள்
கருதுகிறார்கள் என்றேன்.அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நானும் என்னை விட்டு அவர்களும்
விலகிவிட்டவர்கள் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர்
யார்மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம்
உஹுத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை
நம்பிக்கை கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றும்
கூறிவிடுங்கள்).பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:நாங்கள் ஒரு நாள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த,
அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த
அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய
வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின்
முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம்
தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்)
என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்
முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும்.
மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில்
நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்' செய்வதும் ஆகும்''
என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்'' என்றார்.அவர் இவ்வாறு
கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த
பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.அடுத்து அவர்,
ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி
(ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய
தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும்
விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்'' என்று கூறினார்கள்.
அதற்கும் அம்மனிதர் உண்மைதான்'' என்றார்.அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில்
செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்'' என்றார். அதற்கு நபி (ஸல்)
அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற
உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன்
உங்களைப் பார்க்கின்றான்'' என்று பதிலளித்தார்கள்.அம்மனிதர்,மறுமை (உலக அழிவு)
நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்க, நபி
(ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது
உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும்
தெரியாது.)'' என்று கூறினார்கள்.அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி
எனக்குத் தெரிவியுங்கள்!'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப்
பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும்,5 காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை
அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள்
கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்'' என்று கூறினார்கள்.6பிறகு அம்மனிதர்
சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்)
அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று
கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று
சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது
மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்'' என்று
சொன்னார்கள்.7இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.2 யஹ்யா பின்
யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:மஅபத் பின் காலித் அல்ஜுஹனீ என்பார் விதி தொடர்பாக
(மாறுபட்ட) கருத்தைத் தெரிவித்த போது அதை நாங்கள் ஆட்சேபித்தோம். இந்நிலையில்,
நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஒரு தடவை ஹஜ்ஜுக்குச்
சென்றோம்.இதையடுத்து மேற்கண்ட ஹதீஸை அதன் அறிவிப்பாளர்தொடர் (இஸ்னாத்) உடன்
அப்படியே முழுமையாகக் கூறுகிறார்கள். ஆனால், அதில் சிற்சில வார்த்தைகளில் கூடுதல்
குறைவு உண்டு.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.3 அப்துல்லாஹ்
பின் புரைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:யஹ்யா பின் யஅமர் (ரஹ்) மற்றும் ஹுமைத் பின்
அப்திர் ரஹ்மான் (ரஹ்) ஆகியோர், நாங்கள் (ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) அப்துல்லாஹ்
பின் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தோம். அப்போது விதியைப் பற்றியும் அது குறித்து
அவர்கள் (-மஅபதும் அவர் ஆதரவாளர்களும்) சொல்லிக்கொண்டிருப்பதைப் பற்றியும்
குறிப்பிட்டோம்'' என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து
அறிவிக்கும் (மேற்கண்ட) ஹதீஸிலுள்ளபடி அறிவித்தனர். ஆனால், அதைவிடச் சற்றுக்
கூடுதலாகவும் சில இடங்களில் சற்றுக் குறைத்தும் அறிவித்தனர்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.4 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்
வழியாகவும் வந்துள்ளது.5 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர்
அவர்களிடம் வந்து, அல்லாஹ் வின் தூதரே! ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?'' என்று
கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்
(மலக்கு)களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும்
நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன்
எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே!
இஸ்லாம்' (அடிபணிதல்) என்றால் என்ன?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,
இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும்
இணைவைக்காமலி ருப்பதும், கடமையான தொழுகையைக் கடைப்பிடிப்பதும், கடமையான ஸகாத்தை
நிறைவேற்றி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்''
என்றார்கள்.அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்)
என்றால் என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஹ்சான் என்பது அல்லாஹ்வை
நீங்கள் பார்த்துக்கொண்டி ருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப்
பார்த்துக்கொண்டிராவிட்டாலும் அவன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்'' என்று
பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது வரும்?'' என்று அம்மனிதர்
கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப் படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட
(அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை
நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துரைக்கிறேன் என்றார்கள்:ஓர் அடிமைப் பெண் தன்
எசமானைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். முழு
ஆடையில்லாத, செருப்பணியாதவர்கள் எல்லாம் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும்
அதன் அடையாளங்களில் ஒன்றாகும். ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பவர்கள் போட்டி
போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்களைக் கட்டினால் அதுவும் மறுமையின் அடையாளங் களில்
ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது நிகழ விருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர
வேறெவரும் அறியாத ஐந்து விஷயங் களில் அடங்கும்.பிறகு,நிச்சயமாக, மறுமை (நாள்
எப்போது நிகழும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ் விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி
வைக்கிறான். இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான்.
தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக)
அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை.
அல்லாஹ்தான் (இவற்றையெல் லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்'' எனும் (31:34ஆவது)
இறைவசனத்தை நபியவர்கள் ஓதிக் காட்டினார்கள்.பின்னர் (கேள்வி கேட்ட) அம்மனிதர்
திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த
மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்துவாருங்கள்'' என்று சொன்னார்கள். மக்கள் உடனே
அவரைத் திரும்ப அழைத்துவரச் செல்லலாயினர். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள்
எங்கேயும் காணவில்லை. பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இ(ப்போது வந்து
போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம். மக்களுக்கு அவர்களது மார்க்கத்(தின்
அடிப்படைத் தத்துவத்)தை கற்றுத் தருவதற்காக அவர் வந்திருந்தார்'' என்று
சொன்னார்கள்.8இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.6 மேற்கண்ட ஹதீஸ்
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்)
அவர்களால் அறிவிக்கப்பெற்றுள்ளது. ஆயினும், அவர்களது அறிவிப்பில் (ஓர் அடிமைப் பெண்
தன் எசமானைப் பெற்றெடுப்பாளாயின்...' என்பதற்கு பதிலாக) ஓர் அடிமைப் பெண் தன்
கணவனைப் பெற்றெடுப்பாளாயின்...'' என்று காணப்படுகிறது.7 அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது:(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), என்னிடம்
(விளக்கம்) கேளுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள்.
அப்போது (எங்கிருந்தோ) ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் ஒட்டி
அமர்ந்து,அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்ன?'' என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் (இஸ்லாம் என்பது), அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும்
இணைவைக்காமலிருப்பதும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும்,
ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட)
அம்மனிதர் உண்மைதான்'' என்று கூறினார்.அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறை நம்பிக்கை)
என்றால் என்ன?'' என்று அம்மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
அல்லாஹ்வையும் அவனுடைய வானவர் களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும்,
அவனுடைய தூதர் களையும் நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக அனைவரும்)
உயிருடன் எழுப்பப்படுவதை நீங்கள் நம்புவதும், விதியை முழுமையாக நம்புவதும் ஆகும்''
என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மை தான்'' என்றார்.அல்லாஹ்வின் தூதரே!
இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) என்றால் என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்)
அவர்கள், அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டி ருப்பதைப் போன்ற உணர்வுடன் அவனை
நீங்கள் அஞ்சுவதாகும். ஏனெனில், நீங்கள் அவனைப் பார்த்துக்கொண்டிராவிட்டாலும் அவன்
உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான்'' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர்
உண்மைதான்'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது நிகழும்?''
என்று அம்மனிதர் கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்)
கேள்வி கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான்
உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துரைக்கிறேன் என்றார்கள்:ஒரு
(அடிமைப்) பெண் தன் எசமானையே பெற்றெடுப்பதை நீங்கள் கண்டால் அது மறுமை நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும். காலில் செருப்பணியாத, உடலில் உடையணியாத, செவிடர்களையும்
குருடர்களையும் (போன்று வாழ்கின்ற கல்வி கலாசாரமற்ற மக்களை) நீங்கள் பூமியின்
அரசர்களாய்க் கண்டால் அதுவும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். மேலும்,
ஆட்டுக்குட்டிகளை மேய்க்கும் இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்களைக்
கட்டுவதை நீங்கள் கண்டால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் அடங்கும். இவ்வாறு
கூறிவிட்டு, நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது நிகழும் என்பது) பற்றிய அறிவு
அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கின்றான். இன்னும் அவனே கர்ப்பங்களில்
உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை
(அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம்
இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்)
நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்'' எனும் (31:34ஆவது) இறைவசனத்தை ஓதிக்
காட்டினார்கள்.பிறகு (கேள்வி கேட்க வந்த) அம்மனிதர் எழுந்து (சென்று)விட்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரை என்னிடம் திரும்ப
அழைத்துவாருங்கள்'' என்று கூறினார்கள்.உடனே அவர் தேடப்பட்டார். ஆனால், மக்களால்
அவரைக் காண இயலவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இ(ப்போது
வந்துபோன)வர் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம். நீங்கள் என்னிடம் (விளக்கம்)
கேட்க முற்படாதபோது, (தம் வாயிலாக) நீங்கள் விளக்கம் பெற வேண்டும் என அவர்
விரும்பினார். (அதற் காகவே அவர் வந்தார்)'' என்று கூறினார்கள்.04.01.2010.
17:44பாடம் : 2பாடம் : 2இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகை பற்றிய விளக்கம்.8
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி
கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்.
(அவர் சற்றுத் தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர,
அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் அறிய முடியவில்லை. பின்னர் அவர் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களை நெருங்கினார். அப்போதுதான் அவர் இஸ்லாத்தைப் பற்றி வினவுகிறார்
என்று எங்களுக்குப் புரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"(நாளொன்றுக்கு) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது இஸ்லாத்தின்
விதியாகும்)'' என்று பதிலளித்தார்கள். உடனே அவர், "இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்)
ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்க, "இல்லை; நீயாக
விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர'' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.அடுத்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது (இஸ்லாத்தின் விதியாகும்) என
நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு (நோன்புகள்)
ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்க, "இல்லை; நீயாக விரும்பி
நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.மேலும்,
ஸகாத் (வழங்குவது இஸ்லாத்தின் விதி என்பது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்)
என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' எனக் கேட்க, "இல்லை; நீயாக விரும்பிச்
செய்யும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அந்த
மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவுமாட்டேன்;
இதைக் குறைக்கவுமாட்டேன்'' என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால்
வெற்றியடைந்துவிட்டார்'' என்று சொன்னார்கள்.99 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்
பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.ஆயினும், (அவற்றின் இறுதியில்) "அவருடைய தந்தை
மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்'
அல்லது "அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால்
சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக
இடம்பெற்றுள்ளது.1004.01.2010. 17:45பாடம் : 3பாடம் : 3இஸ்லாத்தின் தூண்(களான
முக்கியக் கடமை)கள் குறித்துக் கேட்டறிதல்.10 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்
கூறியதாவது:நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள்
குறித்துக் கேள்வி கேட்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத்
தடையை அறிந்திராத) கிராமவாசிகளில் -புத்திசாலியான- ஒருவர் வந்து நபியவர்களிடம்
கேள்வி கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்கள் ஆசையாக
இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து,11 முஹம்மதே! உங்கள்
தூதர் ஒருவர் எங்களிடம் வந்து, அல்லாஹ் உங்களை (மனித இனம் முழுமைக்கும்) தூதராக
அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?'' என்று
கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உண்மைதான்'' என்று கூறினார்கள்.அந்தக் கிராமவாசி,
வானத்தைப் படைத்தவன் யார்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்'
என்று பதிலளித்தார்கள். பூமியைப் படைத்தவன் யார்?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்)
அவர்கள், அல்லாஹ்' என்றார்கள். இந்த மலைகளை நட்டுவைத்து அதிலுள்ளவற்றை
உருவாக்கியவன் யார்?'' என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹ்' என்றார்கள். அவர், அப்படியானால், வானத்தைப் படைத்து, பூமியையும் படைத்து.
இந்த மலைகளை நட்டும்வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களைத் தூதராக
அனுப்பினானா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்' என்று சொன்னார்கள்.அவர்
இரவிலும் பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு)
உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா)?'' என்று கேட்டார். நபி (ஸல்)
அவர்கள், உண்மைதான்'' என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக!
அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?'' என்று கேட்டார். அதற்கு நபி
(ஸல்) அவர்கள், ஆம்' என்றார்கள்.தொடர்ந்து அவர், நாங்கள் எங்கள் செல்வங்களில்
இருந்து ஸகாத் வழங்குவது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர்
கூறினாரே!'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,உண்மைதான்'' என்றார்கள்.
உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக்
கட்டளையிட்டானா?'' என்று அந்தக் கிராமவாசி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்'
என்றார்கள். அவர், ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள்மீது
(கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே?'' என்று கேட்க, நபி (ஸல்)
அவர்கள், உண்மைதான்'' என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பிவைத்தவன் மீதாணையாக!
அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?'' என்று கேட்டார். நபி (ஸல்)
அவர்கள்,ஆம்' என்றார்கள். மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதிபடைத்தோர் இறையில்லம்
கஅபாவில் ஹஜ் செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே?'' என்று கேட்டார்.
அதற்கும் நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்'' என்றார்கள்.பிறகு அந்தக் கிராமவாசி,
உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றைவிட நான்
அதிகமாக்கவுமாட்டேன்; இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவுமாட்டேன்'' என்று
கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர் (தாம்
கூறியதில்) உண்மையாளராக இருந்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்'' என்று
கூறினார்கள்.1211 ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அனஸ் (ரலி)
அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் தொடர்பாகக்
கேள்வி கேட்கக்கூடாதென நாங்கள் குர்ஆன் மூலம் தடை விதிக்கப்பெற்றிருந்தோம்'' என்று
கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸைப் போன்றே தொடர்ந்து அறிவித்தார்கள்.04.01.2010.
17:46பாடம் : 4பாடம் : 4சொர்க்கம் செல்வதற்குக் காரணமாய் அமையும் இறைநம்பிக்கை
(ஈமான்) பற்றிய விளக்கமும், தமக்குக் கட்டளையிடப் பட்டவற்றைக் கடைப்பிடித்து
வாழ்ந்தவர் சொர்க்கம் செல்வார் என்பது பற்றிய விளக்கமும்.12 அபூஅய்யூப் அல்அன்சாரி
(ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு பயணத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக்
கிராமவாசி ஒருவர் இடைமறித்து அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தை' அல்லது மூக்கணாங்
கயிற்றைப்' பிடித்துக்கொண்டார். பிறகு அல்லாஹ்வின் தூதரே' அல்லது முஹம்மதே' என்னைச்
சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத் திலிருந்து விலக்கியும்வைக்குமே அத்தகைய ஒரு
(நற்)செயலை எனக்குத் தெரிவியுங்கள்!'' என்று கேட்டார்.நபி (ஸல்) அவர்கள் (ஏதும்
பேசாமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு தம் தோழர்களைக் கூர்ந்து பார்த்தார்கள்.
பின்னர் நிச்சயமாக இவர் நல்லருள் பெற்றுவிட்டார்' அல்லது நேர்வழியில்
செலுத்தப்பட்டுவிட்டார்''' என்று கூறினார்கள்.பிறகு நபி (ஸல்) அவர்கள் நீர் என்ன
சொன்னீர்?'' என்று (அந்தக் கிராமவாசியிடம்) கேட்டார்கள். அவர் முன்பு கூறியதைப்
போன்றே மீண்டும் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை (மட்டுமே) நீர்
வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக்
கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை வழங்க வேண்டும்; உறவைப் பேணி வாழ
வேண்டும்'' என்று கூறிவிட்டு, ஒட்டகத்தை விட்டுவிடுவீராக (நாங்கள் பயணத்தைத் தொடர
வேண்டும்)'' என்று கூறினார்கள்.1313 மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு
அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.14 அபூஅய்யூப் அல்அன்சாரி
(ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்கு ஒரு
(நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செயல்படுத்தினால் அது என்னைச் சொர்க்கத்திற்கு
நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும்வைக்க வேண்டும்'' என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும்
நீங்கள் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்;
(கடமையான) ஸகாத்தை நீங்கள் வழங்க வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்''
என்று கூறினார்கள்.அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், இவர் தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்தால் கட்டாயம் இவர்
சொர்க்கம் சென்றுவிடுவார்'' என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள்
வழியாக வந்துள்ளது. அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்
இதை இவர் கடைப்பிடித்தால்...'' என்று இடம்பெற்றுள்ளது.15 அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது:கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து,
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள்! நான் அதைச்
செயல்படுத்தினால் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும்'' என்று கூறினார். நபி (ஸல்)
அவர்கள், அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக்
கூடாது; கடமையாக்கப்பட்ட தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட
ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்'' என்று
கூறினார்கள்.அதற்கு அந்த மனிதர், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக!
ஒரு போதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்யமாட்டேன்; இதிலிருந்து எதையும் நான்
குறைக்கவு மாட்டேன்'' என்று கூறினார்.அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள்,
சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ!)
இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.1416 ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலிலி) அவர்கள் கூறியதாவது:நுஅமான் பின் கவ்கல் (ரலிலி) அவர்கள் நபி (ஸல்)
அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையான தொழுகையை நிறைவேற்றி,
(மார்க்கத்தில்) விலக்கப்பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் அனுமதிக்கப்பட்டவற்றை
அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்தால் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா?
கூறுங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஆம்' என்றார்கள்.இந்த ஹதீஸ்
இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.17 மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்
தொடர்கள் வழியாகவும் வந்துளது.அவற்றில் நுஅமான் பின் கவ்கல் (ரலி) அவர்கள் இதைவிட
அதிகமாக வேறெதையும் நான் செய்யமாட்டேன்'' என்று கூறியதாகக் கூடுதலாக
இடம்பெற்றுள்ளது.18 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம், கடமையான தொழுகைகளை நான் தொழுது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று,
(மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் விலக்கப்பட்ட
வற்றை விலக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்து, இவற்றைவிட வேறெதையும் அதிக மாகச்
செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா?'' என்று கேட்டார்.அதற்கு
நபி (ஸல்) அவர்கள் ஆம்' என்றார்கள். அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட
வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்'' என்று கூறினார்.1504.01.2010.
17:48பாடம் : 5பாடம் : 5இஸ்லாத்தின் (ஐம்)பெரும் தூண்களான முக்கியக் கடமைகள் பற்றிய
விளக்கம்.1619 சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர்
(ரலி) அவர்கள் "இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்)மீது எழுப்பப்பட்டுள்ளது.
அவை: 1. இறைவன் ஒருவன் என ஏற்பது. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத்
வழங்குவது. 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்'' என்றார்கள்.அப்போது ஒருவர், "(நான்காவதாக) ஹஜ் செய்வதையும்
(ஐந்தாவதாக) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதையும்தானே (நபி அவர்கள்
குறிப்பிட்டார்கள்)?'' என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
அவர்கள், "இல்லை. (நான்காவது) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, (ஐந்தாவது) ஹஜ்
செய்வது'' என்று கூறிவிட்டு, "இவ்வாறுதான் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடமிருந்து செவியேற்றேன்'' என்று கூறினார்கள்.20 நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப் பட்டுள்ளது. அல்லாஹ்வையே
வழிபட்டு, அவன் அல்லாதவற்றை நிராகரிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத்
வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.
(ஆகியனவே அந்த ஐந்தும்.)இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.21 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இஸ்லாம் ஐந்து
(தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை
என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள்
என்றும் உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது;
இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.இதை அப்துல்லாஹ்
பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 தாவூஸ் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
அவர்களிடம், "நீங்கள் அறப்போரில் கலந்துகொள்வதில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(பின்வருமாறு) கூறக் கேட்டுள்ளேன்: நிச்சயமாக இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது
நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதிமொழி
அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; ரமளான் மாதத்தில் நோன்பு
நோற்பது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது. (போரில் கலந்துகொள்வது இஸ்லாத்தின்
அடிப்படைக் கடமைகளில் ஒன்றல்ல. அதிலும் இப்போது நடைபெறும் போர்கள் வெறும் அரசியல்
காரணங்களுக்காகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன)'' என்று கூறினார்கள்.1704.01.2010.
17:49பாடம் : 6பாடம் : 6அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மார்க்க நெறிமுறைகளையும்
நம்பிக்கை கொள்ளுமாறும், அதன்பால் (மக்களை) அழைத்தல், அதைக் குறித்துக் கேட்டுத்
தெரிந்துகொள்ளல், அ(வ்வாறு தெரிந்துகொண்ட)தை மனனம் செய்து காத்தல், அதைப் பற்றிய
தகவல் எட்டாத மக்களுக்கு அதை எட்டச் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுமாறும் வந்துள்ள
கட்டளை.23 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்
குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள்
"ரபீஆ' கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம்.
(உங்களைச் சந்திக்கவிடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே "முளர்' குலத்து
இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை
விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வர முடியும்.18 ஆகவே,
எங்களுக்குச் சில கட்டளைகளை அளியுங்கள். அவற்றை நாங்களும் கடைப்பிடித்து,
எங்களுக்குப் பின்னால் (எங்கள் ஊரில்) இருப்பவர்களையும் அவற்றைக் கடைப்பிடித்து
நடக்கும்படி அழைப்போம்'' என்று சொன்னார்கள்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு
விஷயங்களை (செயல்படுத்தும்படி) உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு
பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்.(கட்டளையிடும் நான்கு விஷயங்கள்:)1.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது. (பிறகு அதை மக்களுக்கு விவரித்துக் கூறும்
முகமாக பின்வருமாறு கூறினார்கள்:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்,
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதிகூறுவது. 2.
தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. நீங்கள் அடைந்த போர்ச்
செல்வங்களில் ஐந்திலொரு பங்கை (அரசு பொது நிதிக்கு)ச் செலுத்துவது (ஆகியவைதாம்
அவை).(மது ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய்க் குடுவை, மண் சாடி, (பேரீச்ச
மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய், தார் பூசப்பட்ட
பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்.19இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது. அவற்றில், கலஃப் பின் ஹிஷாம்
(ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை'' என்று கூறி,
(அந்த நான்கில்) "ஒன்று' என (தமது விரலை) மடித்துக் காட்டினார்கள் என்று
அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.2024 அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் அள்ளுபஈ (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அரபுமொழி தெரியாத)
மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளனாக இருந்தேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து பழச்சாறு (மது) ஊற்றிவைக்கப் பயன்படுத்தப்படும்
மண்பானை குறித்து (அதை வேறு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாமா? என)க் கேட்டார்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:அப்துல் கைஸ்
குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தூதுக் குழுவினர் யார்?' அல்லது
"இக்கூட்டத்தார் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "ரபீஆ'
(குடும்பத்தினர்)'' என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"இழிவுக்குள்ளாகாமலும் மன வருத்தத்திற்குள்ளாகாமலும் வருகை புரிந்த சமூகத்தாரே!
