Sunday, December 4, 2011

கழுத்து முற்றாக அறுபட்டும் சாதாரணமாக திரியும் அதிசய சேவல்!! (வீடியோ இணைப்பு)



சேவலின் கழுத்தினை வெட்டினாலும் சிறிது நேரத்திற்கு துடிதடித்து பின் இறந்துவிடும். எனினும் இந்த சேவலினை பாருங்கள் முற்றாக கழுத்து அறுபட்டும். சாதாரணமாக மேய்ந்து திரிகின்றது. முஸ்லீம்கள் இதனை அல்லாவின் அதிசயம் என்கின்றனர்.

இது யாருடைய அதிசயமோ அது தெரியவில்லை ஆனால் சேவல் உயிரோடு உள்ளது மட்டும் உண்மை.



ஆச்சரியம் தரும் வீடியோ - ஒளியை உணர வைக்கும் நிழலின் மாயை –




மனித மூளையை வெளிச்சம் மற்றும் அதன் நிழல்கள் மூலம்


குழப்பமடைய வைக்கலாம் என நிரூபிக்கிறார்கள் இந்த வீடியோ மூலம்.


இந்த வீடியோவில் வருகின்ற பாக்ஸில் நடுவில் இருப்பதும் ஓரத்தில் இருப்பதும் ஒரே நிறமாக இருந்தாலும் எமது கண்களுக்கு அது வெண்மையாகவே தெரியுமாம்.





காதலனுடன் ஓடிய பெண்ணை தீ மூட்டிக் கொளுத்திய உறவுக்காரர்கள்!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள லெஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி என்ற பூரி(30). அவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பூரிக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான கமலுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பூரியும், கமலும் கடந்த 3ம் தேதி ஊரைவிட்டு ஓடினர். இந்த தகவல் அறிந்த பூரியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்களை பல்வேறு இடங்களில் தேடி இறுதியாக கடந்த 20ம் தேதி கண்டுபிடித்தனர்.

பூரியை ஊருக்கு அழைத்து வந்து கிராம மக்கள் முன்னிலையில் அடித்துக் கொன்றனர். பின்னர் அவரது உடலை மரத்தில் தொங்கவிட்டு, தீ வைத்து எரித்தனர். இதைப் பார்த்த கிராம மக்கள் யாரும் பூரியை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து பூரியின் பெற்றோர் டிம்னி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பூரியின் மாமனார், மாமியார் மற்றும் கமல், அவரது குடும்பத்தார் தலைமறைவாகியுள்ளனர்.

சென்னை அழகு நிலையங்களில் விபச்சாரம்:

சென்னையில் ஆயுர் வேத மஸாஜ் சென்டர்கள், ஸ்பா போன்ற பெயர்களில் இயங்கும் அழகு நிலையங்களில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மாறுவேடத்தில் சென்ற காவல்துறை, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 11 இளம்பெண்களை அதிரடியாக மீட்டது.

சென்னையில் ஆயுர் வேத மஸாஜ் சென்டர்கள், ஸ்பா என்ற போர்வையிலும் அழகு கலை நிபுணர்கள் பெயரிலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளைக் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் காவல்துறையினர், விளம்பரங்களில் வெளி வந்த தொலைபேசி எண்களில் வாடிக்கையாளர்கள் போல தொடர்பு கொண்டு பேசினர். மறுமுனையில் பதிலளித்த நபர் ஆழ்வார் பேட்டையில் எல்டாம்ஸ் ரோடு சந்திப்பிலுள்ள சுகோஸ்பா பியூட்டி பார்லருக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கிருந்த அழகிகளைக் காட்டி ரூ. 5 ஆயிரத்துக்குப் பேரம் பேசியுள்ளார்.

சுகோஸ்பா பியூட்டி பார்லரில் விபச்சாரம் நடப்பதை உறுதிபடுத்திக் கொண்ட காவல்துறையினர், பியூட்டி பார்லர் பொறுப்பாளர் சுனிதா என்பவரைக் கைது செய்ததோடு, அங்கிருந்த அசாம் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 4 இளம்பெண்களை மீட்டனர்.

மேலும் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பிரபல விபச்சார பெண் தாதாவும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவருமான கேரளாவைச் சேர்ந்த சுபா என்ற ஆன்சியின் மசாஜ் சென்டருக்கும் மாறு வேடத்தில் சென்ற காவல்துறையினர், அங்கும் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்து அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தி ஆன்சி மற்றும் அவருக்குத் துணையாக செயல்பட்ட பாலாஜி ஆகியோரைக் கைது செய்தனர். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 7 இளம்பெண்களையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

"சென்னை மாநகரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் மற்றும் பியூட்டிபார்லர் என்ற போர்வையிலும் மற்றும் அழகு கலை நிபுணர்கள் என்ற பெயரிலும் வாடிக்கையாளர்களை மயக்கி கவர்ந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீதும் அவர்களுக்குத் துணைபோகும் சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற போலி விளம்பரங்களைக் கண்டு வாலிபர்கள் தவறான வழிகளில் சென்று ஏமாந்து போகக்கூடாது" என்று போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வீடு புகுந்து இளம் பெண் பலாத்காரம்: ஐடிஐ மாணவர் கைது!!


வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்த ஐடிஐ மாணவர் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் உமா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(19). பணகுடியில் உள்ள தனியார் ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு உமா வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது வீட்டுக்குள் புகுந்த சதீஷ்குமார், உமாவை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.இதுபற்றி உமாவின் பெற்றோர் திட்டச்சேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடச்சென்னேன்: மறுத்ததால் அடித்துக்கொன்றேன்!!

கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகர், 9வது தெருவை சேர்ந்தவர் கட்டை குமார் (48). நில புரோக்கர். இவர், கடந்த 13ம் தேதி வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே முட்புதரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கல்லால் அடித்து தலை சிதைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், வியாசர்பாடி ஜெ.ஜெ.நகர் 6வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்யா என்பவரின் மனைவி சங்கீதாவுடன் (29) கட்டை குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திண்டிவனத்தில் பதுங்கியிருந்த சத்தியா (எ) சத்திய நாராயணன் (37), அவரது கூட்டாளிகள் சாந்தா (எ) சாந்தகுமார் (22), மதன் (22), தன்ராஜ் (22) ஆகிய 4 பேரை தனிப்படை சப் இன்ஸ்பெக்டர்கள் தேவராசு, மகேந்திரன், கலை ஆகியோர் கைது செய்தனர்.

விசாரணையில், சத்திய நாராயணன் கூறியதாவது: நானும் நில புரோக்கர் கட்டை குமாரும் நெருங்கிய நண்பர்கள். அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். மனைவி சங்கீதாவுடன் நட்புடன் பழகினார்.

எனக்கு ஆட்டோ வாங்கி தந்தார். நான் சவாரிக்க வெளியே செல்லும் நேரத்தில் அவர் வீட்டுக்கு வந்து சங்கீதாவுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதை அக்கம்பக்கத்தினரும் நண்பர்களும் என்னிடம் கூறினர்.

இருவரையும் கண்காணித்து கையும் களவுமாக பிடித்து கண்டித்தேன். எனினும் அவர்களது கள்ளஉறவு நீடித்தது.

சம்பவத்தன்று ஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாடு பக்கம் அழைத்து சென்றேன். அங்குவைத்து, சங்கீதாவுடனான கள்ள உறவை விட்டு விடுமாறு புத்திமதி கூறினேன். ஆனால் அவர், உன் மனைவியுடன் உல்லாசமாக இருப்பதற்குத்தான் உனக்கு ஆட்டோ வாங்கி தந்தேன்.

அவளை என்னால் பிரிய முடியாது என்றார். இதனால் நண்பர்களுடன் சேர்ந்து அவரை கல்லால் அடித்து மண்டையை உடைத்துவிட்டு ஓடி விட்டேன். இவ்வாறு சத்திய நாராயணன் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சினிமா தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு

இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கான தலைப்புகளில் தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

தமிழில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படத்திற்கு பெருமான் தி ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டப்பட்டது.

