கோலிவுட்டை 'ஜாலிவுட்’ ஆக வைத்து இருக்கும் கிச்சுகிச்சு காமெடியன்கள் பற்றிய மினி சினி பயோடேட்டா இங்கே...

இப்போ வரை சோறு போடுறதும் அதான். 100 படங்கள் நெருங்கிட்டேன். 'கண்டேன்’ல சாந்தனுவும் சந்தானமும் என்னைத் துரத்திட்டு வருவாங்க. நான் தப்பிப்போய் சகதியில விழணும். இதுதான் ஸீன். ஃபைட்டர்ங்கிறதால உண்மையிலேயே தாண்டி சேத்துல விழுந்தேன். கண்ணுல மண்ணு போய் இப்பவும் மருந்து போட்டுட்டு இருக்கேன். ஏதோ ஒரு ஸீன்லயாவது என் ஃபைட்டிங் திறமையைக் காண்பிச்சு 'ஃபைட் மாஸ்டர்’ ஆகணுங்கிறதுதான் என் ஆசை. யார் யார்னு பேர் சொல்ல மாட்டேன். ஆனா, இப்போ பெரிய ஸ்டாரா இருக்கிற ஹீரோக்கள் பலருக்கு நானும் நண்பர் கோவை பார்த்தசாரதியும் ஜிம்னாஸ் டிக்ஸ், ஸ்டன்ட் பயிற்சிகள் கொடுத்திருக்கோம். நாம பெரிய ரேஞ்சுக்கு வந்த பிறகுதான், அதை அவங்க வெளியே சொல்வாங்கபோல. அக்கா பொண்ணு மாலதியைக் கல்யாணம் முடிச்சேன். ஒரே மகன் வாசன் முரளி. எல்.கே.ஜி. படிக்கிறான். சான்ட்ரோ கார் வெச்சிருக்கேன். ஆனா, தேவைன்னாதான் காரை எடுப்பேன். மத்த நேரம்லாம் கைனடிக் ஹோண்டாதான். பாண்டிச்சேரி சபாநாயகர் ஸ்கூட்டர்ல போனா, 'சிம்பிளா இருக்காருப்பா!’னு கொண்டாடுறாங்க. ஆனா, இந்த முத்துக்காளை பைக்ல போனா, 'இல்லாதவன்’, 'கருமி’ன்னு கடுப்படிக்கிறாங்க. அது ஏண்ணே?''
'அல்வா’ வாசு: ''நம்ம ஒரிஜினல் பேரு ரொம்ப நல்ல பேருண்ணே. வாசுதேவன். 'அமைதிப் படை’ படத்தில் கஸ்தூரிக்கு அல்வாக்குள் அபின்
வெச்சுக் கொடுத்ததால், 'அல்வா’ வாசு ஆகிட்டேன். சொந்த ஊர் மதுரை. வீட்டுக்கு ஒரே பையன். எக்கச்சக்க செல்லம். பொத்திப்பொத்தி வளத்தாக. அமெரிக்கன் காலேஜ்ல பி.ஏ. முடிச்சேன். வீட்ல ஓவர் செல்லம் தாங்காம ஃப்ரெண்டோட பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிடிச்சு மெட்ராஸ் வந்தேன். பீச், பூங்கானு சுத்திப் பார்க்கலாம்னுதான்பிளான். ஆனா, சென்னையில் கால் வெச்சதுமே நேரா வாகினி ஸ்டுடியோ போய் நின்னார் நம்ம நண்பர். காலேஜ்லயே மிமிக்ரி, பாட்டு, நாடகம்னு பட்டையைக் கிளப்பினவய்ங்கதானே நாம. அப்படியே சினிமா எக்ஸ்பிரஸ் ஏறிட்டேன். முதல்ல மணிவண்ணன் சார்கிட்ட 'கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தில் உதவி இயக்குநரா சேர்ந்தேன்.

'வாழ்க்கை சக்கரம்’ படத்துக்கு ஹீரோ, வில்லன் கூடவே டிராவல் பண்ற நக்கல் கேரக்டருக்கு யாரை நடிக்கவைக்கலாம்னு மணிவண்ணன் சார் பயங்கரமா யோசிச்சுட்டு இருந்தப்ப, 'பேசாம நீயே நடிச்சிடுய்யா’ன்னு என் பக்கம் பார்த்துச் சொன்னார் சத்யராஜ் சார். 'அட... கைக்குள்ளயே ஆளை வெச்சுக்கிட்டு, ஊரெல்லாம் தேடிட்டு இருந்திருக்கேனே’னு மணிவண்ணன் சாரும் ஓ.கே. சொன்னார். இப்போ வடிவேலுகூட சேர்ந்து ஏகப்பட்ட படங்கள் பண்ணியாச்சு. சினிமா, டி.வி, கோயில் திருவிழா, காது குத்து, கல்யாணம், வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகள்னு வாழ்க்கை பரபரப்பா ஓடிட்டு இருக்குண்ணே. வீட்டுக்காரம்மா அமுதா. ஒரே பையன். சந்தோஷமா இருக்கேண்ணே!''

