Wednesday, March 23, 2011

படம் பிடிக்கும் மறைமுக கேமிராக்கள்


தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி எத்தனை வகை

கேமிராக்கள் மறைவாக இருந்து நம்மை படம் எடுக்க
ஒன்றல்ல இரண்ட்டல்ல பல வகை இதில் நாம் அன்றாடம்
பயன்படுத்தும் எந்த பொருள்களில் இருந்தெல்லாம் நமக்கு
தெரியாமல் படம் பிடிக்கின்றன்ர் என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.



இதில் பல வகை கேமிராக்களை நண்பர்கள் பலரும் பயன்படுத்தி
கொண்டுஇருக்கலாம் சிலவற்றை பற்றி தெரியாமலும் இருக்கலாம்.
முக்கியமான் சில அலுவலக பேச்சைக்கூட சில நேரங்களில் இது
போன்ற கேமிரா வைத்து படம் பிடித்துவிடுகின்றன்ர். இதில்
அதிகமாக பயன்படுத்தப்படும் அனைத்துவகை கேமிராக்களை
பற்றியும் அதை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதைப் பற்றியும்
இனி பார்க்கலாம். நாம் அணியும் தொப்பியிலிருந்து சட்டையில்
வைக்கும் பேனா,கால்குலேட்டர்,பெல்ட்,பிளக்பாயிண்ட்,கீச்செயின்,
வாட்ச்,கூலிங்கிளாஸ் என அனைத்து வகை பொருட்களிலும்
மறைமுகமாக செயல்படுகிறது.பொது இட்ங்களில் நாம் இதைப்பற்றிய
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தகவல்.









தகவல்கள்களை எப்படி திருடுகின்றனர்

மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல்
பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை
எப்படி திருடுகின்றனர் இதை தடுக்கும் வழிமுறை என்னென்ன
என்பதைப்பற்றித்தான் இன்றைய சிறப்புப் பதிவு.

மெமரி கார்டு , பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய
சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.
Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை
Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது
0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும் இதில் சேமிக்கப்படும்
எந்ததகவலும் அழிவதே இல்லை.எப்போது வேண்டுமானாலும்
அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற
முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை
மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை, ஆரம்ப காலத்தில்
நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும்.
நம் மெமரி கார்டு அல்லது பெண்டிரைவ்-களை ரிப்பேர் செய்ய
கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணினியில்
இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும்
அவர்களிடம் இருக்கும் மென்பொருள் துணை கொண்டு அந்த
கணினியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான
எந்த அறிவிப்பும் அந்த கணினியின் திரையில் தெரியாது. கணினி
பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம்
ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள்
மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸை நீக்க
சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்னதான் நாம் மெமரி
கார்டில் இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக
Recover செய்து கொடுக்க பல மென்பொருள் உள்ளது. நாம் திரையை
பார்த்துகொண்டு தான் இருப்போம் ஆனாலும் நம் மெமரி கார்டின்
ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்றுவரை உள்ள்
அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும்,
உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ்
நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வரைஸை நீக்கலாம்,வைரஸ்
பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க
வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore
என்பதை சொடுக்கி வரும் திரையில் இடதுபக்கத்தில் Memory
Card -க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை
காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி
செய்து முடித்த பின் Memory Card -ஐ Format செய்து பயன்படுத்தலாம்.
கூடுதல் விளக்கங்கள் பெற பின்னோட்டத்தில் உங்கள் கேள்விகளை
கேளுங்கள். இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.

ஏர்செல்லின் புதிய வயர்லெஸ் சேவை Aircel wi-fi

தமிழக நிறுவனமான ஏர்செல் புதிய சேவையாக வயர்லெஸ் இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வயர்லெஸ் என்பது எந்த வயர் தொல்லையின்றி இணையத்தைப் பயன்படுத்துவது ஆகும். நாட்டின் எந்தவொரு இடத்திலும் 512 Kbps வேகமுள்ள பிராண்ட்பேண்ட் இணைய சேவையை இந்த வசதியின் மூலம் பெற முடியும். நகரின் முக்கிய இடங்களில் ஏர்செல் நிறுவியுள்ள பிராண்ட்பேண்ட் சேவையினை வயர்லெஸ் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் பெற முடியும். இந்த வசதியினை Smartphones, laptops, tablet pc, netbooks போன்ற கருவிகளில் ஏர்செல்லின் wi-fi Hotspot கள் இருக்குமிடத்தில் மட்டுமே பெறமுடியும்.

