Monday, June 27, 2011

360 எண்ணிக்கை ரகசியம்

""ஒரு பெண் இரக்கமன்றி ஒரு பூனையை உணவு கொடுக்காமல் கட்டிப்போட்ட பாவத்தின் காரணமாக அவள் நரகத்தில் தள்ளப்பட்டாள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

தர்மசிந்தனையின் முக்கியத்துவம் பற்றி, அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது.

எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. தனது வாழ்நாளெல்லாம் ஒருவன் தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்து விட்டு, மரணவேளையில் கொடைவள்ளலாக மாறுவதால் என்ன பயன் விளைந்து விடும்? மாறாக, இவர்களைப் பார்த்து இறைவன் கோபம் அடைகின்றான். ஒருவன் பாவியாகவே இருந்தாலும், தர்மம் செய்கின்ற கொடையாளியாக இருந்தால், அவன் அல்லாஹ்வின் தோழனாவான். தொழுகையாளியாக இருந்துகொண்டு தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்தால் அல்லாஹ்வின் பாவியாவான்.
மனித உடலில் 360 எலும்புகளை ஏன் இறைவன் இணைய வைத்தான் தெரியுமா? ஒவ்வொரு இணைப்புக்கும் தினமும் தர்மம் செய்வது மனிதனுக்கு அவசியமான செயலாகும் என்பதற்காக.
நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள், ""கஞ்சத்தனம் ஷைத்தானின் குணமாகும். கருணை உள்ளவன் தங்கும் இடம் சொர்க்கமாகும். கஞ்சத்தனம் கொண்டவன் தங்குமிடம் நரகமாகும். கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் நம்மை நாசப்படுத்தி விடும். செல்வந்தனிடத்தில் கஞ்சத்தனம் இருப்பதை அல்லாஹ் வெறுக்கின்றான். கஞ்சன் அல்லாஹ்வை விட்டும் தூரமாகி விட்டான். தர்மம் செய்வதன் மூலம் உங்கள் பொருட்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் நோய்களைக் குணப்படுத்துங்கள்,'' என்கிறார்கள். கஞ்சத்தனத்தை விடுத்து தர்மசிந்தனையுடன் வாழ்வோமே!

தும்முவதற்குரிய விதிமுறை

அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களுக்கு தும்மல் வந்தால், தங்களின் இரு கைகளாலோ அல்லது துணியாலோ முகத்தை மூடிக்கொண்டு சப்தத்தைக் குறைத்துக் 

கொள்வார்கள். மேலும், தும்மும் போது, ""அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறச்சொல்லியுள்ளார்கள். மேலும், ""அவர்களுடைய தோழர் அல்லது சகோதரர் யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உமக்கு நல்லருள் புரிவானாக) என்று சொன்னால், தும்மியவர் இவருக்கு "யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு' (அல்லாஹ் உமக்கு நேர்வழிகாட்டி, உமது காரியத்தை சீராக வைப்பானாக) என்று கூற வேண்டும்,'' என அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

தம்பதியர் ஒற்றுமைக்கு வழி

ஒருசமயம் கலீபா உமர்(ரலி) அவர்களிடம், ஒருவர் வந்தார். அவர் தனது குடும்பச்சண்டை பற்றி கூறி விளக்கம் பெற வந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்கள் தங்கள் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து அந்த மனிதர் திரும்பிச்செல்ல முனைந்தபோது, அவரைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், வந்தவரிடம் விஷயத்தைக் கேட்டார்கள்.
அம்மனிதர் தம் குடும்பச்சண்டையை மனமின்றி சொன்னபோது, உமர்(ரலி) அவர்கள், ""என் இல்லத்தரசி, எனக்கும் நரகத்திற்கும் இடையில் தடையாக இருக்கிறாள். எனது ஆடைகளைத் துவைக்கும் வேலைக்காரியாக இருக்கிறாள். பிள்ளைகளை ஆதரிக்கும் தாயாகவும் இருக்கிறாள். எனக்குரிய பொருள்களை நான் வெளியே சென்றிருக்கும் போது பாதுகாப்பவளாகவும் இருக்கிறாள். எனவே, அவள் கோபப்படும் போது நான் அவளை மன்னித்து விடுகிறேன். 

பொறுமையும் அடைகிறேன் என்று கூறியதைக் கேட்ட அம்மனிதர், நானும் என் மனைவியை மன்னித்து விட்டேன்,'' என்று கூறிக்கொண்டே சென்றுவிட்டார்.

ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம்,ஒரு தோழர், ""அண்ணலாரே! எனது மனைவியின் நாவு நீளமாயிருக்கிறது. பக்கத்து வீட்டாருடன் அடிக்கடி சண்டை பிடிக்கிறாள்,'' என்றார்.
உடனே அவர்கள், அந்த தோழரின் உள்ளத்தைச் சோதிப்பதற்காக, ""அப்படியானால் உமது மனைவியை தலாக் சொல்லிவிடும்,'' என்றார்கள்.
உடனே அந்தத் தோழர்,""எனக்கு குழந்தைகளைப் பெற்றுத் தருகிறாள். எனது வாழ்க்கையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறாள்,'' என்று கூறியபோது, ""அப்படியானால், அவளுக்கு நல்ல புத்திமதிகளைக் கூறும். இந்த நற்செயலை விட்டுவிட்டு மனைவியை ஆடுமாடுகளை அடிப்பது போல் அடிக்காதீர்,'என்று அண்ணலார் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

அழாதே அம்மா. கனிமொழியின் மகன் உருக்கம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மே 20ல் அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது, "வெளியே வந்து விடுவோம்' என்ற, நம்பிக்கையில் புன்னகையுடன் தான் இருந்தார்.சி.பி.ஐ., கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என, அனைத்தும், அவரது ஜாமின் மனுவை நிராகரித்து விட்டன. இதனால், நம்பிக்கை இழந்த கனிமொழி, சிறையில், 15 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறை அதிகாரி சுனில் குப்தா தெரிவித்ததாவது:எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார். "சில நேரங்களில் தன் மகன் ஆதித்யாவை நினைத்து அழுகிறார். அவரது அறையில், 28 சேனல்கள் கொண்ட, "டிவி' வைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது அதைப் பார்க்கிறார். சில நேரங்களில் எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறார்.அவர் கவிதை எழுதுகிறாரா அல்லது தன் அனுபவங்களை எழுதுகிறாரா என்பது தெரியவில்லை. அவரை சந்திக்க வருபவர்களுடம் பெரும்பாலும் மகனை பற்றியே பேசுகிறார்.இவ்வாறு சுனில் குப்தா தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுத்த நிலையில் கடந்த, 23ல், மகளை சென்று பார்த்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் மகள் கனிமொழி மிக மோசமான சூழ்நிலையில் சிறையில் வாடுவதாக தெரிவித்தார். டில்லி வெயிலின் வெப்பம் தாங்காமல் கனிமொழியின் உடலில் கொப்புளங்கள் தோன்றியுள்ளன என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள திகார் சிறை அதிகாரி சுனில் குப்தா, " நாட்டில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் முன் உதாரணமாக திகார் சிறை உள்ளது. இதை தேசிய மனித உரிமை கமிஷனும், ஐகோர்ட்டும் ஏற்றுக் கொண்டுள்ளன. திகார் சிறை வளாகத்தில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற, சிறை அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கனிமொழிக்கு மன வருத்தம் இருந்தாலோ, உடலில் கொப்புளங்கள் இருந்தாலோ, அதற்கு அவர் தாராளமாக சிகிச்சை பெறலாம்' என்றார்.

இணையத்தில் ஐகான் (ICANN –Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பு பற்றி தெரியுமா உங்களுக்கு

இணைய தளங்களுக்கான முகவரியில், துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க, இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர்களை இணையத்தில் generic toplevel domains (gTLDs) என அழைக்கின்றனர். 

தொடக்கத்தில் .com, .org, and .net போன்ற பொதுவான பெயர்களே, தளப்பெயர்களின் துணைப் பெயர்களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனுமதிக்கப்பட்டன. தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இதுவரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

அண்மையில் கூடிய, இத்தகைய பெயர்களை அனுமதித்து, கண்காணித்து வரும் ஐகான் (ICANN –Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பு கூடுதலாகச் சில வகைப் பெயர்களை அமைக்க அனுமதி தந்துள்ளது. இதன் மூலம் ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளிலும், புதிய வகைகளிலும் இந்த பெயர்களை அமைக்கலாம். 

