Friday, December 16, 2011

இன்டர்நெட் - கவனக்குறைவால் பலியாவோர்


இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.

இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.

1. முன்பணம் கட்டாதீர்கள்:

ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும்.

இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண் தரலாமா?

மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல் தரலாமா?

ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்:

பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி; உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்:

இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.

6. பாதுகாப்பு வழிகளைக் கடைப் பிடியுங்கள்:

இந்த மலரில் பல முறை ஆன் லைன் வர்த்தகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எழுதி வந்திருக்கிறோம். அவற்றை அவசியம் கடைப்பிடிக்கவும். இணையத்தில் எப்போதும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற எச்சரிக்கையுடனேயே அதனை அணுகினால், நிச்சயம் நீங்கள் பலியாக மாட்டீர்கள்

படிக்க முற்பட்ட ஒரு முஸ்லிம் சகோதரிக்கு நிகழ்ந்த கொடுமை

வங்காளதேசத்தை சேர்ந்தவர் ரபிகுல் இஸ்லாம் (வயது 30). இவரது மனைவி ஹவா அக்தர் ஜுய் (வயது 21). இஸ்லாம் அதிகம் படிக்காதவர். திருமணமானதும் தனது மனைவியை பிரிந்து ஐக்கிய அரபுநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். 


அப்போது ஹவா அக்தர் கல்லூரிக்கு சென்று படித்தார். இதை ரபிகுல் இஸ்லாம் விரும்பவில்லை. படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் சமையல் வேலையை மட்டும் பார் என்று டெலிபோனில் பேசும்போது கூறினார். அதை ஹவா அக்தர் காதில் வாங்கி கொள்ளவில்லை. தொடர்ந்து படித்தார்.


இந்த நிலையில் திடீரென இஸ்லாம் வங்காள தேசத்துக்கு திரும்பினார். கணவர் திரும்பி வந்ததால் ஹவா அக்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தனது மனைவியிடம் உனக்கு அதிசயமான பரிசு பொருள் கொண்டு வந்து இருக்கிறேன் என கூறிய ரபிகுல் இஸ்லாம் அவரது கண்களையும், கைகளையும் கயிற்றால் கட்டினார். வாயில் பிளாஸ்திரியால் ஒட்டினார். 


பின்னர் ஈவு இரக்கமின்றி தனது மனைவி ஹவா அக்தரின் வலது கையில் உள்ள 5 விரல்களையும் வெட்டினார். தனது பேச்சை கேட்காமல் கல்லூரிக்கு சென்று படித்ததற்காக இந்த தண்டனை வழங்கியதாக கூறினார். இதற்கு அவரது உறவினர்களும் உடந்தையாக இருந்தனர். 


வேதனையால் துடித்த ஹவா அக்தர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வெட்டப்பட்ட அவரது விரல்களை ஒட்டி வைக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். ஏனெனில் விரல் துண்டான 6 மணி நேரத்துக்குள்தான் ஆபரேசன் செய்து மீண்டும் சேர்த்து வைக்க முடியும் என கூறிவிட்டனர். ஆனால் வெட்டிய விரல்களை அவரது உறவினர் ஒருவர் குப்பையில் வீசிவிட்டார். அவற்றை தேடி எடுத்து வருவதற்குள் நேரமாகி விட்டது என ஹவா அக்தர் தெரிவித்தார். 


இதற்கிடையே கொடூர மனம் படைத்த ரபிகுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். தற்போது ஹவா அக்தர் தனது தந்தை வீட்டில் தங்கியுள்ளார். இனி தனது கணவருடன் வாழ விரும்பவில்லை என கூறிவிட்டார். அதே நேரத்தில் இடது கையால் எழுதி பழகி வரும் அவர் மீண்டும் கல்லூரி படிப்பை தொடருவேன் என தெரிவித்துள்ளார். 


இந்த கொடிய செயலில் ஈடுபட்ட ரபிகுல் இஸ்லாமையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி வங்காளதேச மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரத்தின் சொல்படியே ராசா செயல்பட்டார்: நீதிமன்றத்தில் சுவாமி சாட்சியம்

 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிவுறுத்தல்படியே, முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா செயல்பட்டதாக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று சாட்சியம் அளித்தார். 

இருவரும் இணைந்தே முடிவுகளை எடுத்ததால், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என சுப்பிமணியன் சுவாமி கேட்டுக்கொண்டார். 

