Friday, November 25, 2011

வீடியோ கோப்புகளை உங்கள் தேவைக்கேற்ப மாற்ற வேண்டுமா

கல்லூரி பேராசிரியர்களின் Presentation ஐயும், திறமையான பேச்சாளர்களின் பேச்சை Text கோப்பாக மாற்றவும் இனி எந்த மொழிபெயர்ப்பாளரும் தேவையில்லை.

ஓன்லைன் மூலம் நாம் பேசிய கோப்பை டெக்ஸ்ட் கோப்பாக மாற்றி சேமிக்கலாம். பயனுள்ள வகையில் இதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். Text to Voice Conversion பல இலவச மென்பொருள்கள் இருந்தாலும் Voice to text Conversion க்கு என்று இருக்கும் சில மென்பொருள்கள் கூட முழுமையான பயன்பாட்டில் இல்லை.

இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவச பயனாளர் கணக்கை உருவாக்கிக் கொண்டு உள் நுழையலாம். அடுத்து வரும் திரையில் Upload Audio என்பதை தேர்ந்தெடுத்து நாம் பேசிய ஓடியோ அல்லது மாற்ற விரும்பும் ஓடியோவை தேர்ந்தெடுத்து Upload செய்யவும்.
அடுத்து நாம் அப்லோட் செய்த கோப்பு தானாகவே Text கோப்பாக மாற்றப்பட்டு விடும். இதன் பின் நாம் பேசிய வார்த்தையில் ஏதாவது ஒரு வார்த்தையை கொடுத்து தேடுபவர்களுக்கு நம் பேச்சும் கூடவே அதற்கான Text ம் காட்டப்பட்டு இருக்கும். ஆங்கில மொழிக்கு மட்டுமே தற்போது துணை செய்கிறது.

கண்டிப்பாக இந்தப்பதிவு ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மார்பகப்புற்று... நீங்களே கண்டறியலாம்!


பெண்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வும், ஆலோசனைகளும் அவசியத் தேவையாக இருக்கும் சூழல் இது. இதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தை, 'உலக மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம்' என்று கடைப்பிடிக்கிறார்கள்.

சென்னை, பேட்டர்ஸன் கேன்சர் சென்டரில், கடந்த அக்டோபர் 13 முதல் 20 வரை மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடந்த இலவச முகாமில், மார்பகப் புற்றுநோய் பற்றி அறியப்பட்ட விவரங்கள் அதிகம். அதை 'அவள் விகடன்’ வாசகிகளுக்கும் பகிர்ந்தார் சென்டரின் இயக்குநர், டாக்டர் விஜயராகவன்.

''1995-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 12 - 14 சதவிகிதமாக இருந்த மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, இப்போது 26 - 28 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, மார்பகப் புற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பாதிப்பின் முதல் கட்டத்துக்குக் காரணம், பெண்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த கவலையில்லாமல் இருப்பதுதான். குடும்பம் என்ற அமைப்புக்குள்ளேயே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள், தங்களின் உடல்நிலையைப் பொருட்படுத்துவதே இல்லை. மார்பகப் புற்றைப் பொறுத்தவரை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால், முழுமையான தீர்வு பெற முடியும். அந்த விழிப்பு உணர்வை உண்டாக்கவே... ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முகாம் இது!'' என்றவர், மார்பகப் புற்று ஏற்படும் விதத்தை விளக்கினார்.

''உடலில் எண்ணெய் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள் நிறைய இருக்கின்றன. இவற்றில் மார்பகத்தில் உள்ள 20 - 22 சுரப்பிகள், பருவமடைகின்ற வயதில் பால் சுரப்பிகளாக மாறுதல் அடையும். அங்கு சுரக்கும் திரவத்தாலோ, அந்த பால் சுரப்பிகளில் அடைப்புகள் ஏற்படும்போதோ கட்டிகள் உண்டாகி, வலி ஏற்படுத்தும். இந்த வகையான கட்டிகளை 'ஃபைப்ரோமா' என்பார்கள். இவை சாதாரண சிகிச்சையிலேயே குணமாகக்கூடியவை.

வேறு சில காரணங்களால் ஏற்படும் கட்டிகளாலும், அடைப்புகளாலும் மார்பகத்தில் வீக்கம் ஏற்படலாம். அந்த வீக்கப் பகுதிக்குள் ஒருவித நீர் சுரந்து, அது காலப்போக்கில் உருண்டையாகத் திரண்டு, அதுவே மார்பகப்புற்றாக மாறக்கூடும். இதை ஆரம்பகட்டத்திலேயே கவனிக்காமல் விடும்போது, மார்பகம் முழுக்கப் பரவுவதோடு, அக்குள் பகுதியையும் பாதிக்கும். எனவே, மார்பகத்தில் சிறிய அல்லது வலியே இல்லாத கட்டி இருக்கிறது என்றாலும், உடனடியாகப் பரிசோதித்து... ஃபைப்ரோமா அல்லது புற்றுக்கட்டி ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, உரிய சிகிச்சையைத் தொடங்க வேண்டும். வலியைப் பொறுத்துக்கொண்டே பரிசோதனையைத் தள்ளிப்போடும் மனநிலை, ஆபத்தானது!'' என்று புரியவைத்த டாக்டர், மார்பகப்புற்றை கணிக்கும் சுயபரிசோதனைகளையும் பேசினார்.

''மார்பகப் புற்றின் முதல் அறிகுறி, அதன் அமைப்பில் ஓர் ஒழுங்கின்மை ஏற்படும். குறிப்பாக, இரண்டு காம்புகளும் சம நிலையில் உள்ளனவா, அல்லது மேலும், கீழுமாக இருக்கிறதா என்பதைக் கவனிக்கலாம். மார்பிலோ, மார்புக்காம்பிலோ வலியை உணர்ந்தால், மார்புக்காம்பை அழுத்திப் பார்த்தால் பச்சையாகவோ, நீலமாகவோ, சமயங்களில் ரத்த நிறத்திலோ நீர் கசியலாம். அக்குள் பகுதியில் கட்டிகள் ஏதாவது தென்படுகின்றனவா என்பதைச் சுயமாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின்போது கைகளைத் தூக்க முடியாதபடி வலி இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். 35 வயது முதல் 65 வயது வரையிலான ஒவ்வொரு பெண்ணுமே மேற்கூறிய பரிசோதனைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என, வருடத்துக்கு நான்கு முறை தாங்களாகவே பரிசோதித்துக் கொள்வது நல்லது. ஏதேனும் மாறுதல்கள் தெரிந்தால், டாக்டரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.

கருத்தடை மாத்திரைகள், மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரைகள் உள்ளிட்ட ஹார்மோன் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்பவர்களுக்கும் பரிசோதனை அவசியம். மற்றவர்களைவிட, கேன்சர் வருவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு 50 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்'' என்று அலார்ம் அடித்தார் டாக்டர்.

கேம்ப்பின் ஹைலைட், பெண்களுக்குப் புற்றுநோயைக் கண்டறிய, 'இன்ஃப்ரா ரெட் கேமரா' மூலம் இலவசமாக ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப்பட்டதுதான். இதைப் பற்றி பேசிய டாக்டர் விஜயராகவன், ''பொதுவாக புற்றுநோய்க்கான ஸ்கிரீன் டெஸ்டுக்கு 1,750 - 7,000 ரூபாய் வரை செலவு பிடிக்கிறது. ஆனால், 'இன்ஃப்ரா ரெட் கேமரா' மூலமான டெஸ்ட்டுக்கு... வெறும் 200 ரூபாய்தான் செலவு. இதை எல்லா கேன்சர் மருத்துவமனைகளிலும் பயன்படுத்த, அரசுக்குப் பரிந்துரையும் செய்துள்ளோம்!'' என்றார் அக்கறையுடன்!

இந்தியா முழுவதும் ஏனிந்த 'கொலவெறி' !

தனுஷ் எழுதி பாடியுள்ள ' WHY THIS KOLAVERI DI ' பாடல் தற்போது தமிழக இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது வலைதளங்கள் மூலம் மிகப் பிரபலமாக உள்ளது. 

இதுவரை YOUTUBEல் 39,00,000 மேற்பட்டோர் பார்த்து இருக்கிறார்கள். ஒரு தமிழ் பாடலுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பாடலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், இந்தி திரையுலக பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள், தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் என அனைவருமே ' 3 ' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்தி சேனல்கள் மற்றும் ஆங்கில இதழ்கள் என பல ஊடகங்களும் 'KOLAVERI BECOMES A VIRAL IN INDIA' என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

பிரபலங்களின் பாராட்டுகளில் இங்கே சில :
அமிதாப் பச்சன் : 'கொலவெறி' பாடலை பற்றியே எங்கும் பேச்சாக இருந்ததால் அப்பாடலை கேட்டேன். அருமையாக இருந்தது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷிற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் "This Kolaveri is veri veri endearing .. just not leaving the sound waves in the mind-u .. what-a what-a what-a do-u ... !! ha ha !! " என்று தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குனர் கரண் ஜோஹர் : கொலவெறி டி! கண்டிப்பாக இந்த வருடத்தில் இந்திய அளவில் பிரபலமான பாடல் இதுதான்.! ராக் ஆன் தனுஷ்! என்று வாழ்த்தியுள்ளார்.

முன்னணி இசையமைப்பாளர் இஷான் : கொலவெறி ராக்ஸ்! என்று பாராட்டியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா : கொலவெறி கண்டிப்பாக கேளுங்கள்... எப்போதுமே தென்னந்தியா வித்தியாசமானது தான் என்று சொல்லியிருக்கிறார். 

சல்மான் ருஷ்டி : "India obsessed by a slapped politician & the most ridiculously catchy song since Macarena.Must be a slow news moment. #Kolaveri #SharadPawar"

சோனாக்ஷி சின்கா : "was wondering wht #kolaveri was, so googled it. its my lovely Aishwarya di's @ash_r_danush song from 3! LOVE IT! ok mama, tune change-a ;)"

ரீமேக்காகும் மணிரத்னம் படங்கள் !

ரஜினி நடித்த 'தளபதி' படத்தினை தொடர்ந்து 'அக்னி நட்சத்திரம்' படமும் இந்தியில் ரீமேக்காகிறது.

பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா உள்ளிட்டோர் நடித்த படம் ' அக்னி நட்சத்திரம் '. மணிரத்னம் இயக்கிய இப்படத்திற்கு இளையராஜா இசைமைத்து இருந்தார். 

'அக்னி நட்சத்திரம்' படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இந்தி உரிமையை V G Entertainment நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இப்படத்தை அஜய் தேவ்கான் நடித்து தயாரிக்க முன்வந்துள்ளார். அஜய் தேவ்கான் நடித்த 'சிங்கம்' படத்தினை இயக்கிய ரோஹித் ஷெட்டி இப்படத்தை இயக்க இருக்கிறார்.
ரீமேக்காகும் மணிரத்னம் இயக்கிய படங்களில் 'தளபதி', இப்போது 'அக்னி நட்சத்திரம்' அடுத்தது எதுவோ ?

விஜய் - ஷங்கர் கூட்டணியில் "நண்பன்" - ட்ரைலர்


''சினேகன் கூட சுத்துறது நல்லதில்ல ஜமுனா!''

சினேகன் - தமிழ் சினிமா பாடலாசிரியர். ஏராளமான பாடல்களை எழுதியவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு 'யோகி’ என்ற படத்தில் நடிகராகவும் அரிதாரம் பூசினார். 'உயர்திரு 420’ என்ற படத்தில் நாயகனாகவும் நடித்தார். 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...’ என்ற பாடலை 'பாண்டவர் பூமி’ படத்துக்காக எழுதிய சினேகன், தனது வாழ்க்கையிலும் இப்படி ஓர் எதிர்பாராத மாற்றம் வரும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். 'சினேகனின் பிடியில் இருக்கும் என் மனைவியை மீட்டுக் கொடுங்கள்’ என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார் பிரபாகரன் என்ற தொழிலதிபர்! 

