Tuesday, April 19, 2011

செக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா?


மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப் பற்றி உலகம் முழுவதும் இடைவெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். புதிது, புதிதாய் கண்டுபிடித்து வெளியிடுவதற்கென்றே, ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்வெளியீடு வந்து கொண்டிருக்கிறது. உறவு நேரத்தில் ஜோடிகள் என்னென்ன செய்வார்கள் என கூடுதலாய் பல அந்தரங்கமேட்டர்கள் பற்றி விசாரித்து லேட்டஸ்ட் இதழில் போட்டிருக்கிறார்கள்.


விஷயம்துவக்கும் முன், சலிக்கிற (சலிக்குமா!?) வரை முத்தம் கொடுப்பவர்கள் ஆண்களாம். அப்போது வெட்கப்பட்டு ச்ச்ச்சீ.. ப்போங்க!என ஒதுங்குகிற பெண்கள்.. எல்லாம் முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில் முத்த ஆயுதத்தால் சரமாரியாக தாக்குகின்றனர். உறவு முடிந்த பிறகு, ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். சைலன்ட் பேச்சு, முத்தம், வாஞ்சையாய் தடவிக் கொடுத்தல் ஆகியவையும் இந்த நேரத்தில் நடக்கிறதாம்.
ஆண்களுக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கிறது. விஷயம்முடிந்ததும் நிறைய பேர் சிகரெட் பத்த வைக்கிறார்களாம். இன்னும் சிலர் தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது அல்லது கம்மென்று படுத்துத் தூங்குவது என்று சுருண்டு விடுகிறார்களாம்.

கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி....


கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

*
பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.

*
சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

*
குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

*
கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.


*
பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.

*
உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.

*
கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.

*
மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

*
பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

*
கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

*
பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

பெட்ரூம் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால் அதோகதிதான்.


திருமண வாழ்வில்செக்ஸ் வாழ்க்கையை திருப்தியாக அனுபவிக்க முடியவில்லை என இங்கிலாந்துவாசிகள் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு செக்ஸ் மீது ஆர்வம் குறைந்து விடுவதாகவும்அதேசமயம் வெளி உறவால் உற்சாகம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

டேட்டிங் சேவையில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்தின் லவ்விங் லிங்க்ஸ் இணையதளம்திருமணமான 3000 ஆண்பெண்களிடம் திருமண வாழ்வு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்:

திருமணமான புதுசில் செக்சில் அதிக ஆர்வம் இருந்ததாகவும் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆர்வம் படிப்படியாக குறைந்து விட்டதாகவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். ஆரம்ப காலத்தில் வாரத்தில் நாட்களாக இருந்த செக்ஸ் ஆர்வம்நாளாக குறைந்து விட்டது தெரியவந்தது. திருமண வாழ்க்கை செக்ஸ் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக 10ல் பேர் தெரிவித்தனர்
.

தங்களது வாழ்க்கை துணையை காதலராக நினைக்க முடியவில்லை என்றும் நண்பராகவே நினைக்கத் தோன்றுகிறது என்றும் ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் தெரிவித்தனர். கணவனோ மனைவியோ எல்லா விஷயத்திலும் துணையாகவும்,புத்திசாலியாகவும்இரக்க குணத்துடனும்ஜாலியாக பழகுபவராகவும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். அதேசமயம்எல்லா விஷயத்திலும் சமத்தாக இருந்துவிட்டு பெட்ரூம் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால் அதோகதிதான். செக்ஸ் தேவை நிறைவேறாத பட்சத்தில் வெளித் தொடர்புகளைத் தேடி அலைய வேண்டியதுதான் என்கின்றனர்.

அதே இடம்அதே பெட்அதே நேரம் என செக்ஸ் வாழ்க்கை போரடிப்பதாகவும் வெளித் தொடர்பில் மகிழ்ச்சி கிடைப்பதாகவும் 10ல் பேர் தெரிவித்துள்ளனர். பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாக தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாக 3ல்பேர் கூறியுள்ளனர்

முகத்தில் தோன்றும் கருமை நிறம் நீங்க:


Tips to brighten dull complexion - Beauty Care and Tips in Tamil
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் படி உடலின் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனுடைய வெளிப்பாடு முகத்தில்தான் தெரியவரும்.
ஒரு சில கைதேர்ந்த மருத்துவர்களும், ஆன்மீக சான்றோர்களும் ஒரு மனிதனின் முகத்தை வைத்தே அவன் உடலுக்கு என்ன பாதிப்பு, மனதிற்கு என்ன பாதிப்பு என்பதை அறிந்துகொள்வார்கள்.

