Monday, June 20, 2011

கணினி பற்றி சந்தேகங்களும் விளக்கங்களும்

கேள்வி: கூகுள் டாக்ஸ் பைல் ஒன்றை எப்படி வேர்ட் தொகுப்பில் அமைத்து சேவ் செய்வது?

பதில்: இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவதாக, அப்படியே அந்த டாகுமெண்ட்டை கண்ட்ரோல் + ஏ கொடுத்து காப்பி செய்து, பின்னர் வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட் பைல் ஒன்றை உருவாக்கி அதில் பேஸ்ட் செய்து, பின்னர் சேவ் செய்திடலாம். 

இரண்டாவதாக, கூகுள் டாக்ஸ் பிரிவில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிய பின், அதனை மைக்ரோசாப்ட் வேர்ட் பார்மட்டில் சேவ் செய்திடலாம். பின்னர் அந்த பைலை வேர்ட் புரோகிராமில் திறந்து பயன்படுத்தலாம். இதற்கு கூகுள் டாக்ஸ் - இல், பைல் மெனு தேர்ந்தெடுக்கவும். பின்னர் Download as என்பதில் கிளிக் செய்து, அடுத்து Word என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Opening என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த டயலாக் பாக்ஸில், Open with: To open the Google document using Microsoft Word என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, Save as என்பதில் கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளவும். இந்த பைல் உங்கள் ஹார்ட் ட்ரைவில் சேவ் செய்யப்படும். 

இந்த வழி ஏறத்தாழ, வேர்ட் தொகுப்பில் குச்திஞு ச்ண் கட்டளை பயன்படுத்தி, பைலை சேவ் செய்வது போல ஆகும்.

கேள்வி: எனக்கு வந்திருக்கும் இமெயில் செய்தியின் ஒரு பகுதியை மட்டும் எப்படி பிரிண்ட் செய்வது?

பதில்: இமெயில் செய்தியைத் திறந்து கொள்ளவும். எந்த டெக்ஸ்ட்டை பிரிண்ட் செய்திட வேண்டுமோ, அதனை செலக்ட் செய்திடவும். பின்னர் அதனைக் காப்பி செய்து, வேர்ட் காலி டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து, பேஸ்ட் செய்திடவும். இதனை பிரிண்ட் செய்திடலாம். தேவைப்பட்டால், இதற்கு ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம். அல்லது அப்படியே விட்டுவிடலாம். வேர்டில் தான் இதனை மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட் உங்கள் கம்ப்யூட்டரின் கிளிப் போர்டில் இருக்கும். எந்த வேர்ட் ப்ராசசரையும் திறந்து, பேஸ்ட் செய்து, பிரிண்ட் செய்திடலாம்.

கேள்வி: அச்சிட டாகுமென்ட் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பிரிண்ட் கட்டளை கொடுக்கையில் கிடைக்கும் பாப் அப் பாக்ஸில், பிரிண்ட் டு பைல் (Print to File) என்று கிடைக்கிறது. பைல் ஒன்றில் எப்படி பிரிண்ட் செய்வது என விளக்கவும். ஏன் இந்த வசதி தரப்பட்டுள்ளது?

பதில்: முதலில் இந்த வசதி எதற்குத் தரப்பட்டுள்ளது என்று விளக்கிவிடுகிறேன். வர்த்தக ரீதியாக, பிரிண்ட் செய்வதற்கான பணிகளுக்கு இந்த பிரிண்டு டு பைல் உதவும். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் அல்லது அடோப் இல்லஸ்ட் ரேட்டர் கொண்டு ஓர் அருமையான நூலை உருவாக்கி இருப்பீர்கள். இதனை வர்த்தக ரீதியாக அச்சிட, அச்சிடும் மையத்தில் உள்ள் கம்ப்யூட்டரில் இந்த சாப்ட்வேர் தொகுப்புகள் தேவை இல்லை. அவர்களுக்கு இந்த பைல் டு பிரிண்ட் உதவுகிறது.

முதலில் எந்த டாகுமெண்ட்டினை வர்த்தக ரீதியில் அச்சிடத் தர வேண்டுமோ, அதனை உருவாக்கவும். பின்னர் File > Print > Print எனக் கட்டளை கொடுக்கவும். நீங்கள் கூறியவாறான பாப் அப் கட்டத்தில் Print to file என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் செக் பாக்ஸ் டிக் அடையாளம் ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்திடவும். பின்னர், இந்த பைலுக்கு ஒரு பெயரினையும், அது சேவ் செய்திடப்பட வேண்டிய இடத்தினையும் தேர்ந்தெடுக்கவும். இந்த பைலின் துணைப் பெயர் .prn என இருக்கும். இந்த பைலில், டாகுமெண்ட்டின் லே அவுட், பாண்ட், லைன் ஸ்பேஸ் ஆகிய அனைத்தும் சேவ் செய்யப்படும். இனி இந்த பைலை அச்சிடும் மையத்திற்கு அனுப்பலாம். ஒருவேளை இந்த பைலில் உள்ள பாண்ட் அவர்களிடம் இல்லை என்றால், அதற்கு இணையான பாண்ட் அமைத்து அச்சிடப்படும். அல்லது முதலிலேயே நீங்கள் பயன்படுத்திய பாண்ட் குறித்து அச்சிடுபவருக்கு அறிவித்து விடலாம். 
கேள்வி: பிரிண்ட் ஸ்கிரீன் Sys Rq கீயில் எனக் காணப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் மலர் இதழில் இது வரை இதனைப் பற்றிக் குறிப்பிட்டதே இல்லை. நூல்களிலும் தகவல் இல்லை. இதன் பயன்பாடு என்ன?

பதில்: வெகு நாட்களுக்கு முன்பு உங்களைப் போன்ற ஆர்வம் மிகுந்த வாசகர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளிக்கையில் இதே சந்தேகத்திற்கான விளக்கம் தரப்பட்டிருந்தது. அதனாலென்ன? இதோ உங்களுக்கான தகவல்.
Sys Rq என்பது System Request என்பதன் சுருக்கமாகும். இது மெயின் பிரேம் என்னும் ஒரு வகைக் கம்ப்யூட்டரில், மையக் கம்ப்யூட்டரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கீயாகும். முன்பு பேஜர் கொடுத்து ஒருவரின் கவனத்தை திருப்புவோம் அல்லவா! அது போலத்தான் இதுவும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கு எந்த செயல்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.
லினக்ஸ் பயன்பாட்டாளர்கள் சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகள் குறித்து ஆய்வு செய்திட இந்த கீயை முதலில் பயன்படுத்துவார்கள். சிஸ்டம் கிராஷ் ஆனாலும் இந்த கீ அதிகம் பயன்படும். 

