Wednesday, November 30, 2011

ஆண் உறுப்பை விபரீதமாக பயன்படுத்தியவர்

99 ஃபவர் Qigong என்பது சீன நாட்டில் பாரம்பரியம் பாரம்பரியமாக நீடித்து நிலைபெற்று வருகின்ற வீர சாகசங்களில் ஒன்று.

மிகவும் பாரமான பொருட்களை ஆண் உறுப்பினால் தூக்குதல் மற்றும் இழுத்தல் போன்ற சாகசங்கள் மூலம் வீரத்தை வெளிப்படுத்துவது.


நம்ப முடியவில்லையா? இவ்வீடியோவை பாருங்கள்.




Coca Cola குடிக்காதீங்க ! எச்சரிக்கை! எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட் !!

கொக்கா கோலா (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக்கூடிய ஒரு குளிர்பானம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்தங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை:. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கலவை இரகசியம். ஆனால் இந்த கொக்கா கோலா பாணத்தில் உள்ள இராசாயண பதார்த்தங்களை சோதிக்கும் நடவடிக்கை ஒன்றையே நாம் இன்று வழங்குகிறோம். 

காணொளியை கவனமாக பாருங்கள்.. 

கொகோ கோலா பாணத்தினை ஒருவர் கிளாசில் ஊற்றி அதனுள் ஒரு முட்டையை இடுகிறார். இதனை ஒரு வருடத்திற்கு அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு கோகோ கோலா பாணத்திற்குள் இட்டு வைத்திருந்த முட்டை வெளியே எடுக்கப்படுகிறது. என்ன ஒரு அதிர்ச்சி அதற்குள் இட்டு வைத்திருந்த முட்டை இறப்பர் போன்று இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த கோகோ கோலா பாணத்தில் பல இராசாயண கலவைகள் கலந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. Phosporic Acid போன்ற பல இரசாயணங்களின் கலவையே இது என கூறப்படுகிறது. இதன் மூலம் கொக்கா கோலா தினமும் பருகுவதால் நிச்சயம் எமது பற்களுக்கு ஆபத்து என்பது புலனாகிறது.


மினுக்கும் அழகை பெற...

"டயட்" என்கிற பெயரில் உணவைக் குறைத்துக் கொண்டு உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொண்டால் போதுமா? இதனால் சருமத்தில் உள்ள சத்துக்கள் குறைந்து, பொலிவிழந்து, சருமம் வறண்டு காணப்பட்டால் வெளிப் புற தேகத்துக்கு என்னதான் "மேக்-அப்" செய்தாலும் பயனில்லை. 
இன்றைக்கு சந்தையில் அழகுக்காகப் பொருட்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. இருக்கும் அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு அனைத்தையும் வாங்கி, முகத்தில் அப்பி, உடலில் பூசி பின்பு அவதிப்படுபவர்கள்தான் அநேகம் பேர். 

முதலில் நம் சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வறண்ட சருமமா, எண்ணெய் வழியும் சருமமா என்பதை ஒரு கைதேர்ந்த அழகுக்கலை நிபுணரிடம் கேட்டறிந்து கொண்டு அழகு பராமரிப்பை மேற்கொண்டால், அழகு என்றென்றும் நம் பக்கம்தான். மேலும் நம் உணவில் சமச்சீரான சத்துக்களடங்கிய டயட் இடம் பெறவேண்டும். ஒருசிலர், வாளிப்பான தேகமும், மினு மினுப்பான சருமமும் கொண்டு செழிப்பாகக் காட்சியளிப்பார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் சமச்சீரான உணவுப் பழக்கமே. 
இப்படிப்பட்ட அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து பராமரிப்பும் தேவை. வாரம் ஒருமுறை சருமத்தில் சேரும் அழுக்கை உடல் முழுவதும் "ஸ்க்ரப்" செய்து நீக்கி, முகம், கை, கால்களுக்கு மசாஜ் எடுத்துக் கொண்டால் சருமச் சுருக்கங்களை நீக்கலாம். வறண்ட தேகம் உடையவர்கள், பதினைந்து நாட்களுக்கொருமுறை ஏதாவது "ப்ரூட் பேக்" எடுத்துக்கொண்டு "பேஷியல்" செய்துகொள்வது அவசியம். இதனால் சருமத்தில் இழந்த தண்ணீர்ச் சத்துக்கள் மீண்டும் பெறப்படுகின்றன. 

தற்பொழுது வேலை பார்ப்பவர்களின் சூழ்நிலையும் 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறைகளில்தான் அமைகிறது. இதனால் உடல் மேலும் வறண்டு போய் விடும். இதற்கென்றே "நேச்சுரல்ஸ் க்ளோ பேஷியல் ஸ்பெஷல் பேக்" அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வியர்வையே ஏற்படாமல், நீர்ச்சத்து இழந்து காணப்படும் சருமத்துக்குப் புத்துணர்ச்சியும், பொலிவும் உடனடியாகக் கிடைக்கிறது. 

கூலிங் ஐ மஸாஜ்: 

இரவு, பகல் பாராமல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இச்சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கண்களுக்கு உண்டாகும் அதிகக் களைப்பு, சூடு இவையெல்லாம் அடியோடு நீங்கிவிடும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட "ஜெல் மாஸ்"கை ப்ரீசரில் வைத்து எடுத்து கண்களைச் சுற்றி அணிவித்து சிகிச்சை தரப்படுகிறது. 

மைக்ரோ டெர்மா சிகிச்சை: 

இது முக்கியமாக, சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. வெயிலில் அதிகம் சுற்றி, வேலை பார்த்து சருமம் கறுத்துக் காணப்படுபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இச்சிகிச்சையை மேற்கொண்டால் இழந்த அழகை மீண்டும் பெறலாம். 

ஐ ஸோன் ட்ரீட்மெண்ட்: 

சிலருக்குக் கண்ணுக்கு அடியில் கருவளையம் தோன்றி, சருமம் பொலி விழந்து மங்கலாகக் காணப்படும். இச்சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள கரு வளையம், சுருக்கங்கள் நாளடைவில் மறையும்.

வீட்டில் ஹேர் கட் செய்வது எப்படி?

தன் கையே தனக்குதவி என்பது பழமொழிதான் ஆனாலும் அது பயனுள்ள பழமொழியே. விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் முடிதிருத்த நிலையங்களும், பியூட்டி பார்லர்களும் கட்டிங், அழகுக் கலை கட்டணங்களை உயர்த்திவிடுவார்கள் என்பது உறுதி. இதனல் 'ஹேர் கட்' போன்ற சாதாரண (!) செயல்களை ஏன் நாமே செய்து கொள்ளக்கூடாது?

ஹேர் கட் செய்வதும் ஒரு கலை. இதை கற்க முதல் முயற்சியாக நீங்களே உங்கள் முடியை கட் செய்ய ஆரம்பிக்கலாம். நாமே முடி வெட்டிக் கொள்வதால் பணத்தை மிச்சம் செய்யலாம். நன்றாக செய்ய கற்றுக் கொண்டால் ஒரு பார்லர் ஆரம்பித்து பணமும் சம்பாதிக்கலாம்!