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கக் கோரும் வழக்கில், முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். 
நீதிபதி ஓ.பி.சைனியிடம் அவர் சாட்சியம் அளிக்கையில், "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா மட்டுமே தனியாக குற்றவாளியாக முடியாது. ப.சிதம்பரத்துடன் இணைந்து தான் அவர் குற்றம் புரிந்தார். 

கடந்த 2003 அமைச்சரவை முடிவின்படி, ராசாவும் சிதம்பரமும் தான் ஸ்பெக்டரம் விலையை நிர்ணயிப்பதற்கு அதிகாரம் படைத்தவர்களாவர். 

மாநிலங்களவையில் நடப்பு ஆண்டு 24-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்கையில், '2003-ம் ஆண்டின் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில், மத்திய நிதியமைச்சகமும், தொலைத்தொடர்புத் துறையும் சேர்ந்து, விலை நிர்ணயம் விவகாரத்தைப் பார்த்துக் கொண்டது,' எனக் குறிப்பிட்டிருக்கிறார்," என்று நீதிபதியிடம் சுவாமி விளக்கினார். 

மேலும், சில ஆவணங்களை முன்வைத்து, சுப்பிரமணியன் சுவாமி தனது தரப்பு சாட்சியத்தை அளித்தார்.

இதையடுத்து, ப.சிதம்பரத்துக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமியின் சாட்சியம் வரும் ஜனவரி 7-ம் தேதி தொடரும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி சைனி அறிவித்தார். 

இந்த வழக்கை ஜனவரி 7-க்கு ஒத்திவைத்ததைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, " 'நீங்கள் அளித்துள்ள நான்கு ஆவணங்களின் நகல்கள் போதுமானதாக இருப்பின், எந்த சாட்சிகளையும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லாது போக சாத்தியம்' உண்டு என்று நீதிபதி குறிப்பிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் மூலம், தேவைப்பட்டால், விசாரணைக்கு நேரடியாகவேச் சென்றுவிடலாம்," என்றார்.

நான்கில் ஒரு பெண்கள் டீனேஜிலே தங்கள் கற்பை இழக்கின்றனர் - அதிர்ச்சியான ஆய்வறிக்கை!


இன்றைய காலகட்டத்தில் பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் உடலுறவுக்கான வயதெல்லையை விட குறைவான வயதில் உடலுறவு கொண்டு கற்பை இழப்பதாக NHS அதிர்ச்சியான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது! 

 27 சதவீதமான பெண்கள் 16 முதல் 24 வயதிற்கிடைப்பட்டவர்கள், முதன் முறையாக உறவு கொண்டு வைத்திசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர், இதில் 15 வயதை விட குறைவான பெண்களும் பெருமளவில் சிதைவடைவது தற்போது  அதிகரித்துள்ளது, பெற்றோரின் பாதுகாப்பின்றி நண்பர்களுடன் வாழும் பெண்கள் பெருமளவில் காதலனால் கர்ப்பளிக்கப்படுவதும் சாதாரணமாகிவிட்டது.

இதில் 4 சதவீதமான பெண்கள் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் இவர்களும் முதல் முறையாக உறவுகொள்ளும்போது ஏற்படும் உடற் பாதிப்பால் வைத்திசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இளம் பெண் பிள்ளைகளுக்கான சரியான கட்டுப்பாடுகள் மேற்கத்திய நாடுகளில் காணப்படாமை இதற்கான காரணமென NHS கூறுகிறது.

நல்ல வேலை இது நம் இந்தியாவில் அல்ல. பிரிட்டனில் என்பது கூடுதல் ஆறுதல். 









Remote Location இல் இருந்து உங்கள் கணினியை இணைப்பது எப்படி?

Remote Desktop இணைப்பு வசதியின் மூலம் உங்கள் கணினியில் (host) உட்கார்ந்து கொண்டு அதே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் மற்றொரு கணினியை (client) இணைத்துக்கொள்ளலாம். இதனால் அந்த கணினியை உங்களது முழுக் கட்டுபாட்டில் கொண்டு வரலாம்.

இந்த வசதியை செயல்படுத்த, உங்கள் ஹோஸ்ட் கணினியில் administrator ஆக உள்நுழைந்து சில கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

Click on “My Computer“–>Properties.

Remote tab கீழ் உள்ள “Allow users to connect remotely to this computer” யை தேர்ந்தெடுத்து.Ok பட்டன்னை கிளிக் செய்யவும்.


