Sunday, December 19, 2010

கமலஹாசனின் நான்கு நண்பர்கள் (Four Friends)


1989-ம் ஆண்டு 'சாணக்யன்' என்னும் மலையாளத் திரைப்படத்தில்தான் கமலஹாசன் கடைசியாகத் திறமை காட்டியிருந்தார் என்று நினைக்கிறேன். அதன் பிறகு இத்தனை ஆண்டு காலம் கழித்து இந்தப் படத்தில் நடிக்கிறார் 

  தீபாவளிக்கு எனக்குக் கிடைத்த மிகப் பெரிய புஸ்வாணமாக இந்தப் படத்தையே எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவு பெரிய ஏமாற்றம்.


கமல் சாதாரணமாக தனது பொன்னான நேரத்தை வீணாக்க மாட்டாரே.. நல்ல படமாகத்தானே இருக்கும் என்று நினைத்தேன். கைக்குட்டைகள் நனையும் அளவுக்கு பிழியப் பிழிய சோக ரசத்தைப் பிழிந்தெடுத்து, நமது சீரியல்களுக்கே சவால் விடும்வகையில் இருக்கிறது படம்.

கமல் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு பிரதானமான காரணம் ஒன்று உண்டு. படத்தில் அமீராக நடித்திருக்கும் நடிகர் ஜெயசூர்யா, கமலஹாசனின் வெறி பிடித்த ரசிகர். அவருடைய வீட்டில் பல இடங்களிலும் கமல்ஹாசனின் விதவிதமான புகைப்படங்கள்.

எடுப்பது மலையாளத் திரைப்படம். நடிக்கவிருப்பதோ மலையாள திரைக்கலைஞர்கள். “கமலஹாசனைவிடவும் சிறந்த நடிகர்கள் மலையாள திரையுலகில் இருக்கிறார்கள்..” என்று மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவர் இன்னசெண்ட் சமீபத்தில்தான் தெரிவித்திருக்கிறார்.

அப்படியிருக்கும்போது கேரளாவில் கமலஹாசனின் தசவாதாரம் படத்தை வெறி கொண்டு பார்க்கும் ஒரு ரசிகன் கேரக்டரில் மலையாள நடிகரே நடிப்பது கமலுக்குச் சிறப்பானதுதானே.. வருகின்ற வாய்ப்பை விட வேண்டாம் என்று கமல் நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால் அந்த அளவுக்கு பில்டப்பை கொடுத்துவிட்டு இந்த அளவுக்கு ஏமாற்றியிருக்க வேண்டாம். ஒரேயொரு காட்சியில்தான் கமல்ஹாசன் தோன்றுகிறார். அதுவும் நடிகர் கமல்ஹாசனாகவே. கமல்  முகம் தெரிந்தவுடன் இடைவேளை விட்டுவிடுகிறார்கள்..


அதற்கு முன்பு கதை என்னவென்று பார்த்துவிடுவோம். நான்கு கேன்சர் நோயாளிகள்.. தாங்கள் இறக்கப் போவது உறுதியென்றாலும், தங்கள் மரணத்தின்போது சந்தோஷமாகவே இருக்கப் போவதாகச் சொல்லிவிட்டு மலேசியாவுக்கு பயணமாகிறார்கள். கேன்சர் நோயாளிகளில் ஒருவரான குஞ்சக்கோ போபனின் ஒருதலைக் காதலி மலேசியாவில் படிப்பதால் அவளையும் பார்க்கலாம். தாங்களும் டூரை கொண்டாடலாம் என்று நினைத்து செல்கிறார்கள். போன இடத்தில் நடக்கும் எதிர்பாராத விஷயத்தினால் குஞ்சக்கோ போபன் மட்டும் இறந்துவிட.. மிச்சமிருக்கும் 3 நோயாளிகளின் கதி என்ன என்பதைத்தான் மிச்ச, சொச்சம் கதை சொல்கிறது.

இந்தப் படம் Jack Nikolson மற்றும் Morgan Freeman நடித்த Bucket List  படத்தின் காப்பி என்கிறார்கள் மலையாளப் பத்திரிகையாளர்கள். நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை என்பதால் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இதில் இவர்கள் கமல்ஹாசனை சந்திப்பது கொச்சி ஏர்போர்ட்டில். மலேசியாவுக்குப் பயணமாவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் லவுஞ்சில் அமர்ந்திருக்கும் கமல்ஹாசனை நோயாளிகளில் சீனியரான ஜெயராம், மற்ற  நோயாளிகளான போபன், ஜெயசூர்யா, மீரா ஜாஸ்மின் மூவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

தனது ஆதர்ச நாயகனைச் சந்தித்த அதிர்ச்சியில் இருக்கும் ஜெயசூர்யாவின் அந்த ஆக்ஷன் இது மலையாளத் திரைப்படம்தான் என்பதை உணர்த்தியது. இதே இடத்தில் குசேலன் படத்தில் ரஜினியை பார்த்துவிட்டு வடிவேலு செய்யும் அதகளமும் ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது.

அப்போது கமல்ஹாசன் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும்விதத்தில், இதுவரையில் கேன்சரால் உயிரிழந்த தனது திரையுலக நண்பர்கள் பலரது பெயரைப் பட்டியலிட்டுச் சொல்கிறார். "என்னோட பெஸ்ட் பிரெண்ட்" என்று நடிகை ஸ்ரீவித்யாவைப் பற்றிச் சொல்கிறார். கடைசியாக “இப்போ என்னில் பாதியாக(Best half) இருக்கும் கவுதமிக்கும் கேன்சர்தான்” என்கிறார். “கேன்சர் ஒரு சத்ரு. அதை எதிர்த்து போராடணும்.. மடங்கிப் போகக் கூடாது..” என்று அட்வைஸும் செய்கிறார்.

இந்த ஒரு காட்சியில் தரிசனம் என்றாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மலையாள நடிகர்களுக்கு கொஞ்சம் ஆப்பை சொருகியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏன் இதே இடத்தில் மம்முட்டியையும், மோகன்லாலையும் தேர்வு செய்திருக்கலாமே..? எதற்காக கமலஹாசன்..?

உடன் ஜெயராமும் இன்னொரு நோயாளியாக நடிப்பதால் அவரும் வாய் பிளந்து நிற்கும் நடிகராக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் கமலை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த வகையில் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட  கமல்ஹாசனை பாராட்டுகிறேன்.

கேரளா முழுவதிலுமே 70 தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் ரிசல்ட் கேரளாவிலேயே சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. அனைவரும் சொல்கின்ற குற்றச்சாட்டு படம் மிகவும் சோகத்தைத் தருகிறது, மெலோ டிராமாவை போல் உள்ளது என்பதுதான்.