இன்னொன்றையும் கவனத்தில் கொள்க. அனைத்து கீ போர்டுகளிலும் பிரிண்ட் ஸ்கிரீன் கீயில் இதுவும் எழுதப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். சிலவற்றில் இது இருப்பதில்லை.

கேள்வி: பார்டர்லைன், கிரிட்லைன் - இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? வேர்ட் டேபிள் குறித்து படிக்கையில் இந்த இரண்டும் பயன் படுத்தப்படுகின்றனவே? என்னுடைய டேபிளில் உள்ள கோடுகள் அச்சாக மறுக்கின்றன. என்ன பிரச்னை?

பதில்: வேர்ட் டேபிளில் மாறா நிலையில் இருப்பவை பார்டர் லைன்களாகும். கிரிட்லைன் என்பவை கற்பனைக் கோடுகள். இவற்றைத் திரையில் பார்க்கலாம் . ஆனால் பிரிண்ட் ஆகாது. உங்கள் டேபிளில் உள்ள கோடுகள் பிரிண்ட் ஆகவில்லை என்றால், டேபிள் பார்டர்களை யாராவது ‘off’ என செட் செய்திருப்பார்கள். இதனைப் பயன்படுத்து பவர்கள் பார்ப்பது கிரிட்லைன்களைத்தான், பார்டர் லைன்களை அல்ல. 
இதற்கான தீர்வு எளிது. டேபிளைத் தேர்வு செய்து, அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், டேபிள் என்ற டேப் தேர்ந்தெடுத்து அதில் Borders and Shadin என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து, Grid என்பதில் கிளிக் செய்து பின்னர், ஓகே பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், ஒரு பாரா முழுவதும் உடையாமல், ஒரே பக்கத்தில் வர வேண்டும் என்றால், என்ன கட்டளை கொடுக்க வேண்டும்?

பதில்: Home டேப் செல்லவும். அதில் பாரா குரூப் டயலாக் லாஞ்ச் செய்திடவும். இதற்கென கீழ் வலது பக்கத்தில், சிறிய அம்புக் குறி ஒன்று தரப்பட்டிருக்கும். அதனைப் பயன்படுத்தவும். நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், Format மெனுவில், Paragraph தேர்ந்தெடுக்கவும். இதில் Line and Page Breaks என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Keep Lines together என்பதில் உள்ள பாக்ஸில் செக் அடையாளம் ஏற்படுத்தவும். பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் டை எடிட் செய்கையில், சில வேளைகளில், நான் டைப் செய்திடும் டெக்ஸ்ட் கூடுதலாக இணையாமல், ஏற்கனவே இருக்கும் டெக்ஸ்ட்டை அழித்து பதியப்படுகிறது. இது சில வேளைகளில் நடக்கிறது. பின் மீண்டும் சரியாகிறது? என்ன காரணம்?

பதில்: இதில் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை. டைப் செய்கையில் கீ போர்டில் உள்ள இன்ஸெர்ட் கீயை அழுத்தி இருப்பீர்கள். இந்த இன்ஸெர்ட் கீ, மாறா நிலையில், நீங்கள் டைப் செய்திடும் டெக்ஸ்ட்டுக்கு இடம் ஏற்படுத்தி பதியும். அதனை அழுத்தினால், இன்ஸெர்ட் எனப்படும் இடைச் செருகள் செயல்பாடு நின்று, ஏற்கனவே இருக்கும் டெக்ஸ்ட்டின் மீதாக டைப் செய்யப்படும். இது இருநிலைகளுக்கும் (On/Off) பொதுவான டாகிள் கீ (Toggle Key). இதனை மீண்டும் ஒருமுறை அழுத்தித் தொடர்ந்து டைப் செய்திட்டால், உங்கள் பிரச்னை தீரும்.

கேள்வி: நேற்று முதல், நான் பைல்களை அழிக்கையில், இதனை ரீசைக்கிள் பின் குப்பைத் தொட்டிக்கு அனுப்பவா என்று கேள்வி கேட்காமல், பைல் அழிக்கப்படுகிறது. இதனால் பயம் ஏற்படுகிறது. இது வைரஸின் வேலையாக இருக்குமோ?

பதில்: நீங்கள் பயப்படும்படி ஒன்றும் நேர்ந்திருக்காது என்று நம்புவோம். எதற்கும் கீழே குறிப்பிட்டபடி செயல்படுங்கள். டெஸ்க் டாப்பில் ரீசைக்கிள் பின் ஐகானைத் தேர்ந்தெடுங்கள். அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடவும். இங்கு பல டேப்கள் அடங்கிய விண்டோ காட்டப்படும். ஒவ்வொரு டேப்பிலும் ஒரு ஹார்ட் ட்ரைவ் பிரிக்கப்பட்ட துண்டு பார்க்கலாம். எடூணிஞச்டூ என்னும் டேப்பில் கிடைக்கும் விண்டோவில், உங்களுக்கான தீர்வு கிடைக்கும். அதில் Do not move files to the Recycle Bin. Remove files immediately when deleted என்று இருப்பதற்கு நேராக உள்ள பெட்டியில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து, டிக் அடையாளத்தினை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, பைலை நீங்கள் அழிக்க முற்படுகையில், அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும்.

சந்தேகம் கேட்டதால் ஆசிரியர்கள் மிரட்டல்: 7 பக்கத்தில் கடிதம் எழுதிவிட்டு மாணவர் தற்கொலை

கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவரை ஆசிரியர்கள் திட்டி, மிரட்டியதால், மனமுடைந்த மாணவர், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸாருக்கு தெரியாமல் மாணவன் பிணம் எரிக்கப்பட்ட நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மிரட்டியது குறித்து, இறந்த மாணவர் எழுதிய ஏழு பக்க கடிதம் சிக்கியுள்ளது. சம்பவம் குறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம், நிலவாரப்பட்டி இருசாயி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் - விமலா தம்பதியின் இரண்டாவது மகன் சீனிவாசன் (18). இவர், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 கணக்கு பிரிவில் படித்து வந்தார். 

