Wednesday, December 7, 2011

கருணாநிதி குடும்பத்தால் பழிவாங்கப்படும் நேர்மையான அதிகாரி

தமிழகத்தின் நேர்மையான சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுள் உமாசங்கரும் ஒருவர் உமாசங்கரின் நேர்மையை தமிழகத்தில் எல்லா பத்திரிகைகளும் பல சமயங்களில் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆட்சியாளர்களின் அடிவருடியாக இல்லாமல் மக்களுக்காக அரசுப் பதவியை முழுமையாக பயன்படுத்த நினைத்தவர்களின் உமாசங்கரும் ஒருவர். கடந்த கால ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும் அஞ்சாமல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து மேலிடத்தின் எதிர்ப்பை சமாதித்தவர்.

இப்போது கருணாநிதி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் தினகரன் நாழிதள் வெளியிட்ட கருத்துக்கணிப்பால் கருணாநிதி குடும்பத்தினருக்குள் பூசல் வெடித்தது. கலாநிதிமாறன் குடும்பத்தினருக்கு எதிராக மதுரையில் போர்க்கொடி தூக்கிய மு.க.அழகிரி தினகரன் அலுவலத்தை தீயிட்டுக் கொளுத்தி மூன்று ஊழியர்களையும் கொலை செய்தார். ஆனால் அது சாதாரண கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.
கொலையாளிகள் அடுத்த சில மாதங்களிலேயே விடுதலையாகிவிட்டார்கள். பின்னர் பூசல்கள் சரி செய்யப்பட்டு மறுபடியும் கருணாநிதி குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டது. பின்னர் கொல்லபப்ட்ட மூன்று ஊழியர்கள் குடும்பம் உயிரை இழந்து வாட விடுதலை செய்யப்பட்ட கொலையாளிகளுக்கு மதுரை மாவட்ட விவாசயத்துறையில் வாரியப் பதவியும் கட்சிப்பதவியும் வழங்கப்பட்டு இப்போது அந்த அரசியல் ரௌடிகள் அரசியல் வாதிகளாக மக்கள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இது கருணாநிதி குடும்ப வாரிசு அரசியல், சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு சின்ன எடுத்துக் காட்டு.
இந்நிலையில் கருணாநிதி குடும்பத்திலிருந்து மாறன் சகோதர்கள் பிரிந்ததும் சொத்து பங்கிடப்பட்டு எல்லோருக்கும் சேர வேண்டிய பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டதோடு திமுகவுக்குச் சொந்தமான அறிவாலயத்திலிருந்தும் மாறன் சகோதர்களுக்குச் சொந்தமான சன் டிவி வெளியேறியது. இதுவரை தனக்கு ஆதர்வாக இருந்த சன் டிவி கை மீறிச் செல்கிறதே என்று கவலையடைந்த கருணாநிதி சன் தொலைக்காட்சியை முடக்க அரசு கேபிள் நிறுவனம் தொடங்கபப்ட போவதாக அதிகார பூர்வ ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு பொறுப்பதிகாரியாக உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். குடும்பப் பகையானாலும் அரசு கேபிள் கார்ப்பரேஷனை எல்லா தரப்பினரும் ஆதரித்தனர். அதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட உமாசங்கர் இயல்பிலேயே நேர்மையான அதிகாரி என்பதால் அரசு கேபிள் நிறுவனத்தை முடக்க நினைத்த சன் குழுமத்திற்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் ( மாறன் சகோதர்களுக்குச் சொந்தமானது) நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தார். இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாசங்கர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விபரம்.

-தமிழ்நாடு-

பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1991-ம் ஆண்டு பதவியேற்றேன். பதவி ஏற்றது முதல் எந்தவித புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2008, அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டேன். சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் டி.வி. நிறுவனம் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முடக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது.இந்த முயற்சிகளில் இருந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டேன். சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்குவதுடன், அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன். இதையடுத்து, சிறுசேமிப்புகள் துறை ஆணையராக நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். இப்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயலிழந்து காணப்படுகிறது.சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்க வேண்டும் என்ற பரிந்துரைத்த காரணத்தால், என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

சட்ட விரோதமான இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.இதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப்போது எனது சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப்பித்து வருகிறேன். என் மீது விசாரணை நடத்துவதற்கு சட்டப்படி அனுமதியும் பெறப்படவில்லை.நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலும் செயல்பட்டதால் என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஊழல்வாதிகளையும், அதிகாரம் மிக்கவர்களையும் காப்பாற்றும் அரசு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் என்னை பழிவாங்குகிறது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக போதுமான ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் என் மீதும், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மீது போலீஸôரை ஏவி விட முடியாது. ” என்று தனது மனுவில் கூறியுள்ளார் உமாசங்கர்.

கருணாநிதி குடும்ப நலனுக்காக பழி வாங்கப்படுகிறார் உமாசங்கர் .
அரசு கேபிள் கார்ப்பரேஷன் என்பது ஒரு அரசு நிறுவனம் அந்த நிறுவனத்திற்கு தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்ற உமாசங்கர் ஒரு அரசு ஊழியர். அரசு நிறுவனத்தை முடக்க நினைக்கும் தனியார் முதலாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்த நினைத்த உமாசங்கர் மக்களுக்கு உண்மையாக இருந்த நேர்மையான அதிகாரி.

இந்த அதிகாரிதான் இன்று கருணாநிதி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். கருணாநிதி மாறன் குடும்பத்தினருக்கிடையிலான வாரிசு அதிகாரப் போட்டியால் உருவான பிளவு ஒரு கட்டத்தில் சரி செய்யப்பட்டது. மீண்டும் திமுகவிலும் குடும்பத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாறன் சகோதர்களுக்கு மீண்டும் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியும் கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட்டது.

மீண்டும் தன் குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டதாலும் தானும் கலைஞர் டிவி என்னும் ஒரு தனியார் தொலைக்காட்சிக் குழுமத்தை துவங்கி விட்டதாலும் அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு அவசியமில்லாமல் போக கருணாநிதி துவங்கிய அரசு கேபிள் கார்ப்பரேஷனை அவரே குப்பையில் தூக்கிப் போட்டார்.ஆனால் அரசு கேபிள் கார்ப்பரேஷனின் அதிகாரியாக செயல்பட்டு நேர்மையாக நடவடிக்கைகள் எடுத்த உமசாங்கர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருகிறது மாறனின் குடும்பம்.

கருணாநிதியும் இதைக் கண்டு கொள்ளாத நிலையில் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கருணாநிதியும் அவரது குடும்ப ஊடகங்களும் தன்னை பழிவாங்கிடும் என்னும் அச்சத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார் உமாசங்கர். கருணாநிதியின் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் பலியான இந்த அதிகாரிக்கு நீதி கிடைக்குமா?


உதவியாளர் சுருட்டிய கோடிகள்: ‘‘ராஜாத்தி வீட்டில் கால் வைக்க மாட்டேன்!’’ உள்ளம் குமுறிய கலைஞர்


‘‘தி.மு.கழகம் ஏழைகளுடைய இயக்கம். இந்த மேடையில் எனக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் பொன்னாலான வரவேற்பு பத்திரங்களை தந்தார் அமைச்சர் பொன்முடி. நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அது வெறும் தங்கமாக இருந்தால், வாங்கிய வேகத்திலேயே வீசியிருப்பேன். அதில், பெரியார் உருவமும் அண்ணா உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன. 

தங்கம் என்று எறிந்தால், தங்கத்தைவிட நாம் அதிகமாக நேசித்த சிங்கங்கள் பெரியாரையும், அண்ணாவையும் தூக்கி எறிந்ததாக ஆகிவிடும்’’& இது கலைஞரின் பேச்சு. எங்கே? மார்ச் 7-&ம் தேதி விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில்! அதே மேடையில், ‘‘நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படித்தான் மக்களும் நம்மைப் பார்த்து நடந்து கொள்வார்கள். நாம் ஏழ்மையிலிருந்து விடுபடவேண்டும் என்று எண்ணுகிறோம் என்றால், அதே நேரத்தில் அந்த மக்களையும் ஏழ்மையிலிருந்து விடுவிப்பவர்களாக இருக்கவேண்டும். அந்த சபதத்தை மேற்கொள்ள வேண்டும்.
இதைப் பற்றி அண்ணா ஒரு திரைப்படத்தில் வசனம் எழுதியிருந்தார். ‘பணம், பணம் என்று அலைகிறாயே, உன்னுடைய வீட்டிலே என்ன அரிசி? வெள்ளியால் அரிசியா? மரகதத்தால் குழம்பா? ஏழைக்குக் கிடைக்கிற அந்த அரிசிதான் பணக்காரர்களுக்கும். தங்கத்தை உட்கொண்டால் ஜீரணமாகாது. வைரத்தை சாப்பிட்டால், மறுநாள் ஆளே இருக்கமாட்டான். தங்கம், வைரம் எல்லாம் கண்ணுக்கு, காட்சிக்கு அதிசயம் தருவது. வாழ்க்கைக்கு உதவாது. உண்மையான வாழ்க்கை, மக்களை வாழ வைக்கின்ற மனத்திண்மை-யான வாழ்க்கை. பணத்தை, பொருளை, வைரத்தை, நகை நட்டுகளை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்பார் அண்ணா. அண்ணாவைப்போல, ஒரு வேட்டி, ஒரு துண்டோடு வாழ்ந்தாரே. சட்டையைக் கூட மாட்டத் தெரியாமல் பொத்தானைக்கூட மாத்திப் போட்டுக் கொள்வாரே அப்படிப்பட்ட எளிமைதான் நமக்குத் தேவை’’ என்று விளாசியிருக்கிறார் கலைஞர். கலைஞரின் பேச்சு, பொன்முடியை ரொம்பவே காயப்படுத்தி இருக்குமே என்று கட்சிக்காரர்கள் வருத்தப்பட்டார்கள். அப்படி வருத்தப்பட்டாரா பொன்முடி என்று நாமும் அப்பாவியாக விசாரித்தோம். 

கலைஞரின் பேச்சு சில நேரங்களில் பூடகமாக இருக்கும். சில விஷயங்களை பொருத்திப் பார்த்தால்தான் புரியும். கடந்த பிப்.14&ம் தேதி சங்கத் தமிழ் பேரவை நடத்திய விழாவில்கூட, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கலைஞர் சிலையை, கலைஞருக்கே பரிசளித்தார் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன். அச்சிலை, இன்றும் கோபாலபுரம் வீட்டில் லிஃப்ட் அருகே அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியானால், ஜெகத்துக்கு ஒரு நியாயம், பொன்முடிக்கு ஒரு நியாயம் என்று இருக்க முடியாது. ஆக, விழுப்புரத்தில் அவர் பேசியது, பொன்முடிக்காக அல்ல. 

தனது துணைவியார் ராஜாத்தியம்மாளை கண்டிக்கும் விதத்திலேயே கலைஞர் அப்படிப் பேசியிருக்கிறார் என்று அறிவாலய வட்டாரத்தில் சொல்லியபோதுதான், அந்த விவரங்கள், விபரீதங்கள் தெரிய வந்தன. ராஜாத்தியம்மாளுடன் லேசான மனவருத்தம் என்று கடந்த இதழிலேயே குறிப்பிட்டிருந்தோம். அதாவது பிப்.28-ம் தேதியிலிருந்து, ராஜாத்தியம்மாள் வசிக்கும் சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு கலைஞர் செல்லவில்லை. கோபாலபுரத்திலேயே இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருந்தது. அதன் பின்னணி அன்றைய நிலவரப்படி பெரிய அளவில் யாருக்குமே தெரியவில்லை.

ஆனால், விழுப்புரம் பேச்சு, குடும்பத்தில் விவகாரமாகிப் போச்சு என்று கட்சிக்காரர்கள் முணுமுணுத்த போதுதான், அத்தனை விவரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுந்தன.

ராஜாத்தியம்மாள் பெயரைச் சொல்லி அவரது வீட்டில் இருக்கும் டெலிபோன் ஆபரேட்டர் சரவணன், ஆடிட்டர் ரத்தினம் இவர்கள் பல கட்டப்பஞ்சாயத்து, நில விவகாரம், பணி மாறுதல்கள், கட்டடங்களை வாங்கி கைமாற்றுவதில் ஈடுபடுகிறார்கள் என்று அரசல் புரசலாக கலைஞரின் காதுக்கு வந்துவிட்டது. இதுதான் ராஜாத்தியம்மாளுடன் கலைஞருக்கு வந்த முதல் மோதல். சமீபத்தில் கோவை செல்வதாக கலைஞரிடம் சொல்லிவிட்டு சென்ற ராஜாத்தி, அங்கு செல்லாமல் திருச்சிக்கு சென்றாராம். 

அப்போது அவருடன் சென்ற ஆடிட்டர் சீனிவாசன் ரத்தினம் மூலமாக நடந்தேறிய சில சொத்து பரிமாற்றங்களைக் கேள்விப்பட்டு கோபம் காட்டி இருக்கிறார் கலைஞர். இதையடுத்துதான், ‘அவனுங்க, இங்க இருக்கற வரைக்கும் நான் வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பியவர்தான் கலைஞர் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தினர். 

அந்த இரண்டு பேருக்காகவா ராஜாத்தியம்மாளிடம் சண்டை போட்டார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்தக் கேள்வியை, நமக்குத் தெரிந்த தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரிடம் முன் வைத்தோம்.

‘‘எதைச் சொல்வது? எதை விடுவது? கலைஞர், தனது குடும்பத்தில் நடக்கும் பதவிப் போட்டியை ரசிக்கவில்லை. இந்த நேரத்தில் சி.ஐ.டி. காலனியின் பெயரைச் சொல்லி பல கோடிகள் மதிப்பிலான நிலங்களை வாங்கிப் போட்ட விவகாரம் சுற்றிச் சுற்றி வந்தது.

குறிப்பாக, சி.ஐ.டி. காலனி வீட்டில் வேலை செய்யும் சரவணன், ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமானதாகச் சொல்லப்படும் ‘வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ்’ என்ற நிறுவனத்தில் பொறுப்பில் இருப்பதாக விசிட்டிங் கார்டு அடித்து வைத்திருக்கிறார். அந்த அடையாளத்துடன் பெரிய அதிகாரிகளை அணுகி சாதித்த காரியங்கள், அவரது பெயரில் இருக்கும் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பற்றிய அத்தனை விவரங்களும் கலைஞரிடம் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கொடுத்தவர் மிக முக்கியமான அதிகாரி. இந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரித்து ஆதாரத்துடன் அறிக்கை தருமாறு, அவருக்கு உத்தரவிட்டிருந்ததே கலைஞர்தான்.

அந்த அறிக்கையில் கிடைத்த தகவல்களை கண்டு அதிர்ச்சியடைந்தார் கலைஞர். ‘ராஜாத்தியம்மாளின் பினாமி’ என்று கூறிக்கொண்டு சரவணன் நடத்திய விவகாரங்கள் ரொம்பவே அவருக்கு ஆத்திரமூட்டியிருக்கிறது. குறிப்பாக, சரவணன் தொடர்பாக பெரிய இடத்து தொழிலதிபர் ஒருவர் நேரடியாக கலைஞரிடமும், துணை முதல்வரிடமும் புகார் அளித்துவிட்டார். அதுதான் சரவணன் விஷயத்திற்கு பிள்ளையார் சுழி.

கிருஷ்ணா ரெட்டி என்பவர், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் 33 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்க ஒப்பந்தம் போட்டார். அந்த நேரத்தில், கிண்டியில் தனியார் நிறுவனத்தை நடத்திய முஸ்லிம் பிரமுகர், குரோம்பேட்டை நிலத்தை இரவோடு இரவாக ஆக்கிமிரத்துக் கொண்டார். இது தொடர்பாக, கிருஷ்ணா ரெட்டி புறநகர் போலீஸில் புகார் கொடுக்க, அங்கே சரவணனும், ஆடிட்டர் சீனிவாசன் ரத்தினமும் வந்தனர்.