இதைப்போலவே கன்னடம் மற்றும் மராத்தி படங்களுக்கும் ரஜினிகாந்த் பெயரை தலைப்புக்காக பயன்படுத்தியிருந்தார்கள்.
இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு தலைப்பில் ஒட்டியிருக்கும் ரஜினிகாந்த் என்ற பெயரை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

பெருமான் என்ற படத்தலைப்பில் ரஜினிகாந்த் பெயரையும் சேர்த்துள்ளார்கள். சர்வத்தையும் குறிக்கும் பெயரோடு தன் பெயரை இணைத்ததை ரஜினி சார் விரும்பவில்லை. தன்னுடைய பெயரை எந்த வகையிலும் பயன்படுத்த ரஜினி சார் அனுமதி கொடுக்கவில்லை.

திரைப்படத் தலைப்புகளுக்காக அனுமதியின்றி அவர் பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று சூப்பர் ஸ்டாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இயக்குனர் பாலா - ராக்கோழியா

இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்!

* பாலாவின் ஒருநாள் மெனு இதுதான். காலையில் இரண்டு இட்லி, மதியம் ஒரு கைப் பிடிச் சாதம், இரவு இரண்டு தோசை. 'ராத்திரி ரெண்டு தோசை சாப்பிட்டேன்!' என கண்கள் விரித்துச் சொல்வார்!

* பாலாவின் படத்தில் 'சன்ரைஸ் ஷாட்'டை நீங்கள் பார்க்கவே முடியாது. அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாததால் நேர்ந்தது இது. ஆனால், சன்செட் காட்சிகள் ஏகமாகவே இருக்கும்!

* பாலாவின் திருமண ஏற்பாடுகளின்போது அவரது மாமனார் கொஞ்சம் தயக்கம் காட்ட, விளையாட்டாக 'பிதா மகன்' வில்லன் ரோலுக்கு 'மகாதேவன்' என்று மாமனார் பெயரை வைத்தது அக்மார்க் பாலா குறும்பு!

* அதிகாலையில் பாலாவைத் துயிலெழுப்ப துணை ராணுவப் படையே தேவைப்படும்.அவரை எழுப்பி ஷூட்டிங்குக்குத் தயாராக்கக் குறைந்தது நான்கு பேராவது மெனக்கெட வேண்டும்!

* தியேட்டரில் படம் பார்க்கும்போது செல் போனில் பேசினாலோ, எஸ்.எம்.எஸ். ஒலிஎழும்பினாலோ பாலாவுக்குப் பிடிக்காது. செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு யாருடனும் சண்டை போடுகிற எல்லைக்குக்கூடச் செல்வார்!

* எப்பவும் காலில் அணிவது ரப்பர் காலணிகள்தான். வேறெந்த வகைக் காலணிகளையும் உபயோகிக்க மாட்டார்!

சுடுநீர் பாத்டப்பில் **** கொண்டால் **** தேவையில்லையா?

உறவு கொள்வதில் வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசம், ஸ்டைல் இருக்கும். அதில் ஒன்று ஷவரில் குளித்தபடி உறவு கொள்வது, பாத்டப்பில் உறவு கொள்வது.

அதேசமயம், சுடுநீரில் உறவு கொள்ளும்போது எந்தவிதமான கருத்தடை சாதனமும் தேவையில்லை. சுடுநீரில் உறவு கொள்ளும்போது கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். அது உண்மையா? டாக்டர்கள் சொல்வதைக் கேட்போம். எந்த முறையில் உறவு கொண்டாலும் நிச்சயம் கருத்தடை சாதனங்கள் அவசியம் - கருத்தரிப்பதை விரும்பாவிட்டால்.

சுடுநீரில் குளித்தால் கருத்தடை சாதனம் தேவையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது தவறு. சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது. மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது.

எனவே ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அதேபோல சுடுநீரில் குளித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படும், விந்தனு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதில் பாதி உண்மை உள்ளது. விந்தனு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது.

உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தனு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட வி்ந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது வி்ந்தனு உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.

இது சூர்யா விஜய்க்கு செய்த பச்சை துரோகம் போன்றது அல்லவா?

1975 இல் பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தார் .படத்தில் இவருக்கு விஜய்க்கு இணையான வேடம் வழங்கப் பட்டிருந்தது .விஜய் ஜோடியாக கௌசல்யாவும் சூர்யா ஜோடியாக சிம்ரனும் நடித்தனர் .விஜயின் பாடல்களை விட சூர்யா நடித்த பாடல்களே பிரபல்யம் பெற்றன .’மனம் விரும்புதே உன்னை ‘ அந்த கால பெண்களை கொள்ளையிட்ட பாடல் .விஜய் அப்போது பூவே உனக்காக ,லவ் டுடே கொடுத்த ஹிட் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார் .அந்த நேரத்தில் புதிதாக அறிமுகமாகும் ஒருவருக்கு தனக்கு சமனான வேடத்தை வழங்கியது மட்டுமில்லாமல் சிறந்த பாடல்களையும் விட்டு கொடுக்க காரணம் என்ன .எந்த ஒரு நடிகனாவது அப்படி செய்வாரா ?.விஜய் அப்படி செய்ய காரணம் என்ன.?.சூர்யா விஜயின் நண்பன் என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது .(நேருக்கு நேர் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம் ).


பின்னர் சூர்யா காதலே நிம்மதி,சந்திப்போமா,பெரியண்ணா,பூவெல்லாம் கேட்டுப் பார் ,உயிரிலே கலந்தது என ஐந்து படங்களில் நடித்தாலும் எதுவுமே சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை .பெரியண்ணா கப்டனுடன் இணைந்து நடித்ததால் ஓரளவுக்கு சூர்யாவை இனங்காட்டியது .(விஜயின் தந்தை S.Aசந்திரசேகர் எடுத்த படம் இந்த பட வாய்ப்புக்கும் விஜய்தான் காரணம்)
. மீண்டும் சித்திக் இயக்கத்தில் விஜயுடன் இணைந்தார் பிரண்ட்ஸ் படத்தில்.படத்தில் விஜய்,சூர்யா இருவரும் உயிர் நண்பர்கள். அவர்களின் நட்பை சுற்றியே திரைக்கதை நகரும் .வடிவேலுவின் நகைச்சுவையும் கை கொடுக்க படம் சூப்பர் ஹிட் ஆனது .பிரண்ட்ஸ் வரும் போதும் விஜய் குஷி,பிரியமானவளே என தொடர் வெற்றியில் இருந்தார் .காதலுக்கு மரியாதை ,துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பிளாக் பஸ்ட்டர் தந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராய் இருந்தார்.ஆனால் சூர்யா சினிமாவில் இனம் காணப் படாமல் தோல்வியில் துவண்டு இருந்தார்.எனினும் மீண்டும் தனக்கு சமனான வேடத்தை அளித்து அவருக்கும் பாடல் காட்சிகளை வழங்கினார் விஜய். சூர்யா,விஜய் சேர்ந்து வரும் பாடல் காட்சிகளை பார்த்தால் தெரியும் .ஒரு காட்சியில் விஜய் முன்னிலைப் படுத்தப் பட்டால் அடுத்த காட்சியிலேயே சூர்யா முன்னிலை படுத்தப்படுவார் .அப்போதைய காலகட்டத்தில் விஜய் அப்பிடி நடித்திருக்க தேவை இல்லை.சூர்யாவை இரண்டாவது ஹீரோ ஆக காட்டி இருக்கலாம் .ஆனால் விஜய் அப்பிடி செய்ய வில்லை .ஏன் ?.சூர்யா அவரின் நண்பன்.ஆக மொத்தத்தில் விஜய் சூர்யாவை அறிமுகப் படுத்தியது மட்டுமில்லாமல் முதல் வெற்றியையும் பெற்று கொடுத்தார் .பிரண்ட்ஸ் இல் முதல் வெற்றியை பெற்ற சூர்யா கனவிலும் நினைத்திருக்க மாட்டார் .


