Friday, December 16, 2011

கழிவறையை விட செல்போன் அதிக அசுத்தமானவை


கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை என்று ஆய்வில் கண்டுபிடிப்பு.செல்போனை நடமாடும் நோய்க்கூடம் என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர்.

செல்போனில் உள்ள கிருமிகள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் கழிவறை கோப்பையில் உள்ள கிருமிகளை விட செல்போனில் அதிக அளவு கிருமிகள் இருப்பது தெரிந்தது.

அதாவது கழிவறை கோப்பையை விட 18 மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் இருந்தன. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு வரை பேக்டீரியாக்கள் இருந்தால் அது ஆபத்து இல்லாததாக கருதப்படுகிறது.

ஆனால் செல்போனில் குறிப்பிட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக பேக்டீரியா உள்ளது.மிகவும் அசுத்தமாக உள்ள செல்போனில் 39 மடங்கு அதிக பேக்டீரியாக்கள் உள்ளன.
அசுத்தமான செல்போன்களை பயன்படுத்தும்போது அதன்மூலம் கிருமிகள் நமது உடலில் புகுந்து வயிற்று உபாதை, மூச்சு கோளாறு போன்ற பல்வேறு நோய்களும் தாக்குகின்றன.இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. செல்போனை நடமாடும் நோய்க்கூடம் என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. (நன்றி -மக்கள்முரசு )

No comments:

Post a Comment