என்ன நடந்தது?

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரனிடம் பேசினோம். ''சில வருஷங்களுக்கு முன்னால் ஜமுனா கலாதேவியை லவ் பண்ணினேன்.அவளும் என்னை விரும்பினா. இரண்டு வீட்டிலும் எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கலை. அதனால், வீட்டைவிட்டு வெளியில் வந்து கல்யாணம் பண்ணிட்​டோம். எங்களுக்கு அஞ்சு வயசில் ஒரு பொண்ணு இருக்கா. ஜமுனா நல்ல டான்ஸர். வேளச்சேரியிலும், கீழ்கட்டளையிலும் பெண்களுக்கான டான்ஸ் ஸ்கூல் நடத்துறாங்க. டான்ஸ் ஸ்கூலைத் திறந்துவைக்க சினிமா பாடலாசிரியர் கவிஞர் சினேகனைக் கூப்பிட்டிருந்தோம். அதுதான் நான் என் வாழ்க்கையில் செஞ்ச மிகப் பெரிய தப்பு.

'நீங்க நல்லா டான்ஸ் பண்றீங்க. சினிமாவில் நடன இயக்குனரா இருக்கலாமே? நீங்க விருப்பப்பட்டா, நான் நடிக்கும் 'உயர்திரு 420’ படத்தில் உங்களுக்கு சான்ஸ் வாங்கித் தர்றேன்’னு சொன்னார். ஜமுனா என்கிட்ட விஷயத்தைச் சொன்னா. 'உனக்கு விருப்பம்னா, தாராளமா செய்’னு சொல்லிட்டேன். அவளும் நடன இயக்குனரா மாறினா. சினிமாவுக்குப் போனதும் அவளோட நடவடிக்கைகள் மாற ஆரம்பிச்சது. எப்பவும் போனும் கையுமாவே இருந்தா. வீட்டுக்கு வந்தாலும் போன்... மெசேஜ்னு, எப்பவும் பேசிட்டே இருப்பா. அப்போகூட நான் அதை பெருசா எடுத்துக்கலை. சினேகனும் ஜமுனாவும் சேர்ந்து வெளியில் சுத்துறதை பலரும் பார்த்துட்டு என்கிட்ட சொன்னாங்க. அப்போதான் எனக்கு ஷாக்!


'சினேகன்கூட நீ சுத்திட்டு இருக்கிறது நல்லது இல்லை ஜமுனா... நமக்குக் குடும்பம் இருக்குது. நீ பண்றதெல்லாம் சரியான்னு யோசிச்சுப் பாரு’னு அட்வைஸ் செஞ்சேன். 'என்னைச் சந்தேகப்படுறீங்களா?’னு குதிச்சா. ஆனாலும் அவளோட நடவடிக்கைகள் மட்டும் மாறவே இல்லை. 
ஒரு கட்டத்தில், முழுக்க சினேகனோட கட்டுப்பாட்டுக்குள் அவ போயிட்டா. சினேகன் சொல்றதை மட்டும்தான் கேட்பா. நான் எது கேட்டாலும் எரிஞ்சு விழுவா. எங்களுக்குள் சண்டை அதிகமானதும் வீட்டைவிட்டுப் போயிட்டா.


குழந்தை மட்டும் என்னோடு இருந்தது. நான் வீட்டில் இல்லாத நேரமாப் பார்த்து, குழந்தையையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க. இப்போ ஜமுனாவும் என் குழந்தையும், சினேகனோட கட்டுப்பாட்டில்தான் இருக்காங்க. என் குடும்பத்தைச் சீரழிச்ச சினேகன் மேல் நடவடிக்கை எடுத்து என் மனைவியையும் குழந்தையையும் மீட்டுத்தரக் கோரிதான் கமிஷனர்கிட்ட புகார் கொடுத்திருக்கேன்'' என்று கலங்கினார்.


ஜமுனா கலாதேவியைத் தொடர்புகொண்டு பேசினோம். தனது கணவர் பிரபாகரனுக்கு எதிராகத்தான் அவர் பேசினார். ''அந்த ஆள் ஒரு சந்தேகப் பேர்வழிங்க. அவர்கூட வாழ்வதற்கு இனி வாய்ப்பே இல்லை. அதனால்தான், விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிட்டேன். குழந்தையை என்கூட அனுப்பாம வெச்சிருந்தார். அதுபத்தியும் நான் போலீஸில் புகார் கொடுத்திருக்கேன். சினேகன் சாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவை இல்லாம இதில் அவரையும் இழுத்து அசிங்கப்படுத்துறாரு. உண்மையான அன்பு இருக்கிற புருஷனா இருந்தா, இப்படி எல்லாம் பண்ணுவாரா சொல்லுங்க...'' என்று நம்மிடம் அழுதார்.


கவிஞர் சினேகனோ அவரது நண்பர்கள் வட்டாரத்தில், ''பிரபாகரனின் விருப்பத்தோடுதான் அவரது மனைவியை நான் நடித்த படத்தில் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். அந்தப் பெண் ஒரு நாள் மட்டும்தான் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். கொஞ்ச நேரத்திலே பிரபாகரனும் பின்னாடியே வந்து சந்தேகப்பட்டு சண்டை போட்டார். அதனால் அந்தப் பெண்ணிடம், இனி வரக்கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டேன். மற்றபடி அவர்கள் குடும்ப பிரச்னை எனக்கு எதுவும் தெரியாது. நான் அவருடைய மனைவி, குழந்தைகளைக் கடத்தவில்லை. நான் விசாரிச்ச போது அந்தப் பெண், அவங்களோட அம்மா வீட்டில் இருப்பதாகத் தெரிந்தது. நான் அந்தப் பெண்ணிடம் சுற்றியதாகச் சொல்வது அப்பட்​டமான பொய். அவர்களது குடும்ப பிரச்னையில் என்னை அசிங்கப்படுத்தியதற்காக பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நானும் போலீஸில் புகார் தரப்போகிறேன்'' என்று சொல்லி வருகிறாராம்.


யார் சொல்வது உண்மையோ?

பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டு வரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை அமெரிக்காவின் எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள் 2011


2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும். 

பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் iTunes இணையதளமாகும். பத்தாவது இடம் என்றவுடன் சாதாரணமா நினைச்சிடாதிங்க இந்த தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் 60.21$ இந்தியமதிப்பில் Rs. 3130 ரூபாய். ஆண்டிற்கு $1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் வருகிறது.


ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும். உலகம் முழுவதும் பணம் பணம் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள இணையதளமாகும். இந்த தளம் வினாடிக்கு 91.90$ ஆண்டிற்கு $2,900,000,000 சம்பாதிக்கிறது. 



பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ள தளமாகும். டிக்கெட்டுகள் வாங்குவதில் இருந்து விமானங்களின் நேரங்கள் மற்றும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த தளம் வருடத்திற்கு $2,937,010,000 வருமானம் பெற்று தருகிறது. இந்த தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் $93.07 ஆகும். இந்த தளத்தின் உரிமையாளர் Mark schroeder என்பவர். 





Expedia 


7. AOL

இந்த தளம் இணையத்தில் பல்வேறு தலைப்புகளில் லேட்டஸ்ட் செய்திகளை பகிரும் தளமாகும். அலேக்சாவில் 61 வது இடத்தை பிடித்துள்ள தளமாகும். இந்த தளத்தின் உரிமையாளர் எரிக பிரின்ஸ் என்பவர். இந்த தளம் வினாடிக்கு 99.41$ ஆண்டிற்கு $3,137,100,000 வருமானமும் தளத்தின் உரிமையாளருக்கு பெற்று தருகிறது.






இதுவும் ஆன்லைனில் செய்தி பகிரும் தளமாகும். இதன் உரிமையாளர் மார்சல் வாஸ் என்பவர். வினாடிக்கு 107$ வருமானமும் ஆண்டிற்கு $ 3,400,000,000 வருமானமும் பெற்று தருகிறது. 





Reuters 




இந்த தளத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இணையத்தில் மிகப்பிரபலமான தளமாகும். News, Search, mail என பல்வேறு வசதிகளை கொண்டது. அலேக்சாவில் 4 இடத்தில் உள்ளது. இதனுடைய ஆண்டு வருமானம் $6,460,000,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $204.71 ஆகும்.





yahoo 


4. ebay


Amazon தளத்தை போன்று இதுவும் ஆன்லைனி பொருட்களை வாங்க உதவும் இணையதளமாகும். இந்த தளத்தின் உரிமையாளர் Pierre Omidyar என்பவர். வினாடிக்கு 276.56$ ஆண்டிற்கு $8,727,360,000 சம்பாதிக்கிறது. 





ebay 




அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் இந்த தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த தளத்தின் ஆண்டு வருமானம் $8,727,360,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு 276.56$ சம்பாதிக்கிறது.





comcast 


2. Google


அப்பாடா நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த தளம் வந்துவிட்டது. இதனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இணையத்தின் நாடித்துடிப்பு இந்த தளம் ஒரு நாளைக்கு இதன் சேவை நிறுத்தப்பட்டால் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள். கூகுளின் ஒரு வருடத்திற்கு வருமானம் $23,650,560,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $749.46 ஆகும். இந்திய மதிப்பில் Rs. 38971(இப்பவே கண்ண கட்டுதே) ஆகும். 





Google search engine 




வெற்றிகரமாக முதல் இடத்திற்கு வந்தாச்சு. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் தளமாகும். கூகுளிடம் ஒப்பிடுகையில் இந்த தளத்தின் வாசகர் வரத்து , அலெக்சா மதிப்பு அனைத்தும் குறைவு தான் ஆனால் பொருட்களை வாங்க மொத்த சந்தையாக இந்த தளம் உள்ளதால் தான் கூகுளை காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறது.





Amazon







என்னடா ஏதோ மிஸ் ஆகுதேன்னு பாக்குறீங்களா!! பெரும்பாலானவர்களின் விருப்பமான அலேக்சாவில் 2 இடத்தில் உள்ள பேஸ்புக் தளத்தை பட்டியலில் காணவில்லையே என யோசிக்கிறீங்களா?







கூகுளையே ஆட்டி வைத்த பேஸ்புக் தளம் இல்லையே என்பது எல்லோருக்கும் வரக்கூடிய சந்தேகம் தான் ஆனால் அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் 16 வது இடத்தை பிடித்துள்ளது. அந்த தளத்தின் ஆண்டு வருமானம் $1,000,000,000 வினாடிக்கு $31.69 வருமானம் ஈட்டுகிறது. 







புதிய தமிழ் ஒலிபெயர்ப்பு செயலி


அப்படி போடு போடு போடு... என்கிற பாடல் தமிழ் தெரியாதவர்கள் பலருக்கும் அறிமுகமாயிருக்கும். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் யாரும் இப்பாடலை எழுத்துவடிவில் படிக்கமுடியாது. அதுவே அவர்கள் மொழியில் ಅಪ್ಪಟಿ ಪೋಟು ಪೋಟು ಪೋಟು என்றிருந்தால் எப்படியிருக்கும்? தமிழ் நாட்டிற்கு வேலை நிமிர்த்தமாக வந்து தமிழ் படிக்கத் தெரியாமல் பேசத் தெரிந்தவொரு ஹிந்திக்கார தாய்க்குலத்திற்கு ओरु चेलै वाङ्किनाल् ओरु चेलै इलवचम् என்று இருந்தால் எப்படியிருக்கும்? இதுவெல்லாம் ப்ராட்டிகளாக முடியாதுதான் அட்லீஸ்ட் இணையத்திலாவது இருக்கலாமே!

அதற்கான ஒரு செயலி தான் இது

இங்கு தமிழ் வாக்கியங்களை வேறு மொழி எழுத்துகளாக மாற்றும். காணப்படும் முதல் பெட்டியில் தமிழ் வாக்கியங்ககளை உள்ளீட்டு செய்து வேண்டிய மொழியினை அழுத்தினால் போதும். அந்தப் பெட்டியில் நேரடியாக தமிழில் தட்டச்சிடவும் வசதியுள்ளது. தற்போதைக்கு ரோமன்[ஆங்கில], தேவநாகரி[இந்தி], மலையாளம், கன்னடம், தெலுகு எழுத்துகள் மட்டும் செயல்படுகிறது. வேறு சில மொழி எழுத்துகளுக்கும் மேம்படுத்தப்படலாம்.