ஹோஸ்ட் கம்ப்யூட்டரின் IP address யை தெரிந்துகொள்ள,command promptக்கு போய் “ipconfig/all“ என்று டைப் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் client computerக்கு சென்று ,Windows+R பிரஸ் செய்து “mstsc“ என்று டைப் செய்யவும்.


“கணினி” பிரிவில், உங்கள் ஹோஸ்ட் IP முகவரியை அளிக்கவும். பின்பு “பயனர் பெயர்”வழங்கவும். அதன்பின் கடவுச்சொல்லை நிரப்பி உள்நுழையவும்.நம்பிக்கைச்சான்று சரியாக இருந்தால், உங்கள் ஹோஸ்ட் கணினியை வெற்றிகரமாக இணைக்க முடியும்.

மௌனகுரு-சினிமா விமர்சனம்-விஜயோ, சூர்யாவோ நடித்திருந்தால் இந்தப்படம் எங்கயோ போயிருக்கும்

திருட்டு பயலே,ஆரண்ய காண்டம், யுத்தம் செய் படங்களுக்குப்பின் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையோடு களம் இறங்கி இருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி இயக்குநர் சாந்தகுமாருக்கு அழகிய பூச்செண்டுடன் வரவேற்று வாழ்த்தலாம்.. 

சாலை விபத்தில் ஒரு கார் சிக்குது..டிரைவர் உயிருக்கு போராடறான்.. அந்த கார் டிக்கில கோடிக்கணக்குல பணம்.அந்த வழியா வந்த போலீஸ் ஜீப்ல ஒரு இன்ஸ்பெக்டர், 3 போலீஸ், அந்த பணத்தை ஆட்டையை போட்டுடறாங்க.இதுக்கு மாஸ்டர் பிளானாக இருக்கும் இன்ஸ்பெக்டர் தன்னோட சின்ன வீட்டுல இருக்கறப்ப இந்த மேட்டர் சம்பந்தமா தன் கூட்டாளிகளோட ஃபோன்ல பேசறதை பாப்பா வீடியோ எடுத்துடுது.. 

அந்த வீடியோவை வெச்சு மிரட்டி பணம் முழுவதையும் தானே கறந்துடலாம்னு பாப்பா ஐடியா பண்றப்ப காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தன் அந்த வீடியோ கேசட்டை ஆட்டையை போட்டுடறான்.. இது ஒரு டிராக்.. ஹீரோ எப்படி எண்ட்டர் ஆகறார்? 
.
ஹீரோவோட கேரக்டரை நல்லா புரிய வெச்சுடறாங்க ஓப்பனிங்க் ஷாட்லயே.. ஆள் பார்க்க அமைதி டைப். ஆனா 2 ரூபா சில்லறையை ஏமாத்துனதுக்காக ஒன் ருப்பி காயின் பூத்தையே உடைக்கற ஆள்.அவர் தன் அண்ணன் வீட்டுக்கு வர்றார், காலேஜ்ல படிக்க , ஹாஸ்டல்ல தங்கறார். அண்ணிக்கு ஒரு தங்கை.. அதான் ஹீரோயின். 2 பேருக்கும் லவ் ஆகறதை அழகிய கவிதையா போற போக்குல சொல்லிடறாங்க..


படத்தின் ஆறுதல் அருள்நிதியின் நடிப்புதான். வம்சம் படத்தில் எடுத்த டிரைனிங் இன்னும் பலன் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் இவரது பேச்சும் முக பாவனையும் எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனநோயாளி காப்பகத்தில் இருந்து வரும் இவரை வீட்டில் உள்ளவர்கள் சந்தேகம்படும் இடத்தில் அவர்கள் மேல் நமக்கும் கூட ஆத்திரம் வருகிறது. அந்த அளவுக்கு கொஞ்சம் எமோஷனலான இடம் அது.




வாகை சூடவா இனியாதான் மௌனகுரு படத்தில் அருள்நிதிக்கு ஜோடி. மெல்ல ஹீரோ தோளில் சாய்ந்து கொள்கிறார், காபி போட்டுக் கொடுக்கிறார், செலவுக்கு பணம் கொடுக்கிறார், ஒரு பாட்டுக்கு ஆங்காங்கே நடந்து போகிறார் இதை மட்டும்தான் செய்கிறது இனியாவின் கேரக்டர். 