தேவைப்படும் பொருட்கள் :-


கண்ணாடிகள் - 2


கத்தரிக்கோல் - 1


சீப்பு - 1


ஆரம்பிக்கலாமா?


முதன்முறையாக முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து வெட்டவும். தவறு செய்தாலும் திருத்துவதற்கு தேவையான அளவு முடி இருந்தால் பிரச்சனையே இல்லை.


எந்த அளவு வெட்டுவது?


மொட்டை அடிக்கும் எண்ணம் இல்லை என்றால் தலையில் குறைந்தது 3 அங்குலம் முடியாவது இருக்க வேண்டும்.


முதல்முறையாக வெட்டும்போது பார்லர்களில் செய்வது போல் கூந்தலை ஈரமாக்க வேண்டாம்.


சிக்குகளை நீக்கி விட்டு, காதுகளுக்கு மேலிருந்து ஆரம்பிக்கவும்.


இரண்டு விரல்களுக்கு இடையே வெட்டப்போகும் முடியை இழுத்து பிடித்துக் கொள்ளவும்.


விரல்களுக்கு அடுத்தப் பக்கத்தில் இருக்கும் முடியின் அளவு தான் வெட்ட வேண்டிய அளவு.


கத்தரிக்கோலால் விரல்களை ஒட்டியது போல் முடியை வெட்டவும்.


இதே போல் இந்த காது அருகில் தொடங்கியதை அடுத்த காது வரை சிறிது சிறிதாக முடியை எடுத்து ஒரே அளவில் வெட்டவும்.


ஒவ்வொரு முறை வெட்டிய பிறகும் கண்ணாடியில் பார்க்க மறக்க வேண்டாம்.


துல்லியமாக அளந்து தான் வெட்ட வேண்டும் என்று இல்லை. சீவியப்பிறகு கூந்தல் சீராக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.


`ஸ்டெப் கட்', `மஷ்ரூம் கட்' என்று முதல் முறையே வெட்ட முயற்சித்தால் அதன் விளைவு விபரீதமாகலாம்.


தைரியசாலிகள் முயற்சித்து பார்த்து ஒரு புது ஸ்டைலை உருவாக்கலாம்!


ஆல் தி பெஸ்ட்!


குறிப்பு:


முதல் முயற்சிக்குப் பிறகு உங்கள் கணவர் அல்லது குழந்தைகள் சற்றே மிரளலாம் என்றாலும் அடுத்தடுத்த முயற்சிகளில் அசத்திவிடலாம்.

உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறதா? அவசியம் இதைப் படியுங்கள்

சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும். 

இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்திருக்கும். அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை இன்டர்நெட் கொண்டுள்ள போதும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடக்க இது முக்கிய காரணமாக உள்ளது.பிறருடன் பேசவும், எஸ்.எம். எஸ்., அனுப்பவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மொபைல்போன்கள், தற்போது இன்டர்நெட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, தினமும் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அதன் மூலம் தங்களின் அன்பை பரிமாறி கொள்வதை வழக்கமாக கொண்டு பலர் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு வயதினரிடமும் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) எஸ். எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

பேஸ்புக் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருவர் தங்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பதிவு செய்வதன் மூலம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளிலுள்ள தங்களுடைய நண்பர்கள்,உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இதன் காரணமாக மொபைல் போன்களிலிருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு பலர் "குட் பை சொல்ல துவங்கிவிட்டனர். 

சமூக வலைதளங்களில் தங்களின் விபரங்களை ஒருவர் பதிவு செய்யும் போது, தகவல்களுடன் சேர்த்து தங்கள் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். வலைதளங்கள் மூலம் ஒருவருடன் நண்பர்களாக வேண்டும் என்றால், தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு குறுந்தகவலாக அனுப்ப வேண்டும்; மறுமுனையில் சம்பந்தப்பட்ட நபர் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இருவரும் வலைதளத்தில் நண்பர்களாகி கொள்ளவும், தங்களின் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடவும், உறவுகளை இணைக்கும் பாலமாகவும் உதவி வரும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவியருக்கு எதிரான சைபர்கிரைம் குற்றங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. 

சமூக வலைதளங்களில் பெண்களின் பெயர்களை டைப் செய்தால், குறிப்பிட்ட பெயருக்கு 25க்கும் மேற்பட்டவர்கள் குறித்த முழு விபரங்கள் போட்டோக்களுடன் வெளியிடப்படுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆசாமிகள், அறிமுகமில்லாத பெண்களுக்கு தாங்களாகவே, "நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் என தெரிவிக்கும் தகவல்களை அனுப்புகின்றனர். தங்களுக்கு தெரியாத நபர்கள் அனுப்பும் இத்தகைய வேண்டுகோளை ஏற்காமல் நிராகரிக்கும் பெண்கள் எவ்வித ஆபத்திலும் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். எனினும் தங்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் பெண்களிடம் நல்லவர்களை போல் சில நாட்கள் நடித்து அவர்களின் மொபைல்போன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். நாளடைவில் நேரில் சந்திப்பது, பொது இடங்களுக்கு சென்று வருதல், பண பரிமாற்றம் என துவங்கி, ஏமாறும் அபலைப் பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றியும், அவர்களிடமிருந்து பணம்,நகை, "லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தும் சென்று விடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் பலர்,போலீசில் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை. 

கோவை மாநகர சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கம்ப்யூட்டர்களில், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்தும்போது, அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்வதை பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தங்களின் அந்தரங்க தகவல்கள் குறித்து நெருங்கிய தோழிகளுடன் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். தனி அறையில் வைத்து அவர்கள் இணையதளங்களை இயக்க அனுமதிக்க கூடாது என்றனர். 

பெற்றோர், ஆசிரியர், உடன்பிறப்புகள், உறவினர்கள் உள்ளிட்டவர்களின் அறிவுரை ஒருபுறமிருந்தாலும், இன்டர்நெட் பயன்படுத்தும்போது பெண்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

ஏழாம் அறிவு படத்தின் விஞ்ஞானம் நிஜமாகும்-அதிர்ச்சி தகவல்


மனிதர்களையே அழித்துவிடக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட Flu வைரசினைக் கண்டுபிடித்தமை பற்றிய விபரங்களை நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் வெளியிடவுள்ளனர்.

இந்த அபாயகரமான வைரஸ் H5N1 பறவைக்காய்ச்சல் வைரசினை ஒத்ததாகும். ஆனால் இது அதனை விடவும் கிருமித்தொற்று மிக்கதென்றும் ஒரு தடவையிலேயே மில்லியன் கணக்கானோரில் கடத்தப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகின்றது.

இதனால் இந்த ஆய்வு சர்ச்சைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் விஞ்ஞானிகளையும் இரு பிரிவாகப் பிரித்துள்ளது.