உண்மைதான். எம்.பி.பி.எஸ். மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே கேன்சர் நோய் தாக்கியது அறிந்து படிப்பை பாதியில் விட்டுவிட்டு சிகிச்சைக்காக வந்திருக்கிறார் மீரா ஜாஸ்மின். கமல்ஹாசனின் வெறியனாகவும் தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்கும் ரவுடியாகவும் ஜெயசூர்யா, பணக்கார வீட்டில் ஒரே மகனான சூர்யா என்ற குஞ்சக்கோ போபன்.. வாரத்துக்கு ஒரு வெளிநாட்டுக்கு பறந்தபடியே இருக்கும் மெகா பிஸினஸ்மேன் ஜெயராம்.. இந்த நால்வரும் சிகிச்சைக்காக ஒரே மருத்துவரிடம் வந்து அடைக்கலமாகிறார்கள். இவர்களையே சுற்றிச் சுற்றி கதை பின்னப்பட்டிருப்பதால் மரணத்தை எதிர்நோக்கியவனிடம் பார்க்கின்ற பரிதாபப் பார்வையை மட்டுமே நம்மால் உணர முடிகிறது.


மருத்துவமனை காட்சிகளில் சலீம்குமார் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் சிரிப்பிற்குப் பதிலாக அலுப்பையே தருகின்றன. கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தையின் கதையும் உருக்கத்தைக் கொடுத்து மனதைப் பிசைகிறது. சோகக் காவியத்தையும் மனதோடு ஒன்றுவிடும் அளவுக்கு உருக வைக்கும் டெக்னிக் மலையாளத் திரையுலகில் நான் இதுவரையில் பார்த்ததில் சிபிமலயில் மற்றும் சத்யன் அந்திக்காடு இருவருக்குமே மட்டுமே உண்டு.

சிபிமலயிலின் அத்தனை திரைப்படங்களிலும் சோகத்தின் சுவடுகள் ஒவ்வொரு காட்சியிலும் தென்படும். ஆனால் அதற்காக அவர் கிளிசரினை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் அளவுக்கு மெனக்கெட மாட்டார். வசனத்திலோ, பின்னணி இசையிலோ, காட்சியமைப்பிலோ மனதைப் பிசைந்துவிடுவார். உதாரணம் தனம் படத்தில் முரளியை மடியில் போட்டுக் கொண்டு மோகன்லால் கதறுகின்ற கதறல்.. இப்போது நினைத்தாலும் என் கண்கள் சட்டென கலங்கி விடுகின்றன.


அது போன்ற மனதை ஊடுறுவும் காட்சிகள் அமையாமல் போனதால் சீரியல்களில் வரும் அழுகைக் காட்சிகளாகவே இருப்பதால் பெருவாரியான ரசிகர்களால் இப்படத்தினை ரசிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்.

போதாக்குறைக்கு சாதாரண திரைப்படங்களைப் போல மலேசியாவில் ஒரு சண்டைக் காட்சியையும் வலுக்கட்டாயமாகத் திணித்துவிட அங்கே சோகத்தின் உச்சியில் இருந்த டெம்போ சடாரென்று நழுவி விழுந்துவிட்டது. மறுபடியும் போபன் இறக்கின்றபோதுதான் இது சோகக் காவியம் என்பதே நினைவுக்கு வருகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு கிளைக்கதை என்று வைத்துக் கொண்டு கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். ஜெயசூர்யாவின் குடும்பம் தவிர, மீரா ஜாஸ்மின், போபன் குடும்பத்தினரின் தாக்கம் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது. சீமா சேச்சியை இப்படி ஸ்கிரீனில் பார்த்து பல காலமாச்சு. ஆனாலும் அழுகை.. அழுகை.. அழுகை.. தாங்க முடியவில்லை.


போபனின் மரணத்திற்குப் பிறகு சடாரென்று மாறுதலடையும் ஜெயராம், ஜெயசூர்யாவையும், மீராவையும் ஊருக்கு அனுப்பும் அந்த டிவிஸ்ட் நன்று என்றாலும், அதைவிட ட்விஸ்ட்டாக விமான நிலையத்தில் ஜெயசூர்யாவும், மீரா ஜாஸ்மினும் எடுக்கும் ஓட்டம் சூப்பர்.
 
மலேசியாவின் லங்காவி பிரதேசம் முழுவதையும் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்று இயக்குநரின் ஆசையோ என்னவோ? ரோப் கார், அந்த மலைகளுக்கு இடையேயான தற்கொலைப் பாலம் என்று அனைத்தையும் கனஜோராகக் காட்டி அசத்தியிருக்கிறார். அதேபோல் கேரளாவில் அந்த மருத்துவமனையின் இருப்பிடம். அசத்தல்ய்யா.. எந்த ஊருன்னு தெரியலை. இப்படியொரு இடத்துல பத்து நாளாவது இருந்து வரலாம். அந்தப் படகு வீடுகளை எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் அற்புதமாக இருக்கின்றன.

என்ன இருந்து என்ன புண்ணியம்..? நான் பார்த்த  திரையரங்கில் 30 பேர் வந்திருந்து  அதிர்ச்சியாக்கினார்கள். படம் முடிந்தபோது அதிலும் 10 பேர் காணாமல் போயிருந்தது சுவாரஸ்யம்.

இது போன்ற படங்களை மலையாளத்தில் மட்டும்தான் தைரியமாக எடுக்க முடியும்.. தமிழில் நினைத்துக்கூட பார்க்க முடியாது.. கமல்ஹாசன் தலைகாட்டிய ஒரு திரைப்படம் என்ற வகையில் மட்டுமே இந்தப் படத்தைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஆனாலும் அடுத்தாண்டு கேரள அரசின் பல விருதுகளை இப்படம் அள்ளப் போவதும் உறுதி. அதிலும் சந்தேகமில்லை.

இப்படியும் MOBILE சார்ஜ் பண்ணலாமே

                       ஒருவருக்கு இதயம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் கட்டாயம் ஒரு கைப்பேசி இருக்கும். அந்தளவுக்கு கைப்பேசி என்பது ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.
                      வெளியிடம் செல்கையில் கைப்பேசியை மின்னேற்றம் செய்வதை மறந்து சென்று விட்டு அங்கிருந்து அவசரத்திற்கு  முழிப்போம். நான் இப்படிப் பெரிதும் அல்லல் பட்டிருக்கிறேன் நீங்கள் அப்போது இக் கட்டுரை பற்றிக் கட்டாயம் சிந்திப்பீர்கள்.
                    முதலிலேயே சொல்லிக் கொள்கிறேன் இது ஒரு விஞ்ஞானக் கண்டபிடிப்பல்ல.
                    இதற்கு முக்கிய நிபந்தனை தங்கள் கைப்பேசி மின் போதாதெனச் சொல்லி தன்னைத் தற்கொலை செய்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு தாள் எடுத்துக் கொள்ளுங்கள் (இங்கு இதற்கும் ஒன்று சொல்வார்கள் 10 ரூபாய் தாளில் செய்தால் தான் மின் ஏறுமாம்) பின் படத்திலுள்ளவாறு புனல் போல் சுருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் தங்கள் கைப்பேசியின் உறையை கழற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் மின்கலத்தையும் நீக்கிய பின் அந்த மின் கலத்துடன் தொடபில் இருக்கும் மின் கம்பிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதன் நடுக் கம்பியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
                        இப்போது படத்திலுள்ளவாறு தாங்கள் சுருட்டிய காசை நடுக்கம்பியினுள் சற்று உட் செலுத்தி வையுங்கள் (இழுக்கக் கூடியவாறு). பின்னர் வழமை போல் மின் கலத்தை செருகுங்கள். இப்பொது எல்லாம் தயார் சடுதியாக (ஒரு கணநேரத்திற்குள்) தாளை இழுங்கள். சரி விசயம் முடிந்த விட்டது. இப்பொது தற்கொலை செய்து கொண்ட கைப்பேசிக்கு உயிர் கொடுங்கள். இரண்டு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருக்கும். இதுவே கீரி ரக கைப்பேசியாக இருந்தால் இன்னும் நல்ல விளைவை எதிர் பார்க்கலாம். என்ன குழம்பீட்டிங்களா..??? நொக்கியா என்ற சொல்லின் அர்த்தம் தான் கீரி ஆகும்.
                                இதற்கான காரணமாக நான் கருதுவது. உராய்வால் வரும் இலத்திரன் பாய்ச்சலாகும். ஏனெனில் இலத்திரன் மறை ஏற்றம் (-) கொண்டது. நாங்கள் செருகும் பகுதி நேர் எற்றம் (+) கொண்டது. இரண்டுக்குமிடையேயான தொடர்பு தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன் அனால் நண்பர்கள் வெவ்வெறு காரணம் சொல்கிறார்கள். என் வாசகர் வட்டத்தில் பல விசயம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் அவர்களில் யாராவது தமக்குத் தெரிந்ததை என்னுடன் பகிருங்கள்.

