Saturday, May 7, 2011

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி


அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க-    நியாயமான ஒரு கேள்வி ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டுபந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே ?

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.  
நானும் விவரிக்க ஆரம்பிதேன் வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும் அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

து சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
இந்த மாதிரி அமெரிக்கால்-ல இங்கிலாந்து-ல இருக்குற இல்ல எதாவது கம்பெனி "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

சரி" இந்த மாதிரி >Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும் முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
Read more »

எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!


      அது 2005-ம் ஆண்டு. வீல்சியாரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல்சியாரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கொம்ப்யூட்டரும், வொய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டோக் ஷோ  நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.

      ‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.
Read more »

பொன்னியின் செல்வனுக்கு கல்கி எழுதிய முடிவுரை


நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றரை ஆண்டு காலம் "பொன்னியின் செல்வன்" கதையைத் தொடர்ந்து படித்து வந்ததில் நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும், அன்பையும் போற்றி வணங்குகிறேன்.
கதை ஆரம்பித்துச் சில மாதங்கள் வரையில் நேயர்களிடையே இது இவ்வளவு ஆர்வத்தை உண்டாக்குமென்று தோன்றவில்லை. பழந்தமிழ்நாட்டுச் சரித்திரப்பெயர்கள் சிலருக்கு பெரிதும் தலைவேதனையை உண்டாக்கி வந்ததாகத் தெரிந்தது. போகப் போக, அந்தத் தலைவேதனையை நேயர்கள் எப்படியோ போக்கிக் கொண்டார்கள். இதற்கு முன்னால் எந்தத் தொடர் கதையையும் நேயர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் படித்ததில்லை என்று சொல்லும் நிலைமை வெகு விரைவில் ஏற்பட்டது. அதே ஆர்வம் தொடர்ந்து நிலைபெற்று இருந்து வந்தது.
கதை ஆரம்பித்த மறுவருடம் ஆடிப் பதினெட்டாம் பெருக்குத் தினத்தில் பரமக்குடியிலிருந்த பல நண்பர்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். "பொன்னியின் செல்வன்" முதல் அத்தியாயம் பதினெட்டாம் பெருக்குத் திருவிழாவன்று வீர நாராயண ஏரிக் கரையில் தொடங்குகிறது அல்லவா?
பின்னர் அடிக்கடி பல நேயர்கள் கடிதம் எழுதித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பாராட்டுதல்களையெல்லாம் கதையின் ஆசிரியருக்குரியவையாக நான் கருதவில்லை. பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்துக்குரிய பெருமையாகவே கருதினேன். உண்மையிலேயே, தமிழ்நாட்டின் பழைய வரலாறு, தமிழர்கள் மிகவும் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாறுதான். சென்ற சில ஆண்டுகளாகத்தான் தமிழகத்தின் பழைய சரித்திர ஆராய்ச்சி முறையாக நடைபெற்று வருகிறது. கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் படிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று ஆராய்ச்சியாளர் அந்த ஆதாரங்களை வைத்துத் தமிழகத்தின் சரித்திரத்தை அங்கங்கே பகுதி பகுதியாக நிர்மாணித்து வருகின்றார்கள்.
Read more »

பிரியமுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு


நான் இன்னும் இருபதை எட்டாதவன். கைக்கு கிடைத்த புத்தகங்களை படித்து " மார்க்ஸியம் என்றால் என்ன? அதன் இலட்சியம் என்ன? அதன் தேவை என்ன?" போன்ற அடிப்படையை மட்டும் தெரிந்து வைத்திருக்கும் சாமான்ய இளைஞன். பொதுவாகவே கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கல்ஸ்,லெனின்.ஸ்டாலின்,மா சே துங் காஸ்ட்ரோ இவர்களைத்தாண்டி எவரும் என் நினைவுக்கு வருவதில்லை.கம்யூனிஸத்தின் சாதனைகள்,வெற்றிகள்,எல்லாம் சோவியத்திலும் கியூபாவிலும் மட்டுமே நடந்தாக நம்பிக் கொண்டிருந்தவன் நான்.எனக்கு மட்டும் அல்ல இங்கு பலரது நிலைமை இதுதான்.சமீபத்தில் படித்த சில புத்தகங்கள் சில பெரும் தலைவர்களை அடையாளம் காட்டியது. சிங்காரவேலர்,ஜீவா,வி.பி.சிந்தன்,பி.இராமமூர்த்தி,எ.எம்.எஸ், ஜோதிபாசு, சங்கரய்யா என அந்த நீண்ட பட்டியலை வாசிக்கும் போது உண்மையிலேயே இவ்வளவு பேர் இந்தியாவில் கம்யூனிஸ கொள்கையை உள்வாங்கி அதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களா? என ஆச்சரியம் என்னைத் தொற்றிக்கொள்கிறது. தல்வார் போராட்டம்,தெலுங்கானா புரட்சி என படித்த போது மெய்சிலிர்த்துப் போனேன்.தோழர் பாலுவின் தூக்குமேடை நிமிடங்களிலும் அவரது கொள்கைப்பிடிப்பு வீச்சுரைகளால் உணர்ச்சிமேலீட்டில் என் கண்களில் இருந்து நீர் வழிந்தது.அது அழுகை அல்ல என்பதை மட்டும் நன்றாய் உணர்ந்திருந்தேன்.