ஒரு பகுதியினர் இதன் விபரங்களை வெளியிடக்கூடாது என்றும் சிலர இதனைச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பறவைக் காய்ச்சலின் வைரஸ் 500 பேரை மட்டுமே கொன்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில் பரம்பலடையாது. ஆனால் தற்போது உருவாக்கப்பட்ட வைரஸ் எதிரிகளின் கைகளில் கிடைத்துவிட்டால் மிகவும் ஆபத்தானதாக உள்ளதால் உயிரியல் போரிற்குப் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆய்வு சர்வதேசத்தினை H5N1 இனை முமுவதும் விளங்கிக்கொள்வதன் பாகமாகவே மேற்கொள்ளப்பட்டதென இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்பினால் இக்குழு ஊடகத்தின் பாய்ச்சலினை எதிர்கொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவரீதியில் நல்லதாரு முன்னேற்றம் எனினும் துணைபோகக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. 

இதனால் இதுபற்றிய விடயங்களை வெளியிடுவது தடுக்கப்படவேண்டுமென்றும் வெளியிடப்பட்டால் உயிரியல் தீவிரவாதத்திற்குத் துணைபோகும் காரியங்களைச் செய்பவர்களுக்கு இது உதவக்கூடுமென்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

4 வயது சுட்டியின் குத்தாட்டம் : வீடியோ இணைப்பு

நடனம் என்பது பலரையும் கவர்ந்த விடயமாகும். அதுவும் சிறுவர்களின் குத்தாட்டம் என்பது இன்னும் பரபரப்பு.


அந்த வகையில் 4 வயது சிறுமி ஒருத்தி போடும் குத்தாட்டத்தை பாருங்கள் நீங்களும் எழுப்பி நின்று ஆடுவீர்கள்.


வளர்ந்து வரும் சிறுவர்களுக்கு இக்கொணிளி ஓர் முன்னூதாரணமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.



ஜெயலலிதா தான் என்னுடைய ரோல் மாடல்! அழகிரி மகன் அதிரடி

''உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... நான் முதல்வருக்கு ரொம்ப நெருக்கமானவன்... முன்னாள் முதல்வர், தலைவர் கலைஞரைச் சொல்லலை... இந்நாள் முதல்வரைத்தான் சொல்றேன்!''- சஸ்பென்ஸ் வைத்துச் சிரிக்கிறார் துரை தயாநிதி. சன் ஆஃப் அழகிரி! 

''ரொம்ப யோசிக்காதீங்க சார்... போயஸ் கார்டன்ல சி.எம். வீட்டுக்குப் பக்கத்துலதான் என் வீடும். அதைத் தான் சொன்னேன்!'' - செம பில்ட்-அப் கொடுத்துச் சிரித்தவர், தயங்கித் தயங்கிக் கேட்ட கேள்விகளுக்குக்கூட மழுப்பாமல், நழுவாமல், தடதடஎனப் பதில் அளித்தார்.

''கல்யாண வாழ்க்கை எப்படிப் போயிட்டு இருக்கு? அனுஷா உங்க குடும்பத்தோட செட் ஆகிட்டாங்களா?'' 

''கல்யாணத்துக்கு அப்புறம் லைஃப் இஸ் பியூட்டிஃபுல்! எனக்குத் தெரியாத சொந்தங்கள்கூட அனுஷாவுக்குத் தெரியிற அளவுக்கு அட்டாச்டு ஆகிட்டாங்க. 'துரையா இவ்வளவு அழகா குடும்பம் நடத்துறான்’னு குடும்பத்திலும் எல்லாருக்கும் ஆச்சர்யம்தான். எல்லாத்துக்கும் காரணம், அனுஷா. இதையே அவங்ககிட்ட கேட்டா, 'நான்தான் காரணம்’னு சொல்வாங்க. ரொம்ப நல்லா இருக்கோம்.

இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. சும்மா ஒரு ஃப்ரெண்ட் மூலமாத்தான் அனுஷா எனக்கு அறிமுகம். கொஞ்ச நாள் பழக்கத்துலயே அம்மா மாதிரி பிரியமா நடந்துக்கிட்டது பிடிச்சது. கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் குடும்பத்துக்கு நல்லா செட் ஆவாங்கனு தோணுச்சு. ஆனா, அதைப்பத்தி அவங்ககிட்ட எதுவுமே நான் சொல்லலை. ரெண்டு வருஷ ஃப்ரெண்ட்ஷிப்புக்குப் பிறகு, ஒரு நவம்பர் 23-ம் தேதி நான்தான் முதலில் காதலைச் சொன்னேன். ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு 'யெஸ்’ சொன்னாங்க. அது வாழ்க்கையில மறக்கவே முடியாத தருணம். அடுத்த நவம்பர் 18-ல் கல்யாணம். எனக்கு நவம்பர் ரொம்பவே ஸ்பெஷல்!

அனுஷாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என் அம்மா - அப்பாதான். கட்சிக்காரங்க வருகை, பேச்சுவார்த்தைனு வீட்ல எப்பவும் ஒரு பரபரப்பான சூழல் இருந்துட்டே இருக்கும். அப்போ என் மூலம்தான் அம்மா எந்த விஷயத்தையும் அப்பாகிட்ட சொல்வாங்க. இப்போ அந்தப் பொறுப்பை அனுஷா எடுத்துக்கிட்டாங்க. 'இல்ல மாமா... நீங்க அப்படிப் பேசி இருக்கக் கூடாது’னு ஜஸ்ட் லைக் தட் அப்பாகிட்ட கரெக்ஷன்ஸ் சொல்றாங்க. ஆச்சர்யமா அப்பாவும், 'ஆமாம்ல... நீ சொல்றதுதாம்மா சரி’னு சொல்றார். 'என்னடா நடக்குது இங்கே’னு நான்தான் மலைச்சுப்போய் நிக்கிறேன்!''

''அரசியல், குடும்பம், சினிமா தயாரிப்புனு பரபரப்பான லைஃப் ஸ்டைல். ஆனா, மீடியாக்களிடம் இருந்து ஏன் விலகியே இருக்கீங்க?''

''ஒரு வரியில் பதில் சொல்லணும்னா... நான் எங்க அப்பா மாதிரி. அதனாலதான்! எதையும் பேசிட்டே இருக்கிறதைவிட செஞ்சு முடிச்சிரணும்னு நினைப்பேன். அதே மாதிரி பேசணும்னு நினைச்சா, யாருக்காகவும் எதுக்காகவும் பயப்பட மாட்டேன். மனசுல தோணுறதைப் பேசிட்டுப் போயிட்டே இருப்பேன். அது நம்ம மீடியா சர்க்கிளுக்கு செட் ஆகலை. அவ்வளவுதான்!'' 


''உங்க அண்ணன் உதயநிதி ஸ்டாலின், தம்பி அருள்நிதி எல்லாம் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க அவங்களைவெச்சு உங்க பேனர்ல படம் தயாரிப்பீங் களா?''

''நல்ல ஐடியா. ஆனா, ரெண்டு பேரும்தான் ஏற்கெனவே அவங்கவங்க பேனர்ல நடிச்சுட்டு இருக்காங்களே. இப்போதைக்கு உதயா அண்ணனின் ரெட் ஜெயன்ட்தான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் புரொடக்ஷன் கம்பெனி. நல்ல டீம், பக்கா பிளானிங்னு எல்லாத்துலயும் தெளிவா இருக்காங்க. 'மங்காத்தா’வைக்கூட சன்னுக்கு விற்றுக் கொடுத்ததில் அண்ணன் எனக்கு நிறைய உதவி பண்ணார். அவங்க ரெண்டு பேருக்கும் 'ஓ.கே’-ன்னா இப்பவே ரெண்டு பேரையும் வெச்சுப் படம் தயாரிக்க நான் ரெடி!''

