Thursday, December 8, 2011

மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியாருக்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டம்

மாணவியரிடம் சில்மிஷம் செய்த, விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சத்யா நகர் பள்ளி தலைமை ஆசிரியர் தனசேகரனுக்கு, மீண்டும் பணி வழங்கியதை எதிர்த்து, சிவகாசியில், உதவி கல்வி அலுவலகம் புகுந்து, பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அங்கு, போலீசார் பெண்கள் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.திருத்தங்கல், சத்யா நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் தனசேகரன். இவர், கடந்த ஆக.,15ல், மாணவியரிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறி, பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். அவர், போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், மத்திய சேனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக தனசேகரன் பொறுப்பேற்கச் சென்றார். இதை, கிராம மக்கள் எதிர்க்க, பொறுப்பேற்காமல் திரும்பினார்.
அதன்பிறகு, குமிழங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். அவருக்கு, மீண்டும் பணி வழங்கியதை கண்டித்தும், அவருக்கு ஆதரவாக செயல்படும் கூடுதல் உதவி கல்வி அலுவலர் விவேகானந்தன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில், சிவகாசி உதவி கல்வி அலுவலகம் முன், நேற்று போராட்டம் நடத்தினர்.மாதர் சங்க மாவட்ட செயலர் லட்சுமி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் அலுவலக வளாகத்தில் நுழைய முயன்றனர்.

அய்யப்பன் எஸ்.ஐ., மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தியபோது, போலீசார் பெண்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போலீஸ்காரர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அலுவலக கேட்டை மூட முயன்ற போலீசாரை தள்ளியபடி, அலுவலக வாயிலில் உட்கார்ந்தனர். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ராமச்சந்திரன், துணை தாசில்தார் தனலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தினர்

. "கூடுதல் உதவி கல்வி அலுவலர் மீது நடவடிக்கை, தனசேகரன் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போன்ற நடவடிக்கையை, டிச., 27க்குள் எடுக்காவிட்டால், மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகக் கூறியபடி, போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

நான் பெங்களூரு சின்னப்பொண்ணு

தமிழில் வருடத்துக்கு இரண்டு டஜன் ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இதில் அபூர்வமாக ஒன்றிரண்டு பேர்தான் கவனத்தை ஈர்த்து வாய்ப்பையும் தக்க வைத்துக் கொள்கிறார்கள். 


ப்ர‌ணீத்தாவை அந்த ஓ‌ரிருவ‌ரில் சேர்க்கலாம். உதயனில் அறிமுகமான இவரை அப்படம் ச‌ரியாக போகாத நிலையிலும் கார்த்தியின் சகுனி படத்தில் ஹீரோயினாக்கியிருக்கிறார்கள். இனி ப்ர‌ணீத்தா உங்களுடன்...

நீங்க நடிக்க வந்தது ஏற்கனவே திட்டமிட்டதா? இல்லை எதிர்பாராத விபத்தா?

நான் சினிமாவில் நடிப்பேன்னு நினைச்சதேயில்லை. பெங்களூருவில் பிளஸ் டூ படிச்சிட்டிருந்த நேரம் எதிர்பாராத விதமாதான் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. கன்னட போக்கி‌ரி படத்துக்கு ஹீரோயின் தேடிகிட்டு இருந்தபோது என்னைப் பார்த்த ஒருவர் போக்கி‌ரி பட இயக்குனர்கிட்ட என்னைப் பற்றி சொல்லியிருக்கார். அப்போது எக்ஸாம் முடிஞ்சிட்டதால நடிக்க சம்மதமான்னு கேட்டதும் ஓகே சொல்லிட்டேன். நானே எதிர்பார்க்காத ஆக்சிடெண்ட்தான் நடிக்க வந்தது.

நடிக்க வந்ததால் ஏதாவது இழந்ததாக நினைத்ததுண்டா?

இன்‌ஜினிய‌ரிங் படிக்கணும்ங்கிறது என்னோட ஆசை. நடிக்க வந்ததால அது முடியலை. ஆனா அதற்காக வருத்தம் எல்லாம் இல்லை. போக்‌கி‌ரி முடிஞ்சதும் உடனே தெலுங்கில் வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால் பிஸியாயிட்டேன். புதுப்பது ஆட்கள், புதுப்புது உடைகள், ஒவ்வொரு நாளும் புது லொகேஷன்கள்னு சினிமா எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. இனி வேற ஏதாவது வேலைக்குப் போகணும் என்றால்தான் என்னால் முடியாது. ஐ லவ் சினிமா.

குறுகிய காலத்தில் மூன்று மொழிகளில் நடிச்சிட்டீங்க. தமிழ் ஃபீல்டைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

இங்க எல்லோருமே ஹார்ட்வொர்க் பண்றாங்க. முக்கியமா நிறைய வெரைட்டியான சினிமா இங்கதான் தயாராகுது. ஒரு படம்தான் நடிச்சிருக்கேன். ஆனா அதுக்குள்ள தமிழ் சினிமா எனக்கு ரொம்ப நெருக்கமாயிடுச்சி.

நீங்க நெருக்கமாயிட்டதா சொன்னாலும் உதயனுக்குப் பிறகு ஏன் நீண்ட இடைவெளி...?

கன்னட, தெலுங்குப் படங்களில் கமிட்டாகியிருந்ததால் உடனே தமிழுக்கு வர முடியலை. அதை முடிச்சுக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்புறம் தமிழில் நான் கேட்ட கதைகளில் சகுனிதான் பிடிச்சிருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கிட்டேன்.

சகுனி எந்த மாதி‌ரிப் படம்?

முதல்ல சகுனி யூ‌னிட் பற்றி சொல்லணும். கார்த்தி, சந்தானம், இசையமைப்பாளர் ‌ஜி.வி.பிரகாஷ், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துன்னு எல்லோருமே பெ‌ரிய ஆளுங்க. இயக்குனர் சங்கர் தயாள் அறிமுகம்னாலும் பி‌ரில்லியண்ட்.

இன்னும் கேள்விக்கு நீங்க பதில் சொல்லலை...?

சகுனி அரசில் படம். சமகால அரசியல் படத்தில் இருக்கு. சீ‌ரியஸாக இருக்கிற அதேநேரம் எண்டர்டெயின்மெண்டாகவும் இருக்கும். எனக்கு நடிக்கிறதுக்கு ஸ்கோப் உள்ள வேடம். இப்போதைக்கு இதுவே அதிகம்னு நினைக்கிறேன்.

உங்க பூர்வீகம்..?

நான் பெங்களூரு பொண்ணு. அப்பா, அம்மா இரண்டு பேரும் அங்கேதான் இருக்காங்க. நான் படிச்சது வளர்ந்தது எல்லாமே அங்கேதான். என்னோட அப்பா, அம்மா இரண்டு பேருமே டாக்டர்ஸ்.

சினிமாவில் உங்க லட்சியம்..?

எந்த‌க் கேரக்டராக இருந்தாலும் நூறு சதவீத ஈடுபாட்டோடு நடிக்கணும். நல்ல நடிகைன்னு பெயர் எடுக்கணும். இதுதான் என்னோட இப்போதைய லட்சியம்.

தமிழக மக்கள் காது செவிடாகும் அபாயம் - எச்சரிக்கை ரிப்போர்ட்

மாலை நேரம். கல்லூரியில் இருந்து விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார் மாணவி ரேகா. எதிரில், சாலையில் சவ ஊர்வலம் வந்தது.

அதைக் கண்டதும் சாலை யோரம் ஒதுங்கி நின்றார் மாணவி ரேகா. சவத்திற்காக பற்ற வைத்த வானவெடி ஒன்று, மேலே போகாமல், பக்கவாட்டில் சீறியபடி வந்து ரேகாவின் காதருகே டமார் என்று வெடித்தது. 

அய்யோ என்று அலறிய படி தரையில் உட்கார்ந்தார். உடம்பில் எந்த இடத்திலும் காயமில்லை. ஆனால் ரேகாவின் காதிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

ரேகாவை, ஆட்டோவில் ஏற்றி இ.என்.டி. டாக்டரிடம் கொண்டு சென்றார்கள். பரிசோதித்த டாக்டர், ""காது ஜவ்வு கிழிந்து விட்டது. இனிமே இந்த மாணவியின் காது இனி கேட்காது!'' என்றார்.

மனதளவில் நொறுங்கிப் போயி ருக்கிறார்கள் ரேகாவும், குடும்பத்தினரும்.
திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த எக்ஸ் எம்.எல்.ஏ. ஒருவரின் மகள் கர்த்தவ்யா. இன்னும் மணமாகாத இந்த இளம் பெண் ஒரு முதுநிலைப் பட்டதாரி. கடந்த ஒரு மாதமாக, கர்த்தவ்யாவின் காதுக்குள் ஆயிரம் வண்டுகளின் ரீங்கார இரைச்சல். திருவண்ணாமலைப் பகுதி யில் பல டாக்டர்களிடம் பார்த்தும் பயனின்றி, சென்னை சென்று, காஸ்ட்லி மருத்துவமனை ஒன்றில் காட்டினார்கள். ஏகப்பட்ட டெஸ்ட்டுகளுக்குப் பிறகு டாக்டர் கேட்டார்.

""தினமும் வீடியோ வாய்ஸ் சாட் மூலம் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தீர்களா?''

""ஆமாம் டாக்டர்!''

""அதன் விளைவுதான்... செவிக்கும் மூளைக்கும் இடையில் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக் கிறது. உங்களுக்கு காதில் மட்டும்தான் பாதிப்பு. பலருக்கு மனநிலையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இசையை- பாடலை ரசிக்கிறேன் என்று இரவு பகலாக காதுகளில் இயர் போனை பொருத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்!'' என்றார் டாக்டர்.

நெய்வேலி என்.எல்.சி.யில் புல்டோசரில் வேலை செய்த பெரியவர் அச்சாவின் இரண்டு காதுகளும் செவிடாகிவிட்டன.

""டெய்லி... பலமணி நேரம்... தடதட சத்தத்திலேயே வேலை செய்ததாலதான் என் காதுகள் ரிப்பேராகிவிட்டன. காதுல மெஷின் மாட்ட வேண்டியதாப் போச்சு. எனக்கு மட்டுமில்லை. என்னோட வேலை செஞ்ச பலருக்கும் இதுதான் கதி!'' என்கிறார் அச்சா.

குடும்பத் தலைவி கீதா இளவரசனுக்கு குழந்தைகளைப் பற்றிய கவலை. ""தனியார் பஸ்ல ஏற முடியலை. ஆடியோ பாட்டுச் சத்தம் பின்னாடி வர்ற ஒன்பது பஸ்சுக்கும் கேட்கும். அவ்ளோ சவுண்டை வச்சு விடுறாங்க. சவுண்டைக் குறைக்கச் சொன்னா ஓட்டுநரும் நடத்துநரும் சண்டைக்கு வர்றாங்க. இதுகூட பரவாயில்லை. எப்பவோதான் பஸ்ல போறோம். ஆனால் இந்த ஒலிபெருக்கிச் சத்தம்? திருவிழா... திருமணம், ஐயப்பன் பூசை... விநாயகர் சதுர்த்தி, அவர் பிறந்த நாள்... இவர் செத்த நாள்... என்று ரெண்டு கிலோமீட்டர் நீளத்துக்கு ரோட்ல ரெண்டுபக்கமும் கூம்புக் குழாயை கட்டிட்டு... பாட்டு போடுறாங்க... பிள்ளைங்க படிக்க முடியலை. தூங்க முடியலை... காதெல்லாம் கொய்ய்னு சவுண்ட்... ஊரையே செவு டாக்குறாங்க!'' குமுறினார் கீதா இளவரசன்.

""சாயந்தரம் 6 மணிக்குதான் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடக்கும். ஆனால் உளுந் தூர்பேட்டை முழுக்க ஒலி பெருக்கிகளைக் கட்டி, காலைல இருந்தே அலற விட்டுருவாங்க. கல்யாண மண்டபங்கள்ல கேக்கிற அலறல் இருக்கே... சகிக்க முடியாது. பக்கத்தில ஸ்கூல் இருக்கே, காலேஜ் இருக்கே, ஆஸ்பத்திரி இருக்கேனு கூட்டம் போடுற... ஒலிபெருக்கிக் குழாய் கட்டுற யாரும் கவலைப்படுவதில்லை. பற்றாக்குறைக்கு பஸ், லாரி, கார், டூவீலர்கள் அடிக்கிற ஹாரன் சத்தம் இருக்கே... போதுமடா சாமி... இதுக்கெல்லாம் என்னை மாதிரி உங்க மாதிரி ஆளுங்களால ஒண்ணும் செய்ய முடியாது. அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்கணும். நல்லா இருக்கிற நம்மை எல்லாம் செவிடர்களாக்கும் இந்த சவுண்ட் சைத்தான்களை அடக்கியே ஆகணும்!'' -இது உளுந்தூர்பேட்டை பாலுவின் கோபம்.

காது, மூக்கு, தொண்டைக்கான நிபுணர் டாக்டர் வெற்றிவேலை, விழுப்புரத்தில் சந்தித் தோம்.

""நமது ஐம்புலன்களும் மிகவும் மென்மை யானவை. அதுவும் நமது காது இருக்கே அது பூ மாதிரி. பத்துப் பதினைந்து டெசிபலுக்கு அதிகமான சத்தத்தை நம்ம காதுகளால் தாங்க முடிவதில்லை. ஆனால் நம்மைச் சுற்றிலும் சதா சர்வகாலமும் உண்டாக்கப் படுகிற சத்த மோ 120 டெசிபல் வரை இருக் கிறது. காது கேளாமை ஏற் படுவதற்கு இது தான் காரணம். சமீபத் தில் எங்கள் மருத்துவக் குழு, ஒரு கரும்புத் தொழிற் சாலை ஊழியர் களிடம் பரிசோதனை செய்தது. 

அதில் 100-க்கு 20 பேருக்கு நரம்புகள் பாதிக் கப்பட்டிருப்பதைக் கண்டோம். அப்படிப்பட்ட, மிஷின்களின் சத்தம் அதிக முள்ள தொழிற்சாலைகளில் காது, மூக்குக் கவசத்தை பயன்படுத்தலாம்.