மேற்கூறியவர்கள் யாரேனும் இணையத்தில் வரும் போது இணைய பத்திரிகை மற்றும் உங்கள் பிளாக்கையும் அவர்கள் மொழி எழுத்துக்களால் படிக்கமுடியும். தமிழும் முழுதாகத் தெரியாமல் ஆங்கிலமும் முழுதாகத் தெரியாமல் வளரும் சில மெட்ரிக் பள்ளி மாணவர்களும் இங்கு வந்து தமிழ் கதைகளைப் படிக்கலாம். கடன் கொடுத்த சேட்டு கடைக்காரர்கள் கடனாளியின் தமிழ்ப் பதிவுகளுக்கு "அருமை", "சூப்பர்" என்று பின்னூட்டம் இட்டு வட்டி வாங்கலாம். வேற்று மொழியில் தங்கள் பெயர்களை எழுதி எலக்சனில் நிற்கலாம்.




இறுதியாக தமிழ் படிக்க எழுத்துகள்[script] தடையில்லை என்று கொள்ளலாம்.







சில ஒலிப் பிழைகளை களைவதற்காக தற்போதைக்கு சோதனையோட்டமாக உள்ளது. உங்கள் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது. இரு மொழி வித்தகராக நீங்கள் இருந்தால் அம்மொழியில் இது எப்படி செயல் படுகிறது என்று கருத்து தெரிவிக்கலாம்.




தற்போதைக்கு இது வெறும் எழுத்து பெயர்ப்பாக உள்ளது இதனை முடிந்தளவு ஒலிபெயர்ப்பாக மாற்ற வேண்டும். அதாவது தமிழ் "க" எழுத்தை மற்ற மொழியில் உள்ள முதல் "க" என்ற எழுத்தாகவே எழுத்துப் பெயர்ப்பு செய்கிறது. நமது ககர எழுத்து இடத்திற்கு தகுந்தாற்போல ஒலி மாறுபடும் உதாரணத்திற்கு "கல்வி" யில் உள்ள 'க'வும்[ka] "கர்வம்" த்தில் உள்ள 'க'வும்[ga] வேறுபடுவதை காணலாம். இத்தகைய இடங்களை கண்டு அதற்கேற்ற வேற்று மொழி எழுத்தை பொருத்துவதே ஒலி பெயர்ப்பு.




போற்றி என்பது pooRRi என்று வந்தால் ஒலி மாறுபடும் அதுவே pootri என்று வந்தால் சரியாகயிருக்கும். இங்கே இரண்டு றகரங்கள் வரும் போது t ஒலி உருவாகிறது. இதுபோல அல்லது வேறு மொழி ஒலி வேறுபாடுகள் இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள்




ஃ கிற்கு இணையான வேறு எழுத்து உள்ளதா திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ளதா?




தமிழில் உள்ளது போல ஙகர வரிசை உயிர்மெய்யெழுத்துகள் சிங்கள எழுத்துகளில் இல்லை அது போல இந்த கன்னட மலையாள தெலுகு வில் இல்லாத தமிழ் ஒலிவடிவங்கள் உள்ளனவா?




பயன்படுத்திவிட்டு நீங்களே ஒரு பெயரும் பரிந்துரைக்கலாம்.




இத்தகைய எழுத்து பெயர்ப்பு வேலை செய்யும் இரண்டு தளங்கள் உள்ளன. ta.girgit.chitthajagat.in, transliterator.blogspot.com முன்னவை ப்ராக்சி சர்வர் மூலம் ஒரு தளத்தை உள்யெடுத்து எழுத்துமாற்றி தரும். அடுத்தவை பல இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு எழுத்து பெயர்க்கும்[நமது கருவி தமிழை வேறு மொழிக்கு எழுத்து பெயர்க்கும்]. அவற்றையும் தேவையானவர்கள் பயன்படுத்தலாம்




விமர்சனமும் ஆலோசனையும் வரவேற்கப்படுகிறது

லேடி ககாவுக்கு செக்ஸ் மாற்று அறுவை சிகிச்சை!


அமெரிக்காவின் பிரபல பாப்பாடகி லேடி ககா. கவர்ச்சி பாடகியான இவர் சமீபத்தில் தான் பாட்டு பாடி நடித்த “மேரி தி நைட்” என்ற வீடியோவை ரிலீஸ் செய்தார். அப்போது அவரது வித்தியாசமான “போஸ்” அடங்கிய போட்டோக்கள் வெளியிடப்பட்டன. அதில் அவர் ஆஸ்பத்திரி தள்ளு வண்டியில் (“ஸ்ட்ரெச்சர்”) படுத்து இருப்பது போன்று இருந்தது. அது அவர் “செக்ஸ்” மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்ற வதந்தியை பரப்பியுள்ளது.ஏனெனில் சமீபத்தில் இவர் தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார்.

அதில், “உங்களுக்கு எப்போதும் சொல்லாத தகவலை வெளியிடப்போகிறேன். அது அருவெறுக்க தக்க உண்மையாக இருக்கலாம்” என தெரிவித்து இருந்தார். அதை வைத்து இவர் செக்ஸ் மாற்று ஆபரேசன் செய்து இருக்கலாம் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு முதல் இவர் வித்தியாசமான முறையில் உடைகளை அணிந்து தோன்றி வருவதான் இந்த வதந்தியை உண்மை என நம்பகத்தோன்றுவதாக இவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவன், மனைவி வளைந்து கொடுத்து போகவேண்டுமா?


நம் அனைவருக்கும் பொதுவான எண்ணம் ஒன்று உண்டு.நான் புத்திசாலி என்பதும் எனக்கு தெரியாத்து என்ன இருக்கிறது என்பதும்தான் அது.நம்மைவிட வெற்றிகரமான மனிதர்களை பார்க்கும்போதும் அவனுக்கு அதிர்ஷ்டம் என்போமே தவிர திறமை பற்றி பேசுவதில்லை.ஏதேதோ காரணங்களை மனம் தேடும்.

இந்த எண்ணங்களால் கொஞ்சம் நன்மையும் இருக்கிறது.தாழ்வு மனப்பான்மையில் விழாமல் இருக்க உதவும்.ஆனால் இது ஓரளவுக்கு இருந்தால் சரி.நான் சொல்வது மட்டுமே சரி என்பதுதான் பல நேரங்களில் பிரச்சினை.என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற பிடிவாதம் உறவுகளில் சிக்கல்களை தோற்றுவித்து விடுகிறது.
நான் இவ்வளவு படித்திருக்கிறேன்,என் நண்பனோ,மனைவியோ மற்ற உறவுகளோ உலகம் தெரியாதவர்கள் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள்.அது சரியாக கூட இருக்கலாம்.ஆனாலும் யாரும் எப்போதும் அறிவாளியாக இருப்பது சாத்தியமில்லை.அதே சமயம் மற்றவர்கள் உங்களைப்போலவே எல்லாம் தெரிந்த ஆட்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஒரு பிரபல மனநல மருத்துவமனைக்கு உடன் வருமாறு தெரிந்தவர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.அவரது தம்பி அங்கே உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.நாங்கள் சென்று பார்த்த போது சாதாரண மனிதர்களை போலவே அமைதியாக பேசிக்கொண்டிருந்தார்.சுமார் இருபத்தைந்து வயது இருக்கும்.பைத்தியம் என்று சொல்ல முடியாது.

வெளியில் வந்து ”என்னதான் பிரச்சினை?” என்றேன். வீட்டில் பணம் தராவிட்டால் எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறான், அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது.எங்காவது வேலைக்கு சேர்த்தாலும் சில நாட்கள்கூட நிற்பதில்லை.நம்மைப்போல இல்லை.இங்கே வந்து சில வாரங்கள் ஆகிவிட்ட்து.மருத்துவரை பார்த்து பேசவேண்டும்’’ என்றார்.

நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவரை சந்தித்தோம்.கிட்ட்த்தட்ட கையை விரித்து விட்டார்கள் என்று சொல்லவேண்டும்.பல நாட்கள் ஆலோசனைகளுக்கு பிறகு அவர்களது முடிவு,அவருடைய திறன் அவ்வளவுதான்,வேறு எதுவும் செய்யமுடியாது.இனி சிகிச்சை இல்லை.அவரை இருக்கும் நிலையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.அவர் மன நோயாளி அல்ல! அவருடைய சிந்திக்கும் திறன்,உணரும்,பகுத்தறியும் திறன் அவ்வளவுதான். 

வெளியில் வந்து அவரது பெற்றோரிடம் கூறியபோது தந்தை சோர்ந்து போனார்.பையனின் தாயார் கூறியது,இருந்து விட்டு போகட்டும்,நான் பார்த்துக்கொள்கிறேன்,அவனும் என் பிள்ளைதான்”. திறனில்லாத ஒருவரை எந்த தாயும் ஒதுக்கிவிடுவதில்லை.பல பெண்களும் திறனில்லாத கணவனுடன் வெற்றிகரமாக குடும்பம் நட்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.

உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கலாம் என்பது உண்மைதான்.இருக்கட்டும்.ஆனால் மனிதர்கள் அனைவரும் ஒன்று போலவே படைக்கப்பட்டவர்கள் அல்ல!ஒவ்வொருவருக்கும் சிந்திக்கும் திறன்,புரிந்துகொள்ளும் திறனில் வேறுபாடு இருக்கிறது.நான் சொல்வதே சரி என்பது எப்போதும் இருக்காது.சில காலங்களில் அது மாறிப்போகலாம்.வளைந்து கொடுப்பது சரியானதுதான்.ஆனால் அது தனிமனிதனுக்கோ,சமூகத்துக்கோ கெடுதலை ஏற்படுத்தக்கூடாது.

நிர்வாணமாக கார் ஓட்டிய பெண் பொலீசாரால் மடக்கி பிடிப்பு!(வீடியோ இணைப்பு)


மேலாடையில்லாமல் வேகமாக காரை ஓட்டிய பெண்ணைப் பொலிஸார் துரத்தி மடக்கி பிடித்தனர். குறித்த பெண் நன்றாகக் குடித்து விட்டு காரை செலுத்தியதாகவும், இரத்தப் பரிசோதனைக்கு மறுத்ததாகவும், அதி வேகமாக வாகனத்தை ஓட்டியதாகவும் பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கத்திரிக்காய்,மீன்,கருவாடு இதெல்லாம் சாப்பிடக்கூடாதா?

இந்திய மருத்துவத்தில் பத்திய முறை என்று உண்டு.மருந்து தரும்போது இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று சிலவற்றை சொல்வார்கள்.ஆங்கில மருத்துவத்தில் அப்படியொன்றும் சொல்லமாட்டார்கள்.இப்போது சில மருத்துவர்கள் தலைப்பில் சொல்லப்பட்ட பொருட்களை சாப்பிட வேண்டாம் என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.

தொண்ணூறு வயதையும் தாண்டி ஏர் உழுது கொண்டிருந்த ஒருவரைக் காட்டி சொன்னார்கள்.”அவர் உணவு விஷயத்தில் ரொம்ப கறார் பேர்வழி! கத்திரிக்காய்,மீன்,முட்டை,கருவாடு என்றால் தொடவே மாட்டார்” நீண்ட ஆயுளுக்கு இவையெல்லாம் தவிர்க்க வேண்டுமா? சாப்பிடவே கூடாதா?
மரபணு மாற்றப்பட்ட கத்திரியை சென்ற ஆண்டுதான் இந்தியாவில் அனுமதித்த்தாக நினைவு.இந்தியாவில் சாம்பார்களில் முதலிடம் பிடிப்பது கத்திரிக்காயாகத்தான் இருக்கும்.என் பெரியம்மா கத்திரிக்காய்களை சுட்டு சட்னி செய்வார்.அவ்வளவு அருமையாக இருக்கும்.பல நேரங்களில் விலை மலிவாகவும் கிடைக்கும்.ஏழைகளுக்கு மிக வசதியானது.