''ஓ.கே. உண்மையைச் சொல்லுங்க... அ.தி.மு.க. அரசின் ஆறு மாத கால ஆட்சி எப்படி இருக்கு?''

''இதுல நான் சொல்ல என்ன இருக்கு? அதான் தமிழ்நாடே கொதிப்புல இருக்கே? சமச்சீர்க் கல்வியில் கை வைக்கத் தொடங்கி, இப்போ பால் விலை, பஸ் கட்டண உயர்வுனு வந்து நிக்குது. 'மாற்றம் வேணும்... மாற்றம் வேணும்’னு பக்கம் பக்கமா எழுதினாங்க. 'ஓ... மாற்றம் வேணும்போல இருக்கு’னு மக்களும் நம்பி ஓட்டுப் போட்டாங்க. ஆனா, இந்த அம்மாவோ சமச்சீர்க் கல்வி ரத்து, மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம், தலைமைச் செயலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம் இட மாற்றம், அமைச்சர்கள் - அதிகாரிகள் மாற்றம்னு பரபரப்பா இருக்காங்க. தி.மு.க. ஆட்சியில் சினிமாவுக்குக் கேளிக்கை வரியே கிடையாது. இப்ப நகரத்தில் 30 சதவிகிதம், மற்ற பகுதிகளில் 20 சதவிகி தம்னு வரி போட்டு வாட்டுறாங்க. இது தமிழ் சினிமாவுக்குப் பின்னடைவு இல்லையா? 'சினிமாவை ஆக்கிரமிச்சுட்டாங்க’னு அப்போ எங்களைப் பத்திப் புரளி கிளப்பினவங்க எல்லாம் இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை. இந்தக் கொடுமைகளை நடுநிலையான பத்திரிகை கள், மீடியாக்கள் எழுதத் தொடங்கி இருக்காங்க. அது மட்டும்தான் நல்ல விஷயம்!''

''ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடிச்ச விஷயம்னு ஏதாவது இருக்கா?''

''
இருக்கே... அந்தத் தைரியம் பிடிக்கும்! தைரியம் இல்லாம யாரும் அந்தப் பதவிக்கு வர முடியாது. ஆனாலும், இந்த அம்மா வுக்குத் தைரியம் கொஞ்சம் அதிகம். தன்னுடைய முடிவில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கிறதும் நல்ல விஷயம்தான். ஆனா, இந்தத் தகுதிகளை எல்லாம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத்தான் பயன்படுத்துறாங்கனு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கு!''

''அப்பாவுக்கும் சித்தப்பா ஸ்டாலினுக்கும் கட்சித் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதில் பெரிய போட்டியே நடக்குதுனு சொல்றாங் களே..?''

''ரெண்டு பேரும் சேரக் கூடாதுனு நினைக்கிறவங்கதான் 'போட்டி இருக்கு... போட்டி இருக்கு’னு எழுதிட்டு இருக்காங்க. அதை ஏன் பதவிக்கான போட்டினு சொல்றீங்க? கட்சித் தலைமையிடம் நல்ல பேர் எடுக்க, கட்சியை வளர்க்க ஆரோக்கியமாப் போட்டி போடுறாங்கனு ஏன் நினைக்க மாட்டேங் கிறீங்க? இப்பவும் சித்தப்பா டெல்லி போனா... அப்பாவை வீட்ல சந்திப்பார். அப்பாவும் சென்னை வந்தா, சித்தப்பாவோட சேர்ந்துதான் தலைவரைச் சந்திப்பார். ரெண்டு பேருமே கட்சி தொடர்பான விஷயங்களை அடிக்கடி போன்ல பேசிப்பாங்க. பரபரப்புக்காக மீடியா ஏற்படுத்தும் பிம்பம்தான் ரெண்டு பேருக்கும் இடையிலான போட்டி!'' 

''மதுரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, நாடாளுமன்றத்தில் பேச மறுப்பது, தென் தமிழ்நாட்டில் தன்னை ஆதரிக்காதவர்களைக் கட்சிக்குள் கட்டம்கட்டுவது என உங்கள் அப்பாவைப் பற்றிய செய்திகள் அனைத்தும் நெகட்டிவ் தொனியிலேயே இருப்பது ஏன்?''

''கட்சியில் தனக்கு எவ்வளவு நெருக் குதல் வந்தாலும் தன்னை நம்பி வரும் நல்லவர்களைக் கடைசிவரை கை விடாமல் துணையாக இருப்பது, மதுரை மக்களுடன் அந்நியோன்யமாக இருப்பது, யாரும் தப்பா நினைச்சுக்குவாங்களோனு நினைக்காம மனசுல பட்டதைப் பளிச்னு சொல்றதுனு எங்க அப்பா ஒரு ரியல் ஹீரோ சார். அவர் எம்.பி., அமைச்சர் ஆனதெல்லாம் கட்சியும் தொண்டர்களும் ஃபோர்ஸ் பண்ணி நடந்த விஷயங்கள். ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கார். ஆனா, நெகட்டிவ் செய்திகளைவெச்சு சென்சேஷன் செய்யும் ஆங்கில மீடியாக்கள், எங்கள் குடும்பத்தைப் பத்தி புரளி கிளப்புறதுல அதீத ஆர்வம் காட்டுறாங்க... அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்!''

''நீங்கள் கனிமொழி அத்தையின் செல்லமா?''

''ரொம்பவே செல்லம்! ரொம்ப மென்மையான இயல்புகொண்ட அவங்க இத்தனை நாள் ஜெயில்ல கஷ்டப்பட்டதை இப்போ நினைச்சா லும் மனசுக்குக் கஷ்டமா இருக்கு. ஜெயில்ல நான் போய் அவங்களைப் பார்த்தப்பகூட, 'அனுஷாவுக்குக் கால்ல அடிபட்டுருச்சாம்ல. உன்னை நம்பி வந்த பொண்ணு. பத்திரமாப் பார்த்துக்க’னு சொன்னாங்க. அப்பா மேலயும் என் மேலயும் கனி அத்தைக்கு எப்பவுமே தனிப் பிரியம். மதுரைக்கு வந்தா, எங்க வீட்லதான் தங்குவாங்க. அம்மாவுக்கும் அவங்க பயங்கர க்ளோஸ். அவங்களுக்கு ஜாமீன் கிடைச்சது ரொம்பவே சந்தோஷம். அத்தையைச் சீக்கிரமே பார்க்கணும்!'' 

''கலைஞர் தாத்தா என்ன சொல்றார்?''