                                        "வெள்ளைக்காரன் சுதந்திரம் தர நினைக்கும் போது மூன்று கட்சள் தான் இருந்தன. முதலவதா வந்த காங்கிரசுக்கு இந்தா இந்தியா என்றான்.இரண்டாவதாக் வந்த முஸ்லீம் லீக்கிற்கு இந்தா பாகிஸ்தான் என்றான்.மூன்றாவதாய் வந்த கம்யூனிஸ்ட்டுக்கு இந்தா சிறைச்சாலை என்றான்".என்றும் ஜீவா முதலானோர் ஒழிந்து மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததைப் பற்றியும் எங்கள் ஊர் டீக்கடியில் அமர்ந்து சில தோழர்கள் பேசியதை கேட்டிருக்கிறேன்.அவ்வளவு முன்னரே வந்துவிட்ட கட்சி ஏன் இன்னும் வளரவில்லை?என்ற கேள்வி இயல்பிலேயே மனதில் எழும் ஆனாலும் அது குறித்து தீவிரமாக் யோசிக்கும் வயது அப்போது எனக்கு இல்லை.

                   எட்டு மணி நேரம் மட்டுமே வேலை, ஞாயிறு விடுமுறை,சாப்பாட்டுக்கு இடைவேளை,போனஸ்,சம்பள உயர்வு என பலவற்றை சாதித்த கம்யூனிஸ்ட் கட்சியை தொழிலாளர்கள் தூக்கி கொண்டாடாமல் இருப்பதற்கு காரணம் என்ன?. ஒருசமயம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருந்த கட்சி இப்படி நொடிந்து போனது ஏன்? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான் நாம் அந்நியப்பட்டு போய்விட்டோம் தோழர்களே.இன்னும் நாம் பலரது கண்களுக்கு டப்பா குலுக்கிகளாகவே தெரிகிறோம். ரத்தன் டாட்டா எல்லா கட்ச்சிகளுக்கும் பணம் அனுப்பிய போது "இது ஏழையின் கட்சி உனது முத்லாலித்துவ பணம் வேண்டாம்"என் திருப்பித் தந்தது கம்யூனிஸ்ட் கட்சி என்று தோழர்கள் மார்த்தட்டி சொல்வது உண்டு.நமது கொள்கைகளைப் பற்றி பணக்காரர்களுக்கு புரியவைப்பதில் வெற்றி அடைந்திருக்கும் நாம் அதை ஏழைகளிடம் கொன்டு சேர்ப்பதில் பெரும் தோல்வி அடைந்திருக்கிறோம்.உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை கட்சிக்குள் இருக்கும் பலருக்கே கம்யூனிஸ சித்தாந்தததில் சரியான புரிதல் இல்லை.களப்பணி ஆற்றுவது மிகவும் முக்கியமெனினும் சித்தாந்தத்தில் தெளிவில்லாமல் களப்பணி ஆற்றுவது என்பது சரியானது அல்ல.முன்பு போல் இல்லை இப்போழுது பெரும்பாலானோர் தங்கள் சுயநலத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.பொதுநல எண்ணத்தோடு வரும் சொச்சப் பேரையாவது சரியான வழியில் திருப்பிவிடுவது நமது கடமை ஆகும்.எது நமது சித்தாந்தம் என்பதிலேயே நமக்கு குழப்பம் இருக்கிறதோ எனப்பயப்படுகிறேன்.
Read more »

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்


1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.
Read more »