முக்கிய குறிப்பு – என் நெருங்கிய நண்பன் ஒருவன் சொன்ன தகவல்  மின் குறைந்த கைப்பேசியில் 1000 மடங்கு கதிர் வீச்சு அதிகமாம்... சில நாட்களுக்க முன் கைப்பேசியால் சோளப் பொரி செய்து காட்டியதை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
                 

கூகிள் டாக்ஸ் புது வசதி

பி.டி.எப். கோப்புக்களை எளிதில் டெக்ஸ்ட் வடிவில் மாற்றும் வசதியை கூகிள் டாக்ஸ் கடந்த வாரம் அறிமுகப் படுத்தியுள்ளது. தரவேற்றிய பி.டி.எப். கோப்பை அப்படியே சில நொடிகளில் எழுத்துக்களாக பிரித்து தனது பெட்டகத்திலே சேமித்து வைக்கிறது. வேண்டுமானால் எடுத்தும் அல்லது மற்றவருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். OCR தொழிற்நுட்பத்தில் இந்த வசதியைத் தருவதால் ஆங்கிலக் கோப்புகளை சிறப்பாக மாற்றுகிறது ஆனால் தமிழ் கோப்புக்களை பிழையுடன் மாற்றியமைக்கிறது. முக்கியமாக படங்கள் உள்ள பகுதியைத் தவிர மற்ற பி.டி.எப் வரிகளை எழுத்து வடிவமாக்குகிறது. கூகிள் டாக்ஸ் சென்று ,upload மற்றும் file செலக்ட் செய்யவும்.


பிறகு மறக்காமல் convert text from pdf என்ற இடத்தை தேர்வு செய்து பிறகு தரவேற்றவும். உங்கள் பக்கம் தானாக டாக்ஸில் text வடிவில் சேமிக்கப்பட்டுவிடும்

அடையாள இலக்கம்
உங்கள் கைபேசியின் அடையாள இலக்கம் தெரியுமா? எப்படி சிம் கார்டுக்கென IMSI எண்வுள்ளதோ அதைப் போல உங்கள் கைபேசி சாதனத்திற்கும் IMEI (International Mobile Equipment Identity சுருக்கமாக IMEI)  என்ற பிரதேக எண் உள்ளது இந்த எண் மூலமாக உங்கள் கைபேசி தொலைந்தால் உடனே தடுக்க முடியும் முடிந்தால் மீட்கவும் முடியும். கட்டாயம் இதை குறித்துவையுங்கள். பொதுவாக நோக்கிய முதற்கொண்டு சாதனங்களின் எண்ணைப் பெற *#06# என்ற குறியீடைத் தட்டினால் எளிதில் பெறலாம். மேலும் சில ரகசிய உபரி தகவல்களைப் பெற தகுந்த எண்கள் சாதனங்கள் வாரியாக இங்கே உள்ளது. 

பதிவர்களுக்கு

நேற்றுயிருந்து வேர்ட்பிரஸ் போல ப்ளாக்கரும் தளத்தின் புள்ளிவிவரக் கணக்கை இலவசமாக கணக்கிட்டுத் தருகிறது. அனேகமாக நுழையும் http://www.blogger.com/ தளத்திற்குப் பதில் http://draft.blogger.com/ல் நுழையுங்கள். தேவைப் பட்டால் இந்த முகவரியை நிரந்தரமாக்க படத்தில் உள்ளது போல இதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். stats இணைப்பில் சென்றால் உங்கள் தளத்தின் போக்குவரத்துத் தெரியும் பதிவுவாரியாகவும், பரிந்துரைவாரியாகவும், வாசகர்வாரியாகவும் செம்மையாக காட்டுகிறது. இதைப் பெற எந்தவிதக் கூடுதல் நிரலிகளைச் சேர்க்க வேண்டியில்லாததாலும், இதற்கு முன கூகிள் தந்த ஆமை வேக  http://www.google.com/analytics/ கிற்கு மாற்றாகவும் இது அமைவதால் மகிழ்ச்சியே!

கடவுச்சொல் துலாபாரம் 
உங்கள் கடவுச் சொல்[password] எவ்வளவு வலிமையானது என்று கணித்ததுண்டா? அது வலிமையானது என்று மட்டும் தெரியும் ஆனால் எவ்வளவு வலிமை என்று தெரியாது என்பவர்கள் இந்த தளத்தில் சோதித்துப் பார்க்கலாம். உங்கள் பயனர் பெயர் போன்ற எந்த வித குறிப்பும் கேட்காததால் நம்பிப் பயன்படுத்திச் சோதிக்கலாம். மேலும் எப்படியெல்லாம் கடினமாக கடவுச் சொல்லை வைக்கலாம் என்றும் ஒரு வியாக்கியானமே தந்துள்ளது. சில சமயம் நாம் தரும் சொற்கள் மிகவும் பரவால பயன்படுத்தப்படுகிறது எனவும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை உ.தா.1234 . எல்லா இடத்திலும் பயன்படுத்தாவிட்டாலும் முக்கியமான கணக்குகளுக்காவது கடினமான கடவுச்சொற்கள் வைப்பது அவசியம் தானே!
http://howsecureismypassword.net/

TASKMANAGER காணாமல் போனால் கண்டுபிடிப்பது எப்படி?

சில நேரங்களில் நமது கணணியில் வைரஸ் தாக்கம் காரணமாக alt +ctrl + Del ஐ அழுத்தும் போது Task Manager has been disabled by your administrator“ என்ற Message வருவதுண்டு இதனால் பல சிக்கலுக்கு முகம் கொடுத்திருப்போம். இச் சிக்கலை எவ்வாறு தீர்ப்பதென்று பார்ப்போம்

இங்கு 3 முறைகள் தரப்பட்டுள்ளன ஏதாவது ஒரு முறை மூலம் முயர்ச்சி செய்யவும்

முறை-

  • முதலில் Start சென்று அதில் Run ஐ Click செய்யவும்
  • அதில் gpedit.msc என்று type செய்து Enter பண்ணவும்
  • பின் User Configuration இன் கீழ் உள்ள Administrative Templates இன் முன் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
  • பின் அதில் System  என்பதன் முன் இருக்கும் + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
  • அதன் கீழ் உள்ள Ctrl+Alt+Delete Options ஐ Click செய்யவும்.
  • அதில் வலது பக்கத்தில் உள்ள Remove Task Manager ஐ Double Click பண்ணி அதில் Not Configured  என்பதை தெரிவு செய்து Ok பண்ணவும் .

