Saturday, May 7, 2011

உலகமெனும் மாமேடை

உலகமெனும் மாமேடையில் யாம் இசைச்சக்கரவர்த்திகள்

கனவுக் கோட்டையின் உச்சியில் உலாவும் காவியநாயகர்கள்

ஆர்ப்பரிக்கும் கடற்கரையோர மணல்வெளியில் ஏகாந்தமாய்த் திரிவோம் !

எங்களின் நிரந்தர இருக்கைகளோ கதியற்ற நீரோடைகள்

வேதனையும் விரக்தியும் தவிர இப்பூவுலகம் எமக்கு எதை அள்ளித்தந்தது

வெள்ளிய நிலவுகூட எம்மீது ஊடல் கொண்டு வெம்மைஒளி வீசுகிறதே !

எது எப்படியானாலும் இன்னுயிர்களின் நகர்தலும் நடுக்கமும்

எம்போன்ற கவிஞர்களால் அல்லாது வேறு எவரால் நிகழும் ?

சாகாவரம் பெற்ற எங்களின் சங்கீத ஞானத்தால்

மன்னுலகில் மாநகரங்கள் முளைக்கும் ;தழைக்கும் !

எம் வரையறையற்ற கற்பனை ராஜாங்கத்தால்

மாமன்னர்களின் சிம்மாசனமும் செங்கோலும் உயரும் !

எம் வானவில் நிகர் வார்த்தை ஜாலங்களில் உள்ளது

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 
Read more »

No comments:

Post a Comment