சாந்தோமின் வரலாறு


இந்நாட்களில் சாந்தோம் மற்றும் மைலாப்பூர் இரண்டு பெயர்களும் ஒரே பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால அந்நாட்களில் இப்பெயர்கள் இரண்டும் இரண்டு வித்தியாசமான இடங்களைக் குறிப்பிடும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இலங்கி வரும் ஊராகக் கருதப்படும் மைலாப்பூர், மிகப் பழமையான இந்திய ஊர். சாந்தோம் பதினேழாம் நூற்றாண்டு போர்த்துக்கீசிய அமைவிடம். செயிண்ட் தாமஸ் தி அபோஸ்டல் மயிலையில் தான் புதைக்கப்பட்டதாக ஒரு நம்பிக்கை இருந்தது. போர்த்க்துக்கீசியர்கள் முதலில் இந்தியா வந்த போது, அவர்களுள் சிலர் மயிலைக்கு அவரது மிச்சங்களைப் பார்க்க வந்தனர்.
அவர்கள் சில பாழடைந்த கிறித்துவ ஆலயங்களையும், செய்ண்ட் தாமஸ் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தையும் கண்டனர்.

விரைவில் அந்த இடத்தில் ஒரு வழிபாட்டிடம் எழுப்பப்பட்டது. அதனைச் சுற்றிலும் ஒரு போர்த்துக்கீசிய நகரம் வளர்ந்தது. காலப்போக்கில் அந்த நகரம் ஒரு வணிபப் பகுதியாக மாற, கோட்டை மதிலால் சூழப்பட்டு, இந்திய நகரமான மயிலாப்பூருக்கு இணையாக மாறியது.

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியா வந்த ஒரு இத்தாலிய வணிகர், சாந்தோமைப் பற்றி 'நிலத்தின் மேல் தான் கண்டவற்றுள் அழகிய நகரம்' போல் இருந்ததாகவும், மயிலாப்பூர் களிமண் சுவரால் சூழப்பட்ட ஒரு இந்திய நகரமாகவும் குறிப்பிடுகிறார்.

ஆகாவே மயிலாப்பூர் சாந்தோமின் கறுப்புப் பகுதியாக இருந்தது. ஆனால் பின்னாட்களில் இரண்டும் ஒன்றிணைந்தன.

ப்ரிட்டிஷார் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்த போதே, போர்த்துக்கீசியரின் பலம் குன்றத் தொடங்கி இருந்தது; மற்றும் அவர்களது செல்வாக்கு வளர வளர, போர்த்துக்கீசியரின் ஆதிக்கம் சாந்தோமில் மேலும் குறையக் காரணமாக இருந்தது.; அதன் இயல்பான பின் நிகழ்வாக மயிலாப்பூரை உள்ளடக்கிய சாந்தோம் அவர்களது ஆக்ரமிப்பிற்கு ஆளாகியது.
Read more »

லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்

நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகள் முடிந்த பின்னும் முற்றிலுமாக ஊழலை ஒழிக்க இயலவில்லை. ஆட்சிக்கு வருபவர்களும், ஆட்சியில் இருந்தவர்களும் மேடைதோறும் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை முற்றிலும் ஒழிப்போம்” எனக் கோஷம் மட்டுமே போடுகிறார்கள். மத்தியிலும் சரி அல்லது மாநிலத்திலும் சரி ஆட்சியில் இருந்தவர்கள் ஊழலுக்காக தண்டனை பெற்றார்கள் என்று இதுவரை கூற இயலாது. 


நாடு விடுதலை பெற்ற ஆரம்பத்தில் ராணுவத்திற்காக வாங்கிய ஜீப்பில் ஊழல் செய்தார்கள்; ஊழல் புரிந்த கிருஷ்ண மேனன் மத்திய இராணுவ அமைச்சர் பதவி பெற்றார். ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் வேறு காரணங்களைக் கூறித் தப்பி விடுகிறார்கள். மிகப் பெரிய ஊழல் நாயகர்களைப் பதவி விலகல் என்று கூறி தப்பிக்க விடுகிறார்கள். இதுதான் கடந்த 64 ஆண்டுகளாக இந்த நாட்டில் நடந்து வரும் கதை.

“எம்.எல்.ஏ. க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அவர்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம்” கொண்டுவரப்பட்டதாக 27.8.1969ல் தமிழக சட்ட மன்றத்தில் அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி தெரிவித்தார்.