இனி தனக்கு ஏறுமுகம் தான் என்று .அடுத்து சூர்யா நடித்த நந்தா சூர்யாவின் கரியரையே புரட்டி போட்டது .சூர்யாவை பாலா பட்டை தீட்டினார் .சூர்யா நடிப்பு நுணுக்கங்களை கற்று கொண்டார் .படங்களை தேர்ந்தெடுத்தார் .படத்திற்காக கடுமையாக உழைத்தார் .வெற்றிகளை குவிக்கிறார் .அதிர்ஷ்டமும் சூர்யாவுக்கு கை கொடுத்தது.நந்தா முதலில் அஜித் நடிப்பதாய் தான் இருந்தது .கஜினியும் மிரட்டல் எனும் பெயரில் அஜீத்துக்காக உருவான படம்தான் .

எது எப்படியோ சூர்யா இன்று முன்னணி இடத்துக்கு வந்து விட்டார் .இன்றைய தேதியில் முன்னணி நடிகர் அவர்தான் .அவரின் அடுத்த படமான ஏழாம் அறிவுக்கு நிலவும் எதிர் பார்ப்பு ,அவரின் சமீப படங்களின் தொடர் வெற்றிகள் என்பன அதற்கு சான்று .ஆனால் இப்போதைய விஷயம் என்னவென்றால் விஜய்,அஜித்,விக்ரமும் சூர்யாவின் வழியை பின்பற்ற தொடங்கி விட்டனர் .படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கி விட்டனர்.நண்பன் வந்த பின் மீண்டும் முன்னணி யார் என்று எழுத வேண்டி வரலாம் .அதை விடுவோம் நான் சொல்ல வேண்டிய விடயம் இந்த நண்பன்தான்.


. . 3 இடியட்ஸ்ஐ தமிழில் ஷங்கர் ரீமேக் செய்வார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் அனைவரிடமும் எழுந்த ஒரே கேள்வி அமீர்கான் பாத்திரத்தில் ஷங்கர் யாரை தெரிவு செய்வார் என்பதுதான் .ஷங்கர் தீர்க்கமாக விஜயை தெரிவு செய்தார் .விஜயின் நண்பர்களில் ஒருவராக சூர்யா நடித்திருக்கலாம் அது நட்பை சூர்யா வெளிக் காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் .அதை இங்கு சொல்ல வரவில்லை .அப்போது சூர்யா வெற்றிக் கடலில் மிதந்து கொண்டிருந்தார் .விஜய் தோல்வியில் துவண்டு கொண்டிருந்தார்.விஜயை விட முன்னணியில் இருக்கும் போது அவரையும் விட முக்கியத்துவம் குறைந்த ரோலில் நடிப்பது சாத்தியம் இல்லைதானே . .ஆனால் அரசியல் காரணங்களுகாக விஜயை படத்தை விட்டு தூக்கியவுடன் அந்த இடத்துக்கு சூர்யாவை நடிக்க கேட்ட போது சூர்யா என்ன செய்தார்.இது தன்னுடைய நண்பனின் படம் அவனை நீக்கிய படத்தில் நான் நடிப்பது அவனை அவ மதிப்பது போன்றது என்பது சூர்யாவுக்கு தெரியாதா? எப்படி ஒத்துக் கொள்ள முடிந்தது இவரால் .பட வாய்ப்பு இன்றி தோல்வியில் துவண்டிருந்தாலும் பரவாயில்லை மன்னித்து விடலாம் .இந்த படத்தில் நடித்துதான் தான் சூர்யா என்பதை நிருபிக்க வேண்டுமா?.அதற்குள் படத்தில் நடிப்பதற்கு நிபந்தனை வேறு.


. முடிவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.நான் சூர்யாவை குறை கூற வரவில்லை.சூர்யா,விஜய் நட்பு பற்றி நான் நினைப்பதைத்தான் எழுதி உள்ளேன் .உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் . இது நண்பன் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் வந்திருக்க வேண்டிய பதிவு .

ஐபோன் திருட்டுப் போனால் கண்டுபிடிக்கும் ஐபோன் App.

preyproject எனும் நிறுவனம் தொலைந்து போன லேப்டாப்பை கண்டுபிடிப்பதற்கான மென்பொருளை ஏற்கனவே வெளியிட்டுருந்தது. 


கணினிகளில் செயற்படுவது போன்று நீங்கள் பயன்படுத்தும் ஐபோன் தொலைந்துபோனால் அல்லது அதை தவறவிட்டுவிட்டால் இலகுவாக கண்டுபிடிக்கும் வசதியை ஐபோன் App மூலம் வழங்குகிறது இந்த இணையத்தளம்.
குறிப்பிட்ட ஐபோன் App ஐ நிறுவிய பின்னர் அதன் மூலம் புதிய கணக்கொன்றை திறக்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்திய பின்னர், Prey இணையத்தள கணக்குடன் ஐபோன் இணைக்கப்படும்.

ஐபோன் தொலைந்து போகும் சந்தர்ப்பத்தில் அதனை 
GPS, GSM , WiFi, போன்றவற்றை பயன்படுத்தி கண்டுபிடித்துவிடலாம்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே 

தமிழ் மாணவிகளை வைத்து செக்ஸ் படம்! ஏமாற்றிப் பணம் பறிக்கும் கள்ளக் காதலர்கள்!!

கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த உதயகலா என்னும் பெண்ணும் மற்றும் லண்டனில் சர்வதேச தமிழ் மாணவர் ஒன்றியம் (ITSO) நடத்தி வந்த ரிஷியுமாகச் சேர்ந்து பெருந்தொகையான மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.


பிரித்தானியாவில் இதற்காக பலரிடம் பணம் திரட்டப்பட்டுள்ளதோடு ஊரில் உள்ள பல போராளிகளின் குடும்பங்களிடமும் பணம் பெறப்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் ஊரில் உள்ள ஏரியா வசூலை உதயகலா கவனிக்க... லண்டன் ஏரியா வசூலை ITSO தலைவர் ரிஷி கவனித்துள்ளார். கிளிநொச்சியில் கஷ்டப்பட்ட மாணவிகளை சில முஸ்லீம்கள் மிரட்டி அவர்களை நீலப்படங்களில் (செக்ஸ் படங்களில்) நடிக்க வைப்பதாகக் கூறி ரிஷி என்பவர் பலரிடம் லண்டனில் பணம் கறந்துள்ளார்.

இவர் காட்டிய 70 MM பயாஸ்கோப் படக் கதையைக் கேட்டு சிலர் கண்ணீர் வடித்து ஏமாந்துள்ளனர். இவர் ஊரில் கூட்டுச் சேர்ந்த ஆளின் பெயர் தான் உதயகலா. அடுத்த ஒண்ணாம் நம்பர் பிராடு ! முஸ்லீம் சகோதரர்களையும் தமிழர்களையும் அடிபடவிடவேண்டும். அதே சமயம் காசும் கறக்கவேண்டும். சிங்களப் புலனாய்வுப் பிரிவால் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நபரே இந்த ரிஷி எனச் சிலர் கூறிவந்தபோது அதனை எவரும் நம்பத் தயார் இல்லை.

ஆனால் இன்று நிலை எல்லை மீறிச் சென்றுள்ளபோது வயிற்றில் அடித்து அழுவதால் என்ன பயன்? உதயகலா வட்டக்கச்சியில் இருந்தவேளை போராளி ஒருவரை மணம் முடித்துள்ளார். பின்னர் அப்போராளி காயப்பட்டதால் அவர் இந்தியாவுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனிடையே வன்னி தொழில்நுட்பக் கல்லூரியில் கணனிக் கல்வி பயிலச் சென்ற உதயகலாவுக்கும் அங்கே ஆசிரியராக இருந்த தயாபராஜ் (தயாபரன்) க்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது.