இன்றைய சூழ்நிலையில் அவசரம் என்ற ஒரு நோய் நம்மை ஆட்டிப்படைக்கிறது. மனதிற்கு ஏற்றவாறு உடலும் ஒத்துழைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். இதனால் இவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. 40 வயதிலேயே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என பல நோய்களால் அவதியுறுகின்றனர்.
முகம் பிரகாசமாகத் தோன்றினால்தான் அவன் ஆரோக்கியமுள்ள மனிதனாக இருக்க முடியும். முகத்தையும், சருமத்தையும் பாதுகாக்க இதோ உங்களுக்கு சில எளிய இயற்கை மருத்துவ ஆலோசனைகள்.
முகம் பளபளக்க:
குளிர்ந்த நீர் - 1/2 டம்ளர்
பசும் பால் - 50 மி.லி.

இரண்டையும் ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் சென்றதும் முகத்தை நன்றாக மென்மையாக கழுவவும். சோப், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. பருத்தியினால் ஆன துண்டை வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளக்கும்.
முகத்தில் தோன்றும் கருமை நிறம் நீங்க:
முகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க,
பசும்பால் - 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்.
முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க:
பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும்.
கண்கள் குளிர்ச்சியடைய:
உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.
தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.
தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும்.
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
இளநரை மாற:
சிலருக்கு இளம் வயதிலேயே ஆங்காங்கே வெள்ளை முடி தோன்றுவது இயல்பாகிவிட்டது. இதற்கு நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும்.
உடல் பருமன் குறைய:
உணவில் புளிப்பான பதார்த்தங்களான புளித்த தயிர், புளிக்குழம்பு, தக்காளி, எலுமிச்சம் பழம், புளித்த திராட்சை போன்றவற்றை தவிர்த்து வந்தால் நாளடைவில் உடலில் இருக்கும் தேவையற்ற சதை நீங்கிவிடும். உடல் பருமன் குறையும்.

பெட்ரூம் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால் அதோகதிதான்.


லண்டன் :திருமண வாழ்வில், செக்ஸ் வாழ்க்கையை திருப்தியாக அனுபவிக்க முடியவில்லை என இங்கிலாந்துவாசிகள் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு செக்ஸ் மீது ஆர்வம் குறைந்து விடுவதாகவும், அதேசமயம் வெளி உறவால் உற்சாகம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

டேட்டிங் சேவையில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்தின் லவ்விங் லிங்க்ஸ் இணையதளம், திருமணமான 3000 ஆண், பெண்களிடம் திருமண வாழ்வு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்:

திருமணமான புதுசில் செக்சில் அதிக ஆர்வம் இருந்ததாகவும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆர்வம் படிப்படியாக குறைந்து விட்டதாகவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். ஆரம்ப காலத்தில் வாரத்தில் 4 நாட்களாக இருந்த செக்ஸ் ஆர்வம் 1 நாளாக குறைந்து விட்டது தெரியவந்தது. திருமண வாழ்க்கை செக்ஸ் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக 10ல் 6 பேர் தெரிவித்தனர்
.

தங்களது வாழ்க்கை துணையை காதலராக நினைக்க முடியவில்லை என்றும் நண்பராகவே நினைக்கத் தோன்றுகிறது என்றும் ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் தெரிவித்தனர். கணவனோ மனைவியோ எல்லா விஷயத்திலும் துணையாகவும், புத்திசாலியாகவும், இரக்க குணத்துடனும், ஜாலியாக பழகுபவராகவும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். அதேசமயம், எல்லா விஷயத்திலும் சமத்தாக இருந்துவிட்டு பெட்ரூம் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால் அதோகதிதான். செக்ஸ் தேவை நிறைவேறாத பட்சத்தில் வெளித் தொடர்புகளைத் தேடி அலைய வேண்டியதுதான் என்கின்றனர்.

அதே இடம், அதே பெட், அதே நேரம் என செக்ஸ் வாழ்க்கை போரடிப்பதாகவும் வெளித் தொடர்பில் மகிழ்ச்சி கிடைப்பதாகவும் 10ல் 8 பேர் தெரிவித்துள்ளனர். பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாக தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாக 3ல் 2 பேர் கூறியுள்ளனர்.