இவ்வளவு வெளிப்படையான கருத்தைக் கொண்ட தமிழக முதல்வர் ஊழலுக்கு எதிராக நாட்டையே தட்டி எழுப்பிய அன்னா ஹசாரேவைப் பற்றி இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்றைய தமிழக முதல்வர் கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் அடுத்த ஆட்சி எனது தலைமையில் அமையப் போகுது என்று கூறுபவருமான ஜெயலலிதாவும் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

1967லிருந்து தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள் திமுகவும் அஇஅதிமுகவும். கடந்த 44 ஆண்டுகளாக தமிழகத்தில் ஊழல் புரையோடியுள்ளது. எல்லா மட்டத்திலும் கையூட்டு இல்லாமல் எந்தக் காரியமும் நடைபெறாது என்கிற எண்ணம் எல்லா தட்டு மக்களிடமும் காணப்படுகிறது. இந்த எண்ணம் ஏற்படத் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளின் சுயநல ஆசையே முக்கிய காரணமாக அமைந்தது.

1969ல் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்ட வந்த தமிழக முதல்வர் அன்னா ஹசாரேவின் போராட்டத்தைப் பற்றிய கருத்துக்களைக் கூற முன் வராதது வியப்பளிக்கிறது. உண்மை பல நேரங்களில் ஊமையாகிவிடும் போலும்.

அடுத்து ஆட்சிக்கு வரப் பணம் முக்கிய காரணி எனக் கருதியாதால் ஊழல் ஒரு அரசியல் அங்கமாக மாறிவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அங்கம் வகித்து அமைச்சர் பதவியை பெற்றவர்கள் திமுகவினரும் அஇஅதிமுகவினரும்; ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் திமுக அங்கம் பெற்று முக்கிய இலாக்காக்களை பெற்றுக் கொண்டுள்ளார்கள். தங்களுக்குத் தேவையான இலாக்காக்களைப் பெற டெல்லி சென்ற முதல்வர், உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் 1969லிருந்து கிடப்பிலே இருக்கும் லோக் பால் மசோதாவை நிறைவேற்ற பிரதமருக்குக் கோரிக்கை விடுத்திருக்கலாம்.

1969ல் கொண்டு வரப்பட்ட மசோதாவில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகளை விசாரிக்க லோக்பால் சட்டமும், மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க லோக் ஆயுத்த குழுவும் நியமிக்கப்பட்ட வேண்டும் என்று நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் தெரிவித்த பரிந்துரையைக் கருணாநிதியும், ஜெயலலிதாவும் நிறைவேற்றவில்லை என்பது மட்டுமில்லாமல் இந்த மசோதா மீது தங்களுக்கு அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

இருவரும் ஜன் லோக்பால் மாசோதா கொண்டு வர நியமிக்கப்பட்ட குழுவில் உள்ளவர்களின் நம்பகத்தன்மையைப் பற்றிக் கூடத் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவில்லை. முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் போனதற்கானக் காரணத்தைத் தேடினால் “மாசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இவர்களுக்கு பாதகமாக முடியும் என்பதால் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை” என்ற பதில் கிடைக்கும்.

இந்த மசோதாவின் முக்கிய ஷரத்து, குற்றம் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகள் மீது இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணை நடத்தித் தண்டனை வழங்க வேண்டும் என்பதாகும். இந்த அம்சம் ஜெயலலிதாவிற்கு ஏற்புடையதல்ல. ஏன் என்றால் 2001ல் தொடுக்கப்பட்ட அன்னியச் செலவாணி மோசடி வழக்கிலும், 2000ம் வருடம் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கிலும் ஆண்டுகள் 10க்கு மேல் ஆனாலும் இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லை. ஆகவே இந்த மசோதா சட்டமானால் இன்றைய நிலையில் செல்வி சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்.



ஜெயலலிதா மீதும், கருணாநிதி மீதும் வழக்குத் தொடுக்க வேண்டுமானால் மாநில ஆளுநர் அனுமதி கிடைக்க வேண்டும். இந்த அனுமதி பெறுவதற்குப் பல ஆண்டுகள் ஆன கதையும் உண்டு. 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் நடந்துள்ளது. ஆகவே அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வேண்டும் என 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு 16 மாதங்கள் வரை பதில் கொடுக்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.



ஆனால், ஜன் லோக்பால் மசோதா சட்டமானால், பிரதமராக இருந்தாலும் அல்லது முதல்வராக இருந்தாலும் குற்றச்சாட்டின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர் ஆகியோர் அனுமதியில்லாமல் வழக்குத் தொடரலாம் என்பது முக்கிய அம்சமாகும்.