இனியாவுக்கு அக்காவாக நடித்திருக்கும் நடிகை எப்ப பார்த்தாலும் மதுரையை எரிக்கிற மாதிரியே பார்க்கிறாங்க. டிவி தொடரில் வில்லி கேரக்டருக்கு ரொம்பவே கரெக்டாக இருப்பாங்க.

பாதராக வருகிற அந்த கேரக்டர் தன் மகனே ஒரு திருடன் என்று தெரியும் போது வருத்தப்படுகிற காட்சிகள் நம்மை ரொம்பவே டச் பண்ணுகின்றன.

க்ரைம் இன்ஸ்பெக்டர் பழனியம்மாளாக வரும் உமாரியாஸ்கான் கர்பமான இன்ஸ்பெக்டராக இருந்தாலும் கடமை தவறாத இன்ஸ்பெக்டராக மின்னுகிறார்.

வில்லன் கேரக்டரில் ஜான் விஜய். மனுஷன் ரொம்பவே கலக்குறாருப்பா. ஒரு கட்டத்தில படத்தின் ஹீரோ ஜான் விஜய்தானோ என்கிற சந்தேகம் எல்லாம் நமக்கு வந்து விடுகிறது.

ஜான் விஜய் கூடவே வருகிற அந்த மூன்று காவல்துறையினர், க்ளைமேக்ஸ் காட்சியில் அருள்நிதியுடனே வரும் அந்த மனநோயளி கேரக்டர் எல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதுவும் கடைசியில் அவர் சொல்லும், ‘தள்ளுவண்டியில பரோட்டா விக்கிறவன்கிட்ட எவ்வளவு வாங்குவாங்கன்னு கேளு… சொல்லுவான்…’ என்று சொல்லும் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. 

கதை எழுதி இயக்கியிருக்கிறார் சாந்தகுமார். முதல் பாதியில் படம் வீட்டுக்குள்ளும் காலேஜ் உள்ளேயுமே திரும்ப திரும்ப சுற்றிக் கொண்டிருக்கிறது. இடைவேளைக்கு பிறகாவது தேறும் என்று பார்த்தால் பெரும்பாலான காட்சிகள் வளவள காட்சிகளாகவே இருக்கின்றன. எல்லாம் இயக்குனரின் திரைக்கதை படுத்தும்பாடு. ஆக்க்ஷன் திரில்லர் படமாக வந்திருக்க வேண்டிய படம். கொஞ்சம் சொத சொத எஃபக்டில் ஆங்காங்கே திசை மாறி பயணிக்கிறது.

"சிடி' யில் டேட்டா பதிக்கும்போது கவனிக்கவேண்டியவைகள்


சிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்படுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மாதிரியாக இருப்பதால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்படுகின்றன.

1. முதலில் நீங்கள் அந்த புரோகிராம் தரும் விஸார்ட் (டயலாக் பாக்ஸ் மாதிரி) மூலம் இயக்கப் போகிறீர்களா? அல்லது நீங்களே எழுதும் வகை பிரிவினை தேர்ந்தெடுத்து அமைக்கப்போகிறீர்களா என்று சாய்ஸ் கேட்கப்படும். விஸார்ட் மூலம் எழுதப் போகிறேன் என்பதனை செலக்ட் செய்திடவும். இதில் பல வசதிகள் தரப்படும்.

2. அடுத்து பெரும்பாலும் என்ன வகை சிடியில் எழுதப்போகிறீர்கள் என்று கேட்கப்படும். அதாவது ஆடியோவா? அல்லது வீடியோ சிடியா? என்று கேட்கப்படும். தகவல்களைப் பதிந்து வைக்க விரும்பினால் data என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் உங்களி டம் உள்ள மற்ற ஆடியோ சிடிக்களைப் பயன்படுத்தி புதிய ஆடியோ சிடி ஒன்று தயாரிப்பதாக இருந்தால் music என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மியூசிக் சிடி மற்றும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய பைல்கள் என்றால் உங்களுக்கு CDR வகை சிடிக்கள் தான் சரியான தேர்வாக இருக்கும்.

உங்களிடம் CDRW வகை சிடி இருந்தால் அதனை டேட்டா எழுதப் பயன்படுத்தவும். இதற்குக் காரணம் சில மியூசிக் பிளேயர்கள் CDRW வகை சிடிக்களை ஏற்றுக் கொள்ளாது என்பதே.