மற்றபடி திருவிழாக் கள், குடும்ப விழாக்கள், அரசியல் கூட்டங்களில் கூம்பு ஒலிபெருக்கிகளை பயன் படுத்துவதை முற்றாகத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால்... காது கேளாதோர் எண்ணிக்கை பன்மடங்காகி விடும்!'' என்று எச்சரித்தார் டாக்டர் வெற்றி வேல்.

இனி யாஹூ மின்னஞ்சல் சேவையை தமிழில் பயன்படுத்தலாம்.


இந்தியாவின் முன்னணி மின்னஞ்சல் சேவை வழங்குனரான யாஹூ இந்தியா நிறுவனம் 8 இந்திய மொழிகளில் அதன் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.



தமிழ் மொழியிலும் அதன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம். மேலும் இந்தி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மெயில் சேவையை வழங்க உள்ளது. 

தமிழ் மின்னஞ்சல் சேவையை செயற்படுத்துவது எவ்வாறு?

http://www.yahoo.com/ இணையத்தளத்திற்கு சென்று மின்னஞ்சல் மற்றும் லாகின் ஐடி பாஸ் கொடுத்தபின்னர். மேல் பக்க மூலையில் தெரியும் உங்கள் பெயரின் மேல் மவுஸை கொண்டு சென்றதும் திறக்கும் drop down menu வில் account info ஐ அழுத்திய பின்னம் மீண்டும் பாஸ்வேர்ட் கொடுங்கள்.



அதன் பின்னர் Account Settings இல் தெரியும் Set language, site, time zone இல் Language Preferences சென்று தேவையான மொழியைத் தேர்வு செய்யலாம்.

ரஜினி கே எஸ் ரவிக்குமாருக்கு வைத்த மெகா ஆப்பு

மறுபடியும் ஒன்று சேர்ந்து ஒரு மெகா ஹிட்டுக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார்கள் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், சூப்பர் ஸ்டார் ரஜினியும். நண்பன் படத்தில் மூழ்கியிருந்த ஷங்கர் கடந்த சில வாரங்களாக முழுக்க முழுக்க இந்த ரஜினி படத்திற்காக நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார்.

இதையடுத்து ஏராளமான கேள்விகள் எழுந்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அப்படியென்றால் ராணா என்னவாகும் ஜக்குபாய் நிலைமைதானா என்பதுதான் முதல் கேள்வி. கோச்சடையான் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நேரடியாக ஷங்கர் படத்திற்குதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான் படத்தில் கூட ரஜினி சில காட்சிகளில்தான் தோன்றப் போவதாகவும் தகவல்.

அதாவது இவரே கோச்சடையான் கெட்டப்பில் தோன்றி தனது கதையை கூற ஆரம்பிப்பாராம். சில வார்த்தைகளில் இவர் கதையை சொல்லிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று அனிமேஷன் உருவத்திற்கு தாவ ஆரம்பித்துவிடும் காட்சிகள். இப்படி இடையிடையே ரஜினி தோன்றி தோன்றி முழு கதையையும் நகர்த்திச் செல்வதாக திட்டமாம்.
அதுமட்டுமல்ல, இந்த கோச்சடையானுக்காக ரஜினி அதிகபட்சமாக பத்தே நாட்கள்தான் ஒதுக்கப் போகிறாராம். இப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ஷங்கர் படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் ரஜினி என்கிறது சில தகவல்கள்.

இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கிறார். அவரிடமும் பேசி கதை சுருக்கத்தை சொல்லியிருக்கிறாராம் ஷங்கர். அப்படியென்றால் கே.எஸ்.ரவிகுமார்? ராணா வரும் வரும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை வந்தால், ரவிகுமார் இருப்பார் அதில். ஆனால் ரஜினி இருக்க மாட்டார், ஜக்குபாய் படம் போல

இளம்பெண்களை மயக்கும் டாட்டூ மோகம்

தோல் சுருங்கித் தொங்கும் நம் கிராமத்துப் பாட்டிகளின் கைகளில் அன்று... பச்சை குத்திக் கிடக்கும் அவர்கள் கணவரின் பெயர், புள்ளிக் கோலம், சங்கு, மயில் என்று பல!

'ஃப்ரீ ஹேர்' காற்றில் மிதக்கும் டீன் ஏஜ் பெண்களின் புஜம், முதுகு, கழுத்து இறக்கம், இடுப்பு என்று இன்று கவ்விக்கொண்டு கிடக்கின்றன டிராகன்களும், அனகோண்டாக்களும் 'டாட்டூ'வாக! 

தாய்க்கலையான பச்சை குத்தும் கலாசாரத்துக்கும், அதன் நவநாகரிக வடிவமான 'டாட்டூ' கலாசாரத்துக்கும் இடையில் ஓடும் தொடர்பு இழையையும், அவற்றை வேறுபடுத்தும் பரிணாமத்தையும் உணர்ந்து ரசிக்க முடிகிறது... குற்றால மலைவாசி முனீஸ்வரி மற்றும் மெட்ரோபாலிடன் நகரவாசி நவீன் ஆகியோரின் வார்த்தைகளில்!

திருக்குற்றால குறவஞ்சி மலை... அட, நம் குற்றாலம்தான். சில்லென்ற அருவிக் கரையோரத்தில் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து பாசிமணிகள், தைலங்கள் விற்றுக் கொண்டிருந்த குறவர் இனப் பெண்களில் ஒருவரான முனீஸ்வரிக்கு, அவர்களின் குலத்தொழில்களில் ஒன்றான பச்சை குத்துதல் பற்றிப் பேசப் பேச, பரவசம்தான்.

"அந்தக் காலத்துப் பொண்ணுக கட்டுன புருஷன் பேரை யாராச்சும் கேட்டா, அவுக வாயால சொல்ல மாட்டாக. அதனால, புருஷன் பேரை கையில பச்சைக் குத்திக்கிட்டு, பேரைக் கேட்கறவுககிட்ட கையக் காமிப்பாக. காத்து, கருப்பு அண்டாம இருக்க வேல், அருவானு குத்திக்குவாக. அழகுக்காக சங்கு, மயிலு, கோலம், பூவுனு விதவிதமா குத்திக்குவாக.

ஆம்பளைக எம்.ஜி.ஆர்., பத்மினினு நடிகர், நடிகைங்க பேரு... வீரத்துக்காக சிங்கம், புலி, பாம்புனும் குத்திக்குவாக. முக்கியமா, அவுக விரும்பற பொண்ணு பேரை நெஞ்சுல குத்திக்குவாக. சிலரு, பேரைக் குத்தாம, 'மலரு'னா பூ உருவம், 'நாகம்மா'னா பாம்பு உருவம்னு குறிப்பால உணர்த்தற மாதிரி குத்திக்குவாக. ஆனாலும், யாரை நெனச்சு குத்துறாகளோ... அந்தப் பொண்ணையே எப்பாடுபட்டாவது கல்யாணமும் செஞ்சுக்குவாக. அப்படி முடியாம போற ஒண்ணு, ரெண்டு ஆம்பளைக, குத்தின பேரை அழிக்கணும்னு வந்து நின்னா, அது முடியவே முடியாது. அதனால, அதையே பேரு தெரியாத அளவுக்கு வேற ஏதாச்சும் வடிவமா மாத்திவிட்டுருவோம்" என்ற முனீஸ்வரி, பச்சை குத்தும் முறையையும் விளக்கினார்.

"பூவு, வேலுனு வேணுங்கற வடிவத்த மொதல்ல கையில வரைஞ்சுக்குவோம். பொறவு பச்சை குத்தறதுக்குனு நாங்க வெச்சிருக்கற மைய ஊசியில தொட்டு, புள்ளி புள்ளியா குத்தி குத்தி எடுப்போம். 'சுருக்', 'சுருக்'னு வலிக்கும். சிலருக்கு வீக்கம், காய்ச்சல்னு வரும். எல்லாம் ரெண்டு நாளைக்குத்தான். அப்புறம் அழகா கையில வடிவம் பதிஞ்சுபோயிடும். காலம் முழுக்க கெடக்கும்.


இதுல இன்னொரு சங்கதியும் இருக்கு. அந்தந்த எடம் பார்த்து பச்சை குத்தினா... வாதநீர் வெளியேறும், மூட்டுவலி, வர்மபிடிப்பு வெலகும், கை, கால் உளைச்சல் தீரும்" என்ற மாரீஸ்வரிக்கோ அவர் முன்னோர்களுக்கோ... இது, சீன மருத்துவ முறையான அக்குபஞ்சர் போலத்தான் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

"குத்தற வடிவத்தைப் பொறுத்து இருபது ரூபாயில இருந்து நூறு ரூபா வரைக்கும் கேட்போம். ஆனா, கொடுக்கறத வாங்கிக்குவோம். இப்பவெல்லாம் வாரத்துக்கு ஒரு ஆளு பச்ச குத்த வர்றதே பெரிய விஷயமாத்தான் இருக்கு" என்றார் வருத்தத்துடன்!

அப்படியே கேமராவைத் திருப்பினால்... சென்னை, நுங்கம்பாக்கம்... சர்புர்ரென்று கார்கள் விரைந்து கொண்டிருக்கும் சாலையில் இருக்கிறது 'இருசுமி' டாட்டூ ஸ்டூடியோ. அதை நடத்திவரும் நவீன், சென்னை யூத்களின் டாட்டூ பிரம்மா!

"டாட்டூங்கிறது ஜப்பான் வார்த்தை. ஒரு கலாசாரமா இருந்த இந்தப் பழக்கம், இப்போ உலக அளவுல ஃபேஷனாயிடுச்சு. சென்னையில ரெண்டு வருஷமாதான் பிக்-அப் ஆகியிருக்கு" எனும் நவீன், தாய்லாந்தில் டாட்டூவை முறைப்படி கற்றுக்கொண்டு, டாட்டூவுக்கான முதல் ஸ்டூடியோவை சென்னையில் தொடங்கியவர்.


"18 வயசுலேர்ந்து 65 வயது வரைக்கும்னு எல்லாரும் டாட்டூ குத்திக்க ஆர்வம் காட்டறாங்க. இதுல காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்தான் அதிகம். பெண்கள்... ஆண்களோட பெயரையும், ஆண்கள்... பெண்களோட பெயரையும் டாட்டூ போட்டுக்கறாங்க. என்ன கொடுமைனா, கொஞ்ச நாள்லயே 'ப்ச்... வொர்க் அவுட் ஆகல...'னு டாட்டூவை ரிமூவ் பண்றதுக்காக வர்றவங்க நிறைய" என்று அனுபவம் சொன்னவர்,

"டாட்டூவை லேசர் ட்ரீட்மென்ட் மூலம்தான் அழிக்க முடியும். அதுக்கு டாட்டூ போட்டுக்கற செலவைவிட, பத்து மடங்கு அதிகமா ஆகும். வேணும்னா, அது மேலயே வேற ஒரு டிசைன் போட்டு மறைக்கலாம்" என்பவருக்கு குஷ்பூ, த்ரிஷா, ஐஸ்வர்யா போன்றவர்கள் ஸ்டார் கஸ்டமர்கள்.



"ஈரான், நேபாள், நார்வேயிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆர்ட்டிஸ்ட்டுகள் இங்க பணிபுரியறாங்க. இயற்கையான முறையில தயார் செஞ்ச 'இங்க்'தான் பயன்படுத்தறோம். ஒரு செகண்டுக்கு 150 முறை பஞ்ச் பண்ற அளவுக்கு உயர் ரக ஊசியைத்தான் பயன்படுத்தறோம். எறும்பு கடிக்கற மாதிரி ஒரு சின்ன வலி இருக்கும். நாலு மணி நேரத்துல நல்லா பதிஞ்சிடும். ஒரு க்ரீம் தருவோம். அதை மூணு நாள் அப்ளை பண்ணணும்" என்றவர்,



"இப்போ 90% பேர் முறையா கத்துக்காம டாட்டூ போட்டு விடறாங்க. சுகாதாரமற்ற சூழல், ஸ்டெர்லைஸ் பண்ணாத கருவிகள்னு டாட்டூ போடும்போது நிறைய பிரச்னைகள் வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு" என்ற நவீன், "டிஸைனைப் பொறுத்து மினிமம் ரெண்டாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை டாட்டூ போட கட்டணம் வாங்கறோம். மொத்தத்துல, இப்ப டாட்டூக்கு வரவேற்பு 'டாப்'ல இருக்கு!" என்றார் உற்சாகத்துடன்!

கொலைவெறி பாடல் த்ரீ படத்தில் வராதா? தனுஷின் கொலைவெறி பதில்



பத்தே நாளில் பத்து லட்சத்துக்கும் அதிகமான டவுன்லோடிங் பிரசித்தி பெற்ற மற்றும் யூ ட்யூபில் தங்க மெடல் வாங்கிய கொலைவெறி பாடல் என்னுடைய படத்தில் வராது என்று யாரோ கிளப்பி விட்ட புரளியை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். 

கண்டிப்பாக என்னுடைய த்ரீ படத்தில் அந்த பாடல் இடம்பெறும். அதேசமயத்தில் அந்த பாடலை கொஞ்சம் மெருகேற்றி படத்தில் பாடலாம் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அந்த எண்ணத்தையும் கை விட்டு விட்டேன். 

நீங்கள் எந்த பாடலை தலையில் தூக்கி வைத்தீர்களோ அதே பாடல் அதே போல ஒரு மாற்றமுமின்றி திரையில் காண்பீர்கள் என்றும் கூறினார்.
 இனி வரும் மற்றவர்களுடைய படங்களிலும் இதே போல் இங்க்லீஷ் கலந்து பாட்டுகள் வரும். காலத்திற்கேற்ற மாற்றம் தேவை. பழைய மாதிரி பாடல்களை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்களே சொந்தமாக எழுதி பாடுவார்கள். பாடுகிறார்கள். 