‘இது ராஜாத்தியம்மாளின் இடம். இங்கே யாரும் தலையிட வேண்டாம்’ என்று போலீஸுக்கு சொல்ல, சத்தம் போடாமல் போலீஸார் ஒதுங்கிக் கொண்டனர். இந்த நேரத்தில், அந்த நிலத்தை வங்கி ஏலத்திலிருந்து 15 லட்ச ரூபாய்க்கு எடுத்துவிட்டதாக சரவணன், கிருஷ்ணா ரெட்டியிடம் தெரிவிக்க... பிரச்னை விஸ்வரூபமாகிவிட்டது. இந்த இடத்தைத் திரும்பத் தரவேண்டும் என்றால், பத்துக் கோடி ரூபாய் வேண்டும் என்று சரவணன் பேரம் பேசி, முன் பணமாக 50 லட்ச ரூபாய் வாங்கிவிட்டதாக கிருஷ்ணா ரெட்டி புகார் அனுப்பிவிட்டார்.

அடுத்து, வேலூரில் இருக்கும் தனியார் பல்கலைக்கழகத்திற்கு அரசு நிலம் ஒப்படைத்த விவகாரம் முடிந்ததும், அப்பல்கலைக்கழகத்தினருக்கு போன் செய்து ‘அம்மா 15 கோடி ரூபாய் கேட்கிறார்கள்’ என்று சரவணன் சொல்ல, அதுவும் கலைஞர் காதுக்குப் போய்விட்டது.

இதன் பின்புதான் கலைஞர் கடும் கோபமானார். இது தொடர்பாக பிப்.28-ம் தேதி ராஜாத்தியம்மாளிடம் கொஞ்சம் கடுமையாகவே விசாரித்திருக்கிறார். ‘உன் பெயரைச் சொல்லி சரவணன், பினாமி போல நடந்துகொள்கிறான். அவனை வீட்டை விட்டு துரத்து’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டார் கலைஞர். இது கோபாலபுரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவே தெரியாது. 

மார்ச் 2&ம் தேதியன்று பத்திரிகையாளர் சோலை எழுதிய ‘ஸ்டாலின்’ நூல் வெளியீட்டு விழா முடிந்த இரவுதான், கோபாலபுரத்தில் உள்ளவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. அன்று இரவு திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்படத் தயாராக இருந்தார் கலைஞர். அப்போது, கோபாலபுரத்துக்குச் சென்ற கனிமொழி, அழுதபடியே சி.ஐ.டி. காலனிக்கு வந்துவிட்டுச் செல்லுமாறு கூப்பிட்டபோதுதான், ஏதோ நடந்திருக்கிறது என்பது கட்சி சீனியர்களுக்குத் தெரிந்தது. அன்று இரவு சில சீனியர் சகாக்களிடம் கலைஞர் சொன்ன வார்த்தை, ‘‘அந்த வீட்டில் கால் வைக்க மாட்டேன்’ என்பதுதான்’’ என்றார் அந்தக் கட்சி நிர்வாகி.

இது போதாதா நமக்கு? அதற்கு மேல் என்ன நடந்தது என்று இங்கேயும் அங்கேயும் பேசிப் பேசி வாங்கிய தகவல்கள் அனைத்தும் கனன்று கொண்டிருக்கும் நெருப்பாகவே இருக்கிறது. அதை நீரை ஊற்றி இப்போதைக்கு அணைக்கவே முடியாது போலிருக்கிறது.

தனது மனைவியின் பெயரைச் சொல்லி, பல அதிகாரிகளையும் தொழிலதிபர்களையும் மிரட்டி காரியங்கள் சாதித்திருப்பதையும், அந்த நபருக்குத் தன் உறவுகளே ஊக்கம் கொடுத்ததையும் கண்டித்து தான் விழுப்புரத்தில் விளாசித் தள்ளியிருப்பதும் தெரிந்தது.

சி.ஐ.டி.காலனியின் பினாமி என்று சொல்லிக்கொண்ட சரவணன், முதலில் அந்த வீட்டின் டெலிபோன் ஆபரேட்டராகப் பணியில் சேர்ந்தவர். பின்பு, ஆடிட்டர் சீனிவாச ரத்தினத்துடன் சேர்ந்து ராஜாத்தியம்மாளுக்குத் தெரியாமல் பல வேலைகளைச் செய்துகொண்டு பணம், வீடு, நிலம் என்று வாரி குவித்துவிட்டதாக, உளவுத்துறை கண்டுபிடித்து விலாவாரியாக ஆதாரங்களுடன் கொடுத்த விஷயத்தைப் பார்த்து ராஜாத்தியம்மாளே கொந்தளித்துவிட்டாராம். தனது பெயரைச் சொல்லி மோசடி செய்ததாகச் சொல்லப்படும் சரவணனை, ராஜாத்தியம்மாள் அனுப்பிவிட்டார் என்று சி.ஐ.டி. காலனி வட்டாரம் சொல்கிறது.

சரவணன் மீது மட்டும் 130 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளதாம். எந்தச் சொத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை. அத்தனையும் ‘பவர்’ அதிகாரம் மட்டுமே சரவணன் பெயரில் எழுதித் தரப்பட்டிருக்கிறது. இதுதவிர, கலைஞர் கைது செய்யப்பட்ட போது, முரசொலி மாறனிடம் அடாவடியாக நடந்து கொண்ட போலீஸ் அதிகாரி, தற்போது கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கிறார். ஐ.ஜி.யாக இருந்த அவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு தரப்பட்டது. அதற்கு 50 லகரம் வாங்கப்பட்டிருக்கிறது. அவரது பதவி உயர்வை தடுக்காமல் இருக்கவும், அவருக்கு நல்ல பதவி வாங்கித் தருவதாகவும் சொல்லி, அப்பணம் கைமாறி இருக்கிறது.

உள்ளபடியே, அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், ஏற்கெனவே அவர் டம்மியாக இருக்கும் அதே இடத்தில் அவரை நியமித்திருந்தார்கள். இதில் கொதித்துப் போன அந்த அதிகாரி, தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகப் புலம்ப, இந்தச் செய்தியும் கலைஞரின் காதுக்கு வந்திருக்கிறது. இதில் ராஜாத்தியம்மாள் பெயரைச் சொல்லி, அவரது ஆட்களில் ஒருவர் பலன் அடைந்திருப்பதை உளவுத்துறையின் அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.

இப்படி, பல விவகாரங்களை அலசி ஆராய்ந்திருக்கும் அந்த அறிக்கையில் இருக்கும் சில விவகாரங்கள் கலைஞரை உச்சபட்ச கோபத்தில் தள்ளிவிட்டிருப்பதாக அறிவாலய வட்டாரம் சொல்கிறது. அவரிடம் நெருங்கவே எல்லோரும் அச்சப்படுகிறார்கள். தனது பாரத்தை இறக்கி வைக்க முடியாமல் தவித்து வருகிறார் கலைஞர் என்கிறது அறிவாலய வட்டாரம்.

கலைஞரை நெருங்கி இருந்தவர்கள் ஆற்காட்டாரும், துரைமுருகனும்தான். இம் மாதிரி இக்கட்டான நேரங்களில், அது குடும்பப் பிரச்னையாக இருந்தாலும் ஆற்காட்டார் துணிந்து கலைஞரிடம் பேசி, அவரது மனக்குறையை ஆற்றிவிடுவார். சில நேரங்களில் குடும்பத்-தினரிடையேயும் பேசி சரிசெய்வார். அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால், அந்தச் செயலை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர் துரைமுருகன்தான். அவரும் கலைஞரிடம் பழைய வேகத்தில் பேசும் நிலையில் இல்லை என்கிறார்கள்.

சரவணன் செய்த விஷயங்களால், ராஜாத்தியம்மாளின் மீது கோபப்பட்டு கலைஞர் சி.ஐ.டி. காலனிக்குச் சென்று இரண்டு வாரங்கள் நெருங்கப் போகிறது. இதுவரை கலைஞர் அப்படி இருந்ததே இல்லையாம். குறைந்தபட்சம் இரண்டு, மூன்று நாட்கள் சி.ஐ.டி. காலனிக்குப் போகாமல் இருந்திருக்கிறார் கலைஞர். ‘அவரைப் பார்க்க வருகிறேன்’ என்று ராஜாத்தியம்மாள் கிளம்பினால், அடுத்த சில மணி நேரத்தில், கலைஞரே அங்கு சென்றுவிடுவாராம்.

ஆனால், இம்முறை கலைஞரின் உறுதியும், விடாப்பிடியும் கடுமையாகவே இருக்கிறது. சி.ஐ.டி. காலனியிலிருந்து எந்த உதவி கேட்டு வந்தாலும், தனக்குத் தெரியாமல் செய்ய வேண்டாம் என்று தனது செயலாளர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் கலைஞர். அடுத்து, தனது பாதுகாவலர்களில் மிக முக்கியமானவரான பாண்டியனையும் அங்கே போக வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம்விட, சி.ஐ.டி. காலனிக்கு போலீஸ் பாதுகாப்பையும் குறைத்துவிடுமாறு கலைஞர் கூறியிருப்பதுதான் தி.மு.க.வின் முக்கியத் தலைகளை புருவம் உயரச் செய்திருக்கிறது.

இது தொடர்பாக சி.ஐ.டி. காலனி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. புதிய சட்டமன்ற வளாகம் கட்டி, திறப்பதில் கலைஞர் பிசியாக இருக்கிறார். மற்றபடி பத்திரிகைகளில் வரும் செய்திகள்போல எதுவுமே இல்லை. அப்படியே மனஸ்தாபம் இருந்தாலும். கலைஞர் எப்போதும் குடும்ப உறவுகளை கட்டிக்காப்பார்’’ என்று நம்பிக்கை வார்த்தைகள் வருகின்றன.

புதிய சட்டமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் ராஜாத்தியம்மாள் கலந்துகொள்வாரா? என்பதுதான் அடுத்த கேள்வி. அப்போது எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கத்தானே போகிறது!





காத்திருக்கும் கனிமொழி!
விமர்சனங்களை தடுக்கும் வகையில் தானே கவனமாகச் செயல்பட்டுவரும் நிலையில், இப்படி வில்லங்கத் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, பல கோடிகள் சுருட்ட சரவணனை அனுமதித்த கோபம் கலைஞருக்கு. தன்னை மீறி நடந்த, தனக்குத் தெரியாமல் நடந்த சில விஷயங்களுக்காக இவ்வளவு கடுமையும், வெறுப்பும் காட்டுவது எந்த வகையில் நியாயம்? என்பது ராஜாத்தியம்மாளின் மனநிலை.

இந்த இருவருக்கும் இடையில் இருந்து ரொம்பவே மனம் நொந்திருப்பவர் கனிமொழிதான். எத்தனை பிஸிக்கும் இடையிலும் கனிமொழியுடனும், பேரன் ஆதித்யாவுடனும் அளவளாவுவதை வழக்கமாகக் கொண்ட கலைஞர், இந்த ஊடல் காலத்தில் தன்னுடனும் தூரம் காட்டுவதுதான் கனிமொழியின் கவலைக்குக் காரணம்.

இன்னும் சில சந்திப்புகளில் பேசித் தீர்த்துவிடக்கூடிய இந்தப் பிரச்னையை, இன்னும் ஊதிப் பெரிதாக்கும் வகையில் கலைஞரின் குடும்பத்திற்குள்ளேயே சிலர் முயற்சிக்கிறார்கள். அதன் மூலம் நிரந்தரமாகத் தங்கள் குடும்பத்தைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று வரும் செய்திகளும் கனிமொழியின் வேதனையைக் கூட்டியிருக்கின்றன.

இத்தனை வேதனைக்கு இடையிலும், ‘‘இன்னும் ஓரிரு நாட்களில் அப்பா எங்கள் வீட்டுக்கு வருவார். இப்போது எட்டி நின்று வேடிக்கை பார்ப்பவர்களின் முகத்தை நானும் பார்க்கத்தானே போகிறேன்’’ என்று தைரியம் கலந்த தெளிவுடன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் கனிமொழி.

நல்லது நடக்க வேண்டும். அது விரைந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இரண்டு குடும்பங்களின் மீது மட்டுமின்றி, கலைஞர் மீதும் பற்று வைத்துள்ள தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர்.

சீரழித்தவர் சிக்கிக்கொண்டதிலுள்ள மர்மம்

05.05.2003. அன்று தமிழகத்தின் பிரபலத் தயாரிப்பாளரும், இயக்குநர் மணி ரத்னத்தின் சகோதரருமான ஜி.வி என்று அழைக்கப் படும் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்திருந்த ஜி.வியா இப்படித் தற்கொலை செய்து கொண்டார் என்பதைக் கேட்டு தமிழ்நாடே அதிர்ச்சி அடைந்தது. அன்று ஜிவி தற்கொலை செய்து கொண்ட போதுதான், தமிழ்நாட்டில் பரவலாக அன்று இருந்த கந்து வட்டி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஜி.வி குடும்பத்தைப் போல பல குடும்பங்களை சீரழித்துள்ள அன்பு என்ற அன்புச் செழியன் தற்போது மதுரை காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.








அதையொட்டி அப்போதைய ஜெயலலிதா அரசு கந்து வட்டித் தடைச் சட்டத்தை கொண்டு வந்து, கந்து வட்டி கேட்டு மிரட்டி வந்த பலரை உள்ளே தள்ளியது. இதனால் இந்த கந்து வட்டி விவகாரம் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தாலும், சினிமாவுக்கு பைனான்ஸ் செய்து வந்தவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்கள்.

இதில் முதன்மையானவர் அன்பு என்று அழைக்கப் படும் அன்புச் செழியன். இவர் 2001 காலகட்டத்தில் தன்னை சசிகலாவின் பினாமி என்று அழைத்துக் கொள்வார். 2001-2006 ஆட்சி காலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக பல்வேறு நபர்கள் கைது செய்யப் பட்டாலும், ஜி.வி.தற்கொலைக்கு காரணமான இந்த அன்புச் செழியன் கடைசி வரை கைது செய்யப் படவேயில்லை. அதற்கு காரணம் சசிகலாவின் ஆசி என்று பெருமையோடு சொல்லிக் கொண்ட அன்பு உண்மையைச் சொல்கிறாரா பொய் சொல்கிறாரா என்பது கடைசி வரையில் தெரியவில்லை.


அன்புச் செழியன்



இந்நிலையில் தற்போது அன்பு கைது செய்யப் பட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள துரிசங்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவர், யுவஸ்ரீ கிரியேஷன்ஸ், யுவஸ்ரீ பிக்சர்ஸ் ஆகிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் சுந்தரா டிராவல்ஸ், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் சார்பில், 2004ம் வருடம் மீசை மாதவன் என்ற படத்தைத் தயாரித்தார். அப்போது, தயாரிப்புச் செலவுக்காக ரூ.20 லட்சத்தை 2 தவணைகளில் மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்ஷியர் அன்புச் செழியனிடம் வாங்கினர். இதற்கு ஈடாக, ரூ. 1 கோடி மதிப்புள்ள 7 பத்திரங்களை அடமானம் கொடுத்தார். இந்தப் பத்திரங்கள் இவரது மனைவி மற்றும் அம்மாவின் பெயர்களில் உள்ளவை. மேலும், 5 வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளார். செக், லெட்டர் பேட் முதலியவற்றையும் கொடுத்துள்ளார்.



இந்தக் கடனுக்காக நூற்றுக்கு ஐந்து வட்டி வீதம் மாதந்தோறும் கட்டி வந்துள்ளார். இதுவரை ரூ.1 கோடி வரை கட்டியுள்ளாராம். இருப்பினும், அவர் ஆவணத்தைக் கேட்டபோது, அன்புச் செழியன் கொடுக்கவில்லை. மேலும், காசோலை பணமின்றித் திரும்பினால் உன் மீது வழக்கு போடுவேன் என்று அன்புச் செழியன் மிரட்டினாராம்.