நேற்று முன்தினம் சனிக்கிழமை சீனிவாசன் பெற்றோர், அண்ணன் சத்தியமூர்த்தி ஆகியோர் வெளியில் சென்றனர். வீட்டில் சீனிவாசன் மட்டும் தனியாக இருந்துள்ளார். மதியம் 2.30 மணிக்கு வீடு திரும்பிய தாய் விமலா, வீடு திறந்து கிடப்பதை கண்டு, உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டு உத்தரத்தில் சேலையில் தூக்கு போட்டு சீனிவாசன் தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், மாலை 5 மணிக்கு நிலவாரப்பட்டி மயானத்தில் மாணவன் சீனிவாசன் உடலை எரித்து விட்டனர். நேற்று, சக மாணவ, மாணவியர் மற்றும் உறவினர்கள், சீனிவாசனின் ஸ்கூல் பேக், பெட்டி ஆகியவற்றை திறந்து பார்த்தபோது, இறக்கும் முன் சீனிவாசன் எழுதிய ஏழு பக்க கடிதம் கிடைத்தது. 

அக்கடிதத்தில், "என் சாவுக்கு, என் பெற்றோரோ, என் குடும்ப உறவினர்களோ காரணம் இல்லை. என் முடிவை எழுதியவர்கள், நான் பயிலும் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். கணித ஆசிரியர் செந்தில், இயற்பியல் ஆசிரியர், வேதியியல் ஆசிரியர், தமிழ் ஐயா ராமலிங்கம் என, எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் மாணவர் எழுதியிருப்பதாவது: நான் 10ம் வகுப்பு வரை, தாசநாயகன்பட்டி அரசு பள்ளியில் படித்து வந்தேன். மேல்நிலைக் கல்வியை பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தேன். அரசு பள்ளி என்றால், அனைவருக்கும் அலட்சியம் தான். நான், 12ம் வகுப்புக்கு சென்று மூன்று நாட்கள் தான் ஆகிறது. எங்கள் கணக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் எங்களுக்கு புரியாது. இவர் தான் எங்களுக்கு, 11ம் வகுப்புக்கும் கணக்கு பாடம் நடத்தினார். 

அப்போது இருந்தே எங்களுக்கு புரியும்படி மெதுவாக நடத்தவும் என, பல முறை கேட்டு வந்தோம். பல முறை கேட்டும், அவர் சரியாகவே நடத்தவில்லை. கடந்த 16ம் தேதி நடத்திய கணக்கு பாடம் எங்களுக்கு புரியவே இல்லை. கணக்கை புரியும்படி நடத்தும்படி கேட்டதால், என்னை முறைத்துவிட்டு போர்டில் இருப்பதை எழுது என, சொல்லி விட்டு சென்றார். கணக்கு பாடத்தை புரியும்படி, மெதுவாக நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுக்க, வகுப்பு மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினேன். மாலை பள்ளி முடிந்து நண்பன் ஜீவாவும், நானும் வந்து கொண்டிருந்தோம். 

அப்போது, வேதியியல் ஆசிரியர் என்னை அழைத்து, "படிக்க வந்தா, படிக்கிற வேலையை மட்டும் பார். தேவையில்லாத வேலையை பார்க்காதே' என, கோபமாக திட்டினார். "நீ உன் வகுப்பில் எல்லோர் முன்னாடியும், கணக்கு புரியவில்லை என, சொன்னியாமே; என் வகுப்பில் அப்படி செல்லிப் பார்; என்ன நடக்கும் பார்' என, மிரட்டினார். "கணக்கு நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடாதா? எங்கள் வகுப்பில் உள்ள அனைவருக்கும் கணக்கு புரியவில்லை' என, கூறினேன். அடுத்த நாள், 17ம் தேதி மதியம் கம்ப்யூட்டர் ஆசிரியர் என்னை அழைத்து, "கையெழுத்து ரிப்போர்ட் வாங்கி இருக்கியாமே; வகுப்பு ஆசிரியரான என்னிடம் ஏன் சொல்லவில்லை' என, கேட்டார். அப்போது, இயற்பியல் ஆசிரியர், "நீ என்ன பெரிய இவனா? மூடிக்கிட்டு உக்காந்து டெஸ்ட் எழுது' என, திட்டினார். பின்னால் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், "நீ என்ன பெரிய ரவுடியா? இது என்ன காலேஜா? இது அரசு பள்ளி. உன்னை பள்ளியில் சேர்த்து கொண்டதே பெரிசு. இந்த லட்சணத்தில் நீ இப்படி ரவுடித்தனம் பண்ற. உனக்கு புரியவில்லை என்றால், "டிசி' வாங்கிக் கொண்டு உனக்கு பிடித்த வாத்தியார் இருக்கிற பள்ளிக்கு சென்று படி' என்றார். "நான் கையெழுத்து வாங்கியதை, ஹெச்.எம்.,மிடம் கொடுக்கலாமா?' என, கெமிஸ்ட்ரி ஆசிரியரிடம் கேட்டேன். ஆனால், அவரோ எல்லா ஆசிரியரிடமும் சொல்லி, திட்டு வாங்கி வைத்து விட்டார். 

