Monday, November 21, 2011

உடனே உங்கள் பாஸ்வோர்டை மாற்றிவிடுங்கள்

2011 ம் ஆண்டு உலகின் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள் எவை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Splash Data என்ற நிறுவனம். அவை இங்கே

1. password 2. 123456 3.12345678 4. qwerty 5. abc123 6. monkey 7. 1234567 8. letmein 9. trustno1 10. dragon 11. baseball 12. 111111 13. iloveyou 14. master 15. sunshine 16. ashley 17. bailey 18. passw0rd 19. shadow 20. 123123 21. 654321 22. superman 23. qazwsx 24. michael 25. football
திறமையான ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட்டை உருவாக்குவது எவ்வாறு?

பொதுவாக ஜிமெயில் மற்றும் வேர்ட்பிரஸ் போன்ற தளங்களிலுள்ள பாஸ்வேர்ட் மீட்டர் நீங்கள் உருவாக்கும் பாஸ்வேர்ட் எவ்வளவு பலமானது என்பதை காட்டும்.

இவற்றைவிட மைக்ரோசாப்ட் இன் ஆன்லைன் சேவையான Password Checker என்ற தளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் எவ்வளவு திறமையானது என்பதை கண்டறியலாம்.

இணைப்பு - https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx

ஆனால் இவை எல்லாம் பலமான பாஸ்வேர்ட்டை உருவாக்குவதற்கு குறிப்புக்களை வழங்காது.

பாஸ்வேர்ட் திறமையானதா என்பதுடன் குறிப்பிட்ட சொற்தொடரை எப்படி பலமான பாஸ்வேர்ட்டாக உருவாக்குவது போன்ற குறிப்புக்களையும் சேர்த்து தருகிறது.

http://www.passwordmeter.com/ என்ற தளம்.

உதாரணமாக "Myp@sw0rd" என்பது (76% Strong ) இத்தளத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

எல்லாத்தையும் இவளால் இழந்துட்டேனா? - பிரபுதேவா


நயன்தாராவின் சினிமா வாழ்க்கைக்கும், குடும்பத்துக்கும் நெருக்கமான சிலரிடம் இதுபற்றி நாம் துருவியபோது, புலம்பலின் பூர்வீகத்தைப் புட்டுப்புட்டு வைத்தார்கள். ''கேரளாவில் உள்ள திருவல்லாதான் நயன்தாராவின் சொந்த ஊர். அவரது வீட்டில் மூன்று காஸ்ட்லியான கார்கள் இருக்கிறது. அப்படியிருந்தும், சமீபத்தில் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை நயன்தாரா வாங்கினார். அதையும் தவணை முறையில் பணம் கட்டுவதாகச் சொல்லித்தான் வாங்கினார். என்ன காரணமோ... அந்தத் தவணைத் தொகையை நயன்தாரா சரிவரக் கட்டவில்லை. அதனால் கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டையே முற்றுகையிட்டார்கள்...'' எனச் சொன்னார்கள்.


பொம்பளை சகவாசத்தால் சம்பாதிச்ச சொத்தை எல்லாம் இழந்துட்டானே...' என்று பொதுவாக ஆண்களைத்தான் சொல்வார்கள். ஆனால், 'ஆம்பளை சகவாசத்தாலே ஆடிப்பாடி, சம்பாதிச்ச காசை எல்லாம் இழந்துட்டு அம்போன்னு நிக்கிறாளே...' என்று நயன்தாரா பெற்றோர் புலம்புவதாக வரும் தகவல்கள்தான் புதுக்கதை!
''ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் சராசரிகளே மாதத் தவணையை ஒழுங்காகக் கட்டி வருகிறார்கள். ஆனால், லட்சக்கணக்கில் பணத்தைக் குவிக்கும் நயன்தாரா,

தவணை கட்ட முடியாமல் தடுமாறுவதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லையே..?'' என நாம் கேட்க... ''நயன்தாரா இந்த நிலைமைக்கு ஆளானதற்குக் காரணமே பிரபுதேவாதான்!'' எனச் சொல்லி அதிர வைத்தவர்கள், மேற்கொண்டும் தொடர்ந்தார்கள்.

''சினிமாவில் நடிகர்கள் 10 வருஷங்களுக்கு மேலகூட உச்சத்தில் இருப்பாங்க. ஆனால், நடிகைகள் ஹீரோயினாக பிரகாசிப்பது சொற்ப காலம்தான். இதை நல்லா உணர்ந்தவர் நயன்தாரா. அதனால்தான் சிம்புவின் காதல் வலையில் சிக்காமல் தப்பி கிளாமர் இமேஜைக் காத்துக்கொண்டார். முன்பு இருந்ததைவிட தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்தார். எப்போது பிரபுதேவா இயக்கத்தில் 'வில்லு' படத்தில் ஒப்பந்தம் ஆனாரோ... அப்போதே சரிய ஆரம்பித்துவிட்டார்.