ஆகவே, இந்த ஷரத்து தற்போதைய தமிழக முதல்வருக்கும் ஆபத்தாக முடியும். ஏன் என்றால் 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ204 கோடி கிடைத்த வழக்கு வரும்போது நேரடியாக பாதிக்கப்படுவது தமிழக முதல்வர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். எனவே இருவரும் இதுவரை கருத்து கூறாதது மசோதாவின் வரைவு அம்சங்கள் அவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கும் என்பதையே வெளிக்காட்டுகிறது.



தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் கூட இந்த மசோதாவைப் பற்றி எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அடுத்த முதல்வர் வேட்பளார் திரு ஸ்டாலின் என எல்லோரும் கூறிக் கொண்டு இருக்கின்ற காரணத்தால் துணை முதல்வராவது இது பற்றி கருத்து தெரிவிப்பார் என்றால் அவரும் இதுவரை வாய்திறந்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த மசோதா சட்டமானால் தமிழக அமைச்சர்களில் பலர் தங்களது சொத்துகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். 2006ல் நடந்த தேர்தலில் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ2.83 கோடி என தனது வேட்பு மனுவில் தகவலை தெரிவித்த அமைச்சர் நேரு, 2011ல் தாக்கல் செய்த மனுவில் ஐந்தாண்டுகளில் சொத்தின் மதிப்பு ரூ 17.77 கோடியாக காட்டியிருக்கிறார். ஐந்தாண்டுகளில் ஏறிய விலைவாசி உயர்வு, தொடர் மின் வெட்டின் காரணமாக பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டாலும், அமைச்சர்களின் சொத்துக்கள் மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.

அமைச்சர் நேருவைப் போலவே உணவு அமைச்சர் எ.வ.வேலுவிற்கு 2006ல் தெரிவித்த சொத்தின் மதிப்பை விட 780 மடங்கு அதிகமாகி தற்போது 17 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. ரூ1.35 கோடியாக தனது சொத்து இருப்பதாக 2006ல் காட்டிய அமைச்சர் பூங்கோதைக்கு 2011ல் ரூ15.43 கோடியாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஆகவே இவர் தான் செய்த மருத்துவத் தொழிலில் உண்மையில் கிடைத்த வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்கிற மசோதாவை சட்டமாக்க முனைப்பு காட்டுவாரா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல்வர் எவ்வழி மற்றவர்கள் அவ்வழி என்கிற புதுமொழிக்கு ஏற்ப 2006ல் 26.52 கோடியாக இருந்த சொத்து 2011ல் ரூ44 கோடியாக உயர்ந்த சூத்திரத்தை அமைச்சர்களுக்கு மட்டுமே முதல்வர் தெரிவித்ததால் திமுக அமைச்சர்கள் அனைவரும் முதல்வரைப் போல் பல மடங்கு சொத்துக்களைக் கடந்த ஐந்தாண்டுகளாக குருவி சேர்ப்பது போல் சேர்த்திருக்கிறார்கள். எனவே இந்த மசோதா சட்டமானால் இந்த நிலக்குருவிகள் சேர்த்த சொத்து பறிமுதல் செய்யப்படும் என்கிற அச்சத்தின் காரணமாக கருணாநிதியும் வாய்முடி மௌனமாக இருக்கிறார்.

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறுவதற்குப் பதிலாக தேர்தல் கமிஷன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவதிலே அதிக கவனம் செலுத்தினார். பாவம்.

இந்த வரைவு மசோதாவில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய இரண்டுக்கும் இருக்கும் முழுச் சுதந்திரம் போல், முழுச்சுதந்திரம் பெற்ற அமைப்பாக ஜன் லோக்பால் இருக்க வேண்டும், எந்த அதிகாரியும் அல்லது அரசியல்வாதியும் தனது செல்வாக்கைப் பயன்படுத்த இயலாத வகையில் அமைக்க வேண்டும் என்பது கருணாநிதிக்கோ அல்லது ஜெயலலிதாவுக்கோ ஏற்புடையதாக இருக்காது. எனவே, இவர்கள் இருவரும் நாட்டையே உலுக்கிய பிரச்சினையில் தங்களது கருத்துக்களை மக்கள் முன் வைக்கவில்லை. ஏற்படப்போகும் லோக்பால் மசோதாவிற்கு இவர்கள் ஆதரவு கொடுப்பார்களா என்பது சந்தேகமே.