மாலை 3.30 மணிக்கு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டு, வீட்டுக்கு வந்து கடிதத்தை எழுதுகிறேன். என் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால், என்னை நினைத்து அப்பா, அம்மா அழக்கூடாது. இனி, மனித பிறவி எனக்கு வேண்டாம் என, வேண்டுகிறேன். அரசுப் பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் மேம்படுத்தவும், சிறப்பான கல்வி அளிக்க வேண்டும் என, கல்வி அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன். என் மரணம் மூலம் அரசு பள்ளியில் சிறு மாற்றம் ஏற்படாதா?, இனி என் மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்க போகிறார்களோ தெரியவில்லை. திறமையான ஆசிரியர்கள் நிறைய பேர், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புக்கு தகுதியான ஆசிரியர்களை போட வேண்டும். இதற்கு முதலமைச்சர் நிரந்தர தீர்வு காண வேண்டும். இக்கடிதத்தை, சி.இ.ஓ.,விடம் ஒப்படைக்கவும். என மரணத்துக்கு பிறகு சட்டம், தன் கடமையை செய்ய வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த கடித விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார், தற்கொலை செய்து கொண்ட மாணவன் சீனிவாசன் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், மல்லூர் போலீஸில் புகார் செய்ய மாணவனின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது. நேற்று, இரவு 8 மணிக்கு, மகன் மரணத்திற்கு காரணமான, பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சீனிவாசனின் தந்தை சேகர், மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரனிடம், சீனிவாசன் எழுதி வைத்திருந்த, 7பக்க கடிதத்தையும், இணைத்து புகார் செய்தார். இது குறித்து போலீஸார் கூறியதாவது: போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மாணவன் சீனிவாசன் உடலை எரித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இறப்பதற்கு முன் சீனிவாசன் எழுதி வைத்த கடித்தை, அரசு தரப்பு வக்கீல்களிடம் காட்டி, அவர்கள் தரும் ஆலேசானைபடி ஆசிரியர்களிடம் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையை துவக்கியுள்ளனர்.

அட. நம்ம மார்தாண்டத்திலுமா இப்படி நடக்குது?

மார்த்தாண்டத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் இளம்பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறித்து சென்றுள்ளார். அண்டுகோடு ஈந்திக்காலையை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி அஸ்வினி(28). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் எஸ்.டி.டி., பூத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலை அஸ்வினி மட்டும் பூத்தில் இருந்துள்ளார். அப்பொழுது பைக்கில் ஹெல்மெட் அணிந்த இருவர் வந்துள்ளனர். ஒருவர் பைக்கில் இருந்துள்ளார். ஒருவர் ஹெல்மெட் அணிந்த படியே பூத்தில் வந்து செல்போன் ரீசார்ஜ் கம்பெனியில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

 அஸ்வினி, உரிமையாளர் வெளியே சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். அப்போது அந்த நபர் பூத் போனில் இருந்து உரிமையாளர் பிரின்சுடன் பேசியுள்ளார். அவர் தற்பொழுது ரீசார்ஜ் கார்டு வேண்டாம் பிறகு தொடர்பு கொள்வதாக கூறியுள்ளார். பூத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த மர்ம நபர் அஸ்வினி கழுத்தில் கிடந்த செயினை பறித்துவிட்டு பைக்கில் ஏறி தப்பியுள்ளார். 

இது குறித்து அஸ்வினி மார்த்தாண்டம் போலீசில் புகார் கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதமாக பைக்கில் வந்து செயின் பறிக்கும் கும்பல் கைவரிசை காண்பித்து வருகிறது. இதற்கு போலீஸ் நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

கணிப்பொறி தொடக்கநிலை இயக்கத்தை வேகப்படுத்த

நம் பெர்சனல் கம்ப்யூட்டர், பயன்படுத்தத் தொடங்கி ஆண்டுகள் பலவான பின்னர், தன் விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பணிக்குத் தயாராகும் நேரத்தினை நீட்டித்துக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் நாம் தான். நாம் அதனைப் பயன்படுத்தும் விதம் தான்.
எப்படி விண்டோஸ் பூட் நேரத்தைக் குறைத்து நம் காத்திருத்தலைத் தவிர்க்கலாம் என்று இங்கு பார்க்கலாம். 

1. பயாஸ் செட்டிங்ஸ் மாற்றுக: பயாஸ் அமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, குயிக் பூட் மற்றும் பூட் டிவைஸ் பிரையாரிட்டி என்ற இரண்டு புரோகிராம் களை முதலில் பயன்படுத்த சிலர் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் விண்டோஸ் பூட் நேரம், மிகப் பெரிய அளவில் விரைவு படுத்தப்படவில்லை என்றாலும், இவற்றை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். இவை கிடைக்கும் இணைய தளங்களின் முகவரிகள்:
உங்களுக்கு பயாஸ் செட்டிங்ஸ் எப்படி மாற்றுவது என்பதில் சிக்கல் அல்லது பிரச்னை இருந்தால், அது குறித்து கூடுதல் தகவல் தேவை என உணர்ந்தால்,http://michaelstevenstech.com/bios_manufacturer.htm என்ற முகவரியில் உள்ள தளம் சென்று பார்க்கவும். இங்கு பலவகை கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் பயாஸ் அமைப்பு செயல்படும் விதம் குறித்துத் தகவல்கள் கிடைக்கின்றன.
2. பயனில்லாத ஹார்ட்வேர் நீக்கம்: எப்போதோ தேவைப் பட்டது, இலவசமாகக் கிடைத்தது, எதற்கும் இருக்கட்டும் என்று பல ஹார்ட்வேர் சாதனங்களை நாம், நம் கம்ப்யூட்டருடன் இணைத்து வைத்திருப் போம். இவற்றை இணைக்கும்போது, கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போதே, இவையும் தயார் நிலையில் இருக்கும்படி அமைத்திருப்போம். இதனால் கம்ப்யூட்டர் பூட் ஆகும் நேரம் அதிகமாகும். டிவைஸ் மேனேஜர் (Device Manager) இயக்கி, பயன்படுத்தாத நெட்வொர்க் அடாப்டர், புளுடூத் கண்ட்ரோலர், பி.சி.எம்.சி.ஐ.ஏ. கார்ட் ஹோல்டர்கள், மோடம் சாதனங்கள் மற்றும் மல்ட்டிமீடியா துணை சாதனங்கள் என்ன என்ன இயக்க நிலையில் உள்ளன என்று கண்டறியவும். இவை பயன்பாட்டில் இல்லை என்றால், இயக்க வேண்டாத நிலைக்கு இவற்றின் செட்டிங்ஸ் அமைக்கவும். டிவைஸ் மேனேஜர் சென்றாலே இதற்கான வழி கிடைக்கும். 
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விர்ச்சுவல் மினிபோர்ட் அடாப்டர்கள் என்ற வசதி தரப்பட்டுள்ளது. வயர்லெஸ் நெட்வொர்க் தயார் செய்திட இது உதவுகிறது. நம் கம்ப்யூட்டரில் உள்ள ப்ராசசர் திறனை இவை கணிசமாக எடுத்துக் கொள்கின்றன. இதனையும் பயன்படுத்தவில்லை என்றால் எடுத்து விடலாம். டிவைஸ் மேனேஜரில் இதன் ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் ஈடிண்ச்ஞடூஞு என்பதைக் கிளிக் செய்திடலாம். இங்கு ஒரு எச்சரிக்கை. டிவைஸ் மேனேஜரில் Computer, Disk drives, Display adapters, IDE ATA/ATAPI Controllers, or System devices என்ற பிரிவில் இருக்கும் எதனையும் தொட வேண்டாம். 