GPRS வசதியெனில் நம்மிடம் சிம் இருக்க வேண்டும். அதைப்போலவே ஏர்செல்லின் Poket Internet க்கும் சிம் தேவை. ஆனால் சிம் இல்லாமல் இவற்றை விட அதிக வேகத்தில் செயல்படக்கூடியது Wi-fi ஆகும். இந்த சேவை தற்போது சென்னை நகரில் குறிப்பிட்ட இடங்களில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.


Aircel Wi-fi ஐப் பெறுவது எப்படி?

1.உங்கள் லேப்டாப்பில் அல்லது போனில் வயர்லெஸ் சேவையை
ஆன் செய்து கொள்ளவும்.
2.View Available wireless networks என்பதை டாஸ்க் பாரில் கிளிக் செய்து வரும் விண்டோவில் Refresh செய்து பார்க்கவும்.
3.ஏர்செல்லின் சேவையிருந்தால் ”AIRCEL_SPECTRANET” என்ற பெயரில் தோன்றும். அதைக் கிளிக் செய்து Connect செய்யவும்.
4.பின்னர் உங்கள் வலை உலவிக்குச் சென்று www.google.com என்று தட்டச்சிட்டால் இந்த இணைய சேவையைப் பயன்படுத்த புதிய பயனராக Sign up செய்வதற்கான பக்கம் வரும்.
5. உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்கவும். பின்னர் உங்களுக்கான கடவுச்சொல் SMS மூலம் மொபைல் எண்ணுக்கு அனுப்பப் படும்.
6. கிடைத்த கடவுச்சொல்லை வலைப்பக்கத்தில் அடித்து Submit செய்தால் உங்கள் மொபைலிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும். பின்னர் நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு வயர்லெஸ் இணைய சேவையை பயன்படுத்த முடியும்.



கட்டணங்கள் :

ஏர்செல் அறிமுக வசதியாக இதனை மார்ச் 31 வரை இலவசமாக இந்த வசதியினைப் பெற்றுக் கொள்ள குறிப்பிட்டுள்ளது. அதற்குப் பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ருபாய் 15 வீதம் வயர்லெஸ் சேவையைப் பெற முடியும். இதற்கான கட்டணம் உங்கள் மொபைலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். மொபைலில் போதிய அளவு பணமில்லை என்றால் இந்த வசதியினைப் பெற முடியாது. தரவிறக்க அளவு 30 Mb ஆகும். இதற்கு மேல் தரவிறக்க வேண்டுமெனில் திரும்பவும் 15 ருபாய் கட்டணத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.

பயனில்லாத மெயில்களை அனுப்பும் நிறுவனங்கள் மீது நடத்தி வரும் போராட்டம்.


எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.
உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.பெரும்பாலானோர் ஸ்பேம் மெயில்களை அடையாளம் கண்டதுமே அவற்றை டெலிட் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுகின்றனர்.
இருப்பினும் ஸ்பேம் மெயில்களை அனுப்புகிறவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் நம்பத்தகுந்த தலைப்புகளை கொடுத்து அவை நிஜமான மெயில் என்று நினைக்க வைத்து ஏமாற்றி விடுகின்றனர்.இப்படி ஏமாறுபவர்கள் சார்பில் எல்லாம் குரல் கொடுப்பது பொல அமெரிக்காவை சேர்ந்த டான் பால்சம் ஸ்பேம் மெயிகளை அனுப்பும் நிறுவங்களை எதிர்த்து துணிச்சலான போராட்டத்தை நடத்தி வருகிறார்.
தேவையும் இல்லாத பயனில்லாத மெயில்களை அனுப்பும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்வது அவர் நடத்தி வரும் போராட்டம்.
உண்மையில் பால்சம் தான் பார்த்து கொண்டிருந்த வேலையை கூட உதறித்தள்ளி விட்டு ஸ்பேம் மெயில்கள் பின்னே உள்ளவர்களை ஒரு கை பார்த்து வருகிறார்.
சான்பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கும் பால்சம் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றை வந்தவர்.எல்லோரும் போல அவருக்கும் தேவையில்லாத விளம்பர மெயில்கள் வந்து கொண்டிருந்தன.அவரும் முதலில் பொருத்து கொண்டு தான் போனார்.ஆனால் ஒரு நாள் மார்பகத்தை பெரிதாக்க உதவும் சேவை பற்றிய இமெயில்கள் தொடர்ந்து வந்ததால் கடுப்பாகி போன பால்சம் பதிலடி கொடுப்பது என தீர்மானித்தார்.
விளம்பர நோக்கில் அனுப்பபடும் மெயில்களை யாரும் விரும்புவதில்லை.அது அனுப்பி வைப்பவர்களுக்கும் நன்றாக தெரியும்.இருந்தும் இணையவாசிகளின் முகவரி பெட்டியலில் வயக்ரா விளம்பரங்களும்,இன்னும்பிற பயனில்லா அழைப்புகளும் குவிந்து கொண்டு தான் இருக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம் இந்த மெயில்களை அனுப்பி வைப்பது மிகவும் மலிவானது என்பதே.
அஞ்சல் மூலம் விளம்பர நோக்கிலான தபால்களை அனுப்பி வைப்பது என்றால் தபால் தலை செலவு காகித செலவு என்று ஏகப்பட்ட பணம் தேவைப்படும்.அந்த அளவுக்கு விரபனையில் பல இருக்காது.ஆனால் இமெயிலில் விளம்பரங்களை அனுப்புவது மிகவும் சுலபம்.எப்படியாவது இமெயில் முகவரிகளை திரட்டிவிட்டு ஒரே மெயிலை எல்லோருக்கும் அனுப்பி விடலாம்.
இப்படி ஆயிரக்கணக்கில் மெயிலை அனுப்பி அதில் யாராவது ஒரு சிலர் படித்து பார்த்தால் கூட லாபம் தான்.எனவே தான் பல நிறுவனங்கள் ஸ்பேம் மெயிலாக அனுப்பி தள்ளுகின்றன.
பால்சமும் இந்த தகவல்களை நன்கு அறிந்திருந்தார்.இமெயில் இலவசமாக இருப்பதாலேயே இந்த எரிச்சலூட்டும் மார்க்கெட்டிங் விளையாட்டு தொடர்கிறது என்றும் அறிந்திருந்த பால்சம் இந்நிறுவனங்களுக்கு கொஞ்சம் கையை கடிக்க வைத்தால் சரியான பாடமாக இருக்கும் என்று நினைத்தார்.
அதாவது ஸ்பேம் மெயில்களை அனுப்பி வைப்பவர்களுக்கு சிறிதளவேனும் இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தார்.
அதன்படி டான்ஹேட்ஸ்ஸ்பேம் என்னும் பெயரில் ஒரு இணையதளத்தை அமைத்து ஸ்பேம் மெயில்களை அனுப்புகிறவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க துவங்கினார்.
கலிபோர்னியா மகாண சட்டப்படி வழக்கு தொடர்ந்த பல நிறுவங்களை நீதிமன்றதுக்கு இழுத்து திணறடித்தார்.பல நிறுவனங்கள் இது என்னட வம்பாக போச்சே என்று அவரோடு சமரசம் செய்து கொண்டு நஷ்டஈடு தந்து விலகி கொண்டன.இதனிடையே பால்சம் சட்டத்தில் பட்டம் பெற்று வழக்கு போடுவதை மேலும் தீவிரமாக்கினார்.
விளைவு மேலும் பல ஸ்பேம் நிறுவனங்கள் அவரிடம் சிக்கி கொண்டன.அவற்றிடம் இருந்து நஷ்டஈடாக வந்த தொகையே பத்து லட்சம் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
தனது இணையதளத்தில் இந்த வழக்குகள் பற்றிய விவரங்களை அவர் பெருமையோடு குறிப்பிட்டு வருகிறார்.
அதோடு ஸ்பேம் மெயில்களால் என்ன பிரச்ச்னை என்பது குறித்தும் அவற்றை ஏன் களைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்பேம் மெயில்களை அனுப்புவது இலவசமானது அல்ல என்னும் நிலையை ஏற்படுத்தும் வகையில் இந்நிறுவங்களுக்கு நம்மால் முயன்ற அளவு சிறிய நஷ்ட்டத்தயேனும் உண்டாக்குவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் ஸ்பேம் தொழிலையே முழுவதுமாக முடக்கி விடலாம் என்று நம்புவதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஸ்பேம் நிறுவங்களை சேர்ந்தவர்களோ இவரது உண்மையான நோக்கம் பணம் சம்பாதிப்பதே என்று குற்றம் சாட்டுகின்றனர்.சட்டபடி வழக்கு தொடரும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வழக்கு போட்டு நிறுவங்களை வளைய வைத்து காசு பார்த்து விடுவதாக கூறுகின்றனர்.
பால்சம் இத்தகைய குற்றச்சாட்டுகளை கண்டு கொள்வதில்லை.குப்பை மெயில்களை அகற்றி இண்டெர்நெட்டை தூய்மை படுத்தும் செயலை தான் செய்து வருவதாக அவர் உற்சாகமாக கூறுகிறார்.
இணையதள முகவரி.;http://www.danhatesspam.com/