வருக! உங்கள் வரவு நல்வரவாகுக!'' என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். அத்தூதுக்
குழுவினர், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம்
வந்திருக்கிறோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே "முளர்' குலத்து
இறைமறுப்பாளர்களில் இன்ன குடும்பத்தார் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர்.
(இதனால், போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள்
உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்குத் தெளிவான சில கட்டளைகளை அளியுங்கள்.
அவற்றை நாங்கள் எங்களுக்குப் பின்னால் (ஊரில்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம்;
அ(வற்றைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்'' என்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு நான்கு விஷயங்களைக்
கட்டளையிட் டார்கள். நான்கு பொருட்களை(ப் பயன்படுத்த வேண்டாமென)த் தடை செய்தார்கள்:
அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு,
"அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று
கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்''
என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை
என்றும், முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது (என
விளக்கமளித்துவிட்டு); தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; ரமளான் மாதம்
நோன்பு நோற்பது. அத்துடன், போரில் கிடைக்கும் பொருள்களிலி ருந்து ஐந்திலொரு பங்கை
(அரசுப் பொது நிதிக்கு) நீங்கள் செலுத்திட வேண்டும்'' என்று(ம்) கூறினார்கள்.மது
ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான சுரைக்காய்க் குடுவை, மண் சாடி மற்றும் தார்
பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை (பயன் படுத்தக் கூடாதெனத்) தடை விதித்தார்கள்.
"இவற்றை நினைவில் வைத்து, உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு
அறிவித்துவிடுங்கள்'' என்றும் கூறினார்கள்.இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அறிவிப்பாளர் அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் சில நேரங்களில்
"(பேரீச்சமரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப் படும்) மரப் பீப்பாய்'
("அந்நகீர்') என்றும், வேறு சில நேரங்களில் "தார் பூசப்பட்ட பாத்திரம்'
(அல்முகய்யர்) என்றும் அறிவித்தார்கள்.அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது
அறிவிப்பில் "உங்களுக்குப் பின்னால் இருப்பவர் களுக்கு (அறிவித்துவிடுங்கள்)'
என்பதுவரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. "தார் பூசப்பட்ட பாத்திரம்' ("அல்முகய்யர்')
பற்றி அதில் காணப்படவில்லை.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது.2125 மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில், "(மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச
மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண்சாடி
மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங்களுக்குத் தடை
விதிக்கிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.முஆத் அல்அம்பரீ
(ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ் (எனும் முன்திர்
பின் ஆயித்-ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு)
கூறியதாக இடம்பெற்றுள்ளது:(அஷஜ்ஜே!) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உங்களிடம்
உள்ளன 1. அறிவாற்றல் 2. நிதானம்.26 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்
கூறியதாவது:அப்துல் கைஸ் குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் வந்து, "இறைவனின் தூதரே! நாங்கள் "ரபீஆ' குலத்தாரின் (இன்ன)
குடும்பத்தார் ஆவோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே "முளர்' குலத்து
இறைமறுப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். இதனால் (போர்
நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர
முடியாது. ஆகவே, எங்களுக்கு ஒரு கட்டளையிடுங்கள். அதை(ச் செயல்படுத்துமாறு)
எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு நாங்கள் கட்டளையிடுவோம். அதைக் கடைப்பிடித்து
நடந்தால் நாங்களும் சொர்க்கம் செல்வோம்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "நான்கு விஷயங்களை உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு
பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்: அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள். அவனுக்கு
எதையும் இணையாக் காதீர்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் வழங்குங்கள்.
ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அத்துடன் போரில் கிடைக்கும்
பொருட்களிலிருந்து ஐந்திலொரு பங்கை (அரசு பொது நிதிக்கு)ச் செலுத்துங்கள்.நான்கு
பொருட்களை உங்களுக்கு நான் தடை செய்கிறேன். சுரைக்காய்க் குடுவை, மண்சாடி, தார்
பூசப்பட்ட பாத்திரம் மற்றும் மரப் பீப்பாய் ("அந்நகீர்') ஆகியவைதாம் அவை'' என்று
கூறினார்கள்.அப்போது மக்கள், "இறைவனின் தூதரே! "அந்நகீர் என்பது என்னவென்று தாங்கள்
அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்
(அறிவேன்). பேரீச்சமரத்தின் அடி மரத்தைத் துளையிட்டு அதில் "சிறு பேரீச்சம்
பழங்களை' அல்லது "பேரீச்சம் பழங்களை' நீங்கள் போட்டு வைப்பீர்கள். பிறகு அதில்
தண்ணீரை ஊற்றுவீர்கள். அதன் கொதி நிலை அடங்கியதும் அதை நீங்கள் அருந்துவீர்கள்.
(அதை அருந்தியதும் போதையேற்றப்பட்டுவிடுகிறது.) எந்த அளவிற் கென்றால் "உங்களில்
ஒருவர்' அல்லது "மக்களில் ஒருவர்' தம்முடைய தந்தையின் சகோதரர் மகனையே கூட வாளால்
வெட்டிவிடுகின்றார்'' என்று கூறினார்கள்.அந்தத் தூதுக் குழுவினரிடையே இவ்வாறு
காயமேற்பட்ட ஒரு மனிதர் இருந்தார். அவர் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
வெட்கப்பட்டுக்கொண்டு அ(ந்தக் காயத்)தை மறைத்துக் கொண்டிருந்தேன்'' என்று
கூறுகிறார். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (வேறு) எந்தப்
பாத்திரத்தில்தான் அருந்துவோம்?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
"வாய்ப்பகுதி சுருக்கிட்டுக் கட்டப்படும் தோல் பைகளில்'' என்று கூறினார்கள். அதற்கு
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் ஏராளமாகப் பெருச்சாளிகள் உள்ளன. அங்கு
தோல் பைகள் சரிப்பட்டு வரா'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவற்றைப்
பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட் டாலும்
சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே!'' என்று கூறினார்கள்.மேலும்,
நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் குலத்தாரின் (தலைவர்) அஷஜ் (ரலி) அவர் களிடம்
கூறினார்கள்:உங்களிடம் அல்லாஹ் நேசிக்கின்ற இரு குணங்கள் உள்ளன. 1. அறிவாற்றல் 2.
நிதானம்.அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் வந்த அப்துல் கைஸ் தூதுக் குழுவினரைச் சந்தித்த ஒருவர் (இந்த
ஹதீஸை) நமக்கு அறிவித்தார்.27 அபூநள்ரா முன்திர் பின் மாலிக் அல்அவகீ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் வந்தது பற்றி மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்
அறிவித்தார்கள். ஆனால் அதில், (மரப் பீப்பாய் (அந்நகீர்) பற்றி விளக்கமளிக்கையில்
நபி (ஸல்) அவர்கள்) "பேரீச்ச மரத்தின் அடி மரத்தைக் குடைந்து அதனுள் "சிறு
பேரீச்சம் பழங்களை' அல்லது "பேரீச்சம் பழத்தையும் தண்ணீரையும்' கலந்துவிடுவீர்கள்''
என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது."சிறு பேரீச்ச மரங்களை' அல்லது "பேரீச்சம் பழங்களை'
என்று ஐயப்பாட்டுடன் அறிவிப்பாளர் சயீத் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள வாசகம் அதில்
இடம்பெறவில்லை.அந்தத் தூதுக் குழுவினரைச் சந்தித்த பலர் எனக்கு இதை அறிவித்தனர்
என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அவர்களில் ஒருவரான) அபூநள்ரா
மேற்கண்டவாறு அறிவித்தார்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.28
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்
குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்
எங்களைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! எந்தெந்தக் குடிபானங்கள் எங்களுக்குத்
தகும்?'' என்று கேட்டார்கள்.அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மரப் பீப்பாயில்
("அந்நகீரில்'-ஊற்றிவைக்கப்பட்ட பானத்தை) அருந்தாதீர்கள்'' என்று கூறினார்கள்.
அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எங்களைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்!
அந்நகீர் என்பது என்ன என்று தாங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி
(ஸல்) அவர்கள், "ஆம். பேரீச்ச மரத்தின் அடிப் பாகத்தின் நடுவே துளையிடப்படு
வதுதான்'' என்று கூறிவிட்டு, "சுரைக்காய்க் குடுவையிலும் மண் சாடியிலும் நீங்கள்
அருந்தாதீர்கள். சுருக்குக் கயிற்றால் வாய்ப்பகுதி கட்டப்படும் தோல் பைகளையே
பயன்படுத்துங்கள்'' என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில்
வந்துள்ளது.04.01.2010. 17:50பாடம் : 7பாடம் : 7இஸ்லாமிய உறுதிமொழிகள் மற்றும் நெறி
முறைகளை ஏற்குமாறு அழைப்பு விடுத்தல்.29 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டின் நீதி
நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது சொன் னார்கள்:நீங்கள் வேதக்காரர்களில் ஒரு
சமூகத்தாரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் (செல்லும் போது), அல்லாஹ்வைத்
தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி
அளிக்கும்படி அவர் களுக்கு அழைப்புவிடுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால்,
அல்லாஹ் அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகை களைக் கடமையாக்கியுள்ளான்
என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள்மீது
அல்லாஹ் ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தைக் கடமையாக்கியுள்ளான் என்றும், அது
அவர்களில் செல்வர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும்
அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், (அவர்களிடம்
ஸகாத்தை வசூலிக்கும்போது) அவர்களின் செல்வங்களில் (நடுத்தரமானவற்றை விடுத்து)
உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். அநீதி
இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அவன் செய்யும்
பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை.இதை இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.22இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது.30 அபூமஅபத் (நாஃபித்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:"நபி (ஸல்) அவர்கள் முஆத்
(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது "நீங்கள் ஒரு சமுதாயத்தாரிடம்
செல்கிறீர்கள்...' என்று சொன்னார்கள்'' எனத் தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் முழுமையாக அறிவித்தார்கள்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.31 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு
அனுப்பிவைத்தபோது சொன்னார்கள்:நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமுதாயத்தாரி டம்
செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதலாவது அழைப்பு, (ஏக
இறைவனான) அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள் என்பதாகவே இருக்க வேண்டும். அவர்கள்
அல்லாஹ்வை (ஏகன் என்று) ஏற்றுக் கொண்டால், அல்லாஹ் அவர்கள்மீது (நாளொன்றுக்கு)
இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத்
தெரிவியுங்கள். தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால், அவர்களில்
செல்வர்களாயிருப்பவர்களிடமிருந்து வசூலிக் கப்பெற்று அவர்களில் ஏழைகளாயிருப்பவர்
களிடையே விநியோகிக்கப்பட வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்கள்மீது கடமையாக்கியுள்ளான்
என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால்
அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்றுக்கொள் ளுங்கள். ஆனால், மக்களின் செல்வங்களிலி
ருந்து உயர்ந்தவற்றைத் தவிர்த்துவிடுங்கள். (அவற்றை ஸகாத்தாகப்
பெறாதீர்கள்).04.01.2010. 17:51பாடம் : 8பாடம் : 8மக்கள் "அல்லாஹ்வைத் தவிர வேறு
இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்' என்று கூறி,
தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் வழங்கி, நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த அனைத்துக்
கட்டளைகளையும் நம்பிக்கை கொள்ளாதவரை அவர்களுடன் போரிடுமாறு (இறைத் தூதருக்கு)
இடப்பெற்ற உத்தரவு; அவ்வாறு செய்தவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தமது உயிரையும்
உடைமையையும் காத்துக்கொள்வார்; அவரது அந்தரங்கம் அல்லாஹ்விடம் விடப்படும் என்ற
அறிவிப்பு; ஸகாத் முதலான இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றை மறுப்பவருடன் போரிடப்படும்
என்ற அறிவிப்பு; ஆட்சித் தலைவர் இஸ்லாமிய அடையாளங்(களான சில விதிமுறை)களுக்கு
முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என்ற உத்தரவு.32 அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் அபூபக்ர் (ரலி) அவர்கள்
ஆட்சியாளர் ஆக்கப்பட்டதும் அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்ததன் மூலம்)
இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க கலீஃபா அபூபக்ர் (ரலி)
அவர்கள் ஆயத்தமானார்கள். அப்போது) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அபூபக்ர்
(ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று
(இந்த) மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். லா
இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் -தகுந்த காரணமிருந்தாலன்றி- தமது செல்வத்தையும்
உயிரையும் என்னிடமிருந்து பாதுகாத்துக்கொள்வார். அவரது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை
அல்லாஹ்விடமே உள்ளது." என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது
நீங்கள் எவ்வாறு (இறை நம்பிக்கை கொண்டுள்ள) இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?''
என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ் வின் மீதாணையாக!
தொழுகையையும் ஸகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர்
செய்வேன். ஏனெனில் ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழங்கிவந்த ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள்
என்னிடம் வழங்க மறுத்தாலும் அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்''
என்றார்கள். இது குறித்து உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின்
மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை, போர் (தொடுப்பதன் மீது உறுதியான
முடிவு) செய்வதற்காக அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததை நான் கண்டுகொண்டேன். அபூபக்ர்
(ரலி) அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக்கொண்டேன்'' என்று
கூறினார்கள்.2333 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வைத் தவிர
வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு
எனக்குக் கட்டையிடப்பட்டுள்ளது. யார் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று
கூறிவிடுகிறாரோ அவர் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- தமது செல்வத்தையும் உயிரையும்
என்னிடமிருந்து காத்துக்கொள்வார். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின்
பொறுப்பாகும்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் மூன்று
அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.34 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி
னார்கள்:அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என உறுதிமொழி
கூறி, என்னையும் எனக்குக் கிடைத்துள்ள (மார்க்கத்)தையும் நம்புகின்றவரை இந்த
மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. இதை அவர்கள்
செயல்படுத்தினால் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- தமது உயிரையும் செல்வத்தை யும்
என்னிடமிருந்து காத்துக்கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை
அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.35 ஜாபிர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை
(லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக்
கட்டளையிடப்பட்டுள்ளது. அவர்கள் "லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லி விட்டால்
-தகுந்த காரணம் இருந்தாலன்றி- என்னிடமிருந்து தம் உயிரையும் உடைமை களையும்
பாதுகாத்துக்கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின்
பொறுப்பில் உள்ளது'' என்று கூறினார்கள். பிறகு, "(நபியே!) நிச்சயமாக நீர்
நினைவூட்டுபவர்தாம். அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துபவர் அல்லர்'' எனும் இறை
வசனங்களை (88:21, 22) ஓதிக் காட்டினார்கள்.வேறு சில அறிவிப்பாளர்தொடர்கள்
வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.36 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்)
அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையைக் கடைப்பிடித்து,
ஸகாத்தும் வழங்கும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் செய்துவிட்டால் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- என்னிடமிருந்து தம்
உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த)
விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.37 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:அல்லாஹ்வைத்
தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு
செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்துவிடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும்
பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின்
பொறுப்பில் உள்ளது.இதைத் தாரிக் பின் அஷ்யம் பின் மஸ்ஊத் அல்அஷ்ஜயீ (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.38 மேற்கண்ட
ஹதீஸ் தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள்
வழியாகவும் வந்துள்ளது.அதில் "யார் ஓரிறைக் கொள்கையை ஏற்று...' என்று ஹதீஸ்
ஆரம்பிக்கிறது.2404.01.2010. 17:53பாடம் : 9பாடம் : 9மரணத் தறுவாயில் உள்ள ஒருவர்,
உயிர் பிரிவதற்கு சற்று முன்னர் இஸ்லாத்தை ஏற்றால்கூட அது செல்லும்;
இணைவைப்பாளர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது;
இணைவைப்பாளராக உள்ள நிலையில் இறந்துபோனவர் நரகவாசிகளில் ஒருவர்தாம். அவரை எந்த
வகையிலும் காப்பாற்ற முடியாது- என்பதற்கான ஆதாரம்.2539 முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி)
அவர்கள் கூறியதாவது:(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டைய பெரிய தந்தை) அபூதாலிப்
அவர்களுக்கு மரண வேளை நெருங்கிவிட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம்
வந்தார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லை யும், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின்
அல்முஃகீராவையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் பெரிய
தந்தையே! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று
சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லைவைத்து நான் உங்களுக்காக
அல்லாஹ்விடம் சாட்சியம் கூறுவேன்'' என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும்
அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் "அபூதாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல்
முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?'' என்று கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அபூதாலிப்
அவர்களிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள்; தாம் முன்பு சொன்னதையே அவரிடம் திரும்பத்
திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம்
பேசியது "நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன்''
என்பதாகவே இருந்தது. "லா இலாஹ இல்லல்லாஹ்'' எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர்
மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்ளுங்கள்!
அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான்
பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்'' என்று சொன்னார்கள். அப்போது தான்
கண்ணியமும் மாண்பும் உடைய அல்லாஹ், "இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள்தாம்
என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும் -அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும்
சரி- அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும்
இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை'' எனும் (9:113ஆவது) வசனத்தை அருளினான்.
அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ், "(நபியே!) நீங்கள்
விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான்
நாடியவர்களை நேர்வழியில் செலுத்து கிறான்'' எனும் (28:56ஆவது) வசனத்தை
அருளினான்.2640 மேற்கண்ட ஹதீஸ் மேலும் சில அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும்
வந்துள்ளது.அவற்றில், ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அப்போது
அல்லாஹ் வசனத்தை அருளினான்'' என்று ஹதீஸ் முடிகிறது. அவ்விரு வசனங்களும் அந்த
அறிவிப்பில் இடம்பெறவில்லை. மேலும், "அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும்
தாம் முன்பு சொன்னதையே (அபூதாலிபிடம்) திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்
தார்கள்'' என்றும் இடம்பெற்றுள்ளது.மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்த இடத்தில்
"அவ்விருவரும் அவரிடம் அதைச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்'' என்று
இடம்பெற்றுள்ளது.41 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தம் பெரிய தந்தை (அபூதாலிப்) உடைய மரண தறுவாயில் "லா இலாஹ இல்லல்லாஹ் என்று
சொல்லுங்கள்; இதை வைத்து உங்களுக்காக நான் மறுமை நாளில் (அல்லாஹ்விடம்) சாட்சியம்
கூறுவேன்'' என்று கூறினார்கள். ஆனால் அவர், (ஏகத்துவ உறுதி மொழி கூற)
மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்)
நேர்வழியில் செலுத்திவிட முடியாது'' எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.இந்த
ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.42 அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் பெரிய தந்தை (அபூதாலிபின் மரண
தறுவாயில்) அவர்களிடம், "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். இதை வைத்து
உங்களுக்காக நான் மறுமை நாளில் சாட்சியம் கூறுவேன்'' என்று கூறினார்கள். அதற்கு
அவர், "பயம்தான் அவரை இவ்வாறு செய்யவைத்தது என்று என்னைப் பற்றிக் குறைஷியர் குறை
கூறிவிடுவார்கள் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் (ஏகத்துவ உறுதிமொழியான) இதைக் கூறி
உம்முடைய கண்களை நான் குளிர வைத்திருப்பேன்'' என்று கூறினார். அப்போதுதான் அல்லாஹ்
"(நபியே!) நீங்கள் விரும்பியவரை (யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது.
மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்'' எனும் (28:56
ஆவது) வசனத்தை அருளினான்.04.01.2010. 17:54பாடம் : 10பாடம் : 10ஓரிறைக்
கோட்பாட்டில் இறந்தவர் சொர்க்கம் செல்வது உறுதி என்பதற்கான ஆதாரம்.2743 அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார்
(மனமார) அறிந்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வார்.இதை உஸ்மான்
பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின்
அஃப்பான் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும்
வந்துள்ளது.44 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன்
ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது மக்களிடம் இருந்த உணவுப் பொருட்கள்
தீர்ந்துவிட்டன. அதனால் மக்களின் (உணவுக்காகப்) பயண ஒட்டகங்களில் சிலவற்றை
அறுக்கலாம் என்று கூட நபி (ஸல்) அவர்கள் எண்ணினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள்,
"அல்லாஹ்வின் தூதரே! மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களை ஒன்றுதிரட்டி, அதில்
(பெருக்கம் ஏற்பட) தாங்கள் பிரார்த்தித்தால் நன்றாயிருக்குமே!'' என்று கூறினார்கள்.
அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அப்போது தம்மிடம் கோதுமை வைத்திருந்தவர்
கோதுமையைக் கொண்டுவந்தார்; பேரீச்சம் பழங்கள் வைத்திருந்தவர் பேரீச்சம் பழங்களைக்
கொண்டுவந்தார். -அறிவிப்பாளர் தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) கூறுகிறார்கள்: முஜாஹித்
(ரஹ்) அவர்கள், "பேரீச்சம் பழங்களின் கொட்டைகள் வைத்திருந்தவர் பேரீச்சம்பழக்
கொட்டைகளைக் கொண்டுவந்தார்'' என்று கூறினார்கள். நான், "பேரீச்சம் பழத்தின்
கொட்டைகளை வைத்து மக்கள் என்ன செய்துகொண்டி ருந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு
அவர்கள், "அவற்றை வாயிலிட்டுச் சுவைத்துவிட்டு, அதற்கு மேல் தண்ணீரை
அருந்திக்கொள்வார்கள்'' என்று கூறினார்கள்.-(மக்களிடமிருந்த உணவுப் பொருட்கள் ஒன்று
திரட்டப்பட்டன.) அதில் (பெருக்கம் ஏற்பட) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
(அவ்வாறே பெருக்கம் ஏற்பட்டது.) எந்த அளவிற்கென்றால் மக்கள் அனைவரும் தங்கள்
பயண(த்திற்கு வேண்டிய) உணவை நிரப்பிக் கொண்டனர். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள்
"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ் வின் தூதர் ஆவேன்
என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரு உறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம்
கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல்
இருக்கமாட்டார்'' என்று கூறி னார்கள்.2845 அபூஹுரைரா (ரலி), அல்லது அபூசயீத் (ரலி)
அவர்கள் கூறியதாவது:தபூக் போரின்போது மக்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது
அவர்கள், "அல்லாஹ் வின் தூதரே! நீங்கள் எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் எங்கள்
ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடவும் (அவற்றின் கொழுப்புகளை உருக்கி) எண்ணெய்
எடுத்துக்கொள்ளவும் செய்வோமே!'' என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், "(அவ்வாறே) செய்துகொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி)
அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவ்வாறு நீங்கள் செய்(ய அனுமதியளித்)தால்
வாகனப் பிராணிகள் குறைந்துவிடும். இதைவிடுத்து, மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப்
பொருட்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். பின்னர் அவற்றில் பெருக்கம் (பரக்கத்) ஏற்பட
அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். அல்லாஹ் அதில் (பெருக்கத்தை)
ஏற்படுத்தக்கூடும்'' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்''
என்று கூறிவிட்டு, ஒரு தோல் விரிப்பைக் கொண்டுவந்து விரிக்கச் சொன்னார்கள். பிறகு
மக்களிடம் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொன்னார்கள்.(மக்களில்)
ஒருவர் ஒரு கையளவு கோதுமையைக் கொண்டுவரலானார். மற்றொருவர் ஒரு கையளவு பேரீச்சம்
பழங்களுடன் வந்தார். இன்னொருவர் ரொட்டித் துண்டு ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த
விரிப்பின் மீது சிறிதளவு உணவுப் பொருட்கள் சேர்ந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் அதில் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு "உங்கள் பைகளில்
நிரப்பிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே மக்களும் தம் பைகளில் நிரப்பிக்
கொண்டனர். அந்தப் படையினர் தம்மிடம் இருந்த எந்தப் பையையும் விட்டுவைக்காமல்
எல்லாவற்றிலும் நிரப்பிக்கொண்டனர். மக்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டனர்.
