Thursday, December 8, 2011

ரஜினி கே எஸ் ரவிக்குமாருக்கு வைத்த மெகா ஆப்பு

மறுபடியும் ஒன்று சேர்ந்து ஒரு மெகா ஹிட்டுக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார்கள் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், சூப்பர் ஸ்டார் ரஜினியும். நண்பன் படத்தில் மூழ்கியிருந்த ஷங்கர் கடந்த சில வாரங்களாக முழுக்க முழுக்க இந்த ரஜினி படத்திற்காக நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார்.

இதையடுத்து ஏராளமான கேள்விகள் எழுந்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அப்படியென்றால் ராணா என்னவாகும் ஜக்குபாய் நிலைமைதானா என்பதுதான் முதல் கேள்வி. கோச்சடையான் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நேரடியாக ஷங்கர் படத்திற்குதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான் படத்தில் கூட ரஜினி சில காட்சிகளில்தான் தோன்றப் போவதாகவும் தகவல்.

அதாவது இவரே கோச்சடையான் கெட்டப்பில் தோன்றி தனது கதையை கூற ஆரம்பிப்பாராம். சில வார்த்தைகளில் இவர் கதையை சொல்லிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று அனிமேஷன் உருவத்திற்கு தாவ ஆரம்பித்துவிடும் காட்சிகள். இப்படி இடையிடையே ரஜினி தோன்றி தோன்றி முழு கதையையும் நகர்த்திச் செல்வதாக திட்டமாம்.
அதுமட்டுமல்ல, இந்த கோச்சடையானுக்காக ரஜினி அதிகபட்சமாக பத்தே நாட்கள்தான் ஒதுக்கப் போகிறாராம். இப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ஷங்கர் படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் ரஜினி என்கிறது சில தகவல்கள்.

இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கிறார். அவரிடமும் பேசி கதை சுருக்கத்தை சொல்லியிருக்கிறாராம் ஷங்கர். அப்படியென்றால் கே.எஸ்.ரவிகுமார்? ராணா வரும் வரும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை வந்தால், ரவிகுமார் இருப்பார் அதில். ஆனால் ரஜினி இருக்க மாட்டார், ஜக்குபாய் படம் போல

No comments:

Post a Comment