ஆணுறுப்பை வெட்டி ஆணை பெண்ணாக மாற்றும் நவீன ஆப்பரேஷன்

பலவீனமானவர்கள் பார்க்க தடையுள்ளது.


ஐஸ்வர்யா ராய் பிரவசத்துக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்

பிரவசத்துக்குப் பின் தன உடலளவில் மீண்டும் பழைய நிலைக்கு வந்தபின்னர் திரைப்படத்தில் நடிக்கும் எண்ணம் தனக்கு உள்ளதாக ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். 

பிரபல இந்திப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். சல்மான் கானுக்கு பதிலாக இப்படத்தில் ஷாருக் கான் ஹீரோவாக நடிக்கிறார். உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பமாக இருந்ததால் கடந்த ஒரு ஆண்டாக நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் ஐஸ். குழந்தை பிறந்த பிறகு, தொடர்ந்து அவர் நடிப்பாரா, இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த சந்தேகத்துக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த சூப்பர்ஹிட் படம் ‘ஹம் தில் தே சுகே சனம்’.

-

-


-


இதில் சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தனர். இதே ஜோடியை வைத்து தனது கனவு படமான ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற படத்தை இயக்க இருப்பதாக பன்சாலி 2003-ம் ஆண்டு அறிவித்திருந்தார். வெறும் அறிவிப்போடு நின்றிருந்த அந்த பிராஜக்ட்டை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் பன்சாலி. ஏற்கனவே திட்டமிட்டபடி, ஹீரோயின் ஐஸ்தான். ஹீரோ.. சல்மான் கான் அல்ல. அவருக்கு பதிலாக ஷாருக் கான். ஐஸ்வர்யாவுக்கும் சல்மானுக்கும் ஆகாது என்பதால் இந்த அதிரடி மாற்றம். குழந்தை பெற்ற ஐஸ்வர்யா ராயை சமீபத்தில் சந்தித்து வாழ்த்து சொன்ன பன்சாலி, படம் சம்பந்தமாகவும் அவர் காதில் போட்டு வைத்தார். குழந்தையை கவனிப்பதில் முழு நேரத்தையும் செலவிட்டு வரும் ஐஸ், இடையே கதை பற்றி பேச நேரம் ஒதுக்கினார். இயக்குனர் சொன்ன கதையை ரசித்து கேட்ட அவர், உடனே ஓகே சொல்லிவிட்டார். அடுத்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

டிஷ்யூ பேப்பர் (Tissue பேப்பர்) மூலம் மணப்பெண் ஆடை வடிமைப்பு


இந்த நாகரிகம் எங்கு போய் முடியுமே தெரியல.. மனிதன் ஆரம்பத்தில் ஆடையில்லாம் பிறந்தவன்.. இப்பொழுதும் ஆடையில்லாமல்தான் அலைகிறான்…இது இப்படியிருக்க எதில் எதிலெல்லாம் ஆடைகளை வடிமைத்து அழகு பார்த்த மனிதன் தற்போது வித்தியாசமான ஒரு பொருளை கொண்டு ஆடைகளை வடிவமைத்துள்ளான்.

அப்படி என்னதான் என்று கேட்கிறீர்ளா? பொதுவாக மேலைத்தேய நாடுகளில் மலசல கூடங்களின் பேப்பர் மூலமே தமது கடமைகளை செய்து முடிப்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு செய்யப்படும் மலசலகூட பேப்பர்கள் மூலமே ஆடை தயாரித்து அழகு பார்த்துள்ளார்கள் இஸ்ரேலிய வடிவமைப்பாளர்கள். அதுவும் சும்மா ஆடையில்லீங்க திருமண மணப்பெண் ஆடை.. ஆம் மலசல கூட பேப்பர்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தினரே விளம்பர நோக்கத்திற்காக இவ்வாறு மேற்கொண்டுள்ளார்களாம். ம்ம்… விளம்பரத்திற்காக மட்டும் இருந்தால் சரி.. வீதியில் அணிந்து சென்று மழை வந்தால் நிலமை… ஐயோ..

-

-



கிரிக்கெட் - ஷேவாக் சாதனை சில சுவாரஸ்யமான தகவல்கள்

வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நடைபெற்ற 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் சேவாக் 219 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிரடி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் டென்டுல்கரில் இரட்டைச் சத சாதனையை 219 ரன்கள் எடுத்த சேவாக் முறியடித்துள்ளார்.

இதுவரை சச்சின் டென்டுல்கரின் 200 ரன்களுக்கு நாட் அவுட் என்ற எண்ணிக்கையே ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்ட சாதனையாக இருந்துவந்தது.

இச்சாதனையை கடந்த வருடம் நிகழ்த்தியிருந்தார் சச்சின்.

எனினும் அவருடன் ஜோடி சேர்ந்து ஓபனராக களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் வெஸ்ட் இன்டீஸ் உடனான இன்றைய போட்டியில் 219 ரன்கள் எடுத்து ஒரு நாள் போட்டிகளில் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். 219 ரன்களுடன் சேவாக் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சச்சினின் தென் ஆபிரிக்காவுக்கிற்கு எதிராக 200 ரன்கள் எடுத்தமை ஒருநாள் போட்டிகளில் உலக சாதனையாகும். Gwalior இல் வைத்து 2010 பெப்ரவரியில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார் அவர்.

ஷேவாக் சாதனையை நிகழ்த்தியதுடன் அவரை டுவிட்டரில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் யுவராஜ் சிங்க் " நான் Sir Viv இன் பேட்டிங்கை பார்த்ததில்லை. ஆனால் ஷேவாக்கை பார்த்துவிட்டேன். அற்புதமான வீரர். 219 ரன்கள் ஒருநாள் போட்டியில் என்பது நம்பமுடியாது." என்று கூறியிருக்கிறார்.

இதற்கு முன்னர் ஷேவாக் 2011 உலக கோப்பையில் பங்களாதேஷ் அணிக்கெதிராக 175 ரன்கள் எடுத்திருந்தமை அவரின் அதிக ஸ்கோர் எண்ணிக்கையாக இருந்துள்ளது. 

இச்சாதனைக்காக 140 பந்துகளில் 23 பவுண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் என விளாசியுள்ளார் சேவாக்.

முன்னர் சச்சின் 147 பந்துகளில் 200 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் இந்தியா 400 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாள் அரங்கில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி?


''எப்படி சார் இவ்வளவு தூரம் நாளையெல்லாம் சரியா கணிச்சு வர்றீங்க. இன்னிக்கு (18.10.2010) எங்க திருமண நாள். பதினோரு வருஷத்துக்கு முன்ன... இதே நாள்லதான் சுமா, மிஸஸ் ஹாரிஸ்னு ஆனாங்க!''

- விசேஷ நாளின் சந்தோஷம், ஹாரிஸ் ஜெயராஜின் வார்த்தைகளை இன்னும் ருசியாக்கியது!

தன் வாழ்வின் வரமாக அவர் கொண்டாடும் தன் மனைவி பற்றி, 'என் மனைவி'க்காக பேசினார் ஹாரிஸ்...

''அப்போ நான் பிரபலமான கீ போர்டு பிளேயர். இந்தியாவுல இருக்கற எல்லா இசையமைப்பாளர்கள்கிட்டயும் வாசிச்சுட்டிருந்தேன். ஒருமுறை, இசையமைப்பாளர் சாதுபொக்கிலாவுக்காக வாசிக்கறதுக்கு பெங்களூரு போயிருந்தேன். அப்போ அவர், 'இவங்க சுமா... நல்லா ஹம்மிங் பாடுவாங்க ஹாரிஸ்'னு எனக்கு அறிமுகப்படுத்தினார். அவங்கதான் என்னவளா ஆகப்போறவங்கனு, அப்போ எனக்குத் தெரியாது!

முதல் தடவை சுமாவை மீட் பண்ணினப்போ, மின்னல் அடிக்கல. ஆனா, சின்னதா ஒரு மத்தாப்பு ஒளி. தொழில்ரீதியா பல பெண்களை சந்திச்சிருக்கேன். ஆனா, இவங்கள சந்திச்சப்ப மட்டும் அந்த ஒளி பரவுச்சு. அன்னிக்கு ஒரு சம்பிரதாய புன்னகையோட ரெண்டு பேரும் ஒரு வார்த்தைகூட பேசிக்காம பிரிஞ்சுட் டோம்.

சாயங்காலம் பெங்களூரு 'ஸ்டாப் அண்ட் ஷாப்'புக்கு ஷாப்பிங் போயிருந்தேன். பெண்களுக்கான பகுதியில என் தங்கைகளுக்கு பொருட்கள் வாங்கப் போனப்போ, அங்க நின்னுட்டு இருந்தாங்க சுமா. மனசுக்குள்ள ஒருவித குறுகுறு சந்தோஷம். புன்னகை மூலமா, ரெண்டு பேருமே அதை வெளிப்படுத்திக்கிட்டோம். 'சிஸ்டர்சுக்காக வாங்க வந்தேன்'னு சொன்னேன். நான் பார்த்துக்கிட்டிருந்த டிரெஸ்களை எல்லாம் வாங்கி, கீழ வெச்சுட்டு, 'நான் செலக்ட் பண்ணித் தர்றேன்'னு நிறைய நேரம் செலவழிச்சு, தேர்ந்தெடுத்துக் கொடுத்தாங்க.

ஏன்னு தெரியல... 'உங்களுக்கும் ஏதாச்சும்...'னு சொன்னேன். 'நீங்களே எடுத்துக் கொடுங்க'னு சொன்னாங்க. 'சான்சுடா ஹாரிஸ்...'னு சுதாரிச்சேன். 'ஹெச்' டாலர் போட்ட செயினை வாங்கி, அவங்க பார்க்காம 'பேக்' பண்ணி, கையில கொடுத்தேன். அடுத்த நாள்... ஸ்டூடியோவுக்கு வந்தப்போ, 'ரியாக்ஷன் என்னவா இருக்கும்?!'னு காத்திருந்தேன். வாய்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் 'ஆட்டோகிராஃப் ப்ளீஸ்'னு எங்கிட்ட வந்தாங்க. என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்ட முதல் பெண் சுமாதான். கையெழுத்தோட என் போன் நம்பரையும் சேர்த்து எழுதினேன்.


நாட்கள் உருண்டுச்சு. சுமாகிட்ட இருந்து தகவல் எதுவும் வரல. 'தக்ஷக்'னு ஒரு இந்திப்படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. என் செல்போனை ரஹ்மான் பக்கத்துல வெச்சுட்டு, சாப்பிடப் போயிட்டு வந்தேன். 'உனக்கு ஒரு போன் வந்தது. நான் எடுத்துப் பேசினேன். யாரோ ஒரு பெண் பேசினாங்க'னு ரஹ்மான் சொன்னார். 'என் தங்கச்சியா இருக்கும்'னேன். 'அது மாதிரி தெரியலை'னார் அவர்.

மறுபடியும் வந்தது அந்த போன். 'ஏன் எனக்கு 'ஹெச்' இனிஷியல் டாலர் கொடுத்தீங்க?'னு குரல்ல பதற்றம் இல்லாம அமைதியா கேட்டாங்க சுமா. 'சும்மாதான்!'னு சொன்னேன். அது சும்மா இல்லைனு சுமாவுக்குப் புரிஞ்சது. அப்புறம் வாரத்துக்கு ஒரு நாள், தினமும் ஒரு தடவை, தினமும் பல தடவைனு பேச்சுகள் நீண்டுச்சு. நாங்க சந்திச்ச 90 நாட்களுக்குப் பிறகு, எங்க திருமணம் நடந்தது. 



நான் கிறிஸ்டியன்... என் மனைவி தெலுங்கு பிராமின். எங்க வீட்டுல சுமாவை பார்த்துட்டு, 'டபுள் ஓ.கேடா!'னு சொல்லிட்டாங்க. ஆனா, சுமா வீட்டுல நான் பாஸ் மார்க் வாங்கல போல. அந்த பதினெட்டாம் தேதி காலையில ஃப்ளைட்ல சென்னை வந்த சுமா, மாலை என் மனைவியானாங்க. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவங்க வீட்டுல யாருமே கல்யாணத்துக்கு வரல.

கல்யாணமான புதுசுல தெலுங்குப் பெண் சுமாவும், தமிழ்ப் பையன் ஹாரிசும் ஆங்கிலத்துலதான் பேசிக்குவோம். அப்புறம் மொழியில இருந்து மனசு வரைக்கும் ரெண்டு பேரும் பரஸ்பரம் பழகிக்கிட்டோம். எந்த நிர்ப்பந்தமும் இல்லாம தன் பெயரை 'ஜாய்ஸ்'னு மாத்திக்கிட்டாங்க சுமா. முழுமையான தன்னிறைவும், முழுமையான சமர்ப்பணமும் அவங்களோட ஸ்பெஷல். சர்ச் நடைமுறைகள்லகூட தன்னை இயல்பா புகுத்திகிட்ட அவங்களைப் பார்த்து நான் பலமுறை வியந்திருக்கேன், பூரிச்சிருக்கேன்.

ஒவ்வொரு கணமும் எனக்காக வாழறவங்க என் மனைவி. என் தங்கைகள் திருமணத்தை தாயைப் போல பொறுப்பேற்று நடத்தினாங்க. எங்க குடும்பத்துல எல்லாரோட பிறந்த நாளையும், திருமண நாளையும் ஞாபகம் வெச்சு கொண்டாடற அன்பு மனசுக்காரி சுமா. பெத்த தாயைவிட என்னை பூரணமா புரிஞ்சுக்கிட்டவங்க அவங்க. இதை நான் எங்கம்மாகிட்டயே பல தடவை சொல்லி பெருமைப்பட்டிருக்கேன். 'ஆமாண்டா!'னு சிரிக்கற மனசு எங்கம்மாவுக்கு. 

சாப்பாடுல இருந்து டிரெஸ் வரைக்கும் நான் முழுக்க முழுக்க அவங்க கன்ட்ரோல். சமீப காலமா ஹேர்ஸ்டைல், ஆடைகள்னு நான் நிறைய மெருகேறி இருக்கறதா நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. அத்தனை பெருமையும் என் மனைவி சுமாவுக்குதான் சமர்ப்பணம்.