ஏழை இந்தியப்பெண்கள் உணவுத்தேவையை சமாளிக்கும் விதம் அலாதியானது.உடனே தயாரிக்க வேண்டும் என்ற சூழலில் கை கொடுப்பது கருவாடு.குடிகார கணவனாக் இருந்தால் அவனுடைய நன்மதிப்பையும் பெற்று விடும்.கிராமங்களில்,கள்,சாராயக்கடை அருகில் கருவாடு விற்பனை சக்கைப்போடு போடும்.ஆனால் நெடுஞ்சாலையில் கருவாடு லாரி போனால் நாற்றம் குடலைப் பிடுங்கும்.

முட்டை நல்லது.மீன் இதயத்துக்கு நன்மையைத் தரும்.இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம்.பெரும்பாலானவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இவற்றை ஏன் தவிர்க்குமாறு சொல்கிறார்கள்? கத்திரிக்காய் சிலருக்கு அலர்ஜியைத் தருகிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.கடல் உணவுகளும் சிலருக்கு அலர்ஜியைத் தருகின்றன.

அலர்ஜியைத் தரும் ஹிஸ்டமின் கத்திரிக்காயில் உள்ளது.அலர்ஜி,ஜலதோஷம் போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளை ஆண்டி ஹிஸ்டமின் என்று சொல்வார்கள்.சிட்ரிசின்,குளோர்ஃபெனிரமின் ஆகிய மருந்துகள் இந்த வகை.இவை தூக்கத்தையும் தரும்.ஆனால் இவை மட்டும்தான் அலர்ஜியைத் தருமா?
என்னிடம் கேட்பவர்களுக்கு நான் சொல்வது,’’ உங்களுக்கு எந்த உணவுப்பொருள் ஒத்துக்கொள்ளவில்லையோ அதை சாப்பிடவேண்டாம்”.ஒவ்வொருவருக்கும் இதில் மாறுபடும்.சிலருக்கு தக்காளி,வேறு சிலருக்கு எலுமிச்சை என்று பட்டியல் நீளும்.தவிர்த்துவிடுவதே நல்ல வைத்தியம்.

நோய்வாய்ப் பட்டிருக்கும்போது உடலில் உடலில் நோய் எதிர்ப்புத்திறனும் குறைந்திருக்கும்.ஹிஸ்டமின் மருந்தின் செயல்பாட்டையும்,தூக்கத்தையும் கூட குறைக்கலாம்.அதனால் நோயுற்ற சமயங்களில் அலர்ஜி உண்டாக்கும் பொருட்களை தவிர்த்து விடுவதே சரி.

மலைக்கவைக்கும் சாதனை 'மயக்கம்' - என்ன?

மயக்கத்துக்கு இல்லை, கலக்கம்! வெற்றி தரும் புதிய நுட்பம். பைபாஸ் சர்ஜரி போன்ற பெரிய அறுவை சிகிச்சை தொடங்கி... அட்மிட் ஆன உடனே செய்யப் படும் 'டே கேர்’ அறுவை சிகிச்சை வரையிலும் அனஸ் தீஷியாவின் பங்கு மிக முக்கியமானது. முன்பு துல்லியக் கணக்கீடு இல்லாமல், ஓர் அனுமானமாகவே அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டது. அதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. ஆனால், இப்போது பிரத்யேகமான கருவிகளைப் பயன் படுத்துவதன் மூலம், அசம்பாவிதங்கள் பெரும் அளவு தவிர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வலி மற்றும் மயக்க மருந்தியல் நிபுணர் டாக்டர் கார்த்திக் பாபு நடராஜனிடம் பேசினோம்.
'எந்த ஒரு அறுவை சிகிச்சை என்றாலும், அனஸ்தீஷியா கொடுக்காமல் செய்யவே முடியாது. முன்பு மயக்க மருந்தை உடல் முழுவதுக்கும் கொடுப்பார்கள். அதனால் உடல் முழுக்கவே உணர்ச்சி இருக்காது. இதை பொது அனஸ்தீஷியா என்று சொல்வோம். இதை அடுத்து வந்ததுதான் ரீஜனல் அல்லது லோக்கல் அனஸ் தீஷியா. இந்த முறையில், எந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ, அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்வோம். உதாரணத்துக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அந்த இடத்தில் மட்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அந்தப் பகுதிக்கு உரிய நரம்பைத் தேடிப் பிடித்து அதில் லோக்கல் அனஸ்தடிக் கொடுத்தால் போதும். கைப் பகுதி முழு வதும் மரத்துப்போகும். உடனே அறுவை சிகிச்சை செய்யலாம். இதனால், உடல் முழுமைக்கும் மயக்க மருந்து கொடுப்பது தேவையற்றதாகி, செலவும் குறைந்து போனது.


அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் தொடர்ந்து குறிப்பிட்ட காலம் வரை, கொஞ்சம் கொஞ்சமாக நோயாளிக்கு உணர்வு நீக்க மருந்தைச் செலுத்த வேண் டும். அப்போதுதான் நோயாளிக்கு வலி உணர்வு இருக்காது. இதய அறுவை சிகிச்சை போன்ற மேஜர் சர்ஜரிகளில் உணர்வு நீக்க மருந்தைத் தொடர்ந்து செலுத்தும்போது, புண் ஆறுவது விரை வாகிறது. அதனால், மருத்துவமனையில் தங்க வேண்டிய நாட்களின் அளவு குறைகிறது.

ஒரு சில வலிகளை நீக்குவதற்காக காலையில் அட்மிட் ஆகி, முற்பகல் அறுவை சிகிச்சை முடிந்து, மாலை வரை ஓய்வெடுத்த பிறகு வீட்டுக்குச் செல்வதை 'டே கேர்’ என்று சொல் வோம். இந்த சிகிச்சை முறை மேலை நாடுகளில் பல ஆண்டுகளாக இருக்கிறது என்றாலும் நம் நாட்டுக்கு வந்து ஒன்றிரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. மருத்துவமனையில் தங்கும் நேரம் குறைவதால் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து, செலவும் குறைகிறது. வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுக்கும் நாட்களின் அளவும் குறைகிறது. பெரும்பாலும் இந்த சிகிச்சைக்கு ரீஜனல் அனஸ்தடிக் முறையே பயன்படுத்தப்படுகிறது.

முன்பு நரம்புகளைக் கண்ணால் காணாமல், அனுமானத்தின் பேரில் நரம்பு இருக்கும் பகுதி யில் உணர்வு நீக்க மருந்தைச் செலுத்துவோம். இதை, 'பிளைண்ட் மெத்தட்’ என்று சொல்வோம். அதாவது, நரம்பு இந்த இடத்தில்தான் இருக்கும் என்ற அனுமானத்தில் மருந்து செலுத்தப்பட்டு வந்தது. மயக்க மருந்தை சரியான நரம்பில் இன்ஜெக்ட் செய்வதற்குப் பதில், அருகே உள்ள வேறு உறுப்புகளில் மாற்றி செலுத்தப்படும் அபாயமும் இருந்தது.

உதாரணத்துக்கு, கை மரத்துப்போக வேண்டும் என்றால் அதற்கான நரம்பு கழுத்துப் பகுதியில் உள்ளது. அது மிக முக்கியமான பகுதி. அங்கே துல்லியமாகப் போடாவிட்டால், அருகே இருக்கும் ரத்தக் குழாய், மூச்சுக் குழாயில் ஊசி போட்டுவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். தவறு தலாக ஊசி போட்டுவிட்டால், வேறு மாதிரி யான பிரச்னை, பாதிப்பு ஏற்படும்.

இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், தற்போது இரண்டு புதிய தொழில்நுட்பங்களை மயக்க மருந்தியல் துறையில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம். முதலாவது அல்ட்ராசவுண்ட், இரண்டாவது நெர்வ் ஸ்டிமு லேட்டர்.

அல்ட்ராசவுண்ட் இயந்திரத்தை கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளின் உடல் உள் உறுப்புகளின் செயல்பாடுபற்றி அறிந்துகொள்வதற்காக இது வரை பயன்படுத்தினார்கள். இப்போது அந்தக் கருவியை மயக்க மருந்தியல் துறையிலும் பயன் படுத்துகிறோம். அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளியை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தபடியே, உணர்வு நீக்க மருந்து செலுத்து வதற்காக ஊசியை உள்ளே செலுத்தி, அது குறிப்பிட்ட நரம்பைத்தான் அடைந்துள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே, மருந்து செலுத்தப்படும்!

இதே போன்று நெர்வ் ஸ்டிமுலேட்டர் என்ற கருவி மூலம், கைப் பகுதி மட்டும் மரத்துப்போக வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நரம்பு பகுதியில் ஊசியைக் கொண்டுசெல்வோம். அதன் முனையில் மைக்ரோ அளவுக்கு மின்சாரம் செலுத்தப்பட்டு இருக்கும். அதனால் சரியான நரம்பைத் தொட்டதும் கை அசையும். இதன் மூலம் சரியான நரம்பை அடையாளம் கண்டு மருந்தை செலுத்தி அந்தப் பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்வோம். இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்து வதன் மூலம் வெற்றி விகிதம் 98 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது. மற்ற உறுப்பு மண்டலம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில், தொடர்ந்து மருந்து செலுத்தும் அனுபவத்தின் மூலம் வெற்றி விகிதம் 100 சதவிகிதத்தைத் தொட்டுவிடும் என்று உறுதி யாகச் சொல்லலாம்...'' என்றார்.

என்னோட உடம்பு ரப்பர் மாதிரி! -சஞ்சனா


சஞ்சனா சிங் நடிக்க வந்தாரா... இல்லை, அடிக்க வந்தாரா? பரபரவென உடலைச் சுழற்றுகிறார்; தலைகீழாக பல்டி அடிக்கிறார்; உடம்பை மட்டையாக மடக்கிச் சுருள்கிறார். அறை முழுக்க உருள்கிறார். இந்தியில் '120 மினிட்ஸ்’, கன்னடத்தில் 'சேலஞ்ச்’, தமிழில், 'யாருக்குத் தெரியும்’ படங்களில் நடித்து வரும் சஞ்சனா சிங், ஜிம்னாஸ்டிக்கில் செமத்தியாகக் கலக்குகிறார். 

''சின்ன வயசுல இருந்தே உடம்பை ஃபிட்டா வெச்சுக்கணும்னு எனக்கு ஆர்வம் அதிகம். ஜிம்முக்குப் போகவோ, யோகா கிளாஸ் போகவோ, அப்போ நேரமும் இல்லை... வாய்ப்பும் இல்லை. அதனால், ஃபிட்னெஸ் சம்பந்தமான டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்து, நானே சுயமா கத்துக்க ஆரம் பிச்சேன். மும்பையில் படிக் கிறப்ப, ஸ்கூல் பெஞ்ச்சில்கூட பல்டி அடிச்சுப் பழகி இருக்கேன். வீட்ல, இந்த மாதிரி நான் பண்ணும் சேட்டைகளைப் பார்த்து, 'குரங்கு வாலு’னு கிண்டல் பண்ணுவாங்க. அந்தக் கிண்டலே ஒரு கட்டத்தில் ஆச்சர்யமான பேச்சா மாறுச்சு. 'உடம்பை இப்படி வளைக்கிறியே... நீ ஜிம்னாஸ்டிக்கில் பெரிசா சாதிக்கலாம்’னு என்கரேஜ் பண்ணினாங்க. இப்போ, நடிப்பு, ஜிம்னாஸ்டிக், டென்னிஸ்னு பட்டையைக் கிளப்பிட்டு இருக்கேன்!'' என்கிறார் இந்தப் பளீர் பாப்பா.
''என்னோட உடம்பு ரப்பர் மாதிரி. நான் பண்ற ஜிம்னாஸ்டிக் சேட்டைகளைப் பார்க்கிறீங்களா..?'' என்றவர், கைகளைப் பின்புறமாக வளைத்து உள்ளங்கைகளை ஒன்று சேர்த்து, ''முதலில்... நமஸ்காரம்'' என்கிறார். உடலைப் படுக்கைவசமாக்கி மணிக்கட்டின் பலத்தில் நிறுத்திக் காட்டுகிறார். இரு கால்களையும் இடது, வலது திசையில் அகல விரித்து, ஒரே நேர்க்கோடாக்கிக் காட்ட, நமக்கு மூர்ச்சையாகாததுதான் பாக்கி.