(இருப்பினும்) இன்னும் அது எஞ்சியது. அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான்
உறுதி கூறுகிறேன். இவ்விரண்டு உறுதிமொழிகளையும் சந்தேகம் கொள்ளாமல் நம்பிய நிலையில்
அல்லாஹ்வைச் சந்திக்கும் எந்த அடியாரும் சொர்க்கத்தைவிட்டுத் தடுக்கப்படமாட்டார்''
என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.46
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை;
அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின்
அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின்
அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன
("ஆகுக' எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்); அவனிடமிருந்து (ஊதப் பட்ட) ஓர்
உயிர்; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ
அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ்
நுழைவிப்பான்.இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.29-
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.ஆனால், (அதன்
இறுதியில்) "அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்'
என்று இடம்பெற்றுள்ளது. "சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக
நுழைவிப்பான்' என்பது இடம்பெறவில்லை.47 அபூஅப்தில்லாஹ் அப்துர் ரஹ்மான் பின் உசைலா
அஸ்ஸுனாபிஹீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் மரணப்
படுக்கையில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்று அழுதேன். அப்போது அவர்கள்
"அமைதியாயிருங்கள். ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! சாட்சியம் கூறுமாறு
எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் உங்களுக்காக நான் சாட்சியம் கூறுவேன். பரிந்துரை
செய்ய எனக்கு வாய்ப்பளிக்கப் பட்டால் உங்களுக்காக நான் பரிந்துரைப்பேன்; எனக்கு
சக்தி இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு நான் பயன் அளிப்பேன்'' என்று கூறினார்கள்.
பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற உங்களுக்குப் பயனுள்ள எந்தச் செய்தியையும்
உங்களிடம் தெரிவிக்காமல் இருந்ததில்லை. ஆனால், ஒரே ஒரு செய்தியைத் தவிர. அந்தச்
செய்தியையும் இதோ என் உயிர் பிரியப்போகும் இந்நேரத்தில் உங்களிடம் நான் சொல்லப்
போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வைத் தவிர
வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி
கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிடுகிறான்.48 முஆத் பின் ஜபல்
(ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால்
(வாகனத்தில்) இருந்தேன். எனக்கும் அவர் களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த
சாய்வுக் கட்டைதான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் இருந்தேன்.) அப்போது நபி
(ஸல்) அவர்கள், "முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே!
இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற
பின் (மீண்டும்) "முஆத் பின் ஜபல்' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே!
இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)'' என்றேன். சிறிது தூரம் சென்ற பின்
(மீண்டும்) "முஆத்பின் ஜபல்!!'' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ
கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன்.நபி (ஸல்) அவர்கள்,
"அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று
கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று
பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை
என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக்
கூடாது'' என்றார்கள்.இன்னும் சிறிது தூரம் சென்ற பின் "முஆத் பின் ஜபல்' என்று
அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக்
காத்திருக்கிறேன்(கூறுங்கள்)'' என்றேன். அவர்கள், "அவ்வாறு (அல்லாஹ்வையே வழிபட்டு
அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை
என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய
தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "(இத்தகைய)
அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பது தான்'' என்று
சொன்னார்கள்.இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3049 முஆத் பின்
ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்குப்
பின்னால் "உஃபைர்' என்றழைக்கப் பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது
அவர்கள், "முஆத்! அல்லாஹ்வுக்கு அடியார்கள் மீதுள்ள உரிமை என்ன? அடியார் களுக்கு
அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று (என்னிடம்)
கேட்டார்கள்.நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதில்
கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள
உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும், அவனுக்கு எதையும் இணையாக்கக்
கூடாது; அல்லாஹ்வின் மீது அடியார்களுக்குள்ள உரிமை யாதெனில், அவனுக்கு எதையும்
இணைகற்பிக்காமலிருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்'' என்று
கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த நற்செய்தியை மக்களுக்கு
அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மக்களுக்கு இந்த நற்செய்தியை
அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்)
இருந்துவிடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.31இதை அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.50 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் (என்னிடம்), "முஆத்! அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன
என்பதை நீர் அறிவீரா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே
நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"அல்லாஹ்வே வணங்கப்பட வேண்டும். அவனுக்கு எதுவும் இணையாக்கப்படக் கூடாது'' என்று
கூறிவிட்டு, "அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி, அவனுக்கு இணைகற்பிக்காமல்)
செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர்
அறிவீரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே
நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதாகும்'' என்று
சொன்னார்கள்.இதை அல்அஸ்வத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.32இந்த
ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.51 அல்அஸ்வத் பின் ஹிலால் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:முஆத் (ரலி) அவர்கள், "என்னை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள்
அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளித்தேன். அப்போது அவர்கள் "மனிதர்கள்மீது
அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?' என்று கேட்டார்கள்''. (இவ்வாறு
கூறிவிட்டு) மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.52 அபூஹுரைரா (ரலி)
அவர்கள் கூறியதாவது:நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி
அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி)
ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள்
எழுந்து சென்றார்கள். நெடு நேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை.
அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள்
அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில்
நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத்
தேடிக்கொண்டு புறப்பட்டேன். பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச்
சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று
(தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன். ஆனால் (அதன் வாசலை) நான் காணவில்லை.
அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று
கொண்டிருந்தது. உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்)
குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "அபூஹுரைராவா?'' என்று
கேட்டார்கள். நான், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். "என்ன விஷயம்?'' என்று
கேட்டார்கள். "நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து
சென்றீர்கள். நெடு நேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே,
(எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்;
பீதியுற்றோம். நான்தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவேதான் குள்ளநரி உடலைக்
குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக்கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ
மக்கள் என் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள்'' என்று சொன்னேன். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா!' (என்று என்னை அழைத்து) தம் காலணிகள்
இரண்டையும் என்னிடம் கொடுத்து, "இவ்விரு காலணி களையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத்
தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று
கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம்
கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!'' என்று கூறினார்கள்.நான் உமர் (ரலி)
அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இவை என்ன காலணிகள்,
அபூஹுரைரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் "இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால்
உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச்
சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க்
கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்'' என்று
சொன்னேன். உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான்
மல்லாந்து விழுந்தேன். "திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!'' என்று சொன்னார்கள்.
உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக
வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து
நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! உமக்கு என்ன
நேர்ந்தது?'' என்று கேட்டார்கள்.நான், "உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி
அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார்.
நான் மல்லாந்து விழுந்துவிட்டேன். பிறகு, "திரும்பிச் செல்லுங்கள்' என்று
கூறினார்'' என்றேன். அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், "உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?'' என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள்,
"அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில்
சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது
என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம்
அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள்!
ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்களோ என்று
நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள்'' என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள்
(அவர்கள் நற்செயல் புரியட்டும்)'' என்று சொன்னார்கள்.53 அனஸ் பின் மாலிக் (ரலி)
அவர்கள் கூறியதாவது:(ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால்
வாகனத்தில் அமர்ந்திருந்த முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை "முஆத்!' என்று
அழைத்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கி
றேன்(கூறுங்கள்)'' என்று முஆத் பதிலளித் தார்கள். (சிறிது தூரம் சென்ற பின்)
"முஆத்!' என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே!
இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)'' என்றார்கள்.
(இன்னும் சிறிது தூரம் சென்ற பின்) "முஆத்!' என்று (மீண்டும்) அழைத் தார்கள். முஆத்
(ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்
(கூறுங்கள்)'' என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன்
இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும்
உறுதிகூறுகின்ற எந்த அடியாருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை''
என்று கூறினார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதை நான் மக்களுக்கு
அறிவித்துவிடட்டுமா? (இதைக் கேட்டு அவர்கள்) மகிழ்ச்சி அடைவார்களே!'' என்று
கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால்
மக்கள் இதையே நம்பிக்கொண்டு (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்'' என்று
கூறினார்கள்.(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது
இறப்பின்போதுதான் இதை முஆத் (ரலி) அவர்கள் (மக்களிடையே) அறிவித்தார்கள்.3354
மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் மதீனாவுக்குச் சென்று இத்பான்
பின் மாலிக் (ரலி) அவர்களைச் சந்தித்து, "தங்களைப் பற்றிய ஒரு செய்தி எனக்கு
எட்டியது (அது உண்மையா? கூறுங்கள்!)'' என்றேன். அப்போது இத்பான் (ரலி) அவர்கள்
கூறினார்கள்:என் பார்வையில் ஏதோ ஏற்பட்டு (என் கண் பார்வை போய்)விட்டது. ஆகவே, நான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி "நீங்கள் வந்து என் வீட்டில் தொழ
வேண்டும். அதை நான் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்'' என்று
சொல்லியனுப்பினேன். எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் அல்லாஹ் நாடிய
சிலரும் (மறுநாள் என் வீட்டுக்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்)
வந்து வீட்டி(ன் ஒரு மூலையி)ல் தொழுது கொண்டிருந்தார்கள். நபித் தோழர்களோ தம்மிடையே
(நயவஞ்சகர்களைப் பற்றியும் அவர்களால் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவு பற்றியும்)
பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு அதில் மாலிக் பின் துக்ஷுன் அவர்களுக்குப் பெரும்
பங்கிருப்பதாகக் கூறினர்.அவருக்கெதிராக நபியவர்கள் பிரார்த்தித்து அவர் அழிந்துபோக
வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அவருக்கு ஏதேனும் கேடு நேர வேண்டும் என்றும்
விரும்பினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் "அல்லாஹ்வைத்
தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர் (-மாலிக் பின்
துக்ஷும்) சாட்சியம் கூறவில்லையா?'' என்று கேட்டார்கள். மக்கள், "அவர் அவ்வாறு
(சாட்சியம்) கூறுகிறார். ஆனால், அது அவருடைய இதயத்தில் இல்லையே?'' என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்
நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் சாட்சியம் கூறும் ஒருவர் "நரகத்தில்
நுழையமாட்டார்' அல்லது "நரகம் அவரைத் தீண்டாது' '' என்று கூறினார்கள்.இந்த ஹதீஸை
(மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸ் என்னை வியப்படையச் செய்தது. ஆகவே, நான் என்
புதல்வரிடம் "இதை எழுதி வைத்துக்கொள்'' என்று கூறினேன். அவ்வாறே அவர் அதை எழுதி
வைத்துக் கொண்டார்.3455 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:இத்பான் பின் மாலிக் (ரலி)
அவர்கள் என்னிடம் கூறினார்கள்:எனக்குக் கண்பார்வை போய்விட்டது. ஆகவே, நான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி "(என் வீட்டுக்கு) நீங்கள் வந்து
எனக்காக நான் தொழுமிடம் ஒன்றை அறிவியுங்கள்'' என்று கூறினேன். எனவே, அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களும் மக்களும் (என் வீட்டுக்கு) வந்தனர். அப்போது மக்களில் மாலிக்
பின் துக்ஷும் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதரைப் பற்றி விமர்சிக்கப்பட்டது. (இவ்வாறு
கூறிவிட்டு) சுலைமான் பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்களின் மேற்கண்ட அறிவிப்பிலுள்ளதைப்
போன்றே தொடர்ந்து கூறினார்கள்.04.01.2010. 17:56பாடம் : 11பாடம் : 11அல்லாஹ்வை
இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மன
நிறைவோடு ஏற்றுக்கொண்டவர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்)தாம். அவர் பெரும் பாவங்களைச்
செய்திருந் தாலும் சரியே- என்பதற்கான ஆதாரம்.3556 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்)
அவர்களை இறைத் தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டாரோ அவர் இறை நம்பிக்கையின்
சுவையை அடைந்துவிட்டார்.இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.04.01.2010.
17:57பாடம் : 12பாடம் : 12இறைநம்பிக்கையின் கிளைகளின் எண்ணிக்கை, அவற்றில்
உயர்ந்தவை மற்றும் தாழ்ந்தவை, இறைநம்பிக்கையின் ஓர் அம்சமான நாணத்தின் சிறப்பு
ஆகியவை பற்றிய விளக்கம்.57 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைநம்பிக்கை (ஈமான்)
என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு
கிளையாகும்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.36இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.58 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான' அல்லது "அறுபதுக்கும்
அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன்
இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப்
பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.59 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:ஒரு மனிதர் தம் சகோதரருக்கு, (அதிகமாக) நாணம் (கொள்வதால் ஏற்படும்
நஷ்டம்) தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்ததை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள்.
அப்போது "(அவரை விட்டுவிடு!) நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்'' என்று நபியவர்கள்
கூறினார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.- மேற்கண்ட
ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது."நபி (ஸல்) அவர்கள்
அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் தம் சகோதரருக்கு நாணப்படுவது
தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்'' என்று அந்த அறிவிப்பு (சிறு
வித்தியாசத்துடன்) தொடங்குகிறது.60 அபுஸ் ஸவ்வார் அல்அதவீ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் "நாணம் நன்மையே தரும்'' என நபி (ஸல்)
அவர்கள் சொன்னார்கள் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது புஷைர் பின்
கஅப் (ரஹ்) அவர்கள், "சில (வகை) நாணத்தில் கம்பீரம் உண்டு; சில (வகை) நாணத்தில் மன
அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
அப்போது (அவரிடம்) இம்ரான் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏடுகளில்
உள்ளவை குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே!'' என்று கேட்டார்கள்.37இந்த ஹதீஸ்
இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.61 அபூகத்தாதா (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:நாங்கள் ஒரு குழுவாக இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களுடன் இருந்தோம்.
எங்களிடையே புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அன்றைய தினம் இம்ரான்
(ரலி) அவர்கள் "நாணம், முழுக்க முழுக்க நன்மையாகும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள் என எங்களுக்கு அறிவித்தார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்)
அவர்கள், "நாங்கள் "சில நூல்களில்' அல்லது "தத்துவ(ப் புத்தகத்)தில்'
அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் சில (வகை) நாணத்தில் மன அமைதியும் கம்பீரமும்
உண்டு. மற்றச் சில வகையில் பலவீனம் உண்டு என்று (எழுதப்பட்டிருப்பதைக்)
காண்கிறோம்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இம்ரான் (ரலி) அவர்கள் தம் கண்கள்
சிவக்கும் அளவிற்குக் கோபமடைந்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(நாணம் முழுக்க நன்மைதான் என்று) கூறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்களோ
அதற்கு எதிர்க்கருத்து கூறுகின்றீர்களே!'' என்று சொல்லி விட்டுத் தாம் முன்பு சொன்ன
ஹதீஸையே மீண்டும் சொன்னார்கள். புஷைர் அவர்களும் முன்பு தாம் சொன்னதையே மீண்டும்
கூறினார்கள். அப்போதும் இம்ரான் (ரலி) அவர்கள் கோபமடைந்தார்கள். நாங்கள்,
"அபூநுஜைதே! அவர் நம்மைச் சார்ந்தவர்தாம். அவரிடம் (கொள்கைக்) குறைபாடு ஏதுமில்லை''
என்று கூறி (இம்ரான் அவர்களை சமாதானப் படுத்தி)க்கொண்டிருந்தோம்.- மேற்கண்ட ஹதீஸ்
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.04.01.2010. 17:59பாடம் :
13பாடம் : 13இஸ்லாத்தின் அனைத்து விஷயங் களையும் உள்ளடக்கிக்கொண்ட அம்சம்.62
சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் "அல்லாஹ்வின்
தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள்.
"தங்களுக்குப் பிறகு யாரிடமும்' அல்லது "தங்களைத் தவிர வேறு யாரிடமும்' அது
குறித்து நான் கேட்க வேண்டிய திருக்கலாகாது'' என்று வினவினேன்.அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்' என்று கூறி,
அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!'' என்று சொன்னார்கள்.இந்த ஹதீஸ் ஐந்து
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.04.01.2010. 17:59பாடம் : 14பாடம் : 14இஸ்லாம்
கூறும் நல்லறங்களுக்கிடையேயான வித்தியாசமும் அவற்றில் மிகவும் சிறந்தது எது என்பது
பற்றிய விளக்கமும்.63 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு மனிதர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது
எது?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பசித்தவருக்கு)
உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம்
(முகமன்) சொல்வதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.38இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.64 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
அவர்கள் கூறியதாவது:ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில்
சிறந்தவர் யார்?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய
நாவிலிருந்தும் கரத்திலி ருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப்
பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)'' என்று பதிலளித்தார்கள்.65
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற
முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார் களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார்.இதை
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.66 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்
கூறியதாவது:நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமி(யப்
பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?'' என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப்
பெற்றிருக்கிறார்களோ அவரே (சிறந்தவர்; அவருடைய பண்பே சிறந்தது)'' என்று
பதிலளித்தார்கள்.மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.அதில்,
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று
கேட்கப்பட்டது'' என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது. மீதி மேற்கண்டவாறே
இடம்பெற்றுள்ளது.3904.01.2010. 18:00பாடம் : 15பாடம் : 15இறைநம்பிக்கையின் இனிமையை
உணர்ந்திட ஒருவரிடம் அமைந்திருக்க வேண்டிய பண்புகள் பற்றிய விளக்கம்.67 நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின்
இனிமையை உணர்வார். (அவை:)1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட
நேசத்திற்குரி யோராய் இருப்பது.2. அவர் மற்றொருவரை அல்லாஹ்வுக் காகவே நேசிப்பது.3.
இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத்
திரும்புவதை நெருப்பில் தாம் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று அவர் வெறுப்பது.இதை
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40இந்த ஹதீஸ் மூன்று
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.68 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை
உணர்ந்துகொள்வார்.1. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே
நேசித்துக்கொண்டிருப்பது.2. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட
நேசத்திற்குரியோராவது.3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின்
மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே அவர் விரும்புவது.இதை
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது.- அனஸ் (ரலி) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் மேற்கண்ட
ஹதீஸ் வந்துள்ளது.அதில் "மீண்டும் யூதராகவோ கிறிஸ்தவராகவோ தாம் மாறுவதைவிட
(நெருப்பில் வீசப்படுவதை அவர் விரும்புவது)'' என்று (சிறு மாற்றத்துடன்) ஹதீஸ்
இடம்பெற்றுள்ளது.04.01.2010. 18:01<< First < Previous [1 / 5] Next > Last >>  

ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் அத்தியாயம் : 1

பாடம் : 1நம்பத் தகுந்த அறிவிப்பாளர்களிடமிருந்தே ஹதீஸ்களை அறிவிப்பதும்
பொய்யர்களின் அறிவிப்புகளைக் கைவிடுவதும் கட்டாயமாகும் என்பது பற்றியும்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (அவர்கள் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப்)
பொய்யுரைப்பது தொடர்பாக வந்துள்ள எச்சரிக்கையும்.அல்லாஹ் உங்களுக்கு நல்லருள்
பாலிப்பானாக!ஆதாரபூர்வமான அறிவிப்புகள் எவை, பலவீனமான
அறிவிப்புகள் எவை, நம்பத்
தகுந்த அறிவிப்பாளர் யார், சந்தேகத்திற்குள் ளான அறிவிப்பாளர் யார் எனப்
பகுத்தறியும் திறன் யாருக்கு இருக்கிறதோ அவர் தாம் அறிந்த தரமான மற்றும் நேர்மையான
அறிவிப்பாளர் அறிவித்துள்ள ஹதீஸ்களை மட்டுமே அறிவிப்பது அவசியமாகும். சந்தேகத்
திற்கு உள்ளானவர்கள், புதிய வழக்கங்களில் பிடிவாதமாக இருப்பவர்கள் ஆகியோரால்
அறிவிக்கப்பெற்ற ஹதீஸ்களைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.நாம் கூறிய இக்கருத்தே
சரியானதாகும் என்பதற்குப் பின்வரும் இறைவசனங்கள் சான்றுகளாகும்:அல்லாஹ்
கூறுகின்றான்:நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக்
கொண்டுவந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக்கொள்ளுங்கள்; (இல்லையேல்)
அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம்;
பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கவலைப்படுபவர்களாக ஆவீர்கள் (49:6).அல்லாஹ்
கூறுகின்றான்:நீங்கள் விரும்புகின்ற சாட்சிகளில் ஓர் ஆணும் இரு பெண்களும் சாட்சியம்
அளிக்க வேண்டும் (2:282).உங்களில் இரு நேர்மையாளர்களைச் சாட்சிகளாக
வைத்துக்கொள்ளுங்கள் (65:2).இவ்வசனங்களிலிருந்து தீயவனின் செய்தியும்
நேர்மையில்லாதவனின் சாட்சியமும் ஏற்கத் தக்கவை அல்ல என்று தெரிகிறது.தகவல்
அறிவித்தல், சாட்சியம் அளித்தல் ஆகிய இவ்விரண்டின் பொருளும் சில கோணங்களில்
வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலான விஷயங்களில் அவ்விரண்டும் ஒன்றுபட்டே
இருக்கின்றன.கல்வியாளர்களிடம் தீயவனின் சாட்சியம் ஏற்கப்படாததைப் போன்றே, தீயவனின்
தகவலும் அவர்கள் அனைவராலும் நிராகரிப்பட்டுள்ளது. தீயவன் கூறும் செய்திக்கு
இடமில்லை எனக் குர்ஆன் சுட்டிக் காட்டியிருப்பதைப் போன்றே, மறுக்கப்பட்ட
அறிவிப்பாளரின் ஹதீஸிற்கும் இடமில்லை என நபிமொழி சுட்டிக் காட்டுகிறது.இது குறித்து
பிரபலமான நபிமொழி ஒன்று வந்துள்ளது.(1) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னைப் பற்றி யார் அறிவிக்கிறாரோ
அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.இந்த ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி)
அவர்களிடமிருந்தும் சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தும்
அறிவிக்கப்படுகிறது.