3. அடுத்த வேலை பைல்களைத் தேர்ந்தெடுப்பதுதான். பெரும்பாலான இவ்வகை புரோகிராம்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் வகையிலான விண்டோக் களைத் தரும். எனவே பைல்களைத் தேர்ந்தெடுத்து அமைப்பது எளிதான வேலையாக அமையும். இதை ட்ராக் அண்ட் ட்ராப் முறையிலும் மேற்கொள்ளலாம்.

4. பைல்களைத் தேர்ந்தெடுத்தவுடன் இனி சிடியில் எழுதுவதற்கான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். பெரும்பாலான புரோகிராம்களில் டேட்டா எழுதுவதற்கு டெஸ்ட் வகை ஒன்றினைத் தரும். அதாவது நேரடியாக எழுதத் தொடங்கி பின் எழுதுவதில் பிரச்னை ஏற்பட்டு சிடி வீணாகிவிடாமலும் அனாவசியமாக நேரம் செலவழியாமலும் இருக்க இந்த ஏற்பாடு.

இந்த சோதனை முறையை முதல் முதலில் அந்த சிடி டிரைவில் எழுதுகையில் மேற்கொள்ளலாம். பின் அதில் எதுவும் பிரச்னை இல்லை என்று தெரிந்து கொண்டால் நேரடியாக எழுதத் தொடங்கலாம்.


5. அடுத்ததாக சிடி எந்த வேகத்தில் எழுத வேண்டும் என்பதனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக் கவில்லை என்றால் சிடி டிரைவரே குறிப்பிட்ட வேகத்தைத் தேர்ந்தெடுக்கும். அல்லது அதற்கு முந்தைய முறையில் எழுதிய வேகத்தையே எடுத்துக் கொள்ளும்.


6. சிடியில் எழுதி முடித்தவுடன் டேட்டா சரியாகப் பதியப்பட்டுள்ளதா என்று சோதனை செய்வதற்கான ஆப்ஷனையும் இங்கு தேர்ந்தெடுக்கலாம். இதற்கான நேரம் மிகவும் குறைவு என்பதால் இதனை எப்போதும் மேற்கொள்வது நல்லது.

7. இனி சிடியில் டேட்டா எழுதப்படும் நேரம். இந்நேரத்தில் மற்ற எந்த செயலையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்வது நல்லதல்ல. சிடி டிரைவ் செயல்பட டேட்டாவைத் தக்க வைத்து அனுப்ப அதிகமான ராம் மெமரி தேவைப்படும். இல்லை என்றால் buffer underrun error என்னும் பிழைச் செய்தி வரும். சிடியில் எழுதப்படுகையில் டேட்டா தொடர்ந்து சிடி டிரைவிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

எழுதப்படும் டேட்டாவிற்கு இணையாக டேட்டா செல்ல வேண்டும். ஆனால் இவ்வாறு கிடைக்காத நிலையில் சிடியில் எழுதப்படும் செயல் பாதிக்காத வகையில் புரோகிராம் அமைக்கப்படும். இதனால் எழுதி முடித்தபின்னர் எத்தனை முறை இந்த நிகழ்வு ஏற்பட்டது;

ஆனால் சமாளிக்கப்பட்டது என்ற செய்தி கிடைக்கும். எனவே தான் சிடியில் எழுதுகையில் வேறு எந்த செயல்பாட்டையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடாது.

8. சிடியில் எழுத டிரைவுடன் வரும் (பெரும்பாலும் நீரோ புரோகிராம்) புரோகிராமைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. விண்டோஸ் எக்ஸ் பி புரோகிராமில் இதற்கான புரோகிராம் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் உங்கள் சிடி டிரைவ் டைரக்டரியைத் திறக்கவும்.

ட்ராப் அண்ட் ட்ராக் மூலம் பைல்களை இழுத்து வந்து டைரக்டரியில் போடவும். “Files ready to be written to the CD” என்ற செய்தி கிடைக்கும். சிடியில் எழுத நீங்கள் தயாராக இருந்தால் உடனே “Write these files to the CD” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான்; பைல்கள் எழுதப்பட்டுவிடும்.

இன்னொரு முறையிலும் பைல்களை எழுதலாம். பைலின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Send To பயன்படுத்தி பைல்களை அனுப்பவும். பின் மேற்கண்ட முறையில் மெனு கிடைக்கும். அதன்படி பைல்களை எழுதலாம்.

வந்துவிட்டது புதிய தேடுதளம்(Browser) ஹீலியாட்


கூகுள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருக்கும் தேடல் தளச் சந்தையில் புதிய, கூடுதல் வசதிகளுடன், மாறுபட்ட வகையில் முடிவுகளைத் தரும் தேடல் தளமாக அறிமுகமாகி யுள்ளது ஹீலியாட்.