''இன்னும் என்னென்ன வித்தைகள் கற்றுவெச்சிருக்கீங்க சஞ்சனா?''

''உடம்பை எப்பவும் சுறுசுறுப்பா வெச்சுக்க எத்தகைய பயிற்சிகளையும் பண்ணலாம். பயிற்சிகளை வகை பிரிச்சு, வழக்கமாக்கிச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சில நாட்களில் காலையில் எழுந்த உடனேயே டேபிள் டென்னிஸ் விளையாடப் போயிடுவேன். கைகளுக்கும் கால்களுக்கும்தான் அதில் வேலை. ஆனால், கவனத்துக்கு மிகுந்த பக்குவம் கிடைக்கும். உடம்பு முழுக்க எனர்ஜி பெருக்கெடுக்கும். ஷூட்டிங் சமயத்தில் ஃப்ரீ டைம் கிடைச்சா, சட சடனு ஜிம்னாஸ்டிக் பண்ண ஆரம் பிச்சிடுவேன். யோகா பண்ணுவேன். ஆர்வமா டென்னிஸ் விளையாடுவேன். மரம் ஏறுவதைத் தவிர, மற்ற பயிற்சிகள் எல்லாமும் பண்ணுவேன். உடம்போட இன்ஜின் எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கணும்!''



''பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்வதால், உடல் வலி எடுக்காதா?''

''நிச்சயம் வலி எடுக்காது. ஆரம்பத்தில் பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்யும்போது, அதில் சிரமம் இருப்பதுபோல் தோன்றும். ஆனால், ஒருநாள் விளையாட்டு, அடுத்த நாள் ஜிம், அதற்கடுத்து டான்ஸ் என மாற்றி மாற்றிச் செய்யும்போது உடலின் அத்தனை உறுப்புகளும் சுறுசுறுப்பாகின்றன. எந்த உறுப்பையும் எப்படியும் வளைக்கிற பக்குவத்தைப் பழகிட்டால், உடலின் ரகசியம் நமக்குப் பளிச்சுனு தெரிஞ்சிடும். நான் ரொம்ப ரசிச்சுப் பண்ற பயிற்சியே டான்ஸ்தான். வெரைட்டி டான்ஸ் தொடங்கி கிளாஸிக்கல் வரைக்கும் ரொம்ப ரசிச்சு ஆடுவேன்!''

''வயிறுன்னு ஒரு உறுப்பு இருக்கிறதாவே தெரியலையே... இவ்வளவு ஸ்லிம்மா எப்படி மெயின்டெய்ன் பண்றீங்க?''

''கட்டுப்பாடுங்கிற பெயரில் உடம்பைப் பட்டினி போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காலையில் வெஜிடபிள் ஜூஸ் குடிப்பேன். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை இனிப்பு இல்லாத க்ரீன் டீ அவசியம் வேணும். மதியம் பச்சைக் காய்கறிகளும் ரொட்டி யும் சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு இரண்டு தடவை ப்ளாக் டீ குடிப்பேன். ஐந்து முட்டைகளின் வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடுவேன். மஞ்சள் கரு சாப்பிட்டால், கொழுப்பு சேர்ந்துடும். வெள்ளைக் கருவில் வேண்டிய அளவுக்கு புரோட்டீன் இருக்கு. எப்போதாவது சிக்கன் சாப்பிடுவேன். ஆயில் சேர்க்காதபடி நெருப்பில் வாட்டி சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங் நேரத்தில் கேரட் ஜூஸ் குடிப்பேன். தண்ணீர் நிறையக் குடிப் பேன். உடம்பை ஸ்லிம்மா வெச்சுக்க க்ரீன் டீயும் தண்ணீரும் பெரிசாக் கை கொடுக்கும்.

உடம்பில் கொழுப்பு சேராமல் கட்டுக்கோப்பா மெயின்டெயின் பண்ண, உணவுக் கட்டுப்பாடுதான் முக்கியம். என்னதான் மணிக்கணக்கில் பயிற்சிகள் பண்ணாலும் சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாடு தவறிட்டா, ஸ்லிம் உடம்பை மெயின்டெய்ன் பண்ண முடியாது. யோகாவில் பசிக்கு ஒரு பயிற்சி, ஜீரணத்துக்கு ஒரு பயிற்சினு வகை வகையா இருக்கு. அந்த மாதிரி செலெக்டிவ் வான பயிற்சிகளைக் கத்துக்கிட்டா, உடம்பை நரம்பு மாதிரி நிச்சயம் வெச்சுக்கலாம்!''



''எப்பவும் புன்னகை மாறாமல் இருக்கீங்களே... எப்படி?''

''இது ரொம்பப் போட்டியான உலகம். நாம நினைக்கிறது எல்லாம் அடுத்த நிமிஷமே நடந்திடாது. அதுக்காக நாம சோர்ந்துடவும் முடியாது. வருகிற வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அதிலும் எப்படி ஸ்கோர் பண்ண முடியும்னு போராடணும். 'ரேனிகுண்டா’ படத்தில் அக்கா கேரக்டர்தான் கிடைச்சது. ஆனாலும், 'யார்றா இந்தப் பொண்ணு?’னு கேட்கிற அளவுக்குப் பண்ணினேன். இந்த மாதிரி போராட்டம், முயற்சினு மனசுக்குள் ஆயிரம்ஆயிரம் பரபரப்புகள் இருந்தாலும், நம்ம முகம் எப்பவுமே பளிச்சுனு இருக்கணும். காஸ்ட்லியான மேக்கப்பும் உயர்தர உடைகளும் கொடுக்காத மதிப்பை சின்னப் புன்னகை கொடுத்துடும். தனிப்பட்ட என்னோட எல்லா புகைப்படங்களிலும் நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேன். நான் பியூட்டி பார்லர் போறதே இல்லை. தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய் தவிர, காஸ்ட்லியான எதையும் பயன்படுத்துறது இல்லை. காரணம், முக அழகுக்கு அவசியமான ஒண்ணே ஒண்ணு... சிரிப்புதான்!''

ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்?

நமக்கு பழக்கமில்லாத எதையாவது செய்யவேண்டிய நிலை வந்தால் பலருக்கு படபடக்கும்.சில நேரங்களில் நான்கு பேர் முன்னால் பேசுவது கூட நெஞ்சு அடித்துக்கொள்ளும்.நேர்முகத்தேர்வுக்கு செல்வது போன்றவற்றைக்கூட உதாரணமாக சொல்ல்லாம்.மனதில் இறுக்கம் ஏற்பட்டு உடலிலும் விளைவுகள் தெரியும்.சிலருக்கு கை நடுங்கும்.மனசு போராடும்.குறிப்பிட்ட நேரத்தில் சில சரியாகப்போய்விடும்.ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டும் என்றால் அறைகுறையாக பேசிவிட்ட கொஞ்ச நேரத்தில் பிரச்சினை தீர்ந்துவிடும்.

தொடர்ந்து சில காலங்கள் மனமும் உடலும் பாதிக்கப்படும் சூழ்நிலைகளும் உண்டு.சில விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்ய பழகிவிடும்.நம்மை மிரட்டும் விஷயத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டால் மனம் அமைதியாகிவிடும்.கிராமத்தில் படித்த பலருக்கு ஆங்கிலம் பேசுவது ஒரு பெரிய பிரச்சினை.அது ஒரு பெரிய அறிவாளியை காட்டுவது போல நினைத்துக் கொள்பவர்கள் உண்டு.
இன்றும் அரசாங்க கடிதங்கள் பலவும் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.சிலர் நிறுவனத்தில் சேர்ந்து படிப்பார்கள்.வீட்டில் புத்தகம் வாங்கி படிப்பார்கள்.ஆனால் எப்போதும் பேசவே மாட்டார்கள்.ஆனால் வேறுவழியே இல்லை.ஒருவருடன் உரையாட வேண்டும்,அவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும்.இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தானாக வார்த்தைகள் வந்து விழும்.பெரும்பாலும் சரியாகவும் இருக்கும்.அந்த மொழியிலேயே சிந்திப்பது எளிதாக இருக்கும்.

இம்மாதிரி சூழ்நிலைகளில் மனதில் ஏற்படும் இறுக்கமான நிலைதான் பிரச்சினை.சரியாக செய்யத் தெரிந்தாலும் முடியாமல் போய்விடுகிறது.தவறாக போய்விட்டால் நாலுபேர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்திலேயே ஒட்டு மொத்தமாக வாய்ப்புகளை தவற விடுபவர்கள் அதிகம்.சமாளிக்கும் திறன் மனதுக்கே இருந்தாலும் சிலரால் முடியாமல் போய்விடுகிறது.தன்னம்பிக்கை குறைவும் ஒரு காரணம்.

எப்போதும் எல்லோராலும் உயர்வாகவே கருதப்படவேண்டும்.அத்தனை பேரும் தன்னை பெருமையாக நினைக்கவேண்டும் என்பதுதான் நிஜ பிரச்சினை.அதிகம் அடிபடாதவர்களுக்கு மனதில் இறுக்கம் அதிகமாகும்.வெளியே தலைகாட்டாமல் உள்ளே இழுத்துக்கொள்ளவே விரும்புவார்கள்.ஆனால் ஆசையும் இருக்கும்.ஆங்கிலம் பேசும் ஆசை இருக்கிறது.ஆனால் முடியவில்லை.

தேவை தன்னம்பிக்கைதான்.அது மட்டுமில்லாமல் நல்ல எண்ணங்களும்கூட! பொறாமை,வெறுப்பு,பழி வாங்கும் எண்ணம் போன்றவை மனதில் இருந்தால் மனம் இயல்பாகவே பாழ்பட்டுவிடுகிறது.இவர்களுக்கு எப்போதும் இறுக்கம் அதிகமாகவே இருக்கும்.உளவியலாளர்கள் பலரும் இதை உறுதி செய்கிறார்கள்.நல்ல எண்ணங்களுடன் இருக்கும்போது நமக்கே நம் மீது மதிப்பும் இருக்கும்.

சுய மதிப்பு இருக்கும்போது நாம் செயல்களை செய்ய தயங்குவதில்லை.தயக்கத்தை விட்டுவிட்டாலே நமக்கு வெற்றி எளிது.ஆங்கிலம் என்ன எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்.பேசலாம்.அறிவு பெறலாம்.வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இவை முக்கியமானவை.தயக்கமும்,கலக்கமும்தான் நம்மை தோற்கடிக்கின்றன.

சந்தேகத்தால் சிதறும் தாம்பத்யம்.


சம அந்தஸ்து, படிப்பு, சொந்தவீடு, அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பையனின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெண்னுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷம்.குறை வைக்காமல் பார்த்து பார்த்து செய்தார்கள்.

ஒரு வாரத்தில் வீட்டுக்கு வந்த பெண் அம்மாவைக்கட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தார். ”எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிறார். வெளியே எட்டிப்பார்த்தால் யாரைப்பார்க்கிறாய் என்கிறார்.என்னுடைய செல்போனை எடுத்து யார்யாருடன் பேசியிருக்கிறேன் என்று பார்க்கிறார், வாழ்க்கையை நினைத்தால் பயமாயிருக்கிறது’’

மேலே சொல்லப்பட்ட்து கொஞ்சம்தான்.தன்னை விட அழகான மனைவி அமைந்த்தால் சந்தேகம் ஏற்பட்டு மனநோயாளியானதை சினிமாவில் பார்த்திருக்கிறோம்.நிஜத்திலும் உண்மையில் மனநோய் ஏற்படும் அளவுக்கு பிரச்சினையை தரும் ஒன்றுதான் இந்த சந்தேகம்.தீவிரமான உணர்ச்சிப்போராட்ட்த்தை தரும் பயங்கரம் இது.