இதன்படி ஒரு நிறுவனம் தன் நிறுவனத்தை அடையாளம் காட்டும் வகையில் பெயரை அமைத்துக் கொள்ளலாம். நிறுவனப் பெயர் மட்டுமின்றி, குறிப்பிட்ட தன் தயாரிப்பு ஒன்றின் பெயரைக் காட்டும் அடையாளப் பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம்.
இப்போது நாடுகளை மட்டும் அடையாளம் காண பெயர் வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்திய தளங்கள் .in என்ற துணைப்பெயருடன் அமைக்கப்படுகிறது. இனி, புதிய அனுமதியின் பெயரில், மாநிலங்களை அடையாளம் காட்டும் வகையிலும் பெயர்களை அமைத்துக் கொள்ளலாம். 
இந்த பெயர்களை அமைத்து ஒப்புதல் வாங்கிட, வரும் 2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த தகவல்களை இந்திய இணைய சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ் சாரியா தெரிவித்துள்ளார்.

லேப்டாப் அம்சங்களை காணலாம்

தமிழக அரசு பள்ளி மாணவர் களுக்கு லேப் டாப் கம்ப்யூட்டரை இலவசமாகத் தர இருக்கும் திட்டம் இன்னும் சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரிடமும் நாமும் ஒரு லேப்டாப் வாங்கிப் பயன்படுத்தலாமே என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. பொறியியல் பட்ட வகுப்புகள் மற்றும் எம்.பி.ஏ. பிரிவுகளில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு கட்டாயத் தேவையாக மாறிவிட்ட நிலையில், அறிவியல் மற்றும் கலைப் பாடங்கள் பிரிவுகளில் பயிலும் மாணவர்களும், லேப் டாப் கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்த முனைகின்றனர். 

லேப்டாப் ஒன்றை வாங்குகையில் என்ன என்ன அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும் என இங்கு காணலாம்.

தேவையானவை:

1. அதிக நேரம் பயன்படக் கூடிய பேட்டரி: பள்ளியோ, கல்லூரியோ, எப்படியும் படிக்கும் மாணவர் ஒருவர் வீட்டிலிருந்து சென்று பின் திரும்ப குறைந்தது 6 மணி நேரம் ஆகலாம். வகுப்பில், ஓய்வு கிடைக்கும் போது லேப்டாப் கம்ப்யூட்டரை, பாடக் குறிப்புகள் பயன்படுத்தவும், தகவல்களைத் தேடவும் இதனைப் பயன்படுத்தலாம். எனவே 4 மணி நேரம் மட்டுமே மின் சக்தியை வழங்கும் திறன் கொண்ட பேட்டரி உள்ள லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு தடையாகவே இருக்கும். அதனைக் காட்டிலும் அதிகமாக மின் சக்தியைத் தாக்கிப் பிடித்து வழங்கும் பேட்டரி அமைப்பு கொண்ட லேப் டாப் கம்ப்யூட்டரைத் தேடிப் பெறவும்.
2. குறைந்த எடை: ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நூல்களும் மற்ற தேவைகளும் கொண்டு செல்கையில், ஒவ்வொரு மாணவரும் கணிசமான எடையைத் தூக்கிச் செல்ல வேண்டும். எனவே மிகக் குறைந்த எடையுள்ள லேப் டாப் கம்ப்யூட்டரையே நாம் தேர்ந்தெடுப்பது, அதனை எப்போதும் எடுத்துச் சென்று பயன்படுத்த வழி வகுக்கும்.
3. கீ போர்டு வசதி: கற்பதற்கு ஒரு கருவியாய் லேப் டாப் மாணவர்களுக்குப் பயன்பட இருப்பதால், அதிகமாக இதில் டைப் செய்திடும் வேலை இருக்கும். மேலும் ஆன்லைன் சேட்டிங், பேஸ்புக், ட்விட்டர் என மாணவர்கள் எந்நேரமும் செல்லும் தளங்கள் இருக்கும். எனவே டைப் செய்திடும் வேலையை எளிதாக்கும் கீ போர்டு இருப்பது நல்லது. 
4. அதிக திறன் கொண்ட வெப்கேமரா: இப்போது வரும் அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களும் வெப் கேமரா இணைக்கப்பட்டே கிடைக்கின்றன. ஆனால் அனைத்தும் ஒரே வகையான திறனுடன் இருப்பதில்லை. ஆன்லைன் சேட்டிங் அல்லது குடும்பத்தினருடன் கலந்துரையாடல் என எதில் ஈடுபட்டாலும், குறைந்த ஒளியிலும் சிறப்பாக உங்களைக் காட்டும் திறனுடன் கூடிய வெப் கேமரா உள்ள லேப் டாப் கம்ப்யூட்டரைத் தேடிப் பெறவும்.
5. வாரண்டி: லேப்டாப் பார்ப்பதற்கு மென்மையானதாக இருந்தாலும், மாணவர்கள் அதனைச் சற்றுக் கடுமையாகவே கையாள்வார்கள். பைகளில் வைத்து எடுத்துச் செல்வதும், பைகளில் லேப்டாப் உள்ளது என்று அறியாமல், பைகளைக் கையாள்வதும் மாணவர்களுக்கே உரித்தான செயல்பாடு. எனவே சற்று கடினமான பாதுகாப்பு சுற்றுப் புறங்களைக் கொண்ட லேப்டாப்களை வாங்குவது நல்லது. எதனையும் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களிடம் இருக்கும். எனவே அதிக காலம் வாரண்டி தரும் திட்டத்துடன் வரும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் நமக்கு லாபமே.
6. இயக்கப் பாதுகாப்பு: கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை அதிகம் திருடப்படுவது லேப்டாப் கம்ப்யூட்டர்களே. கவனக் குறை வால் தொலைக்கப்படுவதும் அவையே. எனவே தொலைந்து போனாலும், திருடப்பட்டாலும் அவற்றைத் திரும்பப் பெற வழி கொண்ட சாப்ட்வேர் தொகுப்பு பதியப்பட்ட லேப்டாப்கள் இந்த வகையில் நமக்கு கை கொடுக்கும். அதே போல நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இதில் பதியப்பட்டு அவ்வப்போது அப்டேட் செய்யப்பட வேண்டும். 