தேடல் முடிவுகளைத் தருவதில், புதிய வழிகளை இது மேற்கொள் கிறது. நம் தேடல்களுக்கான முடிவுகளை அப்படியே பட்டியலிடாமல், அவற்றை வகைப் படுத்தி, ஒவ்வொரு வகைக்கும் ஒரு வண்ணத்திலான வட்டத்தைக் கொடுத்து, தகவல் களைக் காட்டுகிறது.

இதனால், நாம் என்ன நோக்கத்திற்காக ஒரு சொல் கொண்டு தேடினாலும், அந்த நோக்கம் இங்கு ஏதேனும் ஒரு வகையாகக் காட்டப்படும்.

நமக்குத் தேவைப்படும் வண்ண வட்டத்தில் கிளிக் செய்தால், நம் தேவைகளுக்கான தளங்கள் மட்டும் பட்டியலிடப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், உங்கள் தேடல்களை வகைப்படுத்திக் காணுங்கள் என்று நமக்கு ஹீலியாட் உதவுவதை உணரலாம்.

எடுத்துக்காட்டாக, Apple என்று தேடியபோது “Stock Quote”, “Products”, “News”, “iPhone”, “iTunes”, “iPad”... எனப் பலவகைகளில் தகவல்களைப் பட்டியல் இடுகிறது.

இவற்றில் நமக்கு எது வேண்டுமோ, அதனை மட்டும் கிளிக் செய்து காணலாம். தளங்கள் அனைத்தையும் பெற்று, சில நொடிகளில் அவற்றை வகைப்படுத்தித் தருவதே இந்த தேடல் சாதனத்தின் சிறப்பம்சம். இந்தத் தேடல் தளத்தின் முகவரி http://www.helioid.com.

டேப்ளட் பிசி, டெஸ்க்டாப்பை விட எந்த விதத்தில் நல்லது?


பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தை விரைவில் பிடித்துவிடும் என அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு சாதனம் டேப்ளட் பிசி. இன்று இது ஒரு புதிய சாதனம் அல்ல. மேற்கு நாடுகளில் மிக அதிகமாக இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் இதன் பயன்பாடு பெருகி வருகிறது.

கைகளில் எடுத்துச் சென்று எங்கும் பயன்படுத்தக் கூடிய மிகச் சிறந்த சாதனமாக டேப்ளட் பிசி உருவாகியுள்ளது. நமக்குப் பிடித்த செய்தி சேனல்களைப் பார்க்கலாம்; பிரியமான திரைப்படங்களைப் பார்க்கலாம்; மெயில்களைப் பார்க்கலாம், அனுப்பலாம்;

கேம்ஸ் விளையாடலாம்; இசையை ரசிக்கலாம். இப்படி இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையோடு ஒட்டிய அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். 

முதலில் வெளியான டேப்ளட் பிசிக்கள், பயன்படுத்த மிகவும் கடினமாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருந்தன. ஒரு சில மணி நேரங்களிலேயே அதன் பேட்டரிகள் தங்கள் மின் சக்தியை இழந்தன. அதனால், லேப்டாப் கம்ப்யூட்டரே போதும் என்று மக்கள் அவ்வளவாக இதன் மீது அக்கறை காட்டாமல் இருந்தனர்.

தற்போது இதன் அனைத்து குறைகளும் களையப்பட்டு, சிறப்பான பயன்பாட்டினைத் தரும் பல அம்சங்களை இவை கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள, சில அனுகூலங்களை இங்கு காணலாம்.

1. டேப்ளட் பிசி என்பது முழுமையான ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்லலாம். இன்றைக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் களில் பெரும்பாலானவர்கள், அதனை இன்டர்நெட் பிரவுஸ் செய்திடவும், வீடியோ மற்றும் ஆடியோ ரசிக்க மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த செயல்களை பெர்சனல் கம்ப்யூட்டரில் மேற்கொள்கையில், கட்டாயமாக அதன் முன் அமர்ந்து தான் செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் ஒரு டேப்ளட் பிசியில், நமக்கு வசதியான இடத்தில், நின்று கொண்டோ, படுத்துக் கொண்டோ, அமர்ந்தோ,சுகவாசியாக டேப்ளட் பிசியைப் பயன்படுத்தலாம். 