''தாத்தாவைச் சந்தித்தால் முக்கால்வாசி நேரம் அரசியல்தான் பேசுவேன். சினிமாபத்தியும் நிறையப் பேசுவோம். 'என்னப்பா, அந்தப் படம் எப்படி இருக்கு, இந்தப் படம் எப்படிப் போகுது, உதயா படம் நல்ல கலெக்ஷன்னு கேள்விப்பட்டேன்’னு நிறையப் பேசு வார். அரைகுறைத் தகவல்களோட ஏதாவது தப்பா சொல்லிட்டா, 'இல்லையே... அந்தப் படம் சுமார்னு எழுதி இருக்காங்க’னு ஷார்ப்பா கண்டுபிடிச்சுடுவார். ஒரு நாளைக்கு 20 பேப்பர் படிச்சா எந்த விஷயம்தான் அவருக்குத் தெரியாம இருக்கும்?''

'' 'மதுரையை மீட்டெடுப்போம்’னு சொல்லி, தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கு ஜெயலலிதா அரசு. இதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?''

''தேர்தலுக்கு முன்னாடி ஜெயலலிதா மதுரைக்கு பிரசாரத்துக்கு வந்தப்போ என்ன காரணமோ தெரியலை, கலெக்டர் அனுமதி தரலைனு நினைக்கிறேன். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் இது. சம்பந்தமே இல்லாம கட்சிக்காரங்களை அரெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. மதுரையில் இப்ப தி.மு.க-க்காரர்கள் பாதிப் பேர் ஜெயில்லதான் இருக்காங்க. அரசு கேபிள் டி.வி. வந்த பிறகு, ராயல் கேபிள் விஷன் ஒளிபரப்பை மதுரையில் நிறுத்திட்டோம். ஏன்னா, இருக்கும் மிச்சம் மீதி கட்சிக்காரங்களையும் அதைக் காரணம் காட்டி, அரெஸ்ட் பண்ணிடுவாங்களோனுதான்.

மதுரைக்காரங்க எது பண்ணாலும் பிரமாண்டமா பண்ணுவாங்க. அதனாலயே மதுரையில் சின்ன சம்பவமும் அதீதக் கவனம் ஈர்க்குது. அதான் பிரச்னையே! 'அண்ணே... அதைப் பண்ணிட்டோம்ணே, இதைப் பண்ணிட்டோம்ணே’னு பெருமையா சொல்லிச் சொல்லியே சாதாரண விஷயத்தைக்கூட பூதா காரம் ஆக்கிடுவாங்க. அப்பாகூட எப்பவும் 10 பேர் இருப்பாங்க. ஏதாவது ஒரு விஷயம் பேசினா, அது 100 விஷயமா வெளியே போகும். ஆனாலும் எனக்கு இந்த உலகத்திலயே பிடிச்ச இடம் மதுரைதான். ஒரு குடும்பம் மாதிரி அரவணைச்சுப் பாசம் காட்டுற கட்சிக்காரங்கதான் அதுக்குக் காரணம்!''

சுழலும் மூன்று கமெரா லென்ஸ் கொண்ட IPhone அறிமுகம்


அப்பிளின் ஐபோன் இல் Hipstamatic என்ற எண்ணியல் நிழற்பட மொன்பொருளின் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை உயர்தொழினுட்ப கைத்தொலைபேசியாக இது மாற்றியிருக்கலாம். 

ஆனால் இந்த iPhone வில்லை டயல் இன்னொரு படி முன்னேறி தொலைதூரத்தினைப் படமெடுக்கும்> அகன்ற கோணத்தில் எடுக்கும் மற்றும் மீன்கண்களின் தோற்றத்தில் எடுக்கும் வில்லைகளென மூன்றுவித வில்லைகளைக் கொண்டு காணப்படுகின்றது.

இந்த வில்லைகள் Hipstamatic மென்பொருள் கொடுக்காத விளைவுகளைத் தருகின்றன.
வில்லை டயலில் பயனாளர் தமக்கு விரும்பிய வடிவில் படங்களைத் தெரிவுசெய்யக்கூடியவாறு தெரிவுகள் வந்துநிற்கும். தெரிவுசெய்தபின்னர் உங்களது சுழலும் வில்லைகள் கொண்ட ஐபோனினால் படங்களை மாற்றி மாற்றி எடுக்கமுடியும்.

இதுவரையும் இந்த முறை இறுதியாக வந்த இரு மாதிரிகளான iPhone4 மற்றும் iPhone4S இலும் மட்டுமே வேலைசெய்கின்றன.

இவை உண்மையில் நிழற்படக் கருவிகளுடன் போட்டிபோடும் அளவிற்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 





வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு

இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம்.



புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும் தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கமெராவை கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம்,

ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கமெராவில் ஏதாவது மாற்றம்(detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும்.

அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும், நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும்.

ஆபாச படநடிகைகளின் சிலிர்க வைக்கும் அனுபவங்கள்

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் ரெண்டால். நர்சாக வேலை பார்க்கிறார். இவரது பெண்கள் அலிசியா (27), அமண்டா (26), கிம்பர்லி (22). மூன்று பேரும் ஆபாச படங்களில் நடிப்பவர்கள்.

இதுபற்றி அமண்டா கூறியதாவது: பள்ளியில் படிக்கும் காலத்தில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அசத்துவேன். காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைக்கும் அளவுக்கு வேகமாக தயாராகி வந்தேன். பிறகு பள்ளியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, படிப்பை நிறுத்திவிட்டேன். எதிர்பாராதவிதமாக ஆபாச பட நடிகை ஆகிவிட்டேன். பேப்ஸ்டேஷன் ஆபாச நிகழ்ச்சியில் 7 ஆண்டுகளாக நடித்து வருகிறேன்.
அதற்கு அப்புறம், அக்கா அலிசியாவும் இத்துறைக்கு வந்துவிட்டார். பிரிட்டனின் முன்னணி ஆபாச நடிகைகளில் அக்கா அலிசியாவும் ஒருத்தி. தங்கை கிம்பர்லியும் தற்போது ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறாள்.

இதில் என்ன தவறு இருக்கிறது? அம்மா தான் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம், என் 3 பெண்களும் ஆபாச பட நடிகைகள். வாழ்க்கை நடத்த சொந்தக் காலில் நிற்கிறார்களே, அதுவே பெருமைக்குரிய விஷயம்தான் என்று பெருமை பொங்க சொல்கிறார். இவ்வாறு அமண்டா தெரிவித்தார்.

Tuesday, November 29, 2011

நடிகை பாவனாவின் மற்றொரு கோணம் (வீடியோவில்)


பாவனாவின் இதுவரை வெளிவராத ரகசிய வீடியோக்கள் 





கமல் தலைமையில் மாநாடு – பத்திரிகையாளர் சந்திப்பு


இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாடு சென்னையில் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, சென்னையில் கமல்ஹாசன் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது நடைபெறப் போகும் மாநாடு குறித்து அவர் கூறியது : ” ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு, இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது.

இந்த தொழிலில் உள்ள சிக்கல்களை எடுத்துரைக்க ஒரு அரங்கம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன்.
மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை, சென்னையிலும் நடைபெறுவதற்கு நானும், நண்பர் முராரியும் பாடுபட்டோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

பிரச்னைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும்.

மாநாட்டில் ஒரு சின்ன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான், கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும்.

சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப்பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது.

கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்கப்படும் ” என்று தெரிவித்தார்.

வெளியில் சொல்லமுடியாத என் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்கள் – சோனியா அகர்வால்


வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, என் வாழ்க்கையில் சில ரகசியங்கள் உள்ளன. அவற்றை எப்போதும் சொல்ல மாட்டேன்,” என்று நடிகை சோனியா அகர்வால் கூறினார்.

ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

இந்த படத்தில், நடிகையாக சோனியா அகர்வால் நடித்து இருக்கிறார். ராஜ்கிருஷ்ணா டைரக்டு செய்துள்ளார். புன்னகைப்பூ கீதா தயாரித்து இருக்கிறார்.

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டு பேசினார்.
அவர் பேசுகையில், “எல்லோருடைய வாழ்க்கையையும் போல் நடிகையின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சோகம், இன்பம், துன்பம், ரகசியம் இருக்கும்.

குறிப்பாக, நடிகையின் வாழ்க்கையில் பல ரகசியங்கள் இருக்கும். வெளியே தெரியாத பக்கங்கள் இருக்கும். அந்த பக்கங்களை இந்த படத்தில் காட்டியிருப்பதாக சொன்னார்கள்.

நடிகையின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் இருக்கும். எனக்கும் அந்த ஆவல் நிறைய உண்டு. இந்தப் படம் எனக்கே பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இந்தப் படம் பெறவிருக்கும் வெற்றிக்கு அதுவே பெரிய உதாரணம்,” என்றார்.

சோனியா அகர்வால் பேசும்போது, “நான் மூன்று வருடங்களாக நடிக்கவில்லை. மறுபடியும் நடிக்க வந்தபோது, ஒரு புதுமுகம் போல் உணர்ந்தேன். உடன் நடித்தவர்கள், இயக்குநர் போன்றவர்கள்தான் என்னை மிக இயல்பாக இருக்க உதவினர்,” என்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்தப் படத்தில் உங்கள் வாழ்க்கையின் ரகசியங்களைச் சொல்லியிருக்கிறீர்களா?

எல்லோருடைய வாழ்க்கையிலும் ரகசியங்கள் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. என் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன.

நான் நடிகையாக இருப்பதால், என் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். என் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை.

`ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தின் கதைக்கும், என் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. ஒரு சதவீதம் கூட, என் சொந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் சொல்லவில்லை.

டர்ட்டி பிக்சர் என்று இந்தியில் இதே மாதிரி படம் வருகிறது. மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படமும் துவங்கப் போகிறது. நடிகை பற்றி படங்கள் அதிகம் வருவது குறித்து…

‘டர்ட்டி பிக்சர்’ என்ற இந்தி படத்தின் கதை வேறு. நடிகையின் வாழ்க்கையை பற்றிய படங்கள் இதற்கு முன்பு நிறைய வந்துள்ளன. மதூர் பன்டார்கரின் ‘ஹீரோயின்’, ‘திரைக்கதா’ போன்ற படங்கள் வருவதெல்லாம் தற்செயலானது.

நடிகை பற்றிய ரசிகர்களின் ஆவலைப் புரிந்து எடுக்கிறார்கள். அதேநேரம், அந்த படங்களில் இருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்.’

குணச்சித்திர வேடங்கள் வந்தால் நடிப்பீர்களா?

எனக்கு கதாநாயகியாக நடிக்க அதிக சந்தர்ப்பங்கள் வருகின்றன. அதனால், குணச்சித்திர வேடங்களில் நடிக்க மாட்டேன்.” இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

ரஜினி முன்னிலையில் ஆபாசமாகப் பேசிய நடிகர்களுக்கு சம்மன்!

நடிகையொருவர் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டபோது, நாளிதழ் ஒன்று 'தனக்கேயுரிய' வகையில் செய்தி வெளியிட்டிருந்தது. இது மற்ற நடிகர் நடிகைகளை ஆத்திரங் கொள்ளச் செய்தது. 
அச்செய்தி பற்றி நடிகர்கள் காவல்துறையில் முறையிட்டதால், காவல்துறை நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனின் என்பவரைப் பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து இழுத்துச் சென்றது. 

இதைத் தொடர்ந்து நடிகர்கள் கூடி நடிகர் சங்கத்தில் கண்டனக் கூட்டம் போட்டனர். அதில் பேசிய நடிகர்கள் செய்தியாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் தரக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் பேசினர். 

நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் நடிகர்கள் விவேக், சூரியா, சத்யராஜ், ஸ்ரீபிரியா, விஜயகுமார், சரத்குமார் ஆகியோர் ஆபாசமாகப் பேசியதால் செய்தியாளர்கள் சார்பில் பல ஊர்களின் நீதிமன்றங்களிலும் வழக்குகள்ப் பதிவுச் செய்யப்பட்டன. 
அதில் ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவிட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் தரப்பு வழக்குரைஞர் விஜயன் கோரியபடி, நீதிபதி சுப்ரமணியம், "இவ்வழக்கு முகாந்திரம் உடையது என்று கூறி நடிகர்கள் சூர்யா, விவேக், சரத்குமார், சத்யராஜ், இயக்குநர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் அனைவரும் டிசம்பர் 19ம் தேதி நேரில் நீதிமன்றம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

நம்ம விஜய்யா அந்த மாதிரி படங்களில் நடித்தார்? நம்பவே முடியலே

பொதுவா டாப் 10 படங்கள் மாதிரி பதிவை யாராவது தொடர்பதிவுக்கு அழைச்சாத்தான் போடறாங்க.. என்னை யாரும் அழைக்காமயே போட 2 காரணம்.
என்னை யாரும் மதிக்கற மாதிரி தெரியல ( ஹி ஹி வழக்கமா நடக்கறதுதானே..)2.குடும்பத்துல எல்லாரும் அழைச்சிட்டுபோய் பொண்ணு பாக்கற வைபவம் என்னதான் கலகலப்பு இருந்தாலும் நாமா தனியா போய் சைட் அடிக்கறதுல ஒரு கிளு கிளுப்புஇருக்கத்தான் செய்யுது..
10. கண்ணுக்குள் நிலவு. ஃபாசில் இயக்கிய இந்தப்படம் வசூல் ரீதியா தோல்விப்படமா இருந்தாலும் ,விஜய்க்கும்,அவரது ரசிகர்களுக்கும் இது முக்கியமான படம்.அவர் நடிச்ச படங்கள்லயே அதிக அளவு வித்தியாசமான முக பாவங்களை வெளிப்படுத்துன படம் இதுதான்.வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஆனா அந்த சஸ்பென்ஸ் ஓவர்டோஸ் ஆகி தங்களை ஏமாத்தறதா ரசிகர்கள் நினைச்சதன் விளைவு படம் அவுட்.தன்னால் கொலை செய்யப்பட்டதா நம்புன பொண்ணு தன் கண் முன்னால உயிரோட வர்றப்ப விஜய் காண்பிக்கும் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் டாப் கிளாஸ்.ஷாலினி விஜய் லவ் சீன்ஸூம் ரொம்ப கவிதையா இருக்கும்.ஈரோடு அபிராமியில் 13 நாட்களே ஒடியது.