தேவையற்றவை:
1. குவாட் கோர் ப்ராசசர்: குவாட் கோர் ப்ராசசர் இயக்கம் கொண்ட லேப்டாப் நமக்கு நல்லதுதான். ஆனால் மாணவர் நிலையில் கம்ப்யூட்டர் இயக்குபவர் களுக்கு டூயல் கோர் சி.பி.யு. கொண்ட கம்ப்யூட்டரே போதும். இவை பயன்படுத்தும் மின்சக்தி குறைவு; விலையும் குறைவு. அதே நேரத்தில் மாணவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளுக்கும் கை கொடுக்கும். 
2. அதிக திறன் கொண்ட கிராபிக்ஸ்: நல்லதொரு கிராபிக்ஸ் சிப் எந்த கம்ப்யூட்டரிலும் ஒரு நல்ல நண்பன் தான். வீடியோ காட்சிகள் தெளிவாகக் கிடைத்திட, வேகமாக இணைய உலா செல்ல, முப்பரிமாண விளையாட்டுக் களை இயக்கி விளையாட, என இதன் பயன்களைப் பட்டியலிடலாம். ஆனால் அதே நேரத்தில் சில பாதகமான அம்சங்களும் இதில் உள்ளன. இவை இயங்கும் போது அதிக வெப்பம் உருவாகும்; பேட்டரி சக்தி விரைவில் குறையும்; சிஸ்டத்தின் எடையை அதிகரிக்கும்; பெரிதாக்கும். நிச்சயம் விலையும் அதிகரிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு கிராபிக்ஸ் கார்டைப் பெறுவது நல்லது. 
3. சாலிட் ஸ்டேட் ட்ரைவ்: வழக்கமான ஹார்ட் ட்ரைவ்களைக் காட்டிலும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ், சற்று அதிக வேகத்தில் இயங்கக் கூடியவையே. நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியவை. ஆனால் இதனால் இன்றையச் சூழலில் விலை அதிகமாவதற்கு வாய்ப்புகள் அதிகம். சாலிட் ஸ்டேட் ட்ரைவ் பல வகைகளில் சிறந்தது என்றாலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது சற்று அதிகம் தான். 
4. டச் ஸ்கிரீன்: இன்றைக்கு கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டாலும், மொபைல் போனை எடுத்துக் கொண்டா லும், தொடு திரை இயக்கத்தினயே அனைவரும் நாடுகின்றனர். ஆனால் லேப்டாப்களில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், இன்னும் டச் ஸ்கீரின் இயக்கத்திற்குத் தயாராகவில்லை. எனவே இதனை இன்னும் சில காலத்திற்குத் தள்ளிப் போடலாம்.