இந்நிலையில், அவர் அடமானம் வைத்த வீட்டு மனையை, மிரட்டி கையெழுத்து பெற்று அன்புச் செழியனின் பினாமி ராமகிருஷ்ணன் என்பவர் பெயருக்கு எழுதி வாங்கியுள்ளார்.


தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் மதுரை புறநகர் குற்றப்பிரிவு போலீஸார் சினிமா பைனான்ஷியர் அன்புவை நள்ளிரவு கைது செய்து அதிகாலை 2 மணி அளவில் சிறையில் அடைத்தனர். இவர் மீது கந்துவட்டி, மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இந்த அன்புச் செழியனை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்த போது தான் மேலிடத்துக்கு நெருக்கம் என்று அடாவடியாக பேசியுள்ளார். இந்த அன்புச் செழியன் யார் என்பதை முழுமையா தெரிந்து கொள்ள, குமுதம் ரிப்போர்டரில் ஏற்கனவே வந்த, சொல்வதெல்லாம் உண்மை என்ற தொடரின் ஐந்தாவது பகுதியில் வந்தவற்றை படியுங்கள்.



தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவர் ஆளுங்கட்சிதான். சாதாரணமாக தாதாக்கள் எல்லாம் ஒரு கொலைச் சம்பவத்திலிருந்து பேரெடுப்பார்கள். புகழ்பெறத் தொடங்குவார்கள். இவர் தற்கொலைச் சம்பவத்தில் புகழ்பெற்ற தாதா. ‘‘நண்பர்கள்னா உயிரக் கொடுப்பேன். எதிரின்னா தலையை எடுப்பேன்’’ என்பதுதான் இவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம். திரைப்படத் துறையில் இவரிடம் ஃபைனான்ஸ் வாங்காதவர்களுமில்லை, பாதிக்கப்படாதவர்களும் இல்லை. இன்று பயந்து நடுங்கியபடி கைதுக்கு அஞ்சி மருத்துவமனையில் ஒளிந்துகொண்டிருக்கும் அவருடைய மனசாட்சியின் வாக்குமூலம் உங்களுக்காக... 

‘‘சொந்தத் தம்பிய சிறையில போட்டுட்டாங்க. நானும் உடம்பு சரியில்லன்னு கணக்குக் காட்டி இப்போ அப்போன்னு ஒரு மருத்துவமனையில அட்மிட்டாகிக் கிடக்கிறேன். அந்த மருத்துவமனையின் முக்கிய புள்ளிக்கு எங்க ஊர் மருதயில ஒரு தியேட்டர் இருக்கு. அந்த தியேட்டருக்கும் நான் ஃபைனான்ஸ் செய்திருக்கேன். அந்த நன் றிக்காக என்னை இந்த இக்கட்டான நிலையில மருத்துவமனைல வச்சு காப்பாத்திக்கிட்டிருக்கார் அவர்.

ஆனா எனக்கு இப்படி ஒரு நிலை வரும்னு நான் நினைக்கவேயில்ல. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்பு மருதயில சாதாரண தண்டல் தொழில் நடத்திக்கிட்டிருந்தேன். அப்புறம் வட்டி, கந்து வட்டின்னு வளர்ந்தேன். கொஞ்ச நாள்ல லோக்கல்ல என் பேரு ஃபேமஸாயிடுச்சு. அந்த நேரத்துல ஓடி ஒளிஞ்சிக்கிட்டிருந்த வளர்ப்பு மகன் ஒரு வருடன் தொடர்பு கிடைக்க அவரோட காசும் என்கிட்ட கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சுடுச்சு. பணத்த எடுத்துக்குனு சென்னைக்கு ரயிலேறினேன். அவ்வளவுதான், பெரிய தொழிலதிபராயிட்டேன். சென்னைக்கு சினிமா படங்களுக்கு ஃபைனான்ஸ் பண்ண ஆரம்பிச்சதும் பணம் கொட்டத் தொடங்கிடுச்சு. அப்போ கார்டனுக்கு நெருக்கமானவங்க ஒருத்தர் பேரச்சொல்லி அவங்க பினாமி நான்னு சொல்லிவச்சேன். யாரும் எதிர்த்துப் பேச பயந்தாங்க. 

நான் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே எங்க ஊர்ல இருக்கிற என் வீட்ல இன்கம்டேக்ஸ் ரெய்டு நடந்தது. உடனே ஸ்பாட்டுக்கு பறந்து போயி, வந்த அதிகாரிகளை அடிச்சு ஓடவிட்டேன். அதிலிருந்து என் பேரும் புகழும் கொஞ்சம் கொஞ்சமா பரவ ஆரம்பிச்சது. அடுத்து கமல், ரஜினி, விஜய்னு பெரிய பெரிய ஹீரோக்களை வச்சு படமெடுத்த தயாரிப்பாளர்ஜிக்கு ஒரு படத்துக்காக ஃபைனான்ஸ் பண்ணினேன். அவரால எங்கிட்ட வாங்கின பணத்த திருப்பிக் கொடுக்க முடியல. அவர் ரொம்பவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் காலையில அவர் வீட்டுக்கு நானும் என் அழகான தம்பியும் போய் இறங்கினோம். வீட்ல சோபாவுல உட்கார்ந்திருந்த அந்த ‘ஜி’ யை இழுத்துப் போட்டு அடிச்சோம். சட்ட, வேட்டியெல்லாத்தையும் உருவிட்டு வெறும் ஜட்டியோட நடு ஹால்ல குத்த வச்சு உட்கார வச்சேன். அவரு பொண்டாட்டி என் கால்ல விழுந்து அழுதாங்க. ஒரு வாரத்துல பணத்த கொடுக்கறதா சொன்னாங்க. நாங்க வந்துட்டோம். இரண்டுநாள் கழிச்சு தற்கொலை செய்துக்கப் போயிட்டாரு அந்த ‘ஜி’. அவங்க மனைவிதான் காப்பாத்தியிருக்காங்க. அதுக்கப்புறம் அவரால படம் தயாரிக்கவே முடியல. இந்த விஷயம் சினிமா துறைக்கு பரவியதும் சினிமாக்காரங்க என்னைப் பார்த்து பயப்படத் தொடங்கிட்டாங்க.

அடுத்ததுதான் அந்தத் தயாரிப்பாளர் மரணம். இந்தச் சம்பவத்துக்கு அப்புறம்தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் என் கட்டுப்பாட்டுல வந்துடுச்சுன்னு சொல்லலாம். தங்கமான ஒரு படத்த எடுத்த அந்தத் தயாரிப்பாளர், என்கிட்ட ஃபைனான்ஸ் வாங்கியிருந்தார். அந்தப் பட வினியோகம் சம்பந்தமா ஒரு சிக்கல் ஏற்பட்டுச்சு. அதை கேக்கச் சொல்லி நான் ஒரு கைத்தடிய அனுப்பினேன். அந்த கைத்தடி, தயாரிப்பாளரை மிரட்டியிருக்கு. போலீஸ்ல புகார் கொடுத்த தயாரிப்பாளர், கைத்தடிய கைது பண் ணவச்சிட்டாரு. இதை கேள்விப்பட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் நான் எகிறிக் குதிச்சேன். அந்த நேரம் பார்த்து அந்தத் தயாரிப்பாளர் மனைவி கொடைக்கானல்ல டூர் வந்திருக்காங்க. இத கேள்விப் பட்டு நேரா அவங்க தங்கியிருந்த இடத்துக்குப் போய் அவங்கள ரூம்ல வச்சு என் கஸ்டடிக்கு கொண்டு வந்துட்டேன். ‘ரெண்டு நாள்ல பணத்த கொடு, இல்லன்னா இங்க உன் மனைவியை ‘சுத்தமாக்கி’ உட்கார வச்சு மானத்த வாங்கிடுவேன்’னு போன்ல மிரட்டினேன். அவங்க மனைவியும் அவர்கிட்ட அழுது புலம்பினாங்க. ரெண்டு நாள்ல பணம் கொடுக்க முடியாத கொந்தளிப்பால் தூக்குல தொங்கிட்டாரு. அவருக்கு நான் கொடுத்த பணத்துக்கு வட்டி போட்டு, அவரோட சொத்துக்கள எல்லாம் எழுதி வாங்கிடலாம்னு கணக்குப் போட்டு வச்சிருந்தேன். மனுஷன் தொங்கிட்டாரு. அதுக்கப்புறம் நான் வைக்கறதுதான் சினிமா ஃபீல்டுக்கே சட்டம்னு ஆயிடுச்சு.

எந்த நடிகர், நடிகை படமாக இருந்தாலும் யார் தயாரிச்சாலும் என்கிட்டதான் ஃபைனான்ஸ் வாங்கணும்ங்கிற நிலைமை உருவாயிடுச்சு. 

சொந்த ஊர்ல கந்து வட்டி வசூல் செய்த கும்பல அப்படியே சென்னைக்கு ஓட்டினு வந்துட்டேன். அதனால் எப்பவும் என்னைச் சுத்தி கூட்டம் வச்சிகிட்டேன். ஊர்ல பரோட்டா கடை மணிகண்டனையும், அழகான உடன்பிறப்பையும் தங்க வச்சு சினிமா வாங்கறது, விக்கிறதுன்னு தொழில் பார்க்க வச்சேன். கொஞ்ச நாளுக்கப்புறம் உட ன்பிறப்ப மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லிட்டு பரோட்டா கடையை சென்னைக்கு அழைச்சுகிட்டு வந்துட்டேன்.

அந்த பரோட்டா கடை சென்னையில போட்ட ஆட்டம்தான் இன்னைக்கு இந்த அளவுக்கு எங்களுக்கு எதிரிகள உருவாக்கிடுச்சு. நான் ஃபைனான்ஸ் விஷயத்துல பயங்கர ஸ்டிரிக்ட்டா இருப்பேன். ஒரு தயாரிப்பாளர் படம் தயாரிக்கிறார்னு கேள்விப்பட்டா முதல்ல அவர்கிட்ட போய் ஒரு ஐம்பது லட்ச ரூபாயை நாலு வட்டிக்கு கொடு த்துருவேன். அதுக்கப்புறம், சேட்டிலைட் ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ்னு ஒண்ணு ஒண்ணா புடுங்கி கடைசியில அந்தத் தயாரிப்பாளர நடுத்தெருவுல நிக்க வச்சுடுவேன். ராஜா மாதிரி வசூல் செய்ய வேண்டிய சில படங்கள் வசூல் இல்லாமல் போவதற்கும் ஒரு இந்திய தயாரிப்பு நிறுவனத்தையே நடத்தி பரபரப்பா இருந்த ஒரு தயாரிப்பாளர் பல நாட்கள் தனியறையில் அடைக்கப்பட்டு ஆண்டியாகிப் போனதுக்கும் நான்தான் காரணம். 

அதேபோல பணம் வசூல் செய்யறதிலேயும் என்பாணி தனிதான். பணம் வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் கடைசியா அவங்களுக்கு ஒரு டைம் கொடுத்துடுவேன். அவங்க வாங்கின பணத்துக்கு வட்டிக்கு வட்டின்னு போட்டு ஒரு பெரிய தொகையை அவங்க கொடுக்க வேண்டியதா ஒரு கணக்கும் கொடுத்துருவேன். அவங்களால அந்தப் பணத்த கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் அவங்கள தூக்கினு வந்து என் பங்களாவுல இருக்கிற ரூம்ல சுத்தமாக்கி உட்கார வச்சுடுவேன். பொம்பளயா இருந் தாலும் சரி, ஆம்பளயா இருந்தாலும் சரி ஒரே ட்ரீட்மெண்ட்தான். அவங்கள அப்படி சுத்தமாக்கி உட்கார வைக்கற வரைக்கும் என் கைத்தடிங்க செய்து முடிப்பாங்க. கடைசியா நான் மட்டும் அந்த ரூம்ல போய் எதிர்ல சேர்ல உட்கார்ந்து அவங்க நாண்டுக்கினு சாவற மாதிரி அசிங்க அசிங்கமா அரைமணிநேரம் கத்துவேன். அவ்வள வுதான். அவங்க ஏற்கெனவே வாங்கி வச்சிருந்த சொத்தயெல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுவாங்க.


அதே நேரத்துல அது எவ்வளவு பெரிய நடிகையா இருந்தாலும், எவ்வளவு அழகியா இருந்தாலும் அந்த ரூம்ல அடைபட்டு இருக்கும் போது கூட நான் அவங்கள தொடவே மாட்டேன். அவங்கள மிரட்டி அசிங்கப்படுத்தி பணத்த வாங்கிடணும்னுதான் நான் அழுத்தமாயிருப்பேனே தவிர, இவங்கள தொட்டுட்டா வரவேண்டிய பணத்துக்கு கணக்குக் காட்டிடப் போறாங்கன்னு பயப்படுவேன். அதே நேரத்துல இதுபோன்ற ஃபேமஸான பெரிய கதைகளை படிக்கிறதுக்கு எனக்கு அவ்வளவு பிடிக்காது. அப்பப்போ சின்னச் சின்ன துணுக்குகள படிச்சுட்டுப் போயிடுவேன்.

ஆனா என்கூட இருந்த பரோட்டா கடையும், உடன்பிறப்பும் இந்த விஷயத்துல பயங்கர மோசம். என்னோட பனிஷ்மெண்டுக்கு முன்னாடியே அவங்க பனிஷ்மெண்ட கொடுத்திட்டிருப்பாங்க.

அதுக்கப்புறம் ஆட்சி மாற்றம் வந்ததும் நான் கார்டன் பேரை வாபஸ் வாங்கிகிட்டு மருதயிலேயே வாரிசை கையில போட்டுக்கிட்டேன். இளவட்டமான அவருக்கு ஜாலியா இருக்கிறது ரொம்பப் பிடிக்கும். அவரும் அட்டாக்கும் சாயந்தரமானா என் ஆபீஸுக்கு வந்து உட்கார்ந்துடுவாங்க. பரோட்டா கடை அவங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுக்க, அவங்களும் சந்தோஷமா கிளம்பிடுவாங்க. இந்த அஞ்சு வருஷத்துல ஃபைனான்ஸ் வேலையைக் கொஞ்சம் கொறச்சுகிட்டு மத்த விவகாரங்கள்ல தலைதூக்க ஆரம்பிச்சுட்டேன்.


எங்க ஊர் பக்கத்துல காரியம் நடத்துற பட்டியில சுமார் 180 ஏக்கர் வில்லங்க நிலத்த வில்லத்தனமா வாங்கிப் போட்டேன். அதுல ஒரு காலேஜை கட்டிட்டு கல்வித் தந்தையா உருவாயிடணும்கிறதுதான் எனது எதிர்காலத் திட்டம். அதுக்குள்ள ஆட்சி மாற்றமும் வந்துடுச்சு. கடந்த ஆட்சியில வாரிசை கைல வச்சுகிட்டும், மாணிக்க மந்திரிய மடக்கி வச்சுகிட்டும் நாங்க அடிச்ச எல்லா கூத்தையும் ஆதாரங்களோடு எடுத்து வச்சிருக்காங்க.


நான் ஏற்கெனவே கார்டன் பேரச் சொல்லி ஏமாத்திவிட்டதாலே இப்ப அவங்க பேரையும் பயன்படுத்த முடியல. இன்னைக்கோ, நாளைக்கோ என்னை தூக்கிடுவாங்கன்னு தெரியுது. அதுக்குள்ள உங்ககிட்ட மனம் திறந்து பேசறதுக்கு வழிசெய்தீங்க. ரொம்ப நன்றி!’’

இதுதான் அன்புச் செழியன். திரைப்படத்துறையில் விசாரித்த போது பல பேர் குடியை கெடுத்தவர் இவர் என்று சொல்கிறார்கள். இவரின் பின்புலமாகச் சொல்லப் படும் கதை, சின்ன எம்ஜிஆர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் சுதாகரன், ஒரு பெரும் தொகையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும், அந்தத் தொகையில் ஒரு பகுதி நடிகர் ரித்தீஷிடம் கொடுக்கப் பட்டதாகவும், ரித்தீஷிடம் கொடுக்கப் பட்ட தொகையையே அன்புச் செழியன் வட்டிக்கு விட்டார் என்றும் சொல்லப் பட்டது. 