ஆண் மட்டுமல்ல கணவன் மீது சந்தேகம் கொள்ளும் மனைவியும் உண்டு.இரு பாலருக்கும் பொதுவான இந்த பிரச்சினைக்கு அழகான மனைவி,அழகான கணவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் காரணமல்ல! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.ஒரு வகை மனநோயிலும் இந்த பிரச்சினை வரலாம்.


தனது பாலியல் திறன் மீது அவநம்பிக்கை உள்ளவர்கள்,உண்மையிலேயே பாலியல் குறைபாடு கொண்டவர்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.பருவ வயதில் திருமணமான நபர்களின் கள்ளக்காதல் பற்றி நண்பர்கள் சொன்ன பல விஷயங்களும் இப்போது மனதைக்குழப்பும்.சில விஷயங்களை இவர்களே பார்த்திருப்பார்கள்.கடந்த கால சம்பவங்களோடு மனம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்.

பாலியல் குறைபாடு உள்ளவர்கள் கூட தனது இணை தனக்கு மட்டுமே உரியவர் என்பதில் தீவிரமாக இருப்பார்கள்.பல எண்ணங்கள் தவறு என்றாலும் அவர்களது மனம் படும்பாடு கொடூரமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.சந்தேகமும்,பொறாமையும்,கோபமும் அதிகரிக்கும்போது பாலியல் உணர்வும் மூர்க்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு.

பலரது சந்தேகங்கள் உண்மையல்ல என்பதே நிஜம்.உணர்ச்சி அளவில் அதிகம் பாதிக்கப்படுவது சந்தேக புத்தி உள்ளவர்கள்தான்.அவர்களது கணவனோ,மனைவியோ ஒரு பைத்தியத்தை பார்ப்பதுபோலவே பார்ப்பார்கள்.ஆனால் கலாச்சாரம் சார்ந்து மனதளவில் சந்தேகப்படும் கணவனைப்பெற்ற பெண் அதிகளவு பாதிக்கப்படுகிறார்.

கொலை செய்யும் அளவுக்கு,தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதுண்டு.கவனமாக கையாண்டால் வெளியே வர உறவினர்களும்,நண்பர்களும் உதவ முடியும்.காரணத்தைக்கண்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினால் பல குடும்பங்களை உடையும் ஆபத்திலிருந்து மீட்க முடியும்.

திரும்பும் திசை எங்கும் காக்கி கும்பல்கள்

பரமக்குடி, மதுரை, இராமநாதபுரம் என தொடரும் கலவரங்கள். அங்கும் இங்கும் அலைந்து திரியும் அப்பாவி மக்கள். நினைவு தினத்தை அனுசரிக்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நிற்க்கும் கூட்டங்கள். வீட்டுக்கு உபயோக பொருள்கள் வாங்க, குழந்தைக்கு மருத்துவம் பார்க்க, உறவினர் வீட்டிற்கு என்று வந்த பெண்கள், குழந்தைகள் திரும்பி செல்ல பேருந்து இல்லாமல் அலையும் அவலம். கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டு, அலறி ஓடும் ஆண்களை கண்டு அஞ்சி நடுங்கி சாலையின் ஓரங்களிலும், பேருந்து நிலையங்களின் இடுக்குகளிலும் நுழைந்து மரண பீதியில் கதறும் குடும்பங்கள். கையில் நீண்ட லத்தி, தங்களை பாதுகாத்து கொள்ளும் கவச ஆயுதம், துப்பாக்கி முழக்கம், திரும்பும் திசை எங்கும் காக்கி கும்பல்கள் என ஒரு கனம் நம் கண்முன் கஷ்மீரின் அவலநிலை வந்து சென்றது.

என்ன நடக்கிறது என்பதனை யூகிப்பதற்குள் 5 பேரின் உயிர் பலிகொடுக்கப்பட்டுவிட்டது. ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. அப்படி என்ன? நடந்தது பரமக்குடியில்.

ஒரு இனம் ஆண்டாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்டு, அநியாயதிற்குள்ளாக்கபட்டு, அடக்குமுறைகளுக்குட்பட்டு கிடந்தது. அதிலிருந்து விடுதலை பெற, உரிமைகளை மீட்டெடுக்க வழிதெறியாது விழி பிதுங்கி நிண்ட நேரத்தில். அவர்களுக்காய் குரல் கொடுத்து, உரிமையை பறித்தெடுக்க போராடியவர் இமானுவேல் சேகரன்.

சுதந்திர போராட்ட தியாகி, இராணுவ வீரன் என தனது இளமை பருவம் தொட்டு போராட்ட களத்தை நோக்கி பயனித்தார் இமானுவேல். இரட்டை குவளை, நாய் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதிக்கும் கூட்டம் மனிதன் தண்ணீர் எடுக்க தடைவிதிப்பதா? என்று ஆதிக்க சக்திகளை எதிர்த்து விவேகத்துடன் போராட்டத்தை தொடங்கினார். 1950-ல் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்” என்று ஆரம்பித்து ஒரு சில வருடங்களுக்குள் தன் சமூக பலத்தை அரசியல் சக்தியாக மாற்றினார். 1957-ல் நடந்த தேர்தலில் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான கடும் உழைப்பினால் தங்கள் இனத்தின் சக்தியை நிரூபித்தார்.

அதன் பின் பல பிரச்சனைகள், சமரச கூட்டங்கள், சிறைகள் என கழிந்து கொண்டிருந்தன நாட்கள். 5-9-1957 அன்று லாவி என்னும் கிராமத்தில் குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண 10-9-1957 அன்று பணிக்கர் என்னும் உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த இமானுவேல் வருகிறார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்ற போதிலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக அங்கே தங்கிய இமானுவேல் அடுத்த நாள் 11-9-1957 பரமக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின் சுமார் 9 மணி அளவில் தன் சொந்த கிராமத்திற்க்கு புறப்பட்ட இமானுவேல் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அன்று முதல் தங்கள் சமூகத்திற்காக தனது உயிரை கொடுத்த வீரர்களின் பட்டியலில் சேர்ந்து தலித் சமூக மக்கள் மனங்களில் என்றும் மறையா இடத்தை பிடித்தார்.

இதன் காரணமாக ஒவ்வொரு 9/11 போது இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாள் அமைதியான முறையில் நீண்ட காலம் நடைபெற்று வந்தது குறிப்பிடதக்கது. அதன் பின் சுமார் 4 வருடங்களாக 1000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மரியாதை செய்யும் நிகழ்சியாக உருவெடுத்தது.

இதற்கு அரசியல் ரீதியான பல காரணங்கள் மறைந்து கிடக்கின்றன. பொதுவாகவே ஆண்டாண்டு காலமாக தேவர்-பள்ளர் பிரச்சனை வழக்கத்தில் இருந்து வருகிறது. எதேனும் விழாக்கள் நடத்தப்பட்டு மக்கள் அதிகமாக கூடும் காலங்களில் இது கலவரமாக வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அப்படியிருந்தும். தேவர்கள் தங்கள் இனத்தலைவரான் முத்துராமலிங்க தேவர் நினைவாக ஒவ்வொரு அக்டோபர்-2 அன்று தேவர் குருபூஜை என்று விழா எடுப்பதும். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அசிங்கபடுத்துவதும், அவர்களை வம்புக்கிழுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நேரங்களில் காவல் துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்ற போர்வையில் கலவரம் செய்பவர்களை கட்டுப்படுத்தாமல் தலித் மக்கள் வாழும் பகுதிக்குள் போலீஸை குவித்து வழக்கம் போல் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்து செல்ல தடை என பதற்றம் பற்றி கொள்ளும். ஆனாலும் அரசியல் தலைவர்கள் பாகுபடின்றி இப்பூஜையில் கலந்து கொண்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி செல்வர். அதில் ஜெ, ஸ்டாலின், காங்கிரஸ்காரர்கள், விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைவரையும் அங்கு காணலாம்.

இதற்கு மாற்றமாக தலித் மக்கள் சார்பில் இமானுவேல் சேகரனது நினைவு தினம் விமர்சியாக்கப்பட்டது. ஆனால் தேவர் குரு பூஜைக்கு கொடுத்த முக்கியத்துவமும், அந்தஸ்தும் இமானுவேல் சேகரனது குரு பூஜைக்கு கொடுக்கபடவில்லை. அதை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கண்டுகொள்வது கூட இல்லை. தலித் கட்சி தலைவர்களைத் தவிர. இது அம்மக்கள் மத்தியில் குமைச்சலாக புகைந்து கொண்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில் 9/11 குருபூஜைக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பாதுகாப்பு என்கிற போர்வையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிகழ்வில் தமிழக மக்கள் கழக தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிரார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக நினைவிடத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். தீடீர் என ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கூட்டத்தில் கசிந்தவுடன் “தாங்களும் வருவதில்லை வருபவனையும் விடுவதில்லையா?” என்று ஆத்திரம் கொண்ட மக்கள் பரமக்குடியின் முக்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஆதிக்க சக்தியின் கைக்கூலிகளான காக்கிகள் கூட்டத்தை களைக்க தடியடியை தொடங்கியிருக்கிறார்கள்.

கூட்டத்தை கலைக்கிறோம் என்று ஆரம்பிக்கப்பட்ட தடியடி தான், மறியல் போராட்டம் மிகப்பெரும் கலவரமாக மாற வித்திட்டது. அதன் பின் போலீஸ் வாகனம் எரிப்பு, கல்வீச்சு, அதிகாரிகள் காயம் என அனைத்தும் ஒன்று சேர்ந்து 7 அப்பாவிகளின் உயிர் துப்பாக்கிக்கு இரையாக்கப்பட்டுவிட்டது.

பலமுல்ல காவல்துறை கையில் தடி, பாதுகாப்பு கவசம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகணம், கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டு என கலவரத்தை தடுக்க பல வழிகள் இருந்தும் போராடியவர்கள் சிறுபான்மை சமூக மக்கள் ஆதாலால் தனது ஆதிக்க வெறியை தன் கையில் இருந்த துப்பாக்கியின் மூலம் தனித்து இருக்கின்றனர். துப்பாக்கியால் மனித உயிர்களை காவு கொண்டது நிச்சயம் கண்டனத்திற்குரியது.

மற்ற சமூகத்தை இழிவுபடுத்துவதற்காகவும், மனித சமூகத்தை பிரிவினைபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த கொண்டாடப்படும் விழாக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. வட நாட்டின் இறக்குமதியான விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்து ஆரத்தியெடுத்து பாதுகாப்பு கொடுக்கும் ஆதிக்க, பார்ர்ப்பன சக்திகள் மற்றும் அதன் கைகூலிகள் அமைதியான முறையில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அனுமதிமறுப்பதும், அதுவே சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்தால் அடக்குமுறைகளை கையாள்வதும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் அமைப்பு சுதந்திர தினத்தை கொண்டாட சட்ட ரீதியான அனைத்து ஒழுங்குகளையும் கடைபிடித்து, அரசிடம் உரியமுறையில் அனுமதி பெற்றிருந்தும் கடைசி தருவாயில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று உப்பு சப்பில்லாத காரணங்களை காட்டி சுதந்திர தின கொண்டாட்டதை தடை செய்தது. அத்துடன் நிகழ்ச்சி நடக்கயிருந்த மேலப்பாளையத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்து பதட்டமான சூழ்நிலை போல் படம் காட்டியது குறிப்பிடதக்கது.

