Wednesday, May 18, 2011

உள்ளங்காலில் ஒரு கண்ணாடி


உங்கள் பாதங்களில் வெடிப்புகள் இருக்கின்றதா எனப்பாருங்கள். உங்கள் உள்ளங்காலினை ஒரு கண்ணாடியைப் பாவித்து வழமைக்கு மாறாக ஏதாவது கருப்பு புள்ளிகள் அல்லது வீக்கங்கள் தென்படுகிறாதா என்று கவனியுங்கள். கிருமிகள் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கவும் உங்கள் கால் நகங்களை பாதுகாப்பான சுத்தமான மற்றும் கூர்மையான நகம் வெட்டியைக் கொண்டு வெட்டுங்கள்.
பாதங்களைப் பராமரிப்பது அழகுக்காக மட்டுமல்ல, அது உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். அன்றாடப் பாதப் பராமரிப்பு பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக உங்கள் பாதங்களுக்கு பெடிகியூர் மற்றும் சரியான காலணி போன்றவை தேவைப்படுகிறது.

இதன் மூலம் பாதங்களில் ஏற்படும் சுளுக்குகள், பங்கல் இன்பெக்ஷன், கீழ்வாதம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக நீங்கள் கீழ்வாதம் மற்றும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் உங்கள் பாதங்கள் ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவரிடம் அடிக்கடி காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பழைய செல்களை அகற்றி புது வளர்ச்சியை ஊக்குவிக்க ஸ்க்ரப் கொண்டு பாதங்களை மெருகூட்டுங்கள். புதுத் தோல் ஆரோக்கியமானது மட்டுமல்ல கையாள்வதற்கும் எளிதானது. உள்ளங்காலின் கடினத் தோல் பகுதியை ஸ்க்ரப் செய்து 10 நிமிடங்கள் வரையில் நீரில் வைத்திருந்து மிருதுவாக தேய்த்து இறந்த தோலை அகற்றுங்கள்.

குளித்த பின்னர் பாதங்களுக்கு லோஷன் தடவுங்கள். அது உங்கள் பாதத்தின் ஈரலிப்புத் தன்மையைப் பாதுகாக்கும். ளுPகு 30 கலந்த மொய்சரைசரினை கோடைகாலங்களில் பாவியுங்கள். இது அதிக வெப்பத்தினால் தோல் எரிவு ஏற்படுவதைத் தடுக்க உதவும். அமரும்போது பாதங்களை மேல்நோக்கி வைத்திருப்பதால் இரத்த சுழற்சி சீராகும். நடக்கும் போது ஷூக்களைப் பாவியுங்கள். இதன் மூலம் உங்கள் பாதத்திற்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

உங்க பாட்டன் வீட்டு சொத்தா?


 100 மில்லியன் டொலர் சொத்துக்கள் 92 வருடங்களின் பின்னர் பகிரப்பட்டுள்ளன. வெலிங்டன் பெர்ட் என்பவர் 1919ஆம் ஆண்டு அவருடைய 87வது வயதில் மிக்கிங்கனிலுள்ள சகினாவில் இறந்த போது உயில் ஒன்றை எழுதி வைத்தார்.

-அதில், பெரும்பாலான சொத்துக்கள் அவருடைய கடைசி பேரன் இறந்து 21 வருடங்கள் வரை எவருக்கும் பகிர்ந்தளிக்கப்படக்கூடாது என எழுதியிருந்தார்.

வெலிங்டன் பெர்ட் இறந்தபோது அமெரிக்காவின் 10 பணக்காரர்களில் இவரும் ஒருவர். ஆனால், இவர் ஏன் இவ்வாறானதொரு உயிலை எழுதினார் என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.

இவருடைய விருப்பமான மகன் ஒருவருக்கு மாத்திரமே ஒவ்வொரு ஆண்டும் 30,000 டொலர்கள் கிடைக்கும்படிச் செய்திருந்தார். அதேவேளை இவருடைய சொந்தப் பிள்ளைகளுக்கு ஆண்டொன்றிற்கு 1000 முதல் 5000 டொலர்கள் வரையே கிடைக்கிறது.

இவருடைய கடைசிப் பேரன் மரியான் லென்சில் 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். அதன் பின்னர் கடந்த ஆண்டுதான் உயிலின் படி 21 வருடங்கள் கடந்தது. மொத்தமாக 19 முதல் 94 வயது வரையான இவருடைய 12 வாரிசுகள் இம்மாத இறுதியில் 16 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள். இவருடைய குடும்ப உறவுமுறைகளுக்கமைய சொத்துப் பகிர்வு வித்தியாசப்படுகிறது.

பெர்ட்டினின் மூன்றாம் தலைமுறைப் பேத்தியான 19 வயதுடைய கெமிலனுக்கு 2.9 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ள நிலையில், பெர்ட் தனது குடும்பத்தவரை நேசிக்கவில்லை என்பது தெளிவாகத் தனக்குத் தெரிவதாக கெமில்லன் தெரிவித்துள்ளார்.

மிகத் தாமதமாகவே இந்த சொத்துக்கள் பகிரப்பட்டுள்ள நிலையில் பெர்ட்டின் 6 பிள்ளைகள், 7 பேரப்பிள்ளைகள், 6 பேரப் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகள் மற்றும் 11 பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு இந்த சொத்துக்கள் கிடைக்கவில்லை. அவர்கள் தற்போது உயிரோடும் இல்லை.

இந்த சொத்துப் பகிர்வில் கடமையாற்றிய நீதிபதி மெக்கிராவ் தன்னுடைய 12 வருட அனுபவத்தில் இவ்வாறானதொரு கடினமான சொத்து வழக்கை தான் கையாண்டதில்லை என தெரிவித்துள்ளார்.