அன்புச் செழியனின் அடாவடிக்கு ஒரு நல்ல உதாரணம், புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் அஜீத்தையே இவர் மிரட்டியுள்ளார் என்கிறார்கள். பாலாவின் நான் கடவுள் படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப் பட்ட அஜீத், லீ மெரிடீயன் ஹோட்டலில் இந்த அன்புச் செழியனால் மிரட்டப் பட்ட பிறகே அந்தப் படத்தில் இருந்து விலகினார் என்கிறார்கள்.


அஸ்ரா கார்க்

தற்போது விஷயம் என்னவென்றால், புறநகர் எஸ்.பி. அஸ்ரா கார்கிடம் அன்புச் செழியனை கைது செய்யாமல் விட்டு விட வேண்டும் என்று பல அதிமுக பிரமுகர்கள் போனில் கேட்டிருக்கிறார்கள் என்பதுதான். முதன் முதலாக விசாரிக்கக் கூப்பிட்ட போதும், அன்பு சசிகலாவின் பெயரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் அசராத அஸ்ரா கார்க், கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறார்.

அன்புச் செழியனை கைது செய்தது பெரிய விஷயமில்லை. இவர் மீதான வழக்கில் தண்டனை பெற்றுத் தர வேண்டியதும் காவல்துறையின் கடமை.

‘‘நான் அல்லாவை உணர்ந்த இஸ்லாமியன்!’’ அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன் பேட்டி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன் எவரும் எந்த மதத்தையும் தழுவ உரிமை இருக்கிறது. இருந்தபோதிலும்... பெரியாரது பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரோடு பழகி, கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பெரியாரிய கருத்துக்களை பரப்பி வந்த பெரியார்தாசன், சிலகாலமாகப் புத்த தத்துவங்களில் இயங்கினார். இப்போது சவுதி அரேபியா சென்று அப்துல்லா என பெயர் மாற்றி... இஸ்லாமியராகவும் மாறிவிட்டார் என்ற செய்தி, பெரியார்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரியாரிய அமைப்புகளோடு கடந்த சில ஆண்டுகளாகத் தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டாலும்... பெரியார்தாசன் என்ற பெயரை வைத்திருந்தவர், திடீரென அப்துல்லா ஆனது எப்படி?

சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம் அப்துல்லாவாக சென்னை திரும்பிய சில மணிநேரங்களில் திருவேற்காட்டிலுள்ள அவரது வீட்டில் பெரியார்தாசனை சந்தித்தோம்.

வந்துகொண்டிருந்த மொபைல் அழைப்பு களுக்கெல்லாம்... ‘அஸ்ஸலாம் அலைக்கும்’ என ஆரம்பித்து ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்லி விடை கொடுத்துக் கொண்டிருந்தார் அப்துல்லா.

பெரியார்வாதியாகக் கருதப்படும் நீங்கள் எப்படி..?

45 வருடங்களாக பெரியாரைக் கற்றவன் நான். கடவுள் மறுப்பு, சாதிமத ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு, சுதந்திரத் தமிழ்நாடு, சுரண்டல் ஒழிப்பு போன்ற பெரியாரியக் கொள்கைகளைப் பரப்ப என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதிலும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு என் பால்ய நண்பர் சிராஜுதினை சந்தித்தபோது... ‘நீ இறை மறுப்பாளனாகப் பிறக்கவில்லை. இறக்கும்போது இறை மறுப்பாளனாக இறக்கக் கூடாது’ என்றார். அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக இஸ்லாமிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். பெரியாரது கொள்கையில் இறை மறுப்பு என்பதை மட்டும் கைவிட்டு ஏக இறைவனை ஏற்றுக்கொண்டேன். திடீரென ஏற்றுக்கொள்ளவில்லை. பத்து வருடங்கள் படித்த பிறகுதான் தெளிந்து ஏற்றுக்கொண்டேன். 

அப்படியானால் பெரியாரின் மத ஒழிப்பை தாங்கள் பின்பற்றவில்லையா?

இஸ்லாம் ஒரு மதமே அல்ல. அது உலக மக்களை சமத்துவப்படுத்த எழுந்த ஓர் இயக்கம். அதை நான் மதமாகப் பார்க்கவில்லை. பெரியார் கூட ‘இழிவு நீக்க இஸ்லாம் மருந்து’ என சொல்லியிருக்கிறார். 

மூட நம்பிக்கை ஒழிப்பில் இன்னும் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறீர்கள். இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளே இல்லையா?

நான் பரம்பரை இஸ்லாமியனை விட அதிகம் படித்த இஸ்லாமியன். குர்ஆனில் இறைவன் எந்த மூடநம்பிக்கையையும் வலியுறுத்தவில்லை. ஆனாலும் தர்கா வழிபாடு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு ரத்தம் கொட்டுவது என இஸ்லாத்துக்குள் சில மூட நம்பிக்கைகள் ஊடுருவியிருக்கின்றன. இதை இறைவனுக்கு இணை வைத்தல் என்று சொல்லலாம். அதாவது இறைவன் ஒருவனே. அவனுக்கு இணையாக யாரையும் வழிபட்டால் அது மூட நம்பிக்கை.

நாகூர் தர்காவில் நிறையப் பேர் சென்று வருகிறார்கள். அங்கே சென்றால் சுத்தமாகிவிடலாம் என்கிறார்கள். ஆனால் அதற்குள் சென்று வந்தால் அசுத்தமாகத்தான் ஆகமுடியும். இறந்த ஒருவரை இறைவனுக்கு ஈடாக வழிபடுவது இஸ்லாத்படி தவறு. ஆனால், தர்காக்களில் அது மட்டுமல்ல, அதன் அடிப்படையில் நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கின்றன.

ஒரு கோழியை ஒருவர் நூறு ரூபாய்க்கு வாங்கி நாகூர் தர்காவில் கொண்டு வந்து பறக்கவிடுகிறார். அது கீழே இறங்கியதும் அதைப் பிடித்து இன்னொரு பக்தருக்கு விற்றால் அது புண்ணியமாம். அதனால் பலரும் அந்தக் கோழியைப் பிடித்து ஒவ்வொரு முறையும் விலையை ஏற்றி விற்பார்கள். காலையில் நூறு ரூபாய்க்கு விற்ற அந்தக் கோழி, மாலையில் ஒரு லட்ச ரூபாய்க்குக் கூட விற்கும். இது மூட நம்பிக்கை. இதை எதிர்த்து நான் பேசுவேன்.

அதேபோல, ஏர்வாடி தர்காவில் கொண்டுபோய் விட்டால் பைத்தியம் தெளியும் என்கிறார்கள். அங்கே கொண்டுபோய் விட்டால்தான் பைத்தியம் பிடிக்கும். நான் அடையாள இஸ்லாமியன் அல்ல... அல்லாவை உணர்ந்த இஸ்லாமியன்.

பெண்களுக்கான பர்தா போன்ற உடைக் கட்டுப்பாடுகள் பற்றி தங்கள் கருத்து?

அரேபியாவில் அடிக்கடி வலுவான புழுதிப் புயல்கள் ஏற்படும். அதைத் தடுப்பதற்காக அங்கே ஆண்கள்கூட முகத்தை மூடும்படிதான் உடை அணிகிறார்கள். அதை இங்கே பெண்கள் தொடர்கிறார்கள். இதை ஏன் குறை சொல்லவேண்டும்? அது அவர்களின் விருப்பம். சுடிதார் அணியக் கூடாது என யாரையும் நாம் கட்டாயப்படுத்த முடியுமா? அதுபோலத்தான் இதுவும்.

உலக மக்களை எல்லாம் சமத்துவப்படுத்த எழுந்த இயக்கம் இஸ்லாம் என்கிறீர்கள். அப்படியானால், சவுதி போய் இஸ்லாமைத் தழுவ வேண்டிய அவசியம் என்ன? இதுவே ஒரு மூடநம்பிக்கைதானே?

எனக்கு வசதி இருந்தது நான் போனேன். உனக்கென்ன? ரயில்ல ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் எடுக்க முடியறவன், அதுல போறான். காசு இல்லாதவன் செகண்ட் கிளாஸ்ல போறான். என்கிட்ட காசு இருந்தது அதனால போனேன்.

பொதுவாகவே பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும், மூளைச் சலவை காரணமாகவும்தானே தமிழ்நாட்டில் மத மாற்றம் நடக்கிறது...

எந்தப் பொருளாதார ஆசையையும் யாராலும் எனக்குக் காட்டமுடியாது. இந்துமதத்தை எதிர்த்துப் பேசினேன்... கிறிஸ்தவர்களையும் எதிர்த்துப் பிரசாரம் செய்திருக்கிறேன். அந்த மதங்களில் எல்லாம் கடவுள் சொன்னதாக வேறொருவர்தான் சொல்லுவார். ஆனால், இஸ்லாத்தில்தான் கடவுளே வேதத்தைச் சொல்கிறார். அதைப் படித்து தெளிந்து... என் சொந்த செலவில் பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட் எடுத்து சவுதி சென்றேன். கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வந்தவன் நான். இத்தனை வருடமாகப் பகுத்தறிவு பிரசாரம் செய்தோமே... என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படவில்லையா?

பெரியாரோடு இருந்த நாத்திக பாலசுப்பிரமணி என்ற சிறந்த பேச்சாளர், ‘இந்தி’ எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்றார். சிறையில் எப்படியோ ‘திருவாசகம்’ படித்த அவர், வெளியே வரும்போது, ‘திருவாசக’ பாலசுப்பிரமணி என மாறி ஆத்திகராகிவிட்டார். இதுபற்றி தோழர்கள் பெரியாரிடம் கேட்டபோது... ‘விடு, சுய-மரியாதைக்காரன் எங்கே இருந்தாலும் சுத்தமாக இருப்பான்’ என பதில் சொன்னார். அதை நினைவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை.

சவுதியிலிருந்து அளித்த இணையப் பேட்டியில் ‘ஜிகாத்’துக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறீர்களே?

இறைவனுக்கு இணையாக வைத்து வழிபடும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதுதான் ‘ஜிகாத்’.

தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கங்கள் தோற்றுவிட்டனவா?

தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். என்னை அழைத்துச் சென்று அதில் சேர்த்துவிடுங்களேன்!

‘‘கலைஞரின் பெற்றோர் சிலைகளை அகற்ற வேண்டும்!’’

ராதாபுரத்தில் அடுத்த சர்ச்சை ஆரம்பம்

ஒருவழியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டியிருக்கிறார் முதல்வர். ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, தமிழக முதல்வரின் பெற்றோர் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் பெயரை சூட்ட முயற்சித்து, பேருந்து நிலையம் முன்பு முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் சிலைகளையும் நிறுவினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்ப... பேருந்து நிலையத் திறப்பு விழாவுக்காக கடந்த வருடம் துணை முதல்வர் ஸ்டாலின் பெயரிடப்படாத பேருந்து நிலையத்தை திறந்து வைத்து விட்டு, சிலைகளைத் திறக்காமல் திரும்பினார்.

இதற்கிடையில் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டியே தீர வேண்டும் என்று கோரி, சுடலைமுத்து நாடார் என்ற தியாகி தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். மேலும், ‘‘கலைஞரின் பெற்றோர் என்ன தியாகிகளா?’’ என்று கேட்டு ஜெயலலிதாவும் அறிக்கை விட்டார். ஆனாலும், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் சிவக்குமாரை வைத்து கலைஞரின் பெற்றோரின் சிலைகளை திறந்து விட்டார் அப்பாவு.
இந்நிலையில் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதிக்கு முதல்நாள், தியாகி சுடலைமுத்துவும், சிவாஜி முத்துக்குமார் என்பவரும், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கே சென்று, ‘ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்’ என வலியுறுத்தி கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்கள் மீது காங்கிரஸ் நிர்வாகி ஒருவரே புகார் கொடுக்க, கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற சிலரின் எதிர்ப்புக் குரல் கேட்கவே, ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டியதோடு, தியாகி சுடலைமுத்து நாடார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருக்கிறார் கலைஞர்.

விடுதலையான சிவாஜி முத்துகுமாரிடம் பேசினோம். “காமராஜர் பெயரை பேருந்து நிலையத்துக்கு வைப்பதற்காக போராடும் நிலை ஏற்பட்டதே தமிழ்நாட்டுக்கு அவமானம். அதே பேருந்து நிலைய வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் கக்கன் சிலைகளை வைக்க வேண்டும்’’ என்றார்.

87 வயதான தியாகி சுடலைமுத்து நாடாரிடம் பேசியபோது, “நான் உண்ணாவிரதம் இருந்த நோக்கம் நிறைவேறியுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றி’’ என்றார்.

இந்நிலையில் காமராஜர் பெயர் சூட்டப்-பட்டதை அடுத்து ராதாபுரம் பேருந்து நிலையத்-திலிருந்து முத்துவேலர் & அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றவேண்டும் என்று கோரிக்கை-கள் எழுந்துள்ளன.

தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் இதுபற்றி நம்மிடம், “வரும் தேர்தலில் இந்தப் பகுதியில் உள்ள நாடார் சமுதாய ஓட்டு வங்கியில் சேதாரம் வந்து விடக் கூடாது என்றுதான் காமராஜர் பெயரை சூட்டியிருக்கிறார் கலைஞர். அவருக்கு காமராஜர் மீது உண்மையிலேயே மதிப்பு இருந்தால் ஏன் இத்தனை கால தாமதம்? கலைஞரின் பெற்றோர் சிலைகளும் அங்கிருந்து

காந்தி என்னும் கோழை….!! இவனையெல்லாம் மகாத்மா என்றது யார் ?

“நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்- மாவோ”

அஹிம்சையை முழுதாக ஒதுக்கிவிட முடியாது. ஆனால், அதற்காக எல்லா பிரச்சினைகளுக்கும் காலை நக்கியே தீர்வு காணலாம் என்பதை ஒருகாலும் ஏற்க முடியாது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்தினார் என்பதுதான் அவர் மீதான என் வெறுப்பின் தொடக்கப் புள்ளி. அம்பேத்கர், பகத் சிங், நேதாஜி போன்றோருடனான காந்தியின் மோதல்களை படித்ததால், முற்றிலும் வெறுக்கிறேன்!

காந்தியை வசைபாடுவதற்கு முன், அஹிம்சையை பற்றிய அவரின் வரையறையை தெரிந்து கொள்ள வேண்டும். அவரை பொறுத்தவரையில், “அஹிம்சை என்பது ஆங்கிலேயனை துன்புறுத்தாமல் அமைதியான வழியில் போராடி சுதந்திரம் அடைவது”. (ஆனால், இந்திய மக்கள் எவ்வளவு வேண்டுமானலும் துன்பப்படலாம்)
அஹிம்சை ஏன் (நாட்டுக்கு) உதவாது?

அஹிம்சை எந்த நாட்டிற்கு உதவி இருக்கிறது? இந்தியாவிற்கா? உண்மையான அஹிம்சையால் வென்றெடுத்த சுதந்திரமென்றால், இது காந்தி பிறந்த மண் என்று பீற்றிக் கொள்ளும் அவரது தொண்டர்கள் ஏன் நாட்டில் முப்படையை நிர்மாணித்த போது எதிர்க்கவில்லை? விடுதலைக்கே உதவிய உங்களது அஹிம்சை, பாதுகாப்புக்கு உதவாதா,என்ன? “தரைப்படை, கப்பற்படை, விமானப்படை” என்பதிற்கு பதிலாக, “காலில் விழும் படை, உண்ணாவிரதப் படை, அந்நியனே வெளியேறு என்று கோஷமிடும் படை” என்று எல்லைபகுதியில் நிறுவ வேண்டியதுதானே? இப்பொழுது மட்டும் உயிரை துன்புறுத்துதல் எப்படி அய்யா சரியாகும்! இப்பொழுது ஊடுருவும் அந்நியர்களை, தீவிரவாதிகளை எதிர்க்க ஆயுதம் தேவையென்றால், அன்றைக்கு இருந்த நிலைமைக்கும் ஆயுதம் தேவைதானே?