என்னதான் பிஸியா இருந்தாலும், கார்ல முன் ஸீட்ல அவங்கள வெச்சுட்டு டிரைவ் பண்ற நேரத்துலயாச்சும் தினமும் பத்து நிமிஷமாவது தனிமையில பேசிடுவேன். 'நேத்தி நம்ம வீட்டுக்கு வந்திருந்த கெஸ்ட்டை அருமையா ரிஸீவ் பண்ணப்பா நீ'னு தட்டிக் கொடுப்பேன். அவங்ககிட்ட சேர்க்க வேண்டிய இந்த வார்த்தைகள தவறாம சேர்க்கறதால நாம குறைஞ்சுடப் போறதில்ல. இல்லறத்தோட மந்திரம் இந்த வார்த்தைகள்தான்னு நம்பறேன் நான். 

நிக்கோலஸ், நிகிதானு ரெண்டு குழந்தைங்க. சண்டையோ, மனத்தாங்கலோ... நானும் என் மனைவியும் அதை தனியறையில முடிச்சுக்குவோம். குழந்தைகளுக்கு... எப்பவும் புன்னகைச்சுட்டே இருக்கற அப்பா, அம்மாவை மட்டுமே தெரியும். நான் வீட்டுக்கு வர்ற நேரம் என் குழந்தைங்க தூங்கிட்டு இருப்பாங்க. அவங்க ஸ்கூல் கிளம்பற வரைக்கும் நான் அயர்ந்த தூக்கத்துல இருப்பேன். 



எப்பவும் அவங்களை தவறவிட்டுட்டே இருக்கற மாதிரி வேலைச் சுமை எனக்கு. ஆனா, பாடல் கம்போஸ் பண்ண வெளிநாடு போகற சூழ்நிலை வந்ததுனா, அவங்களையும் அள்ளிட்டுப் போயிடுவேன். வெளிநாட்டுல நாலு மணி நேரம் நம்ம மூளையை செலவழிச்சு வேலை செஞ்சா போதுமானதா இருக்கும். மிச்ச நேரம் முழுக்க மனைவி, குழந்தைங்ககிட்ட கிட்டத்தட்ட அடிமையாவே கிடப்பேன். அடுத்த ஆறு மாசத்துக்கு அவங்களுக்கும், எனக்கும் அந்த நாட்கள் தாங்கும்.

எவ்வளவு வேலையிருந்தாலும் ஒரு அப்பாவா குழந்தைகளுக்கான என் பொறுப்புகள்ல எந்த சமரசமும், தாமதமும் செய்ய மாட்டேன். அவங்க ஆண்டுவிழா நிகழ்ச்சியில கடைசி வரிசையில சத்தமில்லாம என் மனைவியோட அட்டண்டன்ஸ் போட்டுடுவேன். பள்ளியைப் பொறுத்தவரைக்கும் என் குழந்தைங்களுக்கு அப்பா. அங்க நான் வேற எந்த அடையாளத்தையும் அனுமதிக்கறதில்ல. 

இப்போ சுமாவோட அம்மா, அப்பாவும் எங்களை ஆசீர்வதிச்சு, வீட்டுக்கு வர ஆரம்பிச்சுருக்காங்க. குழந்தைங்கள ஆசை தீர கொஞ்சறாங்க. எல்லாமே ஆண்டவனோட கட்டளைப்படியே நடக்குது. வீட்டுல என் சுமாவோட கட்டளைகளை நான் எதிர்கொண்டு நடக்கறேன். 

நல்ல மனைவி, நல்ல குடும்பத்தோட பெரும் அங்கம். என் சுகதுக்கங்களை சுமாதான் நிர்ணயிக்கறாங்க. எங்க எல்லாரோட சுகதுக்கங்களை ஆண்டவர் நிர்ணயிக்கிறார்!

ரஜினி அல்ல. இவர் தான் நிஜ ஹீரோ!

அமெரிக்கா இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜப்பான் மீது வீசிய அணுகுண்டுகளை விடவும், 9/11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது ஒசாமா பின்லேடன் ஆட்கள் நடத்திய தாக்குதலை விடவும் அதிக பாதிப்புகளை அமெரிக்க நிர்வாகத்தின் மீது ஏற்படுத்தி யிருக்கிறது விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ள தகவல்கள்.

கொஞ்ச காலமாகவே அமெ ரிக்கா என்ற யானையின் காதுக்குள் புகுந்த எறும்பாக குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தது விக்கிலீக்ஸ் இணையதளம். இதன் நிறுவனரான ஜூலியன் அசான்ஜே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். கணக்கில் பட்டங்கள் பல பெற்றவர். ஆனால், அவர் போட்ட கணக் கெல்லாம், உண்மைகளை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது பற்றித்தான்.
தனது சகாக்களோடு சேர்ந்து அவர் தொடங்கிய விக்கிலீக்ஸ் இணையதளத்தில் ஆஃப்கானிஸ் தான் மீது அமெரிக்க-பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தியபோது, அப்பாவிப் பொதுமக்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள், தீவிரவாதிகள் என்று சந் தேகிக்கப்பட்டவர்கள் என்ன பாடுபடுத்தப்பட்டார்கள், மொத்த உயிர்ப்பலிகள் எவ்வளவு, அதில் அமெரிக்க- பிரிட்டன் படைகளின் தரப்பில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் என்ன என்பதையெல்லாம் ஆவணங்களோடு அம்பலப்படுத்தப்பட்டன. அமெரிக்காவுக்கு அசான்ஜே கொடுத்த முதல் அதிர்ச்சி வைத்தியம் இதுதான்.

“அத்தனையும் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனில் இருந்த ஆவணங்கள். இது எப்படி விக்கிலீக்ஸுக்குப் போனதுன்னு தெரியலை என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ உள்பட எல்லா அரசு இயந்திரங்களும் பேய் முழி முழித்தன. திருடனுக்குத் தேள்கொட்டியது போல அமெரிக்க அரசு தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில், ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா அங்கே எப்படியெல்லாம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது என்பதையும் விக்கிலீக்ஸ் லீக் செய்தது. இது இரண்டாவது அதிர்ச்சி வைத்தியம். 

மூன்றாவது என்ன அதிர்ச்சியைத் தரப்போகிறது என்று அமெரிக்கா மட்டுமல்ல, உலகநாடுகள் அனைத்திலும் உள்ள இணைய வாசகர்கள் எதிர்பார்த்திருந்தனர். எந்த நாட்டின் மீதான படையெடுப்பு ரகசியங்கள் வெளிவரப்போகின்றன என்று எதிர்பார்த்த நிலையில்தான், ஆற்றோடு போன நரி, அய்யோ உலகம் போச்சே என்று கத்திக்கொண்டே போனதுபோல இந்தியா உள்பட பல நாடுகளையும் தொடர்பு கொண்ட அமெரிக்க அரசு நிர்வாகம், "விக்கிலீக்ஸ் பல ஆவணங்களை வெளியிட்டு நமக்கிடையிலான உறவுகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம்' என்றது. சம்மன் இல்லாமல் அமெரிக்கா ஏன் ஆஜராகிறது என்று பல நாடுகளும் யோசித்தன. விக்கிலீக்ஸ் இணையதளம் எதையாவது வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி, தடையும் விதித்தது அமெரிக்கா.

விக்கிலீக்ஸ் சாதுர்யமாக, தன்னிடமிருந்த ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற சர்வதேச பத்திரிகைகளுக்குக் கொடுத்து வெளியிட வைத்தது. ஒபாமா என்ற அதிபர் அமெரிக்கா வின் முகமூடிதான், அமெரிக்க நிர்வாகத்தின் ஒரிஜினல் முகம் என் பது ஆபத்தானது என்பதை அந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தின.

பல நாடுகளிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பதிவாகியுள்ள ஆவணங்களும், தூதரக அதிகாரி களும், அமெரிக்க நிர்வாகத்தினரும் போனில் நிகழ்த்திய உரையாடல்களின் எழுத்து வடிவமும் தான் தற்போது வெளிப்பட்டு, அமெரிக்காவைக் குலை நடுங்க வைத்திருக்கிறது. 

சமீபத்தில்தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்துக் கைக்குலுக்கியிருந்தனர். ஆனால், புடினைப் பற்றிய அமெரிக்காவின் மதிப்பீடு என்ன தெரியுமா? அவர் ஒரு ஆல்ஃபா நாய்... அடஙொக்க மக்கா! அமெரிக்க மிரட்டலுக்கு அடங்காமல் குரல் கொடுக்கும் ஈரானின் அகமதிநிஜாத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர், அடால்ஃப் ஹிட்லர். இந்த அம்பலம் மூலம் கிடைத்துள்ள ஒரு நல்ல அம்சம், ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அமெரிக்க நிர்வாகம் ஒத்துக் கொண்டிருப்பது தான். எந்த நாட்டின் மீது படையெடுத்தாலும் கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்ளும் இங்கிலாந் தையும் அமெரிக்கா விட்டுவைக்கவில்லை. அங்கே பக்கிங்ஹாம் அரண்மனையில் என்னென்ன காதல் லீலைகள் நடக்கிறது, அதன்மூலம் அரச குடும்பத் தில் என்னென்ன பிரச்சினைகள் எழும் என்பதையெல்லாம் தனது தூதரக அதிகாரிகளை வைத்து உளவு பார்க்க வைத்தது. இதனால் இங்கிலாந்து பிரதமர் கேமரூனுக்கும் நெருக்கடி.

சின்ன நாடான கரிபீயன் தீவு முதல் தனது பெரிய எதிரியான சீனா வரை எல்லா நாடுகளிலும் குழப்பத்தை உண்டாக்கும் வேலைகளை அமெரிக்கத் தூதரகங்கள் மேற்கொண்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது. 

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக விரும்பும் இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தும் வேலைகளையும் அமெரிக்கா செய்து வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஐ.நா.சபை பொதுச்செயலாளரில் தொடங்கி அங்கே முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரையும் உளவு பார்க்கும் வேலையும் நடந்து வருவதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்கா மீது கோபமும் சந்தேகமும் கொண்டுள்ளன.

உலக நாட்டாண்மையின் உண்மை முகத்தைத் தோலுரித்ததன் மூலம் சூப்பர் ஹீரோவாகியிருக்கிறார் ஜூலியன் அசான்ஜே. விட்டுவைக்குமா அமெரிக்கா? சர்வதேச போலீசாரின் உதவியுடன் அவரைக் கைது செய்வதற்கான பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. 
ஸ்வீடன் நாட்டில் 3 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்-கற்பழித்தார் என்றெல்லாம் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு அந்த நாட்டு நீதிமன்றத்தில் அவருக்குத் தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளது. மேல் முறையீடு செய்துள்ள அசான்ஜே, மாறுவேடத்தில், வேறுவேறு பெயர்களுடன் வெவ்வேறு பாஸ்போர்ட்களில் உலகின் பல நாடுகளிலும் உள்ள ஓட்டல்களில் தங்கி, பாதுகாப் பில்லாத நிலையில் உள்ளார். 

அவர் வெளிப்படாவிட்டாலும், அவரது விக்கிலீக்ஸ் இன்னும் பல உண்மைகளை வெளிப் படுத்தும் என்ற அச்சத்தில் ஆட்டம் கண்டிருக்கிறது அமெரிக்கா.

சீரழிந்த இளம்பெண்கள்! காதலனின் வக்கிர கேமரா!

இளம்பெண் உமாராணிக்கு நாளை திருமணம். ஆனால் இன்று ஆற்றுக்குக் குளிக்கப் போனவள் வீடு திரும்பவில்லை. ஊர் முழுக்க தேடியலைந்த உமாராணியின் அம்மா தேவிகா... பதறியடித்தபடி அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்... 21-ந் தேதி ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு.


""ம்... விடிஞ்சா கல்யாணம்... பொண் ணை காணலை. வேறென்ன... விருப்பமில் லாத ஒருத்தனுக்கு கட்டிக்கொடுக்க ஏற்பாடு செஞ்சிருப்பீங்க... அவ விருப்பப்பட்டவ னோட ஓடிப்போயிருப்பா. சரி... சரி... எப்படியா இருந்தாலும் மாலையும் கழுத் துமா ஸ்டேஷன்லதான் வந்து நிப்பா... சொல்லி அனுப்புறோம் வாங்க'' என்று காக்கிகள் ஆறுதல்படுத்த... ""அய்யோ அவ ஆசைப்பட்டவனுக்குத்தானே கல்யாணம் பண்ணிவைக்க ஏற்பாடு பண்ணினேன். எங்கபோயி தொலைஞ்சாளோ?'' என்று தாய் தேவிகா கதற... புகாரை வாங்கிக்கொண்டு சீரியஸாக தேட ஆரம்பித்தனர் காக்கிகளும்.
இந்த நிலையில்தான்... இரண்டு நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை மதியம் நாகுடி மூடுபாலம் அருகே ஒரு சாக்குமூட்டை கிடக்க... மக்கள் கூட்டம் குவிந்திருக்கிறது.

தேவிகாவையும் கூட்டிக் கொண்டு போனது போலீஸ். சாக்குமூட்டைக்குள் சடலமாகக் கிடந்தாள் இளம்பெண் உமாராணி.

உமா கொலை செய்யப்பட்ட தன் பின்னணி தகவல்களை விசாரித்தபோது... ""மூர்த்திங்கிற பையனை லவ் பண்ணியிருக்குங்க இந்த உமா. இந்த மூர்த்தி இருக்கானே இவன் கிராமத்துல பொறந்தாலும் கில்லாடிப் பயலா பொறுக்கித்தனமா சுத்திக்கிட்டி ருப்பான். இவன் அண்ணன் வெளி நாட்டுக்குப் போயிட்டு வந்ததால ஓரளவுக்கு வசதி. உமாராணியோ ஒன்பதாவது வரை படிச்சுட்டு டவுன்ல ஒரு ஃபோட் டோ ஸ்டுடி யோவுல வேலை பார்த்தது. அப்புறம் மூர்த்தியின் ஊரிலுள்ள கயிறு திரிக்கிற கம்பெனியில வேலை பார்த்துக் கிட்டிருந்தது. இந்த மூர்த்தி பய வீட்டு தோப்பு வழியாத்தான் கம்பெனிக்குப் போகவேண்டியிருக்கும். அப்படிப் போகும்போது... லவ்வுங்கிற பேர்ல தன்னோட மோட்டார் ரூம், தோப்புன்னு கூட்டிட்டுப் போய் அனுபவிச்சவன்... அதோட விட்டிருந்தா பரவாயில்ல. அவகூட உல்லாசமா இருக்கிற மாதிரி விதவிதமா கேமராவால படம் பிடிச்சிருக்கான்.