வன்னத் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை பார்த்த தயாபரன் என்பவரை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டது என்ற செய்தி 2009ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் வெளியாகியது. இவை அனைத்துமே ஒரு செட்டப்தான். ஆனால் உதயகலாவும் தயாபரனும் இந்தியா சென்று அங்கே வாழ்ந்து வந்துள்ளனர். கிளிநொச்சியில் இவர்கள் இருந்த காலகட்டத்தில் தயாபரன் என்பவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் நெருக்கமாக இருந்ததைப் பயன்படுத்தி பல ஏமாற்றுச் சம்பவங்கள் நடந்துள்ளது.


ஊனமுற்ற போராளிகளை வெளிநாடு அனுப்புவதாகப் பணம் பறிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை பெற்ற சில போராளிகளை தாம் வெளியே எடுத்துவிடுவதாகக் கூறி உதயகலாவும் தயாபரனும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர். தமது பிள்ளைகள் வெளியே வருவார்கள் என நம்பி பல குடும்பத்தினர் தமது வீடுவாசல்களை விற்று சிலர் தமது நகை நட்டுகளை விற்று இன்னும் சிலர் தமது சொந்த சேமிப்புகளைக் கூட இவர்களிடம் கொடுத்து ஏமாந்து செய்வதறியாது தவிக்கின்றனர்.

ஊரில் உதயகலாவும் தயாபரனும் லண்டனில் சர்வதேச மாணவர் ஒன்றியம் (ITSO) என்ற போர்வையில் ரிஷியும் சேர்ந்து கூட்டாகக் கொள்ளையடித்துள்ளனர். லண்டனில் கொள்ளையடிப்பது எனக்கு ஆனால் ஊரில் இருந்து படங்களை அனுப்பவேண்டும் என ரிஷி கூறியுள்ளார். அதாவது குழந்தைகளுக்கும் மாணவ மாணவியருக்கும் ஊரில் உதவுவது போல பல போலியான படங்களை எடுத்து அதனை லண்டனில் காட்டியுள்ளார் ரிஷி.

2009ம் ஆண்டு போர் நிறைவுற்ற பின்னர் லண்டனுக்கு மாணவர் விசாவில் வந்த ரிஷி என்னும் நபர் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் ஒன்றை லண்டனில் திறந்துள்ளார். அவர் அதனை எவ்வாறு திறக்க முடியும்? மாணவர் விசாவில் வரும் எவரும் 20 மணித்தியாலங்களுக்கு மேல் வேலைசெய்யவும் முடியாது மற்றும் வணிகத்திலும் ஈடுபட முடியாது என்பது பிரித்தானிய குடிவரவுச் சட்டமாகும்.

இதனைக் கூடக் கவனிக்காமல் பலர் அவருக்கு உதவி செய்துள்ளனர். காரணம் அவர் தேன் ஒழுகும் பேச்சே இதற்குக் காரணமாக அமைந்தது. லண்டன் வந்து சில மாதங்களில் அவர் இங்குள்ள பல அமைப்புகளுடன் சர்வசாதாரணமாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். THO என்று அழைக்கப்படும் தமிழர் சுகாதார அமைப்பு, பின்னர் ரி.ஆர்.ஓ, அதன் பின்னர் நம்பிக்கை ஒளி என பல தர்மஸ்தாபனங்களுடனும் அதன் தலைவர்களுடனும் அவர் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார். இதனூடாக அவர் பணத்தைப் பெற்று ஊருக்கு அனுப்புவதாக நாடகமாடியும் உள்ளார்.

தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயகலாவைப் பொறுத்தவரை அவர் ஊரில் தொடர்ந்தும் பல ஏமாற்று வேலைகளை செய்து வருகிறார். ஊனமுற்ற போராளிகளை, குழந்தைகள் பராமரிப்பு, மாணவிகளை பராமரிப்பரிப்பது எனப் பல விடையங்களை மக்களுக்குச் சொல்லி அதனூடாக அவர் பணத்தைக் கறந்து வருகிறார். எம் உறவுகளே! இவர்களை நீங்கள் இனங்காணுவது அவசியமாகும்.

எத்தனையோ நல்ல தர்மஸ்தாபனங்கள் இருக்கும்போது இவர்களிடம் போய் ஏன் பணத்தைக் கொடுக்கவேண்டும்? லண்டனில் இருந்து இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் இவர்கள் போன்றவர்களுக்கு ஏன் பணத்தைக் கொடுக்கவேண்டும்? அதுமட்டுமா தனி மனிதர்களும் செல்வந்தர்கள் மற்றும் மருத்துவர்களும் இந்த ரிஷியிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போயுள்ளதாகப் புலம்புகின்றனர்.

இவ்வாறு பெருந்தொகையான பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காவும் மக்களை ஏமாற்றி பணம் பறித்த குற்றத்திற்காகவும் உதயகலாவையும் தயாபரனையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது மலேசியாவில் தங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இவர்களுக்கு சர்வதேசப் பொலிசார்(இன்ரர் போல்) பிடியானண பிறப்பிக்க இலங்கையில் உள்ள யாராவது ஒரு சட்டத்தரணி முன்வருவாரா? இல்லை தமிழர்களின் நலன்களுக்காக தாம் செயல்படுகிறோம் எனக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்விடையத்தில் தலையிட்டு தமது தரப்பினூடாக ஒரு சட்டத்தரணியை நியமிக்குமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளின் குடும்பங்களுக்குமே மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதேநேரம் புலம்பெயர் மக்களிடம் உதயகலா என்பவர் தனது கள்ளக் காதலனான தயாபராஜ் இறந்து விட்டார் எனப் பணம் வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இறந்தமைக்கான ஆதரம் கேட்கப்பட்டுள்ளது. அதற்காக தனது கள்ளக் காதலனை இறந்த்துபோல் நடித்து அதனைப் புகைப்படம் எடுத்து புலம்பெயர் வாழ் மக்களுக்கு ஆதரமாகக் காட்டியுள்ளார். இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உதயகலா என்வரின் மற்றுமொரு நாடகமாக தனது சகோதரியின் பிள்ளை யுத்த்த்தினால் பாதிக்கப்பட்டு அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து அதன் ஊடாகவும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார் உதயகலா. இதற்கான ஆதாரமாக அச் சிறுபிள்ளையை வெள்ளைத் துணியால் சுற்றிப் படம் எடுத்தும் காண்பித்துள்ளார்.

இதேவேளை ரிஷி என்பவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் வேறொருவரால் நடத்தப்பட்ட அநாதையில்லப் புகைப்படங்களைக் கொண்டு பணம் பெற்றுக் கொண்டதாகவும், இருந்தும் அப் பணத்தினைக் கொண்டு தான் ஒரு இணையத்தளத்தினை உருவாக்கியுள்ளதாகவும் கொள்ளையடித்த பணத்துக்குக் கணக்குக் காட்டியுள்ளார். வன்னிப் பெருநிலப்பரப்பில் எத்தனையோ தமிழ் மக்கள் ஒருவேளை உணவுக்காக்க் கையேந்திக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர் வாழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் இணையத்தளம் செய்த்தாக்க் கூறுகின்றார் இவர்.

இது இவ்வாறிருக்க வணக்கம் என்ற இணையத்தளத்தைக் கொண்டும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெகுவிரைவில் இவ்விடத்தில் பிரசுரிக்கப்படும். அதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஏழை பிள்ளைகளுக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்த பணம் இதுவரை அப் பிள்ளைகளுக்குப் போய்ச் சேரவில்லை எனக் கேட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து தமக்காகச் செயற்பட்ட கஸ்தூரி என்பவர் 7 இலட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியுள்ளதாகவும் இதனாலேயே தங்களால் அனுப்பி வைத்த பணம் இன்னும் அப் பிள்ளைகளுக்குப் போய்ச் சேரவில்லை எனத் தெரிவித்தார்.