வன்முறையில் இறங்காமல் அதே நேரம் ஒத்துழைக்காமல் போராட வேண்டும் என்று அவர் வழியில் செல்பவர்கள் யாரேனும் உண்மையிலேயே இருக்கிறீர்களா? உங்கள் வீட்டு பெண்ணொருத்தியை மானபங்கபடுத்த ஒரு கும்பல் வந்தால், ஒத்துழைக்கமாட்டேன் என்று ஓரமாக அமர்ந்து சத்தியாகிரகம் செய்வீரா , இல்லை எதிர்த்து சண்டை இடுவீர்களா? (சத்தியாகிரகம் செய்வேன் என்பவர்கள் தயவு செய்து வாசிப்பதை நிறுத்திவிடலாம். நான் நிற்பது எதிர்த்துருவம்.)

ஒரு பெண்ணின் நன்மைக்கே வன்முறை தீர்வென்றால், விடுதலைக்கு புரட்சி வேண்டாமா? அன்று புரட்சி இருந்தது.. போர்க்குணமும் இருந்தது…ஏனென்றால், இது காந்தி பிறந்த மண் மட்டுமன்று, நேதாஜி பிறந்த மண்ணும் கூட! இதை பிரிட்டிஷ்காரன் அறியாமலில்லை. போராட்டங்களை பிளவுப் படுத்த, ஆயுதப் போராட்டங்களில் பெரிதும் ஈடுபடாத மேல்தட்டு மக்களைச் சேர்த்து ஒரு அமைப்பை உருவாக்க நினைத்தார்கள். அதுதான் “இந்திய தேசிய காங்கிரஸ்”. இதன் மூலம் மக்கள் அமைப்பொன்று இருக்கிறது, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தங்கள் போடப்படும், மெள்ள மெள்ள சுதந்திரம் கிடைக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கினான்.(ஆம் அப்படி நடந்தே என்று வாதிட நினைத்தால், நேதாஜியையும், இரண்டாம் உலகப் போரையும் படித்து விட்டு வந்து வாதிடலாம்.)
காந்தி என்ற தலைவன்!?

தலைவருக்கான தகுதியோ, மன உறுதியோ இல்லை என்று தெரிந்து, தாமாகவே பொறுப்புகளில் இருந்து விலகி நேதாஜிக்கு வழி விட்டிருக்க வேண்டும்! அது சுதந்திரப் போராட்டத்தை துரிதப் படுத்தியிருக்கும். அதை விடுத்து, புரட்சி வெடிப்பது போன்ற காலங்களில் எல்லாம் ஒத்துழையாமை, வெள்ளையனே வெளியேறு போன்ற இயக்கங்களை தொடங்குவதும், பின்பு உப்பு சப்பிலாத காரணங்களைக் காட்டி அப்போராட்டங்களை கலைப்பதும் வாடிக்கையாக கொண்டிருந்தார். நாட்டின் விடுதலையை தாமதப்படுத்தினார்.



Jallianwala Bagh massacre

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் 379 பேர் இறந்தனர், ஓராயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். ஜெனரல் டயர் என்ற வெறிநாய் நிகர் இழிபிறவியோ, துப்பாக்கி ரவைகள் தீராவிட்டால் இன்னும் சுட்டிருப்பேன் என்று கொக்கரித்தது. ஆனால் அதற்கு கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதமோ போராட்டமோ எதுவும் நடத்தாமல், அதே பஞ்சாபில் மக்களின் கலகத்தால் விளைந்த சில வெள்ளையனின் சாவுக்கும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததற்கும் கண்டனம் தெரிவித்தார்! (இதே காங்கிரஸ் கருங்காலிகளின் அடுத்த தலைமுறைகள்தான் போபால் விபத்துக்குக் காரணமான ஆண்டர்சனை காப்பற்றியது… சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இவர்கள் அடிமைகள் தான்!)

இரண்டாம் உலக போரில் நேதாஜி எதிரணியை ஆதரிக்க, காந்தியோ பிரிட்டிஷை ஆதரித்தார். அது மட்டுமின்றி பிரிட்டிஷார் அழிவார்களோ என்று நினைத்தாலே தாங்க முடியவில்லை என்று கண்ணீர் வேறு வடித்திருக்கிறார்! அவர்களின் அழிவிலிருந்து எங்களுக்கு சுதந்திரம் *தேவையில்லை*, இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூறியிருக்கிறார் இந்த மகான்!. பிரிட்டிஷை காப்பாற்ற இந்தியன் சாகலாம், அஹிம்சையை விடுத்து உலக போரில் ஈடுபட்ட பிரிட்டிஷை நீங்கள் ஆதரிக்கலாம், ஆனால் தாய் நாட்டின் விடுதலைக்கு வன்முறை கூடாதா! வன்முறைக்கும் புரட்சிக்கும் வித்தியாசம் தெரியாதவன் எப்படி தலைவனாக இருக்கமுடியும்?
காந்தி என்ற மனிதன்

செய்த குற்றத்தை ஒப்பு கொள்பவனெல்லாம் நல்ல மனிதன் அல்ல, அதை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்பவனே மனிதன். சத்திய சோதனையில் பல உண்மைகளை சொல்லியவர்,சிறந்த மனிதர், மகாத்மா, என்றெல்லாம் இருக்கும் கற்பிதங்களையும் தாண்டி, அவரின் கோழைத்தனத்தை நிறுவ போதுமான ஆதாரங்கள் , வரலாறெங்கும் விரவிக் கிடக்கிறது.

ஏழை பங்காளனாய் இருப்பதால் சட்டையே அணியாத அவர், செருப்பு மட்டும் போட்டது ஏன், மூன்றாம் வகுப்பில் பயணிக்காமல் முதல் வகுப்பிலேயே பயணித்தது ஏன்? எத்தனை ஏழைகள் முதல் வகுப்பில் செல்கிறார்கள் ?

சாதியை ஒழிக்கும் பொறுப்புள்ள தலைவன், ‘அரிஜன்’ என்று பட்டமிட்டு அழைத்து சரியா? தாழ்த்தப்பட்டோருக்கான அம்பேத்கரின் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்தது ஏன்? அரிஜன மக்கள் பக்குவமற்றவர்கள் என விளித்தது ஏன்? கோவில் உள்நுழைவு போராட்டத்திற்கு ஆதரவு தர மறுத்ததும் ஏனோ?

இதனால் தான் அம்பேத்கர் அவரை “நம்பதகாதவர், நேர்மையற்ற வழிகளை மேற்கொள்கிறார்” என்று தோலுரித்தார். (Because of Gandhi’s actions, Ambedkar described him as “devious and untrustworthy”)

1987இல், ஆப்ரிக்கா சென்று அஹிம்சை முறையில் போராடிய மாமனிதர், அங்கிருந்த வெள்ளை குடியேறிகள் அவரை தாக்க முற்பட்ட போது *தப்பி ஓடி ஒளிந்து, அவர்கள் மீது வழக்கு போடவும் பயந்த* அவர், அங்கேயே, அவர்களிடமே அஹிம்சையில் போரடியிருக்கலாமே? வீரத்தின் உச்சம் அஹிம்சை என்று உரைப்பவர்கள், இதை வீரம் என ஒப்புக் கொள்வார்களா?

என்னை பொறுத்தவரையில் “அஹிம்சை” என்பதைவிட “காந்தியம்” ஆபத்தானது, மோசமானது. என் நாட்டின் சுதத்திரத்தை தாமதப்படுத்தியது மட்டுமில்லாமல், வீரத்தால் விளைய வேண்டிய விடுதலையை பேடித்தனத்தால் விளைவிக்க முயற்சித்தது. அது புரட்சிகளின் முட்டுக்கட்டை. கோழைகளின் கூடாரம்.


பேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.

தமிழ்நாட்டில் இன்று பேராசைக்காரர்கள் யாரென்று பார்த்தால் – இவர்கள் தான். இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும். மகனை அரசியலில் இறக்கி பெரிய ஆளாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் தந்தையர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கலைஞர், மருத்துவர் ராமதாசு வரிசையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் வருகிறார்.

“அரசியலில் குதிக்க – அதற்கான தகுதி, ஆளுமை போன்றவை இருக்கிறதா” என்றெல்லாம் யாரும் கேட்கக்கூடாது. கேட்கவும் முடியாது. பிள்ளை “ஆசைப்பட்டு விட்டால்” நிறைவேற்றுவது தானே பெற்றவர்களின் கடமை. அதை தான் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்கிறார். கிட்டத்தட்ட விஜய்யின் கொள்கை பரப்பு பீரங்கி போல செயல்பட துவங்கிவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர் என்று தான் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் பணம் படைத்தோர் – பணம் கொடுத்து, திரைப்படங்களில் கதாநாயகனாக ஆனார்கள். கதாநாயகனாக ஆனப்பின் – விஜயை போல “முதல்வர் கனவு” காண விரும்புகிறார்கள். “வருங்கால முதல்வர் விஜயாம்” கோஷமிடுகிறார்கள். காதில் ஆசிட்டை ஊற்றியது போல் எரிகிறது. ரஜினியை உசுப்பேத்த முடியாமல் ஓய்ந்தவர்கள்… இப்போது விஜயை. விஜ்ய்க்கு எல்லா கனவும் உண்டு. ரஜினியை போல விஜய் என்ன சாமியாரா?

“தன் படத்துல நடிச்ச விஜய்காந்தே அரசியல்ல இறங்கி எதிர்க்கட்சி தலைவராகும் போது – தம் பிள்ளையால் ஜெயிக்க முடியாதா” என்று பாசிட்டிவ்வா சிந்திக்கிறார் போலும் எஸ்.ஏ.சி. அ.தி.மு.க வின் தேர்தல் கூட்டணியில் இன்னும் வெளியேறாமல் இருப்பவர்கள் இரண்டே பேர். ஒருவர் – ​குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் மற்றது இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கமாம். கலைஞர் அடிக்கிற ஆப்பிலிருந்து கூட தப்பி விடலாம். ஜெ அடிக்க போகிற ஆப்பிலிருந்து தப்பவே முடியாது என்பதை உணரவில்லை போலும்.

எந்த திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்ளாத முதல்வராக ஜெயலலிதா. சினிமாகாரர்களை தூர வைக்கும் முதல்வர் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக சென்று, பூச்செண்டு கொடுத்து விட்டு பிரஸ்மீட்டில் பேசுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். “உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவை ஆதரிப்பதாக” தெரிவித்தார். சினிமாகாரர்களை எரிச்சலுடன் சாடும் பா.ம.க வின் மக்கள் தொலைக்காட்சியையும் அந்த பிரஸ் மீட்டில் பார்க்க முடிந்தது. சினிமாகாரர்கள் என்றால் சும்மாவா? பா.ம.க.,வுக்கு தலைமுறையை தாண்டி – சினிமாவிலிருந்து எதிரிகள் முளைத்து கொண்டே இருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு சேவகம் செய்ய போவதாக சொல்லும் நடிகரின் தமிழர்களின் மீதானபற்றை பார்ப்போமா? ஆயிரக்கணக்கான ஏழை தமிழ் பொற்கொல்லர்களின் வயிற்றில் அடித்து தன் உடம்பை வளர்க்கும் கேரள ஆலுக்காஸ்களின் (இங்கே) நிரந்தர விளம்பர நடிகராக விஜய். பகட்டின் ஒளிக்கு பின்னால் கவிந்துள்ள இருட்டில் சிக்கி, சின்னாபின்னமாகி வாழவே போராடும் நம் மக்களை தெரிந்து கொள்ளாமல் – கோடிகளை மலையாளிகளிடம் பெற்று கொண்டு தமிழர்களை உய்விக்க இயக்கம் தொடங்க போகிறாராம். நல்ல கூத்து.

பிறந்த நாளுக்கு நான்கு தையல் மிஷின்களை கொடுத்து விட்டு, கொடுப்பது போல போட்டோவும் எடுத்து கொண்டால் – கிழவியை கட்டி பிடிப்பது போன்று போஸ்டர் அடித்தால் – அரசியலில் பெரிய ஆளாக வந்துவிடலாம் என்று நினைப்பு போலும். எந்த தகுதியில் அண்ணா வந்தது உங்களுக்கு அரசியல் ஆசை. இளைய தளபதி விஜய் கடந்து வந்த அரசியல் பாதையை பார்ப்போமா? புதுசாய் கட்சி ஆரம்பிக்கிற ரிஸ்க்கான வேலையையெல்லாம் செய்ய விரும்பவில்லை.

“சிவாஜி போல, பாக்யராஜ் டி.ராஜேந்தரை போல” கட்சி ஆரம்பித்து – “கடை விரித்தேன். கொள்வாரில்லை” என்று போணியாகமல் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டால் என்ன செய்வது. அதனால் எப்பாடுபட்டாவது காங்கிரஸில் தன்னை இணைத்து கொள்ள விரும்பி, டெல்லி வரை போய் ராகுல்காந்தியை பார்த்தார் விஜய். “ஏற்கனவே கட்சில இருக்கிற கோஷ்டி பத்தாதுன்னு நீங்க வேற புதுசா”… என்று இழுத்திருக்கிறார் ராகுல்காந்தி.

தொண்டர்களின் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை நிறைய இருந்தால் – அது தான் நிலை. விஜய் தனது ஆசைகளை விரிவாக சொல்ல, “காங்கிரஸ்ல போஸ்டர் ஒட்ட ஆள் இல்ல. ஆனா போஸ்டிங் கேட்டு மட்டும் வந்துடுறாங்க” என்று ராகுல்காந்தி அலுத்து கொள்ள – முகத்தை துடைத்து கொண்டே வெளியேறினார் விஜய். “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்றார் மீசையில் ஒட்டிய மண்ணை தட்டி விட்டவாறே.

“காவலன்” படத்திற்காக ஜெயலலிதாவிடம் ஒட்டி கொண்டவர்கள் – சட்டசபை தேர்தல் வெற்றியில் தங்களின் பங்கும் மிக பெரிய அளவு இருந்ததாக பேசி கொள்கிறார்கள். “நினைப்பு பிழைப்பை கெடுக்கட்டும். அவர்களின் அரசியல் கனவை கலைக்கட்டும்”.

அடப்பாவிகளா..இதிலுமா ஊழல்..

மகாராஷ்டிராவில் துலே மாதத்தில் நியாகலாட் என்னும் கிராமத்தில் 600 குடிம்பங்கள் வசித்து வருகின்றன.
அந்த கிராமத்தில் அக்டோபர் 3ஆம் நாள் , திடீரென 60 வெளியூர் மாணவர்கள்..காதில் உயரைச் சொருகி..ஐ பாட்டில் பாட்டைக் கேட்டபடி வந்தனர்.கேட்டால் அந்த கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் என்றனர்.அதாவது அங்குள்ள பள்ளிக்கு இன்ஸ்பெக்க்ஷன் வருவதால்...கணக்குக் காட்ட வெளி மாணவர்களை வரவழைத்துள்ளனர் என்று தெரிந்தது.

அம்மாநிலத்தில் அக்டோபர் 3,4,5 ஆகிய நாட்களில் பள்ளி இன்ஸ்பெக்க்ஷன் வந்த போது 2600000 மாணவர்கள் வரவில்லை என்று தெரிய வந்தது.ஆனால் அனைத்தும் போகஸ்..ஆம்..அவ்வளவு மாணவர்கள் கிடையவே கிடையாது.தவிர்த்து நூற்றுக் கணக்கான பள்ளிகள் வெறும் ஏட்டில் பெயரில் தான் உள்ளது.பெரும்பாலான பள்ளிகள் மந்திரிகளாலும், எம் எல் ஏ க்களாலும் நடத்தப் படுபவை.