பாடம் : 2அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைப்பது தொடர்பாக வந்துள்ள
கண்டனம்.(2) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என்னைப் பற்றி (நான்
சொல்லாத ஒன்றைச் சொன்னதாக)ப் பொய்யுரைக்காதீர்கள். ஏனெனில், என்னைக் குறித்து யார்
பொய் கூறுகிறாரோ அவர் நரகம்தான் செல்வார்.இந்த ஹதீஸை அலீ பின் அபீதாலிப் (ரலி)
அவர்கள் தமது சொற்பொழிவில் அறிவித் தார்கள்.22இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்
களில் வந்துள்ளது.(3) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே
பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று
கூறியிருப்பதுதான் உங்களுக்கு நான் அதிக எண்ணிக்கையில் ஹதீஸ்களை அறிவிக்கவிடாமல்
தடுக்கிறது.(4) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என்னைப் பற்றி (நான்
சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கி றாரோ அவர் தமது
இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.23(5) அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:முஃகீரா பின் ஷுஅபா
(ரலி) அவர்கள் கூஃபா நகரின் ஆளுநராய் இருந்தபோது நான் (மஸ்ஜிது கூஃபா)
பள்ளிவாசலுக்குச் சென்றேன். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள்) என்மீது கூறும் பொய் மற்றவர்மீது நீங்கள் கூறும்
பொய்யைப் போன்றதன்று. யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக் கிறாரோ அவர் தமது
இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்'' என்று கூறுவதை நான்
கேட்டுள்ளேன்.24- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே
மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "(நீங்கள்) என்மீது
கூறும் பொய் மற்றவர்மீது நீங்கள் கூறும் பொய்யைப் போன்றதன்று'' எனும் குறிப்பு
இடம்பெறவில்லை.
பாடம் : 3கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிப்பது கூடாது.(6) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே
அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.25இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.- மேற்கண்ட
ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும்
வந்துள்ளது.(7) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒருவர் தாம்
கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான
சான்றாகு)ம்.இதை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(8)
அப்துல்லாஹ் பின் வஹ்ப் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:என்னிடம் மாலிக்
பின் அனஸ் (ரஹ்) அவர்கள், தெரிந்துகொள்! கேள்விப்பட்டதை யெல்லாம் அறிவிக்கும் ஒரு
மனிதர் (பொய்யிலி ருந்து) தப்பமாட்டார்; கேள்விப்பட்டதை யெல்லாம் அறிவிக்கும்
ஒருவர் ஒருபோதும் (வழிகாட்டும்) தலைவராக இருக்கமாட்டார்'' என்று கூறினார்கள்.(9)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒருவர் தாம்
கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான
சான்றாகு)ம்.இதை அபுல்அஹ்வஸ் அவ்ஃப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(10) அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஒருவர்
தாம் கேள்விப்பட்டவற்றில் (சந்தேகத்திற்குரிய) சிலவற்றையாவது (பிறருக்குத்)
தெரிவிப்பதிலிருந்து வாய்மூடாதவரை அவர் பின்பற்றப்படும் தலைவராக ஆக முடியாது.இதை
முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(11) சுஃப்யான் பின்
ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:என்னிடம் இயாஸ் பின் முஆவியா (ரஹ்)
அவர்கள்,குர்ஆனைக் கற்பதில் உங்களுக்கிருக்கும் ஈடுபாட்டை நான் அறிவேன். எனவே,
குர்ஆனிலுள்ள ஓர் அத்தியாயத்தை எனக்கு ஓதிக்காட்டி விளக்கமளிப்பீராக! நீங்கள்
கற்றதை நான் (சரி) பார்க்க வேண்டும்'' என்று கூறி னார்கள். நான் அவ்வாறே செய்தேன்.
அப்போது அவர்கள் என்னிடம்,நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதை நீங்கள்
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: நிராகரிக் கப்பட்ட செய்திகளைக் கூற வேண்டாமென உங்களை
நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அச் செய்திகளைக் கூறித் திரிகின்றவர் இழிவடையா மலும்
பொய்யர் என இனங் காணப்படாமலும் இருத்தல் அரிது'' என்றார்கள்.(12) அப்துல்லாஹ் பின்
மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு
எட்டாத ஒரு விஷயத்தை அறிவிப்பதானது, அவர்களில் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல்
விடுவதில்லை.இதை உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்..இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 4பலவீனமான அறிவிப்பாளர்களிடமிருந்து நபிமொழிகளை அறிவிப்பதற்கு வந்துள்ள
தடையும், அவற்றை அறிவிப்பதிலிருந்து விலகிக்கொள்வதும்.26(13) அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:எனது சமுதாயத்தில் இறுதிக் காலத்தவரி டையே சிலர்
தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத (புதுப்புது)
ஹதீஸ்களையெல்லாம் உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்கள் குறித்து உங்களை
நான் எச்சரிக்கிறேன்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.(14) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:இறுதிக் காலத்தில் பெரும் பொய்யர்களான "தஜ்ஜால்கள்' தோன்றுவார்கள்.
நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத ஹதீஸ்களை உங்களிடம் அவர்கள்
சொல்வார்கள். ஆகவே, அவர்களைக் குறித்து உங்களை நான் எச்சரிக் கிறேன். அவர்கள்
உங்களை வழிகெடுத்து விடவோ குழப்பத்தில் ஆழ்த்திவிடவோ (நீங்கள் இடமளித்துவிட)
வேண்டாம்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(15) அப்துல்லாஹ் பின்
மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:நிச்சயமாக ஷைத்தான் மனித உருவில் மக்களிடையே வந்து
பொய்யான ஹதீஸ்களை எடுத்துரைப்பான். அதன் பிறகு மக்கள் கலைந்து செல்வார்கள். அப்போது
அவர்களில் ஒருவர், "யாரோ ஒரு மனிதர் (வந்து) ஒரு ஹதீஸ் சொல்வதை நான் கேட்டேன்.
அவரது முகம் எனக்குத் தெரியும்; ஆனால், அவருடைய பெயர் என்னவென்று எனக்குத்
தெரியாது''என்று கூறுவார்.இதை ஆமிர் பின் அபதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(16)
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:கடலுக்குள் சில
ஷைத்தான்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள்
கட்டிவைத்தார்கள். அந்த ஷைத்தான்கள் வெகுவிரைவில் வெளியேறி வந்து மக்களுக்கு முன்
குர்ஆனை(ப் போன்ற ஒன்றை) ஓதிக் காட்டுவார்கள்.27இதை தாவூஸ் பின் கைசான் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.(17) தாவூஸ் பின் கைசான் அல்யமானீ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:இதோ இவர் -புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள்- இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்களிடம் வந்து நபிமொழிகளை அறிவிக்கலானார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்,
"இன்ன இன்ன நபிமொழிகளை மீண்டும் அறிவியுங்கள்''என்றார்கள். அவ்வாறே புஷைர்
அவர்களும் மீண்டும் அறிவித்துவிட்டுத் தொடர்ந்து நபிமொழிகளை அறிவிக்கலானார். இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் "இன்னஇன்ன ஹதீஸ்களை மீண்டும் அறிவியுங்கள்'' என்றார்கள்.
அவ்வாறே புஷைர் அவர்கள் மீண்டும் அறிவித்துவிட்டு, "(நான் தெரியாமல் தான்
கேட்கிறேன்:) நான் அறிவித்த எல்லா நபிமொழிகளையும் ஏற்றுக்கொண்டுவிட்டு,
(குறிப்பிட்ட) இந்த நபிமொழியை மட்டும் மறுக்கிறீர்களா? அல்லது நான் அறிவித்த எல்லா
ஹதீஸ்களையும் மறுத்துவிட்டு, (குறிப்பிட்ட) இந்த நபிமொழியை மட்டும் ஏற்கிறீர்களா?
என்று எனக்குத் தெரியவில்லை'' என்றார்.அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்,
"நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமி ருந்து ஹதீஸ்களை
அறிவித்துக்கொண்டுதானிருந்தோம். அப்போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது
பொய்யுரைக்கப்பட்டதில்லை. பின்னர் மக்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒட்டகங்களிலும்
கட்டுப்படும் ஒட்டகங்களிலும் பயணம் செய்து (வித்தியாசமே இல்லாமல் எல்லா வழிகளிலும்)
செல்லத் தொடங்கியபோது நபிமொழிகளை அறிவிப்பதையே நாங்கள் நிறுத்திவிட்டோம்'' என்று
கூறினார்கள்.28இதை ஹிஷாம் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ்
இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.(18) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஹதீஸ்களை மனனமிட்டுவந்தோம்.
ஹதீஸ்கள் அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டே
மனனமிடப்பட்டுவந்தன. (ஆனால், இன்று) நீங்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒட்டகங் களிலும்
கட்டுப்படும் ஒட்டகங்களிலும் பயணம் செய்து (வித்தியாசமே இல்லாமல் எல்லா வழிகளிலும்)
செல்லத் தொடங்கியவுடன் எல்லாம் பாரதூரமான விஷயமாகிவிட்டது.இதை அப்துல்லாஹ் பின்
தாவூஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(19) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:புஷைர் பின் கஅப் அல்அதவீ (ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று கூறியவாறு நபிமொழிகளை அறிவிக்கலானார்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ அவரது அறிவிப்பைச் செவிகொடுத்துக் கேட்கவோ அவரை
ஏறெடுத்துப் பார்க்கவோ தலைப்பட வில்லை. உடனே புஷைர் அல் அதவீ, "இப்னு அப்பாஸ்
அவர்களே! நீங்கள் எனது  ஹதீஸைச் செவிகொடுத்துக் கேட்பதாகத் தெரியவில்லையே! நான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உங்களிடம் அறிவித்துக்கொண்டிருக்க,
நீங்களோ காது கொடுக்காமல் இருக்கின்றீர்களே!'' என்று கேட்டார். அதற்கு இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலுரைத்தார்கள்:ஒரு காலம் இருந்தது.
அக்காலத்தில் யாரேனும் ஒருவர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று
சொல்வதை நாங்கள் கேட்டுவிட்டால் உடனே அவரை நோக்கி எங்கள் பார்வை செல்லும்; அவர்
கூறுவதைக் கேட்க எங்கள் காதுகளைத் தாழ்த்துவோம். பிறகு மக்கள் பிடிவாதம் பிடிக்கும்
ஒட்டகங்களிலும் கட்டுப்படும் ஒட்டகங்களிலும் பயணம் செய்து (வித்தியாசமே இல்லாமல்
எல்லா வழிகளிலும்) செல்ல ஆரம்பித்தவுடன் நாங்கள் (நபியவர்களிடமிருந்து) அறிந்துள்ள
(சரியான)வற்றை மட்டுமே மக்களிடமிருந்து ஏற்றுக்கொண்டோம்.இதைக் கைஸ் பின் சஅத் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.(20) அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், எனக்கு ஒரு மடல்
வரையுமாறும், (அதில் குழப்பவாதி களான ஷியாக்களின் கருத்துகள்) எதுவும் இடம்பெறாமல்
பார்த்துக்கொள்ளுமாறும் வேண்டிக் கடிதம் எழுதினேன். (கடிதம் கண்ட) இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் "அவர் நல்ல பிள்ளை; அவருக்காக நான் சில விஷயங்களை நன்கு
தேர்ந்தெடுத்து, சொல்லக் கூடாதவற்றைத் தவிர்த்துவிடப்போகிறேன்'' என்று கூறிவிட்டு,
அலீ (ரலி) அவர்கள் அளித்த தீர்ப்புகளைக் கொண்டுவரும்படி கூறினார்கள். அவற்றில்
சிலவற்றை எழுதத் தொடங்கினார்கள். ஒரு (குறிப்பிட்ட) விஷயம் வந்தபோது
"இப்படியெல்லாம் அலீ (ரலி) அவர்கள் தீர்ப்பளித்திருக்க முடியாது; வழிதவறியவன்தான்
இப்படித் தீர்ப்பளிப்பான்'' என்று கூறினார்கள்.இதை நாஃபிஉ பின் உமர் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(21) தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அலீ (ரலி)
அவர்கள் அளித்த தீர்ப்புகள் அடங்கிய (நீண்ட சுருள்) ஏடு ஒன்று இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்களிடம் கொண்டுவரப் பட்டது. அதில் ஒரு (முழம்) அளவிற்கு மட்டும் வைத்துக்கொண்டு
மற்றதை அழித்துவிட் டார்கள்.(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா
(ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது தமது முழங்கையால் ("இந்த அளவு' என்று) சைகை
செய்தார்கள்.இதை ஹிஷாம் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(22)
அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அலீ (ரலி)
அவர்களுக்குப் பின் (அன்னாரின் தீவிர ஆதரவாளர்களான ஷியா பிரிவு) மக்கள் பல்வேறு
புதிய கோட்பாடுகளை உருவாக்கியபோது, அலீ (ரலி) அவர்களின் நண்பர்களில் ஒருவர்
"அல்லாஹ் இம்மக்களை (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்துவானாக! எத்தகைய ஞானத்தை
அவர்கள் சீரழித்துவிட்டார்கள் (தெரியுமா!)'' என்று (கடிந்து) கூறினார்.இதை சுலைமான்
பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(23) முஃகீரா பின் மிக்சம்
அள்ளப்பீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அலீ (ரலி) அவர்கள் குறித்த அறிவிப்பாளர்களில்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய மாணவர்கள் மட்டுமே உண்மை உரைப்பவர்களாய்
இருந்தனர்.29இதை அபூபக்ர் பின் அய்யாஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 5அறிவிப்பாளர்தொடர்களை எடுத்துரைப் பது மார்க்கத்தின் ஓர் அம்சமாகும்;
நம்பத் தகுந்த அறிவிப்பாளர்களிடமிருந்து வரும் அறிவிப்புகள் மட்டுமே ஏற்கப்படும்;
அறிவிப்பாளர்களிடம் காணப்படும் குறைகளை எடுத்துரைப்பது அனுமதிக் கப்பட்டது என்பது
மட்டுமன்றி, அது ஒரு கடமையும்கூட. அது தடை செய்யப் பட்டுள்ள புறங்கூறல் ஆகாது;
மாறாக,புனித மார்க்கத்தைக் காக்கும் (அறப்) பணியாகும்.(24) முஹம்மத் பின் சீரீன்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:நிச்சயமாக இந்த (நபிமொழி)க் கல்வியும் மார்க்கம்தான்.
எனவே, உங்களுடைய மார்க்க (ஞான)த்தை எவரிடமிருந்து பெறுகிறீர்களோ அவரை உற்றுக்
கவனியுங்கள்.இதை ஹிஷாம் பின் ஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்தத் தகவல்
இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.(25) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:மக்கள் (ஆரம்பக் காலங்களில் ஹதீஸ்கள் அறிவிக்கப்படும்போது
அவற்றின்) அறிவிப்பாளர் தொடர்கள் குறித்துக் கேட்டதில்லை. ஆனால், (பிற்காலத்தில்)
குழப்பங்கள் தோன்றியபோது உங்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின்
பெயர்களையும் எங்களுக்கு அறிவியுங்கள்'' என்று கூறலாயினர். ஆகவே, அந்த
அறிவிப்பாளர்கள் நபிவழிக்காரர்களா என்று கவனித்து, அவ்வாறிருந்தால் அவர்கள்
அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டும் ஏற்கப்படும். அவர்கள் (நபிவழியில் இல்லாதவற்றைக்
கூறும்) புதுமைவாதிகளாய் இருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படா.இதை
ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(26) சுலைமான் பின் மூசா (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:நான் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்களைச் சந்தித்து, இன்னார்
எனக்கு இன்னின்னவாறு அறிவித்தார்'' என்று கூறினேன். அதற்கு தாவூஸ் (ரஹ்)
அவர்கள்,இதை உமக்கு அறிவித்தவர் நம்பத் தகுந்தவராய் இருந்தால் ஏற்றுக்கொள்க'' என்று
கூறினார்கள்.இதை அபூஅம்ர் அப்துர் ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(27) சுலைமான் பின் மூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் தாவூஸ்
பின் கைசான் (ரஹ்) அவர்களிடம், இன்னார் எனக்கு இன்னின்னவாறு அறிவித்தார்'' என்று
கூறினேன். அதற்கு தாவூஸ் (ரஹ்) அவர்கள்,உமக்கு இதை அறிவித்தவர் நம்பத் தகுந்தவராய்
இருந்தால் ஏற்றுக்கொள்க'' என்று கூறினார்கள்.இதை சயீத் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.(28) அபுஸ்ஸினாத் அப்துல்லாஹ் பின் தக்வான் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:நான் மதீனாவில் நம்பிக்கைக்குரிய நூறு பேரைச் சந்தித்திருக்கிறேன்.
ஆனால், அவர் களிடமிருந்து அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
இவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்லர்'' என்று சொல்லப்பட்டது.இதை அப்துர் ரஹ்மான்
பின் அபிஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(29) சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமி ருந்து நம்பத் தகுந்தவர்கள்
மட்டுமே ஹதீஸ்களை அறிவிக்க வேண்டும்.இதை மிஸ்அர் பின் கிதாம் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.(30)
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அறிவிப்பாளர்தொடரும்
மார்க்கத்தின் ஓர் அங்கமே. அறிவிப்பாளர்தொடர் (இஸ்னாத்) மட்டும்
இருந்திருக்காவிட்டால் (மார்க்கத்தில்) நினைத்தவர்கள் நினைத்ததையெல்லாம்
சொல்லியிருப்பார்கள்.அப்பாஸ் பின் அபீரிஸ்மா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அப்துல்லாஹ்
பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், நமக்கும் மக்களுக்குமிடையே அறிவிப்பாளர் தொடர் என்ற
கால்கள் உள்ளன (அவற்றைக் கொண்டே ஹதீஸ்கள் நிற்கும்)'' என்று கூறுவதை நான்
கேட்டுள்ளேன்.அபூஇஸ்ஹாக் இப்ராஹீம் பின் ஈசா அத்தாலகானீ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:நான் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்களிடம்,நீ உனக்காக
தொழுவதுடன் உன் பெற்றோருக்காகத் தொழுவதும், உனக்காக நோன்பு நோற்பதுடன் உன்
பெற்றோருக்காக நோன்பு நோற்பதும் நன்மைக்கு மேல் நன்மை தரும் செயலாகும்'' என்று ஒரு
நபிமொழி வந்துள்ளது என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள்,
அபூஇஸ்ஹாக்! இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நான், இது,
ஷிஹாப் பின் கிராஷ் (ரஹ்) அவர்கள் அறிவித்த ஹதீஸ்'' என்றேன். அதற்கு அப்துல்லாஹ்
பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், அன்னார் நம்பத் தகுந்த அறிவிப்பாளர்தாம்'' என்று
கூறிவிட்டு, அன்னாருக்கு இதை அறிவித்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நான்,ஹஜ்ஜாஜ்
பின் தீனார்'' என்றேன். அன்னாரும் நம்பத் தகுந்த அறிவிப்பாளர்தாம்'' என்று
கூறிவிட்டு, அன்னாருக்கு இதை அறிவித்தவர் யார்?'' என்று அப்துல்லாஹ் கேட்டார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்றேன். அப்துல்லாஹ் பின்
அல்முபாரக் (ரஹ்),அபூஇஸ்ஹாக்! ஹஜ்ஜாஜ் பின் தீனார் அவர்களுக்கும் நபி (ஸல்)
அவர்களுக்குமிடையே பயண ஒட்டகங்களின் கழுத்துகள் முறிந்துவிடும் அளவுக்கு நீண்ட
(கால) இடைவெளி உள்ளது. (இதை எப்படி அவர் நபியவர்களிடம் கேட்டிருக்க முடியும்?.)30
எனினும் (ஒருவர் தம் பெற்றோருக்காக) தான தர்மம் செய்வது (நன்மையே என்பது) தொடர்பாக
எந்தக் கருத்து வேறுபாடுமில்லை'' என்று சொன்னார்கள்.அலீ பின் ஷகீக் (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்:அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் மக்கள் மத்தியில் அம்ர்
பின் ஸாபித்திடமிருந்து அறிவிப்பதை விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர் முன்னோரைப்
பழிப்பவராய் இருந்தார்'' என்று கூறுவதை நான் செவியேற்றேன்.(31) அபூஅக்கீல் யஹ்யா
பின் அல்முத்தவக்கில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் அபூமுஹம்மத் காசிம் பின்
உபைதில்லாஹ் (ரஹ்) மற்றும் யஹ்யா பின் சயீத் (ரஹ்) ஆகியோர் அருகில்
அமர்ந்திருந்தேன். அப்போது யஹ்யா (ரஹ்) அவர்கள் காசிம் (ரஹ்) அவர்களிடம்,
அபூமுஹம்மதே! மார்க்க விவகாரத்தில் ஏதேனும் ஒன்றைப் பற்றி உங்களிடம் வினவப்பட்டு,
அதற்குரிய விடையோ தீர்வோ உங்களிடம் இல்லாதிருப்பது உங்களைப் போன்றவர்களுக்குப்
பெருங் குறையாயிற்றே!'' என்று கூறினார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள், ஏன்
அவ்வாறு கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள்.அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள்,நீங்கள்
நேர்வழித் தலைவர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் வழித் தோன்றலாயிற்றே!''