நயன்தாராவோட ஒரிஜினல் பெயர் டயானா. அப்பா மிலிட்டரி ஆபீஸர். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். நயனோட சகோதரர் துபாயில் வேலை செய்கிறார். கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு ரொம்ப தாராள மனசு. சிம்புவை காதலிச்ச நேரத்தில அடிக்கடி வெளிநாடு ஷூட்டிங் போவாங்க. அப்போ, திடீர்னு சிம்பு ஞாபகம் நயன்தாராவை படுத்தி எடுக்கும். உடனே, சென்னையில் இருந்த அவருக்கு போன் பண்ணி தன்னோட சொந்த காசுல போக, வர ஃப்ளைட் டிக்கெட் போட்டு, காஸ்ட்லியான ஸ்டார் ஹோட்டல் அறையிலேயே தங்க வெச்சுக்குவார். அப்போதான், அவங்க ரெண்டு பேரும் ரொம்ப அந்யோன்யமா இருக்கிற படங்கள் யார் மூலமாகவோ அத்தனை பத்திரிகைகளுக்கும் போயிடிச்சு. அதனால, ஏற்பட்ட வம்பாலேயே சிம்புவுடனான லவ் முறிஞ்சு போனது.

அதுக்கப்புறம்தான் பிரபுதேவாவோட நெருக்கம் உண்டானது. வழக்கமா பொண்ணுங்களை வசியம் பண்றதுக்கு ஆம்பளைங்கதான் நெக்லஸ், தங்க நகைன்னு பரிசா கொடுப்பாங்க. ஆனா, சமீபத்துல பிரபுதேவாவுக்கு வைரம் பொதித்த காஸ்ட்லியான செயினை வாங்கி கொடுத்திருக்கார். அதுமட்டுமில்லை... தமிழ், மலையாளம், தெலுங்குன்னு சவுத் இந்தியாவுல புகழ்பெற்ற நடிகையா வலம்வந்த நயன்தாரா... பிரபுதேவா சகவாசத்தால் நிறைய பட வாய்ப்புகளை இழந்து வருகிறார். அதுக்குக் காரணமே நயன்தாரா நடிக்கிற படங்களோட கதைகளை, அதிலும் கிளாமர் காட்சிகள் இல்லாத கதைகளை, மட்டுமே பிரபுதேவா செலக்ட் செய்கிறார். சம்பளத்தையும் அவர்தான் நிர்ணயம் செய்கிறார். அதோடு, 'நயன்தாரா படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நானும் வருவேன்' என்று கண்டிஷன் போடுகிறார். இது நயன்தாராவுடன் நடிக்கும் ஹீரோக்களை நெளிய வைக்கிறது.

தமிழில் தற்போது 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். கொஞ்ச நாளைக்கு முன்பு அந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது. அங்கே நயன்தாராவோடு பிரபுதேவாவும் போனார். அங்குள்ள ஹோட்டலில் தாராவுடன் தங்கினார். டைரக்டர் மறுநாள் எடுக்கும் காட்சியைப்பற்றி விளக்கிச் சொல்வதற்கு எத்தனையோ முறை முயன்றும் ஹீரோயினை நெருங்க முடியவில்லை. அதோட ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே வந்து பிரபுதேவா அங்குள்ள கேரவனில் உட்கார்ந்துகொண்டார். எடுக்கப் போற ஸீன் பற்றி டைரக்டர் ஒரு தடவை சொன்னாலே... கற்பூரமாகப் பிடித்துக் கொள்ளும் நயன்தாரா கும்பகோணம் ஷூட்டிங்க்ல டேக் மேல டேக்கா வாங்கினாங்க. அடுத்த காட்சி பற்றி டைரக்டர் சொல்ல வர... இவரோ கேரவனுக்குள் போய்விட்டார். இந்த மாதிரி தொல்லைகளாலே நயன்தாராவை ஒப்பந்தம் பண்ண பலரும் பயப்படுறாங்க!'' என்றவர்கள், க்ளைமாக்ஸ் விஷயத்துக்கு வந்தார்கள்.