அந்தப் பொண்ணுக்கு பீர் வாங்கிக் கொடுத்து குடிக்கவெச்சு... எப்படி எப்படியெல்லாம் கேவலமா படம் பிடிக்கணுமோ அப்படியெல்லாம் எடுத்திருக்கான். ப்ச்... பாவம்ங்க ஒரு தடவை "ஏன் மாமா என்னை இப்படில்லாம் படம் எடுக்குறே'ன்னு கேக்குது உமா. அதுக்கு இந்த ராஸ்கல், "சம்பாதிக்கத்தான்'னு அசால்ட் டா சொல்வதும், அந்த வீடியோவில் பதிவாகி யிருக்கு. எனக்கென்னவோ இதையெல்லாம் இண்டர்நெட்டுக்கு வித்துருப்பானுங்களோன்னு தோணுது. இவனோட நண்பர்களான குமார், கோபியும் சேர்ந்துதான் இப்படிக் கேவலமான வேலையில ஈடுபட்டிருக்கானுங்க. இப்படி வக்கிர வேலையில் ஈடுபடுத்தின மூர்த்தி இந்த பொண்ணையா கல்யா ணம் பண்ணிப்பான்?

அதான் நாளைக்கு கல்யாணம்னா... இன்னைக்கு ஆத்துக்குக் குளிக்கப்போன புள்ளைய மோட்டார் ரூமுக்கு கூட்டிட்டுப் போய் கரண்ட் ஷாக் வெச்சு கொன்னுட்டு... சாக்குமூட்டையில கட்டி ஆத்துல விட்டுட்டு ஊரைவிட்டே ஓடிட்டானுங்க'' என்ற பகீர் பின்னணி சொன்னவர் அந்த சி.டி.யையும் நம்மிடம் கொடுத்தார்.
அடப்பாவமே... அவர் சொன் னது போலவேதான் அந்த வீடியோ காட்சிகள் நம்மை வேதனைப்பட வைத்தன. மூர்த்தியின் வாழைத்தோப் பில் சேலை, தாவணியுடன் குடும்பப் பெண்ணாக தோன்றுகிறாள் உமா ராணி. பிறகு படிப்படியாக மூர்த்தி சொல்வதற்கிணங்க ஆடைகளை அவிழ்க்கிறாள். இப்படி பலவிதமான இடங்களில் விதவிதமாக தோன்றி ஆபாசமாக நிற்கிறார். அதோடு மூர்த்தியுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. வேளாங்கண்ணி லாட்ஜில் மட்டுமே பல வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு மேல் ஓடக்கூடியதாக இருக்கிறது இந்த அந்தரங்க காட்சிகள். மேலும் செல்ஃபோனில் எடுக்கப்பட்டது மட்டுமல்ல... தெளிவாகத் தெரியும் அளவுக்கு வீடியோ கேமராவால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை வக்கிரப்புத்தியோடு மட்டும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால்... பல வீடியோ காட்சிகளில் மியூசிக் அண்ட் மிக்ஸிங் வேலையெல்லாம் செய்திருக்கிறான். அது மட்டுமல்ல... ஒரு மெடிக்கல் ஷாப்பில் அமர்ந்திருக்கும் இன்னொரு இளம்பெண்ணையும் விரட்டி விரட்டி கேமராவில் பதிவு செய்திருக்கிறான். ஆக... மூர்த்தியும் அவனது நண்பர்களும் இதை ஒரு பிசினஸாகவே செய்திருப் பார்கள் என்றுதான் தோன்றுகிறது. 

உமா கொலை சம்பந்தமாக வக்கிர காதலன் மூர்த்தி பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளான்.


கதறியபடி தாய் தேவிகாவோ... ""என் கணவர் இறந்த பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ரெண்டு பிள்ளைகளையும் வளர்த்தேங்க. மூணு மாசத்துக்கு முன்னால பக்கத்து ஊரான மேற்பனைக் காடுவைச் சேர்ந்த சன்னாசி மகன் மூர்த்திங்கிற பையனுக்கு வேறு பெண்ணோடு கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க. அப்பதான் இவ மருந்து குடிச்சு தற்கொலை பண்ணிக்கப் போனா. காப்பாத்தி கேட்டப்போதான், அவன்கூட பழகி சுத்தினது... அதனால கர்ப்பமான விஷயத்தை எல்லாம் சொல்லி அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா. கல்யாண மாலை போட வேண்டிய சண்டாளப்பாவி... சாவு மாலைபோட வெச்சுட்டானே. என்புள்ளை சாவுக்குக் காரண மான அந்த மூர்த்தியையும் அவனது நண்பர்களையும் கடவுள் சும்மா விடாது'' என்று சாபம் விட்டபடி கதறுகிறார். 

காவல்துறை மூர்த்தியை கஸ்டடியில் எடுத்து உண்மை யாக விசாரித்தால்... காதலியின் அந்தரங்கத்தை வியாபாரமாக்கிய மூர்த்தியின் நெட்வொர்க்கையும் இவர்களின் வக்கிர கேமராவில் எத்தனை எத்தனை இளம்பெண்கள் சிக்கியிருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்கலாம்.

காதலில் வெற்றி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

காதல் என்பது இளமையின் வசந்தகாலம். எல்லோருமே ஏதாவது ஒரு கால கட்டத்தில் காதலை கடந்து வந்திருப்பார்கள். எல்லா காதலுமே வெற்றி கரமாக திருமணத்தில் முடிந்திருக்க வாய்ப்பில்லை. சின்ன சின்ன விசயங்கள்தான் பூதாகரமாக மாறி தோல்விக்கு அடிகோலியிருக்கும்.


காதலில் வெற்றி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஜெயித்த காதலர்கள் சிலர் கூறிய விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். இப்போது காதலிப்பவர்கள் இவற்றை பின்பற்றலாம்.

- காதல‌‌ர்க‌‌ளி‌ல் இரு வகை உ‌ண்டு, பெரு‌ம்பாலு‌ம் பே‌சி‌ப் பழ‌கிய‌ப் ‌பி‌ன்னரே காதல‌ர்களாக ஆவது‌ம், பா‌ர்‌த்த மா‌த்‌திர‌த்‌‌திலேயே காத‌ல் உ‌ண்டா‌கி காதலை‌த் தெ‌ரி‌வி‌த்த ‌பி‌ன் காதல‌ர்களானவ‌ர்களு‌ம் உ‌ண்டு.இ‌தி‌ல் எ‌ந்த வகையாக இரு‌ந்தாலு‌ம், காதல‌ர்க‌ள் ‌சில அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ளி‌ல் அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம். 

- காத‌ல் ம‌ற்றவ‌ர்களு‌க்கு வே‌ண்டுமானா‌ல் தெ‌ரியாம‌ல் இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் காத‌லி‌‌ப்பவரு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌க்க‌க் கூடாது. காதலை மறை‌ப்ப‌தி‌ல் எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. தை‌ரியமாக வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ல் ம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ள் காதலராக முடியு‌ம்.
- உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பதை தெ‌ரி‌வி‌ப்பதை ‌விட ஒரு ‌நி‌மிட‌ம் தை‌ரியமாக‌ச் செ‌ன்று ‌நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். 

- காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் அடி‌க்கடி உ‌ங்களது காதலை தெ‌ரி‌வியு‌‌ங்க‌ள். அது வா‌ர்‌த்தையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். வா‌ழ்‌த்து அ‌ட்டையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். பூ‌‌க்களு‌ம் உ‌ங்க‌ள் காதலை‌ச் சொ‌ல்லு‌ம். 

- எதை வேண்டுமென்றாலும் மறக்காலம் காதலிப்பவரின் பிறந்தநாளை மட்டும் மறக்கக்கூடாது. துணையுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுங்கள். பிறந்தநாள் நினைவில் இல்லாதது போல இருந்துவிட்டு பின்னர் பரிசு கொடுத்து அசத்தலாம்.

- ஈகோ மனப்பான்மை இருக்கக்கூடாது. இதுதான் காதலர்கள் பிரிவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

- காதல‌‌ர்க‌ள் எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் இருவரது பாதுகா‌ப்பையு‌ம் க‌ரு‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள். செ‌ல்லு‌ம் இடமு‌ம், போ‌ய் வரு‌ம் நேரமு‌ம் பாதுகா‌ப்பானதாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமையு‌ம் படி ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.

குறைகளை பட்டியல் இடாதீர்கள்

- உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் காதல‌ரி‌ன் குறைக‌ளை‌க் கூ‌றி‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டா‌ம்.

- காத‌லி‌ப்பவ‌ரி‌‌ன் குணா‌திசய‌ங்களை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று நிினை‌க்கா‌தீ‌ர்க‌ள். அதனை ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் தவறான செயலாக இரு‌‌ந்தா‌ல் ம‌ட்டு‌ம் அதனை எடு‌த்து‌க் கூ‌றி அவரு‌க்கு உண‌ர்‌த்து‌ங்க‌ள்.

- கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்படு‌ம்போதெ‌ல்லா‌ம் காதல‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் குறைகளை‌ப் ப‌‌ட்டிய‌லிடா‌தீ‌ர்க‌ள். அத‌‌ற்கு ப‌திலாக அவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌ந‌ற் குண‌ங்களை‌ எடு‌த்து‌க் கூ‌றி இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நீ‌ங்களா இதை‌ச் சொ‌ன்‌னீ‌ர்க‌ள் அ‌ல்லது செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றினா‌ல் ச‌ற்று மேலாக இரு‌க்கு‌ம். 

- காதலரை ‌விட ‌‌நீ‌ங்க‌ள் உய‌ர்‌ந்தவ‌ர் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல் எ‌ந்த பே‌ச்சு‌ம் இரு‌க்க‌க் கூடாது. இருவரு‌ம் ஒரே உ‌யி‌ர் எ‌ன்பது போ‌ன்று‌ம், ஒருவரை ஒருவ‌ர் ந‌ம்‌பி வா‌ழ்வது போ‌ன்று‌ம் உ‌ங்க‌ள் பே‌ச்சு இரு‌க்க‌ட்டு‌ம். ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய அடி‌க்கடி காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் பே‌சி‌க் கொ‌ண்டு இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு ச‌‌லி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.

- ரகசியம் காப்பது காதலில் மிகவும் முக்கியம். காதலர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவர்களுக்கு மட்டும் தெரிந்தவையாக இருக்கவேண்டும்.

இப்படி இன்னும் இன்னும் நிறைய. அத்தனையையும் பின்பற்ற முடியாவிட்டாலும் கூட நச்சென்று நாலை கையில் எடுத்தால் இனிமையான காதல் உங்கள் வசமாகும்.

ராஜா பெண் நிருபரைத் தள்ளினாராம்: ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள்,

ராஜா பெண் நிருபரைத் தள்ளினாராம்: ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – III

ராஜாவின் பார்வை ராடியாவின் மேலே இருந்தாலும், கனிந்த கனிமொழியின் நெருக்கம்-ஆதரவு இருந்தாலும், மற்ற பெண்மனிகளிடம், குறிப்பாக, அந்த “ஹெட்லைன்ஸ்” பண் நிறுபர் மீது அசாத்யமான கோபமே வந்துவிட்டதாம்!

ஆமாம், எந்த தைரியம் இருந்தால், டிவியில் ஒளிபரப்புவார்கள்!

ராடியாவும் விடவில்லை, உடனடியாக தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாள்.

ஆனால், கோர்ட் தடை செய்யமுடியாது என்று சொல்லிவிட்டது!

ரவுடியிஸம் பண்ண வந்திருக்கிறீகளா?




ராஜாவிந்குணம்-வெளிப்படுகிறது “நீங்கள், பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் மடையர்கள்“



குற்றமுள்ள நெஞ்சு குருகுறுக்கும் என்பார்கள். மடியில் கனம் இருந்தால் தான், வழியில் பயம் இருக்கும் என்பார்கள். இல்லையென்றால், அந்த பெண் நிருபர் கேட்டவுடன், ஏன் ராஜாவிர்கு அந்த அளவிர்கு கோபம் வரவேண்டும்?

திராவிட அரசியல்வாதிகள் தாம் மாவீரர்கள் ஆயிற்றே? “நீதிமன்றத்தைச் சந்திக்கத் தயார்”, என்று பரையடித்து, ம்உழக்கமிடும் மறவர்கள் வழி வந்தவர்கள் ஆயிற்றே? பிரகு எதர்கு ஒரு பெண்ணைக் கண்டு அஞ்சவேண்டும்?

பிறகு எதற்கு அத்தகைய நாகரிகமற்றச் செயல்? – அந்த பெண் நிருபரைப் பிடித்துத் ட்ஹள்ளுவது……………………………..சரி ராஜா அமைச்சர் தான் இப்படியென்றால், அந்த ராடியாவும் சளைத்தப் பெண்மணியாகத் தெரியவில்லை!


நீரா ராடியா ‘ஹட்லைன்ஸ் டிவி” அந்த டேப்புகளை தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படுவதைத் தடை செய்யவேண்டும் என்று தில்லி நீதிமன்றத்தில் தாக்குதல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது!

அது பொய் என்றால், பயப்படவேண்டிய அவசியல் இல்லையே?