இல்லாத மாணவர்களுக்கு (இருபத்தாறு லட்சம்) மதிய உணவிற்கு 30 கோடியே 42 லட்சம் பணம் பெறப்பட்டதாம்.ஒவ்வொருவருக்கும் 3 கிலோ அரிசி என 11 கோடி பணம் வாங்கப்பட்டது.தவிர்த்து இல்லாத ஆசிரியர்கள் 43775 பேர் இருப்பதாகக் காட்டி அவர்களுக்கான சம்பளமாக 60 கோடியே 66 லட்சத்து 90000 வாங்கப்பட்டது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது.

இவ்வூழல் குறித்து முழுதும் படிக்க வேண்டுமா நவம்பர் 27 தேதியிட்ட தி வீக் ஆங்கிலப் பத்திரிகை வாங்கிப் படியுங்கள்.அப்பத்திரிகை இந்த ஊழலுக்குக் கொடுத்த தலைப்பு..

"bogus schools help politicians swindle thosands of crores"

கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களைப் புறக்கணிப்பீர்

Photobucketஇன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய தாங்கள் இன்றைய நிலையில் காக்கை வன்னியனைப் போலவும் எட்டப்பனைப் போலவும் நடந்து கொள்கிறாரோ என்கிற ஐயப்பாடு உலகத் தமிழர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் 'நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு' என்பதற்கு அமைய கருணாநிதி தனது கையாலாகத்தனத்தை வெளிக்காட்டும் விதமாக செந்தமிழன் சீமான் போன்ற தமிழ் உணர்வாளர்களைக் கட்டுப்படுத்த கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். 

ரோம் எரியும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல் இலங்கைத் தமிழர்களும் இந்திய மீனவர்களும் ஒருசேர அன்றாடம் அழிக்கப்பட்டுவரும் நிலையில் தன்னைத்தானே உலகத்தமிழினத் தலைவர் என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் தாங்கள் செம்மொழி மாநாட்டுக் கேளிக்கையிலும் நித்தம் ஒரு பாராட்டு விழாக் குளியலிலும் மூழ்கி களியாட்டம் போட்டதை உலகத் தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது. ஒரு இலட்சம் ஈழத்தமிழர் கொல்லப்பட்டதற்கு உங்களால் செம்மொழி மாநாட்டில் ஒரு இரங்கல் தீர்மானம்கூட போட முடியவில்லையா?

உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்தும் 2009, முள்ளிவாய்க்கால் போரில் ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இனப்படுகொலைக்கு ஆளானதை யாராலும் தடுக்க முடியவில்லை. சராசரித் தமிழனுக்குச் சர்வதேச அரசியல் சதுரங்க ஆட்டத்தின் விளையாட்டு நுட்பங்கள் எதுவும் புரியவில்லை. யானையைப் பார்த்த குருடர்களின் கற்பனையைப் போல சர்வதேசங்களுக்கும் எங்களின் பிரச்சினை அவரவர்க்கும் ஒருவிதமாகத் தோன்றி, எங்களின் இலட்சியமான தாயகக் கனவு மீண்டும் முறியடிக்கப்பட்டது.

காங்கோ, சூடான், ருவாண்டா, காசா போன்ற பகுதிகளில் நடந்த இனப்படுகொலைகளைக் கண்டிக்கும் இந்தியா தனது காலடியில் அப்பாவி ஈழத்தமிழர்கள் இனஅழிப்புக்கு ஆளானதைக் கண்டிக்க மனமில்லை. தமிழையும், தமிழினத்தையும் காக்க உலகச் செம்மொழி மாநாடு நடத்துவதாகக் கூறிய உங்களால் (தமிழக முதல்வர் கருணாநிதியால்) ஈழத்தமிழரின் இனப்படுகொலையைக் கண்டிக்கத் துணிவு இல்லாவிட்டாலும், இலங்கைத் தீவு ஓரு இனப்படுகொலை; செய்த நாடாக உலகநாடுகள் பலவும் தற்போது அங்கீகரித்துவரும் நிலையிலும், உங்களுக்கு அதை ஏற்றுக்கொள்ளும் மனிதாபிமானம் ஏன் இல்லாமல் போனது?. சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அவரது இராணுவமும் செய்த போர்க்குற்றத்தை ஆராய ஐ.நா.மன்றம் நியமித்த மர்சூகி தரூஸ்மன் தலைமையிலான மதியுரைக் குழுபற்றி ஆதரிக்கின்றீர்களா, எதிர்க்கின்றீர்களா? என்பது பற்றி நீங்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. காரணம் கேட்டால், காங்கிரஸ் தயவில் ஆட்சிக்கட்டிலில் உள்ள என்னால், காங்கிரசின் தமிழின விரோதப் போக்கைத் தட்டிக்கேட்க இயலாது என்று போலிச் சமாதானம் கூறுவீர்கள்.

உணர்வுள்ள பிற அரசியல் கட்சிகள் காங்கிரசின் தமிழின விரோதச் செயல்களைத் தட்டிக்கேட்டு அம்பலப்படுத்தினால் கூட அவர்களையும் பிடித்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விடுவது நியாயமா?. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளும் அளவிற்கு அப்படி என்ன தவறாகப் பேசினார்? 

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை பற்றி ஆலோசனை வழங்க ஐ.நா.மன்றம் நியமித்த மதியுரைக் குழவைப் பற்றிய மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாட்டை கூறுமாறு கேட்டதற்காகவா? அல்லது பல ஆண்டுகளாகச் சிங்களக் கடற்படையின் அட்டூழியத்தினால் நூற்றுக்கணக்கானத் தமிழக மீனவர்கள் மடிந்து கொண்டிருப்பதை மௌனமாக பார்த்துக்கொண்டு, கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு, வெகுண்டு எழுந்து, இனியும் ஒரு தமிழக மீனவன் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றால், தமிழகத்தில் வாழும் ஒரு சிங்கள மாணவனும் உயிருடன் திரும்ப மாட்டான் என்று எச்சரிக்கைச் செய்ததற்காகவா? எதற்காக துடிதுடித்து, பதைபதைத்து சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தீர்கள். 

இரண்டு இனத்திற்குள் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் பேசியதாக இந்திய நாட்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் போட்டதென்பது, சிங்கள இனம் உங்களுக்கு உறவு அல்லவே! தமிழர்கள் உங்களின் தொப்புள்கொடி உறவல்லவா? மற்றொரு நாட்டில் வாழும் ஒரு இனத்தை, அது நமது இந்திய மீனவர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்து அந்தச் சிங்கள இனத்திற்கு எதிராகப் பேசுவது எந்த வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிரானது? 1990களில் நீங்கள் கூட தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்! என்று ஆவேசமாகப் பேசியது எல்லாம் எங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதே.

சிங்களர்களுக்கு வக்காளத்து வாங்கி, சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளிய நீங்கள், முள்ளிவாய்க்கால் போரில் சிறு குழந்தைகளும், பெண்களும், முதியோர்களும் என பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பீரங்கிகளாலும் விமானத்தினாலும் சுற்றி வளைத்து சிங்களர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இப்போது சிங்களர்களுக்காகக் கொதித்த உங்களது இரத்தம் ஏன் தமிழர்களுக்காக அன்று கொதிக்கவில்லை? மத்திய அரசின் கொள்கைதான் எங்களது கொள்கை என்று கூறும் நீங்கள், மத்திய அரசான காங்கிரசின் ஒட்டுமொத்த தமிழின விரோதப் போக்கை, பதவியைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் ஆதரிக்கலாம். ஆனால் உணர்வுள்ள தமிழர்கள் எப்படி ஆதரிக்க முடியும்? ஈழத்தமிழினத்தையும், தமிழக மீனவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் சிங்கள அரசை ஆதரிக்கும் மத்திய அரசின் அயலுறவுக் கொள்கைதான் தங்களதும், காங்கிரசினதுமான கொள்கையா?

இலங்கைக்கு ஒருபக்கம் ஆயதத் தளவாடங்களையும், உளவு வேலைகளையும் செய்து கொண்டே, போர் நிறுத்தம் கோரிப் போராடிக் கொண்டிருந்த தமிழர்களை ஏய்க்க, நீங்களும் போர் நிறுத்த உண்ணாவிரதம் மேற்கொண்டீர்கள். அப்போது உங்களது ஆதரவால் ஆட்சி செய்து கொண்டிருந்த சோனியாவின் நடுவண் அரசுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால், ஈழத்தில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி ஒரு இனப்படுகொலையை தடுத்து ஒரு இலட்சத்திற்கும் மேலான எமது தமிழ் உறவுகளைக் காப்பாற்றியிருக்கலாம். பண்டாரவன்னியன் கதை எழுதினால் போதுமா? எதிரிகளைத் துணிவுடன் எதிர்க்கும் அவரது வீரத்தில் சிறிதளவேனும் உங்களிடம் காணமுடியவில்லையே ஏன்? முள்ளிவாய்க்கால் போரில் கடைசி இரண்டு தினங்களில் 50,000 தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள் என மேலைநாடுகளின் செய்தி நாளேடுகள் ஆதாரபூர்வமாகச் செய்திகளை வெளியிட்டபோது, தங்களது வாரிசுகளின் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சி 20,000 தமிழர்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் எனச் செய்தி வெளியிட்டது. 'தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப்போட்டாலும், கட்டுமரமாய் மிதந்து தமிழர்களைக் காப்பேன்!' என்று நீங்கள் எழுதியபடி நடந்து காட்டியிருந்தால் உலகத் தமிழர்கள் எல்லாம் உங்களைப் போற்றி வணங்கி இருப்பார்கள்!

போர் முடீந்த பிறகு விழித்துக்கொண்ட மேற்குலக நாடுகளின் முயற்சியால், ஐ.நா.வின் மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் ஆதரவோடு இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த கடந்த ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்தைக்கூட இந்தியா தனது நட்பு நாடுகளைச் சேர்த்துக் கொண்டு முறியடித்தன. அப்போதுகூட தாங்கள், மத்திய அரசின் தமிழருக்கெதிரான போக்கை கண்டிக்காதது மட்டுமன்றி, ஒருபடி மேலேபோய், தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி சர்வதேச அளவில், இராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியது எந்த வகையில் தமிழினத் தலைவரெனத் தாங்கள் கூறிக்கொள்வது நியாயம்? தன் கைவிரலால் தனது கண்ணைக் குத்திக்கொள்வது போல், தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவது துரோகத்தனமாகாதா?

போர் முடிந்த பிறகும், முள்வேலி முகாம்களில் சர்வதேச மனித உரிமைச்சட்டத்திற்குப் புறம்பாக அடைக்கப்பட்ட 3 இலட்சம் அப்பாவி ஈழத்தமிழர்களை, 4 மாதங்களில் அவரவர் வசிப்பிடங்களில், உரிய நிவாரண உதவிகளோடு மீள்குடியமர்த்தம் செய்வோம் என்று ராஜபக்சே இந்தியாவுக்கும், ஐ.நா.வுக்கும் அளித்த வாக்குறுதியைக்கூட இன்றுவரை நிறைவேற்றவில்லை. இன்றுவரை, 80,000 க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் முள்வேலி திறந்தவெளி சிறையில் அடிப்படைவசதிகளின்றியும், சிங்களர்களால் அன்றாடம் தங்களது கற்புகளைப் பறிக்கொடுத்தும் அல்லல்பட்டு வருகின்றனர். 

விசாரணை என்ற பெயரில் 20,000 இளைஞர்களும் சிறுவர்களும் சிங்களர்களின் கைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. விசாரணை என்ற பெயரில் பெண் கைதிகளைத் தனியே அழைத்து சென்று கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். வன்னிப் பகுதியில் சுமார் 1,60,000 க்கும் மேற்பட்ட வீடுகள் குண்டுவீச்சுகளால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா.மதிப்பீட்டுக்குழு தெரிவித்துள்ளது. இத்தனை பேரழிவுகளும் எங்களுக்கு வரக் காரணம், நாங்கள் நாதியற்ற தமிழினம் என்பதால், ஒருவகையில் எங்களைக் கொன்றது எங்களின் தாய்மொழி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது?

இத்தகைய பேரழிவுகளை அன்றாடம் ஈழத்தமிழர்கள் சந்தித்து வரும்போது, சர்வதேச அளவில் இராஜபக்சேவிற்கு நல்லபெயர் வாங்கித்தருவதற்கான உங்களது அயராத முயற்சியால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் வேலிக்கு ஓணான் சாட்சி கூறுவதுபோல், சிங்கள அரசு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உலகத்தினர் காதுகளில் பூ சுற்றிப் பார்த்தனர். பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்வையிட, சர்வதேச பத்திரிகைகளையோ, தொலைக்காட்சிகளையோ, சர்வதேச மனித உரிமை அமைப்பினரையோ இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென்று நீங்களோ, இந்தியாவோ இதுவரை ஒருவார்த்தை இலங்கையிடம் கேட்டதுண்டா? இலங்கைத் தமிழரின் அரசியலில் ஒரு எதிரானப் பாதையை தாங்களும் மத்திய அரசும் எடுத்ததற்குக் காரணம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனஅழிப்பு ஆகிய படுபாதகச் செயல்களில் நீங்களும் மத்திய அரசும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்காளிகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். காந்தியடிகளைப் பெற்ற இந்திய தேசம்தான் இன்றைக்கு முசோலினி வழியில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை மனிதகுலம் ஒருபோதும் மன்னிக்காது.

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப்பணிகள் மேற்கொள்ள முன்னர் ரூ.500 கோடி, தற்போது ரூ.1000 கோடி எனக் கொலைவெறியர்களுக்கே கூலி தந்து கொண்டிருக்கிறீர்களே தவிர, அந்த நிவாரணத் தொகை தமிழர்களுக்காகச் செலவிடப்பட்டனவா? என்று சர்வதேசத் தொண்டு நிறுவனங்களையாவது அனுப்பி கண்காணித்தீர்களா? இப்போதுகூட உங்கள் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு அனுப்பப்படும் சிறப்புத் தூதர்குழு முன்னர் போர்நிறுத்தம் செய்யச்சென்ற இந்தியாவின் முயற்சிபோல் தேர்தலுக்காக நடத்தப்படும் ஓரங்க நாடகம்தானே தவிர, தமிழருக்கு எவ்விதப் பயனையும் தரப்போவதில்லை. 

ஈழத்தமிழருக்குத்தான் இந்தியா துரோகம் செய்கிறது. இந்தியத் தமிழரான தமிழக மீனவர்களை இதுவரை 500க்கும் மேற்பட்டோரைச் சிங்கள கடற்படை சுட்டும், அடித்தும் கொன்று வருகிறதே. அதைக்கூட தட்டிக் கேட்காமல், அதற்கும் வெறும் கடிதங்களை மட்டும் அனுப்பி வந்தால், இதுவா தமிழரைக் காப்பாற்றும் இலட்சணம்? கடைசியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட செல்லப்பனுக்கு ரூ.3 இலட்சம் நிவாரண உதவி வழங்கினீர்கள். அரசு ஊழியர் ஊதிய உயர்வை முன்தேதியிட்டு வழங்கும் உங்கள் அரசு, இதற்குமுன் கொல்லப்பட்ட பிற மீனவர் குடும்பத்திற்கும் முன்தேதியிட்டு ஏன் ரூ.3 இலட்சம் நிவாரண உதவி வழங்கக்கூடாது? இரயில் விபத்தில் இறந்து போன குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய இந்திய அரசு, சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தாருக்கு வேலைவாய்ப்புத் தரவேண்டுமென்று கேட்டால்கூடவா உங்களது ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள்?