''கடந்த ஏழாம் தேதி இயக்குநர் சித்திக் மகளுக்கு கொச்சினில் கல்யாணம் நடந்தது. அதுக்கு பிரபுதேவாவோட ஜோடியா போனார் நயன்தாரா. 'நயன்தாரா'ங்கிற பேர்ல இன்டர்நேஷனல் டான்ஸ் ஸ்கூல் ஒன்றை பிரபுதேவா ஆரம்பிக்கப் போறார். மிகப் பெரிய அளவில திட்டமிடப்பட்டிருக்கிற அந்த ஸ்கூலுக்கு முழு ஒத்துழைப்பையும் தர நயன் ஓகே சொல்லிட்டாங்க. நல்லபடி சம்பாதிச்சாலும் நயனோட பணமெல்லாம் இந்த மாதிரி திசை தெரியாம செலவாகிட்டு இருக்கு. பி.எம்.டபிள்யூ கார் வாங்க நயனுக்கு ஆசையே இல்லை. மனசுக்குப் பிடிச்சவங்களை சந்தோஷப்படுத்துறதுக்காகத்தான் அந்த காஸ்ட்லியான காரை வாங்கினாங்க. அதுக்கான தவணையை அவங்க கட்டாததால், கடன் கொடுத்தவங்க வீடு வரைக்கும் தேடி வந்தது, நயனோட பெற்றோரை ரொம்ப கஷ்டப்படுத்திடிச்சு. இதுக்கிடையில் 'இச்' பட ஷூட்டிங்குக்காக வருகிற 20-ம் தேதி ஃபிரான்ஸ் போக இருக்கிறார் பிரபுதேவா. அவருடன் நயன்தாராவும் சைலண்டாக கிளம்பப் போவதாக தகவல் இருக்கிறது. நயன்தாராவை நம்பி புக் பண்ணியவர்கள் என்ன கதியாகப் போகிறார்களோ?'' என்றார்கள் பெருமூச்சுடன்.

நயன்தாரா - பிரபுதேவா ஜோடிக்கு நெருக்கமானவர் களிடம் இதுகுறித்துக் கேட்டால்... ''அப்படியெல்லாம் எதுவுமே இல்லை! மேலும் மேலும் இந்த விவகாரத்தை ஊதிவிடும் சிலருக்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது!'' என்று பலமாக மறுக்கிறார்கள்!

நடிகர்களைப் பற்றிய புதிய நகைச்சுவை வீடியோ


நடிகர்களைப் பற்றிய புதிய நகைச்சுவை வீடியோ






உங்கள் உயரமும் - எடையும்


ஆளைப் பார்த்து எடை போட்டு விடலாம் என்று சொல்லுவார்கள். நீங்கள் உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையில் இருக்கின்றீர்களா? அதிகமாக உள்ளதா? அல்லது குறைவாக உள்ளதா? எளிதாக அறிந்து கொள்ளலாம்.


குறிப்பிட்ட உயரத்திற்கு குறிப்பிட்ட எடைதான் இருக்க வேண்டும். அது குறைந்தாலும் கஷ்டம். அதிகமானாலும் கஷ்டம். 231 கே.பி அளவுள்ள இந்த மென்பொருளினை பதிவிறக்கம் செய்யவும்.
உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களது உயரத்தை மீட்டர் அல்லது சென்டிமீட்டரிலோ, அடிக்கணக்கிலோ தேர்வு செய்து, உங்களது எடையை குறிப்பிட்டு கிலோ கிராமினை தேர்வு செய்யவும். இதில் முக்கியமாக நீங்கள் ஆணா — பெண்ணா என்பதனை தேர்வு செய்யவும்.

பின்னர் இதில் உள்ள Calculate கிளிக் செய்யவும். உங்களுக்கு உங்கள் எடை சரியாக உள்ளதா – அதிகமா – குறைவா என அதில் உள்ள ஸ்லைடரில் காண்பித்துவிடும்.

எடை குறைவாக இருந்தால் அதனை அதிகப்படுத்தவும். அதிகமாக இருந்தால் குறைக்கவும் பாருங்கள்.


போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்


போதை தந்தையால் கையை பறி கொடுத்த கமுதி மாணவி தனலெட்சுமி, செயற்கை கை வேண்டி மருத்துவ முகாம்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். ராமநாதபுரம் புனித அந்திரேயா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தனலெட்சுமி, 14. ராமநாதபுரம் அனைவருக்கு கல்வி இயக்கம் சார்பில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில், நவீன செயற்கை கை வேண்டி பங்கேற்றார்.