என்று சொன்னார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள், நான் (தக்க) அறிவின்றிப்
பேசுவதோ, நம்பத் தகாதவர்களிடமிருந்து ஒன்றை அறிவிப்பதோ தான் அல்லாஹ்வைப் பற்றி
அறிந்தவர்களிடம் இதைவிட மோசமானதாகும்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) யஹ்யா
(ரஹ்) அவர்கள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்கள்.இதை அபுந்நள்ர் ஹாஷிம்
பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(32) அபூஅக்கீல் யஹ்யா பின்
அல்முத்த வக்கில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்
களுடைய (புதல்வரின்) புதல்வரிடத்தில் (-காசிம் பின் உபைதில்லாஹ் அவர்களிடம்) மக்கள்
ஒரு விஷயம் குறித்து வினவினர். ஆனால், அன்னாருக்கு அதற்கான விடை தெரிந்திருக்க
வில்லை. அப்போது காசிம் (ரஹ்) அவர்களிடம் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் நீங்கள்
நேர்வழித் தலைவர்களின் -அதாவது உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோரின்-
வழித்தோன்றல் ஆவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைப் போன்றவர்களிடம் ஒரு விஷயம்
குறித்து வினவப்பட்டு, அதற்கான விளக்கம் உங்களிடம் இல்லாமலிருப்பதைப் பெருங்
குறையாகவே நான் கருதுகிறேன்'' என்று சொன்னார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள்,
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தக்க) அறிவின்றிப் பேசுவதோ, நம்பத்
தகாதவர்களிடமிருந்து ஒன்றை அறிவிப்பதோதான் அல்லாஹ் விடமும், அவனைப் பற்றி
அறிந்தவர்களிடமும் அதைவிடப் பெருங் குறையாகும்'' என பதிலளித்தார்கள். அவ்விருவரும்
இவ்வாறு உரையாடிக்கொண்டிருந்தபோது அங்கு நானும் இருந்தேன்.இதை சுஃப்யான் பின் உயைனா
(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(33) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:நான் சுஃப்யான் பின் சயீத் அஸ்ஸவ்ரீ (ரஹ்), ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ்
(ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்),சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோரிடம், என்னிடம்
ஒருவர் வந்து நபிமொழித் துறையில் நம்பத் தகாத ஒருவரைப் பற்றி வினவினால் (நான் அவரது
குறையை எடுத்துரைக்கலாமா?)'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அனைவரும்,அவர் நம்பத்
தகுந்தவர் அல்லர் என்று (மறைக்காமல்) எடுத்துரைத்துவிடுங்கள். (அது புறம் பேசல்
ஆகாது)'' என்று பதிலளித்தனர்.இதை அம்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(34) நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அப்துல்லாஹ்
பின் அவ்ன் பின் அர்திபான் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடம் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பாரின்
அறிவிப்புக் குறித்து வினவப்பட்டது. அப்போது வீட்டின் நிலைப்படி மேல்
நின்றுகொண்டிருந்த இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் ஷஹ்ர்மீது மக்கள் ஈட்டியைப்
பாய்ச்சியுள்ளனர்; ஷஹ்ர்மீது மக்கள் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளனர்'' என்று (இரு முறை)
கூறினார்கள். அதாவது அவரது அறிவிப்புக் குறித்து மக்கள் குறை கூறியுள்ளனர்.இதை
உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(35) ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பாரைச் சந்தித்திருக்கிறேன்;
ஆனால், அவரை நான் பொருட்படுத்தியதில்லை.இதை ஷபாபா பின் சவார் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(36) அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான்
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர் களிடம், அப்பாத் பின் கஸீர் என்பாரின் நிலை
உங்களுக்குத் தெரிந்ததே. அவர் ஹதீஸை அறிவித்தால் விபரீதமான விஷயங்களை
(-நிராகரிக்கப்பட்ட ஹதீஸ்களை)யே கூறுகிறார். ஆகவே,அவரிடமிருந்து ஹதீஸ்களை ஏற்க
வேண்டாமென மக்களிடம் நான் கூறி விடுவதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?''
என்று கேட்டேன். அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், ஆம் (அவ்வாறே கூறிவிடுங்கள்)''
என்றார்கள்.அதற்குப் பிறகு ஏதேனும் ஓர் அவையில் நானிருக்கும்போது அப்பாத் பின்
கஸீரைப் பற்றிப் பேச்சு வந்தால், அவரது மார்க்க ஈடுபாடு குறித்து நான் மெச்சிப்
பேசுவேன். ஆனால், அவர் அறிவிக்கும் அறிவிப்புகளை ஏற்றுக்கொள்ளாதீர் கள் என்று
(மக்களிடம்) கூறிவிடுவேன்.அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்:நான் ஷுஅபா (ரஹ்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் இதோ
இந்த அப்பாத் பின் கஸீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள் (அவருடைய
அறிவிப்புகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்)'' என்று கூறினார்கள்.(37) ஃபள்ல் பின்
சஹ்ல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் முஅல்லா பின் மன்ஸூர் அர்ராஸீ (ரஹ்)
அவர்களிடம், அப்பாத் பின் கஸீருக்கு ஹதீஸ்களை அறிவிப்பவரான முஹம்மத் பின் சயீத்
என்பாரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு முஅல்லா அர்ராஸீ (ரஹ்) அவர்கள் ஈசா பின் யூனுஸ்
(ரஹ்) அவர்கள் தம்மிடம் (பின்வருமாறு) கூறியதாகத் தெரிவித்தார்கள்:நான் முஹம்மத்
பின் சயீதின் வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்தேன். அவர் அருகில் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ
(ரஹ்) அவர்களும் இருந்தார்கள். சுஃப்யான் (ரஹ்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச்
சென்ற போது அன்னாரிடம் நான் முஹம்மத் பின் சயீத் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள்
அவர் ஒரு பொய்யர்'' என்று கூறினார்கள்.(38) முஹம்மத் பின் யஹ்யா பின் சயீத்
அல்கத்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:(என் தந்தை) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள்,
ஹதீஸ் அறிவிப்புகளில் பொய்யுரைப்பதை விட அதிகமாக வேறெதிலும் பொய்யுரைக்கும்
நல்லவர்களை நாம் கண்டதில்லை'' என்று கூறினார்கள்.அறிவிப்பாளர்களில் ஒருவரான
முஹம்மத் பின் அபீஅத்தாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் முஹம்மத் பின் யஹ்யா
(ரஹ்) அவர் களைச் சந்தித்தபோது இது பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், ஹதீஸ்
அறிவிப்புகளில் பொய்யுரைப்பதைவிட அதிகமாக வேறெதிலும் நல்லவர்கள் பொய்யுரைப்பதை நீ
காண மாட்டாய்'' என்று தம் தந்தை கூறியதாகச் சொன்னார்கள்.அபுல்ஹுசைன் முஸ்லிம் (பின்
அல் ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:நல்லவர்கள் நாவில் (தம்மை அறியாமலேயே) பொய்
வந்துவிடுகிறது; அவர்கள் வேண்டுமென்றே பொய்யுரைப்பதில்லை.31(39) கலீஃபா பின் மூசா
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் ஃகாலிப் பின் உபைதில்லாஹ் அவர் களிடம் சென்றபோது
அவர் என்னிடம் மக்ஹூல் எனக்கு அறிவித்தார்;மக்ஹூல் எனக்கு அறிவித்தார்'' என்று
கூறி, (சில ஹதீஸ்களை) எழுதிக்கொள்ளுமாறு கூறலானார். அப்போது அவருக்குச் சிறுநீர்
கழிக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டுவிடவே உடனே அவர் எழுந்து சென்றுவிட்டார். அப்போது
நான் (அவரது) பதிவேட்டைப் பார்த்தேன். அதில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு
அபான் அறிவித்தார்கள். அபான் இன்னாரிடமிருந்து அறிவித்தார்கள்'' என்று
எழுதப்பட்டிருந்தது. (அவர் என்னிடம் சொன்ன தற்கும் குறிப்பேட்டில் உள்ளதற்கும்
வேறுபாடு இருந்ததால்) உடனே நான் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து எழுந்து
சென்றுவிட்டேன்.ஹசன் பின் அலீ அல்ஹுல்வானீ (ரஹ்) அவர்கள், நான் அஃப்பான் என்பாரின்
(ஹதீஸ்) பதிவேட்டில், உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தொடர்பான செய்தி
ஒன்றை, ஹிஷாம் அபில்மிக்தாம் அவர்கள் அறிவித்திருந்ததைக் கண்டேன். அதில் ஹிஷாம்
அவர்கள் முஹம்மத் பின் கஅப் என்பாரிடமி ருந்து இன்னாரின் புதல்வரான யஹ்யா எனும்
ஒருவர் எனக்கு அறிவித்தார்'' என்று எழுதப்பட்டிருந்தது. உடனே நான் அஃப்பான்
அவர்களிடம், நபிமொழி இயல் அறிஞர்கள், முஹம்மத் பின் கஅப் என்பாரிடமிருந்தே ஹிஷாம்
அறிவித்ததாகக் கூறுகின்றனரே?'' என்று கேட்டேன். அதற்கு அஃப்பான் அவர்கள், இந்த
ஹதீஸ் விஷயத்தில்தான் ஹிஷாம் அகப்பட்டுக்கொண்டார். அவர் முஹம்மத் பின் கஅப்
அவர்களிடமிருந்து எனக்கு யஹ்யா அறிவித்தார்'' என்று முன்பு கூறிவந்தார். பின்னர்
தாமே முஹம்மத் பின் கஅப் அவர்களிடமிருந்து (நேரடியாக இந்த ஹதீஸைச்) செவியேற்றதாக
அவர் (மாற்றிக்) கூறலானார்'' என்று சொன்னார்கள்.(40) அப்துல்லாஹ் பின் உஸ்மான் பின்
ஜபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் அப்துல்லாஹ் பின் அல்முபாரக்(ரஹ்) அவர்களிடம்
நோன்புப் பெருநாள், வெகுமதிகளின் நாளாகும்'32 என்பது பற்றிய அப்துல்லாஹ் பின் அம்ர்
(ரலி) அவர்களின் ஹதீஸைத் தங்களுக்கு அறிவித்தவர் யார்? என்று கேட்டேன். அதற்கு
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள்,சுலைமான் பின் அல்ஹஜ்ஜாஜ் அவர்கள்தாம்.
உங்கள் கரத்தில் நீங்கள் வைத்துள்ள அன்னாரிடமிருந்து கிடைத்த (மகத்தான) செய்திகளைப்
பாருங்கள்'' என்று (புகழ்ந்து) கூறினார்கள்.அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்)
அவர்கள் கூறினார்கள்:நான் ஒரு வெள்ளி நாணயம் அளவு இரத்தம் (பட்ட நிலையில்
தொழுதவரின் தொழுகை நிறைவேறாது; அதைத் திரும்பத் தொழ வேண்டும்)'33 என்ற ஹதீஸின்
அறிவிப்பாளரான ரவ்ஹ் பின் ஃகுதைஃப் என்பாரைச் சந்தித்தேன். அவருடன் சிறிது நேரம்
அமர்ந்தேன். ஆயினும், அவருடன் நான் அமர்ந்திருப்பதை என் தோழர்கள்
பார்த்துவிடுவார்களோ எனக் கூச்சப்படலானேன். அவரது ஹதீஸ் வெறுக்கப்பட்டதே அதற்குக்
காரணம்.(41) அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:(அறிவிப்பாளர்)
பகிய்யா பின் அல்வலீத் உண்மையாளர்தாம். ஆயினும், அவர் வருவோர்
போவோரிடமிருந்தெல்லாம் (வித்தியாசமின்றி) ஹதீஸ்களை அறிவிப்பார்.இதை சுஃப்யான் பின்
அப்தில் மலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(42) ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:அல்ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் அல் அஃவர் அல்ஹம்தானீ என்பார்
எனக்கு ஹதீஸ்களை அறிவித்தார். ஆனால்,அவர் ஒரு பொய்யராவார்.இதை அபூஹிஷாம் முஃகீரா
பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(43) அபூஹிஷாம் முஃகீரா அள்ளப்பீ
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் அல்ஹாரிஸ் பின் அப்தில்லாஹ்
அல்அஃவர் எனக்கு ஹதீஸ்களை அறிவித்தார்''என்று கூறிவிட்டு, அவர் பொய்யர்களில்
ஒருவர்'' என அறுதியிட்டுக் கூறினார்கள்.இதை முஃபள்ளல் பின் முஹல்ஹல் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(44) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அல்கமா (ரஹ்)
அவர்கள், நான் குர்ஆனை இரண்டு ஆண்டுகளில் பயின்றேன்'' என்று கூறினார்கள். அப்போது
(அங்கிருந்த) அல் ஹாரிஸ் அல்அஃவர், குர்ஆன் எளியது; வேத அறிவிப்பு தான் (வஹீ)
வலியது'' என்று கூறினார்.இதை முஃகீரா பின் மிக்சம் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(45) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அல்ஹாரிஸ்
அல்அஃவர் நான் குர்ஆனை மூன்று வருடங்களிலும் வேத அறிவிப்பை (வஹீ) இரண்டு
வருடங்களிலும்'அல்லது வேத அறிவிப்பை மூன்று வருடங்களிலும் குர்ஆனை இரண்டு
வருடங்களிலும்' பயின்றேன்'' என்று கூறினார்.34இதை சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(46) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அல்ஹாரிஸ்
சந்தேகத்திற்கிடமானவர் எனக் கருதப்பட்டார்.இதை முஃகீரா பின் மிக்சம் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.இந்தத் தகவல் இரு அறிவிப்பாளார் தொடர்களில் வந்துள்ளது.(47) ஹம்ஸா
அஸ்ஸய்யாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:முர்ரா அல்ஹம்தானீ (ரஹ்) அவர்களிடம்
அல்ஹாரிஸ், ஒரு ஹதீஸை அறிவித்தார். அப்போது முர்ரா (ரஹ்) அவர்கள்,வாசலி லேயே
அமர்ந்திருப்பீராக!'' என்று கூறிவிட்டு இல்லத்திற்குள் சென்று தமது உடைவாளை
எடுத்தார்கள். (நிலைமையின்) விபரீதத்தை உணர்ந்த அல்ஹாரிஸ் (அங்கிருந்து) சென்று
விட்டார்.35(48) அப்துல்லாஹ் பின் அவ்ன் பின் அர்திபான் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:எங்களிடம் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், முஃகீரா பின் சயீத்,
அபூஅப்திர் ரஹீம் ஆகியோர் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவ்விருவரும்
பொய்யார்கள் ஆவர்'' என்று கூறினார்கள்.36(49) ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:நாங்கள் இளம் பிள்ளைகளாக இருந்தபோது அபூஅப்திர் ரஹ்மான்
அஸ்ஸுலமீ (-அப்துல்லாஹ் பின் ஹபீப் பின் ருபய்யிஆ -ரஹ்) அவர்களிடம் செல்வோம்.
அப்போது அவர்கள் எங்களிடம்,அபுல்அஹ்வஸைத் தவிர வேறெந்தப் பேச்சாளர்களிடமும் நீங்கள்
உட்காராதீர்கள்! ஷகீக் அள்ளப்பீ என்பாரைக் குறித்தும் உங்களை நான் எச்சரிக்கிறேன்
(அவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்காதீர் கள்!)'' என்று கூறுவார்கள். மேலும், இந்த
ஷகீக், காரிஜீய்யாக்களின் கொள்கை கொண்டவராய் இருந்தார். இந்த ஷகீக், அபூவாயில்
(என்றழைக்கப்படும் ஷகீக் பின் சலமா') அல்லர்'' என்றும் கூறுவார்கள்.(50) ஜரீர் பின்
அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் ஜாபிர் பின் யஸீத் அல்ஜுஅஃபீ
என்பாரைச் சந்தித்தேன். ஆனால், அவரிடமிருந்து (எந்த ஹதீஸையும்) நான் பதிவு
செய்துகொள்ளவில்லை. ஏனெனில் அவர், (ராஃபிஜிகளின் கொள்கையான) ரஜ்ஆ' எனும் கொள்கையில்
நம்பிக்கையுடைய வராய் இருந்தார்.37இதை அபூஃகஸ்ஸான் முஹம்மத் பின் அம்ர் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.(51) மிஸ்அர் பின் கிதாம் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:ஜாபிர் பின் யஸீத் (அடிப்படையற்ற) நூதனக் கருத்துகளை நம்பிக்கை
கொள்வதற்கு முன் எனக்கு ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்.இதை யஹ்யா பின் ஆதம் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.(52) ஹுமைதீ (அப்துல்லாஹ் பின் ஸுபைர் பின் ஈசா-ரஹ்)
அவர்கள் கூறியதாவது:சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ஜாபிர் பின் யஸீத்
(அடிப்படையற்ற) நூதனக் கருத்துகளை வெளியிடுவதற்கு முன் அவரிட மிருந்து மக்கள்
ஹதீஸ்களை அறிவித்துவந்த னர். அவர் நூதனக் கருத்துகளை வெளியிட்ட பின் அவரை ஹதீஸ்
துறையில் மக்கள் சந்தேகிக்கலாயினர். சிலர் அவரிடமிருந்து ஹதீஸ்கள் அறிவிப்பதை
நிறுத்திக்கொண்டனர்'' என்று கூறினார்கள். அப்போது சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம்
ஜாபிர் அப்படி எதை வெளியிட்டார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஃப்யான் (ரஹ்)
அவர்கள்(அலீ (ரலி) அவர்கள் மேகத்தினுள் மறைந்திருக்கி றார்கள் என்ற)ரஜ்ஆ' எனும்
கொள்கையை'' என்று பதிலளித்தார்கள்.இதை சலமா பின் ஷபீப் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(53) அல்ஜர்ராஹ் பின் மலீஹ் அவர்கள் கூறியதாவது:ஜாபிர் பின்
யஸீத், என்னிடம் எழுபதாயிரம் ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபி (ஸல்)
அவர்களிடமிருந்து அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் பின் அலீ
அல்பாகிர்-ரஹ்) அவர்களால் அறிவிக்கப் பெற்றவையாகும்'' என்று கூறினார்.(54) ஸுஹைர்
பின் முஆவியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஜாபிர் பின் யஸீத்,என்னிடம் ஐம்பதாயிரம்
ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் எதையும் நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை'' என்று
கூறினார். பிறகு ஒரு நாள் அவர் ஒரு ஹதீஸை அறிவித்துவிட்டு,(அந்த) ஐம்பதாயிரம்
ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும்'' என்றார்.இதை அஹ்மத் பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(55) சல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஜாபிர் பின்
யஸீத் அல்ஜுஅஃபீ,என்னிடம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப் பெற்ற ஐம்பதாயிரம்
ஹதீஸ்கள் உள்ளன'' என்று கூறினார்.இதை அபுல்வலீத் ஹிஷாம் பின் அப்தில் மலிக்
அத்தயாலிஸீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.(56) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:ஒருவர் ஜாபிர் பின் யஸீதிடம்,ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி
அளிக்கும்வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது தொடர்பாகத்) தீர்ப்பளிக்கும்வரை நான்
இந்த பூமியைவிட்டு ஒருபோதும் அகலவேமாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவனே மேலானவன்''
எனும் (12:80ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கு ஜாபிர் பின் யஸீத், இந்த
வசனத்திற்குரிய விளக்கம் இன்னும் வரவில்லை'' என்று பதிலளித்தார். நான் ஜாபிர் பொய்
சொல்கிறார்'' என்று கூறினேன்.இதன் அறிவிப்பாளரான ஹுமைதீ (அப்துல்லாஹ் பின் ஸுபைர்
பின் ஈசா-ரஹ்) அவர்கள் கூறினார்கள்:நாங்கள் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்)
அவர்களிடம்,ஜாபிர் என்ன நோக்கத்தில் இவ்வாறு கூறினார்?'' என்று கேட்டோம். அதற்கு
சுஃப்யான் (ரஹ்) அவர்கள்,அலீ (ரலி) அவர்கள் மேகத்தினுள்
இருந்துகொண்டிருக்கிறார்கள். வானிலிருந்து ஒருவர் -அதாவது அலீ (ரலி) அவர்கள்-
இன்னாருடன் செல்லுங்கள்' என்று (குறிப்பிட்டுக்) கூறாதவரை நாங்கள் அவர்களுடைய
வழித்தோன்றல்களில் யாரையும் பின்தொடரமாட்டோம்' எனும் (ரஜ்ஆ') கொள்கையினை
ராஃபிளாக்கள்38 கூறிவருகின்றனர். இதுதான் அவ்வசனத்தின் பொருள் என்று ஜாபிர் பின்
யஸீதும் கூறிவருகிறார். ஆனால், இது பொய். (உண்மையில்) அவ்வசனம் (இறைத்தூதர்)
யூசுஃப் (அலை) அவர்களுடைய சகோதரரர்கள் தொடர்பாக அருளப் பெற்றதாகும்'' என்று
கூறினார்கள்.(57) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஜாபிர் பின் யஸீத்
அறிவித்த ஏறத்தாழ முப்பதாயிரம் ஹதீஸ்களை நான் செவியேற்றுள் ளேன். எனக்கு இன்ன
இன்னது (பரிசாகக்) கிடைத்தாலும் அந்த ஹதீஸ்களில் எதையும் எடுத்துரைக்க நான்
இசையமாட்டேன்.39அபூஃகஸ்ஸான் முஹம்மத் பின் அம்ர் அர்ராஸீ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:நான் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர் களிடம், நீங்கள் ஹாரிஸ் பின்
ஹஸீராவைச் சந்தித்திருக்கின்றீர்களா?''என்று கேட்டேன். அதற்கு ஜரீர் (ரஹ்)
அவர்கள்,ஆம்; அவர் நெடிய மௌனம் காக்கும் கிழவர்; அபத்தமான (ரஜ்ஆ) கொள்கையில்
பிடிவாதமாக இருப்பவர்'' என்று கூறினார்கள்.(58) ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:ஒரு நாள் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்கள், ஒரு மனிதர் குறித்து அவர்
சீரான நாவுடையவர் அல்லர்'' என்றும்,மற்றொரு மனிதர் குறித்து அவர் எண்ணிக்கையைக்
கூட்டிச் சொல்பவர்'' (ஹதீஸ் விஷயத்தில் மோசடி செய்பவர்) என்றும் கூறியதை நான்
கேட்டேன்.இதை அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(59)
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்)
அவர்கள்,எனக்கு ஓர் அண்டைவீட்டுக்காரர் இருக்கிறார்'' என்று கூறிவிட்டு, அவருடைய
சிறப்புகளில் சிலவற்றை எடுத்துக்கூறினார்கள். பிறகு என்னிடம் அவர் இரு
பேரீச்சம்பழங்களுக்காகச் சாட்சியமளிக்க முன்வந்தாலும் அவரது சாட்சியத்தை நான்
ஏற்கமாட்டேன்'' என்று கூறினார்கள்.இதை சுலைமான் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(60) மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அய்யூப்
அஸ்ஸக்தீயானீ (ரஹ்) அவர்கள் யாரைப் பற்றியும் ஒருபோதும் புறங்கூறுவதை நான்
கண்டதில்லை. ஆனால், அபூஉமய்யா அப்துல் கரீம் என்பவரைத் தவிர! அவரைப் பற்றிக்
கூறுகையில் அல்லாஹ்தான் (அவரை மன்னித்து) அவருக்கு அருள்புரிய வேண்டும். அவர்
நம்பத் தகாதவர்; இக்ரிமா (ரஹ்) அவர்கள் (எனக்கு) அறிவித்த ஒரு ஹதீஸ் குறித்து
என்னிடம் அவர் கேட்டுவிட்டு, இக்ரிமாவிடம் தாமே செவியேற்றதாக அறிவித்தார்'' என்
றார்கள்.இதை அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(61) ஹம்மாம் பின்
முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:எங்களிடம் அபூதாவூத் (நுஃபய்உ பின் அல்ஹாரிஸ்)
அல்அஃமா என்பார் வந்து பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்; ஸைத்
பின் அர்கம் (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்'' என்று ஹதீஸ்களை அறிவிக்கலானார்.