அதிகார பலத்தைக் கொண்டு குற்றம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற எண்ணமும் ஈடு கட்ட இயலாது. ஏன் என்றால் ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களைப் பாதுகாப்பது லோக்பால் அமைப்பின் கடமையாகும். அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுப்பதும் இவர்களின் முக்கியப் பணியாகும் என்பது வரைவு மசோதாவில் இறுதியாக சேர்க்கப்பட்டுள்ள ஷரத்தாகும்.

கருணாநிதிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக தமிழகத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்த வினாயகம் என்பவர் கருணாநிதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காக அவருக்கு கொடுத்த தொல்லைகள் அதிக அளவில் இருந்த காரணத்தால் பின்னாளில் அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு துன்பத்திலிருந்து விடுதலை பெற்றார். செல்வி ஜெயலலிதாவும் இம் மாதிரியான காரியங்களை செய்வதில் வல்லவர். கஞ்சா வழக்கு என்பது ஜெயலலிதாவின் ஆட்சியில் பலருக்கு ஏற்பட்ட அனுபவமாகும். ஆகவே இந்த மசோதா சட்டமானால் இருவரும் தங்களின் எண்ணப்படி அதிகார பலத்தை பயன்படுத்த இயலாது என்பதால் வாய் திறக்க முடியாமல் உள்ளார்கள்.

லோக்பால் உருவான கதை

1969ம் ஆண்டு மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்த கமிஷன் தனது பரிந்துரையில் உடனடியாக அரசின் செயல்பாட்டில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த லோக்பால் கமிட்டி அமைக்கப்பட வேண்டும், மாநிலங்களின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த லோக் ஆயுத்தா குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என கமிஷனின் அறிக்கை தெரிவித்தது. இந்தப் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 1969ல் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது.

பாராளுமன்றத்தின் மேல்சபையில் இந்த மசோதாவிற்கு போதிய ஆதரவு இல்லாத காரணத்தில் இம்மசோதா காலாவதியாகிவிட்டது. ஆனாலும் கூட எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இம் மசோதா கொண்டு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.

இம் மாதிரியான போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய வருடங்களில் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா தொடர்ந்து தாக்கல் செய்தது. இத்தனை ஆண்டுகள் இத்தனைமுறை தாக்கல் செய்ப்பட்டாலும் மசோதா ஏன் சட்டமாகவில்லை என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகும். காரணம் இம் மசோதாவைக் கொண்டு வருவதில் ஆளும் கட்சிக்கு அக்கறை இல்லை. இழுத்தடிக்கும் போக்கில் பல்வேறு கால கட்டங்களில் இம் மசோதாவானது கூட்டு நடாளுமன்ற குழுவிற்கும், பல்வேறு குழுவின் பரிந்துரைக்கும் மாறி மாறிச் சென்றதால் இம் மசோதா சட்டமாகவில்லை.

நாடு விடுதலை பெற்ற 1947ம் வருடத்திலிருந்து இந்திய வரலாற்றில் ஊழல் கரைபடிந்த எந்த அமைச்சரும் தண்டிக்கப்படவில்லை. அமைச்சர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதை விட மோசடிக்குத் துணை போன அதிகாரிகள் கூடத் தண்டிக்கப்பட வில்லை. தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதிகள் கூட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத் திகழவில்லை என்பது ஊரறிந்த உண்மையாகும். ஆகவே ஊழலின் காரணமாக நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கிற கூச்சல் அதிகமானதே தவிர அது தீரும் வழி தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியால் காலம்கடந்த லோக்பால் மசோதாவின் அம்சங்கள்

பத்து முறை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட லோக்பால் மசோதாவில் பல அம்சங்கள் நடைமுறைக்கு ஒவ்வாத ஷரத்துக்கள் இடம் பெற்றன. மேலும் காங்கிரஸ் கட்சியினரால் தயாரிக்கப்பட்ட லோக்பால் மசோதாவானது ஏற்கனவே இருக்கின்ற அமைப்புகள் போன்றதாகும். இதற்கு எனத் தனியாக அதிகாரங்கள் கிடையாது. இந்த அமைப்பு அரசுக்கு பரிந்துரை செய்யும் குழுவாகவே மட்டுமே இருக்குமாறு மசோதாவின் சாரம்சங்கள் இருந்தன. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போல் லோக்பால் அரசியல்வாதிகளின் தவறுகளை விசாரிக்கும் அமைப்பாக இருக்கும். ஆனால், அதற்கு எவ்விதமான சட்ட அதிகாரமும் கிடையாது. லோக்பால் அமைப்பு ஆலோசனைக் குழுவாக செயல்படும்.