கமுதி அருகே எருமை குளம் சொந்த ஊர். தந்தை முத்துராமலிங்கம் தினமும் மதுகுடித்து விட்டு வந்து தாய் கிருஷ்ணம்மாளை கொடுமை படுத்தினார். ஒரு நாள் சண்டை முற்றியது. தாயின் தலை, தோள்பட்டையில் அரிவாளால் வெட்டினார். தட்டிக்கேட்ட என் கையையும் வெட்டினார். தற்போது வலது முழங்கை வரை இழந்து தவிக்கிறேன். 
அம்மா, விறகு சுமக்க செல்வார். தங்கை அரியநாச்சி கமுதி அருகே மில்லில் வேலை பார்க்கிறார். நான் மட்டுமே படிக்கிறேன். ஊரில் படிக்க வசதியில்லை. ராமநாதபுரம் ஆஞ்சலோ விடுதியில் தங்கி படிக்கிறேன். சுவார்ட்ஸ் பள்ளி ஆசிரியர் ஜெபாஸ்டின், வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். நவீன செயற்கை கை தந்தால், உதவியாக இருக்கும். வருங்காலத்தில் போலீசில் சேர்ந்து குடிகாரர்களை திருத்துவதே தன் லட்சியம், என்றார்.

வேண்டாம் இந்த வீண் விபரீதம்.

நான் சிறிய அளவில் நிதி நிறுவனம் மற்றும் எஸ்.டி.டி., பூத், ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறேன். என் வயது 46. நான் ஒரு இளநிலை பட்டதாரி. எனக்கு திருமணமாகி, 21 வருடங்கள் ஆகிறது. எனக்கு, திருமணம் ஆனதிலிருந்து, ஒன்பது வருடங்களாக குழந்தை இல்லாமல், இருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்ட பிறகு இப்போது, 12 வயதில் ஒரு மகன் மட்டும் இருக்கிறான். அவனை நாங்கள் உறைவிட பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம். காரணம், குடும்ப சூழ்நிலை. என் அன்பு மனைவிக்கு சிறிது மனநிலை பாதிப்பு உள்ளது. இது, திருமணம் ஆன மூன்று மாதங்களுக்கு பிறகு எனக்கு தெரிய வந்தது. அதன் பிறகு, அன்று முதல் இதுநாள் வரை மனநல மருத்துவரிடம் பரிசோதித்து, மருந்துகள் உட்கொண்டு வரு கிறார். தற்மயம், மனநலம் மற்றும் உடல்நலம் பரவாயில்லை.

இப்போது, என்னுடைய பிரச்னை... நான் இருக்கும் வீட்டின் அருகில், ஒரு ரியல் எஸ்டேட் அலு வலகத்தில் வேலை செய்து வந்த பெண். இப்போது அவர் வயது, 36 இருக்கலாம். அவருக்கு, 16 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார். அவருடைய கண வன் ஏதோ ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 

கடந்த, 14 வருடங்களுக்கு முன், அவர், என்னுடைய கடை யின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, (அப்போது, மொபைல் போன் கிடையாது!) நான் இங்கு இருந்து, அங்கு இருந்து பேசுகிறேன் என்று பேசி, பழகி என்னிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். நானும், என் குடும்ப சூழ்நிலை காரணமாக, என் புத்தி வேலை செய்யாமல், அவரிடம் பேசி தொடர்பை ஏற்படுத்தி, இருவரும் தனிமையில் சந்தித்து, பழகி வந்தோம். இந்த உறவு, நான்கு வருடங்கள் தொடர்ந்தது. அதன்பின், சிறிது மாறுபட்ட முரண்பாடான காரணங்கள் மற்றும் என் தாயார் இறப்பிற்கு பின், நான் அவருடன் பழகுவதை தவிர்த்தேன். அப்போது, அவர்கள் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றதாக (நாடகமாடி இருப்பார் என்று நினைக்கிறேன்!) எனக்கு தெரிய வந்தது.