இவரின் தகவலையடுத்து கஸ்தூரியுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர் சார்பாக ஸ்கந்தா என்பர் தெரிவிக்கையில், அனைத்துப் பித்தலாட்டங்களுக்கும் ரிஷிதான் காரணம் என அவர் தெரிவித்துள்ளதுடன் அந்தப் பெண் எவ்வித பணத்தையும் கையாடவில்லை எனவும் அவர் பற்றுணர்வுடன்தான் இதனை நடத்தி வந்தாகவும், இவரின் செயற்பாடுகள் பிழையான வழியில் செல்வதையறிந்து கஸ்தூரி அதிலிருந்து விலகிக் கொண்டதாகவும் ஸ்கந்தா தெரிவித்தார்.

இதேவேளை இவர்களால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரிடம் கேட்டபோது, இவர்களை நம்பி இனி ஒரு ரூபாய் கூட வழங்க வேண்டாம் என புலம்பெயர் வாழ் மக்களிடம் தான் தாழ்மையாக்க் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

புதிய பரிமாணத்துடன் மீண்டும் உருவாகும் கமல்ஹாஸனின் மையம்



ரசிகர்களுக்காக முன்பு கமல்ஹாஸன் மய்யம் என்ற பத்திரிகையை தொடங்கி சில காலம் நடத்தினார்.

பின்னர் பத்திரிகை நின்றுவிட்டது. கடந்த ஆண்டு மீண்டும் மய்யம் பத்திரிகையை டேப்ளாய்டு வடிவில் நடத்த ஆரம்பித்தார். இலக்கிய அறிஞர்களை இதற்காக பிரத்தியேகமாக சந்தித்து பேட்டிகளும் எடுக்கப்பட்டன.

இப்போது மய்யம் பத்திரிகை முழுமையான இணைய இதழாகிறது.

ரசிகர்மன்ற நிகழ்ச்சிகள், தனது படங்கள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள், இலக்கிய கட்டுரைகள் போன்றவற்றை இந்த இணைய தளத்தில் அப்டேட் செய்து வைக்கப்படும்.

இந்த தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் முடிவு செய்துள்ளார் கமல். அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது பார்வை பற்றிய கருத்துக்களையும் இதில் பதிவு செய்கிறார். மய்யம் இணையதளத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த தகவல்களை சமீபத்தில் நடந்த ஃபிக்கி மாநாட்டு செய்தியாளர் சந்திப்பில் கமல் தெரிவித்தார்.

நாக்கை அறுத்து மார்பை பிளந்து ரவுடி கொலை!! (பட இணைப்பு)


சேலத்தில் ரவுடியின் நாக்கை அறுத்து, மார்பை பிளந்து கல்லைக் கட்டி கிணற்றில் சடலத்தை மர்ம நபர்கள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அன்னதானப் பட்டி ஒன்பதாம்பாலியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (36). பெயின்டர். அதே பகுதியில் சில்லி சிக்கன் கடையும் நடத்தி வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் மனைவி பிரேமாவுடன் கடையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய வெங்கடே சனை 5 பேர் கும்பல் ஒட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.

இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவரை அந்த கும்பல் கொன்று வீசியதாக கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் கிணற்றில் தேடினர்.
இந்நிலையில் அன்னதானப்பட்டி பழனிச்சாமி(40) என்பவரை காணவில்லை எனவும், இவர் ரவுடி கோழி பாஸ்கரின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது.
80 அடி ஆழ கிணற்றில் மூழ்கியிருந்த சடலத்தை 2 மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு நேற்று பகல் 1.30 மணியளவில் மிதந்த சடலத்தை மீட்டனர்.

நாக்கை அறுத்து, மார்பை பிளந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்த அது பழனிச்சாமி என தெரியவந்தது. கொலையாளிகள், கல்லை கட்டி சடலத்தை கிணற்றில் வீசியிருந்தனர். அது ரவுடி பழனிச்சாமி தான் என்பதை உறவினர்கள், மனைவி உறுதி செய்தனர். சடலத்தை பார்த்த மனைவி கதறி அழுதார்.

பழனிச்சாமியை கொலையாளிகள் கொலை செய்து, நாக்கை அறுத்துள்ளனர். பின்னர் மார்பை பிளந்து, சடலம் மேலே வராமல் இருப்பதற்காக கல்லைகட்டி கிணற்றில் வீசியுள்ளனர். கொலையான பழனிச்சாமி மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. இவருக்கு பூங்கொடி என்ற மனைவி யும், 2 மகன்களும் உள்ளனர்.

சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளை பிடிக்க கமிஷனர் மஹாலி, துணை கமிஷனர் சத்தியாபிரியா மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் பெருமாள் கோஷ்டியை சேர்ந்த 12 பேர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைக்கு பின்னணி

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கோழிபாஸ்கர் தலைமையில் ஒரு ரவுடி கோஷ்டியும், பெருமாள் தலைமையில் ஒரு ரவுடி கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிபாஸ்கர் மற்றும் அவரது கோஷ்டியினர் பெருமாளை வெட்டிக் கொல்ல முயன்றனர்.

அப்போது தடுத்ததில் பெருமாளின் கையில் இருந்த 9 விரல்கள் துண்டானது. இந்த சம்பவத்திற்கு பழி தீர்க்க பெருமாள் கோஷ்டி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் கோழி பாஸ்கர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரது அண்ணன் வெங்கடேசனை வெட்டிக் கொன்றுள்ளனர். பழனிச்சாமி ஏற்கனவே பெருமாள் கோஷ்டியில் இருந்துள்ளார்.

சமீபத்தில் தான் அவர் கோழி பாஸ்கர் கோஷ்டியில் சேர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் கோஷ்டி பழனிச்சாமியை கொடூரமாக கொன்று கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது.

நண்பனையே கொலை செய்யத் தூண்டிய தும்மல்!!


ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் சரண் (23). இவரும், பிடெக் பட்டதாரி ஸ்ரீனிவாசலு (28), அசோக், சந்திரகாந்த், வெங்கடேச பிரசாத் ஆகியோர் பெங்களூரில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

வெங்கடேச பிரசாத் தவிர மற்ற அனைவரும் வேலை தேடி வந்தனர். நேற்று வெங்கடேச பிரசாத் வேலைக்கு சென்று விட்டார். சந்திரகாந்த் வீட்டின் வெளியில் நின்றிருந்தார். மற்ற மூவரும் வீட்டுக்குள் இருந்தனர்.

ஸ்ரீனிவாசலுக்கு சளி தொல்லை இருந்தது. இதனால் தொடர்ந்து தும்மிக் கொண்டே இருந்தார். அதை பார்த்த சரண் கேலி செய்து சிரித்தார்.
கோபம் அடைந்த ஸ்ரீனிவாசலு சரணை அங்கிருந்து செல்லும்படி கூறினார். அதை கண்டு கொள்ளாமல் சரண் கிண்டலடித்து கொண்டு இருந்தார்.

ஆத்திரம் தலைக்கேறிய ஸ்ரீனிவாசலு, வீட்டு கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து வந்து சரணை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரண் துடிதுடித்தார். இதை நேரில் பார்த்த அசோக் கூச்சல் போட்டார். வெளியில் நின்றிருந்த சந்திரகாந்தும், அசோக்கும், சரணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து விசாரித்த போலீசார், ஸ்ரீனிவாசலுவை கைது செய்தனர்.

நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்:



தங்களது நாட்டு மக்களையே உளவு பார்க்க அரசாங்கங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளைத் தந்து வரும் சர்வதேச தொலைத் தொடர்பு சாப்ட்வேர் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் அதிபர் ஜூலியன் அசாஞ்ச்.

அல்காடெல்-லுசென்ட், சீமென்ஸ், நார்த்ராப் க்ரும்மென் உள்ளிட்ட உலகின் 160 முன்னணி தொலைத் தொடர்பு சாப்ட்வேர் நிறுவனங்கள் பல நாடுகளுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைத் தந்துள்ளன. இதன்மூலம் மக்களின் செல்போன்- தொலைபேசி உரையாடல்கள், இன்டர்நெட் வாய்ஸ் மெயில்கள், இ-மெயில்கள், எஸ்எம்எஸ்கள், சர்ச் என்ஜின் தேடல்களை அந்த நாட்டு அரசுகள் ஒட்டுக் கேட்டும், படித்துப் பார்த்தும் வருகின்றன.