மேலும், ராஜா-கனிமொழி முதலியோருடன் பேசிய பேச்சுகள் சட்டத்திற்கு புரம்பாக ஒலிப்பதிவு செய்யப் பட்டிருக்கின்றன, என்று ராடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அப்படியென்றால், இவ்வாறெல்லாம் மந்திரி பதவிகளை வாங்கித்தரும் அளவில் கோடிகளை ஏமாற்றி, “அரசியல் விபச்சாரம்” செய்வது மட்டும் சட்டரீதியில் உள்ளதா என்பது அவர்கலுக்குத் தெரியவில்லை போலும்!


உமக்கெல்லாம் சந்தோஷம் கிடைக்கக்கூடிய மாதிரி, நான் ஒன்றும் செய்திகளைக் கொண்டு வரவில்லை என்றாரே, கருணாநிதி?

இந்த நிகழ்சிகள் எல்லாம் சந்தோஷம் கொடுக்கக் கூடிய வகையில் இருக்கின்றனவா?





கோபப்படும் ராஜாவின் முகங்களே பல கதைகள் சொல்கின்றன!






A-Raja-adamant-aggressive 





A.Raja-angry


இத்தனை கோபம் தெவையா?

ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – II

ஒரு நாட்டில், இப்படி தொடர்ந்து பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், சிறிதுகூட மனசாட்சியில்லாமல், போதாகுறைக்கு ஆணவமாகப் பேசிக்கொண்டு, திரிந்து கொண்டிருக்க எப்படி இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு தைரியம் வருகிறது?

நீரா ராடியா அரசியல் ஏஜென்டா, மந்திரிகளை நியமிக்கும் ஒப்பந்தக்காரரா? கனிமொழி-நீரா ராடியா-ராஜா பேச்சுகள் திராவிட அரசியல் எந்த அளவிற்கு நீசத்தனமாகி விட்டது என்பதைக் காட்டுகிறது. அரசியலில் மந்திரிகள் நியமிக்கப் படும் அளவில் காங்கிரஸ்காரர்களை தன்னுடைய செல்வாக்கில் வைத்திருக்கிறார்கள் என்றால், எப்படி சாத்தியம்? சோனியா மெய்னோ இன்றும் அந்த அளவிற்கு லேசுபட்ட ஆள் இல்லை.

DMK-ministrs-nexus-corruption

மேலேயுள்ள உரையாடல்கள் அவர்களைத் தோலுரித்திக் காட்டுகின்றன.

Kanimozhi-Radia-Raja-nexus

$ அமைச்சர் பதவிகள் இவ்வாறு விற்க்கப் படுகின்றன அல்லது வாங்கப் படுகின்றன, அதற்கு இடைதரகர்களாக அழகான பெண்கள் வேண்டும், நடிகைகள் வேண்டும் என்றால் எப்படி?

$ அதன் மகத்துவம், சகசியம் என்ன?

$ தேர்ந்தெடுக்கும் குடிமக்கள்-பிரஜைகளைவிட, இவர்கள் தாம் ஆளுமையை-ஆட்சியை நிர்ணயிக்கின்றனர் என்றால், அவர்களுடைய தகுதி என்ன?

$ பிறகு எதற்கு அப்துல்கலாம் என்றெல்லாம் பேசவேண்டும்?

$ பேசாமல். தாவூத் இப்ராஹிமை ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ ஆக்கிவிட்டு இந்தியர்கள் சாகலாமே?

$ கசாப்புக்காரன் கசாபை ராணுவ மந்திரியாக்கிவிடலாமே?

MK-ராஜா-ஸ்பெக்ட்ரம்-ஊழல்

குடும்ப சகிதமாக – அதுவும் அந்த ஐந்து மந்திரிகள் கூட்டத்துடன் சோனியாவை சந்திப்பது அரிசிக்காகவோ, வெங்காயத்திற்காகவோ நிச்சயமாக இல்லை.

யார் அவ்வாறு நடந்து கொள்ள அனுமதிக்கின்றனர்?

பெண் நிருபர்களைத் தள்ளி, கெட்ட வார்த்தைகளால் திட்டிய ராஜா!

பெண் நிருபர்களைத் தள்ளி, கெட்ட வார்த்தைகளால் திட்டிய ராஜா!


ARaja-chennai-airport-ab

விமான நிலையில் தள்ளு-முள்ளு

சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் கேள்விகள் கேட்டபோது, ராஜா மிகவும் மோசமாக நடந்து கொண்டது அசிங்கமாக இருந்தது.



தள்ளு-முள்ளு

பெண் நிருபர் தள்ளப்படுவது

இரு பெண் நிருபர்களைத் தள்ளிவிட்டதாக “ஹெட்லைன்ஸ்” ப்ரியம்வதா என்ற நிருபர் கூறுகிறார்.



கோபத்தில் கத்தும் ராஜா



இதைத் தவிர, அந்த தள்ளூமுள்ளு வீடியோ காடிசிகளை பார்க்கும் போது, ராஜா நடுநடுவே சில தமிழில் கெட்டவார்த்கைகள் கூருவதும் கேட்கிறது.

கருணாநிதி, மன்மோஹன்சிங், சோனியா இவர்களை விடுத்து ஏதோ மூன்றாம் நபரிடம் போய் அமைச்சர் பதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை



கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும், நிருபர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

நீரா ராடியாவைப் போய் கேள்

இதைத் தவிர ராஜாவின் ஆதரவாளர்கள், நிருபர்களைப் பார்த்து கேலி செய்தது, சப்தமிட்டது, மிரட்டியது முதலியவை பார்ப்பவர்வகளுக்கு, தர்ம சங்கடமாகவும், வியப்பாகவும் இருந்தது…………

இப்படியும் ஒரு காதலா ????








இப்படியும் ஒரு காதலா ????

வார்த்தை ஒன்னுமே சொல்ல வரவில்லை.











அம்மா எதிரே பாத்ரூமில் நடிகையைக் கட்டிப் பிடித்த இளம் ஹீரோ!-

அம்மா எதிரே பாத்ரூமில் நடிகையைக் கட்டிப் பிடித்த இளம் ஹீரோ!- வெட்கம்... கூச்சம்!

கொடி கட்டிப் பறந்த நடிகை ஜெயசித்ராவின் வாரிசு அம்ரேஷ் கணேஷும் நடிக்க வந்துவிட்டார். இப்போது "நானே என்னுள் இல்லை' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இசையும் இவரே. மகனை வைத்து இந்தப் படத்தை இயக்கித் தயாரித்து வருகிறார் ஜெயசித்ரா.

தன்னைப் பற்றி அம்ரேஷ் கணேஷ்:

""அம்மாவைப் பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். அப்பா பாடகர். அதனால சின்ன வயசுலேயே இசை கத்துக்கிட்டேன். பிறகு மியூஸிக் டைரக்டர் மணிசர்மாவிடம் கீ-போர்டு வாசிச்சிட்டிருந்தேன். இப்போ அம்மா இயக்கத்துல ஹீரோவா ஆக்ட் பண்ணிக்கிட்டி ருக்கேன். இப்போதைக்கு என் பயோடேட்டா இவ்வளவுதான். இந்தப் படத்தில் ரெண்டு பாட்டு நானே எழுதி பாடியும் இருக்கேன்'' என்று குழந்தையாய் சிரிக்கிறார் அம்ரேஷ் கணேஷ்.

அம்மா இயக்கத்தில், காதல் காட்சிகள்ல நடிக்கும்போது எப்படி இருந்தது?

"" "ஷூட்டிங் ஸ்பாட்ல நான் அம்மாங்கறதையே மறந்திரு. பெர்பாமென்ஸ்தான் முக்கியம். டேக் பத்தி கவலைப்படாதே'ன்னு ஒவ்வொரு நாள் ஷூட்டிங் ஆரம் பிக்கறதுக்கு முன்னாடியும் தைரியம் சொல்லி, காமிரா பயத்தைப் போக்கிட்டுதான் ஷாட், கட்டே சொல்வாங்க அம்மா.

அப்படி இருந்தும் பாத்ரூமில் ஹீரோயினை கட்டிப் பிடிக்கற சீன் எடுக்கும்போது கூச்சமா இருந்துச்சு! மத்தபடி ஒரு பிரச்சினையும் இல்லை!''

நடிப்புல ரோல் மாடல் யார்? பஞ்ச் டயலாக்கெல்லாம் இருக்கா?

""ஹீரோயிஸம் இல்லாத கேரக் டரா சிவாஜி சார் மாதிரி நடிக்கணும். ஆக்ரோஷத்துல விஜய் பிடிக்கும். பியாண்ட் மெச்சூரிடி இல்லாம பஞ்ச் டயலாக் பேசினா எடுபடாது. இந்தப் படத்துல என் கேரக்டர் ஹீரோவா மாறினதுக்குப் பின்னாடி நடிகனா விஜய் மாதிரி,

"சுண்டிவிட்டா சுனாமி டோய்

நேர்ல வந்தா நிலம் நடுங்கும்

போன்ல பேசினா புயலடிக்கும்'னு

ஒரு டயலாக் இருக்கு!''

மியூஸிக் டைரக்டரா இன்றைய பாடல்கள் பத்தி?

""வார்த்தைகளை இசை அமுக்கி விடுகிறது. வரிகள் தெளிவாகப் புரியற மாதிரி இசை அமைக்கணும்ங் கறதுதான் என்னோட பாணி!''

""ஆர்யா மேனன் நாயகி. கே.எஸ். ரவிகுமார், விசு, பி. வாசு சாரெல்லாம் என்னை வெச்சி டைரக்ட் பண்ணுற மாதிரி ஒவ்வொரு நாள் நடித்திருக்கி றார்கள். 60 நாள் டாக்கி போர்ஷன் முடிச்சிருக்கோம். அதைப் பார்த்து கே.பி. சாரும் கமலும் பாராட்டினது சந்தோஷமா இருந்தது'' என்று சொல்லிப் பூரிக்கிறார் இயக்குநர்- தயாரிப்பாளர்- ஹீரோவின் அம்மா ஜெயசித்ரா!

பத்து மாசம் சுமந்த பிள்ளை யாச்சே! சந்தோஷம் இருக்காதா பின்னே?

ஜெ.வை கண்டித்து குஷ்பு பேச்சு

ஜெ.வை கண்டித்து குஷ்பு பேச்சு


நித்யா- அதிர வைக்கும் ஆதாரம்

உண்மைகள் அம்பல மாவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு கோர்ட் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறது நித்யானந்தர் தரப்பு. ஏப்ரல் 8-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, "நக்கீரனில் ஆதாரம் எதுவுமில்லாமல் பொய்யா எழுது றாங்க. அதற்கு தடை கொடுக்கணும்' என நித்யானந்தர் தரப்பு வக்கீல் வாதம் செய்தார். அவரது வாதங்களுக்கு நக்கீரன் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் பதிலடி கொடுத்தார்.


ஆதாரமில்லாமல் நக்கீரன் எதையும் எழுதுவ தில்லை. வீடியோ, ஆடியோ, பேப்பர் டாக்கு மெண்ட்ஸ், ஃபோட்டோக்கள், பேட்டிகள் என நித்யா னந்தரின் ஒவ்வொரு செயல்பாடு பற்றியும் ஆதாரத் துடனேயே வெளியிட்டு வரும் உங்கள் நக்கீரன் கடந்த இதழில், "ஒப்பந்தம் போட்டு செக்ஸ்-நித்யானந்தரின் புதுமோசடி' என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளி யிட்டிருந்தது. அதில், தனது ஆசிரமத்தில் உள்ள பெண் களிடமும் ஆண்களிடமும் நித்யானந்தர் ஏற்கனவே ஒரு ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்து வாங்கி விட்டார் என்பதால்தான், அவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கத் தயங்குகிறார்கள் என்பதையும், செக்ஸ் உள்பட எல்லாவற்றுக்கும் உடன்படுவதாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார் என்பதையும் அம்பலப்படுத்தியிருந்தோம்.
தனது ஆசிரமத்தில் சந்நி யாசிகளாகியிருக்கிற ஆண்-பெண் சாமியார்கள் 500 பேரிடமும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் நித்யா னந்தர். நித்யானந்தரின் பிரசங்கத் தால் ஈர்க்கப்பட்டு, அவருடைய பயிற்சிகளால் வசீகரிக்கப்பட்டு, ஆசிரமத்தில் சேர்ந்த யாருமே இந்த ஒப்பந்தத்தைப் படித்துப் பார்க்காமல், சாமியார் மீது வைத்த அளவுகடந்த நம்பிக்கை யால் கையெழுத்திட்டிருக்கிறார் கள். ஆசிரமத் தரப்பிலும், சாமி யாராக மாறுகிறவர்கள் தரப்பிலும் கையெழுத்திடப்பட்டுள்ள ஒரி ஜினல் ஒப்பந்த பத்திரங்களை இங்கே வெளியிட்டுள்ளோம். அந்த ஒப்பந்தத்தில் இருக்கும் வாசகங்கள், அனைத்துவிதமான செக்ஸ் விஷயங்களுக்கும் உடன்பாடு தெரிவிக்கும் வகையிலேயே அமைக் கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான்:
பவுண்டேஷனால் நடத்தப்படும் "குருவிட மிருந்து கற்றுக்கொள்ளுதல்' நிகழ்ச்சியில் தந்த்ரிக் சடங்குகளும் இடம்பெறும். இந்த டாக்குமெண்ட் டை படித்து, கையெழுத்திடும் வாலன்டியர்களே (ஆசிரம உறுப்பினர்கள்) இந்த புரோகிராமில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு பொறுப்பாவார்கள். இந்த புரோகிராமில் ஏற்படும் விளைவுகளுக்கு, தலைவர் (லீடர்) ஸ்ரீநித்யானந்தசாமி, இந்த பவுண்டேஷன், இதன் துணை நிறுவனங்கள், மற்ற வாலன்டியர்கள், மற்றும் இதில் குறிப்பிடப்படாத யாராக இருந்தாலும் அவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த நிறுவனத்துடன், நிர்வாகத்துடன், நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருந்தாலும் அவர்கள் இவற்றிற்கு பொறுப்பாக மாட்டார்கள். அவர்களை வாலன்டியர்கள் பொறுப்பாக்கவும் முடியாது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படும் விளைவுகள், இழப்புகள், அதற்கான நிவாரணங்கள் ஆகியவற்றுக்கு வாலன்டியர்களே பொறுப்பாவார்கள்.