இப்போது மீண்டும், இரண்டு வருடங்களுக்கு முன், ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக என்னிடத்தில் தொடர்பு ஏற்படுத்தி, தனிக் குடித்தனம் வைக்கச் சொல்லி தொல்லை கொடுத்து வருகிறார். இல்லையென்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார். மேலும், என் சாவிற்கு காரணம் முழுக்க முழுக்க, நீங்கள்தான் என்றும் சொல்கிறார். இந்நிலையில், அவரிடம் தொடர்பை வைத்துக் கொண்டால், கடைசி வரை என் வாழ்க்கையில் எப்படி நிம்மதி இருக்கும். அதனால், நான் முடிவாக, "எனக்கு உன்னிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. நீயாக விருப்பப்பட்டு என்னிடம் வாழ்ந்தாய். இப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. எனக்கு குடும்பம் உள்ளது. அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும். ஆகை யால், நம் உறவை இத்துடன் முடித்துக் கொள்வோம்...' என்று எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. மேலும், நான், அவர்களிடம் பழகும் போது நான், உன்னை இப்படி வாழ வைக் கிறேன் என்று ஒரு போதும் சொன்னது இல்லை. அவர்களும் என்னுடன் பழகும் போது நீங்கள் கடைசி வரை என்னை வாழ வைப்பதாக இருந்தால் என்னை தொடுங்கள் என்று சொன்னதும் இல்லை. அன்றே அவர் அந்த வார்த்தை சொல்லி இருந்தால், வேண்டாம் இந்த வீண் விபரீதம் என்று விலகி இருப்பேன்.
ஆனால், இப்போது அவர், "நான் பணத்துக்காக உங் களிடம் பழகவில்லை. உங் களுடைய அன்பு மட்டும் எனக்கு போதும்; நீங்கள் இல்லை என்றால், எனக்கு வாழ்க்கை இல்லை. நீங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை...' என்று சினிமாத்தனமாக பேசி வருகிறார்.
அவருடைய செயல்கள் அனைத்தும் எனக்கு எரிச்சல் மற்றும் கோபத்தை உண்டு பண்ணுகிறது. நான் அவரிடமிருந்து விலக என்னுடைய மொபைல் எண் மற்றும் இதர தொலைபேசி எண்களை மாற்றினாலும், என்னுடைய அலுவலகத்திற்கு வந்து என்னை நிர்பந்தப்படுத்துகிறார். நான் என்னுடைய அலுவலகத்தை அவர் வருவார் என்று பூட்டி விட்டால், என் மனைவி வீட்டில் இருக்கும் போது, என்னுடைய வீட்டிற்கு வருகிறார். பாவம், நடப்பது அவர்களுக்கு தெரியாது. மேலும் என்னுடைய மனைவியின் தாய் மொழி தெலுங்கு. அவளுக்கு தமிழ் பேச மற்றும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு சமயம் நான் வீட்டில் இல்லாமல், தோட்டத்திற்கு சென்று விட்டேன். அங்கும் என்னை தேடி வந்து விட்டார். அதுவும், 5,000 ரூபாய் செலவு செய்து.
இதை எல்லாம் பார்க்கும் போது, நான் அவரை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. என் மனதில் அப்படி ஒரு எண்ணம் முதலில் இருந்தே இல்லை.
அம்மா... எனக்கு இப்போது, நான் நல்ல படியாக, அவர்களுக்கு எந்த விதமான மனக் கசப்பும் இல்லாமல், அவர்களும் வாழ்க்கையில் நல்ல படியாக வாழவும், நான் அவரிடம் இருந்து விலகுவது எப்படி என்று ஆலோசனை கூறுங்கள்.
— இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள,
அன்பு மகன்.