3. தேவையற்ற எழுத்து வகை பைல்கள்: கம்ப்யூட்டர் பூட் ஆகும்போது, அனைத்து பாண்ட் பைல்களும் உயிர்ப்பிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆயத்த நிலையில் வைக்கப்படும். இப்போதெல்லாம், நாம் பயன்படுத்தும் எழுத்து வகைகள் பத்துக்குள் இருந்தாலும், ஏறத்தாழ நூறு பாண்ட் பைல்களை இயக்கி வைக்கிறோம். ஒரு சிலர் அதற்கும் மேலாகவே எழுத்துக் களை இயக்குகின்றனர். தேவையற்ற, பயன்படுத்தாத, பாண்ட் பைல்களை, பாண்ட்ஸ் (ஊணிணtண்) என்ற போல்டரிலிருந்து எடுத்து வேறு ஒரு பெயரில் போல்டரை உருவாக்கி போட்டு வைக்கலாம். தேவைப்படும் போது, அந்த போல்டரிலிருந்து எடுத்துப் பயன் படுத்தலாம்.
http://support.microsoft.com/kb/314960, http://www.onlinetechtips.com/windows7/windows7installdeletefonts/ என்ற முகவரிகளில் உள்ள தளங்களுக்குச் சென்றால், முறையே விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் இந்த பாண்ட் பைல்களைக் கையாளும் விதம் குறித்துத் தகவல்கள் தரப்பட்டிருக்கும். 

4. விண் பெட்ரோல்: Winpatrol என்ற தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் ஒன்று இலவசமாகக் கிடைக்கிறது. இதனை http://www.winpatrol. com/download.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். கட்டணம் செலுத்தினால் கூடுதல் வசதியுடனும் இதனைப் பெறலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால், அது நம் கம்ப்யூட்டரை வந்தடையும் மால்வேர் புரோகிராம்கள் குறித்து தகவல் அளிக்கிறது. ஸ்டார்ட் அப் புரோகிராம், பூட் ஆவதில் தாமதம் மற்றும் கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, நம்மை எச்சரிக்கை செய்கிறது. நாம் அறியாமல், ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனே நமக்கு அறிவிக்கிறது. குறைவான மெமரி இடத்தை எடுத்துக் கொண்டு நம் சிஸ்டத்தை முழுமையாக மானிட்டர் செய்கிறது. இதனால், கம்ப்யூட்டர் பூட் ஆவதில் தாமதம் ஏற்படுத்தும் புரோகிராம்கள் குறித்து அறிந்து நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது.
எடுத்துக்காட்டாக, ஸ்டார்ட் அப் புரோகிராம் என்ற பிரிவில், ஸ்டார்ட் ஆகும் ஒவ்வொரு புரோகிராமும் நமக்குத் தேவைதானா என முடிவு செய்கிறது. தேவையற்றதை நிறுத்தி, தேவைப்படும் போது, நாமாக இயக்கும் வகையில் செட் செய்திட உதவுகிறது. 
மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிச்சயமாக கம்ப்யூட்டர் பூட் ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் குறையும். இவை தவிர, கம்ப்யூட்டருடன் அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்தே நமக்குத் தரும். இவற்றை Crapware என்று அழைப்பார்கள். இவற்றில் தேவையற்ற பல புரோகிராம்களை கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போதே இயங்கும்படி அமைத்திருப்பார்கள். அவற்றையும் நீக்குவது, நிச்சயமாய் பூட் டைம் குறைவதற்கு வழி வகுக்கும்.

என் வீட்டு சிட்டுக்குருவி: The House Sparrow

எங்க வீட்டு சிட்டுக்குருவிகளைப் பத்தி பேசணும்னு நான் நினைச்சு, நினைச்சு தள்ளிப் போட்ட விசயத்தைப் எழுத உட்காருவதற்கான நேரம் இன்னக்கி காலையிலதான் அமைஞ்சிருக்கு. கிட்டத்தட்ட என்னோட வேலை இடத்தில நானும் இவைகளை எட்டு வருஷத்திற்கு மேலா பாத்துக்கிட்டு வாரேன்.

என்னய மாதிரி இல்லாம இந்த சிட்டுக்குருவிகள் பாட்டுக்கு அமைதியா எதைப் பற்றியும் கிஞ்சித்தும் அலட்டிக்காம தாவித் தாவி கிடைக்கிற உணவு விசயங்களை கொத்தி எடுத்திட்டு அங்கிட்டும் இங்கிட்டுமா தலையையாட்டி பார்த்திட்டு இருக்கும். தடிமாடு மாதிரி நான் அதன் வழியில நின்னா கொஞ்சம் நகருவனான்னு பார்க்கும் இல்லன்னா பொசுக்கின்னு தலைக்கு மேலே அடப் போப்பா அப்படின்னு பறந்து கூரையில கட்டி வைச்சிருக்க கூட்டில அமர்ந்து உணவு வழங்கிட்டு சிறிது நேரம் உள்ளரயே இருந்திட்டு மீண்டும் இரை தேட கீழே இறங்கிடும்.

அந்தக் கூடு நான் முதன் முறையாக வைத்துப் பார்த்த இடத்திலேயே அப்படியே இருக்கிது. அந்த அமைப்பில என்ன ஒரே ஒரு வித்தியாசம் பார்த்திருக்கேன்னா, கொண்டு வந்து சேர்க்கும் நார்களின் நிறத்தைக் கொண்டு அவை புதிதாக சேர்க்கப் பட்டிருக்கிறது எனவும், கூட்டின் நீளம் நீட்டப் பட்டிருக்கிறது என்றும் அறிந்து வைத்திருக்கிறேன். மற்றபடி வாகுவாக அதன் கூட்டை மிக்க சிரத்தையுடன் செங்கல் சுவற்றிற்கும் நீட்ட வாக்கில் ஓடும் இரும்பு கம்பிக்கும் இடையில் அமைத்து வைத்திருக்கிறது. அந்தக் கூடு என் தலைக்கு நேர் மேலாக இருக்கு, அங்க நின்று கொண்டிருக்கும் பொழுது நில நேரங்கள்ல அவைகளுக்கிடையேயான உரையாடல் சற்றே பலமாக இருக்கும் கீழே நின்று ரசிக்கும்படியாக. பல நேரம் மிக்க அமைதியாக இருந்துவிடுவதுமுண்டு.