பிறமாநிலத்திலுள்ள முதலமைச்சர்கள், தங்கள் மாநிலத்தில் மட்டுமன்றி, உலகில் பிறநாடுகளில் தங்கள் இனத்தவர் பாதிக்கப்பட்டால், கூட்டணி வைத்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்திய அரசைத் துணிவுடன் தட்டிக்கேட்டு உரிய நிவாரணம் தேடும்போது, தாங்கள் மட்டும் வெறும் கடிதம் விடு தூது நடத்திக்கொண்டு, காவிரி நீர், முல்லைப் பெரியாறு, பாலாற்று நீர், கச்சத் தீவு போன்ற தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக காவு கொடுத்துக் கொண்டு தமிழர்களைக் கண்ணீரும், செந்நீரும் சிந்திக்கொண்டிருக்க விடலாமா? எல்லை தாண்டி வந்தாலும் பிறநாட்டு மீனவரை இந்தியா உட்பட எந்தநாடும் சுட்டுக்கொன்ற வரலாறு உலகில் இல்லை. ஆனால் நட்பு நாடாகக் கருதப்படும் இலங்கை மட்டும்தான் தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்கிறது. இதைக்கூடவா நீங்கள் தட்டிக்கேட்கக் கூடாது? தட்டிக்கேட்ட சீமானையாவது தாங்கள் விட்டுவைக்கக் கூடாதா? சீமான் என்றால் உங்களுக்குச் சிம்மசொப்பனமா?

வாக்களித்த மீனவத் தமிழரையும் காப்பாற்ற உங்களால் முடியவில்லை. வாழ்விழந்த ஈழத்தமிழருக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை நடைபெறுவதற்கு ஆதரவாகக் குரலெழுப்பவும் உங்களால் முடியவில்லை. ஆனால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உங்களைத் தலைவராக மதித்துப் போற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். தமிழர் வாழ்வு எங்கு, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, உங்கள் குடும்பத்தார் எடுக்கும் படங்களைப் பார்த்து உங்கள் பெட்டிகளை நாங்கள் டாலர்களாலும், பவுண்டுகளாலும் நிரப்பிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற சிந்தனை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர்உள்ளிட்ட புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடம் உருவாகி, உறுதிபெற்று வருகிறது. எங்களுக்காக ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இரத்து செய்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும்போது, ஈழத்தமிழர்களாகிய நாங்கள் மட்டும் தமிழர்களைக் காக்க மனமில்லாத தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தார் வெளியிடும் திரைப்படங்கள் அனைத்தையும் தமிழர்கள் யாரும் பார்க்காமல் புறக்கணிக்கும் இயக்கம் நடத்த முடிவு செய்து விட்டோம். இதுகூட ஒருவகையில் அண்ணல் காந்தி காட்டிய இந்திய வழிமுறைதான். அடிமைப்படுத்தியோரை வெளியேற்ற அன்று காந்தி நடத்தியது அந்நியத் துணிகள் எரிப்புப் போராட்டம்! எம்மினத்தைக் கொத்தடிமைகளாக்க விரும்புவோரை எதிர்க்க உலகத்தமிழர்கள் இன்று நடத்தப்போவது 'கருணாநிதி குடும்பத் திரைப்பட புறக்கணிப்புப் போராட்டம்!'

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நமது ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்காட்ட இந்த இனமானம் காக்கும் அறப்போருக்கு ஒத்துழைப்பு தந்து வெற்றிபெறச் செய்திட வேண்டுகிறோம். அத்துடன், ஐ.நா.மன்றம் மேற்கொள்ளும் இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணைக்கான மதியுரைக் குழுவை மட்டுமே நம்பிக்கொண்டிராமல், ஈழத்தமிழின படுகொலை பற்றிய ஆதார ஆவணங்களைத் தொகுத்து தமிழர்கள் வாழும் அந்தந்ந நாட்டின் நீதிமன்றங்களில் இராஜபக்சே கும்பல் மீதும், அவர்களுக்குத் துணைபோன சக்திகள்மீதும் போர்க்குற்ற விசாரணை வழக்குகள் தொடுக்க முன்வர வேண்டுகிறோம்.

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, இந்தப் காமப்பாதிரியை மன்னியும்.


மறக்க முடியுமா என்று ஒரு தொடர் ஜகத் கஸ்பரால் நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததை அறிவீர்கள். அந்தத் தொடர் எழுதப்பட்டு வந்ததை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். அந்தத் தொடரைப் படித்தவர்களுக்கு, புலிகள் இயக்கமே, இந்த போலிப் பாதிரி கஸ்பரை நம்பித்தான் இருப்பது போலவும், இந்தக் கஸ்பர் சொன்ன பேச்சை பிரபாகரன் கேட்டிருந்தால், புலிகள் இயக்கம் வீழ்ந்திருக்காது என்பது போலவும் எழுதப் பட்டு வந்தது. 

இந்தத் தொடர் வெளிவந்த பல நக்கீரன் இதழ்களின் அட்டை படம், இந்த “மறக்க முடியுமா“ தான். இந்த கஸ்பரை இது போல ப்ரமோட் செய்ததில், கர்ம வீரர் காமராஜ் மற்றும் கஸ்பர் இருவருக்கும் மிகுந்த பலன் தரும் விஷயமாக இருந்ததால், ரொம்ப வசதியாகப் போனது.

யார் இந்த ஜகத் கஸ்பர் ?

இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கப் பாதிரி. இன்று தமிழ் மையம் என்ற ஒரு மடத்தை வைத்து நடத்தி இந்த மடத்தின் மூலம், மத்திய மாநில அரசுகளின் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், இந்தப் பன்னாடையின் பின் புலம் என்ன என்பதைப் பார்ப்போம்.

கஸ்பர் என்ற இந்தப் போலிப் பாதிரி, இறையியல், வரலாறு, தத்துவம், அரசியல் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆனால், இந்தப பாடங்கள் எதிலும் சிறக்காமல், பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதுதான் கஸ்பரின் திறமை. 

1997 முதல், 2002 வரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றினார். வெரித்தாஸ் வானொலி என்பது, நம்ப ஊரில் ப்ரேயர் சேனல், ஏசு அழைக்கிறார் என்ற டுபாக்கூர் சேனல்கள் வருகிறதல்லவா ? 

இதன் ஒலி வடிவம் தான் ரேடியோ வெரித்தாஸ். இந்த வெரித்தாஸ் வானொலியின் மறுபக்கம் என்னவென்றால், இது அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவால் நடத்தப் படுவது என்ற தகவல். மணிலாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே கஸ்பருக்கு, புலிகள் இயக்கத்துடன் தொடர்பு ஏற்படுகிறது.

கஸ்பரின் பாதிரி என்ற போர்வையும், சர்வதேச தொடர்புகளும், புலிகள் இயக்கத்திற்கு, இந்த ஆளை நாம் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று எண்ணி, புலிகளின் நிதியைக் கையாளும் ஒரு பொறுப்பு கஸ்பர் தலையில் விழுகிறது.

2002ம் ஆண்டு வரை வெளிநாட்டிலேயே இருந்த கஸ்பர், இந்தியாவுக்குள் கால் பதித்தது இசை ஞானி இளையராஜா மூலமாகத் தான். இளையராஜாவின் திருவாசக சிம்பொனியை வெளியிடும் பொறுப்பை ஏற்று, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருவாசகத்தை வெற்றிகரமாக வெளியிட்டார்.


இதை வெளியிடும் போது, ஏற்பட்ட சினிமா தொடர்புகள் மூலம், அரசியல் தொடர்புகளை வளர்த்தெடுக்கிறார் கஸ்பர்.

கருணாநிதி குடும்பத்தோடு தொடர்புகள் ஏற்பட்டதும் கஸ்பருக்கு சுக்கிர திசைதான்.
கஸ்பரின் சர்வதேசத் தொடர்புகளை கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கருப்புப் பணத்தை மூட்டையாகக் கட்டி வைத்திருப்பவர்கள் முடிவெடுத்தார்கள். 

அதற்கான வழி முறைகளை கஸ்பரே வகுத்துக் கொடுத்தார். அவர் மூளையில் உதித்த திட்டம் தான் “தமிழ் மையம்“. இந்தத் தமிழ் மையம் 2002 ஜுலையில் தொடங்கப் பட்டது. இந்த மையத்தின் நோக்கம், மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்று கூறினாலும், உண்மையான வேலை, கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது. 

இந்தத் தமிழ் மையத்தின் ட்ரஸ்டிக்கள் யார் தெரியுமா ? கனிமொழி. ஸ்ரீராம் சிட்ஸ் முதலாளியின் மனைவி, மாஃபா பாண்டியராஜனின் மனைவி, மற்றும் சதீஷ் டேவிட் என்பவர்கள். 

இந்தத் தமிழ் மையத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் கூறுகிறேன். Central Institute of Classical Tamil என்ற மத்திய அரசு நிதி உதவி பெறும் ஒரு நிறுவனம் இருக்கிறது. இதன் பணி, மொழியை மேம்படுத்தவது, மக்களுக்காக தமிழ் இலக்கியங்களை எளிமைப் படுத்தி வழங்குவது.

இந்த நிறுவனத்திடமிருந்து, திருக்குறளை இசையாக்குகிறேன் என்று ஒரு 8 கோடி ரூபாயை வாங்கினார் இந்தப் போலிப் பாதிரி. வாங்கி, திருக்குறளை இசையோடு கலந்த சிடியாக தயாரித்து, பேராசிரியர்.அன்பழகனை வைத்து வெளியிட வைத்து, ஒரு சிடியை 500 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார் இந்தப் பாதிரி.

இந்தச் செம்மொழி மாநாட்டில், ஆடல் பாடல் தொடர்பான அனைத்து வேலைகளும், கஸ்பரின் தம்பி, ப்ரைட் ஜெகத் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அத்தனை வேலைகளிலும், 25 முதல் 40 சதவிகிதம் வரை கஸ்பர் குடும்பம் ஆட்டையைப் போட்டிருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

செம்மொழி மாநாடு எப்போதாவது தானே நடக்கும். அதனால், ஆண்டுதோறும் சம்பாதிக்க கஸ்பர் கண்டு பிடித்த அற்புதமான வழி, மராத்தான் ஓட்டப் பந்தயம் நடத்துவது. இந்த ஓட்டப் பந்தயத்தை, தனக்கு இருக்கும் பணத்தாலும், பத்திரிக்கை செல்வாக்காலும், பிரபலப் படுத்தி பெரிய அளவில் ஸ்பான்சர்களைப் பிடித்து, ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையப் போடுவது, கஸ்பருக்கு கை வந்த கலை.

இதே போல, ஆண்டுதோறும் நடக்கும் சென்னை சங்கமத்தில், கனிமொழியோடு சேர்ந்து கொண்டு, விழா ஏற்பாடுகள் அத்தனையும் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்து விட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமிங்கிலத்தையே முழுங்கி ஏப்பம் விடும், கனிமொழியே கடுப்பாகும் அளவுக்கு, 50 சதவிகிதத்துக்கு மேல் ஆட்டையப் போட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் ஆராய்ச்சிக்காக ஏறக்குறைய 300 கோடி ரூபாய்கள், Central Institute of Classical Tamil, International Institute of Tamil Studies, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு, மொழிப் பிரிவு, போன்ற நிறுவனங்களிடம் குவிந்து கிடக்கின்றன. நான் தமிழில் ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று இந்த நிறுவனங்களிடமிருந்து இந்த ஆண்டு மட்டும் கஸ்பர் இது வரை பெற்ற தொகை ரூபாய் 16 கோடி.

இந்த நிறுவனங்களிடமிருந்து, ப்ராஜேக்ட் செய்கிறேன் என்று, பணத்தை வாங்கி, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும், மற்ற கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறை மாணவர்களை அழைத்து, உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டி, அவர்களை வைத்து, கடுமையாக வேலை வாங்கிக் கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் போலிப் பாதிரியோடு கூட்டணியில் இருப்பவர்கள், ஆ.ராசா, தங்கம் தென்னரசு, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவிக்குமார், அமைச்சர் பூங்கோதை. இவர்கள் கூட்டணி எப்படி வேலை செய்கிறது தெரியுமா ? இது தவிர, வழக்கமான “டர்ட்டி பாய்ஸ்“ இதில் உண்டு. “டர்ட்டி பாய்ஸ்“ குழுவிற்கு, கஸ்பர்தான் பொருளாளர்.

செட்டிநாட்டு சீமானின் மகன், கார்த்தி சிதம்பரம் இவரின் நெருங்கிய கூட்டாளி. எப்படி நெருங்கிய கூட்டாளி என்றால், மாலை வேளைகளில் கஸ்பரோடு அமர்ந்து Green Label ஸ்காட்ச் குடிக்கும் அளவுக்கு நெருங்கிய கூட்டாளி.

பாதிரி நடத்திய கிரிஸ்துமஸ் விழாவில் பேசும் ஆ.ராசா


அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, மென்பொருள் ஆர்டர் வழங்குவது. இந்த மென் பொருள் ஆர்டர்கள், கஸ்பரோடு யார் ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கே வழங்கப் படும். அதாவது, உங்களிடம் ஒரு மென்பொருள் இருக்கிறது என்றால், நீங்கள் கஸ்பரை சந்திக்க வேண்டும். 

அந்த மென்பொருளின் விலை 2000 ரூபாய் என்றால், கஸ்பர், உங்களிடம் 2000 ரூபாய் உங்களுக்கு வழங்கப் படும் என்று கூறுவார். இந்த மென்பொருளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், 5000 ரூபாய்க்கு கஸ்பர் வழங்குவார். கஸ்பருக்கு 3000. உங்களுக்கு 2000. 


இது போல, ஆயிரக்கணக்கான மென்பொருள் உங்களிடம் வாங்கப் படும் என்பதால், கிடைத்த வரை லாபம் என்று நீங்களும் சந்தோஷப் படுவீர்கள். இந்த 3000த்தை கஸ்பர் முக்கியஸ்த்தர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுத்தது போக, ஒரு பெரும் பாகத்தை அமுக்குவார்.
கருப்பை வெள்ளையாக்க, தமிழ் மையத்தைத் தவிர, Give Life. நாம் என மொத்தம் எட்டு ட்ரஸ்ட்டுகள் வைத்துள்ளார் கஸ்பர். 

இந்த ட்ரஸ்ட்டுகள் மூலம், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களிடமிருந்தும், பணம் வசூல் செய்வது, கஸ்பரின் திறமை.
இது தவிர, Acrolinks Business Solutions Pvt. Ltd. என்ற மென்பாருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்தப் பாதிரி. இந்த நிறுவனம் சென்னையில் உள்ளது.

திருடர்களின் கூட்டணி

இந்த நிறுவனம் போக, மும்பையில் மற்றொரு நிறுவனம் இருப்பதாகவும், தகவல்கள் கூறுகின்றன. மாதத்திற்கு இரு முறை, மும்பை செல்லும் கஸ்பரோடு, இவரது செயலாளரும், மேரி என்ற கன்னியாஸ்திரியும் செல்வார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
சென்னையில் இருக்கும் நாட்களில் கஸ்பரின் முழுநேர வேலை, ப்ரோக்கர் தொழில். ப்ரோக்கர் என்றால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். 

அரசு காண்ட்ராக்ட் பெற வேண்டும், அரசு வேலை பெற வேண்டும், நல்ல போஸ்டிங் வேண்டும் என்று பல்வேறு வேலைகளுக்காக, மயிலாப்பூரில் உள்ள தமிழ் மைய அலுவலகத்திற்கு, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தொடர்ச்சியாக பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

எளிமையாக வாழ்க்கை நடத்த வேண்டிய இந்த கத்தோலிக்கப் பாதிரியிடம் இன்று எத்தனை வண்டிகள் தெரியுமா ?