இதை நான் இங்கு குறிப்பிட காரணம் இத்தடையை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இதில் அதன் பொது செயளாலர் ஹாலித் முஹம்மது இராமநாதபுரத்தில் கண்டன உரை நிகழ்த்தும் போது உங்கள் தடைக்கு பயந்து நாங்கள் எங்களது விழாவை நிறுத்திவிடவில்லை. எங்கள் தலைமை எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் சட்டம் ஒழுங்கை பேணுபவர்கள். சுதந்திர தின விழாவை தடைசெய்தது போன்று தேவர் குரு பூஜையையோ அல்லது விநாயகர் ஊர்வலத்தையோ தடை செய்து பாருங்கள் என்ன நடக்கும் என்று தெரியும். சட்டம் ஒழுங்கு பற்றி புரியும் என்று அவர் கூரிய வரிகளின் எதிரொளியை இன்று நாம் காண்கின்றோம்.

சட்டத்தை மதிப்பவர்களை சட்டம் மேலும், மேலும் நசுக்குகிறது. சட்டத்தை மீறுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இன்று பரமக்குடியில் நடந்த கலவரத்திற்கும், உயிர் பலிக்கும் காவல்துறை சட்டம் ஒழுங்கை மீறியதே காரணம். விழாவிற்கு அனுமதி அளித்துவிட்டு இறுதி தருவாயில் அதற்கு வந்த தலைவரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்தேறி இருக்காது. உயிர்களும் போயிருக்காது.

அநீதி இழைத்த போதும், அடக்குமுறைகளை கையாண்ட போதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இஸ்லாத்தின் அடிப்படையில் அமைதி காத்த இஸ்லாமியர்களிடமிருந்து கற்று கொள்ளட்டும் சட்டம் ஒழுங்கை !

பாலா படம் மிரள வைக்கும் ! : விஷால்

'அவன் இவன்' படத்தினை தொடர்ந்து பாலா இயக்கத்தில் நடிக்க மீண்டும் ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால். தற்போது நடித்து வரும் 'சமரன்', அடுத்ததாக லிங்குசாமி படம், அதனைத் தொடர்ந்து பாலா படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்.

பாலா படத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறித்து விஷால் கூறியிருப்பது " அவன் இவன் படத்தினை தொடர்ந்து மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று பாலா சார் கூறினார். ஆனால் அப்படம் இவ்வளவு சீக்கிரமாக ஆரம்பமாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

'அவன் இவன்' படத்தினை போல இந்த படத்தில் மாறுகண் உடையவராக எல்லாம் நடிக்கவில்லை. 
ஆனால் இந்த படத்தில் எனது பாத்திரப் படைப்பு படம் பார்ப்பவர்களை மிரள வைக்கும். இப்போதே அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது. கண்டிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது விருந்தாக அந்த படம் அமையும் " என்று தெரிவித்துள்ளார்.

மாதவிலக்கை தள்ளிப்போட.....அவசர அலசல் !


தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்... இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், 'அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்...’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.

இதுவோ.... ''மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்... மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!'' என்று குஷியாகும் பெண்களின் காலம்!

இவர்களில் பலரும், 'இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது' என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ... தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க... கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

'மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?' என்றபடி மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.

''மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்... மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது. அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்'' என்ற டாக்டர்,

''விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல... எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்'' என்று அழுத்தமாகச் சொன்னவர், மாத்திரைகளைப் பயன்படுத்துவது பற்றிய விஷயத்துக்கு வந்தார்.

''கடைகளில், 'புரஜெஸ்ட்டரோன்' (progesterone) கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை. இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியதுஅவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்... அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது... மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்கவேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது... ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!'' என விளக்கமாகச் சொன்ன ஜெயம் கண்ணன்,

''இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்திரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டார்கள். டாக்டரின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வாங்க முடியும். ஆனால், இங்கே மாதவிலக்கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெயரைச் சொல்லி மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிச் செல்கிறார். தான் செய்வது எவ்வளவு அபாயமானது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை'' என்று கவலையை வெளிப்படுத்தியதோடு, தலைகோதும் தாயாகவும் மாறி இப்படிச் சொன்னார்-



''மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும். முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!''

ஆண்களை கடத்தும் ஓரினச் சேர்க்கையாளர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட்


வழக்கமாக பெண்களுக்குத்தான் நாட்டில் பாதுகாப்பில்லை.தனியாக செல்வது ஆபத்து என்ற நிலை இருந்து வந்தது.ஆனால் திருத்தணியில் நடந்த ஒரு சம்பவம் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை உணர்த்துகிறது.திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான தணிகை இல்லத்தில் நடைபெற்ற சம்பவம் இது. 

24 வயதான சந்துரு என்பவரை கடத்தி வந்து பாலியல் தொல்லை தந்திருக்கிறார்கள்ஒரு சிலர் .அவ்வாலிபருக்கு கட்டாயமாக மதுவையும் வழங்கியிருக்கிறார்கள்.அடிக்கடி நடந்துவந்த இந்த விஷயம் வாலிபரை கட்டாயமாக காரில் ஏற்றும்போது சிலர் பார்த்துவிட்டார்கள். விசாரித்து , காப்பாற்றி காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்கள்.காவல் துறை கடத்தியவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எனது முந்தய ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய பதிவில் தொண்டு நிறுவனத்தை சார்ந்த ஒருவர் குறிப்பிட்ட விஷயத்தை பகிர்ந்திருக்கிறேன்.ஆண் பிள்ளைகளை வெளியே விடுவதும் ஆபத்துதான் என்று சொல்லியிருந்தார்.அது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.சிறைச்சாலைகளும்,மாணவர் விடுதிகளும் தான் இதன் தோற்றுவாய்.வெகுநாட்கள் சிறையில் கழிக்கும் குற்றவாளிகள் மற்ற கைதிகளுடன் பழகி இந்த பழக்கத்துக்கு ஆளாகிறார்கள்.அடுத்து மாணவர் விடுதிகள்.

கல்லூரியில் சேரும் மாணவர்கள் அந்த வயதில் போதைக்கு அறிமுகப்படுத்தப் படுவதோடு ஓரினச் சேர்க்கை பழக்கங்களுக்கும் தள்ளப்படுகிறார்கள்.இது விரும்பி மேற்கொள்ளப்படும் செயலோ ,வியாதியோ அல்ல.பழக்கப்படுத்தப்படும் ஒன்றுதான்.புகை பிடித்தல்,மது,போதை மருந்துகள் போன்றவை கல்லூரி விடுதிகள்தான் அறிமுகப்படுத்துகின்றன .மிக நெருக்கமாக ஒரு அறையில் ஏராளமான மாணவர்கள் தங்குவது இந்த ஆபத்தை அதிகப்படுத்துகின்றன.பழகிவிட்டால் விடுவது மிக கஷ்டம் என்கிறார் மருத்துவர் ஒருவர்.

முதன் முதலில் உலகில் எய்ட்ஸ் கண்டறியப்பட்டதும் ஓரினச் சேர்க்கை யாளர்களிடம்தான்.இதில் பால்வினை நோய் தொற்றும் இவர்களால்அதிகம் பரவுகிறது.வீட்டில் சொல்ல முடியாமல் திருமணம் செய்துகொண்டு மனைவிக்கு நோய்களை கொடுத்து விடுகிறார்கள்.இந்தியாவைப் பொறுத்துவரை இதைப்பற்றிய புரிதல் இல்லாததே மேலும் மேலும் பிரச்சினைகளை கொண்டு வருகிறது.

ஓரினச்சேர்க்கை பாவமாகவும், குற்றச்செயலாகவும் கருதப்பட்டது. ஆனால் உலகம் முழுக்க 5 சதவீதம் பேர் இத்தகைய நடத்தை உள்ளவர்கள் என்கிறது ஆய்வுகள்.சட்டப்படி குற்றம் என்றானதால் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல் விடுதிகளில் மற்றவர்களை கட்டாயப்படுத்தி அல்லது போதை தந்து தூண்டுவது போன்ற செயல்களை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

இவர்களையும் சமூகம் ஏற்றுக்கொண்டால் குற்றங்கள் நடப்பது குறையும் என்ற விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.சில பொதுச் சேவை நிறுவனங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களை கண்டறிந்து அவர்களுக்குள் சங்கத்தை ஏற்படுத்தி நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன .இது எய்ட்ஸ் வந்த பிறகு ஏற்பட்ட மாற்றம்.மேலும் சட்டப்பூர்வமாக மாற்றங்கள் தேவைப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது நினைவிருக்கலாம்கவனிக்கவும்.ஓரினச் சேர்க்கைதான்.கடத்துவது அல்ல!.ஆனால் இன்னும் மக்களிடம் இத்தகைய மாற்றம் ஏற்படவில்லை.சட்டத்தை விட சமூக அங்கீகாரம் இவ்விஷயத்தில் அவசியமானது. -

கருணாநிதி முரசொலியில் எழுத நினைத்தது நான் இங்கே எழுதுகிறேன் (Just for fun)...

முக்கனிகள் மூன்று உண்டு -நான் படைத்த நான்காவது கனியே என் கனிமொழியே -உன் 
மூக்கிற்கு அழகூட்ட மூக்குத்தி போட்டு மகிழ்தோம் -எனக்கு அப்போது வலியில்லை-கட்டாயபடுத்தி கலட்டும்பொழுது-என் 
இதயம் இங்கே நொறுங்குதம்மா..

ஒவ்வொரு தாய் தந்தையும் தன் மகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய பின் மன மகிழ்ச்சி அடைந்திருவர் -மாமியார் வீட்டிற்குத்தான் சென்றிருகிறாய் 
மகிழ்ச்சி மட்டும் வரலையம்மா 

கொலுசு போடுவதை நிறுத்திவிட்டால் உன் அம்மா தயாளு -ஏன் தெரியுமா? அதன் சத்தத்தில் -உன் தூக்கம் கெடுமென்று -இன்று 
கொசுக்கடியில் எப்படியம்மா தூங்குகிறாய் ?
நீதிபதி சைனி வாசித்த தீர்ப்பு உனக்கு புரியாதது கண்டு என் மனம் பதை பதைதம்மா 
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் எவ்வளவு தவறு என்று காலம் எனக்கு உணர்த்தி விட்டதம்மா!!

பட்டக் காலிலே படுமென்பார் கெட்டக் குடியே கெடுமென்பார்--அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ எனக்கு பொருந்துமம்மா!!!

நீ கட்டும் சேலையின் நிறம் சொல்லும் உன் கைப்பையின் நிறம் என்னவென்று- இன்று நீ தின்னும் கம்மங்களியின் நிறம் மட்டுமே என் கண்களில் தெரியுதம்மா 
மாளிகை போல் மனையிருந்தும்" நம்பர்-6 திகார் ஜெயில்" உன் நிரந்த மனையானதம்மா 


"இது சன் டிவியின் தமிழ்மாலை" -உலக தமிழர்களின் மனைதோறும் கேட்கும் மங்கள வாத்தியம் -இதை உன்னால் கேட்க முடிகிறதாம்மா..
கலைஞர் மகளே உனக்கு வழங்கிய தொலைகாட்சியில் கலைஞர் டிவி தெரியுதாம்மா -----

நான் உங்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான் -கனியை வெளியே விடவிட்டாலும் பரவாயில்லை -கழிவரைக்காவது ஒரு கதவு போட்டு தாருங்கள் ..
உங்கள் கருணாநிதி --

தமிழ் சினிமாவின் புதிய இளைஞர்கள்!

'கோவிந்தா... கோவிந்தா’, 'முழுமதி முழுமதி’, 'உன்னைக் கண்டேனே’, 'இதுவரை இதுவரை’, 'மருதாணிப் பூவைப் போல’, 'கன்னித் தீவுப் பொண்ணா..’, 'ஒரு முறைஇரு முறை பல முறை’, 'இதுவரை என் நெஞ்சில்’.... ராஜா, ரஹ்மான்களுக்கு இடையிலும் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இளைய தலைமுறை இசை யமைப்பாளர்களைச் சந்திக்கவைத்தோம். இது கலகலப்பான அரட்டை ஆர்கெஸ்ட்ரா!