என்னோட கூரையில அடையிற குருவி இனம் வந்து வீட்டுச் சிட்டுக்குருவி (the house sparrow -passer domesticus). எனக்கு இவைகளைப் பத்தி எழுதணும்னு ஆர்வம் வந்ததிற்குக் காரணமே இத்தனை வருஷமா இதே இடத்தில் பார்க்கிறேனே, இதுக எத்தனை தலைமுறையா இருக்கும்? அப்படி தலைமுறை தலைமுறையா வந்தா, இதுக எத்தனை வருஷம் வாழுது? எத்தனை முறை வருஷத்தில முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிது? எப்படி பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே அதுகளோட குஞ்சுகள் மிகச் சரியா அதே கூரையை கண்டுபிடிச்சு வந்து குடும்பம் நடத்துது? அப்படி இப்படின்னு பெரும்பாலும் நான் மொக்கையா இருக்கும் பொழுது இது போன்ற கேள்விகள் மண்டைக்குள்ளர குடைஞ்சதுனாலே இங்க பதிவா கொண்டு வர அளவிற்கு ஆயிப்போச்சு.


சிட்டுக்குருவிகள் ஒரு காலத்தில் நீக்க மற மனித குடியேற்றம் எங்கெல்லாம் அரங்கேறியதோ அங்கெல்லாம் நோக்கத்தோடோ அல்லது திட்டமிடாமலோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான் வாழும் இடத்தில் இது போன்று நகரங்களையொட்டி தட்பவெப்பம் கொஞ்சம் இதமாக இருக்கும் பொழுது மனித வாழ்விடங்களை சார்ந்து வாழ்வதாக அமைத்துக் கொண்டும், குளிர்காலத்தில் கிராமங்களை ஒத்த இடங்களுக்கும் குடி பெயர்ந்து விடுவதாக தெரிகிறது.


இந்த சிட்டுக்குருவிகள் இனம் வந்து பனை மரத்தில கூடு கட்டி வாழுமில்ல முடைவான் குருவி (the weaver bird) அத்தோட இனம்தானாம்.

இந்த புகைப்படத்தில நீங்க பார்க்கிறது ஒரு ஆண் குருவி. ஆண்/பெண் என அடையாளப் படுத்தி பார்க்கிறது ரொம்பச் சுலபம். ஆண் குருவி நல்லா வண்ணமயமா இருக்கும், செங்கல் நிறம் மற்றும் கருமை நிறக் கோடுகள் அதன் இறக்கையின் மீதும், அலகிற்கு பக்கத்தில் கருமையான ஒரு திட்டும், அலகிற்கு மேலே முன் மண்டையின் மீது சாம்பல் நிறமாகவும் இருக்கும். பெண் குருவிகள் நிறம் குறைச்சலாவும், சாம்பல் நிறத்திலும் இருந்து போகும். இதோட ஆரோக்கியம் அதன் நெஞ்சுப் பகுதியில் இருக்கும் அந்த கருமையான திட்டைக் கொண்டும் அறியலாமாம். நல்லா அடர்த்தியா இருந்தா, ஆரோக்கியமாக இருப்பதாகவும், இனவிருத்தி செஞ்சிட்டும் இருக்காருன்னும் தெரிஞ்சிக்கோங்க.

அதோட அலகு இந்த நாட்டில குளிர்காலத்தில கருமை நிறமாகவும், மிதமான வெப்ப காலங்கள்ல மஞ்சளாவோ அல்லது பிரவுன் நிறத்திலோ இருக்கும்.


வருஷத்திற்கு ரெண்டு, மூணு முறை முட்டையிடும் போல, ஒவ்வொரு முறையும் 2-5 முட்டை வரைக்கும் இட்டு 14-16 நாட்கள் அடைகாக்குதாம். இது பொதுவா ஏப்ரல்-ஆகஸ்ட் மாதம் வரைக்கும் நடை பெறுவதாக தெரிகிறது. கட்டற்ற சுதந்திரத்தோட சுத்தித் திரியற சிட்டுக்குருவிகள் குறைந்தது ஐந்து வருடங்கள் வாழ்வதாகவும், கூண்டில அடைச்சு வாழ வைச்சிப் பார்த்ததில பத்து வருஷம் வரைக்கும் கூட நீட்டிச்சதா சொல்லிக்கிறாங்க. ஆனா, என்னயப் பொருத்த மட்டில அதில உடன்பாடு இல்ல, எத்தனை வருஷம் மூச்சு விட்டுக்கிட்டு திரிஞ்சோங்கிறது முக்கியமில்ல; எத்தனை மணி நேரம் வாழ்ந்தோங்கிறதிலதான் விசயம் இருக்கின்னு நினைக்கிற ஆளு நான். அதுனாலே அதோட வன வாழ்க்கை ஐந்து வருஷமே இனிப்பா இருக்கும் அதுகளுக்கும்; எனக்குமின்னு தெரியுது.

ஆனா, இது போன்ற ரொம்ப சாதாரணமா நாம கண்ணுற்று வந்த பல பறவைகளின் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமா ஒடுக்கப்பட்டு, இப்பெல்லாம் நல்லா கண்ணை கசக்கிட்டு பார்த்தாத்தேன் தட்டுப்படுதுங்கன்னு கவனிச்சிட்டு வாரவங்களுக்குத் தெரியும். உலகம் முழுக்கவுமே இப்போ சிட்டுக்குருவிகள் 7.5% குறைஞ்சிடுச்சின்னும், பறவைகளின் ரெட் புக் இவைகளை அபாயத்தில் இருக்குங்கிற லிஸ்ட்லயும் சேர்த்து வைச்சிருக்கிது.