அன்பு மகனுக்கு—
உன்னுடைய கடிதம் படித்து, விஷயங்களை அறிந்தேன்.
உன்னை திருமணம் செய்து கொள்ளும் போது, உன் மனைவி நன்றாக இருந்திருக்கிறாள். ஒன்பது வருடங்கள் குழந்தை இல்லாத கவலையிலும், 12 வருடங்கள் கணவனின் மன்மத லீலைகளை கேள்விப்பட்டு வேதனையிலும் உன் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
பனிரெண்டு வயது மகனை, அதாவது, ஏழாம் வகுப்பு படிக்கும் இளங்குருத்தை உன்னுடைய சுயநலத்துக்காக உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்திருக்கிறாயே... நியாயமா? அவன் பெற்றோர் மீது டன் கணக்கில் வெறுப்பு கொண்டல்லவா வளர்வான்?
நீ தொடர்பு வைத்திருக்கும் பெண்ணுக்கு, 16 வயதில் மகளும், சிறிய நிறுவனத்தில் வேலை செய்யும் கணவனும் இருக்கின்றனர். உன்னுடன் தகாத உறவு வைத்திருக்கும் அப்பெண், ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய அளவில் சம்பாதிப்பவர்.
பதினான்கு வருடங்களுக்கு முன், அப்பெண் தான் உன்னிடம் ராங் கால் பேசி தொடர்பானார் என எழுதியிருக்கிறாய்; அது தவறு. நீ தான் வலிய முயற்சி செய்து, தொடர்பாகி இருக்கிறாய். 
உனக்கு, பிற பெண்ணின் உடம்பு வேண்டும். பல ஆசை வார்த்தைகளை வாயால் சொல்லி, முகத்தால் காட்டி காரியம் சாதித்தவுடன், "சூ... சூ... போ போ..' என விரட்டுவாய். அவர்கள் உடனே, "சரிங்க முதலாளி...'ன்னு போய் விடுவரா என்ன? 
தொட்டால் தொடரும் என்பர். குடுவைக்குள் இருக்கும் பூதத்தை திறந்து விட்டுவிட்டு, அய்யய்யோ பூதம் டார்ச்சர் கொடுக்குதேன்னு புலம்பினால் எப்படி? தெருவில் ஒரு சொறி நாய் நின்று கொண்டிருக்கும். உன் வழியில் நீ போகாமல், ஒரு கிரீம் பிஸ்கெட் போட்டாயானால் என்ன ஆகும்? அந்த நாய் வாலாட்டிக் கொண்டே வந்து உன் வீட்டில் தங்கி விடும்.
"பாவத்தின் சம்பளம் மரணம்...' என்கிறது விவிலியம்; கள்ள உறவின் சம்பளம், நாய் படாத பாடு, பேய் படாத பாடு ஆணோ, பெண்ணோ படுவதுதான்.
நான்கு வருடங்கள் அப்பெண்ணிடம் உறவு வைத்திருந்திருக்கிறாய். தாம்பத்யத்தின் போது உனக்கே தெரியாமல் என்னென்ன காதல் வசனங்களை அவள் மேல் அள்ளி வீசினாயோ... கள்ள உறவு வைப்போர் பாண்டு பத்திரத்தில், "நான் உன்னை இப்படி வாழ வைப்பேன், அப்படி வாழ வைப்பேன்...' என எழுதி கொடுப்பதில்லை; மாறாக ஹிஸ்டீரிகல் அன்பை பகிர்ந்து கொள்கின்றனர்.
உன்னுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணுக்கு பணமோ, தன் குடும்பமோ முக்கியமில்லை; உன் உறவுதான் முக்கியம். அந்த நிலைக்கு உன்னால் தள்ளப்பட்டாரா, அவராகவே தள்ளப்பட்டாரா, இறைவன் அறிவான்!
அப்பெண்ணை அழைத்து பேசு. நடந்ததற் கெல்லாம் அவள் மேல் பழி சுமத்தாதே. தவறை நெஞ்சார, மனசார நீ ஏற்றுக் கொள். "தொடர்பு நீடித்தால், இரு குடும்பங்களும் சீரழிந்து போகும். உன் மகள் வாழ்க்கையும், என் மகன் வாழ்க்கையும் பாழாகி விடும். என் மீது இருக்கும் தவறுக்கு, என்னை நாலு அறை அறைந்து விடு, மனசார திட்டி தீர்த்துவிடு. தற்கொலை செய்யும் எண்ணத்தை விடு. இந்த தகாத உறவை கத்தரிப்பதற்கு அப்பாலும் நாம் வாழ்க்கை யில் சாதிக்க வேண்டிய உருப்படியான காரியங்கள் பல உள்ளன. இரு திருடர்கள் சேர்ந்து திருடினோம். இப்போது திருட்டை விட்டு விட்டு, அவரவர் வழியில் நேர்மையாக நடப்போம். இனி, ஆயுளுக்கும் சந்திக்கக் கூடாதென முடிவெடுத்து பிரிவோம்... 'என உருக்கமாக கூறு. அவள் மனதை இரங்க வைக்க காலில் வேண்டுமானாலும் விழு.
எந்த கெஞ்சலுக்கும் அப்பெண் இறங்கி வராவிட்டால், இறுதி ஆயுதத்தை பிரயோகி.
கணவனை முறைப்படி விவாகரத்து செய்து, மகளை கணவனுடன் விட்டு, விட்டு வந்து சேர். ஊரறிய திருமணம் செய்து கொள்வோம் எனக் கூறு. அதெல்லாம் முடித்து வர, இரண்டு - மூன்று ஆண்டுகள் ஆகும். மீறி வந்தால் தலையெழுத்து என நினைத்து, மறுமணம் செய்து கொள்.
உங்களிருவரையும் கட்டுப்படுத்தும் ஊர்பஞ் சாயத்து இருந்தாலும், மனு கொடுத்து கத்தரித்து விடச் சொல்லலாம். 
எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், சம்சார வாழ்க்கையைத் துறந்து, சன்னியாசி ஆகிவிடு. சன்னியாசி ஆவதற்கு முன், மகனின் எதிர் காலத்துக்கு தேவையான வழிவகை செய்து விடு.
— என்றென்றும் தாய்மையுடன்,