முறை- 2

ஒரு

புதிய Notepad ஐ ஓபன் செய்து கீழ் உள்ள Registry Value வை copy செய்து

அதில் Paste செய்து taskmanager.reg என்ற பெயரில் Save செய்த பின் அதை

Double click செய்யவும்.
Windows Registry Editor Version 5.00 
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000

முறை- 3

கீழ் உள்ள சுட்டியில் இருந்து Task Manager Fix என்ற சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும். இம் மென்பொருள் பற்றிய மேலதிக விடயத்திற்கும் தரவிறக்கம் செய்வதற்கும் இங்கே அழுத்தவும்.

இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு








நடந்து முடிந்த பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வெற்றிகரமாக கூச்சல், குழப்பத்துடன் நடந்து முடிந்தது குறித்து சிலருக்கு அதிருப்தி. பலருக்கு திருப்தி.. இந்தச் சிலரும், பலரும் நிச்சயம் அரசியல்வியாதிகள்தான்.

ஆனால் பொதுமக்களாகிய நமக்குத்தான் பெரும் எரிச்சலைக் கூட்டியிருக்கிறது..! இது தொடர்பாக நானே ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமில்லாததால் போட முடியவில்லை.

ஆனால் இன்றைக்கு வெளிவந்திருக்கும் தினமலர் பத்திரிகையில் இது பற்றிய செய்திக் கட்டுரை வெளிவந்திருக்கிறது. கிட்டத்தட்ட எனது கருத்துக்களை முழுமையாக உள்ளடக்கியதாக இருந்ததினால் அதனை இங்கே முன் மொழிந்து பதிவிடுகிறேன் :

நமது மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகளால் மீண்டும் ஒரு முறை பொதுமக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. "மக்கள் பிரதிநிதிகள், மக்களின் பணத்தை வீணடிப்பது வழக்கமானதுதானே' என, காமெடியாக நினைத்து இந்த விவகாரத்தை ஒதுக்கி தள்ளிவிட முடியாது.


ஏனென்றால், இந்த முறை, சற்று அதிகமாகவே 200 கோடி ரூபாய் அளவுக்கு மக்களின் பணத்தை வீணடித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் பிடிவாதமும், ஆளும் கட்சியின் விதண்டாவாதமும் சேர்ந்து, பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரை முற்றிலுமாக முடக்கியதால்தான், இந்த அளவுக்கு மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

மணியோசை வரும் முன்னே.. யானை வரும் பின்னே, என பழமொழி உண்டு. அதற்கேற்ப, பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த முறைகேடு விஸ்வரூபம் எடுக்க துவங்கி விட்டது.

இது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஊழல் என, பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியை போட்டு தாக்குவதற்கு தேவையான விஷயங்கள் ஏராளமாக இருந்தன. இந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் நன்றாகவே பயன்படுத்தி கொண்டன.

வழக்கமாக பாராளுமன்றத்தில் போராட்டம் என்றால், தே.ஜ., கூட்டணி கட்சியினர் ஒருபுறமும், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்காத இடதுசாரி உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒருபுறமும் தனித்தனியாக செயல்படுவர்.

ஆனால், ஸ்பெக்ட்ரம் விவரகாரத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட 1.76 லட்சம் கோடி ரூபாய் என்ற மெகா தொகை, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தது. பாராளுமன்றத்துக்கு உள்ளே மட்டுமல்லாமல், பார்லிமென்டுக்கு வெளியிலும் இவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

கடந்த நவம்பர் 9-ம் தேதி பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியது. துவங்கிய நாளில் இருந்து, கூட்டத் தொடரின் கடைசி நாளான கடந்த 13-ம் தேதிவரை, ஒரு நாள்கூட முழுமையாக சபை அலுவல்கள் நடக்கவில்லை.

வழக்கம்போல் காலையில் சபை துவங்கும். உடனடியாக "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்புவர். இதற்கு பதிலடியாக, ஆளும் கட்சியினரும், கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் ஊழல் குறித்து கோஷம் எழுப்புவர். ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவும். இதையடுத்து, சில மணி நேரங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்படும். மீண்டும் சபை கூடியதும், இதேபோன்ற சம்பவங்கள் தொடரும். இறுதியாக, சபை நடவடிக்கைகளை நாள் முழுவதற்கும் ஒத்திவைத்து விட்டு, லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரியும் வருத்தத்துடன் எழுந்து செல்வர். இந்த நடவடிக்கைகள்தான், கடந்த ஒரு மாதமாக நடந்தன.

பாராளுமன்றக் கூட்டத் தொடருக்கு இடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணைகள், ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.

"ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்காதது ஏன்? சி.பி.ஐ., வழக்கு விசாரணையில் இன்னும் தீவிரம் காட்டாதது ஏன்? ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் அமர்த்தியது ஏன்?” என, சுப்ரீம் கோர்ட் வரிசையாக கேள்விகளை எழுப்பியதால், மத்திய அரசு அதிர்ந்து போனது. எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பை இறுக பிடித்துக் கொண்டு, அரசை ஒரு வழியாக்கி விட்டனர்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் அமளியால், பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடங்கியதில், ரொம்பவே பாதிக்கப்பட்டவர்கள் இருவர். ஒருவர் சபாநாயகர் மீரா குமார். அடுத்தவர், ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி. சுமுகமான சூழ்நிலையை உருவாக்கி, சபை அலுவல்களை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற இவர்களின் முயற்சி இறுதிவரை பலிக்கவில்லை.

இது தொடர்பாக, இருவருமே விரிவாக கலந்துரையாடினர். இது போன்ற பிரச்னைகள் எழும்போது, வெளிநாடுகளில் பார்லிமென்ட் எப்படி சுமுகமாக இயங்குகிறது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை நடத்தினர். ஆனால், எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

குளிர்கால கூட்டத் தொடர் முடியும்வரை, ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி இரு தரப்புமே இறங்கி வரவில்லை. தங்கள் நிலையில் கடைசிவரை உறுதியாக இருந்தனர்.

"ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடும் வரை சபையை நடத்த விட மாட்டோம்' என்பது, எதிர்க்கட்சிகளின் பிடிவாதமாக இருந்தது. "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை என்ற பேச்சுக்கே இடம் இல்லை' என்பது ஆளும் கட்சியின் விதண்டாவாதம்.

நடந்து முடிந்த பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபாவில் நடந்தது என்ன?

* தனி நபர் மசோதா எதுவுமே தாக்கல் செய்யப்படவில்லை

* தனி நபர் மசோதா தொடர்பான விவாதம் எதுவும் நடக்கவில்லை.

* எந்த தனி நபர் மசோதாவும் வாபஸ் பெறப்படவில்லை.

* தனி நபர் தீர்மானம் எதுவும் சபையில் விவாதிக்கப்படவில்லை.