லோக்பால் அமைப்புக்குத் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி கூட்டாகச் சேர்ந்த அமைப்பினரின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது போன்ற அம்சங்கள் லோக்பால் அமைப்பின் உன்னத லட்சியத்தையே சிதைத்து விடும்.

புதிய லோக்பால் மசோதாவில் உள்ள ஷரத்துக்கள்

அண்ணா ஹஸாரே தலைமையில் உள்ள குழுவினரால் தயாரிக்கப்பட்ட வரைவு மசோதாவில் உள்ள அம்சங்கள் முக்கியமானவையாகும். இந்த வரைவுப்படி மசோதா கொண்டு வரப்படுமானால் 90 விழுக்காடு சமுதாயத்தில் ஊழலை ஒழிக்க இயலும். எவ்வாறு?

(1) மத்தியில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க லோக்பால் என்கிற அமைப்பும், மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க லோக் ஆயுக்தா என்கிற அமைப்பும் ஏற்படுத்தப்படும்.

(2) உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரத்தைப் போல், தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் போல் லோக்பால் அமைப்பும் ஒரு சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் லோக்பால் விசாரணையில் அமைச்சர்களோ அல்லது அதிகார வர்க்கமோ தலையிடக் கூடாது.



(3) குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது விசாரணையும் வழக்கும் காலதாமதம் செய்யப்படாமல் விசாரணை என்பது ஒரு ஆண்டுக்குள்ளும், விசாரணைக்குப் பின் நடைபெறும் வழக்கு விசாரணை ஒரு ஆண்டுக்குள்ளும் முடிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு இரண்டு ஆண்டுக்குள் தண்டனை வழங்கப்படும். (பத்து ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு நடைபெற்று வருகிறது என்பது நினைவுக்கு வருகிறதா?)



(4) குற்றம் சுமத்தப்பட்டவரால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டு இருக்குமானால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட காலத்திற்குள் இழப்பீடு வசூலிக்கப்பட வேண்டும்.

(5) பிரதமர், உச்ச நீதி மன்ற நீதிபதி, முதல்வர், அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தும் போது அனுமதி பெற வேண்டும் என்பது முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.

(6) இந்த மசோதா சட்டமானால் பொதுமக்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தாலும், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தாலும், பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தாலும், ஏதேனும் ஒரு பிரச்சினைக்காகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து புகார் பெறப்படவில்லை என்றாலும் இது சம்பந்தமாக லோக்பால் ஒரு மாதத்திற்குள் விசாரித்து பொது மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கு வழி வகை செய்யும்.

அத்தோடு அரசின் சார்பில் போடப்படும் சாலைகள் தரமற்றதாக இருந்தாலும் ரேஷன் கடைகளில் அளவு குறைவான மற்றும் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தி ஒரு ஆண்டுக்குள் தண்டனை வழங்கப்படும்.

(7) லோக்பால் அமைப்பில் உள்ளவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.

(8) மத்திய அரசின் மத்திய ஊழல் கண்காணிப்பு நிறுவனமும், மத்திய புலனாய்வு அமைப்பும் லோக்பால் அமைப்புடன் இணைந்து விசாரணை நடத்தும்.

ஆகவே இப்படிப்பட்ட ஷரத்துக்களை கொண்ட மசோதா சட்டமானால் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் சிறைசாலைக் கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த மசோதாவை சட்டமாக்க ஊழல் அரசியல்வாதிகள் முன்வருவார்களா என்பதே கேள்வி குறியாகும்.

உலகமெனும் மாமேடை

உலகமெனும் மாமேடையில் யாம் இசைச்சக்கரவர்த்திகள்

கனவுக் கோட்டையின் உச்சியில் உலாவும் காவியநாயகர்கள்

ஆர்ப்பரிக்கும் கடற்கரையோர மணல்வெளியில் ஏகாந்தமாய்த் திரிவோம் !

எங்களின் நிரந்தர இருக்கைகளோ கதியற்ற நீரோடைகள்

வேதனையும் விரக்தியும் தவிர இப்பூவுலகம் எமக்கு எதை அள்ளித்தந்தது

வெள்ளிய நிலவுகூட எம்மீது ஊடல் கொண்டு வெம்மைஒளி வீசுகிறதே !