9. ஷாஜகான் - நண்பனின் காதலியை அவனோடு சேர்த்து வைக்கும் ஹீரோவின் கதைதான். சாதாரண இந்தக்கதை விஜய்-ன் ஸ்பெஷல் ஆனது விஜய் ஸ்மார்ட்டான கலரில் சர்ட் அணிந்து போட்ட டான்ஸ் ஸ்டெப்கள் ஒண்டர்ஃபுல்.டான்ஸ் மாஸ்டர் சொல்லித்தந்ததை மட்டும் ஆடி விட்டுப்போகாமல் தனது ஸ்டைலில் ஸ்பெஷலாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பு இந்தப்பாடலில் எதிரொலிக்கும்.காதலை விட்டுக்கொடுக்கும் பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் சக்‌சஸ் ஆவதில்லை என்ற பொது விதியின் படி இந்தப்படமும் ஓடவில்லை.ஈரோடு ராயலில் 28 நாட்களே ஓடியது.


8.ஃபிரண்ட்ஸ்- விஜய் -ன் மார்க்கெட் டவுன் ஆகும்போதெல்லாம் அவருக்கு கை கொடுப்பது கேரளாதான். சித்திக் இயக்கிய இந்தப்படம் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடு போட்டது.காமெடி கலக்கல் படம். வடிவேல் சர்வசாதாரணமாக விஜய்யை வாடா போடா என சகட்டு மேனிக்கு திட்டுவது போல் காட்சிகள் இருந்தாலும் விஜய் பெருந்தன்மையாக அதில் நடித்து பாத்திரத்துக்கு உயிர் ஊட்டினார்.பன்ச் டயாலக்கை நம்பாமல் திரைக்கதையயும்,காமெடியையும் நம்பினால் சக்சஸ் என்று உணர்த்திய படம்.ஈரோடு சண்டிகாவில் 80 நாட்கள் பின் சங்கீதாவில் 25 நாட்கள் ஓடியது


7.வசீகரா -இந்தப்படம் விஜய்-ன் வித்தியாசமான காமெடி சென்சை உணர்த்திய படம்.படம் முழுக்க நகைச்சுவை தோரணங்கள் கொடி கட்டிப்பறக்கும்.நெஞ்சம் ஒரு முறை வா என்றது பாட்டில் விஜய் சினேகா இருவரும் எம் ஜி ஆர் சரோஜா தேவி போல் ஆடி நடித்த இந்தப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெறாமல் போனது ஏமாற்றம்தான்.ஆனால் இதே போல் ரஜினிக்கும் மிஸ்டர் பாரத்தில் நடந்தது, என்னம்மா கண்ணு சவுக்கியமா? பாடல் காட்சியில் ரஜினி,சத்யராஜ் இருவரும் கலக்கலாக நடனம் ஆடி அவரவர் ஸ்டைலில் அசத்தி இருந்த போதும் ரசிகர்கள் பிரமாதமாய் ரசிக்கவில்லை.ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் இது 23 நாட்களே ஓடியது.


6.பிரியமுடன் - விஜய்க்கு அவரது கேரியரில் முக்கியமான படம்.கிட்டத்தட்ட சைக்கோ கம் வில்லன் கேரக்டர்..பாஜிகர் படத்தில் ஷாரூக்கான் நடித்த கேரக்டர்.இந்தப்படம் பார்க்கும்போது இது எடுபடாது.. தமிழில் ஓடாது என்றே நினைத்தேன். ஆனால் படம் ஹிட்.கவுசல்யாவின் அப்பாவை பேசிக்கொண்டே மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யும்போது விஜய் பிரமாதமாய் நடித்தார்.அதேபோல் க்ளைமாக்ஸ்சில் தனது காதலைப்பற்றி சொல்லிக்கொண்டே உயிர் விடும் காட்சியிலும் கலக்கினார்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 53 நாட்கள் ஓடியது.


5.திருமலை. - தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, ஸ்ரீ வித்யாவுக்கு பாத்ரூமில் சோப்போடுவது மாதிரி சீன்களில் எல்லாம் நடித்து பேரை கெடுத்துக்கொண்ட விஜய் இந்தப்படத்தில்தான் ஆக்‌ஷன் ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தார்.வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் மாதிரி இதுல ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான் என பேசிய பன்ச் டயலாக் சூப்பர் ஹிட்.விஜய் -ன் கேரியர் புது பாணியில் வெளிப்பட அடி கோலிய படம்.அதே போல் ஜோதிகாவுக்கு நிகராக டான்ஸ் காட்சியில் முக பாவங்களை சட் சட் என மாற்றி நடித்த படம்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 43 நாட்கள் ஓடியது.


4.குஷி -இயக்குநர் எஸ் ஜே சூர்யா செய்த உருப்படியான ரெண்டே காரியம் 1. வாலியில் அஜித்தை இயக்கியது.. 2. குஷி படத்தில் விஜய்யை இயக்கியது. எம் ஜி ஆர் காலத்தில் வந்த அன்பே வா பட KNOT தான். ஆனால் படம் முழுக்க ஜாலியாக போகும். என் இடுப்பை பாத்தியா? -இல்ல பாக்கல போன்ற பிரசித்தி பெற்ற வசனம் இதில் உண்டு.மேட்டோ ரீனா மேட்டோ ரீனா விசில் அடிக்கும் நிலவு தானா..பாட்டில் டான்ஸ் கொடி கட்டி பறக்கும்.கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா மும்தாஜின் நடனமும் ஃபேமஸ்.இந்தப்படத்தில் ஜோதிகா பல இடங்களில் ஓவர் ஆக்டிங்க் பண்ணி இருப்பார், விஜய் அண்டர்பிளே ஆக்டிங்க் பண்ணி சமப்படுத்தி இருப்பார். ஈரோடு ஆனூர் தியேட்டரில் இந்தப்படம் 70 நாட்கள் ஓடியது.


3.காதலுக்கு மரியாதை - விஜய் என்றால் விடலைப்பசங்கதான் ரசிகர்கள், சங்கவி கூடத்தான் சுத்துவார் என்ற இமேஜை உடைத்து தமிழ்த்திரை உலகையே கலக்கு கலக்கிய படம் .இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் பிரமாதமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்கும்.ஷாலினியின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் இருக்கும்.2 பேரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும் இது ஒரு இயக்குநர் படம். ஃபாசில் பின்னி பெடல் எடுத்த படம்.இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.க்ளைமாக்சில் இருவரின் காதலுக்கும் குடும்பம் ஓக்கே சொல்லும்போது ஒரு பின்னணி இசை வரும் பாருங்க.. சான்ஸே இல்லை..மேஸ்ட்ரோ மேஸ்ட்ரோதான்.இன்னும் கூட லவ் சப்ஜெக்ட் என்றால் இந்தப்படத்தைத்தான் ஸ்டோரி டிஸ்கஷன்போது இயக்குநர்கள் சொல்றாங்க.காவலன் பட விமர்சனங்களில் தினத்தந்தி, த ஹிந்து, ஸ்டார் டஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் விஜய்க்கு இன்னொரு காதலுக்கு மரியாதை என்றே குறிப்பிட்டுள்ளன.விஜய்-ஷாலினி இருவரும் புக்ஸ்டாலில் முதன்முதல் காதல் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் சீன் கவிநயம்.அபிராமி தியேட்டரில் 64 நாட்கள் தேவி அபிராமி தியேட்டரில் 40 நாட்கள் மொத்தம் 104 நாட்கள் ஈரோட்டில் ஓடியது.