போன வருஷம் பறவை பார்த்தல் அப்படிங்கிற பதிவில இந்த செல் ஃபோன் டவர்களின் பெருக்கம் இது போன்ற பறவைகளின் இருத்தலை குறைச்சிடுச்சான்னு ஒரு பேச்சு வந்து ஒரு பின்னூட்டத்தின் மூலமா பேசினோம், அதனையும் இங்கே இணைக்கிறேன் ஆர்வமுள்ள மக்கள் எஞ்சாய்! ...


நண்பர் செந்தழல் ரவியும் அடைக்கலங் குருவிகள் என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன்பு ரொம்ப ஃபீல்வோட சிட்டுக்குருவிகளின் ஆண்மையிழப்பிற்கான காரணத்தை அலசியிருக்கார். அங்கும் சென்று வாங்க!



...இயற்கை நேசி|Oruni said...

கல்வெட்டு,

//செல்போன் டவர் மற்றும் அது ஏற்படுத்தும் நுண்ணலைகள் பறவைகள் மற்றும் சிறு பூச்சிகளின் இருப்பை அதிகம் பாதிப்பது உண்மையா? சிட்டுக்குருவிகள் நிறைய தென்படுவது இல்லை இப்போது.//

நல்லதொரு கேள்வியுடன் வந்திருக்கீங்க. இது ஆழமாக அலசப் பட வேண்டிய ஒரு விசயமிங்க. அதுவும் மனிதச் சமூகத்தின் மாறிப்போன வாழ்வு முறையில, கிலோவுக்கு இவ்வளவுன்னு எடை வைத்துக் கொடுக்குமளவிற்கு அலைபேசிகளின் பெருக்கம் அவைகளை சென்றடைய வைப்பதற்கான நுண்ணலை டவர்கள்; அதனையொட்டிய நுண்ணலைகளின் தாக்கம் இன்னமும் நம் புலன்களுக்கு எட்டாத அளவில் சுற்றுப்புறச் சூழலை சிதைச்சிட்டு வருதுன்னே அடிச்சுக் கூறலாம் ...

சிட்டுக்குருவி மட்டுமா? எது போன்ற பறவைகளை நாம் அடிக்கடி இது போன்று நவீன வளர்ச்சிகளுக்கு முன்பு கண்ணூற முடிந்திருக்குமோ (உதாரணத்திற்கு அந்த ப்ராமினி பருந்து, புல்புல் மற்றும் புறா மாதிரியான) அவைகளையெல்லாம் இப்பொழுது எங்கே பார்க்க முடிகிறது அவ்வளவு எளிதாக?

எனக்கு என்னவோ நம்முடைய மாறிப்போன கட்டடங்களின் புற அமைப்பும், சிந்தி சிதறும் தானியங்களின் தட்டுப்பாடு மற்றும் பயன்படுத்தப்படும் உரங்களின் தாக்கம் என நவீனப் படுத்தப்பட்ட எல்லாமே அவைகளை துடைத்தெறிந்து கொண்டு வருகிறதோ என எண்ணச் செய்கிறது. முன்னாலே இப்படி ஒரு பதிவு போட்டுருந்தேன் அவைகள் மற்ற என்ன என்ன காரணங்களால் காணாமல் போகலாமின்னு... "வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...

யானைகளில் (அல்ட்ரா சோனிக்) நம் காதுகளுக்கு எட்டாத ஒலியெழுப்பி அவைகளுக்குள் கம்யூனிகேஷன் செய்து கொள்வதாக அறிகிறோம்... அப்படியெனில் அவைகளின் உலகமே வேறாகத்தானே இருக்க முடியும் அவைகளின் புலன்களின் மென்மையும், அறியும் திறனையும் கொண்டு பார்க்கும் பொழுது.

அப்படியாக இருக்கையில் இது போன்ற மின்னலைகளும், நுண்ணலைகளும் அவைகளின் வாழ்வு முறையில் இடையூறு விளைவிக்காமல் இருக்க முடியாது. பறவைகளில் வலசை போதலே இது போன்ற துருவ மின்காந்த அலைகளை கொண்டே என்பதும் அறியப்பட்ட நிலையில் இருக்கிறது. விசயம் இப்படி இருக்கையில் இது போன்ற அதிகரித்து வரும் electro magnetic radiation பல வகைகளில் நம்மையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகப் படுகிறது.

பூச்சி வகைகள் இதனைக் காட்டிலும் அவைகளின் உலகம் இன்னமும் நுட்பமானது... எனவே சிக்கலும் இறுக இணைத்துதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இங்கே ஒரு ஆர்டிகில் படித்தேன் இதன் விகாரம் கொஞ்சம் பெரிதாகவே விளக்கப்பட்டுள்ளது...Killing Fields - Electromagnetic Radiation ...

ஃபேஷன் ஷோ : Photography in Fashion Show

போன மாசம் ஒரு ஃபேஷன் ஷோ போயிருந்தேன் அங்கே சிக்கின ஒரு வாய்ப்பை எனது காமிரவிற்குள் சுருட்டினேன்னு சொல்லி முதல் பாகமா இங்கே ரிலீஸ் பண்ணியிருந்தேன்.

அதோட தொடர்ச்சிதான் இது. ஆர்வமுள்ளவர்கள் மட்டு’ம் உள்ளர பொயிட்டு வாங்க! நெஞ்சடைச்சிகிறவங்க தூரமா நின்னுக்கோங்க :) .

# 1



#2




#3





#4 நம்புங்க என்ன பார்க்கலை, என் காமிரா லென்ஸைத்தான் பார்த்தாங்கோ...




#5




#6



#7



#8



உள்ளர முடிச்சிட்டு வெளியில வந்து வேற என்ன சிக்குமின்னு பார்த்தா மையமா இந்த ஒலிம்பியன் சிலை ஆக்சன்ல நின்னுச்சு. அங்கே கொஞ்சம் நேரம் நின்னு லபக்கினேன்.




கீழே இருக்கிற படம் எப்படி?



என்னதான் சொல்லுங்க, இதுக்கு இணையாகுமா எதுவும் :) பளீர்னு கண்ணுக்கு இதமா... ஹ்ம்ம்!

பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1

இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது.


நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன.