2. டேப்ளட் பிசியைக் கையாள்வது மிக இயற்கையான ஒரு செயலாக உள்ளது. குறிப்பாக அதன் தொடுதிரையைத் தொட்டுச் செயல்படுவது, மவுஸினைக் கையாள்வதனைக் காட்டிலும் எளிதாகவும், இயற்கையாகவும் உள்ளது. மேலும் டேப்ளட் பிசியைப் பயன்படுத்த, சிறப்பாக எந்த பயிற்சியும் தேவையில்லை. ஒரு குழந்தை கூட எளிதாக இதனைப் பயன்படுத்த முடியும்.

3. டேப்ளட் பிசி மிகவும் வேகமாகச் செயல்படுகிறது. இன்டர்நெட் பிரவுஸ் செய்வதில் இதன் வேகம் பெர்சனல் கம்ப்யூட்டரையும் மிஞ்சி விடுகிறது.

4. நண்பர்களுடன் வீடியோ சேட் செயல்களில் ஈடுபடுவது, பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் முடியும் என்றாலும், ஒரு டேப்ளட் பிசியில் மேற்கொள்வது, இன்னும் இயற்கையாக ஒரு நெருக்கத்தினை நண்பர்களுடன் ஏற்படுத்துகிறது.

5. ஒரு டேப்ளட் பிசியில், ஆயிரக்கணக்கான மின் நூல் பக்கங்களை சேவ் செய்து, நாம் விருப்பப்படும் நேரத்தில் படிக்க இயலும். தனியாக இதற்கென ஒரு இ–ரீடர் என்னும் சாதனத்தினை வாங்க வேண்டியதில்லை.

6. டேப்ளட் பிசியை எந்த ஒரு சாதனமாகவும் இயக்க பல அப்ளிகேஷன் கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இதற்கென அப்ளிகேஷன் ஸ்டோர்கள் இணையத்தில் நிறைய இயங்குகின்றன. கேமரா, நூல்கள், மியூசிக் பிளேயர், பருவ இதழ்கள் எனப் பல வசதிகள் கிடைக்கின்றன.

7. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்து வதில், மானிட்டர் மூலம் நம் கண்களுக்கு ஏற்படும் இடையூறுகள், ஒரு டேப்ளட் பிசியைப் பயன்படுத்துகையில் அறவே நீக்கப்படுகின்றன. இதனை எந்தக் கோணத்திலும் வைத்துப் பயன்படுத்தலாம். நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் கூட இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும். 

8. டேப்ளட் பிசிக்கள் வந்த புதிதில், ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் விலைக்கே விற்பனை செய்யப்பட்டன. இப்போது, பல நிறுவனங்கள் இந்த சந்தையில் இயங்குவதால், இவற்றின் விலை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஒரு பெர்சனல் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறைவான விலையில் இதனை வாங்கிப் பயன்படுத்த முடியும்.

வெளியேவர அடம்பிடிக்கும் டிவிடியை எடுப்பது எப்படி?


நீங்கள் அடிக்கடி சிடி பயன் படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம், உங்கள் சிடி கம்ப்யூட்டரின் சிடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.

எத்தனை முறை சிடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கலவரப் படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சிடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம். 

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டாப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும். இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சிடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும்.

சிக்கிக் கொண்ட சிடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும். இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள்.

உங்கள் சிடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சிடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம். 

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சிடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது.

இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது. இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சிடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சிடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள். இதற்கும் திறக்கவில்லை என்றால் அடுத்த வழிக்குச் செல்வோம். 

வழி 3: உங்கள் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுங்கள். மின்சாரம் வரும் வயர்களை கம்ப்யூட்டர் சிபியுவில் இருந்து நீக்கிவிடுங்கள். இல்லை என்றால் இந்த வழியில் உங்கள் கம்ப்யூட்டர் சிபியு மற்றும் உங்களையே நீங்கள் காயப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். ஷட் டவுண் செய்து மின் இணைப்பை எடுத்துவிட்டீர்களா!

இனி தட்டையாக உள்ள ஒரு ஸ்குரூ டிரைவரை எடுங்கள். சிடி டிரைவின் கதவின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீள இடைவெளியில் மெதுவாக அதனை வைத்து கொஞ்சம் மிகக் கொஞ்சம் தள்ளவும். ஸ்குரூ டிரைவரின் தட்டை முனையின் பகுதி சிறிய அளவில் உள்ளே சென்று விட்டால் அப்படியே டிரைவின் கதவை இழுக்கவும்.