இந்த ஒப்பந்தத்திற்கு உரிமையும் அதி காரமும் தகுதியும் உடைய வாலன்டியர்களே இந்த அக்ரிமென்ட்டில் உள்ள விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கு பொறுப்பானவர்கள். உரிமையுடையவர்களும் பொறுப்புடையவர் களுமாவார்கள். வாலன்டியர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதால், வயது வந்தவர்களுக்கான நிகழ்வுகளை (ஹக்ன்ப்ற் ம்ஹற்ங்ழ்ண்ஹப்) ஏற்றுக்கொள்வதும் வைத்திருப்பதும் அவர்களின் சொந்த பொறுப்பைச் சார்ந்த தாகும். சட்டவிதிகளை உணர்ந்து கையெழுத் திட்டிருக்கும் வாலன்டியர்கள், இதற்கு தாங் களே பொறுப்பு என்பதை ஏற்றுக் கொண்ட வர்களாவார்கள். தந்த்ரிக் சடங்குகளில் தொ டர்புடைய பாலுறவு சார்ந்த-வயது வந்தோருக் குரிய நிகழ்வுகள் எவ்வித குற்றத்தன்மைக்கோ ஆட்சேபத்திற்குரியதோ அல்ல என்பதையும் வாலன்டியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்-பெண் தொடர்புடைய பரவச நிலை சம்பந்தமான பழைய தந்த் ரிக் ரகசியங் கள் இந்த புரோகிராமில் கற்றுத்தரப் படுவதுடன் அது பற்றிய பயிற்சியும் அளிக் கப்படும் என் பதை வாலன்டியர் கள் புரிந்துகொள்ள வேண்டும். இதில், ஆண்- பெண் இடையிலான நெருங்கிய உறவையும் ஆன்மீகத் தொடர்பை யும், மகிழ்ச்சி- ஒருங்கிணைப்பு- விடுதலை ஆகியவற்றையும் உருவாக் கக்கூடிய பாலுறவு (செக்ஸ்) சக்தியை அதிகப்படுத்தும் நிகழ்ச்சிகளும் அடங்கியிருக்கும். இந்த நடவடிக்கை கள் உடலுக்கும் மனதுக்கும் சவா லானவை என்பதை வாலன்டியர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இதில் நிர்வாணத்தன்மையும் இருக்கும். அது தொடர்பான காட்சி களும் இடம்பெறும். கிராபிக்ஸ் காட்சி களாக விளக்கக்கூடிய படங்களும் இடம்பெறும். செக்ஸ் நடவடிக்கைகள் பற்றியும் நிர்வாணம் பற்றியும் விளக்கங் கள் தரப்படும். உடல்ரீதியான உறவு- நெருக்கம் ஆகியவை பற்றிய பயிற்சி களும் இருக்கும். இவை தொடர்பாக வாய் வார்த்தைகளிலும் எழுத்துபூர்வ மாகவும் விளக்கங்கள் தரப்படும். செக்ஸ் தொடர்புயை -உணர்வு களைத் தூண்டக்கூடிய ஆடியோ சப்தங்களும் மற்ற வையும் இந்த புரோ கிராமில் இடம்பெறும். இந்த அக்ரிமென்ட்டை படித்து கையெ ழுத்திடும் வாலன்டியர்கள், தாங்க ளாகவே முன்வந்து எவ்வித நிபந்தனையு மின்றி இந்த நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொள் கிறார்கள். இதில் தலைவருக்கோ (நித்யானந்தர்), பவுண்டேஷனுக்கோ, நிறுவனத்துக்கோ, நிர்வாகத் துக்கோ, இவற்றுடன் நேரடியாகவோ- மறைமுக மாகவோ சம்பந்தமுள்ள யாருக்கும் இந்த நட வடிக்கைகளில் தொடர்பில்லை என்பதை வாலன்டியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதில் ஏற்படும் நேரடி-மறைமுக விளைவுகள் அனைத்திற்கும் வாலன்டியர்களே பொறுப்பு.
தலைவருடனும் (நித்யானந்தர்) பவுண்டேஷனுடனும் வாலன்டியர்கள் கொண்டிருக்கும் உற வினால் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு வாலன்டி யர்களே முழுப்பொறுப்பாவார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். தலைவர் உள்பட இந்த புரோகிராமில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய யார் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவோ, இழப்பீட கோரவோ வாலண்டியர் களுக்கு உரிமை இல்லை.

இந்த நிபந்தனைகளை வாலன்டியர்கள் தெளிவாக ஏற்றுக்கொண்டு கையெழுத்திடுவதால் இந்த புரோகிராமின் விளைவுகள் தொடர்பாக எவ்வித இழப்பீடோ, உத்தரவாதமோ கோர முடியாது.

-இதுதான் நித்யானந்தர், தன் ஆசிரமத்தில் சாமியார்களாக-சாமியாரினிகளாக சேரும் அனைவரிடமும் போட்டுள்ள ஒப்பந்தமாகும். இங்கே வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் பவுண் டேஷன் சார்பில் கையெழுத்திட்டிருப்பவர் மா நித்ய சதானந்தா. இவர், ஆசிரமத்தில் நித்யானந்த ருக்கு அடுத்த நிலையில் உள்ள சதானந்தாவின் மனைவி. வாலன்டியர் (ஆசிரம உறுப்பினர்) இடத்தில் கையெழுத்திட்டிருப்பவர் வித்யா விஸ்வநாதன். இவர்தான், தற்போது கோபிகா என்ற பெயர் மாற்றம் பெற்றுள்ள நித்யானந்தரின் பர்சனல் செகரட்டரி. கேரள மாநிலம் காலிகட் டைச் சேர்ந்த இவர் 2003-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டுள்ளார். இதே போன்ற இன்னொரு ஒப்பந்தத்தில் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி கோபிகாவும் மா நித்ய சதானந்தாவும் கையெழுத்திட்டுள்ளனர். ஒவ்வொரு ஒப்பந்தமும் தலா 10 பக்கங்களில் உள்ளன. இரண்டாவது ஒப்பந்தம் போடப்பட்ட தேதியில்தான் கோபிகாவுடனும் ரஞ்சிதாவுடனும் அமெரிக்காவுக்கு சென்றார் நித்யானந்தா. ரஞ்சிதாவும் இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கலாம்.

குருவிடமிருந்து கற்றுக்கொள்ளுதல் (learning from the master) என்கிற இந்த நிகழ்ச்சியும் அதற்கான ஒப்பந்தமும் முழுக்க முழுக்க பெண்களை செக்ஸ் வயப்படுத்தும் திட்டத்துடனேயே போடப்பட்டிருக்கிறது என்பது இதிலுள்ள சாராம்சங்களிலிருந்தே தெரிகிறது. உலகக் கனவுடன் தனது ஆசிரமத்தை வளர்த்த நித்யானந்தாவின் ஒரே நோக்கம், உலகத்தின் பல பகுதிகளிலும் உள்ள பெண்களை தனது இச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. ஓஷோ ரஜனீஷ் பாணியில் தன் ஆசிரமத்தை வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார்.

ஆன்மீக மார்க்கத்தில் சிற்றின்பத்தைத் துறந்தால்தான் இறைவனின் திருவடியை அடைய முடியும் என்பது நீண்டகாலமாக உள்ள வழக்கம். இதனை உடைத்து, சிற்றின்பத்தின் மூலம் பேரின்பத்தை அடைவது என்பதுதான் ஓஷோ ரஜனீஷ் முன்வைத்த தத்துவம். இந்த எளிதான வழியினால் பல நாட்டைச் சார்ந்தவர்களும் ஓஷோவி னால் ஈர்க்கப்பட்டனர். அவரது ஆசிரமம் உலகின் பணக்கார ஆசிரமமானது. அங்கே நடைபெறும் புரோகிராமில் உணர்வைத் தூண்டும் இசை ஒலி பரப்பப்படும். அப்போது அங்கிருக்கும் ஆண்-பெண் பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான யாருடனும் இணைந்து கொள்ளலாம். உறவு கொள்ளலாம். அதே பாணியில்தான் தன் ஆசிரமத்தை வளர்க்க நினைத்திருக்கிறார் நித்யானந் தர்.

ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களின்படி, செக்ஸ் என்பது ஆசிரமத்தில் கட்டாயம் என்பது உறுதியாகிறது. செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடும் யார் மீதும் சம்பந்தப்பட்ட பெண்கள் சட்டநடவடிக்கை எடுக்க முடியாது என்கிறது இந்த ஒப்பந்தம். இதன் மூலம் எந்தப் பெண்ணுடனும் ஆசிரமப் பொறுப்பில் இருக்கும் யார் வேண்டு மானாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். இந்த ஒரு நோக்கத்திற்காகவே அவர் ஆசிரமம் நடத்தி வந்திருக்கிறார் என்பதும், அதற்கு பழங்காலத்து தந்த்ரிக்குகளை சாதனமாகப் பயன் படுத்தியிருக்கிறார் என்பதும் இந்த ஒப்பந்தத்திலிருந்து தெரியவருகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட காரணத்தினால்தான், ஆசிரமத்துப் பெண்கள் பயந்துபோய், தங்களுக்கு ஏற்பட்ட செக்ஸ் கொடுமைகளை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சந்நியாச பரம்பரையில் தந்த்ராவுக்கு இடமேயில்லை. அகோரிகள் போல நரமாமிசம் சாப்பிடக் கூடியவர்களுக்குத்தான் அதெல்லாம். சந்நியாசிகளோ பிரம்மச்சாரிகளோ இத்தகைய தந்த்ராக்களில் ஈடுபடுவது குற்றம். 64 தந்த்ராக்களில் ஒன்று மட்டும்தான் செக்ஸ் பற்றி குறிப்பிடுகிறது.

சிவபெருமான் சொல்லிக் கொடுத்த 112 சூத்திரங்களில் 6 மட்டுமே செக்ஸ் சம்பந்தப்பட்டது. அதுவும் கூட, கிரகஸ்தர்களுக்குத் தான். அதாவது, கல்யாணமாகி குடும்பம் நடத்துகிறவர்களுக்குத் தான். சந்நியாசிகளுக்குக் கிடையாது. அப்படி யிருந்தும், தந்த்ரா என்ற பெயரில் புரோகிராம் நடத்தி அதில் பெண்களை வசியப்படுத்தும் செக்ஸ் நடவடிக்கைகளுக்கு ஒப்பந்தம் போட்டு ஆசிரமத் துப் பெண்களை நாசப்படுத்தியிருக்கிறார் நித்யானந்தர்.

இப்படியொரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் சட்டத்திலிருந்து தப்பித்துவிடமுடியுமா என நம் மீது நித்யானந்தர் தரப்பு தொடுத்துள்ள வழக்கில் வலுவான எதிர்வாதங்களை எடுத்துவைத்து வாதாடி வரும் நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாளிடம் கேட்டோம். "இந்தியாவில் உள்ள சட்டங்களின்படி இப்படிப்பட்ட ஒப்பந்தத்திற்கு எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் கிடையாது. சட்டத்தின்முன் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் கற்பழிப்பு-மோசடி உள்ளிட்ட பல குற்றங்களுக்காக நித்யானந்தர் தண்டிக்கப் படுவார்' என்கிறார் அழுத்த மாக.

நித்யானந்தர் ஆசிரமத்து மோசடிகள் இந்தியாவின் சட்டதிட்டங்களையே காலில் போட்டு மிதிக் கும் வகையில் நடந் துள்ளன என்பது இந்த ஒப்பந்தம் மூலம் அம்பலமா கிறது.

கெட்ட ஆட்டம் பார்த்த மந்திரிகள்

கொட்ட கொட்ட விழித்து...கெட்ட ஆட்டம் பார்த்த மந்திரிகள் 


சொந்த ஊரான சாத்தமங்கலம் மீது மட்டற்ற பாசமும், சாத்தமங்கலம் மாடக்கோட்டையில் உள்ள தனது குலதெய்வமான முனீஸ்வரர் மீது மட்டற்ற பக்தியும் கொண்டவர் சென்னை கே.கே.நகர் கவுன்சிலரும் தி.மு.க. பகுதிச் செயலாளருமான தனசேகரன். வருடா வருடம் சென்னையில் இருந்து பெரிய திரை, சின்னத்திரை நாட்டியத் தாரகைகளை அழைத்து வந்து தனது ஊரில் கவர்ச்சி நடன நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்துவார் தனசேகரன். 2 வருடம் முன்பு நடிகை நமீதாவை அழைத்து வந்து ஆடவிட்டு, பஞ்சப்பிரதேசத் தின் இளைஞர் பட்டாள நெஞ்சங்களை இசை நாட்டிய கடலில் நீந்தவிட்டார்.
கெளுத்தி 
இந்த ஆண்டோ... பாபிலோனா, நீபா, ஷில்பா, கீர்த்திகா, சுஜிபாலா என கவர்ச்சித் தோப்பையே இறக்குமதி செய்து சுமார் 20 ஆயிரம் மக்களை கவர்ச்சி நாட்டிய சுனாமியில் தத்தளிக்க விட்டு பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.
21.5.10 வெள்ளிக்கிழமை.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகிலுள்ள சாத்தமங்கலத் தில், கே.கே.நகர் தனசேகரனின் பங்களாவில், அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரியகருப்பன், இளையாங்குடி எம்.எல்.ஏ. மதியரசன், எம்.பி.ரித்தீஷ், வைகைப்புயல் வடிவேலு உட்பட ஏராளமான வி.ஐ.பி.களும், கட்சிக்காரர்களும், உறவினர்களும் நட்பு வட்டாரமும் குவிந்திருக்க...

நண்டு, இறால், மீன், சிக்கன், மட்டனோடு வெரைட்டியான விருந்து தொடங்கியது. பந்தி முடிந்ததும்... கூட்டம் கோயில் நோக்கிச் சென்றது.

