Saturday, May 7, 2011

சாந்தோமின் வரலாறு


இந்நாட்களில் சாந்தோம் மற்றும் மைலாப்பூர் இரண்டு பெயர்களும் ஒரே பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால அந்நாட்களில் இப்பெயர்கள் இரண்டும் இரண்டு வித்தியாசமான இடங்களைக் குறிப்பிடும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இலங்கி வரும் ஊராகக் கருதப்படும் மைலாப்பூர், மிகப் பழமையான இந்திய ஊர். சாந்தோம் பதினேழாம் நூற்றாண்டு போர்த்துக்கீசிய அமைவிடம். செயிண்ட் தாமஸ் தி அபோஸ்டல் மயிலையில் தான் புதைக்கப்பட்டதாக ஒரு நம்பிக்கை இருந்தது. போர்த்க்துக்கீசியர்கள் முதலில் இந்தியா வந்த போது, அவர்களுள் சிலர் மயிலைக்கு அவரது மிச்சங்களைப் பார்க்க வந்தனர்.
அவர்கள் சில பாழடைந்த கிறித்துவ ஆலயங்களையும், செய்ண்ட் தாமஸ் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தையும் கண்டனர்.

விரைவில் அந்த இடத்தில் ஒரு வழிபாட்டிடம் எழுப்பப்பட்டது. அதனைச் சுற்றிலும் ஒரு போர்த்துக்கீசிய நகரம் வளர்ந்தது. காலப்போக்கில் அந்த நகரம் ஒரு வணிபப் பகுதியாக மாற, கோட்டை மதிலால் சூழப்பட்டு, இந்திய நகரமான மயிலாப்பூருக்கு இணையாக மாறியது.

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியா வந்த ஒரு இத்தாலிய வணிகர், சாந்தோமைப் பற்றி 'நிலத்தின் மேல் தான் கண்டவற்றுள் அழகிய நகரம்' போல் இருந்ததாகவும், மயிலாப்பூர் களிமண் சுவரால் சூழப்பட்ட ஒரு இந்திய நகரமாகவும் குறிப்பிடுகிறார்.

ஆகாவே மயிலாப்பூர் சாந்தோமின் கறுப்புப் பகுதியாக இருந்தது. ஆனால் பின்னாட்களில் இரண்டும் ஒன்றிணைந்தன.

ப்ரிட்டிஷார் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்த போதே, போர்த்துக்கீசியரின் பலம் குன்றத் தொடங்கி இருந்தது; மற்றும் அவர்களது செல்வாக்கு வளர வளர, போர்த்துக்கீசியரின் ஆதிக்கம் சாந்தோமில் மேலும் குறையக் காரணமாக இருந்தது.; அதன் இயல்பான பின் நிகழ்வாக மயிலாப்பூரை உள்ளடக்கிய சாந்தோம் அவர்களது ஆக்ரமிப்பிற்கு ஆளாகியது.
Read more »

1 comment:

  1. வரலாறுகள் எப்போதும் சுவாரசியமானவையும், கூடவே நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவையுமாகும்.

    ReplyDelete