Friday, November 11, 2011

போதி தர்மர் பற்றி சீனத் திரைப்படம்! (வீடியோ)

"போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக" கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.

"முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்." என்று பல தமிழர்கள் பெருமைப்படுகின்றனர்.

அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது.
முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்கள் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

நேற்று டெல்லியில் மட்டும் 20 ஆயிரம் திருமணங்கள்

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தினம் என 11.11.11 ஆம் தேதியைக் கருதியதாலும், பெரும்பாலான ஜோதிடர்களும் இன்றைய தினத்தை மிகவும் சாதகமான நாள் என்று கூறியதாலும், டெல்லியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான திருமணங்கள் ஒரே நாளில் நடந்தன.



இந்தத் திருமணங்களுக்கு டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் புரோகிதர்கள் வந்ததால், டெல்லி நகரமே இன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது.

பெரும்பாலான மக்கள் முன்னமேயே புரோகிதர்களை ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் பற்றாக்குறை காரணமாக, ஹரித்வார், ரிஷிகேஷ், குருக்ஷேத்ரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டனர்.
திருமணம்தான் என்றில்லை. இந்த தினத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதில் கூட நிறையப் பேர் ஆர்வம் காட்டினர்.

தில்லியின் ஒரு தனியார் மருத்துவமனை அதிகாரி கூறும்போது, இன்று ஒரே நாளில் எங்கள் மருத்துவமனையில் 50 குழந்தைகள் பிறந்திருக்கும் என்றார்.

ஆனால், தில்லியைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் விவேக் சோப்ரா இதை சுத்த முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார். இன்றைய தினத்தில் கோள்களில் இயக்கத்தில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இது ஒரு சாதகமான நாள் என்றெல்லாம் கூறி இவ்வாறு முட்டாள்தனமான செயல்களில் மக்கள் ஈடுபட்டுள்ளது மிகத் தவறு.

இந்த தேதி, கூறுவதற்கு கவர்ச்சிகரமாக இருப்பதால் வேண்டுமானால் இவ்வாறு மக்கள் திருமணம், குழந்தைப் பேறு உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினர் என்று சொல்லுங்கள். ஆனால், ஜோதிடப்படி சாதகமான நாள் என்றெல்லாம் கூறாதீர்கள் என்று வாதிட்டார்.

பேஸ்புக் இணையதளத்தில் சி.பி.ஐ புகுந்துள்ளது

பிரசித்தி பெற்ற சமூக வலைப்பின்னலான பேஸ்புக் இணையதளத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) போபால் அலுவலகம் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு தொடங்கியதன் மூலம் வழக்குகள் சம்பந்தமாக பொதுமக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள அது திட்டமிட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத்துறையின் போபால் அலுவலகம் பேஸ்புக்கில் கணக்கைத் தொடங்கியுள்ளது.

போபாலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் பெறும் வரவேற்பைப் பொறுத்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். வழக்குகள் மற்றும் குற்றங்கள் சம்பந்தமான தகவல்களை மக்கள் இதன் மூலம் நேரடியாக தெரிவிக்கலாம். அண்மையில் போபாலில் ஷெஹ்லா மசூத் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மக்கள் பல பயனுள்ள தகவல்களை அளித்ததாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.