1) ஹ்யுண்டாய் ஆக்சென்ட்
2) டொயோட்டா கரோல்லா
3) பியட் பாலியோ
4) டோயோட்டா இன்னோவா
5) போர்ட்

ஈழப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில், இந்தப் பாதிரி என்ன செய்தார் தெரியுமா ? நக்கீரனில் புருடா விடுவதைத் தவிர்த்து, ஒரு கூட்டமைப்பை அமைப்பார். முக்கியமான நபர்களை அழைத்து, அவர்களிடம் நாம் ஒரு கூட்டமைப்பை அமைத்து போராட்டம் நடத்துவோம் என்று கூறுவார்.
அந்தக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் மட்டும் 

நடக்கும். கூட்டமைப்புக்கு வருகை தரும் ஒருவர் கூட, இரு சக்கர வாகனத்திலோ, நடந்தோ வர மாட்டார்கள். அத்தனை பேரும், சொகுசு காரில் வருவார்கள். சொகுசு காரில் வருபவன், ஈழத் தமிழருக்காக தெருவில் இறங்குவானா ?

இப்படியே, பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று தன் வண்டியை ஒட்டி, பல கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார் கஸ்பர்.

பாதிரியாக இருந்தாலும், கஸ்பர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போலத்தான் தெரிகிறது. கடவுள் நம்பிக்கை இருந்தால், இத்தனை பாவங்களை தொடர்ந்து செய்வாரா கஸ்பர் ?

சவுக்குக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இருந்தால், பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே, இந்தப் போலிப் பாதிரி கஸ்பரை மன்னியும் என்றுதானே பிரார்த்திக்க வேண்டும் ?.

செல்போனில் மரண ரகசியம்!

"கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக' என்பதுபோல்... ஒரு கொலை விவ காரத்தைத் தோண்டப்போய்... பல கண்றாவி பூதங்கள் கிளம்ப... அதிர்ச்சியில் விக்கித்துப் போயிருக்கிறார்கள் மதுரைக் காக்கிகள்.
மதுரை தெற்குவாசல் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த கம்ப்யூட்டர் என்ஜினியரான 22 வயது கிருஷ்ணன்... மாட்டுத்தாவணி போகும் அரசு பஸ் வர... ஓடிப்போய் ஏறினார். அவரைப் போலவே 3 இளைஞர்களும் போதையுடன் ஏறினர். அவர்கள் முகத்தில் முரட்டுத் தனம் முகாமிட்டிருந்தது. அப்போது மணி இரவு 9.45 என்பதால் பஸ்ஸில் அதிக கூட்டமில்லை.

கடைசி சீட்டில் கிருஷ்ணன் உட்கார... ஏறிய இளைஞர்களும் கிருஷ்ணாவின் இரண்டு பக்கத்திலும் நெருக்கியடித்து உட்கார்ந்துகொண்டு... ""டேய் உன் செல்போன் ரெண்டையும் மரியாதையா கொடுடா. இல்லே வெட்டுப்பட்டுத்தான் சாவே'' என்றனர் மிரட்டலாய்.

கிருஷ்ணாவோ ""தர முடியாது''’என்றபடி தன் சட்டைப் பையிலும் கையி லும் இருந்த இரண்டு செல்போன்களையும் சட்டென தன் சட்டை பனியனுக்குள் போட்டுக்கொண்டான். ""சரி இறங்குடா'' என்றபடி அவர்கள் அவனை இழுக்க.. அவன் திமிறினான். உடனே ஆளாளுக்கு அவனைக் கத்தியால் குத்த.. கிருஷ்ணா அலறியபடியே சாய்ந்தான். பஸ்ஸுக்குள் நடந்த இந்தப் படுகொலை மதுரையையே பகீரில் உறைய வைத்தது.

விசாரணையில் இறங்கிய காக்கிகள் கொலையானவர் யாரெனத் துருவ... கொலையானவர் கிருஷ்ணா என்கிற டிப்ளமா என்ஜினியர் என்பதும்... விமான நிலைய விரிவாக்கப் பணிகளின் டெண்டர் இன்சார்ஜான பாலகிருஷ்ணனின் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிவதும் தெரியவந்தது.

கிருஷ்ணாவின் அம்மா சுப்புலட்சுமி ""என் மகனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு நினைச்சிகிட்டு இருந்தேன். அதுக்குள்ள அந்தக் கொலைகாரப் பாவிங்க இப்படி பண்ணிட்டுப் போயிட்டானுங்களே. நான் என்ன பண்ணப் போறேனோ''’’ என்றபடி கதறினார்.

பஸ் பயணிகளை விசாரித்தபோது ""செல் போன்களை கொடுடான்னு கேட்டுத்தான் வெட்டி னானுங்க. அந்தப் பையன்கிட்ட இருந்த செல்போன் களோடதான் அவனுங்க தப்பிச்சிப் போனா னுங்க...''’என்று சொல்ல... செல்போனுக்குள்தான் கிருஷ்ணாவின் மரண ரகசியம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.

இதற்கிடையே கிருஷ்ணாவின் அலுவலகத்தில் போலீஸ் டீம் தீவிரமாக விசாரித்தபோது “""வெளியில் பார்வைக்கு டிப்டாப்பான ஆண்மாதிரி தெரிஞ்சாலும் கிருஷ்ணா ஒரு திருநங்கை''’’ என்று குண்டுபோட்ட ஊழியர்கள்...’’""எங்க ஆபீஸில் தனியா தங்கி வேலை பார்க்கும் ஒரு கிளுகிளு லேடி கம்யூட்டர் ஆப்பரேட்டருக்கும்... எங்க ஆபீஸ் இன்சார் ஜுக்கும் தொடர்பு உண்டு. ஒருநாள் அவங்க சல்லா பிச்சதை இந்த கிருஷ்ணா செல்போன்ல படம்பிடிச்சி மிரட்டிவந்ததா தகவல். அதேபோல் இங்க இருக்கும் பாலாஜிக்கும் ரமேஷுக்கும்கூட அந்தப் பொண்ணோட நெருக்கம். அவங்களையும் அவன் படம் எடுத்ததா பேசிக்கிறாங்க''’என்று அதிரடித் தகவலைத் தர.. போலீஸ் டீம் உஷாரானது. அலுவலக இன்சார்ஜ் பால கிருஷ்ணன் சொந்த ஊரான நாகர்கோயிலுக்குப் போயி ருப்பதாக அவர்கள் சொல்ல... அவர் செல்போனோ ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது.

அவர் பெயரை சிவப்புப் பேனாவால் அண்டர் லைன் பண்ணி... அவரைக் குறிவைத்து ஒரு டீம் நாகர்கோயில் விரைந்தது. கிருஷ்னாவின் அலுவலக அறையை குடைந்தபோது செக்ஸ் பட சி.டி.க்களும் செக்ஸ் புத்தகங்களும்தான் கிடைத்தன. இதற்கிடையே அந்த கிளுகிளு பெண்ணையும் பாலாஜி மற்றும் ரமேஷையும் ஸ்டேஷனுக்குத் தூக்கிப்போய் போலீஸ் விசாரிக்க... ""எனக்கும் எங்க இன்சார்ஜ் சாருக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான்.

கிருஷ்ணா எப்பப் பார்த்தாலும் யாரையாவது படம் எடுத்துக்கிட்டே இருப்பான். அதை நானே பலதடவை கண்டிச்சிருக்கேன். ஆனா யாரோடவெல்லாம் என்னைப் படம் எடுத்தான்னு தெரியாது. எனக்கும் அவன் கொலைக்கும் சம்பந்தமே இல்லை''’என்று அழுதாள் கிளுகிளு லேடி.

பாலாஜியும் ரமேஷும் ""அந்த கிருஷ்ணா தன் செல்போன்ல எங்க சாரையும் அந்தப் பொண்ணையும் படம் எடுத்து வச் சிருந்ததை எங்கக்கிட்டக் காட்டி னான். அதனால் அந்தப் பொண்ணு மேல சபலமான நாங்க... உன் படத்தை பார்த்துட்டோம்னு சொல்லியே எங்க ஆசைகளுக்கு அவளைப் படியவச்சோம். அதேபோல் கிருஷ்ணா திரு நங்கை என்பதால் அவனையும் ஆசை களுக்கு அடிக்கடி பயன்படுத்திக்கிட் டோம். நாங்க மட்டு மல்ல.. எங்க ஆபீ ஸில் பலபேர் அவனைத் தொட் டிருக்காங்க. ஆனா அவன் கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. கொலைசெய்யும் அளவுக்கு நாங்க தைரியசாலியும் கிடையாது''’என்று கண்ணைக் கசக்கினார்கள்.

நாகர்கோயிலில் இருந்து அள்ளிவரப்பட்ட அலுவலக இன்சார்ஜ் பாலகிருஷ்ணனோ, "" “எங்க அம்மாவுக்கு கண் ஆபரேசன். அதுக்காகத்தான் போனேன். அன்னைக்கு சார்ஜ் இல்லாததால் செல்போன் ஆஃப் ஆய்டிச்சி. அவன் என்னையும் அந்தப் பொண்ணையும் படம் எடுத்திருப்பதாச் சொல்லி சம்பளத்தை அதிகமா கொடுக்கும்படி மிரட்டுனது உண்மைதான்.

அந்தப் பொண்ணோட விருப்பத்தின் பேரில் நான் தொட்டதால் படத்தைப் பத்தி நான் கவலைப்படலை. சத்தியமா நான் கொலை செய்யலை. எங்களை சந்தேகப்படுறதை விட்டுட்டு... உண்மையான குற்வாளிகளை கண்டுபிடிங்க சார்''’என்றார் திரும்பத் திரும்ப.

கிருஷ்ணாவின் செல்போனை கண்டுபிடித்துவிட்டால் துப்பு கிடைத்துவிடும் என முடிவு கட்டிய போலீஸ் டீம்... அவனது செல் நம்பரை வைத்து... அவன் வைத்திருந்த செல்போனின் ஐ.எம்.ஐ. நம்பரை கண்டுபிடித்தது.

அந்த நம்பருக்குரிய போன் எங்கே இருக்கிறது என செல் டவர் மூலம் துழாவியபோது... இண்டிகேட்டர் மதுரை மீனாட்சி பஜார் பகுதியைக் காட்டியது. அங்கே துருவியபோது 60- ஆம் நம்பர் கடையில் கிருஷ்ணாவின் செல்போன் இருப்பது தெரிந்தது. கடையில் இருந்த ஆனந்த், "“டீ.சர்ட்-ஜீன்ஸ் போட்ட 20 வயசுப் பையன் ஒருத்தன் வித்துட்டுப்போனான் சார். கூடவே இன்னொரு போனையும் வித்தான்'’என்றபடி 2 செல்போன்களை கொடுத்தார்..

அந்த செல்போன்களில் ஒன்றின் டிஸ்பிளேயில் ஒரு இளைஞனின் படம் தெரிய... “அட இவன் கொஞ்ச வருஷத் துக்கு முன்ன கொல்லப்பட்ட கருப்பாயூரணி ரவுடி பாண் டியாச்சே’’ என ஒரு காக்கி உற்சாகத்தில் துள்ளினார். அந்த போனில் இருந்த மெமரி கார்டில் சில குழந்தைகள், கிழவிகள் படங்கள் மட்டுமே இருந்தன. இன்னொரு செல்போனில் மெமரி கார்டே இல்லை.

உடனே கருப்பாயூரணி ரவுடி பாண்டியின் உறவினர்களைத் தேடிப்போன காக்கிகள்... இதெல்லாம் யார் படங்கள் எனக் கேட்டு சம்பந்தப்பட்டவர்களை நெருங்கியது. போட்டோவில் இருந்தவர்களோ "இதையெல்லாம் எடுத்தது இதே ஏரியாவில் இருக்கும் மகாமுனிதான்'’’ என்று சொல்ல... ’அவன் ரவுடிப் பயலாச்சே. அவன்மேல் ரெண்டு மூன்று வழக்கெல்லாம் இருக்கே’’ என்றபடி... அந்த மகாமுனியை நெருங்கினர். வீட்டில் நல்ல தூக்கத்தில் இருந்த மகாமுனியை மடக்கிய காக்கிகள் "எதுக்குடா அந்த கிருஷ்ணாவை கொன்னே'’என செமையாய் கவனிக்க... ’’""அடிக்காதீங்க.. உண்மையைச் சொல்லிடறேன்.

அவனை எங்களுக்கு முன்ன பின்ன தெரியாது. நானும் என் காலேஜ்ல படிக்கும் நண்பர்கள் முனீஸ்வரன், செல்வம் ஆகியோரும் அன்னைக்குத் தண்ணியடிச்சிட்டு... சினிப்பிரியா தியேட்டர்ல படம் பார்க்கலாம்னு போய்க்கிட்டு இருந்தோம். அப்ப செத்துப்போன கிருஷ்ணா... தெற்கு வாசல் பஸ் ஸ்டாண்டில் ஒரு மாதிரியா நின்னுக் கிட்டு கையில் இருந்த செல்போனை காட்டி.. "இதில் பலான படமெல்லாம் இருக்கு. வரீங்களா ஜாலியா இருக்கலாம்'னு எங்களைக் கூப்பிட்டான்.

அவன் திருநங்கைன்னு புரிஞ்சிக்கிட்ட நாங்க... முதல்ல வேணாம்னு சொன்னோம். அவன் கிளம்பிட்டான். அப்பதான் சரி... அவன்கிட்ட இருக்கும் செல்போன் களையும் பணத்தையும் பிடுங்கிக்கிட்டு... அவனை அனுபவிச்சிட்டு துரத்தி விட்டுடுலாம்னு அதே பஸ்ஸில் அவசரமா ஏறினோம். "செல்போனைக் கொடுடா என்ன இருக்குன்னு பாக்கலாம். கீழ இறங்குடா எங்கயாவது போலாம்'னு கூப்பிட்டோம்.

அவன் செல்போனைத் தரமாட்டேன்னு அடம்பிடிச்சான். அப்ப போதையில் இருந்த நான் கோபத்தில் கையில் இருந்த கத்தியால் லேசா அவனைக் குத்த..... அவன் திருப்பி அடிக்க ஆரம்பிச்சான். அதனால் என் நண்பர்களும் அவனைக் கத்தியால் குத்த ஆரம்பிச்சிட்டாங்க. அவன் அலறிச்சாய... படார்னு நாங்க பஸ்ஸில் இருந்து இறங்கி ஓட ஆரம்பிச் சிட்டோம். இதுதான் சார் நடந்தது''’’ என்றபோது...

""அடப்பாவிகளா 2 செல்போன்களை அபகரிக்கவா இப்படி கொலை பண்ணினீங்க? அதுக்குள்ள பல ஆங்கிள்ல விசாரிச்சி.. தலை கிறு கிறுத்துப்போய் நிக்கிறோம்''’’ என்று அப்படியே ரெண்டு நிமிடம் உட்கார்ந்து விட்டார்கள் காக்கிகள்.

கிருஷ்ணாவின் செல்போனில் இருந்த மெமரி கார்டை கைப்பற்றி ஆராய்ந்தபோது... மதுரையில் உள்ள இண்டர்நெட் செண்டர் சில்மிஷக் காட்சியும்... வேனுக்குள் ஒரு பெண் சட்டை கழற்றும் காட்சியும் மட்டுமே இருந்தன.

கிருஷ்ணாவின் மர்டரை விசாரிச்ச எங்களுக்கு... அவனோட அலுவலகத்தில் நடக்கும் லீலைகள் பத்தின தகவல் அதிரவச்சிது. சரி... செக்ஸ் படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில்தான் கிருஷ்ணா கொல்லப்பட்டிருக்கான்னு நினைச்சி மேலும் துருவினா... கடைசியில் உப்புப் பெறாத விஷயத் துக்காக அவனை கொன்னுருக்கானுக.

தான் வேலை பார்த்த அலுவலகத்தில்... கிருஷ்ணா செல்போன்ல எடுத்ததா சொல்லப்பட்ட படங்கள் எதுவும் எங்களுக்குக் கிடைக்கலை. எங்களை எங்கெங்கோ கொண்டுபோய் கிறுகிறுக்க வச்சிடுச்சு இந்த வழக்கு''’என்கிறார் ஏ.சி.வெள்ளதுரை.

இப்படி போற போக்குல கூடவா கொல்லுவாக... மதுரை ஆளுக?.