Thursday, November 10, 2011

பெண்ணின் அங்கங்களை வெட்டி உண்ட வங்கி ஊழியர்கள்

சில மனிதர்களின் எண்ணங்கள் ஆசைகள் வியப்பூட்டுபவையாகவோ அல்லது அதிர்ச்சி தருபவையாகவோ இருக்கும் என்பது நான் கற்ற உளவியல் எனக்கு சொல்லித்தந்த பாடம்.மற்றவர்களின் கவனத்தை தன் மீது ஈர்க்க சிறு பிள்ளைகள் சக பிள்ளையை அடிப்பது அல்லது அழுவது போன்ற செயல்களும் இதற்குள் அடங்கும்.



ஆனால் பெரியவர்கள் அதுவும் பொதுத்துறையில் உள்ள ஒருவர் மற்றவர்களை கவர்வதற்காக தன் வங்கி அலுவலகத்தில் வைத்து பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டி உண்பதென்பதை உங்களால் ஏற்கக்கூடியதாக உள்ளதா?


இந்த முகஞ்சுழிக்கும் செயல் குறித்த வங்கி ஊழியரின் பிறந்த நாளில் நடந்திருப்பது வேறு. இந்த பிறந்த நாள் விழாவில் குறித்த வங்கியின் பெண் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்ததை நாம் எவ்வாறு பார்ப்பது?

சரி இதெல்லாம் எங்கேயோ மேற்கத்தைய நாட்டில் அரங்கேறியிருக்கும் என தப்புக் கணக்கை மட்டும் போட்டு விடாதீர்கள்.எல்லாம் இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பில் அரங்கேறியுள்ளது.

குறித்த ஊழியர் பெண்'கள் தொடர்பாக கொண்டிருக்கும் வக்கிர மனநிலையை நாம் இதன் ஊடாக அறியலாமல்லவா? நமக்கு புரியும் இந்த விசயம் ஏன் சக பெண்பணியாளர்களுக்கு புரியவில்லை? இவ்வாறான வக்கிர மனநிலை உள்ள ஊழியரை குறித்த தனியார் வங்கி ஏன் இன்னும் வேலையில் வைத்துள்ளது?

இவ்வாறான பெண்களை அவமதிக்கும் செயல்களை பெண்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் ஏன் எதிர்க்கவில்லை? ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

இலங்கையில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் பேணப்பட்டு வந்த இலங்கைக்கே உரித்தான பெண்களை மதிக்கும் கலாச்சாரம் போரின் பின்னர் விற்கப்பட்டு விட்டதா? இதை இலங்கை மக்கள் எவ்வாறு ஜீரணிக்கிறார்கள்? இவ்வாறானவர்களால் வங்கிகளில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பு ஆபத்தாக உள்ளதா?

என்று பல கேள்விகளை நம்முன் எழுப்பியுள்ள இந்த சம்பவத்தில் வெட்டப்பட்டது பெண்ணின் அந்தரங்க உறுப்பு வடிவிலான் கேக். பிறந்த நாளுக்கு கேக் செய்ய வேறு டிசைன்கள் எவ்வளவோ இருந்தும் ஆபாசமான வடிவில் செய்யப்பட்ட கேக் வெட்டப்பட்டதை சாதாரண விசயமாக நாம் பார்த்து விட முடியாது.

மேலே உள்ள படத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட குழுப்படத்தில் அவர்களின் கைகள் எங்குள்ளது என்பதை அம்புக்குறியால் காட்டியுள்ளேன்.அதை வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். குறித்த கேக்கின் படங்கள் கீழே தரப்படுகிறது.







படங்கள்: தமிழ் சி.என்.என்

உப்பு போட்டா போதும்.. கம்ப்யூட்டர் டிஸ்க் சைஸ் 6 மடங்கு அதிகரிக்கும்


கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.





இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கம்ப்யூட்டரின் மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.

டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின்போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும்போது, ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது, டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கம்ப்யூட்டருக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது. இவ்வாறு ஜோயல் கூறினார்.

ஐஸ்வர்யாராய்க்கு பிரசவம்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நாளை அதாவது 11-11-11ல் பிரசவம் நடக்கிறது.


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நாளை 11-11-11 என்னும் அரிய தேதி வருவதால் அன்றே பிரசவம் நடக்கவிருக்கிறது. இதற்காக ஐஸ்வர்யா ராயை மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு துணையாக கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் மற்றும் மாமியார் ஜெயா பச்சன் ஆகியோர் தங்கியுள்ளனர்.
பச்சன் குடும்பத்தினருக்காக மருத்துவமனையின் 5வது மாடியில் ஸ்பெஷல் அறை கொடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முக்கியமான குடும்பம் தங்கியிருப்பதை அடுத்து மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மருத்துவமனை பாதுகாவர்கள் வழக்கமாக 6 மணி நேரம் பணியாற்றுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை முன்னிட்டு அவர்களை 12 மணி நேரம் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர்களும், போலீசாரும் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் தங்கியிருக்கும் அறைக்குள் பார்வையாளர்கள் யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.