நாங்கள் இதைப் பற்றி கத்தாதா (ரஹ்) அவர்களிடம் சொன்னபோது அவர் பொய் சொல்கிறார்;
அவர் இவர்கள் எவரிடமிருந்தும் (எந்த ஹதீஸையும்) செவியுறவில்லை. அல்ஜாரிஃப்'
கொள்ளைநோய் காலத்தில் மக்களிடம் கையேந்தும் யாசகராகவே அவர் இருந்தார்'' என்று
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.40இதை அஃப்பான் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(62) ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை)
அபூதாவூத் அல்அஃமா, கத்தாதா (ரஹ்) அவர்களிடம் வந்துவிட்டு எழுந்து சென்றார்.
அப்போது (அங்கிருந்த) மக்கள்,இவர் பத்ருப் போரில் கலந்துகொண்ட பதினெட்டு
நபித்தோழர்களைத் தாம் சந்தித்ததாகக் கூறிவருகிறார்'' என்று கூறினர். அப்போது
கத்தாதா (ரஹ்) அவர்கள்,இவர் அல்ஜாரிஃப்' கொள்ளைநோய் காலத்திற்கு முன்பு (மக்களிடம்)
யாசகம் கேட்டுத் திரிந்துகொண்டிருந்தார். அவர் இந்த (ஹதீஸ்) துறையில் கவனம்
செலுத்தியதுமில்லை; அது குறித்து அவர் பேசியதுமில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!
(இவரைவிட மூத்தவர்களான) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)
ஆகியோர்கூட பத்ருப் போரில் கலந்துகொண்ட நபித்தோழர்களில் சஅத் பின் மாலிக் (ரலி)
அவர்களிடமிருந்து தவிர வேறு யாரிடமிருந்தும் நேரடியாகச் செவியுற்றதாக எமக்கு
ஹதீஸ்களை அறிவித்ததில்லை'' என்றார்கள்.இதை யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(63) ரகபா பின் மஸ்கலா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:அபூஜஅஃபர் (அப்துல்லாஹ் பின் மிஸ்வர்) அல்ஹாஷிமீ அல்மதனீ என்பவர் உண்மை
யான தகவல்கள் சிலவற்றை (நபிமொழிகள் என்ற பெயரில்) புனைந்து கூறிவந்தார்.
(உண்மையில்) அவை நபிமொழிகளாக இருக்கவில்லை. ஆனால், அவற்றை நபி (ஸல்) அவர்கள்
கூறியதாகவே அவர் அறிவித்து வந்தார்.(64) யூனுஸ் பின் உபைத் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:அம்ர் பின் உபைத் என்பார் ஹதீஸ் அறிவிப்பில் பொய்யுரைத்துவந்தார்.இதை
ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(65) முஆத் பின் முஆத் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:நான் அவ்ஃப் பின் அபீஜமீலா (ரஹ்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், யார் நமக்கெதிராக ஆயுதம் ஏந்துகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர்
அல்லர்' என்று கூறியதாக ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அம்ர் பின் உபைத்
எமக்கு அறிவித்தார்'' என்று கூறினேன். அதற்கு அவ்ஃப் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின்
மீதாணையாக! அம்ர் பொய்யுரைத்துவிட்டார்'' என்றார்கள். (ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்)
அவர்களிடமிருந்து அவர் இந்த ஹதீஸைச் செவியுறவில்லை.) மாறாக, தமது (அடிப்படையற்ற)
தீய கோட்பாட்டை நிலைநிறுத்துவதே (இந்த ஹதீஸை அறிவிப்பதன் மூலம்) அவரது
நோக்கமாகும்'' என்று கூறினார்கள்.41இதை அம்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(66) ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஒரு மனிதர்
எப்போதும் அபூபக்ர் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களுடன் இருந்து கொண்டு,
அன்னாரிடம் ஹதீஸ்களைக் கற்று வந்தார். பிறகு (சிறிது காலமாக) அந்த மனிதரைக்
காணவில்லை. அய்யூப் (ரஹ்) அவர்கள் விசாரித்தபோது மக்கள், அபூபக்ரே! இப்போது அவர்
அம்ர் பின் உபைதுடன் இருந்துகொண்டிருக்கிறார்'' என்று கூறினார்கள்.இவ்வாறிருக்க,
ஒரு நாள் காலையில் நான் அய்யூப் (ரஹ்) அவர்களுடன் அங்காடிக்குச் சென்றேன். அப்போது
அய்யூப் (ரஹ்) அவர்களை அந்த மனிதர் எதிர்கொண்டார். அவருக்கு அய்யூப் (ரஹ்) அவர்கள்
சலாம் கூறி, நலம் விசாரித்தார்கள். பிறகு, நீங்கள் (தற்போது) அந்த அம்ர் பின் உபைத்
என்பாருடன் இருப்பதாக எனக்குச் செய்தி எட்டியதே?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த
மனிதர், அபூபக்ரே! ஆம் (உண்மைதான்); அம்ர் எங்களுக்கு அபூர்வமான பல தகவல்களைச்
சொல்கிறார்'' என்று கூறினார். அதற்கு அய்யூப் (ரஹ்) அவர்கள், அந்த அபூர்வமான
தகவல்களைக் கண்டுதான் நாங்கள் வெருண்டோடுகிறோம்' அல்லது அஞ்சுகிறோம்' என்று
கூறினார்கள்.இதை உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(67)
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்)
அவர்களிடம், பேரீச்சம்பழச் சாற்றில் தயாரிக்கப்பட்ட மதுவால் போதை உண்டானவனுக்குச்
சாட்டையடி தண்டனை வழங்கப்படாது என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அம்ர் பின்
உபைத் அறிவிக்கிறாரே?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அய்யூப் (ரஹ்) அவர்கள்,அம்ர்
பொய்யுரைக்கிறார். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் பேரீச்சம்பழச் சாற்றில் தயாரான
மதுவால் போதை ஏற்பட்டவனுக்குச் சாட்டையடி தண்டனை அளிக்கப்படும்' என்று கூறியதை நான்
செவியேற்றுள்ளேன்'' என்று சொன்னார்கள்இதை சுலைமான் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(68) சல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் அம்ர்
பின் உபைதிடம் சென்றுவரும் தகவல் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களுக்கு எட்டியது.
இந்நிலையில், ஒரு நாள் அய்யூப் (ரஹ்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது
ஒருவரை அவரது மார்க்க நம்பிக்கையில் நீங்கள் நம்பாமலிருக்க, அவருடைய ஹதீஸ்களை
மட்டும் நீங்கள் நம்புவீர்களா, என்ன?'' என்று கேள்வி எழுப்பினார்கள்.இதை சுலைமான்
பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(69) அபூமூசா இஸ்ராயீல் பின் மூசா (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:அம்ர் பின் உபைத் (முஅதஸிலாக்களின்) மாறுபட்ட சிந்தனைகளை
வெளியிடுவதற்கு முன் எங்களுக்கு ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.இதை சுஃப்யான் பின் உயைனா
(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(70) முஆத் பின் முஆத் பின் நஸ்ர் அல் அம்பரீ (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:நான் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களுக்கு வாசித்' நகரின்
நீதிபதியான இப்ராஹீம் அபூஷைபா குறித்து (அவரிடமி ருந்து ஹதீஸ்களை அறிவிக்கலாமா?'
என்று) கேட்டு கடிதம் எழுதினேன். அதற்கு ஷுஅபா (ரஹ்) அவர்கள் அவரிடமிருந்து எந்த
ஹதீஸை யும் நீங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டாம்! (படித்ததும்) எனது இக்கடிதத்தைக்
கிழித்து விடுக'' என்று எனக்கு பதில் கடிதம் எழுதி னார்கள்.இதை உபைதுல்லாஹ் பின்
முஆத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(71) அஃப்பான் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:நான் ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், ஸாபித் அவர்களிடமிருந்து
சாலிஹ் பின் பஷீர் அல்முர்ரீ அறிவித்த ஹதீஸ் ஒன்றைக் கூறினேன். அப்போது ஹம்மாத்
(ரஹ்) அவர்கள்,சாலிஹ் பொய்யுரைத்துவிட்டார்'' என்று கூறினார்கள்.(இதைப் போன்றே)
நான் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களிடம், சாலிஹ் அல்முர்ரீ அறிவித்த மற்றோர்
ஹதீஸை எடுத்துரைத்தபோது அவர்களும் சாலிஹ் பொய்யுரைத்துவிட்டார்'' என்றே
கூறினார்கள்.இதை ஹசன் பின் அலீ அல்ஹுல்வானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(72)
அபூதாவூத் சுலைமான் பின் தாவூத் அத்தயாலிசீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:என்னிடம்
ஷுஅபா (ரஹ்) அவர்கள், நீங்கள் ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்களிடம் சென்று ஹசன் பின்
உமாரா அறிவிக்கும் ஹதீஸ்களை அறிவிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதன்று. ஏனெனில்,
அவர் பொய்யுரைக்கிறார்''என்று சொல்லுங்கள் என்றார்கள்.நான், ஏன் இவ்வாறு
கூறுகின்றீர்கள்?'' என்று ஷுஅபா (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ஹசன்
பின் உமாரா, ஹகம் பின் உதைபா அல்கிந்தீ (ரஹ்) அவர்களிடமிருந்து சில ஹதீஸ்களை
அறிவித்தார். ஆனால், அவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை'' என்று சொன்னார்கள். நான்,
எந்தெந்த ஹதீஸ்களை (உமாரா அறிவித்தார்)?'' என்று கேட்டேன். அதற்கு ஷுஅபா (ரஹ்)
அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:நான் ஹகம் அவர்களிடம், உஹுத் போரில் கொல்லப்பட்ட
உயிர் தியாகிகளுக்காக நபி (ஸல்) அவர்கள் (இறுதித்தொழுகை-ஜனாஸாத் தொழுகை')
தொழுவித்தார்களா?'' என்று கேட்டேன். அதற்கு ஹகம் அவர்கள்,அவர்களுக்காக நபி (ஸல்)
அவர்கள் தொழவைக்கவில்லை'' என்று பதிலளித்தார்கள். ஆனால், இந்த ஹசன் பின் உமாராவோ,
நபி (ஸல்) அவர்கள் உஹுத் போர் உயிர் தியாகிகளுக்காக ஜனாஸாத் தொழுகை தொழுவித்து
அடக்கமும் செய்தார்கள்'' என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மிக்சம் (ரஹ்)
அவர்கள் அறிவித்ததாக ஹகம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை (புனைந்து)
அறிவித்தார்.(இதைப் போன்றே) நான் ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்களிடம் விபசாரத்தில்
பிறந்த குழந்தைகள் தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள் (அவை இறந்துவிட்டால்
அவற்றுக்காகத் தொழவைக்கப்படுமா)?'' என்று கேட்டேன். அதற்கு ஹகம் (ரஹ்) அவர்கள்,
(ஆம்;) அவற்றுக்காகத் தொழவைக்கப்படும்'' என்று பதிலளித்தார்கள். எந்த அறிவிப்பாளர்
வழியாக வரும் ஹதீஸிலிருந்து (இவ்வாறு கூறுகின்றீர்கள்)?'' என்று கேட்டேன். அதற்கு
ஹகம் (ரஹ்) அவர்கள்,ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஹதீஸில் இவ்வாறு
அறிவிக்கப்படுகிறது'' என்று பதிலளித்தார்கள். ஆனால், இந்த ஹசன் பின் உமாராவோ,
தமக்கு ஹகம் அவர்களும், ஹகம் அவர்களுக்கு யஹ்யா பின் அல்ஜஸ்ஸார் அவர்களும், யஹ்யா
அவர்களுக்கு அலீ (ரலி) அவர்களும் அறிவித்ததாகக் கூறினார். (இதனால்தான் ஹசன் பின்
உமாரா பொய்யுரைக்கிறார் என்று நான் குறிப்பிட்டேன் என்றார்கள் ஷுஅபா (ரஹ்)
அவர்கள்.)(73) ஹசன் பின் அலீ அல்ஹுல்வானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:யஸீத் பின்
ஹாரூன் (ரஹ்) அவர்கள் ஸியாத் பின் மைமூன் என்பவர் குறித்துக் கூறுகையில், நான்
அவரிடமிருந்தும் காலித் பின் மஹ்தூஜ் என்பவரிடமிருந்தும் எந்த ஹதீஸையும் அறிவிக்க
மாட்டேன் எனச் சத்தியம் செய்துள்ளேன்''என்று கூறிவிட்டுப் பின்வருமாறும்
கூறினார்கள்:நான் ஸியாத் பின் மைமூன் என்பவரைச் சந்தித்து ஒரு ஹதீஸ் குறித்து (அதை
உங்களுக்கு அறிவித்தவர் யார் என்று) கேட்டேன். அதற்கு ஸியாத், பக்ர் பின்
அப்தில்லாஹ் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்'' என்று கூறினார். மற்றொரு முறை
அவரைச் சந்தித்தபோது முவர்ரிக் பின் அல்முஷம்ரிஜ் (ரஹ்) அவர்கள்
அறிவித்தார்கள்''என்று கூறினார். பின்னர் இன்னொரு முறை அவரைச் சந்தித்தபோது ஹசன்
அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்''என்றார்.ஹசன் அல்ஹுல்வானீ (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்:(ஸியாத் பின் மைமூன், காலித் பின் மஹ்தூஜ் ஆகிய) அவ்விருவரையும்
பொய்யர்கள் என யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்கள் கூறிவந்தார்கள். நான், அப்துஸ் ஸமத்
(ரஹ்) அவர்களிடம் (ஹதீஸ்களை) செவியேற்றுக்கொண்டிருந்தேன். ஸியாத் பின் மைமூன் பற்றி
நான் குறிப்பிட்டபோது, அப்துஸ் ஸமத் (ரஹ்) அவர்களும் அவரைப் பொய்யர் என்றே
கூறினார்கள்.(74) மஹ்மூத் பின் ஃகைலான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் அபூதாவூத்
அத்தயாலிசீ (ரஹ்) அவர்களிடம், நீங்கள் அப்பாத் பின் மன்ஸூரிடமிருந்து அதிகமான
ஹதீஸ்களை அறிவித்துள்ளீர்கள். ஆனால், அவரிடமிருந்து வாசனைப் பொருள் வியாபாரியான
(ஹவ்லா எனும்) பெண்ணின் ஹதீஸை நீங்கள் ஏன் அறிவிக்கவில்லை? அந்த ஹதீஸை நள்ர் பின்
ஷுமைல் எங்களுக்கு அறிவித்துள்ளாரே!''42என்று கேட்டேன். அதற்கு அபூதாவூத்
அத்தயாலிசீ (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: அமைதியாக இருங்கள்! நானும் அப்துர்
ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களும் ஸியாத் பின் மைமூனைச் சந்தித்து (இந்த ஹதீஸ்
குறித்து)க் கேட்டோம். (அவர்தாம் ஹவ்லா தொடர்பான இந்த ஹதீஸை அனஸ் (ரலி)
அவர்களிடமிருந்து அறிவித்தவர்.) அப்போது நாங்கள் இந்த ஹதீஸ்களை நீங்கள் அனஸ் (ரலி)
அவர்களிடமிருந்தா அறிவிக்கிறீர்கள்?'' என்று கேட்டோம். அதற்கு ஸியாத், பாவம் செய்த
ஒருவர் பின்னர் வருந்தித் திருந்திவிட்டால் அவருடைய பாவத்தை அல்லாஹ் மன்னிக்க
மாட்டானா என்ன, சொல்லுங்கள்?'' என்று கேட்டார். நாங்கள், ஆம் (மன்னிப்பான்)'
என்றோம். ஸியாத்,இவற்றிலிருந்து எந்த ஒரு சிறிய மற்றும் பெரிய ஹதீஸையும் நான் அனஸ்
(ரலி) அவர்களிடமிருந்து செவியுறவுமில்லை; அனஸ் (ரலி) அவர்களை நான் சந்திக்கவும்
இல்லை என்பது பொதுமக்களுக்குத்தான் தெரியாது! உங்கள் இருவருக்குமா
தெரிந்திருக்கவில்லை?'' என்று கேட்டார்.பின்னர் ஸியாத் (அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாக ஹதீஸ்களை) அறிவித்துவருகிறார் என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. உடனே
நானும் அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களும் அவரிடம் சென்றோம். அப்போது
அவர்,நான் பாவமன்னிப்புக் கோருகிறேன்'' என்று கூறினார். பிறகு (பழையபடியே) அவர்
ஹதீஸ்களை அறிவிக்கவே அவரை நாங்கள் (அடியோடு) கைவிட்டோம்.(75) அபூஅம்ர் ஷபாபா பின்
சவார் அல்ஃபஸாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அப்துல் குத்தூஸ் பின் ஹபீப் அத்திமஷ்கீ
என்பவர் எங்களுக்கு ஹதீஸ்களை அறிவிப்பார். அப்போது (சுவைத் பின் ஃகஃபலா' எனும் ஓர்
அறிவிப்பாளரின் பெயரை) சுவைத் பின் அகலா என்று (மாற்றிக்) கூறுவார். மேலும் அப்துல்
குத்தூஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காற்றுக்காக (அர்ரவ்ஹ்) இலக்கு (அர்ள்)
ஏற்படுத்துவற்குத் தடை விதித்தார்கள்'' என்று கூறுவதை நான் செவியுற்றேன். அப்போது
அவரிடம், இதற்கு என்ன பொருள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், காற்று
வருவதற்காகச் சுவரில் துளை ஏற்படுத்துவதாகும்'' என்று (ஹதீஸின் மூல வார்த்தைகளைச்
சிதைத்து அநர்த்தமாகக்) கூறினார்.43உபைதுல்லாஹ் பின் உமர் அல்கவாரீரீ (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்:மஹ்தீ பின் ஹிலால் என்பார் (ஹதீஸ்களை அறிவிப்பதற்காக) அமர்ந்த சில
நாட்களுக்குப் பின்னால், (அவரிடம் ஹதீஸ்களைக் கேட்ட) ஒரு மனிதரிடம் அபூஇஸ்மாயீல்
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் என்ன உங்கள் திசையிலிருந்து (பொய் எனும்) உவர்ப்பு
நீரூற்று கொப்பளிக்கிறதே!'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ஆம் (உண்மைதான்),
அபூஇஸ்மாயீலே!'' என்று பதிலளித்தார்கள்.44(76) அபூஅவானா அல்வள்ளாஹ் பின்
அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து
எனக்குக் கிடைக்கப்பெறாத ஹதீஸ்களையெல்லாம் நான் அபான் பின் அபீஅய்யாஷிடம்
செல்லும்போது அவர் எனக்கு வாசித்துக் காட்டாமல் இருந்ததில்லை.45இதை அஃப்பான் பின்
முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(77) அலீ பின் முஸ்ஹிர் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:நானும் ஹம்ஸா அஸ்ஸய்யாத் அவர்களும் அபான் பின் அபீஅய்யாஷிடமிருந்து
ஏறத்தாழ ஓராயிரம் ஹதீஸ்களைச் செவியுற்றிருக்கிறோம். பின்னர் நான் ஹம்ஸா அஸ்ஸய்யாத்
அவர் களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன்.
நான் அபானிடமிருந்து செவியுற்ற ஹதீஸ்களை நபியவர்களிடம் எடுத்துரைத்தேன். அவற்றில்
ஐந்து அல்லது ஆறு ஹதீஸ்களைத்தான் நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்'' என்று
கூறினார்கள்.46(78) ஸகரிய்யாஉ பின் அதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:என்னிடம்
அபூஇஸ்ஹாக் (இப்ராஹீம் பின் முஹம்மத் பின் அல்ஹாரிஸ்) அல்ஃபஸாரீ (ரஹ்)
அவர்கள்,பகிய்யா பின் அல்வலீத் (எனும் அறிவிப்பாளர்), பிரபல அறிவிப்பாளர்களிடமி
ருந்து அறிவிக்கும் ஹதீஸ்களை எழுதிக் கொள்ளுங்கள்; பிரபலமற்ற
அறிவிப்பாளர்களிடமிருந்து அவர் அறிவிப்பதை எழுதாதீர்கள்.47 இஸ்மாயீல் பின் அய்யாஷ்
(எனும் அறிவிப்பாளர்), பிரபல அறிவிப்பாளர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும்
அறிவிக்கும் எந்த ஹதீஸ்களையும் எழுதாதீர்கள்'' என்று கூறினார்கள்.48இதை அப்துல்லாஹ்
பின் அப்துர் ரஹ்மான் அத்தாரிமீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(79) அப்துல்லாஹ்
பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:பகிய்யா பின் அல்வலீத் நல்ல மனிதர்தாம்.