''பட்டுக்கோட்டை பக்கத்துல அணைக்காடு சொந்த ஊர். பெரிய பண்ணையாருப்பா நானு. வீடு, வயல் வரப்புன்னு பத்துப் பன்னெண்டு கோடிக்கு சொத்து தேறும். ஆசை வெக்கம் அறியாதுன்னு சொல்ற மாதிரி, சினிமா ஆசையும் வசதி வாய்ப்பு பார்த்து வர்றது இல்லை. 1997-ல் களஞ்சியம் சார் 'பூந்தோட்டம்’ படத்துல அறிமுகப்படுத்தினார். அதுல ஆரம்பிச்சு, இப்போ விஜய் தம்பியின் 'வேலாயுதம்’ வரை ஆசை மட்டுப்படவே இல்லை. சம்சாரம் புஷ்பவள்ளி. ரெண்டு பையன். ஒரு பொண்ணை சிங்கப்பூர்ல கட்டிக் கொடுத்திருக்கேன். உள்ளூர் மந்திரிமாரைக்கூடத் தெரியாத தமிழ் மக்கள் என்னை மாதிரியான காமெடியனை எங்கே போனாலும் அடையாளம் கண்டுக்கிறாங்க. இதுதான் சினிமா பவரு தம்பி. எங்கே போனாலும் கையெழுத்து வாங்குறாங்க. கூட நின்னு போட்டோ எடுத்துக்கிறாங்க. வேற என்ன தம்பி வேணும்?''

'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ படத்துல கவுண்டமணி அண்ணன், செந்தில்கூட பெரிய காம்பினேஷன். அப்பதான் டைரக்டர் எம்.என்.ஜெயசுந்தர், 'கேதீஸ்வரன்’ங்கிற என் பேரை 'போண்டா மணி’னு மாத்தினார். நான் போண்டா நிறைய சாப்பிடுவேன். அந்த போண்டாவையும், கவுண்டமணியில் உள்ள மணியையும் பிச்சி எனக்குப் பேர்வெச்சார். நான் அப்ப ரவுண்டா வெட்டுத் தட்டு மாதிரி முடி வெட்டி இருந்தேன். அதைப் பார்த்துட்டு கவுண்டமணி அண்ணன், 'அட நாயே... நாயே! தெருவுல போற கண்ட நாய்கிட்டலாம் மண்டையைக் கொடுத்தா, இப்படித்தான் நக்கிவிட்ரும்’னு முதல் நாளே ஏக கலாட்டா பண்ணிட்டார்.
'கண்ணும் கண்ணும்’ படத்துல வடிவேலுகிட்ட 'அண்ணே! போலீஸ்காரங்க என்னை விரட்டிட்டு வர்றாங்க. உங்ககிட்ட நான் எங்கேன்னு கேட்பாங்க. எதையும் சொல்லிப்புடாதீங்க. அடிச்சும் கேட்பாங்க. அப்பயும் சொல்லிப்புடாதீங்க’ன்னு காமெடி பண்ணது இப்பவும் என்னைப் பரபரப்பா ஓடவெச்சுட்டு இருக்கு. என்கூடப் பிறந்தவங்க மொத்தம் 16 பேர். குடும்பம் குட்டி என்னாச்சுன்னு ஊருக்குப் போய் பாக்கலாம்னா, எனக்கு இன்னும் இந்திய பாஸ்போர்ட் தர மாட்டேங்கிறாங்க. ஜே.கே.ரித்தீஷ் சார்தான் பாஸ்போர்ட் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கார். சிங்கமுத்து, ராதாரவி, விஜயகாந்த் அண்ணன்மார்களின் உதவியால் நடிகர் சங்கத்துலவெச்சே எனக்குக் கல்யாணம் நடந்தது. இப்போ ரெண்டு பசங்க. வாழ்க்கை சந்தோசமா இருக்குண்ணே!''


''சொந்த ஊர் மதுரை பக்கத்துல திருமங்கலம். 'சினிமாவில் நடிக்க ஆசை உள்ளவர்கள் அணுகவும்’னு நியூஸ் பேப்பர் விளம்பரத்தை வெட்டி எடுத்துட்டு சென்னைக்கு ரயில் ஏறிட்டேன். திருவொற்றியூர் பக்கத்துல பாத்ரூம் சைஸ்ல ஒரு ரூம் போட்டு காசு வசூல் பண்ணிட்டு இருந்துச்சு ஒரு கும்பல். '500 ரூபாய் கொடுங்க. பிறகு, உங்க பையன் கையத் தூக்கினாலும், காலைத் தூக்கினாலும் காசு கொட்டும்’ னாங்க. டுபாக்கூர் பார்ட்டிங்கன்னு தெரிஞ்சு தப்பிச்சு, பாக்யராஜ் சார் ஆபீஸ்ல போய் நின்னேன். பாக்யா பத்திரிகையில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அங்கே என்னைப் பார்த்த லிங்குசாமி சார் மூலமா 'ஜி’ பட வாய்ப்பு கிடைச்சது. ஆரம் பத்துல சினிமா ரீச் எனக்குப் புரியலை. ஆனா, இப்போ எங்கே போனாலும் நம்மளைக் கண்டுக்குறாங்க. 'அம்பாசமுத்திரம் அம்பானி’யில் முழு நீள காமெடி கேரக்டர். விகடன்லயே என்னைப் பாராட்டி எழுதி இருந்தாங்க. பாக்யராஜ் சார், இயக்குநர் குருநாத், கருணாஸ் இவங்க எல்லாருக்கும் நன்றி!''
|