இந்த ஒட்டு கேட்பு சாப்ட்வேர் தொழில்நுட்பங்கள் மூலம் ஏராளமான பில்லியன் டாலர்களை இந்த நிறுவனங்கள் குவித்து வருகின்றன. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் மூலம் தங்கள் நாட்டு மக்களையே உளவு பார்த்து, அவர்களை அரசுகள் முடக்கி வருகின்றன.

குறிப்பாக, அடக்குமுறையான ஆட்சியை நடத்தும் அரசுகள் தங்களது எதிர்ப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒடுக்கவும், ஜனநாயகத்துக்கு ஆதரவானவர்களை சிறையில் தள்ளவும் இந்தத் தொழில்நுட்பங்கள் பெருமளவில் உதவி வருகின்றன.


குறிப்பாக பிரான்ஸைச் சேர்ந்த உளவு பார்க்கும் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான அமிசிஸ், இந்தத் தொழில்நுட்பத்தை முன்னாள் லிபிய அதிபர் கடாபிக்கு பல பில்லியன் டாலருக்கு விற்றது. இதைக் கொண்டு லிபியாவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் தனக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களை கடாபி அடையாளம் கண்டு ஒடுக்கினார், பலரை கொலையும் செய்தார்.


(இத்தனைக்கும் லிபியா மீது பொருளாதாரத் தடை அமலில் இருந்தபோதே இதை அமிசிஸ் விற்றுள்ளது)


10 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து உளவுப் பிரிவினருக்கு உதவும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கிய இந்த உளவு பார்க்கும் தொழில்நுட்ப சாப்ட்வேர்கள் இப்போது உலகெங்கும் பல்வேறு நாடுகள், அரசுகள், உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றன.


இதைக் கொண்டு சொந்த மக்களையே நாடுகளும் அரசுகளும் உளவு பார்த்து வருகின்றன. குறிப்பாக லிபியா, எகிப்து, துனீசியா, சிரியா உள்ளிட்ட ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் தலைவர்கள் இந்த உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை ஜனநாயக விரோத செயல்களுக்கும், சுதந்திரம் கோரும் குரல்களை ஒடுக்கவும் பயன்படுத்தினர்.


இந்த உளவு சாப்ட்வேர்களை உருவாக்கும் மேற்கத்திய நாடுகளில் அதன் விற்பனையைக் கட்டுப்படுத்த எந்த விதிமுறையும் இல்லை. இதனால் பணம் தந்தால், யாருக்கு வேண்டுமானாலும் இதை தொலைத் தொடர்பு-சாப்ட்வேர் நிறுவனங்கள் விற்று வருகின்றன.


சமீபத்தில் எகிப்திலும் லிபியாவிலும் மக்கள் நடத்திய புரட்சியின்போது ராணுவ, உளவுப் பிரிவு அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. அப்போது வெளியே வீசப்பட்ட பல பொருட்களில் இந்த உளவு சாப்ட்வேர்கள் அடங்கிய சிடிக்கள், சிடி ரேம்களும் அடக்கம். இவை விக்கிலீக்ஸ் வசம் சிக்கின. இதை வைத்து மேலும் உலகளவில் விசாரணை நடத்தி இந்தத் தகவல்களைத் திரட்டினோம் என்றார் அசாஞ்ச்.


பின்னர் நிருபர்களைப் பார்த்து, உங்களில் யார் யார் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துகிறீர்கள் என்று அசாஞ்ச் கேட்டார். பெரும்பாலானோர் கையை உயர்த்த.. “Well, you’re all screwed” என்றார் சிரித்தபடியே.


இது தொடர்பான முழு விவரங்களையும் இதற்காகவே விக்கிலீக்ஸ் ஆரம்பித்துள்ள http://owni.eu/என்ற புதிய இணையத்தளத்தில் காணலாம்.


இதில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த உளவு சாப்ட்வேர்களை உருவாக்கும் நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார் அசாஞ்ச்.


இந்தியாவில் சிம்லாவை தலைமையிடமாகக் கொண்ட ஷோகி கம்யூனிகேசன்ஸ், இந்தூரைச் சேர்ந்த க்ளியர் ட்ரையல் ஆகிய நிறுவனங்களும், இங்கிலாந்தின் ஷீல்ட் செக்யூரிட்டி ஆகிய நிறுவனங்களும் இந்த ஒட்டு கேட்பு உளவு சாப்ட்வேர்களை தயாரித்து வழங்கி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஏழாம் வகுப்பு மாணவியை கடத்தி, திருமணம் செய்து, கற்பழித்தவருக்கு பத்து ஆண்டு சிறை! !


ஏழாம் வகுப்பு மாணவியை கடத்தி, திருமணம் செய்து, கற்பழித்த டிராக்டர் டிரைவருக்கு பத்து ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூர், பூலேரிக்காட்டை சேர்ந்தவர் கோபால். அவர், தனது குடும்பத்தினருடன் எலவமலை அருகே, பூலாங்காட்டில் தங்கி, அங்குள்ள கரும்பாலையில் பணிபுரிந்து வந்தார்.

அவரது மூன்றாவது மகள் சுமதி (14), பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அவர் பள்ளிக்கு தினமும் டவுன் பஸ்ஸில் சென்று வந்தார். பஸ்ஸை தவற விட்ட நேரங்களில், கரும்பாலையில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்த பரமத்தி வேலூர், சாணார்பாளையத்தை சேர்ந்த சேகர் (40), தனது பைக்கில் சுமதியை பள்ளிக்கு அழைத்து செல்வார்.

கடந்த, 2008 ஃபிப்ரவரி 11ம் தேதி, காலை 8.45 மணிக்கு, சேகருடன் பள்ளிக்கு சென்ற சுமதி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பள்ளியில் விசாரித்தபோது, சுமதி பள்ளிக்கு வரவில்லை என்று தெரிந்தது.

தனது உறவினர் மற்றும் சுமதியை கடத்தி சென்ற சேகரின் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை. சித்தோடு போலீஸில் கோபால் புகார் செய்தார். போலீஸார் இருவரையும் தேடி வந்தனர். ஆகஸ்ட் 15ம் தேதி பவானி பஸ் ஸ்டாப், மேட்டூர் ரோட்டில் நின்றிருந்த சேகரை கைது செய்து, சுமதியை போலீஸார் மீட்டனர்.

போலீஸ் விசாரணையில், சுமதியை கடத்தி சென்று ஜலகண்டாபுரம் விநாயகர் கோவிலில் சேகர் திருமணம் செய்துள்ளார். பின், பெங்களூரு, கோழிபிறான் கேட்டில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் இருவரும் தங்கி, பணிபுரிந்துள்ளனர். அங்கு குடும்பம் நடத்தியுள்ளது தெரியவந்தது.

சிறுமியை கடத்தி சென்று, கற்பழித்ததாக சேகர் மீது, ஈரோடு மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், போலீஸார் வழக்கு தொடர்ந்தது. பள்ளி மாணவியை கடத்தி சென்று, கட்டாய திருமணம் செய்து, கற்பழித்த சேகருக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.

அபராதத் தொகையில், ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, பாதிக்கப்பட்ட சுமதிக்கு வழங்கும்படியும், அபராத தொகையை செலுத்தவில்லையெனில், சேகருக்கு மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

திருமணத்தன்று 1வது காதலனை ஏமாற்றிவிட்டு 2வது காதலனுடன் பெண் எஸ்கேப்!!


ஒரே சமயத்தில் 2 பேரை காதலித்து வந்த பெண் திருமண நாளன்று ஒரு காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனை மணந்து கொண்டார்.சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தபிரியா. அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை காதலித்து வந்தார். ரமேஷைக் காதலிக்கையிலேயே வசந்தபிரியாவுக்கு மேட்டூரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் மீதும் காதல் வந்தது.