எது எப்படியானாலும் இன்னுயிர்களின் நகர்தலும் நடுக்கமும்

எம்போன்ற கவிஞர்களால் அல்லாது வேறு எவரால் நிகழும் ?

சாகாவரம் பெற்ற எங்களின் சங்கீத ஞானத்தால்

மன்னுலகில் மாநகரங்கள் முளைக்கும் ;தழைக்கும் !

எம் வரையறையற்ற கற்பனை ராஜாங்கத்தால்

மாமன்னர்களின் சிம்மாசனமும் செங்கோலும் உயரும் !

எம் வானவில் நிகர் வார்த்தை ஜாலங்களில் உள்ளது

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 
Read more »

ஸ்லிங் பாக்ஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?

மரித்துக்கொண்டிருக்கும் அரக்கனுக்கு CPR கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களாகத் தான் ஆப்பிள், பேஸ்புக், இண்டெல், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களைக் காண்கின்றேன்.தொழிற்சாலைகளெல்லாம் சைனாவுக்கும், பிறவேலைகளெல்லாம் BRIC-க்கும் போன பிறகும் இன்னும் அமெரிக்காவை ஜீவனோடு வைத்திருப்பது இது போன்ற இன்னோவேசன் தரும் நிறுவனங்களே.இந்த இன்னோ வேலைகளில் பெரும் பங்களிப்பு நம் ஊர்காரர்களுக்கும் இருக்கின்றது என்றால் அது கொஞ்சம் கூட மிகையில்லை.சமீபத்தில்கூட கூகிள் 25 மில்லியன்கள் கொடுத்து வாங்கிய PushLife.com-என்ற தளத்துக்கு சொந்தக்காரர் ஒரு இந்தியர்.ரே ரெட்டி பெயராம்(Ray Reddy).இவர் உருவாக்கிய PushLife என்ற மென்பொருள் கைப்பேசி டு கணினிக்கு பாடல்களை கடத்த/கையாள உதவுகின்றது. சீக்கிரத்தில் இதற்கு கூகிள் பெயிண்ட் அடிக்கப்பட்டு மார்கெட்டில் உலாத்தவிடப்படும். நாமெல்லாரும் பயன்படுத்துவோம்.

அது மாதிரியே ஸ்லிங் பாக்ஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?. இந்த Slingbox கொண்டு உங்கள் லிவிங் ஹால் டிவியை iPad,iPhone,iPod touch, Android, Windows Phone,BlackBerry,Palm OS,Symbian OS கைப்பேசியின் வழி எங்கிருந்து வேண்டுமானாலும் காணலாம் Wi-Fi அல்லது 3G துணையோடு. இதை உருவாக்கிய Sling Media, Inc என்ற நிறுவனத்தை நிறுவியதும் ஷா,ரகு என்னும் இந்தியர்கள் தானாம்.

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 
Read more »

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்


ஊழலுக்கு எதிராக டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேயை ஆதரிப்போம், இந்தியாவின் ஆன்மா இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதன் உதாரணம் அன்னா ஹசாரே, அவரது செயல்பாடுகள் காந்திய வழி வந்தவை, அவரது போராட்டத்திற்கு அனைவரும் துணைநிற்போம். ஆதரவுக்குரல் கொடுப்போம்
இன்று அன்னா ஹசாரேயை ஆதரித்து கரூரில் நடைபெற்ற உள்ள அடையாள உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,
அன்னா ஹசாரே பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இளங்கோ ராமசாமி அனுப்பியுள்ள மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன்
••
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு பணியில் சிவில் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
ஊழல் தடுப்பு மசோதா வரைவு பணியில் முற்றிலும் அரசு அதிகாரிகள் மட்டும் இடம் பெறாமல், சாமான்ய மக்கள் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் 50 விழுக்காடு இடம் அளிக்க வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
Read more »

சார் ஒன் மினிட்

*  Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப் படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரவுட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்
.


GSM Global System for Mobile communications (originally from Groupe Spécial Mobile) : இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனங் களுடன் இணைத்துக் கொள்ள முடியும். அல்லது உலகின் எந்த ஒரு சர்வீஸ் புரவைடருடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். ஜி.எஸ்.எம். மொபைல் போன்கள் சிம் கார்டுடன் பயன்படுத்தப் படுகின்றன.

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 
Read more »