எனினும், அவர் அறிவிப்பாளர்களின் சொந்தப் பெயர்களை(க் குறிப்பிட வேண்டிய இடத்தில்
அவற்றை)க் குறிப்பிடாமல் குறிப்புப் பெயர்களையும், குறிப்புப் பெயர்களை(க்
குறிப்பிட வேண்டிய இடத்தில் அவற்றை)க் குறிப்பிடாமல் சொந்தப் பெயர்களையும்
குறிப்பிட்டுவந்தார். (இதனால் குழப்பம் நேர்ந்தது.) நீண்ட நாட்களாக அவர் அபூசயீத்
அல்வுஹாழீ எனும் (குறிப்புப் பெயருடைய) ஓர் அறிவிப்பாளரிடமிருந்து ஹதீஸ்களை
அறிவித்துவந்தார். நாங்கள் (அவரது இயற்பெயர் என்னவென்று) ஆராய்ந்த போது அவர்
அப்துல் குத்தூஸ் என்ற (பலவீனமான) அறிவிப்பாளர்தாம் எனத் தெரிந்து கொண்டோம்.(80)
அப்துர் ரஸ்ஸாக் பின் ஹுமாம் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அப்துல்லாஹ்
பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் யாரைப் பற்றியும் அவர் பொய்யர்' என்று
வெளிப்படையாகக் கூறுவதை நான் கேட்டதில்லை. அப்துல் குத்தூஸைப் பற்றி அவர் பொய்யர்'
என்று அன்னார் கூறியதை நான் கேட்டுள்ளேன்.49(81) அபூநுஐம் அல்ஃபள்ல் பின் துகைன்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:என்னிடம் அல்முஅல்லா பின் உர்ஃபான் என்பார் ஸிஃப்பீன்
போரின்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்...'' என்று
(தொடங்கும் ஒரு ஹதீஸை) எங்களுக்கு அபூவாயில் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்''
என்றார். உடனே நான், இறந்துபோன அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
மண்ணறையிலிருந்து எழுந்தா (ஸிஃப்பீனுக்கு) போனார்கள்?'' என்று கேட்டேன்.50(82)
அஃப்பான் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நாங்கள் இஸ்மாயீல் பின் உலய்யா
(ரஹ்) அவர்களிடம் இருந்தோம். அப்போது (அங்கிருந்த) ஒருவர் மற்றொருவரிடமிருந்து
(அவர் கூறியதாக) ஒரு ஹதீஸை அறிவித்தார். உடனே நான், அவர் நம்பிக்கைக்குரியவர்
அல்லர்'' என்று சொன்னேன். உடனே அந்த நபர்,நீங்கள் அவரைக் குறித்துப் புறம்
பேசிவிட்டீர்கள்'' என்றார். அப்போது இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர்கள்,அவரைக்
குறித்து இவர் புறம் பேசவில்லை; அவர் நம்பத் தகுந்தவர் அல்லர் என்று
தீர்ப்பளித்தார் (அவ்வளவுதான்)'' என்று கூறினார்கள்.இந்தத் தகவல் இரு
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.(83) பிஷ்ர் பின் உமர் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)
அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கும் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் என்பவரைப்
பற்றிக் கேட்டேன். மாலிக் (ரஹ்) அவர்கள், அவர் நம்பத் தகுந்தவர் அல்லர்'' என்று
கூறி னார்கள். அவர்களிடம், (உமய்யா பின் கலஃபின் புதல்வியான) தவ்அமா அவர்களின்
முன்னாள் அடிமையான ஸாலிஹ் என்பாரைப் பற்றிக் கேட்டேன். அவரும் நம்பத் தகுந்தவர்
அல்லர்'' என்று சொன்னார்கள். அபுல் ஹுவைரிஸ் அப்துர் ரஹ்மான் பின் முஆவியா
என்பவரைப் பற்றிக் கேட்டதற்கு, அவரும் நம்பத் தகுந்தவர் அல்லர்'' என்றார்கள். இப்னு
அபீதிஉப் (முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான்) அவர் களுக்கு ஹதீஸ்களை அறிவித்த ஷுஅபா
பின் தீனார் அல்குறஷீ பற்றிக் கேட்டபோது அவரும் நம்பத் தகுந்தவர் அல்லர்'' என்று
கூறினார்கள். ஹராம் பின் உஸ்மான் என்பவர் பற்றிக் கேட்ட போது அவரும் நம்பத்
தகுந்தவர் அல்லர்'' என்றார்கள்.இந்த ஐந்து அறிவிப்பாளர்களைப் பற்றியும் நான் மாலிக்
(ரஹ்) அவர்களிடம் வினவியபோது இவர்கள் ஐவரும் தங்களுடைய ஹதீஸ் அறிவிப்புகளில் நம்பத்
தகுந்தவர் அல்லர்'' என்றே கூறினார்கள். மற்றொருவரைப் பற்றி அவர்களிடம் கேட்டேன்.
-அவரது பெயரை மறந்துவிட்டேன்- அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள், இவரது பெயரை என் ஹதீஸ்
பதிவேடுகளில் நீர் கண்டுள்ளீரா?'' என்று கேட்டார்கள். நான் இல்லை' என்றேன். மாலிக்
(ரஹ்) அவர்கள், அவர் நம்பத் தகுந்தவராக இருந்திருந்தால் நிச்சயமாக அவரது பெயரை என்
ஹதீஸ் பதிவேடுகளில் பார்த்திருப்பீர்'' என்று சொன்னார்கள்.இதை அபூஜஅஃபர் அஹ்மத்
பின் சயீத் அத்தாரிமீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(84) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப்
பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:இப்னு அபீதிஉப் (ரஹ்) அவர்கள் ஷுரஹ்பீல்
பின் சஅத் என்பவரிடமிருந்து ஹதீஸ் அறிவித்தார்கள். ஷுரஹ்பீல்
சந்தேகத்திற்குரியவராகக் கருதப்பட்டார்.இதை யஹ்யா பின் முயீன் (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.(85) அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:நீங்கள் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்களா, அல்லது (அதற்கு முன்)
அப்துல்லாஹ் பின் அல்முஹர்ரர் அவர்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா? என்று
என்னிடம் கேட்கப்பட்டால், (முதலில்) அவரைச் சந்தித்துவிட்டுப் பின்னர் சொர்க்கம்
செல்ல விரும்புகிறேன் என்றே சொல்லிலியிருப்பேன். (அந்த அளவுக்கு அவர்மீது நான்
மதிப்பு வைத்திருந்தேன்.) பின்னர் (அவர் ஒரு பொய்யர் என) அவரை நான் (இனம்)
கண்டபோது, அவரைவிடக் கெட்டிச் சாணம் எவ்வளவோ பரவாயில்லை என்று எனக்குப் பட்டது.இதை
அபூஇஸ்ஹாக் அத்தாலகானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(86) உபைதுல்லாஹ் பின் அம்ர்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஸைத் பின் அபீஉனைஸா (ரஹ்) அவர்கள், என் சகோதரர் (யஹ்யா
பின் அபீஉனைஸா) இடமிருந்து எதையும் அறிவிக்காதீர்கள்'' என்று கூறினார்கள்.இதை வலீத்
பின் ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(87) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் அர்ரக்கீ
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:யஹ்யா பின் அபீஉனைஸா ஒரு பொய்யர் ஆவார் என உபைதுல்லாஹ்
பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.51இதை அப்துஸ் ஸலாம் பின் அப்திர் ரஹ்மான்
அல்வாபிஸீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(88) ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர் களிடம் ஃபர்கத் பின் யஅகூப் அஸ்ஸப்கீ
அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அய்யூப் (ரஹ்) அவர்கள் அவர் நபிமொழித்
துறையைச் சேர்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.இதை சுலைமான் பின் ஹர்ப் (ரஹ்)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.(89) அப்துர் ரஹ்மான் பின் பிஷ்ர் அல்அப்தீ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களிடம் முஹம்மத் பின்
அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் அல்லைஸீ என்பவரைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது
யஹ்யா (ரஹ்) அவர்கள், அவர் மிகவும் பலவீனமான அறிவிப்பாளர்'' என்று கூறினார்கள்.
உடனே யஹ்யா (ரஹ்) அவர்களிடம், இவர் யஅகூப் பின் அதாஉ என்பவரைவிட மிகவும் பலவீனமான
அறிவிப்பாளரா?'' என்று வினவப்பட்டது. அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள், ஆம்' என்றார்கள்.
பிறகு,முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் உபைத் பின் உமைரிடமிருந்து எவரும் ஹதீஸ்
அறிவிப்பார் என்பதை என்னால் எண்ணியும் பார்க்க முடியவில்லை'' என்று
கூறினார்கள்.(90) பிஷ்ர் பின் அல்ஹகம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:யஹ்யா பின் சயீத்
அல்கத்தான் (ரஹ்) அவர்கள் ஹகீம் பின் ஜுபைர், அப்துல் அஃலா மற்றும் யஹ்யா பின் மூசா
பின் தீனார் ஆகியோர் பலவீனமான அறிவிப்பாளர்கள் என்று கூறினார்கள். மேலும் யஹ்யா
பின் மூசாவின் அறிவிப்புகள் காற்று (போல வந்த வேகத்தில் மறையக்கூடியவை)தாம்''
என்றும் தெரிவித் தார்கள். மேலும் மூசா பின் திஹ்கான், ஈசா பின் அபீஈசா அல்மதனீ
ஆகியோரும் பலவீனமான வர்கள் என்று அன்னார் கூறினார்கள்.யஹ்யா பின் சயீத் அல்கத்தான்
(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:ஹசன் பின் ஈசா (ரஹ்) அவர்கள் பின்வரு மாறு கூறியதை நான்
செவிமடுத்துள்ளேன்: என்னிடம் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள்,நீங்கள்
ஜரீரிடம் சென்றால் அவரிடமுள்ள அனைத்து ஹதீஸ்களையும் எழுதிக்கொள்ளுங்கள்; ஆனால்,
மூவர் அறிவித்த ஹதீஸ்களைத் தவிர. உபைதா பின் முஅத்திப், சரிய்யீ பின் இஸ்மாயீல்,
முஹம்மத் பின் சாலிம் ஆகியோரே அம்மூவரும்'' என்றார்கள்.52அபுல்ஹுசைன் முஸ்லிம் பின்
அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகிறேன்:சந்தேகத்திற்குரிய அறிவிப்பாளர்கள் குறித்தும்,
அவர்களுடைய குறைகள் குறித்தும் (நபிமொழி) அறிஞர்கள் குறிப்பிட்டுள்ள இதைப் போன்ற
தகவல்கள் ஏராளம் உள்ளன. அவற்றையெல்லாம் முழுமையாகக் குறிப்பிட இந்த ஏடு போதாது.
நாம் இதுவரை எடுத்துரைத்த தகவல்கள் இந்த விஷயத்தில் நபிமொழி அறிஞர்களின் கோட்பாடு
என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புவோருக்குப் போதுமானவை ஆகும்.நபிமொழி
அறிவிப்பாளர்களிடம் காணப்பட்ட குறைகளை எடுத்துரைப்பதையும், தங்களிடம்
வினவப்பட்டபோது அவற்றைத் தெளிவாகக் கூறுவதையும் நபிமொழி அறிஞர்கள் கட்டாயமாக்கிக்
கொண்டதற்குக் காரணமே, அ(வற்றை மறைப்ப)தில் உள்ள மாபெரும் கேடுதான். ஆம்! மார்க்கச்
செய்தி என்பதே அனுமதிக்கப்பட்டது (ஹலால்), தடை செய்யப்பட்டது (ஹராம்), செய்யத்
தூண்டுவது (அம்ர்), தடுப்பது (நஹ்யு), ஆவலூட்டுவது (தர்ஃகீப்), எச்சரிப்பது
(தர்ஹீப்) ஆகியவற்றில் ஒன்றாகத்தான் இருக்கும். இந்நிலையில் மார்க்கச் செய்திகளை
அறிவிப்பவர் உண்மைக்கும் நம்பகத் தன்மைக்கும் எடுத்துக்காட்டாக இல்லாமலிருந்தால்
நிலைமை என்னவாகும்? அவரைப் பற்றித் தெரிந்த ஒருவர் அவரிடமிருந்து மார்க்கச்
செய்திகளை அறிவிக்கப்போய், அவரிடமுள்ள குறைகளை விவரம் தெரியாத மக்களிடம் மறைத்தால்,
அது பாவம் மட்டுமல்ல; முஸ்லிம் பொதுமக்களுக்குச் செய்யும் துரோகமும் ஆகும்.ஏனெனில்,
அச்செய்திகள் அனைத்துமோ பெரும்பாலானவையோ அடிப்படையற்ற பொய்யான தகவல்களாக
இருக்க,அவற்றைக் கேட்கும் சிலர் அப்படியே அவற்றைச் செயல் படுத்திவிடலாம்; அல்லது
சிலவற்றையாவது செயல்படுத்திவிடலாம். அதே நேரத்தில், நம்பத் தகுந்த, திருப்தி
தருகின்ற அறிவிப்பாளர்கள் வாயிலாகக் கிடைத்துள்ள சரியான தகவல்கள் ஏராளம் உள்ளன.
அப்படியிருக்க, நம்பத் தகாத, திருப்திகொள்ள முடியாத அறிவிப்பாளர்களின்
செய்திகளுக்கு என்ன அவசியம் நேர்ந்தது?பலவீனமான ஹதீஸ்களையும் அடையாளம் தெரியாத
அறிவிப்பாளர்தொடர்களையும் தெரிந்துகொண்டே அறிவிப்பதில் சிலர் முனைப்புக்
காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பொதுமக்களிடம் தங்களை அதிக
அறிவுபடைத்தவர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் என்றே
கருதுகிறேன். இன்னார் எத்துணை எத்துணை ஹதீஸ்களை அறிந்துள்ளார்; ஏராளமான ஹதீஸ்களைத்
திரட்டியுள்ளார் என்று (சிலாகித்துக்) கூறப்பட வேண்டும் என்பதே அவர்களின் இந்த
அறிவிப்புகளுக்குக் காரணம்.(ஹதீஸ் எனும்) கல்வித் துறையில் இந்தப் பாதையைத்
தேர்ந்தெடுத்துக்கொண்ட எவருக்கும் விமோசனமே கிடையாது. இவர்களை அறிஞர்கள்' என்று
குறிப்பிடுவதைவிட முட்டாள்கள்' என்று கூறுவதே பொருத்தமாயிருக்கும்.
பாடம் : 6"அல்முஅன்அன்' ஹதீஸை ஆதாரமாக ஏற்கலாம்.53இன்று தம்மை நபிமொழியியலார் என்று
சொல்லிக்கொள்கின்ற சிலர், சரியான அறிவிப் பாளர்தொடர் எது, சரியில்லாத அறிவிப்பாளர்
தொடர் எது? என்பது தொடர்பாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளனர். அதை எடுத்துரைக்காமலும்
அதிலுள்ள தவறைச் சுட்டிக்காட்டாமலும் விட்டுவிடுவதே சரியான முடிவாக இருக்கும்.
ஏனெனில், கைவிடப்பட வேண்டிய ஒரு கருத்தை அடியோடு சாய்ப்பதற்கும் அந்தக்
கருத்தாளரைப் பற்றிய நினைவை முற்றாக ஒழிப்பதற்கும் சிறந்த வழி என்னவென்றால், அந்தக்
கருத்தை(க் கண்டு கொள்ளாமல்) அலட்சியப்படுத்துவதுதான். அறியா மக்களுக்கு அதை
அறிமுகப்படுத்திவிடாமல் இருப்பதற்கும் அதுவே ஏற்றதாகும். இருப்பினும், பின்விளைவு
களை யோசித்தும்,அறியா மக்கள் புதிய கருத்துகளைக் கண்டு ஏமாந்து, அறிஞர்களால்
புறக்கணிக்கப்பட்ட தவறான கொள்கைகளையும் கூட விரைந்து ஏற்றுவிடுவர் என்பதை அஞ்சியும்
அந்தச் சிலரது தவறான கருத்தை விவரிப்பதே பொதுமக்களுக்கு நல்லது என்று கருதினோம்;
அந்தத் தவறான கருத்துக்கு, உரிய முறையில் பதிலளிப்பது எதிர்காலத்திற்குச்
சிறந்ததாகும் என்ற முடிவுக்கு வந்தோம்.இனி, அந்தச் சிலரது தவறான சிந்தனை என்னவென்று
பார்ப்போம்: ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் "இன்னார் குறித்து இன்னார்
அறிவித்தார்'' என்று கூறப்பட்டிருந்தால் அதை ஆதாரமாக ஏற்பதற்குச் சில நிபந்தனைகள்
உண்டு. அதாவது அவ்விரு அறிவிப்பாளர்களும் தம் வாழ்நாளில் ஓரிரு முறையாவது
சந்தித்துக்கொண்டார்கள் என நாம் அறிந்திருக்க வேண்டும். அல்லது ஒருவரிடமிருந்து
மற்றவர் நேரடியாக ஹதீஸைக் கேட்டிருக்க வேண்டும். அல்லது ஒரு தடவையோ பல தடவைகளோ
சந்தித்தார்கள் என்ற செய்தி வேறு அறிவிப்புகளிலாவது வந்திருக்க வேண்டும். இதை
விடுத்து, இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தார்கள் என்பதாலோ, அவரிடமிருந்து இவர்
நேரடியாகக் கேட்டிருக்க வாய்ப்புண்டு என்பதாலோ மட்டும் அந்த அறிவிப்பை ஏற்க
முடியாது. இருவரும் சந்தித்தார்கள்; ஒருவரிடமிருந்து மற்றவர் நேரடியாகச்
செவியேற்றார் என்று உறுதியாகத் தெரியாதவரை இத்தகைய அறிவிப்புகள் ஏற்புக்குரியவை
அல்ல. இத்தகைய அறிவிப்புகள் கிடைத்தால் அவற்றை நிறுத்திவைத்துவிட்டு,
ஒருவரிடமிருந்து மற்றவர் சிறிதளவோ அதிக அளவோ செவியேற்றார் என்பதற்கு வேறு சான்று
கிடைக்கும்போது அவற்றை ஆதாரமாக ஏற்கலாம்;இல்லையேல் கூடாது.அல்லாஹ் உங்களுக்கு
அருள்புரிவானாக!அறிவிப்பாளர்தொடர்களில் இத்தகைய குறைகாணும் இவர்களது கூற்று
(அடிப்படை யற்ற) கற்பனையாகும். இதற்கு முன்பும் சரி; இப்போதும் சரி;
கல்வியாளர்களின் ஆதரவு இக்கூற்றுக்குக் கிடையாது. அன்றும் இன்றும் ஹதீஸ்களையும்
அறிவிப்புகளையும் அறிந்துள்ள கல்வியாளரிடையே பரவலான ஏகோபித்த கருத்து
இதுதான்:அதாவது நம்பத் தகுந்த அறிவிப்பாளர் ஒருவர் தம்மைப் போன்ற மற்றோர் அறிவிப்
பாளரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இருவரும்
ஒரே காலத்தில் வாழ்ந்து ஒருவர் மற்றவரை நேரடியாகச் சந்தித்து உரையாடியி ருக்க
வாய்ப்பு உண்டு என்றிருந்தாலே, அந்த அறிவிப்பை ஏற்கலாம்; அது கட்டாயம் ஆதாரமாகும்.
இருவரும் சந்தித்துப் பேசினர் என்பதற்கு எந்தத் தகவலும் கிடைக்காவிட்டாலும்
சரிதான். ஆனால்,இருவரும் சந்திக்கவில்லை என்பதற்கோ, ஒருவரிடமிருந்து மற்றவர்
எதையும் செவியேற்கவில்லை என்பதற்கோ தெளிவான சான்று இருப்பின் அப்போது அந்த
அறிவிப்பை ஏற்க முடியாது. இந்தத் தெளிவு ஏற்படாதவரை நாம் விவரித்த சாத்தியக்கூற்றை
வைத்து செவியேற்றதாக எடுத்துக்கொள்ளப்படும்.(அறிவிப்பாளர் இருவரும் ஒரேகாலத்தில்
வாழ்ந்திருந்தாலும் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்திருக்க வேண்டும் என்பது
பற்றிய) இக்கருத்தை வெளியிட்ட அந்தச் சிலரிடமும் அவர்களுடைய ஆதரவாளர்களிடமும் நாம்
ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்:"நம்பத் தகுந்த அறிவிப்பாளர் ஒருவர் நம்பத்
தகுந்த மற்றோர் அறிவிப்பாளரிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் ஆதாரபூர்வமானது; அதன்படி
செயல்படுவது கடமை'' என நீங்களே சொல்லிவிட்டுப் பிறகு நீங்களே "அவ்விரு
அறிவிப்பாளர்களும் ஒரு தடவையோ, பல தடவைகளோ நேரடியாகச் சந்தித்திருக்கிறார்கள்;
அல்லது ஒருவரிடமிருந்து மற்றவர் செவியேற் றிருக்கிறார் என்பது தெளிவாகாதவரை அவ்விரு
அறிவிப்பாளர் வழியாக வந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளமாட்டோம்'' என்றொரு  நிபந்தனையை
இணைத்துக்கொள்கிறீர்களே! (இது முறையா?) இந்நிபந்தனையை முன்னோடியான வேறு யாரும்
விதித்துள்ளார்களா? அப்படி விதித்திருந் தால் எங்கே அதற்கான சான்றைக் கொண்டு
வாருங்கள் பார்ப்போம்!முந்தைய அறிஞர்களில் சிலர் இவ்வாறு நிபந்தனை
விதித்திருந்தார்கள் என்று நீங்கள் கூறினால் எங்கே அவர்களுடைய பெயர்களைக் கூறுங்கள்
என்று கேட்போம். அதற்கு அவர் களாலோ மற்றவர்களாலோ எந்த பதிலும் அளிக்க முடியாது.
அப்படியே ஏதேனும் ஒன்றைக் கொண்டுவந்தால்கூட "இதில் எங்கே உங்களுக்கு ஆதாரம்
உள்ளது?''என்று கேட்போம்.அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளிக்கலாம்: அன்றும்
இன்றும் நபிமொழி அறிவிப்பாளர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களில் ஒருவர்
மற்றொருவரை நேரில் பார்த்திராமலும், ஒருவரிடமிருந்து மற்றொருவர் எதையும்
செவியேற்றிராமலும் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவ்வாறு செவியுறாமல், அறிவிப்பாளர்
ஒருவர் தமக்கு அறிவித்தவரின் பெயரைக் குறிப்பிடாமல் (முர்சலாக) ஹதீஸ்களை அறிவிப்பதை
அவர்கள் அனுமதித்துள்ளார்கள். ஆனால், இடையே அறிவிப்பாளர் பெயர் விடுபட்ட இத்தகைய
(முர்சலான) ஹதீஸ் நம்மிடமும் நபிமொழி அறிஞர்களிடமும் ஆதாரம் ஆகாது. (பெயர்
குறிப்பிடப்படாத அறிவிப்பாளர் யார், அவரிடம் மற்றவர் செவியேற்றாரா? என்று
உறுதியாகத் தெரியாததே இதற்குக் காரணம்.) அப்படியானால், அறிவிப்பாளர் ஒருவர்
மற்றவரிடம் செவியேற்றாரா, இல்லையா? என்பதைக் கவனிக்க வேண்டிய அவசியம் உண்டு எனத்
தெரிகிறது. ஒருவர் மற்றவரிடமி ருந்து சிறிதளவேனும் செவியேற்றார் என்பது
உறுதியாகிவிட்டால், அவர்களின் எல்லா அறிவிப்பு களையும் ஏற்பதில் சிக்கல் இல்லை.
