Friday, November 11, 2011

நேற்று டெல்லியில் மட்டும் 20 ஆயிரம் திருமணங்கள்

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தினம் என 11.11.11 ஆம் தேதியைக் கருதியதாலும், பெரும்பாலான ஜோதிடர்களும் இன்றைய தினத்தை மிகவும் சாதகமான நாள் என்று கூறியதாலும், டெல்லியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான திருமணங்கள் ஒரே நாளில் நடந்தன.



இந்தத் திருமணங்களுக்கு டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் புரோகிதர்கள் வந்ததால், டெல்லி நகரமே இன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது.

பெரும்பாலான மக்கள் முன்னமேயே புரோகிதர்களை ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் பற்றாக்குறை காரணமாக, ஹரித்வார், ரிஷிகேஷ், குருக்ஷேத்ரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டனர்.
திருமணம்தான் என்றில்லை. இந்த தினத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதில் கூட நிறையப் பேர் ஆர்வம் காட்டினர்.

தில்லியின் ஒரு தனியார் மருத்துவமனை அதிகாரி கூறும்போது, இன்று ஒரே நாளில் எங்கள் மருத்துவமனையில் 50 குழந்தைகள் பிறந்திருக்கும் என்றார்.

ஆனால், தில்லியைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் விவேக் சோப்ரா இதை சுத்த முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார். இன்றைய தினத்தில் கோள்களில் இயக்கத்தில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இது ஒரு சாதகமான நாள் என்றெல்லாம் கூறி இவ்வாறு முட்டாள்தனமான செயல்களில் மக்கள் ஈடுபட்டுள்ளது மிகத் தவறு.

இந்த தேதி, கூறுவதற்கு கவர்ச்சிகரமாக இருப்பதால் வேண்டுமானால் இவ்வாறு மக்கள் திருமணம், குழந்தைப் பேறு உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினர் என்று சொல்லுங்கள். ஆனால், ஜோதிடப்படி சாதகமான நாள் என்றெல்லாம் கூறாதீர்கள் என்று வாதிட்டார்.

No comments:

Post a Comment