அறிமுகப் படலத்தைத் தொடக்கிவைத்தார் 'எங்கேயும் எப்போதும்’ சத்யா. ''ஜிங்கிள்ஸ் பண்ணினேன். வித்யாசாகர் சார்கிட்ட கீ-போர்டு புரொகிராமரா இருந்தேன். 'ஆடுகிறான் கண்ணன்’ சீரியலில் முதல் வாய்ப்பு. அப்புறம் 'ஏன் இப்படி மயக்கினாய்’ படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனா, 'எங்கேயும் எப்போதும்’ அறிமுக அடையாளம் ஆகிவிட்டது. எனக்கு ஜி.ஆர் - டு - ஏ.ஆர். பிடிக்கும்... புரியலையா? ஜி.ராமநாதன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை!'' என்றவரைத் தொடர்கிறார் 'முரண்’ சாஜன் மாதவ்.
''என் அப்பா ரவீந்திரன், மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளர். தமிழிலும் 'ரசிகன் ஒரு ரசிகை’, 'லட்சுமி வந்தாச்சு’னு படங்கள் பண்ணி இருக்கார். கர்னாட்டிக் மியூஸிக், பியானோ கத்துக்கிட்டு அப்பா வின் சிபாரிசு எதுவும் இல்லாமலேயே ஜிங்கிள்ஸ் பண்ணினேன். அப்படியே சினிமாவுக்கும் வந்தாச்சு. 'கதிர்வேல்’தான் முதல் படம். ஆனால், 'முரண்’ முந்திக்கிச்சு!'' என்றார்.

''ஜிங்கிள்ஸ், ராக் அண்ட் ரோல் பேண்ட்னு பிஸியா இருந்தேன். எய்ட்ஸ் விழிப்பு உணர்வு தொடர்பா மிஷ்கின், சசிகுமார், கிருத்திகா உதயநிதி மூணு பேரும் இயக்கிய குறும்படங்களுக்கு இசையமைச்சேன். அந்த அறிமுகம் மூலமா 'யுத்தம் செய்’ வாய்ப்பு கொடுத்தார் மிஷ்கின். கிருஷ்ணகுமாரோட சுருக்கம்தான் கே!'' என்று 'சுருக்’ பெயர்க் காரணம் சொன்னார் கே.

தொடர்ந்தார் அருள்தேவ். ''வித்யாசாகர் சார்கிட்ட கீ-போர்டு புரொகிராமரா 10 வருஷம் இருந்தேன். தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் 500 படங்களுக்கு மேல் அவர்கூட வேலை பார்த்து இருக்கேன். யுவராஜ் சார், 'போட்டா போட்டி’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போ எஸ்.பி.ராஜ்குமாரோட 'பார்க்கணும்போல இருக்கு’, 'பாரி’, 'நகர்ப்புறம்’ படங்கள் பண்றேன்'' என்றார்.

''நிறைய கிறிஸ்துவப் பாடல்களுக்கு இசை அமைச்சிருக்கேன். அந்த அனுபவம்தான் சினிமா வரை இழுத்துட்டு வந்திருச்சு'' - 'கண்டேன்’ விஜய் எபிநேசரின் ஒரே ஒரு வரி அறிமுகம் இது.

இந்த ஜமாவில் கொஞ்சம் சீனியர் எஸ்.எஸ்.குமரன். 'பூ’, 'களவாணி’ படங்களின் இசையமைப்பாளர் மற்றும் 'தேநீர் விடுதி’ படத்தின் இயக்குநர் ப்ளஸ் இசையமைப் பாளர்! ''செந்தில்குமரன்... சுருக்கமா எஸ்.எஸ்.குமரன். அடையார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சினிமாட்டோகிராஃபி படிச்சேன். துறைமுகத்துல ஆபீஸர் ரேங்க்ல வேலைல இருந்தாலும், இசைதான் என்னோட முதல் சாய்ஸ். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல யூனியன் சேர்மன் ஆகிட்டா, பிரபலங்கள்கூட போட்டோ எடுக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படி இளையராஜா சார்கூட போட்டோ எடுத்துக்கணும்னே சேர்மன் ஆனேன். 'என்னடி முனியம்மா ஒங்கண்ணுல மைய்யி’ பாட்டை 'செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா’ மெட்டில் பாடி பசங்களை கேன்வாஸ் பண்ணி சேர்மன் ஆனேன். அது ஒரு கனாக் காலம். இப்போ 'கேரள நாட்டிளம் பெண்களுடனே’, 'ரதம்’ படங்களுக்கு மியூஸிக் பண்ணிட்டு இருக்கேன்'' என்றார்.


மிக மென்மையான குரலில் பேசத் தொடங்கினார் தாஜ் நூர். ''ரஹ்மான் சார் கிட்ட 14 வருஷம் வேலை பார்த்தேன். 'தயவுசெஞ்சு தனியாப் பண்ணு. இப்படியே இருந்தா கம்போஸிங் மறந்துடும்’னு சொல்லி பிடிச்சுத் தள்ளிவிட்டார். அப்படித்தான் 'வம்சம்’ பண்ணினேன். இப்போ 'எத்தன்’, 'மல்லுக்கட்டு’, 'ஆயிரம் முத்தங் களுடன் தேன்மொழி’, 'ஓம்’னு நிறையப் படங்கள்'' என்று நிறுத்திக்கொண்டார். 'அவ்வளவுதானா?’ என்பதுபோல சதீஷ் சக்ரவர்த்தி பார்க்க, ''கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கம்ப்யூட்டர் மூலமா இசையமைக்கும் டிரெண்ட் தொடங்கியபோது, ஏறத்தாழ எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலை பார்த்திருக்கேன்!'' என்றார்.

இப்போது திருப்தியான பார்வையோடு தொடர்ந்தார் சதீஷ் சக்ரவர்த்தி. ''என் அப்பா தாயன்பன் இசையமைப்பாளர். ரெண்டு வருஷம் ரஹ்மான் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்துட்டு, 'கனிமொழி’ பண்ணினேன். ஒரு முறை ராஜா சாரைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அவர் வெஸ்டர்ன் கிளாஸிக்கல் மியூஸிக்கில் எக்ஸர்சைஸ் எழுதிப் பார்த்துட்டு இருந்தார். இவ்வளவு சாதிச்ச பிறகும் இன்னும் கத்துட்டு இருக்காரேனு எனக்குப் பயங்கர ஆச்சர்யம். ஒவ்வொரு நாளும் ஏதாவது கத்துக்கிட்டே இருக்கணும்னு நான் கத்துக்கிட்ட நாள் அது!'' என்றார் சதீஷ் சக்ரவர்த்தி.

பிடித்த இசையமைப்பாளர் குறித்துப் பேச்சுத் திரும்பியபோது அனைவரின் ஒருமித்த சாய்ஸ்... இளையராஜா!

''ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு பாட்டை ஹிட் அடிச்சுடலாம். ஆனா, ரீ-ரிக்கார்டிங்ல... ராஜா ராஜாதான்!'' என்கிறார்கள் கோரஸாக.

''யுவன்ஷங்கரோட பெஸ்ட் கம்போசிஷன் மெலடியில்தான் வரும். 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்’ என்ன ஒரு கிளாஸிக் பாட்டு! தி பெஸ்ட் மெலடி மாஸ்டர் அவர். ஆனா, டிரெண்ட்படி அவர்கிட்ட ஃபாஸ்ட் பீட் பாடல்கள்தான் நிறையக் கேட்டு வாங்குறாங்க. ராஜா சாரின் மெலடி திறமை அப்படியே அவர்கிட்ட இருக்கு'' என்றார் சதீஷ்.

சில சமயங்களில் நகல் எடுத்ததுபோல பாடல்களில் வருவது குறித்துப் பேசியபோது, ''டாக்டர்கிட்ட போய் நோய் என்னன்னு மட்டும்தான் சொல்லணும். 'பச்சை கலர்ல ரெண்டு மாத்திரை கொடுங்க’னு கேட்டா அது அபத்தம் இல்லையா? டைரக்டர் சிச்சுவேஷனை மட்டும்தான் சொல்லணும். அதை விட்டுட்டு, அந்தப் பாட்டு மாதிரி வேணும்னு கேட்கிறது நியாயமா?'' என்று கேள்வி எழுப்பினார் எஸ்.எஸ்.குமரன்.

சேட்டிலைட் சேனல்களின் பிரமாண்ட இசைப் போட்டிகள்பற்றி விவாதித்தார்கள். ''அந்தப் போட்டிகள் நிச்சயம் வரவேற்புக்கு உரியவைதான். ஆனா, அந்த ஷோக்களை முதல் படிக்கட்டா நினைக்கணுமே தவிர, வளர்ற குழந்தைங்க அதிலேயே திறமையின் உச்சத்தை அடைஞ்சுட்டோம்னு நினைச்சு தேங்கிடக் கூடாது'' என்றார் அருள்தேவ்.

''அந்தப் போட்டிகளில் ஜெயிப்பவர்களை உடனே சினிமாவில் பாடவைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. சினிமாவில் பின்னணி பாட டெக்னிக்கலா நிறையக் கத்துக்கணும். அப்படிக் கத்துக்கிட்டு வர்றவங்க மட்டும்தான் ஜெயிக்கிறாங்க'' என்ற சாஜன் மாதவை ஆமோதித்துத் தொடர்கிறார் சதீஷ்.

''ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளர், எஸ்.பி.பி-கிட்ட 'எப்படி மேடையில சுதி கலையாமப் பாடுறீங்க?’னு கேட்டார். அதிர்ச்சி அடைந்த எஸ்.பி.பி. 'அதைக்கூடக் கத்துக்கலைன்னா, அப்புறம் நான் எப்படி ஒரு பாடகர்னு சொல்லிக்க முடியும்’னு கேட்டார். இப்போ பின்னணி பாடும் கார்த்திக், ஹரிசரண், ரஞ்சித் போன்றவர்கள் இந்த டி.வி. நிகழ்ச்சிகள் மூலமா வந்தாலும் டெக்னிக்கல் அறிவை அப்டேட் பண்ணிக்கிட்டதாலதான் வெற்றியைத் தக்கவெச்சுக்க முடிந்தது'' என்றார் சதீஷ்.

''இன்னொரு விஷயம்... அப்படியான போட்டிகளுக்குப் பாடகர்களை எப்படி நீதிபதிகளா நியமிக்கலாம்? அவங்கள்ல சிலரே ரெக்கார்டிங்ல அவ்வளவு தப்பு பண்ணுவாங்க. அவங்க போட்டியாளர்களின் சின்னச் சின்னத் தப்புகளுக்குக்கூட 'அது சரியில்லை... இது சரியில்லை’னு பெரிசா ரியாக்ட் பண்றப்போ சிரிப்பாவும் வேதனையாவும் இருக்கு. நான்கூட வாய்ப்பு இல்லைன்னா ஜட்ஜா போயிடலாம்னு பார்க்குறேன்'' என்று அதிரடி ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

இசை தவிர, இன்ன பிற ஆர்வங்கள் குறித்துப் பேச்சுத் திரும்பியது. ஓவியம், பைக் சாகசம், நீச்சல் ஆகிய விருப்பங்களுக்கு மத்தியில் விஜய் எபிநேசரின் ஆர்வம் அனைவரையும் நெகிழவைத்தது. 

''பூந்தமல்லியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் நடத்திட்டு இருந்தேன். சென்னையின் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 600 குழந்தைகளுக்கு உதவிட்டு வர்றோம். 10 வருஷம் அந்த இல்லத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ இசை பக்கம் நான் கவனம் செலுத்த, நண்பர்களும் அன்பர்களும் அதைப் பார்த்துக்கிறாங்க. ஆனா, அடிக்கடி ஓடிப் போய் பார்த்துக்குவேன்'' என்று விஜய் நிறுத்த, உடனே வெடித்தெழுந்தது ஆரவாரக் கைத்தட்டல்!