இந்த விளக்கம் கிடைக்காதபோது, அந்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டியதுதான். அதை
ஆதாரமாக எடுக்கலாகாது. ஏனெனில், அதுவும் "முர்சலாக' இருக்கக்கூடும்.54இவ்வாறு
கூறும் அவர்களிடத்தில் பின்வருமாறு நாம் கேள்வி எழுப்புவோம்:ஒரு ஹதீஸ் பலவீனமானது
என்பதற்கும், அதை ஆதாரமாக எடுக்கலாகாது என்பதற்கும் அதன் அறிவிப்பாளர்தொடருக்கிடையே
எவரும் விடுபட்டிருக்கக்கூடும் என்ற சாத்தியக் கூற்றைக் காரணமாகக் கூறுகிறீர்கள்.
அப்படிப் பார்த்தால், "இன்னார் குறித்து இன்னார் அறிவித்தார்'' என்று கூறப்படும்
எந்த ("முஅன் அன்') ஹதீஸ்களையும்,அதன் அறிவிப்பாளர் ஆரம்பம் முதல் இறுதிவரை
ஒருவரிடமிருந்து மற்றவர் செவியேற்றார் என்று தெரிந்த பிறகே ஏற்க வேண்டியதுவரும்.
(ஆனால், "முஅன் அன்' ஹதீஸ்களில் அவ்வாறு நாம் பார்ப் பதில்லை.)உதாரணத்திற்கு,
ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் தம் தந்தை உர்வா (ரஹ்) அவர் களிடமிருந்தும்,
அன்னார் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் (ஹிஷாம் பின் உர்வா "அன்' அபீஹி "அன்'
ஆயிஷா) அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை எடுத்துக்கொள்வோம். இதில் ஹிஷாம் (ரஹ்)
அவர்கள் தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும் உர்வா (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி)
அவர்களிடமிருந்தும் ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் இந்த ஹதீஸைச்
செவியேற்றார்கள் என உறுதியாக நாம் அறிகிறோம்.ஆனால், ஹிஷாம் (ரஹ்) அவர்கள் தம்
தந்தையிடமிருந்து அறிவிக்கும் ஓர் அறிவிப்பில் "நான் செவியேற்றேன்'என்றோ, "எனக்கு
(என் தந்தை) அறிவித்தார்' என்றோ கூறியிருக்காவிட்டால் ஹிஷாமுக்கும் அவருடைய தந்தை
உர்வாவுக்குமிடையே இன்னோர் அறிவிப்பாளர் இருந்து, அவர் ஹிஷாமுடைய தந்தையிடம் அந்த
ஹதீஸைக் கேட்டு ஹிஷாமுக்கு அறிவித்திருக்கலாம்; ஹிஷாம் நேரடியாகத் தம் தந்தையிடம்
அதைக் கேட்டிருக்கமாட்டார். இந்நிலையில், இடையில் அறிவிப்பாளர் விடுபட்டதை அறிவிக்க
விருப்பமில்லாமல் தாம் யாரிடம் கேட்டார் என்பதை ஹிஷாம் கூறியிருக்க மாட்டார்.
(நேரடியாகத் தந்தையிடம் கேட்டதைப் போன்றே காட்டியிருப்பார்.) இதைப்
போன்றே,ஹிஷாமுடைய தந்தை உர்வாவுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே ஓர்
அறிவிப்பாளர் விடுபட்டிருக்க இடமுண்டு. ஏன், எந்த ஹதீஸின்
அறிவிப்பாளர்தொடரிலெல்லாம், ஒருவர் மற்றவரிடமி ருந்து செவியேற்றதற்கான குறிப்பு
இல்லையோ அதிலெல்லாம் இதே நிலை இருக்க இடமுண்டு.பொதுவாக, அறிவிப்பாளர்களில் ஒருவர்
மற்றொருவரிடமிருந்து அடிக்கடி ஹதீஸ்களைச் செவியேற் றுள்ளார் என்று தெரியும்போது,
எப்போதாவது சில வேளைகளில் சில ஹதீஸ்களை அவரிடமிருந்து நேரடியாகக் கேட்காமல்
வேறொருவர் வாயிலாகக் கேட்டிருக்க இடமுண்டு. அப்போது அந்த வேறொருவரின் பெயரைக்
குறிப்பிடாமல் நேரடியாகக் கேட்டதைப் போன்றே அவர் அறிவிக்கலாம். அல்லது (மகிழ்ச்சி)
வேகத்தில் அந்த வேறொருவரின் பெயரைக் குறிப்பிடவும் செய்யலாம்.நாம் சொன்ன இந்த
நடைமுறை நபிமொழித் துறையில் பரவலாக உள்ளது. நம்பத் தகுந்த நபிமொழியியலார் மற்றும்
முக்கிய அறிஞர்களின் செயல்களிலிருந்து இதை அறியலாம்.இனி, இம்முறையில்
அறிவிக்கப்பெற்ற சில அறிவிப்பாளர்தொடர்களை -இன்ஷா அல்லாஹ்- நாம் குறிப்பிட
விரும்புகிறோம். அவற்றைக் கொண்டு பெரும்பாலானவற்றின் நிலை என்ன என்பதைக் கணிக்க
முடியும்.ப் அய்யூப் அஸ்ஸக்தியானீ, அப்துல்லாஹ் பின் அல்முபாரக், வகீஉ பின்
அல்ஜர்ராஹ் மற்றும் இப்னு நுமைர் (ரஹ்) உள்ளிட்ட பலர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்)
அவர்களிடமிருந்தும், ஹிஷாம் தம் தந்தை உர்வா (ரஹ்) அவர் களிடமிருந்தும், உர்வா
ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் (பின்வருமாறு) அறிவிக்கி றார்கள்: அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோதும், இஹ்ராம் கட்டாமல் இருந்தபோதும்
என்னிடம் இருந்த வற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை அவர்களுக்கு நான் பூசி
வந்தேன்.இதே ஹதீஸை லைஸ் பின் சஅத், தாவூத் அல்அத்தார், ஹுமைத் பின் அல்அஸ்வத்,
உஹைப் பின் காலித் மற்றும் அபூஉசாமா (ரஹ்) ஆகியோர் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடமிருந்து
அறிவிக்கின்றனர். ஹிஷாம் (தம் சகோதரர்) உஸ்மான் பின் உர்வா (ரஹ்)
அவர்களிடமிருந்தும், உஸ்மான் (தம் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும், உர்வா
ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கிறார்கள்.ப் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்)
அவர்கள் தம் தந்தை உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தும், உர்வா அவர்கள்
ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கிறார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது
(பள்ளிவாசலுக்குள்ளிருந்து) தமது தலையை, மாதவிடாய் ஏற்பட்டிருந்த என் பக்கம்
நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலைவாரிவிடுவேன்.இதே ஹதீஸை மாலிக் பின் அனஸ்
(ரஹ்) அவர்கள் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்தும்,ஸுஹ்ரீ அவர்கள்
உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும், உர்வா (ரஹ்) அவர்கள் அம்ரா (ரஹ்)
அவர்களிடமிருந்தும்,அம்ரா அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும், ஆயிஷா (ரலி)
அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.ப் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ
(ரஹ்) மற்றும் சாலிஹ் பின் அபீஹஸ்ஸான் (ரஹ்) ஆகியோர் அபூசலமா (ரஹ்)
அவர்களிடமிருந்தும், அபூசலமா அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும்
அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தாம் நோன்பு நோற்றிருக்கும்போது (என்னை)
முத்தமிட்டுள்ளார்கள்.நோன்பு நோற்றிருக்கும்போது (மனைவியை) முத்தமிடுவது தொடர்பான
மேற்கண்ட ஹதீஸை அறிவிக்கும்போது யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு
கூறினார்கள்: எனக்கு அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும், அபூசலமா
அவர்களுக்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களும், அன்னாருக்கு உர்வா பின்
அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும், உர்வா அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்களும் "நபி (ஸல்)
அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிட்டுள்ளார்கள்' என்று
அறிவித்துள்ளனர்.ப் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) முதலானோர் அம்ர் பின் தீனார் (ரஹ்)
அவர்களிடமிருந்தும், அம்ர் அவர்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
அவர்களிடமிருந்தும் (பின்வருமாறு) அறிவித் துள்ளனர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் எங்களுக்குக் குதிரை இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்; (நாட்டுக்) கழுதை
இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.இதே ஹதீஸை ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்)
அவர்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர் களிடமிருந்தும், அம்ர் அவர்கள் முஹம்மத் பின்
அலீ (ரஹ்) அவர்களிடமிருந்தும், முஹம்மத் பின் அலீ அவர்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்களிடமிருந்தும், ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும்
அறிவித்துள்ளனர்.இத்தகைய அறிவிப்புகள் அதிக எண்ணிக்கை யில் வந்துள்ளன.
அறிவுடையோர்க்கு நாம் மேலே குறிப்பிட்ட சில உதாரணங்களே போதுமானவை ஆகும்.55நிலைமை
இவ்வாறிருக்க, அறிவிப்பாளர் களில் ஒருவர் மற்றவரிடமிருந்து கேட்டார் என்று
உறுதியாகத் தெரியாதபோது அந்த ஹதீஸ் பலவீனமானதுதான் என்று தீர்மானிக்க, இடையில்
அறிவிப்பாளர் பெயர் விடுபட்டிருப்பதற்கான (-முர்சலாக இருப்பதற்கான) வாய்ப்பே போதும்
என்று அந்தச் சிலர் கூறியுள்ளனர். அப்படியானால், ஒருவர் மற்றவரிடமிருந்து
செவியேற்றார் என்று தெரியும் போதுகூட, செவியேற்றதைப் பற்றிய குறிப்பு ஹதீஸில்
இடம்பெறாதவரை அந்த (முஅன்அன்) ஹதீஸை ஏற்க முடியாது என்று சொல்ல வேண்டிய கட்டாயம்
நேரும். ஏனெனில், நாம் முன்பு கூறியதைப் போன்று, ஹதீஸ் அறிவிப்பாளர்கள் தமக்கு
அறிவித்தவரின் பெயரை -(அவரிடமிருந்து செவியேற்றிருந்தும்கூட)- குறிப்பிடாமல்
இடையில் விட்டுவிடுவதும் உண்டு. இன்னும் சில நேரங்களில் (மகிழ்ச்சி) வேகத்தில் தாம்
கேட்ட பிரகாரமே அறிவிப்பாளர் பெயரைக் குறிப்பிடுவதும் உண்டு. அவர்கள் இப்படிக் கீழே
இறங்குவதும் உண்டு; அப்படி மேலே ஏறுவதும் உண்டு. முன்பே இதை நாம்
விவரித்துள்ளோம்.அறிவிப்பாளர்தொடர்களில் உண்மையானவை எவை, போலியானவை எவை? என ஆராயுந்
திறன் படைத்த முன்னோர்களான அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்), இப்னு அவ்ன் (ரஹ்), மாலிக்
பின் அனஸ் (ரஹ்), ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்), யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்),
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) மற்றும் அவர்களுக்குப் பின் வந்த நபிமொழி
அறிஞர்கள் பலரும் -இவர்கள் வாதிடுவதைப் போன்று- ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில்
இடம்பெற்றுள்ள ஒருவர் மற்றவரிடமிருந்து நேரடியாகச் செவியுற்றாரா என்று துருவி
ஆராய்ந்ததாக நாம் அறியவில்லை.ஆனால், ஹதீஸ் அறிவிப்பில் இருட்டடிப்பு ("தத்லீஸ்')
செய்வதில் பிரசித்திபெற்றவராக ஒருவர் இருந்தால், அவர் மற்றவரிடமிருந்து கேட்டாரா?
என்பது குறித்து அவர்கள் ஆராய் வதுண்டு. அந்த இருட்டடிப்பு வேலைக்குத் தாமும்
துணைபோய்விடக் கூடாது என்பதே அதற்குக் காரணம். இதன்றி, இருட்டடிப்புச் செய்யாத
அறிவிப்பாளர்கள் விஷயத்திலும் இதே நடைமுறையைக் கையாண்டார்கள் என்பதற்கு நாம் மேலே
குறிப்பிட்ட அறிஞர் களிடமோ மற்ற அறிஞர்களிடமோ எந்தச் சான்றையும் நாம்
காணவில்லை.எடுத்துக்காட்டாக, அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த நபித்தோழர் ஆவார்கள். அன்னார் ஹுதைஃபா பின்
அல்யமான் (ரலி), அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) ஆகிய இருவரிடமிருந்தும் நபிமொழிகளை
அறிவித் துள்ளார்கள். ஆனால், அவர்கள் இருவரிடமி ருந்து அன்னார் எதையும்
செவியேற்றதாகஎந்த அறிவிப்பிலும் காணப்படவில்லை. அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)
அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களுடன் அல்லது அபூமஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நேரடியாக
உரையாடியதாகவோ இருவரையும் சந்தித்த தாகவோ எந்த அறிவிப்பிலிருந்தும் நம்மால் அறிய
முடியவில்லை.அதே நேரத்தில், ஹுதைஃபா (ரலி), அபூமஸ்ஊத் (ரலி) ஆகியோரிடமிருந்து
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ்கள் பலவீனமானவை எனக்
கல்வியாளர்கள் எவரும் அன்றும் சரி; இன்றும் சரி குறை கூறியதில்லை. மாறாக, இது போன்ற
அறிவிப்புகளை வலுவான அறிவிப்பாளர்தொடர் வரிசையில்
சேர்த்திருப்பதுடன்,ஆதாரங்களாகவும் அவற்றை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.ஆனால், இந்த
அறிவிப்புகளெல்லாம், நாம் முன்பு குறிப்பிட்ட சிலரது கூற்றுப்படி பலவீனமானவை
யாகவும் வீணானவையாகவும் கருதப்பட வேண்டிய நிலை உருவாகும். ஒருவர் யாரிடமிருந்து
அறிவிக்கிறாரோ அவரிடம் நேரடியாகச் செவியேற்றிருக்க வேண்டும் என இவர்கள் கட்டாயப்
படுத்துவதே இதற்குக் காரணமாகும். இவர்களது கூற்றுப்படி பலவீனமானவை என்று
கருதப்படும் அதே வேளையில், கல்வியாளர்களிடம் சரியானவைதாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள
இத்தகைய செய்திகளை நாம் பட்டியலிடுவதென்றால் அது நீண்டுகொண்டே போகும்; சிரமும்கூட.
இருப்பினும், நமது கூற்றுக்கு அடையாளமாக ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட
விரும்புகின்றோம்.அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) மற்றும் அபூராஃபி அஸ்ஸாயிஃக் (ரஹ்)
ஆகிய இருவரும் அறியாமைக் காலத்தைக் கண்ட வர்கள்; பத்ருப் போரில் கலந்துகொண்ட
(முக்கிய) நபித்தோழர்களின் தோழமையைப் பெற்றவர்கள்; மேலும்,அவர்களிடமிருந்து
நபிமொழிகள் பலவற்றை அறிவித்தவர்கள். பின்னர் அவர்கள் இருவரும் (பத்ருப் போரில்
கலந்துகொள்ளாத) அபூஹுரைரா (ரலி), இப்னு உமர் (ரலி) போன்றோரிடமிருந்தும் நபிமொழி களை
அறிவித்தனர்.இவர்கள் (அபூஉஸ்மான், அபூராஃபி) ஒவ்வொருவரும் உபை பின் கஅப்  (ரலி)
அவர் களிடமிருந்தும் நபிமொழிகளை அறிவித் துள்ளனர். ஆனால்,  அவர்கள் இருவரும்  எந்த
ஓர் அறிவிப்பிலும் "உபை பின் கஅப் (ரலி) அவர்களை நாங்கள் நேரடியாகச் சந்தித்தோம்''
என்றோ "அவர்களிடமிருந்து செவியேற்றோம்'' என்றோ கூறியதாக நாம் காணவில்லை.அபூஅம்ர்
அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் அறியாமைக் காலத்திலும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும்
வாழ்ந்திருக்கிறார்கள். அன்னாரும் அபூமஅமர் அப்துல்லாஹ் பின் சக்பரா (ரஹ்)
அவர்களும் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து தலா இரண்டு நபிமொழிகளை
அறிவித்துள்ளார்கள்.உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் உம்மு சலமா (ரலி)
அவர்களிடமிருந்தும், உம்மு சலமா (ரலி) அவர்கள் தம் கணவர் நபி (ஸல்)
அவர்களிடமிருந்தும் ஒரு நபிமொழியை அறிவித்துள்ளார்கள். ஆனால், உபைத் பின் உமைர்
(ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் சிறு குழந்தையாக இருந்துள்ளார்கள்.கைஸ்
பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தை அடைந்தவர்கள். அன்னார்
அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் வழியாக மூன்று நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.அப்துர்
ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து
ஹதீஸை மனனமிட்டுள்ளார்கள்; அலீ (ரலி) அவர்களின் தோழமையைப் பெற்றவர்கள். அன்னார்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு நபிமொழியை அறிவித்துள்ளார்கள்.ரிப்ஈ
பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் வழியாக இரண்டு
நபிமொழிகளையும்,அபூபக்ரா (ரலி) அவர்கள் வழியாக ஒரு நபிமொழியையும்
அறிவித்துள்ளார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தும் ஹதீஸ்களை
செவியுற்று அன்னார் அறிவித்துள்ளார்கள்.நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்)
அவர்கள் அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி) அவர்களிடமிருந்து ஒரு நபிமொழியை
அறிவித்துள்ளார்கள்.நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் அபூசயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் வழியாக மூன்று நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.அதாஉ பின் யஸீத்
அல்லைஸீ (ரஹ்) அவர்கள் தமீம் அத்தாரீ (ரலி) அவர்கள் வழியாக ஒரு நபிமொழி
அறிவித்துள்ளார்கள்.சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)
அவர்கள் வழியாக ஒரு நபிமொழியை அறிவித்துள்ளார்கள்.ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்
ஹிம்யரீ (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாகப் பல நபிமொழிகளை
அறிவித்துள்ளார்கள்.மேற்கண்ட நபித்தோழர்களிடமிருந்து நபிமொழிகளை அறிவிக்கும் இந்த
நபித்தோழர் களின் நண்பர்களில் (தாபிஉகள்) எவரும் சம்பந்தப்பட்ட ஹதீஸை அந்த
நபித்தோழரிடமி ருந்து நேரடியாகச் செவியுற்றார்கள் என்பதற்கோ அல்லது அவர்களை
நேரடியாகச் சந்தித்தார்கள் என்பதற்கோ அந்த அறிவிப்புகளில் எந்தக் குறிப்பும்
காணப்படவில்லை. ஆனால்,நபி மொழி மற்றும் நபிமொழி அறிவிப்பாளர் பற்றிய அறிவு
படைத்தவர்கள் இவை அனைத்தும் உண்மையான அறிவிப்பாளர்தொடர் என்றே கருத்துத்
தெரிவித்துள்ளனர். இவற்றில் எதையும் அவர்கள் பலவீனமானதாக அறிவிக்கவில்லை. மேலும்,
அறிவிப்பாளர்களில் ஒருவர் மற்றவரிடம் நேரடியாகச் செவியேற்றாரா, என அவர்கள் தேடிக்
கொண்டிருக்கவுமில்லை.ஏனெனில், இவ்வறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள ஒவ்வோர்
அறிவிப்பாளரும் மற்ற அறிவிப்பாளரிடமி ருந்து நபிமொழியைச் செவியேற்றிருக்க
சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை நிராகரிக்க முடியாது. ஏனென்றால், இவர்கள் அனைவரும்
சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர்.ஆகவே, நாம் குறிப்பிட்ட அந்தச் சிலர் ஒரு ஹதீஸை
பலவீனப்படுத்த என்ன காரணம் கூறினார்களோ அது விவாதிக்கவே அருகதையற்றதாகும். இது
பின்னாளில் கூறப்பட்ட புதிய கூற்றாகும். கல்வியாளர்களில் முன்னோர்கள் எவரும்
இக்கருத்தை வெளியிடவில்லை. சொல்லப்போனால், அவர்களுக்குப் பின்வந்த அறிஞர்களும்கூட
இதை நிராகரித்துள்ளார்கள். நாம் இதுவரை எடுத்துக் கூறிய விளக்கத்திற்கு அதிகமாக
மறுப்புச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஏனெனில், இக்கூற்றின் தரமும் இதைக்
கூறியவர்களின் தரமும் நாம் விவரித்த அளவில்தான் உள்ளது.நபிமொழி அறிஞர்களின்
கொள்கைக்கு எதிரான அக்கருத்தை வென்றெடுக்க வல்ல அல்லாஹ் உதவுவான். அவனையே நாம்
முற்றிலும் சார்ந்திருக்கிறோம்.04.01.2010. 17:27



கேள்வி? பதில்!
Search.. பார்வையாளர் தாங்கள்
6123487
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
39 நபர்கள் புது வரவுகள்தூங்கும் முன் ஆயதுல் குர்ஸி ஓதலாமா (பதில்கள்) நபியின்
  குடும்பத்துக்கு ஏன் ஜகாத் கொ (பதில்கள்) தொழுகையில் லஹப் சூரா ஓதலாமா (பதில்கள்)
  இஸ்லாமிய அரசு அமைப்பது கடமையா (பதில்கள்) இறந்தவரின் உடல் அழுகாமல் இருக்குமா
  (பதில்கள்) இணை கற்பிப்பவர்களை மணக்கலாமா (பதில்கள்) பெண்கள் விளை நிலம் என்பது
  ஏன் (பதில்கள்) ஹாஜியாருக்கு தனி அடையாளம் உண்டா (பதில்கள்) முஸ்லிம் பெண்கள்
  பொட்டு வைக்கலாமா (பதில்கள்) பெண்கள் முகத்தை மறைப்பது அவசியமா (பதில்கள்)
  பெண்கள் ஓதுவதை ஆண்கள் கேட்கலாமா (பதில்கள்) பெண்கள் பிரச்சாரம் செய்யலாமா
  (பதில்கள்) போட்டோ எடுக்கலாமா (பதில்கள்) ஹதீஸ் கலையின் அடிப்படை என்ன (பதில்கள்)
  நடந்தது என்ன திருவிடைச்சேரி (இதர விமர்சனங்கள்) துப்பாக்கிச் சூடு ஓர் விளக்கம்
  (இதர விமர்சனங்கள்) மாறு வேடம் போடலாமா (பதில்கள்) ஜும்மா நேரத்தில் பெண்கள் எந்த
  வேலையு (பதில்கள்) புகை பிடிக்கலாமா (பதில்கள்) பிள்ளைகளின் கடமை முடிந்த
  பிறகுதான் ஹ (பதில்கள்) மேலும் புதியவைகள் .. PJ Books & Quran Tharjumaபி.ஜே
அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும்
முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும். Moon Publication83, மூர்
தெரு, மண்ணடி, சென்னை-1போன்-044 65690810 , செல்-9444276341,9976223885 நூல்கள்
மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click HereTamil Type இணைதளத்தில்
கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ்
டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):
Cancel