2. துள்ளாத மனமும் துள்ளும் -சார்லி சாப்ளின் படத்தில் வந்த கதையை ஆளாளுக்கு உல்டா பண்ணி இந்த டைமில் 12 படங்கள் வந்தன. கார்த்திக்கின் நிலவே முகம் காட்டு படம் மட்டும்தான் ஞாபகம் இருக்கு.ஈரோடு ராயலில் இந்தப்படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது ரசிகர்கள் அடித்த கமெண்ட் 3 மாசத்துக்கு வேற படம் போட மாட்டாங்க..க்ளைமாக்சில் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை பாட்டுக்கு சிம்ரன் விஜய் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.விஜய்க்கு டான்சில் சரிக்கு சரி சிம்ரன்தான்.படத்துல வேற எந்த செலவும் இல்லை. சிம்ப்பிளா வந்து லாட்டரி அடிச்சுது.ஈரோடு ராயலில் 103 நாட்கள் ஓடியது.


1. கில்லி- ரஜினிக்கு எப்படி பாட்ஷா முக்கியமான திருப்பு முனையோ அது மாதிரி விஜய்க்கு கில்லி முக்கியமான படம். அவர் நடித்து அதிக நாட்கள் ஓடிய படமும் இதுவே.. ( 205 நாட்கள்). கபடி வீரராக வரும் விஜய்க்கு படம் பூரா திரிஷாவைக்கூட்டிக்கொண்டு ஓடும் வேலைதான். பிரகாஷ்ராஜின் ஹாய் செல்லம் டயலாக் செம ஃபேமஸ்..அப்படிப்போடு போடு பாட்டுக்கு விஜய் ஆடும் ஆட்டம் இளசுகளை துள்ளி ஆட வைத்தது.இந்தப்படத்தைப்பார்த்து காப்பி அடித்தே விஷால் பல படங்களில் நடித்தார்.நான் இந்தப்படத்தை பார்க்கும்போது படம் ஓக்கே நல்லாருக்கு என்றுதான் நினைத்தேன்.. ஆனால் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்.இதற்குப்பிறகு வந்த விஜய் படங்களை கில்லியோடு ஒப்பிட்டு அதுமாதிரி இது இல்லையே என பேச ஆரம்பித்தார்கள்..இது எல்லா ஹீரோக்களுக்கும் நடப்பதுதான்,,

3 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்த கொடுமை!


MEAUX விலிருந்து 10KM தூரத்திலுள்ள Germigny-l’Evêque (Seine-et-Marne) எனும் கிராமத்தில் ஒரு அழகிய 3 வயதுச் சிறுவனின் கதை பரிதாபமாக முடிந்து விட்டது. ஒரு முட்டாள் தனமான தகப்பனால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோய் உள்ளது.

சிறுவர் பாடசாலையில் சக மாணவன் கீறிய படம் ஒன்றைக் கிழித்து விட்டதாக ஆசிரியை கூறியதை அடுத்து, Bastien எனும் அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு மிருகத் தனமான தண்டனை கொடுத்துள்ளான் அந்தத் தந்தை. உடுப்புத் துவைக்கும் இயந்திரத்தினுள் வைத்து மூடி இயந்திரத்தினை இயக்கியுள்ளான். தாய் வந்து இயந்திரத்தை நிறுத்தியபோது குழந்தை முற்றாகக் குளிர்ந்து போயிருந்தது.


உடனடியாக அயலிலிருந்த Alice எனும் பெண்மணியிடம் ஓடிச் சென்ற தாய் குழந்தை மாடிப் படியிலிருந்து கீழே விழுந்து விட்டதாகக் கூறியுள்ளார். Alice கூறுகையில் தன் கையில் தந்த போது ஒரு பிழிந்து எடுக்கப்பட்ட ஒரு பொம்மை போலவே அந்தக் குழந்தை கிடந்தது. எனது கையிலேயே அந்தப் பிஞ்சின் கடைசி இதயத்துடிப்பு நின்றது என்று கூறினார்.



ஆனாலும் சிறுவனின் 5 வயது அக்கா MAUD பல உண்மைகளை Alice இடம் போட்டுடைத்து விட்டாள். தந்தை உடுப்புத் துவைக்கும் இயந்திரத்தினுள் இருந்து தம்பியை எடுத்து போதே தம்பி பேச்சு மூச்சில்லாமலே கிடந்ததாகவும், தந்தை தான் தம்பியை உடுப்புத் துவைக்கும் இயந்திரத்தினுள் வைத்துத் துவைத்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.


மேலும் தந்தை தம்பியை மிகவும் மோசமாகத் தண்டிப்பதாகவும் பல முறை அலமாரியினுள் வைத்துப் பூட்டி விடுவதாகவும் கூறினாள். Alice கூடத் தனது சாட்சியத்தில், ஒரு முறை இறந்த குழந்தையின் தந்தை அந்தப் பாலகனை ஒரு போர்வையில் முழுவதுமாகச் சுற்றி பல்கனியில் வைத்துவிட்டுக் கதவைக் பூட்டிவிட்டான். 


பின்னர் தான் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த படியால் குழந்தையை மீண்டும் அவர்கள் உள்ளே எடுத்தார்கள் என்று கூறினார். இறந்த குழந்தையின் தாயான Charlène இன் தாயார் கூறுகையில் இந்தக் குழந்தை பிறந்தது தனது மகளுக்கும் அவளது கணவனுக்கும் விருப்ப மில்லாததாகவே இருந்தது என்றார்.


கர்ப்பக் காலத்திலேயே தன்னிடம் மறைத்தே வைத்திருந்ததாகவும் பின்னர் குழந்தை பிறந்த போது அந்தக் குழந்தை தனக்கு வேண்டாம் என மகளின் கணவர் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் இப்படிக் கொடுமையை அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு கொடுமையை அவன் செய்வானென்று தான் நினைத்தே இருக்கவில்லை என்றும் கூறினார்.

தந்தையை '15 வயதிற்குக் குறைவான ஒருவரைக் கொலை செய்த கடுமையான குற்றத்திற்காக கைது செய்துள்ளனர், தாயைக் கொலைக் குற்றத்திற்கும் குற்றச்செயல்களுக்கும் துணைபோன குற்றம் மற்றும் ஆபத்திலிருந்தவரைக் காப்பாற்றாத குற்றம்' போன்றவற்றிற்ககாவும் கைது செய்துள்ளனர்.

இப்படியான கொடுமைகள் புரிந்த மனித மிருகங்கள் கடுமையாகத் தண்டிக்கப்படும் முறையால் இப்படியான கொடுமைகளை யாரும் கற்பனை கூடச் செய்து பார்க்கக்கூடாது.