* தனி நபர் தீர்மானம் எதுவும் சபையில் ஏற்கபடவில்லை.

* தீர்மானம் வாபஸ் பெறப்படவும் இல்லை.

இதுவும் ஒரு சாதனை(?)தான் :

* தெகல்கா விவகாரத்தின்போது, பாராளுமன்றம் தொடர்ந்து 17 நாட்கள் செயல்படாமல் இருந்தது.

* கடந்த 1996-ல், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமின் வீடுகளில் சி.பி.ஐ., சோதனை நடத்தியதால், 13 நாட்கள் சபை நடக்கவில்லை.

* கடந்த 1987-ல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்தில் நடந்த அமளியால், 45 நாட்கள் சபை அலுவல்கள் முடக்கப்பட்டன.

பாராளுமன்றம் நடக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும், மக்களின் வரிப் பணம் பெருமளவில் செலவிடப்படுகிறது. இந்த பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் 22 நாட்கள் சபை அலுவல்கள் நடக்கவில்லை. இதைக் கணக்கிட்டு பார்த்தால், ஒட்டு மொத்தமாக 200 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், “பாராளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு ஆளும் கட்சிதான் காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது சாதாரண விஷயம் அல்ல. இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மெகா ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், இதை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடித்ததன் மூலம், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதற்கு மத்திய அரசு காரணமாகிவிட்டது” என்கிறார்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை, பாராளுமன்றப் பொதுக் கணக்கு குழு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கின்றன. இதன் மூலம் விதிமுறைகளை எதிர்க்கட்சியினர் மீறுகின்றனர். சபை முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம்' என்கிறார்.

இப்படி இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காமல் செயல்படுவதால்,  அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சாதாரண மக்களுக்குதான் பாதிப்பு. ஏனென்றால், மக்களின் வரிப் பணம்தானே வீணடிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தை சுமுகமாக இயங்க செய்ய வேண்டிய பொறுப்பு, இரு தரப்புக்குமே உண்டு. மக்களுக்கு சேவை செய்வதற்காக, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களே மக்கள் பிரதிநிதிகள். இதை அவர்கள் எப்போதுதான் உணர்வார்களோ...?

START BUTTON - ஐ நிரந்தரமாக மாற்றுவது எப்படி ?

நிரந்தரமாக Start பட்டன் இன் பெயரை மாற்றுவது எவ்வாறு என்று இங்கு பார்ப்போம்.
System File களுடன் விளையாடப் போகின்றோம் மிகக் கவனமாக பின்வரும் செயல்முறையை செய்யவும்.
முதலில் ResHacker என்ற இந்த மென்பொருளை இங்கே Click செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • பின் உங்கள் கணணியின் C Drive இன் Windows என்ற Folder க்குள் ( C:\WINDOWS ) உள்ள explorer.exe என்ற File ஐ Copy பண்ணி வேறு ஒரு Folder இல் Paste பண்ணவும்.
  • பின் ResHacker ஐ Open பண்ணி அதனுள் வெளியில் Copy பண்ணி வைத்த explorer.exe என்ற File ஐ இழுத்து அதனுள் விடவும் (drag and drop)
  • பின்

    படத்தில் காட்டியவாறு String Table முன் உள்ள + அடையாளத்தை Click செய்து

    அதில் 37வது Folder இன் முன் உள்ள + அடையாளத்தை Click செய்து 1033 என்பதை click பண்ணவும்.

  • வலப்பக்கத்தில் உள்ள Start என்பதற்காக நீங்கள் மாற்ற விரும்பிய பெயரைக் கொடுத்து பின் மேல் உள்ள Compile Script என்பதை Click செய்யவும்.
  • பின் File சென்று Save as என்பதில் explorer123.exe என பெயர் கொடுத்து Save பண்ணவும்.
  • பின் Save பண்ணிய explorer123.exe C:\WINDOWS என்ற Folder இல் Paste செய்யவும்.
  • பின் Run இல் regedit என type செய்து Registry Editor ஐ Open பண்ணிக் கொள்ளவும்.
  • பின் அதில் HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows NT\ CurrentVersion\ Winlogon என்ற ஒழுங்கில் செல்லவும்.
  • பின் Winlogon என்பதை

    Click செய்து அதன் வலப்பக்கத்தில் உள்ள Shell என்பதை Right click செய்து

    Modify என்பதை கிளிக் செய்து Value data என்ற இடத்தில்
    explorer123.exe என Type செய்யவும்
  • பின் உங்கள் கணணியை Restart பண்ணவும் இனி உங்கள் கணணியில் நிரந்தரமாகவை Start இன் பெயர் மாறியிருக்கும்.
நீங்கள்

பழையபடி Start என்ற பெயர் வேண்டும் என்றால் மேற் கூறிய முறையில்

Registry Editor க்கு சென்று Shell ஐ Modify பண்ணி Value data என்ற

இடத்தில் explorer.exe என என கொடுத்து உங்கள் கணணியை Restart பண்ணவும்.

செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூற மறக்க வேண்டாம்.

கமலின் - பத்துக்குள் முத்து

                 அந்த சொல் கேட்டாலே ஏதோ ஒரு புதுமை அதன் பின்னே மறைந்துள்ளது தெரியும். நடிப்பு என்ற ஒரு வரைவிலக்கணத்தை எதிலும் அணிந்து செல்பவர் அவர். அவருடைய பத்து படங்களை வரிசைப் படுத்துவது என்பது என்னால் முடியாத காரியம் அதே போல் பத்து படம் தேர்ந்தெடுப்பது என்பதும் முடியாத ஒன்று அதனால் தான் எனக்கு சட்டென்று மனதில் அழுத்தியிருந்த படங்களை பரிந்துரைக்கிறேன்.
மூன்றாம் பிறை
                  சிறிதேவியுடன் கமல் இணைந்த படங்களில் ஒன்று (எங்கே இணைந்தார் பிரிச்சில்லா விட்டுட்டாங்கள்) 1983 ல் பாலுமாகேந்திரா வடித்த ஒரு நெருடல் காவியமாக எப்பொதும் விளங்குகிறது. 1984 ல் தேசிய விருதைப் பெற்ற இப்படத்திற்கு இசைஞானி இசையமைத்திருந்தார். இப்படத்தில் சிறந்த நடிகராக கமலஹாசனுக்கும்இ சிறந்த ஒளிப்பதிவாளரக்காக பாலுமகேந்திராவுக்கும் சில்வர் லெட்டஸ் விருது கிடைத்தது

“மூன்றாம் பிறை என்மனதில் தேயாத வளர் பிறை”

உன்னை போல் ஒருவன்
                                        சக்ரி டோலடி இயக்கத்திலும் ஸ்ருதிகாசனின் இசையிலும் உருவான ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படம். ஹிந்தியில் வெளியான A wednesday என்ற திரைப்படம் சென்னையின் சூழலுக்கேற்றாற் போல் மாற்றப்பட்டது. ஒரு சில மணித்தியால கதைஇ ஒரே உடை என ஒரு மாறுபட்ட கதை அமைப்பை கொண்டிருந்தது. யார் யார் அதில் நடித்தாரென்று தெரியாவிட்டாலும் கணேஸ் வெங்கட்டால் விசாரிக்கப்படும் போதையாளன் மட்டும் சிறப்பாய் நடித்திருந்தான்.
          அதிலும் சி.எம்.மிடம் பேச வேண்டும் என்று கமல் கேட்க "அவர் உங்ககிட்ட பேசுற அளவுக்கென்ன வேலைவெட்டி இல்லாதவரா?" என்று மோகன்லால் கேட்க.. "ஓட்டுக் கேட்க என்கிட்ட வந்தாரே.” என்று கமல் கூறும் இடம் கதை வசனத்திற்கு ஒரு நல்ல எடுத்தக்காட்டாகும்.
           அத்துடன் போர் கருவிகள் பாவிக்கும் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த எமது முகாமில் எதேட்சையாக போடப்பட்டிருந்த இப்படத்தை தற்செயலாக பார்த்த இராணுவ அதிகாரி குறுவட்டை வாங்கிச் சென்று தனது அறையில் பார்த்தது அதிசயமாகவே இருந்தது.