பிடித்தால், 2,000 ரூபாய் பரிசு! எதை? முதலையை!

தாய்லாந்து நாட்டின் தலைநகராக பாங்காக் தேர்ந்தெடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன், இந்நாட்டின் தலைநகராக இருந்தது, அயுத்தயா என்ற அழகிய நகரம். கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரம், சுற்றுலா தலமும் கூட. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.


இயற்கை பேரழிவுகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை. அதுவும், சமீப காலமாக, மழை அங்கு கொட்டோ கொட்டு என கொட்டித் தீர்க்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகள், வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த வெள்ள நீர், நிரந்தரமாக தேங்கிக் கிடக்கிறது. அயுத்தயா நகரில் உள்ள மிருககாட்சி சாலை, பண்ணை ஆகியவற்றில் இருந்த ஏராளமான முதலைகள், கரைபுரண்டோடும் வெள்ளத்தை பயன்படுத்தி, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டன.
அந்த முதலைகள், நகரின் பல பகுதிகளிலும் சூழ்ந்துள்ள தண்ணீரில் இஷ்டத்துக்கு சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் வருவோரை, முதலைகள் பதம் பார்த்து விடுகின்றன. முதலை பீதி காரணமாக, அயுத்தயா நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எனவே, தாய்லாந்து அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உயிருடன் சுற்றித் திரியும் முதலைகளைப் பிடிக்க உதவி செய்யும் பொது மக்களுக்கு, 2,000 ரூபாய் பரிசு தரப்படும் என, அறிவித்துள்ளது. 

போலீஸ் ஸ்டேஷனில் பயங்கரக் கொலை : பெண் ஏட்டு மயக்கம்

மதுரை சமயநல்லூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு வந்த போது, மனைவி முத்துலட்சுமியை,40, கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, கணவர் கண்ணன்,43, தலைமறைவானார். கொலையை பார்த்த அதிர்ச்சியில், ஏட்டு சரஸ்வதி மயங்கினார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன். முத்துலட்சுமியுடன் 2005ல், இவருக்கு திருமணம் நடந்தது. மகன்கள் பாரதிராஜா,5, மகாலிங்கம்,4, ஜெயகுமார்,3, உள்ளனர். கணவன், மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ஆறு மாதங்களுக்கு முன், கணவரையும், குழந்தைகளையும் பிரிந்து, தத்தனேரியில் முத்துலட்சுமி தனியாக வசித்தார். நவ.,15ல், குழந்தைகளை தன்னுடன் ஒப்படைக்க, சமயநல்லூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அன்று, இருவரையும் விசாரித்த போலீசார், நேற்று மீண்டும் வரும்படி கூறினர்.

நேற்று காலை 10.30 மணிக்கு, இருவரும் ஸ்டேஷனிற்கு வந்தனர். எஸ்.ஐ., இல்லாததால், காத்திருக்குமாறு பெண் போலீஸ் கூறினார். ஸ்டேஷன் வாசலில் உட்கார்ந்த போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற கண்ணன், தன்னிடமிருந்த சிறிய அரிவாளால், முத்துலட்சுமி கழுத்தை அறுத்து விட்டுத் தலைமறைவானார்.

முத்துலட்சுமியின் அலறலைக் கேட்டு வெளியில் வந்த ஏட்டு சரஸ்வதி, ரத்த வெள்ளத்தில் கிடந்தவரைப் பார்த்து, அதிர்ச்சியில் மயங்கினார். பின், சக போலீசார் முத்துலட்சுமியை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் அவர் இறந்தார்.

டி.எஸ்.பி., அலுவலகம், சமயநல்லூர் போலீஸ் ஸ்டேஷன், மகளிர் ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு அமைந்த வளாகத்தில், முத்துலட்சுமி கொலையானது, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

75 ஆண்டாக மக்களை தட்டி எழுப்பும் சங்கொலி: ஈரோட்டில் காலம் காட்டும் கண்ணாடி

75 ஆண்டுகளுக்கும் மேலாக, சங்கொலி எழுப்பி வரும் ஆங்கிலேயர்கள் கால மின்சார சங்கு, இப்போதும் நல்ல நிலையில் தன் கடமையை நிறைவேற்றி வருகிறது.

பொதுவாக சங்கு சத்தம் என்றாலே, பலருக்கும் அபசகுணம் என்று தான் நினைத்து வருகின்றனர். சங்கு ஊதினாலே, நினைத்த காரியம் நடக்காது என்ற கெட்ட எண்ணமும் பலரின் மனதில் உள்ளது. ஆனால், 75 ஆண்டுக்கும் மேலாக ஈரோட்டில் எழும் சங்கு ஒலி, இன்றளவும் உழைக்கும் மக்களின் மனதில், உழைக்க வேண்டும் எண்ணத்தை விதைத்து வருகிறது.ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, ஆங்கிலேய அதிகாரிகளும், மக்களும் நேரத்தை தெரிந்து கொள்ள, ஊருக்கு பொதுவான இடத்தில் மின்சார சங்கு அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் ஒலி எழுப்பப்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்கா, ஆங்கிலேயர்களால், "பீப்பிள்ஸ் பார்க்' என, அழைக்கப்பட்டது. பூங்காவுக்குள் மின்சார சங்கும் அமைத்தனர்.
அப்போது, காலை, 9 மணி, மாலை, 6 மணிக்கு சங்கு ஒலிக்கப்பட்டது. காலை, 9 மணிக்கு ஒலிக்கப்படும் சங்கொலி, தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டிய நேரத்தையும், மாலை, 6 மணிக்கு எழுப்பப்படும் சங்கொலி, பணி நிறைவடைந்த நேரத்தையும் காட்டியது.சங்கொலியை அடிப்படையாக கொண்டே, ஈரோடு பொதுமக்கள் நேரத்தை கணக்கிட்டனர். அறிவியல் முன்னேற்றத்தால், கடிகாரம், கம்ப்யூட்டர் என்று வந்த பின்னும், ஈரோடு மக்களின் காலம் காட்டும் கண்ணாடியாக, இன்றளவும் இந்த சங்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.