அந்த கிரகங்களில் நமக்கு கிடைத்த தட்பவெப்ப சூழல்களைக் கொண்டு உயிரினங்கள் உருவாகி பல்கி பெருகியிருக்கக் கூடுமே என்ற கருதுகோளின் படி நாம பல பத்தாண்டுகளாக வானத்தை அளந்து வருகிறோம். வேற்று கிரக வாசிகளிடமிருந்து ஏதாவது சமிக்கைகள் மிதந்து வந்து அடைகிறதாவென (SETI).

இப்படியான சூழ்நிலையில் நேத்து அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நடத்தி வந்த ஓர் ஆராய்ச்சியில் அது போன்ற வேற்று கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான நிகழ்தகவுகள் ரொம்பவே சாத்தியம் என்று கட்டியம் கூறும் வாக்கில் ஒரு சான்று கிடைத்துள்ளது.

கேட்ட நேரத்தில இருந்து அண்டவெளி உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு (Astrobiologist) சந்தோஷம் நிலைகொள்ள வில்லையென அமெரிக்கா தொலைகாட்சிகளின் செய்திகள் அலறி அடித்துக் கொண்டு அந்தத் துறை சார்ந்தவர்களை அழைத்து நேர்முகம் காண்பதிலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது.

பொதுவாக இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஆறு விதமான அடிப்படை உயிரின வேதியப் பொருட்களின் மூலக்கூறுகளைக் கொண்டே கட்டமைக்கப்பெற்றிருக்கிறது (கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்.பரஸ் மற்றும் சல்.பர்).

இதனில் முக்கியமாக பாஸ்.பரஸ் நமது மரபணு சமிக்கைகளை கடத்திச் செல்லும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏக்களின் உயிர்ச் செல் கட்டமைப்பில் முக்கியமான பங்காற்றுகிறது.

இந்த பின்னணியில் நமக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற வேதிய அட்டவணையில் இந்த பாஸ்.பரஸின் பண்புகளையொத்த அளவில் ஆர்சினிக் என்ற வேதிய தனிமம் மட்டுமே இருக்கிறது. ஆனால், இது பூமிய உயிர் அனைத்திற்கும் உடலில் சாரும் பொழுது நச்சுத்தன்மையை வழங்கி, வளர்சிதை மாற்றம் அளவில் பாதிப்பை வழங்கும் தன்மையைக் கொண்டது. எனவே, ஆர்சினிக் வந்து பூமியில் வாழும் உயிர் அனைத்திற்கும் a big no no வேதியற் கூறு.

ஆனா, இயற்கையின் விளையாட்டப் பாருங்க. அறிவியல் புனைவுகளில் கன்னாபின்னான்னு கற்பனைக்கு எட்டிய மாதிரியெல்லாம் வேற்று கிரகங்களில் கிடைக்கிற வேதியற் கூறுகளையும், சுற்றுச் சூழலையும் கொண்டு உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக அள்ளிக் கட்டி எழுதுவாங்க. படிக்க படிக்க நாமும் கற்பனை உலகில் அந்த ஜீவராசி கூட்டத்தோட கூட்டமா ஒரு மனுச ஜீவராசியாவே திரிவோம்.

அந்த இட்டுக்கட்டு கதைமாதிரிக்கு, நாசாவின் புதிய பாக்டீரியம் கண்டுபிடிப்பு அது போன்ற கதைகள் எவ்வாறு உண்மையாகலாம்னு சான்று சொல்லி நிக்கிது. கலி.போர்னியா மகாணத்தில உள்ள ஓர் ஏரியில ஆராய்ச்சி செஞ்சிகிட்டு இருந்திருக்காங்க. அந்த ஏரிக்கு பேரு மோனோ ஏரி (Mono Lake). அந்த ஏரியை தேர்ந்தெடுத்ததற்கு காரணமே 50 வருஷத்திற்கு மேல மற்ற புதுத் தண்ணியோட கலக்காம கெடக்கிறதுனாலே அதில எக்கச்சக்கமான உப்பும், அமிலத் தன்மையும் மற்றும் இந்த ஆர்சினிக் நச்சுத் தன்மையும் இருக்குங்கிறதுனாலே தொழவி பார்த்துருக்காங்க ஏதாவது சிக்குதான்னு. அப்போதான் இந்த புதுவிதமான பாக்டீரியம் நம்ம பூமி உயிரி கட்டமைப்பு வேதிய மூலக்கூறுகளுக்கு எதிராக அமைந்த ஆர்சினிக்கைக் கொண்டு உயிர்வாழும் புது வகையான நுண்ணுயிரி வாழ்வது தெரிய வந்திருக்கு. அதுக்கு பேரும் வைச்சாச்சு GFAJ-1 அப்படின்னு.

சரி எப்படி நிரூபிச்சாங்க? ஆய்வுக் கூடத்தில வைச்சு இந்த பாக்டீரியத்தை வளர்த்திருக்காங்க. பாஸ்.பரஸை கொஞ்சமும், ஆர்சினிக்கை தாராளமாகவும் வழங்கி அதில இந்த பாக்டீரியம் ஆர்சினிக்கை ஊட்டமாக கொண்டு செழித்து வளர்ந்திருக்கு.

இந்த ஒத்த புது வகையான நுண்ணுயிரியை கண்டுபிடிச்சதின் மூலமா மொத்த உயிரியல் பாடப் புத்தகங்களையும் திரும்ப எழுதுற மாதிரி ஆகிப்போச்சு. அதுக்கெல்லாம் மேல இந்த அண்டவெளியில் இருக்கிற கோடான கோடி, கோடி, கோடி கிரகங்களில் எது போன்ற வேதிய மூலக்கூறுகளைக் கொண்டும் உயிர்கள் கட்டமைக்கப்படுமென்றால் கண்டிப்பாக வேற்று கிரக உயிர்கள் திளைச்சு வாழணும்மப்போய்னு உறுதியாகிப் போச்சல்ல.

இயற்கையின் விந்தையில் எதுவும் சாத்தியமேன்னு சொல்லி நிக்கிது இந்த ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம். எந்த வெளி கிரகத்திலே எந்த பத்து தலை டைனோசரோ, இல்ல நாலு கால் மனுசன் பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு நடந்து திரியுறானோ, I cant wait to get that news! :-)



பி.கு: நம்ம நண்பர் கையேடு கூட இது பொருத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கார் - வேறொரு உயிர்


- Photo Courtesy: Net