Wednesday, October 26, 2011

காதலைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

10 லட்சம் வருடங்களுக்கு முன்தான் ஆப்ரிக்க சமவெளியில் காதல் பிறந்தது. அப்போது தான் மூளையில் முதல் நியூரோகெமிக்கல் மனித இரத்தத்தில் பாய்ந்து, காதலின் காரணத்தால் அசட்டுச்சிரிப்பும், வியர்வையும் ஏற்பட்டது.


காதல் என்பது குழப்பமான ஓர் உணர்வு. கோபம், பயம் போன்றவற்றை விஞ்ஞானக் கருவிகளால் அளக்கமுடியும். ஆனால் காதல்... அதன் அடையாளங்கள் குழப்பமானவை.  அஜீரணரமாக இருக்கலாம். பைத்தியமாக இருக்கலாம். காதலுக்கென்று தனிப்பட்ட அடையாளங்கள் தேடுவது குழப்பமாக இருந்தது. காதலிக்கும்போது, கன்னம் கன்னம் தொடும்போது, கையும் கையும் படும்போதும் மூளையிலிருந்து Amphitamines,Dopamine, Nor Epi Nephrine,   குறிப்பாக Phenile Ethyl amine போன்ற இரசாயனப் பொருட்கள் இரத்தத்தில் பாய்கின்றன. காதலும். பதற்றமும் ஒன்று  போல் அறிந்தனர்.  காரணம் இரண்டு உணரச்சிகளின்  போதும். இதே கெமிக்கல் தான் இரத்தத்தில் கலக்கின்றன. காதல் என்பது இயற்கை தரும்  போதை.  போகப் போக இந்த Ethyl amine பழகிப்போய், ஒருவாரத்திற்க்குப்பின் காதலியைத் தொட்டால் மட்டும் போதாது. கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. கடைக்கண் பார்வை மட்டும் போதாது. படுக்கை அருகே செல்ல வேண்டியிருக்கிறது.இவையெல்லாம் சுலபமாக கிடைத்துவிட்டால், வேறு நபரிடம் காதல் செய்வதால் தான் இந்த கெமிக்கல் மீண்டும் சுரக்கிறது. இருந்தும் பல காதல்கள் வருடக்கணக்கில் நீடிக்கின்றன. காரணம் வேறு வகை கெமிக்கல்கள்.மூளையில் Entorphin என்கிற மற்றொரு கெமிக்கல் சுரந்து காதலை நீட்ழக்க வைக்கிறது.Oxytocin என்னும் பொருள் காதலுக்குக் காரணம். நரம்பை நிரடி,  தசைகளைச் சுருக்குகிறது. பெண்களிடம் இதே கெமிக்கல் தான் Uterus சுருங்கவும், முலைப்பால் சுரக்கவும், காதலனைக் கொஞ்சவும் பயன்படுகிறது. ஆண், பெண் சேர்கையின்போது இருவர் உடலிலும் Oxytocin அளவு 3to 5வரை அதிகரிக்கிறது. கடைசிகட்ட வாணவேடிக்கைகெல்லாம் காரணம், இதே கெமிக்கல் தான்.மேற்கத்திய நாகரீத்தில் 4 வருடத்திற்குப்பின் தான் இல்வாழ்வில்  முதல்அலுப்பு தோன்றுகிறது.  திருமணமாகி 4 வருடத்தை நெருங்குபவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இன்னும் 4 ஆண்டுகள் காதல் தாங்கும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதும் மொத்தத்தில் 5#  ஜீவராசிக்குத்தான். மனிதர்கள் பொதுவாக ஒருத்தி. சிலவேளை மற்றொருத்தி என்கிற கொள்கையைத்தான் கடைபிடிக்கிறார்கள். இந்த சிலவேளை மற்றொருத்திக்குக் காரணம் ஜீன்களின் புதிய சேர்க்கைகளை முயன்று பார்த்து, அடுத்த தலைமுறைக்குக் கொஞ்சம் சிறப்பான தலைமுறைகளை உண்டாக்கும் தேவை என்கிறார்கள். Homosex  க்கு ஆதார காரணம் காதல்தான் என்றாலும் பிறப்பின்போது ஏற்பட்ட சில Bio Chemical Trouble தான் காரணம். இயற்கை நம்மை ஒருவகையான நபருக்குத்தான் தயார் செய்து வைத்திருக்கிறது. நம் ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்திலும் ஒரு பிரத்யேக  நாயகி இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட காதல் வரைபடம். இந்த உருவம் நம் ஆரம்ப காலத்தில் அழமனதில் உருவாகிறது.