வ.உ.சி., பூங்காவில், பத்தாண்டுக்கு முன், சிறிய அளவில் மிருகக்காட்சி சாலை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வளர்க்கப்பட்ட விலங்குகளுக்கு, சங்கின் ஒலி அச்சத்தை ஏற்படுத்தியதால், சில ஆண்டுகள் சங்கின் ஒலி நிறுத்தப்பட்டது. விலங்குகள் அனைத்தும் சென்னை, கிண்டி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட பின், சங்கின் பணி மீண்டும் தொடர்ந்தது. இன்று, 75 ஆண்டுகளை கடந்து இதன் பணி வெற்றிகரமாக தொடர்கிறது.

மாநகராட்சி ஊழியர்கள் சிலர் கூறியதாவது:சங்கை இயக்கவும், பராமரிக்கவும், தனி வாட்ச்மேன் ஒருவர் இருந்தார். சங்கை இயக்க மாதம், 15 ரூபாய் அவருக்கு, அலவன்ஸ் வழங்கப்பட்டது. தற்போது, துப்புரவு பணியாளர்கள் யாரோ ஒருவர் இப்பணியை செய்கின்றனர். தற்போது, அதிகாலை 4 மணி, காலை 8, மதியம் 12, இரவு 8 மணிக்கு சங்கொலி எழுப்பப்படுகிறது. ஈரோட்டின் பெரும்பாலான பகுதிக்கு சங்கின் ஒலி கேட்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஈரோடு மக்களின் உன்னத தோழனாகவும், நேரம் காட்டும் கருவியாகவும், வ.உ.சி., பூங்கா சங்கு விளங்கி வருகிறது.

இனி திருமணங்களில் வீடியோ கூடாது - திடீர் தடை

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள "குரேஷி' சமூகத்தினர், தங்கள் ஜாதியினர் நடத்தும் திருமணங்களில் ஆடம்பர, அனாவசிய செலவுகள் கூடாது என, தடை விதித்துள்ளனர். 
 
"குரேஷி' சமூக பஞ்சாயத்தின் தலைவர் ஹாஜி ஜமீல் கூறுகையில், ""உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் எங்களின், "குரேஷி' சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர். நாங்கள் நடத்திய சமுதாய பஞ்சாயத்து கூட்டத்தில், 60 கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த 2,000 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், குரேஷி சமூகத்தினர் ஆடம்பரத் திருமணங்களையும், திருமணங்களின் போது செய்யப்படும் அனாவசிய செலவுகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிக அளவில் வரதட்சணை கொடுப்பது, வீடியோ படம் எடுப்பது, பட்டாசுகள் வெடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்த விரைவில் ஆலோசனைக் கமிட்டி ஒன்றும் அமைக்கப்படும். தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்'' என்றார்.

மனித எண்ணங்களினால் கட்டுப்படுத்தக்கூடிய கணனி

நவீன உலகில் புரட்சியால் மனித எண்ணங்களினால் கட்டுப்படுத்தக்கூடிய கணனியை கண்டுபிடித்துள்ளதாக வொஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.


இக்கணனியானது உடலினை அசைக்கமுடியாத மற்றும் பேச முடியாதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

இது மூளையில் ஏற்பட்ட காயம் அல்லது பக்கவாதத்தினால் பேச்சை இழந்தவர்களுக்கும் பயன்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வொஷிங்டன் மருத்துவ கல்லூரி டாக்டர் எரிக் லுத்தார்ட், மருத்துவ வராலாற்றில் இது ஒரு மைல் கல்லெனவும் மனிதர்கள் மனதில் நினைப்பதினை எதிர்வு கூறக்கூடியதாக உள்ளமை மிகப்பெரிய வெற்றியெனவும் தெரிவிக்கின்றார்.

இச் செயற்பாடானது இலக்ட்ரோகோர்டியோகிரபி முறையிலேயே நடைபெறுகின்றது.


ஆஹா ! இப்படி ஒரு ப்ரௌசரை தான் தேடிக்கிட்டிருந்தோம்

இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.

இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.

இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.

இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.
அத்தளம் http://www.soovle.com/

மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும்.