“உன்னைப் போல் ஒருவனை நான் வர்ணிக்க முடியாத சிறுவன்”

குணா
           1992 ல் கமல் தனது நாயகியை கடத்தியிருந்தார். என்று எம் மனதை படத்துடன் ஒன்றிப் போக வைத்த கதையோட்டம் அதன் பின் வந்த பிரியமுடன், காதல் கொண்டேன், சின்னா, செல்லமே போன்ற படங்களைப் பார்க்கும் போது இதன் தாக்கம் தான் மனதில் இருந்து கொண்டே இருந்தது அதன் பின் காதலில் விழுந்தேன் படம் அந்த இடத்தில் பாதியை பிடித்துக் கொண்டது. இந்தப் படத்தை கமலின் நெருங்கிய நண்பரில் ஒருவரான சந்தானபாரதி இயக்கியிருந்தார். அதில் ஒரே சொட்டில் எடுக்கப்பட்ட அந்த சுற்றும் காட்சியும், அபிராமியே தாலட்டும் சாமியே பாடலும் காலத்தால் அழியாதது.

“குணா பலர் மனதில் அழியாத வினா..?”

சிவப்பு ரோஜாக்கள்
                              1978 ல் பாரதிராஜா அவர்களால் சிறீதேவியை கமலுடன் சேர்த்து வைத்து எடுக்கப்பட்ட படமாகும் இளமையிலேயே பெண்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் எப்படி மாறினான் என்பது தான் கதை. அவரின் முகபாவம் மிகவும் ரசிக்க வைக்கும் அதாவது தனியே அவர் கரம், செஸ் விளையாடும் தருணங்களும் படம் முடியும் தருணத்தில் நாயகிக்காக சிறையில் எங்கும் தருணமும் ரசிக்கவைக்கிறது.

“சிவப்பு ரோஜா என் மனதை கற்பழித்த ராஜா”

புன்னகை மன்னன்
                       1986 ல் பாலச்சந்தர் அவர்களால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் இரண்டு சொகமாக காதலை தந்தாலும் அதே சொகத்தை குள்ளக் கமலின் நகைச்சுவை சாப்பிட்டிருக்கும். ரேகாவிற்கு முத்தம் இடும் காட்சி பலரால் விமர்சிக்கப்பட்டாலும் அந்த இடத்தில் இருவரின் நடிப்பும் பலரால் கவனிக்கப்பட்ட ஒன்றாகும். ராஜம் பாலச்சந்தரும், புஸ்பா கந்தசாமியும் தயாரித்த இப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். ஒரு முறை இசைப்புயல் தனது பேட்டி ஒன்றில் இதில் வரும் “காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்” பாடலில் என் கைவண்ணமும் இருக்கிறது என்ற போது உண்மையில் எனக்கு இன்னும் பிரமிப்பாக இருந்தது.

“இவன் புன்னகைக்கே மன்னன்”

தேவர்மகன்
            1992 பரதன் இயக்கத்தில் உருவான படமாகும். நடிப்புக்கென்றே உறுதியாக வரைந்துரைக்கப்படும் இரு உயிர்கள் தோன்றிய படமாகும். இந்தியில் விரசாத் என இப்படம் தயரிக்கப்பட்டது. அத்துடன் ஒஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்ட இப்படத்தில் கௌதமி, ரேவதி ஆகியோர் நடிகைகளாக நடித்திருந்தார்கள். அதிலே தந்தை மகனுக்கான உரையாடல் மிகவும் ரசிக்க வைக்கும் முகத்துககு நேரே விவாத மனமும் மறுபுறத்தில் தேவருக்கான மரியாதையும் பிரதிபலிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். 

“தேவர்மகன் ஒரு அப்பழுக்கில்லாத குடி மகன்”

மகாநதி
        1993 ல் உருவான இப்படத்தை சந்தானபாரதி இயக்கியிருந்தார் கமல் சுகன்யா நடித்த இப்படம் ஒரு தந்தை மகளுக்கிடையேயான ஒரு பாசத் தேடலை விளம்பரமின்றி விபரமாகக் காட்டியது. அதில் ஒரு நாய் முக்கிய நடிகனாகியிருப்பதும் அதே தாக்கம் அன்பே சிவத்தில் இருப்பதும் தர்க்கிக்கப்பட வேண்டிய விசயம் தான். கமல் மட்டுமல்ல அவர் கதைகளும் ஒரு தூர நோக்காகவே இருக்கும் காரணம் இதே மோசடிப் பிரச்சனை 1994-1996 காலப்பகுதியில் இந்தியாவில் விஸ்வரூபமெடுத்திருந்தது.

“மகாநதி தமிழ் சினிமாவில் ஒரு வற்றாத நதி”

அவ்வை சண்முகி
                        1996 ல் கே எஸ் ரவிக்குமாரால் இயக்கப்பட்ட இப்படம் ஒரு புதிய கனவுக்கன்னியை திரையலகிற்கு தந்திருந்தது. (என்ன ஒன்று என்றால் முதல் படத்திலேயெ ஜெமினிக்கு ஜோடியாகிவிட்டார்) மினா, ஹீரா என இரண்டு பேர் நடித்திருந்தாலும் அதற்கு முழுபலத்தையும் கொடுத்தருந்தது கிரேசி மோகனின் கதையாகும். தேவா இசை வழங்க ஆர்.கே.ஹரி தயாரித்திருந்தார்.

“அவ்வை சண்முகி நான்கு திசையும் கவர்ந்த நான்முகி”

அன்பேசிவம்
                 கமல் படத்தை வரிசைப்படுத்திவிட்டு இந்தப்படம் பற்றி சொல்லாமல் போனால்; நான் ஒரு ரசனையற்றவன் என்பது வெளிப்படையான ஒரு உண்மையாகும். இது வரை நான் பார்த்த தமிழ் சினிமாவில் சமூகத்திற்கு ஒரு சிறந்த கருத்தைச் சொன்னபடமாக இதை; தான் சுட்டிக்காட்டுவேன். சுந்தர்.சி இயக்கிய இப்படத்திற்கான திரைக்கதையை கமல் உருவாக்க வசனத்தை மதன் எழுதியிருந்தார் அதற்கான இசையை வித்தியாசாகர் சேர்த்திருந்தார்.

“மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் மனிதன் மன்னிக்கத் தெரிந்தவன் கடவுள்”
இந்த வசனத்தை பல இடத்தில் நான் பாவித்திருக்கிறேன் அத்துடன் கடைப்பிடிக்கிறேன்.

ஆளவந்தான்
           கமலும் ராவினாரண்டன் மற்றும் மனிஷா கொய்லாரா நடித்த இப்படத்தில் அதிகமாக ஆதிக்கம் செலுத்திய கணணித் தொழில் நுட்பம் பலரை ஈர்க்காது போனாலும் நந்துவின் இடங்கள் கவனிக்கப்பட வேண்டியவையே. ஒரு தாய் பாசத்தை வித்தியசமான முறையில் காட்டியிருந்தார் சுரேஸ்கிருஸ்ணா இயக்கிய இப்படத்திற்கு சங்கர் மகாதேவன் இசையமைத்தது இன்னும் சிறப்பாக இருந்தது. இறுதிக் காட்சியில் தன் தாயுடன் சேர துடிக்கும் ஒரு மனநோயாளியின் மனதும் அந்த மேற்கத்தைய நடனக்காரியிடம் நாணயம் சுண்டம் தருணம் எம் மனதை சுண்டுகிறது.

           என்ன என் பார்வை எப்படியிருக்கிறது இது எனது மனதில் சட்டெனப் பட்ட படங்கள் என்பதை மறக்க வேண்டாம்

வேகமாக BROWSE செய்ய விவேகமான வழிகள்

சில சமயங்களில் சில தளம் திறக்க அதிக நேரம் எடுக்கும் அல்லது திறக்க மறுக்கும் அத்தகைய சமயங்களில் பிரச்சனை எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டு அந்த பிரச்னையை நீக்கமுடிய்ம்
இந்த மாதிரியாக பிரச்சனைக்குரிய காரணிகள்: 

  • நாம் பயன் படுத்தும் மூன்றாம் நபர் நிரலிகள்.அதாவது  அடுத்த தளத்திலிருந்து நாம் காப்பி செய்து நமது தளத்திலிடுபவை. நம்பகமான தளங்கலானால் பிரச்சனையில்லை அப்படியில்லாத புதிய தளத்திலிருந்து நாம் காப்பிசெய்து போட்ட நிரலிகள் சிலசமயம் நம்மிடமே விளையாடும், தேவையில்லாத விளம்பரங்கள்,தேவையில்லாத ஸ்க்ரிப்ட்கள் என நேரத்தை விரயமாக்கும்.
  • சில சமயம் நாம் பயன்படுத்தி வந்த படங்களோ அல்லது ஸ்க்ரிப்ட்களோ அதன் மூலப்பக்கத்திலிருந்து நீக்கப் பட்டிருந்தால் நமது தளம் லோடாக நேரம் பிடிக்கும்
  • பொதுவாக நாம் பயன்படுத்தும் சில திரட்டிகளின் ஓட்டுப்பட்டனும் நேரம் பிடிக்கும். உதாரணமாக அண்மையில் செயல்படாமல் போன ஒரு திரட்டியின் வாசகர்கள் அனுபவித்திருப்பார்கள்.
  • முந்திய இடுகையில் கூறிய காரணங்களாலும் நமது தளம் திறக்க நேரம் எடுக்கும் 
சரி எப்படி எளிதில் பிரச்னைக்கு வலைப்போட்டு பிடிப்பது?  வலை போட வேண்டுமானால் இந்த வலைதளங்களுக்கு போங்கள்
உங்கள் பக்க முகவரியை மட்டும் கொடுங்கள் அவை திறனாய்வு செய்து அறிக்கையை சமர்பிக்கும். அதன் படி பிரச்சனைக்குரிய நிரலிகளைக் கண்டு தூக்கிவிடுங்கள். ஒவ்வொரு தரவுகளின் தரவிறக்க நேரம் தெரிவதால் நீக்கவேண்டியத்தை நீக்கி முடக்க வேண்டியதை முடக்கி நமது வேகத்தை நாமே நிர்ணயிக்கலாம்.
உதாரணாமாக:

இப்படி ஒரு தளத்திற்கு ஆய்வறிக்கை வருகிறது கீழுள்ள குறிப்பின் படி பச்சை நிறம் தரவிரக்கத்தைக் குறிக்கிறது. எனவே தரவிறக்கம் ஆக இந்த படம்/ஜாவா கோப்பு  நேரம் எடுக்கிறது என கண்டுபிடித்து நீக்கிவிடவும்.
இந்த தளத்தின் மூலம் வெவ்வேறு உலாவிகளில் மற்றும் வெவ்வேறு இடங்களில் நமது தள வேகத்தைக் கணிக்கும் வசதியுள்ளது. மேலும் தனது அறிக்கையில் நாம் எந்தெந்த தளங்களின் கோப்புகளை பயன்படுத்துகிறோம் எனவும் சுட்டிக்காட்டும். 

இந்த தளத்தின் மூலம் விதவிதமாக கோப்புகளை சோதனைச் செய்யலாம் 

இதில் நமது தளத்திற்கு உலகளாவிய பொது தரவரிசை மதிப்புத் தரும்.

கட்டாயம் இந்த தளங்கள் வித்தியாசமானவை பயன்படுத்திப்பாருங்கள். யாரேனும் பாதிக்கப்பட்டால் இந்த தளங்களைக் கொண்டு சீர்படுத்திக்கொள்ளுங்கள் 

மேலும் கூகிள் குரோம் மூலமும் சோதிக்கலாம் மேலதிக தகவல் இங்கே


கொஞ்சம் டெக் டிப்ஸ்
  • image Map டெக்னிக் பயன்படுத்தி ஒரே படத்தை பலமுறை பயன்படுத்தலாம்
  • JS CSS நிரலிகளை தள நிரலியுடன் சேர்க்காமல் தனி கோப்புகளில் External லிங்க்காக கொடுங்கள். இதன் மூலம் ஒருமுறை திறக்கப்பட்ட தளத்தின் கோப்புகள் cache கோப்புகளாக சேமிக்கப்படும்.
  • அதிகமான முறை ஜாவா ஸ்க்ரிப்டை திறந்து முடுவதைத் தவிர்த்து ஒரே தொகுப்பில் அனைத்து நிரலியையும் இட்டுக்கொள்ளுங்கள்.
  • முடிந்தளவு  படங்களுக்குப் பதில் css டிசைனில் கிராபிக்ஸ் செய்யுங்கள்

BROWSER - இல் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்

நாம் இணையத்தில் செலவிடும் நேரங்களில் அதிக நேரத்தை இணைய உலாவி முன்னே செலவிடுகின்றோம். நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள keyboard Shortcut தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.
அவர்களுக்காக இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளுக்கான keyboard Shortcuts
கீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளலாம்.

இங்கு Internet Explorer, Firefox, google chrome, Opera, Safari ஆகிய இணைய உலவிகளுக்கான keyboard Shordcuts தரப்பட்டுள்ளன

Ctrl + N : புதிய விண்டோவை open பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + T : புதிய tab ஐ open பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு உதவும்.

Ctrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு உதவும்.

Ctrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு உதவும்.

F5 : திறந்திருக்கும் இணையப் பக்கத்தை Refresh செய்வதற்கு உதவும்.