முனியன் கோயிலருகே... சென்னை நேரு ஸ்டேடிய லெவலுக்கு மேடை, ஒளிவெள்ளம் பாய்ச்சிய மின்விளக்குகள். லேசர் விளையாட்டுகளுக்கு பிறகு டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

""பாருங்கடா... கட்சிக் கூட்டம்னா எப்பவுமே லேட்டா வர்ற நம்ம அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன்... டான்ஸ் பார்க்க அட் வான்ஸா வந்துட்டாக... பக்கத்தில யாரு? அட நம்ம அமைச்சர் சுப.தங்க வேலன்தான்... பாருங்கடா... என்னமா ரசிக்கிறாக?'' -தொண்டர்கள் பலரின் பார்வை அமைச்சர்களின் ரசனை மீதே குவிந்திருந்தது.

நாட்டிய நிகழ்ச்சியின் நடுவில் மேடையேறி மைக்கைப் பிடித்தார் வைகைப்புயல் வடிவேலு.

""என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை... என் பங்காளி தனசேகரனுக்கு இம்புட்டுச் செல்வாக்கா? தலைவர் கலைஞரோட "இளைஞன்' பட சூட்டிங்குக்காக ஊட்டிக்குப் போற கேப்புல இங்கே வந்தேன். நானும் ஒரு காலத்தில இந்த மாதிரி கூட்டத்தோட கூட்டமா உக்காந்து வேடிக்கை பார்த்தவன்தான்... இன்னக்கி... ராத்திரியில... ஜனங்க எல்லாரும் கொட்டக் கொட்ட முழிச்சிருந்து, கவலையை மறந்து சந்தோஷமா இருக்கிறதுக்கு நானும் ஒரு காரணமா இருக்கேனே... இதுக்காக ரொம்ப சந்தோஷப்படுறேன்...''.

""அண்ணே... பேசுனது போதும் பாட்டுப் பாடுங்கண்ணே!'' கூட்டத்தினர் குரல் கொடுத்தனர்.

""என்ன பாட்டுப் பாட? எம்.ஜி.ஆர். பாட்டுப் பாடவா? வேணாம்... என் பாட்டையே பாடுறேன்... எட்டணா இருந்தா எட்டூருக்கென் பாட்டுக் கேட்கும்...'' பாடலைப் பாடி பலத்த கைதட்டலைப் பெற்றுக் கொண்டு இறங்குகிறார் வடிவேல். மீண்டும் நடன அலைகள்... கிராமத்து ஜனங்களை மூழ்கடிக்கின்றன.

கிராமத்து மக்கள் மட்டுந் தானா? அமைச்சர் பெருமக்கள் இருவரும் மற்ற வி.ஐ.பி.களோடு கொட்டக் கொட்ட விழித்திருந்து... ""நடன நிகழ்ச்சி'' மங்களம் பாடிய பிறகுதான் எழுந்தார்கள்.

இந்த நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக, ரிக்கார்ட் டான்ஸ் கலைஞர்கள் சிலரும் வந்திருந் தனர். அவர்களில் ஒருவரான ராணியும் அவர் குடும்பத்தினரும் நம்மை நெருங்கினார்கள்.

""மிந்தியெல்லாம் திரு விழாக்கள்ல ரிக்கார்ட் டான்ஸ் வைப்பாக. எங்க மாதிரி ரொம்ப குடும்பங்கள் அதை வச்சுத்தான் அரை வயித்துக் கஞ்சிக் குடிச்சோம். ரொம்ப ஆபாசம்னு சொல்லி அதுக்கு தடை பண்ணிப்பிட்டாக.... நீங்களே சொல்லுங்க. இவுக போட்ட குத்தாட்டத்தை விடவா நாங்க அசிங்கமா ஆடுனம்? எங்களுக்கு அனுமதி இல்லை. மெட்ராஸ்ல இருந்து... டி.வி.யில, சினிமாவுல ஆடுறவுகளைக் கூட்டியாந்து ரிக்கார்ட் டான்ஸ் வச்சா... எம்புட்டு போலீஸ் பாதுகாக்கிறாக... மந்திரிய, எம்.பி., எம்.எல்.ஏ.வெல்லாம் ஈப்போறது கொடத் தெரியாம ரசிக்கிறாக!'' தனது ஆதங்கத்தை நம்மிடம் கொட்டிவிட்டுப் போனார் ராணி.

""இந்தக் கவர்ச்சி டான்சுக்கு எப்படி அனுமதியும் கொடுத்து பாதுகாப்பும் கொடுத்தீர்கள்?'' ஏ.எஸ்.பி. தலைமையில் வந்திருந்த போலீசாரிடம் கேட்டோம்.

""நாங்க கோயில் திருவிழாவுக்குத் தான் அனுமதி கொடுத்தோம். பாதுகாப்பும் கொடுக்கிறோம்!'' சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்கள்.

கல்லூரி மாணவிகளின் ஆபாசப்பட சி டி !


பூமிகாவின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பகீர் கதையைக் கேட்டு ஆடிப்போயிருக்கிறார்கள் மதுரைக் காரர்கள். மதுரையின் பிரபல கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள் பூமிகா. வீட்டின் செல்ல மகளாய் துருதுருவென வளைய வந்துகொண்டிருந்த அவளுக்கு காதல் வடிவில் விபரீதம் வந்தது. அந்த விபரீதம் வெளிப்பட்ட இடம் ஜெய்ஹிந்த்புரத்தில் இருக்கும் அந்த புரோட்டாக் கடை.

ராஜா ஷெரிப் என்கிற பப்லு, தன் நண்பர் களான மணிகண்டன், ஜெகதீசனுடன் டாஸ்மாக் பாருக்குப் போய்விட்டு… தள்ளாட்டமாய் அந்த புரோட்டா கடைக்கு வந்து சாப்பிட உட்கார்ந் தான். “”புரோட்டா இல்லைண்ணே தோசை போடவா?”’’ என சப்ளையர் கேட்க…. ’”"டேய் என்னங்கடா புரோட்டா இல்லைங்கிறீங்க?”’என நண்பர்களுடன் பப்லு தகராறு பண்ண … பக்கத்தில் இருக்கும் “டைபி’ அலுவலகத்தில் இருந்த நாகராஜன் போன்ற தோழர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்த னர்.’’எதுக்குப்பா தகராறு?’’ என பப்லு டீமை விலக்கி விட்டனர். அப்போது பப்லுவுக்குத் தெரியவில்லை தன் செல்ஃபோன் கீழே விழுந்தது. செல்ஃபோன் ஒருவர் கண்ணில் பட… யாருடையதாக இருக்கும் என அலுவலகத்தில் வைத்து சோதித்தார். அப்போது… செல்ஃபோனில் பூமிகாவின் அப்பட்டமான நிர்வாணப் படம் மானிட்டரில் ஓட…. ’அய்யோ… இது நம்ம நண்பரின் காலேஜ் படிக்கும் தங்கச்சியாச்சே…’’என்று பதற, அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சி விலகாமல் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்துக்கு ஓடினார்கள்.
அங்கிருந்த காக்கிகள் அந்த போனை மேலும் சோதித்துத் திகைத்ததோடு … செல்ஃபோனுக்குச் சொந்தக்காரனான பப்லுவை மடக்கினர். “”"ஐயோ அடிக்காதீங்க. நானும் மணிகண்டனும் ஜெகதீசனும் சேர்ந்துதான் இப்படிப் பண்ணினோம்”’என்று பப்லு அலற… அவர்களையும் அள்ளிவந்தனர். மணிகண்டனும் ஜெகதீசனும், “”’பப்லுவின் அண்ணன் கார்த்திக்தான் இந்த விசயத்தில் குருநாதர். அவன் எடுத்த படங்களைப் பார்த்துதான் நாங்களும் பல மாணவிகளை வளைச்சி.. ஆசை தீர அனுபவிச்சி… படம் எடுத்தோம்”’என்று தங்களிடம் சிக்கிய பெண்களின் பட்டியலை ஒப்பித்தார்கள்.
இந்த தகவல் பப்லு வீட்டுக்குப்போக… பதறிப்போனார் பப்லுவின் அப்பா நாசர். தனது ஆளும்கட்சி நண்பர்கள் மூலம் காக்கிகளை அணுக... இதன்பின் ஜெய்ஹிந்த்புர காக்கிகளின் போக்கு அப்படியே மாறியது. இங்கு நீதி கிடைக்காது என தெரிந்து கொண்ட தோழர்கள்… ஏ.சி. வெள்ளதுரையிடம் ஓடினார்கள். தகவல் அறிந்து திடுக்கிட்ட பூமிகா…தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாள். காப்பாற்றப்பட்டாள்.

“கல்லூரி மாணவியை இப்படிப் படம் பிடிச்சிருக்கானுங்களா?’’என பற்களைக் கடித்த ஏ.சி.வெள்ளதுரை… பூமிகா இருக்கும் இடத்துக்கே விரைந்தார்.’ “”பயப்படாம நடந்ததை எல்லாம் அப்படியே சொல்லும்மா?” என அவர் கேட்க… கண்ணீரும் கம்பலையுமாக… தான் ஏமாந்த கதையை விவரிக்க ஆரம்பித்தாள் பூமிகா.

“”முதல்ல பப்லுவின் அண்ணன் கார்த்திக் தான் என்னைக் காதலிப்பதா சொல்லித் துரத்தி னான். ஒரு கட்டத்தில் அவன் மீது இரக்கப்பட்டு நான் சம்மதித்தேன். சினிமா, பார்க்குன்னு என் னோடு சுத்தியவன்… ஒருநாள் தன் நண்பன் மணி கண்டனின் அறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். அங்க அவன் கூல்டிரிங்ஸ் கொடுத்தான். அதில் தூக்க மாத்திரை கலந்தது எனக்குத் தெரியாது. அதைக் குடிச்சிட்டு மயங்கிய என்னை…. சூறை யாடிட்டான். அப்ப எனக்குத் தெரியாமலே என்னை அப்பட்டமா அவன் படம்பிடிச்சிருக்கான். அந்த சம்ப வத்துக்குப் பின் சென்னைல வேலை கிடைச்சிருக் குன்னு போனவன்… என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் அவன் கொடுத்துட்டுப்போன செல்ஃபோனில் என் படத் தைப் பார்த்த அவன் தம்பி பப்லு… ஒரு நாள் என் னைத் தேடி காலேஜுக்கு வந்தான். “எங்க அண்ண னோட நீ இருக்கும் படம் செல்ஃபோன்ல இருக்கு. நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வரலைன்னா இதை உன் பிரண்டுக்கெல்லாம் அனுப்பி வச்சிடுவேன்’னு மிரட்டி… என்னை அதே மணிகண்டன் அறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். “எங்க அண்ணன் கைவிட்ட உன்னை… நான் கைவிட மாட்டேன். காரணம் உன்னை காதலிக்கிறேன்’னு சத்தியம் பண்ணினான். தயங்கிய என்னை பப்லு பலவந்தமா கற்பழிச்சான். அப்புறம் என் கண் எதிரில்.. அவன் அண்ணன் எடுத்த படத்தை பப்லு அழிச்சான். ஆனால் அவனும் படம் எடுத்து விட்டான். பிறகு, தன்னோட நண்பர்களும் என் படத்தைப் பார்த்துட்டதாச் சொல்லி… அவங்க அதை வெளியே சொல்லாம இருக்க… அவங்களுக்கும் நான் விருந்தாகணும்னு மிரட்டி… மணிகண்டனையும் ஜெகதீசனையும் என்னை வேட்டையாட வச்சான். அதோட இப்படி பல பெண்களை ஏமாத்தி எடுத்த படங் களையும் என்னிடம் பப்லு காட்டினான். அதில் எங்க தெரு பிள்ளைகளும் இருந்தாங்க. இப்படிப்பட்ட பாவிகளை சும்மா விடாதீங்க சார்”’என கதறினாள்.

பூமிகாவுக்கு தைரியம் சொல்லிவிட்டு வெள்ளதுரை புறப்பட… அதற்குள் ஜெய்ஹிந்த்புரம் காக்கிகள் பல சித்துவேலைகளைநடத்திவிட்டார்கள். அது என்ன?

சி.பி.எம்., மா.செ. அண்ணாதுரையே சொல்கிறார் “”"நிறைய பள்ளிக்கூடப் பிள்ளைகளையும் கல்லூரி மாணவி களையும் இந்தப் பயல்கள் காதலில் வீழ்த்தி… அசிங்கமா படம் எடுத்திருக்கானுங்க. அந்தப் படங்களை ஆபாச இணையதளங் களுக்கு அவனுங்க வித்திருக்கலாம்ங்கிறது எங்க யூகம். காரணம் பப்லுவின் அண்ணன் சென்னைல ஒரு இணையதள அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறான். இந்த விவகாரத்தை போலீஸ் தீவிரமா விசாரிப்பதை பார்த்த பப்லுவின் அப்பா நாசர், தன் நண்பரான தி.மு.க. கவுன்சிலர் கேபிள் கண்ணன் மூலம் இன்ஸ்பெக்டர் ஜெயமுரளியை சரிபண்ணிட்டார். உடனே ஆபாசப்படங்கள் இருந்த பப்லுவின் செல்ஃபோன் மெமரி கார்டையே மாத்திட்டாங்க. இப்ப ஆபாச படமே எடுக்கலைன்னு சொல்லி… அவனுங்க மேல் ஈவ் டீஸிங் கேஸை மட்டும் போட்டு… சப் ஜெயிலுக்கு அனுப்பிவச்சிட்டாங்க. பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்கியிருக்கும் இந்த ஆபாசப் படக் கும்பலை தி.மு.க. ஆட்கள் காப்பாத்தறது மகா கொடுமை.இதை நாங்க சும்மாவிடமாட்டோம். அந்தப் பயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காட்டி…. போலீஸைக் கண்டித்து… எங்க மாதர் சங்கம் பொது மக்களைத் திரட்டி… பெரிய போராட்டத்தை நடத்தும்” என்றார் கொந்தளிப்பாய்.

மதுரை போலீஸ் கடு மையான நடவடிக்கையில் இறங்குமா?