இதையடுத்து அவர் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கணேஷின் வீட்டிற்கு அவர்கள் காதல் தெரிய வந்து திருமணம் நிச்சயம் செய்தனர். கடந்த 19ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தாலியைக் கட்டிவிட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.

வசந்தப்பிரியா தனது குடும்பத்தாருடன் கடந்த 18ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார். அதிகாலையில் பார்த்தால் மணப்பெண்ணைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கணேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
அங்கிருந்து ஓட்டம் பிடித்த வசந்தபிரியா தனது இன்னொரு காதலனான ரமேஷை பழினியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் தம்பதி சகிதமாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ் மற்றும் வசந்தபிரியா குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு வசந்தபிரியாவை கணவனுடன் பார்த்த கணேஷ் மனமுடைந்தார். திருமண ஏற்பாடுகளுக்காக செய்த செலவைத் திருப்பித் தருமாறு கணேஷ் குடும்பத்தார் தகராறு செய்தனர். அந்த 2 குடும்பத்தார்களையும் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.

உங்களின் இரகசியங்களை Facebook விளம்பரதாரர்களுக்கு விற்கிறது


Facebook தனது பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களில் பெருமளவானவற்றை வெளியே விளம்பரப்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய அமைப்பினால் Facebook தனது பயனாளர்களின் அரசியல், பாலியல் மற்றும் சமய நம்பிக்கைகள் பற்றிய தகவல்களை வெளியிடும் முறையை நிறுத்தப் போவதாகக் கூறியுள்ளது.

நவீன மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்நிறுவனம் மக்களின் செயற்பாடுகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை விளம்பரதாரர்களுக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த தனிப்பட்ட கருத்துக்கள் மீறப்படுவது தொடர்பாக ஜனவரியில் EC Directive என்ற புதியதொரு அமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவ் அமைப்பானது பயனாளர்களால் அனுமதிக்கப்படும் தகவலைத் தவிர வேறொந்தத் தகவல்களையும் விளம்பரப்படுத்துவதைத் தடைசெய்யும் எனக் கூறப்படுகின்றது.

இங்கு பெறப்படும் தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவிலுள்ள கணினிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் Facebook இனால் இதன் சட்டங்கள் மீறப்பட்டால் அதன்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது பாரியளவில் தண்டப்பணம் அறவிடப்படுமென்று கூறப்படுகின்றது.

இந்த நகர்வானது அடுத்த வருடம் Wall Street இன் பணமாற்றுத் திட்டத்தில் பங்குபற்ற நினைத்த Facebook இன் திட்டங்களைப் பாதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.


இந்த அமைப்பானது தற்போதைய தொழினுட்ப முன்னேற்றங்களுடனான ஐரோப்பிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைத் திருத்தும் என்றும் ஐரோப்பாவெங்கும் இது நடைமுறையிலுள்ளது என்பதை உறுதிப்படுத்துமென்றும் கூறப்படுகின்றது.


இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள கொள்வனவாளர்கள் தமது தரவுகள் உறுதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனவா என்று பார்க்கவேண்டும்.


ஒரு நிறுவனத்தினால் ஆராயப்பட்டு களஞ்சியப்படுத்தப்படும் பயனாளர்களின் தரவுகள் மட்டும் ஆராயப்படுவதில்லை.


அவர்களது பக்கங்களில் அவர்கள் தெரிவுசெய்யும் like மற்றும் dislike விபரங்களும் ஆராயப்படுகின்றதாகக் கூறப்படுகின்றது.


இதில் ஒருவரின் நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் கல்விசார் பின்னணிகள் பற்றிய தகவல்களும் இந்நிறுவனத்தினால் சேகரிக்கப்படுவதோடு அவர்களது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டுபிடிக்கின்றது.


இவற்றையெல்லாம் பெற்று ஒரு பெண் ஒரு மணப்பெண்ணாக வரக்கூடிய நிலையுள்ளதைக் கண்டுபிடித்து அவர்பற்றி விளம்பரங்களைத் திருமணப் படப்பிடிப்பாளர்களுக்குத் தெரிவிக்க விளம்பரம் செய்கின்றது.


இதுபோன்று இசையினைக் கேட்பவர்களின் பெறுமதியான விடயங்களையும் பெற்று விளம்பரதாரர்களுக்குக் கொடுக்கின்றது. இவ்வாறு நண்பர்களிடம் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளும் விபரங்களையும் அந்நிறுவனம் வர்த்தக நோக்கங்களிற்காகப் பயன்படுத்தலாம்.


எனினும் இந்த நிறுவனம் தான் தகவல்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தவில்லையென்று கூறிவருகின்றது.


மக்ஸ் ஸ்கிறீம்ஸ் என்ற ஓஸ்ரியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தன்னைப் பற்றி என்ன விபரங்களை அது வைத்துள்ளதெனக் கேட்டிருந்தான். அதற்கு அந்நிறுவனம் 1,222 பக்கங்கள் கொண்ட ஓர் இறுவட்டினை அனுப்பிவைத்திருந்தது.


எனினும் அனுப்பிவைத்த விபரங்களில் முழு விபரங்களும் இல்லையென அம்மாணவன் தரவுக் கண்காணிப்பு நிறுவனங்களிடம் முறையிட்டிருந்தான்.


அடுத்த வாரம், Facebook நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அயர்லாந்தில் வைத்து அந்நிறுவனத்தின் கணக்கெடுப்புகள் பற்றி தரவுப் பாதுகாப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்படுமென்றும் கூறப்படுகின்றது.


அனைத்து 800 மில்லியன் Facebook பயனாளர்களும் அவர்கள் அறிந்தோ அறியாமலே தமது தரவுத் தகவல்களை அந்நிறுவனம் பயன்படுத்த சம்மதித்துவிடுகின்றார்கள்.


ஏனெனில், இவர்கள் Sign up செய்யும்போது 4000 சொற்களடங்கிய ஒப்பந்தமொன்றை ஏற்றுக்கொண்டுதான் நுழைகின்றனர்.


இந்த ஒப்பந்தத்தினைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு பக்கத்தின கீழுள்ள சிறிய எழுத்துக்கெண்ட link இனை சொடுக்கிப் பார்க்கலாம்.


Facebook பாரியளவில் மைக்ரோசொப்ற்றுடன் ஒரு விளம்பர ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் 2009 இல்தான் அதன் படிப்படியான விளம்பர வளர்ச்சி ஏற்பட்டது.


இந்த வளர்ச்சிதான் Facebook இனை ஒரு பங்குச்சந்தைக்குள் நுழையத் தயாராக்கியதெனலாம்.


பிரித்தானியாவில் படிப்படியான அறிமுக விளம்பரங்களினால் 25மில்லியன் பவுண்கள் கடந்த இரண்டு வருடங்களில் பெறப்படுகின்றதெனக் கூறப்படுகின்றது.


எனினும் பயனளார்கள் எதிர்பார்க்கும் முறையில்தான் எந்தவொரு தரவுகளும் சேகரிக்கப்படவேண்டுமென பிரித்தானியத் தரவு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


தனிப்பட்ட தரவானது மூன்றாவது நபரிடம் கொடுக்கப்பட்டால் அல்லது விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால் இதுபற்றி அப்பயனாளருக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்றும் கூறப்படுகின்றது.

மனைவி வேறு நபருடன் ஓட்டம்: போதையில் மகளை கெடுத்த காமக்கொடூர தந்தை!!


திண்டுக்கல் அருகே ராமையன்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார்(38). பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்விசந்தோஷம். இவர்களுக்கு மணிமேகலை (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு செல்விசந்தோஷம் வேறு ஒரு நபருடன் ஓடிவிட்டார்.

சசிக்குமாரின் மகன் புகையிலைபட்டியில் உள்ள தனது பாட்டி சுசிசகுந்தலா வீட்டில் தங்கி 4ம் வகுப்பு படித்து வருகிறார். மணிமேகலை தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

விடுமுறை நாட்களில் தனது தந்தை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு இறுதி தேர்வு விடுமுறைக்கு கடந்த மே மாதம் தனது தந்தை வீட்டிற்கு மணிமேகலை வந்திருந்தார்.