Ctrl + F5 : வன்மையான

Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache

எல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத்

தரும்.
Ctrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + E : இது உங்கள் cursor ஐ Browser இன் search bar க்கு நகர்த்தும்.

Ctrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு உதவும்.

Ctrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும் உதவும்.

Ctrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.

Home / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு உதவும்.

Ctrl + U : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தின் Source code ஐப் பார்ப்பதற்கு உதவும்.

Ctrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில்

இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும்

போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.

Ctrl + left Click (Opera இல் மட்டும் ) : நாம்

பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும்

Image ஐ Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ

அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்

Ctrl + Shift + T : பார்த்து விட்டு கடைசியாக மூடிய tab ஐ மீளத் திறக்க முடியும்

Ctrl + Enter : http://www.

, .com என type செய்து நேரத்தை செலவழிக்காமல் இணையத்தளத்தின் பெயரை type

செய்து விட்டு Ctrl + Enter அழுத்தினால் http://www. , .com என்பனவற்றை
Browser ஆனது தானகவே போட்டுக்கொள்ளும். உதாரணமாக http://www.google.com/ என type செய்வதற்கு google என type செய்து Ctrl + Enter ஐ அழுத்துதல் வேண்டும்.

Shift + Enter : http://www. , .net என்பதை பூர்த்தி செய்வதற்கு

Ctrl + Shift + Enter : http://www. , .org என்பதை பூர்த்தி செய்வதற்கு

உங்கள் COMPUTER - இன் முழுவிவரத்தையும் அறிய

நம்முடைய கணிப்பொறியை பற்றிய முழுவிவரத்தை பற்றி நாம் அறிய வேண்டுமெனில் System Information-ல் சென்று பார்க்க வேண்டும். அவ்வாறு நாம் பார்த்தாலும் நம்மால் நம்முடைய கணிப்பொறியை பற்றிய முழுவிவரத்தையும் நம்மால் அறிய முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவே அறிய முடியும். ஒரு சிறிய மென்பொருளின் துணையுடன் நாம் கணினியில் நிறுவப்பட்ட ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் தொடங்கி ஹார்ட்வேர் வரை அனைத்தையுமே ஒரே மென்பொருளின் உதவியுடன் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளின் உதவியுடன் நம்முடைய கணினியில் நிறுவியிருக்கும் மென்பொருகளை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய முடிய்ம். மேலும் இந்த மென்பொருளை கொண்டு சாப்ட்வேர், ஹார்ட்வேர் பற்றிய அனைத்து வித தகவல்களையும் பெற முடியும்.

உங்களுடைய நண்பரின் கணினியை பற்றி தெரிய வேண்டுமெனில் நீங்கள் Ram எவ்வளவு Hard Disk எவ்வளவு எனப்தை தனியே பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரே இடத்தில் இருந்தப்படியே இந்த தகவல்கள் அனைத்தையும் நீங்கள் அறிய முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த மென்பொருளில் அடங்கியுள்ளது

வலைமனை விலைக்கல்ல

                     சோழ மன்னர் கோப்பெருஞ்ச்சோழனும், புலவர் பிசிராந்தையரும் ஒருவரையொருவர் பார்த்ததும் இல்லை; பழகியதுமில்லை  ஆனால் அவ்விருவரும் ஒருங்கிணைந்த உள்ளத்தினர். அப்போது இணையம் இல்லை; ஈமெயில் இல்லை. ஆனால், மன்னருடன் வடக்கிருந்து உயிர் நீத்தார். அது நட்பு. அதே நிலையில் இன்று பல மனங்களை   கனப்பொழுதில் இணைப்பதே வலைப்பூ.


                  "மன்னாதி மன்னர்! மார்த்தாண்ட மகாராஜா!! பராக்... பராக்" இது பழங்கால மன்னர்களின் நடமாட்டத்தை நாடறிய செய்யப்பட்ட ஏற்பாடு.பின்னர்,மன்னர்கள் விரும்பி தெரிவிக்கும் செய்தி தெரு தெருவாக முரசறைந்து தெரிவிக்கப்படும். நல்ல விஷயங்கள் கல்வெட்டில் செதுக்கப்படும்; ஏனையவை அந்தப்புரத்தில் பதுக்கப்படும்! இவ்வாறு மக்கள் காதில் பூச்சுற்றிய காலத்தில் இருந்த தொடர்பு சாதனங்கள் சீனாவில் வேர்விட்டு ஜெர்மனியில் மரமாகி  நவீன காலத்தில் வலைப்பூக்களாக பூத்து குலுங்குகின்றன.



                 இந்த பரிமாண வளர்ச்சி புதிய காலக்கட்டத்தை தோற்றுவித்துள்ளன! தமிழ்வலைப்பூக்களின் வளர்ச்சி தமிழகத்தில் மட்டுமல்ல,மலேசியா,சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளன.இந்த வளர்ச்சியில் என்ன  அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது?


                வாடாமல்லி போன்ற பூக்கள் செடியிலிருந்து பறித்து எடுத்தப் பின்னும் சில நாட்கள் வாடாமலும்,வதங்காமலும் இருக்கும்.ஆனால் மல்லிகை போன்ற பூக்கள் காலையில் அரும்பாகவும், மாலையில் பூவாக மலர்ந்து நறுமணம் பரப்பி மறு நாள் வாடி வதங்கி விடும். அது சரி, அனிச்சப்பூவோ! அவ்வாறில்லை. செடியிலிருந்து பறித்த முகர்ந்தவுடனே... வாடி வதங்கி விடும்.


                 வலைப்பூக்களை  (சு)வாசிக்கும் வலைப்பிரியர்களின் மனத்துடன் ஒப்பீடும் போது, அனிச்சப்பூ போன்று மென்மையான உள்ளம் கொண்டவர்கள்.  அத்தகைய மென்மை உள்ளமுடைய வாசகர்கள் விரும்புவதை வலைப்பூக்கள் தருகின்றனவா?  வலைப்பூக்கள் தருவதை வலைப்பிரியர்கள் விரும்புகின்றனரா? அல்லது உள்ளுக்குள் உறைந்து கிடக்கிற, உறங்கிக் கொண்டிருக்கிற பாலுணர்வு மற்றும் வன்முறை சார்ந்த குணங்களைத் தூண்டி விடுகிறதா?  இக்கேள்விகளின் பின்னணியில்தான் வலைப்பூக்களில் வெளி வரும் விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


                  தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் ஷாஹஜி காலத்தில் ஒரு புலவரால் எழுதப்பட்ட நூலை இடதுமிருந்து வலமாப் படித்தால் அது ராமாயணம். வலமிருந்து படித்தால் அது பாகவதம். அப்படி அர்த்தம் வருகிற மாதிரி சுலோகங்கள அமைக்கப் பட்டிருக்கும்.  இவ்வாறு புதுமையாக எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. உலகின் எந்த மூலையில் உள்ளவரும், வலைப்பூவின் முகவரியில் உள்ளே நுழைந்து "நைட் மப்பு தீர வில்லை; இன்னிக்கு காலையில மஞ்சளாக போனது' என்பதும் வலையில் வடைகளை மாற்றி போடுவதுதான் வலைப்பூக்களின் வளர்ச்சியா?