டிரைவ் முழுவதும் பிளாஸ்டிக்கால் ஆன சிறிய சக்கரங்கள் மற்றும் கியர்கள் இயங்குவதால் நீங்கள் இழுப்பது தானாக வர வேண்டும். பலத்தை உபயோகிக்கக் கூடாது. மின்சக்தி மூலம் இயங்குவதை நீங்கள் இப்போது பலத்தை உபயோகித்து செயல்படுத்துகிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இனி மெதுவாக இழுத்தால் டிரைவ் கதவு திறக்கப்படும்.

சிடியை எடுத்துவிட்டு டிரைவை ஒரு சோதனைப் பார்வை பார்க்கவும். நிச்சயம் அதில் ஏகப்பட்ட தூசு, ஏன் சிறிய முடி கூட இருக்கலாம். இதனை எல்லாம் ஒரு சிறிய மெல்லிதான் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்துங்கள். போகாத பிடிவாத அழுக்கு என்றால் கொஞ்சம் ஈரம் கலந்த துணி கொண்டும் சுத்தப்படுத்தலாம்.

இனி மீண்டும் கம்ப்யூட்டருக்கு மின் சக்தி கொடுத்து இயக்குங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகி நிலைக்கு வந்தவுடன் சிடி டிரைவின் எஜக்ட் பட்டனை அழுத்தி கதவு திறந்து மூடுவதனை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். 

சரி, இந்த ஸ்குரூ டிரைவர் வைத்தியத்திற்கும் கதவு திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். என்ன செய்யலாம்? மின் இணைப்பைத் துண்டித்து சிபியு உள்ளாக டிரைவை இணைத்திருக்கும் கேபிள்களை நீக்கி பின் டிரைவ் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்குரூகளை எடுத்துவிட்டு டிரைவைத் தனியாக எடுத்து டிரைவின் கதவைத் திறக்கலாம்.

அல்லது டிரைவை மட்டும் தனியே எடுத்து இவற்றை ரிப்பேர் செய்திடும் இடத்திற்குக் கொண்டு சென்றால் அவர்கள் சரியான முறையில் சிடியை எடுத்துத் தருவார்கள். அதன்பின் புதிய டிரைவ் ஒன்றை வாங்கி இணைப்பது இது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும்.

மொபைல் போன்: சில ஆலோசனைகள்


மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.

இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.

மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.

பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.

போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.

உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.

கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை
ஓரமாக நிறுத்திப் பேசவும்.

பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.

அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.

அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.

விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.

சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.

மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.

ஆர்கசம் உடலுக்கு நல்லது. ஆய்வில் தகவல்


செக்ஸ் உணர்வின் உச்சத்தை எட்டும் பெண்கள், அப்படி அனுபவப்படாத பெண்களை விட உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

இவர்களை நோய் அவ்வளவு சீக்கிரம் அண்டுவதில்லையாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்கள் சுகாதாரத் திட்டத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

செக்ஸ் வாழ்க்கையில் திருப்திகரமாக இருக்கும் பெண்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மன நலமும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

20 முதல் 65 வயது வரையிலான 300 பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுத. இதன் முடிவுகள் குறித்து இந்தக் குழுவின் தலைவரான டாக்டர் சோனியா டேவிசன் கூறுகையில், செக்ஸ் ரீதியாக திருப்தி இல்லாத பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் குறைவாகவே உள்ளது. அவர்களது செயல் திறனும் கூட குறைந்தே காணப்படுகிறது.

உடல் நலம் குறித்த விவகாரத்தில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி என்பதும், ஆர்கசத்தை அடைவதும் முக்கியமானதாக உள்ளதையே இது காட்டுகிறது.
பெண்கள் பொதுவாக ஆர்கசம் குறித்து தங்களது டாக்டர்களிடம் சரிவர விவாதிப்பதில்லை. அதற்கு அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் அல்லது வெட்கப்படுகிறார்கள்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பெண்களில் 90 சதவீதத்தினர் தாங்கள் ஒருவருடன் உடல் ரீதியான உறவில் இருப்பதாகவும், செக்ஸ் உறவுகளில் பாதியை தங்களது பார்ட்னர்தான் தொடங்கி வைப்பதாகவும் கூறினர் என்றார்.

பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் இர்வின் கோல்ட்ஸ்டீன் கூறுகையில், பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நலனில் ஆர்கசம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார்.