அப்போது குடிபோதை வெறியில் இருந்த சசிக்குமார் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். தன்னையும், தனது தம்பியையும் கொலை செய்துவிடுவாரோ என்ற பயத்தில் மணிமேகலையும் எதுவும் கூறவில்லை.
பள்ளி திறந்தவுடன் தூத்துக்குடி சென்று விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் ஆயுதபூஜை விடுமுறைக்காக மணிமேகலை தனது பாட்டி வீட்டுக்கு வந்தார்.

அவரது வயிறு பெரிதாக இருக்கவே, சந்தேகம் அடைந்த சுசிசகுந்தலா, மணிமேகலையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து பார்த்தார். அதில், அவர் 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

அவரிடம் விசாரித்த போது, பெற்ற தந்தையே தன்னை பலாத்காரம் செய்தது குறித்து கண்ணீர் மல்க கூறினார். அதிர்ச்சியடைந்த சுசிசகுந்தலா இதுகுறித்து திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காமக்கொடூர தந்தை சசிக்குமாரை நேற்று கைது செய்தனர்.

கைதியை பெண் அலுவலர் முன் நிர்வாணமாக கொடுமை செய்த ஊழியர்கள்



சென்னை, புளியத்தோப்பு பகுதியை சேர்ந்த தன்சிங் என்பவரின் மகன் ஆறுமுகம். இவர் கடந்த 2005-ம் வருடம் எர்ணாவூர் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ‘வாழ்நாள்’ தண்டனை விதிக்கப்பட்டு இப்போது சேலம் நடுவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை, உடலில் காயங்களுடன் சேலம் அரசு மருத்துவ மனைக்கு சிறைத்துறை காவலர்களால் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட ஆறுமுகம் காலை இழுத்து இழுத்து நடந்து வந்தார்.

என்ன என்று விசாரித்த போது,

” கடந்த 6-ம் தேதியன்று சிறைவாசிகளின் குறைகளை கேட்க வந்த நீதிபதி அவர்களிடம் சிறையில் உள்ள குறைகளை புகாராக எழுதிக்கொடுத்தேன்.

இதனால் என்மீது கோபப்பட்ட சிறை அலுவலர்கள் கமராவுடன் கூடிய ஒரு செல்போன் வைத்திருந்ததாக பொய்யான குற்ற சாட்டின் மீது என் மீது ஒரு வழக்கு போட்டுள்ளனர்.

என்னோடு அறையில் இருக்கும் சில சிறைவாசிகளுக்கு சரியாக சாப்பாடு தருவதில்லை. இதுபற்றி நான் நேற்று சிறை அலுவலரிடம் கேள்வி கேட்டேன்.

இதனால், 8-ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு சிறை காவலர்கள் ராஜமனோகரன், குணசேகரன், சக்திவேல் ஆகியோர் சிறை அலுவலர் (ஜெயிலர்) ஊர்மிளா அவர்களின் முன்னால் என்னுடைய ஆடைகளை எல்லாம் கழற்றி விட்டு என்னை நிர்வாணமாக நிற்க வைத்து அடித்து உதைத்து சித்தரவதை செய்தார்கள்.

அதில் ஏற்ப்பட்ட காயங்களுக்கு மருந்து போடத்தான் என்னை இப்போது இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” என்று ஆறுமுகம் மருத்துவமனைக்கு வந்த போது தெரிவித்தார்.

2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் செக்ஸ் வீடியோ, படங்கள்! பெங்களுரில் விஷமிகள் கைவரிசை!


பெங்களூரில் 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் ஊடுருவி, செக்ஸ் படங்கள், வீடியோவை உலவ விட்டுள்ளனர் விஷமிகள். சமூக இணையதளமான பேஸ்புக் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம்.
இன்டர்நெட் வசதி இருக்கும் பெரும்பாலானோர் பேஸ்புக் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். போட்டோ, தகவல்களை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

பெங்களூர்வாசிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தை திறந்ததும் அதிர்ந்து போனார்கள். அத்தனை பேரின் பக்கங்களிலும் செக்ஸ் படங்கள் இருந்தன. செக்ஸ் வீடியோக்களும் இருந்தன.

இதைப் பார்த்தும் உடனே கம்ப்யூட்டரையே பலர் ஆப் செய்து விட்டனர். பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் செக்ஸ் படங்களை பார்த்ததும் ஒருவருக்கொருவர் போன் செய்து விசாரித்தனர்.
ஏறக்குறைய 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்களில் இதுபோல் செக்ஸ் படங்கள் ஊடுருவி இருந்தன. கடுப்பாகிப் போன பலர் தங்கள் பேஸ்புக் அக்கவுன்டுகளை குளோஸ் செய்து விட்டனர்.

பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், வைரஸ், ஆபாச படங்கள் அடங்கிய சாப்ட்வேரை டவுண்லோடு செய்யுமாறு வந்த லிங்க்கை கிளிக் செய்ததால், அதன் மூலம் ஆபாச படங்கள் பேஸ்புக் உறுப்பினர்களின் பதிவுகளில் ஊடுருவியதாகத் தெரிய வந்துள்ளது.

ஆபாச படத்தை ஊடுருவ விட்டவர்களை நெருங்கி விட்டோம். கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருகிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குரங்கு விரட்டியதால் கல்லூரி மாணவி மாடியிலிருந்து தவறி விழுந்து பலி! (பட இணைப்பு)


காரைக்கால் அடுத்த நிரவி கீழராஜவீதியை சேர்ந்தவர் நைனா மரைக்காயர். சவுதியில் வேலை செய்கிறார். இவரது மகள் மெகபூப்நிஷா(19). அங்குள்ள அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு ஹோம் சயின்ஸ் படித்து வந்தார். கல்லூரியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இவர் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். கல்லூரியின் பழைய கட்டிடத்தில் 2வது மாடியில் உள்ள இவரது வகுப்புக்கு அருகே திடீரென மெகபூப்நிஷாவின் அலறல் சத்தம் கேட்டது. சக மாணவிகள் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது அவர், மாடியிலிருந்து கீழே விழுந்து நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பதறி துடித்தனர். இது குறித்து கல்லூரிக்கு எதிரே உள்ள மகளிர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து மாணவியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மெகபூப்நிஷா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ‘‘ கல்லூரி வளாகத்தில் குரங்குகள் அடிக்கடி நிறைய வந்து செல்கிறது. இதனால் பல மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.


மெகபூப்நிஷா வும் குரங்குக்கு பயந்து ஓடுகையில் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம்‘‘ என்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் முற்றுகை: காரைக்கால் அரசு விழாவுக்கு வந்த புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ராஜவேலு, எம்எல்ஏ நாஜிம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கல்லூரிக்கு விசாரணை நடத்த வந்த அமைச்சரை தமுமுக, தவ்கீத் ஜமாஅத், மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு கல்லூரி வளாகத்தில் நடமாடும் குரங்குகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்

சல்மான் கான், அமீர் கான் மூன்றாவதாக நம்ம ரஜினி காந்த் !

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' குழுமத்தின் டிவி சேனலான ஜூம் சூப்பர் நோவா 2010 இந்தியாவின் டாப் 50 மனிதர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.


டாப் 50 பட்டியலில் தென்னிந்தியாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் இடம் பெற்று உள்ளனர்.

இப்பட்டியலில் சல்மான் கான் முதல் இடத்தையும், அமீர் கான் இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ' ரஜினி எப்போதும் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்' என்று புகழாரம் சூட்டியுள்ளது ஜூம் டி.வி.
இப்பட்டியலில் ஷாருக்கான் 4வது இடத்திலும், ஏ.ஆர். ரஹ்மான் 5வது இடத்திலும், அமிதாப் பச்சன் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே பெண் கத்ரீனா கைப். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் 14வது இடம் கிடைத்துள்ளது.